Posts Tagged ‘சண்டை’

ஆரிய-திராவிட போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது, தொடர்கிறது – வீரமணியின் புலம்பல் – ஜெயலலிதாவுக்கு முன்பும்-பின்னும் (4)

ஜனவரி 15, 2017

ஆரியதிராவிட போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது, தொடர்கிறது  – வீரமணியின் புலம்பல்ஜெயலலிதாவுக்கு முன்பும்பின்னும் (4)

deepa-assertive

தீபாவை இயக்குவது பாஜக என்கிறீர்களா?: சசிகலாவை எதிர்க்க வலிமையான தலைவர்கள் இல்லாத நிலையில் உறவு என்ற பெயரில் தீபாவை பாஜக மறைமுகமாகத் தூண்டி வருகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஜெயலலிதாவின் உறவினர் என்பதைத் தவிர தீபாவுக்கு எந்தத் தகுதியும் இல்லை. ஆனால், சசிகலா கடந்த பல ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் இருந்து அவரது அரசியல் வியூகங்களை உணர்ந்தவர். அது செயல் வடிவம் பெற பெரும் பங்காற்றியவர். எனவே, தீபாவுடன் சசிகலாவை ஒப்பிடுவதே பெரும் தவறு.

தமிழக பிஜேபியிலும் ஜாதி அரசியல் உள்ளது என்பது நிதர்சனம். ஆகவே, தீபாவை பிஜேபி ஆதரிக்கிறது என்பது பொய். அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்கள், சசிகலாவின் எதேச்சதிகாரத்தை-சசிகலா-குடும்ப ஆட்சியை எதிர்ப்பவர்கள், எம்.ஜி.ஆர்-ஜெயலிதா அபிமானிகள் தான் தீபாவை ஆதரிக்கின்றனர். இது வெளிப்படையான உண்மை.

 j-jayakumar-marriage-in-1972-jaya-can-be-seen

ஜெயலலிதா மறைவால் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பாஜக தலைவர்கள் பேசி வருகிறார்களே?: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக ஓ.பன்னீர் செல்வமும், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும் பதவியேற்றுள்ளனர்.

எனவே, தமிழக அரசியலில் வெற்றிடம் எதுவும் இல்லை. உண்மையில் வெற்றிடம் இருப்பது ஆளுநர் மாளிகையில்தான். முதலில் அந்த வெற்றிடத்தை நிரப்பிவிட்டு அரசியல் வெற்றிடம் பற்றி பாஜகவினர் பேசட்டும். மிகப்பெரிய மாநிலமான தமிழகத்துக்கு தனியாக ஒரு ஆளுநரை நியமிக்காமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லை, ஸ்டாலினோ அரசியல் மற்றும் இதர விசயங்களில் பலமானவரோ, முதிர்ச்சியுள்ளவரோ இல்லை. ஜெயலலிதா இல்லாமல் இருந்தும், திமுகவினரால் ஒன்றும் செய்து விட முடியாது. உண்மையில், திமுக தனது பணபலத்தால், அதிமுகவை உடைக்க முடியும், ஆனால், ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது. இதுதான் பிரச்சினை.

deepa-i-will-enter-politics-with-pande

பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் கொள்கை ரீதியான வேறுபாடுகள் இல்லை என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியிருக்கிறாரே?: இப்படி பேசுவதும்கூட பாஜகவின் சதித் திட்டத்தின் ஓர் அங்கம்தான். ஜெயலலிதாவுக்கு கடவுள், மத நம்பிக்கை இருந்ததால் மட்டும் அதிமுக இந்துத்துவ கட்சியாகி விடாது.

இட ஒதுக்கீடு, சமூகநீதி, இந்தி எதிர்ப்பு என திராவிட இயக்கக் கொள்கைகளை என்றுமே அதிமுக விட்டுக் கொடுத்ததில்லை. இன்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நிகழ்ச்சியை அதிமுக நடத்துகிறது. பெரியாருக்கு விழா எடுக்கிறது. இதுவெல்லாம் பாஜகவின் கொள்கைகள்தானா என்பதை வெங்கய்ய நாயுடுதான் விளக்கவேண்டும். ஜெயலலிதா பார்ப்பனராக இருந்தாலும், பார்ப்பனர் கட்சியாக அதிமுகவை நடத்தவில்லை.

செக்யூலரிஸம் என்ற ரீதியில், இவருக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை என்பதை எடுத்துக் காட்டியுள்ளார். இந்து-எதிர்ப்பு நாத்திகத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இவற்றுடன் தான் அந்த பார்ப்பன-எதிர்ப்பும் வருகிறது. காலத்தின் கட்டாயத்தில், பிஜேபியும் அதையெல்லாம் செய்து வருகிறது. ஒருவேளை ஆட்சிக்கு வந்தால், அவற்ரையெல்லாம் “திராவிட பாரம்பரியப்படி” செய்யும். இப்பொழுது “ஜல்லிக்கட்டுக்கு” ஜால்ரா போடுவதும் அந்த விதத்தில் தான்.

deepa-who-supports-her

ஜெயலலிதாவுக்காக அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள், இனி பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்றும் வெங்கய்ய நாயுடு கூறியிருக்கிறாரே?:

அவர் தனது ஆசையை கூறியிருக்கிறார். அதிமுக தொண்டர்கள் திராவிட இயக்கக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள். அதனால்தான் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அதில் உறுதியாக நின்றனர். எனவே, அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள் ஒருபோதும் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். சமூகநீதிக்கு எதிரான மனநிலை கொண்ட பாஜகவை தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்.

அதிமுக-பிஜேபி கூட்டு என்பது, திமுக-பிஜேபி கூட்டு போன்றது. அப்பொழுது, திமுககாரர்கள் பிஜேபிக்கு ஓட்டுப் போடவில்லையா அல்லது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் டி.ஆர்.பாலு போன்றோருக்கு வேலை செய்யவில்லையா? வீரமணி இவ்வாறு பிதற்றுவது வேடிக்கையாக இருக்கிறது, மற்றும் அவரது பய்த்தை வெளிப்படுத்துகிறது.

deepa-who-supports-her-admk-disgruntlers

50 எம்.பி.க்களை வைத்துள்ள அதிமுகவை பாஜக பகைத்துக் கொள்ளும் என நினைக்கிறீர்களா?:

நாடாளுமன்றத்தில் 50 எம்.பி.க் களுடன் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து 3 ஆவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. இந்த அசுர பலத்துக்கு முன்பு எந்த அதிகாரமும், அச்சுறுத்தலும் சாதாரணம் என்பதை ஜெயலலிதா நிரூபித்து வந்தார். இதை உணர்ந்து இன்றைய அதிமுக தலைமை செயல்பட வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் தயவு பாஜகவுக்கு தேவை. இந்தச் சூழலை அதிமுக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஜி.எஸ்.டி விவகாரத்தில் தான் பிஜேபி பயந்து வந்த்து. ஜெயலலிதா மறிந்து விட்டதால் தான் மோடி, சசிகலா தலைமீது கைவைத்து, நடராசனுடன் பேசினார். இவர்கள் ஆதரவு இருந்தாலும், இல்லாவிட்டாலும், சட்டம் அமூலுக்கு வரும். ஆகவே, 50 எம்பிக்களை வைத்து, பாராளுமன்றத்தில் இனி பாட்டு பாடுவதை விடுத்து, மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு கலாட்டா செய்யலாம்.

jayas-death-created-a-vacuum-in-the-dravidian-polity

அதிமுக திராவிடக் கட்சி என்பதை திராவிட இயக்கத்தினரே ஏற்பதில்லை. ஆனால், நீங்கள் தாய்க் கழகம் என்ற முறையில் சசிகலாவுக்கு வேண்டு கோள் விடுப்பதாக கூறியுள்ளீர்களே?:

எங்களைப் பொறுத்தவரை அதிமுகவும் திராவிட கட்சிதான். திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை யான இட ஒதுக்கீடு, சமூக நீதியில் அதிமுக உறுதியாக உள்ளது. 31 சதவீத இட ஒதுக்கீடு 68 சதவீதமாக உயர அதிமுகவே காரணம். வைகோ எடுக்கும் முடிவுகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் மதிமுகவும் திராவிடக் கட்சிதான்.

குழப்பத்தில் உள்ள வீரமணிக்கு, திராவிடத்துவத்தை உயிரூட்ட திட்டம் போடுகிறார் போலும். இடவொதிக்கீடு பேசியே, தமிழகத்தை ஆண்டுவிட முடியாது, ஊழலைப் பற்றி பேசாதது, திராவிடத்துவத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. ஊழல் வழக்குகளில் சிக்கியதால் தான் சசிகலா-ஜெயலிலதா மாட்டிக் கொண்டனர், சிறை சென்றனர். வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

 deepa-at-jayas-tomb-marina

திமுகவை மட்டும் ஆதரித்து வந்த நீங்கள், இப்போது அதிமுகவையும் ஆதரிக்கிறீர்கள். இரு கட்சிகளையும் ஒன்றாகவே கருதுகிறீர்களா?:

திமுக, அதிமுக இரண்டும் திராவிடக் கட்சிகள். ஒரு தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன் – தம்பி போன்ற இயக்கங்கள். எதிரிகளுக்கு இடம் கொடுக்காமல் இந்த இயக்கத்தில் ஒன்று ஆளுங்கட்சியாகவும், மற்றொன்று எதிர்க்கட்சியாகவும் இருப்பதே பெரியார் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகும். எந்த ஆட்சியாக இருந்தாலும் நல்லது செய்தால் பாராட்டுவோம். கொள்கைப் பாதையிலிருந்து விலகிச் சென்றால் தவறுகளை சுட்டிக் காட்டுவோம்”, இவ்வாறு கி.வீரமணி கூறினார்[1].

திராவிடத்துவவாதிகள் எப்படியெல்லாம் பொய் சொல்வார்கள் என்பதற்கு, இவர் தான் உதாரணம். பெரியார் சொன்ன “கண்ணீர் துளிகள்”, மற்றும் நெடுஞ்செழியன் குறிப்பிட்ட “கடல்நீர் துளிகள்” முதலியவற்றை மறைத்துப் பேசுவது வீரமணியின் கைவைந்த கலை. ஊழலின் ஊற்று, சமுத்திரம் என்றெல்லாம் அதிமுக-திமுக வர்ணிக்கப் பட்டது, அப்பொழுது, அதற்கு காரணம் திகதானே? பிறகு இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது, “தவறுகளை சுட்டிக் காட்டுவோம்” என்பதற்கு?

© வேதபிரகாஷ்

15-01-2017

jaya-sasi-deepa-all-together-1992

[1] எம். சரவணன் நன்றி: ‘தி தமிழ் இந்து’ 13.1.2017

குருவின் சாவிக்காக சிஷ்யைகள் சண்டை – பீட்டரிடம் சாவியிருந்தால் இந்த தொல்லை வந்திருக்காதே?

மே 7, 2012

குருவின் சாவிக்காக சிஷ்யைகள் சண்டை – பீட்டரிடம் சாவியிருந்தால் இந்த தொல்லை வந்திருக்காதே?

லெனின், நக்கீரன், தினகரன்: “இம்மூவரும்” முன்பு ஆபாச விடியோ எடுத்ததற்கு, டிவி-செனலில் விடாமல் ஒலி-ஒளிபரப்பியதற்கு, ஊடகங்களில் தாராளமாக தூண்டிவிடும் வகையில் செய்திகளை வெளியிட்டுப் பரப்பியதற்கு காரணமாக இருந்தார்கள். லெனின் குருப் தான் சரியான ஆள். அந்த ஆளிருக்கும் போது, பெட்ரூமிலேலேயே வீடியோ கேமரா வைத்து படம் எடுத்துள்ளதாக, ஊடகங்கள் வெளியிட்டு, பெரிய பிரச்சினையாகி இருந்தது. அப்பொழுது நித்யானந்தா அறையின் சாவியை யார் வைத்திருந்தது என்று தெரியவில்லை. அப்பொழுது, லெனின் குரூப் எப்படி உள்ளே சென்று வீடியோ கேமரா வைத்தான், ஆபாசப் படம் எடுத்தான் போன்ற விவகாரங்கள் தெரியவில்லை. ஒருவேளை “நக்கீரனுக்கு” பிரத்யேகமாகத் தெரிந்திருக்கக் கூடும். இப்பொழுது, லெனின் இருந்திருந்தால், சாவிக்காக இப்படி சிஷ்யைகள் சண்டை போட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

  சொர்க்க வாசலின் சாவியையே, பீட்டர் என்ற ஏசுவின் சீடர் வைத்திருந்தாராம். அதற்கு பலத்த எதிர்ப்பு, சண்டைகள் இருந்து வந்தனவாம். இது போப்புடைய அதிகாரத்தை இன்று எடுத்துக் காட்டுகிறது, ஏனெனில் முதல் போப், பீட்டர் என்று கிருத்துவப் புராணங்கள் கூறிகின்றன.அதாவது, சாவியுள்ளவரிடம் தான் அதிகாரம் இருக்கும். அது[போல, இளையப்பட்டம், முதியப்பட்டத்தின் சாவியை வாங்கிக் கொள்ள அவசரப்படுகிறது போலும்.

நிச்சயமாக, இவ்வளவு அவசரம் கூடாது சாமி. அதற்கு, சிஷ்யைகள் இப்படி சண்டைப் போட்டுக் கொண்டால், மடம் என்னாவது?

மதுரை ஆதீனத்தின் பெண் உதவியாளர் வைஷ்ணவி மீது தாக்குதல்: நித்யானந்தா பெண் சீடர் மீது புகார்[1]: மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் பெண் உதவியாளர் வைஷ்ணவி (வயது-28). இவர் தஞ்சை அருகே உள்ள கச்சனம் பகுதியை சேர்ந்தவர். பல மாதங்களாக அருணகிரி நாதரின் “நெருக்கமான”[2] உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்ட பின்னர் வைஷ்ணவியை அங்கிருந்து வெளியேற்ற நித்யானந்தா சீடர்கள் அவரிடம் தகராறு செய்து வருவதாக ஏற்கனவே புகார் எழுந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுரை ஆதீன மடத்தில் வருமானவரி துறை சோதனை நடத்தியது. அப்போது வைஷ்ணவியிடம் அதிகாரிகள் அதிக நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.

தினகரன் கூறுவது[3]: மதுரை ஆதீனத்தின் செயலாளாரான வைஷ்ணவி மீது நித்தியானந்தாவின் ஆட்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதாகவும்,சுடிதாரை கிழித்து விட்டதாகவும் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து சென்றனர். பத்திரிக்கையாளர்களை நித்தியானந்தாவின் ஆட்கள் ஆதினத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதற்கு மதுரை ஆதீனத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நித்தியானந்தாவின் ஆட்களுக்கும், மதுரை ஆதீனத்தின் ஆதரவாளர்களுக்குள் மோதல் மூண்டதாக கூறப்படுகிறது. தினமலர் கூறுவது[4]: மதுரை ஆதீன மடத்தில் ஆதீனம் தரப்பினருக்கும், நித்தியானந்தா தரப்பினருக்கும் இடையே மோதல் ‌ஏற்பட்டது. மதுரை ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டதை பெரும் சர்ச்சை நிலவிவருகிறது. இந்நிலையில் மதுரை ஆதீன மடத்திற்குள் பத்திரிகையாளர்களை அனுமதிப்பதாக வேண்டாமா என ஆதீன தரப்பினரு்க்கும், நித்தியானந்தா தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மடத்திற்க்குள்ளேயே மோதிக்கொண்டனர்[5].
தினமலரின் மற்றொரு செய்தி[6]: முன்னதாக மதுரை ஆதீன மடத்தில் பணிவி‌டை செய்து கொண்டிருந்த வைஷ்ணவி என்ற ‌பெண் சீடர் ஆதீன மடத்தினை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நித்தியானந்தா சீடர்கள் அப்பெண்ணை மிரட்டி தாக்கினார். இனி இங்கு உனக்கு வேலை இல்லை வெளியேறுமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மதுரை ஆதீன மடத்தில் பரபரப்பு ‌ஏற்பட்டுள்ளது. நக்கீரன் கூறுவது[7]: அருணகிரிநாதருடைய நெருக்கமான உதவியாளராக வைஷ்ணவி இருந்தார். அவரது தனி அறையின் சாவியை (பணம் மற்றும் தங்க நகைகள் உள்ள அறை) வைஷ்ணவியிடம் ஒப்படைத்துவிட்டு திருவண்ணாமலைக்கு சென்றார். இந்த நிலையில் வைஷ்ணவியிடம், நித்தியானந்தாவின் சீடர் ரிஷி மற்றும் அவரது மனைவி, ஆட்கள் அந்த சாவியை கேட்டதற்கு வைஷ்ணவி மறுத்துள்ளார். இதனால் வைஷ்ணவியை அவர்கள் தாக்கியதில் அவரின் சுடிதார் கிழிந்துவிட்டது.

ஆதினத்தின் அறை சாவிக்காக தகராறு: இந்த நிலையில் நேற்று மதுரை ஆதீனம் அருணகிரி நாதரும், இளைய ஆதீனம் நித்யானந்தாவும் திருவண்ணாமலையில் இருந்து மதுரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அவர்களது அறையை வைஷ்ணவி தயார் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது நித்யானந்தாவின் பெண் சீடர் மத்தியா (30) சமையல் செய்வதற்காக பாத்திரங்கள் வேண்டும் மதுரை ஆதீன அறை சாவியை தா என்று வைஷ்ணவியிடம் கேட்டுள்ளார். இதற்கு வைஷ்ணவி மதுரை ஆதீனம் சொன்னால் மட்டுமே சாவியை தருவேன் என்று கூறியதாக தெரிகிறது. அப்போது நித்யானந்தா சீடர்கள் வைஷ்ணவியை அடிக்க பாய்ந்தனர். அப்போது பெண் சீடர் மத்தியா, வைஷ்ணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்ததில் கிழிந்து விட்டது. அப்போது கதறி அழுத வைஷ்ணவி வெளியே வந்து நடந்த சம்பவங்களை விளக்கினார். இதனால் மதுரை ஆதீன மடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   இதற்கிடையில் நேற்று இரவு 8 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து மதுரை ஆதீனமும், நித்யானந்தாவும் மதுரை வந்தனர். அவர்களிடம் மடத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து கூறினார்.

சீஷ்யைகளிடம் சமாதான பேச்சு: மதுரை ஆதீனம் அருணகிரி நாதரும், இளைய ஆதீனம் நித்யானந்தாவும் வைஷ்ணவி, மத்தியா இருவரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அதன் பின்னர் அங்கு அமைதி ஏற்பட்டதாக மடத்தில் உள்ள சீடர்கள் தெரிவித்துள்ளனர். வைஷ்ணவி தாக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், நேற்று முன்தினம் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டபோது முக்கிய ஆவணங்களை வைஷ்ணவி சொல்லித்தான் ஆதீனத்திடம் அதிகாரிகள் கேட்டு பெற்றதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில்தான் வைஷ்ணவியை நித்யானந்தா சீடர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த மோதல் சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து மதுரை ஆதீனம் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

பத்திரிக்கைக்காரர்களுக்கு சொன்னது: நேற்று ஆதீன மடத்தில் பெண் சீடர் வைஷ்ணவி தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து இரவு அனைவரையும் அழைத்து விசாரித்தோம். பின்னர் அவர்களை சமரசம் செய்து வைத்தேன். மற்றப்படி எந்த பிரச்சினையும் இல்லை. இது ஒரு சாதாரண சம்பவம் சிலரால் பெரிதாக்கப்பட்டுள்ளது. இப்போது மதுரை ஆதீன மடத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. நேற்று முன்தினம் நடந்த வருமான வரித்துறை சோதனையின்போது அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கமாக பதில் கொடுத்துள்ளோம். அவர்கள் மடத்தின் கணக்கு புத்தகங்களை எடுத்து சென்றுள்ளனர். மற்றபடி ஒன்றுமில்லை. இவ்வாறு மதுரை ஆதீனம் கூறினார்.

வேதபிரகாஷ்

07-05-2012


 


[2] இப்படி விவரித்துள்ளது “நக்கீரன்” தான்!