ஜெயலலிதாவுக்கு முன்பு மற்றும் ஜெயலலிதாவுக்கு பின்பு: திராவிட கட்சிகளும், நிலையும், உருமாறுகின்ற தேவைகளும்!
மோடியை சந்தித்த பிறகு கௌதமி சதி செய்கிறாரா – அதிமுக கேட்கிறது: இதனால் நடிகை கவுதமிக்கு அ.தி.மு.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுபற்றி அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் ‘மாலைமலர்’ நிருபரிடம், மற்ற விவரங்களை விளக்கி விட்டு, கூறியதாவது[1]:- “…….நான் கவுதமியை கேட்கிறேன், நீ எந்த உலகத்தில் இருக்கிறாய்? இதுபோன்ற அத்துமீறலை நிறுத்திக் கொள்வது நல்லது. ஏற்கனவே கவுதமி, பிரதமரை ஒருமுறை சந்தித்து வந்துள்ளார். இதற்கு பின்னால் ஏதோ ஒரு சதி திட்டம் இருக்கிறதோ என நான் சந்தேகிக்கிறேன்”. இதேபோல செய்தி தொடர்பாளர் தீரன், முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வளர்மதி ஆகியோரும் கவுதமியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்[2]. இந்த சதிக்கு சகோதரி கவுதமி விலைபோய் விட்டாரா? என்ற ஐயம் எழுகிறது. ஆகவே இது தேவையில்லாத பிரச்சனை. இதை யாரும் விவாதம் ஆக்க வேண்டாம். திருச்சியில் நேற்று கவுதமியின் உருவப்படத்தை அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் தீயிட்டு எரித்தனர்[3]. மேலும் கவுதமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து அ.தி.மு.க.வினர் கூறுகையில், “ஜெயலலிதா மறைவில் எந்த சந்தேகங்களும் இல்லை. அவர் ஆஸ்பத்திரியில் இருந்த போது அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரில் சென்று விசாரித்து உள்ளனர். எனவே அவருடைய மறைவை கவுதமி விமர்சித்துள்ளது கண்டிக்கத்தக்கது,” என்றனர்[4].
ஜெயலலிதா இறப்பை வைத்து லாபம் பார்க்கத் துடிப்பது ஏன்?: கடந்த இரண்டு மாதங்களாக ஜெயலலிதாவின் ஆஸ்பத்திரிவாசம் பெரிய செய்தியாக இருந்து வந்துள்ளது. இப்பொழுதோ, அது பெரிதாகி விட்டது. ஜி.எஸ்.டியை விட, இதைப் பற்றித்தான் அதிகமாக பேசுகின்றனர். சமூக ஊடகங்களின் கீழ்த்தரமான பதிவுகள், சமூக ஊடகங்களின் தரத்தையேக் குறைத்து விட்டது. கட்சிசார்புடன் வேலைசெய்யும் பலரை வெளிகாட்டி வருகிறது. தகவல் தொழிற்நுட்ப சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கும்போது, அலறும் சிலர், ஜெயலலிதாவை இறந்த பின்னரும் மோசமாக விமர்சித்து வருவதை மற்றவர்களும் கவனித்து வருகிறார்கள். பொதுவாக, இந்தியாவில் இறந்தவர்களைப் பற்றி அதிகமாக விமர்சிப்பதில்லை. குறிப்பாக பெண்ணை அவ்வாறு செய்வதில்லை. ஆனால், ஜெயலலிதா விசயத்தில் இரண்டும் மீறப்படுகின்றன. இது அந்த விமர்சர்களுக்கு, அவர்களை சார்ந்த அரசியல் கட்சிகளுக்கு, சித்தாந்த கூட்டங்களுக்கு எதிராக போகும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ல வேண்டும்.
திமுகவில் நடந்து வரும் மாற்றங்கள்: திராவிடக் கட்சிகளில் மாற்றம், உருவமைப்பு, முதலியவை ஏற்படுமா என்ற யேஷ்யங்கள் ஏற்பட்டுள்ளன. திமுக மறுபடியும் உயிர்த்தெழ வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. எப்படியாவது, அதிமுகவைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணம் சென்ற மாதங்களை விட அதிகமாகி விட்டது. ஆனால் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும் எண்ணமும் உள்ளது. ஸ்டாலின் ஜெயலலிதாவுக்கு மரியாதை செல்லுத்தியதும், ராகுல் கருணாநிதியை பார்க்காமல் சென்றதும், மோடி சசிகலா-நடராஜன் முதலியோருடன் பேசியதும், அழகிரி கருணாநிதியை வந்து சந்தித்ததும் நிச்சயமாக அத்தகைய திட்டத்தை எடுத்துக் காட்டுகிறது. கருணாநிதியும் உடல்நிலை சரியாக இல்லாத நிலையில், திமுகவிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. “ஜெயலலிதா-கருணாநிதி ஆஸ்பத்திரிவாசம்” நிச்சயமாக பாரபட்சமாக விமர்சிக்கப் பட்டது. கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைமை ஸ்டாலினுக்குத்தான் செல்லும் என்றாலும், அழகிரி விடுவதாக இல்லை. இதுவரை மறைந்திருந்த ராஜா, மற்படியும், வெளிவந்து ஸ்டாலினுடன் வலம் வருகிறார்.
காங்கிரஸில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்: 2ஜி ஊழல் காங்கிரஸ்-திமுக கட்சிகளை இணைத்து வைத்தாலும், அதே விசயம் அவர்களை பாதித்து வருகின்றது என்பதும் தெரிந்த விசயமாக இருக்கிறது. கடந்த தேர்தலில் திமுகவின் தோல்விக்கு அது ஒரு முக்கியமான அம்சமாக இருந்தது. ஊழல் என்றாலே கருணாநிதி என்ற பழைய பிம்பம் மறுபடியும் பிரதிபலித்ததால், மக்கள் ஜெயலலிதாவைத்தான் தேர்ந்தெடுத்தனர். கருணாநியை தமிழக மக்கள் என்றுமே ஊழலில்லாத முறையில் பார்க்க முடிவதில்லை. 2ஜி ஊழல் ஏதோ திமுகவுடன் தான் இணைந்திருக்கிறது என்பது போல காட்ட வேண்டும் என்று ராகுல், தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் கருணாநிதியை சந்திக்காமல் சென்று வருகிறார். இப்பொழுதும், ஜெயலலிதாவைப் பார்த்து மரியாதை செல்லுத்தி விட்டு செல்லும் போது, கருணாநிதியை ஏன் பார்க்கவில்லை என்று கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ராகுலுக்கு கருணாநிதியை விலக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது என்பது மர்மமாக இருக்கிறது.
ஊழலை மீறி ஜெயித்த ஜெயலலிதா: ஜெயலலிதா உண்மையாக ஊழல் செய்தாரா அல்லது சசிகலா அண்ட் கம்பெனியால் மாட்டிக் கொண்டாரா, சுப்ரமணியன் சுவாமி மாட்டி வைத்தாரா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்தாலும், சட்ட-வழக்குகளை சீர்தூக்கிப் பார்த்தாலும், மக்கள் அவற்றைக் கன்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது. குறிப்பாக அவர் கருணாநிதி போன்ற ஆண்களால் பலிவாங்கப் படுகிறார் என்ற எண்ணம் அதிகமாகியது. தமிழக பென்களின் ஆதரவு இன்னும் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. இலவசதிட்டங்கள் எல்லாமெ பெரும்பாலும், பெண்களுக்கு என்பதை கவனிக்க வேண்டும். இதனால் தான் பெண்களின் ஆதரவு, இறந்த பின்னர் இன்னும் அதிகமாகியுள்ளதை கவனிக்கலாம். இனி ஜெயலலிதாவை, எம்.ஜி.ஆரைப் போன்று ஒரு ஓட்டுக்களை இழுக்கும் சின்னமாக்கி விட்டால், அவர் பெயரைச் சொல்லி இனி ஓட்டுகள் கேட்கலாம், மக்களும் ஓட்டுப் போடுவார்கள். எம்.ஜி.ஆர் படத்தை மற்ற கட்சிகள் போடுவதைப் போல, ஜெயலலிதா படத்தை போட முடியாது. அந்த விசயத்தில் அதிமுகவுக்கு லாபம் தான். இனி “எம்.ஜி.ஆர்-ஜெயலிதா” சின்னம் அமோகமான வெற்றிசின்னமாக இருக்கும். இதை எதிர்த்து யார் பேசினாலும் மக்கள் நிச்சயமாக நிராகரிப்பார். மேலும் இன்றைய இணைதள ஞானம் பரவியுள்ள காலத்தில், இளைஞர்களின் ஆதரவும் ஜெயலலிதாவுக்கு உள்ளது. அரசியலை சீர்துக்கிப் பார்க்கும் அவர்களிடத்தில் எப்படி மோடிக்கு ஆதரவு அளித்து வருகின்றனரோ, அத்தகைய ஆதரவு “எம்.ஜி.ஆர்-ஜெயலிதா” சின்னத்திற்குக் கிடைக்கும். ஆனால், அதிமுக ஊழலற்ற நிர்வாகத்துடன் செயல்பட வேண்டும். மோடி போன்று முன்னேற்றம், வளர்ச்சி, உன்னதி, மேன்மை என்ற ரீதியில் செயல்பட வேண்டும். மறுபடியும் வட்டம்-மாவட்டம்-கார்ப்பரேஷன் என்று ஊழல்களை ஆரம்பித்தால், இக்கால இளைஞர்கள் தூக்கி எரிந்து விடுவார்கள்.
அண்ணா, எம்.ஜி.ஆர், அம்மா சின்னங்கள்: தமிழகத்தைப் பொறுத்த வரையில், அண்ணா, எம்.ஜி.ஆர் சின்னங்களுக்குப் பிறகு “அம்மா” தான் வந்துள்ளது. அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், அடுத்து ஜெயலிதாவால் தான் மக்களைக் கவர முடிந்துள்ளது. திமுக “எம்.ஜி.ஆர்”ஐ வைத்துதான் ஓட்டு கேட்டது. அதிமுகவும் “எம்.ஜி.ஆர்”ஐ வைத்துதான் ஓட்டு கேட்டது. எம்.ஜி.ஆர் தெர்ந்தெடுத்தது –ஜெயலிதாவை. ஆனால், ஜெயலிதா யாரையும் நம்பவில்லை, தெர்ந்தெடுக்கவில்லை, தன்னை வைத்தே எல்லாவற்றையும் நடத்தினார். முக்கியமாக பொறுப்பேற்றுக் கொண்டார். மற்றவர்கள் மீது திணிக்கவில்லை, சுமத்தவில்லை, பழிபோடவில்லை. ஆக தமிழக மக்களை ஈர்க்கவோ, ஓட்டுகளை சேர்க்கவோ அண்ணா, எம்.ஜி.ஆர், அம்மா சின்னங்களே தவிர மற்றவையெல்ல. இனி திராவிட உதிரிக்கட்சிகள், பெரியார், அண்ணா, அம்பேத்கர், காந்தி, நேரு, எம்.ஜி.ஆர், என்ற முரண்பட்ட தலைவர்கள் சின்னங்களுடன் அம்மாவையும் சேர்ப்பார்கள். ஏன் முஸ்லிம் கட்சிகள் மட்டுமல்ல, பிஜேபியும் அம்மாவை சேர்த்துக் கொள்வார்கள்.
© வேதபிரகாஷ்
12-12-2016
[1] மாலைமலர், ஜெயலலிதா மரணம்: கவுதமியின் சந்தேகத்தின் பின்னால் சதி, பதிவு: டிசம்பர் 10, 2016 13:29, மாற்றம்: டிசம்பர் 10, 2016 13:30
[2] http://www.maalaimalar.com/News/District/2016/12/10132959/1055425/Gauthami-suspicion-conspiracy-for-Jayalalithaa-Died.vpf
[3] தினதந்தி, ஜெயலலிதா மரணம் குறித்து விமர்சனம்: நடிகை கவுதமி உருவப்படத்தை அ.தி.மு.க.வினர் எரித்தனர், பதிவு செய்த நாள்: ஞாயிறு, டிசம்பர் 11,2016, 2:32 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, டிசம்பர் 11,2016, 2:32 AM IST
[4] http://www.dailythanthi.com/News/State/2016/12/11023224/Jayalalithaa-death-Review-Actress-kavutami-cutout.vpf