கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம் (1)!
கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? அவர் திருக்குறளைப் பற்றி என்ன கூற முடியும்?: விடுதலை, “ஆர்.எஸ்.எஸின் குருநாதர் என்று சொல்லப்படும் கோல்வால்கர் தமது ஞானகங்கை என்ற நூலில் திருக்குறள் பற்றிக் கருத்துக்கள் கூறியுள்ளார் என்று வீரமணி சொன்னபோது அரங்கத்தில் உள்ளோர் அனைவரின் கண்களும் தமிழர் தலைவரையே குத்திட்டு நின்றன. கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? அவர் திருக்குறளைப் பற்றி என்ன கூற முடியும்? என்ற அய்ய வினா அவர்களைத் தொற்றி நின்றது. திருக்குறள் இந்து மதத்தின் வருண தர்மத்தைப் பாதுகாக்கும் நூல் என்று கோல்வால்கர் குறிப்பிட்டதை கழகத் தலைவர் அவர்கள் எடுத்துச் சொன்ன போது மக்கள் மத்தியில் ஓர் ஏளனமான குறிப்புத் தென்பட்டது”, என்று இன்றைய நாளிதழில் வெளியிட்டுள்ளது[1]. ஒரு புத்தகத்தில் உள்ளவற்றை முழுமையாக அல்லது எந்த இடத்தில், எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதனை சொல்லாமல், அங்கங்கு வாக்கியங்களைப் பிய்த்து போட்டு, திரிபுவாதம் செய்வது திராவிடத்துவவாதிகளுக்கு கைவந்த கலையாக இருந்து வருகிறது. இனி தொடர்ந்து வீரமணி என்ன சொன்னார் என்று பார்ப்போம்.
பாணினி இலக்கியம் என்பதெல்லாம் திருக்குறளுக்குப் பிறகு பிற்காலத்தில் வந்தது தான்: வீரமணியின் பேச்சு இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது, “கோல்வால்கர் குறளைப் பற்றிச் சொன்னதைச் சொன்ன அடுத்த வரியிலே நூல்கள் எல்லாம் நூல்களை பற்றி எழுதுகின்றன என்று சொன்னபோது அரங்கமே கை தட்டலால் குலுங்கியது என்றே சொல்ல வேண்டும். திருக்குறளை நாம் பரப்புவதைவிட அதனைத் திரிபுவாதத்திற்கு இடம் கொடுக்கச் செய்யாமல் அதனைப் பாது காக்க வேண்டிய இடத்தில் நாமிருக்கிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் சொன்னது மிகவும் முக்கியமானதாகும். இனமானப் பேராசிரியர் தமிழ் இலக்கியங்களில் திருக்குறளை விட மூலமான நூல் வேறு எதுவும் இல்லை பாணினி இலக்கியம் என்பதெல்லாம் திருக்குறளுக்குப் பிறகு பிற்காலத்தில் வந்தது தான்[2]. இலக்கண நூல் என்கிற போது தொல்காப்பியத்துக்கு ஈடாகாது. சமஸ்கிருத இலக்கணங்களுக்கு முந்திய தமிழ் இலக்கணம் காலத்தால் முந்தியது என்று திமுக பொதுச் செயலாளர் குறிப்பிட்டார். கீதையின் மொழி பெயர்ப்பா? திருக்குறள் என்று சொல்லும்போது – அதனை எதிர்த்துக் குரல் கொடுக்க முடியாத நிலையில் திருக்குறள் கீதையின் மறுபதிப்பு என்பதுபோல பார்ப்பனர் பேச எழுத ஆரம்பித்தனர்”.
சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி, தீய திருக்குறளை படிக்கமாட்டோம் என்று பொருள் கூறியுள்ளார்[3]: திருக்குறளைப் பற்றி விளக்குகிறார் வீரமணி, “பகவன் என்ற பார்ப்பனருக்கும் ஆதி என்ற புலைச்சிக்கும் பிறந்தவர் என்றெல்லாம் பார்ப்பனர்கள் உளறினர்[4]. சிறந்த நூல்களை படைப்புகளைச் செய்யக் கூடியவர்கள் பார்ப்பனர்களாகத்தான் இருக்க முடியும் என்ற இறுமாப்பு எப்பொழுதுமே பார்ப்பனர்களுக்குண்டு. மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி குறள் பற்றி என்ன கூறினார்? ஆண்டாள் பாடியதாகக் கூறப்படும் திருப்பாவையில் இடம் பெற்றுள்ள இரண்டாம் பாடல் நாட்காலை நீராடி மையிட்டு எழுதோம். மலரிட்டு நாம் முடியோம்; செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் அய்யமும் பிச்சையும் ஆம்தனையும் காட்டி உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்! என்பது ஆண்டாளின் திருப்பாவைப் பாட்டு; இதில் வரும் தீக்குறளை சென்றோதோம் என்ற வரிக்கு சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன பொருள் கூறினார் தெரியுமா? தீய திருக்குறளை படிக்கமாட்டோம் என்று பொருள் கூறியுள்ளார். ஆனால் அவ்வரிக்கு உண்மையான பொருளோ வேறுவிதமானது; குறளை என்றால் கோள் சொல், குற்றம் என்ற பொருள் ஆகும். (மதுரைத் தமிழ்ப் பேரகராதி) தீக்குறளைச் சென்றோதோம் என்றால் தீமை விளைவிக்கும் கோட் சொற்களைச் சென்று சொல்ல மாட்டோம் என்பதுதான் இதன் பொருள்”.
திருக்குறளில் உள்ள அறத்துப் பால் கிட்டத்தட்ட பகவத் கீதையின் தமிழாக்கமேயாகும்: வீரமணி, சங்கராச்சாரியாரை சாடுகிறார்[5], “சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் இவ்வாறு பொருள் கூறியதற்குத் தமிழ் மீதும் அதன் உயரிய நூலான திருக்குறள் மீதும் அவர் கொண்டிருந்த (இவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்) ‘துவேஷத்தை’ தான் வெளிப்படுத்தும். அவ்வாறு அபாண்டமாக எழுதக் கூடாது என்பது அவாளின் எண்ணமென் றால் அவருக்குத் தமிழ் ஞானம் போதாது என்பதையாவது ஒப்புக் கொள்ள வேண்டும். அந்த சூப்பர் சீனியர் தான் அவ்வாறு குறள்மீது தமக்கே உரித்தான நஞ்சை உமிழ்ந்தார் என்றால் இப்பொழுது காஞ்சி சீனியர் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன சொன்னார் தெரியுமா? “திருக்குறளில் உள்ள அறத்துப் பால் கிட்டத்தட்ட பகவத் கீதையின் தமிழாக்கமேயாகும். வாழ்வின் வழிமுறைகளும், குறிக்கோளும் அதில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.” (தினத்தந்தி 15.4.2004) என்று மதுரையில் பேசினாரே! பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள் எங்கே? சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் (நான்கு வருணத்தையும் நானே படைத்தேன்) என்று கூறும் மனித குல விரோத கிருஷ்ணனின் கீதை எங்கே?”
கோல்வால்கர் திருக்குறளைப் பற்றி சொன்னது என்ன?: கோல்வால்கர் சொன்னதை ஆங்கிலத்தில் உள்ளபடி கீழே கொடுக்கப்பட்டுள்ளது[6].
These days we are hearing much about Tamil. Some protagonists of Tamil claim that it is a distinct language altogether with a separate culture of its own. They disclaim faith in the Vedas, saying that Tirukkural is their distinct scripture. Tirukkural is undoubtedly a great scriptural text more than two thousands year old. Saint Tiruvalluvar is its great author. We remember him in our Pratah-smaranm. There is an authentic translation of that book by V.V.S.Iyer, the well-known revolutionary. What is the theme propounded therein, afterall? The same old Hindu concept of chaturvidha-purushartha is put forth as the ideal. Only the chapter on Moksha comes in the beginning. It does not advocate any particular mode of worship or name of God but enuntiates the pure idea of Moksha. Thus it is not even a sectarian book. Mahabharata also eulogises the same picture of social life as Tirukkural presents. Except with the Hindu, this unique vision of social life is not found anywhere else. It is thus purely a Hindu text propounding great Hindu thoughts in a chaste Hindu language. |
இதன் தமிழ் மொழிபெயர்ப்பு இவ்வாறு கொடுக்கப்படுகிறது, “இந்த நாட்களில் நாம் தமிழைப் பற்றி அதிகமாக கேள்விப்படுகிறோம். தமிழைத் தூக்கிப் பிடிப்பவர்கள், தமிழ் ஒட்ரு தனி மொழி என்றும், அதற்கென தனியாக நாகரிகம் உள்ளது என்றும் கூறிக்கொள்கிறார்கள். வேதத்தை மறுத்து, திருக்குறள் தான் தங்களது புனித நூல் என்றும் பறைச்சாற்றிக் கொள்கிறார்கள். சந்தேகமில்லாமல் திருக்குறள் ஒரு மகத்தான நூல் தான், அதன் காலம் 2,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக உள்ளது. அதனை எழுதிய திருவள்ளுவர் ஒரு பெரிய கவியாவர். அவரை நாம் நமது “பிராத-ஸ்மரணத்தில்” (விடியற்காலை ஸ்தோத்திரம்) தினமும் நினைவு கொள்கிறோம். வி.வி.எஸ். ஐயர் என்ற புரட்சிப் போராளி மொழிபெயர்த்துள்ள ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நூல் உள்ளது. அதில் எந்த தத்துவம் தான் சொல்லப்பட்டிருக்கிறது? இந்துமத தத்துவமான “சதுர்வித-புருஸார்த்தம்” தான் அதில் உள்ளது. “மோட்சம்” முதலில் வருகிறது. எந்த ஒரு வழிபாட்டையும், கடவுள் பெயரையும் குறிப்பிடாமல் மோட்சத்தைப் பற்றிய விவரத்தை கூறுகிறது. அதனால், அது எந்த பிரிவினரையும் சேர்ந்த நூலாகாது. மகாபாரதத்தில் காணப்படும் சமூக வாழ்க்கை அப்படியே திருக்குறளில் காணப்படுகிறது. இந்துவிடம் தவிர, இத்தகைய சிறப்பான சமூக வாழ்க்கை தத்துவம் வேறேங்கும் காணமுடியாது. இந்து சிந்தனைகளை விளக்கும், பவித்ரமான இந்து மொழியில் உள்ள ஒரு தூய்மையான நூல் ஆகும்”. இத்தகைய விவரங்களை பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி[7], வி.ஆர். ராமச்சந்திர தீட்சிதர் போன்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர். அதனால், கோல்வால்கர் சொல்லிவிட்டார் என்று திராவிடத்துவவாதிகள் இப்பொழுது புலம்ப வேண்டாம்.
© வேதபிரகாஷ்
19-09-2015
[1] விடுதலை, வரலாறு பேசும் வான் புகழ் விழா!, மின்சாரம், வெள்ளி, 18 செப்டம்பர் 2015 16:24
2 இத்தகைய அபத்தமான வாதங்களை வைத்துக் கொண்டு, இன்னும் எத்தனை காலம் தான் தள்ளுவார்கள் என்று தெரியவில்லை.
[3] இதற்கான ஆதாரங்களைக் கொடுக்கவில்லை. அக்னிஹோத்ரம் போன்றவர் அரைகுறையாக எழுதி வைத்ததை வைத்துக் கொண்டு வாதம் புரிந்தால் என்ன பிரயோஜனமும் இல்லை.
[4] அப்படியென்றால், திருவள்ளுவமாலை போன்ற நூற்களை பார்பொபனர்களா எழுதி வைத்தனர்?
[5] http://www.viduthalai.in/e-paper/108862.html
[6] M. S. Golwalkar, Bunch of Thought, Third edition, pp.100-101
http://www.rss.org/Encyc/2015/4/7/334_03_46_30_Bunch_of_Thoughts.pdf
[7] P. S. Subramanya Sastri, A History of Tamil Literature, Annamalai University, Chidambaram.
P. S. Subramanya Sastri, Tolkappiyam, Annamalai University, Chidambaram.
குறிச்சொற்கள்: ஆரியக் கலாச்சாரம், ஆரியம், ஆரியர், ஆர்.எஸ்.எஸ், கீதை, குருஜி, குறள், கோல்வால்கர், செச்யூலரிஸம், திராவிட அமைப்புகள், திராவிட சித்தாந்திகள், திராவிடகழகம், திராவிடம், திராவிடர், திராவிடர்கள், திருக்குறள், திருவள்ளுவர், தொல்காப்பியம், பகவத் கீதை, பெரியார், வள்ளுவர், வீரமணி, வேதம்
மறுமொழியொன்றை இடுங்கள்