Posts Tagged ‘மோடி’
திசெம்பர் 17, 2018
கருணாநிதி சிலை திறப்பு – சிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! சேர்ந்த அரசியல் அநாகரிகம் [2]

1973, ஈவேராவுக்கு சிலை வைத்த போது, மறுபடியும் கருணாநிதி சிலை பேச்சு எழுந்தது: அதன் பின்னர் 1973-ம் ஆண்டு பெரியார் மறைவுக்குப் பின்னர் திமுக சார்பில், சென்னை அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) பேராசிரியர் க.அன்பழகன், தலைமையில், மணியம்மை முன்னிலையில், பெரியார் சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். சிலை திறப்பு விழாவில் பேசிய அப்போதைய தி.க.தலைவர் மணியம்மை, “சொன்னபடி பெரியாருக்கு சிலை வைத்துவிட்டீர்கள். பெரியாருக்கு சிலை திறந்த பின்னர் எனக்கு சிலை வைக்கலாம் என்று பேசிய நீங்கள் இனியும் சாக்குப்போக்கு சொல்ல முடியாது தி.க.சார்பில் உங்களுக்குச் சிலை அமைக்க அனுமதி தரவேண்டும் என்று மேடையிலேயே கோரிக்கை வைத்தார். திராவிடர் கழகம் சார்பில் அண்ணா சாலையில் முழு உருவ வெண்கலைச் சிலை அமைக்க உள்ளோம், இதற்கு மறுப்பு கூறக்கூடாது,” என்று பேசினார்.

சிலை விவகாரத்தில் திமுக–அதிமுக மோதல்: சிலைத் திறப்பை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது[1]. துலுக்கர் எதிர்க்காதது ஆச்சரியமே! ஒருவேளை, அப்பொழுது தர்கா தான் இருந்தது என்று இப்பொழுது வாதிக்கலாம்! முதலமைச்சர் கலைஞர் வெளியூர் பயணத்தில் இருந்தபோது, இடையில் அ.தி.மு.க.வினால் ஏற்பட்ட சட்டப் போராட்டத்தையும் திராவிடர் கழகம் எதிர் கொண்டு வென்று, அண்ணாசாலை- ஜெனரல் பேட்டர்ஸ் சாலை சந்திப்பில் முறைப்படி அரசாணை பெற்று, 21.9.1975 அன்று பெரியதோர் திருவிழாவாக நடத்தினோம். (G.O. MS.No.877 Dated 21.5.1975, Rural Development and Local Administration Department). அந்த வழக்கை திராவிடர் கழகம் வென்று அண்ணாசாலை தர்கா அருகே 1975-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி கருணாநிதியின் வெண்கலச்சிலை திறக்கப்பட்டது[2].

குன்றக்குடி அடிகளார் சிலையைத் திறந்து வைத்தார். இளமையான தோற்றத்துடன் மேடையில் பேசுவதுபோன்று கையை மூன்று விரல்களை உயர்த்திய நிலையில் அமைக்கப்பட்ட தத்ரூபமான சிலை அது. அதன் பின்னர் 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்ஜிஆர் மறைந்தபோது ஏற்பட்ட கலவரத்தில் கருணாநிதியின் சிலையை சில விஷமிகள் கடப்பாரையால் இடித்துத் தள்ளினர். சிலையை உடைத்ததைக்கூட நகைச்சுவையாக எடுத்துக்கொண்ட கருணாநிதி அந்தப்படத்தை முரசொலியில் வெளியிட்டு “உடன் பிறப்பே, செயல்பட விட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும் அந்த சின்னத்தம்பி என் முதுகிலே குத்தவில்லை– நெஞ்சிலே தான் குத்துகிறான், அதனால் நிம்மதி எனக்கு. வாழ்க! வாழ்க!” என்று குறிப்பிட்டிருந்தார்[3]. அதன்பின்னர் அதே இடத்தில் திராவிடர் கழகம் சார்பில் சிலை அமைக்க முயற்சி எடுத்தபோது மனதை பாதித்த அந்த நிகழ்வால் கருணாநிதி அதைத் தடுத்துவிட்டார்[4]. இதையடுத்து தி.க.வினர் மீண்டும் சிலை அமைக்கும் முயற்சியைக் கைவிட்டனர். இந்நிலையில் கருணாநிதி மறைந்தவுடன் மீண்டும் அதே இடத்தில் சிலை அமைக்கப்படும் என்று தி.க.தலைவர் வீரமணி சமீபத்தில் அறிவித்திருந்தார். மீண்டும் அதே இடத்தில் சிலை கம்பீரமாக எழுந்து நிற்கும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் அண்ணா சிலை அருகே அவரை நேசித்த தமையன் கருணாநிதியின் சிலை அமைக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்து அதற்கான செயலிலும் இறங்கினார். வேக வேகமாக சிலை அமைக்கும்பணி நடந்தது. அதை பலமுறை நேரில் பார்வையிட்டு திருத்தங்கள் கூறி சரியான முறையில் தத்ரூபமாக கொண்டுவரும் செயலில் ஸ்டாலின் செயல்பட்டார்.

ஈவேராவின் பிடிவாதம், வீரமணியின் தீவிரம், ஸ்டாலினை துரிதப் படுத்தியதா?: 07-08-2018 அன்று கருணாநிதி காலமானார். அப்பொழுதே, அவரைப் புதைக்க சர்ச்சை உண்டானது. அண்ணாவுக்கு அருகில் புதைக்க வேண்டும் என்று திமுக ஆர்வம் காட்டியது. மெரினாவில், இனி யாரும் சிலை வைக்க்க் கூடாது என்று ஒரு திமுககாரரே வழக்குப் போட்டிருந்தார். ஒருவழியாக நீதிமன்றத்தில் வழக்குகள் விலக்கிக் கொள்ளப் பட்டதும், மெரினாவில் உடல் புதைக்கப் பட்டது. பிறகு தினம்-தினம் அரசியல் தலைவர்கள், நண்பர்கள், பிரபலங்கள் என்று வந்து எல்லா விதமான கிரியைகளையும் செய்து சென்றனர். வைர்முத்து, பால் சகிதம் வந்து, பூஜை செய்து, பால் சொரிந்து சென்றது, விமர்சனத்திற்கு உள்ளானது.

2018ல் சிலை வைக்க ஸ்டாலினின் பிடிவாதம்: ஈவேராவே கருணாநிக்கு சிலை வைக்க வேண்டும் என்று 1968 மற்றும் 1971ல் ஆசைப்பட்டாராம், ஆனால், கருணாநிதி மறுத்தாராம்! 1987ல் உடைக்கப் பட்டப் பிறகு, வீரமணி அதே இடத்தில் சிலை வைக்க ஆசைப் பட்டாராம், ஆனால், கருணாநிதி, அவரது குடும்பம் மற்றும் திமுகவினர் அதற்கு ஒப்ப்புக் கொள்ளவில்லை. வழக்கம் போல ஆஸ்தான ஜோதிடரிடத்தில் கருத்து கேட்ட போது, வேண்டாம் என்றதால், அத்திட்டம் முடிவடைந்தது. வீரமணி விடவில்லை ஆகஸ்ட் 18, 2018 அன்று வெண்கலத்தில் சிலை வைப்பேன் என்று ஆரம்பித்தார், வைகோ தொந்தரவும் சேர்ந்தது. உடனே, ஸ்டாலின் ஆலோசனை செய்ய ஆரம்பித்தார். தயாளு அம்மாள் வேண்டாம் என்று சொல்லி விட்டார். இதனால், தேர்தல் சமயத்தில் லாபம் பெற கருணாநிதி சிலை செய்யப் பட்டு, இறந்ததிலிருந்து 130வது நாளில் சிலை திறப்பு என்று பிடிவாதமாக ஸ்டாலின் இறங்கினார்.

மாமியாரை வைததையும், கொலை செய்ய தீர்மானம் போட்டதையும், பதியை கொன்ற பழியையும் மறந்து சிலை திறக்கும் விதி! ஸ்டாலின் ஒப்புக் கொண்டதால், சிலை தயாரிக்கும் வேலை ஆரம்பித்தது. இனி கருணாநிதி பக்தி மிகும் நிலையில், பெரியாரின் மனைவிக்கு சிலை வைத்தது போல, அவரது மனைவிக்கும் சிலைவைக்கப் படலாம்! ஆகஸ்ட் 7ம் தேதியில் அண்ணா திவசம் போலவே கடை பிடிக்கலாம், கோவில்களில் வருடாந்திர சாப்பாடு போடலாம்! சிற்பி தீனதயாளனின் குழுவினரால் உருவாக்கப்பட்ட கருணாநிதியின் சிலை காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்துகொள்ளும் நிகழ்வில் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் அண்ணா சிலைக்கு அருகில் திறக்கப்பட்டது. அந்த வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி உள்ளிட்டோர் மாலை சென்னை வந்தடைந்தனர். அதேபோல கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் வருகை தந்தனர். மேலும் திருமாவளவன், வைகோ, முத்தரசன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் கலந்துகொண்டனர். திரையுலகம் சார்பில் ரஜினி,வைரமுத்து, சத்ருகன் சின்ஹா, பிரபு, நாசர், குஷ்பு, வடிவேலு ஆகியோர் பங்கேற்றனர். விழாவுக்கு வந்த தலைவர்களை ஸ்டாலின் வரவேற்றார்[5].

டுவிட்டர் சண்டை – யார் வென்றது?: இச்சூழலில், ட்விட்டர் வலைத்தளத்தில் கருணாநிதி சிலை தொடர்பான ஹாஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்டாகி வருகின்றன. திமுக ஆதரவாளர்கள் #StatueOfKalaignar என்ற ஹாஷ்டேக்கை பயன்படுத்த, எதிர்ப்பாளர்கள் பயன்படுத்தும் #StatueOfCorruption என்ற ஹாஷ்டேக்கும் டிரெண்டிங் பட்டியலில் இடம்பெற்றுள்ளது[6]. இதுமட்டுமின்றி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழகத்தில் இருந்து திரும்பச் செல்லக்கோரி #GoBackSonia என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகிறது. 200,000 ட்வீட்களை பெற்று உலகளாவிய அளவில் டிரெண்டிங் பட்டியலில் முதலிடம் பெற்ற #GoBackModi என்ற ஹாஷ்டேக்கை #GoBackSonia முந்துமா என்பது சந்தேகமே[7].
வேதபிரகாஷ்
16-12-2018.

[1] தமிழ்.ஒன்.இந்தியா, அண்ணா சாலையில் கருணாநிதி சிலை.. ஞாபகம் இருக்கிறதா?, By Sutha | Published: Saturday, August 11, 2018, 16:50 [IST]
[2] https://tamil.oneindia.com/news/tamilnadu/k-veeramani-bats-karunanidhi-statue-at-mount-road-327220.html?fbclid=IwAR1TfHm2WTDjcNm6fHtujL2arp-HduBPV2OlftOO-MtZsa2G_ImHrFFlhX0
[3] தமிழ்.இந்து, சிலை வைக்க கடைசிவரை தடைப்போட்ட கருணாநிதி: சிலைத் திறப்பு ஒரு மீள்பார்வை, மு.அப்துல் முத்தலீஃப், Published : 16 Dec 2018 13:53 IST; Updated : 16 Dec 2018 14:54 IST
[4] https://tamil.thehindu.com/tamilnadu/article25756876.ece
[5] https://www.vikatan.com/news/tamilnadu/144787-sonia-gandhi-unveiled-karunanidhis-statue-in-anna-arivalayam.html
[6] பிபிசி, மு.கருணாநிதி சிலை திறப்பு விழா: #GoBackModiக்கு பழித்தீர்க்கும் பாஜக தொண்டர்கள், 16-12-2018.
[7] https://www.bbc.com/tamil/india-46583135
குறிச்சொற்கள்:அண்ணா சிலை, அண்ணாதுரை, இந்தி எதிர்ப்பு, இந்திரா, இந்திரா சிலை, கருணாநிதி சிலை, சிலை, சிலை உடைப்பு, சிலை திறப்பு, சிலை வைப்பு, பெரியார், பெரியார் திடல், மோடி, மோடி எதிர்ப்பு, மோடி திரும்பிப் போ
ஆரியம், ஆரியர், ஆர்.எஸ்.எஸ், இந்தி, இந்தி எதிர்ப்பு, இந்திரா, கனிமொழி, கருணாநிதி, கருணாநிதி சிலை, கருப்பு, கருப்பு சட்டை, கருப்பு வேஷ்டி, காங்கிரஸ், காந்தி சிலை, சிலை, சிலை உடைப்பு, சிலை கடத்தல், சிலை திறப்பு, சிலை வைப்பு, சோனியா, திராவிட நாத்திகம், திராவிடக் கலாச்சாரம், திராவிடன், திராவிடம், பாப்பாத்தி, பெரியாரின் ஆவி, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பெரியார் சிலை, பெரியார் திடல், லெஸ்லி நியூபிகின் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
திசெம்பர் 17, 2018
கருணாநிதி சிலை திறப்பு – சிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! [1]

பிள்ளையார் சிலையை உடைத்தவன், அப்பனுக்கு சிலை வைக்கத் துடித்த கதை சொல்லும் பிள்ளை: தமிழகத்தில் சிலை-அரசியல் என்பது திக-திமுக கட்சிகளோடு பின்னிப் பிணைந்து, பிறகு அதிமுகவையும் ஆட்டிப் படைக்கிறது. அம்பேத்கர் சிலை அரசியல் என்பது பிறகு வந்தது. அது தேவர் சிலை அரசியலோடு சேர்ந்து கொண்டு, கலவரங்களில் முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.மோஹன் கமிட்டியின் படி, சிலைகள் அவமதிக்கப் படுவதால் தான், தமிழகத்தில் கலவரங்கள் நடக்கின்றன என்று 1998லேயே எடுத்துக் காட்டினார்[1]. தேவர் ஜாதியினர் சிலைகள் 227, மஹாத்மா காந்தி 81 மற்றும் அம்பேத்கர் 66 இருப்பதாக இன்னொரு அறிக்கைக் குறிப்பிடுகிறது[2]. இதனால், புதிய சிலைகள் வைக்கக் கூடாது என்ற கருத்தும் உருவாகி வருகிறது. இங்கும் சிலையுடைப்பு அரசியலை ஆரம்பித்து வைத்தது ஈவேரா தான். உச்சநீதி மன்றம் அவரைக் கண்டித்துள்ளது, ஆனால், அவர் தான் கருணாநிதிக்கு சிலை வைப்பேன் என்று பிடிவாதம் பிடித்ததை இப்பொழுது அறிகிறோம்!

1968ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த்த்தும், சிலைகள் வைத்ததும்: 1968ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த போதே, யாருக்கெல்லாம் சிலை வைப்பது, எடுப்பது என்பது பற்றியெல்லாம், ஏகப்பட்ட குழப்பம்,, பிரச்சினை, எதிர்ப்பு, ஆதரவு எல்லாமே நடந்தேறியது. முதலில் பெஸ்கி, போப் சிலைகள் வைக்க திட்டம் இல்லை. அப்பொழுது, யாரோ ஒருவர் லெஸ்லி நியூபிகின் என்ற சி.எஸ்.ஐ பிஷப்பிற்கு போன் செய்து, அவர்கள் சிலைகள் சேர்க்கப் பட வேண்டும் என்று அறிவித்தானாம். உடனே, புரொடெஸ்டென்ட் நியூபிகின், கத்தோலிக்க ஆர். அருளப்பாவுடன் ஆலோசனை செய்து, சிலைகள் வைக்க திட்டம் போட்டனர். லெஸ்லி அண்ணாவின் மிக நெருங்கிய நண்பர், சிறுவயதில் காஞ்சிபுரத்திலிருந்தே பழக்கம் உண்டு. அவர் சொல்லை அண்ணா தட்டவே மாட்டார் என்ற அளவுக்கு நெருக்கம் என்று நியூபிகின் முன்வாந்தார். இதற்குள் செய்தி அரசுக்குச் சென்றவுடன், செல்யூலரிஸ முறைப்படி, உமறுப் புலவருக்கு சிலை வைக்கலாம், என்று மனவை முஸ்தபா[3] [1935-2017] சொன்னார். ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், கைவிடப் பட்டது. மபொசி இளங்கோ அடிகள் சிலை வைக்க வேண்டும் என்றதை, கருணாநிதி விரும்பவில்லை. ஆக, தீர்மானிக்கப் பட்ட சிலைகள் இவ்வாறு வைக்கப் பட்டன.

எண் |
திறந்து வைக்கப் பட்ட தேதி |
சிலை |
விழாத் தலைவர் |
திறந்து வைத்தவர் |
1 |
02-01-1968 |
திருவள்ளுவர் |
இஆ. நெடுஞ்செழியன் |
கி.ஆ.பெ. விசுவநாதன் |
2 |
02-01-1968 |
அவ்வையார் |
சத்தியவாணி முத்து |
எஸ்.எஸ். வாசன் |
3 |
02-01-1968 |
கம்பர் |
ஏ. கோவிந்தசாமி |
மீ. பக்தவட்சலம் |
4 |
02-01-1968 |
கண்ணகி |
|
|
5 |
02-01-1968 |
சுப்பிரமணிய பாரதி |
மாதவன் |
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் |
6 |
02-01-1968 |
வீர்மாமுனிவர் |
சாதிக் பாஷா |
அருளப்பா |
7 |
02-01-1968 |
கி.யூ.போப் |
சி.பா. ஆதித்தனார் |
பிஷப் லெஸ்லி நியூபிகின் |
8 |
02-01-1968 |
பாரதிதாசன் |
மா.முத்துசாமி |
மு. வரராசனார் |
9 |
02-01-1968 |
வி.ஓ.சிதம்பரம் |
|
|
10 |
07-11-1971 |
இளங்கோ அடிகள் |
இரா. நெடுஞ்செழியன் |
ம.பொ.சிவஞானம் |
கண்ணகி சிலை உலகத் தமிழ் மாநாட்டின் போது வைக்கப் பட்டது. ஆனால் அது டிசம்பர் 10, 2001 அன்று, மெரினா கடற்கரையை நவீனப் படுத்தும் சாக்கில் இடிக்கப் பட்டது. போதாகுறைக்கு, அச்சிலையால் தான் சென்னை பஞ்சத்தால் நீரின்றி தவிக்கிறது என்றும் சொல்லப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தபோது, கருணாநிதி, ஜூன்.3, 2006ல் அதே இடத்தில் கண்ணகி சிலை வைத்தார். இப்படி சிலை சண்டை.
கருணாநிதிக்கு 1975ல் வைத்த சிலை 1987ல் இடிக்கப் பட்டது: 1975ல் கருணாநிதியின் சிலை மசூதிக்கு முன்பாக, அவர் ஆட்சியில் இருக்கும் போதே, ஜெனரல் பாட்டர்ஸன் – மவுண்ட் ரோடு சந்திப்பில் வைக்கப் பட்டது. அப்பொழுதே “உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைப்பதா, விக்கிரங்களை / சிலைகளை எதிர்ப்பவர், தனக்குத் தானே சிலை வைத்துக் கொள்வதா, இதனால், தீமை ஏற்படும்……….,” போன்ற பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப் பட்டன. ஆத்திகரான, கடவுளை நம்பிய குன்றக்குடி அடிகள், நாத்திகரான-இந்துவிரோதியான, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்! இருப்பினும், கருணாநிதிக்கு விருப்பம் இருந்ததால், நிறைவேற்றப்பட்டது. எந்த சாத்திரம் என்னவாகிற்றோ, எம்ஜிஆர் 1987ல் இறந்த போது, கருணாநிதி உயிரோடிருந்த நிலையில் சிலை உடைக்கப் பட்டது. ஒரு இளைஞன் கடப்பாரையினால், சிலையை உடைக்கும் காட்சியின் புகைப்படங்கள், நாளிதழ்களில் வெளிவந்தன. அது கண்டு போபப்பட்ட கருணாநிதி, “அது மற்றவகளுக்கு இறுதி சிரிப்பாக இருக்கலாம், ஆனால், என் தம்பி என் நெஞ்சில் குத்தி விட்டான்”, என்று இளைஞன் உடைத்த படத்தின் கீழே எழுதினார்.

உயிருடன் இருந்த போது வைக்கப் பட்ட சிலைகள்: தமிழக அரசியல் வரலாற்றில் உயிருடன் இருக்கும்போதே சிலை அமைக்கப்பட்ட தலைவர்கள் இரண்டுபேர் ஒன்று காமராஜர் மற்றொன்று கருணாநிதி. சிலை அமைக்கப்பட்டு மீண்டும் புதிய சிலை அமைக்கப்பட்ட தலைவர்கள் இரண்டுபேர். ஒன்று கருணாநிதி மற்றொன்று ஜெயலலிதா. இது சம்மீபத்தில் ஏற்பட்ட கோளாறுகள். கருணாநிதிக்கு முதன் முதலில் சிலை வைக்கவேண்டும் என்று அறிக்கை விட்டவர் பெரியார். அண்ணா உயிருடன் இருக்கும்போதே 1968-ம் ஆண்டே பெரியார் இந்த வேண்டுகோளை வைத்தார். 1968 இலும்,1971 ஆகஸ்டு 14 இலும் இருமுறை அறிவித்தார் பெரியார்! அதற்கு முன் உயிருடன் இருந்தவர்களில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் காமராஜருக்கு மட்டுமே ஜிம்கானா கிளப் அருகே சிலை திறக்கப்பட்டிருந்தது. அதை நேரு திறந்து வைத்தார்.

ஈவேரா கருணாநிதிக்கு சிலை வைக்க விரும்பியது (1971): அண்ணா மறைவுக்குப் பின்னர் முதல்வர் பதவியேற்றார், பின்னர் 1971-ம் ஆண்டு சட்டமன்றத்தை கலைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தேர்தலை திமுக சந்தித்தது. மிகப்பெரிய வெற்றியை திமுக இந்த தேர்தலில் பெற்றது. ஆகஸ்டு 14, 1971 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், பெரியார் ஏற்கெனவே தான் வைத்த கோரிக்கையை மீண்டும் அப்போதைய முதல்வர் கருணாநிதியை அருகில் வைத்துக்கொண்டே வைத்தார். செயற்கரிய சாதனை செய்தவர் என்பதால் சென்னை தலைநகரில் கருணாநிதிக்குச் சிலை வைக்கவேண்டும் என்று தம் விருப்பத்தை பெரியார் தெரிவித்தார். அதை மேடையில் இருந்த குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் ஆமோதித்தனர். அதே மேடையில் கருணாநிதி சிலை அமைப்புக் குழுவையும் பெரியார் அறிவித்தார். அப்போது கூட்டத்தில் பேசிய கருணாநிதி திமுக சார்பில் பெரியாருக்கு ஒரு சிலை திறக்கிறோம், அதன் பின்னர் எனக்கு சிலை திறக்கலாம் என்று அதைத் தட்டிக்கழித்தார்.
வேதபிரகாஷ்
16-12-2018.

[1] In October 1998 the Times of India (ToI) reported that a high-level committee headed by retired Supreme Court judge S.Mohan to investigate caste conflict in southern Tamil Nadu had made special note of statues: “Justice Mohan observed that most of the clashes that took place in the region were because of desecration of statues and both the government and private bodies were advised to desist from installing new statues.”
Times of India, View: Statue politics & shifting sands of time, By Vikram Doctor, ET Bureau|Updated: Mar 10, 2018, 10.57 AM IST
[2] Another ToI report on the committee showed the scale of the problem: “statistics in the report reveal that there are over 708 statues of various leaders in nine southern districts of Tamil Nadu alone.” Of these 227 were of dominant Thevar community leaders, 81 were of Mahatma Gandhi and 66 were of Dr.Ambedkar. Riots often sprang from mere rumours about disrespect to statues and sometimes communities disfigured their own leaders’ statues “as an excuse for attacking the other.”
https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/view-statue-politics-shifting-sands-of-time/articleshow/63241372.cms
[3] தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாக இயக்குநராக 40 ஆண்டுகள், ‘புத்தக நண்பன்’ (புக் பிரண்ட் – மாத இதழ்) ஆசிரியராக 4 ஆண்டுகள், யுனெஸ்கோ கூரியர் – பன்னாட்டு மாத இதழ் – ஆசிரியராக 35 ஆண்டுகள், என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தலைமை பொறுப்பாசிரியர் – தமிழ் பதிப்பு, முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட ‘சுதந்திர பொன்விழா குழு” முன்னாள் உறுப்பினராகவும், முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு உயர்கல்வி – தமிழ் ஆக்கப்பணிக்குழு முன்னாள் உறுப்பினராகவும், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் இணைச் செயலாளராகவும், உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி வரும் சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் இந்தியக் குழுவின் முன்னாள் இணைச் செயலாளராகவும், ‘பாரதிய ஞானபீடப் பரிசு தேர்வுக்குழு’ உறுப்பினராகவும், 1968, 1982, 1987, 1995 ஆண்டுகளில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் 7 ஆய்வுக் கட்டுரைகள் படித்துள்ளார்.
குறிச்சொற்கள்:அண்ணா, அருளப்பா, ஈவேரா, கடற்கரை, கருணநிதி, கருணாநிதி, சிலை, சிலை உடைப்பு, சிலை திறப்பு, சிலை வைப்பு, சோனியா, பெரியார், பெரியார் திடல், மெரினா, மோடி, மோடி எதிர்ப்பு, ராகுல், ராஹுல், லெஸ்லி நியூபிகின், ஸ்டாலின்
அண்ணா, அண்ணா சிலை, அருளப்பா, ஆத்மா, ஆரிய இனம், ஆரியக் கலாச்சாரம், ஆரியம், ஆரியர், ஆர்.எஸ்.எஸ், இந்தி, இந்தி எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு போராட்டம், இந்திரா, கனிமொழி, கருணாநிதி, கருணாநிதி சிலை, கருப்பு சட்டை, கருப்பு வேஷ்டி, கருப்புக் கொடி, காமராஜர், சிலை உடைப்பு, சிலை திறப்பு, சிலை வைப்பு, சோனியா, திராவிடம், திராவிடர், பெரியார் சிலை, மோடி, மோடி எதிர்ப்பு, மோடிக்கு கருப்புக் கொடி, ராகுல், ராஹுல், லெஸ்லி நியூபிகின் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
ஏப்ரல் 20, 2018
தமிழ், தமிழகம், தமிழ்நாடு: நீட் தேர்வு, காவிரிப் பிரச்சினை, ஐபிஎல்–எதிர்ப்பு முதலியவை, போலீஸ் தாக்குதலில் முடிந்த விதம் [4]

“தமிழ்.ஒன்.இந்தியா,” சீமான் ஆள் ஏன் போலீஸாரை அடித்தார். என்று விளக்கியது[1]: “அந்த இளைஞர் ஏன் போலீசாரைத் தாக்கினார் என்ற விவரம் கிடைத்துள்ளது. 10-04-2018 அன்று, போராட்டத்தின்போது நாம் தமிழர் தலைவர் சீமானும் களத்தில் இருந்தார். அண்ணா சாலையில் அவர் பெரும் இளைஞர் கூட்டத்துடன் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தபோதுதான், போலீசார் தடியடியில் இறங்கினர். ஒரு கட்டத்தில் சீமானை அடிக்க முயன்றனர் இரண்டு போலீசார். சீமானை அடிக்க வந்தவர்களில் ஒரு போலீசைத்தான் அந்த இளைஞர் தள்ளிவிட்டார். “எங்க அண்ணன் மேலயே கை வைப்பியா நீ..?” என்று கேட்டபடி அந்த போலீஸ் முகத்தில் குத்த முயன்றார் இளைஞர். அதன் பிறகு சீமான் ஓடி வந்து, கைகலப்பை விலக்க, அந்த இளைஞர் போராடும் கூட்டத்தில் கலந்துவிட்டார். நடந்த சம்பவம் இதுதான்.”[2] ஆனால், ஒரு போலீஸ்காரர் அடி-அடி என்று அடித்து கீழே தள்ளியது வீடியோவில் நன்றாகவே தெரிந்தது. ஆனால், பிறகு பல்டி அடித்ததும் நல்ல கூத்துதான்.

10-04-2018 மேட்சை நடத்த விடமாட்டோம் அடுத்து, ஏப்ரல் 20ம் தேதி சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை நடத்த விடமாட்டோம் என்றது: ஏப்ரல் 20ம் தேதி சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை நடத்த விடமாட்டோம் என்று சீமான் தெரிவித்தார்[3] என்பது தான் தலைசிறந்த தமாஷா. ஒரு வேளை பூனாவிற்கு சென்று செய்வார் போலும். 10-04-2018 மேட்சை நடத்த விடமாட்டோம் என்று கலாட்டா செய்து, பிறகு ஷூ எரிந்து கேவலப் படுத்தி, கைதாகிய சீமான் இவ்வாறு பேசியது திகைப்பாக இருந்தது[4]. ஏற்கெனவே, இனி சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடக்காது என்று அறிவிக்கப் பட்டதுன், பூனாவிற்கு மாற்றப் பட்டது அறிவிக்கப்பட்டது. 11-04-2018 அன்று, காவிரிக்கான போராட்டத்துக்கு மத்தியில் சென்னையில் ஐபிஎல் நடத்தக் கூடாது என்று பாரதிராஜா, அமீர், மணியரசன், சீமான், தனியரசு, தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்[5].

இனி மேலும், இக்கால இளைஞர்கள் இந்த போலிகளை நம்ப மாட்டார்கள். சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் நர்மதாநந்தகுமார். சமூக ஆர்வலரான இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 16-04-2018 அன்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்[6]. அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: “நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், அவரது தொண்டர்களும் வன்முறையை தூண்டும் வகையில் பேசி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் பெண்கள் மிகுந்த அளவில் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சமீபத்தில் கூட ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர், பாஜக தலைவர் தமிழசை சவுந்தரராஜனை கிண்டல் அடித்து பேசி அவரை அழ வைத்தார்கள். தொடர்ந்து வன்முறை தூண்டும் வகையில் பேசிய வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரையும், அவரது தொண்டர்களை காவல் துறையினர் ஒடுக்க வேண்டும். முடிந்தால் கட்சியை தடை செய்வது இந்த தேசத்திற்கு நல்லது”. இவ்வாறு கூறப்பட்டிருந்தது[7].

திமுக கர்நாடகத்தை ஆண்டாலும் காவிரி நீர் வராது: அப்போது சீமான் கூறுகையில் கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் காவிரி தமிழகத்தில் பாய்ந்தோடும் என்கிறார்கள். ஆனால் பாஜக ஆட்சியின்போதும் தமிழகத்திற்கு முறையாக நீர் திறக்கவில்லை[8]. சென்னையில் 10-01-2018 அன்று போராட்டத்தின் போது போலீசார் தாக்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்[9]. காவல்துறையினரைத் தாக்கியதாக சீமான் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது. அதில் சீமானை நாங்கள் கைது செய்யவிடமாட்டோம் என்று பெ.மணியரசன், தெரிவித்துள்ளார்[10]. அதாவது, இவர் தான் சட்ட அமைச்சர், நீதிபதி என்ற தோரணை. சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடக்கும் ராணுவக் கண்காட்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தை தமிழக எதிர்க்கட்சிகள் 12-04-2018 அன்று மேற்கொண்டன[11]. தமிழர்கள் தொடர்ந்து பிரச்னையில் சிக்கித் தவிக்கும்போது, எந்த விதத்திலும் காப்பாற்ற முன் வராத ராணுவத்திற்கு எதற்காக கண்காட்சி நடத்தப்பட வேண்டும் என்று சீமான் கேள்வி எழுப்பினார்[12]. மோடிக்கு கருப்பு கொடி காண்பித்து, இன்று காலை போராட்டம் நடத்திய சீமான் கைது செய்யப்பட்டு பல்லாவரம் ஸ்ரீகிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்[13]. இதேபோல மோடிக்கு கருப்பு கொடி காண்பித்து போராட்டம் நடத்தியதற்காக இன்று கைது செய்யப்பட்ட மணியரசன், தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு, இயக்குநர்கள் பாரதிராஜா, கவுதமன், அமீர் ஆகியோரும் சிட்லபாக்கத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து சீமான் மற்றும் தமிமுன் அன்சாரியை விடுதலை செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்[14]. இதனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றி வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[15]. பல்லாவரம் ஸ்டேஷன் சாலையே பரபரப்பாக போர்க்களம் போல காணப்படுகிறது. சாலையோர வியாபாரிகள் கடைகளை எடுத்து விட்டனர். சீமானை விடுவிக்கக் கோரி பாரதிராஜாவும் வெளியேற மறுத்து வருவதால் பதட்டம் தொடர்கிறது[16]. இந்த நிலையில், 12-04-2018 அன்று இரவு 9 மணியளவில் சீமான், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்[17]. இதன்பிறகு பாரதிராஜா விடுதலைக்கு சம்மதித்து வெளியே வந்தார்[18].

தொடர்ந்து “தமிழ்.ஒன்.இந்தியா,” சீமான் புராணம் பாடி வருவது, நிச்சயமாக, இரண்டிற்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது. ஒரே செய்தியை பது முறை விதவிதமாக போட்டுள்ளதே தமாஷாக உள்ளது. அவற்றையெல்லாம் தொகுத்தது தான், இப்பதிவு. “தமிழர் நலனுக்காக பல முறை சிறைக்கு சென்ற போராளி சீமான்” என்று தலைப்பிட்டு போட்ட செய்த்யில், சீமான் புராணத்தைக் காணலாம்[19]. ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து சீமான் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்தது காவல்துறை. இந்நிலையில் சீமானை கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது[20].

போராட்டத்தின் போது போலீஸ்காரர் 3 பேர் மீது கையில் ஒரு கொடியை [நாம் தமிழர்] ஏந்தி கொண்டு ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது[21]. இந்த வீடியோ வைரலாகியது. இதைத் தொடர்ந்து காவலர்கள் புகாரின் பேரில் சீமான் உள்ளிட்ட 8 பேர் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. “ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின்போது போலீஸாரை தாக்கியவர்கள் நாம் தமிழர் கட்சியினர் அல்ல. நாம் தமிழர் கட்சி வன்முறை கட்சி அல்ல. போலீஸாரை தாக்குவதற்குத்தான் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோமா. போலீஸாரை நாம் தமிழர்தான் தாக்கினார்கள் என்பதை எப்படி முடிவு செய்தீர்கள். முறையாக விசாரணை நடத்தி கைது செய்யுங்கள். தேவையில்லாமல் நாம் தமிழர் கட்சியினரை கைது செய்யாதீர், ” என்றெல்லாம் கேட்டுக் கொண்டது வேடிக்கையாக இருந்தது[22].
© வேதபிரகாஷ்
19-04-2018

[1] தமிழ்.ஒன்.இந்தியா, அந்த இளைஞர் போலீசைத் தாக்கியது ஏன் தெரியுமா?, Posted By: Shankar Published: Wednesday, April 11, 2018, 11:50 [IST]
[2] https://tamil.oneindia.com/news/tamilnadu/why-police-attacked-during-ipl-protest-316894.html
[3] தமிழ்.ஒன்.இந்தியா, ஏப். 20ல் சென்னையில் ஐபிஎல் நடக்காது, நடத்த விட மாட்டோம்… சீமான் அதிரடி, Posted By: Gajalakshmi Updated: Wednesday, April 11, 2018, 15:06 [IST]
[4] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-says-ipl-match-will-not-happen-on-april-20-316922.html
[5] தமிழ்.ஒன்.இந்தியா, கர்நாடகத்தில் பாஜக ஆட்சியின்போதும் தமிழகத்துக்கு முறையாக காவிரி நீர் கிடைக்கவில்லை– சீமான், Posted By: Lakshmi Priya Updated: Wednesday, April 11, 2018, 15:32 [IST].
[6] தினகரன், நாம் தமிழர் கட்சியை தடை செய்யவேண்டும், 2018-04-17@ 00:45:11
[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=394117
[8] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-accuses-we-never-gets-cauvery-water-though-bjp-was-power-316927.html
[9] தமிழ்.ஒன்.இந்தியா, பொய் வழக்குப் போட்டு சீமானைக் கைது செய்ய நாங்கள் விடமாட்டோம் – பெ.மணியரசன், Posted By: Mohan Prabhaharan Published: Wednesday, April 11, 2018, 15:42 [IST].
[10] https://tamil.oneindia.com/news/tamilnadu/we-wont-let-arrest-seeman-says-maniyarasan-316930.html
[11] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழர்களை எந்த விதத்திலும் காப்பாற்றாத ராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு? : சீமான் கேள்வி, Posted By: Mohan Prabhaharan Published: Thursday, April 12, 2018, 10:44 [IST].
[12] https://tamil.oneindia.com/news/tamilnadu/why-defence-ministry-doing-expo-chennai-questions-seeman-317002.html
[13] தமிழ்.ஒன்.இந்தியா, கைது பரபரப்புகளுக்கு முற்றுப்புள்ளி.. சீமான், தமிமுன் அன்சாரியை இரவில் விடுதலை செய்தது காவல்துறை!, Posted By: Veera Kumar Updated: Thursday, April 12, 2018, 21:04 [IST].
[14] தமிழ்.ஒன்.இந்தியா, சீமானை கைது செய்வதை எதிர்த்து போராட்டத்தில் குதித்த தொண்டர்கள்.. பல்லாவரத்தில் பரபரப்பு, Posted By: Mohan Prabhaharan Updated: Thursday, April 12, 2018, 18:50 [IST].
[15] https://tamil.oneindia.com/news/tamilnadu/police-arrests-seeman-thameemun-ansari-party-cadres-317071.html
[16] தமிழ்.ஒன்.இந்தியா, சீமான், அன்சாரி விடுதலை செய்யப்படும்வரை மண்டபத்திலேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பாரதிராஜா, Posted By: Aravamudhan Updated: Thursday, April 12, 2018, 21:05 [IST].
[17] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-may-be-get-arrested-317054.html
[18] https://tamil.oneindia.com/news/tamilnadu/bharathiraja-refused-go-317069.html
[19] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழர் நலனுக்காக பல முறை சிறைக்கு சென்ற போராளி சீமான்!, Posted By: Kalai Mathi Updated: Friday, April 13, 2018, 10:29 [IST]
[20] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-went-jail-many-times-tamil-benefit-317076.html
[21] தமிழ்.ஒன்.இந்தியா, போலீஸாரை தாக்கியது நாங்கள் அல்ல: அதற்காகவா கட்சி நடத்துகிறோம்– சீமான் சீறல், Posted By: Lakshmi Priya Published: Saturday, April 14, 2018, 17:28 [IST]
[22] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-says-that-his-party-is-not-violence-party/articlecontent-pf304675-317244.html
குறிச்சொற்கள்:அடித்தல், அமீர், ஐபிஎல், கருணாஸ், கருப்புக் கொடி, கிரிக்கெட், சீமான், சேப்பாக்கம், தமிமுன் அன்சாரி, திருவிடந்தை, தோணி, தோனி, நரேந்திர மோடி, நாம் தமிழர், பாரதிராஜா, போலீஸை அடி, போலீஸை அடித்தல், போலீஸ், மோடி, மோடி எதிர்ப்பு, மோடி ஒழிக, மோடி திரும்பிப் போ
ஆரியர், ஆர்.எஸ்.எஸ், ஐபிஎல் பாம்பு, கருணாநிதி, கருணாஸ், கருப்பு, கருப்பு சட்டை, கருப்புக் கொடி, காங்கிரஸ், காவிரி, காவேரி, செபாஸ்டியன் சீமான், செருப்பு, செருப்பு வீச்சு, சேப்பாக்கம், தமிமுன் அன்சாரி, திரவிடம், திராவிட இனம், திராவிட இயக்கம், தோணி, தோனி, நீட், நீர், பாஜக, பாரதிராஜா, போலீஸை அடி, போலீஸை அடித்தல், மோடி, மோடி எதிர்ப்பு, மோடிக்கு கருப்புக் கொடி, மோதி, வன்முறை, ஸ்டாலின் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 20, 2018
தமிழ், தமிழகம், தமிழ்நாடு: நீட் தேர்வு, காவிரிப் பிரச்சினை, ஐபிஎல் என்று மோடி–எதிர்ப்பு வேலை செய்யும் விதம் [3]

நீட் தேர்வு, காவிரிப் பிரச்சினை, ஐபிஎல் என்று மோடி–எதிர்ப்பு வேலை செய்யும் விதம்: இன்றைய வேலை தேடும் விசயத்தில் “சந்தை-வேலைமுறை” [Job-market] என்றது, சந்தை பொருளாதாரத்தில் பிரபலமாகி சரத்தாகி விட்டது. அகில-உலக பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்றப்படி, படிப்பு-தொழிற்முறை பயிற்சிகள் மாற்றியமைக்கப் பட வேண்டியுள்ளது. அயல்நாட்டு கம்பெனிகளுக்காக வேலைசெய்வது, அவர்களது தேவைகளுக்கு ஏற்றப்படி, சேவை-உற்பத்திகள் மாற்றியமைக்கப் பட வேண்டியதாயிற்று. அந்நிலையில், மருத்துவப் படிப்பு தேசிய அளவில் முறைப்படுத்தும் நிலையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால், அதன் தராதரத்தை அறிந்து கொள்ளாமல், குறுகிய “தமிழ், தமிழகம், தமிழ்நாடு” சித்தாந்தத்தில் எதிர்ப்பு அரம்பித்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் அதிரடியாக நடந்து வருகின்றன. அவற்றிற்கான லட்சக் கணக்கில் கொடுக்கப் படும் விளம்பரங்களை, எதிர்க்கும் டிவி-மற்ற மின்னணு-அச்சு ஊடகங்களில் வெளி வந்து கொண்டிருக்கின்றன. அந்நிலையில் தான் காவிரிப் பிரச்சினையாளர்கள், ஐபிஎல் மீது திரும்பினர்.

சேப்பாக்கம் மைதானம் தாக்கப் பட்டது: 10-04-2018 அன்று இதே கூட்டங்கள் கேவலமாக நடந்து கொண்டதை உலகமே பார்த்து வெறுத்தது. கிரிக்கெட்டை விரும்பும் சேப்பாக்கமா இவ்வளவு அநாகரிகமாக நடந்து கொண்டனர் என்று, கிரிக்கெட் ரசிகர்கள் வெட்கப்பட்டனர். 10ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது, நடந்த போராட்டத்தில், போலீசாரை தாக்கியதாக சீமான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது[1]. கொலை முயற்சி வழக்கில் சீமான் கைது செய்யப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. சென்னையில். இந்த நிலையில், சீமான் தங்க வைக்கப்பட்டுள்ள பல்லாவரம் ஸ்ரீகிருஷ்ணா கல்யாண மண்டபத்தை சுற்றி அதிரடிப்படை குவிக்கப்பட்டது. சீமான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது என்று தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன[2]. ஆனால், அதற்குள் 12-04-2018 அன்று கலாட்டா செய்ய தயாராகி விட்டனர். அண்ணா அறிவாலயத்தில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிகளின் (9 கட்சிகள்) கூட்டத்தில் காவிரி நதி நீர் உரிமை குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ஸ்டாலின், செயல் தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்.
- கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்.
- சு.திருநாவுக்கரசர், தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.
- கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- ஆர்.முத்தரசன், தமிழ்நாடு மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- கே.எம். காதர்மொகைதீன், தலைவர், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்
- தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி
- எச். எம். ஜவாஹிருல்லா தலைவர், மனித நேய மக்கள் கட்சி.
- நாம் தமிழர் கட்சி
ஆம் ஆத்மி, மற்ற உதிரி கட்சிகளும் கலந்து கொண்டது, ஊடக செய்திகள் மூலம் தெரிகின்றது. அதாவது, அவ்வப்போது, அந்தந்த பிரச்சினைகளை வைத்துக் கொண்டு கலாட்டா செய்வது, பிற்கு மறந்து விடுவது என்ற நிலையில் போராட்டங்கள் நடப்பதும் தெரிகிறது.

மோடிக்கு கருப்புக் கொடி ஆர்பாட்டம்: காவிரி நீர் உரிமையில் தமிழ் நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்று அக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர் மானங்களுள் ஒன்றாகும்[3]. அந்த வகையில் 12.4.2018 அன்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்குக் கருப்புக் கொடி காட்டுவதற்கு தயாராயின[4]. திருவிடந்தையில் நடக்கும் மத்திய பாதுகாப்புத்துறையின் ராணுவக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக 12-04-2018 அன்று பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி, சென்னை விமானநிலையம் வந்திறங்கினார்[5]. உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்[6]. அப்பொழுது, அவர்கள் பேசிய பேச்சு, அமிர் வெறி பிடித்தது போன்று நடந்து கொண்ட விதம் முதலியன விசித்திரமாக இருந்தது. மேலும் சுற்றியிருந்தவர்களில் பெரும்பாலோர் முகமதியர் என்பதும் நன்றாகவே தெரிந்தது. ஆகம் இவர்கள் எல்லோரும் இவ்வாறு ஒன்று பட்டுள்ளது காவிரிப் பிரச்சினைக்கா அல்லது மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பிற்கா என்ற கேள்வியும் எழுகின்றது. காவிரிப் பிரச்சினை போர்வையில் மோடி-எதிர்ப்பு பிரதானமாக அரங்கேறியுள்ளது. அதுதான் அரசியல் நோக்கக் காட்டுகிறது. அதன்படியே, கைதானவர்கள், வழக்கம் போல விடுதலை செய்யப்பட்டனர்[7]. பிறகு, வழக்குப் பதிவுகள், முந்தைய கைதுகள் என்னவாயிற்று என்று தெரியவில்லை[8].

சீமான் பேச்சு, நடவடிக்கை, புராணம் முதலியவற்றை தினம்–தினம் அதிகமாக வெளியிட்டது “தமிழ்.ஒன்.இந்தியா”தான்: “அதிமுக நடத்திய உண்ணாவிரதத்தால் என்ன பயன் கிடைத்துவிட்டது. ஐபிஎல் விளையாட்டை நடத்தக் கூடாது, தமிழகம் கொந்தளிக்கும் இந்த நேரத்தில் ஐபிஎல் எங்களுக்கு வேண்டாம். மீறி ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் எங்களின் எதிர்ப்பை எந்த விதத்தில் வெளிக்காட்ட வேண்டுமோ அப்படி வெளிக்காட்டுவோம்” என்று சீமான் சொன்னது,[9]தீர்மானத்துடன் அவ்வேலையில் இறங்கப் போவது தெரிந்தது. “காங்கிரஸ் கூட்டணியில் 10 ஆண்டுகள் இருந்த போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தற்போது திமுக போராடுவது வேடிக்கையாக உள்ளது”என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்[10]. பாஜக ஆட்சியிலும் வரவில்லை. அதிமுக பெயருக்கு உண்ணாவிரதம் நடத்தி உள்ளது[11]. மெரினாவில் மட்டும் போராடுவதற்கு அனுமதி கொடுத்தால் உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் போராட்டம் நடத்தி காவிரி மேலாண்மை வாரியத்தை பெறுவோம்[12]. அதாவது கலாட்டா செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கி இருந்தது என்ற ஒப்புதல் வெளிப்படுகிறது.
© வேதபிரகாஷ்
19-04-2018

[1] தமிழ்.ஒன்.இந்தியா, கொலை முயற்சி வழக்கில் சீமான் கைது? சீமான் தங்க வைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் அதிரடி படை குவிப்பு, Posted By: Veera Kumar Updated: Thursday, April 12, 2018, 16:35 [IST]
[2] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-may-be-get-arrested-317054.html
[3] விடுதலை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வை பிரதமர் புரிந்து கொள்வாரா?, வெள்ளி, 13 ஏப்ரல் 2018 16:51
[4] http://www.viduthalai.in/component/content/article/71-headline/160044-2018-04-13-11-39-44.html
[5] தினத்தந்தி, பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு ;சீமான் வேல்முருகன், மணியரசன், தமிமுன் அன்சாரி, பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர் கைது, ஏப்ரல் 12, 2018, 10:58 AM
[6] https://www.dailythanthi.com/News/State/2018/04/12105816/Opposition-to-PMs-visit-Seeman-Velmurugan-Maniyarasan.vpf
[7] தமிழ்.ஒன்.இந்தியா, கைது பரபரப்புகளுக்கு முற்றுப்புள்ளி.. சீமான், தமிமுன் அன்சாரியை இரவில் விடுதலை செய்தது காவல்துறை!, Posted By: Veera Kumar Updated: Thursday, April 12, 2018, 21:04 [IST]
[8] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-may-be-get-arrested-317054.html
[9] தமிழ்.ஒன்.இந்தியா, காவிரிக்காக திமுக போராட்டம் நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது – சீமான்!, Posted By: Gajalakshmi Published: Saturday, April 7, 2018, 18:22 [IST]
[10] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-condemns-dmk-protests-cauvery-rights-316570.html
[11] தமிழ்.ஒன்.இந்தியா, மெரினாவில் போராட அனுமதி கொடுத்தால் தமிழர்கள் உலகையே திரும்பிப்பார்க்க வைப்பார்கள் : சீமான், Posted By: Mohan Prabhaharan Published: Sunday, April 8, 2018, 15:15 [IST].
[12] https://tamil.oneindia.com/news/tamilnadu/tamils-have-the-capability-hold-strong-says-seeman-316627.html
குறிச்சொற்கள்:அமீர், ஐபிஎல், கருப்பு, கருப்புக் கொடி, காவிரி, கிரிக்கெட், சீமான், செருப்பு, செருப்பு வீச்சு, சேப்பாக்கம், திருவிடந்தை, தோணி, தோனி, நதிநீர், நீட், நீர், நீர் பிரச்சினை, மோடி, மோடி எதிர்ப்பு, மோதி, ரசிகர், ஷூ, ஷூ வீச்சு
அமீர், ஐபிஎல், கருணாநிதி, காவிரி, செருப்பு, செருப்பு வீச்சு, சேப்பாக்கம், டோனி, தமிழ், தி.மு.க, திக, தோணி, தோனி, நதி நீர், நாம் தமிழர், நீட், நீர், பாஜக, மோதி, விடுதலை சிறுத்தைகள், ஷூ, ஷூ வீச்சு, ஸ்டாலின் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 20, 2018
தமிழ், தமிழகம், தமிழ்நாடு: தனித்தமிழ் இயக்கம்–திராவிட இனவெறி மற்றவர்களிடமிருந்து பிரித்தது, மொழிவாரி மாநிலங்கள் உருவானதில் தனிமைப்படுத்தப் பட்ட நிலை [2]

தமிழ், தமிழர், தமிழ்நாடு [திராவிடக் கட்டுகதை] என்று மூளைசலவை செய்து, தமிழ்நாட்டை கெடுத்து, சீரழித்ததே, இந்த கோஷ்டிகள் தாம்: 1930-40களில் தனித்தமிழ் இயக்கம், திராவிட இனக் கட்டுக்கதைகளை வளர்த்தன. சைவம் என்ற போர்வையில், வைணவத்தை எதிர்த்து, தெலுங்கு பேசும் மக்களை அவமதித்த போக்கு, நீதிகட்சியைக் குலைத்து, திராவிட கழக போர்வையில், தமிழக பிரிவினை உருவெடுத்தது. ஆனால், அத்தகைய தேசவிரோத கொள்கையிலிருந்து மற்ற மொழி மக்கள் வேறுபட்டனர். 1940-50 திராவிட இனவெறி கட்டுக் கதைகளினால் தான், முதலில் ஆந்திரா தனியாகப் பிரிந்தது, முதல் மொழிவாரி மாநிலமானது[1]. தொடர்ந்து “தமிழ்” தான் உயர்ந்தது, அதிலுருந்து தான் மற்ற மொழிகள் தோன்றின என்பதனை சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, தெலுங்கு மக்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பட்டிபோர்லு [Bhattiporlu] வரிவடிவங்களை [script] மற்றும் கல்வெட்டுகளை [inscriptions] வைத்துக் கொண்டு, தெலுங்கு வரிவடிவம் BCE மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று வாதிட்டனர். “தமிழ்நாடு” உருவானபோது கூட, எல்லை தகராறுகளில் கேரளா, ஆந்திரா மற்றும் ஆந்திராவுடன் எதிராகவே இருந்தது. தமிழநாட்டைத் தவிர மற்ற மாநில மக்கள் தாங்கள் “திராவிடர்கள்” என்றெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், திராவிடத்துவ சித்தாந்தம் தமிழ்நாடு மாநிலத்துடன் சுருங்கி விட்டது. காவிரி பிரச்சினையில், முன்னர் பாமகவினால், அதிகமாகவே வெறியூட்டப் பட்டு, பிறகு திராவிட பிரிவினைவாதிகளால் தீயூட்டப் பட்டது. அப்பொழுது, இங்கு “உடுப்பி” ஹோட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஶ்ரீ ராகவேந்திர மடங்களும் தாக்கப்பட்டன.

தமிழகத்தில் நடந்த எல்.டி.டி.ஈ.யின் வாரிசு / அதிகாரச் சண்டை திசைமாறியுள்ள நிலை: எல்.டி.டி.ஈ.யின் வாரிசு சண்டை தமிழக அரசியல் கட்சிகள், பெரிய புள்ளிகள் மற்றும் சித்தாந்தவாதிகளிடம் அதிகமாகவே வெளிப்படுகிறது. முன்பு, ஒரு நபரால் கட்டுக்கோப்பாக வைத்திருந்தது, சிதறிவிட்டது. எல்.டி.டி.ஈ.யின் பங்கு போதை மருந்து கடத்தல், விநியோகம் மற்றும் வியாபாரம், வெடிகுண்டுகள், ஆயுதங்கள் வாங்கல்-விற்றல், தமிழ்த் திரைப்பட விநியோகம், திருட்டு சிடி-விசிடி, குறிப்பிட்ட மின்னணு உதிரிகள் என பல விஷயங்களில் இருந்தது, இன்றும் இருக்கிறது[2]. போதை மருந்து கடத்தல் விவகாரங்கள் அப்பட்டமாக இருந்தாலும், தமிழக ஊடகங்கள் மறைத்தே வந்ததன-வருகின்றன[3]. இதனால் தான் “மத்திய அரசு எதிர்ப்பு” அடிக்கடி ஏற்படுகிறது. தெற்கு மாவட்டங்களில் மீனவர்களின் உதவிகளுடன் அத்தகைய சட்டமீறல்கள் நடந்து வருவதால், எல்லா கட்சிகளில் சம்பந்தங்களும் காக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதிகாரப் பிரயோகம், அதிகாரப் பகிர்வு முதலியன யாரிடம் இருப்பது என்பது பற்றிதான் சண்டை-சச்சரவு நடந்து கொண்டிருக்கிறது. இதில் தமிழகத்தைச் சார்ந்தவர்கள், ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்கள் மற்றும் இரண்டிலும் அல்லது கனடா-பாரிஸ்-அமெரிக்காவில் இருப்பவர்கள் என்று மூன்று குழுக்களாக செயல்படுகின்றனர்[4]. திரைத்துறை, அரசியல் முதலிய பகிர்வு போராட்டங்கள் வைகோ, நெடுமாறன், செபாஸ்டியன் சீமான்[5], ஜெகத் காஸ்பர்…………என்று பலநேரங்களில் வெளிப்படும். கடந்த குறுகிய காலத்தில், நிறைய அளவு பணம் திரைப்படம், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள் முதலியவற்றில் முதலீடு செய்யப்படுகிறது. அந்நிலையில், குறிப்பிட்ட தனிநபர்கள், குழுமங்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் குவியும் போது, நிச்சயமாக சண்டை வரத்தான் செய்கிறது. அதுமட்டுமல்லாது மத்தியில் மற்றும் மாநிலத்தில் தனித்தனி கூட்டணிக் கட்சியினருக்கு, பெரும்பாலான பணம் செல்லும்போதும் மற்றவர்களுக்கு கடுப்பாகிறது.

தீவிர தமிழ்வாத பிரிவினை கொலைகளில் முடிந்தது: 1984-89களில் எல்.டி.டி.இ வைத்துக் கொண்டு கருணாநிதியும் பிரிவினைவாத கோஷ்டிகளுடன் செயல்பட்டார். அவர்கள் நடத்திய உயநிர்ணய, பிரிவினைவாத மாநாடுகள் பெயரளவில் தடை செய்யப் பட்டன. இதனால், விடுதலை புலிகள் முதல், விடுதலை குயில்கள் வரை எல்லாம் ஊக்குவிக்கப் பட்டன. வி.பி.சிங் ஆட்சிகாலத்தில், பாமக போன்ற கட்சிகளும் “சுயநிர்ணயம்” போர்வையில் பிரிவினைவாதம் பேசியுள்ளது. பாமகவினால் தமிழக-கர்நாடக விசரிசல்கள் பெரிதாகின, அமைச்சர் பதவி கிடைத்ததும் பாமக அடங்கி விட்டது. மற்றவை “மண்டல்” போர்வையில் கலாட்டா செய்து வந்தன. இவர் 21 மே 1991 ராஜிவ் காந்தி படுகொலை திராவிட அரசியல்வாதிகளின் முகத்திரைகளைக் கிழித்து, அவர்களது தேசவிரோத கள்ளக்கடத்தல், வரியேய்த்தல், போதை மருந்து விரயாபாரம் என்று பற்பல சட்டமீறல்கள், குற்றங்கள் முதலியவற்றை எடுத்துக் காட்டின. 1996-2004ல், பதவி போதையில், திமுக சுருண்டு கிடந்தது. 2004-2014களில் ஊழலில் மிதந்து, கோடிகளை அள்ளி, ஊடக சாம்ராஜ்ஜியத்தை நிலைப் படுத்திக் கொண்டது. டிவி அதிரடி தாக்கம், பிரச்சார யுக்திகளினால் திராவிட குற்றங்களுக்கு வெள்ளையெடித்து, அதே நேரத்தில், காங்கிரசுக்கு சாதகமாக, இந்து-விரோத பிரச்சாரத்தை “பிஜேபி-எதிர்ப்பு” போர்வையில் நடத்தியது[6], நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், சத்தியராஜ் போன்ற நடிகர்களால் எதிர்மறை விளைவுகள் அதிகமாக ஏற்பட்டன. ரஜினியின் நிலையற்ற தன்மை மற்றும் இப்பொழுதைய கமல் ஹஸனின் பாரபட்சம் மிக்க பேச்சுகள்-நடவடிக்கைகள் போலித் தனமாக இருக்கின்றன. இப்பொழுது கூட, கமல்-ரஜினி பிளவுகள் போலித்தனத்தையே எடுத்துக் காட்டுகின்றன.

கார்புரேட்டுகளின் தொடர்புகள், அயல்நாட்டு வியாபாரங்கள், வரியேப்பு, மோடி–எதிர்ப்பு: கார்புரேட்டுகளின் விளம்பரப் பணம் கொட்டி, வியாபாரம் சினிமாக்களில் பெருகி, பணத் தோட்டத்தில்[7], அதிகார போதையுடன், சுகபோகங்களை அனுபவித்தன. இதில் கம்யூனிஸம் பேசும் வகையறாக்களும் அடக்கம். இவற்றில் கடல்கடந்த வியாபார தொடர்புகள், இணைப்புகள், பண பரிவர்த்தனைகள் எல்லாமும் அடக்கம். எந்த திராவிடக் கட்சியும், பிரிவினைவாத கோஷ்டியும், சினிமாக்காரனும் இதில் சோடை போனதில்லை. அரசியல்வாதிகள் மற்றும் சினிமாக்காரர்களின் அடிக்கடி அமெரிக்க-ஐரோப்பிய பயணங்கள் அவற்றை வெளிப்படுத்தின. மோடியின் “கருப்புப் பண வேட்டை” முதலியவை இவர்களை பாதித்ததால் தான், மோடியை எதிர்க்க ஆரம்பித்தார்கள். ஆக, கள்ளப்பணம், வரியேய்ப்புகளில் ஈடுபட்ட கூட்டங்கள் தாம் இன்று தெருக்களில் கருப்பு சட்டம் அணிந்து கலாட்டா செய்து, பொது மக்களை இம்சித்து வருகின்றனர். திர்ப்புகள் சேவை வரி முதல் ஜிஎஸ்டி வரை இதில் உள்ளதை கவனிக்கலாம். இருப்பினும் வியாபாரம் செய்பவன், லாபங்களில் கொழுப்பதினால், அமைதியாகவே இருக்கிறான்.
© வேதபிரகாஷ்
19-04-2018

[1] Andhra Pradesh was carved out of Madras Presidency on October 1, 1953. This gave a death blow to the concept of “Dravidastan” and the separate nation for “Dravidian speaking people.” In other words, the “Dravidian” demand was restricted to “Tamilnadu.” The linguistic formation of States took place in 1956 with Kerala and Karnataka. Thus, “Dravidastan” was reduced to “Tamilnadu”.
[2] Citing Royal Canadian Mounted Police sources the Jane’s Intelligence Review said the Liberation Tigers of Tamil Eelam (LTTE) controls portion of US Dollar one billion drug market in the Canadian city of Montreal. The Jane’s Intelligence Review said that one of the main ways of earning money out of its USD 200-300 million annual income of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) is narcotics smuggling using its merchant ships, which also transports illicit arms and explosives which they procure all over the world for a separatist insurgency in the Indian Ocean island of Sri Lanka.
Steven W. Casteel, Narco-Terrorism: International Drug Traffickingand Terrorism – a Dangerous Mix, Statement ofSteven W. Casteel Assistant Administrator for Intelligence Before theSenate Committee on the Judiciary May 20, 2003; http://www.justice.gov/dea/pubs/cngrtest/ct052003.html
[3] Kartikeya, LTTE fall will alter drug trade in India, TOI, May 30, 2009, Read more: ‘LTTE fall will alter drug trade in India’ – Mumbai – City – The Times of Indiahttp://timesofindia.indiatimes.com/city/mumbai/LTTE-fall-will-alter-drug-trade-in-India/articleshow/4595554.cms#ixzz0xzdLhzpw
http://timesofindia.indiatimes.com/city/mumbai/LTTE-fall-will-alter-drug-trade-in-India/articleshow/4595554.cms
[4] http://www.eurasiareview.com/201006143193/sri-lanka-ltte-diaspora-wars-south-asia-intelligence-review.html
[5] செபாஸ்டியன் சீமான், ஜகத் காஸ்பரை இந்தியாவின் ஒற்றன் என்றெல்லாம் சொல்வதும், ஏதோ பெரிய விடுதலைப் போராளி போல நடந்து கொள்வதும், அதேபோல ஜகத் காஸ்பர் வெளிப்படையாக எல்.டி.டி.ஈ.யினரை ஆதரித்து பேசுவது-எழுதுவது சென்று செய்தாலும், கண்டு கொள்ளாமல் இருப்பது, முதலியவை தமிழகத்தில் வேடிக்கையான விஷயங்களே.
[6] சன் குழும நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், சீரியல்கள் முதலியவற்றை அலசிப் பார்க்கும் போது, இது வெளிக்காட்டுகிறது.
[7] அண்ணாவின் “பணத்தோட்டம்” திராவிட அரசியல் மற்றும் கம்பெனிகளின் கூட்டுக் கொள்ளை, வரியேய்ப்பு முதலியவற்றை காட்டுவது மட்டுமல்லாது, சினிமா-கிரிக்கெட் தொடர்புகளையும் வெளிப்படுத்தி விட்டன.
குறிச்சொற்கள்:அரசியல், சுய நிர்ணயம், சுயநிர்ணயம், தனி நாடு, தமிழ், தமிழ் தமிழன், தமிழ் பிரினைவாதம், தமிழ்நாடு, திராவிட இயக்கம், திராவிட நாடு, திராவிடஸ்தான், நரேந்திர மோடி, பிரிவினை, பிரிவினைவாதம், பிரிவ்னைவாதம், மோடி, மோடி எதிர்ப்பு
அண்ணா, கருணாநிதி, கூத்தாடி, சித்தாந்தம், சுய நிர்ணயம், ஜெயலலிதா, தனி நாடு, தமிழ், தி.மு.க, திக, திரவிடம், திராவிட இனம், திராவிட சித்தாந்தம், திராவிட நாத்திகம், திராவிட பாகுபாடு, திராவிடத் தமிழன், திராவிடன், திராவிடம், திராவிடர், திராவிடஸ்தான், மாயை, மோடி, வீரமணி, ஸ்டாலின் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 20, 2018
தமிழ், தமிழகம், தமிழ்நாடு: அரசியல் ஆட்சி, நிர்வாக மேன்மையிலிருந்து, கவர்ச்சி அரசியலுக்கு மாறியது – திராவிடத்துவவாதிகளின் வசைபாடும் போக்கு [1]

காந்திஜி, ராஜாஜி, காமராஜ், இந்திரா, மொரார்ஜி போன்றோரை இழிவாகச் சித்தரித்து, பேசி, தூஷித்தது: பொதுவாக பிரபலமானவர்களை ஆதரித்தும், எதிர்த்தும் சிலர் பிரபலமடைய முயற்சிக்கலாம், திராவிடத்துவத்தில் அத்தகைய கொள்கையுள்ளது. வில்லன்களாக அறிமுகம் ஆகி, ஹீரோக்கள் ஆன லாஜிக் தான் [negative suggestion] பிரபலமானவர்களை ஆதரிப்பதும், எதிர்ப்பதும்! அரசியலிலும் காந்திஜி, ராஜாஜி, காமராஜ், இந்திரா, மொரார்ஜி போன்றோரை இழிவாகச் சித்தரித்து, பேசி, தூஷித்து, பிரிவினையை வளர்த்தனர். நடு இரவு கூட்டங்களில் ஆபாசமாக, கொச்சையாக மற்றும் அநாகரிகமாக பேசினர். இருப்பினும் பெரியார், அறிஞர், கலைஞர் என்ற உயர்வு நவிற்சிகளில் உலா வந்தனர். நன்றாக தமிழ் பேசுவர் என்ற திறமையைத் தவிர, வக்கிரத்துடன், வாயாலேயே கொக்கோகத்தை விவரித்து உசுப்புவர் என்ற தன்மையினை மறைத்தே வைத்தனர். பெரியார், அத்தகைய எதிர்ப்பில் தோல்வி கண்டார் எனலாம்[1]. ஆனால், தேர்தலில் நிற்கமுடியாது என்ற நிலை வந்தவுடன்[2], அண்ணாதுரையே, “திராவிட நாடு” கோரிக்கையை தூக்கிப் போட்டார், 14-01-1969 அன்று முதலமைச்சர் ஆனார். அதே தோரணையில், 50 ஆண்டுகள் கழித்து, இப்பொழுது மோடியை தூஷித்து வருகின்றனர். இன்றைக்கு மோடியை திட்டுவது, ஒருமையில் பேசுவது, தூஷிப்பது என்று திராவிட கீழ்தட்டு வர்க்க அரசியல்வாதிகள் தரந்தாழ்ந்து வாடிக்கையாக செய்து வருகின்றனர். இதற்கு தமிழ், தமிழர், தமிழ்நாடு, திராவிடம், திராவிட நாடு கட்டுக்கதைகளை, உணர்ச்சிப் பூர்வமான கோஷங்களை எழுப்பி, தீவிரவாதத்தை வளர்க்கப் பார்க்கிறார்கள்.

இந்திய பிரத மந்திரிகளும், திராவிட அரசியலும், பிரிவினை போராட்டங்களும்: இந்திய பிரதமர்களின் அட்டவணை, காலக் கிரமமாகக் கொடுக்கப்பட்டுள்ளது: இக்காலக்கட்டங்களில் திராவிட கட்சிகள் [திமுக-அதிமுக], மத்தியில் ஆண்ட கூட்டணியுடன் சேர்ந்து தான் அதிகாரத்தை அனுபவித்து, தத்தமது மாநில குறுகிய தன்னலங்களிலும் ஈடுபட்டிருந்தன.
|
பிரதமந்திரி பெயர் |
இருந்து |
வரை |
ஆண்ட கட்சி |
1 |
ஜவஹர்லால் நேரு |
15-08-1947 |
27-05-1964 |
இந்திய தேசிய காங்கிரஸ் |
– |
குல்சாரிலால் நந்தா |
27-05-1964 |
09-06-1964 |
இந்திய தேசிய காங்கிரஸ் |
3 |
லால் பஹதூர் சாஸ்திரி |
09-06-1964 |
11-01-1966 |
இந்திய தேசிய காங்கிரஸ் |
– |
குல்சாரிலால் நந்தா |
11-01-1966 |
24-06-1966 |
இந்திய தேசிய காங்கிரஸ் |
3 |
இந்திரா காந்தி |
24-06-1966 |
24-03-1977 |
இந்திய தேசிய காங்கிரஸ் |
4 |
மொரார்ஜி தேசாய் |
24-03-1977 |
28-07-1979 |
ஜனதா கட்சி |
5 |
சரண் சிங் |
28-07-1979 |
14-01-1980 |
ஜனதா கட்சி [செக்யூலார்] |
6 |
இந்திரா காந்தி |
14-01-1980 |
31-10-1984 |
இந்திய தேசிய காங்கிரஸ் |
7 |
ராஜிவ் காந்தி |
31-10-1984 |
02-12-1989 |
இந்திய தேசிய காங்கிரஸ் |
8 |
வி.பி. சிங் |
02-12-1989 |
10-11-1990 |
இந்திய தேசிய காங்கிரஸ் |
9 |
சந்திரசேகர் |
10-11-1990 |
21-06-1991 |
இந்திய தேசிய காங்கிரஸ் |
10 |
பி.வி. நரசிம்ம ராவ் |
21-06-1991 |
16-05-1996 |
இந்திய தேசிய காங்கிரஸ் |
11 |
அடல் பிஹாரி வாஜ்பாயி |
16-05-1996 |
01-06-1996 |
பாரதிய ஜனதா பார்ட்டி |
12 |
எச்.டி.தேவ கவுடா |
01-06-1996 |
21-04-1997 |
ஜனதா தள் [யுனைடெட்] |
13 |
ஐ.கே.குஜரால் |
21-04-1997 |
19-03-1998 |
ஜனதா தள் [யுனைடெட்] |
14 |
அடல் பிஹாரி வாஜ்பாயி |
19-03-1998 |
22-05-2004 |
பாரதிய ஜனதா பார்ட்டி |
|
மன் மோஹன் சிங் |
19-03-1998 |
22-05-2004 |
இந்திய தேசிய காங்கிரஸ் |
15 |
மன் மோஹன் சிங் |
22-05-2004 |
26-05-2014 |
இந்திய தேசிய காங்கிரஸ் |
16 |
நரேந்திர மோடி |
26-05-2014 |
|
பாரதிய ஜனதா பார்ட்டி |
1969-2019 என்று ஐம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சி என்று ஆராய்ச்சி செய்து பார்த்தால், அவற்றால் தமிழ், தமிழர், தமிழ்நாடு, முதலியவற்றிற்கு என்ன நன்மைக்-தீமை ஏற்பட்டன என்பதனை அலசிப் பார்த்துத் தெரிந்தும் கொள்ளலாம். திமுக மற்றும் அதிமுக தான் காங்கிரஸுடன் பல்லாண்டுகள் சேர்ந்து, கூட்டாட்சி நன்மைகளை பெற்றன. ஆகையால், காவிரிப் பிரச்சினைக்கு அவை என்ன செய்து கொண்டிருந்தன என்பதனையும் அறிந்து கொள்ளலாம்.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா திராவிடர்களால் அதிகம் தூஷிக்கப் பட்டது: ஜவஹர்லால் நேரு காலத்தில் [1964 வரை] அண்ணாதுரை “அடைந்தால் திராவிட நாடு, இல்லாவிட்டால் சுடுகாடு, வடக்கு வாழ்கிறது, தெற்குத் தேய்கிறது” என்றெல்லாம் பேசி, பிறகு, அடங்கி-ஒடுங்கி, தேர்தலில் நின்று வெற்றி பெற்றி 1969ல் முதலமைச்சர் ஆனார் என்பது மேலே சுட்டிக் கட்டப்பட்டது. கருணாநிதியும் அதே பாணியைப் பின்பற்றி தொடர்ந்து ஆட்சியில் இருக்க எல்லா சூழ்ச்சிகளையும் [இந்தி எதிர்ப்பு, மாநில சுயயாட்சி] செய்து வந்தார். 1970-80களில், திராவிடத்துவவாதிகள் எம்.ஜி.ஆரை அவ்வாறு தான் தாக்கி வந்தனர். மலையாளி, கூத்தாடி, தாத்தா, என்றெல்லாம் சொல்லி, பேசி, திட்டினார்கள். ஆனால், முன்னர் அதே எம்.ஜி.ஆர் சுடப்பட்டு, ஆஸ்பதித்திரியில் இருந்த போது, அப்புகைப் படத்தை தேர்தல் பிரச்சாரத்திற்கு உபயோகப் படுத்தி, திமுக வெற்றிக் கண்டது. பிறகு, எம்.ஜி.ஆர், அதிமுக ஆரம்பித்தபோது, கருணாநிதி, தர்மத்திற்கு முன்னால் “அ” போட்டால் அதர்மம், நியாயத்திற்கு முன்னால் “அ” போட்டால் அநியாயம், என்றெல்லாம் விவரித்து, திமுக முன்னால் “அ” போட்டால் “அதிமுக” ஆயிற்று என்று சொன்னது போலத்தான், இன்று தீவிரவாத-பிரிவினைவாத கும்பல்கள், மோடியைத் தாக்கி வருகின்றனர். ஜெயலலிதாவையும் அதே பாணியில், பெண் என்றும் பார்க்காமல், கீழ்த்தரமாகத் திட்டி வந்தனர். போதாகுறைக்கு, அவர் பிராமணர் என்பதால், “பாப்பாத்தி” என்று வேறு மேடைகளில் அருவருப்பாகப் பேசி வந்தனர். அண்ணாவின் ஏசல்-பாணியை கரு அப்படியே பின்பற்றியது தான் “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற கொள்கையாக இருந்தது.

குடி அரசு, திராவிட நாடு, நாத்திகம், ஆபாசங்கள் இன்றும் விடுதலை, முரசொலிக்களில் தொடர்வது: ஜெயலலிதா மைனாரிடி அரசு என்று குறிப்பிட்டதை பொறுக்காமல், கருணாநிதி முரசொலியில் பழங்கதையை போட்டு அசிங்கப்படுத்தினார்[3]. முரசொலியில் ஜெயலலிதா பற்றிய எழுத்துகள் பெண்மையை தூசிக்கும் வரம்புகள், ஆபாசத்தின் எல்லைகள், எண்ணவுரிமை தரங்கள் எல்லாவற்றையும் கடந்ததவை என்பதை காணலாம்[4]. இப்படியெல்லாம் தரங்கெட்டு பேசினால், நடந்து கொண்டால், எல்லோரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள், அதனால், மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் இல்லை நாம் அதிகாரத்தில் இருப்பதனால், யாரும் ஒன்றும் செய்ய முடியாது, அதிகாரத்தில் இல்லாமல் இருந்தாலும், அடிப்பார்கள்-உதைப்பார்கள்-அவமரியாதை செய்வார்கள் என்று தொடந்து செய்து வருகிறார்கள் என்று தெரிகிறது. விடுதலையில் இன்றும் அத்தகைய தேசவிரோத, இந்துவிரோத, ஆனால், துலுக்க-கிருத்துவ ஆதரவு எழுத்துகளை காணலாம். பேச்சு-நடவடிக்கைகளும் அவ்வாற்றே உள்ளன, தொடர்கின்றன. “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற கொள்கை தாராளமாக பின்பற்றப்பட்டு வருவது தெரிகிறது. அவர்களது நாத்திகம் செக்யூலரிஸ நாத்திகமாக இருந்து வருவதால், பிராமண எதிர்ப்பு, துவேசம் மற்று காழ்ப்புணர்வு கொதிப்புகள் ஜெயலலிதா மீது சிந்திகொண்டே இருந்தன.
© வேதபிரகாஷ்
19-04-2018

[1] காந்தி, காங்கிரஸ் எதிர்ப்புகளிலிருந்து, இந்திய-இந்தி-இந்து-எதிர்ப்பு பவரை தோல்வி கண்டார், ஆனால், ஜின்னாவும், அம்பேத்கரும் அவரவர் வழிகளில் வெர்றிக் கண்டனர்.
[2] அரசியல் நிர்ணய சட்ட திருத்தத்தினால், திராவிட நாடு கொள்கையை, மறந்தார்.
[3] 1978-ம் ஆண்டு குமுதம் இதழில் வெளிவந்த ஜெயலலிதாவின் “மனம் திறந்து பேசுகிறேன்” என்கிற தொடரில்தான் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவும் தாமும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்துவது குறித்தும் சோபன்பாபுவுக்கு பால்கனியில் நின்று ஜெயலலிதா டாட்டா காண்பிக்கும் படங்களும் வெளியாகி இருந்தன என குறிப்பிடப்படுவது உண்டு. 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந் தேதி முரசொலி நாளேடானது 1978-ல் குமுதம் இதழில் வெளிவந்த ஜெயலலிதா பேட்டி என ஒன்றை பிரசுரம் செய்தது.
[4] Twenty years later, in 2009, when Jayalalithaa referred to the DMK government as ‘the minority government’ — which is a political statement — Karunanidhi retorted by a personal attack on Jayalalithaa, calling her ‘thirumathi’ (meaning, Mrs.), implying that she was married to Sobhan Babu, and reprinting in the DMK’s official daily Murasoli (dated 19.08.2009)Jayalalithaa’s old interview to Kumudham weekly (in which she talked about her relationship with Sobhan Babu).
Rajanayagam, Popular Cinema and Politics in South India: The Films of MGR and Rajinikanth, Routledge, New Delhi, 2015, p……, fn.23.
குறிச்சொற்கள்:அரசியல், இந்திரா, ஐபிஎல், கருப்பு, கர்ப்புக் கொடி, காந்திஜி, காமராஜ், கிரிக்கெட், கிழவன், சேப்பாக்கம், டோனி, தாத்தா, திக, திமுக, திராவிடம், திராவிடர், தோணி, தோனி, நரேந்திர மோடி, மொரார்ஜி, மோடி, மோடி எதிர்ப்பு, மோதி, ராஜாஜி, விதவை
அலி, ஊமையன், கனிமொழி, காமராஜர், கிழவன், கூத்தாடி, செபாஸ்டியன் சீமான், திராவிடன், திராவிடம், திராவிடர், நரேந்திர மோடி, பாஜக, பிஜேபி, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், மலையாளி, மொரார்ஜி, விடுதலை சிறுத்தைகள், வீரமணி, ஸ்டாலின் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
திசெம்பர் 11, 2016
ஜெயலலிதாவுக்கு முன்பு மற்றும் ஜெயலலிதாவுக்கு பின்பு: திராவிட கட்சிகளும், நிலையும், உருமாறுகின்ற தேவைகளும்!

மோடியை சந்தித்த பிறகு கௌதமி சதி செய்கிறாரா – அதிமுக கேட்கிறது: இதனால் நடிகை கவுதமிக்கு அ.தி.மு.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுபற்றி அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் ‘மாலைமலர்’ நிருபரிடம், மற்ற விவரங்களை விளக்கி விட்டு, கூறியதாவது[1]:- “…….நான் கவுதமியை கேட்கிறேன், நீ எந்த உலகத்தில் இருக்கிறாய்? இதுபோன்ற அத்துமீறலை நிறுத்திக் கொள்வது நல்லது. ஏற்கனவே கவுதமி, பிரதமரை ஒருமுறை சந்தித்து வந்துள்ளார். இதற்கு பின்னால் ஏதோ ஒரு சதி திட்டம் இருக்கிறதோ என நான் சந்தேகிக்கிறேன்”. இதேபோல செய்தி தொடர்பாளர் தீரன், முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வளர்மதி ஆகியோரும் கவுதமியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்[2]. இந்த சதிக்கு சகோதரி கவுதமி விலைபோய் விட்டாரா? என்ற ஐயம் எழுகிறது. ஆகவே இது தேவையில்லாத பிரச்சனை. இதை யாரும் விவாதம் ஆக்க வேண்டாம். திருச்சியில் நேற்று கவுதமியின் உருவப்படத்தை அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் தீயிட்டு எரித்தனர்[3]. மேலும் கவுதமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து அ.தி.மு.க.வினர் கூறுகையில், “ஜெயலலிதா மறைவில் எந்த சந்தேகங்களும் இல்லை. அவர் ஆஸ்பத்திரியில் இருந்த போது அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரில் சென்று விசாரித்து உள்ளனர். எனவே அவருடைய மறைவை கவுதமி விமர்சித்துள்ளது கண்டிக்கத்தக்கது,” என்றனர்[4].
ஜெயலலிதா இறப்பை வைத்து லாபம் பார்க்கத் துடிப்பது ஏன்?: கடந்த இரண்டு மாதங்களாக ஜெயலலிதாவின் ஆஸ்பத்திரிவாசம் பெரிய செய்தியாக இருந்து வந்துள்ளது. இப்பொழுதோ, அது பெரிதாகி விட்டது. ஜி.எஸ்.டியை விட, இதைப் பற்றித்தான் அதிகமாக பேசுகின்றனர். சமூக ஊடகங்களின் கீழ்த்தரமான பதிவுகள், சமூக ஊடகங்களின் தரத்தையேக் குறைத்து விட்டது. கட்சிசார்புடன் வேலைசெய்யும் பலரை வெளிகாட்டி வருகிறது. தகவல் தொழிற்நுட்ப சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கும்போது, அலறும் சிலர், ஜெயலலிதாவை இறந்த பின்னரும் மோசமாக விமர்சித்து வருவதை மற்றவர்களும் கவனித்து வருகிறார்கள். பொதுவாக, இந்தியாவில் இறந்தவர்களைப் பற்றி அதிகமாக விமர்சிப்பதில்லை. குறிப்பாக பெண்ணை அவ்வாறு செய்வதில்லை. ஆனால், ஜெயலலிதா விசயத்தில் இரண்டும் மீறப்படுகின்றன. இது அந்த விமர்சர்களுக்கு, அவர்களை சார்ந்த அரசியல் கட்சிகளுக்கு, சித்தாந்த கூட்டங்களுக்கு எதிராக போகும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ல வேண்டும்.
திமுகவில் நடந்து வரும் மாற்றங்கள்: திராவிடக் கட்சிகளில் மாற்றம், உருவமைப்பு, முதலியவை ஏற்படுமா என்ற யேஷ்யங்கள் ஏற்பட்டுள்ளன. திமுக மறுபடியும் உயிர்த்தெழ வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. எப்படியாவது, அதிமுகவைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணம் சென்ற மாதங்களை விட அதிகமாகி விட்டது. ஆனால் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும் எண்ணமும் உள்ளது. ஸ்டாலின் ஜெயலலிதாவுக்கு மரியாதை செல்லுத்தியதும், ராகுல் கருணாநிதியை பார்க்காமல் சென்றதும், மோடி சசிகலா-நடராஜன் முதலியோருடன் பேசியதும், அழகிரி கருணாநிதியை வந்து சந்தித்ததும் நிச்சயமாக அத்தகைய திட்டத்தை எடுத்துக் காட்டுகிறது. கருணாநிதியும் உடல்நிலை சரியாக இல்லாத நிலையில், திமுகவிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. “ஜெயலலிதா-கருணாநிதி ஆஸ்பத்திரிவாசம்” நிச்சயமாக பாரபட்சமாக விமர்சிக்கப் பட்டது. கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைமை ஸ்டாலினுக்குத்தான் செல்லும் என்றாலும், அழகிரி விடுவதாக இல்லை. இதுவரை மறைந்திருந்த ராஜா, மற்படியும், வெளிவந்து ஸ்டாலினுடன் வலம் வருகிறார்.
காங்கிரஸில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்: 2ஜி ஊழல் காங்கிரஸ்-திமுக கட்சிகளை இணைத்து வைத்தாலும், அதே விசயம் அவர்களை பாதித்து வருகின்றது என்பதும் தெரிந்த விசயமாக இருக்கிறது. கடந்த தேர்தலில் திமுகவின் தோல்விக்கு அது ஒரு முக்கியமான அம்சமாக இருந்தது. ஊழல் என்றாலே கருணாநிதி என்ற பழைய பிம்பம் மறுபடியும் பிரதிபலித்ததால், மக்கள் ஜெயலலிதாவைத்தான் தேர்ந்தெடுத்தனர். கருணாநியை தமிழக மக்கள் என்றுமே ஊழலில்லாத முறையில் பார்க்க முடிவதில்லை. 2ஜி ஊழல் ஏதோ திமுகவுடன் தான் இணைந்திருக்கிறது என்பது போல காட்ட வேண்டும் என்று ராகுல், தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் கருணாநிதியை சந்திக்காமல் சென்று வருகிறார். இப்பொழுதும், ஜெயலலிதாவைப் பார்த்து மரியாதை செல்லுத்தி விட்டு செல்லும் போது, கருணாநிதியை ஏன் பார்க்கவில்லை என்று கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ராகுலுக்கு கருணாநிதியை விலக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது என்பது மர்மமாக இருக்கிறது.
ஊழலை மீறி ஜெயித்த ஜெயலலிதா: ஜெயலலிதா உண்மையாக ஊழல் செய்தாரா அல்லது சசிகலா அண்ட் கம்பெனியால் மாட்டிக் கொண்டாரா, சுப்ரமணியன் சுவாமி மாட்டி வைத்தாரா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்தாலும், சட்ட-வழக்குகளை சீர்தூக்கிப் பார்த்தாலும், மக்கள் அவற்றைக் கன்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது. குறிப்பாக அவர் கருணாநிதி போன்ற ஆண்களால் பலிவாங்கப் படுகிறார் என்ற எண்ணம் அதிகமாகியது. தமிழக பென்களின் ஆதரவு இன்னும் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. இலவசதிட்டங்கள் எல்லாமெ பெரும்பாலும், பெண்களுக்கு என்பதை கவனிக்க வேண்டும். இதனால் தான் பெண்களின் ஆதரவு, இறந்த பின்னர் இன்னும் அதிகமாகியுள்ளதை கவனிக்கலாம். இனி ஜெயலலிதாவை, எம்.ஜி.ஆரைப் போன்று ஒரு ஓட்டுக்களை இழுக்கும் சின்னமாக்கி விட்டால், அவர் பெயரைச் சொல்லி இனி ஓட்டுகள் கேட்கலாம், மக்களும் ஓட்டுப் போடுவார்கள். எம்.ஜி.ஆர் படத்தை மற்ற கட்சிகள் போடுவதைப் போல, ஜெயலலிதா படத்தை போட முடியாது. அந்த விசயத்தில் அதிமுகவுக்கு லாபம் தான். இனி “எம்.ஜி.ஆர்-ஜெயலிதா” சின்னம் அமோகமான வெற்றிசின்னமாக இருக்கும். இதை எதிர்த்து யார் பேசினாலும் மக்கள் நிச்சயமாக நிராகரிப்பார். மேலும் இன்றைய இணைதள ஞானம் பரவியுள்ள காலத்தில், இளைஞர்களின் ஆதரவும் ஜெயலலிதாவுக்கு உள்ளது. அரசியலை சீர்துக்கிப் பார்க்கும் அவர்களிடத்தில் எப்படி மோடிக்கு ஆதரவு அளித்து வருகின்றனரோ, அத்தகைய ஆதரவு “எம்.ஜி.ஆர்-ஜெயலிதா” சின்னத்திற்குக் கிடைக்கும். ஆனால், அதிமுக ஊழலற்ற நிர்வாகத்துடன் செயல்பட வேண்டும். மோடி போன்று முன்னேற்றம், வளர்ச்சி, உன்னதி, மேன்மை என்ற ரீதியில் செயல்பட வேண்டும். மறுபடியும் வட்டம்-மாவட்டம்-கார்ப்பரேஷன் என்று ஊழல்களை ஆரம்பித்தால், இக்கால இளைஞர்கள் தூக்கி எரிந்து விடுவார்கள்.
அண்ணா, எம்.ஜி.ஆர், அம்மா சின்னங்கள்: தமிழகத்தைப் பொறுத்த வரையில், அண்ணா, எம்.ஜி.ஆர் சின்னங்களுக்குப் பிறகு “அம்மா” தான் வந்துள்ளது. அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், அடுத்து ஜெயலிதாவால் தான் மக்களைக் கவர முடிந்துள்ளது. திமுக “எம்.ஜி.ஆர்”ஐ வைத்துதான் ஓட்டு கேட்டது. அதிமுகவும் “எம்.ஜி.ஆர்”ஐ வைத்துதான் ஓட்டு கேட்டது. எம்.ஜி.ஆர் தெர்ந்தெடுத்தது –ஜெயலிதாவை. ஆனால், ஜெயலிதா யாரையும் நம்பவில்லை, தெர்ந்தெடுக்கவில்லை, தன்னை வைத்தே எல்லாவற்றையும் நடத்தினார். முக்கியமாக பொறுப்பேற்றுக் கொண்டார். மற்றவர்கள் மீது திணிக்கவில்லை, சுமத்தவில்லை, பழிபோடவில்லை. ஆக தமிழக மக்களை ஈர்க்கவோ, ஓட்டுகளை சேர்க்கவோ அண்ணா, எம்.ஜி.ஆர், அம்மா சின்னங்களே தவிர மற்றவையெல்ல. இனி திராவிட உதிரிக்கட்சிகள், பெரியார், அண்ணா, அம்பேத்கர், காந்தி, நேரு, எம்.ஜி.ஆர், என்ற முரண்பட்ட தலைவர்கள் சின்னங்களுடன் அம்மாவையும் சேர்ப்பார்கள். ஏன் முஸ்லிம் கட்சிகள் மட்டுமல்ல, பிஜேபியும் அம்மாவை சேர்த்துக் கொள்வார்கள்.
© வேதபிரகாஷ்
12-12-2016

[1] மாலைமலர், ஜெயலலிதா மரணம்: கவுதமியின் சந்தேகத்தின் பின்னால் சதி, பதிவு: டிசம்பர் 10, 2016 13:29, மாற்றம்: டிசம்பர் 10, 2016 13:30
[2] http://www.maalaimalar.com/News/District/2016/12/10132959/1055425/Gauthami-suspicion-conspiracy-for-Jayalalithaa-Died.vpf
[3] தினதந்தி, ஜெயலலிதா மரணம் குறித்து விமர்சனம்: நடிகை கவுதமி உருவப்படத்தை அ.தி.மு.க.வினர் எரித்தனர், பதிவு செய்த நாள்: ஞாயிறு, டிசம்பர் 11,2016, 2:32 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, டிசம்பர் 11,2016, 2:32 AM IST
[4] http://www.dailythanthi.com/News/State/2016/12/11023224/Jayalalithaa-death-Review-Actress-kavutami-cutout.vpf
குறிச்சொற்கள்:அண்ணா, அரசியல், ஆரியர், இறுதி ஊர்வலம், எம்.ஜி.ஆர், கருணாநிதி, கலைஞர், கூட்டணி, சசிகலா, சரஸ்வதி, ஜெயலலிதா, ஜெயா, திராவிடர், தீபா, நரேந்திர மோடி, பாஜக, பிஜேபி, மோடி, ராகுல், ராஹுல், வாரிசு, ஸ்டாலின்
அண்ணா, அழகிரி, ஆரிய இனம், ஆரியம், ஆரியர், இறப்பு, இறுதி ஊர்வலம், கனிமொழி, கருணாநிதி, கிரைண்டர், ஜெயலலிதா, ஜெயா, தி.மு.க, திக, திராவிடன், திராவிடம், திராவிடர், நரேந்திர மோடி, பாஜக, பாப்பாத்தி, பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பன துவேஷம், பார்ப்பனர், பார்ப்பனீயம், பிஜேபி, வாரிசு, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
திசெம்பர் 11, 2016
ஜெயலலிதாவுக்கு முன்பு மற்றும் ஜெயலலிதாவுக்கு பின்பு: ஜெயலலிதாவுக்கு நிகராக இன்னொரு திராவிட தலைவர் உருவாகுவது கடினமே!
ஜெயலலிதாவும், ஜி.எஸ்.டி அரசியலும்: ஜி.எஸ்.டியை பற்றி அமித் மித்ரா எந்த அளவுக்கு தெரிந்து கொண்டிருக்கிறாரோ, அதைவிட ஜெயலலிதா தெரிந்து கொண்டிருந்தார் என்பதை, மோடி, அருண் ஜைட்லி, பியூஸ் கோயல் என்று படையெடுத்து வந்து ஜெயலலிதாவைப் பார்த்தது, சந்திக்க முயன்றது, மா ஃபோ பாண்டியன் பேசிய விதம் முதலியவை எடுத்துக் காட்டுகின்றன. இந்திய நிலையில், அதுதான் ஜெயலலிதாவை தேசியத்தலைவர் போன்ற தோற்றத்தை உருவாக்கியது. ஏனெனில், அவர்கள் கேரள அல்லது வங்காள முதலமைச்சர்களைச் சென்று பார்க்கவில்லை, பேசவில்லை. கடந்த தேர்தல்களில், தமிழகத்தில் பிஜேபியை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை. மோடி வந்து சென்றாலும், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தன்னுடைய பலத்தை நிரூபித்தார். ஜி.எஸ்.டியைப் பொறுத்த வரையில், சேவை வரி திரட்டும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என்று உறுதியாகக் கேட்டு வந்தது தமிழகம் தான். இந்நிலையில், காங்கிரஸ் கலாட்டா செய்து வருகின்ற நிலையில், பிஜேபி ஜெயலலிதாவின் ஆதரவை எதிர்பார்த்தது, ஆனால், ஜெயலலிதா காலமானது, எல்லாவற்றையும் முடக்கி விட்டது. ஜெயலிலதாவுக்குப் பிறகு, மோடியின் அதிமுக பக்கம் சாய்தலை இவ்வித்த்தில் தான் காணவேண்டும்.
நடிகை கௌதமி மோடிக்கு எழுதிய கடிதம் (08-12-2016): ஜெயலலிதா இறந்த பிறகு, பலர் அவரை வாழ்த்தி வருவதே வினோதமான போக்காக இருக்கும் நிலையில், கௌதமி, ஜெயலலிதா மரணம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது, அதைவிட வினோதமாக உள்ளது. ‘அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மறைந்த நாள் வரை ஏன் யாரையும் பார்க்க விடவில்லை? ஏன் அவருடைய உடல்நலம் குறித்த தகவல்கள் ரகசியமாக உள்ளன? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாதா?’ என கேட்டுள்ளார்[1]. கடிதத்தில் இருந்து சில வரிகள்[2]: “I ask these questions now because it is a primary concern and right of every citizen of India to be aware of and informed about their democratically elected leaders. To be aware of their state of health and ability to perform their duties for the larger good of the people. To be concerned for the wellness and comfort of a beloved leader of the masses. And the fact that a tragedy of such tremendous scale should not go unquestioned and definitely, not unanswered, under any circumstances. If this be the case with a public figure of this magnitude, then what chance does the common citizen of India have when he fights for his personal rights? Gautami Tadimalla, 08.12.2016”. இப்படி அவரது பிளாக்கில் அக்கடிதம் வெளிவந்ததும், ஊடகங்கள், அதனை செய்தியாக்கி விட்டது[3].
இப்பொழுது நடக்கும் ஊடகதர்மமும், செய்தி வெளியீடுகளும்: இன்றைக்கு பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் முதலியவற்றில் உள்ளவற்றையெல்லாம் செய்திகளாக்கி வருவது தரமற்ற செயலாக தெரிகிறது. பொதுவாக நிருபர்கள் விசாரித்து, செய்தித்தரம் உள்ளதா என்று பார்த்துதான், செய்திகளை அனுப்புவார்கள். அதனை, ஆசிரியர் பார்த்துப் படித்து, அதனை செய்தியாக வெளியிடலாமா வேண்டாமா என்று தீர்மானித்தப் பிறகு, வெளியாகும், இல்லை குப்பைத் தொட்டிக்கு போகும். பத்திரிக்கை / நாளிதழ் ஆசிரியர் ஊடகதர்மத்தைப் பின்பற்றி வந்தனர். ஆனால், இன்றைக்கு, குப்பைத்தொட்டிக்கு போகவேண்டிய விவகாரங்கள் செய்தியாகின்றன. இது நிருபர்கள் ஆதிக்கம் செல்லுத்துகின்றனரா அல்லது பத்திரிக்கை / நாளிதழ் ஆசிரியர் கைப்பாவைகளாக, பொம்மைகளாக வேலை செய்து வருகின்றனரா என்றா சந்தேகமும் எழுகின்றது. இன்றைக்கு, ஊடகங்கள் பெரும்பாலும், அரசியல் கட்சிகள், தொழிலதிபர்கள், அந்நியநாட்டு ஏஜென்டுகள்-சித்தாந்தவாதிகள் முதலியோரின் கைகளில் உள்ளது என்பது தெரிந்த விசயமாகி விட்டது. தெரிந்து விட்டநிலையிலும், அவை கவலைப்படுவதாக இல்லை. கூட்டணி கொள்ளையில், அவற்றிற்கு விளம்பரங்கள் கிடைக்கின்றன, வாழ்ந்து வளர்கின்றனர். மற்றவை வீழ்ந்து மறைகின்றன.
கௌதமி கடிதத்தின் விவரங்கள்: “ஒரு சாதாரண இந்திய குடிமகளாக நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்[4]. சமீபத்தில் காலமான தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் கோடிக்கணக்கான நபர்களில் நானும் ஒருவர். ஜெயலலிதா சிறந்த அரசியல் தலைவர் மட்டுமல்லாமல் பெண்கள் தங்கள் வாழ்வில் எப்படி தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டும் என்பதற்கும் நல்ல உதாரணம். பல்வேறு நல்வாழ்வுத் திட்டங்களை அவர் நிறைவேற்றியுள்ளார். சமீபத்தில் காலமான அவரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன[5]. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, சிகிச்சை அளிக்கப்பட்டது, அவர் குணமாகி வருவதாக கூறப்பட்டது, திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது போன்ற பல சந்தேகங்கள் உள்ளன[6]. பல மர்மங்கள் நிறைந்திருக்கும் அவரது மரணத்தில் இருக்கும் சந்தேகங்களை பிரதமர் மோடி தீர்க்க வேண்டும். முதல்வரின் மரணம் குறித்து அறிந்து கொள்ள, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உள்ளது[7]. தனிப்பட்ட நபரின் மரணமாக இருந்தால் அறிந்துகொள்ள எங்களுக்கு உரிமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் மக்களால் விரும்பப்பட்ட, தமிழக முதல்வராக பதவி வகித்த ஒருவரின் மரணம் குறித்து அறிந்து கொள்ள முயற்சி செய்வது எந்த விதத்திலும் தவறும் இல்லை. இந்த கடிதம் குறித்து நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என நான் முழுமனதுடன் நம்புகிறேன். இந்த விஷயத்திலும் நீங்கள் உண்மையை வெளிக்கொண்டு வருவீர்கள் என நான் நம்புகிறேன்,” என தனது கடிதத்தில் கௌதமி கூறியுள்ளார்[8].
சி.ஆர்.சரஸ்வதியின் பதில்: இதுதொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில்[9], “ஜெயலலிதா வேகமாக குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்தோம். அவர் நன்றாக தான் இருந்தார். திடீரென்று அவருக்கு மாரடைப்பு வரும் என்றோ, அவர் நம்மை விட்டு பிரிந்து செல்வார் என்றோ யாரும் நினைக்கவில்லையே?.அதிமுக அல்லாது தமிழகம் மற்றும் இந்தியா அளவில் கட்சியை சேர்ந்தவர்கள் அப்பல்லோ வந்து ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தனர். அவர் உடல்நலம் தேறி வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றே அனைவரும் கூறினர்[10]. இதை கௌதமி அவர்கள் பார்க்கவில்லையா? படித்து தெரிந்து கொள்ளவில்லையா?[11] அரசு மருத்துவர்களாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தானே சிகிச்சை அளித்தனர், ரிச்சர்டு என்ன அதிமுக–வை சேர்ந்த மருத்துவரா? அத்தனை பேரும் ஜெயலலிதா நன்றாக இருப்பதாகவும், விரைவில் வீட்டுக்கு வந்து விடுவார் என்றும் பேட்டி கொடுத்தனர்[12]. அப்படியானால் அத்தனை பேரும் பொய் சொன்னார்கள் என்று கவுதமி சொல்கிறாரா?. வீணாக யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம்[13]. நன்றாக உடல் நலம் பெற்று வந்த அவருக்கு எதிர்பாராமல் உடல் நிலை மோசம் அடைந்ததாக லண்டன் டாக்டர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறாரே? ஏன் நேற்று கூட அப்பல்லோ நர்ஸ்களும், மருத்துவர்கள் எவ்வளவு அருமையாக சொல்லி இருக்காங்க? ஏன் காட்டவில்லை என்று கௌதமி கேட்குறாங்க? ஐசியூவில் இருக்கும் போது யாராக இருந்தாலும் முதல்வரை சென்று பார்க்க முடியாது,” என கூறியுள்ளார்[14].
© வேதபிரகாஷ்
12-12-2016

[1] விகடன், ஜெ., மரணத்தில் ஏன் ரகசியம்? – கௌதமியின் கடிதம், Posted Date : 07:44 (09/12/2016); Last updated : 10:06 (09/12/2016).
[2] http://www.vikatan.com/news/india/74516-gautami-writes-to-pm-modi-on-the-mystery-surrounding-jayalalithaas-death.art
[3] Gautami Tadimalla, 4/472, Kapaleeswarar Nagar, Neelankarai, Chennai 600041, +917338713979.
https://gautamitadimalla.wordpress.com/2016/12/08/tragedy-and-unanswered-questions/
[4] தமிழ்.வெப்துனியா, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது: நடிகை கௌதமி பிரதமருக்கு கடிதம்!, Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2016 (10:46 IST)
[5] http://www.tamil.webdunia.com/article/regional-tamil-news/gautami-raises-questions-on-jayalalithaa-s-mystery-death-writes-to-pm-modi-116120900006_1.html
[6] மாலைமலர், ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை: பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி கடிதம், பதிவு: டிசம்பர் 09, 2016 11:09
[7] http://www.maalaimalar.com/News/District/2016/12/09110950/1055149/Jayalalithaa-death-controversy-actress-gowthami-letter.vpf
[8]
[9] லங்காஶ்ரீ, நடிகை கௌதமிக்கு காட்டமாக பதிலடி கொடுத்த சி.ஆர்.சரஸ்வதி, டிசம்பர்.09, 2016.
[10] தினசரி, அதிமுக குறித்து வதந்தி பரப்புவதை கௌதமி நிறுத்த வேண்டும்: ஸி.ஆர்.சரஸ்வதி ஆவேசம், 09-12-2016.09.15.PM IST.
[11] http://www.dhinasari.com/politics/10813-cr-saraswathi-condemn-gauthamis-remark-over-jayalalithas-death-row.html
[12] தினதந்தி, யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம்: ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகத்தை கிளப்புவதா? நடிகை கவுதமிக்கு, சி.ஆர்.சரஸ்வதி கண்டனம், பதிவு செய்த நாள்: சனி, டிசம்பர் 10,2016, 6:48 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, டிசம்பர் 10,2016, 11:15 PM IST;
[13] http://www.dailythanthi.com/News/State/2016/12/10184858/I-do-not-want-anyone-to-spread-rumors-Actress-Gautami.vpf
[14] http://news.lankasri.com/india/03/115131
குறிச்சொற்கள்:அரசியல், கூட்டணி, சசிகலா, ஜி.எஸ்.டி, ஜெயலலிதா, ஜெயா, தன்னம்பிக்கை, தமிழ்நாடு, நடராஜன், பாஜக, பிஜேபி, மோடி
அண்ணா, அழகிரி, ஆத்மா, ஆரியம், ஆரியர், ஆர்.எஸ்.எஸ், கனிமொழி, கருணாநிதி, சன் டிவி, சிகிச்சை, சுயமரியாதை, ஜெயலலிதா, ஜெயா, தி.மு.க, திக, திரவிடம், திராவிட சித்தாந்தம், திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், திராவிடர், நரேந்திர மோடி, பார்ப்பனர், பார்ப்பனீயம், பெரியார், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
திசெம்பர் 16, 2013
மோடி-பிஜேபி வேறு, வாஜ்பேயி-பிஜேபி வேறு – ராஜா-கனிமொழியை சிறைவைத்த காங்கிரஸ் – இக்கட்சிளுடன் திமுக கூட்டு கிடையாது – கருணாநிதி திமுகவினரிடம் கெஞ்சலாக அறிவிப்பு (2)!
திமுகவினரின் கருத்தைத் தொகுத்து, அதே நேரத்தில் தீர்ப்பளிக்கும் முறையில் கருணாநிதி பேசியது கவனிக்க வேண்டிய விசயமாக இருக்கிறது. காங்கிரஸைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்[1], ஆனால், பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொண்டால் நல்லது என்றும் பேசியிருக்கிறர்கள். தினகரன் அவரது பேச்சை வெளியிட்டுள்ளது[2]. பொதுவாக நக்கீரன் அம்மாதிரி வெளியிடும், ஆனால், இப்பொழுது சுருக்கத்தை வெளியிட்டுள்ளது[3]. கருணாநிதி செய்தியாளர்களிடம் வழக்கம் போல பதில் சொல்லி சமாளித்திருக்கிறார்[4]. பிஜேபியும் இல்லை, காங்கிரஸும் இல்லை எனும் போது, வேறு யாடுடன் கூட்டு என்பது விந்தையாக இருக்கிறது[5]. ஆங்கில ஊடகங்கள் மட்டும் திட்டவட்டமாக பிஜேபி அல்லது காங்கிரஸ் கூட, கூட்டு இல்லை என்று தெரிவித்திருப்பது நோக்கத்தக்கது[6]. இதனை நேற்று இரவே (15-12-2013) ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டு விட்டன.
ஒரு இயக்கத்தையே, ஒரு பெரிய ஊழல் சாம்ராஜ்யத்தில் சிக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார்யார் என்று எனக்கு இன்னமும் நன்றாகத் தெரியும்: “நீங்கள் இந்தப் பொதுக்குழு தீர்மானங்கள் மூலமாக அனுமதித்திருக்கின்ற அந்தக் குழுவிலே இடம் பெறுகிறவர்கள், அந்தக் குழு யாரிடத்திலே தன்னுடைய முடிவினைத் தெரிவிக்க விரும்புகிறதோ, அந்த முடிவைப் பற்றி யோசித்து, இறுதி முடிவு எடுக்க வேண்டிய இடத்திலே இருக்கின்ற நானும், அன்பழகனும், ஸ்டாலினும் அத்தனை பேரும் இவைகளை எல்லாம் மறந்து விட மாட்டோம். மறந்து விட்டு ஏமாந்து விடாதீர்கள்
என்று நீங்கள் சொன்னால், நான் உங்களுக்குச் சொல்கிற பதில், ஒரு முறை பட்டது போதும், தனிப்பட்ட ஒரு காயத்திற்காக நாங்கள் அழவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட காயம் அல்லது ராஜாவிற்கு ஏற்பட்ட காயத்திற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. அவைகளை நாங்கள் சமாளிக்க முடியும். ஆனால் ஒரு இயக்கத்தையே, ஒரு பெரிய ஊழல் சாம்ராஜ்யத்தில் சிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்று எனக்கு இன்னமும் நன்றாகத் தெரியும். |
திமுகவை ஊழலில் சிக்க வைத்தவர்களில் காங்கிரசில் குறிப்பாக உள்ளார்கள் என்றால், அந்த கூட்டாளிகளை, திமுக வெளிப்படுத்தலாமே? அந்த பிஜேபி வேறு, இந்த பிஜேபி வேறு எனும் போது, அந்த காங்கிரஸ்காரர்கள் வேறு, இந்த காங்கிரஸ்காரர்கள் வேறு, என்று இனம் கான வைக்கலாமே? ஏன் அவர்களை மறைத்து சாட வேண்டும்? துரோகிகளின் முகமூடிகளை கிழித்து எறியலாமே? இதுதானே தகுந்த சந்தர்ப்பம்? |
அதையெல்லாம் மறந்து விட்டு எப்படி அவர்களை நாங்கள் காப்பாற்றியிருக்கிறோம் என்பது காப்பாற்றப்பட்டவர்களுக்குத் தெரியும்.
இந்திய மீனவர்களைக் கூட பாதுகாக்க முடியாத நிலையிலே இருக்கிறோம்: “இதையெல்லாம் விட முக்கியமாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இன்றைய மத்திய காங்கிரஸ் அரசால் நாங்கள் எந்த அளவிற்கு ஏமாற்றப்பட்டோம் என்பதும், தொடர்ந்து தாக்கப்படுகின்ற இந்திய மீனவர்களைக் கூட பாதுகாக்க முடியாத நிலையிலே இருக்கிறோம் என்பதும் மறந்து விடக் கூடிய ஒன்றா என்ன? ஆகவே, உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். இவைகளை எல்லாம் மறந்து விட்டு நாங்கள் மீண்டும் காங்கிரசுடன் சேருவோம் என்று தயவுசெய்து நீங்கள் எண்ண வேண்டாம்[7].
இரண்டு கட்சிகள் விடப்பட்டு விட்டன – தனித்து நிற்போம்: “நம்மோடு அணி சேர எந்தக் கட்சியும் விரும்பாவிட்டாலும் கூட, நாம் அதற்காகக் கவலைப்படப் போவதில்லை. 75 இலட்சம் பேர் கட்சி உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அந்த 75 லட்சம் பேரும், அவருடைய வீட்டார், குடும்பத்தார், உற்றார் உறவினர்களை எல்லாம் சேர்த்துப் பார்த்தால் அந்த எண்ணிக்கை கோடிக்கணக்கில் வரும். அவைகளை எல்லாம் நாங்கள்
கணக்குப் பார்த்து, யாரும் அணி சேர வரா விட்டாலும் கூட, தனியாக நிற்போம். வந்தால், வந்தவரையிலே இலாபம் என்று வட்டிக் கணக்குப் பார்க்காமல், அவர்களுடைய தோழமை உணர்வுக்கு, எங்களோடு இருந்தால் நாட்டுக்கு நன்மை என்று கருதுகிறார்களே, அந்த நம்பிக்கைக்கு நாங்கள் தருகின்ற மதிப்பாக, அணி சேருவோம். ஆனால் யாரோடு அணி சேர்ந்தாலும், யாரோடு என்பதிலும் இரண்டு பேரும் இரண்டு கட்சிகள் நான் பேசும்போதே விடப்பட்டு விட்டன என்பதை நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். |
மிச்சம் இருக்கும் பெரியக் கட்சியான அதிமுகவுடன் கூட்டு என்பது பெரிய ஜோக்காகி விடும். அதேபோல, அதிமுக–கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொள்ள முடியாது. பிறகு தமிழகத்தில் யாருடன் திமுக கூட்டு வைத்துக் கொள்ள முடியும்? இனி உதிரிப்பூக்களை வைத்துக் கொண்டு மாலைக் கட்டினால், அதில் வாசம் வருமா அல்லது மாலைதான் முழுமையடையுமா? |
அப்படிச் சேரும்போது, கட்சிகளோடு அணி சேருவது பற்றி அல்ல. தனித்து நிற்போம் என்று நான் சொன்னேன்”, இவ்வாறு கருணாநிதி பேசினார்[8].
‘கட்சியை விலை பேசி விடாதீர்கள்’: பொதுக்குழுவில் கருணாநிதி பேசியதாவது: “நாம் தனித்து நின்றாலும் கூட, ஓரிரு கட்சிகளின் துணையோடு மாத்திரம் தான் நிற்க முடியும் என்றாலும் கூட, நீங்கள் தான் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவீர்கள். அப்படி அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள், அந்த வேட்பாளருக்கு ஆதரவாக இருக்கின்ற தொண்டர்கள், தனி அணி அமைத்து விடக் கூடாது. அணி தேவை என்று நான் நம்புகிறேன், ஆனால் நீங்கள் அணி வேண்டும் என்றீர்களே, அதனால் நாங்கள் எங்கள் ஊரிலே, நீங்கள் யாரை நிறுத்துகிறீர்களோ, அவர் ஒரு அணி, அவரை எதிர்க்கின்ற நாங்கள் இன்னொரு
அணி என்று பல அணிகளாக ஆகி, எல்லா அணிகளும், பல உப நதிகள், ஒரு பெரு நதியிலே கலந்து அதை மகாநதியாக ஆக்குவதைப் போல, நீங்கள் ஆக்க வேண்டுமே தவிர, கிளைநதிகளாக ஆனால், அது வாய்க்கால்களாக மாறி விடும் என்பதை மறந்து விடாதீர்கள். அணி சேருகின்ற நேரத்தில், அந்த அணிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். |
இனி வெற்றி பெற வாய்ப்பிலை என்று தெரிந்து விட்டால், திமுக எங்கு பிரிந்து விடுமோ என்று பயந்து விட்டார் போலும். பிஜேபியை ஆதரிக்கும் திமுக, எதிர்க்கும் திமுக என்று இரண்டாக பிரிந்து விட்டால் என்னாவது? எம்.பி ஆகலாம், மந்திரியாகலாம் என்ற ஆசை வந்தால், இதெல்லாம் சாத்தியம் தானே? |
அந்த அணிகளில் ஒன்றாக திமுக இருந்தால், அந்த திமுக வேட்பாளருக்கு அவர் எந்தத் தொகுதியிலே நின்றாலும், எந்தத் தொகுதியிலே போட்டியிட்டாலும், யாரை எதிர்த்துப் போட்டியிட்டாலும் நம்முடைய முழு பலமும், முழு சக்தியும், நம்முடைய முழுமையான ஆர்வம் அனைத்தும் அவருடைய வெற்றிக்கே தான் என்கிற அந்த நிலையில் நீங்கள் பாடுபட வேண்டும். அந்த வெற்றியை நீங்கள் குவித்து, அடுத்த பொதுக் குழுவில் உங்களுக்கெல்லாம் நானும், அன்பழகனும், ஸ்டாலினும் நன்றியை குவிக்கின்ற வாய்ப்பை தாருங்கள்.
நான் தலைவன் என்ற அந்த முறையிலே, அந்த தகுதியைக் கூட மறந்து விட்டு உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்: “இன்னும் சொல்லப் போனால், நான் தலைவன் என்ற அந்த முறையிலே, அந்த தகுதியைக் கூட மறந்து விட்டு உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். கழகத்தை, மாற்றாருக்கு விலை பேசி விடாதீர்கள்.
உங்கள் ஒற்றுமையை வீணாக்கி விடாதீர்கள். வேற்றுமையினால் ஒருவருக்கு ஒருவர் உள்ள தனிப்பட்ட விரோதங்களை எல்லாம், இந்த தமிழகத்தைக் காக்க வந்த இந்த இயக்கத்தின் மீது காட்டி, இயக்கத்தைப் பழி தீர்த்து விடாதீர்கள். கட்சியை கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். வெற்றி வரும், தோல்வி வரும், ஆனால் கட்சி நிலைக்கும். |
கெஞ்சிக் கேட்டுக் கொள்ளும் அளவிற்கு முதிர்ந்த தலைவர் வந்து விட்டார் என்றால், தொண்டர்கள் வேறுவிதமாக நினைக்கிறார்கள் என்றாகிறது. ஸ்டாலின், அழகிரி என்று கோஷ்டிகள் வேறுவிதமாக முடிவெடுத்தாலும், திமுக பிரியத்தான் செய்யும். அதனால், பாவம், கெஞ்சியும் பார்க்கிறார். |
ஒரு கட்சியின் ஆற்றலை, அதனுடைய வாழ்வை, அதனுடைய வளத்தை நிர்ணயிப்பது தேர்தல் வெற்றி அல்ல. தேர்தல் என்பது வந்து போகின்ற ஒன்று.
அதே நேரத்தில் ஒரு தேர்தல், நமக்குச் சோதனை: ஆனால் அதே நேரத்தில் ஒரு தேர்தல், நமக்குச் சோதனை. என்ன சோதனை என்றால், நாம் எந்த அளவிற்கு ஒற்றுமையாக இருக்கிறோம், எந்த அளவிற்கு நாணயமாக இருக்கிறோம், எந்த அளவிற்கு ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்காமல் இருக்கிறோம், எந்த அளவிற்கு ஒருவரையொருவர் வீழ்த்தாமல் நல்ல எண்ணத்தோடு பழகிக் கொண்டிருக்கிறோம் என்பதை அளக்கும் கருவி. நாளைய தினம் எந்த அணியோ, எந்தக் கட்சியோடு
அணியோ, அந்த அணி உங்களால் முன்மொழியப்பட்ட, உங்களால் தீர்மானிக்கப்பட்ட, நீங்கள் வகுத்த தீர்மானங்களில் ஒன்றான திமுக.வின் தலைவரும், பொதுச் செயலாளரும் ஒரு குழுவை அமைத்து, அவர்கள் மூலமாக தேர்தல் உடன் பாட்டிற்கான சக்திகளை ஒன்று திரட்ட வேண்டுமென்று சொல்லியிருக்கிறீர்களே, அந்தச் சக்தியை நாங்கள் வீணாக்காமல் பாடுபடுவோம், பணியாற்றுவோம். |
2014 தேர்தல் திமுகவிற்கு சோதனை என்பது வேடிக்கையாக இருக்கிறது. 2014 தேர்தல், நிச்சயமாக மோடிக்கு சோதனை. ஏனெனில் வெற்றி பெறாவிட்டால், அவரது அவரது தேசிய அரசியல் முடங்கிவிடும். காங்கிரசுக்கு சோதனை, ஏனெனில், தோற்றுவிட்டால், இனி தலையெடுக்க முடியாது. ஆனால், திமுகவிற்கு ஏன் சோதனை காலம் வரவேண்டும் என்று தெரியவில்லை! |
அது எங்களுக்காக அல்ல, உங்களுக்காக, உங்களுடைய எதிர்கால சந்ததிகளின் வாழ்வுக்காக, தமிழுக்காக, தமிழர்களுக்காக, திராவிட இன உணர்வைக் கட்டிக் காப்பாற்றுவதற்காக என்பதை தெரிவித்து கொள்கிறேன்”, இவ்வாறு கருணாநிதி பேசினார்.
வேதபிரகாஷ்
© 16-12-2013
[2] தினகரன், பொதுக்குழுவில்கருணாநிதிதிட்டவட்டம் : காங்கிரஸ், பாரதியஜனதாவுடன்திமுககூட்டணிஇல்லை,மாற்றம் செய்த நேரம்:12/16/2013 1:53:01 AM.
குறிச்சொற்கள்:குஜராத், ஜெயலலிதா, நரேந்திர மோடி, மோடி
அனுமதி, அரசியல் வேறுபாடு, அழகிரி, ஆரிய இனம், ஆரியம், இந்தி எதிர்ப்பு, இந்துவிரோதம், இனம், இலவசம், கனிமொழி, கருணாநிதி, கருத்து, குழப்பம், குஷ்பு, கூட்டணி, சமத்துவம், ஜி.கே. வாசன், ஜெயலலிதா, தி.மு.க, திக, திரவிடம், திராவிட அமைப்புகள், திராவிட இனம், திராவிட சித்தாந்தம், திராவிட நாத்திகம், திராவிட பாகுபாடு, திராவிடத் தமிழன், திராவிடன், திராவிடம், திராவிடர், திரிபு, திருமாவளவன், நரேந்திர மோடி, பிஜேபி, பெரியார், மதசார்பின்மை, மதசார்பு, மோடி, வீரமணி, ஸ்டாலின் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
திசெம்பர் 16, 2013
மோடி-பிஜேபி வேறு, வாஜ்பேயி-பிஜேபி வேறு – ராஜா-கனிமொழியை சிறைவைத்த காங்கிரஸ் – இக்கட்சிளுடன் திமுக கூட்டு கிடையாது – கருணாநிதி திமுகவினரிடம் கெஞ்சலாக அறிவிப்பு (1)!
திமுகவின் கூட்டணி பற்றி கருணநிதியின் விளக்கமான பேச்சு: 15-12-2013 அன்று பொதுக்குழுவில் பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்று சிலர் பேசினர், ஆனால், காங்கிரஸுடன் கூட்டு கூடாது என்று கடுமையாக வாதிட்டனர்[1]. கருணாநிதியின் பேச்சு மிகப்பெரிய பேச்சாக இருந்தது, அதில் திமுக ஏன் பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டு கூடாது என்று விளக்கிய பிறகு, திமுகவினர் ஒற்றுமையாக இருந்து கொண்டு, மற்ற கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு, வருகின்ற தேர்தலை ஒரு சோதனையாக சந்திக்க வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளார். தனியாக நின்று தோற்றாலும் பரவாயில்லை என்ற ரீதியில் கூட பேசி முடித்தார். பிறகு பத்திரிக்கையாளர்களுடன் பேசும் போது கூட அதே பாணியில் பதில் அளித்தார்[2]. ஆங்கில பத்திரிக்கையாளர்களிடம் மட்டும் திட்டவட்டமாக பிஜேபி அல்லது காங்கிரஸ் கூட, கூட்டு இல்லை என்று தெரிவித்தார்[3].
காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி, நேற்று கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்தார்[4]. திமுக பொதுக்குழு கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் மதியம் அந்த கூட்டம் தொடர்ந்து நடந்தது. கூட்டத்தில் திமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் தேர்தல் கூட்டணி பற்றி கருத்து கூறினர்.
அனைவரின் கருத்தையும் கேட்டறிந்த திமுக தலைவர் கருணாநிதி கூட்டத்தின் இறுதியில் பேசியதாவது:
“நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், அடுத்து வரவிருக்கின்ற சட்ட மன்றத் தேர்தலில் நாம் எத்தகைய வியூகத்தை வகுக்க வேண்டும் என்பதற்காக இங்கே கூடி இருக்கிறோம். தேர்தலில் நாம் ஈடுபட வேண்டும்; வேண்டுமா, வேண்டாமா எப்படி ஈடுபடுவது? எந்த வகையில், என்ன முறையில், யாரோடு கூட்டுச் சேர்ந்து என்றெல்லாம் இந்த பொதுக்குழுவில் கேள்விகள் கேட்கப்பட்டு, வழி முறைகளும் கூறப்பட்டு, இறுதியாக எல்லா பொறுப்புகளையும் நீங்களே தாங்கிக் கொள்ளுங்கள் என்று எங்கள் தலையில் பாரத்தைச் சுமத்தி, சிக்க வைத்திருக்கிறீர்கள். |
கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது என்று நன்கறிந்த கருணாநிதி, தனித்து நிற்போம் என்று பேசியது உள்நோக்கத்துடன் தான் என்று தெரிகிறது. வெற்றிபெற உதவி தேவை என்ற நிலையில் இருக்கும் போது, வீராப்பான பேச்சு ஒரு உபயோகமும் இல்லை என்பது தெரிந்த விசயமே. 10-15 எம்.பிக்கள் இருந்தால் தான் மத்தியில் மவுசு இருக்கும், மந்திரி பதவி கிடைக்கும். இல்லையென்றால் திமுகவை யாரும் மதிக்க மாட்டார்கள் என்று திமுகவினர் வெளிப்படையாகவே கருத்தைத் தெரிவித்தனர். |
தி.மு.க.வை பொறுத்தவரை தனித்து நின்றே கூட இந்த வெற்றியைப் பெற முடியும். தனித்து நின்றே ‘கூட’ என்று நான் கூறும்போது, ‘கூட’ என்று குறிப்பிட்ட வார்த்தையை மறந்து விடக் கூடாது. தனித்து நின்றே இந்த வெற்றியைப் பெறுவோம் என்று நான் சொல்லவில்லை. தனித்து நின்றே கூட நாம் வெற்றி பெற முடியுமென்று சொன்னால், கொஞ்ச நஞ்சம் ஒருவர், இருவருடைய உதவி இருப்பது நல்லது.
மோடி கவர்ச்சியில் சில திமுகவினர்: “மோடி அவர்கள் அரங்கத்திற்கு வந்திருக்கிறார். வந்த நேரமே, வந்த விதமே, அவருடைய படாடோப விளம்பரங்கள், அவருக்காக பத்திரிகைகள், ஊடகங்கள், கார்பரேட் நிறுவனங்கள் தருகின்ற ஊக்கங்கள், உலகம் முழுதும் இருக்கின்ற செய்தியாளர்கள் அல்லது ஊடக உரிமையாளர்கள் தருகின்ற விளம்பரங்கள்.
எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. ஆனால் உங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதனால் தான் பாரதீய ஜனதா, பாரதீய ஜனதா என்கிறீர்கள். நாமும் ஒரு காலத்தில் பாரதீய ஜனதோடு நாம் நட்பு கொண்டிருந்தவர்கள் தான். அது எந்த பாரதீய ஜனதா? மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்ட அத்வானி போன்ற தலைவர்கள் உள்ள பாரதீய ஜனதா அல்ல. |
பிஜேபியுடன் கூட்டு வேண்டும் என்று திமுகவினர் தயாராக உள்ளனர். ஆனால், மோடியின் அதிகாரத்தோரணை கருணநிதிக்கு சவாலாக உள்ளது என்று தெரிகிறது. அவருக்கு வாஜ்பேயி போன்ற மென்மையான தலைவர் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார், ஆனால், மோடியிடம் அது எடுபடாது. மேலும், இப்பொழுதுள்ள நிலையும் வேறு. |
நாம் கோரிக்கை வைத்தால், அதை உடனடியாக ஏற்றுக் கொண்டு, தோழமை உணர்வோடு நம்மோடு பழகிய வாஜ்பாய் போன்ற நல்ல மனிதர்கள் இருந்த அந்த காலத்தில் நாம் பாரதீய ஜனதாவோடு கை குலுக்கினோம்.
வாஜ்பாய் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தாலும், அவர் மனிதாபிமான மிக்கத் தலைவராக இருந்தார்: “காமராஜருக்கு கன்னியாகுமரி கடற்கரையில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என நான் முதல் அமைச்சராக இருந்தபோது, அன்றைக்கு பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு கடிதம் அனுப்பி வைத்தேன்.
ஆனால், அவரைச் சுற்றியிருந்த அதிகாரிகள், கருணாநிதி கேட்கிற அந்த இடம் கடலுக்கு மிக அருகே உள்ளதால் அனுமதிக்க இயலாது என்று சொன்னார்கள். அந்த கருத்தை வாஜ்பாய் எனக்கு எழுதி அனுப்பினார்கள். நான் விடவில்லை, மீண்டும் மீண்டும் அதை வற்புறுத்திக் கேட்டதால், கடற்கரையோரத்தில் காமராஜருக்கு நினைவு மாளிகை எழுப்ப வாஜ்பாய் அனுமதி தந்தார். |
மோடி இப்பொழுது இந்தியாவில் உள்ள பற்பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்நிலையில் திமுக சொல்வதையெல்லாம், மோடி ஏற்றுக் கொள்வார் என்றால், கூட்டு வைத்துக் கொள்வோம் என்ற ரீதியில் பேசினால், மோடி என்ன வாஜ்பேயி ஆகிவிடுவாரா என்ன? மோடி, மோடித்தான் –வாஜ்பேயி, வாஜ்பேயிதான்! |
அவர் நம்முடைய தமிழ்நாட்டுத் தலைவர்களை மதிப்பவர் என்பதை எண்ணிய காரணத்தால் தான், வாஜ்பாய் அவர்கள் நம்முடைய நண்பராக இருந்த காரணத்தால் தான் அப்போது நாம் அவர்களோடு உறவு கொண்டோம்.
வாஜ்பாயினுடைய பாரதிய ஜனதா வேறு, இப்போது இருக்கிற பா.ஜ.க. வேறு: “மாறன் இறந்த போது அவரை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்ற போது, இடுகாட்டிலே வாஜ்பாய் அவர்கள் திடீரென்று வந்து இறுதி வணக்கம் செலுத்தியதையும் நான் மறந்து விடக் கூடியதல்ல. என்னதான் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தாலும், அவர் மனிதாபிமானமிக்கத் தலைவராக இருந்தார். தோழமைக்கு மதிப்பு அளிக்கக் கூடியவராக இருந்தார், எனவே தான் பாரதிய ஜனதா என்பது வாஜ்பாய் அவர்கள் பொறுப்பிலே இருந்ததோடு அந்த வரலாறு நம்மைப் பொறுத்த வரையிலே முடிந்து விட்டது.
அந்த பாரதிய ஜனதா கட்சியிலே இருக்கின்ற, எல்லோரும் வாஜ்பாய் அவர்களைப் போன்றவர்களா என்றால், இல்லை. பாரதிய ஜனதாவோடு தேர்தலில் உடன்பாடு கொள்ளலாமா, கூட்டணி அமைக்கலாமா என்றெல்லாம் காலையிலிருந்து இதுவரையில் பேசினீர்களே, இதற்கெல்லாம் பதிலாகத் தான், இதற்கெல்லாம் விளக்கவுரையாகத் தான் நான் இந்தச் சுருக்கமாக கருத்துகளை உங்களிடம் சொல்லியிருக்கிறேன். |
கூட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பிறகென்ன, அது வேறு – இது வேறு என்ற சித்தாந்தம் எல்லாம். முன்பு மதவாதம் பேசி, பிஜேபியை ஒதுக்கினர். 2002 என்று சொல்லி மிரட்டிப் பார்த்தனர், ஆனால், பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி என்று மோடி பேச ஆரம்பித்ததும், இளைஞர்கள் வேறுவிதமாக சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். ஆமாம், அவர்களும், அந்த மோடி வேறு, இந்த மோடி வேறு என்றுதான் சொல்ல ஆரம்பித்துள்ளனர். |
நீங்கள் புரிந்து கொள்வீர்கள்[5]. வாஜ்பாயினுடைய பாரதிய ஜனதா வேறு, இப்போது இருக்கிற பா.ஜ.க. வேறு.
சி.பி.ஐ.யை ஆயுதமாக வைத்து திமுகவை கேவலப் படுத்திய காங்கிரஸ்: “இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தனியாக நின்றாலும் நிற்குமே தவிர, நம்மை மதிக்காத, அலட்சியப்படுத்து கின்ற காங்கிரஸ்காரர்களைப் போல நம்மிடத்திலே நன்றி மறந்து செயல்படுகின்ற சைபர், சைபர், சைபர் என்று ஏழு சைபரைப் போட்டு இந்த அளவிற்கு ஆயிரம், லட்சம், கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லி, அதற்கெல்லாம் யாரும் காரணம் இல்லை, ஒரே ஒரு நபர் தான், ராஜா தான் என்று அவரை சிறையிலே வைத்து இன்னமும் அவர் மீது வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ராஜா மாத்திரமல்ல, என்னுடைய மகள் கனிமொழியை எட்டு மாத காலம் சிறைச்சாலையிலே வைத்து வாட்டி, இன்னமும் வழக்கு நடக்கிறது. ஆனால், வழக்கை நடத்துகிறவர்களும் சரி, வழக்கிலே சாட்சியம் தந்தவர்களும் சரி, அந்த வழக்கிலே என்ன தீர்ப்பு வரப்போகிறதோ, அந்தத் தீர்ப்பை, இப்போதே தயாரித்து, பத்திரிகைகளிலே அதைப் பற்றிய செய்திகளை ஓட விடு பவர்களும் சரி, அனைவருமே தெரிந்து ஒரு உண்மை தான், குற்றமே செய்யாதவர்களை, குற்றவாளிகளாக சி.பி.ஐ. மூலமாக கூண்டிலே ஏற்றியிருக்கிறார்கள் என்றால், அந்தச் சி.பி.ஐ. யாருடைய கை வாள்? |
சிபிஐ.யை வைத்து மாநில அரசுகளை காங்கிரஸ் மிரட்டி வருகின்றது என்று கருணாநிதி இப்பொழுது மிகவும் வருத்தப் பட்டுக் கொள்கிறார், பிறகு, தகுந்த வேலையில், முன்னமே அதைப் பற்றி எடுத்துக் காட்டியிருக்கலாமே? ஆனால், செய்யவில்லையே? இன்று முல்லாயம், மாயாவதி என்று எல்லோருமே, சிபிஐ வழக்குகளினின்று விடுபட்டுள்ளனர். லல்லுவுக்கும் ஜாமீன் என்று சொல்கிறார்கள். ராஜா–கனிமொழி ஏற்கெனவே வெளியில் வந்து விட்டார்கள். பிறகு கருணாநிதி எதிர்பார்ப்பது என்ன? காங்கிரஸ் வாபஸ் வாங்கிவிட்டால், காங்கிரஸுடன் கூட்டணி என்பாரா? |
அந்தச் சி.பி.ஐ. யாருடைய கையிலே இருந்த கடிவாளம்? அந்தச் சி.பி.ஐ. யார் கையிலே இருந்த ஆயுதம்? தெரியாதா மக்களுக்கு?
ராஜாவையும், கனிமொழியையும் சிறை வைத்தவர்கள்: “அன்றைக்கு பக்கம் பக்கமாக ஊழல் ஊழல் என்று, எத்தனை லட்சம், எத்தனை ஆயிரம், எத்தனை கோடி என்றெல்லாம் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு அன்றையதினம் ஊழல் புகார் சொன்ன, அந்தக் காரியங்களுக்கெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, அந்த வேடிக்கையைப் பார்த்து ரசித்து விட்டு, அதிலே யார் யார் சிக்குகிறார்கள் என்பதையெல்லாம் பார்த்து, நம்மை விட்டால் சரி என்ற அளவிற்கு, பெரிய இடங்களிலே இருந்தவர்கள், பெரிய பதவியிலே இருந்தவர்கள், பெரிய நிர்வாகத் தலைமையிலே
இருந்தவர்கள் எல்லாம் தப்பித்தால் போதும் என்ற நிலைமையில் மாட்டியவர்கள், சிக்கியவர்கள் தான் குற்றவாளிகள் என்று ராஜாவையும், அதற்குப் பிறகு திடீரென்று என்னுடைய மகள் கனிமொழியையும் சிறையிலே வைத்து எட்டு மாத காலம் வாட்டினார்களே, இன்னமும் அந்த வழக்கு நடை பெற்றுக் கொண்டிருக்கிறதே, யாருடைய ஆட்சியில்? யார் இப்போது ஆட்சி யிலே இருக்கிறார்கள்? காங்கிரஸ்காரர்கள் தானே? எனவே அதையும் நாம் மறந்து விட மாட்டோம். மறந்து விடுவதற்கில்லை. |
ராஜா–கனிமொழியை சிறை வைத்த காங்கிரஸை மறக்க முடியாது. களங்கம் ஏற்படுத்தியதையும் மறக்க முடியாது என்றெல்லாம் பேச வேண்டிய அவசியம் என்ன? ஊழலில் ஊறி நாறிப்போன காங்கிரஸே, வெட்கமில்லாமல் தேர்தல் கூட்டங்களில் ஊழலை ஒழிப்போம் என்று பேசுகிறது. இன்றோ லோக்பால் மசோதாவிற்கே நாங்கள் தான் காரணம் என்று மார்தட்டிக் கொள்கிறது, பிறகு, திமுக ஏன் கவலைப்பட வேண்டும்? |
ராஜாவிற்கு ஏற்பட்ட அந்தச் சோதனை, ராஜாவுக்கு ஏற்பட்ட அந்தச் சங்கடம், அந்த அடக்கு முறை, அந்தக் களங்கம் இவைகள் எல்லாம் இன்றையதினம் டெல்லியிலே ஆட்சியிலே இருக்கின்ற காங்கிரஸ்காரர்களால் ஏற்படுத்தப்பட்டது அல்லவா? அவர்களால் மறைமுகமாகச் செய்யப்பட்ட மாய்மாலங்கள் அல்லவா? எனவே இந்தப் பொதுக்குழுவிலே அமர்ந்திருக்கின்ற உங்களுக்கெல்லாம் நான் உறுதி அளிக்கிறேன்.
வேதபிரகாஷ்
© 16-12-2013
[4] தினகரன், பொதுக்குழுவில்கருணாநிதிதிட்டவட்டம் : காங்கிரஸ், பாரதியஜனதாவுடன்திமுககூட்டணிஇல்லை,மாற்றம் செய்த நேரம்:12/16/2013 1:53:01 AM.
குறிச்சொற்கள்:ஆரியர், கனிமொழி, கருணாநிதி, குஜராத், குஷ்பு, செச்யூலரிஸம், ஜெயலலிதா, தமிழ், திராவிட சித்தாந்திகள், திராவிடர்கள், நரேந்திர மோடி, பாஜக, பிஜேபி, போலி நாத்திகம், மோடி, ராஜா
குஜராத், கூட்டணி, நரேந்திர மோடி, பாஜக, பிஜேபி, மோடி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »