Posts Tagged ‘பத்திரிக்கை ஒழுங்கில்லாத்தனம்’

குருவின் சாவிக்காக சிஷ்யைகள் சண்டை – பீட்டரிடம் சாவியிருந்தால் இந்த தொல்லை வந்திருக்காதே?

மே 7, 2012

குருவின் சாவிக்காக சிஷ்யைகள் சண்டை – பீட்டரிடம் சாவியிருந்தால் இந்த தொல்லை வந்திருக்காதே?

லெனின், நக்கீரன், தினகரன்: “இம்மூவரும்” முன்பு ஆபாச விடியோ எடுத்ததற்கு, டிவி-செனலில் விடாமல் ஒலி-ஒளிபரப்பியதற்கு, ஊடகங்களில் தாராளமாக தூண்டிவிடும் வகையில் செய்திகளை வெளியிட்டுப் பரப்பியதற்கு காரணமாக இருந்தார்கள். லெனின் குருப் தான் சரியான ஆள். அந்த ஆளிருக்கும் போது, பெட்ரூமிலேலேயே வீடியோ கேமரா வைத்து படம் எடுத்துள்ளதாக, ஊடகங்கள் வெளியிட்டு, பெரிய பிரச்சினையாகி இருந்தது. அப்பொழுது நித்யானந்தா அறையின் சாவியை யார் வைத்திருந்தது என்று தெரியவில்லை. அப்பொழுது, லெனின் குரூப் எப்படி உள்ளே சென்று வீடியோ கேமரா வைத்தான், ஆபாசப் படம் எடுத்தான் போன்ற விவகாரங்கள் தெரியவில்லை. ஒருவேளை “நக்கீரனுக்கு” பிரத்யேகமாகத் தெரிந்திருக்கக் கூடும். இப்பொழுது, லெனின் இருந்திருந்தால், சாவிக்காக இப்படி சிஷ்யைகள் சண்டை போட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

  சொர்க்க வாசலின் சாவியையே, பீட்டர் என்ற ஏசுவின் சீடர் வைத்திருந்தாராம். அதற்கு பலத்த எதிர்ப்பு, சண்டைகள் இருந்து வந்தனவாம். இது போப்புடைய அதிகாரத்தை இன்று எடுத்துக் காட்டுகிறது, ஏனெனில் முதல் போப், பீட்டர் என்று கிருத்துவப் புராணங்கள் கூறிகின்றன.அதாவது, சாவியுள்ளவரிடம் தான் அதிகாரம் இருக்கும். அது[போல, இளையப்பட்டம், முதியப்பட்டத்தின் சாவியை வாங்கிக் கொள்ள அவசரப்படுகிறது போலும்.

நிச்சயமாக, இவ்வளவு அவசரம் கூடாது சாமி. அதற்கு, சிஷ்யைகள் இப்படி சண்டைப் போட்டுக் கொண்டால், மடம் என்னாவது?

மதுரை ஆதீனத்தின் பெண் உதவியாளர் வைஷ்ணவி மீது தாக்குதல்: நித்யானந்தா பெண் சீடர் மீது புகார்[1]: மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் பெண் உதவியாளர் வைஷ்ணவி (வயது-28). இவர் தஞ்சை அருகே உள்ள கச்சனம் பகுதியை சேர்ந்தவர். பல மாதங்களாக அருணகிரி நாதரின் “நெருக்கமான”[2] உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்ட பின்னர் வைஷ்ணவியை அங்கிருந்து வெளியேற்ற நித்யானந்தா சீடர்கள் அவரிடம் தகராறு செய்து வருவதாக ஏற்கனவே புகார் எழுந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுரை ஆதீன மடத்தில் வருமானவரி துறை சோதனை நடத்தியது. அப்போது வைஷ்ணவியிடம் அதிகாரிகள் அதிக நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.

தினகரன் கூறுவது[3]: மதுரை ஆதீனத்தின் செயலாளாரான வைஷ்ணவி மீது நித்தியானந்தாவின் ஆட்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதாகவும்,சுடிதாரை கிழித்து விட்டதாகவும் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து சென்றனர். பத்திரிக்கையாளர்களை நித்தியானந்தாவின் ஆட்கள் ஆதினத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதற்கு மதுரை ஆதீனத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நித்தியானந்தாவின் ஆட்களுக்கும், மதுரை ஆதீனத்தின் ஆதரவாளர்களுக்குள் மோதல் மூண்டதாக கூறப்படுகிறது. தினமலர் கூறுவது[4]: மதுரை ஆதீன மடத்தில் ஆதீனம் தரப்பினருக்கும், நித்தியானந்தா தரப்பினருக்கும் இடையே மோதல் ‌ஏற்பட்டது. மதுரை ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டதை பெரும் சர்ச்சை நிலவிவருகிறது. இந்நிலையில் மதுரை ஆதீன மடத்திற்குள் பத்திரிகையாளர்களை அனுமதிப்பதாக வேண்டாமா என ஆதீன தரப்பினரு்க்கும், நித்தியானந்தா தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மடத்திற்க்குள்ளேயே மோதிக்கொண்டனர்[5].
தினமலரின் மற்றொரு செய்தி[6]: முன்னதாக மதுரை ஆதீன மடத்தில் பணிவி‌டை செய்து கொண்டிருந்த வைஷ்ணவி என்ற ‌பெண் சீடர் ஆதீன மடத்தினை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நித்தியானந்தா சீடர்கள் அப்பெண்ணை மிரட்டி தாக்கினார். இனி இங்கு உனக்கு வேலை இல்லை வெளியேறுமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மதுரை ஆதீன மடத்தில் பரபரப்பு ‌ஏற்பட்டுள்ளது. நக்கீரன் கூறுவது[7]: அருணகிரிநாதருடைய நெருக்கமான உதவியாளராக வைஷ்ணவி இருந்தார். அவரது தனி அறையின் சாவியை (பணம் மற்றும் தங்க நகைகள் உள்ள அறை) வைஷ்ணவியிடம் ஒப்படைத்துவிட்டு திருவண்ணாமலைக்கு சென்றார். இந்த நிலையில் வைஷ்ணவியிடம், நித்தியானந்தாவின் சீடர் ரிஷி மற்றும் அவரது மனைவி, ஆட்கள் அந்த சாவியை கேட்டதற்கு வைஷ்ணவி மறுத்துள்ளார். இதனால் வைஷ்ணவியை அவர்கள் தாக்கியதில் அவரின் சுடிதார் கிழிந்துவிட்டது.

ஆதினத்தின் அறை சாவிக்காக தகராறு: இந்த நிலையில் நேற்று மதுரை ஆதீனம் அருணகிரி நாதரும், இளைய ஆதீனம் நித்யானந்தாவும் திருவண்ணாமலையில் இருந்து மதுரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அவர்களது அறையை வைஷ்ணவி தயார் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது நித்யானந்தாவின் பெண் சீடர் மத்தியா (30) சமையல் செய்வதற்காக பாத்திரங்கள் வேண்டும் மதுரை ஆதீன அறை சாவியை தா என்று வைஷ்ணவியிடம் கேட்டுள்ளார். இதற்கு வைஷ்ணவி மதுரை ஆதீனம் சொன்னால் மட்டுமே சாவியை தருவேன் என்று கூறியதாக தெரிகிறது. அப்போது நித்யானந்தா சீடர்கள் வைஷ்ணவியை அடிக்க பாய்ந்தனர். அப்போது பெண் சீடர் மத்தியா, வைஷ்ணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்ததில் கிழிந்து விட்டது. அப்போது கதறி அழுத வைஷ்ணவி வெளியே வந்து நடந்த சம்பவங்களை விளக்கினார். இதனால் மதுரை ஆதீன மடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   இதற்கிடையில் நேற்று இரவு 8 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து மதுரை ஆதீனமும், நித்யானந்தாவும் மதுரை வந்தனர். அவர்களிடம் மடத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து கூறினார்.

சீஷ்யைகளிடம் சமாதான பேச்சு: மதுரை ஆதீனம் அருணகிரி நாதரும், இளைய ஆதீனம் நித்யானந்தாவும் வைஷ்ணவி, மத்தியா இருவரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அதன் பின்னர் அங்கு அமைதி ஏற்பட்டதாக மடத்தில் உள்ள சீடர்கள் தெரிவித்துள்ளனர். வைஷ்ணவி தாக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், நேற்று முன்தினம் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டபோது முக்கிய ஆவணங்களை வைஷ்ணவி சொல்லித்தான் ஆதீனத்திடம் அதிகாரிகள் கேட்டு பெற்றதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில்தான் வைஷ்ணவியை நித்யானந்தா சீடர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த மோதல் சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து மதுரை ஆதீனம் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

பத்திரிக்கைக்காரர்களுக்கு சொன்னது: நேற்று ஆதீன மடத்தில் பெண் சீடர் வைஷ்ணவி தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து இரவு அனைவரையும் அழைத்து விசாரித்தோம். பின்னர் அவர்களை சமரசம் செய்து வைத்தேன். மற்றப்படி எந்த பிரச்சினையும் இல்லை. இது ஒரு சாதாரண சம்பவம் சிலரால் பெரிதாக்கப்பட்டுள்ளது. இப்போது மதுரை ஆதீன மடத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. நேற்று முன்தினம் நடந்த வருமான வரித்துறை சோதனையின்போது அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கமாக பதில் கொடுத்துள்ளோம். அவர்கள் மடத்தின் கணக்கு புத்தகங்களை எடுத்து சென்றுள்ளனர். மற்றபடி ஒன்றுமில்லை. இவ்வாறு மதுரை ஆதீனம் கூறினார்.

வேதபிரகாஷ்

07-05-2012


 


[2] இப்படி விவரித்துள்ளது “நக்கீரன்” தான்!

பிராமணர்கள் மீது வன்முறையைத் தூண்டுகிறார் இரட்டை வேடம் போடும் கருணாநிதி!

மார்ச் 7, 2012

பிராமணர்கள் மீது வன்முறையைத் தூண்டுகிறார் இரட்டை வேடம் போடும் கருணாநிதி!

திராவிட சித்தாந்திகளால் தமிழகத்திற்கு கிடைத்தது என்ன? திராவிட இயக்க நூற்றான்டு விழா என்ற சாக்கை வைத்துக் கொண்டு, கருணாநிதி தனது வாய்வழி-தீவிரவாதத்தை, தீயாக உமிழ்ந்தார் கருணாநிதி[1]. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. நாட்டுப்பற்று, தேசியப்பற்று என்று எதுவும் இல்லாத இந்த “திராவிட” சித்தாந்திகளால், இந்தியாவிற்கு எந்த பிரயோஜனமும் இல்லை இன்று இந்தியர்கள் உணர்ந்து விட்டார்கள்[2]. எப்பொழுதும் பிரிவினைவாதம் பேசி, இந்தியை எதிர்ப்போம் என்று தேசிய சொத்துகளை கோடிக்கணக்கில் சேதம் விளைவித்து, தமிழ் நாட்டை வளர்க்கவிடாமல் செய்தது தான் இவர்களது சாதனை[3]. வெட்டிப்பேச்சு பேசி, மேடை போட்டு கூட்டங்கள் நடத்தி சிலைகளை வைத்து, விழாக்கள் நடத்தி காலத்தை ஓட்டி விட்டார்கள்[4]. இனி சாகும் வேலையில் வேறெந்த பருப்பும் வேகாது என்ற நிலையில், மறுமடியும் பிராமண-எதிர்ப்பு வாதத்தை வைத்துள்ளார் கருணாநிதி. பிராமணரான ஜெயலலிதாவை எதிர்ப்போம் என்ற சாக்கில் இந்த வயதில் தனது விஷத்தைக் கக்கியுள்ளார். பிராமண சங்கமும் பயந்து இரண்டு வாரங்கள் கழித்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிராமணர்கள் மீது தி.மு.க. தலைவர் கருணாநிதி வன்முறையைத் தூண்டி விடுவதாக தமிழ்நாடு பிராமணர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது[5].இது தொடர்பாக பிராமணர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை[6]:

சுதந்திரநாளை, துக்கநாளாகக் கொண்டாடியவர்கள் வளர்த்த பிரிவினைவாதம் திராவிட இனவாதம்: தற்கால அரசியலுக்கு ஒவ்வாத நிலைப்பாடாக, 1912ம் ஆண்டு திராவிட இயக்கக் கூட்டத்தில், டாக்டர் நடேசன் மற்றும் டி.எம்.நாயர் கூறிய கருத்துக்கு, மெருகு பூசி சினிமா பாணியில் புதிதாகக் கதை அளக்கிறார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. நூறு ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது, 1912ல் நடைபெற்றது பிரிட்டிஷ் அரசாங்கம் – தமிழ்நாடு என்று அப்போது இல்லாமல், சென்னை மாகாணம் ராஜதானி என்று அழைக்கப்பட்டு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று பிரிக்கப்படாமல் இருந்தது. அப்போது திராவிட இயக்கத்தின் தலைவர்கள் என்று கூறப்பட்ட டி.எம்.நாயர் (மலையாளம் பேசுபவர்) சர்.பி.டி.தியாகராஜன் (தெலுங்கு பேசுபவர்) டாக்டர் நடேசன் போன்றவர்கள் நீதிக் கட்சியின் சார்பில் வெள்ளையர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள்; நமது சுதந்திர போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியவர்கள். சுதந்திர நாளை, துக்க நாளாகக் கொண்டாடியவர்கள்[7].

கலாமும் பிராமண ஆசிரியரும்: கடந்த, 1960 வரை பல ஆயிரக்கணக்கான பிராமண தமிழ் ஆசிரியர்கள் தமிழகத்தில் பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சிறப்பாக பணியாற்றியதை யாரும் மறந்திருக்கமுடியாது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், தான் ராமேஸ்வரத்தில் படித்தபோது, உதவி செய்த ஆசிரியரான சுப்பிரமணிய அய்யரை தன் பதவியேற்புக்கு டில்லிக்கு அழைத்துச் சென்று மரியாதை செய்தார் .இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போதைய நிலைமைக்கு ஒவ்வாத பிராமண எதிர்ப்புக் கொள்கையை, தனக்கு சிக்கல், தோல்வி வரும்போதெல்லாம் ஒரு ஆயுதமாக எடுப்பதில் கருணாநிதி வல்லவர்.

கருணாநிதி குடும்பமும் பிராமணர்களும்: பிராமணர்களின் அறிவுரைப்படி, ஆலோசனை உதவியுடன் தனது கட்சியையும், குடும்ப வியாபாரத்தையும் வளர்த்தவர் தான் இந்த தலைவர். தயாளுவில் ஆரம்பித்து, ஸ்டாலின் மனைவி மற்றும் குடும்பத்தின் மூன்று தலைமுறைக்கு பிரசவம் பார்த்தது பிராமணரான டாக்டர் பி.ராமமூர்த்தியும், அவரது மனைவியுமான டாக்டர் இந்திரா ராமமூர்த்தியும் தான். பல ஆண்டுகளாக இவருக்கு ஆடிட்டராக இருப்பது ஜெகதீசன் அன்ட் கம்பெனி. தற்போது எங்கு போனாலும் உடன் வந்து மருத்துவம் செய்வது பிராமணரான டாக்டர் கோபால் தான்.

திமுக ஆட்சிகளில் பிராமணர்கள்: கடந்த, 1996ல், 2006ல் ஆட்சி செய்தபோது ஆலோசனை வழங்கியது, டாக்டர் எம்.எஸ்.குகன் ஐ.ஏ.எஸ்., 2006- 2011 வரை தலைமைச் செயலராகவும், கோப்புகளில் தனியாகக் கையெழுத்து இடும் அளவுக்கு அதிகாரம் படைத்தவராக எஸ்.ஸ்ரீபதி ஐ.ஏ.எஸ்., உள்துறைச் செயலராக (ஹோம் செகரட்டரி) மாலதி ஐ.ஏ.எஸ்., மேடைகளில், விழாக்களில் தன்னைப் பற்றி புகழ்பாட கவிஞர் வாலி, குடும்ப பிசினஸ் பார்ட்னராக இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், தனக்கு யோகாசனம் சொல்லிக் கொடுக்க தேசிகாச்சாரி என்று இவரது தேவைகளுக்கான பிராமணர் பட்டியல் தொடரும். தனக்குத் தேவை என்றால் இவர்கள் எல்லோரும் பிராமணர்கள் அல்லாதவர்கள்.

பித்தலாட்ட குடும்பம்: தன் வீட்டுக் குழந்தைகள், பேரப்பிள்ளைகள் சென்னை டி.ஏ.வி., பள்ளியில் இந்தி படிக்கலாம்; மற்றவர்கள் தமிழ் தான் படிக்க வேண்டும். தமிழ் சுதந்திரப் போராட்ட தியாகி கோட்டாவில் தனது பேரன் (மு.க.அழகிரி மகன்) அண்ணா பல்கலைக்கழகத்தில், பி.இ., படிக்கலாம். தன் வீட்டு குழந்தைகளுக்கு ஸ்டாலின், தயாநிதி, கலாநிதி, சூர்யா, ஆதித்யா போன்ற சம்ஸ்கிருத பெயர்கள். தனது ‘டிவி’க்களுக்கு சூரியா, ஆதித்யா, தேஜா, உதயா, ஜெமினி, சன் நெட்வொர்க் என்று வேற்று மொழிப் பெயர்கள். எத்தனை வருடங்களுக்குத்தான் இந்தப் பெரிய பித்தலாட்டம், ஏமாற்று வேலை?

கடந்த ஆட்சியில் திமுகவினருக்கு  கோடிகளில் பணம் எப்படி கிடைத்தது?: எந்த பிராமணனும் ஊரை அடித்து உலையில் போடவில்லை. அரசாங்கப் பணத்தை, மக்களது வரிப் பணத்தை, கொள்ளையடித்து கோடீஸ்வரன் ஆனதில்லை. டெலிகாம் ஊழல், சேது சமுத்திரத் திட்ட ஊழல், வீராணம் ஊழல் என்றெல்லாம் விஞ்ஞான முறையில் பொதுச் சொத்தை கொள்ளையடித்து, இந்தியாவிலேயே ஒரு பெரிய கோடீஸ்வர குடும்பம் என்று பெயர் பெறவில்லை! கடந்த 1967க்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சி செய்த , அமைச்சர்கள் பலர் இப்போது குறைந்தபட்சம், 100-200 கோடி ரூபாய்க்கு அதிபதி. இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துக் கல்லூரி, சினிமா தயாரிப்பு என்றெல்லாம் பல துறைகளில் பெரிய முதலாளிகள். இதெல்லாம் எப்படி வந்தது? கருணாநியின் மகள் டில்லி திகார் சிறையில் எட்டு மாதம் கம்பி எண்ணியது எதற்காக? தனது குடும்பத்தில் நடக்கும் வாரிசு பிரச்னையை, கட்சியின் தோல்வியை திசை திருப்பவே, இந்த பிராமணர் எதிர்ப்பு நாடகம். ஆனால், நமது அரசியல் சாசனப்படி எந்த ஜாதியையும், பழித்துச் சொல்ல, இழிவுபடுத்த சட்டத்தில் இடமில்லை.

வன்முறையை தூண்டுகிறார்: எல்லா மக்களுடன் அமைதியாக, நட்பாக வாழும் பிராணமர்கள் மீது வன்முறையை தூண்டும்படி, அச்சுறுத்தும் படியாக பேசும், தி.மு.க., தலைவர்கள் கருணாநிதி மீதும், அன்பழகன் மீதும் மத்திய, மாநில அரசுகள் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருணநிதி குடும்பத்தில் உள்ள பிராமணர்களை பிராமண ச்டங்கம் ஏன்மறந்து விட்டது என்று தெரியவில்லை: முந்தைய இடுகையில் குறிப்பிட்டுள்ளபடி,உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவுறுத்தி உள்ளார். இருப்பினும் அவரது குடும்பத்தில் உள்ள பாப்பாத்திகளையும், அந்த பாப்பாத்திகளுக்குப் பிறந்தவர்களையும் விரட்டியடிப்பாரா என்று தெரியவில்லை”, கருணாநிதி செய்வாரா என்று தெரியவில்லை.

வேதபிரகாஷ்

07-03-2012


 


[2] இந்திய-தேசிய விரோதக் கொள்கைகளினால், மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் தமிழ்நாட்டு மக்களை வித்தியாசமாக நினைத்தார்கள். இந்தி பேசும் மக்கள், தமது மொழிக்கு விரோதமாக இப்படி செய்ல்படுகின்றனர் என்றும் என்று திகைத்தும் இருந்தார்கள். ஏனெனில், அவர்களுக்கு, இவர்கள் (தங்கள திராவிடர்கள் என்று சொல்லிக் கொல்பவர்கள் இந்தியை ஏன் வெறுக்கிறார்கள் என்று கூட தெரியாமல் இருந்தார்கள்)

[3] இந்தியை எதிர்ப்போனம் என்று இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தினர், அதில் தீக்குளிப்பு, தீவைப்பு போன்ற வன்முறைகளும் நடந்தன. ரெயில் பயணிகள் அதிக அளவில் பாதிக்கப் பட்டனர். பிறகு, இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டவர்களை “மொழிப்போர் தியாகிகள்” என்று பட்டங்கள், பென்சன் எல்லாம் கொடுத்தனர். இவையெல்லாம் இந்தி பேசும் மக்களுக்கு வியப்பாக இருந்தது. இந்தொயர்களாக இருந்து கொண்டு, ஒரு மொழியை எதிர்த்தால் எப்படி தியாகிகள் அவ்வார்கள் என்று அவர்கள் கேட்கவும் செய்தனர்.

[4] மற்ற மாநிலங்களில் தொழிற்சாலைகள் அதிகமாக வளர்ந்தன, ஆனால், தமிழகத்தில் தொழிற்சாலைகள்வைக்க இந்தி பேசும் அல்லது வடவிந்தியர்கள் தயங்கினர். டிவிஎஸ், அசோக் லேலேண்ட், ஈஸ்வரன் அண்ட் சன்ஸ்,  போன்ற பிராமணக் கம்பெனிகள் / தொழிற்சாலைகள் தவிர மற்றவையெல்லாம், 1990, 2000 ஆனண்டுகளுக்குப் பிறகு வந்தவை என்று நோக்கத்தக்கது.

நான் ஆணே இல்லை, நாம் எப்படி செக்ஸில் ஈடுபட்டிருக்க முடியும்?

ஏப்ரல் 30, 2010

நான் ஆணே இல்லை, நாம் எப்படி செக்ஸில் ஈடுபட்டிருக்க முடியும்?

“நான் ஆணே இல்லை. ஆகவே எந்தவிதத்திலும் நான் பெண்களுடன் செக்ஸில் ஈடுபட்டிருக்க முடியாது. வேண்டுமானால், ஆண்மை பரிசோதனையை என்மீது பிரயோகம் செய்து பாருங்கள்” [“I’m not a man. There’s no way I could have indulged in sexual activities with women. Do a potency test on me”]. இப்படி சொன்னது நித்யானந்தா!

Nityananda-male-or-female

Nityananda-male-or-female

இருப்பினும் துப்பறியும் வீரர்கள் அதை நம்புவதாக இல்லையாம், ஏனெனில் பாஸ்போர்ட்டில் “ஆண்” என்றுதான் போட்டிருக்கிறது, “அலி” என்று போடவில்லை, என்று விசாரணையைத் தொடர்ந்துள்ளார்கள்!

பெரியார்தாசனை காண்காணிக்க வேண்டுமாம் – சொல்வது முஸ்லீம்கள்!

ஏப்ரல் 10, 2010

பெரியார்தாசனை காண்காணிக்க வேண்டுமாம் – சொல்வது முஸ்லீம்கள்!

இதெல்லாம் வேடிக்கையாகவே உள்ளது.

அதிரடியாக, பரபரப்புடன், அந்த ஆளை ரியாத்திற்கு அழைத்து வந்து சுன்னத் செய்து “முஸ்லீம்” என்று சொல்லி, மெக்கா-மெதினா தரிசனத்திற்கு அழைத்துச் சென்று………………….படங்கள் எல்லாம் எடுத்து காட்டி, இப்பொழுது “கண்காணிக்கப் படுவார்” என்றால் என்ன?

பெரியார்தாசனை கண்காணிக்கும் அதென்ன புதிய நிலைபாடு?

http://markaspost.wordpress.com/2010/04/10/பெரியார்தாசனை-கண்காணிக்/

பெரியார்தாசன் என்ன நோக்கில் இஸ்லாத்தை ஏற்றார் எனத் தெரியவில்லை! நாங்கள் அவரை கண்காணித்துக் கொண்டு இருக்கிறோம் என்ற தனி நபர் ஜமாஅத்தின் நிலைப்பாடு பற்றி மார்க்க அடிப்படையில் சரியா என்பதை அறிந்து கொள்ளும் முன் இதுபோன்ற விஷயங்களில் ஏற்கனவே அந்த ஜமாஅத்தின் நிலைப் பாடு என்ன? என்பதை பார்ப்போம்!

முதலாவதாக, இதுவரை இஸ்லாத்தை ஏற்ற அனைவருக்கும் இதே நிலைதான் எடுக்கப்பட்டதா?
தங்கள் ஜமாஅத்தில் வந்து இஸ்லாத்தை ஏற்றால் இந்த அளவு கோலைக் கொண்டுதான் அவர்களை அளந்தார்களா? கண்காணித்த பிறகுதான் அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டர்களா?

அய்யம்பேட்டை சகோதரிகளை இப்படித்தான் கண்காணித்து அனைத்து ஊடகங்களில் எல்லாம் முன்னிலைப்படுத்தினார்களா? தவ்ஹீத் எழுச்சி மாநாட்டில் மேடை ஏறி உரை நிகழ்த்த அனுமதிக்கப்பட் டார்களா?

ஏ.ஆர். ரஹ்மானை மேடையேற்ற முடியுமா? என்றெல்லாம் கேட்கிறார்களே! ஏ.ஆர். ரஹ்மான் இன்றுதான் இஸ்லாத்தை ஏற்றார் என்றால் அவரையும் இதே நிலைபாடு கொண்டுதான் வரவேற்று அதன் பின் அவருக்கு மார்க்கத்தை எடுத் துச் சொல்ல வேண்டும்.

அவரது நிலை என்ன என்பது பற்றி நம்மிடத்தில் கேள்வி இல்லை. “அவர்களுக்காக நீர் விசாரிக்கப்பட மாட்டீர்” -(அல்குர்ஆன்) என அல்லாஹ் கூறுவதாலும், வந்தவர்களுக்கு நேர்வழியை எடுத்துச் சொல்லாமல் எட்டி நின்று கண்காணித்து “விழுந்த பின் தான் சுட்டிக் காட்டுவோம்’ என்பது என்ன நிலைபாடு?

மார்க்க அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்றவர்களின் உள்ளத்தைப் பிளந்து பார்க்கும் செயலைச் செய்யக் கூடாது என்பதை காலீத் பின் வலீத் (ரலீ) சம்பவத்திலும், உஸôமா (ரலி) சம்பவத்திலும் நாம் காண்கிறோம்.

நாளை அவர் வழிகெட்டு விட்டால்… என்ற கேள்வியே முதலில் தவறாகும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களிடத்திலே கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்ற எத்தனையோ பேர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய சம்பவத்தை மிஃராஜின் போதும், பொய்த் தூதரை பின்பற்றிச் சென்ற சம்பவத்திலும் நாம் அறிந்திருக் கின்றோம்.

நபி (ஸல்) அவர்களின் காலத்திற் குப் பின்னும், அபுபக்கர் (ரலி) ஆட்சிக் காலத்தில் ஜகாத்தை மறுத்து ஒரு கூட்டமும், பொய்த் தூதர்களைப் பின்பற்றி ஒரு கூட்டமும் வழி தவறிச் சென்றது. உஸ்மான் (ரலி) காலத்தில் கார்ஜியாக்கள் என்று ஒரு பிரிவினர் வழிகெட்டுப் போனதை அறிந்திருக்கிறோம். இப்படி நபி (ஸல்) அவர்களால் உறுதிமொழி எடுத்த எத்தனையோ பேர் வழிகேட்டில் வீழ்ந்திருப்பதை அறிந்திருக்கிறோம்.

வழிகேடும், நேர்வழியும் நம் கையில் இல்லை. ஒருவர் சொர்கத்துக்குரிய காரியத்தை செய்து கொண்டே இருப்பார், இறுதி நேரத்தில் நரகத்திற்குரிய காரியத்தைச் செய்ய வைத்து அவரை அல்லாஹ் நரகத்திற்குரியவராக்குவான். ஒருவர் நரகத்திற்குரிய காரியத்தை செய்து கொண் டே இருப்பார், இறுதி நேரத்தில் சொர்க்கத்துக்குரிய காரியத்தை செய்ய வைத்து அவரை சொர்க் கத்திற்கு உரியவராக ஆக்குவான். (-புஹாரி)

நம்மில் எத்தனையோ பேர் வழிகேட்டில் இருந்து நேர்வழிக்கும், நேர்வழியில் இருந்து வழிகேட்டிற்கும் சென்றுள்ளதாக நீங்கள் கூறுகின்றீர்கள். ஏன்? ஆலிமான நீங்களே கூட இறை மறுப்புக் கொள்கைக்குச் சென்று நேர்வழிக்கு திரும்பி வந்ததாகக் கூறியுள்ளீர்கள்! இவ்வாறு இருக்கையில் இஸ்லாத்தை ஏற்ற ஒருவரின் உள்ளத்தை ஆராய மல் அவர்களை வரவேற்பதும், முக்கியத்துவம் அளிப்பதும் மார்க்க அடிப்படையில் தவறில்லையே!

புதிதாக இஸ்லாத்தை ஏற்ற முஹாஜிர்களுக்கு, அன்சாரிகளுக்கு இல்லாத முக்கியத்துவத்தை நபி (ஸல்) அளித்ததை நாம் ஹதீஸ்களில் பார்க்கிறோம். எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்றால், “நீங்கள் நீதமாக நடக்கவில்லை, புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எங்களை புறக்கணிக்கின்றீர்கள் என அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து கேட்கும் அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

மக்கா வெற்றியின்போது “அபூஸுஃப்யான் வீட்டில் தஞ்சமடைபவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம்” வழங்குமளவுக்கு இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு சிறப்பும், கனிமத்து பொருட்களில் கூடுதல் பங்கும் வழங்கப்பட்டிருக்கும்போது நாம் ஏன் இதிலிருந்து படிப்பினை பெறாமல் மற்றவர்கள் மேடையில் பேசியபின் நமது மேடையில் ஏறுவதா? என்றும், இது நமது ஜமாஅத் நிலைப்பாடு! என்றும் கூறி நபி (ஸல்) நிலைப்பாட்டை புறந்தள்ளுவது சரியாகுமா?

நாத்திகரான கோவை ராம கிருஷ்ணனும், இணை வைப்பாள ரான இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்தும், தாங்களும் இந்த விஷயத்தில் ஒரே நேர்கோட்டில் இணைந்து “”அவரை கண்காணிக்கிறோம்” என ஒரே வார்த்தைகளை வெளிப்படுத்தி இருப்பதன் மூலம், உங்கள் சிந்தனை காவியாகவோ, கருப்பாகவோ மாறிவிடாமல் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.

தகவல் – மங்கோலியன்

நன்றி; www.intjonline.in மற்றும் சமுதாய மக்கள் ரிப்போர்ட்

அன்புடன்;சதாம் ஹுசைன்

ஆக இஸ்லாத்திற்கு மாறியவர்கள் பற்றி இந்த அளவிற்கு ஆராய்ச்சி நடத்துகிறார்கள் என்றால், “மாற்றப்பட்டவர்களின் நிலை” பற்றி முஸ்லீம்கள் ஆராய்ச்சி செய்தது / செய்யாதது என்ன? நன்றாக படித்து, ஒருநிலையில் தாங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காகத் தான் மதம் மாற்றப்பட்டுள்ளோம் என அறிந்தால், அவர்களும் தங்களது நிலைப்பாடு பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுவார்களே?

இப்படி எல்லா மதம் மாறிய முஸ்லீம்களும் கண்காணிக்கப் படுவார்களா?

நம்பிக்கையின் மீது ஆதாரமாக மதம் மாறினாரா அல்லது மாற்றப் பட்டரா என்ற கேள்வியும் அதற்கான பதிலும் பெரியார்தாசன் நண்பர்களிடையே ஏற்கெனவே உள்ளன, அவை தாராளாமாகவே பேசப் பட்டன. “பணத்திற்காகத்தான்” மாறினார் என்பது முதல் குற்றச்சாட்டு. அந்நிலையில் “நம்பிக்கை” போய்விடுகிறது.

மனிதன் தான் எப்படியாவது விளக்கம் அளித்து தன்னுடைய செயலை நியாயப் படுத்திக் கொள்ளலாம். அந்நிலையில் படித்த சேஷாசலத்திற்கு /பெரியார்தாசனுக்கு /  ……………க்கு/ சித்தார்தா……னந்தாவிற்கு / அப்துல்லாவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை.

அதுமட்டுமல்ல, சிலர் அப்துல்லாவிற்கே அறிவுரை அளிக்க ஆரம்பித்து விட்டனர்:

ஐயா , பேராசிரியர் அவர்களே!

நீங்கள் இஸ்லாத்தில் இணந்தது எங்களுக்கு பெருமைதான் என்றாலும் என் மனதுக்குள் ஒரு பயம் நிலவி வருகிறது. இது சுன்னத், அது ஹராம், இதைச் செய்யவேண்டும், அதைச் செய்யக்கூடாது  என்று இலவச அறிவுரை சொல்ல சில அரைகுறை ஆலிம்கள் வருவார்கள். உங்களுக்கே தெரியாமல் உங்களை மூளைச்சலவை செய்வார்கள். நீங்கள் மனோவியல் பேராசிரியர் மட்டுமல்ல சிகிச்சையாளரும்கூட, எனவே குர்ஆனையும் ஹதீஸையும் ஆராய்ந்ததுபோல் அவர்கள் சொல்வதையும் ஆய்ந்து ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள். இது ஒன்று.

மற்றொன்று, ‘இறைவன் ஒருவன்தான், அவனுக்கு இணைவைக்கக்கூடாது, அவனுக்கு இணையாக எதுவுமில்லை’ என்ற செய்தி நபிகளாருக்குப் பிறகு இந்திய துணைக்கண்டம் முதல் எல்லா நாடுகளுக்கும் பரப்பியவர்கள் ஒரு சிலர். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் இறை தியானத்தில் மூழ்கி மக்களின் வாழ்க்கை முறை, உணவு, நாகரீகம், பண்பாட்டுமுறை இவைகள் அனைத்தையும் மாற்றி நேர்வழிப் படுத்தியவர்கள். சுருக்கமாகச் சொன்னால் இறைவன் சொன்னதை, நபிகளார் சொன்னதை மக்களின் அறிவுக்குத் தகுந்தவாறு போதனை புரிந்தவர்கள். சூஃபிகள் என்றழைக்கப்படும் இவர்களை சிலர் தவறாகச் சித்தரிக்கிறார்கள் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

http://abedheen.wordpress.com/2010/04/10/jaffer-periyardasan/

எதற்கு இவ்வளவு கட்டுப்பாடு?

பாவம், ஒருவேளை, விட்டால் ஓடிவிடுவாரோ என்னவோ?

முஸ்லீம்கள் மதம் மாற்றும் பிரச்சினை இன்னுமொரு கோணத்தில் செல்கின்றது என்பதனை அறியலாம்.

நாத்திகமும், ஆத்திகமும்: அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – IV

ஜனவரி 16, 2010

அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – IV

© வேதபிரகாஷ்

முன்பு இம்மாநாட்டின் நிகழ்வுகளை பத்திதுள்ளேன்[1]அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – I to III! இதில் தீர்மானங்கள் சம்பந்தமான விவரங்கள் கொடுக்கப்படுகின்றன.

7வது பகுத்தறிவாளர் கழக மாநாட்டின் தீமானங்கள்!: இரண்டாவது நாளில் (27-12-2009, ஞாயிற்றுக் கிழமை) மாநாட்டின் தீர்மானங்கள் முதலில் வாசிக்கப்பட்டு, அதன் விவரங்கள் பின்னணி நரேந்திர நாயக்கினால் விளக்கப்பட்டன:

1. இந்திய அரசு மதத்தை அரசியலிலிருந்து பிரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக ஒரு சட்டவடிவை உண்டாக்கி, சட்டமாக்க வேண்டும்[2]. லிப்ரான் கமிஷன் அறிக்கையிலும் இக்கருத்து சொல்லப்பட்டிருக்கிறது[3].

2. விளம்பரங்களில் வரும் மூட நம்பிக்கைகள் நிறுத்தப்படவேண்டும். அதாவது விளம்பரங்கள் மூடநம்பிக்கைகள் பரப்ப உபயோகிக்கக்கூடாது[4].

3. பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) அமூலாக்க வேண்டும்[5]. ஏற்கெனவே இரண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இதனை வலியுறுத்துள்ளது.

4. அயல்நாட்டிலிருந்து ஊக்குவிக்கப்படும் தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்[6]. அதுமட்டுமல்லாது, எல்லாவிதமான தீவிரவாதங்களும் ஒழிக்கப்படவேண்டும்.

5. அரசியல் நிர்ணயச் சட்டத்தின் சரத்து 31 (Art.31), முக்கியமாக சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகை நீக்கப்படவேண்டும். எல்லாமதங்களின் உரிமைகளும் மதிக்கப்படவேண்டும் (Art.14) என்பதைவிட, சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று மாற்றவேண்டும்.

6. கொடுக்கப்படும் மான்யங்கள் (Subsidies) அறவே ஒழிக்கப்படவேண்டும்.

7. சிறப்புத் திருமண சட்டத்தினைத் திருத்தி (Special marriage Act), பதிவு செய்தல் என்பது எல்லா மதங்களுக்கும் கட்டாயமாக்கவேண்டும்[7].

8. பொது இடங்களில் மதசம்பந்தமான அடையாளங்கள் / சின்னங்கள் வைப்பது நீக்கப்படவேண்டும். அவ்வாறே வழிபடும் இடங்கள் உள்ளதும் நீக்கப்படவேண்டும்.

9. ஸ்ரீலங்கத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது[8].

10. போலி-விஞ்ஞானம் ரீதியில் / மூலமாக பரப்பப்படும் மூடநம்பிக்கைகளை அரசு உரிய முறையில் தடுக்க ஆவன செய்யவேண்டும்.

நாயக்கின் விளக்கம் இந்து-விரொதமாகத்தான் இருந்தது: ஒவ்வொரு தீர்மானம் முன்மொழியும் போது, நரேந்திர நாயக் விளக்கங்கொடுத்து, இது தெரிந்த விஷயம்தான், இதை நிறைவேற்றுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று நினைக்கிறேன் / இல்லை என்ற ரீதியில் பேசினார். மூடநம்பிக்கை பற்றி விவாதிக்கும் போது, செக்யூலரிஸ பாணியில், இந்து-எதிர்ப்பாக இருந்தது ஆச்சரியமான இருந்தது. “அயல்நாட்டிலிருந்து ஊக்குவிக்கப்படும் தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்”, என்றப்பொது, சில குரல்கள் எழுந்தன, உடனே அவர், “எல்லாவிதமான தீவிரவாதங்களும் ஒழிக்கப்படவேண்டும்” என்று சேர்த்துக் கொள்கிறேன் என்றார். அரசியல் நிர்ணயச் சட்டத்தின் சரத்து 31 பற்றிய விவாதம் வந்தபோது “சரண்டர்” ஆகிய நிலைதான் ஏற்பட்டது[9]. “பொது இடங்களில் மதசம்பந்தமான அடையாளங்கள் / சின்னங்கள் வைப்பது நீக்கப்படவேண்டும். அவ்வாறே வழிபடும் இடங்கள் உள்ளதும் நீக்கப்படவேண்டும்”, என்று சமீபத்தை தீர்ப்பின்படி, தீமானத்தை கொண்டுவந்தாலும், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் செய்துவரும் ஆக்கிரமிப்பு முதலியவைப் பற்றி மூச்சுவிடவில்லை. தெருக்களில் உள்ள கோவில்கள் உடனே அகற்றப்படவேண்டும் என்றுதான் பேசினார்[10]. “ஈழத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது” என்பதற்கும் எதிர்ப்பு இருந்தது. நாயக் அதனை, ஸ்ரீலங்கத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது”, என்று மாற்றிவிட்டார்!

ஐந்தாவது தீர்மானத்திற்கு எதிர்ப்பு: தீர்மானங்களை கூட்டமைப்பின் தென் மண்டலச் செயலாளர் வா.நேரு முன்மொழிந்தார். கூட்டமைப்பின் பிற அமைப்பின் சார்பாக அளிக்கப்பட்ட சிறுபான்-மையினரின் சிறப்பு உரிமைகளை அரச-மைப்புச் சட்டத்திலி-ருந்து நீக்க வேண்டுகோள் விடுத்த – தீர்மான முன்-வரைவின் மீது பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தனது எதிர்ப்பினை பதிவு செய்தார்[11]. சிறுபான்-மையினருக்கான சிறப்பு உரிமைகள் இந்நாட்டில் ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்துமத அமைப்புகளின் செயல்களுக்கு ஒரு பாதுகாப்பாக, சமத்துவத்தைப் பேண வழிகோலும் வேறுபாட்டு உரிமையாக, மனிதநேயத்தைப் பேணும் உரிமையாக உள்ள நிலைமையினை விளக்கி, அந்த சிறப்பு உரிமைகள் மேலும் மேலும் சீர்மைப்படுத்தப்பட்ட வேண்டியதன் அவசியத்தை விளக்கிப் பேசினார். இத்தகைய வலிந்து ஆதரிக்கும் நிலையில், மற்ற மதத்தினர்க்கு இந்த அமைப்பில் யாரும் இல்லை போலயிருக்கிறது.

முஸ்லிம்களே இல்லாத மாநாட்டில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்த நாத்திகர்கள்: நம்பிக்கையில்லாதவர், மூடநம்பிக்கை எதிர்ப்பவர், கடவுட்மறுப்பு சித்தாந்திகள், நாத்திகவாதிகள், பகுத்தறிவு வாதிகள் என்றேல்லாம் சொல்லிக் கொண்டு கூடியிருந்த கூட்டத்தில் ஒரு முஸ்லிமும் இல்லதது ஆச்சரியமாகவே இருந்தது. ஆனால், மேலே குறிப்பிட்ட ஐந்தாவது தீர்மானத்திற்லு கருப்புச் சாடைகள் எதிர்ப்பு தெரிவித்தன. சிறுபான்மை-யினர் உரிமையினை பாதிக்கும் அந்த தீர்மான முன்வரைவினை நீக்குவ-தற்கு பகுத்தறிவாளர் கழகம் எடுத்து வைத்த வாதங்களை பொதுக்குழு உணர்ந்து முன்வரைவு நிலையிலேயே அதற்கு முடிவு கட்டப்பட்டு அது நீக்கப்பட்டுவிட்டது.

நாத்திகர்களும், போலி-நாத்திகர்களும்: இந்தி பேசும் நாத்திகர்களைக் கண்டு, குறிப்பாகக் கேட்டு நமது கருப்புச் சட்டைகள் முழித்தது, அதிர்ந்தது முதலியன பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. இந்த 7வது ரேஸனலிஸ்ட் மாநாட்டிலேயே, போலி, சாதாரண மற்றும் பாரபட்சமுள்ள, குழப்பவாத, சந்தர்ப்பவாத நாத்திகர்களை மற்றும் நாத்திகவாதிகளைக் காணமுடிகிறது. அவர்களுக்குள் உள்ள முரண்பாடுகளும் வெளிப்படுகின்றன:

1. இந்து-விரோத நாத்திகம்: இந்தியாவில் இந்துக்கள் அதிகமாக இருப்பதால், இந்துமதத்தை எதிர்க்கிறோம் அன்றாலும், அத்தகைய வாதம், 100% நாத்திகமாக இல்லாமல், இந்து-விரோதமாகவே இருக்கிறது. வட-இந்தியாவில் எடுபடுவதில்லை என்று இந்த மாநாட்டிலேயே ஒப்புக்கொள்கிறர்கள்.

2. கிருத்துமத சார்புள்ள நாத்திகம்: தம்மை நாத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், கிருத்துவ அடிப்படை நம்பிக்கைகளைப் பற்றி விமர்சிக்க மாட்டார்கள் (பாவத்தின் சித்தாந்தம், ஆண் உறவு இல்லாமல் குழந்தை பிறப்பது, சிலுவையில் மரித்தது, உயிர்த்தெழுந்தது, ஆகாயத்தில் சென்றது……………….முதலியன), குறைகூற மாட்டார்கள். பொதுவான விஷயங்களை பேசி, உள்ள எல்லா சமூக-சீரழிவுகளுக்கும் இந்துமதம்தான் காரணம், ஆகையால் இந்துமதம் ஒழிக்கப் படவேண்டும் என்றும் பேசுவர்.

3. முஸ்லிம் மத சார்புள்ள நாத்திகம்: தம்மை நாத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், முஸ்லிம் மற்றும் இஸ்லாம் பற்றி மூச்சுக்கூட விடமாட்டர்கள். அடிப்படை நம்பிக்கைகளைப் பற்றி விமர்சிக்க மாட்டார்கள். பொதுவான விஷயங்களை பேசி, உள்ள எல்லா சமூக-சீரழிவுகளுக்கும் இந்துமதம்தான் காரணம், ஆகையால் இந்துமதம் ஒழிக்கப் படவேண்டும் என்றும் பேசுவர்[12].

4. தியானம், யோகா முதலியவற்றவை எதிர்க்கும் நாத்திகம்: சமீபத்தில் இத்தகையவற்றிற்கு மேலைநாடுகளில் அங்கீகாரம் கிடைத்ததாலும், அதன் பலனால், மக்கள் பலர் அவற்றைக் கடைப்பிடிப்பதாலும், தங்களுக்கு பாதிப்பு என்ற முறையில் எதிர்க்கின்றனர். வேடிக்கையென்னவென்றால், அதையே கிருத்துவர்கள், முஸ்லிம்கள் செய்தால் எதிர்க்கமாட்டார்கள். ஏனனில் அவர்களும் ஆஸ்ரமங்கள் வைத்துக் கொண்டு அப்பய்ற்ச்சிகளை மற்றவர்களுக்கு அளிக்கிறார்கள்[13].

5. சோதிடத்தையும், வானவியலையும் குழப்பும் நாத்திகம்: வேண்டுமென்றே சோதிடத்தையும் வானியலையும் குழப்பி, இந்திய வானியலை தூஷிப்பார்கள். விஷயம் இல்லையென்றால், இன்னென்ன தேதிகளில் சூரியகிரகணம், சந்திரகிரகணம், கோள்கள் ஒரே கோட்டில் வருவது முதலியன சோதிட-பஞ்சாங்களில் குறிப்பிடமுடியாது. வானியல் என்பது ஆண்டாண்டு காலமான நிகழ்வுகளை உன்னிப்பாக பல இடங்களில் பார்ப்பது, குறித்து வைப்பது, தொகுப்பது மற்றும் அதன் மூலம் அத்தகைய நிகழ்வுகள் ஏற்படும் என்று கூறுவது. 108 ஆண்டுகளுக்கு ஒருமுறை கங்கண கிரகணம் ஏற்படும், கோள்கள் ஒரே கிரமமாக வரும் முதலியன சோதிடம் ஆகாது, மூடநம்பிக்கையாகாது. பிறகெப்படி, பஞ்சாங்கள் அவற்றைக் குறிப்பிடுகின்றன?

6. நாத்திகத்தையும், பகுத்தறிவையும் குழப்பும் நாத்திகம்: இது “திராவிடம்” பேசும் “தமிழர்களிடம்” அதிகம் காணப்படுகிறது. அம்பேத்கரிஸம் முதலியன பேசுபவரிடமும் காணப்படும். நாத்திகம் என்பது கடவுட்தன்மையினை அறவோடு மறுப்பது. பகுத்தறிவு என்பது ஓரளவிற்கு மனித அறிவிற்கு புரிகிண்ர அளவில் ஏற்றுக்கொள்வது. இரண்டும் ஒன்றல்ல.

7. மூடநம்பிக்கையை எதிர்க்கும் நாத்திகம்: மேகங்கள் திரண்டு வந்தால் மழை பெய்யும் போன்றவையும் மூடநம்பிக்கைதான். ஏனெனில் மழை பெய்யலாம், பெய்யாமலும் இருக்கலாம்[14]. மழைகாலத்தில் மழை வரும், வெயில் காலத்தில் வெயில் வரும் என்பதெல்லாம் இப்பொழுது மாறிவிட்டன. இது பூகோளக் கோளாறு / பிறழ்ச்சி. அதிக விளைச்சல் இருந்தால் விலை முறைந்துவிடும் முதலியனவும் மூடநம்பிக்கைதான். ஏனெனில் பலநேரங்களில் அவ்வாறு விலை குறைவதில்லை. அரசு வரிவிகிதங்களைக் குறைக்கின்றது, சலுகைகளை அள்ளிவீசுகிறது, இருப்பினும் இப்பொழுது கட்டிடப் பொருட்கள் விலை 2003லிருந்து ஏறுமுகமாகவே உள்ளன[15]. இப்படி பல உதாரணங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். பங்குச் சந்தையைப் பற்றி கேட்கவே வேண்டாம்!

8. செக்யூலரிஸ நாத்திகம்: இது இந்தியாவிற்கே உரித்தானது. இந்த மூடநம்பிக்கை இங்கிருந்து இப்பொழுது உலகம் முழுவதும் பரவி வருகிறது எனலாம்.

9. நவநாகரிக நாத்திகம்: அதாவது, பெண்கள் “பெண்கள் கிளப்பிற்கு போவது” என்ற ரீதியில் உள்ள நாத்திகர்கள்! பெயரளவில் நாத்திகர்கள் எனலாம். திக, திமுக, பாமக மற்றும் அம்பேத்கரிஸம் முதலிய கோஷ்டிகளில் அதிகமாகக் காணலாம். இவர்களைப் பொறுத்தவரைக்கும் அவர்கள் குடும்பத்தில் ஆண்கள் நாத்திகர், பெண்கள் ஆத்திகர்!

10. விஞ்ஞானம் பேசும் நாத்திகம்: ஓரளவிற்கு விஞ்ஞானம் பேசினாலும், ஒரு நிலையில் அதிலும் மூடநம்பிக்கை வந்துவிடும்[16]. இப்பொழுது மரபணு மற்றும் இனங்களைப் பற்றியும், மொழிகள் உண்டானது, நியாண்டர்தால் குரங்கு எப்படி பாடியது, பேசியது, ஆடியது போன்ற ஆராய்ச்சிகளினின்று அத்தகைய விஞ்ஞான-நாத்திகத்தை அறியலாம்[17].

© வேதபிரகாஷ்

16-01-2009


[1] வேதபிரகாஷ், அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால், விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்:

https://dravidianatheism2.wordpress.com/2009/12/26/அகிலஇந்தியபகுத்தறிவாளர/

வேதபிரகாஷ், திராவிட பொய்களும், திரிபுகளும், பிரச்சாரங்களும், மேலும் விவரங்களுக்கு:

https://dravidianatheism2.wordpress.com/page/2/ மற்றும் https://dravidianatheism2.wordpress.com/page/3/

[2] மும்பையில் அத்தகைய வரைசட்டத்தை சட்டசபையில் கொண்டுவந்ததாகவும், ஆனால் மாநில அரசு தாமதப் படுத்துவதாகவும் நாயக் தெரிவித்தார்.

[3] கமிஷனின் அறிக்கைகளை, இந்திய அரசொயல்வாதிகள் என்றுமே மதிப்பதில்லை. மேலும் இந்த லிப்ரான் கமிஷன், முகுக்க-முழுக்க அரச்சியல் நோக்கம் கொண்டது என்பது அப்பட்டமாகத் தெரிவதால், சட்டரிதியில் யாரும் அதை பெரிதாகக் கொள்ளவில்லை. இரண்டு-மூன்று நாட்களில் ஊடகங்களேஅடங்கிவிட்டன.

[4] சிவப்பாக கிரீம், ஆண்கள் அழகாகக் கிரீம், முலைகளை பெரிதாக்க கிரீம் முதலியவற்றை எதிர்க்காதது ஆச்சரியமே!

[5] Smt. Sarla Mudgal, President, Kalyani and others vs. Union of India and other, AIR 1995 Supreme Court 1531 மற்றும் John Vallamattom v. Union of India AIR 2003 SC 2902.

திகவினர்-கருப்புச்சட்டைகள் இதனை எதிர்க்காதது ஆச்சரியமே. ஒருவேளை அதைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ளவில்லையா அல்லத் அவர்களது முஸ்லிம் நண்பர்கள் அதைப் பற்றி சொல்லவில்லையா அல்லது அத்தகைய தீர்மானம் வரும் என்பதை எதிர்பார்க்கவில்லையா?

http://vedaprakash.indiainteracts.in/2009/03/15/islam-goes-hi-tech-whether-it-is-terrorism-or-divorce/

Mohammad Ahmed Khan v. Shah Bano Begum – AIR 1985 SC 945 –  இதுதான் ராஜிவ் காந்தி சட்டத்தை வளைத்து, முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்குத் துணைப்போய், ஒரு புதிய சட்டத்தை முகமதியர்க்லளுக்க்ய்=உ ஏற்படுத்தியது.

John Vallamattom v. Union of India AIR 2003 SC 2902 – சரளா முத்கல் வழக்கு அடுத்து உச்சநீதிமன்றத்தில், மறுபடியும் அரசாங்கத்திற்கு ஒரு பொது சிவில் சட்டத்தை எடுத்துவரவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது. ஆனால், நமது செக்யூலரிஸ அரசியல்வாதிகள் அமைதி காக்கின்றனர். மற்ற நேரங்களில் நீதிமன்ற தீர்ப்புபடித்தான் நடப்பொம் என்று முழக்கமிடும் வீரர்கள் இப்பொழுது ஊமையாகிவிடுகிண்ரனர். இதுதான் இந்தியாவில் சட்டத்தை, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மத்திக்கும் லட்சணம்!

இதை “சட்ட / நீதி நாத்திகம்” என்று கூட கூறலாம்!

[6] அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது என்ன என்பது நாத்திகர்கள் பகுத்தறிவுவாதிகளுக்குத் தெரிந்திருப்பது சந்தோஷமான விஷயம்தான்.

[7] தமிழ்நாட்டில் அத்தகைய சட்டம் எடுத்து வந்துள்ளபோது, முஸ்லிம்கள் எதிர்த்துள்ளதை கருத்தில் கொள்ளவேண்டும்.

[8] திகவினர்-கருப்புச்சட்டைகள் இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. தமிழர்களுக்கு போராடுவோம், உயிர்விடுவோம் என்று பேசும் இவர்கள் அமைதியாக இருந்தனர். “ஈழம்” என்ற வார்த்தைக்கு வடமாநிலத்தவர் எதிர்ப்புத் தெரிவித்து அதை “ஸ்ரீலங்கா” என்று மாற்றியபோதும் கண்டுகொள்ளவில்லை.

[9] அவருக்குப் பிடிக்கவில்லை என்பது, அவர்முகபாவம் காட்டியது. இருப்பினும் நன்பர்களின் அழுத்ததால், சமரசம் செய்துகொண்டார் எனலாம்.

[10] மசூதி கட்ட நிலங்களை ஆக்கரமிப்பு செய்கின்றனர். பிறகு பட்டா வாங்கி சரிசெய்து கொள்கின்றனர். கிருத்துவர்களும் அதே வேலைத்தான் செய்து வருகின்றனர். அவர்கள் முதலில் சிலுவையை நட்டுவிடுவார்கள். பிறகு அதனைச் சுற்றி மேடைக் கட்ட்வார்கள். வரம் வாரம் தொழுகிறேன் என்று கூட்டம் கூட்டுவார்கள். பிறகு சுவர்கள், கூரை என வரும்………….அந்த இடத்தையே ஆக்கரமித்துவிடுவார்கள்.

[11] http://viduthalai.periyar.org.in/20091231/news19.html

[12] இப்பொழுது சிதம்பரத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். உள்துறை அமைச்சர் ஸ்தானத்தில் இருந்து கொண்டு, ஜிஹாத் சொல்லி பல குண்டுவெடிப்புகளை மேற்கொண்டு, அப்பாவி மக்களைக் கொன்று குவித்தபிறகும், ஜிஹாத் இல்லை என்று பேசும் போக்கு!

[13] இதைப் பற்றி தனியாகவே எழுதலாம். கேரளத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதிலும் இப்பொழுது முஸ்லிம் சோதிடர்கள் அதிகமாகக் கிளம்பிவிட்டர்கள்! அரசு பேருந்துகளில் வேறு விளம்பரம் செய்து கொள்கிறார்கள்!

[14] சன், கலைஞர் டிவிகளில் ரமணர் உதிக்கும் முத்துகளைக் கேட்டு முடிவு செய்து கொள்ளலாம்.

[15] இரும்பைப் பொருத்த வரைக்கும் உற்பத்தியாளர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் முதலியோர் சேந்து கொள்ளையடிக்கின்றனர். பல அரசியல்வாதிகளே அத்தகைய இரும்பு தொழிற்சாலைகள் வைத்துக் கொண்டு கொள்ளையடிக்கிறார்கள்.

[16] சிவப்பாக கிரீம், ஆண்கள் அழகாகக் கிரீம், முலைகளை பெரிதாக்க கிரீம் முதலியவற்றை எதிர்க்காதது ஆச்சரியமே!

[17] மேனாட்டு விஞ்ஞானிகளிடன் இது அதிகமாகக் காணப்படுகிறது. விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி செய்தாலும், ஒரு நேரத்தில் தமது கிருத்துவமத அடிப்படைவாத்தில் மூழ்கி வேறுவிதமான விளக்கங்கள் கொடுப்பர், அதாவது பைபிளுக்கு எதிராக போகாமல், விளக்கம் கொடுப்பர்!

அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – III

திசெம்பர் 27, 2009

மத நிறுவனங்களுக்கு வரி போட வேண்டும்: டாக்டர் விஜயம்
டெல்லி பி.சந்தர், நல்.ராமச்சந்திரன் பங்கேற்று உரை

அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால்! என்ற தலைப்பில் மூன்று கட்டுரைகளை பெரியார் திடலில் அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாட்டில் (டிசம்பர் 2009) கலந்து கொண்ட பிறகு www.wordpress.com ல் பதிவு செய்தேன். ஆனால், அப்பொழுதே அவை பதிவாகவில்லை. உடனே www.wordpress.com ற்கு புகாரும் செய்தேன். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. ஏதோ விட்டு-விட்டு சில பதிவாயின, சில மறைந்தன. இப்பொழுது (21-05-2010), இதன் தொடர்பு உள்ளதால், மறுபடியும் புதிப்பிக்கப்படுகிறது.

சென்னை, டிச. 27_ மத நிறுவனங்களுக்கு வரி போட வேண்டும் என்று டாக்டர் விஜயம் பேசினார்.

இந்திய பகுத்தறிவா-ளர் கழகத்தின் மாநாடு சென்னை, பெரியார் திடலில் 26.12.2009 அன்று காலை தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. காலை தொடக்க நிகழ்ச்-சிகள் 26.12.2009 அன்-றைய விடுதலையில் வெளி-வந்தது. இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சி வருமாறு:

மலர் வெளியீடு

மாநாட்டு மலர் வெளி-யிட்டு டாக்டர் விஜயம் பேசியதாவது:

இது ஓர் அற்புதமான மலர்; இது கருத்துகள் நிறைந்தது; 21ஆம் நூற்-றாண்டில் மனித நேயர்-கள் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றிய திட்டத்தைக் கொண்-டது?

இத்தகைய ஒரு மாநாட்டு மலரை நாம் காண்பது அரிது. இதன் அச்சாக்கம், கட்டமைப்பு, கருத்துகள் ஆகியன அருமை-யானவை.

கடந்த காலத்தில் மதம், அறிவியல் வளர்ச்சி-யைத் தடுத்தது. இப்-பொழுது அறிவியலின் வளர்ச்சியை மதம் பயன்-படுத்திக்கொள்கிறது.

அநீதி, ஏற்றத்தாழ்வு, அடக்குமுறை என்பன இன்னும் தொடர்-கின்-றன. மதம் மக்களுக்கு அபினி. இருக்கின்ற கொடு-மைகளை மக்கள் காணாதவாறு மத நம்பிக்கை தடுக்கிறது. எல்லாவிதமான கொடு-மைகளையும் ஒழுக்கக்-கேடுகளையும் கடவுள், மத நம்பிக்கை மூலம் மறைக்கிறார்கள்.

மதத்திலிருந்து சுதந்திரம்

மதச் சுதந்திரம் வேண்-டும் என்பதை விட, மதத்திலிருந்து சுதந்திரம் வேண்டும். மத நிறுவனங்-களின் வருமானத்திற்கு வரிபோட வேண்டும்.

மறைந்த பிரேமா-னந்தத்தின் உடைமை-யாக இருந்த நிலத்தை, புட்டபர்த்தி சாய்பாபா அபகரித்துக் கொண்-டார்; அந்த மோசடியை பிரேமானந்த் மக்களுக்குத் தெரிவித்தார். உண்-மையை நாடும்படி மக்-களை வேண்டினார். டாக்டர் அப்ரகாம் கோவூ-ரின் வழியைப் பின்பற்றி, செயல்முறை மூலம் மூடநம்பிக்கை மோசடி-களை வெளிப்படுத்-தினார்.

கோபன்கோப்மேன், எடின்பர்க் பல்கலை

பெரியார் திடலில், ஃபிரா செய்தி இதழை வெளியிடுவதில் பெரு-மைப்படுகிறேன். அதன் ஆசிரியரையும் கட்டுரை-யாளர்களையும் பாராட்டு-கிறேன்.

பி.சந்தர்: ஏழாவது ஃபிரா மாநாடு வெற்றி-யடைய வாழ்த்துகிறேன். இளம் நெஞ்சங்களில் புதிய கருத்து விதைகளை விதைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

நல்.ராமச்சந்திரன் (பெரியார் மணியம்மை பல்கலைக்கழக கழக துணைவேந்தர்)

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தர், துணைவேந்தர், இணைவேந்தர் ஆகிய மூவரும் பகுத்தறிவா-ளர்-கள். இந்தியாவில் உள்ள 408 பல்கலைக்கழகங்-களில் இப்படிப்பட்ட ஒரு நிலை இந்தப் பல்-கலையில்தான் காண முடிகிறது.

பெரியார் சிந்தனை மய்யம் இப்பல்கலையில் செயல்படுகிறது. அம்மய்-யத்-தின் வழியே 2010இல் மனிதநேயப் பகுத்தறி-வாளர் மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறோம் என்றார்.

அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – II

திசெம்பர் 27, 2009

அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – II

அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால்! என்ற தலைப்பில் மூன்று கட்டுரைகளை பெரியார் திடலில் அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாட்டில் (டிசம்பர் 2009) கலந்து கொண்ட பிறகு www.wordpress.com ல் பதிவு செய்தேன். ஆனால், அப்பொழுதே அவை பதிவாகவில்லை. உடனே www.wordpress.com ற்கு புகாரும் செய்தேன். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. ஏதோ விட்டு-விட்டு சில பதிவாயின, சில மறைந்தன. இப்பொழுது (21-05-2010), இதன் தொடர்பு உள்ளதால், மறுபடியும் புதிப்பிக்கப்படுகிறது.

குறிப்பு: மாநாட்டில் இவர்கள் பேசியதற்கும், “விடுதலை” கீழ்கண்டவாறு பிரசுரித்துள்ளதற்கும் வேறுபாடுகள் உள்ளன.

“நாத்திகம்” (atheism) என்பதற்கு பதிலாக “Rationalism” என்ற போர்வையில் விவாதங்கள் வைக்கப் படுகின்றன. அதனை “பகுத்தறிவு” என்று தமிழில் பேசப்படுகிறது.  agnosticism, skepticism, non-belief in religious system முதலிய கோணங்களில் விவாதிப்பதும், விஞ்ஞான ரீதியில் தர்க்கம் செய்வதும் ஒன்றாகாது. ஆனால் நாத்திகத்தை மறைத்து விஞ்ஞான போர்வையில் பலரக சித்தாந்திகள் ஒன்றுகூடி, இவ்வாறாக பேசுவது நன்றாகவே தெரிகிறது.

“பகுத்தறிவு” என்றே  முதலில் “விதலையில்” வெளிவந்தது அப்ப்டியே கொடுக்கப்படுகிறது:

வகுப்பு வெறியை முறியடிக்க பெரியாரின் சிந்தனைகளே தேவை: இந்திய பகுத்தறிவாளர் மாநாட்டில் கு.வெ.கி.ஆசான், அ.அருள்மொழி, ஆர்.ஜி.ராவ், வித்யாபூஷன்

http://viduthalai.periyar.org.in/20091227/news11.html

சென்னை, டிச.27_ வகுப்பு வெறியை முறி-யடிக்க பெரியாரின் சிந்-தனைகள்தான் பயன்-படும் என்று வித்யா பூஷன்-ராவத் நேற்று சென்னை பெரியார் திடலில் நடை-பெற்ற மாநாட்டில் கூறி விளக்கமளித்தார். 7ஆவது தேசிய மாநாடு டிசம்பர் 26 பிற்பகல் மற்-றும் மாலை நிகழ்ச்-சிகள் நேற்று நடைபெற்றன. அதன் தொடர்ச்சி வருமாறு: வகுப்புவாதத்தை ஒழிப்பதில் பகுத்தறிவு இயக்கங்களின் பங்கு எனும் தலைப்பில் முதல் கருத்தரங்கு நேற்று (26.12.2009) மாலை இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திட-லில் நடைபெற்றது.

கு.வெ.கிஆசான்: பெரியார் பேருரை-யாளர் கு.வெ.கி.ஆசான் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குத் தலைமை-யேற்றார். ஆங்கிலத்தில் உள்ள கம்யூனல் எனும் சொல்லை வகுப்புவாதம் எனும் விரும்பத்தகாத பொருளில் இந்தியா-வில்-தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். சமுதாயமாக மக்கள் வாழ்-வது, ஒன்றைப் பொது-வாக அவர்கள் பயன்-படுத்துவது ஆகியவை-தான் அச்சொல்லின் இயல்பான பொருள் என்-பதைத் தெளிவுபடுத்-தினார். 1964இல் வெளி-யான கன்சைஸ் ஆக்ஸ்ஃ-போர்டு அகராதியின்படி, சமுதாயங்களுக்கு இடையே பகையுணர்வு எனும் பொருளில், கம்யூ-னல் எனும் சொல் இந்-தி-யாவில் பயன்படத் தொடங்-கியதை எடுத்துக்காட்-டினார்.

இந்து முஸ்லிம் பகை: பெரும்பான்மை இந்து மதத்தினர் சிறு-பான்மை மத்தினரை ஒதுக்கி, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முற்-பட்ட பொழுது, சிறு-பான்-மையர் சட்டப் பாதுகாப்பை வகுப்பு-ரிமையின் அடிப்படையில் கேட்டனர். அது மறுக்-கப்பட்ட பொழுது இந்து, முஸ்லீம் பகை ஏற்பட்டு, பாகிஸ்தான் பிரிவினை-யில் முடிந்தது.

வி.பி.சிங் ஆட்சியில்: மேல்ஜாதியார் ஆதிக்-கத்தில் இருந்து, ஒடுக்கப்-பட்ட, ஒதுக்கப்பட்ட, அழுத்தப்பட்ட ஜாதியார் பாதுகாப்புப் பெற, இட-ஒதுக்கீட்டைக் கோரினர். அதை விழிப்புணர்வுடன் தென்நாடு முன்-னெடுத்-தது. ஆனால் வடபுலத்-தில் வகுப்புரிமை இயக்கம் வலுப்பெறவில்லை. மண்-டல் ஆணையத்தின் பரிந்-துரைப்படி, வி.பி.சிங் பிர-தமராக இருந்த பொழுது, மத்திய அரசில் பணி-யிடங்களுக்குப் பிற்படுத்-தப்பட்டோருக்கு இட-ஒதுக்கீடு அளித்தது. அதைத் தென் மாநிலங்கள் மகிழ்-வுடன் வரவேற்றன. ஆனால் வட இந்தியாவில் மேல்-ஜாதியாரின் தூண்டுத-லால் கலவரம் உண்டா-யிற்று.

உச்சகட்ட கலவரங்கள்: உண்மையான பிரச்-சினையிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்ப, மதவெறியை இந்துத்-துவா சக்திகள் கிளப்பு-கின்றன. உண்மையான பிரச்சினைகளை மறைத்து, உணர்ச்சிகளை எழுப்பி, கற்பனைப் பிரச்-சினை-களைக் கொண்டு, சிறு-பான்மை மதத்தினர் மீது வெறுப்பை வளர்த்து கல-வரங்களைத் தொடர்ந்து நடத்துகின்றன. 1992இல் பாபர் மசூதி இடிப்பும், 2002இல் குஜராத் கல-வரங்களும் அவற்றில் உச்சகட்டமானவை.

பொதுமக்களின் கவ-னம் தவறான பாதையில் செல்லும் வரை, அவர் மீது தங்கள் ஆதிக்கம் நிலை-பெறும் என்பது படித்த, மற்றும் பணக்-காரக் கூட்டத்தினரின் கணிப்பாகும். ஆகையால் உண்மைப் பிரச்சினைகளில் இருந்து எளிய மக்களின் கவனத்-தைத் திருப்புதல், கலவரத்-தைத் தூண்டுதல், பக்தி-போதையை ஏற்றுதல், மதவெறியை ஊக்கு-வித்தல் முதலியவற்றில் மதவாதிகள் ஈடுபட்டு உள்ளனர். இவர்களின் முயற்சியை முறியடிக்கும் வகையில் பகுத்தறி-வா-ளர்கள் மக்களுக்கு உண்-மைகளைச் சொல்ல வேண்டும், மூடநம்பிக்-கைகளை முறியடிக்க வேண்டும், அறிவியல் பார்வையை உண்டாக்க வேண்டும். இவை போன்ற நடவடிக்கைகளால் விழிப்-படைந்த மக்கள் தேவையான காரியங்-களுக்கும் உரிமைகளுக்-கும் முயற்சி எடுத்துக்கொள்-வார்-கள். வீண் உணர்ச்-சிக்கு ஆட்பட்டு வகுப்-புக் கலவரங்களில் ஈடு-பட-மாட்டார்கள், வகுப்பு-வாதத்தை முறியடிப்-பார்-கள். இவ்வாறு கு.வெ.கி. ஆசான் உரையாற்றினார்.

வழக்கறிஞர் அ.அருள்மொழி: உயர்நீதிமன்ற வழக்கு-ரை-ஞர் அ.அருள்மொழி பேசுகையில், புத்தரின் போதனைகள் மறக்-கடிக்-கப்பட்டு, வேதியத்தின் அடிப்படையில் கதைகள் பரப்பப்படுவதைக் கண்-டித்தார். சென்னை மாகா-ணத்தில் நீதிக்கட்சி அரசு எல்லாப் பிரிவு மக்களுக்-கும் நீதி கிடைக்கும் வகை-யில் வகுப்புரிமை ஆணை பிறப்பித்து மக்களாட்-சியை உறுதிப்படுத்தியது. இவ்வாறு அனைவருக்-கும் தெரிய வேண்டும். இன்னும் தீண்டாமை-யைக் குற்றம் அற்றது எனக் கூறுவோர் இருக்-கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

கோவா அறிவியல் பேரவைத் தலைவர், ஆர்.ஜி.ராவ்: இக்காலகட்டத்தில் தேவைப்படுவது மனித-நேயம் என்றார். மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும், அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

வித்யாபூஷன் ராவத்: டெல்லி, சமூக வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர், வித்யா பூஷன் ராவத் கருத்து அறிவிக்கையில் பெரியாரின் எண்ணங்-கள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு எல்லோரிடமும் பரவ வேண்டும் என்றார். வகுப்பு நெறியை முறி-யடிக்க பெரியார் சிந்த-னை-கள் பயன்படும். காந்தி-யார் கூறிய மதச் சார்பின்மை பார்ப்-பனியம் சார்ந்த மதச் சார்பின்மை. பெரியாரின் மதச் சார்பின்மை, மனித நேயம் சார்ந்தது. மதச் சார்பின்மை வர்ணாஸ்-சிரம தர்மத்தை மறுப்ப-தாக இருக்க வேண்டும் என்றார்.

பி.எஸ்.பர்னாலா: பர்னாலா மத குருக்-கள் மூடநம்பிக்கை-களைப் பரப்புவது வருத்தத்திற்கு உரியது எனக்கூறி, பகுத்-தறிவாளர்கள் மக்களை இன்னும் அதிக அளவில் நாடு முழுவதும் சந்தித்-துப் பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.

அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?

நவம்பர் 29, 2009

அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?

இது “விடுதலை” என்கின்ற திராவிட கழகத்தினரின் நாளிதழில் “ஓடும் நதி” என்ற பெயரில் மறைந்து கொண்டு யாரோ ஒரு இந்து-விரோதி எழுதி வெளிவந்த சிறு கட்டுரையாகும். இன்றும் (டிசம்பர் 2013) கீழ்கண்ட தளத்தில் இருக்கின்றது:

http://viduthalai.periyar.org.in/20091129/news22.html

அதனால் தான், கீழ் கண்ட குறிப்பையும் நவம்பர் 2009லேயே செர்த்திருந்தேன்.

இதோ, ஐயப்பன் பக்தர்களையும் விட்டுவைப்பதில்லை.வருடா வருடம் இதே மாதிரியான தூஷணங்கள்! ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்காததால், இப்படியே அச்சடித்து இப்பத்திரக்கை நடதத்தப் படுகிறது.இதன் ஆசிரியர் கே. வீரமணியோ ஒரு நிகர்-பல்கலைக் கழகம் வைத்து நடத்துகிறார்.அதில் வேலை செய்யும் பலர் மாலை அணிந்துள்ளனர். அவர்கள் என்ன செய்வார்கள்?

அவர்கள் என்ன நினைப்பார்கள்?

அங்கு படிக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?

ஏனெனில் மாணவர்களில் பலரும் மாலை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!!

குறிப்பு: ஐய்யப்பப் பக்தர்களைப் புண்படுத்த இப்பதிவு செய்யப்படவில்லை. உண்மையில் நாத்திகவாதிகளின் மனப்பாங்கை எடுத்துக் காட்டி, அவர்களைன் போலித்தனத்தை எடுத்துக் காட்டவே நான் இப்பதிவை செய்துள்ளேன்.     

                                                                                                                  சென்னை, நவ. 29_ கேரளம் _ கேர என்ற மலையாள சொல்-லுக்கு தென்னை என்று பெயர். கேரளம் என்றால் தேங்காய் விளைகிற இடம் என்று பெயர். சந்தேகமாக இருந்-தால், உங்களுக்குத் தெரிந்த மலையாள சேட்டான், சேச்சியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கேரளாவிலிருந்து வந்த தேங்காயை, தமிழ்நாட்-டுத் தமிழன் விலைக்கு வாங்கி, தலையில் இரு-முடிகட்டி திரும்பவும் எங்கிருந்து வந்ததோ, அங்கேயே பக்தியின் பெயரால் கொண்டு போய் சேர்கிறான். அந்த தேங்காய்களை சபரிமலை கோவில் நிர்-வா-கமும் ஏதாவது எண்-ணைய் எடுக்கிற நிறுவனத்-திற்கு மொத்த விலைக்கு விற்று விடுகிறது. அந்த நிறுவனங்கள் தமிழ்-நாட்-டில் சிறு சிறு பாக்கெட், பாட்டில்களில் தேங்காய் எண்ணையை அடைத்து வந்து விற்கிறது. தேங்-காயை விலைக்கு வாங்-கிய தமிழன்,அதே தேங்-காயை, எண்ணைய் என்ற வடிவத்தில் திரும்ப-வும் விலைக்கு வாங்கு-கிறான். அதாவது புரிகிற மாதிரி சொல்வது என்-றால், ஒரு பொருளை இரண்டு முறை விலைக்கு வாங்குகிறான். கேரளக்காரன் தமிழ-னின் தலையில் இப்படித்-தான் மிளகாய் அரைக்-கிறான்! அய்யப்பனுக்கு மாலையணிந்து கோவி-லுக்கு போய் திரும்பும் வரை மிகவும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்-டும் சரியாகச் சொன்-னால், கோயிலுக்குப் போய் திரும்பும் வரைக்கு-மாவது நல்லவர்களைப் போல நடியுங்கள் என்-கிறார்கள்! கேரள அய்யப்பனுக்கு மாலை போட்டுப் போகிற தமிழர்கள் தயவு செய்து அய்யப்பனின் பிறப்பு, வளர்ப்பு கதையை படித்த பிறகு,தைரியம் இருந்தால் அதற்கு பிறகு மாலை போடுங்கள்! எவ்வளவுக் எவ்வளவு அசிங்கங்-கமாக, கேவலமாக இருக்க வேண்டுமோ, அவ்வள-வுக்கு அவ்வளவு ஆபாச-மாக இருக்கிறது, அய்யப்-பனின் பிறப்பு வளர்ப்பு வரலாறு! அவைகளை படித்தால் ஒழுக்கக் கேடு-கள் தான் நாடெங்கும் தலை விரித்தாடும்..! கேரளா கிறித்தவர்கள் அதிகம் நிறைந்த மாநிலம்.

அதாவது அய்யப்பன் பிறந்து வளர்ந்து கிழித்த-தாக கூறப்படும் கேரளத்-தில், கேரள மக்கள் அய்யப்-பன விட இயேசு கிறிஸ்துவைத் தான் அதிகம் பின்பற்று-கிறார்-கள்! இது ஒன்று போதாதா? அய்யப்பன் வெறும் பொய்யப்பன் என்று புரிந்து கொள்ள… அதா-வது தன்னை சிலுவை-யில் உயிரோடு அறைந்த போது தன்னையே காப்-பாற்றிக் கொள்ளாத இயேசு தான் இவர்களை காப்பாற்றும், சக்தி வாய்ந்த கடவுளாம்! கொடுமைடா சாமி! நீங்கள் சொல்வதெல்-லாம் சரிதான்ங்க, ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்னு இருக்கு, அதுக்கு பெயர் தான் கடவுள் என்பர்களே! கடவுளின் பெயரால் இந்த கேணத் தனங்கள், எதற்கு? கடைசியாக உங்களிடம் வேண்டிக் கொள்வ-தெல்-லாம், ஒன்றே ஒன்று தான்! தமிழர்களே! தமிழர்-களாக இருங்கள்!!

நன்றி: ஓடும் நதி

பின்குறிப்பு: இந்த இடுகை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடப்பட்டது. நாத்திகம் என்ற போர்வையில், வீரமணி எப்படி தூஷணம் செய்கிறார் என்பதைத்தான் எடுத்துக் காட் ட அவ்வாறு செய்யப்பட்டது. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்ற எண்ணம் அந்த மெத்த “படித்த” மேதாவிக்கு, நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தருக்குத் தெரியாமல் இருப்பதையும் எடுத்துக் காட்டப்பட்டது. இப்பொழுதும் இதற்கு பதில்கள் வருவதால், இக்குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

 2009லிருந்து 2013 வரை படிப்பவர்கள் இதனை முழுவது படிக்காமலேயே, என்னை திட்டி பதில்களை பதிவு செய்து வருகிறார்கள்.

ஆகவே, தயவு செய்து முழுமையாக படித்து விட்டு பதிலை இடுங்கள் .

வேதபிரகாஷ்

04-12-2013

கடவுள் இருக்கும் இடமெல்லாம் காமலீலைக் கூடாரமாக மாறுகிறது அதிர்ச்சி தரும் ஆய்வுத் தகவல்!

நவம்பர் 29, 2009

கடவுள் இருக்கும் இடமெல்லாம் காமலீலைக் கூடாரமாக மாறுகிறது அதிர்ச்சி தரும் ஆய்வுத் தகவல்!
http://viduthalai.periyar.org.in/20091129/news01.html

புதுடெல்லி, நவ.29_ பகுத்தறிவற்ற கும்பலால் கடவுளின் முக்கிய திருத்தலங்கள் என்று போற்றப்படும் இடங்கள் எல்லாம் தற்போது அவை காம லீலை கூடாரங்களாக மாறி வருகின்றன. பகுத்தறிவாளர்களால் தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டு வரும் இந்தக் கூற்றை இரு அரசு சாரா நிறுவனங்களின் ஆய்வு ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளன.

புனிதத் தலங்களுக்கு ஆன்மிக யாத்திரை என்ற பெயரில் செல்லும் பக்தர்கள் அங்கு நடத்தும் காமக் களியாட்டங்கள் குறித்து இரு அரசு சாரா நிறுவனங்கள் தேசிய அளவில் சமீபத்தில் ஆய்வு நடத்தின. அதில் குறிப்பாக சிறுவர், சிறுமியர் பாலி-யல் கொடுமைக்கு உள்ளாவது குறித்து பல்வேறு அதிர்ச்சித் தகவல்களும் வெளிவந்து உள்ளன.

நாடு முழுவதும் ஆய்வு: மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் கிராம நியோஜன் கேந்திரா என்ற அமைப்பு நாடு முழுவதும் ஆய்வு நடத்தியது. சுற்றுலாத் தலங்கள், ஆன்மிக திருத்-தலங்கள் என நாடு முழுவதும் உள்ள 68 இடங்-களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்-போது ஆன்மிக திருத்தலங்கள் பலவும் காம விளை-யாட்டு அரங்கங்களாக மாறியிருப்பதை கண்டறிந்-துள்ளதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர். அந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: ஆன்மிகத் தலங்களில்தான் இந்தியா மற்றும் வெளி-நாட்டினர் தமது காம விளையாட்டுகளை அதிகமாக நடத்தி வருகின்றனர். இதில் பாலியல் தொழி-லாளர்கள் மட்டுமின்றி வலுக்கட்டாயமாக சிறுவர், சிறுமியரும் ஈடுபடுத்தப்படுகின்றனர். பக்தர்கள் என்ற போர்வையில் இந்த ஆபாச அரங்கேற்றத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

ஆன்மிகத் திருத்தலங்கள்: இந்தியாவில் பாலியல் வேட்கையைத் தணிப்பதற்கான இடமாக வெளிநாட்டினர் தேர்வு செய்துள்ள இடங்கள் ஆன்மிக திருத்தலங்கள்தாம். அந்த அளவுக்கு அங்கு காமக் களியாட்டத் தொழில் கொடிகட்டிப் பறப்பதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், பெங்களூருவில் உள்ள அரசு சாரா அமைப்பு ஒன்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஓர் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் திருப்பதி, குருவாயூர் மற்றும் பூரி போன்ற ஆன்மிகத் தலங்களில் சிறுவர், சிறுமியர் பெரும் எண்ணிக்கையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களின் பாலியல் சுரண்டலிலிருந்து சிறுவர், சிறுமியரைப் பாதுகாப்பது என்ற தலைப்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆன்மிகத் தலங்களில் சிறுவர், சிறுமியர் மட்டு-மின்றி இளம் பெண்களும் பாலியல் துன்புறுத்-தலுக்கு உள்-ளாவது உண்மை என்பது கண்டறியப்-பட்டுள்ளது.

ஆன்மிகம் என்ற பெயரில் மக்கள் கூடும் இடங்களில் நடைபெறும் இந்தக் காம லீலைகளைக் கட்டுப்படுத்த போதிய சட்டம் இல்லை என்று அந்த ஆய்வறிக்கையில் கவலை தெரிவிக்கப்-பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையை அடுத்து இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்-பான வரைமுறைகளை உருவாக்க மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் தற்போது தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. சமீபத்தில் இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் சார்பில் கடும் நடவடிக்கைகள் மேற்-கொள்ளப்படுவது குறித்து ஆலோசிக்கப்-பட்டது.

மத்திய அரசு வலியுறுத்தல்: ஆன்மிகம் என்ற பெயரில் நடத்தப்படும் சுற்றுலாக்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறுவர், சிறுமியர் இக்கொடுமைக்கு உள்ளாகாமல் இருக்கும் விதமாக கடும் சட்டங்களும், காவல்துறை கண்-காணிப்பும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய சுற்றுலாத்துறை வலியுறுத்தி உள்ளது.

திராவிட நாத்திகம் எப்படி போலி-நாத்திகம் மற்றுமில்லாது, ஒரு பத்திரிக்கை ஒழுங்குத்தனம் கூட இல்லாமல் இருக்கிறது என்பதற்கு இன்னொரு எடுத்துக் காட்டாக இது இருக்கிறது.

செக்ஸ் டூரிஸம் என்பதை “ஆன்மிக யாத்திரை” என்று மாற்றி, ஏதோ ஒரு குறிப்பிட்ட மதத்தினர்தான் காரணம் என்று காட்டும் போக்கு.

உண்மையில் அத்தகைய குறிப்பாக சிறுவர், சிறுமியர் பாலியல் கொடுமைக்கு உள்ளாவது அயல்நாட்டு மதத்தவர்தாம். அதைக் குறிப்பிடாமல் மறைக்கிறது.

“திருப்பதி, குருவாயூர் மற்றும் பூரி போன்ற ஆன்மிகத் தலங்களில் சிறுவர், சிறுமியர் பெரும் எண்ணிக்கையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்” என்று குறிப்பிட்டு ஆனால் யார் அத்தகைய பாலியல் வன்குற்றங்களை செய்வது என்பதை மறைக்கும் போக்கு!

செக்யூலார் நாத்திகமா?