Posts Tagged ‘பகவத் கீதை’

பகவத் கீதை, கிருஷ்ண தூஷணம், திரிபு விளக்கம், இந்துவிரோதக் கூட்டங்களின் தொடரும் சட்டமீறல்கள், வன்முறைத் தூண்டும் பிரச்சாரம், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்! [3]

ஜூலை 29, 2020

பகவத் கீதை, கிருஷ்ண தூஷணம், திரிபு விளக்கம், இந்துவிரோதக் கூட்டங்களின் தொடரும் சட்டமீறல்கள், வன்முறைத் தூண்டும் பிரச்சாரம், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்! [3]

DK arheist discourse on Bhagawat Gita.his book

உண்மையில் விற்கப்பட்டதா, இலவசமாகக் கொடுக்க பட்டதா?: இக்காலத்தில் புத்தகத்தின் விற்பனையை எப்படி கணக்கில் காட்டுகிறார்கள் என்று நன்றாகவே தெரியும். தமிழக வரலாற்றுப் பேரவையில் திக-புத்தகங்கள் இலவசமாக 300 பேராளர்களுக்குக் கொடுக்கப்பட்டன என்று முன்னர் எடுத்துக் காட்டப்பட்டது. அப்படியென்றால், அந்த 10 புத்தக்கங்கள், 300 வீதம் விற்றதாகக் கணக்குக் காட்டிக் கொள்ளலாம். ஆக டஜன் கணக்கில் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் நடத்தும் வீரமணிக்கு ஒரு லட்சம் பிரதிகள் விற்பது என்பது என்ன முடியாத காரியமா? அதற்கு ஒரு வரி மறுப்பு கிடையாது என்பதில்லை, அதாவது லட்சம் பிரதிகள் விற்று யாரிடம் போய் சேர்ந்தன என்று தெரியவில்லை. மேலும், அரைகுறையாக, அரைவேக்காட்டுத்தனமான, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும், இத்தகைய சித்தாந்திகளை மற்றவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு, தங்களது நேரத்தை விரயமாக்க மாட்டார்கள் என்பதனையும் நோக்க வேண்டும்.

DK arheist discourse on Bhagawat Gita.his book.english
பகவத் கீதையை புனித நூலாக சைவர்கள் ஏற்கமாட்டார்கள்: கி.வீரமணி பேட்டி: தஞ்சையில் திராவிட கழகம் சார்பில் இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதற்குக் கண்டனம் தெரிவித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சை வந்த திராவிட கழகதலைவர் கி.வீரமணி நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது[1]: “பகவத் கீதை முழுமையான இந்து நூலாக கருதப்படுவதில்லை. இந்து மதம் என்பது பல பிரிவுகளை கொண்டது. அந்த வகையில் வைணவர்கள் தான் பகவத் கீதையை இந்து மதத்தை சார்ந்தது எனக் கூறுகின்றனர். சைவர்கள் பகவத் கீதையை ஏற்கமாட்டார்கள். அதேபோல மற்ற பிரிவுகளை சார்ந்தவர்களும் இதை ஏற்று கொள்வதில்லை. எனவே இந்து மதத்தை இந்நூல் முழுமையாக உரிமை கொண்டாட முடியாது. ஆனால் மத்திய அரசு தேசிய புனித நூலாக பகவத் கீதையை திணிக்க முயற்சிக்கிறது. இந்தியை எப்படி அதிகாரம் படைத்த மொழியாக திணிக்கின்றனரோ அதேபோல சமஸ்கிருதத்தையும் திணிக்க ஆசைப்படுகின்றனர். அது போல இதையும் நிறைவேற்ற முயற்சி செய்கின்றனர். நம் நாட்டில் பல கலாசாரங்கள், பல்வேறு மதங்கள் பல மொழிகள் இருக்கின்றன. இந்த நாட்டின் என் மதம் மட்டும்தான் ஆள வேண்டும் எனச் சொல்லக் கூடிய பாசிச முறையிலான இந்த செயல்பாட்டை இந்தியாவே எதிர்க்கிறது”, இவ்வாறு அவர் கூறினார்[2]. பேட்டியின்போது தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் எல்.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ரா. திருஞானம், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர். ஆகா, சைவர்கள் மீதுதான், வீரமணிக்கு எத்தனை பற்றுதல்! சிண்டு முடித்து விடுகிறார்கள். சோழன் குடுமி சும்மா ஆடாது என்றெல்லாம் இவர்கள் கிண்டல் செய்வார்களே, இப்பொழுது வீரமணி அதே வேலையைத்தான் செய்துள்ளார்.

DK arheist discourse on Bhagawat Gita.1

பகவத் கீதை ஒரு இந்து பயங்கரவாத நூல், கிருஷ்ணன் ஒரு இந்து பயங்கரவாதி: வினவு போன்ற தீவிர-கம்யூனிஸ்ட் ஊடகங்களும், “அதன்படி பகவத் கீதை ஒரு இந்து பயங்கரவாத நூல், கிருஷ்ணன் ஒரு இந்து பயங்கரவாதி என்பதற்கும் எண்ணிறந்த சான்றுகளை அடுக்க முடியும்,” என்று ஊளையிடுகின்றன[3]. சம்புகன் என்ற பெயரில் உதிர்த்துள்ள துவேசங்கள்[4]:

  1. மற்ற மதங்களின் கடவுளுக்குரிய தன்மை கிஞ்சித்தும் இல்லாத பாத்திரம் தான் கிருஷ்ணன்.
  2. தன்னை ஒருவன் ஆராதிக்க முன்வந்தால் அவனை ஏற்றுக்கொள்வேன் என்று சொல்லும் கிருஷ்ணன், நேர்மையான வாழ்க்கையை ஒழுகுவதை அதற்கு நிபந்தனையாக சொல்லவில்லை.
  3. அதனால்தான் ஊழல் பேர்வழிகளும், கொலைகாரர்களும் கொண்ட பாஜக கிருஷ்ணனை தூக்கிபிடிக்கிறது. திருப்பதி உண்டியிலில் விழும் எண்ணிறந்த கருப்புப் பணமும் அதையே காட்டுகிறது.
  4. எந்த வகையிலும் தகுதியற்ற கீதையை தேசியப் புனித நூலாக்குவோம் என்பது கயமை நிறைந்தது.
  5. அதன்படி பகவத் கீதை ஒரு இந்து பயங்கரவாத நூல், கிருஷ்ணன் ஒரு இந்து பயங்கரவாதி என்பதற்கும் எண்ணிறந்த சான்றுகளை அடுக்க முடியும்.

ஆக, இவர்களிடமிருந்து தான், உண்மையினை எல்லோரும் அறிய முடியும், என்ற ரீதியில், பொய்களை அள்ளிவிட்டிருக்கிறார்கள். இந்துவிரோத கூட்டங்கள் இதைப் படித்து சந்தோசம் அடையலாம்!

DK Veeramani, Gita a book of terrorism, Krishna - a terrorist

முடிவுரை: மேலே உள்ள அனைத்தையும் கவனமாகப் படித்து, விவாதித்தப் பிறகு, குறிப்பாக, கீழ்கண்ட அம்சங்கள் கவனத்திற்குக் கொடுக்கப் படுகின்றன:

  1. வீரமணி போன்ற இந்துவிரோத கும்பல்கள், உருப்படியாக, படித்து உண்மைகளை அறிந்து கொள்ளவில்லை. இந்துவிரோத குப்பைகளைத் திரட்டி, பேசி-எழுதி வருவடுதான் புலப்படுகிறது. இதிலிருந்தே, அவர்களது தகுதியும் வெளிப்படுகிறது. அதனால் தான் கண்டுகொள்ளாமல் இருக்கிறாற்கள். ஆனால், செய்யும் குற்றத்தைத் திரும்பத்திரும்ப செய்தால், ஒரு நிலையில் கட்டுப்படுத்த வேண்டிய, நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உண்டாகிறது. நிச்சயமாக 2020களில், இவர்கள் 1960கள் போன்று வன்முறாஇ செயல்களில் ஈடுபட்டு, இந்துக்களை மிரட்ட முடியாது.
  1. ஆங்கிலேயர் காலம் முதல் 2020 வரை நடந்துள்ள நிகழ்வுகளை கவனித்தால், இக்கூட்டங்கள் திட்டமிட்டு தூஷணம் செய்து கொண்டிருக்கின்றன என்பதனை அறிந்து கொள்ளலாம். ஈவேரா சொன்னதைத் தான், நான் சொன்னேன் – எழுதினேம் என்று தப்பித்துக் கொள்ள முடியாது. “அவன் தான் கொலை செய் என்றான், நான் செய்தேன்,” என்று தப்பித்துக் கொள்ள முடியாது.
  1. பகவத் கீதை உறவினர்கள், அன்பர்கள் எல்லோரையும் கொல் என்பது உருவகமாகச் சொல்லப் பட்டிருக்கிறது. வாழ்க்கை நிலையாம்மைவிளக்கப் பட்டிருக்கிறது. அதனால், கீதை படிப்பவன் எல்லோரும் கொலை செய்வான் என்று விளக்கம் கொடுப்பது மடத்தனமானது. அதனால் தான், மக்கள் இத்தகைய விளக்கங்களை கண்டுகொள்வதில்லை.
  1. வாழ்க்கை நிலையின்மையை, மக்கள் அன்றாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். கடந்த ஆண்டுகளில் பூகம்பங்கள், புயல்கள், வெள்ளங்கள், சுனாமி, இப்பொழுது கொரோனா போன்ற தொற்று வியாதிகள் என்று மக்கள் அனுபவித்து, உண்மையினை அறிந்து கொண்டுள்ளனர்.
  1. சுருக்கமாக சொல்வதானல், கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு குருக்ஷேத்திரத்தில் சொன்னது. இப்பொழுது, யாரும் குருக்ஷேத்திரத்தில் இல்லை. சண்டைப் போட்டுக் கொள்ளவும் தயாராக இல்லை.
  1. வர்ண சங்கிரமம், miscegenation, என்று இக்காலத்தில் விஞ்ஞான ரீதியில் சொல்லப் படுகிறது. அதனால், வீரியம் குறைகிறதா, பிறக்கும் குழந்தைகள் புதிய நோய்களுக்கு, அங்கஹீனங்களுக்கு உட்படுகிறார்களா இல்லையா என்பது, அனுபவிப்பவர்களுக்குத் தெரியும். அரசியல் செய்பவர்களுக்குப் புரியாது.
  1. மக்கள் எவ்வாறு பிறக்கின்றனர் என்று, இப்பொழுதைய விஞ்ஞான காலத்தில் அனைவரும் அறிந்து கொண்டுள்ளனர். 60-100 ஆண்டுகளுக்கு முன்னர் வேண்டுமானால், அடுத்தவர் சொல்லித் தெரிந்து கொள்ளவேண்டிய நிலை இருந்திருக்கலாம்.
  1. இப்பொழுது பெண்கள் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள், ஆண்களுக்கு நிகராக, ஏன், மேலும் சிறந்துள்ளார்கள் என்பது தெரிந்த விசயமாகிஅ உள்ளது. ஆகவே, இன்னும், பழமையைச் சொல்லி மிரட்டினால், யாருன் கண்டுகொள்ளப் போவதில்லை.
  1. எல்லாவற்றையும் விட குறிப்பாக, ஜாதிகளை ஒழிப்போம் என்று சொன்ன, சொல்கின்ற எவனும் ஜாதியை ஒழிப்பதாக இல்லை, மாறாக, ஜாதிகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்கிறான், பிழைத்துக் கொண்டிருக்கிறான்.
  1. எல்லோரும், எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைத் தடுப்பதே இவர்கள் தாம். குண்டுசட்டியில் குதிரையை ஓட்டிக் கொண்டிருப்பதால், அதையும் மீறி தெரிந்து கொள்ள விடுவதில்லை.

© வேதபிரகாஷ்

29-07-2020

Propaganda that Gita as a book of violene-English

[1] மாலைமலர், பகவத் கீதையை புனித நூலாக சைவர்கள் ஏற்கமாட்டார்கள்: கி.வீரமணி பேட்டி, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 21, 5:01 PM IST.

[2] http://www.maalaimalar.com/2014/12/21170111/Vegetarians-will-accept-the-Bh.html

[3] வினவு, பகவத் கீதையை தடை செய் !, By – சம்புகன்-வினவு, December 9, 2014.

[4] https://www.vinavu.com/2014/12/09/sushma-swaraj-wants-bhagavad-gita-to-be-national-scripture/

Krishna killing a Demon and trying to attack Bhisma

பகவத் கீதை, கிருஷ்ண தூஷணம், திரிபு விளக்கம், இந்துவிரோதக் கூட்டங்களின் தொடரும் சட்டமீறல்கள் – நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்! [2]

ஜூலை 29, 2020

பகவத் கீதை, கிருஷ்ண தூஷணம், திரிபு விளக்கம், இந்துவிரோதக் கூட்டங்களின் தொடரும் சட்டமீறல்கள்நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்! [2]

DK arheist discourse on Bhagawat Gita.his book

  1. இந்நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை (Secularism) கொள்கைக்கு முற்றிலும் முரணானது இது. இந்து மத நூலை இப்படி விருப்பப் பாடம் என்ற போர்வையோடு பல்கலைக் கழகத்தில் வைத்தால், மற்ற மதவாதிகளான இசுலாமியரின் ‘‘குரான்”, கிறித்துவர்களின் ‘‘பைபிள்”, சீக்கியர்களின் ‘‘கிரந்தம்”, பவுத்தர்களின் ‘‘தம்மபதம்”, ஜொராஷ்டர்களின் ‘‘அவெஸ்தா”, பகுத்தறிவாளர்களின் ‘‘கீதையின் மறுபக்கம்” நூல் – இவைகளை அதேபோல் விருப்பப் பாடமாக வைக்க வேண்டும் என்ற குரல் எழுந்தால், அதை ஏற்று துணைவேந்தரோ – அவரது ‘அகாடமிக் கவுன்சில்’ என்ற அமைப்பு தலையாட்டுமா?
  1. கீதை வன்முறையைத் தூண்டும் ஒரு கொலைகார நூல்!: முன்னாள் நீதிபதி எழுதிய ‘மகாத்மாவின் கொலை’ நூல். ‘தேசப்பிதா’ என்று அழைக்கப்படும் அண்ணல் காந்தியாரை சுட்டுக்கொன்ற – தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.சிடம் பயிற்சி பெற்ற நாதுராம் விநாயக் கோட்சே, நீதி மன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்திலேயே, தான் இந்த கொலை முடிவுக்கு வருவதற்குப் பெரிதும் துணை நின்று தூண்டிய நூல் ‘பகவத் கீதை’ என்று கூறியுள்ள நிலையில், ‘The Murder of the Mahatma’ – ‘மகாத்மாவின் கொலை’ என்ற தலைப்பில் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.டி.கோஸ்லா 1963 இல் எழுதிய நூலில், 1977 வரை மூன்று பதிப்புகள் வெளியாகி – விற்பனையாகி – இக்கருத்தை அவர் பதிவு செய்துள்ளார்! எவரே மறுப்பர்? பகவத் கீதை வன்முறையைத் தூண்டும் நூல்! கீதை கொலை நூல்தான் என்று சுவாமி சித்பவானந்தா எழுதிய விளக்கவு ரையிலேயே குறிப்பிட்டுள்ளார்! ‘‘இந்து சாஸ்திரங்களில் சொல்லப் பட்டபடி நடந்துகொள்வதுதான் நல்ல மனிதன் ஒருவருடைய கடமை – தர்மம் ஆகும்” என்பதே கோட்சே வாக்குமூலம். (அவர் கைப்பட எழுதியது ‘May it Please Your Honour’ என்ற தலைப்பில் ஒரு நூலாகவும் (ஆங்கிலத்தில்) அது வெளி வந்துள்ளது). ‘‘…தாயகத்தைக் காப்பாற்ற உயிரைக் கொடுத்தும் போராடவேண்டும் என்று ஹிந்துக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பகவத் கீதையிலிருந்து சில சுலோ கங்களைச் சொல்லி உணர்ச்சிகரமாகத் தனது வாக்குமூல உரையை முடித்தார்….” – இப்படி நீதிபதி ஜி.டி.கோஸ்லா அந்த நூலில் குறிப்பிடுகிறார்!

DK Veeramani discourse on Bhagawat Gita-28-07-2020-1

‘‘கடமையைச் செய்; பலனை எதிர் பார்க்காதே: ‘‘கடமையைச் செய்; பலனை எதிர் பார்க்காதே” என்பதில் கடமை என்பது ஜாதி – வருணத்தைக் காப்பாற்றும் கடமையைச் செய்யவேண்டும் என்று வன்முறையைத் தூண்டும் ஒரு நூல் பகவத் கீதை ஆகும். இப்படிப்பட்ட நூலில் இருப்பதாகத் தவறான மேற்கோள்களைக் காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர். குறளை விருப்பப் பாடமாக வைக்கட்டும்! திருக்குறள் போன்ற உலகப் பொது ஒழுக்க நூல் – ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாட்டில்’ அவரது குறளை விருப்பப் பாடமாக வைக்க வேண்டாமா? அண்ணா பல்கலைக் கழகத்தில் அண் ணாவின் அரிய சிந்தனைக் கருவூலங்களை வைக்கவேண்டாமா? அவர் பெயரால் அமைந்த பல்கலைக் கழகம் அல்லவா அது? தமிழ்நாடு முழுவதும் அறப்போர் கிளர்ச்சி உறுதி! இன்னும் ஒரு மாதத்திற்குள் இதைப் பின்வாங்கி மாற்றாவிடில், தமிழ்நாடு முழுவதும் அறப்போர்க் கிளர்ச்சி தொடர் போராட்டமாக, அண்ணா பல்கலைக் கழகம் முன் தொடங்கி, தொடருவது உறுதி! உறுதி!! பெரியார் மண்ணில் இப்படி உணர்ச் சிபூர்வ நெருப்புடன் நெருங்கும் முயற்சி யில் இப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஈடுபடக் கூடாது. ஒன்றுபட்டு கண்டனக் குரல் எழட்டும்! தமிழக அரசும், முதலமைச்சரும் – மதச்சார்பின்மைக்கு எதிரான இதனை அகற்றிட முழு முயற்சியில் உடனடியாக ஈடுபடவேண்டும்! ஒத்த கருத்துள்ள அனைவரும், அனைத்துக் கட்சித் தலைவர்களும், கல்வி யாளர்களும் ஒன்றுபட்டு கண்டனக்குரல் எழுப்பிட முன்வரவேண்டும்.

DK Veeramani discourse on Bhagawat Gita-28-07-2020-2

2017லும் இதே கருத்தை வெளியிட்டது[1]: சதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம் என்று கடவுள் அவதாரமான கண்ணன் கூறுகிறான் என்று எழுதி, ஜாதியைப் பாதுகாக்கிறது. கொலையை நியாயப்படுத்தும் நூல் இந்நூல் – காந்தியாரைக் கொன்ற கோட்சே, நான் கீதையைப் படித்தபிறகே இந்த முடிவுக்கு வந்தேன் என்று நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் தந்துள்ளான். இந்த வன்முறையைத் தூண்டும் நூலை- மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் புகுத்தினால் அது நஞ்சைப் புகுத்துவது அல்லவா? இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும். பகவத் கீதையை தேசிய நூலாக்க அரசு பிரகடனப்படுத்த வேண்டும் என்று முன்பு குரல் எழுப்பியவுடன் எதிர்ப்பு – கண்டனம் புயல்போல் கிளம்பியதால் அது பின்வாங்கப்பட்டது.மீண்டும் ஆழம் பார்க்கவே இம்முயற்சி; எல்லோரும் ஒன்று திரண்டு இம்முயற்சியை முறியடிக்க வேண்டும்” என்று வீரமணி தெரிவித்துள்ளார்[2].

DK Veeramani discourse on Bhagawat Gita-28-07-2020-3

கிருஷ்ணன் என்ன உனக்கு மட்டும்தானா தெரியும்? உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்!: வீரமணியை கடந்த ஆண்டுகளில் அதிகம் பாதித்துள்ளது ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா தான்! 2013ல் இப்படி பிதற்றியுள்ளார்[3], ஒரு கூட்டத்தில் பேசியது இப்படியுள்ளது, “உங்களுக்கு என்ன தெரியும்? உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்! ஆக, எங்கள் கிருஷ்ணனைப்பற்றி பேசிவிட்டார்களா என்று நீங்கள் கேட்கிறீர்கள். கிருஷ்ணன் என்ன உனக்கு மட்டும்தானா தெரியும்? உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்! ஏனென்றால், நீ கிருஷ்ணன் என்று சொல்கின்ற கடவுளைப்பற்றி, உன் மூக்கை சொறிந்து, திசை திருப்பிவிட்டிருக்கிறார்கள் யாரோ!” பாவம், அந்த அளவுக்கு குற்றம் கண்டுபிடிக்க கீதை பற்றி ஆராய்ச்சியே செய்துள்ளார் போலும். திமிருடன், இவ்வாறு ஒருமையில் பேசியிருப்பதை கவனிக்க வேண்டும். மனத்தில் எந்த அளவுக்கு வன்மம் இருந்தால் ஒழிய, இவ்வாறு பேச்சு வந்திருக்காது. பிறகு, இத்தகைய ஆட்களிடமிருந்து எதை எதிர்பார்க்க முடியும்?

DK Veeramani discourse on Bhagawat Gita-28-07-2020-4
கோர்ட்டில் கிருஷ்ணனையும் கூப்பிட முடியும்; கிருஷ்ணதாசர்களையும் கூப்பிட முடியும்: வீரமணி பொறிந்து தள்ளினார், “இன்னும் சில பேர் வழக்கு போடுவோம் என்று சொல் கிறார்கள். போடுங்கள்! உங்கள் வழக்கைத்தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்போதுதான், கோர்ட்டில் கிருஷ்ணனையும் கூப்பிட முடியும்; கிருஷ்ணதாசர்களையும் கூப்பிட முடியும். உன்னாலே வர முடியுமானால், வழக்கு போடுங்கள்!ஆதாரபூர்வமாக தாக்கல் செய்கிறோம்! கோர்ட்டில், நாங்கள் ஆதாரபூர்வமாக, கிருஷ்ணன் செய்த லீலைகளைப் படமாகப் போட்டு, குளத்தில் பெண்கள் எல்லாம் பாதி நிர்வாணமாக நிற்கிறார்கள்; சேலைகளைத் தூக்கிக்கொண்டு மரத்தின்மீது கிருஷ்ணன் இருக்கிறார் பாருங்கள் அந்தப் படத்தினை, நீதிபதி அவர்களே இதனை ஆதாரபூர்வமாக தாக்கல் செய்கிறோம் என்று சொன்னால், என்ன ஆவார் கிருஷ்ணன், அதனை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்”. எப்படி முகலாய போலித்தன சரித்திரவியல், கட்டுக்கதை உருவாக்கம், சித்திரங்கள் வரந்த விதம், இவர்களைப் போன்ற நாத்திகர்களால் உபயோகப்படுத்தப் படுகிறது என்பதனையும் கவனிக்க வேண்டும்.

DK Veeramani discourse on Bhagawat Gita-28-07-2020-5
ஒரு லட்சம் பிரதிக்குமேல் விற்பனையாகிய கீதையின் மறுபக்கம்: தன்னுடைய புத்தகத்தைப் பற்றி பீழ்த்திக் கொள்கிறார், “கீதையின் மறுபக்கம்! இதோ என் கைகளில் இருப்பது கீதையின் மறுபக்கம் நூல்! கிருஷ்ணன் உபதேசம் செய்தாராம்யாருக்கு, அர்ஜுனனுக்கு! அதுதான் கீதை! எதிர் எதிரே படைகள் இருக்கு. அந்தப் படையில் அர்ஜுனன் சண்டை போட போகிறாராம். அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக கிருஷ்ணன் போறாராம். அப்போது காதோடு காதாக கீதா உபதேசம் செய்றாராம். எங்கே? எதிரிப் படைகள் நிற்கின்ற இடத்தில் – 700 சுலோகம் முடியும் வரை எதிரிப் படைகள் அமைதியாக நிற்கின்றதாம். கீதையின் மறுபக்கம் நூல் இருக்கிறதே, ஒரு லட்சம் பிரதிக்குமேல் விற்பனையாகி இருக்கிறது. அதுமட்டுமல்ல, ஆங்கிலத்திலே, இந்தியிலே, எல்லா மொழிகளிலும் அச்சாகி இருக்கிறது. இதற்கு ஒரு வரி மறுப்பு கிடையாது”.  முதலில் வாங்கிப் படித்தார்களா, இல்லை, கண்டுகொள்ளவில்லையா என்பது தெரியவில்லை. ஏனெனில், ஏற்கெனவே தெரிந்த பொய்களை, திரட்டி புத்தகம் போட்டால், யாரும் படிக்க மாட்டார்கள், அதன், தரம் தெரிந்தவர், ஒதுக்கத்தான் செய்வார்கள். பிறகு, அதனைப் பற்றி தம்படாம் அடித்துக் கொள்வதில் என்ன பலனும் இல்லை.

© வேதபிரகாஷ்

29-07-2020

DK Veeramani discourse on Bhagawat Gita-28-07-2020-6

[1] தினபூமி, பகவத் கீதையை பள்ளிகளில் கட்டாயமாக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும்: வீரமணி, செவ்வாய்க்கிழமை, 23 மே 2017.

[2] http://www.thinaboomi.com/2017/05/23/72353.html?page=5

[3] வீரமணி, உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்!, விடுதலை, 03-10-2013.

DK Veeramani discourse on Bhagawat Gita-28-07-2020-8

பகவத் கீதை, கிருஷ்ண தூஷணம், திரிபு விளக்கம், இந்துவிரோதக் கூட்டங்களின் தொடரும் சட்டமீறல்கள்! [1]

ஜூலை 29, 2020

பகவத் கீதை, கிருஷ்ண தூஷணம், திரிபு விளக்கம், இந்துவிரோதக் கூட்டங்களின் தொடரும் சட்டமீறல்கள்! [1]

EVR and RSS

இந்துவிரோதிகளும், இந்துத்துவவாதிகளும்: ஜூலை 11, 2020ல் வீரமணி மறுபடியும் அதே தூஷணத்தை செய்திருப்பதால், இதனை விளக்கமாக எழுத வேண்டிய அவசியம் உண்டாகி உள்ளது.  “இந்துத்துவம்” பேசிக் கொண்டு, தம்மை “இந்துவவாதிகள்,” என்று சொல்லிக் கொண்டு, இந்துமதத்தினையே தாங்கள் தான் காத்து வருகின்றது போலக் காட்டிக் கொண்டாலும், திடீரென்று, “பெரியார் கொள்கை தான் எங்கள் கொள்கை,” என்றெல்லாம் பேசியிருப்பது திகைப்படையச் செய்கிறது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதரவில்லாமல், அரசு-அதிகாரம் பெறமுடியாது என்றதால், இவ்வாறு சமரசம் செய்து கொள்கின்றனரோ என்ற சந்தேகமும் எழுகிறது. இந்து, இந்து நலன், இந்து பாதுபாப்பு முதலியவை, குறுகிய “அரசியல்,” அரசியல் கூட்டணி, அரசியல் ஆதாயம் போன்றவற்றில் சிக்க வைத்து, குறுக்கி விட முடியாது. அதனால் தான், மற்றுக் கருத்து கொண்டவர்கள், விவரங்களை எடுத்துக் கொண்டு, அரைகுறையாக புரிந்து கொண்டு, தூஷித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Bhagawat Gita, tilakk, Sedition
பகவத் கீதை எதிர்ப்புஆந்நியர் ஆட்சி முதல் திராவிட ஆட்சி வரை: பகவத் கீதையினை இந்துக்கள் ஆதரிப்பது அறிந்து, அதனை தூஷித்து புத்தகத்தை எழுதுவது, பேசுவது, தூஷிப்பது புதியதல்ல. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே, பகவத் கீதையை எதிர்த்து பிரச்சாரம் நடந்தது. சுமார் 150 ஆண்டு காலமாக இது நடந்து வருகிறது. தேசதுரோக அறிக்கை கமிட்டி, “பகவத் கீதை வன்முறையைத் தூண்டுகிறது,” அதனால், அதனை தடை செய்யவும் முற்பட்டது[1]. இந்திய புத்தகங்கள் ஸ்காட்லான்ட் யார்டுக்கு அனுப்பப் பட்டு புலன் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டது[2]. 1896ல் பிளேக்கினால் கோடிக் கணக்கான மக்கள் இறந்த போது, ஆங்கிலேயர் உகந்த நடவடிக்கை எடுக்காததால், திலகர் “கேசரி”யில் அவர்களைத் தாக்கி எழுதினார். 1659ல் சிவாஜி எப்படி ஒரு முகலாய தலபதியைக் கொன்றார் என்று குறிப்பிட்டார். பிறகு, ஆர்பாட்டக் காரர்கள், ஒரு ஆங்கிலேய அதிகாரியைக் கொன்றனர். அதனால், திலகருக்கு ஆறுவருடம் தீவாந்திர தண்டனை கொடுக்கப் பட்டது. இதனால், ஆங்கிலேயர் அவருக்கு திலகருக்கும், காந்திக்கும் இடையிலேயே கீதை ஆதரிப்பு-எதிர்ப்பு விவாதம் நடந்தது. காந்தி உண்மையில் கீதையை ஆதரிப்பது போல காட்டிக் கொண்டு, எதிர்க்கவே செய்தார்.  திலகர் வழக்கை வைத்துப் பார்த்தால், இப்பொழுது, வன்முறையினைத் தூண்டுபவர்கள், இந்துவிரோத திரவிடத்துவ, பெரியாரிஸ, கம்யூனிஸ, துலுக்கக் கூட்டங்கள் தான். அவ்வப்பொழுது, பெயரை மாற்றிக் கொள்கின்றன, ஆனால், வேலை செய்வது, ஊக்குவிப்பது அவர்கள் தான்.

Tilak argued his sedition case 1918

சமீபத்தைய எதிர்ப்புகள்: இந்திய வரலாற்றுப் பேரவை போன்ற கம்யூனிஸ-துலுக்க ஆதரவு அமைப்புகள் அத்தகைய ஆய்வுக் கட்டுரைகளை ஊக்குவித்தன[3]. அவ்வப்போது, ஆங்கிலத்தில், செய்திகள் வந்து கொண்டிருக்கும். சிலர், அரைகுறையாக திரித்து விளக்கம் கொடுப்பர்[4]. அவையெல்லாம் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கும், இன்றும் வந்து கொண்டிருக்கின்றன[5]. போதாகுறைக்கு, பகவத் கீதை, பௌத்தத்திலிருந்து காபியடித்து எழுதப் பட்டது என்றெல்லாம் சில ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். 2012ல் ரஷ்யாவில் தடை செய்யப் பட வேண்டும் என்று வழக்கு தொடரப் பட்டது, ஆனால், நீதிமன்றம் தள்ளுபடி செய்தது[6]. சென்ற வருடம் அண்ணா பல்கலைக் கழகத்தில், சேர்க்கப் பட்டது என்றபோதும், பிரச்சினையைக் கிளப்பினர்[7]. உண்மையில், பிளாடோ போன்றவர்களின் தத்துவத்துடன், இந்திய தத்துவத்தையும் படிக்க ஏற்பாடு செய்தபோது, எதிர்ப்புத் தெரிவித்தனர்[8]. எப்படி சைவ-வைணவ சர்ச்சை, சண்டை, எதிர்ப்புகள் இலக்கியங்களாக வெளிப்பட்டபோது, அவை மற்றவர்களால் சாதகமாக உபயோகித்துக் கொண்டார்களோ, அதேபோல இந்த விவரங்களை வைத்துக் கொண்டு, தன்னுடைய காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் முதலியவற்றைச் சேர்த்து இப்புத்தகத்தை வீரமணி எழுதித் தள்ளினார். இந்துஎதிர்ப்பு ஒன்றையே பிரதானமாக வைத்துக் கொண்டு, வீரமணி கூட்டம் திரும்பத் திரும்ப இந்த பிரச்சாரத்தை செய்து வருகின்றது. மேலே குறிப்பிட்ட இந்துவிரோத குப்பைகளை அள்ளிக் கொண்டு, இங்கு குப்பைக் கொட்ட முயல்கிறது இந்துவிரோதக் கூட்டம்.

Bhagawat Gita, tilakk, Sedition.s.24A1

ஜூலை 2020 – நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா காணொலியில் வீரமணி பேசியது[9]: “பகவத் கீதை ஏன், எதற்காக?” என்ற சிறிய நூலை வாங்கி நீங்கள் மேலும் விரிவாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி காணொலி மூலம் உரையாற்றியது[10], “இது உங்களையெல்லாம், நம்மையெல்லாம் குழப்புகிறது என்று மட்டும் நினைக்காதீர்கள். அர்ஜுனனையே குழப்புகிறது. கீதையிலேயே அதைச் சொல்லியிருக்கின்றான். கீதையினுடைய அத்தியாயம் மூன்றுசுலோகம் இரண்டிலே அர்ஜுனன் சொல்லுகிறான்:

ஜனார்த்தனா! (ஜனார்த்தனன் என்றால் கிருஷ்ணன்) என் னைக் குழப்பாதே!” கெஞ்சுகிறான் உனது பேச்சுக்கள் அனைத்தும் குழப்பமாய் இருக்கின்றன. குழப்பம் உண்டாவதால் எனது மதி மயங்குகிறதுமதிமயங்காமல் வேறு என்ன செய்யும்?…….”ஏதாவது ஒன்றைச் சொல்லி இதுதான் உயர்ந்தது என்று சொல். நான் அதைப் பின்பற்றுகிறேன். இல்லாவிட்டால் ஆளைவிடு. என்னைப் போட்டு குழப்பு குழப்பு என்று குழப்புகிறாயே!

உலகம் முழுவதும் எத்தனையோ தத்துவ ஞானிகள் படித்து பொருள் கொடுத்துள்ளாற்கள். ஆனால், இத ஆளுக்கு மட்டும் இப்படி தோன்றுகிறது: விசயம் தெரிந்தவர்கள் இதனைப் படித்தால், இந்த ஆளுக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதை நன்றாகவே தெரிந்து கொள்வார்கள். அது தான் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் டான், இந்த ஆளை யாரும் பொருட்படுத்துவது இல்லை. அதனாலேயே, தொடர்ந்து இப்படி குப்பைகளைக் கொட்டி வருவதும் விசித்திரமான விசயமே!

 …….ஒரு சுலோகத்தினைச் சொல்லி முடிக்க 5 நிமிடம் வேண்டும். 700 சுலோகங்களையும் சொல்லி முடிக்க 5 நாட்கள் வேண்டும்……..பயனை எதிர்பார்க்காமல் எவன் கடமையைச் செய்வான்? நாங்கள் வெட்டியாட்களாகவா வந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். பேசினால் அதனைக் கேட்பவர்களுக்குக் கொஞ்சமாவது புத்தி வருமே என்பதற்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர, நீ உழைத்துக் கொண்டே இரு, பலனை எதிர்பார்க்காதே, நான் கொடுப்பதை வாங்கிக் கொள். நீயாகக் கேட்காதே, கடமையைச் செய் என்கிற அறிவுரையை எல்லோரும் சொல்லுகிறார்கள். இதை எப்படிச் சொல்லுகிறார்கள் என்று புரியவில்லை?,” என்று பல உளறல்கள் உள்ளன. இங்கு முக்கியமானவை மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

K.Veeramanis anti-Hindu tirade, Viduthalai, 27-07-2020
2019ல் வெளியிட்டக் கருத்து: 2019ல் பேசிய / எழுதிய சமாசாரங்களும் ஒன்றும் புதியவை அல்ல. கடந்த 100-150 ஆண்டுகளாக, வெளிநாட்டவர் எழுதி வந்துள்ளதை தொகுத்தவை தான். “இதற்கான நியாயமான காரணங்கள் இதோ”, என்று வீரமணி சொல்வது[11]:

  1. கீதை ஒரு இந்து மத நூல் மட்டுமல்ல, ஜாதியை ஆதரித்து நியாயப்படுத்தும் நூல்.

“சதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம், குண – கர்ம விபாகச

தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்த்யா கர்த்தாரர மவ்யயம்”

(அத்தியாயம் 4, சுலோகம் 13)

அதாவது, ‘‘நாலு வருணங்களையும் நானே படைத்தேன். நானே அதனைப் படைத்தவனாக இருந்தாலும் அதனை மாற்றிட அல்லது திருத்தி அமைத்திட என்னால் முடியாது” என்று கூறும் நூல்.

  1. சூத்திரர்களும், பெண்களும்பாவயோனியில் பிறந்தவர்கள் என்று அவர்களைக் கேவலப்படுத்தும் நூல்.

“மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யேஸ்பி ஸ்யு, பா – யோன்ய

ஸத்ரியோ வைச்யாஸ் – ததா சூத்ராஸ் – தேஸ் பியாந்தி பராங்கதிம்”

(அத்தியாயம் 9, சுலோகம் 32)

அதாவது, ‘‘பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள். அதனால் அவர்கள் கீழானவர்கள். “பிராமணன், சத்திரியன், வைசியன் ஆகிய மூன்று வர்ணத்தாருக்கும் தொண்டூழியம் செய்வது ஒன்றே சூத்திரர்களின் இயல்பான கடமையாகும்” என்றும் கூறும் நூல் பகவத் கீதை. மகளிரும் படிக்கும் ஒரு பல்கலைக் கழகத்தில் இப்படி இழிவுபடுத்தும் நூல் இடம்பெறலாமா?

© வேதபிரகாஷ்

29-07-2020

Tilak, Gandhi and Gita

[1] Sedition Committee Report, 1918 found that Bhagawat Gita was inspiring extreme nationalist freedom fighters were resorting to violence by the teachings of Bhagawat Gita and therefore, it had to be proscribed.

[2] ஆங்கிலேய அரசு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பகவஹ் கீதைப் படித்து, ஊக்கம் கொண்டு தான், ஆங்கிலேய அதிகாரிகளைக் கொன்று வருகின்றனர் என்று நினைத்துக் கொண்டனர். உண்மையில் அவர்கள் தங்களது வாழ்க்கை நிலையில்லாதது, அதனால், உயிரை தேசத்திற்காக அர்ப்பணிக்கலாம் என்பதனைத் திரித்து விளக்கம் கொண்டது.

[3] Ganachari, Aravind. British official view of Bhagawat Gita as text book for the mental trainng of revolutionaryProceedings of the Indian History Congress. Vol. 56. Indian History Congress, 1995, pp.601-610.

[4] Bangalore Mirror, Gita propagates violence: Sreedhar, Prathibha Nandakumar, Updated: Feb 28, 2015, 22:21 IST.

[5] https://bangaloremirror.indiatimes.com/opinion/views/bhagavad-gita-violence/articleshow/46414314.cms

[6] Corley, Felix. “RUSSIA: Has «madness» of banning religious publications been stopped?».” Forum, 2012.

[7] Indian Express, Anna University includes Bhagavad Gita in curriculum, irks academics, Published: 26th September 2019 05:23 AM | Last Updated: 26th September 2019 10:00 AM

[8] https://www.newindianexpress.com/cities/chennai/2019/sep/26/anna-university-includes-bhagavad-gita-in-curriculum-irks-academics-2039110.html

[9] கே. வீரமணி, ‘‘பகவத் கீதை ஏன் எதற்காக,” July 28, 2020 • Viduthalai • கழகம்

[10]https://viduthalai.page/article/%E2%80%98%E2%80%98%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%22/JVUSo8.html

[11]  கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் 26.9.2019, முகாம்: பிலெடெல்ஃபியா (அமெரிக்கா). https://www.facebook.com/asiriyarkv/posts/2489306694438478

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம் (4)!

செப்ரெம்பர் 20, 2015

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம்பெரியார் திடலில் விவாதம் (4)! 

பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம்

பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம்

திருவள்ளுவரை ஹிந்து மதத்தைச் சார்ந்தவர் என்று சாயம்பூசி, அதிகாரப் பூர்வமாக்கி அரசு இயந்திரத்தின் மூலம் பரவச் செய்தால் ஏற்படும் கேடு பன்மடங்காகி விடும்: வீரமணி தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கிறார், “இதில் திருவள்ளுவரின் திருக்குறளில் இல்லாத மோட்சம் – “வீடுஇருப்பதாக தவறாக விளக்கமும் கூறி திரிபுவாதம் செய்யப்பட்டுள்ளது. அத்தகைய கோணத்தில் மத்திய அரசு திருவள்ளுவரை ஹிந்து மதத்தைச் சார்ந்தவர் என்று சாயம்பூசி, தம் இச்சைபோல வளைத்து விடவோ, திருவள்ளுவர் பிறப்புப்பற்றிய தவறானஅருவறுக்கதக்க கதைகளை கூறி, அவற்றை அதிகாரப் பூர்வமாக்கி அரசு இயந்திரத்தின் மூலம் பரவச் செய்தால் ஏற்படும் கேடு பன்மடங்காகி விடும். எனவே, விழிப்புணர்வுடன் வரவேற்க வேண்டிய அறிவிப்பு இது என்று தமிழ் கூறும் நல்லுலகத்தினையும், ஏனையோரையும் எச்சரிக்க வேண்டியது நமது முக்கிய கடமையாகும்”, இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார். அரசு ஆவணங்களில் இந்து என்றுதான் போட்டுக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர், பிறகென்ன, இந்த வெத்துவேட்டு வெங்காயம் / எதிர்ப்பெல்லாம் என்று கருப்புச்சட்டைகள் புரிந்து கொள்ளவேண்டும்[1]. பகுத்தறிவு-சுயமரியாதை திருமணமே இந்து திருமண சட்டத்தில் ஐக்கியமானதும் நினைவு கூரத்தக்கது[2].

பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம்.3

பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம்.3

கிருஷ்ணன் என்ன உனக்கு மட்டும்தானா தெரியும்? உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்ட னையும் எங்களுக்குத் தெரியும்!: வீரமணியை கடந்த ஆண்டுகளில் அதிகம் பாதித்துள்ளது ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா தான்! 2013ல் இப்படி பிதற்றியுள்ளார்[3], ஒரு கூட்டத்தில் பேசியது இப்படியுள்ளது, “உங்களுக்கு என்ன தெரியும்? உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்! ஆக, எங்கள் கிருஷ்ணனைப்பற்றி பேசிவிட்டார்களா என்று நீங்கள் கேட்கிறீர்கள். கிருஷ்ணன் என்ன உனக்கு மட்டும்தானா தெரியும்? உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்! ஏனென்றால், நீ கிருஷ்ணன் என்று சொல்கின்ற கடவுளைப்பற்றி, உன் மூக்கை சொறிந்து, திசை திருப்பிவிட்டிருக்கிறார்கள் யாரோ!” பாவம், அந்த அளவுக்கு குற்றம் கண்டுபிடிக்க கீதை பற்றி ஆராய்ச்சியே செய்துள்ளார் போலும்.

பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம்.2

பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம்.2

கோர்ட்டில் கிருஷ்ணனையும் கூப்பிட முடியும்; கிருஷ்ணதாசர்களையும் கூப்பிட முடியும்: வீரமணி பொறிந்து தள்ளினார், “இன்னும் சில பேர் வழக்கு போடுவோம் என்று சொல் கிறார்கள். போடுங்கள்! உங்கள் வழக்கைத்தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்போதுதான், கோர்ட்டில் கிருஷ்ணனையும் கூப்பிட முடியும்; கிருஷ்ணதாசர்களையும் கூப்பிட முடியும். உன்னாலே வர முடியுமானால், வழக்கு போடுங்கள்!ஆதாரபூர்வமாக தாக்கல் செய்கிறோம்! கோர்ட்டில், நாங்கள் ஆதாரபூர்வமாக, கிருஷ்ணன் செய்த லீலைகளைப் படமாகப் போட்டு, குளத்தில் பெண்கள் எல்லாம் பாதி நிர்வாணமாக நிற்கிறார்கள்; சேலைகளைத் தூக்கிக்கொண்டு மரத்தின்மீது கிருஷ்ணன் இருக்கிறார் பாருங்கள் அந்தப் படத்தினை, நீதிபதி அவர்களே இதனை ஆதாரபூர்வமாக தாக்கல் செய்கிறோம் என்று சொன்னால், என்ன ஆவார் கிருஷ்ணன், அதனை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்”. எப்படி முகலாய போலித்தன சரித்திரவியல், கட்டுக்கதை உருவாக்கம், சித்திரங்கள் வரந்த விதம்[4], இவர்களைப் போன்ற நாத்திகர்களால் உபயோகப்படுத்தப் படுகிறது என்பதனையும் கவனிக்க வேண்டும்[5].

சைவ-வைணவ சிண்டு முடுக்கும் வீரமணி

சைவ-வைணவ சிண்டு முடுக்கும் வீரமணி

ஒரு லட்சம் பிரதிக்குமேல் விற்பனையாகிய கீதையின் மறுபக்கம்: தன்னுடைய புத்தகத்தைப் பற்றி பீழ்த்திக் கொள்கிறார், “கீதையின் மறுபக்கம்! இதோ என் கைகளில் இருப்பது கீதையின் மறுபக்கம் நூல்!கிருஷ்ணன் உபதேசம் செய்தாராம் – யாருக்கு, அர்ஜுனனுக்கு! அதுதான் கீதை!எதிர் எதிரே படைகள் இருக்கு. அந்தப் படையில் அர்ஜுனன் சண்டை போட போகிறாராம். அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக கிருஷ் ணன் போறாராம். அப்போது காதோடு காதாக கீதா உபதேசம் செய்றாராம். எங்கே? எதிரிப் படைகள் நிற்கின்ற இடத்தில் – 700 சுலோகம் முடியும் வரை எதிரிப் படைகள் அமைதியாக நிற்கின்றதாம். கீதையின் மறுபக்கம் நூல் இருக்கிறதே, ஒரு லட்சம் பிரதிக்குமேல் விற்பனையாகி இருக்கிறது. அதுமட்டுமல்ல, ஆங்கிலத்திலே, இந்தியிலே, எல்லா மொழிகளிலும் அச்சாகி இருக்கிறது. இதற்கு ஒரு வரி மறுப்பு கிடையாது”. இக்காலத்தில் புத்தகத்தின் விற்பனையை எப்படி கணக்கில் காட்டுகிறார்கள் என்று நன்றாகவே தெரியும். தமிழக வரலாற்றுப் பேரவையில் திக-புத்தகங்கள் இலவசமாக 300 பேராளர்களுக்குக் கொடுக்கப்பட்டன என்று முன்னர் எடுத்துக் காட்டப்பட்டது. ஆக டஜன் கணக்கில் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் நடத்தும் வீரமணிக்கு ஒரு லட்சம் பிரதிகள் விற்பது என்பது என்ன முடியாத காரியமா? அதற்கு ஒரு வரி மறுப்பு கிடையாது என்பதில்லை, அதாவது லட்சம் பிரதிகள் விற்று யாரிடம் போய் சேர்ந்தன என்று தெரியவில்லை. மேலும், அரைகுறையாக, அரைவேக்காட்டுத்தனமான, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும், இத்தகைய சித்தாந்திகளை மற்றவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு, தங்களது நேரத்தை விரயமாக்க மாட்டார்கள் என்பதனையும் நோக்க வேண்டும்.

சைவ-வைணவ சிண்டு முடிக்கும் வீரமணி. மாமா

சைவ-வைணவ சிண்டு முடிக்கும் வீரமணி. மாமா

பகவத் கீதையை புனித நூலாக சைவர்கள் ஏற்கமாட்டார்கள்: கி.வீரமணி பேட்டி: தஞ்சையில் திராவிட கழகம் சார்பில் இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதற்குக் கண்டனம் தெரிவித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சை வந்த திராவிட கழகதலைவர் கி.வீரமணி நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது[6]: “பகவத் கீதை முழுமையான இந்து நூலாக கருதப்படுவதில்லை. இந்து மதம் என்பது பல பிரிவுகளை கொண்டது. அந்த வகையில் வைணவர்கள் தான் பகவத் கீதையை இந்து மதத்தை சார்ந்தது எனக் கூறுகின்றனர். சைவர்கள் பகவத் கீதையை ஏற்கமாட்டார்கள். அதேபோல மற்ற பிரிவுகளை சார்ந்தவர்களும் இதை ஏற்று கொள்வதில்லை. எனவே இந்து மதத்தை இந்நூல் முழுமையாக உரிமை கொண்டாட முடியாது. ஆனால் மத்திய அரசு தேசிய புனித நூலாக பகவத் கீதையை திணிக்க முயற்சிக்கிறது. இந்தியை எப்படி அதிகாரம் படைத்த மொழியாக திணிக்கின்றனரோ அதேபோல சமஸ்கிருதத்தையும் திணிக்க ஆசைப்படுகின்றனர். அது போல இதையும் நிறைவேற்ற முயற்சி செய்கின்றனர். நம் நாட்டில் பல கலாசாரங்கள், பல்வேறு மதங்கள் பல மொழிகள் இருக்கின்றன. இந்த நாட்டின் என் மதம் மட்டும்தான் ஆள வேண்டும் எனச் சொல்லக் கூடிய பாசிச முறையிலான இந்த செயல்பாட்டை இந்தியாவே எதிர்க்கிறது”, இவ்வாறு அவர் கூறினார்[7]. பேட்டியின்போது தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் எல்.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ரா. திருஞானம், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர். ஆகா, சைவர்கள் மீதுதான், வீரமணிக்கு எத்தனை பற்றுதல்! சிண்டு முடித்து விடுகிறார்கள். சோழன் குடுமி சும்மா ஆடாது என்றெல்லாம் இவர்கள் கிண்டல் செய்வார்களே, இப்பொழுது வீரமணி அதே வேலையைத்தான் செய்துள்ளார்.

© வேதபிரகாஷ்

20-09-2015

[1] திராவிடத்துவவாதிகளின் இரட்டைவேடங்கள் இனிமேலும் எடுபடாது. குடும்ப வாழ்க்கை-மேடை வாழ்க்கை என்று போலித்தனமாக வாழும் இவர்கள் இனி மற்றவர்களால் ஒதுக்கப்படுவார்கள். இருக்கும் கூட்டம் இன்னும் 50-100 ஆண்டுகள் வரை கத்திக் கொண்டிருக்கும்.

[2] 1969ல் அண்ணாதுரை தலைமையில் ஆட்சிக்கு வந்ததும், முதலில் அத்திருமணபங்களை செல்லுபடியாக்கசுயமரியாதை திருமணம் சட்ட வடிவம் (28.11.1967) மசோதாவை அறிமுகப்படுத்தினர். “சுயமரியாதை திருமணம்” கிளப்பிய அவலத்தை இந்து திருமண சட்டத்தில் (The Hindu Marriage Act, 1956) பிரிவு 7A என்றதை நுழைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்[1]. அதாவது, அப்படி தடாலடியாக செய்து வைத்த திருமணங்கள் எல்லாம் செல்லாது, ……….என்றெல்லாம் நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வந்தபோது அதிர்ந்து விட்டனர் பகுத்தறிவி ஜீவிகள்! அதாவது இந்து திருமண சட்டத்தில் தான்[2] அந்த “சுய மரியாதை” அடங்கிவிடுகிறது! அனால், இன்றும், இப்படி பொய்களை பேசியே வாழ்க்கையை நடத்துகின்றனர். இந்துமதத்தை ஆபாசமாக வர்ணித்த பகுத்தறிவு பகலவன் பாதையில் திருமணம் செய்து கொண்டவர்கள், திராவிடர்கள் “இந்துக்களாகி” தமது மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்.

https://secularsim.wordpress.com/2015/01/17/freedom-of-thought-ones-rights-cannot-violate-the-rights-of-others/

[3]  வீரமணி, உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்!, விடுதலை, 03-10-2013.

[4] https://indianhistoriography.wordpress.com/2015/06/25/pornography-like-works-written-during-mughal-period-involving-even-radha-krishna/

[5] https://indianhistoriography.wordpress.com/2015/06/26/indian-divine-symbols-figures-attacked-by-mohammedan-poets-sufis/

[6] மாலைமலர், பகவத் கீதையை புனித நூலாக சைவர்கள் ஏற்கமாட்டார்கள்: கி.வீரமணி பேட்டி, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 21, 5:01 PM IST.

[7]  http://www.maalaimalar.com/2014/12/21170111/Vegetarians-will-accept-the-Bh.html

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம் (3)!

செப்ரெம்பர் 20, 2015

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம்பெரியார் திடலில் விவாதம் (3)! 

கீதையின் மறுபக்கம் - வீரமணி

கீதையின் மறுபக்கம் – வீரமணி

வீரமணிக்கு கீதை மீது பிறந்த காதல்: வீரமணி போன்ற இந்து-விரோதத்துவம் கொண்ட நாத்திகர்களே இன்று பகவத் கீதையைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்து விட்டனர். போதாகுறைக்கு, பெரியார் பிறந்த நாளைக் கொண்டாடும் நேரத்தில், கோல்வால்கர் பற்றி எல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். சரி, கோல்வால்கருக்கும், திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி கேட்டு விவரிக்க ஆரம்பித்தது தமாஷான விசயம் தான். ஆனால், இதை முன்னமே எடுத்துக் காட்டியுள்ளார். கோல்வால்கர் திருக்குறளை பொதுநூலாக பாவித்தார், ஆனால், திராவிடத்துவவாதிகள் அதனை தமிழர் நூல், திராவிடர்களின் நூல் என்று குறுகிய நோக்கில் சுருக்கினர். குறளைப் படித்து, மற்ற இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சமஸ்கிருத இலக்கியத்துடனான நெருக்கம் தெரிந்தது[1]. இதனால், அதிலுள்ள நீதி, நேர்மை, தார்மீகக் கருத்துகள் வேத-உபநிஷ்ட நூல்களிலிருந்து பெற்றிருக்கலாம் என்று பல அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டினர்[2]. மேலும், குறள், சூத்திரங்கள் போன்று ஈரடி, ஏழு சொற்கள், சுருங்கச் சொல்லுதல் முதலிய விதிகளையும் பின்பற்றியிருப்பதை எடுத்துக் காட்டினர். இதனால், தனித்தமிழ் இயக்க தமிழ் பண்டிதர்கள் அவ்வாறில்லை என்பதனை எடுத்துக் காட்டவே திரிபு விளக்கங்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

குந்த-குந்த ஆச்சாரியாரும், வள்ளுவ நாயனாரும்

குந்த-குந்த ஆச்சாரியாரும், வள்ளுவ நாயனாரும்

திருக்குறள் மறைமுக எதிர்ப்பு தேச-விரோதமானது: இது 1960களில் ஜைனர்கள், கிருத்துவர்கள் போன்றோரை ஊக்குவித்தது. அவர்கள் குறள் தங்களது நூல் தான், வள்ளுவரும் தங்களது மதத்தவர் தான் என்று கதைகளைக் கட்டிவிட ஆரம்பித்தனர்[3]. வள்ளுவர் குந்தர்-குந்தரின் மாணவர் என்றும் அவரிடத்திலிருந்து குறளைத் திருடிச் சென்று தனது என்று அரங்கேற்றி விட்டார், இல்லை அவரே குந்த்-குந்தர் தான்[4] என்று ஜைன ஆராய்ச்சியாளர்கள் கதை கட்டினர். கிறிஸ்தவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இதுதான் சாக்கு என்று, தாமஸ் சென்னைக்கு வந்தார், வள்ளுவரை சந்தித்தார், வள்ளுவர் அவரிடத்திலிருந்து பைபிள் கற்றுக் கொண்டு, அதன் தாக்கத்தில் தான் குறளை எழுதினார் என்று பெரிய கட்ட்டுக் கதையைக் கட்டி விட்டனர். போதாகுறைக்கு அத்தகைய போலித்தனமான கள்ள ஆராய்ச்சிகளுக்கு, அவர்களால் ஏற்படுத்தப் பட்ட பல்கலை பிரிவுகள்-சேர்களால் பட்டங்களும் கொடுக்கப்பட்டன. இதற்கெல்லாம் கருணாநிதி முதல் தமிழ்த்துறையில் உள்ள ஊழியர் வரை உதவி செய்துள்ளார்கள் என்பதனை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

Bhagavatgita, sedition, Tilak

Bhagavatgita, sedition, Tilak

பகவத் கீதை எதிர்ப்பு ஆந்நியர் ஆட்சி முதல் திராவிட ஆட்சி வரை: பகவத் கீதையினை இந்துக்கள் ஆதரிப்பது அறிந்து, அதனை தூஷித்து ஒரு புத்தகத்தை எழுதினார். இதுவொன்றும் புதியதல்ல. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே, பகவத் கீதையை எதிர்த்து பிரச்சாரம் நடந்தது. தேசதுரோக அறிக்கை கமிட்டி அதனை தடை செய்யவும் முற்பட்டது. திலகருக்கும், காந்திக்கும் இடையிலேயே கீதை ஆதரிப்பு-எதிர்ப்பு விவாதம் நடந்தது. காந்தி உண்மையில் கீதையை ஆதரிப்பது போல காட்டிக் கொண்டு, எதிர்க்கவே செய்தார். எப்படி சைவ-வைணவ சர்ச்சை, சண்டை, எதிர்ப்புகள் இலக்கியங்களாக வெளிப்பட்டபோது, அவை மற்றவர்களால் சாதகமாக உபயோகித்துக் கொண்டார்களோ, அதேபோல இந்த விவரங்களை வைத்துக் கொண்டு, தன்னுடைய காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் முதலியவற்றைச் சேர்த்து இப்புத்தகத்தை வீரமணி எழுதித் தள்ளினார். போதாகுறைக்கு இதே மதத்தில் (செப்டம்பர் 2015) தான் திருப்பதியில் 9 முதல் 11 வரை “ஶ்ரீமத் பகவத் கீதை”ப் பற்றி தேசிய மாநாடு நடந்துள்ளது[5].

Balagangadhara Tilak- Gandhi and Gita

Balagangadhara Tilak- Gandhi and Gita

ருண் விஜய்யின் தமிழ்த்தொல்லை, தினமணியின் கொசுத் தொல்லை, வீரமணியின் ஓடோமாஸ் கொள்ளை: ஆகஸ்ட் 2014ல் ஆர்.எஸ்.எஸ் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றது[6]. இந்து-விரோத தளங்கள் இப்படியெல்லாம் புலம்பித் தள்ளின[7], “ருண் விஜய்யின் தமிழ்த்தொல்லையும், தினமணியின் கொசுத் தொல்லையும் நாளுக்குநாள் தாங்க முடியவில்லை. வடமாநிலங்களில் திருக்குறள் பயிற்றுவிப்பு, திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாட்டம், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று வரிசையாக இந்த ஆர்.எஸ்.எஸ். நரி வைக்கும் ஊளையில் காது கிழிகிறது! திருக்குறளைத் தூக்கிக்கொண்டு காவி துடிக்க அலையும் இந்த நரி, மத்தியப் பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் என சமஸ்கிருதத்தை திணித்துக்கொண்டே வரும் ஸ்மிருதி ராணியுடன் சேர்ந்துதிருக்குறள், தமிழுக்கு ஆதரவுபோஸ் கொடுத்தது. அடுத்த சீன், மத்திய உள்துறை ராஜ்நாத்சிங்கை சந்தித்து திருக்குறள் அறிமுகம் செய்து திருவள்ளுவர் சிலையை கைமாத்தியது. உடனே உளவுத் துறையை கையில் வைத்திருக்கும் உள்துறை அமைச்சர் பார்வையாளர் கண்களில் தெரியும்படி தமது அறையில் சிலையை வைக்குமாறு உத்திரவிட்டார். போதாதா? “பா...வின் தமிழ்க்காதல்பாரீர் என! தினமணி மாமா மூணு காலத்துக்கு படுத்துப் புரண்டு, பாரடா! எங்கள் பார்ப்பன சமர்த்தை என்று தொடையைத் தட்டுகிறார். திருவள்ளுவர் படத்துக்கே பூணூல் போட்டு அவர்எங்களவா?’ என்று ஆள்கடத்தல் செய்த தமிழக பார்ப்பனக் கும்பலையும் தாண்டி, திருவள்ளுவர் திரும்ப வரவா போகிறார் என்ற தைரியத்தில் தருண் விஜய் சீன் போடுகிறார்”. தருண் விஜய்க்கு சாபம் கொடுத்தன, வசை பாடின[8]. அவர் தமிழ் மீது காட்டும் காதல் பொய்யானது என்றும் கூறின[9].

tarun-vijay-vairamuthu-11

tarun-vijay-vairamuthu-11

வீரமணியின் கீதை காதலும், தருண் விஜயின் குறள் காதலும்: தருண் விஜய்க்கு திடீரென்று திருக்குறள் பற்று வந்து, அதனை ஆதரித்து, “திருவள்ளுவர் நாள்” என்றெல்லாம் அறிவித்தவுடன், வீரமணி உஷராகி விட்டார். வீரமணியின் கீதை மீதான காதல் அலாதியானது. ஆக, இந்த இரு காதலர்களும் மறைமுகமாகத் தாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர். வீரமணி தருணுக்கு எப்படியாவது செக் வைக்க அரும்பாடு பட்டார். இந்தியா முழுவதும் திருவள்ளுவர் நாள் என்ற மத்திய அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதே என்றும், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். வேரூன்றுவதற்கான கண்ணி வெடியாக இதனைப் பயன்படுத்தக் கூடாது என்றும் கி.வீரமணி கூறியுள்ளார்[10].

tarun-vijay-vairamuthu-21

tarun-vijay-vairamuthu-21

திருவள்ளுவர் நாள் அறிவிப்பு: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். வேரூன்ற பயன்படுத்தக் கூடாது: கி.வீரமணி: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி 29.11.2014 சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் – ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இயக்கப்படி – நடைபெற்று வரும் பா.ஜ.க. அரசின் சார்பில் திருவள்ளுவர் நாள் இந்தியா முழுவதும் மத்திய அரசால் கொண்டாடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இதற்கு வழி வகுக்கும் வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க., எம்.பி.யும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஹிந்தி ஏடான ‘பாஞ்சன்யா’வின் முன்னாள் ஆசிரியருமான தருண்விஜய் மக்களவையில் இப்படிப் பேசி வலியுறுத்தியதனால் அமைச்சர் அறிவிப்பதாகக் கூறியுள்ளார். திடீரென்று அவரே முடிவு செய்து அறிவித்திருக்க இயலாது; ஏற்கெனவே இதுபற்றி ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டிகளின் திட்டமாகத்தான் இது யோசிக்கப்பட்டு பிறகுதான் அறிவித்திருக்க முடியும். இதை வரவேற்கிறோம்; என்றாலும் ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டிலும், தமிழர்கள் மத்தியில் வேரூன்றுவதற்கு இதை ஒரு தந்திர உபாயமாகவோ, “கண்ணி வெடியாகவோ” பயன்படுத்தலாம் என்றோ நினைத்துக் கொண்டு இதை தூண்டில் முயற்சியாக கருதி இறங்கக் கூடாது. நாம் இப்படி சொல்வது ஏனோ என்று சில ‘தமிழறிஞர்கள்’கூட எண்ணக் கூடும். அவர்கள் அறியாத ஒரு தகவலை நாம் இங்கே எழுதி தெரிவிக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.

வீரமணி, ஸ்மிருதி இரானி, தருண் விஜய்

வீரமணி, ஸ்மிருதி இரானி, தருண் விஜய்

கோல்வால்கர் திருக்குறளைப் பற்றி குறிப்பிட்டது: ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் தத்துவ போதகரான கோல்வால்கர் எழுதிய ‘Bunch of Thoughts என்ற ஆங்கில நூல் ‘ஞான கங்கை’ என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. (பக்கம் 168-169). அந்நூலில் – எம் மதத்தையும் சாராத திருவள்ளுவரை – ஒரு ஹிந்துத்வாவாதிபோல் சித்தரித்து எழுதியுள்ளார். அப்பகுதி இதோ: “தற்காலத்தில் தமிழைப்பற்றி நாம் அதிகம் கேள்விப்படுகிறோம். தமிழ் என்பது தனக்கென வேறான கலாசாரமுடைய தனிப்பட்ட மொழி என்று கூறுகின்றனர். அவர்கள் வேதத்தில் நம்பிக்கை கொள்ள மறுக்கின்றனர். திருக்குறளை அவர்களது மறையாகக் கருதுகின்றனர். திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகட்கும் மேற்பட்ட ஒரு பழைமையான அறநூல்தான். திருவள்ளுவ முனிவர் அதன் ஆசிரியர் ஆவார். அவரை நாம் நமது ப்ராதஸ்மரணத்தில் நினைவு கூர்கிறோம். மிகப் புகழ் பெற்ற புரட்சிவாதியான .வே.சு. அய்யர் திருக்குறளை (ஆங்கிலத்தில்) மொழி பெயர்த்துள்ளார்). திருக்குறளில் நாம் காண்பது என்ன? நாடெங்கும் அறிமுகமான நான்குவித வாழ்க்கை முறை (சதுர்வித புருஷார்த்தம்) அதில் விஷயமாகக் கூறப்பட்டுள்ளது. மோட்சத்தைப் பற்றிய அத்தியாயம் மட்டும் முன்னால் வைக்கப்பட்டுள்ளது. அது எந்தக் கடவுளையும் அல்லது எந்த வழிபாட்டு முறையையும் பின்பற்றுமாறு கூறவில்லை. மோட்சம் என்ற உயர்ந்த விஷயத்தைப் பற்றியே கூறுகின்றது. எனவே, அது எந்த ஒரு சாரரின் நூலும் அல்ல. மகாபாரதம்கூட திருக்குறள் கூறுவது போன்ற வாழ்க்கை முறைகளையே புகழ்ந்து கூறுகின்றது. ஹிந்துக்களிடம் அல்லாது மற்ற எந்த மதத்தவரிடமும் இவ்வாறான சிறந்த வாழ்க்கை முறை நோக்கு காணப்படவில்லை. எனவே, திருக்குறள் சிறந்த ஹிந்துக் கருத்துக்களைத் தூய ஹிந்து மொழியில் எடுத்துக் கூறும் ஒரு ஹிந்து நூல் ஆகும்”, என்று கோல்வால்கர் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

20-09-2015

[1] Divine Life Society,Bhagavad Gita & Tirukkural Compendium, Divine Life Society of South Africa, 1989.

[2] M. Muthuraman, Gita and Kural, the University of Michigan, Higginbothams, 1971.

[3] http://jainology.blogspot.in/2007/11/saint-tiruvalluvar-was-jain.html

[4] Jainism is oldest organized religion in world and also it is first organized religion of Dravid culture (refer Archaeology Director in Mahal , Madurai).  Thiruvalluvar( Acharya kund kund) was a Jain saint (Naked) who contributed to Tamil Civilization, Tamil Script and Tamil culture, later who was renamed as Thiruvalluvar- You don’t have to trust our claim( you can verify this fact with Dr. Skandalingam, Director of State Archaelogy, Mahal, Madurai Tamilnadu) your narrow brain will be refreshed with fresh information.

[5] https://kvramakrishnarao.wordpress.com/2015/09/12/the-importance-of-bhagavatgita-in-prasthanatraya-the-national-seminar-held-at-tirupati-from-september-9th-to-11th-2015/

[6] உச்சநீதிமன்ற நீதிபதி  தவே அண்மையில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில்  பள்ளிகளில் முதல் வகுப்பிலேயே பகவத் கீதை மற்றும் மகாபாரதத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என கூறியுள்ள கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். -சின் கலாச்சார அமைப்பின் இயக்குனர் பி. பரமேஸ்வரன், அதனை தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

http://www.vikatan.com/article.php?page=2&module=news&mid=9&sid=0&aid=31029

[7] http://www.vinavu.com/2014/12/05/thirukural-and-tarun-vijay-political-trickery/

[8] http://www.vinavu.com/2014/11/11/vairamuthu-selling-out-to-bjp-tarun-vijay/

[9] புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014;  http://www.vinavu.com/2014/10/29/tarun-vijay-love-of-tamil-is-fake/

[10] http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=133291

நக்கீரன், திருவள்ளுவர் நாள் அறிவிப்பு: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். வேரூன்ற பயன்படுத்தக் கூடாது: கி.வீரமணி, பதிவு செய்த நாள் : 29, நவம்பர் 2014 (17:43 IST) ;மாற்றம் செய்த நாள் :29, நவம்பர் 2014 (17:43 IST).

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம் (1)!

செப்ரெம்பர் 19, 2015

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம்பெரியார் திடலில் விவாதம் (1)

Periyar thidal - 17-09-2015 DK conference

Periyar thidal – 17-09-2015 DK conference

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? அவர் திருக்குறளைப் பற்றி என்ன கூற முடியும்?: விடுதலை, “ஆர்.எஸ்.எஸின் குருநாதர் என்று சொல்லப்படும் கோல்வால்கர் தமது ஞானகங்கை என்ற நூலில் திருக்குறள் பற்றிக் கருத்துக்கள் கூறியுள்ளார் என்று வீரமணி சொன்னபோது அரங்கத்தில் உள்ளோர் அனைவரின் கண்களும் தமிழர் தலைவரையே குத்திட்டு நின்றன. கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? அவர் திருக்குறளைப் பற்றி என்ன கூற முடியும்? என்ற அய்ய வினா அவர்களைத் தொற்றி நின்றது. திருக்குறள் இந்து மதத்தின் வருண தர்மத்தைப் பாதுகாக்கும் நூல் என்று கோல்வால்கர் குறிப்பிட்டதை கழகத் தலைவர் அவர்கள் எடுத்துச் சொன்ன போது மக்கள் மத்தியில் ஓர் ஏளனமான குறிப்புத் தென்பட்டது”, என்று இன்றைய நாளிதழில் வெளியிட்டுள்ளது[1].  ஒரு புத்தகத்தில் உள்ளவற்றை முழுமையாக அல்லது எந்த இடத்தில், எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதனை சொல்லாமல், அங்கங்கு வாக்கியங்களைப் பிய்த்து போட்டு, திரிபுவாதம் செய்வது திராவிடத்துவவாதிகளுக்கு கைவந்த கலையாக இருந்து வருகிறது. இனி தொடர்ந்து வீரமணி என்ன சொன்னார் என்று பார்ப்போம்.

பெரியார், அம்பேத்கர், கோவால்கர்

பெரியார், அம்பேத்கர், கோவால்கர்

பாணினி இலக்கியம் என்பதெல்லாம் திருக்குறளுக்குப் பிறகு பிற்காலத்தில் வந்தது தான்: வீரமணியின் பேச்சு இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது, “கோல்வால்கர் குறளைப் பற்றிச் சொன்னதைச் சொன்ன அடுத்த வரியிலே நூல்கள் எல்லாம் நூல்களை பற்றி எழுதுகின்றன என்று சொன்னபோது அரங்கமே கை தட்டலால் குலுங்கியது என்றே சொல்ல வேண்டும். திருக்குறளை நாம் பரப்புவதைவிட அதனைத் திரிபுவாதத்திற்கு இடம் கொடுக்கச் செய்யாமல் அதனைப் பாது காக்க வேண்டிய இடத்தில் நாமிருக்கிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் சொன்னது மிகவும் முக்கியமானதாகும். இனமானப் பேராசிரியர் தமிழ் இலக்கியங்களில் திருக்குறளை விட மூலமான நூல் வேறு எதுவும் இல்லை பாணினி இலக்கியம் என்பதெல்லாம் திருக்குறளுக்குப் பிறகு பிற்காலத்தில் வந்தது தான்[2]. இலக்கண நூல் என்கிற போது தொல்காப்பியத்துக்கு ஈடாகாது. சமஸ்கிருத இலக்கணங்களுக்கு முந்திய தமிழ் இலக்கணம் காலத்தால் முந்தியது என்று திமுக பொதுச் செயலாளர் குறிப்பிட்டார். கீதையின் மொழி பெயர்ப்பா? திருக்குறள் என்று சொல்லும்போதுஅதனை எதிர்த்துக் குரல் கொடுக்க முடியாத நிலையில் திருக்குறள் கீதையின் மறுபதிப்பு என்பதுபோல பார்ப்பனர் பேச எழுத ஆரம்பித்தனர்”.

Three Kamchi Acharyas

Three Kamchi Acharyas

சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி, தீய திருக்குறளை படிக்கமாட்டோம் என்று பொருள் கூறியுள்ளார்[3]: திருக்குறளைப் பற்றி விளக்குகிறார் வீரமணி, “பகவன் என்ற பார்ப்பனருக்கும் ஆதி என்ற புலைச்சிக்கும் பிறந்தவர் என்றெல்லாம் பார்ப்பனர்கள் உளறினர்[4]. சிறந்த நூல்களை படைப்புகளைச் செய்யக் கூடியவர்கள் பார்ப்பனர்களாகத்தான் இருக்க முடியும் என்ற இறுமாப்பு எப்பொழுதுமே பார்ப்பனர்களுக்குண்டு. மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி குறள் பற்றி என்ன கூறினார்? ஆண்டாள் பாடியதாகக் கூறப்படும் திருப்பாவையில் இடம் பெற்றுள்ள இரண்டாம் பாடல் நாட்காலை நீராடி மையிட்டு எழுதோம். மலரிட்டு நாம் முடியோம்; செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் அய்யமும் பிச்சையும் ஆம்தனையும் காட்டி உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்! என்பது ஆண்டாளின் திருப்பாவைப் பாட்டு; இதில் வரும் தீக்குறளை சென்றோதோம் என்ற வரிக்கு சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன பொருள் கூறினார் தெரியுமா? தீய திருக்குறளை படிக்கமாட்டோம் என்று பொருள் கூறியுள்ளார். ஆனால் அவ்வரிக்கு உண்மையான பொருளோ வேறுவிதமானது; குறளை என்றால் கோள் சொல், குற்றம் என்ற பொருள் ஆகும். (மதுரைத் தமிழ்ப் பேரகராதி) தீக்குறளைச் சென்றோதோம் என்றால் தீமை விளைவிக்கும் கோட் சொற்களைச் சென்று சொல்ல மாட்டோம் என்பதுதான் இதன் பொருள்”.

திருக்குறள்- பகவத் கீதை

திருக்குறள்- பகவத் கீதை

திருக்குறளில் உள்ள அறத்துப் பால் கிட்டத்தட்ட பகவத் கீதையின் தமிழாக்கமேயாகும்: வீரமணி, சங்கராச்சாரியாரை சாடுகிறார்[5], “சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் இவ்வாறு பொருள் கூறியதற்குத் தமிழ் மீதும் அதன் உயரிய நூலான திருக்குறள் மீதும் அவர் கொண்டிருந்த (இவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்) ‘துவேஷத்தைதான் வெளிப்படுத்தும். அவ்வாறு அபாண்டமாக எழுதக் கூடாது என்பது அவாளின் எண்ணமென் றால் அவருக்குத் தமிழ் ஞானம் போதாது என்பதையாவது ஒப்புக் கொள்ள வேண்டும். அந்த சூப்பர் சீனியர் தான் அவ்வாறு குறள்மீது தமக்கே உரித்தான நஞ்சை உமிழ்ந்தார் என்றால் இப்பொழுது காஞ்சி சீனியர் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன சொன்னார் தெரியுமா? “திருக்குறளில் உள்ள அறத்துப் பால் கிட்டத்தட்ட பகவத் கீதையின் தமிழாக்கமேயாகும். வாழ்வின் வழிமுறைகளும், குறிக்கோளும் அதில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.” (தினத்தந்தி 15.4.2004) என்று மதுரையில் பேசினாரே! பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள் எங்கே? சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் (நான்கு வருணத்தையும் நானே படைத்தேன்) என்று கூறும் மனித குல விரோத கிருஷ்ணனின் கீதை எங்கே?

What Golwalkar said about Thirukural

What Golwalkar said about Thirukural

கோல்வால்கர் திருக்குறளைப் பற்றி சொன்னது என்ன?: கோல்வால்கர் சொன்னதை ஆங்கிலத்தில் உள்ளபடி கீழே கொடுக்கப்பட்டுள்ளது[6].

These days we are hearing much about Tamil. Some protagonists of Tamil claim that it is a distinct language altogether with a separate culture of its own. They disclaim faith in the Vedas, saying that Tirukkural is their distinct scripture. Tirukkural is undoubtedly a great scriptural text more than two thousands year old. Saint Tiruvalluvar is its great author. We remember him in our Pratah-smaranm. There is an authentic translation of that book by V.V.S.Iyer, the well-known revolutionary. What is the theme propounded therein, afterall? The same old Hindu concept of chaturvidha-purushartha is put forth as the ideal. Only the chapter on Moksha comes in the beginning. It does not advocate any particular mode of worship or name of God but enuntiates the pure idea of Moksha. Thus it is not even a sectarian book. Mahabharata also eulogises the same picture of social life as Tirukkural presents. Except with the Hindu, this unique vision of social life is not found anywhere else. It is thus purely a Hindu text propounding great Hindu thoughts in a chaste Hindu language.

இதன் தமிழ் மொழிபெயர்ப்பு இவ்வாறு கொடுக்கப்படுகிறது, “இந்த நாட்களில் நாம் தமிழைப் பற்றி அதிகமாக கேள்விப்படுகிறோம். தமிழைத் தூக்கிப் பிடிப்பவர்கள், தமிழ் ஒட்ரு தனி மொழி என்றும், அதற்கென தனியாக நாகரிகம் உள்ளது என்றும் கூறிக்கொள்கிறார்கள். வேதத்தை மறுத்து, திருக்குறள் தான் தங்களது புனித நூல் என்றும் பறைச்சாற்றிக் கொள்கிறார்கள். சந்தேகமில்லாமல் திருக்குறள் ஒரு மகத்தான நூல் தான், அதன் காலம் 2,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக உள்ளது. அதனை எழுதிய திருவள்ளுவர் ஒரு பெரிய கவியாவர். அவரை நாம் நமது “பிராத-ஸ்மரணத்தில்” (விடியற்காலை ஸ்தோத்திரம்) தினமும் நினைவு கொள்கிறோம். வி.வி.எஸ். ஐயர் என்ற புரட்சிப் போராளி மொழிபெயர்த்துள்ள ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நூல் உள்ளது. அதில் எந்த தத்துவம் தான் சொல்லப்பட்டிருக்கிறது? இந்துமத தத்துவமான “சதுர்வித-புருஸார்த்தம்” தான் அதில் உள்ளது. “மோட்சம்” முதலில் வருகிறது. எந்த ஒரு வழிபாட்டையும், கடவுள் பெயரையும் குறிப்பிடாமல் மோட்சத்தைப் பற்றிய விவரத்தை கூறுகிறது. அதனால், அது எந்த பிரிவினரையும் சேர்ந்த நூலாகாது. மகாபாரதத்தில் காணப்படும் சமூக வாழ்க்கை அப்படியே திருக்குறளில் காணப்படுகிறது. இந்துவிடம் தவிர, இத்தகைய சிறப்பான சமூக வாழ்க்கை தத்துவம் வேறேங்கும் காணமுடியாது. இந்து சிந்தனைகளை விளக்கும், பவித்ரமான இந்து மொழியில் உள்ள ஒரு தூய்மையான நூல் ஆகும்”. இத்தகைய விவரங்களை பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி[7], வி.ஆர். ராமச்சந்திர தீட்சிதர் போன்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர். அதனால், கோல்வால்கர் சொல்லிவிட்டார் என்று திராவிடத்துவவாதிகள் இப்பொழுது புலம்ப வேண்டாம்.

© வேதபிரகாஷ்

19-09-2015

[1] விடுதலை, வரலாறு பேசும் வான் புகழ் விழா!, மின்சாரம், வெள்ளி, 18 செப்டம்பர் 2015 16:24

2 இத்தகைய அபத்தமான வாதங்களை வைத்துக் கொண்டு, இன்னும் எத்தனை காலம் தான் தள்ளுவார்கள் என்று தெரியவில்லை.

[3] இதற்கான ஆதாரங்களைக் கொடுக்கவில்லை. அக்னிஹோத்ரம் போன்றவர் அரைகுறையாக எழுதி வைத்ததை வைத்துக் கொண்டு வாதம் புரிந்தால் என்ன பிரயோஜனமும் இல்லை.

[4] அப்படியென்றால், திருவள்ளுவமாலை போன்ற நூற்களை பார்பொபனர்களா எழுதி வைத்தனர்?

[5] http://www.viduthalai.in/e-paper/108862.html

[6] M. S. Golwalkar, Bunch of Thought, Third edition, pp.100-101

http://www.rss.org/Encyc/2015/4/7/334_03_46_30_Bunch_of_Thoughts.pdf

[7] P. S. Subramanya Sastri, A History of Tamil Literature, Annamalai University, Chidambaram.

P. S. Subramanya Sastri, Tolkappiyam, Annamalai University, Chidambaram.