Posts Tagged ‘திராவிட தமிழச்சிகள்’

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக மற்றும் பத்திரிக்கையாளர்களின் வழக்குகளும், அவற்றின் பின்னணியும் – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (3)

மே 15, 2022

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக மற்றும் பத்திரிக்கையாளர்களின் வழக்குகளும், அவற்றின் பின்னணியும் தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (3)

நீதிமன்றமும் அரசையும், சட்டமன்றத்தையும் மதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தின் இவ்வுத்தரவு பற்றி மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜுஜூ கூறியதாவது[1]: “நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகக் கூறியுள்ளோம். மேலும் இவ்விவகாரத்தில் பிரதமரின் நோக்கம் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளோம். நீதிமன்றத்தையும் அதன் சுதந்திரத்தையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால் லட்சுமண ரேகை என ஒன்று உள்ளது. அதனை அரசின் அனைத்து அமைப்புகளும் மதிக்க வேண்டும். நீதிமன்றமும் அரசையும், சட்டமன்றத்தையும் மதிக்க வேண்டும். எங்களிடம் தெளிவான எல்லை நிர்ணயம் உள்ளது. அந்த லட்சுமண ரேகயை யாரும் கடக்கக்கூடாது,” இவ்வாறு கூறினார்[2]. அப்பிரிவு தேவயில்லை என்ற படசத்தில், இன்னொரு சட்டம் உருவாக்கப் படும். ஏனெனில், தேசத்துரோக கருத்துகள், வேலைகள், தீவிரவாதங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பிறகு அவற்றைக் க்ட்டுப் படுத்த, தடுக்க, தீர்க்க்க, தண்டிக்க நீதிமன்றம், அரசு, சட்டமன்றம், நாடாளுமன்றம் என்ன செய்ய முடியும் என்று கவனிக்க வேண்டும்

பிரிட்டிஷ் கால சட்டங்களில் ஒன்று தேச துரோக சட்டம்[3]. இந்த சட்டம் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கவே அதிகம் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது[4]. இதில் மத்திய, மாநில அரசுகள் எதுவும் விதிவிலக்கல்ல என்றும் கூறப்படுகிறது. இச்சட்டத்தை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் உள்ளன. கடந்த திங்களன்று (மே 09) இம்மனுக்கள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு, இச்சட்டம் குறித்து பரிசீலிப்பதாகவும், அதன் முடிவுகள் வரும் வரை இச்சட்டத்திற்கு எதிரான மனுக்களை விசாரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டது. இந்நிலையில் இன்று மீண்டும் அம்மனுவை விசாரித்த கோர்ட், அச்சட்டத்தை நிறுத்தி வைப்பதாக அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ”அரசின் பரிசீலனை முடியும் வரை தேச துரோக சட்டத்தை பயன்படுத்தக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் பிரிவு 124ஏ-வை பயன்படுத்தி வழக்கு பதியாது என நம்புகிறோம். தேச துரோக வழக்கின் கீழ் உள்ள விசாரணைகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஏற்கனவே தேச துரோக வழக்கில் சிறையில் உள்ளவர்கள் ஜாமின் கோரி நீதிமன்றத்தை அணுகலாம்” என நீதிபதிகள் கூறினர்.

இந்தியாவில் தேசத்துரோக சட்டம், முந்தைய வழக்குகள்: பிரிடிஷ்-இந்திய அரசுக்கு எதிராக இருந்தவர்களைத் `தேசத்துரோகிகள்’ என்று அழைக்கப் பட்டனர், அதில், விடுதலை போராளிகளும் அடங்குவர். பகத்சிங் போன்றவர்கள் தேசத்துரோகிகள் எனராங்கிலேயர் அரசு முத்திரைக் குத்தியது. தேசத் துரோக வழக்கில் திலகர் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1922-ம் ஆண்டு மகாத்மா காந்தி, யங் இந்தியா இதழில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக் கட்டுரை எழுதியபோது, காந்தி மீதும் `யங் இந்தியா’ வெளியீட்டாளர் சங்கர்லால் பாங்கர் மீதும் இந்தச் சட்டம் பாய்ந்தது. “இந்தியர்கள் மீது அடக்குமுறையைப் பாய்ச்சுவதற்காகவே இந்தச் சட்டம் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று காந்தி, 124ஏ பிரிவு குறித்து கூறியுள்ளார். ஜவகர்லால் நேரு இச்சட்டப் பிரிவு 124ஏ ஏற்றுக்கொள்ள முடியாத மிகவும் ஆட்சேபனைக்குரிய சட்டம் எனத் தெரிவித்தார். இந்தியர்களை அடக்கி வைக்கவே தேசத்துரோகச் சட்டத்தை பிரிடிஷ்-இந்திய ஆட்சியாளர்கள் திட்டமிட்டு இயற்றினர் என மகாத்மா காந்தி கருத்து தெரிவித்தார். தேசத் துரோக வழக்கில் வ. உ. சிதம்பரம்பிள்ளை 1908 முதல் 1912 முடிய வரை சிறையில் அடைக்கப்பட்டார். 2003-ஆம் ஆண்டில் விசுவ இந்து பரிசத் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். 2010-இல் எழுத்தாளர் அருந்ததி ராய் காஷ்மீர் பிரிவினைவாதம் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் எழுதியதற்கு தேசத் துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்.

பிரிவு 124 க்கு ஆதரவான கருத்துக்கள்: இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 124 ஏ தேசப் பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. வன்முறை மற்றும் சட்டவிரோதமாக அரசை அகற்றுவதற்கான முயற்சிகள் நடந்தால், அவற்றிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இந்தச் சட்டம் பாதுகாக்கிறது. அரசின் நிலையான தன்மை, தேசத்தின் ஒற்றுமைக்கும் பொருளாதாரத்துக்கும் முக்கியமானதாகும். நீதிமன்ற அவமதிப்பு செய்தால், தண்டனை வழங்கப்படுவது போல அரசை அவமதித்தால் தண்டனை கிடைக்கும் என்பதை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது’ என இதன் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். பல மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இவர்கள் அரசைக் கவிழ்க்க முயன்று, பல்வேறு கிளர்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில், காஷ்மீரத்தில் தேசவிரோத குழுக்கள் வெளிப்ப்டையாகவே, ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றன. இவற்றைத் தடுத்து, அரசை நிலைநாட்ட இந்தச் சட்டம் பயன் படுத்தப்படுவதாக இதன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். 03-07-2019  அன்று நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், “எந்தக் காரணத்தைக் கொண்டும் தேசத்துரோக சட்டம் ரத்து செய்யப்படாது, தேச விரோத, பிரிவினைவாத மற்றும் பயங்கரவாதிகளைத் திறம்பட எதிர்த்துப் போராடுவதற்காகவே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.

பிரிவு 124 க்கு எதிர் கருத்துகள்: தேசத்துரோகச் சட்டம், காலனிய ஆதிக்கத்தின் நினைவாக இன்னும் இந்தியாவில் இருந்து கொண்டிருக்கிறது. ஜனநாயக நாட்டுக்கு இதுபோன்ற சட்டங்கள் பொருந்தாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தன் குடிமக்களுக்குத் தந்த பேச்சு சுதந்திரத்தை இந்தச் சட்டம் பறிக்கிறது’ என்று இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். அரசின் கருத்துக்கு எதிராக நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது, விவாதம் நடத்துவது ஜனநாயகத்திற்குத் தேவையான அத்தியாவசியமான விஷயங்கள். ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கும் உரிமை, விமர்சிக்கும் உரிமை மக்களின் அடிப்படைத் தேவை. “தேசத்துரோக வழக்கை வைத்து இந்தியர்கள் மீது அடக்குமுறையை ஏவிய, பிரிட்டன் தன் நாட்டில் தேசத்துரோக சட்டத்தையே ரத்து செய்து விட்டது. இந்தியாவில் இந்தச் சட்டம் இன்னும் பயன்பாட்டில் இருப்பது ஏன்?,” என்கிற கேள்வியும் இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களிடம் எழுகிறது.

கேதார் நாத் சிங் வழக்கும், தீர்ப்பும்: தேசத் துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124(அ) குறித்து தேசிய அளவில் தீவிர விவாதம் எழுந்துள்ளது. மூன்றாண்டுகள் முதல் ஆயுட்காலம் வரையிலும் நீட்டிக்கக்கூடிய சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்க இப்பிரிவு வகைசெய்கிறது. மத்திய அரசின் பார்வையோ நடைமுறையில் இருந்துவரும் இந்தச் சட்டப்பிரிவு மேலும் தொடர வேண்டும் என்பதாகவே இருக்கிறது. இச்சட்டப்பிரிவு செல்லும் என்று 1962-ல் அளிக்கப்பட்ட கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பையே உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பின்பற்ற வேண்டும் என்ற அரசு வழக்கறிஞர்களின் வாதங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பில் தேசத் துரோகச் சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டபோதிலும்கூட, அப்பிரிவு தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான கட்டுப்பாடுகளையும் விதித்தது. வன்முறையைத் தூண்டிவிடவோ அல்லது அதற்கு அழைப்புவிடுக்கவோ செய்யாதபட்சத்தில், அரசின் மீது கூறப்படும் விமர்சனங்கள் தேசத் துரோகம் ஆகாது என்று அத்தீர்ப்பு வரையறுத்தது.

வினோத் துவாவின் விமர்சனம், அரசியல் ரீதியிலான முறையீடு: தற்போது தொடரப்பட்டிருக்கும் வழக்கு இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் வினோத் துவா, பெருந்தொற்றின்போது புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை மத்திய அரசு எதிர்கொண்ட விதத்தை விமர்சனம் செய்து தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட தேச விரோதக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து எழுந்ததாகும்[5]. வினோத் துவா மீதான இக்குற்றச்சாட்டை, இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்கெனவே தள்ளுபடி செய்துவிட்டது. தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்துசெய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்த வினோத் துவா, குறைந்தபட்சம் பத்தாண்டு காலம் ஊடகங்களில் பணிபுரிந்த பத்திரிகையாளர்கள் மீது இக்குற்றச்சாட்டைப் பதிவுசெய்யும் முன்னர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர், எதிர்க்கட்சித் தலைவர், மாநில உள்துறை அமைச்சர் ஆகியோரைக் கொண்ட குழுவிடம் முன்கூட்டி ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று உத்தரவிடுமாறும் கோரியிருந்தார். உள்நோக்கம் கொண்ட இக்கோரிக்கையில், அரசியல் இருப்பது வெளிப்பட்டது. சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்ற நோக்கில் அவர் கோரிய இந்த வேண்டுதலை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை[6].

© வேதபிரகாஷ்

15-05-2022


[1] தினமலர், லட்சுமண ரேகையை கடக்க வேண்டாம்:சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து மத்திய அமைச்சர்,மாற்றம் செய்த நாள்: மே 11,2022 19:06

[2] https://m.dinamalar.com/detail.php?id=3027322

[3] தினகரன், தேச துரோக சட்டம் மறு பரிசீலினை: ஒன்றிய அரசு, 2022-05-09@ 16:05:06.

[4] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=763940

[5] தமிழ்.இந்து, தேசத் துரோகம் என்னும் காலனிய எச்சம்!,, செல்வ புவியரசன், Published : 09 May 2022 06:46 AM; Last Updated : 09 May 2022 06:46 AM

[6] https://www.hindutamil.in/news/opinion/columns/797680-treason-1.html

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும் –  திராவிடஸ்தான் முதல் திராவிடியன் ஸ்டாக் வரை – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (2)

மே 15, 2022

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும்  திராவிடஸ்தான் முதல் திராவிடியன் ஸ்டாக் வரைதேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (2)

திராவிடஸ்தான் முதல் மாநில சுயயாட்சி வரை: 1930-40களில் தனித்தமிழ் இயக்கம், திராவிட இனக் கட்டுக்கதைகளை வளர்த்தன. சைவம் என்ற போர்வையில், வைணவத்தை எதிர்த்து, தெலுங்கு பேசும் மக்களை அவமதித்த போக்கு, நீதிகட்சியைக் குலைத்து, திராவிட கழக போர்வையில், தமிழக பிரிவினை உருவெடுத்தது[1]. திராவிடஸ்தான் என்று ஆரம்பித்து, “அடைந்தால் திராவிட நாடு, இல்லையென்றால் சுடுகாடு” என்று சென்று, பிறகு, எல்லாமே குப்பையில் என்றாகியது. ஆனால், அத்தகைய தேசவிரோத கொள்கையிலிருந்து மற்ற மொழி மக்கள் வேறுபட்டனர். 1940-50 திராவிட இனவெறி கட்டுக் கதைகளினால் தான், முதலில் ஆந்திரா தனியாகப் பிரிந்தது, முதல் மொழிவாரி மாநிலமானது. தொடர்ந்து “தமிழ்” தான் உயர்ந்தது, அதிலுருந்து தான் மற்ற மொழிகள் தோன்றின என்பதனை சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, தெலுங்கு மக்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பட்டிபோர்லு [Bhattiporlu] வரிவடிவங்களை [script] மற்றும் கல்வெட்டுகளை [inscriptions] வைத்துக் கொண்டு, தெலுங்கு வரிவடிவம் BCE மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று வாதிட்டனர்.

1950-70களில் பெரியார்-அண்ணா திராவிட நாட்டை குப்பைத் தொட்டியில் போட்டனர்: பெரியார் ஆதித்தனாருடன் சேர்ந்து “திராவிட நாடு” தேவையில்லை என்றே பேசினார். அண்ணாவைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை, முதலமைச்சர் ஆக வேண்டும், தேதலில் நிற்க்கவேண்டும் என்றால், பிரிவினை பேச முடியாது. அதனால், திராவிடஸ்தானும் போய் விட்டது, திராவிட நாடும் மறந்து விட்டது, “தமிழ் நாடு” என்பதில் திருப்தி பட்டு, சுருங்கி விட்டனர். அப்படியிருந்த நிலையில், இப்பொழுது, ஸ்டாலின் “திராவிடியன் ஸ்டாக்” என்று பேசியதை / பேசுவதை கவனிக்கலாம். யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கின்றனர் போலும். “திராவிடியன் மாடல்” வசனங்கள் வேறு தொடர்கின்றன. அவை, “ஒன்றிய” அரசுக்கு எதிராக இருக்கிறன. கூட கவர்னர் எதிர்ப்பு வேறு. இவையெல்லாம் தேசவிரோதம் ஆகுமா, தேசாபிமானம் ஆகுமா என்று தெரியவில்லை. “மாநில சுயயாட்சி” வாதம், டிவி விவாதங்களில் எதிரொலிக்கின்றன. திமுக-திக-கம்யூனிஸ்ட் வகையறாக்கள் இதில் சளைத்தவர்கள் அல்லர்.

எம்,ஜி.ஆருக்குப் பிறகு பிரிவினைவாடம் குறைந்தது: “தமிழ்நாடு” உருவானபோது கூட, எல்லை தகராறுகளில் கேரளா, ஆந்திரா மற்றும் ஆந்திராவுடன் எதிராகவே இருந்தது. தமிழநாட்டைத் தவிர மற்ற மாநில மக்கள் தாங்கள் “திராவிடர்கள்” என்றெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், திராவிடத்துவ சித்தாந்தம் தமிழ்நாடு மாநிலத்துடன் சுருங்கி விட்டது. 1950-60களில், “இந்தி-எதிர்ப்பை” கையில் எடுத்து உசுப்பி விட்டனர். 1960-70களில் மேடை பேச்சு, சினிமா வைத்டுக் கொண்டு ஆட்சியைப் பிடித்தனர். 1980-70களில் காவிரி பிரச்சினையில், முன்னர் பாமகவினால், அதிகமாகவே வெறியூட்டப் பட்டு, பிறகு திராவிட பிரிவினைவாதிகளால் தீயூட்டப் பட்டது. அப்பொழுது, இங்கு “உடுப்பி” ஹோட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஶ்ரீ ராகவேந்திர மடங்களும் தாக்கப்பட்டன.  1970-80களில் எம்ஜிஆரால் பிரிவினைவாதம் கொஞ்சம் குறைந்தது. “மாநில சுயயாட்சி” போர்வையில், அவ்வப்போது, திராவிடத்துவ சித்தாந்திகள் பேசுவது வழக்கமாக இருக்கிறது.

ஆரியன்திராவிடன்இனவாதம் முதல் திராவிடியன் ஸ்டாக் இனவெறிவாதம் வரை: திராவிட சித்தாந்திகள் தமிழரை, தமிழகத்தை பிரித்து வைத்து, துவேசத்தை வளர்த்து வருவது: தமிழகத்தில் கடந்த நூறாண்டு காலத்தில், –

  • தமிழ்-தமிழரல்லாதவர்,
  • திராவிடன் – ஆரியன்,
  • தென்னகத்தவன் – வடக்கத்தியன்,
  • வடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது
  • ஹிந்தி-ஹிந்தி-திணிப்பு
  • ஹிந்தி-எதிர்ப்பு இந்தி-திணிப்பு

போன்ற பிரச்சாரங்களால், மற்ற மொழி பேசும், மற்ற மாநிலத்தவர் மீது, மனங்களில் துவேசத்தை வளர்த்து கொண்டிருக்கிறார்கள். “வந்தேறி” தத்துவம் எப்பொழுதுமே உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துக் கொண்டு, மற்றவர்களைத் தாக்கப் பயம் படுத்தப் பட்டு வருகிறது. பிராமணர், மார்வாடி, குஜராத்தி, வடவிந்தியன் போன்ற பிரிவினை துவேசம் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.யைப்பொழுது அது “குஜராத்திற்கு” எதிராக இருக்கிறது. எந்த பிரச்சினை என்றாலும், “தமிழன்” என்று தான் அடைமொழி போட்டு செய்தி போடுவது, ஊடகங்களுக்கும் வாடிக்கையாக இருக்கிறது. ஶ்ரீலங்கா மதப்பிரச்சினை என்றாலும், “தமிழர்-முஸ்லிம்” என்று தான் செய்திகள் வெளியிட்டு, மதப்பிரச்சினையை மறைக்கப் பார்த்தனர்.

2021ல் ஸ்டாலின், திராவிடியன் ஸ்டாக் என்று கிளம்பியுள்ளார்: முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற நான் என்று பதவியேற்று, தான் திராவிடியன் ஸ்டாக் என்று குறிப்பிட்டுக் கொண்டாலும், விளம்பர அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான், திராவிட மொழி பேசும், தனிநாடு கேட்கும், திராவிட இனத்தவரான பலூச்சிஸ்தான் மக்கள் ஜின்னாவில் சிலையை தகர்த்துள்ளனர். இங்கு, கருணாநிதிக்கும், பெரியாருக்கும் சிலைகள் வைப்போம் என்று கிளம்பியுள்ளனர். பிரஹூயி, பிரோஹி, பிரஹூய், என்றெல்லாம் குறிப்பிடப் படுகின்ற மொழி திராவிடக் குடும்ப மொழி என்று திராவிடத்துவ வாதிகள் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள், இன்றும் மேடைகளில் டமாரம் அடிக்கிறார்கள்! பிறகு, அம்மொழி பேசும் மக்களைக் கொடுமைப் படுத்தும் பாகிஸ்தானை ஏன் திராவிடத்துவ வாதிகள் கண்டு கொள்வதில்லை?

பொருளாதாரம்நிதி என்று வந்தால் சித்தாந்தம் முடங்கி விடும்: “காவிரி பிரச்சினை” என்றாலும், திராவிட அரசியல்வாதிகளின்  கையாலாகாத விசயத்தை மறைத்து, கர்நாடகாவை, கன்னட மொழி பேசுபவர்கள் மீது வெறுப்பை-காழ்ப்பை வளர்த்து வருகின்றனர். அதற்கு சத்தியராஜ், விவேக் போன்ற நடிகர்களும் உடந்தையாக இருந்தனர். ஒரு திரைப்படத்தில், “இது பெங்களூரு கத்தரிக்காய், காவிரி நீரால் வளர்ந்து பெரிதாக இருக்கிறது, அது தமிழக கத்திரிக்காய், சிறிதாக இருக்கிறது, காவிரி நீர் கிடைத்தால், அதுவும் பெரிதாக வளரும்,” என்று சொல்வது, பிரிவினையின் வக்கிரகத்தைத் தான் வெளிக்காட்டியது. ஐடியால் கர்நாடகா வளர்ந்த நிலையிலும், வியாபார சம்பந்தங்களினாலும், இப்பொழுது அடக்கி வாசிக்கப் படுகிறது. சன்–குழுமங்களின் தொடர்புகள் அறிந்த விசயமே. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அவை வேறு வகையிலும் செயல்படுகின்றன. பொருளாதாரம், நிதியுதவி, திட்டங்கள் என்றெல்லாம் வரும் பொழுது, “ஒன்றியம்”என்று வேலை செய்யாது. தொடர்ந்து கவர்னரை எதிர்த்து வந்தாலும், வினையில் தான் சென்று முடியும்.

தேசத் துரோகம் எல்லாவற்றிலும் தான் செயல்படுகிறது: தினம்-தினம் கொலைகள், தற்கொலைகள், செக்ஸ்-வக்கிர வன்மங்கள் (அப்பா மகளை கற்பழிப்பது, மாமனார் மறுமகளிடம் எல்லை மீறுவது), வன்முறைகள், குடும்பசீரழிவுகள், கணவன்–மனைவி உறவுகள் சீரழிதல், தாம்பத்தியத்தை மீறிய உறவுகள், குடும்பக் கொலைகள் (அப்பா மனனைக் கொல்லுதல், மகன் அப்பாவைக் கொல்லுதல் முதலியன), குறைந்து வரும் மாணவ-மாணவியர் ஒழுக்கம், நடத்தை, லஞ்சத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம், தினம்-தினம் கைது, சஸ்பெண்ட் என்ற செய்திகள்…இந்நிலையில் திராவிடக் கட்சிகள் பரஸ்பர குற்றச் சாட்டுகள் சொல்லிக் கொண்டு தப்பிக்க / காலந்தள்ள முடியாது. விலைவாசிகள் ஏறுகின்றன என்றால், வியாபர ஒழுக்கம், வணிக தராதரம், முதலியவைப் பற்றி கண்டுகொள்வதில்லை. சங்கங்கள் மூலம் அரசியல் செய்யும் போது, கூட்டுக் கொள்ளைதான் அடிக்கிறார்கள். தக்காளியை ரோடிலும் கொட்டுவார்கள், ரூ.100/-க்கும் விற்பார்கள். கேட்டால் பெரிய பொருளாதார நிபுணன் போல, சப்ளை-டிமான்ட் என்றெல்லாம் கூடப் பேசுவான் திராவிட வியாபாரி.

© வேதபிரகாஷ்

15-05-2022


[1]  இப்பொழுதும் சரவணன், சென்னைப் பல்கலை, சைவசித்தாந்த துறை, போன்ற கும்பல்கள், சைவர் இந்துக்கள் அல்லர் என்று சொல்லி வருகின்றனர். பேஸ்புக்கிலும், இந்த வாத-விவாதங்கள் தொடர்கின்றன.

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும் – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (1)

மே 15, 2022

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும் தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (1)

தமிழகத்தில் இரண்டாவதாக அதிக தேசதுரோக வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன: தமிழகத்தில் கடந்த 2010 முதல் 2020ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் அதிகளவு தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதால், நாட்டிலேயே 2வது இடத்தை பெற்றுள்ளது[1]. இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது[2] என்று தினகரன் கூறுவது வேடிக்கைதான். தேச துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவு குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு  தரப்பு வாதாடி வந்தது. ஆனால், இந்தச் சட்டம் தவறாகப்  பயன்படுத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஒன்றிய அரசின் தரப்பில் கூறப்பட்டது. அதனால், தற்போது நிலுவையில் இருக்கும் தேசதுரோக வழக்குகளையும், இடைப்பட்ட காலத்தில் பதிவு செய்யப்பட்ட தேசதுரோக வழக்குகளையும் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விபரங்கள் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசப் படுவது புதியதல்ல: அதிமுக ஆட்சியில் அதிகம், திமுக ஆட்சியில் அதிகம் / குறைவு என்பதெல்லாம் விசயமே இல்லை, ஏனெனில், தமிழ்-தமிழ்நாடு-தமிழ்தேசம்-தமிழ்தேசியம் என்றெல்லாம் பேசி பிரிவினைவாதத்தில், பிரிவினையில் ஈடுபட்டவர்கள், ஈடுபட்டு வருபவர்கள் அதிகமாக இருக்கின்றனர். கருணாநிதி முதலமைச்சராக இருந்த பொழுது அத்தகையோரின் மாநாடுகளுக்கு தடை விதித்துள்ளனர். கொடைக்கானல் டிவி நிலையத்தில் குண்டுவெடிப்பு, மீன்சுருட்டியில் இந்தியன் வங்கி கொள்ளை-கொலை……போன்றவை ஞாபகத்தில் கொள்ளலாம். தமிழீழம் போர்வையிலும், பல குழுக்கள் செயல் பட்டு வந்தது-வருபவை அறியப் பட்டவையே. இப்பொழுது கிலாபா போர்வையில் முஸ்லிம் குழுக்கள் வேலை செய்து வருகின்றன. ஆகவே, தமிழகத்தில் “ஒன்றிய” போர்வையில் நடந்து வரும் பேச்சுகளும் கவனிக்கப் பட்டு வருகின்றன. “மாநில சுயயாட்சி,” “திராவிடியன் ஸ்டாக்,” “திராவியன் மாடல்” என்பவை எல்லாம் அவற்றின் முகமூடிகளே. ஏனெனில், இப்பொழுது இனம், இனவாதம் எல்லாம் யாரும், எந்நாடிலும் பேசுவதில்லை.

ஐபிசியின் பிரிவு  124ன் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு: தேசதுரோக வழக்கின்படி, எந்தவொரு நபரும் அரசுக்கு எதிரான கருத்துக்களை எழுதினாலோ அல்லது பேசினாலோ அல்லது அத்தகைய உள்ளடக்கத்தை ஆதரித்தாலோ அல்லது தேசிய சின்னங்கள் மூலம்  அரசியலமைப்பை இழிவுபடுத்த முயன்றால், அவர் மீது ஐபிசி-யின் பிரிவு  124ஏ-ன் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படலாம். மேலும், தேச விரோத அமைப்போடு தொடர்புடையவராகவோ அல்லது அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டால் அவருக்கு எதிராகவும் தேசத்துரோக வழக்கு பதிய முடியும். இந்நிலையில், தேசத் துரோகச் சட்டம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது என்று தினகரன் குறிப்பிடுவது தமாஷான விசயம் தான். எல்லாவற்றையும் அதிமுக ஆட்சியின் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த ஐந்தாண்டுகள் பற்றி, பிறகு தான் எடைபோட முடியும். தங்களுக்குத் தானே சான்றிதழ் கொடுத்துக் கொள்ளலாம், ஆனால், மக்களை ஏமாற்ற முடியாது.

2010-2022 ஆண்டுகளில் பதிவான வழக்குகள் எண்ணிக்கை: நாடு முழுவதும் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அதிகளவு தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்த மாநிலமாக பீகார் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை, பீகாரில் மட்டும் 168 தேசதுரோக வழக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து –

தமிழ்நாட்டில் – 139, உத்தரப் பிரதேசத்தில் – 115, ஜார்கண்ட்டில் -62, கர்நாடகாவில் – 50, ஒடிசாவில் – 30, அரியானாவில் – 29, ஜம்மு காஷ்மீரில் – 26,மேற்குவங்கத்தில் – 22, பஞ்சாப்பில் – 21, குஜராத்தில் – 17, இமாச்சல் பிரதேசத்தில் – 15, டெல்லியில் – 14, லட்சத்தீவில் – 14, கேரளாவில் – 14

என்ற வரிசையில் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் திமுக அரசு பெருமைப் பட்டுக் கொள்வதில் ஒன்றும் இல்லை. இந்த ஒரு வருடத்தில், இந்துவிரோத செயல்கள் எவ்வளவு நடந்துள்ளன என்பதை கவனிக்கலாம். அவையெல்லாம் பெருமை சேர்ப்பவை அல்ல. ஒரு நிலையில் அவையும் தேசவிரோதம் ஆகும்.

வழக்குகள் அதிகம், ஆனால், குற்றம் நிரூபிக்கப் படுவது குறைஆக உள்ளது: மேலும், கடந்த 2016 மற்றும் 2019 ஆண்டுக்கு இடையில், தேசத்துரோக வழக்குகளின் எண்ணிக்கை 160 சதவீதம் (93 வழக்குகள்) அதிகரித்துள்ளது. ஆனால் 2019ம் ஆண்டில் தண்டனை விகிதம் என்று பார்த்தால் 3.3 சதவீதமாக உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 93 பேரில் இருவர் மட்டுமே குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தை பொருத்தமட்டில் 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அதிகளவு தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த காலக் கட்டத்தில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது, என்று தினகரன் குறிப்பிட்டு சந்தோசப்படுகிறது. ஆனால், திமுகவின் பிரிவினைவாதம் உலகம் அறிந்தது. இப்பொழுதைய “ஒன்றிய” நிலை தொடர்ந்து, கவர்னர் தாக்கப் பட்டால், த்ஹிராவிடியன் மாடல் தகர்ந்து விடும். சடம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருந்தால், முடிவு வேறு மாதிரி சென்று விடும்..

152 ஆண்டுகள் பழமையான தேசவிரோத சட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்தது: 152 ஆண்டுகள் பழமையான தேசவிரோத சட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது[3]. 124 ஏ சட்டத்தின் கீழ் வழக்கு பதியவும் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், தேச துரோக சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளவர்கள் ஜாமீன் பெற விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளது[4]. ஆங்கிலேயே காலனிய ஆட்சியின்போது அரசுக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் விதமாக தேசத்துரோக வழக்குகள் பதியப்பட்டன. நாடு விடுதலை பெற்ற பின்னரும் காலனிய சட்டமான தேசத் துரோக வழக்கு பதியப்பட்டு வருகிறது.இந்நிலையில், அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது  124A சட்டப்பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்குப் பதியப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. எனவே, காலனியத்துவ தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவான 124A-ஐ ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது.

பத்திரிக்கை சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன: தேச துரோக சட்டத்துக்கு தடைகோரி எடிட்டர்ஸ் கில்டு, பத்திரிக்கையாளர் அருண் சோரி, எம்பி மௌவா மைத்ரா, பி.யு.சி.எல் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. வழக்கு 11-05-2022 அன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசும் மாநில அரசுகளும் தேச விரோத சட்டத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது[5]. தலைமை நீதிபதி அமர்வு, அதனையும் மீறி ஏதேனும் வழக்குகள் எங்காவது பதிவு செய்யப்பட்டால் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டது[6]. இதுதொடர்புடைய வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த சட்டத்தை பயன்படுத்தாமல் இருக்க மத்திய அரசு மாநிலங்களுக்கு கூடுதல் ஆலோசனைகளை வழங்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட 13 ஆயிரம் பேர் நீதிமன்றங்கள் மூலம் ஜாமின் பெற்றுக்கொள்ளவும் உச்சநீதிமனறம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

© வேதபிரகாஷ்

15-05-2022


[1] தினகரன், 2010 முதல் 2020ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் தேச துரோக வழக்கு பதிந்ததில் தமிழ்நாடு 2வது இடம்: சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு மத்தியில் அதிர்ச்சி தகவல், 2022-05-11@ 15:05:14.

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=764520 

[3] NEWS18 TAMIL, தேச துரோக வழக்கு பதிய உச்ச நீதிமன்றம் தடை.. சட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு, Published by:Murugesh M, LAST UPDATED : MAY 11, 2022, 13:41 IST. First published: May 11, 2022, 13:40 IST.

[4] https://tamil.news18.com/news/national/breaking-sedition-law-in-abeyance-supreme-court-urges-centre-states-not-to-file-firs-invoking-section-124a-mur-743986.html

[5] தமிழ்.இந்தியன்.இக்ஸ்பிரஸ், அரசு மறுபரிசீலனை செய்யும் வரை தேச துரோக விசாரணையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!, Written by WebDesk, Updated: May 11, 2022 10:05:24 pm

[6] https://tamil.indianexpress.com/india/supreme-court-interim-order-on-sedition-section-124a-centre-452724/

இந்து ஆன்மிகக் கண்காட்சி என்ற பெயரில் பள்ளி மாணவர்களைப் பாத பூஜை செய்ய வைப்பது சரியா?

ஓகஸ்ட் 10, 2016

இந்து ஆன்மிகக் கண்காட்சி என்ற பெயரில் பள்ளி மாணவர்களைப் பாத பூஜை செய்ய வைப்பது சரியா?

Students-perform-pada-pooja-to-parents-HSSF 2016புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த பாதபூஜை எல்லாம் (05-08-2016): இந்து ஆன்மிகக் கண்காட்சி என்ற பெயரில் பள்ளி மாணவர்களைப் பாத பூஜை செய்ய வைப்பது சரியா என்ற வினாவை மாநிலங்களவையில் எழுப்பினார் கவிஞர் கனிமொழி[1]. சென்னையில் இந்து மதக் கண்காட்சியில் 1800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.  மேலும் பள்ளிக் குழந்தைகள் பூஜை செய்யுமாறு வற்புறுத்தப் பட்டனர். இது புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியே என்று மாநிலங்களவையில் கழகக் குழுத் தலைவர் கனிமொழி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 05-08-2016 அன்று கனிமொழி புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்து ஆன்மீக மாநாட்டில் மாணவர்களை கட்டாயப்படுத்தி கலந்து கொள்ள வைப்பது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்தார்[2]. இதுகுறித்து அவர் பேசியதாவது: “ஆசிரியர்கள் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். அவர்கள் மாணவர்களின் எதிர் காலத்தை மேம்படுத்த உழைக்கின்றனர். ஆனால் சென்னையில், இந்து மதவாத அமைப்புகள் ஒரு கண்காட்சியை நடத்துகின்றன. அதில் 1800க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்அந்நிகழ்ச் சியின் தொகுப்பினை, பள்ளிக் குழந்தைகள் பார்க்குமாறு கட்டாயப் படுத்தப்படுகின்றனர். பூஜைகள் செய்யுமாறு வற்புறுத்தப்படுகின்றனர். இது புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியே’’, இவ்வாறு அவர் பேசினார்[3]. கனிமொழியின் உரைக்கு இந்திய கம்யூனிஸ்ட்கட்சி உறுப்பினர் டி.ராஜா, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள்ஆதரவு தெரிவித்தனர்[4].

Kanimozhi opposing padapuja in RS 05-08-2016கனிமொழி ஒரு திரிபு விளக்கம் கொடுக்கும், குழப்பவாதியாகி விட்டார்: ராஜ்ய சபா எம்.பி என்ற நிலையில் ஏதாவது பேசுவது, விசயங்களைத் திசைத் திருப்புவது போன்ற நிலைகளில் தான் கனிமொழி வெளிப்படுகிறார். தமிழகத்தில் கட்ந்த 60 ஆண்டுகள் திராவிட, நாத்திக மற்றும் சமூகவிரோத ஆட்சியில் நடந்து வரும் சீரழிவுகள், பெண்களின் மீதான குற்றங்கள், கல்வி சீரழிவு முதலியவை எல்லோருக்லும் தெரிந்தவை தாம். கருணாநிதி-ஜெயலலிதா என்று ஒருவர் மற்றொருவ்ரைக் குற்றஞ்சாட்டிக் கொண்டே காலங்கழித்துக் கொண்டு வருகின்றனர். கனிமொழி ஏதோ எல்லா விசயங்களையும் தொட்டுவிட வேண்டும் என்று பேசி வருவது நகைப்புரிய செய்தியாகி விட்டது. ஏனெனில், தமிழகத்தில் அவ்வரால் ஒன்றும் செய்து விடமுடியவில்லை. பெற்றோர் வணக்கம், மரியாதை செல்லுத்துவது என்பது நாட்டின் பாரம்பரியம் மட்டுமல்லாது., தனிமனித உரிமையும் ஆகும். கனொமொழிக்கு பிடிக்கிறது-பிடிக்கவில்லை என்பதால், இதைப்பற்றியெல்லாம் பேசுவது அதிகப்பிரசிங்கித்தனம் என்றே சொல்லலாம். இது கமலஹாசன் தமிழ்-சமுதாயத்திற்கு அறிவுரை கூறுவது போல உள்ளது. அறிவுரை சொல்வதற்கு, தனிமனித ஒழுக்கம், கட்டுப்பாடு, கொள்கை பிடிப்பு, குடும்ப-உறவுகள் பேணல், முதலிய விவகாரங்கள் இருக்கின்றன. ஆனால், இவற்றில் இவர்களது நிலை என்ன என்பதனை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதுவும், தனிமனிதனைப் பற்றிய விமர்சனம் இல்லை, ஆனால், இங்கு, இப்பிரச்சினையில் தலையிடுவதால், எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

கனிமொழி ஸ்டாலின் காலில்புதிய கல்வி கொள்கை போர்வையில் இந்து-எதிர்ப்பு: சென்னையில் ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியில் தமிழ் ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்த நிகழ்வைக் கண்டித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் குழுத் தலைவர் கனிமொழி பிரச்னை எழுப்பினார்[5]. இது தொடர்பாக மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை 05-08-2016 காலையில் கேள்வி நேரம் தொடங்கியதும் மத்திய மனித வளத் துறை அமைச்சகம் தொடர்புடைய கேள்விகளுக்கு அத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பதிலளிப்பதாக இருந்தது. இந்நிலையில், கேள்வி நேரம் தொடங்கிய போது இடைமறித்த கனிமொழி, “தினமணி’ நாளிதழில் “தமிழ் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை’ என்ற தலைப்பில் வெளியான புகைப்படத்துடன் கூடிய செய்தியின் பக்கத்தை அவையில் காண்பித்து குரல் எழுப்பினார்[6]. இதையடுத்து, அவரிடம் “என்ன பிரச்னை?’ என்று அவையை வழிநடத்திய மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் கேட்டார். இந்நிலையில், உரிய நோட்டீஸ் கொடுத்தால் மட்டுமே இந்த விவகாரத்தை பரிசீலிக்க முடியும் என்று குரியன் கூறினார். இதையடுத்து, சில நிமிடங்கள் சலசலப்புக்கு பிறகு அவையில் இயல்பு நிலை திரும்பியது.

Duplicity of Karu familyபுதிய கல்விக் கொள்கை, காவிமயம் என்கின்ற வாதம் முதலியன: அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு 21-Aன் கீழ் ஆறு முதல் 13 வரையில் உள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி கொடுக்கப்படவேண்டும் என்றுள்ளது[7]. 1986ல் புதிய கல்விக் கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டு, 1992ல் மாற்றியமைக்கப் பட்டது[8]. விஞ்ஞானம், தொழிற்நுட்பம், தொழிற்சாலை முதலியவை அதிவேகமாக மாறிவருவதால் அவற்றிற்கேற்றபடி, மறுபடியும் கல்விக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் தான் 2016 திட்ட வடிவு சுற்றுக்கு விடப்பட்டது[9]. அதற்கான ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டது[10]. ஆகவே, இதில் காவிமயம் என்பதெல்லாம் ஒன்றுமே இல்லை, ஏனெனில், 1986-1992 ஆண்டுகளில் இத்திட்டம் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டது. பிஜேபி-என்டிஏ அவற்றை மாற்றாமல் விஞ்ஞானம், தொழிற்நுட்பம், தொழிற்சாலை முதலியவற்றைப் பற்றிய விவரங்களை சேர்த்துள்ளது. இதனால், இவர்கள் அந்த ஆவணத்தைப் படித்து / ஒழுங்காகப் பார்க்கவில்லை என்றே தெரிகிறது. இவ்வாற்று முற்போக்கு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, மக்களை பிற்போக்காக மாற்றி, அவர்களது அறிவை மழுங்க செய்வதில் தான் இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். கல்வித் திறன், தொழிற் முன்னேற்றம், அனைத்துலக ரீதியில் விஞ்ஞானத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் போது, தேவையற்ற விசயங்களில் முக்கை நுழைத்துத் திசைத் திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Karunanidhi blessed by Rajajiகனிமொழிக்கு இந்துவிரோத கோஷ்டிகள் ஆதரவு[11]: திக வீரமணியின் விடுதலை, தங்களது திட்டத்தை இவ்வாறு வெளிப்படுத்திக் கொண்டனர், “துணைத் தலைவர் குரியன் பலமுறை குறுக்கிட்டும்கூட, தான் எடுத்துக்கொண்ட கருத்தினை அழகாகப் பதிவு செய்த கவிஞர் கனிமொழி பாராட்டப்பட வேண்டியவர் ஆவார், என்றுவிடுதலைபாராட்டுகிறது[12]. மதச்சார்பற்ற அரசாட்சியில் இயங்கும் பள்ளிகளும், மதச்சார்பற்ற தன்மைக் கொண்டவைதான். அப்படி இருக்கும் பொழுது, ஓர் இந்து மதக் கண்காட்சியில் அந்த ஆசிரியர்களும், மாணவர்களும் பயன்படுத்தப்பட்டது எப்படி? கட்டாயமாக அழைத்து வரப்பட்டது சரியா? அந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்வது என்பது எல்லாம் அசல் காட்டுவிலங்காண்டித்தனம் அல்லவா? ஆசிரியர்களை மதிப்பது என்பது வேறு; அதற்காக பாத பூஜை போன்ற, காலத்துக்கு ஒவ்வாத ஒரு பூர்ஷ்வா தனத்தைப் புதுப்பிக்கவேண்டுமா?

© வேதபிரகாஷ்

10-08-2016

[1] விடுதலை, சென்னையில்  இந்து மத கண்காட்சி  பள்ளி மாணவர்களை பாத பூஜை செய்ய வைப்பதா?, மாநிலங்களவையில் கனிமொழி எதிர்ப்பு, சனி, 06 ஆகஸ்ட் 2016 16:24

[2] http://viduthalai.in/component/content/article/75-politics/127366-2016-08-06-10-55-04.html

[3] சென்னை.டுடே.நியூஸ், ஆன்மீக கண்காட்சிக்கு எதிர்ப்பு: ராஜ்யசபாவில் புகார் கூறிய கனிமொழி, டி.ராஜா, சனிக்கிழமை, ஆகஸ்ட்.6, 2016, 11.36.காலை.

[4] http://www.chennaitodaynews.com/kanimozhi-mp-speaks-about-hindu-spiritual-and-service-fair/

[5] தினமணி, ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்வதா? மாநிலங்களவையில் கனிமொழி எதிர்ப்பு, By புது தில்லி, First Published : 06 August 2016 12:48 AM IST

[6]http://www.dinamani.com/india/2016/08/06/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-/article3565098.ece

[7] The Constitution (Eighty-sixth Amendment) Act, 2002 inserted Article 21-A in the Constitution of India to provide free and compulsory education of all children in the age group of six to fourteen years as a Fundamental Right in such a manner as the State may, by law, determine.

[8] Ministry of Human Resources Development, The National Education Policy, 1986 (Revised 1992), http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/upload_document/NPE86-mod92.pdf

[9] As the National Policy on Education was framed in 1986[9] and modified in 1992 (with the Constitution 73rd, 74th and 86th amendments), revision is expected to meet the requirements of humanresources and face the challenges of science, technology, academics and industry. Thus, the New Education Policy (NEP), 2016 has been formed and it is in circulation for comments and criticism to be offered before July 31stm, 2016.

[10] Ministry of Human Resources Development, Some imputs for Draft National Educationa Policy, 2016http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/nep/Inputs_Draft_NEP_2016.pdf

[11] http://viduthalai.in/component/content/article/71-headline/127299-2016-08-06-08-48-32.html

[12] விடுதலை, பாத பூஜையா?, சனி, 06 ஆகஸ்ட் 2016 14:18

குருவின் சாவிக்காக சிஷ்யைகள் சண்டை – பீட்டரிடம் சாவியிருந்தால் இந்த தொல்லை வந்திருக்காதே?

மே 7, 2012

குருவின் சாவிக்காக சிஷ்யைகள் சண்டை – பீட்டரிடம் சாவியிருந்தால் இந்த தொல்லை வந்திருக்காதே?

லெனின், நக்கீரன், தினகரன்: “இம்மூவரும்” முன்பு ஆபாச விடியோ எடுத்ததற்கு, டிவி-செனலில் விடாமல் ஒலி-ஒளிபரப்பியதற்கு, ஊடகங்களில் தாராளமாக தூண்டிவிடும் வகையில் செய்திகளை வெளியிட்டுப் பரப்பியதற்கு காரணமாக இருந்தார்கள். லெனின் குருப் தான் சரியான ஆள். அந்த ஆளிருக்கும் போது, பெட்ரூமிலேலேயே வீடியோ கேமரா வைத்து படம் எடுத்துள்ளதாக, ஊடகங்கள் வெளியிட்டு, பெரிய பிரச்சினையாகி இருந்தது. அப்பொழுது நித்யானந்தா அறையின் சாவியை யார் வைத்திருந்தது என்று தெரியவில்லை. அப்பொழுது, லெனின் குரூப் எப்படி உள்ளே சென்று வீடியோ கேமரா வைத்தான், ஆபாசப் படம் எடுத்தான் போன்ற விவகாரங்கள் தெரியவில்லை. ஒருவேளை “நக்கீரனுக்கு” பிரத்யேகமாகத் தெரிந்திருக்கக் கூடும். இப்பொழுது, லெனின் இருந்திருந்தால், சாவிக்காக இப்படி சிஷ்யைகள் சண்டை போட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

  சொர்க்க வாசலின் சாவியையே, பீட்டர் என்ற ஏசுவின் சீடர் வைத்திருந்தாராம். அதற்கு பலத்த எதிர்ப்பு, சண்டைகள் இருந்து வந்தனவாம். இது போப்புடைய அதிகாரத்தை இன்று எடுத்துக் காட்டுகிறது, ஏனெனில் முதல் போப், பீட்டர் என்று கிருத்துவப் புராணங்கள் கூறிகின்றன.அதாவது, சாவியுள்ளவரிடம் தான் அதிகாரம் இருக்கும். அது[போல, இளையப்பட்டம், முதியப்பட்டத்தின் சாவியை வாங்கிக் கொள்ள அவசரப்படுகிறது போலும்.

நிச்சயமாக, இவ்வளவு அவசரம் கூடாது சாமி. அதற்கு, சிஷ்யைகள் இப்படி சண்டைப் போட்டுக் கொண்டால், மடம் என்னாவது?

மதுரை ஆதீனத்தின் பெண் உதவியாளர் வைஷ்ணவி மீது தாக்குதல்: நித்யானந்தா பெண் சீடர் மீது புகார்[1]: மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் பெண் உதவியாளர் வைஷ்ணவி (வயது-28). இவர் தஞ்சை அருகே உள்ள கச்சனம் பகுதியை சேர்ந்தவர். பல மாதங்களாக அருணகிரி நாதரின் “நெருக்கமான”[2] உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்ட பின்னர் வைஷ்ணவியை அங்கிருந்து வெளியேற்ற நித்யானந்தா சீடர்கள் அவரிடம் தகராறு செய்து வருவதாக ஏற்கனவே புகார் எழுந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுரை ஆதீன மடத்தில் வருமானவரி துறை சோதனை நடத்தியது. அப்போது வைஷ்ணவியிடம் அதிகாரிகள் அதிக நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.

தினகரன் கூறுவது[3]: மதுரை ஆதீனத்தின் செயலாளாரான வைஷ்ணவி மீது நித்தியானந்தாவின் ஆட்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதாகவும்,சுடிதாரை கிழித்து விட்டதாகவும் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து சென்றனர். பத்திரிக்கையாளர்களை நித்தியானந்தாவின் ஆட்கள் ஆதினத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதற்கு மதுரை ஆதீனத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நித்தியானந்தாவின் ஆட்களுக்கும், மதுரை ஆதீனத்தின் ஆதரவாளர்களுக்குள் மோதல் மூண்டதாக கூறப்படுகிறது. தினமலர் கூறுவது[4]: மதுரை ஆதீன மடத்தில் ஆதீனம் தரப்பினருக்கும், நித்தியானந்தா தரப்பினருக்கும் இடையே மோதல் ‌ஏற்பட்டது. மதுரை ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டதை பெரும் சர்ச்சை நிலவிவருகிறது. இந்நிலையில் மதுரை ஆதீன மடத்திற்குள் பத்திரிகையாளர்களை அனுமதிப்பதாக வேண்டாமா என ஆதீன தரப்பினரு்க்கும், நித்தியானந்தா தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மடத்திற்க்குள்ளேயே மோதிக்கொண்டனர்[5].
தினமலரின் மற்றொரு செய்தி[6]: முன்னதாக மதுரை ஆதீன மடத்தில் பணிவி‌டை செய்து கொண்டிருந்த வைஷ்ணவி என்ற ‌பெண் சீடர் ஆதீன மடத்தினை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நித்தியானந்தா சீடர்கள் அப்பெண்ணை மிரட்டி தாக்கினார். இனி இங்கு உனக்கு வேலை இல்லை வெளியேறுமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மதுரை ஆதீன மடத்தில் பரபரப்பு ‌ஏற்பட்டுள்ளது. நக்கீரன் கூறுவது[7]: அருணகிரிநாதருடைய நெருக்கமான உதவியாளராக வைஷ்ணவி இருந்தார். அவரது தனி அறையின் சாவியை (பணம் மற்றும் தங்க நகைகள் உள்ள அறை) வைஷ்ணவியிடம் ஒப்படைத்துவிட்டு திருவண்ணாமலைக்கு சென்றார். இந்த நிலையில் வைஷ்ணவியிடம், நித்தியானந்தாவின் சீடர் ரிஷி மற்றும் அவரது மனைவி, ஆட்கள் அந்த சாவியை கேட்டதற்கு வைஷ்ணவி மறுத்துள்ளார். இதனால் வைஷ்ணவியை அவர்கள் தாக்கியதில் அவரின் சுடிதார் கிழிந்துவிட்டது.

ஆதினத்தின் அறை சாவிக்காக தகராறு: இந்த நிலையில் நேற்று மதுரை ஆதீனம் அருணகிரி நாதரும், இளைய ஆதீனம் நித்யானந்தாவும் திருவண்ணாமலையில் இருந்து மதுரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அவர்களது அறையை வைஷ்ணவி தயார் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது நித்யானந்தாவின் பெண் சீடர் மத்தியா (30) சமையல் செய்வதற்காக பாத்திரங்கள் வேண்டும் மதுரை ஆதீன அறை சாவியை தா என்று வைஷ்ணவியிடம் கேட்டுள்ளார். இதற்கு வைஷ்ணவி மதுரை ஆதீனம் சொன்னால் மட்டுமே சாவியை தருவேன் என்று கூறியதாக தெரிகிறது. அப்போது நித்யானந்தா சீடர்கள் வைஷ்ணவியை அடிக்க பாய்ந்தனர். அப்போது பெண் சீடர் மத்தியா, வைஷ்ணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்ததில் கிழிந்து விட்டது. அப்போது கதறி அழுத வைஷ்ணவி வெளியே வந்து நடந்த சம்பவங்களை விளக்கினார். இதனால் மதுரை ஆதீன மடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   இதற்கிடையில் நேற்று இரவு 8 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து மதுரை ஆதீனமும், நித்யானந்தாவும் மதுரை வந்தனர். அவர்களிடம் மடத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து கூறினார்.

சீஷ்யைகளிடம் சமாதான பேச்சு: மதுரை ஆதீனம் அருணகிரி நாதரும், இளைய ஆதீனம் நித்யானந்தாவும் வைஷ்ணவி, மத்தியா இருவரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அதன் பின்னர் அங்கு அமைதி ஏற்பட்டதாக மடத்தில் உள்ள சீடர்கள் தெரிவித்துள்ளனர். வைஷ்ணவி தாக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், நேற்று முன்தினம் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டபோது முக்கிய ஆவணங்களை வைஷ்ணவி சொல்லித்தான் ஆதீனத்திடம் அதிகாரிகள் கேட்டு பெற்றதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில்தான் வைஷ்ணவியை நித்யானந்தா சீடர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த மோதல் சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து மதுரை ஆதீனம் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

பத்திரிக்கைக்காரர்களுக்கு சொன்னது: நேற்று ஆதீன மடத்தில் பெண் சீடர் வைஷ்ணவி தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து இரவு அனைவரையும் அழைத்து விசாரித்தோம். பின்னர் அவர்களை சமரசம் செய்து வைத்தேன். மற்றப்படி எந்த பிரச்சினையும் இல்லை. இது ஒரு சாதாரண சம்பவம் சிலரால் பெரிதாக்கப்பட்டுள்ளது. இப்போது மதுரை ஆதீன மடத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. நேற்று முன்தினம் நடந்த வருமான வரித்துறை சோதனையின்போது அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கமாக பதில் கொடுத்துள்ளோம். அவர்கள் மடத்தின் கணக்கு புத்தகங்களை எடுத்து சென்றுள்ளனர். மற்றபடி ஒன்றுமில்லை. இவ்வாறு மதுரை ஆதீனம் கூறினார்.

வேதபிரகாஷ்

07-05-2012


 


[2] இப்படி விவரித்துள்ளது “நக்கீரன்” தான்!

குஷ்புவும், கற்பும், கே.ஜி.பாலகிருஷ்ணனும், மற்ற நீதிபதிகளும்!

ஏப்ரல் 28, 2010
எதிர்பார்த்தபடியே குஷ்பு மீதான வழக்குகள் தள்ளுபடி!

 

 

 

Maxim-Kushboo

Maxim-Kushboo

திருமணத்திற்கு முன்பு பெண்கள் உடலுறவு வைத்துக் கொள்வது தொடர்பில், பிரபல திரைப்பட நடிகை குஷ்பு தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 22 வழக்குகளையும் இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்று அவர் கூறியிருந்தார். படித்த இளைஞர்கள் தமக்கு மனைவியாக வருபவர்கள் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாமில்லை என்றும் குஷ்பு கருத்து வெளியிட்டிருந்தார். 2005 ஆம் ஆண்டு பத்திரிகை பேட்டி ஒன்றில் அவர் வெளியிட்டிருந்த இந்த கருத்துக்களுக்கு எதிராக அவர் மீது 22 வழக்குகள் தமிழ்நாட்டின் வெவ்வேறு நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டிருந்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பல்வேறு நீதிமன்றங்களில் குஷ்பு மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து குஷ்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

சென்னை உயர்நீத்மன்ற தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் குஷ்பு மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் தீர்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், குஷ்புவின் மனுவை ஏற்று, இது தொடர்பாக அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்து இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டனர்.

திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை: கற்ப்புக்கரசி கண்ணகி பிறந்த நாட்டில், இப்படியொரு விவாதம் வந்து, அதற்கு தமிழனே தீர்ப்பும் அளித்திருப்பது, தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம் தான்! பெண்களுக்கான திருமண வயது 21 என்று அரசு விளம்பரங்கள் எல்லாம் சொல்கின்றன. ஆகையால் இனி, 21 வயது வரை வயதுக்கு வந்த பெண்கள்

பாலியல் உறவு வைத்துக் கொண்டால் யாரும் கேட்க முடியாது. பெற்றோர்கள் கூட என்ன செய்யவேண்டும் என்பது புரியவில்லை!படித்த இளைஞர்கள் தமக்கு மனைவியாக வருபவர்கள் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாமில்லை: படித்த இளைஞர்கள் என்ன அந்த அளவிற்கு கேடு கெட்டவர்களா என்று தெரியவில்லை. இல்லை, பெண்களும் அத்தகைய சோரம் போனவர்களாக இருந்து, தாலிக் கட்டிக் கொள்ளத் தயார் ஆகிறார்களா என்றும் தெரியவில்லை! அதாவது, ஒன்று பெண் வயதுக்கு வந்தவுடன் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும், இல்லையென்றால், கற்புள்ளதா இல்லையா என்ற ஆராய்ச்சியோ, சோதனயோ செய்யக் கூடாது!

முன்பு-குஷ்பு-நடித்த-கோலம்

முன்பு-குஷ்பு-நடித்த-கோலம்

நடிகை குஷ்பு ‘கற்பு’ வழக்கு : சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு
ஏப்ரல் 28,2010,00:00  IST

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=5728

சென்னை : தமிழ் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு கருத்து தெரிவித்த வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை குஷ்பு, தமிழ் பெண்களின் கற்பு குறித்து தனது கருத்தை தெரிவித்தார். இக்கருத்து, தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. கருத்து தெரிவித்த குஷ்புவை எதிர்த்து தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்களில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் மேட்டூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், குஷ்பு ஆஜரானார். வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், அதை ரத்து செய்ய மறுத்து விட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ‘பெஞ்ச்’ வழக்கை விசாரித்து வந்தது. பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது.

கனிமொழியும், ஜெயலலிதாவும் (எடா, ஆஸ்கன், ஸ்டார்,ஸ்பெக்ட்ரம் தொடர்புகள்)

ஏப்ரல் 25, 2010

கனிமொழியும், ஜெயலலிதாவும்!

ஜெயலலிதாவுக்கு கனிமொழி நோட்டீஸ்
எடா ஸ்டார் ப்ராபர்டி டெவலப்பர்ஸ் ஒப்பந்தம் செய்து கொண்டது, துபாயைச் சேர்ந்த எடா ஆஸ்கன் குழுமம் நிலத்தை வாங்கிக் கொண்டது, ரஸ் அல் கைமா நிறுவனத்துடன் ஒப்பந்தம், .டி.. அஸ்கான் ஸ்டார் குழுமநிர்வாகஇயக்குனர் சையது லாகுதீன், துபாயில் நிகழ்ச்சிகள் நடத்ததவது, இந்த கமெனிகள் ஸ்பான்ஸர் செய்வது முதலியவற்றை இங்கு காணலாம்.

First Published : 25 Apr 2010 01:13:16 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?Title=…………artid=232228&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu

சென்னை, ஏப். 24: இந்தோனேசியாவில் தமக்கு நிலக்கரி சுரங்கம் இருப்பதாக கூறியதற்காக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு முதல்வர் கருணாநிதியின் மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.கனிமொழியின் வழக்கறிஞர் பி.ஆர். ராமன் இதுதொடர்பாக ஜெயலலிதாவுக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள நோட்டீஸ் விவரம்:நெய்வேலியில் போராட்டத்தில் பங்கேற்ற நீங்கள் (ஜெயலலிதா) எமது கட்சிக்காரர் (கனிமொழி) மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியதாக கடந்த 19-ம் தேதி பத்திரிகை செய்தி வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவில் கனிமொழியும், அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயமும் பங்குதாரர்களாக உள்ள நிலக்கரி சுரங்கம் இருப்பதாகவும், அங்கிருந்து தமிழ்நாடு மின்வாரியத்துக்கு நிலக்கரி வழங்கப்படுவதில் முதல்வரின் குடும்பத்துக்கு ஒரு டன்னுக்கு 21 அமெரிக்க டாலர் லஞ்சமாகச் செல்வதாகவும் கூறியுள்ளீர்கள்.எமது கட்சிக்காரரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்தக் கருத்துகள் உள்ளதாக அவர் கருதுகிறார். எமது கட்சிக்காரருக்கு இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கம் இருப்பதாகக் கூறுவது பொய்யானதாகும். நிலக்கரி வெட்டி எடுப்பது அல்லது நிலக்கரி வணிகம் போன்ற எந்த தொழிலிலும் இந்தோனேசியாவிலோ அல்லது உலகின் வேறு பகுதிகளிலோ எமது கட்சிக்காரர் ஈடுபடவில்லை என்று தெரிந்திருந்தும், களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான தகவல்களை வெளியிட்டிருக்கிறீர்கள்.மேலும் திமுக அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயத்துடன் வணிக ரீதியில் கூட்டு இருப்பதாகக் கூறியிருப்பதும் பொய்யானதாகும். முதல்வரின் மகள் என்ற முறையில், தன் நெருங்கிய உறவினர்களுடன் சேர்ந்து சட்டவிரோதமாக ரூ.2000 கோடி சம்பாதித்துள்ளதாக, முற்றிலும் பொய்யான, மிக மோசமான குற்றச்சாட்டை எமது கட்சிக்காரர் மீது கூறியிருக்கிறீர்கள்.தமிழ் கலை மற்றும் கலாசாரத்தை மிக உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும் பொது சேவைக்கு தனது நேரத்தை செலவிட்டு வரக் கூடிய நேரத்தில் உமது இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.எமது கட்சிக்காரருக்கு தமிழகத்தில் மட்டுமின்றி உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் நற்பெயர் இருக்கிறது. அந்த நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாக உங்கள் கருத்துகள் அமைந்திருப்பதாக எமது கட்சிக்காரர் கருதுகிறார்.அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகள் தொடர்பான எந்தவொரு விமர்சனத்துக்கும் ஊடகங்கள் மூலமாகவே பதில் தர முடியும். இருந்தாலும் அவருடைய நற்பெயருக்கும், மதிப்புக்கும் களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதால் அதை நீதியின் பாதுகாப்பு மூலமாக சந்திக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். இந்தச் சூழ்நிலையில் இந்த நோட்டீஸ் கிடைத்த மூன்று நாள்களுக்குள் உமது அவதூறான கருத்துகளை நீங்கள் திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்காவிட்டால், சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை என்று வழக்கறிஞர் கூறியுள்ளார்.

ETA STAR Property developers signs MoU with Tamil Nadu government

Published on Friday, May 25th, 2007 at 9:54 pm under News, Technology.

http://chennai365.com/news/eta-star-property-developers-signs-mou-with-tamil-nadu-government/

ETA_STAR_Property-Karunanidhi

ETA_STAR_Property-Karunanidhi

An Information Technology Special Economic Zone and integrated township, spread over a total extent of about 350 acres, will come up in Kancheepuram district, near Chennai. The project will employ about 50,000 people. A memorandum of understanding to develop them was signed on Friday by representatives of ETA Star Property Developers and the Tamil Nadu Industrial Development Corporation in the presence of Chief Minister M. Karunanidhi.

TIDCO will be a partner in the Rs.3,750-crore joint venture project, ETA Startech City. The entire land has been purchased by the Dubai-based ETA Ascon group and no acquisition had to be done by the government, according to a press release. The project will be implemented over a period of three years. As much as 175.3 lakh sq ft of space will be created in row houses, bungalows, a shopping mall, car parks, hospitals, schools, hotels and serviced and other apartments. Companies dealing with Information Technology and Information Technology Enabled Services will occupy about 50 acres.

ETA Ascon is involved globally in civil construction, buildings and roads, real estate development, power projects, trading, shipping, port management, manufacturing, retail, automobiles, vertical transportation and building maintenance. TIDCO will facilitate the project and get the requisite approvals from service agencies in the State, said its Chairman and Managing Director S. Ramasundaram. The work is expected to start in August. The IT SEZ part will be completed in about two years. The township part will proceed based on requirements and is expected to be completed in about five years.

Ras Al Khaimah Investment Authority signs MoU to set up mega township projects in Tamil Nadu, India

Published on Monday, April 30th, 2007 at 10:12 pm under News, Real Estate.

http://chennai365.com/news/ras-al-khaimah-investment-authority-signs-mou-to-set-up-mega-township-projects-in-tamil-nadu-india/

Khater massaad Karunanidhi MOU

Khater massaad Karunanidhi MOU

Dr. Khater Massaad, Advisor to the RAK Crown Prince and CEO of RAK Investment AuthorityÂÂ

The Ras Al Khaimah Investment Authority (RAKIA) has signed a Memorandum of Understanding (MoU) with the Government of the Indian State of Tamil Nadu to set up two mega township projects in the State with an investment outlay of AED 2 billion. The MoU for the landmark urban infrastructure development projects was signed by Dr. Khater Massaad, Advisor to the RAK Crown Prince and CEO of RAKIA, and S. Ramasundaram, Chairman and Managing Director of Tamil Nadu Industrial Development Corporation Ltd, in the presence of Tamil Nadu Chief Minister, M. Karunanidhi in Chennai on Saturday.

The project in the industrial city of Coimbatore will come up on 1000 acres and will have an Information Technology Special Economic Zone supported by an integrated feeder township. The township will also have world class leisure and residential facilities including golf course, shopping malls, resort hotel, health spa and residential villas and apartments. The township, expected to be completed in five years, will have about 5 million sq.ft of IT space.

The second project would witness the creation of a world class marina and township at Kadalur in Kancheepuram district. The 500- acre marina project would have water sports, leisure, entertainment, premium residences and a world class golf course. Speaking on the ambitious overseas venture of RAKIA, Dr. Khater Massaad said that RAKIA, under the guidance of H.H. Sheikh Saud bin Saqr Al Qasimi, Crown Prince and Deputy Ruler of RAK, was privileged to be able to partner the State of Tamil Nadu in the world class project that will catapult the State to the forefront of development. ‘We believe that the landmark venture would enable RAKIA to share its considerable expertise in infrastructure development and property sector for the development of Tamil Nadu,’ he said.

Dr. Massaad said that creation of top- notch urban infrastructure in cities like Coimbatore would give the much needed fillip to the industry and business environment in the State and facilitate further investment in IT and other sectors. “The venture marks the further strengthening of the close relations between Ras Al Khaimah and India, which has seen the creation of many successful partnerships like the RAK Ceramics factory located at Kakinada in Andhra Pradesh (AP), the proposed one million tonne capacity Alumina plant in AP and many mega Indian industrial ventures based in RAK,” he added. Dr. Massaad said that the townships will be designed and constructed by internationally renowned architects and contractors. Ras Al Khaimah has emerged as a favourite destination for life-style and tourism development projects in the region. According to a research study published recently, investors have lined up nearly AED 60 billion worth of real- estate projects for completion in Ras Al Khaimah before 2010.

துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தமிழரங்கம் – 2010

புதன்கிழமை, பிப்ரவரி 17, 2010, 12:26[IST]

துபாய்: அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா, அமீர‌க‌த் தமிழ‌ர்க‌ள் அமைப்பின் 8வ‌து ஆண்டு விழா, செம்மொழி மாநாட்டிற்கு பாராட்டு விழா ஆகியவை இணைத்து த‌மிழ‌ர‌ங்க‌ம் 2010 என்ற நிகழ்ச்சி துபாயில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பிப்ர‌வ‌ரி 12, வெள்ளிக்கிழ‌மை அன்று சேக் ராஷீத் ஆடிட்டோரியத்தில் விழா நடைபெற்றது. இதில், க‌விஞ‌ர் க‌னிமொழி எம்.பி., தமிழக ப‌ள்ளிக்க‌ல்வித் துறை அமைச்ச‌ர் த‌ங்க‌ம் தென்ன‌ர‌சு, திராவிட‌ர் க‌ழ‌க‌த் த‌லைவ‌ர் வீர‌ம‌ணி, இ.டி.எ. அஸ்கான் ஸ்டார் குழும‌ நிர்வாக‌ இய‌க்குன‌ர் சைய‌து ச‌லாகுதீன், ந‌டிக‌ர் ப‌சுப‌தி, சாக்கோட்டை அன்ப‌ழ‌கன், அமீர‌க‌த் தமிழ‌ர்க‌ள் அமைப்பின் கெள‌ர‌வ‌த் த‌லைவ‌ர் அஜ்மன் மூர்த்தி மற்றும் அமீர‌க‌த் தமிழ‌ர்க‌ள் அமைப்பின் த‌லைவ‌ர் அமுத‌ர‌ச‌ன் ஆகியோர் க‌ல‌ந்து கொண்ட‌னர்.

திராவிட புரோகிதர்கள் நடத்திவரும் திருமணங்கள்!

பிப்ரவரி 2, 2010

திராவிட புரோகிதர்கள் நடத்திவரும் திருமணங்கள்!

சுயமரியாதை உள்ளவர்கள் நடத்தும் திருமணமே சுயமரியாதைத் திருமணம்
ந.ம.மதன்-த.ஆர்த்திகா சுயமரியாதைத் திருமண விழாவில் தமிழர் தலைவர் உரை

http://www.viduthalai.com/20100607/news12.html

சென்னை, ஜூன் 7_ சுயமரியாதைத் திருமணம் என்பது சுயமரியாதை உள்ளவர்கள் நடத்தும் விழா என்று குறிப்பிட்டார் திரா-விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக அமைப்-பாளர் மு.ந.. மதியழகன் _ தமிழ்மதி ஆகியோரின் மகன் ந..ம. மதன் பி.இ.,எம்.பி.ஏ., சோலையார்பேட்டை சி.தங்கவேல் _ தேவி ஆகியோரின் மகள் த. ஆர்த்திகா பி.டெக்., ஆகியோரின் சுயமரியாதைத் திருமணம் 6.6.2010 ஞாயிறு காலை 11 மணிக்கு சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மணமகன் தந்தையார் மு.ந.மதியழகன் விழாத் தலைவரை முன்மொழிந்து உரையாற்றினார்.

திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.சி. எழிலரசன் அனைவரையும் வரவேற்று உரை-யாற்றினார்.

கழகத் தோழர் மதியழகன் தந்தையார் சுய-மரியா-தைச் சுடரொளி ஆசிரியர் நடராசன் அவர்களுக்கும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கும் இருந்த தொடர்பையும், நட்பையும் எடுத்துக் காட்டிப் பேசினார்.

பாராட்டுரை

மணமக்களைப் பாராட்டி, வாழ்த்தி நீதியரசர் அரிகிருஷ்ணன் உரையாற்றுகையில் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று இருந்த நிலை-யிலும் கூட தந்தை பெரியார் கொள்கையை ஏற்று நாட்டில் ஏராளமான எண்ணிக்கையில் சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றதைப் பெருமையாகச் சுட்டிக் காட்டி மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

டாக்டர் ருத்திரன்

பிரபல உளவியல் மருத்துவர் டாக்டர் ருத்திரன் அவர்கள் தனது திருமணமும் சரி, தம் மகனின் திருமணமும் சரி சுயமரியாதைத் திருமணமாக நடந்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.

சுயமரியாதைத் திருமணத்தில் பொய் இல்லை: போலித்தனம் இல்லை. வாழ்க்கை ஆரம்பமே இந்தச் சிறப்புடன் துவங்குவது சுயமரியாதைத் திருமணத்-தில்தான் என்று ரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிட்டார்.

கலி.பூங்குன்றன்

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்-குன்றன் அவர்கள் தன்னுரையில் குறிப்பிட்டதாவது:

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு _ மத எதிர்ப்பு, சாஸ்திர புராணங்கள் எரிப்பு என்பதே தமிழர்களின் இன இழிவு ஒழிப்பிலிருந்து தொடங்குகிறது என்று குறிப்பிட்டார்.

தொடக்கத்தில் பார்ப்பனப் புரோகிதர்கள் பார்ப்பனர்களுக்கும், சத்திரியர்களுக்கு மட்டுமே திருமணங்களை நடத்தினார்கள். திருமலை நாயக்கன் காலத்தில் வட மாநிலங்களிலிருந்து ஏராளமான பார்ப்பனர்கள் தமிழ் நாட்டுக்கு வந்து சேர்ந்தனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத ஒரு நிலை ஏற்பட்டது.

அப்பொழுதுதான் திருமலை நாயக்க மன்னனின் முன்னிலையில் கூடி, வைசியர்களுக்கும், சூத்திரர்-களுக்கும் கூட பார்ப்பனர்கள் திருமணங்களை நடத்தி வைக்கலாம் என்ற முறை மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பார்ப்பனப் புரோகிதர்கள் சூத்திரர்களுக்கு மந்திரங்களைச் சொல்லி கல்யாணத்தை நடத்தி வைக்கும்போது மறக்காமல் ஒரு முகூர்த்த நாழிகைக்கு மணமகனுக்கு பூணூல் அணிவித்து, சடங்குகள் முடிந்த பின் மறக்காமல் அந்தப் பூணூலைக் கழற்றி தண்ணீரில் எறிந்துவிடுவார்கள் என்ற வரலாற்று உண்மையையும் எடுத்துக் கூறினார்.

பொருளாளர் கோ.சாமிதுரை

திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்கள் தன்னுரையில், சுயமரி-யா-தைக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வி கிடையாது என்று அழுத்த-மாகக் குறிப்பிட்டார்.

சுயமரியாதைக்காரர்கள் நீண்ட நாள் வாழ்வதற்குக் காரணம் அவர்கள் சரியான -_ பகுத்தறிவு ரீதியான வாழ்க்கை முறையே என்றும் கூறினார்.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் அருள்தந்தை மரியா மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி

சுயமரியாதைத் திருமணத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

தோழர் மதியழகன் குடும்பம் பாரம்பரியமான கழகக் குடும்பமாகும். தோழர் கொள்கையில் மிகவும் பிடிவாதக்காரர் _ பெரியார் திடலோடு நெருக்கமாக உறவு கொண்டவர்.

கழகத் தொடர்பான செய்திகளையும், ஆதாரங்களையும் ஆவணமாகத் தொகுத்து வைக்கக் கூடிய ஆற்றல் மிக்கவர்.

மணமகன் பி.இ. படிப்போடு எம்.பி.ஏ. பட்டமும் பெற்றிருக்கிறார். மணமகள் பி.டெக். படித்திருக்கிறார்.

இந்த மாற்றங்கள் எல்லாம் வருவதற்கு உழைத்தவர் தந்தை பெரியார் _ இந்த இயக்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இங்கு பேசிய நீதிபதி அரிகிருஷ்ணன் அவர்கள் சுயமரியாதை முறையில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு மட்டும்தான் சுயமரியாதை இருக்கிறதா _ மற்றவர்களுக்குக் கிடையாதா என்று சிலர் கேட்டதாகக் குறிப்பிட்டார்.

உண்மைதான். சுயமரியாதை முறையில் திருமணம் செய்து கொள்பவர்களுக்குத்தான் சுயமரியாதை உண்டு _ இந்த முறையில் திருமணம் செய்துகொள்ளாதவர் களுக்கு சுயமரியாதை கிடையாது என்ற அழுத்தமாகச் சொல்லுவதில் எங்களுக்கு ஒன்றும் தயக்கம் இல்லை (பலத்த கைதட்டல்).

இப்படிக் கூறுவது யாரையும் புண்படுத்த அல்ல: மாறாகப் பண்படுத்தத்தான்.

சுயமரியாதைத் திருமுண முறையில் ஒருவர் எஜமானர் அல்ல -_ இன்னொருவர் அடிமையும் அல்ல _ சமமானவர்கள் என்பதே இதன் தத்துவம்.

வைதீக முறையில் இதற்கு என்ன பெயர்–? தாரா முகூர்த்தம். அப்படியென்றால் பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுப்பதாகும். இன்னொரு பெயர் கன்னிகாதானம் என்பதாகும். பெண்ணைத் தானமாக _ பண்டமாக நினைத்து இன்னொருவருக்குக் கொடுப்பதாகும்.

வரதட்சணை என்ற சொல்லேகூட தமிழ் கிடையாது. தமிழர்களிடத்தில் இந்த ஏற்றத் தாழ்வு இல்லாதிருந்தது. ஆரியம் புகுந்ததால் பெண்ணை சந்தைப் பொருளாக்கி விட்டனர்.

சந்தையில் மாட்டை விற்கும்போதுகூட பணத்தை வாங்கிக் கொண்டு மாட்டைக் கொடுப்பார்கள். இந்த வரதட்சணை சந்தையில் பணத்தையும் கொடுத்து பொருளையும் கொடுத்து, பெண்ணையும் கொடுக்கிறார்கள்.

நெருப்புக்கும் நமக்கும் சம்பந்தம் உண்டா?

பார்ப்பனர்களை வைத்துக் கல்யாணம் நடத்தினால் தீக்குண்டம் வைப்பார்கள். அதனைச் சுற்றி ஏழு அடி எடுத்து வைக்க வேண்டும். அப்படி வைக்காவிட்டால் அந்தக் கல்யாணம் செல்லாது என்கிறார்கள். யார் எண்ணிப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்?

நெருப்பு என்பது பார்ப்பனர்கள் குளிர் நாடுகளில் இருந்து வந்ததால் குளிர் காய்வதற்கு அவர்களுக்குத் தேவைப்பட்டது. அவர்கள் நடத்தும் சடங்குகளில் நெருப்பை முக்கியப்படுத்துவார்கள். நமக்கும் இந்தச் சடங்களுக்கும் சம்பந்தமே கிடையாது.

இதுகுறித்து தமிழறிஞர் டாக்டர் இராசமாணிக்கனார் போன்றவர்கள் பல வரலாற்றுத் தகவல்களை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எழுதி இருக்கிறார்கள்.

தமிழர் திருமணத்தில் தாலி என்பதே கிடையாது என்று நிறுவியுள்ளார்.

தமிழர் தொன்மை வாய்ந்தவர் என்பதும், அவர்தம் தமிழ் மொழி வடமொழியிலிருந்து வேறுபட்டது என்பதும் ஆரியர்க்கு முற்பட்ட இந்தியருள் தமிழர் சிறந்தவர் என்பதும், பிறவும் மொழி ஆராய்ச்சியாலும், புதை பொருள்களாலும் இந்திய வரலாற்றிலும், பிறவற்றாலும் உறுதிப்பட்டுள்ள செய்திகள் ஆகும். எனவே தமிழர் மொழி வேறு, கலை வேறு, வாழ்க்கை முறை வேறு _ சுருங்கக் கூறின், தமிழர் ஆரியரின் (வடமொழியாளரின்) முற்றும் வேறுபட்டவர் என்பது ஆராய்ச்சியாற் போந்த உண்மை! பண்டைச் சங்க இலக்கியங்களைக் கொண்டு ஆராயினும், இவ்வுண்மை உணர்தல் கூடும். உண்மை இங்ஙனம் இருப்ப, இடைக் காலத்தே தமிழ் மரபுக்கு மாறான வாழ்க்கை முறை தமிழரிடை புகுந்துவிட்டது; தமிழர் பழக்க வழக்கங்கள் மாறின; மணமுறை மாறிவிட்டது; பிற சடங்குகள் பெருகின; இவற்றின் பயனாக இன்றுள்ள தமிழர்கள் பெயரளவில் தமிழர்களாக இருக்கின்றனரே அல்லாமல் மெய்த் தமிழராக -_ சங்ககாலத் தமிழர்தம் வழித் தோன்றல்களாக இல்லை என்பதை அறிய _ தமிழர் தலைகுனிய வேண்டுபவராக உளர்.

நம்மிடையே நடைபெறும் இக்காலத் திருமண முறை நமது பண்டைத் தமிழர் மரபுக்கு முற்றும் மாறானதாகக் கருதப்படும் என்று டாக்டர் இராசமாணிக்கனார் கூறியுள்ளார்.

பார்ப்பனரை அழைத்துத் திருமணத்தை நடத்தும் நிலை பிற்காலத்தில் வந்தது. தமிழர் வீட்டுத் திருமணத்தில் தமிழுக்கு இடமில்லை; சமஸ்கிருதம் குடிபுகுந்தது.

பொருள் புரியாமல் புரோகிதர்களும் மந்திரங்களை ஓதினார்கள்.

ஸோம : ப்ரதமோ விவிதே

கந்தர்வோ விவத உத்தர:

த்ருதியோ அக்னிஷ்ட பதி:

துரியிஸ்தே மநுஷ்யஜா

கீழாத்தூர் சீனிவாச ஆச்சார்யார் என்ற பார்ப்பனர் விவாஹ மந்திரார்த்த போதினி என்ற நூல் ஒன்றினை எழுதியுள்ளார். தி லிட்டில் ஃப்ளவர் கம்பெனி அதனை வெளியிட்டுள்ளது.

இந்த மந்திரத்துக்கு பொருள் என்ன? இந்த மணப் பெண்ணின் முதல் கணவன் ஸோமன்; இரண்டாவது கணவன் கந்தர்வன்; மூன்றாவது கணவன் அக்னி. நான்காவது கணவன்தான் மனித ஜாதியில் பிறந்தவன் என்று இந்த மந்திரத்தில் கூறப்படுகிறது. திருமணம் ஆவதற்கு முன் நான்கு பேருக்கு மனைவி என்பது தமிழர் வாழ்வு முறைக்கு உகந்ததுதானா?

நாவலர் சோமசுந்தர பாரதியார் கலந்துகொண்ட ஒரு திருமணத்தில் ஒரு பார்ப்பனப் புரோகிதர் கருமாதி மந்திரத்தைக் கல்யாண வீட்டில் ஓதிக்கொண்டு இருந்ததைக் கண்டுபிடித்து எதிர்த்துக் குரல் கொடுத்த நிலையும் உண்டு.

இந்த மணமக்களைப் பொறுத்தவரை சுயமரியாதைக் கொள்கையில் பூத்த பகுத்தறிவு மலர்கள். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் வாழக் கூடியவர்கள்.

முதலில் தங்கள் பெற்றோர்களுக்கு நன்றியும் பாசமும் காட்ட வேண்டும். முதல் வட்டம் என்பது உங்கள் பெற்றோர்களைப் பாதுகாப்பது பாசம் காட்டுவது _ அவர்களுக்கு நன்றியுடன் நடந்து கொள்வது; இரண்டாவது வட்டம் என்பது உங்களுக்கு யார் யாரெல்லாம் உதவி செய்தார்களோ, அவர்களுக் கெல்லாம் நன்றி காட்டுவது; மூன்றாவது வட்டம் _ தான் உண்டு, தன் குடும்பம் உண்டு, தன் பெண்டு, தன் சுற்றம் என்கிற கடுகு உள்ளத்தோடு நடந்து கொள்ளாமல் தொண்டறம் என்ற வட்டம் _ மற்றவர்களுக்குத் தொண்டு செய்வது, உதவி செய்வதாகும்.

சமுதாயம் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் சமுதாயத்துக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். மணமக்களை உறுதிமொழி கூறச்செய்து சுயமரியாதைத் திருமணத்தை தமிழர் தலைவர் நிறைவேற்றி வைத்தார். தாலி தவிர்க்கப்பட்டது.

இறுதியில் திருப்பத்துர் மு.ந.அன்பழகன் நன்றி கூறிட சிறப்பான மதிய விருந்துடன் விழா வெகு நேர்த்தியாக நடந்தேறியது. உற்றார், உறவினர்கள், கழகக் குடும்பத்தினர் பல்துறைகளைச் சேர்ந்த பெருமக்கள் ஏராளமானவர்கள் வருகை தந்திருந்தனர்.

http://www.viduthalai.com/20100607/news11.html

கொரட்டூர் வை. செயபாலன் _ செ. தேன்மொழி ஆகியோரின் மகன் செ. சந்திரகுமாருக்கும், இ. மகேசுவரன் _ நந்தினி ஆகியோரின் மகள் எம். சொப்னாவிற்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் கி. வீரமணி நடத்தி வைத்தார். உடன் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, லெப்டினன்ட் கர்னல் துரைராமன் (ஓய்வு) திருமதி மோகனா வீரமணி, கோ. செல்வமணி, தேசிங்குராஜன் உள்ளனர் (7.6.2010).

தமிழர் தலைவர் நடத்தி வைத்த மணவிழாக்கள்

திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார். வி. சந்திரசேகரன்_ சி. உமாமகேசுவரி ஆகியோரது வாழ்க்கை இணைநல ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார் (திருவாரூர், பூந்தோட்டம், 30.1.2010).

ஆ. பெரியார் அரசு _ ஈ. ஜோதி ஆகியோரது வாழ்க்கை இணைநல ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார். உடன் மதுரை மாநகர மேயர் தேன்மொழி கோபிநாதன், நன்மாறன் எம்.எல்.ஏ., மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர் (மதுரை, 31.1.2010).

மு. ரமேசு _ இ. சிவசங்கரி ஆகியோரது வாழ்க்கை இணைநல ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் உடன் உள்ளனர் (மதுரை, 31.1.2010).

ரா. சுதேஷ்பாபு _ ஸ்வீட்டி ஏஞ்சலின் பிளாரன்ஸ் ஆகியோரின் மண விழாவினை துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தி வைத்தார். தமிழர் தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர் (சென்னை, 1.02.2010).

அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – II

திசெம்பர் 27, 2009

அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – II

அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால்! என்ற தலைப்பில் மூன்று கட்டுரைகளை பெரியார் திடலில் அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாட்டில் (டிசம்பர் 2009) கலந்து கொண்ட பிறகு www.wordpress.com ல் பதிவு செய்தேன். ஆனால், அப்பொழுதே அவை பதிவாகவில்லை. உடனே www.wordpress.com ற்கு புகாரும் செய்தேன். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. ஏதோ விட்டு-விட்டு சில பதிவாயின, சில மறைந்தன. இப்பொழுது (21-05-2010), இதன் தொடர்பு உள்ளதால், மறுபடியும் புதிப்பிக்கப்படுகிறது.

குறிப்பு: மாநாட்டில் இவர்கள் பேசியதற்கும், “விடுதலை” கீழ்கண்டவாறு பிரசுரித்துள்ளதற்கும் வேறுபாடுகள் உள்ளன.

“நாத்திகம்” (atheism) என்பதற்கு பதிலாக “Rationalism” என்ற போர்வையில் விவாதங்கள் வைக்கப் படுகின்றன. அதனை “பகுத்தறிவு” என்று தமிழில் பேசப்படுகிறது.  agnosticism, skepticism, non-belief in religious system முதலிய கோணங்களில் விவாதிப்பதும், விஞ்ஞான ரீதியில் தர்க்கம் செய்வதும் ஒன்றாகாது. ஆனால் நாத்திகத்தை மறைத்து விஞ்ஞான போர்வையில் பலரக சித்தாந்திகள் ஒன்றுகூடி, இவ்வாறாக பேசுவது நன்றாகவே தெரிகிறது.

“பகுத்தறிவு” என்றே  முதலில் “விதலையில்” வெளிவந்தது அப்ப்டியே கொடுக்கப்படுகிறது:

வகுப்பு வெறியை முறியடிக்க பெரியாரின் சிந்தனைகளே தேவை: இந்திய பகுத்தறிவாளர் மாநாட்டில் கு.வெ.கி.ஆசான், அ.அருள்மொழி, ஆர்.ஜி.ராவ், வித்யாபூஷன்

http://viduthalai.periyar.org.in/20091227/news11.html

சென்னை, டிச.27_ வகுப்பு வெறியை முறி-யடிக்க பெரியாரின் சிந்-தனைகள்தான் பயன்-படும் என்று வித்யா பூஷன்-ராவத் நேற்று சென்னை பெரியார் திடலில் நடை-பெற்ற மாநாட்டில் கூறி விளக்கமளித்தார். 7ஆவது தேசிய மாநாடு டிசம்பர் 26 பிற்பகல் மற்-றும் மாலை நிகழ்ச்-சிகள் நேற்று நடைபெற்றன. அதன் தொடர்ச்சி வருமாறு: வகுப்புவாதத்தை ஒழிப்பதில் பகுத்தறிவு இயக்கங்களின் பங்கு எனும் தலைப்பில் முதல் கருத்தரங்கு நேற்று (26.12.2009) மாலை இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திட-லில் நடைபெற்றது.

கு.வெ.கிஆசான்: பெரியார் பேருரை-யாளர் கு.வெ.கி.ஆசான் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குத் தலைமை-யேற்றார். ஆங்கிலத்தில் உள்ள கம்யூனல் எனும் சொல்லை வகுப்புவாதம் எனும் விரும்பத்தகாத பொருளில் இந்தியா-வில்-தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். சமுதாயமாக மக்கள் வாழ்-வது, ஒன்றைப் பொது-வாக அவர்கள் பயன்-படுத்துவது ஆகியவை-தான் அச்சொல்லின் இயல்பான பொருள் என்-பதைத் தெளிவுபடுத்-தினார். 1964இல் வெளி-யான கன்சைஸ் ஆக்ஸ்ஃ-போர்டு அகராதியின்படி, சமுதாயங்களுக்கு இடையே பகையுணர்வு எனும் பொருளில், கம்யூ-னல் எனும் சொல் இந்-தி-யாவில் பயன்படத் தொடங்-கியதை எடுத்துக்காட்-டினார்.

இந்து முஸ்லிம் பகை: பெரும்பான்மை இந்து மதத்தினர் சிறு-பான்மை மத்தினரை ஒதுக்கி, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முற்-பட்ட பொழுது, சிறு-பான்-மையர் சட்டப் பாதுகாப்பை வகுப்பு-ரிமையின் அடிப்படையில் கேட்டனர். அது மறுக்-கப்பட்ட பொழுது இந்து, முஸ்லீம் பகை ஏற்பட்டு, பாகிஸ்தான் பிரிவினை-யில் முடிந்தது.

வி.பி.சிங் ஆட்சியில்: மேல்ஜாதியார் ஆதிக்-கத்தில் இருந்து, ஒடுக்கப்-பட்ட, ஒதுக்கப்பட்ட, அழுத்தப்பட்ட ஜாதியார் பாதுகாப்புப் பெற, இட-ஒதுக்கீட்டைக் கோரினர். அதை விழிப்புணர்வுடன் தென்நாடு முன்-னெடுத்-தது. ஆனால் வடபுலத்-தில் வகுப்புரிமை இயக்கம் வலுப்பெறவில்லை. மண்-டல் ஆணையத்தின் பரிந்-துரைப்படி, வி.பி.சிங் பிர-தமராக இருந்த பொழுது, மத்திய அரசில் பணி-யிடங்களுக்குப் பிற்படுத்-தப்பட்டோருக்கு இட-ஒதுக்கீடு அளித்தது. அதைத் தென் மாநிலங்கள் மகிழ்-வுடன் வரவேற்றன. ஆனால் வட இந்தியாவில் மேல்-ஜாதியாரின் தூண்டுத-லால் கலவரம் உண்டா-யிற்று.

உச்சகட்ட கலவரங்கள்: உண்மையான பிரச்-சினையிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்ப, மதவெறியை இந்துத்-துவா சக்திகள் கிளப்பு-கின்றன. உண்மையான பிரச்சினைகளை மறைத்து, உணர்ச்சிகளை எழுப்பி, கற்பனைப் பிரச்-சினை-களைக் கொண்டு, சிறு-பான்மை மதத்தினர் மீது வெறுப்பை வளர்த்து கல-வரங்களைத் தொடர்ந்து நடத்துகின்றன. 1992இல் பாபர் மசூதி இடிப்பும், 2002இல் குஜராத் கல-வரங்களும் அவற்றில் உச்சகட்டமானவை.

பொதுமக்களின் கவ-னம் தவறான பாதையில் செல்லும் வரை, அவர் மீது தங்கள் ஆதிக்கம் நிலை-பெறும் என்பது படித்த, மற்றும் பணக்-காரக் கூட்டத்தினரின் கணிப்பாகும். ஆகையால் உண்மைப் பிரச்சினைகளில் இருந்து எளிய மக்களின் கவனத்-தைத் திருப்புதல், கலவரத்-தைத் தூண்டுதல், பக்தி-போதையை ஏற்றுதல், மதவெறியை ஊக்கு-வித்தல் முதலியவற்றில் மதவாதிகள் ஈடுபட்டு உள்ளனர். இவர்களின் முயற்சியை முறியடிக்கும் வகையில் பகுத்தறி-வா-ளர்கள் மக்களுக்கு உண்-மைகளைச் சொல்ல வேண்டும், மூடநம்பிக்-கைகளை முறியடிக்க வேண்டும், அறிவியல் பார்வையை உண்டாக்க வேண்டும். இவை போன்ற நடவடிக்கைகளால் விழிப்-படைந்த மக்கள் தேவையான காரியங்-களுக்கும் உரிமைகளுக்-கும் முயற்சி எடுத்துக்கொள்-வார்-கள். வீண் உணர்ச்-சிக்கு ஆட்பட்டு வகுப்-புக் கலவரங்களில் ஈடு-பட-மாட்டார்கள், வகுப்பு-வாதத்தை முறியடிப்-பார்-கள். இவ்வாறு கு.வெ.கி. ஆசான் உரையாற்றினார்.

வழக்கறிஞர் அ.அருள்மொழி: உயர்நீதிமன்ற வழக்கு-ரை-ஞர் அ.அருள்மொழி பேசுகையில், புத்தரின் போதனைகள் மறக்-கடிக்-கப்பட்டு, வேதியத்தின் அடிப்படையில் கதைகள் பரப்பப்படுவதைக் கண்-டித்தார். சென்னை மாகா-ணத்தில் நீதிக்கட்சி அரசு எல்லாப் பிரிவு மக்களுக்-கும் நீதி கிடைக்கும் வகை-யில் வகுப்புரிமை ஆணை பிறப்பித்து மக்களாட்-சியை உறுதிப்படுத்தியது. இவ்வாறு அனைவருக்-கும் தெரிய வேண்டும். இன்னும் தீண்டாமை-யைக் குற்றம் அற்றது எனக் கூறுவோர் இருக்-கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

கோவா அறிவியல் பேரவைத் தலைவர், ஆர்.ஜி.ராவ்: இக்காலகட்டத்தில் தேவைப்படுவது மனித-நேயம் என்றார். மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும், அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

வித்யாபூஷன் ராவத்: டெல்லி, சமூக வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர், வித்யா பூஷன் ராவத் கருத்து அறிவிக்கையில் பெரியாரின் எண்ணங்-கள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு எல்லோரிடமும் பரவ வேண்டும் என்றார். வகுப்பு நெறியை முறி-யடிக்க பெரியார் சிந்த-னை-கள் பயன்படும். காந்தி-யார் கூறிய மதச் சார்பின்மை பார்ப்-பனியம் சார்ந்த மதச் சார்பின்மை. பெரியாரின் மதச் சார்பின்மை, மனித நேயம் சார்ந்தது. மதச் சார்பின்மை வர்ணாஸ்-சிரம தர்மத்தை மறுப்ப-தாக இருக்க வேண்டும் என்றார்.

பி.எஸ்.பர்னாலா: பர்னாலா மத குருக்-கள் மூடநம்பிக்கை-களைப் பரப்புவது வருத்தத்திற்கு உரியது எனக்கூறி, பகுத்-தறிவாளர்கள் மக்களை இன்னும் அதிக அளவில் நாடு முழுவதும் சந்தித்-துப் பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.

கருணாநிதி-ஜெயலலிதா சண்டை ஆரம்பித்துவிட்டது! இப்பொழுது பாட்டு!!

திசெம்பர் 16, 2009
ஜெயலலிதா பாட்டு – கருணாநிதி விளக்கம்
Created On 12-Jan-10 10:40:09 AM

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6247

ஆளுநர் உரை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பேரவைக்கு எதிர்க்கட்சித்தலைவர் ஜெயலலிதா வந்திருந்தார். உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய அவர், கடைசியாக எம்ஜிஆரின் பாடல் ஒன்றைச் சொல்லி பேசி முடித்தார். அதற்கு முதலமைச்சர் கருணாநிதி அதே பாடலை வைத்தே ஒரு விளக்கத்தை அளித்தார்.

கருணாநிதி பேசுகையில், ” எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தன்னுடைய உரையின் இறுதியிலே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடைய பாடலை இங்கே சொன்னார்கள். அந்தப் பாட்டு அவர்களுக்காகப் பாடியதல்ல. எனக்குத் தெரியும் – எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை மனதிலே கொண்டு பாடிய பாடல் அது. ஏனென்றால் என்னுடைய நாற்பதாண்டு கால நண்பர் அல்லவா? இன்னும் சொல்லப் போனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சித் தேர்தல் நடைபெற்ற போது – தலைவராக நான் தான் வர வேண்டுமென்று எண்ணி அதற்காகப் பாடுபட்டவர், அதற்காக ஆட்களைச் சேர்த்தவர். அந்த நன்றி எனக்குண்டு, சாகின்ற வரையிலே உண்டு. அதைப் போல இந்தப் பொறுப்புக்கு நான் வர வேண்டுமென்று விரும்பியவர்களில் அவரும் ஒருவர். ஆகவே நான் அவருக்கும் எனக்கும் உள்ள நாற்பதாண்டு கால நட்பின் காரணமாக சொல்லுகிறேன். இங்கே அவர் இறுதியில் ஒரு பாடலைச் சொன்னாலுங்கூட – அதனை நான் இப்படித் தான் கருதிக் கொள்கிறேன்.

என்ன தான் நடக்கும், நடக்கட்டுமே!

இருட்டினில் நீதி மறையட்டுமே!

தன்னாலே வெளி வரும் தயங்காதே!

ஒரு “தலைவன்” இருக்கின்றான் மயங்காதே!

அதாவது ஒரு தலைவன் இருக்கின்றான் மயங்காதே என்று தான் – என்னைக் குறிப்பிட்டுத் தான் சொல்கிறார் – ஒரு தலைவி இருக்கிறார் மயங்காதே என்று சொல்லவில்லை (மேஜையைத் தட்டும் ஒலி) . இதை இந்த அவையிலே உள்ள உறுப்பினர்கள் எம்.ஜி.ஆருடைய அந்த நம்பிக்கையான வார்த்தையை ஏற்றுக் கொண்டு, இந்த அவையை சிறப்பாக நடத்த வேண்டும்” என்று பேசினார்.

“ஜெயலலிதாவின் பேச்சு கருணாநிதிக்கு பிடிக்கும்

சென்னை: “எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சு முதல்வருக்கு மிகவும் பிடிக்கும் என்று அமைச்சர் அன்பழகன் கூறினார். சட்டசபையில் ஜெயலலிதா பேசும்போது;”திருட்டு விசீடி”  தொழிலை ஒழிக்க முதல்வர் நடவடிக்கை எடுத்ததற்காக அடுத்த மாதம் திரைப்படத் துறையினர் பாராட்டு விழா நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. “திருட்டு விசீடி”  தொழிலில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு நான் தான் நடவடிக்கை எடுத்தேன்.

ஆளும் கட்சி உறுப்பினர்களின் பாராட்டு முதல்வருக்கும் பெரிய வியப்பை அளிக்காது. அதனால்தான் திரைப்படத் தயாரிப்பாளர்கள்,இயக்குநர்கள், நடிகர்கள் புகழ்ந்துபேசினால் முதல்வருக்கு மிகவும் பிடிக்கும் போலும்” என்றார்.

உடனே அமைச்சர் அன்பழகன் குறுக்கிட்டு, “எதிர்க்கட்சித் தலைவர் இப்படிப் பேசுவது எதிர்க்கட்சித் தலைவருக்குரிய கண்ணியத்தைப் பாதிக்கும். திரைப்படத் துறையினர் மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது கூட முதல்வருக்கு பிடிக்கத்தான் செய்யும்” என்றார். அப்போது ,முதல்வர் கருணாநிதி சபைக்குள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி-ஜெயலலிதா சண்டை ஆரம்பித்துவிட்டது!

எதற்கு நேரம் இருக்கிறதோ இல்லையோ, இவ்விருவருக்கும் இந்த வயதிலும் பகைமை பாராட்டுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்!

கருப்பு நிறத்தில் இருப்பது “விடுதலையில்” வெளிவந்தது! சிவப்பு நிறத்தில் இருப்பது என்னுடைய விமர்சனம்!

சிறுபான்மையினருக்கு தி.மு.க. ஆட்சி உதவி செய்யவில்லையா? முதலமைச்சர் கலைஞர் பதில்

http://viduthalai.periyar.org.in/20091216/news01.html

சென்னை,டிச.16_ முதல்-வர் கலைஞர் நேற்று வெளி-யிட்டுள்ள-அறிக்கை வருமாறு:

வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல். எதிர்க்-கட்சி-யின் சார்பில் இது-தான் தருணம் என்று ஏதேதோ குற்றச்சாட்-டுகளை நம்மீது சாற்று-கின்றனர். மீனவர்களுக்கு நாம் எதுவும் செய்ய-வில்-லையாம். சிறுபான்-மை-யோருக்கு அவர்கள்-தான் பிரதிநிதிகளாம். அருந்த-தியர்களுக்காக நாம் கொடுத்த வாக்கு-றுதி-களை அமலாக்கவில்-லை-யாம்,பேசியிருக்கி-றார்-கள் திருச்செந்தூரிலே சென்று.

சிறுபான்மையினரைத் தாக்கியவர் ஜெயலலிதா: 1992ஆம் ஆண்டு கர-சேவையின்போது பெரும்-பான்மையினருக்கு ஆதர-வாக ஜெயலலிதா பேசும்-போது சிறுபான்மையி-னரைத் தாக்கிப்பேச-வில்லையா? அப்போது என்ன பேசினார்? அரசி-யல் சட்டத்தின்படி பெரும்-பான்மையின-ருக்குக் கிடைக்கும் சாதா-ரண உரிமைகளையும், சிறப்பு-ரிமைகளையும் பாதிக்கும் வகையில், தங்கள் நலன்-களை முன் வைத்து செயல்படுவது சிறுபான்-மையினருக்கு ஏற்றது அல்ல. இந்த நாட்-டில் பெரும்பான்மை-யோர் இந்துக்கள். பெரும்-பான்-மை-யினரும், அவர்க-ளுடைய உரிமைகளை சிறு-பான்மையினரைப்-போல அனுபவிக்க அனு-மதிக்க வேண்டும். அயோத்-தியில் கோயில் கட்டப்-பட வேண்டும் என்பது இந்த நாட்டின் பெரும்-பான்மையான மக்களின் விருப்பத்தைப் பிரதிநிதித்-துவப்-படுத்-துவதாக உள்-ளது. பெரும்-பான்-மை-யான மக்களின் கருத்தை நாம் புறக்கணிக்-கக்-கூடாது இவ்வாறு பேசி-யவர், இப்போது திருச்-செந்தூருக்குச் சென்று சிறுபான்மை-யி-னருக்கு வேண்டியவர் என்பதைப் போல பேசு-கிறார். இஸ்-லாமியர்க-ளுக்கும், திமுக-வுக்கும் குறிப்பாக எனக்-கும் உள்ள நெருக்கத்-தைப் பற்றி அந்த மக்கள் அறிய மாட்டார்களா? இதோ ஒன்றிரண்டு சான்-றுகள் கூறவா?

இவரும்தான் ஆதரித்து பேசினார் என்று அம்மையர் ஏற்கெனவே எடுத்துக் காட்டிவிட்டார்! எதற்கு பிறகு இத்தகைய சொதப்பலான பதில்!

சிறுபான்மையினருக்கு சலுகைகள்: 1969இல் மீலாது நபிக்கு முதன்முதல் அரசு விடுமுறை; முந்தைய அ.தி.மு.க. அரசு 2001இல் ரத்து செய்த மீலாது நபி அரசு விடுமுறையை 15.11.2006 ஆணை மூலம் மீண்டும் விடுமுறை நாளாக அறிவித்தது;

ஆமாம், துலுக்க நாடுகளிலேயே விடுமுறை இல்லையாம். இவருக்கு என்ன அப்படி பொத்துக் கொண்டு வ்அருகிறது என்றுத் தெரியவில்லை?

1973இல் உருதுபேசும் லப்-பைகள், தெக்கனி முஸ்-லிம்கள் ஆகியோரைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது;

அடடா! இஸ்லாத்திற்கு எதிராக இப்படி செய்வதைக் கண்டு, அறிந்து எப்படி உண்மையான முஸ்லிம்கள் அமைதியாக இருக்கின்றனர்? அவர்களுக்குத் தான் ஜாதியில்லை என்று சொல்லுகின்றனெறே. பிறகு எப்படி கருணாநிதி அல்லாவிற்கு எதிராக முஸ்லிம்களை ஜாதிகள் மூலம் கட்ட முடியும்?

1989 இல் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை-யினர் சமுதாய மக்கள் பெரும்பயன் எய்திடும் வகையில், சிறுபான்மையி-னர் நல ஆணையம் உரு-வாக்கியது;

எதற்கு பெரும்பானமை ஆணையம் உருவாக்கவில்லை? ஜெயலலிதாவும் செய்யவில்லை. இப்பொழுது புரிகிறதா, இந்த கழககங்களின் போலித்தனத்தை?
1999ல் வக்பு வாரியச் சொத்துக்களைப் பராமரிப்பதற்கென முதன்-முறையாக ரூ.40 லட்சம் வழங்கியது;

அப்பணத்தில் காஃபிர் பங்கும் இருக்குமே? பிறகு எப்படி அல்லா ஒப்புக் கொண்டார்? இன்று 2009 வரை யாரும் கேட்காமல் இருப்பது ஆச்சரியம் தான்!1999 இல் தமிழ்நாடு சிறுபான்-மையினர் மேம்பாட்டுக் கழகம் உருவாக்கியது;

1989 ல் ஏற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் நலவாரியத்திற்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? பிறகு ஜெஸியா, ஜகாத் முதலியன என்னாவது?
2000-_ ஆண்டில் உலமா ஓய்வூதியத் திட்டத்தை தர்க்காக்களில் பணிபுரி-யும் முஜாவர்களுக்கும் நீட்டிப்பு செய்தது;

அல்லா இதனை ஏற்ப்பாரா?

2000_ ஆண்டில் உருது அகடமி-யைத் தொடங்கியது;

அரபி அகடமியை ஏண் உருவாக்கவில்லை?

2001இல் காயிதே மில்லத் மணிமண்டபம் ரூ.58 இலட்சத்து 69 ஆயிரம் செலவில் சென்னையில் திறக்க ஆவன செய்தது;

யாராவது கேட்டார்களா? இந்த “மணி மண்டபம்” கட்டும் வியாபாரம் பற்றி ஒன்றும் புரியவில்லை!சிறு-பான்மையினரின் நலனுக்கென தனி இயக்கு-நரகம் அமைத்தது;

ஐயோ நரகமா? முஸ்லிம்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

உலமா மற்றும் பணியா-ளர்கள் நல வாரியம் ஏற்படுத்தியது; என்று இஸ்-லாமிய சமுதாயத்திற்கு கழக அரசு வழங்கியுள்ள சலுகைகளும், நன்மை-க-ளும் கணக்கிலடங்கா-தவை.

எதற்கு பிறகு இவ்வளவு கஷ்டப்பட்டு பதில் கொடுக்கவேண்டும்?

2001 முதல் 2006 வரை அ.தி.மு.க. அமைச்-சரவையில் முதலில் ஆறு மாதம் முஸ்லிம் சமுதா-யத்தின் பிரதிநிதியாக அன்-வர் ராஜா இடம் பெற்-றிருந்தார்; அதற்குப்-பிறகு முஸ்லிம் பிரதி-நிதியே இல்லாமல்தான் அ.தி.மு.க. அமைச்சரவை நடைபெற்றது.

எதற்கு முஸ்லிம்கள் இருக்கவேண்டும்? இதென்ன சட்டமா?

தற்பொ-ழுது திமுக ஆட்சியில் உபயதுல்லா, மைதீன்-கான் ஆகியோர் அமைச்-சர்களாக உள்ளனர். முஸ்-லிம் சமுதாயத்தினருக்குப் பிரதிநிதித்துவம் இல்-லாத தி.மு.க. அமைச்சர-வையே இதுவரை இருந்-ததில்லை.

எதற்கு இந்த போலித்தனம்? ஜின்னாவையே வென்று, கருணாநிதி பாகிஸ்தானின் பிரத மந்திரியாகவா போகிறார்?

முஸ்லிம்க-ளுக்கு 3.5 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்கியது திமுக அரசு.

குரானின்படி, இதுவும் ஹராம்தான்! எதற்கு இந்த ஜாதித்துவம்?

இது போலவே மீனவர்களுக்கு திமுக அரசு செய்த சாத-னை-களில் ஒரு சிலவற்றையும்ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

சிங்கார வேலல் பெயர் சூட்டினேன்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு சிங்காரவேலர் பெயரைச் சூட்டியதே நான்தானே. மீனவர்களுக்கான டீசல் மானியத்தை உயர்த்திக் கொடுத்தது திமுக அரசு. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர் காணாமல் போனால், அவர் திரும்பி வரும் வரையில் அவரது குடும்பத்-துக்கு நாள் ஒன்றுக்கு 50 ரூபாயும் இலங்கை படை-யினரால் சுடப்பட்டு உயிரிழக்கும் மீனவர் குடும்பத்திற்கு ரூ. ஒரு லட்சமும் வழங்கப்படுகிறது. மீன் பிடித்தொழில் மேற்கொள்ளப்படாத காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசின் 50 சதவிகித பங்குத் தொகை ரூ. 300 சேர்த்து வழங்கப்படும் நிவாரணத் தொகை 2006_2007இல் ஒரு லட்சத்து 79,853 உறுப்பினர்களுக்கு ரூ.21 கோடியே 20 லட்சமும், 2007_2008இல் ஒரு லட்-சத்து 76 ஆயிரத்து 17 உறுப்பினர்களுக்கு ரூ.20 கோடியே 83 லட்சத்து 29 ஆயிரத்தையும் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மீன் இனப் பெருக்கக் காலமாக கருதப்படும் காலங்களில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட முடியாத 2 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.10 கோடி நிவாரண உதவியாக வழங்கும் புதிய திட்டம் 2008_2009இல் தான் நடைமுறைப்படுத்தப்பட்டது.

மீனவர் நல வாரியம் அமைக்கப்பட்டு ரூ. 5 கோடி நிதியும் திமுக அரசின் சார்பில் வழங்கப்பட்டு உள்ளது; மீனவர்கள் பயன் பெற உலகத் தரம் வாய்ந்த மீனவர் பயிற்சி நிலையம். சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி சாதனங்-களை கூடுதல் நிவாரணமாக வழங்கும் பொருட்டு ரூ.110 கோடியே 36 இலட்சம் செலவில் பொருட்கள் வழங்கப்பட்டன. 147 முதன்மை மீனவ கூட்டுறவு சங்கங்களின் மூலம் 5635 மீனவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 19 கோடியே 56 இலட்சம் கடன் மற்றும் வட்டி முழுவதையும் திமுக அரசு தள்ளுபடி செய்துள்ளது. கழக அரசைப் பொறுத்த வரையில் மீனவர்கள், சிறுபான்மையோர் என்றல்ல; அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எல்லாவித நன்மைகளையும் செய்ய வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடுதான் பாடுபட்டு வருகின்றது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எல்லாம் சரிதான்!

அரிசிவிலையை யார் குறைப்பது? [அரிசி மட்டுமல்ல, பருப்பு, எண்ணை, சர்க்கரை எல்லாமே]

வெங்காயம் விலையை யார் குறைப்பது? [வெங்காயம் மட்டுமல்ல, மற்ற எல்லா காய்கறிகளும்]

இதற்கு இவ்விருவரும் என்ன செய்யப் போகிறார்கள்?
முன்னம் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது போல, காய்கறி கடைகள் வைத்து காய்கறி விற்றாலாவது மக்களுக்குப் புண்ணியம்!