Posts Tagged ‘திராவிட அமைப்புகள்’

திக-திமுக பேச்சாளர்கள், தலைவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்து பேசி வரும் கெட்ட, ஆபாச மற்றும் மோசமான வார்த்தைகள், வசவுகள் மற்றும் திட்டுகள் (2)

ஜனவரி 14, 2023

திகதிமுக பேச்சாளர்கள், தலைவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்து பேசி வரும் கெட்ட, ஆபாச மற்றும் மோசமான வார்த்தைகள், வசவுகள் மற்றும்  திட்டுகள் (2)

அண்ணாமலையைக் கடுமையாக வசைப் பாடியது: மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மிக மோசமாக பேசியுள்ளார். போலீஸ் வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு ஓடி வந்த அண்ணாமலை திமுகவை பற்றி பேசுகிறார். பிரான்சில் வாங்கிய வாட்சை இந்தியாவில் கட்டிக்கொண்டு தேச பக்தியை பற்றி பேசுகிறார். அவர் தாய் அவரை எப்படி பெற்றெடுத்தார் என்று மிக மோசமாக விமர்சித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை உருவ கேலி செய்து பேசியது அதிமுகவினரை கொந்தளிக்க செய்துள்ளது. கவர்னரை அவதூறாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் கடந்த சில நாட்களாக பேசி வரும் தி.மு.க,வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கோரிக்கை விடுத்துள்ளார்[1]. இது குறித்து அவர் கூறியதாவது[2]: கவர்னர் குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய அந்த தரம் கெட்ட வார்த்தைகள் தி மு கவின் ஒப்புதலோடே பேசப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்யும்.

புகார் கொடுத்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது: “தொடர்ந்து பா.., தலைவர்களை தரக்குறைவாக பேசியது குறித்து புகார் அளித்தும் தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கூட பா.., தலைவர் அண்ணாமலை குறித்து சிவாஜி கிருஷணமூர்த்தி கூறிய கருத்துக்களை கண்டித்து நாம் புகாரளித்திருந்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காது, கண்டும் காணாமல் இருப்பது தி மு கவின் முழு ஒப்புதலோடு பேச வைக்கப்படுகிறார் என்பதையே உறுதி செய்கிறது. காஷ்மீருக்கு கவர்னரை போகச்சொல்லி, தீவிரவாதிகளை இங்கிருந்து காஷ்மீருக்கு அனுப்பி வைத்து கவர்னரை கொலை செய்வோம் என்றும், சட்டசபையில் கொலை செய்தாலும் வழக்கு இல்லை என்று கூறியதும், அடித்தால் வீடு திரும்ப முடியாது என்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டதையும் பார்க்கும் போது, திட்டமிட்ட ரீதியில் தமிழக ஆளுநர் ரவி மீது வன்முறையை கட்டவிழ்த்து விட தி.மு.., சதி செய்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது”.

ஸ்டாலின் சொல்வதும், திமுகவினர் செய்வதும்; “திமுக அரசின் தோல்விகளை மறைப்பதற்கு, சட்ட ஒழுங்கு சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மூடி மறைப்பதற்கு, பொருளாதார ரீதியாக தமிழகத்தை மேம்படுத்த முடியவில்லை என்பதை மறைப்பதற்கு, மத்திய அரசின் பல்வறு நலத்திட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தங்களால் அத்திட்டங்களில் ஊழல்கள் செய்ய முடிவதில்லை என்ற ஆத்திரத்தில்,மாநில அரசு நிர்வாகத்தை திறம்பட செலுத்த முடியாத காரணத்தினால், மொழி ரீதியாக, சாதி ரீதியாக, மத ரீதியாக மக்களை தூண்டிவிட்டு திசை மாற்ற முயற்சிக்கிறது தி.மு.. கவர்னரை காஷ்மீருக்கு செல் என்றும், அங்குநாங்கள்தீவிரவாதிகளை அனுப்பி உன்னை கொன்று விடுவோம் என்று கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதோடு, தி மு கவிற்கு தீவிரவாதிகளின் தொடர்பு குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது. தமிழக காவல் துறை உடனடியாக, இந்த இரு நபர்களையும் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும். இரு நாட்களுக்கு முன்னர் முதல்வர் ஸ்டாலின் , கவர்னர் குறித்து திமுகவினர் விமர்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், இரு நாட்களாக தான் அதிகளவில் ஆளுநரை விமர்சிக்கின்றனர்”.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் தி மு தலைமையின் ஒப்புதலோடு, ஆசியோடு தான் ஆளுநரை தரக்குறைவாக, கொலை மிரட்டல் தொனியில் பேசியுள்ளனர்: “சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் தி மு தலைமையின் ஒப்புதலோடு, ஆசியோடு தான் ஆளுநரை தரக்குறைவாக, கொலை மிரட்டல் தொனியில் பேசியுள்ளனர் என்பது தெளிவாகிறது. தமிழக காவல் துறை தலைவர் ,சென்னை மாநகர ஆணையர் உடனடியாக இந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட. உண்மையில், முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த பேச்சுகளில் உடன்பாடு இல்லையெனில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆர் எஸ் பாரதி இருவரையும் கைது செய்ய உத்தரவிடுவதோடு, தி மு பொது கூட்டங்களில் அமைச்சர்களின் முன்னிலையில் இந்த கருத்துக்களை கூறியிருப்பதற்கு பொறுப்பேற்று தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த இருவரையும் தி மு கவை விட்டு நீக்க வேண்டும். இல்லையேல், ஆளுநர் குறித்த அவதூறுகள் மற்றும் கொலை மிரட்டல்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்,”. இவ்வாறு அவர் கூறினார்.

திகதிமுகவினரின் கெட்ட வார்த்தை பாரம்பரியம்:

  1. தி.மு.க..வின் துணை பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, தேர்தல் பரப்புரையின் போது, கள்ள உறவில் பிறந்த குறைப் பிரசவம் தான் எடப்பாடி பழனிசாமி என தமிழக முதல்வரின் பிறப்பைப் பற்றி அருவருப்பான வகையில் பேசியுள்ளார்.
  2. தி.மு.க.வின் தலைவர் அண்ணாதுரையே இம்மாதிரியான பேச்சுகளுக்கு அடித்தளம் அமைத்தவர். காந்தியார் மீரா பாயுடனும், சுசிலாக்களுடனும், சத்காரியாதிகளிலே ஈடுபட்டுச் சரோஜினிகளின் பராமரிப்பில் பிர்லா மாளிகையில் இருந்தார் என எழுதியவர்.
  3. 1962 அக்டோபர் மாதம் 23ந் தேதி பாரத பிரதமர் நேரு இலங்கை விஜயத்தின் போது, சிறிமாவோ பண்டாரநாயக்காவை சந்தித்து, ஒரு மணி நேரம் விவாதித்த செய்தியை, அண்ணாதுரை, தம்பி, நேருவோ மனைவியை இழந்தவர், சிறிமாவோ கணவனை இழந்தவர், இருவரும் ஒரு மணி நேரம் தனிமையில் சந்தித்தார்கள் என்றால் என்ன நடந்திருக்கும் என சிந்தித்து பார் தம்பி என கட்டுரை எழுதியவர்.
  4. 1962-ல் சேலத்தில் நடந்த தி.க. மாநாட்டில் மாற்றான் மனைவி மற்றொருவனை விரும்பினால் அதை குற்றமாக கருத கூடாது என தீர்மானம் இயற்றிய ஈவெ. ராமசாமி நாயக்கர்.
  5. சேலத்தில் நடந்த தி.முக. பொதுக் கூட்டத்தில், அண்ணாதுரை, சினிமா நடிகையின் கற்பு பற்றி கீழ்தரமாக விமர்சனம் செய்தவர். அவள் ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல. நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல என கூறியது மட்டுமில்லாமல், அவள் தபால்நிலையத்தில் உள்ள மைக்கூடு, அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், நானும் பயன்படுத்தினேன் என்றார்.
  6. சட்டசபையில் திராவிட நாடு எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர் திருமதி அனந்தநாயகிக்கு பெண் உறுப்பினரிடம் பாவாடை நாடா பற்றி விரசமாகச் சொன்னவர் கருணாநிதி.
  7. மதுரையில் இந்திரா காந்தி வருகை தந்த போது, கருப்பு கொடி ஆர்பாட்டம் என்ற பெயரில் தாக்குதல்களை நடத்தியவர்கள் தி.முக.வினர்.
  8. தாக்குதலின் போது இந்திரா காந்தியின் நெற்றியில் கல் பட்டு ரத்தம் வழிந்தது. இது பற்றி கருணாநிதி முன் வைத்த விமர்சனம், அம்மையாருக்கு மாதவிடாய் ஏற்பட்டு இருக்கும் என்ற ஈனத்தனமாக விமர்சித்தவர்.
  9. 1972ல் எம்ஜிஆர் திமுக விலிருந்து பிரிந்து கணக்கு கேட்ட போது, கருணாநிதியின் பதில்களில் முக்கியமான பதில், ‘யாரிடம் கேட்கிறார் கணக்கு, போய் லதாவிடம், சரோஜா தேவியிடம், மஞ்சுளாவிடம் கணக்குக் கேள்’ என்பதுதான்.
  10. அன்பழகனை ஜெயலலிதா உதவிப் பேராசிரியர் என்று குறிப்பிட்டு பேசியதற்கு (திமுகவினர் அன்பழகனை ‘பேராசிரியர்’ என்றே பல காலம் கூறி வந்தனர். சமீபத்தில் தான் ஜெயலலிதா போட்டு உடைத்தார். அவர் கடைசியாக வகித்த பதவி ‘உதவிப் பேராசிரியர்’ என்று கூறியதற்கு, அன்பழகன் சட்டசபையிலேயே “எனக்கு நான் முன்பு செய்த தொழில் தெரியும் உங்களுக்கு உங்கள் பழைய தொழில் தெரியுமா” என்று விரசமாகப் பேசினார்.
  11. கல்லக்குடியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து கடும் விமர்ச்சனம் செய்தார். அதில், அவர் எடப்பாடி இல்ல. டெட்பாடி.
  12. உதயநிதி ஸ்டாலின் – முதல்வர் பதவிக்காக, சசிகலா கால்ல அப்படி தானே விழுந்து கெடந்தாரு. டேபிள், சேர்குள்ளலாம் புகுந்து வந்தாரு. விட்டா அந்த அம்மா காலுக்குள்ளயே புகுந்துருப்பாரு என்று நக்கல் நையாண்டி செய்தார்.

அழுக்கு வார்த்தைகள்: தூற்றுதல் மற்றும் துஷ்பிரயோகத்தின் கலாச்சார வரலாறு” – வெங்கடாசலபதி: 07-01-2017 அன்று மாலை, சென்னை, சென்னை மேம்பாட்டு ஆய்வுக் கழகத்தின் பேராசிரியர் வெங்கடாசலபதி அவர்களால் “அழுக்கு வார்த்தைகள்: தூற்றுதல் மற்றும் துஷ்பிரயோகத்தின் கலாச்சார வரலாறு” வழங்கப்பட்டது. அவர் விசித்திரமான, கோபமான மற்றும் வினோதமான சூழ்நிலைகளில் மக்களால் துஷ்பிரயோகம், சாபம், பெயர்-அழைப்பு, கெட்ட மொழி பயன்படுத்துதல் போன்றவற்றைக் கையாண்டார். 19 ஆம் நூற்றாண்டில், ஷேக்ஸ்பியரில் தோன்றிய அழுக்கு வார்த்தைகள் தாமஸ் பவுட்லரால் அகற்றப்பட்டு “பவுட்லெரிசடோயன்” என்று அழைக்கப்பட்டது. அதே வழியில், பிரிட்டிஷ் அரசாங்கம் சில பகுதிகளை வெளியேற்றிய பிறகு சில தமிழ் இலக்கியங்களை அனுமதித்தது. கமல்ஹாசனின் “அபூர்வ ராகங்கள்” என்ற வார்த்தையில் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதைக் குறிப்பிடும் இலக்கியங்களை விட சினிமாக்களில், அரிதாகவே மோசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. அவர் தேர்ந்தெடுத்த எடுத்துக்காட்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டவை, இது போன்ற மோசமான மொழியைப் பயன்படுத்துபவர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள், மற்றவர்கள் பயன்படுத்தவில்லை. திராவிடத் தலைவர்கள் மேடைகளில் எப்படி அநாகரிகமான, ஒழுக்கக்கேடான வார்த்தைகளால் அவதூறாகப் பயன்படுத்தினார்கள் என்பதை வசதியாக அடக்கி வைத்திருந்தார். பெண்கள் ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்வது போல், இயற்கையில் “ஆணாதிக்கம்” போன்ற துஷ்பிரயோகங்களை அவர் பின்பற்ற முயன்றார். அவர் லாவகமாகவும், முரட்டுத்தனமாகவும், வாய்மொழியாகவும் இருந்தபோதிலும், “அடப்பாவி” என்பதைத் தவிர, எந்த ஒரு மோசமான வார்த்தையையும் அவர் ஒருபோதும் உச்சரிக்கவில்லை. அவர் நான்கு வார்த்தைகளை குறிப்பிட்டார், சில உதாரணங்களை மேற்கோள் காட்டி “F….K” என்ற வார்த்தை. முட்டாள், தட்டான், போர்ச்சுகீசியர் பறவர்களை, முகமதியர் திட்டுவதால் தான் மதம் மாறினர். அதாவது, சேவியர், பாதுகாப்பேன் என்ற சரத்துடன் தான் அவர்களை மதம் மாற்றினார்[3].

© வேதபிரகாஷ்

13-01-2022

இந்திரா காந்தியை, இவ்வாறெல்லாம் வசைபாடினார்………………….பிறகு கூட்டணியும் வைத்டுக் கொண்டார்………..


[1] தினமலர், ஆர்.எஸ். பாரதியை கைது செய்ய பா.ஜ., கோரிக்கை, மாற்றம் செய்த நாள்: ஜன 13,2023 22:19.

[2] https://m.dinamalar.com/detail-amp.php?id=3217369

[3] வெங்கடாசலபதி பேச்சை, இங்கே கேட்கலாம்: https://podtail.com/en/podcast/centre-of-south-asian-studies-seminars/professor-a-r-venkatachalapathy-dirty-words-a-hist/

காமராஜரை வசவு பாடிய, மாமேதை-கலைஞர்-கருணாநிதி……

எம்ஜிஆரையும் இவ்வாறு வசைபாடியுள்ளதை கவனிக்க வேண்டும்……

பத்ரிசேஷாத்ரி, அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டது, பூணூலை அறுப்பேன் என்று சுப.வீரபாண்டியன் பேசிது, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப் பட்டது! (1)

ஒக்ரோபர் 25, 2022

பத்ரி சேஷாத்ரி, அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டது, பூணூலை அறுப்பேன் என்று சுப.வீரபாண்டியன் பேசிது, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப் பட்டது! (1)

பத்ரி சேஷாத்ரி, அறிஞர் அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டு 17-10-2022 அன்று ட்விட்டரில் பதிவு செய்தது: குறிப்பிட்ட சாதியினரை அவதூறு செய்து, மிரட்டல் விடுத்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ள சுப.வீரபாண்டியனை கைது செய்ய தமிழக காவல்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிடுவாரா என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்[1]. பத்ரி சேஷாத்ரி, அறிஞர் அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவு செய்தது கடும் கண்டனங்களைக் கிளப்பிய நிலையில், அவர் தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்[2]. இந்நிலையில், சுப.வீரபாண்டியன் பத்ரி சேஷாத்ரிக்கு கண்டனம் தெரிவித்துப் பேசுகையில், அவர் சார்ந்துள்ள சாதியினரை மிரட்டும் வகையில் பேசியதாக பாஜக நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்[3]. சிறுபான்மையினரான பிராமணர்களை மிரட்டும் வகையில் பேசிய சுப.வீரபாண்டியன் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்[4].

19-10-2022 அன்று தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப் பட்டது: பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரி இடம்பெற்ற தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது[5]. இது தொடர்பான அரசாணை அக்டோபர் 19ஆம் தேதி வெளியான நிலையில், அதற்கு ஒருநாள் முன்பாகத்தான் 18-10-2022 அன்று பத்ரி சேஷாத்ரி அண்ணா தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்[6]. பத்ரி சேஷாத்திரி கிழக்குப்பதிப்பகம் மூலம் பல புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். தொலைக்காட்சி விவாதங்களில் அவர் அரசியல் ஆய்வாளராகவும் பங்கேற்று வருகிறார். வலதுசாரி சிந்தனை கொண்டவராக பொதுவெளியில் அறியப்படும் அவர், தமது ட்விட்டர் பக்கத்தில், அறிஞர் அண்ணாவின் இந்தி எதிர்ப்பு தொடர்பான கருத்துக்கள் அடங்கிய இடுகையை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அதில் இடம்பெற்ற சில கருத்துக்கள் சர்ச்சையாக ஆளும் திமுகவினரால் கருதப்பட்டன.

டுவிட்டர் பதிவுகளும், செய்தி உருவாக்கமும்: பத்ரி சேஷாத்ரி நீக்கம் முன்னாள் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணாவை ட்விட்டரில் தரக்குறைவாக விமர்சித்த கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரியை, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவில் இருந்து நீக்கவேண்டும் என திமுகவினர் பலரும் கோரிக்கை விடுத்தனர்[7]. அதைத் தொடர்ந்து, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனைக் குழுவில் இருந்து பத்ரி சேஷாத்ரி நீக்கப்பட்டு, அக்குழுவை தமிழக அரசு மாற்றி அமைத்தது[8]. எனினும், திமுக எம்.பிக்கள் vs பத்ரி சேஷாத்ரி கருத்துகள் என சமூக வலைதளத்தில் அனல் பறந்தது. இன்றைக்கு, சமூக ஊடகப் பதிவுகள் செய்திகளாக மாற்றப் படுவதை கவனிக்கலாம். இவ்வாறு கிளப்பிவிடும் “செய்தி” ஓரிரு நாள், ஏதோ முக்கியமான விசயம் போல பேசுவார்கள், அலசுவார்கள், பிறகு அமைதியாகி விடுவார்கள். அதை மறந்தும் விடுவர்.

 சுப.வீரபாண்டியனின் வெறுப்புப் பேச்சு: சுப.வீ கொதிப்பு இந்நிலையில், திமுக மேடை ஒன்றில் பேசிய திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், பத்ரி சேஷாத்ரியின் கருத்தைக் கண்டித்திருந்தார்[9]. தமிழகத்தில் ஒருபோதும் ஆரிய மாடலை நுழையவிடமாட்டோம், அண்ணா, கருணாநிதி பற்றி எவன் ஒருவன் தவறாக பேசினாலும் மரியாதை கொடுக்க முடியாது எனப் பேசியிருந்தார் சுப.வீரபாண்டியன்[10]. இந்த நிலையில், ‘பத்ரி சேஷாத்ரி என்பவன் அண்ணாதுரையை முட்டாள் என விமர்சிக்கிறான். இனிமேலும் அமைதியாக இருக்க முடியாது. ‘இதுநாள் வரை சட்டைக்குள் இருந்த பூணுால் மெல்ல மெல்ல வெளியே வருகிறது. கத்தரித்து விடுவோம் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள்.’வழக்கமாக யாரையும் அவன் என்று விமர்சிப்பதில்லை. இனிமேல், மரியாதை கொடுக்க முடியாதுஎன, பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்[11], திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலர் சுப.வீரபாண்டியன். தி.மு.க., ஆதரவாளராக செயல்படும் இவர், தமிழக அரசு அமைத்துள்ள சமூக நீதி குழு உறுப்பினராகவும் உள்ளார்[12]. தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவில் இவரும் உறுப்பினராக உள்ளார் என்பது நோக்கத் தக்கது.

சுப்வீரபாண்டியனின் தாக்கம்: திராவிடத்துவவாதியாக, பெரியாரிஸவாதியாக, உலா வரும் இவர், திகவிலிருந்து, திமுக வரை, சென்னை பல்கலைக் கழக மேடைகளில் பேசுவது வழக்கமாக இருக்கிறது. இம்மாதத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில், சரித்திரத் துறை சார்பில் நடந்த செமினாருக்கு கனிமொழி, மற்றும் இவரும் வந்திருந்தார்கள். கருணானந்தம் ஏற்கெனவே திகவில் இருந்து கொண்டு, சரித்திரத் துறையில், கௌரவ விரிவுரையாளராகவும் பணியாற்றி வந்தார். ஜகதீசன், நாகநாதன் போன்றோரின் நண்பரும் ஆவார். ஆக, இவர்கள் எல்லோரும் பல்லாண்டுகளாக, தமது சித்தாந்தத்தில் ஊறி ஒன்றாக சேர்ந்து வேலை செய்து வருகின்றனர். தமிழக கல்வி, பாடதிட்டம், பாடமுறை, புத்தகங்கள் முதலியவற்றை வடிவமைத்தல், உருவாக்குதல் பள்ளி-கல்லூரிகளில் பாடம் எடுப்பது, விளக்குவது போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அந்நிலையில் தங்களது விசுவாசத்திற்கு ஏற்றபடி தான் பேசுவார்கள், வேலை செய்வார்கள். அத்தகைய ஒற்றுமை இந்துத்துவவாதிகளிடம், குறிப்பாக அரசியல் இந்துத்துவவாதிகளிடம் இல்லை.

பத்ரி சேஷாத்ரியை விமர்சிக்க சாதியை இழுத்து மிரட்டல் விடுத்துள்ள சுப.வீரபாண்டியனை கைது செய்வாரா முதல்வர்?: என பாஜக நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். உங்களுக்கு உரிமை உண்டு இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்ரி சேஷாத்திரியை அரசு பொறுப்பில் நியமிப்பதும், நீக்குவதும் அரசின் உரிமை. அவர் யாரையாவது அநாகரீகமாகவோ, தரக்குறைவாகவோ பேசியிருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரமும், கடமையும் உள்ளது. நேரு, இந்திரா காந்தி, இராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எண்ணற்ற தலைவர்களை அச்சில் ஏற்ற முடியாத தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்த கூட்டம் தான் இந்த திராவிடர் கழக கூட்டம். பிராமண சமுதாயத்தை இழிவாக அதே போல், தற்போதும் ஹிந்து மத கடவுள்களை, மத நம்பிக்கைகளை அநாகரீகமாக, தரக்குறைவாக, இழிவாக பேசிய, பேசிக்கொண்டிருக்கின்ற திராவிடர் கழக மற்றும் அதன் தோழமை கும்பல் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உள்ளது. ஆனால், பத்ரி சேஷாத்ரியை கண்டிக்கும் போர்வையில், திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் சுப.வீரபாண்டியன், பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளதோடு, பூணூலை கத்தரித்து விடுவோம் என்று மிரட்டும் தொனியில் பேசியிருப்பது சிறுபான்மை சமூகமான பிராமண சமூகத்திற்கு விடப்பட்டு இருக்கும் அப்பட்டமான மிரட்டல்.

© வேதபிரகாஷ்

23-10-2022.


[1] தமிழ்.ஒன்.இந்தியா, பூணூலை அறுப்பேன் என்று பேசிய சுப.வீரபாண்டியனை கைது செய்வாரா முதல்வர்? – கொந்தளித்த பாஜக நாராயணன்!, By Vignesh Selvaraj, Updated: Saturday, October 22, 2022, 17:12 IST.

[2] https://tamil.oneindia.com/news/chennai/bjp-narayanan-thirupathy-has-questioned-whether-cm-stalin-will-arrest-suba-veerapandian-who-has-defa-481781.html

[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பூணூலை அறுப்பேன்.! கொந்தளித்த சுப.வீரபாண்டியன்.. கடுப்பான பாஜக , நாராயணன் திருப்பதி,Raghupati R; First Published Oct 22, 2022, 7:24 PM IST; Last Updated Oct 22, 2022, 7:24 PM IST.

[4] https://tamil.asianetnews.com/politics/auspicious-will-stalin-order-the-tamil-nadu-police-to-arrest-veerapandian-rk5qnn

[5] பிபிசி.தமிழ், அண்ணா பற்றிய சர்ச்சை ட்வீட்பத்ரி சேஷாத்ரி இடம்பெற்ற ஆலோசனை குழு மாற்றம்என்ன நடந்தது?, 20 அக்டோபர் 2022

[6] https://www.bbc.com/tamil/india-63326503

[7] தமிழ்.நியூஸ்.18, ட்விட்டரில் அண்ணா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பத்ரி சேஷாத்ரி நீக்கம், News Desk, தமிழ்நாடு, 13:54 PM October 20, 2022.

[8] https://tamil.news18.com/videos/tamil-nadu/action-against-badri-seshadri-for-making-comments-about-anna-on-twitter-822178.html

[9] ஜீ.நியூஸ், பேரறிஞர் அண்ணா முட்டாள்பத்ரி சேஷாத்ரி போட்ட ட்வீட்ஒரே இரவில் தூக்கியடித்த அரசு!, Written by – க. விக்ரம் | Last Updated : Oct 20, 2022, 02:54 PM IST.

[10] https://zeenews.india.com/tamil/tamil-nadu/cn-annadurai-should-be-called-an-idiot-too-says-badri-seshadri-415837

[11] தமிழ்.வெப்.துனியா, அண்ணாவை அவமதித்து பேசிய பத்ரி சேஷாத்ரி..! – ஆலோசனை குழுவிலிருந்து நீக்கி நடவடிக்கை!, Written By Prasanth Karthick; Last Modified; வியாழன், 20 அக்டோபர் 2022 (16:17 IST)

[12] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/badri-sheshadri-removed-from-tn-education-advice-council-122102000059_1.html

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக மற்றும் பத்திரிக்கையாளர்களின் வழக்குகளும், அவற்றின் பின்னணியும் – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (3)

மே 15, 2022

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக மற்றும் பத்திரிக்கையாளர்களின் வழக்குகளும், அவற்றின் பின்னணியும் தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (3)

நீதிமன்றமும் அரசையும், சட்டமன்றத்தையும் மதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தின் இவ்வுத்தரவு பற்றி மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜுஜூ கூறியதாவது[1]: “நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகக் கூறியுள்ளோம். மேலும் இவ்விவகாரத்தில் பிரதமரின் நோக்கம் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளோம். நீதிமன்றத்தையும் அதன் சுதந்திரத்தையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால் லட்சுமண ரேகை என ஒன்று உள்ளது. அதனை அரசின் அனைத்து அமைப்புகளும் மதிக்க வேண்டும். நீதிமன்றமும் அரசையும், சட்டமன்றத்தையும் மதிக்க வேண்டும். எங்களிடம் தெளிவான எல்லை நிர்ணயம் உள்ளது. அந்த லட்சுமண ரேகயை யாரும் கடக்கக்கூடாது,” இவ்வாறு கூறினார்[2]. அப்பிரிவு தேவயில்லை என்ற படசத்தில், இன்னொரு சட்டம் உருவாக்கப் படும். ஏனெனில், தேசத்துரோக கருத்துகள், வேலைகள், தீவிரவாதங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பிறகு அவற்றைக் க்ட்டுப் படுத்த, தடுக்க, தீர்க்க்க, தண்டிக்க நீதிமன்றம், அரசு, சட்டமன்றம், நாடாளுமன்றம் என்ன செய்ய முடியும் என்று கவனிக்க வேண்டும்

பிரிட்டிஷ் கால சட்டங்களில் ஒன்று தேச துரோக சட்டம்[3]. இந்த சட்டம் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கவே அதிகம் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது[4]. இதில் மத்திய, மாநில அரசுகள் எதுவும் விதிவிலக்கல்ல என்றும் கூறப்படுகிறது. இச்சட்டத்தை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் உள்ளன. கடந்த திங்களன்று (மே 09) இம்மனுக்கள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு, இச்சட்டம் குறித்து பரிசீலிப்பதாகவும், அதன் முடிவுகள் வரும் வரை இச்சட்டத்திற்கு எதிரான மனுக்களை விசாரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டது. இந்நிலையில் இன்று மீண்டும் அம்மனுவை விசாரித்த கோர்ட், அச்சட்டத்தை நிறுத்தி வைப்பதாக அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ”அரசின் பரிசீலனை முடியும் வரை தேச துரோக சட்டத்தை பயன்படுத்தக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் பிரிவு 124ஏ-வை பயன்படுத்தி வழக்கு பதியாது என நம்புகிறோம். தேச துரோக வழக்கின் கீழ் உள்ள விசாரணைகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஏற்கனவே தேச துரோக வழக்கில் சிறையில் உள்ளவர்கள் ஜாமின் கோரி நீதிமன்றத்தை அணுகலாம்” என நீதிபதிகள் கூறினர்.

இந்தியாவில் தேசத்துரோக சட்டம், முந்தைய வழக்குகள்: பிரிடிஷ்-இந்திய அரசுக்கு எதிராக இருந்தவர்களைத் `தேசத்துரோகிகள்’ என்று அழைக்கப் பட்டனர், அதில், விடுதலை போராளிகளும் அடங்குவர். பகத்சிங் போன்றவர்கள் தேசத்துரோகிகள் எனராங்கிலேயர் அரசு முத்திரைக் குத்தியது. தேசத் துரோக வழக்கில் திலகர் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1922-ம் ஆண்டு மகாத்மா காந்தி, யங் இந்தியா இதழில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக் கட்டுரை எழுதியபோது, காந்தி மீதும் `யங் இந்தியா’ வெளியீட்டாளர் சங்கர்லால் பாங்கர் மீதும் இந்தச் சட்டம் பாய்ந்தது. “இந்தியர்கள் மீது அடக்குமுறையைப் பாய்ச்சுவதற்காகவே இந்தச் சட்டம் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று காந்தி, 124ஏ பிரிவு குறித்து கூறியுள்ளார். ஜவகர்லால் நேரு இச்சட்டப் பிரிவு 124ஏ ஏற்றுக்கொள்ள முடியாத மிகவும் ஆட்சேபனைக்குரிய சட்டம் எனத் தெரிவித்தார். இந்தியர்களை அடக்கி வைக்கவே தேசத்துரோகச் சட்டத்தை பிரிடிஷ்-இந்திய ஆட்சியாளர்கள் திட்டமிட்டு இயற்றினர் என மகாத்மா காந்தி கருத்து தெரிவித்தார். தேசத் துரோக வழக்கில் வ. உ. சிதம்பரம்பிள்ளை 1908 முதல் 1912 முடிய வரை சிறையில் அடைக்கப்பட்டார். 2003-ஆம் ஆண்டில் விசுவ இந்து பரிசத் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். 2010-இல் எழுத்தாளர் அருந்ததி ராய் காஷ்மீர் பிரிவினைவாதம் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் எழுதியதற்கு தேசத் துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்.

பிரிவு 124 க்கு ஆதரவான கருத்துக்கள்: இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 124 ஏ தேசப் பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. வன்முறை மற்றும் சட்டவிரோதமாக அரசை அகற்றுவதற்கான முயற்சிகள் நடந்தால், அவற்றிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இந்தச் சட்டம் பாதுகாக்கிறது. அரசின் நிலையான தன்மை, தேசத்தின் ஒற்றுமைக்கும் பொருளாதாரத்துக்கும் முக்கியமானதாகும். நீதிமன்ற அவமதிப்பு செய்தால், தண்டனை வழங்கப்படுவது போல அரசை அவமதித்தால் தண்டனை கிடைக்கும் என்பதை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது’ என இதன் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். பல மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இவர்கள் அரசைக் கவிழ்க்க முயன்று, பல்வேறு கிளர்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில், காஷ்மீரத்தில் தேசவிரோத குழுக்கள் வெளிப்ப்டையாகவே, ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றன. இவற்றைத் தடுத்து, அரசை நிலைநாட்ட இந்தச் சட்டம் பயன் படுத்தப்படுவதாக இதன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். 03-07-2019  அன்று நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், “எந்தக் காரணத்தைக் கொண்டும் தேசத்துரோக சட்டம் ரத்து செய்யப்படாது, தேச விரோத, பிரிவினைவாத மற்றும் பயங்கரவாதிகளைத் திறம்பட எதிர்த்துப் போராடுவதற்காகவே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.

பிரிவு 124 க்கு எதிர் கருத்துகள்: தேசத்துரோகச் சட்டம், காலனிய ஆதிக்கத்தின் நினைவாக இன்னும் இந்தியாவில் இருந்து கொண்டிருக்கிறது. ஜனநாயக நாட்டுக்கு இதுபோன்ற சட்டங்கள் பொருந்தாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தன் குடிமக்களுக்குத் தந்த பேச்சு சுதந்திரத்தை இந்தச் சட்டம் பறிக்கிறது’ என்று இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். அரசின் கருத்துக்கு எதிராக நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது, விவாதம் நடத்துவது ஜனநாயகத்திற்குத் தேவையான அத்தியாவசியமான விஷயங்கள். ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கும் உரிமை, விமர்சிக்கும் உரிமை மக்களின் அடிப்படைத் தேவை. “தேசத்துரோக வழக்கை வைத்து இந்தியர்கள் மீது அடக்குமுறையை ஏவிய, பிரிட்டன் தன் நாட்டில் தேசத்துரோக சட்டத்தையே ரத்து செய்து விட்டது. இந்தியாவில் இந்தச் சட்டம் இன்னும் பயன்பாட்டில் இருப்பது ஏன்?,” என்கிற கேள்வியும் இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களிடம் எழுகிறது.

கேதார் நாத் சிங் வழக்கும், தீர்ப்பும்: தேசத் துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124(அ) குறித்து தேசிய அளவில் தீவிர விவாதம் எழுந்துள்ளது. மூன்றாண்டுகள் முதல் ஆயுட்காலம் வரையிலும் நீட்டிக்கக்கூடிய சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்க இப்பிரிவு வகைசெய்கிறது. மத்திய அரசின் பார்வையோ நடைமுறையில் இருந்துவரும் இந்தச் சட்டப்பிரிவு மேலும் தொடர வேண்டும் என்பதாகவே இருக்கிறது. இச்சட்டப்பிரிவு செல்லும் என்று 1962-ல் அளிக்கப்பட்ட கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பையே உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பின்பற்ற வேண்டும் என்ற அரசு வழக்கறிஞர்களின் வாதங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பில் தேசத் துரோகச் சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டபோதிலும்கூட, அப்பிரிவு தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான கட்டுப்பாடுகளையும் விதித்தது. வன்முறையைத் தூண்டிவிடவோ அல்லது அதற்கு அழைப்புவிடுக்கவோ செய்யாதபட்சத்தில், அரசின் மீது கூறப்படும் விமர்சனங்கள் தேசத் துரோகம் ஆகாது என்று அத்தீர்ப்பு வரையறுத்தது.

வினோத் துவாவின் விமர்சனம், அரசியல் ரீதியிலான முறையீடு: தற்போது தொடரப்பட்டிருக்கும் வழக்கு இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் வினோத் துவா, பெருந்தொற்றின்போது புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை மத்திய அரசு எதிர்கொண்ட விதத்தை விமர்சனம் செய்து தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட தேச விரோதக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து எழுந்ததாகும்[5]. வினோத் துவா மீதான இக்குற்றச்சாட்டை, இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்கெனவே தள்ளுபடி செய்துவிட்டது. தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்துசெய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்த வினோத் துவா, குறைந்தபட்சம் பத்தாண்டு காலம் ஊடகங்களில் பணிபுரிந்த பத்திரிகையாளர்கள் மீது இக்குற்றச்சாட்டைப் பதிவுசெய்யும் முன்னர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர், எதிர்க்கட்சித் தலைவர், மாநில உள்துறை அமைச்சர் ஆகியோரைக் கொண்ட குழுவிடம் முன்கூட்டி ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று உத்தரவிடுமாறும் கோரியிருந்தார். உள்நோக்கம் கொண்ட இக்கோரிக்கையில், அரசியல் இருப்பது வெளிப்பட்டது. சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்ற நோக்கில் அவர் கோரிய இந்த வேண்டுதலை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை[6].

© வேதபிரகாஷ்

15-05-2022


[1] தினமலர், லட்சுமண ரேகையை கடக்க வேண்டாம்:சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து மத்திய அமைச்சர்,மாற்றம் செய்த நாள்: மே 11,2022 19:06

[2] https://m.dinamalar.com/detail.php?id=3027322

[3] தினகரன், தேச துரோக சட்டம் மறு பரிசீலினை: ஒன்றிய அரசு, 2022-05-09@ 16:05:06.

[4] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=763940

[5] தமிழ்.இந்து, தேசத் துரோகம் என்னும் காலனிய எச்சம்!,, செல்வ புவியரசன், Published : 09 May 2022 06:46 AM; Last Updated : 09 May 2022 06:46 AM

[6] https://www.hindutamil.in/news/opinion/columns/797680-treason-1.html

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும் –  திராவிடஸ்தான் முதல் திராவிடியன் ஸ்டாக் வரை – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (2)

மே 15, 2022

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும்  திராவிடஸ்தான் முதல் திராவிடியன் ஸ்டாக் வரைதேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (2)

திராவிடஸ்தான் முதல் மாநில சுயயாட்சி வரை: 1930-40களில் தனித்தமிழ் இயக்கம், திராவிட இனக் கட்டுக்கதைகளை வளர்த்தன. சைவம் என்ற போர்வையில், வைணவத்தை எதிர்த்து, தெலுங்கு பேசும் மக்களை அவமதித்த போக்கு, நீதிகட்சியைக் குலைத்து, திராவிட கழக போர்வையில், தமிழக பிரிவினை உருவெடுத்தது[1]. திராவிடஸ்தான் என்று ஆரம்பித்து, “அடைந்தால் திராவிட நாடு, இல்லையென்றால் சுடுகாடு” என்று சென்று, பிறகு, எல்லாமே குப்பையில் என்றாகியது. ஆனால், அத்தகைய தேசவிரோத கொள்கையிலிருந்து மற்ற மொழி மக்கள் வேறுபட்டனர். 1940-50 திராவிட இனவெறி கட்டுக் கதைகளினால் தான், முதலில் ஆந்திரா தனியாகப் பிரிந்தது, முதல் மொழிவாரி மாநிலமானது. தொடர்ந்து “தமிழ்” தான் உயர்ந்தது, அதிலுருந்து தான் மற்ற மொழிகள் தோன்றின என்பதனை சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, தெலுங்கு மக்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பட்டிபோர்லு [Bhattiporlu] வரிவடிவங்களை [script] மற்றும் கல்வெட்டுகளை [inscriptions] வைத்துக் கொண்டு, தெலுங்கு வரிவடிவம் BCE மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று வாதிட்டனர்.

1950-70களில் பெரியார்-அண்ணா திராவிட நாட்டை குப்பைத் தொட்டியில் போட்டனர்: பெரியார் ஆதித்தனாருடன் சேர்ந்து “திராவிட நாடு” தேவையில்லை என்றே பேசினார். அண்ணாவைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை, முதலமைச்சர் ஆக வேண்டும், தேதலில் நிற்க்கவேண்டும் என்றால், பிரிவினை பேச முடியாது. அதனால், திராவிடஸ்தானும் போய் விட்டது, திராவிட நாடும் மறந்து விட்டது, “தமிழ் நாடு” என்பதில் திருப்தி பட்டு, சுருங்கி விட்டனர். அப்படியிருந்த நிலையில், இப்பொழுது, ஸ்டாலின் “திராவிடியன் ஸ்டாக்” என்று பேசியதை / பேசுவதை கவனிக்கலாம். யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கின்றனர் போலும். “திராவிடியன் மாடல்” வசனங்கள் வேறு தொடர்கின்றன. அவை, “ஒன்றிய” அரசுக்கு எதிராக இருக்கிறன. கூட கவர்னர் எதிர்ப்பு வேறு. இவையெல்லாம் தேசவிரோதம் ஆகுமா, தேசாபிமானம் ஆகுமா என்று தெரியவில்லை. “மாநில சுயயாட்சி” வாதம், டிவி விவாதங்களில் எதிரொலிக்கின்றன. திமுக-திக-கம்யூனிஸ்ட் வகையறாக்கள் இதில் சளைத்தவர்கள் அல்லர்.

எம்,ஜி.ஆருக்குப் பிறகு பிரிவினைவாடம் குறைந்தது: “தமிழ்நாடு” உருவானபோது கூட, எல்லை தகராறுகளில் கேரளா, ஆந்திரா மற்றும் ஆந்திராவுடன் எதிராகவே இருந்தது. தமிழநாட்டைத் தவிர மற்ற மாநில மக்கள் தாங்கள் “திராவிடர்கள்” என்றெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், திராவிடத்துவ சித்தாந்தம் தமிழ்நாடு மாநிலத்துடன் சுருங்கி விட்டது. 1950-60களில், “இந்தி-எதிர்ப்பை” கையில் எடுத்து உசுப்பி விட்டனர். 1960-70களில் மேடை பேச்சு, சினிமா வைத்டுக் கொண்டு ஆட்சியைப் பிடித்தனர். 1980-70களில் காவிரி பிரச்சினையில், முன்னர் பாமகவினால், அதிகமாகவே வெறியூட்டப் பட்டு, பிறகு திராவிட பிரிவினைவாதிகளால் தீயூட்டப் பட்டது. அப்பொழுது, இங்கு “உடுப்பி” ஹோட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஶ்ரீ ராகவேந்திர மடங்களும் தாக்கப்பட்டன.  1970-80களில் எம்ஜிஆரால் பிரிவினைவாதம் கொஞ்சம் குறைந்தது. “மாநில சுயயாட்சி” போர்வையில், அவ்வப்போது, திராவிடத்துவ சித்தாந்திகள் பேசுவது வழக்கமாக இருக்கிறது.

ஆரியன்திராவிடன்இனவாதம் முதல் திராவிடியன் ஸ்டாக் இனவெறிவாதம் வரை: திராவிட சித்தாந்திகள் தமிழரை, தமிழகத்தை பிரித்து வைத்து, துவேசத்தை வளர்த்து வருவது: தமிழகத்தில் கடந்த நூறாண்டு காலத்தில், –

  • தமிழ்-தமிழரல்லாதவர்,
  • திராவிடன் – ஆரியன்,
  • தென்னகத்தவன் – வடக்கத்தியன்,
  • வடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது
  • ஹிந்தி-ஹிந்தி-திணிப்பு
  • ஹிந்தி-எதிர்ப்பு இந்தி-திணிப்பு

போன்ற பிரச்சாரங்களால், மற்ற மொழி பேசும், மற்ற மாநிலத்தவர் மீது, மனங்களில் துவேசத்தை வளர்த்து கொண்டிருக்கிறார்கள். “வந்தேறி” தத்துவம் எப்பொழுதுமே உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துக் கொண்டு, மற்றவர்களைத் தாக்கப் பயம் படுத்தப் பட்டு வருகிறது. பிராமணர், மார்வாடி, குஜராத்தி, வடவிந்தியன் போன்ற பிரிவினை துவேசம் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.யைப்பொழுது அது “குஜராத்திற்கு” எதிராக இருக்கிறது. எந்த பிரச்சினை என்றாலும், “தமிழன்” என்று தான் அடைமொழி போட்டு செய்தி போடுவது, ஊடகங்களுக்கும் வாடிக்கையாக இருக்கிறது. ஶ்ரீலங்கா மதப்பிரச்சினை என்றாலும், “தமிழர்-முஸ்லிம்” என்று தான் செய்திகள் வெளியிட்டு, மதப்பிரச்சினையை மறைக்கப் பார்த்தனர்.

2021ல் ஸ்டாலின், திராவிடியன் ஸ்டாக் என்று கிளம்பியுள்ளார்: முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற நான் என்று பதவியேற்று, தான் திராவிடியன் ஸ்டாக் என்று குறிப்பிட்டுக் கொண்டாலும், விளம்பர அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான், திராவிட மொழி பேசும், தனிநாடு கேட்கும், திராவிட இனத்தவரான பலூச்சிஸ்தான் மக்கள் ஜின்னாவில் சிலையை தகர்த்துள்ளனர். இங்கு, கருணாநிதிக்கும், பெரியாருக்கும் சிலைகள் வைப்போம் என்று கிளம்பியுள்ளனர். பிரஹூயி, பிரோஹி, பிரஹூய், என்றெல்லாம் குறிப்பிடப் படுகின்ற மொழி திராவிடக் குடும்ப மொழி என்று திராவிடத்துவ வாதிகள் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள், இன்றும் மேடைகளில் டமாரம் அடிக்கிறார்கள்! பிறகு, அம்மொழி பேசும் மக்களைக் கொடுமைப் படுத்தும் பாகிஸ்தானை ஏன் திராவிடத்துவ வாதிகள் கண்டு கொள்வதில்லை?

பொருளாதாரம்நிதி என்று வந்தால் சித்தாந்தம் முடங்கி விடும்: “காவிரி பிரச்சினை” என்றாலும், திராவிட அரசியல்வாதிகளின்  கையாலாகாத விசயத்தை மறைத்து, கர்நாடகாவை, கன்னட மொழி பேசுபவர்கள் மீது வெறுப்பை-காழ்ப்பை வளர்த்து வருகின்றனர். அதற்கு சத்தியராஜ், விவேக் போன்ற நடிகர்களும் உடந்தையாக இருந்தனர். ஒரு திரைப்படத்தில், “இது பெங்களூரு கத்தரிக்காய், காவிரி நீரால் வளர்ந்து பெரிதாக இருக்கிறது, அது தமிழக கத்திரிக்காய், சிறிதாக இருக்கிறது, காவிரி நீர் கிடைத்தால், அதுவும் பெரிதாக வளரும்,” என்று சொல்வது, பிரிவினையின் வக்கிரகத்தைத் தான் வெளிக்காட்டியது. ஐடியால் கர்நாடகா வளர்ந்த நிலையிலும், வியாபார சம்பந்தங்களினாலும், இப்பொழுது அடக்கி வாசிக்கப் படுகிறது. சன்–குழுமங்களின் தொடர்புகள் அறிந்த விசயமே. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அவை வேறு வகையிலும் செயல்படுகின்றன. பொருளாதாரம், நிதியுதவி, திட்டங்கள் என்றெல்லாம் வரும் பொழுது, “ஒன்றியம்”என்று வேலை செய்யாது. தொடர்ந்து கவர்னரை எதிர்த்து வந்தாலும், வினையில் தான் சென்று முடியும்.

தேசத் துரோகம் எல்லாவற்றிலும் தான் செயல்படுகிறது: தினம்-தினம் கொலைகள், தற்கொலைகள், செக்ஸ்-வக்கிர வன்மங்கள் (அப்பா மகளை கற்பழிப்பது, மாமனார் மறுமகளிடம் எல்லை மீறுவது), வன்முறைகள், குடும்பசீரழிவுகள், கணவன்–மனைவி உறவுகள் சீரழிதல், தாம்பத்தியத்தை மீறிய உறவுகள், குடும்பக் கொலைகள் (அப்பா மனனைக் கொல்லுதல், மகன் அப்பாவைக் கொல்லுதல் முதலியன), குறைந்து வரும் மாணவ-மாணவியர் ஒழுக்கம், நடத்தை, லஞ்சத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம், தினம்-தினம் கைது, சஸ்பெண்ட் என்ற செய்திகள்…இந்நிலையில் திராவிடக் கட்சிகள் பரஸ்பர குற்றச் சாட்டுகள் சொல்லிக் கொண்டு தப்பிக்க / காலந்தள்ள முடியாது. விலைவாசிகள் ஏறுகின்றன என்றால், வியாபர ஒழுக்கம், வணிக தராதரம், முதலியவைப் பற்றி கண்டுகொள்வதில்லை. சங்கங்கள் மூலம் அரசியல் செய்யும் போது, கூட்டுக் கொள்ளைதான் அடிக்கிறார்கள். தக்காளியை ரோடிலும் கொட்டுவார்கள், ரூ.100/-க்கும் விற்பார்கள். கேட்டால் பெரிய பொருளாதார நிபுணன் போல, சப்ளை-டிமான்ட் என்றெல்லாம் கூடப் பேசுவான் திராவிட வியாபாரி.

© வேதபிரகாஷ்

15-05-2022


[1]  இப்பொழுதும் சரவணன், சென்னைப் பல்கலை, சைவசித்தாந்த துறை, போன்ற கும்பல்கள், சைவர் இந்துக்கள் அல்லர் என்று சொல்லி வருகின்றனர். பேஸ்புக்கிலும், இந்த வாத-விவாதங்கள் தொடர்கின்றன.

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும் – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (1)

மே 15, 2022

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும் தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (1)

தமிழகத்தில் இரண்டாவதாக அதிக தேசதுரோக வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன: தமிழகத்தில் கடந்த 2010 முதல் 2020ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் அதிகளவு தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதால், நாட்டிலேயே 2வது இடத்தை பெற்றுள்ளது[1]. இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது[2] என்று தினகரன் கூறுவது வேடிக்கைதான். தேச துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவு குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு  தரப்பு வாதாடி வந்தது. ஆனால், இந்தச் சட்டம் தவறாகப்  பயன்படுத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஒன்றிய அரசின் தரப்பில் கூறப்பட்டது. அதனால், தற்போது நிலுவையில் இருக்கும் தேசதுரோக வழக்குகளையும், இடைப்பட்ட காலத்தில் பதிவு செய்யப்பட்ட தேசதுரோக வழக்குகளையும் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விபரங்கள் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசப் படுவது புதியதல்ல: அதிமுக ஆட்சியில் அதிகம், திமுக ஆட்சியில் அதிகம் / குறைவு என்பதெல்லாம் விசயமே இல்லை, ஏனெனில், தமிழ்-தமிழ்நாடு-தமிழ்தேசம்-தமிழ்தேசியம் என்றெல்லாம் பேசி பிரிவினைவாதத்தில், பிரிவினையில் ஈடுபட்டவர்கள், ஈடுபட்டு வருபவர்கள் அதிகமாக இருக்கின்றனர். கருணாநிதி முதலமைச்சராக இருந்த பொழுது அத்தகையோரின் மாநாடுகளுக்கு தடை விதித்துள்ளனர். கொடைக்கானல் டிவி நிலையத்தில் குண்டுவெடிப்பு, மீன்சுருட்டியில் இந்தியன் வங்கி கொள்ளை-கொலை……போன்றவை ஞாபகத்தில் கொள்ளலாம். தமிழீழம் போர்வையிலும், பல குழுக்கள் செயல் பட்டு வந்தது-வருபவை அறியப் பட்டவையே. இப்பொழுது கிலாபா போர்வையில் முஸ்லிம் குழுக்கள் வேலை செய்து வருகின்றன. ஆகவே, தமிழகத்தில் “ஒன்றிய” போர்வையில் நடந்து வரும் பேச்சுகளும் கவனிக்கப் பட்டு வருகின்றன. “மாநில சுயயாட்சி,” “திராவிடியன் ஸ்டாக்,” “திராவியன் மாடல்” என்பவை எல்லாம் அவற்றின் முகமூடிகளே. ஏனெனில், இப்பொழுது இனம், இனவாதம் எல்லாம் யாரும், எந்நாடிலும் பேசுவதில்லை.

ஐபிசியின் பிரிவு  124ன் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு: தேசதுரோக வழக்கின்படி, எந்தவொரு நபரும் அரசுக்கு எதிரான கருத்துக்களை எழுதினாலோ அல்லது பேசினாலோ அல்லது அத்தகைய உள்ளடக்கத்தை ஆதரித்தாலோ அல்லது தேசிய சின்னங்கள் மூலம்  அரசியலமைப்பை இழிவுபடுத்த முயன்றால், அவர் மீது ஐபிசி-யின் பிரிவு  124ஏ-ன் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படலாம். மேலும், தேச விரோத அமைப்போடு தொடர்புடையவராகவோ அல்லது அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டால் அவருக்கு எதிராகவும் தேசத்துரோக வழக்கு பதிய முடியும். இந்நிலையில், தேசத் துரோகச் சட்டம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது என்று தினகரன் குறிப்பிடுவது தமாஷான விசயம் தான். எல்லாவற்றையும் அதிமுக ஆட்சியின் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த ஐந்தாண்டுகள் பற்றி, பிறகு தான் எடைபோட முடியும். தங்களுக்குத் தானே சான்றிதழ் கொடுத்துக் கொள்ளலாம், ஆனால், மக்களை ஏமாற்ற முடியாது.

2010-2022 ஆண்டுகளில் பதிவான வழக்குகள் எண்ணிக்கை: நாடு முழுவதும் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அதிகளவு தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்த மாநிலமாக பீகார் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை, பீகாரில் மட்டும் 168 தேசதுரோக வழக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து –

தமிழ்நாட்டில் – 139, உத்தரப் பிரதேசத்தில் – 115, ஜார்கண்ட்டில் -62, கர்நாடகாவில் – 50, ஒடிசாவில் – 30, அரியானாவில் – 29, ஜம்மு காஷ்மீரில் – 26,மேற்குவங்கத்தில் – 22, பஞ்சாப்பில் – 21, குஜராத்தில் – 17, இமாச்சல் பிரதேசத்தில் – 15, டெல்லியில் – 14, லட்சத்தீவில் – 14, கேரளாவில் – 14

என்ற வரிசையில் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் திமுக அரசு பெருமைப் பட்டுக் கொள்வதில் ஒன்றும் இல்லை. இந்த ஒரு வருடத்தில், இந்துவிரோத செயல்கள் எவ்வளவு நடந்துள்ளன என்பதை கவனிக்கலாம். அவையெல்லாம் பெருமை சேர்ப்பவை அல்ல. ஒரு நிலையில் அவையும் தேசவிரோதம் ஆகும்.

வழக்குகள் அதிகம், ஆனால், குற்றம் நிரூபிக்கப் படுவது குறைஆக உள்ளது: மேலும், கடந்த 2016 மற்றும் 2019 ஆண்டுக்கு இடையில், தேசத்துரோக வழக்குகளின் எண்ணிக்கை 160 சதவீதம் (93 வழக்குகள்) அதிகரித்துள்ளது. ஆனால் 2019ம் ஆண்டில் தண்டனை விகிதம் என்று பார்த்தால் 3.3 சதவீதமாக உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 93 பேரில் இருவர் மட்டுமே குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தை பொருத்தமட்டில் 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அதிகளவு தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த காலக் கட்டத்தில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது, என்று தினகரன் குறிப்பிட்டு சந்தோசப்படுகிறது. ஆனால், திமுகவின் பிரிவினைவாதம் உலகம் அறிந்தது. இப்பொழுதைய “ஒன்றிய” நிலை தொடர்ந்து, கவர்னர் தாக்கப் பட்டால், த்ஹிராவிடியன் மாடல் தகர்ந்து விடும். சடம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருந்தால், முடிவு வேறு மாதிரி சென்று விடும்..

152 ஆண்டுகள் பழமையான தேசவிரோத சட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்தது: 152 ஆண்டுகள் பழமையான தேசவிரோத சட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது[3]. 124 ஏ சட்டத்தின் கீழ் வழக்கு பதியவும் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், தேச துரோக சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளவர்கள் ஜாமீன் பெற விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளது[4]. ஆங்கிலேயே காலனிய ஆட்சியின்போது அரசுக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் விதமாக தேசத்துரோக வழக்குகள் பதியப்பட்டன. நாடு விடுதலை பெற்ற பின்னரும் காலனிய சட்டமான தேசத் துரோக வழக்கு பதியப்பட்டு வருகிறது.இந்நிலையில், அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது  124A சட்டப்பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்குப் பதியப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. எனவே, காலனியத்துவ தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவான 124A-ஐ ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது.

பத்திரிக்கை சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன: தேச துரோக சட்டத்துக்கு தடைகோரி எடிட்டர்ஸ் கில்டு, பத்திரிக்கையாளர் அருண் சோரி, எம்பி மௌவா மைத்ரா, பி.யு.சி.எல் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. வழக்கு 11-05-2022 அன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசும் மாநில அரசுகளும் தேச விரோத சட்டத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது[5]. தலைமை நீதிபதி அமர்வு, அதனையும் மீறி ஏதேனும் வழக்குகள் எங்காவது பதிவு செய்யப்பட்டால் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டது[6]. இதுதொடர்புடைய வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த சட்டத்தை பயன்படுத்தாமல் இருக்க மத்திய அரசு மாநிலங்களுக்கு கூடுதல் ஆலோசனைகளை வழங்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட 13 ஆயிரம் பேர் நீதிமன்றங்கள் மூலம் ஜாமின் பெற்றுக்கொள்ளவும் உச்சநீதிமனறம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

© வேதபிரகாஷ்

15-05-2022


[1] தினகரன், 2010 முதல் 2020ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் தேச துரோக வழக்கு பதிந்ததில் தமிழ்நாடு 2வது இடம்: சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு மத்தியில் அதிர்ச்சி தகவல், 2022-05-11@ 15:05:14.

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=764520 

[3] NEWS18 TAMIL, தேச துரோக வழக்கு பதிய உச்ச நீதிமன்றம் தடை.. சட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு, Published by:Murugesh M, LAST UPDATED : MAY 11, 2022, 13:41 IST. First published: May 11, 2022, 13:40 IST.

[4] https://tamil.news18.com/news/national/breaking-sedition-law-in-abeyance-supreme-court-urges-centre-states-not-to-file-firs-invoking-section-124a-mur-743986.html

[5] தமிழ்.இந்தியன்.இக்ஸ்பிரஸ், அரசு மறுபரிசீலனை செய்யும் வரை தேச துரோக விசாரணையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!, Written by WebDesk, Updated: May 11, 2022 10:05:24 pm

[6] https://tamil.indianexpress.com/india/supreme-court-interim-order-on-sedition-section-124a-centre-452724/

ஆனைமுகத்தோனுக்கு ஆனைவெடி வைத்து உடைத்தேன் என்று ஆண்டிப்பட்டி ராஜா, ஆனைமுத்து இழவு விழாவில் பேசி ஒப்பாரி வைத்தது! (1)

ஜனவரி 6, 2022

ஆனைமுகத்தோனுக்கு ஆனைவெடி வைத்து உடைத்தேன் என்று ஆண்டிப்பட்டி ராஜா, ஆனைமுத்து இழவு விழாவில் பேசி ஒப்பாரி வைத்தது! (1)

பிள்ளையார் சிலைக்கு அடியில் ஆனை வெடி வச்சவன் நான்“.. அது சுக்குநூறாகி ஊரே ரெண்டாச்சு.. அலறவிட்ட .ராசா:  சென்னை சேப்பாக்கத்தில் பெரியார் ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ ராசா பேசியதாவது :………., என்று ஏசியாநெட்.நியூஸ் கதையை ஆரம்பிக்கிறது[1]. “அதன்பிறகுதான் அந்த விபூதிகளை எல்லாம் தூக்கிப் போட்டேன். தூக்கிப் போட்டதும் இல்லாமல் எங்க ஊரில் ஒரு பிள்ளையார் சிலை இருந்தது, அந்த சிலைக்கு கீழே ஒரு  ஆனைவெடி வச்சுட்டேன்.. அது உடைந்து சிதறியது, பின் அது பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. அதெல்லாம் ஒரு காலம்……,” என்று ராசா பேசியதை வெளியிட்டுள்ளது[2]. “என் வாழ்வில் நான் மாறியதற்கு காரணம் பெரியார் பேசிய அந்த கடைசி பேச்சு தான். பெரியாரின் சிந்தனைகள் என்னுள் வந்த பின்பு ஊரில் இருந்த பிள்ளையார் சிலைக்கு அடியில் ஆனைவெடி வைத்து அதை தகர்த்தவன் தான்,” என திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா கூறியுள்ளார்[3]. பெரியாரின் கருத்துக்கள் உள்வாங்கிய நான் அம்மா கொடுத்த விபூதி பொட்டளங்களை தூக்கி எறிந்ததாகவும் அவர் பேசியுள்ளார்[4]. பொட்டலம், என்று தமிழில் ஒழுங்காக எழுதத் தெரியாத இந்த திராவிடத்துவ வாதிகள் தாம் தமிழைக் காக்கிறோம், உயிரை விடுகிறோம் என்று வீராப்பு-சால்ஜாப்பு பேசி வருகின்றனர்.

விளம்பரம்தினசரி அறிக்கைஅதிரடி டிவி செய்திகள் மூலம் ஆட்சி நடத்துவது: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலம்தொட்டு, மழை வெள்ளம் பாதிப்புவரை அரசு எடுத்த ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் எதிர்க்கட்சிகளான அதிமுகபாஜக பிரச்சாரத்தின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டது என்று திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அதேபோல் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோலுக்கான மாநில வரி குறைக்கப்பட்டுள்ளது, அதேபோல் தமிழக அரசும் அந்த வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன”. விளம்பரம்-தினசரி அறிக்கை-அதிரடி டிவி செய்திகள் மூலம் ஆட்சி நடத்துவது என்பது தொடர்ந்து வருகிறது. ஆக, ஆ. ராசவின் பேச்சு, அத்தகைய பிரச்சஆத்தின் யுக்தியாகவும் இருக்கலாம். ஏனெனில், இதெல்லாம் திராவிடத்துவவாதிகளுக்கு கைவைந்த கலை.

இந்துக்களை எதிர்த்து வரும் கழகங்கள்: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் உண்மையான எதிர்க்கட்சி பாஜகதான் என்பதை கட்டமைக்கும் வகையில் பாஜகவினர் தொடர்ந்த திமுக அரசை மூர்க்கமாக எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் திமுக ஆட்சி என்பது இந்துக்களுக்கும் இந்து மதத்திற்கும் எதிரானது, அதனால்தான் இந்து அறநிலைத்துறையின் பெயரில் இந்துக் கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்குவோம் எனக் கூறி வருகின்றனர். இன்னும் பல்வேறு இடங்களில் கோவில் சொத்துக்கள் மீட்கப்படாமல் உள்ளன[5]. அதை மீட்க முயற்சிகள் இல்லை, அதேபோல விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகளை வைக்க அனுமதி வழங்காததும் இந்து மத விரோத போக்கு இல்லாமல் வேறொன்றும் இல்லை என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்[6]. கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற முழக்கத்துடன் பாஜக செயல்பட்டு வந்தாலும் அதிமுக திமுக என்ற இரண்டு கழகங்களில் அதிமுகவுடன் கைகோர்த்து திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. திமுக எதிர்ப்பு என்பது அரசியல் எதிர்ப்பு மட்டும் அல்ல சித்தாந்த ரீதியான எதிர்பார்க்க பாஜக செய்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில்  அதிமுகதான் எதிர்க்கட்சி என்றாலும் பாஜக- திமுகவுக்கு இடையேதான் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது என்பதே நிதர்சனம்.

கருப்பு சிவப்பு நீலம் ஒன்றாக இருந்தால் மட்டுமே 2024 ல் பாஜக என்ற காவியை வீழ்த்த முடியும்: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “இந்நிலையில் அதை மெய்ப்பிக்கும் வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் .ராசா பெரியாரின் சுயமரியாதை மற்றும் கொள்கை பாதையைப் பின்பற்றிய ஆனைமுத்து படத்திறப்பு விழாவில் இந்து மதத்தை தான் ஏன் எதிர்க்கிறேன் என்றும், காவி எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்தும் விளக்கி பேசியுள்ளார். மேலும் கருப்பு சிவப்பு நீலம் ஒன்றாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே 2024 ல் பாஜக என்ற காவியை வீழ்த்த முடியும்,” என்று பேசியுள்ளார்[7]. தொடர்ந்து அவர் தனது பேச்சுக்கள் மூலம் பாஜக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.  இதை தமிழ்.ஒன்.இந்தியாவும் வெளியிட்டுள்ளது[8]. இங்கு பச்சையை ஏன் விட்டனர் என்று தெரியவில்லை. அதை வைத்து தான், கடந்த 100 ஆண்டுகளாக ஆட்சி நடத்துகின்றனர், பிரிவினையையும் வளர்த்து வருகின்றனர். தீவிரவாதத்தை வளர்க்கின்றனர் என்று தெரிந்தும், கூட்டு வைத்துக் கொண்டு அரசியல் நடத்தி வருகின்றனர். இதைப் பற்றி என்.ஐ.ஏ, மற்ற அனைத்துலக நிறுவனங்களே எடுத்துக் காட்டி வருகின்றன. இருப்பினும், இங்கு ஒன்றுமே தெரியாதது போலவும், உள்ளூர் ஊடகங்களில் செய்திகள், தகவல்கள் வராமலும் கட்டுப்பாடுகளை வைட்துள்ளனர்.

.ராசாவின் பேச்சுஅதன் விவரம் பின்வருமாறு: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது,   சென்னை சேப்பாக்கத்தில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் சார்பில் பெரியாரியல் பெரியார் ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் நினைவலைகள் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர் அதில் நாடாளுமன்ற உறுப்பினர் திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆ ராசா கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர், “96 வயது வரை வாழ்ந்து, 75 ஆண்டுகாலம் பெரியார் குறித்து மட்டுமே பேசி மறைந்த ஆனைமுத்து படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு நீண்ட நெடியது, டெல்லிக்கு வரும்போதெல்லாம் என் வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் பேசுவார். ஒரு தத்துவத்தை கூறி அந்த தத்துவம் நிறைவேறுவதை தன் கண்ணால் பார்த்த ஒரே தலைவர் பெரியார் அந்த பெரியாரே பேரறிஞர் என ஆனைமுத்துவை கூறினார். அதை விட அவருக்கு நாம் என்ன பெருமையை செய்ய முடியும். பூலோக ரீதியாக ஆனைமுத்துவும் நானும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள்”.

© வேதபிரகாஷ்

06-01-2022


[1] ஆசியாநெட்.நியூஸ், பிள்ளையார் சிலைக்கு அடியில் ஆனை வெடி வச்சவன் நான்“.. அது சுக்குநூறாகி ஊரே ரெண்டாச்சு.. அலறவிட்ட .ராசா, Ezhilarasan Babu, Chennai, First Published Jan 4, 2022, 10:57 AM IST.

[2]  https://tamil.asianetnews.com/politics/i-am-the-one-who-put-the-elephant-explosive-under-the-idol-of-pillaiyar-a-rasa-speech–r5675u

[3] விநாயகருக்கே வெடி வச்சவன் நான்! ஆ.ராசா பேச்சு | A Raja Speech | Periyar | DMK | Anaimuthu | Aa Rasa, Jan 3, 2022.

[4] https://www.youtube.com/watch?v=EQnK87JGQhQ

[5] ஒரேதேசம், பிள்ளையார் சிலைக்கு யானை வெடிவச்சு சிலையை சுக்குநூறாக்கியவன் நான்! .ராசாவின் ஆணவ பேச்சு!, Oredesam BY OREDESAM  January 4, 2022.

[6] https://oredesam.in/explosive-statue-to-the-pillaiyar-statue/

[7] தமிழ்.ஒன்.இந்தியா, கருப்பு + சிவப்பு + நீலம் ஒன்றாகட்டும்.. காவியை விட்டுவிடுவோம்.. சேப்பாக்கத்தை தெறிக்கவிட்ட .ராசா, By Hemavandhana Published: Monday, January 3, 2022, 12:09 [IST]

[8] https://tamil.oneindia.com/news/chennai/bjp-can-be-toppled-if-black-red-and-blue-combine-says-mp-a-rasa-444125.html

ஆரிய-திராவிட போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது, தொடர்கிறது – வீரமணியின் புலம்பல் – ஜெயலலிதாவுக்கு முன்பும்-பின்னும் (4)

ஜனவரி 15, 2017

ஆரியதிராவிட போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது, தொடர்கிறது  – வீரமணியின் புலம்பல்ஜெயலலிதாவுக்கு முன்பும்பின்னும் (4)

deepa-assertive

தீபாவை இயக்குவது பாஜக என்கிறீர்களா?: சசிகலாவை எதிர்க்க வலிமையான தலைவர்கள் இல்லாத நிலையில் உறவு என்ற பெயரில் தீபாவை பாஜக மறைமுகமாகத் தூண்டி வருகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஜெயலலிதாவின் உறவினர் என்பதைத் தவிர தீபாவுக்கு எந்தத் தகுதியும் இல்லை. ஆனால், சசிகலா கடந்த பல ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் இருந்து அவரது அரசியல் வியூகங்களை உணர்ந்தவர். அது செயல் வடிவம் பெற பெரும் பங்காற்றியவர். எனவே, தீபாவுடன் சசிகலாவை ஒப்பிடுவதே பெரும் தவறு.

தமிழக பிஜேபியிலும் ஜாதி அரசியல் உள்ளது என்பது நிதர்சனம். ஆகவே, தீபாவை பிஜேபி ஆதரிக்கிறது என்பது பொய். அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்கள், சசிகலாவின் எதேச்சதிகாரத்தை-சசிகலா-குடும்ப ஆட்சியை எதிர்ப்பவர்கள், எம்.ஜி.ஆர்-ஜெயலிதா அபிமானிகள் தான் தீபாவை ஆதரிக்கின்றனர். இது வெளிப்படையான உண்மை.

 j-jayakumar-marriage-in-1972-jaya-can-be-seen

ஜெயலலிதா மறைவால் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பாஜக தலைவர்கள் பேசி வருகிறார்களே?: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக ஓ.பன்னீர் செல்வமும், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும் பதவியேற்றுள்ளனர்.

எனவே, தமிழக அரசியலில் வெற்றிடம் எதுவும் இல்லை. உண்மையில் வெற்றிடம் இருப்பது ஆளுநர் மாளிகையில்தான். முதலில் அந்த வெற்றிடத்தை நிரப்பிவிட்டு அரசியல் வெற்றிடம் பற்றி பாஜகவினர் பேசட்டும். மிகப்பெரிய மாநிலமான தமிழகத்துக்கு தனியாக ஒரு ஆளுநரை நியமிக்காமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லை, ஸ்டாலினோ அரசியல் மற்றும் இதர விசயங்களில் பலமானவரோ, முதிர்ச்சியுள்ளவரோ இல்லை. ஜெயலலிதா இல்லாமல் இருந்தும், திமுகவினரால் ஒன்றும் செய்து விட முடியாது. உண்மையில், திமுக தனது பணபலத்தால், அதிமுகவை உடைக்க முடியும், ஆனால், ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது. இதுதான் பிரச்சினை.

deepa-i-will-enter-politics-with-pande

பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் கொள்கை ரீதியான வேறுபாடுகள் இல்லை என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியிருக்கிறாரே?: இப்படி பேசுவதும்கூட பாஜகவின் சதித் திட்டத்தின் ஓர் அங்கம்தான். ஜெயலலிதாவுக்கு கடவுள், மத நம்பிக்கை இருந்ததால் மட்டும் அதிமுக இந்துத்துவ கட்சியாகி விடாது.

இட ஒதுக்கீடு, சமூகநீதி, இந்தி எதிர்ப்பு என திராவிட இயக்கக் கொள்கைகளை என்றுமே அதிமுக விட்டுக் கொடுத்ததில்லை. இன்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நிகழ்ச்சியை அதிமுக நடத்துகிறது. பெரியாருக்கு விழா எடுக்கிறது. இதுவெல்லாம் பாஜகவின் கொள்கைகள்தானா என்பதை வெங்கய்ய நாயுடுதான் விளக்கவேண்டும். ஜெயலலிதா பார்ப்பனராக இருந்தாலும், பார்ப்பனர் கட்சியாக அதிமுகவை நடத்தவில்லை.

செக்யூலரிஸம் என்ற ரீதியில், இவருக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை என்பதை எடுத்துக் காட்டியுள்ளார். இந்து-எதிர்ப்பு நாத்திகத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இவற்றுடன் தான் அந்த பார்ப்பன-எதிர்ப்பும் வருகிறது. காலத்தின் கட்டாயத்தில், பிஜேபியும் அதையெல்லாம் செய்து வருகிறது. ஒருவேளை ஆட்சிக்கு வந்தால், அவற்ரையெல்லாம் “திராவிட பாரம்பரியப்படி” செய்யும். இப்பொழுது “ஜல்லிக்கட்டுக்கு” ஜால்ரா போடுவதும் அந்த விதத்தில் தான்.

deepa-who-supports-her

ஜெயலலிதாவுக்காக அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள், இனி பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்றும் வெங்கய்ய நாயுடு கூறியிருக்கிறாரே?:

அவர் தனது ஆசையை கூறியிருக்கிறார். அதிமுக தொண்டர்கள் திராவிட இயக்கக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள். அதனால்தான் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அதில் உறுதியாக நின்றனர். எனவே, அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள் ஒருபோதும் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். சமூகநீதிக்கு எதிரான மனநிலை கொண்ட பாஜகவை தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்.

அதிமுக-பிஜேபி கூட்டு என்பது, திமுக-பிஜேபி கூட்டு போன்றது. அப்பொழுது, திமுககாரர்கள் பிஜேபிக்கு ஓட்டுப் போடவில்லையா அல்லது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் டி.ஆர்.பாலு போன்றோருக்கு வேலை செய்யவில்லையா? வீரமணி இவ்வாறு பிதற்றுவது வேடிக்கையாக இருக்கிறது, மற்றும் அவரது பய்த்தை வெளிப்படுத்துகிறது.

deepa-who-supports-her-admk-disgruntlers

50 எம்.பி.க்களை வைத்துள்ள அதிமுகவை பாஜக பகைத்துக் கொள்ளும் என நினைக்கிறீர்களா?:

நாடாளுமன்றத்தில் 50 எம்.பி.க் களுடன் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து 3 ஆவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. இந்த அசுர பலத்துக்கு முன்பு எந்த அதிகாரமும், அச்சுறுத்தலும் சாதாரணம் என்பதை ஜெயலலிதா நிரூபித்து வந்தார். இதை உணர்ந்து இன்றைய அதிமுக தலைமை செயல்பட வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் தயவு பாஜகவுக்கு தேவை. இந்தச் சூழலை அதிமுக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஜி.எஸ்.டி விவகாரத்தில் தான் பிஜேபி பயந்து வந்த்து. ஜெயலலிதா மறிந்து விட்டதால் தான் மோடி, சசிகலா தலைமீது கைவைத்து, நடராசனுடன் பேசினார். இவர்கள் ஆதரவு இருந்தாலும், இல்லாவிட்டாலும், சட்டம் அமூலுக்கு வரும். ஆகவே, 50 எம்பிக்களை வைத்து, பாராளுமன்றத்தில் இனி பாட்டு பாடுவதை விடுத்து, மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு கலாட்டா செய்யலாம்.

jayas-death-created-a-vacuum-in-the-dravidian-polity

அதிமுக திராவிடக் கட்சி என்பதை திராவிட இயக்கத்தினரே ஏற்பதில்லை. ஆனால், நீங்கள் தாய்க் கழகம் என்ற முறையில் சசிகலாவுக்கு வேண்டு கோள் விடுப்பதாக கூறியுள்ளீர்களே?:

எங்களைப் பொறுத்தவரை அதிமுகவும் திராவிட கட்சிதான். திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை யான இட ஒதுக்கீடு, சமூக நீதியில் அதிமுக உறுதியாக உள்ளது. 31 சதவீத இட ஒதுக்கீடு 68 சதவீதமாக உயர அதிமுகவே காரணம். வைகோ எடுக்கும் முடிவுகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் மதிமுகவும் திராவிடக் கட்சிதான்.

குழப்பத்தில் உள்ள வீரமணிக்கு, திராவிடத்துவத்தை உயிரூட்ட திட்டம் போடுகிறார் போலும். இடவொதிக்கீடு பேசியே, தமிழகத்தை ஆண்டுவிட முடியாது, ஊழலைப் பற்றி பேசாதது, திராவிடத்துவத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. ஊழல் வழக்குகளில் சிக்கியதால் தான் சசிகலா-ஜெயலிலதா மாட்டிக் கொண்டனர், சிறை சென்றனர். வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

 deepa-at-jayas-tomb-marina

திமுகவை மட்டும் ஆதரித்து வந்த நீங்கள், இப்போது அதிமுகவையும் ஆதரிக்கிறீர்கள். இரு கட்சிகளையும் ஒன்றாகவே கருதுகிறீர்களா?:

திமுக, அதிமுக இரண்டும் திராவிடக் கட்சிகள். ஒரு தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன் – தம்பி போன்ற இயக்கங்கள். எதிரிகளுக்கு இடம் கொடுக்காமல் இந்த இயக்கத்தில் ஒன்று ஆளுங்கட்சியாகவும், மற்றொன்று எதிர்க்கட்சியாகவும் இருப்பதே பெரியார் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகும். எந்த ஆட்சியாக இருந்தாலும் நல்லது செய்தால் பாராட்டுவோம். கொள்கைப் பாதையிலிருந்து விலகிச் சென்றால் தவறுகளை சுட்டிக் காட்டுவோம்”, இவ்வாறு கி.வீரமணி கூறினார்[1].

திராவிடத்துவவாதிகள் எப்படியெல்லாம் பொய் சொல்வார்கள் என்பதற்கு, இவர் தான் உதாரணம். பெரியார் சொன்ன “கண்ணீர் துளிகள்”, மற்றும் நெடுஞ்செழியன் குறிப்பிட்ட “கடல்நீர் துளிகள்” முதலியவற்றை மறைத்துப் பேசுவது வீரமணியின் கைவைந்த கலை. ஊழலின் ஊற்று, சமுத்திரம் என்றெல்லாம் அதிமுக-திமுக வர்ணிக்கப் பட்டது, அப்பொழுது, அதற்கு காரணம் திகதானே? பிறகு இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது, “தவறுகளை சுட்டிக் காட்டுவோம்” என்பதற்கு?

© வேதபிரகாஷ்

15-01-2017

jaya-sasi-deepa-all-together-1992

[1] எம். சரவணன் நன்றி: ‘தி தமிழ் இந்து’ 13.1.2017

வசைபாடி மன்னிப்புக் கேட்கும் திராவிடத்துவத்தின் மகத்துவம் என்ன – மன்னிப்பினால் துவேச-தூஷணங்களின் தாக்குதல் அடங்குமா, மறையுமா, குறையுமா?

ஏப்ரல் 9, 2016

வசைபாடி மன்னிப்புக் கேட்கும் திராவிடத்துவத்தின் மகத்துவம் என்ன – மன்னிப்பினால் துவேச-தூஷணங்களின் தாக்குதல் அடங்குமா, மறையுமா, குறையுமா?

கரு முஸ்லிம் லீக், குழுக்களுடன்

திராவிட கட்சி பேரங்களில் ஈடுபட்ட முஸ்லிம்கள்:. “நேற்று (ஏப்.6) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்கலை சந்தித்தபோது, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விளக்கம் அளித்தேன். அக்கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும், சில மாவட்டச் செயலாளர்களும் அக்கட்சித் தலைமை சட்டமன்ற தேர்தல் குறித்து மார்ச் 23ஆம் தேதியன்று எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைமையைக் கடுமையாக விமர்சித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கூறிய கருத்துகளுக்குப் பதில் சொல்லும் விதத்தில் சில விளக்கங்கள் அளித்தேன். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினரை தலைமைக்கு எதிராக அறிக்கை விடச் செய்ய திராவிட முன்னேற்றக் கழகம் கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து, வலை வீசுகிரார்கள், அதற்குச் சாட்சியமாக திருநெல்வேலி மாவட்டத்தில் தேமுதிக நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் முகமது அலி என்பவரை அக்கட்சித் தலைமைக்கு எதிராக அழைத்து வந்தால் அவருக்கு 3 கோடியும், அழைத்து வருபவருக்கு 50 லட்ச ரூபாயும் தருவதாக, கோல்டன் கான் என்ற இஸ்லாமிய நண்பரிடம், தேனியைச் சேர்ந்த நஜ்முதீன் பேசி இருக்கிறார் என்ற தகவலைச் சொன்னேன்[1]. வைகோ அறிக்கை தொடர்கிறது.

கரு-இந்திராவை வசை பாடியது- மாத விடாய்நான் வணங்கும் தெய்வமான என் அன்னை மாரியம்மாள் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்: “பணம் வாங்கிக் கொண்டு கட்சி மாறுவது இழிவானது என்று கூறியபோது, இது உலகத்தின் ஆதித்தொழிலைப் போன்றது என்று கூறினேன். ஆனால், அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களைக் குறித்தோ, அவரது குடும்பத்தினர் குறித்தோ, மறைமுகமாக இப்படிச் சொல்ல வேண்டும் என்று இம்மி அளவும் என் மனதில் எண்ணம் இல்லை என்பதை, நான் வணங்கும் தெய்வமான என் அன்னை மாரியம்மாள் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். ஆனால், அதன்பின் நாதஸ்வரம் வாசிக்கும் அகலை அவருக்குத் தெரியும் என்று கூறியது, தவறாகப் பொருள் கொள்ளும்படி ஆகி விட்டது. அது மிகப்பெரிய தவறுதான், அண்ணன் கலைஞர் அவர்களைச் சாதியைக் குறித்து நான் இப்படிச் சொன்னதாகப் பழிப்பதற்கும் நான் ஆளாகி விட்டதை எண்ணி வேதனைப்படுகிறேன். நான் சாதிய உணர்வுகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவன், அதை அண்ணன் கலைகர் அவர்களே அறிவார்கள்.” வைகோ அறிக்கை தொடர்கிறது.

வைகோ 1978ல் பேசும் படம் - திருமலை நாயக்கர் விழா

என் உயிர் பிரியும் வரை உங்களுக்கு நான் கும்பகர்ணனாகவே இருப்பேன்:  “அண்ணன் கலைஞர் அவர்களை 30 ஆண்டுகளாக என் நெஞ்சில் வைத்துப் போற்றியவன் நான். அவர் மீது துரும்பு படுவதர்கும் சகிக்காதவனாக, அவருக்கு ஒரு கேடு என்றால் அதைத் தடுக்க என் உயிரையும் தத்தம் செய்யச் சித்தமாக இருந்தவன் நான். அதனால் தான் 1993 அக்டோபர் 3 இல் என் மீது கொலைப்பழி சுமத்தப்பட்டபோது, என் உயிர் பிரியும் வரை உங்களுக்கு நான் கும்பகர்ணனாகவே இருப்பேன் என்று அறிக்கை விட்டேன். ஆனால், உலகின் ஆதித் தொழில் என்று கலைஞர் குடும்பத்தைக் குறிப்பிட்டு நான் கூறியதாகக் கருதுவதற்கு ஒரு இடம் ஏற்பட்டு விட்டதே என்பதை நினைக்கும்போது என் மேனி முழுவதும் நடுக்கமுற்றது என்பதை என் அருகில் இருந்தவர்கள் அறிவார்கள். இப்படி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன். அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். அண்ணன் கலைஞர் அவர்கள் தாயுள்ளத்தோடு என் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன், ”  இவ்வாறு அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.  வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்[2]. அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கின்றேன். என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்[3].

Anti-Hindu Karunanidhiதிராவிடத் தலைவர்களின் பரஸ்பர வசைபாடுகள்: 1960களிலிருந்தே, பொதுவாக திராவிட சித்தாந்திகள், மேடை பேச்சாளிகள், அரசியல்வாதிகள், முதலியோர் ஆபாசமாக, கொச்சையாக, கேவலமாக, இரட்டை அர்த்தம் தொணிக்க பேசுவது எல்லாம் சகஜமாக இருந்தது. இப்பொழுது, ஊடகங்கள் மூலம் அவை பரவி வருவதால், இக்காலத்தவர், அடடா என்ன பெரியார், அண்ணா, கருணாநிதி …… முதலியோர் இப்படியா பேசினர் என்று திகைக்கின்றனர். இதனால், அவர்களைப் பற்றிய கருத்துகளும் இளைஞர்களிடையே மாறி வருகின்றன. உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்ப்போம்[4]:

  1. கருணாநிதி ‘காமராஜரின் தாய் கருவாடு விற்றவர்’ என்று சொன்ன போது கண்ணதாசன் தாக்குதல் மிகக்கடுமையாக இருந்தது. “என் தலைவனின் தாய் கருவாடு மட்டும் தான் விற்றார்” [அப்படியென்றால், வேறென்னதை விற்றார் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?].
  2. கண்ணதாசன் இறந்த போது கருணாநிதி இரங்கல், “தென்றலாய் வீசியவனும் நீ! நெருப்பாய் சுட்டவனும் நீ! தாக்குகின்ற கணை எத்தனை நீ தொடுத்த போதும் அத்தனையும் தாங்கும் என் நெஞ்சே உன் அன்னை!”  [அதாவது கருணாநிதி, பதிலுக்கு, உங்கம்மாதான் அப்படி செய்வாள் என்பது போல சாவு-இரங்களிலும் மறக்காமல் வசைப்பாடி பழித்தீர்த்துக் கொண்டுள்ளார்]
  3. எம்.ஜி.ஆர் புதுகட்சி ஆரம்பித்த போது கருணா நிதியின் எள்ளல் அன்று – எம்.ஜி.ஆர், “கூத்தாடி”, அதிமுக “நடிகர் கட்சி!” தன் மீதான “கூத்தாடி” …..என்றெல்லாம் பேசினார் [ஆனால், அண்ணா, முதலியோர் நாடகம்-சினிமா துறைகளில் நடிகனாக, எழுத்தாளராக…….வேலைப் பார்த்து பணம் சம்பாதித்தை மறந்து-மறைத்து வசைப்பாடியது].
  4. இதனால், அத்தகைய விமர்சனத்திற்கும், அதிமுக – ’நடிகர் கட்சி’ எள்ளலுக்கும் எம்.ஜி.ஆர் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து சொன்னார், “கருணாநிதி தாசி பரம்பரை” என்றார் [என்ன செய்வது, பொறுமைக்கும் ஒரு இல்லையுண்டல்லவா, பொதுவாக எம்ஜியார் அப்படியெல்லாம் பேச மாட்டார். ஆனால், தூண்டப்பட்டார்].
  5. எம்.ஜி.ஆர் மறைந்த போது கருணாநிதி புகழாரம், “சொல்வாக்கும் செல்வாக்கும் மிகுந்த முதலமைச்சர்!” [அதாவது கருணாநிதி, பதிலுக்கு, “சொல்வாக்கு” என்று குறிப்பிட்டு சாவு-இரங்களிலும் மறக்காமல் வசைப்பாடி பழித்தீர்த்துக் கொண்டுள்ளார்]

அதாவது, தொடர்ச்சியாக ஒருவரை மோசமாக விமர்சித்துக் கொண்டே இருந்தால், ஒருநிலையில், யாரும் பொறுமை இழக்க நேரிடும் என்பதற்காக இது எடுத்துக் காட்டப் படுகிறது. மேலும், பெரியார், அண்ணா, கருணாநிதி ……போன்றோர் இவாறெல்லாம் பேச வேண்டிய அவசியம் என்ன என்பதும் நோக்கத்தக்கது.

பார்ப்பன கூட்டம் நடுங்க வேண்டும் - 23-02-2012

பிராமண எதிர்ப்பு விளைவுகள்யாரோஅனோனிமஸ்” என்று பதிவாகியுள்ளது[5]: தமிழகத்தில் பிராமணர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதை யாரும் பதிவி செய்து வைக்கவில்லை என்றே தெரிகிறது. பெரியாரிலிருந்து, இன்று கருணாநிதி வரை “பார்ப்பன எதிர்ப்பு”, “பார்ப்பனீய எதிர்ப்பு”, “ஆரியர் துவேசம்” போன்ற போர்வைகளில் பிராமணர்கள் பலவிதங்களில் பலவித தாக்குதல்களுக்கு உட்படுத்தப் பட்டு வருகிறார்கள். உதாரணத்திற்கு, பிராமணர்கள் தாக்கப்படுவது குறித்து ஒருவர் பதிவு செய்துள்ளதை இங்கு குறிப்பிடுகிறேன். “புத்தூர் அக்ரஹாரத்திலும், ஸ்ரீரங்கத்திலும் இன்னும் நூற்றுக்கணக்கான அக்ரஹாரங்களிலும் பிராமணர்கள் ஒவ்வொரு முறையும் தி மு க வெற்றி பெறும் பொழுது தாக்கப் பட்டே வருகிறார்கள். உடம்பு பூராவும் ரத்தக் காயங்களுடன் கொலை வெறி பிடித்த தி மு க வினரால் தாக்கப் பட்டு உயிர் தப்பி வீடு வந்த என் தந்தையை சிறு வயதில் நான் கண்டு அடைந்த நடுக்கம் இன்று வரை போகவில்லை. தமிழ் நாட்டு பிராமணர்கள் மனதில் ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் வாழ்ந்த யூதர்களிடம் இருந்த அதே அச்சம் நிலவி வருகிறது என்பதே உண்மை நிலை. இன்று கருணாநிதி முரசொலியில் ஜெயலலிதாவை எத்தனை முறை கடும் வெறியுடன் பாப்பாத்தி என்று எழுதியிருக்கிறார் என்பதைப் படித்தீர்களா? அதைக் கண்டித்து ஒரு கட்டுரை எழுதும் நேர்மை உங்களுக்கு உண்டா? அதைப் படிக்கும் ஒவ்வொரு பிராமணன் மனதிலும் அச்ச உணர்வு ஏற்படுவதில்லை என்று எப்படிக் கூசாமல் எழுத முடிகிறது?” “கருணாநிதியின் பிராமண துவேஷம் ஏன்?’ என்ற கட்டுரையில் அப்பின்னணியை விவரித்துள்ளேன்[6]. சென்ற தேர்தலுக்குப் பிறகு, திராவிட இயக்க நூற்றாண்டு துவக்க விழா நேரத்தில், கருணாநிதி ஜெயலலிதாவைத் தாக்குவது போல, பிரமணர்களின் மீது அவதூறாக, வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியது ஞாபகத்தில் கொள்ளலாம்[7]. பொய்களை வைத்து, தனக்கேயுரிய பேச்சை தமிழர்கள் நினைவு கொள்ள வேண்டும்[8].

 Jayalalitha running out of TN Assembly on March 25 1989.2

© வேதபிரகாஷ்

09-04-2016

[1] முஸ்லிம்கள் பணம் கொடுக்க வருவது, எதிர்-எதிராகத் தூண்டி விடுவது, முதலிய விவகாரங்கள் என்ன என்பதையும் ஊடகங்கள் விளக்கவில்லை.

[2] தமிழ்.ஒன்.இந்தியா, இது என் வாழ்நாள் குற்றம்: கருணாநிதி குறித்து ஜாதிரீதியான விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்ட வைகோ!, By: Karthikeyan, Updated: Thursday, April 7, 2016, 10:52 [IST].

[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-apology-the-speech-about-karunanidhi-250651.html

[4] திராவிட அரசியல் பாரம்பரியத்தில் இப்படி தலைவர்கள் பரஸ்பர வசைப்பாடல், திட்டுகள், தூஷணங்கள் முதலியவற்றில் ஈடுப்பட்டுள்ளது, ஈடுபட்டு வருவது, அவர்களுக்கேயுரிய நாகரிகத்தைக் காட்டுகிறது.

[5]  வேதனையுடன் ச. திருமலை – Wed Nov 05, 12:00:00 AM GMT+5:30;

http://www.badriseshadri.in/2008/11/blog-post_04.html

[6]https://dravidianatheism2.wordpress.com/2010/01/17/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/

[7] https://dravidianatheism2.wordpress.com/2012/03/07/karunanidhi-grinds-anti-brahmin-bogey-again/

[8] https://dravidianatheism2.wordpress.com/2012/02/24/564-karunanidhi-spewing-old-hypothesis-enjoying-his-leisure/

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம் (3)!

செப்ரெம்பர் 20, 2015

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம்பெரியார் திடலில் விவாதம் (3)! 

கீதையின் மறுபக்கம் - வீரமணி

கீதையின் மறுபக்கம் – வீரமணி

வீரமணிக்கு கீதை மீது பிறந்த காதல்: வீரமணி போன்ற இந்து-விரோதத்துவம் கொண்ட நாத்திகர்களே இன்று பகவத் கீதையைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்து விட்டனர். போதாகுறைக்கு, பெரியார் பிறந்த நாளைக் கொண்டாடும் நேரத்தில், கோல்வால்கர் பற்றி எல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். சரி, கோல்வால்கருக்கும், திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி கேட்டு விவரிக்க ஆரம்பித்தது தமாஷான விசயம் தான். ஆனால், இதை முன்னமே எடுத்துக் காட்டியுள்ளார். கோல்வால்கர் திருக்குறளை பொதுநூலாக பாவித்தார், ஆனால், திராவிடத்துவவாதிகள் அதனை தமிழர் நூல், திராவிடர்களின் நூல் என்று குறுகிய நோக்கில் சுருக்கினர். குறளைப் படித்து, மற்ற இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சமஸ்கிருத இலக்கியத்துடனான நெருக்கம் தெரிந்தது[1]. இதனால், அதிலுள்ள நீதி, நேர்மை, தார்மீகக் கருத்துகள் வேத-உபநிஷ்ட நூல்களிலிருந்து பெற்றிருக்கலாம் என்று பல அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டினர்[2]. மேலும், குறள், சூத்திரங்கள் போன்று ஈரடி, ஏழு சொற்கள், சுருங்கச் சொல்லுதல் முதலிய விதிகளையும் பின்பற்றியிருப்பதை எடுத்துக் காட்டினர். இதனால், தனித்தமிழ் இயக்க தமிழ் பண்டிதர்கள் அவ்வாறில்லை என்பதனை எடுத்துக் காட்டவே திரிபு விளக்கங்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

குந்த-குந்த ஆச்சாரியாரும், வள்ளுவ நாயனாரும்

குந்த-குந்த ஆச்சாரியாரும், வள்ளுவ நாயனாரும்

திருக்குறள் மறைமுக எதிர்ப்பு தேச-விரோதமானது: இது 1960களில் ஜைனர்கள், கிருத்துவர்கள் போன்றோரை ஊக்குவித்தது. அவர்கள் குறள் தங்களது நூல் தான், வள்ளுவரும் தங்களது மதத்தவர் தான் என்று கதைகளைக் கட்டிவிட ஆரம்பித்தனர்[3]. வள்ளுவர் குந்தர்-குந்தரின் மாணவர் என்றும் அவரிடத்திலிருந்து குறளைத் திருடிச் சென்று தனது என்று அரங்கேற்றி விட்டார், இல்லை அவரே குந்த்-குந்தர் தான்[4] என்று ஜைன ஆராய்ச்சியாளர்கள் கதை கட்டினர். கிறிஸ்தவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இதுதான் சாக்கு என்று, தாமஸ் சென்னைக்கு வந்தார், வள்ளுவரை சந்தித்தார், வள்ளுவர் அவரிடத்திலிருந்து பைபிள் கற்றுக் கொண்டு, அதன் தாக்கத்தில் தான் குறளை எழுதினார் என்று பெரிய கட்ட்டுக் கதையைக் கட்டி விட்டனர். போதாகுறைக்கு அத்தகைய போலித்தனமான கள்ள ஆராய்ச்சிகளுக்கு, அவர்களால் ஏற்படுத்தப் பட்ட பல்கலை பிரிவுகள்-சேர்களால் பட்டங்களும் கொடுக்கப்பட்டன. இதற்கெல்லாம் கருணாநிதி முதல் தமிழ்த்துறையில் உள்ள ஊழியர் வரை உதவி செய்துள்ளார்கள் என்பதனை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

Bhagavatgita, sedition, Tilak

Bhagavatgita, sedition, Tilak

பகவத் கீதை எதிர்ப்பு ஆந்நியர் ஆட்சி முதல் திராவிட ஆட்சி வரை: பகவத் கீதையினை இந்துக்கள் ஆதரிப்பது அறிந்து, அதனை தூஷித்து ஒரு புத்தகத்தை எழுதினார். இதுவொன்றும் புதியதல்ல. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே, பகவத் கீதையை எதிர்த்து பிரச்சாரம் நடந்தது. தேசதுரோக அறிக்கை கமிட்டி அதனை தடை செய்யவும் முற்பட்டது. திலகருக்கும், காந்திக்கும் இடையிலேயே கீதை ஆதரிப்பு-எதிர்ப்பு விவாதம் நடந்தது. காந்தி உண்மையில் கீதையை ஆதரிப்பது போல காட்டிக் கொண்டு, எதிர்க்கவே செய்தார். எப்படி சைவ-வைணவ சர்ச்சை, சண்டை, எதிர்ப்புகள் இலக்கியங்களாக வெளிப்பட்டபோது, அவை மற்றவர்களால் சாதகமாக உபயோகித்துக் கொண்டார்களோ, அதேபோல இந்த விவரங்களை வைத்துக் கொண்டு, தன்னுடைய காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் முதலியவற்றைச் சேர்த்து இப்புத்தகத்தை வீரமணி எழுதித் தள்ளினார். போதாகுறைக்கு இதே மதத்தில் (செப்டம்பர் 2015) தான் திருப்பதியில் 9 முதல் 11 வரை “ஶ்ரீமத் பகவத் கீதை”ப் பற்றி தேசிய மாநாடு நடந்துள்ளது[5].

Balagangadhara Tilak- Gandhi and Gita

Balagangadhara Tilak- Gandhi and Gita

ருண் விஜய்யின் தமிழ்த்தொல்லை, தினமணியின் கொசுத் தொல்லை, வீரமணியின் ஓடோமாஸ் கொள்ளை: ஆகஸ்ட் 2014ல் ஆர்.எஸ்.எஸ் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றது[6]. இந்து-விரோத தளங்கள் இப்படியெல்லாம் புலம்பித் தள்ளின[7], “ருண் விஜய்யின் தமிழ்த்தொல்லையும், தினமணியின் கொசுத் தொல்லையும் நாளுக்குநாள் தாங்க முடியவில்லை. வடமாநிலங்களில் திருக்குறள் பயிற்றுவிப்பு, திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாட்டம், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று வரிசையாக இந்த ஆர்.எஸ்.எஸ். நரி வைக்கும் ஊளையில் காது கிழிகிறது! திருக்குறளைத் தூக்கிக்கொண்டு காவி துடிக்க அலையும் இந்த நரி, மத்தியப் பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் என சமஸ்கிருதத்தை திணித்துக்கொண்டே வரும் ஸ்மிருதி ராணியுடன் சேர்ந்துதிருக்குறள், தமிழுக்கு ஆதரவுபோஸ் கொடுத்தது. அடுத்த சீன், மத்திய உள்துறை ராஜ்நாத்சிங்கை சந்தித்து திருக்குறள் அறிமுகம் செய்து திருவள்ளுவர் சிலையை கைமாத்தியது. உடனே உளவுத் துறையை கையில் வைத்திருக்கும் உள்துறை அமைச்சர் பார்வையாளர் கண்களில் தெரியும்படி தமது அறையில் சிலையை வைக்குமாறு உத்திரவிட்டார். போதாதா? “பா...வின் தமிழ்க்காதல்பாரீர் என! தினமணி மாமா மூணு காலத்துக்கு படுத்துப் புரண்டு, பாரடா! எங்கள் பார்ப்பன சமர்த்தை என்று தொடையைத் தட்டுகிறார். திருவள்ளுவர் படத்துக்கே பூணூல் போட்டு அவர்எங்களவா?’ என்று ஆள்கடத்தல் செய்த தமிழக பார்ப்பனக் கும்பலையும் தாண்டி, திருவள்ளுவர் திரும்ப வரவா போகிறார் என்ற தைரியத்தில் தருண் விஜய் சீன் போடுகிறார்”. தருண் விஜய்க்கு சாபம் கொடுத்தன, வசை பாடின[8]. அவர் தமிழ் மீது காட்டும் காதல் பொய்யானது என்றும் கூறின[9].

tarun-vijay-vairamuthu-11

tarun-vijay-vairamuthu-11

வீரமணியின் கீதை காதலும், தருண் விஜயின் குறள் காதலும்: தருண் விஜய்க்கு திடீரென்று திருக்குறள் பற்று வந்து, அதனை ஆதரித்து, “திருவள்ளுவர் நாள்” என்றெல்லாம் அறிவித்தவுடன், வீரமணி உஷராகி விட்டார். வீரமணியின் கீதை மீதான காதல் அலாதியானது. ஆக, இந்த இரு காதலர்களும் மறைமுகமாகத் தாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர். வீரமணி தருணுக்கு எப்படியாவது செக் வைக்க அரும்பாடு பட்டார். இந்தியா முழுவதும் திருவள்ளுவர் நாள் என்ற மத்திய அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதே என்றும், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். வேரூன்றுவதற்கான கண்ணி வெடியாக இதனைப் பயன்படுத்தக் கூடாது என்றும் கி.வீரமணி கூறியுள்ளார்[10].

tarun-vijay-vairamuthu-21

tarun-vijay-vairamuthu-21

திருவள்ளுவர் நாள் அறிவிப்பு: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். வேரூன்ற பயன்படுத்தக் கூடாது: கி.வீரமணி: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி 29.11.2014 சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் – ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இயக்கப்படி – நடைபெற்று வரும் பா.ஜ.க. அரசின் சார்பில் திருவள்ளுவர் நாள் இந்தியா முழுவதும் மத்திய அரசால் கொண்டாடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இதற்கு வழி வகுக்கும் வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க., எம்.பி.யும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஹிந்தி ஏடான ‘பாஞ்சன்யா’வின் முன்னாள் ஆசிரியருமான தருண்விஜய் மக்களவையில் இப்படிப் பேசி வலியுறுத்தியதனால் அமைச்சர் அறிவிப்பதாகக் கூறியுள்ளார். திடீரென்று அவரே முடிவு செய்து அறிவித்திருக்க இயலாது; ஏற்கெனவே இதுபற்றி ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டிகளின் திட்டமாகத்தான் இது யோசிக்கப்பட்டு பிறகுதான் அறிவித்திருக்க முடியும். இதை வரவேற்கிறோம்; என்றாலும் ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டிலும், தமிழர்கள் மத்தியில் வேரூன்றுவதற்கு இதை ஒரு தந்திர உபாயமாகவோ, “கண்ணி வெடியாகவோ” பயன்படுத்தலாம் என்றோ நினைத்துக் கொண்டு இதை தூண்டில் முயற்சியாக கருதி இறங்கக் கூடாது. நாம் இப்படி சொல்வது ஏனோ என்று சில ‘தமிழறிஞர்கள்’கூட எண்ணக் கூடும். அவர்கள் அறியாத ஒரு தகவலை நாம் இங்கே எழுதி தெரிவிக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.

வீரமணி, ஸ்மிருதி இரானி, தருண் விஜய்

வீரமணி, ஸ்மிருதி இரானி, தருண் விஜய்

கோல்வால்கர் திருக்குறளைப் பற்றி குறிப்பிட்டது: ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் தத்துவ போதகரான கோல்வால்கர் எழுதிய ‘Bunch of Thoughts என்ற ஆங்கில நூல் ‘ஞான கங்கை’ என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. (பக்கம் 168-169). அந்நூலில் – எம் மதத்தையும் சாராத திருவள்ளுவரை – ஒரு ஹிந்துத்வாவாதிபோல் சித்தரித்து எழுதியுள்ளார். அப்பகுதி இதோ: “தற்காலத்தில் தமிழைப்பற்றி நாம் அதிகம் கேள்விப்படுகிறோம். தமிழ் என்பது தனக்கென வேறான கலாசாரமுடைய தனிப்பட்ட மொழி என்று கூறுகின்றனர். அவர்கள் வேதத்தில் நம்பிக்கை கொள்ள மறுக்கின்றனர். திருக்குறளை அவர்களது மறையாகக் கருதுகின்றனர். திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகட்கும் மேற்பட்ட ஒரு பழைமையான அறநூல்தான். திருவள்ளுவ முனிவர் அதன் ஆசிரியர் ஆவார். அவரை நாம் நமது ப்ராதஸ்மரணத்தில் நினைவு கூர்கிறோம். மிகப் புகழ் பெற்ற புரட்சிவாதியான .வே.சு. அய்யர் திருக்குறளை (ஆங்கிலத்தில்) மொழி பெயர்த்துள்ளார்). திருக்குறளில் நாம் காண்பது என்ன? நாடெங்கும் அறிமுகமான நான்குவித வாழ்க்கை முறை (சதுர்வித புருஷார்த்தம்) அதில் விஷயமாகக் கூறப்பட்டுள்ளது. மோட்சத்தைப் பற்றிய அத்தியாயம் மட்டும் முன்னால் வைக்கப்பட்டுள்ளது. அது எந்தக் கடவுளையும் அல்லது எந்த வழிபாட்டு முறையையும் பின்பற்றுமாறு கூறவில்லை. மோட்சம் என்ற உயர்ந்த விஷயத்தைப் பற்றியே கூறுகின்றது. எனவே, அது எந்த ஒரு சாரரின் நூலும் அல்ல. மகாபாரதம்கூட திருக்குறள் கூறுவது போன்ற வாழ்க்கை முறைகளையே புகழ்ந்து கூறுகின்றது. ஹிந்துக்களிடம் அல்லாது மற்ற எந்த மதத்தவரிடமும் இவ்வாறான சிறந்த வாழ்க்கை முறை நோக்கு காணப்படவில்லை. எனவே, திருக்குறள் சிறந்த ஹிந்துக் கருத்துக்களைத் தூய ஹிந்து மொழியில் எடுத்துக் கூறும் ஒரு ஹிந்து நூல் ஆகும்”, என்று கோல்வால்கர் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

20-09-2015

[1] Divine Life Society,Bhagavad Gita & Tirukkural Compendium, Divine Life Society of South Africa, 1989.

[2] M. Muthuraman, Gita and Kural, the University of Michigan, Higginbothams, 1971.

[3] http://jainology.blogspot.in/2007/11/saint-tiruvalluvar-was-jain.html

[4] Jainism is oldest organized religion in world and also it is first organized religion of Dravid culture (refer Archaeology Director in Mahal , Madurai).  Thiruvalluvar( Acharya kund kund) was a Jain saint (Naked) who contributed to Tamil Civilization, Tamil Script and Tamil culture, later who was renamed as Thiruvalluvar- You don’t have to trust our claim( you can verify this fact with Dr. Skandalingam, Director of State Archaelogy, Mahal, Madurai Tamilnadu) your narrow brain will be refreshed with fresh information.

[5] https://kvramakrishnarao.wordpress.com/2015/09/12/the-importance-of-bhagavatgita-in-prasthanatraya-the-national-seminar-held-at-tirupati-from-september-9th-to-11th-2015/

[6] உச்சநீதிமன்ற நீதிபதி  தவே அண்மையில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில்  பள்ளிகளில் முதல் வகுப்பிலேயே பகவத் கீதை மற்றும் மகாபாரதத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என கூறியுள்ள கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். -சின் கலாச்சார அமைப்பின் இயக்குனர் பி. பரமேஸ்வரன், அதனை தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

http://www.vikatan.com/article.php?page=2&module=news&mid=9&sid=0&aid=31029

[7] http://www.vinavu.com/2014/12/05/thirukural-and-tarun-vijay-political-trickery/

[8] http://www.vinavu.com/2014/11/11/vairamuthu-selling-out-to-bjp-tarun-vijay/

[9] புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014;  http://www.vinavu.com/2014/10/29/tarun-vijay-love-of-tamil-is-fake/

[10] http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=133291

நக்கீரன், திருவள்ளுவர் நாள் அறிவிப்பு: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். வேரூன்ற பயன்படுத்தக் கூடாது: கி.வீரமணி, பதிவு செய்த நாள் : 29, நவம்பர் 2014 (17:43 IST) ;மாற்றம் செய்த நாள் :29, நவம்பர் 2014 (17:43 IST).

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம் (1)!

செப்ரெம்பர் 19, 2015

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம்பெரியார் திடலில் விவாதம் (1)

Periyar thidal - 17-09-2015 DK conference

Periyar thidal – 17-09-2015 DK conference

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? அவர் திருக்குறளைப் பற்றி என்ன கூற முடியும்?: விடுதலை, “ஆர்.எஸ்.எஸின் குருநாதர் என்று சொல்லப்படும் கோல்வால்கர் தமது ஞானகங்கை என்ற நூலில் திருக்குறள் பற்றிக் கருத்துக்கள் கூறியுள்ளார் என்று வீரமணி சொன்னபோது அரங்கத்தில் உள்ளோர் அனைவரின் கண்களும் தமிழர் தலைவரையே குத்திட்டு நின்றன. கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? அவர் திருக்குறளைப் பற்றி என்ன கூற முடியும்? என்ற அய்ய வினா அவர்களைத் தொற்றி நின்றது. திருக்குறள் இந்து மதத்தின் வருண தர்மத்தைப் பாதுகாக்கும் நூல் என்று கோல்வால்கர் குறிப்பிட்டதை கழகத் தலைவர் அவர்கள் எடுத்துச் சொன்ன போது மக்கள் மத்தியில் ஓர் ஏளனமான குறிப்புத் தென்பட்டது”, என்று இன்றைய நாளிதழில் வெளியிட்டுள்ளது[1].  ஒரு புத்தகத்தில் உள்ளவற்றை முழுமையாக அல்லது எந்த இடத்தில், எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதனை சொல்லாமல், அங்கங்கு வாக்கியங்களைப் பிய்த்து போட்டு, திரிபுவாதம் செய்வது திராவிடத்துவவாதிகளுக்கு கைவந்த கலையாக இருந்து வருகிறது. இனி தொடர்ந்து வீரமணி என்ன சொன்னார் என்று பார்ப்போம்.

பெரியார், அம்பேத்கர், கோவால்கர்

பெரியார், அம்பேத்கர், கோவால்கர்

பாணினி இலக்கியம் என்பதெல்லாம் திருக்குறளுக்குப் பிறகு பிற்காலத்தில் வந்தது தான்: வீரமணியின் பேச்சு இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது, “கோல்வால்கர் குறளைப் பற்றிச் சொன்னதைச் சொன்ன அடுத்த வரியிலே நூல்கள் எல்லாம் நூல்களை பற்றி எழுதுகின்றன என்று சொன்னபோது அரங்கமே கை தட்டலால் குலுங்கியது என்றே சொல்ல வேண்டும். திருக்குறளை நாம் பரப்புவதைவிட அதனைத் திரிபுவாதத்திற்கு இடம் கொடுக்கச் செய்யாமல் அதனைப் பாது காக்க வேண்டிய இடத்தில் நாமிருக்கிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் சொன்னது மிகவும் முக்கியமானதாகும். இனமானப் பேராசிரியர் தமிழ் இலக்கியங்களில் திருக்குறளை விட மூலமான நூல் வேறு எதுவும் இல்லை பாணினி இலக்கியம் என்பதெல்லாம் திருக்குறளுக்குப் பிறகு பிற்காலத்தில் வந்தது தான்[2]. இலக்கண நூல் என்கிற போது தொல்காப்பியத்துக்கு ஈடாகாது. சமஸ்கிருத இலக்கணங்களுக்கு முந்திய தமிழ் இலக்கணம் காலத்தால் முந்தியது என்று திமுக பொதுச் செயலாளர் குறிப்பிட்டார். கீதையின் மொழி பெயர்ப்பா? திருக்குறள் என்று சொல்லும்போதுஅதனை எதிர்த்துக் குரல் கொடுக்க முடியாத நிலையில் திருக்குறள் கீதையின் மறுபதிப்பு என்பதுபோல பார்ப்பனர் பேச எழுத ஆரம்பித்தனர்”.

Three Kamchi Acharyas

Three Kamchi Acharyas

சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி, தீய திருக்குறளை படிக்கமாட்டோம் என்று பொருள் கூறியுள்ளார்[3]: திருக்குறளைப் பற்றி விளக்குகிறார் வீரமணி, “பகவன் என்ற பார்ப்பனருக்கும் ஆதி என்ற புலைச்சிக்கும் பிறந்தவர் என்றெல்லாம் பார்ப்பனர்கள் உளறினர்[4]. சிறந்த நூல்களை படைப்புகளைச் செய்யக் கூடியவர்கள் பார்ப்பனர்களாகத்தான் இருக்க முடியும் என்ற இறுமாப்பு எப்பொழுதுமே பார்ப்பனர்களுக்குண்டு. மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி குறள் பற்றி என்ன கூறினார்? ஆண்டாள் பாடியதாகக் கூறப்படும் திருப்பாவையில் இடம் பெற்றுள்ள இரண்டாம் பாடல் நாட்காலை நீராடி மையிட்டு எழுதோம். மலரிட்டு நாம் முடியோம்; செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் அய்யமும் பிச்சையும் ஆம்தனையும் காட்டி உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்! என்பது ஆண்டாளின் திருப்பாவைப் பாட்டு; இதில் வரும் தீக்குறளை சென்றோதோம் என்ற வரிக்கு சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன பொருள் கூறினார் தெரியுமா? தீய திருக்குறளை படிக்கமாட்டோம் என்று பொருள் கூறியுள்ளார். ஆனால் அவ்வரிக்கு உண்மையான பொருளோ வேறுவிதமானது; குறளை என்றால் கோள் சொல், குற்றம் என்ற பொருள் ஆகும். (மதுரைத் தமிழ்ப் பேரகராதி) தீக்குறளைச் சென்றோதோம் என்றால் தீமை விளைவிக்கும் கோட் சொற்களைச் சென்று சொல்ல மாட்டோம் என்பதுதான் இதன் பொருள்”.

திருக்குறள்- பகவத் கீதை

திருக்குறள்- பகவத் கீதை

திருக்குறளில் உள்ள அறத்துப் பால் கிட்டத்தட்ட பகவத் கீதையின் தமிழாக்கமேயாகும்: வீரமணி, சங்கராச்சாரியாரை சாடுகிறார்[5], “சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் இவ்வாறு பொருள் கூறியதற்குத் தமிழ் மீதும் அதன் உயரிய நூலான திருக்குறள் மீதும் அவர் கொண்டிருந்த (இவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்) ‘துவேஷத்தைதான் வெளிப்படுத்தும். அவ்வாறு அபாண்டமாக எழுதக் கூடாது என்பது அவாளின் எண்ணமென் றால் அவருக்குத் தமிழ் ஞானம் போதாது என்பதையாவது ஒப்புக் கொள்ள வேண்டும். அந்த சூப்பர் சீனியர் தான் அவ்வாறு குறள்மீது தமக்கே உரித்தான நஞ்சை உமிழ்ந்தார் என்றால் இப்பொழுது காஞ்சி சீனியர் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன சொன்னார் தெரியுமா? “திருக்குறளில் உள்ள அறத்துப் பால் கிட்டத்தட்ட பகவத் கீதையின் தமிழாக்கமேயாகும். வாழ்வின் வழிமுறைகளும், குறிக்கோளும் அதில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.” (தினத்தந்தி 15.4.2004) என்று மதுரையில் பேசினாரே! பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள் எங்கே? சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் (நான்கு வருணத்தையும் நானே படைத்தேன்) என்று கூறும் மனித குல விரோத கிருஷ்ணனின் கீதை எங்கே?

What Golwalkar said about Thirukural

What Golwalkar said about Thirukural

கோல்வால்கர் திருக்குறளைப் பற்றி சொன்னது என்ன?: கோல்வால்கர் சொன்னதை ஆங்கிலத்தில் உள்ளபடி கீழே கொடுக்கப்பட்டுள்ளது[6].

These days we are hearing much about Tamil. Some protagonists of Tamil claim that it is a distinct language altogether with a separate culture of its own. They disclaim faith in the Vedas, saying that Tirukkural is their distinct scripture. Tirukkural is undoubtedly a great scriptural text more than two thousands year old. Saint Tiruvalluvar is its great author. We remember him in our Pratah-smaranm. There is an authentic translation of that book by V.V.S.Iyer, the well-known revolutionary. What is the theme propounded therein, afterall? The same old Hindu concept of chaturvidha-purushartha is put forth as the ideal. Only the chapter on Moksha comes in the beginning. It does not advocate any particular mode of worship or name of God but enuntiates the pure idea of Moksha. Thus it is not even a sectarian book. Mahabharata also eulogises the same picture of social life as Tirukkural presents. Except with the Hindu, this unique vision of social life is not found anywhere else. It is thus purely a Hindu text propounding great Hindu thoughts in a chaste Hindu language.

இதன் தமிழ் மொழிபெயர்ப்பு இவ்வாறு கொடுக்கப்படுகிறது, “இந்த நாட்களில் நாம் தமிழைப் பற்றி அதிகமாக கேள்விப்படுகிறோம். தமிழைத் தூக்கிப் பிடிப்பவர்கள், தமிழ் ஒட்ரு தனி மொழி என்றும், அதற்கென தனியாக நாகரிகம் உள்ளது என்றும் கூறிக்கொள்கிறார்கள். வேதத்தை மறுத்து, திருக்குறள் தான் தங்களது புனித நூல் என்றும் பறைச்சாற்றிக் கொள்கிறார்கள். சந்தேகமில்லாமல் திருக்குறள் ஒரு மகத்தான நூல் தான், அதன் காலம் 2,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக உள்ளது. அதனை எழுதிய திருவள்ளுவர் ஒரு பெரிய கவியாவர். அவரை நாம் நமது “பிராத-ஸ்மரணத்தில்” (விடியற்காலை ஸ்தோத்திரம்) தினமும் நினைவு கொள்கிறோம். வி.வி.எஸ். ஐயர் என்ற புரட்சிப் போராளி மொழிபெயர்த்துள்ள ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நூல் உள்ளது. அதில் எந்த தத்துவம் தான் சொல்லப்பட்டிருக்கிறது? இந்துமத தத்துவமான “சதுர்வித-புருஸார்த்தம்” தான் அதில் உள்ளது. “மோட்சம்” முதலில் வருகிறது. எந்த ஒரு வழிபாட்டையும், கடவுள் பெயரையும் குறிப்பிடாமல் மோட்சத்தைப் பற்றிய விவரத்தை கூறுகிறது. அதனால், அது எந்த பிரிவினரையும் சேர்ந்த நூலாகாது. மகாபாரதத்தில் காணப்படும் சமூக வாழ்க்கை அப்படியே திருக்குறளில் காணப்படுகிறது. இந்துவிடம் தவிர, இத்தகைய சிறப்பான சமூக வாழ்க்கை தத்துவம் வேறேங்கும் காணமுடியாது. இந்து சிந்தனைகளை விளக்கும், பவித்ரமான இந்து மொழியில் உள்ள ஒரு தூய்மையான நூல் ஆகும்”. இத்தகைய விவரங்களை பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி[7], வி.ஆர். ராமச்சந்திர தீட்சிதர் போன்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர். அதனால், கோல்வால்கர் சொல்லிவிட்டார் என்று திராவிடத்துவவாதிகள் இப்பொழுது புலம்ப வேண்டாம்.

© வேதபிரகாஷ்

19-09-2015

[1] விடுதலை, வரலாறு பேசும் வான் புகழ் விழா!, மின்சாரம், வெள்ளி, 18 செப்டம்பர் 2015 16:24

2 இத்தகைய அபத்தமான வாதங்களை வைத்துக் கொண்டு, இன்னும் எத்தனை காலம் தான் தள்ளுவார்கள் என்று தெரியவில்லை.

[3] இதற்கான ஆதாரங்களைக் கொடுக்கவில்லை. அக்னிஹோத்ரம் போன்றவர் அரைகுறையாக எழுதி வைத்ததை வைத்துக் கொண்டு வாதம் புரிந்தால் என்ன பிரயோஜனமும் இல்லை.

[4] அப்படியென்றால், திருவள்ளுவமாலை போன்ற நூற்களை பார்பொபனர்களா எழுதி வைத்தனர்?

[5] http://www.viduthalai.in/e-paper/108862.html

[6] M. S. Golwalkar, Bunch of Thought, Third edition, pp.100-101

http://www.rss.org/Encyc/2015/4/7/334_03_46_30_Bunch_of_Thoughts.pdf

[7] P. S. Subramanya Sastri, A History of Tamil Literature, Annamalai University, Chidambaram.

P. S. Subramanya Sastri, Tolkappiyam, Annamalai University, Chidambaram.