Posts Tagged ‘சீமான்’

சீமான் – பிரபாகரன் சந்திப்பு: திராவிடத்துவ பொய்களா, உண்மை மறுப்பா, சரித்திர மறைப்புகளா, நடப்பது என்ன?

திசெம்பர் 2, 2019

சீமான் – பிரபாகரன் சந்திப்பு: திராவிடத்துவ பொய்களா, உண்மை மறுப்பா, சரித்திர மறைப்புகளா, நடப்பது என்ன?

V. Prabhakaran with Anton Balasingham

திராவிடத்துவாதிகளின் சமகால நிகழ்வுகளைப் பற்றி பலவித கருத்துகள் ஏன்?: ஈவேரா பேசியது எழுதியது என்று பல குறும்புத்தகங்கள், தொகுப்பு நூல்கள் பலர், பலவிதமாக வெளியிட்டிருக்கிறார்கள் என்பது பற்றி முன்னமே எடுத்துக் காட்டியுள்ளேன். ஈவேரா யாரை சந்தித்தார் என்ன பேசினார் என்பது பற்றிக் கூட தெளிவான தகவல்கள் இல்லை. ஏன் ஜின்னா-அம்பேத்கரை சந்தித்தது பற்றியே தெளிவான உண்மையான தகவல்கள் இல்லை. அந்நிலையில் இப்பொழுது, சீமான் சொன்னதை விமர்சித்து திராவிட கட்சிகள், விமர்சித்திருப்பது நோக்கத்தக்கது. அறுபது எழுபது ஆண்டுகளுக்குள் நிகழ்ந்த நிகழ்வுகளைப் பற்றியே இவ்விதமாக, மாறுபட்ட கருத்துகள் இருப்பது அல்லது இல்லாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. இவர்கள் உண்மையில் நடந்த நிகழ்வுகளை பதிவு செய்து இருக்கிறார்களா அல்லது பதிவு செய்யப்பட்டதை மறைக்கிறார்களா என்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு தோன்றுகிறது.

V. Prabhakaran with Seeman

சீமான் பிரபாகரனை சந்தித்த விவகாரமும், சர்ச்சையும்: பிரபாகரன் மற்றும் ராஜிவ் கொலையாளிகள் பற்றிய விவரங்கள் எப்படி அரசியலாக்கப் பட்டிருக்கின்றனவோ, அதே போலத்தான், இஅந்த விவகாரமும் இருக்கிறது. இறந்த மனிதன் வந்து சாட்சி சொல்லப் போவதில்லை. பிரபாகரனைச் சந்தித்த பல நேரங்களில் கண்ணீரே என் பதில் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்[1]. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 65-வது பிறந்த நாள் விழா, நவ.26, 2019 அன்று) சென்னை போரூரில், நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது[2]. எல்.டி.டி.இ தடை செய்யப் பட்ட இயக்கமாக இருந்தாலும்,ஐத்தகைய கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப் பட்டு வருகின்றன. இந்நிகழ்வில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரனை நேரில் சந்தித்தது குறித்துப் பேசினார்[3]. அப்போது, “பிரபாகரனை நேரில் சந்தித்தபோது, நான் என்ன உணவு உண்டேன் என்பதைக் கூட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் எழுதிக்கொண்டிருந்தார். “சாப்பிடுவதை ஏன் எழுதுகிறீர்கள்என அவரிடம் நான் கேட்டேன். அதற்கு நான் என்ன சாப்பிடுகிறேன் என்பதை பிரபாகரனுக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்தார். ஒரு தலைவர் தன் தம்பி என்ன சாப்பிடுகிறார் என்பதைக் கூட தெரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறார். அந்த சமயத்தில் அழுவதைத் தவிர எதுவுமே செய்ய முடியவில்லை. பல நேரங்களில் பிரபாகரன் என்னுடன் பேசும்போது கண்ணீரைத் தவிர வேறு பதில் என்னிடம் இருக்காது. குறிப்பாக அவர் எம்ஜிஆரைப் பற்றி பேசும்போது மெய் சிலிர்த்துவிடும். இயல்பாகவே மெதுவாகப் பேசும் பிரபாகரன், எம்ஜிஆரைப் பற்றி பேசும்போது மிகவும் மெதுவாகப் பேசுவார். அந்த நேரங்களில், நான் தலைகுனிந்தபடி அழுது கொண்டேதான் இருப்பேன். அதற்கு முன்பு எம்ஜிஆரை பற்றி எந்த மதிப்பீடும் இல்லை. இலங்கைக்கு வண்டி ஏறும் வரை, நான் கருணாநிதியின் ஆள். ஒரு சத்தியத் தலைவனின் பிறந்த நாளில் நான் சத்தியத்தைப் பேசுகிறேன்“. இவ்வாறு சீமான் பேசினார்[4].

V. Prabhakaran with NNedumaran

அச்சந்திப்பு பற்றி ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்திக்க சீமானுக்கு 10 நிமிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டது; இதில் 4 நிமிடங்கள் சோதனை செய்வதற்கே போய்விடும் என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்[5]. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்[6], “விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனோடு மாதக்கணக்கில் பேசியவர்கள், அவரோடு தங்கியிருந்தவர்கள், போராட்ட களத்துக்கு ஆதரவாக இருந்தவர்கள், போராட்ட களத்தில் உடன் இருந்தவர்கள் , வைகோ, பழ. நெடுமாறன், கொளத்தூர் மணி, கோவை. ராமகிருஷ்ணன் போன்றவர்கள் எல்லாம் பேசாமல் இருக்கிறார்கள்.. ….சினிமா எடுக்க நல்ல இயக்குனர் தேவை என்று தலைவர் கேட்டு கொண்டதன் பேரில் கொளத்தூர் மணி தான் சீமானை தேர்வு செய்து ஈழத்திற்கு அனுப்பி வைத்தார்.. ….தலைவர் பிரபாகரனை சந்திக்க சீமானுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் பத்து நிமிடம் மட்டும் தரப்பட்டது. அதில் நான்கு நிமிடங்கள் தலைவரை சந்திப்பதற்கு முன்பான சோதனை செய்வதற்கே போய்விடும், நான் தலைவரை சந்தித்த போதும் அப்படி தான் சந்தித்தேன்………..இந்த 10 நிமிட சந்திப்பை வைத்து கொண்டு சீமான் அவர்கள் மாத கணக்கில் பிரபாகரனோடு பேசியதாகவும், அவரோடு தங்கியிருந்ததை போலவும், ஆமைகறி சாப்பிட்டதாகவும் கதை சொல்லி வருவது கைதட்டு வாங்குவதை தாண்டி ஈழத்தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை.

Rajendran criticizes Seeman

விடுதலை ராஜேந்திரன் தொடர்ந்து சொன்னது[7]: “அந்த சந்திப்பின் போது உடன் இருந்த புலிகள் தற்போதும் கனடாவில் இருந்து கடிதம் மூலம் கண்டனம் தெரிவித்த பிறகும் அவர் இவ்வாறு பேசிவருவது சரியல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்[8]. தற்போது கோத்தபய ராஜபக்சே இந்தியா வந்த போது வைகோ அவர்கள் வழக்கம் போல் டெல்லியில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தினை நடத்தினார். நாங்களும் சென்னையில் நடத்தினோம் இவர் எதையுமே செய்யவில்லை. மாறாக பிரபாகரன் படத்தை போட்டுக்கொண்டு தமிழகத்தில் இவர் தான் பிரபாகரன் போன்ற தோற்றத்தை கொடுத்து வருகிறார். சீமானின் பொய் பிததலாட்டத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம்,” என்றும் விடுதலை ராஜேந்திரன் வைகோ, பழ. நெடுமாறன், கொளத்தூர் மணி, கோவை. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்[9].

V. Prabhakaran with VAIKO.jpg

இலங்கை எம்.பி சீமானைக் கண்டித்தது: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்தும், பிரபாகரன் உடன் இருந்தது குறித்தும், ஈழப் பிரச்சனைகள் தொடர்பாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேவையில்லாமல் மேடைதோறும் பேசி வருகிறார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கை மட்டகளப்பு எம்.பி. யோகேஸ்வரன், சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது, சீமான் போன்ற அரசியல்வாதிகள் எல்லா பிரச்சனையும் தீர்ந்த பிறகு, வெறும் பேச்சு பேசி வருவதாக தெரிவித்தார்[10]. மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளது என்று கேள்வி எழுப்பினார் யோகேஸ்வரன்[11]. விடுதலைப் புலிகள் தாங்கள் செய்கின்ற செயலை ஒப்புக் கொள்ளும் கொள்கை உடையவர்களாக எப்போதும் இருந்துள்ளார்கள். அப்படி இருக்கும் போது ராஜீவ்காந்தியை கொலை செய்ததாக ஒரு போதும் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், இங்குள்ளவர்கள் பேசுகிற பேச்சால் தங்களுக்குத் தான் பிரச்சனை என்றார். அதோடு, சீமான் தாங்கள்தான் கொன்றதாக பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தங்கள் ஆதாயத்திற்கு பேசும் பேச்சால் தங்களுக்கு தான் பிரச்சனை என்று வருந்தியவர். இவர்கள் தொடங்கி வைத்துவிட்டு உட்கார்ந்து விடுவார்கள் பாதிப்பு அங்குள்ள மக்களுக்கு என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் பேசினார்.

V. Prabhakaran with others.jpg

ஆராய்ச்சியாளர்கள் கவனிக்க வேண்டியது: ஈவேரா, ஜின்னா அம்பேத்கரை சந்தித்து என்ன பேசினார் என்று தெரியாமல் இருப்பது போல, இங்கும் சீமான் பிரபாகரனை சந்தித்து பற்றி கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதெல்லாம் இப்போது தமிழகத்துக்கு வேண்டிய முக்கியமான விஷயங்களா என்று தெரியவில்லை, இருப்பினும் ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டு வருகிறார்கள். அவர்களே சீமான் சொன்னது பொய் என்று எடுத்துக் காட்டுகிறார்கள். பிறகு, யார் சொல்வது உண்மை, யார் சொல்வது பொய் என்பது பற்றி மற்றவர்கள் கவலைப்படாமல் இருக்கலாம், ஆனால், ஆராய்ச்சியாளர்களுக்கு இது பெரிய தலைவலியாக, பிரச்சினையாக, மர்மமாக இருக்கிறது ஆராய்ச்சி எனும் பொழுது, ஆராய்ச்சியாளன் மூல ஆவணத்தைப் பார்த்து, படித்து, தன்னுடைய கருத்தை தொகுத்து எழுத வேண்டிய நிலை உள்ளது. ஆனால், இங்கே அடுத்தவர்கள் சொல்வதை, வைத்துக்கொண்டு தான்,ஆராய்ச்சி செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆகவே, திராவிடம், திராவிடர் திராவிட இயக்கம் போன்றவற்றில் ஆராய்ச்சி செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

© வேதபிரகாஷ்

02-12-2019

V. Prabhakaran with MGR

[1] தமிழ்.இந்து, பிரபாகரனைச் சந்திப்பதற்கு முன் நான் கருணாநிதியின் ஆள்: சீமான் பேச்சு, Published : 27 Nov 2019 15:12 pm; Updated : 27 Nov 2019 15:12 pm.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/527442-seeman-talks-about-prabhakaran.html

[3] மாலைமலர், பிரபாகரன் பெயரையே என் மகனுக்கும் சூட்டி அவனிலும் அவரையே பார்க்கிறேன்சீமான் நெகிழ்ச்சி, பதிவு: நவம்பர் 26, 2019 11:59 IST.

[4] https://www.maalaimalar.com/news/district/2019/11/26115947/1273253/Prabhakaran-birthday-Seeman-statement.vpf

[5] தமிழ்.ஒன்.இந்தியா, பிரபாகரனை சந்திக்க சீமானுக்கு ஒதுக்கப்பட்டது 10 நிமிடம் மட்டும்தான்..விடுதலை ராஜேந்திரன் , By Mathivanan Maran | Updated: Sunday, December 1, 2019, 19:08 [IST].

[6] https://tamil.oneindia.com/news/chennai/viduthalai-rajendran-comments-on-seeman-s-story-on-prabhakaran-370126.html

[7] https://tamil.asianetnews.com/politics/seman-is-alier-told-viduthalai-rajendran-q1v8f7

[8] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், சீமானின் பொய், பித்தலாட்டத்துக்கு ஒரு அளவே இல்லையா ? கொந்தளித்த விடுதலை ராஜேந்திரன் !!, By Selvanayagam PChennai, First Published 2, Dec 2019, 9:00 AM IST…

[9] https://tamil.asianetnews.com/politics/seman-is-alier-told-viduthalai-rajendran-q1v8f7

[10] நக்கீரன், சீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்திருமுருகன் காந்தி யாரு?… கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி!, Published on 02/12/2019 (17:04) | Edited on 02/12/2019 (17:16)

[11] https://www.nakkheeran.in/24-by-7-news/politics/srilankan-tamil-mp-speech-about-thirumurugan-gandhi-and-seeman

தமிழ், தமிழகம், தமிழ்நாடு: மேலே ஏறி தேசத்தை அவமதித்தவனும், கீழே இறங்கி தேசத்தை நேசித்தவனும் – மோடி-எதிர்ப்பு வேலை செய்யும் விதம் [5]

ஏப்ரல் 20, 2018

தமிழ், தமிழகம், தமிழ்நாடு: மேலே ஏறி தேசத்தை அவமதித்தவனும், கீழே இறங்கி தேசத்தை நேசித்தவனும்மோடிஎதிர்ப்பு வேலை செய்யும் விதம் [5]

Dhoni at Defense Expo-whereas Black on top-13-04-2018

ராட்சத விளம்பரப் பலகை மீது ஆடிய நாடகம்: சென்னை விமான நிலையம் அருகே ராட்சத விளம்பரப் பலகை ஒன்று உள்ளது. அந்த இடத்திற்குள் செய்தியாளர்கள் போல் நுழைந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் யாரும் எதிர்பாராத நேரத்தில் விளம்பரப் பலகையில் மேல் ஏறி கருப்புக் கொடிகளுடன் முழக்கங்களை எழுப்பினர்[1]. போலீசார் மேலே ஏறினால் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று அவர்கள் மிரட்டல் விடுத்ததை அடுத்து கீழிருந்தே போலீசார் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கீழே இறங்கி வந்த அனைவரையும் போலீசார் கைது செய்தனர்[2]. இது விளம்பரத்தை தேடிய யுக்தியாக இருந்ததே தவிர, உண்மையில் எதையும் சாதிப்பதற்கு என்பதாக இல்லை. இக்காலத்தில் சில தனி நபர்கள் தொலைதொடர்பு-கோபுரங்கள் போன்றவற்றில் ஏறி தற்கொலை செய்து கொள்வேன் என்ற மனநிலை பாதித்துள்ளவர்களுக்கும், இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அதாவது, மிக்க மலிந்த வரட்டு விளம்பரத்திற்காக நடத்தப் பட்ட நாடகம் இது என்றாகிறது. ,மு.க. ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில்[3], “விமானத்தில் மேலே மட்டும் பறக்கும் நீங்கள், கீழே எங்கள் உணர்வுகளின் அடையாளமாய் கருப்புக் கொடி அசைவதை பாருங்கள், உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கை திரும்ப பெறுங்கள். இல்லையேல், கருப்பு என்கிற நெருப்பு அணையாது,” என்று பதிவிட்டுள்ளார்[4].

Dhoni at Defense Expo-13-04-2018

மேலே ஏறி தேசத்தை அவமதித்தவனும், கீழே இறங்கி தேசத்தை நேசித்தவனும்: யார் வீரன் என்று இந்தியன் அறிந்து கொள்வான்!: சென்னையை அடுத்த மகாபலிபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாடக் கண்காட்சியில், இந்தியாவில் தயாரான நவீன ரக பீரங்கிகள், டாங்குகள், நவீன ராடார்கள், போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்களின் மாதிரிகள் ஆகியவையும் இடம் பெற்றன. இந்நிலையில் மகேந்திரசிங் தோனி கண்காட்சியை நேரில் சென்று பார்வையிட்டு, ராணுவ அதிகாரிகளிடம் அதன் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். மேலே ஏறி தேசத்தை அவமதித்தவனும், கீழே இறங்கி தேசத்தை நேசித்தவனும்: யார் வீரன் என்று இந்திய அறிந்து கொள்வான்! சென்னையைப் பிரிந்த தோனி, தேசத்தை மறக்கவில்லை, தேசபிமானிக்கும், தேசவிரோதிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்! 14-15 தேதிகளில் பொதுமக்கள் 3-4 லட்சங்கள் வரை இவற்றைப் பார்த்து சென்றுள்ளது மக்களின் பிரதிபலிப்பைக் காட்டுகிறது. அந்த தேசவிரோத ஆர்பாட்டம், கலாட்டாக்களால் எற்பட்ட பாதிப்பையும் இந்த அமைதியான லட்சக்கணக்கான மக்களின் கூடுதல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், உண்மை விளங்கும்.

Ramya taking VAIKO to beat Modi

மோதிஎதிர்ப்பில், காங்கிரஸ் சந்தோசப்படுவது, தற்செயலா, திட்டமா?”: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் போராட்டம் எழுந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். அப்போது பல்வேறு அமைப்பினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தியதால் மோடி சாலைவழிப் பயணத்தைத் தவிர்த்து, ஹெலிகாப்டரில் பயணித்தார், என்றெல்லாம் ஊடகங்கள் பொய்யை வாரி இறைத்தன. இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “கருப்புக் கொடியைக் கண்டு பயப்படும் மோடி ஒரு கோழை. அவரைப் போன்ற கோழையான பிரதமரை இந்தியா கண்டதில்லை,” என விமர்சித்தார்[5]. முன்னர் மோடிக்கு பொன்னாடைப் போர்த்தி, தாஜா பிடித்த வைகோவின் பேச்சு படுகேவலமாக இருந்தது. இருப்பினும், இந்தக் கருத்தை காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு தலைவரும், நடிகையுமான ரம்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ”இதை இன்னும் சத்தமாகவும், உறுதியாகவும் சொல்லுங்கள்” என பதிவிட்டு, தமிழகத்து ஆதரவாக‌ ‘#Goback Modi’ என எழுதி இருந்தது திகைப்பாக இருந்தது[6]. அப்படி என்ன காங்கிரஸுக்கு, இந்த போராட்டத்திற்கும் தொடர்பு என்ற கேள்வியும் எழுந்தது.

Gayatri Raghuram tweet about anti-modi hashtag

கர்நாடக பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தது: இதற்கு கர்நாடக பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் கர்நாடக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில், ”காங்கிரஸைச் சேர்ந்த ரம்யா கர்நாடகாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். கர்நாடகா எதிர்க்கும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி சில தமிழ் அமைப்பினர் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக ரம்யா பேசியுள்ளார்எனக் குறிப்பிடப்பட்டுள்ளது[7]. இதேபோல மைசூரு-குடகு பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா, ”ரம்யாவின் உண்மையான முகம் வெளிப்பட்டுவிட்டது. தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளதால், உடனடியாக ரம்யாவை காங்கிரஸில் இருந்து நீக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தைக் கோரும் தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் ரம்யா கர்நாடகாவுக்கு தேவையா?” என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்[8]. ஆனால், தமிழக காங்கிரஸோ, அதன் கூட்டணி கட்சியான திமுகவோ இதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. குறைந்த பட்சம், வீராதி வீரர், சூராதி சூரர் வைகோ எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும், ஆனால், செய்யவில்லை. வட்டாள் நாகராஜ் மட்டும், சத்யராஜுக்கு உருத்திக் கொண்டிர்க்கலாம், ஆனால் குத்து ரம்யாவின், இந்த உள்-குத்து பரியவில்லை போலும்!

Anti-Modi hashtag orchestrated- Gayatri Raguram-12-04-2018

ரம்யாவிற்கு எதிராக காயத்ரி ரகுராமின் டுவிட்டர் பதிலும் வெளிப்படும்ம் நிலையும்: இந்நிலையில், தமிழகத்தில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் உலகளவில் டிரெண்ட் ஆனது என்றும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன . இதுகுறித்து நடன இயக்குனரரும், பாஜக உறுப்பினருமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில்[9], “மோடி நமக்கு உதவில்லை என்றால்? வேறு யார் நமக்கு உதவுவார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விருந்து நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார். காங்கிரஸும், ரம்யாவுமே போலியான போராட்டக்காரர்களை விலைக்கு வாங்கி மோடிக்கு எதிராக பதிவிட வைக்கிறார்கள். ரம்யா, ராகுலின் சிறந்த நண்பர். அவர்தான் காங்கிரஸின் சமூக வலைதளங்களை கையாள்கிறார்,” என்று பதிவிட்டார்[10]. அதுமட்டுமல்லாது, வேலையில்லாதகள் தான் அத்தகைய பதிவுகளை செய்திருப்பார்கள் என்றும் காட்டமாக கமென்ட் அடித்தார்[11]. காயத்ரி ரகுராமை கிண்டலடித்து மீம்ஸ் போட்டனர், ஆனால், உண்மையான காவிரி-எதிர்ப்பு செய்த ரம்யாவை கண்டுகொள்ளவில்லை. ஒரே நாளில் இந்த ட்ரென்ட் அடங்கி விட்டதால், அது போலியானது என்று வெளிப்பட்டது[12]. தமிழகத்திலேயே கண்டுகொள்ளாத போது ரம்யா ஏன் இதற்கு முக்கியத்துவம் .கொடுத்தார் என்ற கேள்வியும் எழுந்தது[13]. எப்படியாகிலும், அது செயற்கை என்றாகிவிட்டது.

Anti-Modi demo, Chennai 12-04-2018

இந்த கலாட்டாக்களுக்கு யார் பண உதவி செய்தது?: இருப்பினும், இந்த அள்விற்கு ஊடகங்கள் ஏன் பொங்கி செயல்பட்டன, அவ்வாறு நடுநிலை இல்லாத நிலையில் பாரபட்சம் மிக்க முறையில் செயல்பட வேண்டிய அவசியம் என்ன; அவர்கள் தன்னிச்சையாக, அவ்வாறு செயல்பட்டனரா அல்லது அரசியல் தூண்டுதலால் செய்தனரா என்று எழும் கேள்விகளுக்கு பதில் காண வேண்டும் என்றால், இத்தனையும் பணசெலவு இல்லாமல் நடக்காது. மேலும் அது ஒரு தீர்மான விளைவுகளை அறிந்து எதிர்கொள்ளும் திட்டமாக இருந்தது. ஆகவே, நிச்சயமாக காங்கிரஸ், திமுக முதலிய அரசியல் கட்சிஅளின்  ஆதரவு இல்லாமல் நடக்காது. திமுக தலைமையில் அறிவாலயத்தில் 11-04-2018 அன்று நடந்த அனைத்துக் கட்சி தீர்மானங்கள் அதனை வெளிப்படுத்துகிறது. ஆக இந்த மக்கள் விரோத, பொது வாழ்க்கையினை பாதித்த போராட்டங்களுக்கு வேண்டிய பொருள்-பண உதவி (logistics)  அந்தந்த கட்சிகளின் சார்பி; வந்துள்ளது அல்லது அவற்றை அளித்த வியாபாரிகள் மற்றும் கூட்டாளிகளிடமிருந்து வந்துள்ளது. இதன் ஆதாயம், நிச்சயமாக தமிழக ஆட்சி பிடிக்கும் நிலையல்ல, ஏனெனில், அது முடியாது என்று ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும்.. பிறகு ஏன் மோடி-எதிர்ப்பு என்ற கேள்விதான் மிஞ்சுகிறது. ஆக போதுமக்கள் நன்றாக புரிந்து கொள்வார்கள். ஐபிஎல் ரசிகர்கள், வியாபாரிகள் மற்றும் போர்க்கப்பலைப் பார்த்து விட்டு சென்ற சாதாரண மக்களும், கடந்த மூன்று நாட்கள் 10 முதல் 12 வரை ஏன் அத்தகைய கலாட்டா நடந்தது கிரிக்கெட் பார்க்கச் சென்ற இளம்-பெண்கள் மற்றவர்களிம் ஏன் அநாகரிகமாக நடந்து கொண்டானர்.

13--04-2018- Seeman, and others inside the Mantap

அம்பேத்கரையும் மறந்து, மோடிஎதிர்ப்பு போதையில் வெறியாட்டம் போட்டது: 14-04-2018 அம்பேட்தகரின் 127வது பிறந்த நாளாக இருந்தாலும், இந்த கோஷ்டிகள் மறந்து போய் கிடக்கின்றன. வேலை இல்லாதவன், கலாட்டா செய்வதே வேலையாகக் கொண்டவன் அற்பத் தனமாக, பிரதமந்திரியை எதிர்க்க தெருக்களில் வருவது வீரமல்ல என்று மக்களுக்குப் புரிந்தது. 134 கோடி மக்களின் பிரதம மந்திரியை அரைவேக்காட்டு ராகுலாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை, இவர்களால் என்ன செய்யமுடியும் என்பதும் தெரிந்தது. 1960களில், இவர்கள் “பொறுக்கிகள், ரௌடிகள்” என்று பொது மக்கள் ஒதுங்கினார்கள், ஒதுக்கினார்கள், 2018ல் அவர்கள் சுவர் மீதும், கம்பங்களிலும் ஏறியிருக்கிறார்கள். பிற்படுத்தப் பட்டவன், டீ விற்றவன் என்ற தகுதி கொண்டவர், பிரதமர் ஆகியுள்ளதை இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை, இதில் ஐயரும், இவர்களும் ஒன்று படுகிறார்கள். இந்திய-விரோத வெறித்தன கோஷங்கள் அவர்களை வெளிக்காட்டி விட்டது,  இனி தமிழ்நாடு மக்கள் அவர்களை நம்ப மாட்டார்கள். ஆளும் கட்சியினர், வலுவான சித்தாந்த கட்சியினர் எதிர்க்காமல் இருக்கும் போது, பிரிவினைவாதிகள் சேர்ந்து வந்தது அரசியல் சதுரங்கம். திராவிட இனவெறியர்களால் ராணுவம், ராணுவ முக்கியத்துவ நிகழ்சிகளைக் கூட கொச்சைப் படுத்த முடியும் என்பதனை உறுதிப்படுத்துகிறது. கொடிநாள் [Armed Forces Flag Day] வசூலில் தமிழகம் முன்னிலையில் உள்ள ரகசியம், இந்த இந்திய-விரோதிகளால் தானா?

© வேதபிரகாஷ்

19-04-2018

Dhoni with Karunanidhi

[1] பாலிமர் செய்தி, ராட்சத விளம்பரப் பலகை மீது ஏறி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கருப்பு கொடி போராட்டம், 12-04-2018.

[2] https://www.polimernews.com/view/5975-Protest-against-PM-Narendra-Modi’s-visit-near-Chennai-Airport

[3] தி.இந்து, ‘‘மேலே பறக்கும் நீங்கள், கீழே மக்கள் உணர்வுகளை பாருங்கள்’’ – மோடியை விமர்சித்து ஸ்டாலின் ட்வீட், Published : 12 Apr 2018 12:13 IST; Updated : 12 Apr 2018 12:13 IST.

[4] http://tamil.thehindu.com/tamilnadu/article23510103.ece

[5] தினத்தந்தி, பிரதமர் மோடி பற்றிய வைகோவின் கருத்துக்கு ஆதரவு: நடிகை ரம்யாவுக்கு கர்நாடக பா.ஜனதா எதிர்ப்பு, ஏப்ரல் 13, 2018, 03:00 AM.

[6] https://www.dailythanthi.com/News/Districts/2018/04/13024821/upport-for-Vaikos-opinionActress-Ramya-has-been-criticized.vpf

[7] தி.இந்து, வைகோவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகை ரம்யாவுக்கு பாஜக எதிர்ப்பு, இரா.வினோத், Published : 14 Apr 2018 19:09 IST; Updated : 14 Apr 2018 19:10 IST

[8] http://tamil.thehindu.com/india/article23541580.ece

[9] தி.இந்து, ‘‘பிரதமர் மோடிக்கு எதிரான #GoBackModi டிரெண்டிங்: காங்கிரஸூம் ரம்யாவுமே காரணம்’’ – காயத்ரி ரகுராம், Published : 12 Apr 2018 14:09 IST; Updated : 12 Apr 2018 14:25 IST

[10] http://tamil.thehindu.com/tamilnadu/article23510990.ece

[11] தமிழ்.ஒன்.இந்தியா, மோடிக்கு எதிராக காசு கொடுத்து டிவிட் செய்துள்ளார்கள்.. வேலையில்லாதவர்கள்.. காயத்திரி ரகுராம் சர்ச்சை, Posted By: Shyamsundar Updated: Thursday, April 12, 2018, 17:13 [IST].

[12] https://tamil.oneindia.com/news/tamilnadu/gayathri-raguramm-says-that-the-hashtag-gobackmodi-has-created-317057.html

[13] https://tamil.oneindia.com/news/tamilnadu/gayathri-raguramm-says-that-the-hashtag-gobackmodi-has-created/articlecontent-pf304403-317057.html

தமிழ், தமிழகம், தமிழ்நாடு: நீட் தேர்வு, காவிரிப் பிரச்சினை, ஐபிஎல்-எதிர்ப்பு முதலியவை, போலீஸ் தாக்குதலில் முடிந்த விதம் [4]

ஏப்ரல் 20, 2018

தமிழ், தமிழகம், தமிழ்நாடு: நீட் தேர்வு, காவிரிப் பிரச்சினை, ஐபிஎல்எதிர்ப்பு முதலியவை, போலீஸ் தாக்குதலில் முடிந்த விதம் [4]

Nam tamilar beat police 10-04-2018

 “தமிழ்.ஒன்.இந்தியா,” சீமான் ஆள் ஏன் போலீஸாரை அடித்தார். என்று விளக்கியது[1]: “அந்த இளைஞர் ஏன் போலீசாரைத் தாக்கினார் என்ற விவரம் கிடைத்துள்ளது. 10-04-2018 அன்று, போராட்டத்தின்போது நாம் தமிழர் தலைவர் சீமானும் களத்தில் இருந்தார். அண்ணா சாலையில் அவர் பெரும் இளைஞர் கூட்டத்துடன் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தபோதுதான், போலீசார் தடியடியில் இறங்கினர். ஒரு கட்டத்தில் சீமானை அடிக்க முயன்றனர் இரண்டு போலீசார். சீமானை அடிக்க வந்தவர்களில் ஒரு போலீசைத்தான் அந்த இளைஞர் தள்ளிவிட்டார். “எங்க அண்ணன் மேலயே கை வைப்பியா நீ..?” என்று கேட்டபடி அந்த போலீஸ் முகத்தில் குத்த முயன்றார் இளைஞர். அதன் பிறகு சீமான் ஓடி வந்து, கைகலப்பை விலக்க, அந்த இளைஞர் போராடும் கூட்டத்தில் கலந்துவிட்டார். நடந்த சம்பவம் இதுதான்.[2] ஆனால், ஒரு போலீஸ்காரர் அடி-அடி என்று அடித்து கீழே தள்ளியது வீடியோவில் நன்றாகவே தெரிந்தது. ஆனால், பிறகு பல்டி அடித்ததும் நல்ல கூத்துதான்.

Nam tamilar beat police why 10-04-2018

10-04-2018 மேட்சை நடத்த விடமாட்டோம் அடுத்து, ஏப்ரல் 20ம் தேதி சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை நடத்த விடமாட்டோம் என்றது: ஏப்ரல் 20ம் தேதி சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை நடத்த விடமாட்டோம் என்று சீமான் தெரிவித்தார்[3] என்பது தான் தலைசிறந்த தமாஷா. ஒரு வேளை பூனாவிற்கு சென்று செய்வார் போலும். 10-04-2018 மேட்சை நடத்த விடமாட்டோம் என்று கலாட்டா செய்து, பிறகு ஷூ எரிந்து கேவலப் படுத்தி, கைதாகிய சீமான் இவ்வாறு பேசியது திகைப்பாக இருந்தது[4]. ஏற்கெனவே, இனி சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடக்காது என்று அறிவிக்கப் பட்டதுன், பூனாவிற்கு மாற்றப் பட்டது அறிவிக்கப்பட்டது. 11-04-2018 அன்று, காவிரிக்கான போராட்டத்துக்கு மத்தியில் சென்னையில் ஐபிஎல் நடத்தக் கூடாது என்று பாரதிராஜா, அமீர், மணியரசன், சீமான், தனியரசு, தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்[5].

Separate flag -seeman- IPL match

இனி மேலும், இக்கால இளைஞர்கள் இந்த போலிகளை நம்ப மாட்டார்கள்.  சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் நர்மதாநந்தகுமார். சமூக ஆர்வலரான இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 16-04-2018 அன்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்[6]. அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: “நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், அவரது தொண்டர்களும் வன்முறையை தூண்டும் வகையில் பேசி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் பெண்கள் மிகுந்த அளவில் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சமீபத்தில் கூட ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர், பாஜக தலைவர் தமிழசை சவுந்தரராஜனை கிண்டல் அடித்து பேசி அவரை அழ வைத்தார்கள். தொடர்ந்து வன்முறை தூண்டும் வகையில் பேசிய வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரையும், அவரது தொண்டர்களை காவல் துறையினர் ஒடுக்க வேண்டும். முடிந்தால் கட்சியை தடை செய்வது இந்த தேசத்திற்கு நல்லது”. இவ்வாறு கூறப்பட்டிருந்தது[7].

Velmurugan threatened with snake entering IPL pitch - 10-04-2018

திமுக கர்நாடகத்தை ஆண்டாலும் காவிரி நீர் வராது: அப்போது சீமான் கூறுகையில் கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் காவிரி தமிழகத்தில் பாய்ந்தோடும் என்கிறார்கள். ஆனால் பாஜக ஆட்சியின்போதும் தமிழகத்திற்கு முறையாக நீர் திறக்கவில்லை[8]. சென்னையில் 10-01-2018 அன்று போராட்டத்தின் போது போலீசார் தாக்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்[9]. காவல்துறையினரைத் தாக்கியதாக சீமான் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது. அதில் சீமானை நாங்கள் கைது செய்யவிடமாட்டோம் என்று  பெ.மணியரசன், தெரிவித்துள்ளார்[10]. அதாவது, இவர் தான் சட்ட அமைச்சர், நீதிபதி என்ற தோரணை. சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடக்கும் ராணுவக் கண்காட்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தை தமிழக எதிர்க்கட்சிகள் 12-04-2018 அன்று மேற்கொண்டன[11]. தமிழர்கள் தொடர்ந்து பிரச்னையில் சிக்கித் தவிக்கும்போது, எந்த விதத்திலும் காப்பாற்ற முன் வராத ராணுவத்திற்கு எதற்காக கண்காட்சி நடத்தப்பட வேண்டும் என்று சீமான் கேள்வி எழுப்பினார்[12]. மோடிக்கு கருப்பு கொடி காண்பித்து, இன்று காலை போராட்டம் நடத்திய சீமான் கைது செய்யப்பட்டு பல்லாவரம் ஸ்ரீகிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்[13]. இதேபோல மோடிக்கு கருப்பு கொடி காண்பித்து போராட்டம் நடத்தியதற்காக இன்று கைது செய்யப்பட்ட மணியரசன், தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு, இயக்குநர்கள் பாரதிராஜா, கவுதமன், அமீர் ஆகியோரும் சிட்லபாக்கத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

13-04-2018, the detained black shirt leaders-released

இதனையடுத்து சீமான் மற்றும் தமிமுன் அன்சாரியை விடுதலை செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்[14]. இதனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றி வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[15]. பல்லாவரம் ஸ்டேஷன் சாலையே பரபரப்பாக போர்க்களம் போல காணப்படுகிறது. சாலையோர வியாபாரிகள் கடைகளை எடுத்து விட்டனர். சீமானை விடுவிக்கக் கோரி பாரதிராஜாவும் வெளியேற மறுத்து வருவதால் பதட்டம் தொடர்கிறது[16]. இந்த நிலையில், 12-04-2018 அன்று இரவு 9 மணியளவில் சீமான், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்[17]. இதன்பிறகு பாரதிராஜா விடுதலைக்கு சம்மதித்து வெளியே வந்தார்[18].

13--04-2018- RPF kept outside the Mantap

தொடர்ந்து “தமிழ்.ஒன்.இந்தியா,” சீமான் புராணம் பாடி வருவது, நிச்சயமாக, இரண்டிற்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது. ஒரே செய்தியை பது முறை விதவிதமாக போட்டுள்ளதே தமாஷாக உள்ளது. அவற்றையெல்லாம் தொகுத்தது தான், இப்பதிவு. “தமிழர் நலனுக்காக பல முறை சிறைக்கு சென்ற போராளி சீமான்” என்று தலைப்பிட்டு போட்ட செய்த்யில், சீமான் புராணத்தைக் காணலாம்[19]. ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து சீமான் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்தது காவல்துறை. இந்நிலையில் சீமானை கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது[20].

13--04-2018- Mansur Ali Khan, Udhayakumar outside the Mantap

போராட்டத்தின் போது போலீஸ்காரர் 3 பேர் மீது கையில் ஒரு கொடியை [நாம் தமிழர்] ஏந்தி கொண்டு ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது[21]. இந்த வீடியோ வைரலாகியது. இதைத் தொடர்ந்து காவலர்கள் புகாரின் பேரில் சீமான் உள்ளிட்ட 8 பேர் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. “ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின்போது போலீஸாரை தாக்கியவர்கள் நாம் தமிழர் கட்சியினர் அல்ல. நாம் தமிழர் கட்சி வன்முறை கட்சி அல்ல. போலீஸாரை தாக்குவதற்குத்தான் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோமா. போலீஸாரை நாம் தமிழர்தான் தாக்கினார்கள் என்பதை எப்படி முடிவு செய்தீர்கள். முறையாக விசாரணை நடத்தி கைது செய்யுங்கள். தேவையில்லாமல் நாம் தமிழர் கட்சியினரை கைது செய்யாதீர், ” என்றெல்லாம் கேட்டுக் கொண்டது வேடிக்கையாக இருந்தது[22].

© வேதபிரகாஷ்

19-04-2018

12-04-2018, the detained black shirt leaders

[1] தமிழ்.ஒன்.இந்தியா, அந்த இளைஞர் போலீசைத் தாக்கியது ஏன் தெரியுமா?, Posted By: Shankar Published: Wednesday, April 11, 2018, 11:50 [IST]

[2] https://tamil.oneindia.com/news/tamilnadu/why-police-attacked-during-ipl-protest-316894.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, ஏப். 20ல் சென்னையில் ஐபிஎல் நடக்காது, நடத்த விட மாட்டோம்சீமான் அதிரடி, Posted By: Gajalakshmi Updated: Wednesday, April 11, 2018, 15:06 [IST]

[4] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-says-ipl-match-will-not-happen-on-april-20-316922.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, கர்நாடகத்தில் பாஜக ஆட்சியின்போதும் தமிழகத்துக்கு முறையாக காவிரி நீர் கிடைக்கவில்லைசீமான், Posted By: Lakshmi Priya Updated: Wednesday, April 11, 2018, 15:32 [IST].

[6] தினகரன், நாம் தமிழர் கட்சியை தடை செய்யவேண்டும், 2018-04-17@ 00:45:11

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=394117

[8] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-accuses-we-never-gets-cauvery-water-though-bjp-was-power-316927.html

[9] தமிழ்.ஒன்.இந்தியா, பொய் வழக்குப் போட்டு சீமானைக் கைது செய்ய நாங்கள் விடமாட்டோம்பெ.மணியரசன், Posted By: Mohan Prabhaharan Published: Wednesday, April 11, 2018, 15:42 [IST].

[10] https://tamil.oneindia.com/news/tamilnadu/we-wont-let-arrest-seeman-says-maniyarasan-316930.html

[11] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழர்களை எந்த விதத்திலும் காப்பாற்றாத ராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு? : சீமான் கேள்வி, Posted By: Mohan Prabhaharan Published: Thursday, April 12, 2018, 10:44 [IST].

[12] https://tamil.oneindia.com/news/tamilnadu/why-defence-ministry-doing-expo-chennai-questions-seeman-317002.html

[13] தமிழ்.ஒன்.இந்தியா, கைது பரபரப்புகளுக்கு முற்றுப்புள்ளி.. சீமான், தமிமுன் அன்சாரியை இரவில் விடுதலை செய்தது காவல்துறை!, Posted By: Veera Kumar Updated: Thursday, April 12, 2018, 21:04 [IST].

[14] தமிழ்.ஒன்.இந்தியா, சீமானை கைது செய்வதை எதிர்த்து போராட்டத்தில் குதித்த தொண்டர்கள்.. பல்லாவரத்தில் பரபரப்பு, Posted By: Mohan Prabhaharan Updated: Thursday, April 12, 2018, 18:50 [IST].

[15] https://tamil.oneindia.com/news/tamilnadu/police-arrests-seeman-thameemun-ansari-party-cadres-317071.html

[16] தமிழ்.ஒன்.இந்தியா, சீமான், அன்சாரி விடுதலை செய்யப்படும்வரை மண்டபத்திலேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பாரதிராஜா, Posted By: Aravamudhan Updated: Thursday, April 12, 2018, 21:05 [IST].

[17] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-may-be-get-arrested-317054.html

[18] https://tamil.oneindia.com/news/tamilnadu/bharathiraja-refused-go-317069.html

[19] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழர் நலனுக்காக பல முறை சிறைக்கு சென்ற போராளி சீமான்!, Posted By: Kalai Mathi Updated: Friday, April 13, 2018, 10:29 [IST]

[20] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-went-jail-many-times-tamil-benefit-317076.html

[21] தமிழ்.ஒன்.இந்தியா, போலீஸாரை தாக்கியது நாங்கள் அல்ல: அதற்காகவா கட்சி நடத்துகிறோம்சீமான் சீறல், Posted By: Lakshmi Priya Published: Saturday, April 14, 2018, 17:28 [IST]

[22] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-says-that-his-party-is-not-violence-party/articlecontent-pf304675-317244.html

 

தமிழ், தமிழகம், தமிழ்நாடு: நீட் தேர்வு, காவிரிப் பிரச்சினை, ஐபிஎல் என்று மோடி-எதிர்ப்பு வேலை செய்யும் விதம் [3]

ஏப்ரல் 20, 2018

தமிழ், தமிழகம், தமிழ்நாடு: நீட் தேர்வு, காவிரிப் பிரச்சினை, ஐபிஎல் என்று மோடிஎதிர்ப்பு வேலை செய்யும் விதம் [3]

Shoe- Tamilian threw chappals 10-04-2018

நீட் தேர்வு, காவிரிப் பிரச்சினை, ஐபிஎல் என்று மோடிஎதிர்ப்பு வேலை செய்யும் விதம்: இன்றைய வேலை தேடும் விசயத்தில் “சந்தை-வேலைமுறை” [Job-market] என்றது, சந்தை பொருளாதாரத்தில் பிரபலமாகி சரத்தாகி விட்டது. அகில-உலக பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்றப்படி, படிப்பு-தொழிற்முறை பயிற்சிகள் மாற்றியமைக்கப் பட வேண்டியுள்ளது. அயல்நாட்டு கம்பெனிகளுக்காக வேலைசெய்வது, அவர்களது தேவைகளுக்கு ஏற்றப்படி, சேவை-உற்பத்திகள் மாற்றியமைக்கப் பட வேண்டியதாயிற்று. அந்நிலையில், மருத்துவப் படிப்பு தேசிய அளவில் முறைப்படுத்தும் நிலையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால், அதன் தராதரத்தை அறிந்து கொள்ளாமல், குறுகிய “தமிழ், தமிழகம், தமிழ்நாடு” சித்தாந்தத்தில் எதிர்ப்பு அரம்பித்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் அதிரடியாக நடந்து வருகின்றன. அவற்றிற்கான லட்சக் கணக்கில் கொடுக்கப் படும் விளம்பரங்களை, எதிர்க்கும் டிவி-மற்ற மின்னணு-அச்சு ஊடகங்களில் வெளி வந்து கொண்டிருக்கின்றன. அந்நிலையில் தான் காவிரிப் பிரச்சினையாளர்கள், ஐபிஎல் மீது திரும்பினர்.

CSK fas beaten -Anti-national leaders- IPL match-2

சேப்பாக்கம் மைதானம் தாக்கப் பட்டது: 10-04-2018 அன்று இதே கூட்டங்கள் கேவலமாக நடந்து கொண்டதை உலகமே பார்த்து வெறுத்தது. கிரிக்கெட்டை விரும்பும் சேப்பாக்கமா இவ்வளவு அநாகரிகமாக நடந்து கொண்டனர் என்று, கிரிக்கெட் ரசிகர்கள் வெட்கப்பட்டனர். 10ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது, நடந்த போராட்டத்தில், போலீசாரை தாக்கியதாக சீமான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது[1]. கொலை முயற்சி வழக்கில் சீமான் கைது செய்யப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. சென்னையில். இந்த நிலையில், சீமான் தங்க வைக்கப்பட்டுள்ள பல்லாவரம் ஸ்ரீகிருஷ்ணா கல்யாண மண்டபத்தை சுற்றி அதிரடிப்படை குவிக்கப்பட்டது. சீமான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது என்று தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன[2]. ஆனால், அதற்குள் 12-04-2018 அன்று கலாட்டா செய்ய தயாராகி விட்டனர். அண்ணா அறிவாலயத்தில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிகளின் (9 கட்சிகள்) கூட்டத்தில் காவிரி நதி நீர் உரிமை குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. ஸ்டாலின், செயல் தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்.
  2. கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்.
  3. சு.திருநாவுக்கரசர், தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.
  4. கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
  5. ஆர்.முத்தரசன், தமிழ்நாடு மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
  6. கே.எம். காதர்மொகைதீன், தலைவர், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்
  7. தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி
  8. எச். எம். ஜவாஹிருல்லா தலைவர், மனித நேய மக்கள் கட்சி.
  9. நாம் தமிழர் கட்சி

ஆம் ஆத்மி, மற்ற உதிரி கட்சிகளும் கலந்து கொண்டது, ஊடக செய்திகள் மூலம் தெரிகின்றது. அதாவது, அவ்வப்போது, அந்தந்த பிரச்சினைகளை வைத்துக் கொண்டு கலாட்டா செய்வது, பிற்கு மறந்து விடுவது என்ற நிலையில் போராட்டங்கள் நடப்பதும் தெரிகிறது.

CSK fas beaten -Anti-national leaders- IPL match-4

மோடிக்கு கருப்புக் கொடி ஆர்பாட்டம்: காவிரி நீர் உரிமையில் தமிழ் நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்று அக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர் மானங்களுள் ஒன்றாகும்[3]. அந்த வகையில் 12.4.2018 அன்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்குக் கருப்புக் கொடி காட்டுவதற்கு தயாராயின[4]. திருவிடந்தையில் நடக்கும் மத்திய பாதுகாப்புத்துறையின் ராணுவக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக 12-04-2018 அன்று பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி, சென்னை விமானநிலையம் வந்திறங்கினார்[5]. உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்[6]. அப்பொழுது, அவர்கள் பேசிய பேச்சு, அமிர் வெறி பிடித்தது போன்று நடந்து கொண்ட விதம் முதலியன விசித்திரமாக இருந்தது. மேலும் சுற்றியிருந்தவர்களில் பெரும்பாலோர் முகமதியர் என்பதும் நன்றாகவே தெரிந்தது. ஆகம் இவர்கள் எல்லோரும் இவ்வாறு ஒன்று பட்டுள்ளது காவிரிப் பிரச்சினைக்கா அல்லது மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பிற்கா என்ற கேள்வியும் எழுகின்றது. காவிரிப் பிரச்சினை போர்வையில் மோடி-எதிர்ப்பு பிரதானமாக அரங்கேறியுள்ளது. அதுதான் அரசியல் நோக்கக் காட்டுகிறது. அதன்படியே, கைதானவர்கள், வழக்கம் போல விடுதலை செய்யப்பட்டனர்[7]. பிறகு, வழக்குப் பதிவுகள், முந்தைய கைதுகள் என்னவாயிற்று என்று தெரியவில்லை[8].

Ameer anti-MODI ranta

சீமான் பேச்சு, நடவடிக்கை, புராணம் முதலியவற்றை தினம்தினம் அதிகமாக வெளியிட்டதுதமிழ்.ஒன்.இந்தியாதான்: “அதிமுக நடத்திய உண்ணாவிரதத்தால் என்ன பயன் கிடைத்துவிட்டது. ஐபிஎல் விளையாட்டை நடத்தக் கூடாது, தமிழகம் கொந்தளிக்கும் இந்த நேரத்தில் ஐபிஎல் எங்களுக்கு வேண்டாம். மீறி ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் எங்களின் எதிர்ப்பை எந்த விதத்தில் வெளிக்காட்ட வேண்டுமோ அப்படி வெளிக்காட்டுவோம்” என்று சீமான் சொன்னது,[9]தீர்மானத்துடன் அவ்வேலையில் இறங்கப் போவது தெரிந்தது. “காங்கிரஸ் கூட்டணியில் 10 ஆண்டுகள் இருந்த போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தற்போது திமுக போராடுவது வேடிக்கையாக உள்ளது”என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்[10]. பாஜக ஆட்சியிலும் வரவில்லை. அதிமுக பெயருக்கு உண்ணாவிரதம் நடத்தி உள்ளது[11]. மெரினாவில் மட்டும் போராடுவதற்கு அனுமதி கொடுத்தால் உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் போராட்டம் நடத்தி காவிரி மேலாண்மை வாரியத்தை பெறுவோம்[12].  அதாவது கலாட்டா செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கி இருந்தது என்ற ஒப்புதல் வெளிப்படுகிறது.

© வேதபிரகாஷ்

19-04-2018

CSK gave victory, Tamilian threw chappals 10-04-2018

[1] தமிழ்.ஒன்.இந்தியா, கொலை முயற்சி வழக்கில் சீமான் கைது? சீமான் தங்க வைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் அதிரடி படை குவிப்பு, Posted By: Veera Kumar Updated: Thursday, April 12, 2018, 16:35 [IST]

[2] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-may-be-get-arrested-317054.html

[3] விடுதலை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வை பிரதமர் புரிந்து கொள்வாரா?, வெள்ளி, 13 ஏப்ரல் 2018 16:51

[4] http://www.viduthalai.in/component/content/article/71-headline/160044-2018-04-13-11-39-44.html

[5] தினத்தந்தி, பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு ;சீமான் வேல்முருகன், மணியரசன், தமிமுன் அன்சாரி, பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர் கைது, ஏப்ரல் 12, 2018, 10:58 AM

[6] https://www.dailythanthi.com/News/State/2018/04/12105816/Opposition-to-PMs-visit-Seeman-Velmurugan-Maniyarasan.vpf

[7] தமிழ்.ஒன்.இந்தியா, கைது பரபரப்புகளுக்கு முற்றுப்புள்ளி.. சீமான், தமிமுன் அன்சாரியை இரவில் விடுதலை செய்தது காவல்துறை!, Posted By: Veera Kumar Updated: Thursday, April 12, 2018, 21:04 [IST]

[8] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-may-be-get-arrested-317054.html

[9] தமிழ்.ஒன்.இந்தியா, காவிரிக்காக திமுக போராட்டம் நடத்துவது வேடிக்கையாக இருக்கிறதுசீமான்!, Posted By: Gajalakshmi Published: Saturday, April 7, 2018, 18:22 [IST]

[10] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-condemns-dmk-protests-cauvery-rights-316570.html

[11] தமிழ்.ஒன்.இந்தியா, மெரினாவில் போராட அனுமதி கொடுத்தால் தமிழர்கள் உலகையே திரும்பிப்பார்க்க வைப்பார்கள் : சீமான், Posted By: Mohan Prabhaharan Published: Sunday, April 8, 2018, 15:15 [IST].

[12] https://tamil.oneindia.com/news/tamilnadu/tamils-have-the-capability-hold-strong-says-seeman-316627.html

செபாஸ்டியன் சீமான் திடீரென்று “முருக பக்தன்” ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு போராட்டம் நடத்துவது (2)

பிப்ரவரி 9, 2015

செபாஸ்டியன் சீமான் திடீரென்றுமுருக பக்தன்ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு போராட்டம் நடத்துவது (2)

சீமான் - நெற்றியில் விபூதி

சீமான் – நெற்றியில் விபூதி

பெஞ்சமின், அலாவுதீன், செந்தில்நாதன் சேகுவேரா, சுபாஷ் சந்திரபோஸ்: “பொதுக்கூட்டத்தில் சீமான், தனது கட்சியை சேர்ந்த சிலர் தமிழில் பெயரை மாற்றிக் கொண்ட விபரத்தை வாசித்தார்”, என்று தினமலர் கூறுகிறது[1].  கூட்டத்தில் தொடர்ந்து வீரதமிழர் முன்னணி அமைப்புக்கான மாநில ஒருங்கிணைப்பாளர்களாக பெஞ்சமின், அலாவுதீன், செந்தில்நாதன் சேகுவேரா, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்[2] என்று அவர்களது இணைதளம் வெளியிட்டுள்ளது. இதென்ன செக்யூலரிஸ அணியா, குழப்பக்கூட்டமா, “இந்தியன்” இல்லை என்கின்ற இந்திய-விரோதி அமைப்பா, “திராவிடன்” அல்ல என்று சொல்லி ஏமாற்றும் சித்தாந்த கும்பலா, “தமிழனாக” இருப்போன் என்று தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றை தூஷித்த கும்பலின் மறு அவதாரமா அல்லது மறுபடியும் “தமிழர்களின்” பெயரைச் சொல்லிக் கொண்டு, ஏமாற்ற தோண்டியுள்ள இன்னொர்ய் மோசடி கும்பலா என்று தமிழகள் விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

shanawas speech in MJK meeting Jan 28-2011- சீமான்

shanawas speech in MJK meeting Jan 28-2011- சீமான்

செபாஸ்டியன் சீமானின் இந்துவிரோத பேச்சுகள் அதிகமாகவே உள்ளன[3]. நாத்திக போர்வையில், பெரியார் சொன்னதை, இன்னும் அதிகமாகக் கொச்சைப்படுத்தி, இந்து மதத்தைச் சாடிவருவது, இவரது வேலையாகி விட்டது. நடுவே தன்னை “செக்யூலராக”க் காட்டிக்கொள்ள, சிறிது கிருத்துவத்தைக் கிண்டலடிப்பார். ஆனால், இஸ்லாமைப் பற்றி ஒன்றும் சொல்லாதது, விமர்சனிக்காதது, இவரது போலித்தனத்தை எடுத்துக் காட்டுகிறது. இத்தகைய கொள்கையற்ற மனிதர், “தமிழர்”, “பிராபகரன்”, “அம்மா”, “அப்பா”…………….என்ற வார்த்தை ஜாலங்களுடன்[4], மயிரு, மசுரு,………………………., போன்ற செம்மொழி வார்த்தைகளுடன் பவனி வந்து கொண்டிருக்கிறார். இவரது பேச்சுகள் அடங்கிய வீடியோக்கள் இணைதளங்களிலேயே உள்ளன, அவற்றை கெட்டாலே-பார்த்தாலே, உண்மையினை அறிந்து கொள்ளலாம். ஆகவே, “இந்துக்கள்” என்பவர்களும் இவரிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய அவசியம் உள்ளது.

Palanibaba_book_release_by_Seeman_in_MJK_meeting_Jan_28.2011

Palanibaba_book_release_by_Seeman_in_MJK_meeting_Jan_28.2011

சீமானின் கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவு போராட்டமும், பழனி கோவில் கருவறை நுழைவு முயற்சிகளும்: 14-04-2010 அன்று கிருத்துவர்கள் சென்னை நினைவரங்கம் என்ற இடத்தில் ஆர்பாட்டம் செய்ய போலீஸாரிடம் அனுமதி கேட்டது போலவும், அதற்கு அனுமதி மறுக்கப் பட்டது போலவும், தெய்வநாயகம் என்ற புரட்டு ஆராய்ச்சியாளர், முந்தைய மோசடி-ஆராய்ச்சி கும்பல் அருளப்பா-ஆச்சார்யா கும்பல் கும்பலைச் சேர்ந்த ஆள், “தமிழர் சமயம்” என்ற இதழில் வெளியிட்டு இருக்கிறார் [மலர்.1; மே 2010, இதழ்.5, பக்கம்.10]. பிறகு வேறு இடத்தில் நடந்த கூட்டம், கபாலீஸ்வரர் கோவிலில் நடந்தது என்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்” வெளியிட்டது[5]. அக்கூட்டத்தில் செபாஸ்டியன் சீமான் பேசியது நினைவில் கொள்ளவேண்டும். இப்பொழுது, பழனிக்கு வந்துள்ளனர். பழனியாண்டவர் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக மலைக்கோவில் நோக்கி செல்வோம் என்று, திடீரென பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் இருந்து மலைக்கோயில் நோக்கி சென்றனர்[6]. அப்போது, “முருகனை காண மலைக்கோயிலுக்கு செல்கிறோம்’ என சீமான் மற்றும் தொண்டர்கள் மலை ஏறத்துவங்கினர். கோவிலில் சீமான் தொண்டர்களுடன் கருவறை நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தபோவதாக போலீசாருக்கும் மற்றும் இந்து முன்னணி அமைப்பினருக்கும் தகவல் தெரிந்ததால், அவர்கல் தடுத்துத்ன் திருப்பி அனுப்பப்பட்டனர்.[7]. இதுகுறித்து டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் கூறுகையில், “”ஊர்வலம், பொதுகூட்டம் நடத்த அனுமதி வாங்கியிருந்தனர். திடீரென ஊர்வலத்தின் போது மலைக்கோயிலுக்கு செல்வதாக கூறினர். இதனால் தடுத்தோம்,” என்றார். இதனையடுத்து சீமான் வெளிபிரகாரத்தில் வணங்கி விட்டு பொதுக்கூட்டத்திற்கு சென்றார் என்பதும் நாடகமே என்று அறிந்து கொள்ளலாம்.

சீமானின் குழப்ப சித்தாந்தம்

சீமானின் குழப்ப சித்தாந்தம்

இந்தியாவை, தமிழ் பேசும் மக்களை ஏமாற்றிய சீமான்: ஒருபக்கம் இந்திய விரோத சக்திகளுடன் சேர்ந்து கொண்டு கூட்டங்களை நடத்துவது[8], இன்னொரு பக்கம் அடிப்படைவாத ஜிஹாதிகளை ஆதரிப்பது, பெரியாரிஸம் பேசுவது, ……இப்படி குழப்;பக் கலவையாகத்தான் செபாஸ்டியன் சீமான் இருந்துள்ளார். தமிழருக்கு யாசின் மாலிக்கைப் பற்றி என்ன தெரியும், முஸ்லீம் என்று சொல்லிக் கொண்டு கூத்தடிப்பது தெரியுமா? அப்சல்குருவின் பெயரை வைத்துக் கொண்டு, ஆபிஸ் சையதுடன் சேர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டது தெரியுமா? என்று முன்பு கேள்விகளை எழுப்பியிருந்தேன்[9].  “ஆரியர்-திராவிடர்”ரென்ற செல்லாத சித்தாந்தத்தைப் பேசி சில மக்களைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சரித்திரத் தன்மையற்ற புளுகுகளை வைத்து புத்தகம் வேறு எழுதியிருக்கிறார்! கால்டுவெல் துரோகத்தை இவர் புதுப்பிக்கிறார் போலும். இதில் இவர் “நாடார்” என்று வேறு சொல்கிறார்கள். பிறகு நாடார்களை இழிவு படுத்திய கால்டுவெல் சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு தமிழர்களை ஏமாற்ற யார் கற்றுக் கொடுத்தது? கனடாவில் இந்து கோவில்கள் கிருத்துவர்களால் தவறாகப் பயன்படுத்தப் பட்டதால், தண்டம் செல்லுத்த வேண்டியதாகியது[10]. இலங்கையில் முஸ்லீம்கள், முஸ்லீம்களாகத்தான் இருந்து செயல்பட்டனர், சாதித்துக் கொண்டனர். முன்பே பலமுறைக் குறிப்பிட்டப் படி, தமிழக ஊடகங்களே “இலங்கை முஸ்லீம்கள்”, “இலங்கை தமிழர்கள்” என்று பிரித்துக் காட்டி, தமிழர்களை ஒதுக்கினர்[11]. ஆனால், இவரோ பழனிபாபா விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்திய தமிழர்களுக்கோ, இலங்கைத் தமிழர்களுக்கோ இவரால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் எடுத்துக் காட்டப்பட்டது[12].

 

ஜான் சாமுவேல் பாதையில் செபாஸ்டியன் சீமானா?: ஜான் சாமுவேல் என்ற கிருத்துவர் 2004 வரை அனைந்துலக ஸ்கந்தா-முருகா மாநாடு என்ற பெயரில் ஒரு பிரைவேட் கம்பெனியை வைத்துக் கொண்டு, அதற்கு சேர்கள் / பங்குகள் எல்லாம் வாங்கச் சொல்லி நண்பர்களை, மாநாட்டுக்கு வந்தவர்களை வற்புறுத்தி வந்தார்[13]. முருக பக்தர் போல விபூதி வேட்டியெல்லாம் கட்டிக் கொண்டு, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியை எல்லாம் போய் பார்த்திருக்கிறார், இந்த சாமுவேல். முதல் மாநாடு சென்னையில், ஆசியவியல் வளாகத்தில் 1997ல் நடந்தது. அப்பொழுதே, இவர் ஒரு கிருத்துவ கூட்டத்தைக் கூட்டி வந்து, முருகன் தான் ஏசு என்பது போல ஆய்வுக்கட்டுரைகளை படிக்க வைத்ததுடன், விழா மலரிலும் வெளியிய வைத்தார். அது மட்டுமல்ல, தமிழ்-சமஸ்கிருத பேதத்தையும் கிளப்பிவிட்டார். முருகன் – கந்தன் – கார்த்திகேயன் – சுப்ரமணியன் என ஆராய்ச்சி செய்வதாக இருந்தால், சமஸ்கிருதம் தெரியாமல் எந்த ஆரய்ய்ச்சியும் செய்யமுடியாது. இருந்தாலும் சக்திவேல் முருகனார் போல ஆட்களைத் தூண்டி விட்டு பிரச்சினையைக் கிளப்பினார். முருகனைப் பிடித்துக் கொண்டிருந்த ஜான் சாமுவேல், திடீரென்று முருகனை, எம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்டு, தாமஸைப் பிடித்துக் கொண்டது என்ன ரகசியம் என்பதை ஆராய ஆரம்பித்தபோது தான், முந்தைய அருளாப்பா-ஆச்சார்ய பால் கோஷ்டிகளின் மோசடிகளை விட, ஒரு பெரிய மோசடியை ஆரம்பித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது[14]. இதே பாணியில் தான் செபாஸ்டியன் சீமானும் இறங்கியுள்ளார்.  பிஷப்புகளை சந்தித்து, தெய்வநாயகத்துடன் சேர்ந்து கபாலீஸ்வரர் கோவில் கருவறைப் போராட்டம் என்று ஆரம்பித்து, பழனிபாபா நினைவுவிழவில் கலந்து கொண்டு, இப்பொழுது பழனிக்கு வந்துள்ளார்.

© வேதபிரகாஷ்

09-02-2015

[1] தினமலர், பழநி கோயிலில் சீமான்: போலீசார் அனுமதி மறுப்பு, பிப்ரவரி.08-02-2015, 01:17.

[2] http://www.dailythanthi.com/News/Districts/dindugal/2015/02/07211902/Sri-Lankan-Tamils-issue-the-decision-of-the-State.vpf

[3] http://www.keetru.com/periyarmuzhakkam/jul08/seemaan_1.php

[4] நான் சீமான் ஆனது எப்படி?” – ஆனந்த விகடன், http://www.naamtamilar.org/beta/textnews_detail.php?id=807

[5] இந்தியன் எக்ஸ்பிரஸ், ஏதோ அந்த கூட்டம், கபாலீஸ்வரர் கோவிலில் உள்ளேயே நடந்தது மாதிரி, ஒரு புகைப்படத்துடன், செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அதற்கு கடிதம் எழுதியதற்கு, இன்று வரை மறுப்பு அல்லது அது தவறு என்று வருத்தம் தெரிவித்தோ என்ற செய்தியும் வரவில்லை / வெளியிடவில்லை.

[6] தினமலர், பழநி கோயிலில் சீமான்: போலீசார் அனுமதி மறுப்பு, பிப்ரவரி.08-02-2015, 01:17.

[7] மாலைமலர், பழனி மலைக்கோவிலுக்குள் ஊர்வலமாக செல்ல சீமானுக்கு அனுமதி மறுப்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 08, 1:11 PM IST.

[8] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/19/why-anti-national-yasn-malik-and-sebastian-seeman-come-together/

[9] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/19/yasin-malik-and-sebastian-seeman-and-their-affairs/

[10] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/20/526-sebastian-seeman-and-yasin-malik-their-activities/

[11] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/21/what-yasin-malik-and-sebastian-seeman-can-do-to-indians-or-tamils/

[12] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/29/anti-indian-propaganda-continues-by-sebastian-seeman-party/

[13] https://christianityindia.wordpress.com/category/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/

[14] https://thomasmyth.wordpress.com/2011/01/21/why-asian-institute-of-studies-involves-in-the-spread-of-thomas-myth/

செபாஸ்டியன் சீமான் திடீரென்று “முருக பக்தன்” ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு போராட்டம் நடத்துவது (1)

பிப்ரவரி 9, 2015

செபாஸ்டியன் சீமான் திடீரென்றுமுருக பக்தன்ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு போராட்டம் நடத்துவது (1)

சீமான் வேலுடன் பழனியில்.எச்சரிக்கை

சீமான் வேலுடன் பழனியில்.எச்சரிக்கை

நாம் தமிழர் கட்சியின் கிளை அமைப்பான வீரத்தமிழர் முன்னணியின் தொடக்க விழா திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்தது [1]. “சீமானின் நாம் தமிழர் கட்சியில்” பண்பாட்டு மீட்புக்காக “வீரத் தமிழர் முன்னணி” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது அவரது முரண்பாடு[2] மற்றும் ரகசிய திட்டத்தைக் காட்டுகிறது. கிருத்துவராக இருந்து கொண்டு, கிருத்துவர்களோடு சேர்ந்து கொண்டு இந்துக்களுக்கு விரோதமாக இவர் செயல்பட்ட விவகாரங்கள் ஏராளமாக உள்ளன. செபாஸ்டியன் சீமானின் கிருத்துவப் பின்னணி முதலிய விவரங்களை இங்கே பார்க்கவும்[3]. பிறகு, இலங்கைப் பிரச்சினையை வைத்துக் கொண்டு அரசியல் வியாபாரம் நடத்தினார். பிரபாகரன் இறப்பிற்குப் பிறகு, ராஜபக்ஷேவின் தோல்விக்குப் பிறகு, இவரது சித்தாந்தம் புழுத்துப் போய், ஏற்பார் இல்லாமல் போய் விட்டது. மேலும், “தமிழ் தேசியம்” பேசிவந்த, பிரிவினைவாதிகளின் பலமும் குறைந்து விட்டது. இவர் சினிமாகாரர் என்பதனால், பணத்தை வைத்துக் கொண்டு சமாளித்துக் கொண்டிருந்தார். ஆனால், உட்பூசல்கள் அதிகமாகிக் கொண்டிருந்தன. இவ்வேளையில், தமிழர்களை ஏமாற்ற “கலாச்சாரம்” என்ற உணர்ச்சிப்பூர்வமான விசயத்தை எடுத்துக் கொண்டுள்ளார் என்று தெரிகிறது.

சீமானின் புதிய கட்சி 2015

சீமானின் புதிய கட்சி 2015

பண்பாட்டு புரட்சி, இறையோன் முருகன், கிருபானந்த வாரியார், என்ற பட்டியலில் பெரியாரைக் காணோம்:  “வீரத் தமிழர் முன்னணி”யின் தொடக்க விழா பழனியில் நடைபெற உள்ளது என்று அவர்களது இணைதளம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை[4] என்று இவ்வாறுள்ளது: “பண்பாட்டு புரட்சி இல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது என்பதை நடுகல் மரபினராகிய நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். இயற்கை வழிபாட்டை கொண்ட தமிழர் நாம் உலகப் பொதுமறையாம் திருக்குறளே எமது மறை; எங்கள் வழி வள்ளுவம்; எங்கள் வழிபாடு இயற்கை; எங்கள் தெய்வங்கள் முன்னோர்கள் என்ற நெறியின் படி.. பெரும்புகழ் இறையோன் முருகன், வாழ்வியல் நெறிகட்டி வள்ளுவப் பெருந்தகை, தமிழ்மொழி இலக்கணம் கண்ட தொல்காப்பியர், மகத்துவம் பொருந்திய மாமுனி அகத்தியர், அறம் முழங்கிய ஔவை பாட்டி, நீதியின் வடிவம் கண்ணகி, வழிபாட்டு வழிகாட்டி அய்யா வள்ளலார், ஆன்மிகமும் அறிவியலும் கற்பித்த ஆசான் திருமூலச் சித்தர், அய்யா வழி வைகுந்தர், பெருமைமிகு கிருபானந்த வாரியார், மதிப்புமிகு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோரைக் குறியீடுகளாகக் கொண்டும், எங்கள் இனம் காக்க போராடிய கரிகாற்சோழன், அருண்மொழிச்சோழன், அரசேந்திர சோழன், பூலித்தேவன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார், பண்டார வன்னியன், மருதுபாண்டியர், அழகுமுத்துக்கோன், பெரும்பிடுகு, சுந்தரலிங்கம், ஒண்டிவீரன் ஆகியோரை தெய்வங்களாக நெஞ்சில் நிறுத்தியும் வரும் தைப்பூச நாட்களில் புதிய எழுச்சிக்கு நாம் தயாராகிவிட்டோம். நாளை பிப்ரவரி 7 ஆம் தேதி பழனியில் தமிழ்ப் பண்பாட்டை மீட்கவும் காக்கவும் வீரத்தமிழர் முன்னணியைத் தொடங்க இருக்கிறோம். மாலை 3 மணிக்கு பழனியாண்டவர் கலை கல்லூரியிலிருந்து பேரணி தொடங்கி தேரடி வீதியில் நிறைவடைந்து தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது”, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது[5].

Seeman withn VEL- exploiting culture

Seeman withn VEL- exploiting culture

பொதுமறையாம் திருக்குறளே எமது மறை; எங்கள் வழி வள்ளுவம்: தெய்வநாயகம் பாணியில் இப்படி ஆரம்பித்திருப்பது கிருத்துவ திட்டத்தை வெலிப்படுத்துகிறது. “பெரும்புகழ் இறையோன் முருகன்,” என்றபோது ஜான் சாமுவேலை நினைவு படுத்துகிறது. “தமிழ்மொழி இலக்கணம் கண்ட தொல்காப்பியர், மகத்துவம் பொருந்திய மாமுனி அகத்தியர், அறம் முழங்கிய ஔவை பாட்டி, நீதியின் வடிவம் கண்ணகி, வழிபாட்டு வழிகாட்டி அய்யா வள்ளலார், ஆன்மிகமும் அறிவியலும் கற்பித்த ஆசான் திருமூலச் சித்தர், அய்யா வழி வைகுந்தர், பெருமைமிகு கிருபானந்த வாரியார், மதிப்புமிகு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோரைக் குறியீடுகளாகக் கொண்டு,” எனும்போது, அடையாளங்களை குழப்பப் பார்க்கும் போக்கு, “எங்கள் இனம் காக்க போராடிய கரிகாற்சோழன், அருண்மொழிச்சோழன், அரசேந்திர சோழன், பூலித்தேவன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார், பண்டார வன்னியன், மருதுபாண்டியர், அழகுமுத்துக்கோன், பெரும்பிடுகு, சுந்தரலிங்கம், ஒண்டிவீரன் ஆகியோரை தெய்வங்களாக நெஞ்சில் நிறுத்தி”, எனும்போது, ஜாதித்துவமும், “தமிழ்ப் பண்பாட்டை மீட்கவும் காக்க”, எனும்போது, இவரது போலித்தனமும் வெலிப்படுகின்றன. இத்தனை நாட்களாக இவர் எப்படி “தமிழ்ப் பண்பாட்டை மீட்டிருக்கிறார், “காக்க”, என்ன செய்திருக்கிறார், என்பது இவரது வசைமொழிகள், தூஷ்ணங்கள் மூலமாகவே அறிந்து கொள்ளலாம்.

அய்யாநாதன் - நாம் தமிழர் கட்சி பிளவு- ஜனவரி 2015

அய்யாநாதன் – நாம் தமிழர் கட்சி பிளவு- ஜனவரி 2015

சீமானுக்கு எதிராக கட்சி முக்கிய நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி உயர்த்திய விளைவா?:  நாம் தமிழர் கட்சியை 2010-ல் இயக்குநர் சீமான் தொடங்கினார். இந்த கட்சியை, தமிழ்த் தேசிய, ஈழப்போராட்ட ஆதரவு அரசியல் இயக்கமாக நடத்தினார். சமீபத்தில், இந்த கட்சியில் சீமானுக்கு எதிராக கட்சி முக்கிய நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி உயர்த்தி தனித்து செயல்படப் போவதாகவும், கட்சியில் இருந்து சீமானை நீக்கப்போவதாகவும்[6] அறிவித்தனர்[7]. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக செயல்படப் போவதாக அக்கட்சியின் சர்வதேச ஊடகவியல் பொறுப்பாளர் அய்யநாதன் உள்பட ஈரோடு ஜெயராஜ் மற்றும் 13 மாவட்ட பொறுப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்[8]. நாம் தமிழர் கட்சியின் சர்வதேச ஊடகவியல் பொறுப்பாளராக இருக்கும் அய்யநாதன், சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காரைக்குடியில் பத்திரிகையாளர்களை இன்று சந்தி்த்தனர்[9]. அப்பொழுது பேசிய அய்யநாதன், “தமிழ் நாட்டை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதையும் மீறி காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீத்தேன் ஆய்விற்காக தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடி, அந்த குழாய்களை பிடுங்கி எரிந்த சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன் உட்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டு அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்காக சீமான் ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை. அதேபோல் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கபட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்த்தில் சிறை சென்ற ராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கவி.இளங்கோ கைது செய்யப்பட்டதற்கும் ஒரு கண்டன அறிக்கை கூட சீமான் வெளியிடவில்லை.

 

அய்யாநாதன் - நாம் தமிழர் கட்சி பிளவு- ஜனவரி 2015..கூட்டம்

அய்யாநாதன் – நாம் தமிழர் கட்சி பிளவு- ஜனவரி 2015..கூட்டம்

புதிய நபர்களை வைத்து பொதுக்குழுவை நடத்தியுள்ளார்[10]: மாறாக தமிழர் நலனுக்காக போராடிய இவர்களை தொடர்ந்து கண்டித்து இவர்கள் இல்லாமல் புதிய நபர்களை வைத்து பொதுக்குழுவை நடத்தியுள்ளார். தமிழ் உணர்வு அற்றவர்களுக்கு பொறுப்பு வழங்கியுள்ளார். இவர்களின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டை போடுகிறார். அதற்காக தான் தமிழர் பிரச்சினையில் நாங்கள் வீரியத்துடன் செயல்பட நாம் தமிழர் கட்சியில் தனித்து செயல்படுவது என்ற முடிவினை நாங்கள் எடுத்துள்ளோம். எங்களுடன் எட்டு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கைகோர்த்துள்ளனர். நாங்கள் நாம் தமிழர் கட்சியில் தான் இருப்போம். ஆனால் தனித்து செயல்பட உள்ளோம். இந்த கட்சியை தேர்தல் கமிஷனில் பதிவு செய்து ஒரு ஆண்டு ஆகியும் எந்த பொறுப்பாளர்களும் நியமிக்கப்படவில்லை. அதேபோல் கட்சியில் எந்த உறுப்பினருக்கும் உறுப்பினர் அட்டை கிடையாது. சீமானுக்கே நாம் தமிழர் கட்சியில் உறுப்பினர் அட்டை கிடையாது. இந்த நிலை தொடர்வதை நாங்கள் பொறுத்து கொள்ள முடியாது. பொதுக்குழுவை கூட்டி அதன் மூலம் தான் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பதவிகளை அறிவிக்க முடியும். சீமானால் தன்னிச்சையாக அறிவிக்க முடியாது. தற்பொழுது வரை சீமான் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியில் தான் உள்ளார். ஆனால் வேலுப்பிள்ளை பிராபகரனை தலைவராக ஏற்றுகொண்ட ஒரு இயக்கம் இப்படி செயல்படுவதை நாங்கள் பார்த்துகொண்டு இருக்க முடியாமல் தான் இந்த முடிவை எடுத்துள்ளோம்”, என்றார் அவர்.

marumalarchy naam tamilar-2

marumalarchy naam tamilar-2

திடீரென்று பழனி முருகன் மீது பிறந்த பக்தியா, பித்தா, வெறியா?: பழனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரதமிழர் முன்னணி என்ற அமைப்பு தொடக்க விழா நடந்தது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். முன்னதாக கட்சியினர் பழனியாண்டவர் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக மலைக்கோவில் நோக்கி சென்றனர். திடீரென பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் இருந்து மலைக்கோயில் நோக்கி வாகனங்கள் சென்றன[11]. அப்போது, “முருகனை காண மலைக்கோயிலுக்கு செல்கிறோம்’ என சீமான் மற்றும் தொண்டர்கள் மலை ஏறினர். கோவிலில் சீமான் தொண்டர்களுடன் கருவறை நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தபோவதாக போலீசாருக்கும் மற்றும் இந்து முன்னணி அமைப்பினருக்கும் தகவல் தெரிந்தது. இதனையடுத்து போலீசார் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் மலைக்கோவிலில் குவிந்தனர். டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், தாசில்தார் மாரியப்பன் ஆகியோர் மலைக்கோயிலில் சீமானை தடுத்து நிறுத்த காத்திருந்தனர்[12]. அப்போது போலீசார் மலைக்கோவில் வாசலில் சீமான் மற்றும் தொண்டர்களை தடுத்து கோவிலுக்குள் ஊர்வலமாக செல்ல அனுமதி வாங்கவில்லை என்று தெரிவித்தனர்[13]. .இதுகுறித்து டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் கூறுகையில், “”ஊர்வலம், பொதுகூட்டம் நடத்த அனுமதி வாங்கியிருந்தனர். திடீரென ஊர்வலத்தின் போது மலைக்கோயிலுக்கு செல்வதாக கூறினர். இதனால் தடுத்தோம்,” என்றார். இதனையடுத்து சீமான் வெளிபிரகாரத்தில் வணங்கி விட்டு பொதுக்கூட்டத்திற்கு சென்றார். பொதுக்கூட்டத்தில் சீமான், தனது கட்சியை சேர்ந்த சிலர் தமிழில் பெயரை மாற்றிக் கொண்ட விபரத்தை வாசித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Seeman withn VEL- exploiting culture, sentiments

Seeman withn VEL- exploiting culture, sentiments

வருங்கால இளைஞர்களுக்கு எடுத்துறைக்கும் வகையில் எந்த ஒரு அமைப்பும் இல்லை: முன்னதாக சீமான் நிருபர்களிடம் கூறியதாவது[14]:– தமிழகத்தில் இளைஞர் பாசறை, மகளிர் பாசறை, இலக்கிய பண்பாட்டு பாசறை போன்றவைகளும் இந்து அமைப்புகளும் ஏராளமாக உள்ளன. ஆனால் பண்டைய தமிழர்களின் மரபு, வீரம் உள்ளிட்டவைகளை வருங்கால இளைஞர்களுக்கு எடுத்துறைக்கும் வகையில் எந்த ஒரு அமைப்பும் இல்லை. இதனால் நாம் நம் முன்னோர்களான ஆதி தமிழர்களின் வாழ்வு முறையை மறந்து போகும் நிலை உள்ளது. எனவே தமிழர்களின் மரபை அழிவில் இருந்து மீட்கும் ஒரு அமைப்பாகவே வீரதமிழர் முன்னணி உருவாக்கப்பட்டுள்ளது. குறிஞ்சி தமிழர் தந்த முப்பாட்டன் முருகப்பெருமான் கோவில் கொண்டுள்ள பழனியில் இந்த அமைப்பை தொடங்கி வைப்பதில் நான் பெருமையடைகிறேன்[15]. பழனியில் தற்போது வீரதமிழர் முன்னணி என்ற புது இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது அரசியல் கட்சியல்ல. நாம் தமிழர் கட்சியின் ஒரு இயக்கமாக செயல்படும்.

சீமான் வேலுடன் பழனியில்

சீமான் வேலுடன் பழனியில்

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் …..?: கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் திருவள்ளுவருடைய நெறிமுறைகளை பின்பற்றுபவர்கள், அதன்படி வாழ விருப்ப படுபவர்களுக்காக வீரதமிழர் முன்னணி இயக்கத்தை ஆரம்பத்துள்ளோம். வீரதமிழர் முன்னணி இயக்கம் திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக இருக்கும். 2016–ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் தனித்து போட்டியிடுவோம். இலங்கை தமிழர்கள் அந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் மத்திய அரசு முடிவு கண்டனத்திற்குரியது. இலங்கைக்கு திருப்பி அனுப்பமாட்டோம் என தமிழகஅரசு முடிவெடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். நாம் தமிழர் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாகவே சீமான், அந்த கட்சிக்கு மாற்றாக புதிய கட்சி தொடங்கு வதற்காக இந்த புதிய இயக்கத்தை தொடங்கியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது[16].இதையடுத்து வீரதமிழர் முன்னணி அமைப்பு சார்பில் கொள்கை விளக்க பேரணி நடந்தது. பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் தொடங்கிய இப்பேரணி பழனி தேரடிவீதியில் நிறைவடைந்தது. தொடர்ந்து வீரதமிழர் முன்னணி அமைப்புக்கான மாநில ஒருங்கிணைப்பாளர்களாக பெஞ்சமின், அலாவுதீன், செந்தில்நாதன் சேகுவேரா, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்[17].

© வேதபிரகாஷ்

09-02-2015

[1] http://naamtamilar.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81

[2] http://www.daytamil.com/2014/01/tamil_3808.html

[3]https://christianityindia.wordpress.com/2010/05/23/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86/

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-launch-veerath-thamizhar-munnani-220469.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, சீமானின் நாம் தமிழர்கட்சியில் பண்பாட்டு மீட்புக்காகவீரத்தமிழர் முன்னணி” – நாளை உதயம்!!, Posted by: Mathi, Published: Friday, February 6, 2015, 14:17 [IST]

[6] https://www.facebook.com/pathivumedia/posts/563479750454837

[7] தி இந்து, இயக்குநர் சீமான் புதிய இயக்கம் தொடக்கம்: நாம் தமிழர் கட்சிக்கு மாற்றாக புதிய கட்சியா?, Published: February 8, 2015 10:55 ISTUpdated: February 8, 2015 10:55 IST

[8] ஒன்.இந்தியா.தமிழ், நாம் தமிழர் கட்சியில் பிளவு?…. சீமானுக்கு எதிராக செயல்படப் போவதாக ஒரு பிரிவு அறிவிப்பு, Posted by: Sutha

Updated: Wednesday, January 7, 2015, 19:38 [IST]

[9] http://www.yarl.com/forum3/index.php?/topic/151729-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%813/

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/naam-tamil-splits-218540.html

[11] தினமலர், பழநி கோயிலில் சீமான்: போலீசார் அனுமதி மறுப்பு, பிப்ரவரி.08-02-2015, 01:17.

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1178637

[13] மாலைமலர், பழனி மலைக்கோவிலுக்குள் ஊர்வலமாக செல்ல சீமானுக்கு அனுமதி மறுப்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 08, 1:11 PM IST.

[14] http://www.maalaimalar.com/2015/02/08131115/police-refuse-permission-to-se.html

[15] தினத்தந்தி, இலங்கை தமிழர்கள் பிரச்சினை: தமிழக அரசின் முடிவு பாராட்டுக்குரியது சீமான் பேட்டி, ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 08, 2015

[16]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article6870989.ece?homepage=true

[17] http://www.dailythanthi.com/News/Districts/dindugal/2015/02/07211902/Sri-Lankan-Tamils-issue-the-decision-of-the-State.vpf

தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் நடந்த திருமணத்தில் தாலி கட்டப்படாமல், “ரெடிமேட் தாலி” ஏன் அணிவிக்கப்பட்டது?

செப்ரெம்பர் 10, 2013

தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் நடந்த திருமணத்தில் தாலி கட்டப்படாமல், “ரெடிமேட் தாலி”  ஏன் அணிவிக்கப்பட்டது?

முக்கியமான குறிப்பு: சீமான்-கயல்விழி திருமணம் அவர்களது சொந்த விவகாரம். அவர்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. அவர்கள் எப்பட் வேண்டுமானாலும், எங்கேயாவது, எந்தவிதத்திலும், திருமணம் செய்து கொள்ளலாம். அது அவ்ழர்களது தனிப்பட்ட விவகாரம். அதைப் பற்றி இங்கு விமர்சிக்கப் படவில்லை. “தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது”, என்று ஊடகங்கள் பறைச்சாற்றியுள்ளதால், தமிழகர்கள் உண்மை என்ன அறிந்தாக வேண்டிய நிலை உள்ளது.சீமான் போன்ற நாத்திகக்காரர்கள், பெரியார்-சுயமரியாதை முகமூடிகளை அணிந்து கொண்டு, இந்துக்களை மிக்கக் கடுமையாக விமர்சித்துள்ளாதாலும், தமிழர்களை அவர்களது உண்மையான கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் முதலியவற்றை அறியாமல் செய்து விட்டதாலும், சில உண்மைகளை சொல்ல வேண்டிய அவசியத்தில் கீழ்கண்ட கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன.
தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது!

தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது!

தமிழ் முறை மற்றும் எது சீர்திருத்த முறை எது: தமிழ்முறை மற்றும் எது சீர்திருத்தமுறை சீமான் – கயல்விழி திருமணம் தமிழ் ஆராய்ச்சியாளர்களை உசுப்பியுள்ளது எனலாம். ஏனெனில் சாதாரணமாக, ஒரு கல்யாணத்தில் என்ன நடக்கவேண்டுமே எல்லாமே நடந்தது. “தீ” தான் வளர்க்கப் படவில்லை. தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் நடந்த கல்யாணம் எனும்போது, எது தமிழ்முறை மற்றும் எது சீர்திருத்தமுறை என்ற கேள்விகள் எழுகின்றன. திராவிட இயக்கத்தின் படி, சுயமரியாதை திருமணங்கள் நடந்தன. ஆனால், அவையெல்லாம் செல்லுபடியாகாது என்ற நிலையும் ஏற்பட்டது. அண்ணாதுரை பதவிக்கு வந்ததும், இந்து திருமணச் சட்டத்தில் ஒரு பிரிவை சேர்த்துக் கொண்டு, திராவிடர்களின் சுயமரியாதையைக் காப்பாற்றினார்! அதாவது தங்களை “இந்துக்கள்” என்று ஒப்புக்கொண்டுதான் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.

தாலி கட்டுவதா, அணிவிப்பதா, தொங்கவிடுவதா - எது தமிழ்முறை,  சீர்திருத்த முறை  திருமணம்?

தாலி கட்டுவதா, அணிவிப்பதா, தொங்கவிடுவதா – எது தமிழ்முறை, சீர்திருத்த முறை திருமணம்?

பட்டுவேட்டி,  பட்டுசட்டை,  பட்டுசேலை முதலியன எந்த முறை?: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்– காளிமுத்துவின் மகள் கயல்விழி திருமணம் சென்னையில் 08-09-2013 அன்று காலையில் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடந்தது.  தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். சீமான் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து இருந்தார். மணப்பெண் கயல்விழி தங்கநிற பட்டு சேலை அணிந்து இருந்தார், என்று ஊடகங்கள் விவரித்தன. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வெளியிட்டப்பட்டன. தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது[1].  ஆனால், இவையெல்லாம் என்று விவரிக்கப்படவில்லை. இவற்றிற்கு பதிலாக கருப்புக் கலரில் உடைகள் அணிந்து கொண்டு புரட்சிகரமான இணையும் நிகழ்ச்சியை செய்திருக்கலாம். ராமருக்கே செருப்பு மாலைகள் போட்ட பகுத்தறிவாளிகள் என்பதனால், பூமாலைகளுக்குப் பதிலாக வேறெந்த மாலைகளை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், ஏன் செய்யவில்லை?

10.06க்குதாலிஅணிவித்தது: சீமான் பட்டு, வேட்டி சட்டை அணிந்து காலை 9.20 மணியளவில் மண மேடைக்கு வந்தார். கயல்விழி பொன்நிற பட்டு சேலை அணிந்து 9.45 மணியளவில் மண மேடைக்கு அழைத்து வரப்பட்டார். தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. அதன்பின் சீமானும்–கயல்விழியும் இணைந்து திருமணத்துக்கு வந்திருந்தவர்களை பார்த்து கை குப்பி வரவேற்றனர். சீமான்–கயல்விழி திருமணத்தை உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், காலை 10.05 மணிக்கு தமிழில் முதல் எழுத்தான ‘அ’ எழுத்து பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை சீமான் கையில் எடுத்து கொடுத்தார். பாவம் அப்பொழுது அவரைத் தாங்கலாக இருக்கச் செய்யவேண்டியதாயிற்று. அதை கயல்விழி கழுத்தில் சீமான் அணிவித்தார். அதைத் தொடர்ந்து சீமானும், கயல்விழி இருவரும் மாலை மாற்றிக்கொண்டார்கள். இதெல்லாம் எந்த முறை என்று தெரியவில்லை.

சுபமுகூர்த்த தினத்தில்,  சுபமங்கல நேரத்தில் ஏன்  “புரோசு மயக்கி”  தாலி கட்டி (இல்லை அணிவித்து), மேளதாளத்துடன் திருமணம் நடத்த வேண்டும்?: நாட்களை, மதங்களை, ஏன் ஆண்டுகளையே மாற்றி ஏன் இப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும்? 08-09-2013 மிக்கவும் சிறந்த சுபமுகூர்த்த நாள் என்பது தமிழகத்தில் உள்ள படிக்காதவனுக்குக் கூட நன்றாகத் தெரியும். அன்று பேருந்துகள், ரெயில்கள், மற்ற வண்டிகள் என்று எல்லாவற்றிலும் திருமணங்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். ஆகவே, சுபமுகூர்த்த தினத்தில், சுபமங்கல நேரத்தில் ஏன் “புரோசு மயக்கி” தாலிகட்டி, மேளதாளத்துடன் திருமணம் நடத்த வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது?

  • பெரியார் இப்படித்தான் திருமணம் செய்யவேண்டும் என்று வரையறைத்தாரா?
  • இனமானத் தலைவர் வீரமணி இப்படித்தான் திருமணம் நடத்தி வைக்கிறாரா?
  • முத்தமிழ் வித்தகர், முத்தாரக் கணவன் இப்படித்தான் மணமக்களை சேர்த்து வைக்கிறாரா?

ராகுகாலம் (காலை 4.30 – 6.00) இல்லை; எமகண்டம் (12.00 – 01.30) இல்லை; கரணன் (10.30ம் – 12.00) இல்லை – நல்ல சுபமுகூர்த்த நேரம் = 7.30 – 8.30, ஆனால், அதற்கு மேலும் 10.30 வரை மணப்பெண், மணமகன் நட்சத்திரத்தின் படி நடத்தலாம். சீமானின் ராசி தனுஸ் / தனுசு [Sagittarius], தொடர்புடைய நட்சத்திரங்கள் மூலம், பூராடம், உத்திராடம் (பாதம்-1). தனுசுக்குப் பொறுத்தமான பெண்ராசி – கடகம் என்றால், அது கயல்விழியுடையதா என்று பார்க்கவேண்டும். ஆகவே, கயல்விழியின் நட்சத்திரம் ஹஸ்தம் அல்லது சித்திரை என்றிருக்க வேண்டும். எந்த திராவிட சோதிடர், சுயமரியதை கணியன், அல்லது பகுத்தறிவு பார்ப்பனன் இந்த நேரத்தைக் கணித்துக் கொடுத்தான் என்று தெரியவில்லை.

தாலி கட்டுவதற்கும்,  அணிவிப்பதற்கும் என்ன வித்தியாசம்?: பொதுவாக தாலி கட்டும் போது, மூன்று முடிச்சுகள் போடுவது வழக்கம். ஆனால், தயாராக செய்து வைத்தத் தாலியை, ஏதோ நகையை அணிவிப்பது போல அணிவிப்பது எதில் சேர்த்தி என்று தெரியவில்லை. அதற்கு மேள வாத்தியங்கள் ஏன் முழங்க வேண்டும் என்று தெரியவில்லை. முன்பிருந்த பழக்க-வழக்கங்களை மாற்றவேண்டும் என்றால், புதியதாக மாற்று சடங்குகளை உருவாக்கி அறிமுகப்படுத்த வேண்டும். சுயமரியாதை திருமணங்கள் செல்லாது என்ரபோது, பகுத்தறிவுகள் கலங்கிவிட்டன. நீதிமன்றத் தீர்ப்புகளில் பொதுவாக திருமணங்களில் செய்யப்பட்டுவரும் சடங்குகள் ஏதாவது செய்யப்பட்டன என்று மெய்ப்பித்தால் தான் கணவன் -மனைவி தாம்பத்திய உறவு உரிமைகள் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டவுடன், திராவிடர்கள் 1962ற்குப் பிறகு ஒன்று-ஓன்றாக சேர்த்துக் கொண்டு விட்டனர். ஐயர், ஹோமம் இல்லாமல் மற்ற எல்லாவற்ரையும் சேர்த்துக் கொண்டுதான், இந்த நாத்திகவாதிகள், பெரியார் குஞ்சுகள், திராவிட வித்தகர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

பொய்யும்,  வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப: தொல்காப்பியர், “பொய்யும், வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப” என்று கூறியுள்ளார். அதாவது, களவு மற்றும் கற்பு நெறிகள் பின்பற்ரி வந்த காலத்தில், ஆண்கள் பொய் சொல்வது, இதனால் சமூகத்தில் வழுவு ஏற்படுதல் என்ற்றிருந்த நேரத்தில் ஐயர் / மேலோர் கரணங்களை, தாலிகட்டுவது போன்ற சடங்குமுறைகளை அறிமுகப்படுத்தினர். இவற்றை சங்ககால மக்களும் பின்பற்றி வந்தார்கள். சுமார் 2500 வருடங்களுக்குப் பிறகு தான், அதாவது அவர்கள் “திராவிடர்கள்” ஆனபிறகு, “சுயமரியாதை திருமணம்” என்று வேதமுறை ஒழித்து ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அவை செல்லாது என்றபோது, மறுபடியும் மந்திரங்கள், தீவளர்த்தல் இன்றி மற்றவை சேர்த்துக் கொள்ளப்பட்டன. அதனால்தான், தாலி நிலைத்தது. ஆக, பெரியார் ஐயரிடம் தோற்றுவிட்டார். இப்பொழுது, கருணாநிதி, வீரமணி, நெட்டுமாறன் போன்ற “ஐயர்கள்” கிளம்பியுள்ளார்கள். இவர்களைத்தான் நான் “திராவிட புரோகிதர்கள்” என்று குறிப்பிட்டுள்ளேன்.

பத்துப்பாட்டு — எட்டுத்தொகை சொல்லாதவை தமிழ் முறையா?: தமிழ் முதல் எழுத்தான “அ” பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை பழ.நெடுமாறன் எடுத்து கொடுக்க அதை சீமான் கயல்விழி கழுத்தில் அணிவித்தார்[2]. பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். சீமான் தாலி கட்டுவதற்கு முன் மேடையில் வைக்கப்பட்டு இருந்த பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பானுமதி அம்மாள், காளிமுத்து, மணிவண்ணன் ஆகியோர் படங்களுக்கு மாலை அணிவித்தார். அப்போது மணமக்களும், நாம் தமிழர் கட்சியினரும் ஈழப் போரில் உயிர் நீத்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உறுதி மொழி எடுத்து கொண்டனர். திருமண மேடையில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் அவரது மனைவி மதிவதனி ஆகியோர் திருமண கோலத்தில் இருக்கும் படம் பொறித்த பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டு இருந்தது. மேடையின் இடது புறத்தில் பெரியார் புகைப்படமும், வலது புறத்தில் திருவள்ளுவர் படமும் வைக்கப்பட்டு இருந்தது. சீமான் பிரபாகரனுடன் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் விழா அரங்கிலும், வெளியிலும் ஏராளமாக வைக்கப்பட்டு இருந்தன[3].

திராவிட்ட புரோகிதர்கள் நடத்தி வைத்துள்ள சில திருமணங்கள்:

மு. ரமேசு _ இ. சிவசங்கரி ஆகியோரது வாழ்க்கை இணைநல ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் உடன் உள்ளனர் (மதுரை, 31.1.2010).

ரா. சுதேஷ்பாபு _ ஸ்வீட்டி ஏஞ்சலின் பிளாரன்ஸ் ஆகியோரின் மண விழாவினை துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தி வைத்தார். தமிழர் தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர் (சென்னை, 1.02.2010).

© வேதபிரகாஷ்

10-09-2013