Posts Tagged ‘குஷ்பு’

செபாஸ்டியன் சீமான் திடீரென்று “முருக பக்தன்” ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு போராட்டம் நடத்துவது (1)

பிப்ரவரி 9, 2015

செபாஸ்டியன் சீமான் திடீரென்றுமுருக பக்தன்ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு போராட்டம் நடத்துவது (1)

சீமான் வேலுடன் பழனியில்.எச்சரிக்கை

சீமான் வேலுடன் பழனியில்.எச்சரிக்கை

நாம் தமிழர் கட்சியின் கிளை அமைப்பான வீரத்தமிழர் முன்னணியின் தொடக்க விழா திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்தது [1]. “சீமானின் நாம் தமிழர் கட்சியில்” பண்பாட்டு மீட்புக்காக “வீரத் தமிழர் முன்னணி” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது அவரது முரண்பாடு[2] மற்றும் ரகசிய திட்டத்தைக் காட்டுகிறது. கிருத்துவராக இருந்து கொண்டு, கிருத்துவர்களோடு சேர்ந்து கொண்டு இந்துக்களுக்கு விரோதமாக இவர் செயல்பட்ட விவகாரங்கள் ஏராளமாக உள்ளன. செபாஸ்டியன் சீமானின் கிருத்துவப் பின்னணி முதலிய விவரங்களை இங்கே பார்க்கவும்[3]. பிறகு, இலங்கைப் பிரச்சினையை வைத்துக் கொண்டு அரசியல் வியாபாரம் நடத்தினார். பிரபாகரன் இறப்பிற்குப் பிறகு, ராஜபக்ஷேவின் தோல்விக்குப் பிறகு, இவரது சித்தாந்தம் புழுத்துப் போய், ஏற்பார் இல்லாமல் போய் விட்டது. மேலும், “தமிழ் தேசியம்” பேசிவந்த, பிரிவினைவாதிகளின் பலமும் குறைந்து விட்டது. இவர் சினிமாகாரர் என்பதனால், பணத்தை வைத்துக் கொண்டு சமாளித்துக் கொண்டிருந்தார். ஆனால், உட்பூசல்கள் அதிகமாகிக் கொண்டிருந்தன. இவ்வேளையில், தமிழர்களை ஏமாற்ற “கலாச்சாரம்” என்ற உணர்ச்சிப்பூர்வமான விசயத்தை எடுத்துக் கொண்டுள்ளார் என்று தெரிகிறது.

சீமானின் புதிய கட்சி 2015

சீமானின் புதிய கட்சி 2015

பண்பாட்டு புரட்சி, இறையோன் முருகன், கிருபானந்த வாரியார், என்ற பட்டியலில் பெரியாரைக் காணோம்:  “வீரத் தமிழர் முன்னணி”யின் தொடக்க விழா பழனியில் நடைபெற உள்ளது என்று அவர்களது இணைதளம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை[4] என்று இவ்வாறுள்ளது: “பண்பாட்டு புரட்சி இல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது என்பதை நடுகல் மரபினராகிய நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். இயற்கை வழிபாட்டை கொண்ட தமிழர் நாம் உலகப் பொதுமறையாம் திருக்குறளே எமது மறை; எங்கள் வழி வள்ளுவம்; எங்கள் வழிபாடு இயற்கை; எங்கள் தெய்வங்கள் முன்னோர்கள் என்ற நெறியின் படி.. பெரும்புகழ் இறையோன் முருகன், வாழ்வியல் நெறிகட்டி வள்ளுவப் பெருந்தகை, தமிழ்மொழி இலக்கணம் கண்ட தொல்காப்பியர், மகத்துவம் பொருந்திய மாமுனி அகத்தியர், அறம் முழங்கிய ஔவை பாட்டி, நீதியின் வடிவம் கண்ணகி, வழிபாட்டு வழிகாட்டி அய்யா வள்ளலார், ஆன்மிகமும் அறிவியலும் கற்பித்த ஆசான் திருமூலச் சித்தர், அய்யா வழி வைகுந்தர், பெருமைமிகு கிருபானந்த வாரியார், மதிப்புமிகு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோரைக் குறியீடுகளாகக் கொண்டும், எங்கள் இனம் காக்க போராடிய கரிகாற்சோழன், அருண்மொழிச்சோழன், அரசேந்திர சோழன், பூலித்தேவன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார், பண்டார வன்னியன், மருதுபாண்டியர், அழகுமுத்துக்கோன், பெரும்பிடுகு, சுந்தரலிங்கம், ஒண்டிவீரன் ஆகியோரை தெய்வங்களாக நெஞ்சில் நிறுத்தியும் வரும் தைப்பூச நாட்களில் புதிய எழுச்சிக்கு நாம் தயாராகிவிட்டோம். நாளை பிப்ரவரி 7 ஆம் தேதி பழனியில் தமிழ்ப் பண்பாட்டை மீட்கவும் காக்கவும் வீரத்தமிழர் முன்னணியைத் தொடங்க இருக்கிறோம். மாலை 3 மணிக்கு பழனியாண்டவர் கலை கல்லூரியிலிருந்து பேரணி தொடங்கி தேரடி வீதியில் நிறைவடைந்து தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது”, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது[5].

Seeman withn VEL- exploiting culture

Seeman withn VEL- exploiting culture

பொதுமறையாம் திருக்குறளே எமது மறை; எங்கள் வழி வள்ளுவம்: தெய்வநாயகம் பாணியில் இப்படி ஆரம்பித்திருப்பது கிருத்துவ திட்டத்தை வெலிப்படுத்துகிறது. “பெரும்புகழ் இறையோன் முருகன்,” என்றபோது ஜான் சாமுவேலை நினைவு படுத்துகிறது. “தமிழ்மொழி இலக்கணம் கண்ட தொல்காப்பியர், மகத்துவம் பொருந்திய மாமுனி அகத்தியர், அறம் முழங்கிய ஔவை பாட்டி, நீதியின் வடிவம் கண்ணகி, வழிபாட்டு வழிகாட்டி அய்யா வள்ளலார், ஆன்மிகமும் அறிவியலும் கற்பித்த ஆசான் திருமூலச் சித்தர், அய்யா வழி வைகுந்தர், பெருமைமிகு கிருபானந்த வாரியார், மதிப்புமிகு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோரைக் குறியீடுகளாகக் கொண்டு,” எனும்போது, அடையாளங்களை குழப்பப் பார்க்கும் போக்கு, “எங்கள் இனம் காக்க போராடிய கரிகாற்சோழன், அருண்மொழிச்சோழன், அரசேந்திர சோழன், பூலித்தேவன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார், பண்டார வன்னியன், மருதுபாண்டியர், அழகுமுத்துக்கோன், பெரும்பிடுகு, சுந்தரலிங்கம், ஒண்டிவீரன் ஆகியோரை தெய்வங்களாக நெஞ்சில் நிறுத்தி”, எனும்போது, ஜாதித்துவமும், “தமிழ்ப் பண்பாட்டை மீட்கவும் காக்க”, எனும்போது, இவரது போலித்தனமும் வெலிப்படுகின்றன. இத்தனை நாட்களாக இவர் எப்படி “தமிழ்ப் பண்பாட்டை மீட்டிருக்கிறார், “காக்க”, என்ன செய்திருக்கிறார், என்பது இவரது வசைமொழிகள், தூஷ்ணங்கள் மூலமாகவே அறிந்து கொள்ளலாம்.

அய்யாநாதன் - நாம் தமிழர் கட்சி பிளவு- ஜனவரி 2015

அய்யாநாதன் – நாம் தமிழர் கட்சி பிளவு- ஜனவரி 2015

சீமானுக்கு எதிராக கட்சி முக்கிய நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி உயர்த்திய விளைவா?:  நாம் தமிழர் கட்சியை 2010-ல் இயக்குநர் சீமான் தொடங்கினார். இந்த கட்சியை, தமிழ்த் தேசிய, ஈழப்போராட்ட ஆதரவு அரசியல் இயக்கமாக நடத்தினார். சமீபத்தில், இந்த கட்சியில் சீமானுக்கு எதிராக கட்சி முக்கிய நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி உயர்த்தி தனித்து செயல்படப் போவதாகவும், கட்சியில் இருந்து சீமானை நீக்கப்போவதாகவும்[6] அறிவித்தனர்[7]. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக செயல்படப் போவதாக அக்கட்சியின் சர்வதேச ஊடகவியல் பொறுப்பாளர் அய்யநாதன் உள்பட ஈரோடு ஜெயராஜ் மற்றும் 13 மாவட்ட பொறுப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்[8]. நாம் தமிழர் கட்சியின் சர்வதேச ஊடகவியல் பொறுப்பாளராக இருக்கும் அய்யநாதன், சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காரைக்குடியில் பத்திரிகையாளர்களை இன்று சந்தி்த்தனர்[9]. அப்பொழுது பேசிய அய்யநாதன், “தமிழ் நாட்டை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதையும் மீறி காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீத்தேன் ஆய்விற்காக தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடி, அந்த குழாய்களை பிடுங்கி எரிந்த சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன் உட்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டு அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்காக சீமான் ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை. அதேபோல் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கபட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்த்தில் சிறை சென்ற ராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கவி.இளங்கோ கைது செய்யப்பட்டதற்கும் ஒரு கண்டன அறிக்கை கூட சீமான் வெளியிடவில்லை.

 

அய்யாநாதன் - நாம் தமிழர் கட்சி பிளவு- ஜனவரி 2015..கூட்டம்

அய்யாநாதன் – நாம் தமிழர் கட்சி பிளவு- ஜனவரி 2015..கூட்டம்

புதிய நபர்களை வைத்து பொதுக்குழுவை நடத்தியுள்ளார்[10]: மாறாக தமிழர் நலனுக்காக போராடிய இவர்களை தொடர்ந்து கண்டித்து இவர்கள் இல்லாமல் புதிய நபர்களை வைத்து பொதுக்குழுவை நடத்தியுள்ளார். தமிழ் உணர்வு அற்றவர்களுக்கு பொறுப்பு வழங்கியுள்ளார். இவர்களின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டை போடுகிறார். அதற்காக தான் தமிழர் பிரச்சினையில் நாங்கள் வீரியத்துடன் செயல்பட நாம் தமிழர் கட்சியில் தனித்து செயல்படுவது என்ற முடிவினை நாங்கள் எடுத்துள்ளோம். எங்களுடன் எட்டு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கைகோர்த்துள்ளனர். நாங்கள் நாம் தமிழர் கட்சியில் தான் இருப்போம். ஆனால் தனித்து செயல்பட உள்ளோம். இந்த கட்சியை தேர்தல் கமிஷனில் பதிவு செய்து ஒரு ஆண்டு ஆகியும் எந்த பொறுப்பாளர்களும் நியமிக்கப்படவில்லை. அதேபோல் கட்சியில் எந்த உறுப்பினருக்கும் உறுப்பினர் அட்டை கிடையாது. சீமானுக்கே நாம் தமிழர் கட்சியில் உறுப்பினர் அட்டை கிடையாது. இந்த நிலை தொடர்வதை நாங்கள் பொறுத்து கொள்ள முடியாது. பொதுக்குழுவை கூட்டி அதன் மூலம் தான் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பதவிகளை அறிவிக்க முடியும். சீமானால் தன்னிச்சையாக அறிவிக்க முடியாது. தற்பொழுது வரை சீமான் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியில் தான் உள்ளார். ஆனால் வேலுப்பிள்ளை பிராபகரனை தலைவராக ஏற்றுகொண்ட ஒரு இயக்கம் இப்படி செயல்படுவதை நாங்கள் பார்த்துகொண்டு இருக்க முடியாமல் தான் இந்த முடிவை எடுத்துள்ளோம்”, என்றார் அவர்.

marumalarchy naam tamilar-2

marumalarchy naam tamilar-2

திடீரென்று பழனி முருகன் மீது பிறந்த பக்தியா, பித்தா, வெறியா?: பழனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரதமிழர் முன்னணி என்ற அமைப்பு தொடக்க விழா நடந்தது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். முன்னதாக கட்சியினர் பழனியாண்டவர் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக மலைக்கோவில் நோக்கி சென்றனர். திடீரென பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் இருந்து மலைக்கோயில் நோக்கி வாகனங்கள் சென்றன[11]. அப்போது, “முருகனை காண மலைக்கோயிலுக்கு செல்கிறோம்’ என சீமான் மற்றும் தொண்டர்கள் மலை ஏறினர். கோவிலில் சீமான் தொண்டர்களுடன் கருவறை நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தபோவதாக போலீசாருக்கும் மற்றும் இந்து முன்னணி அமைப்பினருக்கும் தகவல் தெரிந்தது. இதனையடுத்து போலீசார் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் மலைக்கோவிலில் குவிந்தனர். டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், தாசில்தார் மாரியப்பன் ஆகியோர் மலைக்கோயிலில் சீமானை தடுத்து நிறுத்த காத்திருந்தனர்[12]. அப்போது போலீசார் மலைக்கோவில் வாசலில் சீமான் மற்றும் தொண்டர்களை தடுத்து கோவிலுக்குள் ஊர்வலமாக செல்ல அனுமதி வாங்கவில்லை என்று தெரிவித்தனர்[13]. .இதுகுறித்து டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் கூறுகையில், “”ஊர்வலம், பொதுகூட்டம் நடத்த அனுமதி வாங்கியிருந்தனர். திடீரென ஊர்வலத்தின் போது மலைக்கோயிலுக்கு செல்வதாக கூறினர். இதனால் தடுத்தோம்,” என்றார். இதனையடுத்து சீமான் வெளிபிரகாரத்தில் வணங்கி விட்டு பொதுக்கூட்டத்திற்கு சென்றார். பொதுக்கூட்டத்தில் சீமான், தனது கட்சியை சேர்ந்த சிலர் தமிழில் பெயரை மாற்றிக் கொண்ட விபரத்தை வாசித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Seeman withn VEL- exploiting culture, sentiments

Seeman withn VEL- exploiting culture, sentiments

வருங்கால இளைஞர்களுக்கு எடுத்துறைக்கும் வகையில் எந்த ஒரு அமைப்பும் இல்லை: முன்னதாக சீமான் நிருபர்களிடம் கூறியதாவது[14]:– தமிழகத்தில் இளைஞர் பாசறை, மகளிர் பாசறை, இலக்கிய பண்பாட்டு பாசறை போன்றவைகளும் இந்து அமைப்புகளும் ஏராளமாக உள்ளன. ஆனால் பண்டைய தமிழர்களின் மரபு, வீரம் உள்ளிட்டவைகளை வருங்கால இளைஞர்களுக்கு எடுத்துறைக்கும் வகையில் எந்த ஒரு அமைப்பும் இல்லை. இதனால் நாம் நம் முன்னோர்களான ஆதி தமிழர்களின் வாழ்வு முறையை மறந்து போகும் நிலை உள்ளது. எனவே தமிழர்களின் மரபை அழிவில் இருந்து மீட்கும் ஒரு அமைப்பாகவே வீரதமிழர் முன்னணி உருவாக்கப்பட்டுள்ளது. குறிஞ்சி தமிழர் தந்த முப்பாட்டன் முருகப்பெருமான் கோவில் கொண்டுள்ள பழனியில் இந்த அமைப்பை தொடங்கி வைப்பதில் நான் பெருமையடைகிறேன்[15]. பழனியில் தற்போது வீரதமிழர் முன்னணி என்ற புது இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது அரசியல் கட்சியல்ல. நாம் தமிழர் கட்சியின் ஒரு இயக்கமாக செயல்படும்.

சீமான் வேலுடன் பழனியில்

சீமான் வேலுடன் பழனியில்

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் …..?: கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் திருவள்ளுவருடைய நெறிமுறைகளை பின்பற்றுபவர்கள், அதன்படி வாழ விருப்ப படுபவர்களுக்காக வீரதமிழர் முன்னணி இயக்கத்தை ஆரம்பத்துள்ளோம். வீரதமிழர் முன்னணி இயக்கம் திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக இருக்கும். 2016–ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் தனித்து போட்டியிடுவோம். இலங்கை தமிழர்கள் அந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் மத்திய அரசு முடிவு கண்டனத்திற்குரியது. இலங்கைக்கு திருப்பி அனுப்பமாட்டோம் என தமிழகஅரசு முடிவெடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். நாம் தமிழர் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாகவே சீமான், அந்த கட்சிக்கு மாற்றாக புதிய கட்சி தொடங்கு வதற்காக இந்த புதிய இயக்கத்தை தொடங்கியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது[16].இதையடுத்து வீரதமிழர் முன்னணி அமைப்பு சார்பில் கொள்கை விளக்க பேரணி நடந்தது. பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் தொடங்கிய இப்பேரணி பழனி தேரடிவீதியில் நிறைவடைந்தது. தொடர்ந்து வீரதமிழர் முன்னணி அமைப்புக்கான மாநில ஒருங்கிணைப்பாளர்களாக பெஞ்சமின், அலாவுதீன், செந்தில்நாதன் சேகுவேரா, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்[17].

© வேதபிரகாஷ்

09-02-2015

[1] http://naamtamilar.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81

[2] http://www.daytamil.com/2014/01/tamil_3808.html

[3]https://christianityindia.wordpress.com/2010/05/23/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86/

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-launch-veerath-thamizhar-munnani-220469.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, சீமானின் நாம் தமிழர்கட்சியில் பண்பாட்டு மீட்புக்காகவீரத்தமிழர் முன்னணி” – நாளை உதயம்!!, Posted by: Mathi, Published: Friday, February 6, 2015, 14:17 [IST]

[6] https://www.facebook.com/pathivumedia/posts/563479750454837

[7] தி இந்து, இயக்குநர் சீமான் புதிய இயக்கம் தொடக்கம்: நாம் தமிழர் கட்சிக்கு மாற்றாக புதிய கட்சியா?, Published: February 8, 2015 10:55 ISTUpdated: February 8, 2015 10:55 IST

[8] ஒன்.இந்தியா.தமிழ், நாம் தமிழர் கட்சியில் பிளவு?…. சீமானுக்கு எதிராக செயல்படப் போவதாக ஒரு பிரிவு அறிவிப்பு, Posted by: Sutha

Updated: Wednesday, January 7, 2015, 19:38 [IST]

[9] http://www.yarl.com/forum3/index.php?/topic/151729-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%813/

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/naam-tamil-splits-218540.html

[11] தினமலர், பழநி கோயிலில் சீமான்: போலீசார் அனுமதி மறுப்பு, பிப்ரவரி.08-02-2015, 01:17.

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1178637

[13] மாலைமலர், பழனி மலைக்கோவிலுக்குள் ஊர்வலமாக செல்ல சீமானுக்கு அனுமதி மறுப்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 08, 1:11 PM IST.

[14] http://www.maalaimalar.com/2015/02/08131115/police-refuse-permission-to-se.html

[15] தினத்தந்தி, இலங்கை தமிழர்கள் பிரச்சினை: தமிழக அரசின் முடிவு பாராட்டுக்குரியது சீமான் பேட்டி, ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 08, 2015

[16]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article6870989.ece?homepage=true

[17] http://www.dailythanthi.com/News/Districts/dindugal/2015/02/07211902/Sri-Lankan-Tamils-issue-the-decision-of-the-State.vpf

மோடி-பிஜேபி வேறு, வாஜ்பேயி-பிஜேபி வேறு – ராஜா-கனிமொழியை சிறைவைத்த காங்கிரஸ் – இக்கட்சிளுடன் திமுக கூட்டு கிடையாது – கருணாநிதி திமுகவினரிடம் கெஞ்சலாக அறிவிப்பு (1)!

திசெம்பர் 16, 2013

மோடி-பிஜேபி வேறு, வாஜ்பேயி-பிஜேபி வேறு – ராஜா-கனிமொழியை சிறைவைத்த காங்கிரஸ் – இக்கட்சிளுடன் திமுக கூட்டு கிடையாது – கருணாநிதி திமுகவினரிடம் கெஞ்சலாக அறிவிப்பு (1)!

திமுகவின் கூட்டணி  பற்றி  கருணநிதியின்  விளக்கமான  பேச்சு: 15-12-2013 அன்று பொதுக்குழுவில் பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்று சிலர் பேசினர், ஆனால், காங்கிரஸுடன் கூட்டு கூடாது என்று கடுமையாக வாதிட்டனர்[1]. கருணாநிதியின் பேச்சு மிகப்பெரிய பேச்சாக இருந்தது, அதில் திமுக ஏன் பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டு கூடாது என்று விளக்கிய பிறகு, திமுகவினர் ஒற்றுமையாக இருந்து கொண்டு, மற்ற கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு, வருகின்ற தேர்தலை ஒரு சோதனையாக சந்திக்க வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளார். தனியாக நின்று தோற்றாலும் பரவாயில்லை என்ற ரீதியில் கூட பேசி முடித்தார். பிறகு பத்திரிக்கையாளர்களுடன் பேசும் போது கூட அதே பாணியில் பதில் அளித்தார்[2]. ஆங்கில பத்திரிக்கையாளர்களிடம் மட்டும் திட்டவட்டமாக பிஜேபி அல்லது காங்கிரஸ் கூட, கூட்டு இல்லை என்று தெரிவித்தார்[3].

 

காங்கிரஸ்,    பாரதிய   ஜனதா   கட்சிகளுடன்   கூட்டணி   இல்லை   என்று  திமுக   தலைவர்  கருணாநிதி,   நேற்று   கட்சியின்   பொதுக்குழு  கூட்டத்தில்  அறிவித்தார்[4]. திமுக பொதுக்குழு கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் மதியம் அந்த கூட்டம் தொடர்ந்து நடந்தது. கூட்டத்தில் திமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் தேர்தல் கூட்டணி பற்றி கருத்து கூறினர்.
அனைவரின் கருத்தையும் கேட்டறிந்த திமுக தலைவர் கருணாநிதி கூட்டத்தின் இறுதியில் பேசியதாவது: 

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், அடுத்து வரவிருக்கின்ற சட்ட மன்றத் தேர்தலில் நாம் எத்தகைய வியூகத்தை வகுக்க வேண்டும் என்பதற்காக இங்கே கூடி இருக்கிறோம். தேர்தலில் நாம் ஈடுபட வேண்டும்; வேண்டுமா, வேண்டாமா எப்படி ஈடுபடுவது? எந்த வகையில், என்ன முறையில், யாரோடு கூட்டுச் சேர்ந்து என்றெல்லாம் இந்த பொதுக்குழுவில் கேள்விகள் கேட்கப்பட்டு, வழி முறைகளும் கூறப்பட்டு, இறுதியாக எல்லா பொறுப்புகளையும் நீங்களே தாங்கிக் கொள்ளுங்கள் என்று எங்கள் தலையில் பாரத்தைச் சுமத்தி, சிக்க வைத்திருக்கிறீர்கள். கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது என்று நன்கறிந்த கருணாநிதி, தனித்து நிற்போம் என்று பேசியது உள்நோக்கத்துடன் தான் என்று தெரிகிறது. வெற்றிபெற உதவி தேவை என்ற நிலையில் இருக்கும் போது, வீராப்பான பேச்சு ஒரு உபயோகமும் இல்லை என்பது தெரிந்த விசயமே. 10-15 எம்.பிக்கள் இருந்தால் தான் மத்தியில் மவுசு இருக்கும், மந்திரி பதவி கிடைக்கும். இல்லையென்றால் திமுகவை யாரும் மதிக்க மாட்டார்கள் என்று திமுகவினர் வெளிப்படையாகவே கருத்தைத் தெரிவித்தனர்.

தி.மு..வை பொறுத்தவரை தனித்து நின்றே கூட இந்த வெற்றியைப் பெற முடியும். தனித்து நின்றேகூடஎன்று நான் கூறும்போது, ‘கூடஎன்று குறிப்பிட்ட வார்த்தையை மறந்து விடக் கூடாது. தனித்து நின்றே இந்த வெற்றியைப் பெறுவோம் என்று நான் சொல்லவில்லை. தனித்து நின்றே கூட நாம் வெற்றி பெற முடியுமென்று சொன்னால், கொஞ்ச நஞ்சம் ஒருவர், இருவருடைய உதவி இருப்பது நல்லது.

மோடி   கவர்ச்சியில்  சில  திமுகவினர்: “மோடி அவர்கள் அரங்கத்திற்கு வந்திருக்கிறார். வந்த நேரமே, வந்த விதமே, அவருடைய படாடோப விளம்பரங்கள், அவருக்காக பத்திரிகைகள், ஊடகங்கள், கார்பரேட் நிறுவனங்கள் தருகின்ற ஊக்கங்கள், உலகம் முழுதும் இருக்கின்ற செய்தியாளர்கள் அல்லது ஊடக உரிமையாளர்கள் தருகின்ற விளம்பரங்கள்.

எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. ஆனால் உங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதனால் தான் பாரதீய ஜனதா, பாரதீய ஜனதா என்கிறீர்கள். நாமும் ஒரு காலத்தில் பாரதீய ஜனதோடு நாம் நட்பு கொண்டிருந்தவர்கள் தான். அது எந்த பாரதீய ஜனதா? மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்ட அத்வானி போன்ற தலைவர்கள் உள்ள பாரதீய ஜனதா அல்ல. பிஜேபியுடன் கூட்டு வேண்டும் என்று திமுகவினர் தயாராக உள்ளனர். ஆனால், மோடியின் அதிகாரத்தோரணை கருணநிதிக்கு சவாலாக உள்ளது என்று தெரிகிறது. அவருக்கு வாஜ்பேயி போன்ற மென்மையான தலைவர் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார், ஆனால், மோடியிடம் அது எடுபடாது. மேலும், இப்பொழுதுள்ள நிலையும் வேறு.

நாம் கோரிக்கை வைத்தால், அதை உடனடியாக ஏற்றுக் கொண்டு, தோழமை உணர்வோடு நம்மோடு பழகிய வாஜ்பாய் போன்ற நல்ல மனிதர்கள் இருந்த அந்த காலத்தில் நாம் பாரதீய ஜனதாவோடு கை குலுக்கினோம்.

வாஜ்பாய்  பாரதிய  ஜனதா  கட்சியின்  தலைவராக  இருந்தாலும்,   அவர்  மனிதாபிமான  மிக்கத்  தலைவராக  இருந்தார்: “காமராஜருக்கு கன்னியாகுமரி கடற்கரையில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என நான் முதல் அமைச்சராக இருந்தபோது, அன்றைக்கு பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு கடிதம் அனுப்பி வைத்தேன்.

ஆனால், அவரைச் சுற்றியிருந்த அதிகாரிகள், கருணாநிதி கேட்கிற அந்த இடம் கடலுக்கு மிக அருகே உள்ளதால் அனுமதிக்க இயலாது என்று சொன்னார்கள். அந்த கருத்தை வாஜ்பாய் எனக்கு எழுதி அனுப்பினார்கள். நான் விடவில்லை, மீண்டும் மீண்டும் அதை வற்புறுத்திக் கேட்டதால், கடற்கரையோரத்தில் காமராஜருக்கு நினைவு மாளிகை எழுப்ப வாஜ்பாய் அனுமதி தந்தார். மோடி இப்பொழுது இந்தியாவில் உள்ள பற்பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்நிலையில் திமுக சொல்வதையெல்லாம், மோடி ஏற்றுக் கொள்வார் என்றால், கூட்டு வைத்துக் கொள்வோம் என்ற ரீதியில் பேசினால், மோடி என்ன வாஜ்பேயி ஆகிவிடுவாரா என்ன? மோடி, மோடித்தான்வாஜ்பேயி, வாஜ்பேயிதான்!

அவர் நம்முடைய தமிழ்நாட்டுத் தலைவர்களை மதிப்பவர் என்பதை எண்ணிய காரணத்தால் தான், வாஜ்பாய் அவர்கள் நம்முடைய நண்பராக இருந்த காரணத்தால் தான் அப்போது நாம் அவர்களோடு உறவு கொண்டோம்.

வாஜ்பாயினுடைய   பாரதிய  ஜனதா  வேறு,   இப்போது இருக்கிற  பா...   வேறு: “மாறன் இறந்த போது அவரை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்ற போது, இடுகாட்டிலே வாஜ்பாய் அவர்கள் திடீரென்று வந்து இறுதி வணக்கம் செலுத்தியதையும் நான் மறந்து விடக் கூடியதல்ல. என்னதான் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தாலும், அவர் மனிதாபிமானமிக்கத் தலைவராக இருந்தார். தோழமைக்கு மதிப்பு அளிக்கக் கூடியவராக இருந்தார், எனவே தான் பாரதிய ஜனதா என்பது வாஜ்பாய் அவர்கள் பொறுப்பிலே இருந்ததோடு அந்த வரலாறு நம்மைப் பொறுத்த வரையிலே முடிந்து விட்டது.

அந்த பாரதிய ஜனதா கட்சியிலே இருக்கின்ற, எல்லோரும் வாஜ்பாய் அவர்களைப் போன்றவர்களா என்றால், இல்லைபாரதிய ஜனதாவோடு தேர்தலில் உடன்பாடு கொள்ளலாமா, கூட்டணி அமைக்கலாமா என்றெல்லாம் காலையிலிருந்து இதுவரையில் பேசினீர்களே, இதற்கெல்லாம் பதிலாகத் தான், இதற்கெல்லாம் விளக்கவுரையாகத் தான் நான் இந்தச் சுருக்கமாக கருத்துகளை உங்களிடம் சொல்லியிருக்கிறேன். கூட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பிறகென்ன, அது வேறுஇது வேறு என்ற சித்தாந்தம் எல்லாம். முன்பு மதவாதம் பேசி, பிஜேபியை ஒதுக்கினர். 2002 என்று சொல்லி மிரட்டிப் பார்த்தனர், ஆனால், பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி என்று மோடி பேச ஆரம்பித்ததும், இளைஞர்கள் வேறுவிதமாக சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். ஆமாம், அவர்களும், அந்த மோடி வேறு, இந்த மோடி வேறு என்றுதான் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.  

நீங்கள் புரிந்து கொள்வீர்கள்[5]. வாஜ்பாயினுடைய பாரதிய ஜனதா வேறு, இப்போது இருக்கிற பா... வேறு.

சி.பி..யை  ஆயுதமாக  வைத்து  திமுகவை  கேவலப்  படுத்திய  காங்கிரஸ்: “இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தனியாக நின்றாலும் நிற்குமே தவிர, நம்மை மதிக்காத, அலட்சியப்படுத்து கின்ற காங்கிரஸ்காரர்களைப் போல நம்மிடத்திலே நன்றி மறந்து செயல்படுகின்ற சைபர், சைபர், சைபர் என்று ஏழு சைபரைப் போட்டு இந்த அளவிற்கு ஆயிரம், லட்சம், கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லி, அதற்கெல்லாம் யாரும் காரணம் இல்லை, ஒரே ஒரு நபர் தான், ராஜா தான் என்று அவரை சிறையிலே வைத்து ­இன்னமும் அவர் மீது வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ராஜா மாத்திரமல்ல, என்னுடைய மகள் கனிமொழியை எட்டு மாத காலம் சிறைச்சாலையிலே வைத்து வாட்டி, இன்னமும் வழக்கு நடக்கிறதுஆனால், வழக்கை நடத்துகிறவர்களும் சரி, வழக்கிலே சாட்சியம் தந்தவர்களும் சரி, அந்த வழக்கிலே என்ன தீர்ப்பு வரப்போகிறதோ, அந்தத் தீர்ப்பை, இப்போதே தயாரித்து, பத்திரிகைகளிலே அதைப் பற்றிய செய்திகளை ஓட விடு பவர்களும் சரி, அனைவருமே தெரிந்து ஒரு உண்மை தான், குற்றமே செய்யாதவர்களை, குற்றவாளிகளாக சி.பி.. மூலமாக கூண்டிலே ஏற்றியிருக்கிறார்கள் என்றால், அந்தச் சி.பி.. யாருடைய கை வாள்? சிபிஐ.யை வைத்து மாநில அரசுகளை காங்கிரஸ் மிரட்டி வருகின்றது என்று கருணாநிதி இப்பொழுது மிகவும் வருத்தப் பட்டுக் கொள்கிறார், பிறகு, தகுந்த வேலையில், முன்னமே அதைப் பற்றி எடுத்துக் காட்டியிருக்கலாமே? ஆனால், செய்யவில்லையே? இன்று முல்லாயம், மாயாவதி என்று எல்லோருமே, சிபிஐ வழக்குகளினின்று விடுபட்டுள்ளனர். லல்லுவுக்கும் ஜாமீன் என்று சொல்கிறார்கள். ராஜாகனிமொழி ஏற்கெனவே வெளியில் வந்து விட்டார்கள். பிறகு கருணாநிதி எதிர்பார்ப்பது என்ன? காங்கிரஸ் வாபஸ் வாங்கிவிட்டால், காங்கிரஸுடன் கூட்டணி என்பாரா?

அந்தச் சி.பி.. யாருடைய கையிலே இருந்த கடிவாளம்? அந்தச் சி.பி.. யார் கையிலே இருந்த ஆயுதம்? தெரியாதா மக்களுக்கு?

ராஜாவையும்,   கனிமொழியையும்  சிறை   வைத்தவர்கள்: “அன்றைக்கு பக்கம் பக்கமாக ஊழல் ஊழல் என்று, எத்தனை லட்சம், எத்தனை ஆயிரம், எத்தனை கோடி என்றெல்லாம் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு அன்றையதினம் ஊழல் புகார் சொன்ன, அந்தக் காரியங்களுக்கெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, அந்த வேடிக்கையைப் பார்த்து ரசித்து விட்டு, அதிலே யார் யார் சிக்குகிறார்கள் என்பதையெல்லாம் பார்த்து, நம்மை விட்டால் சரி என்ற அளவிற்கு, பெரிய இடங்களிலே இருந்தவர்கள், பெரிய பதவியிலே இருந்தவர்கள், பெரிய நிர்வாகத் தலைமையிலே

இருந்தவர்கள் எல்லாம் தப்பித்தால் போதும் என்ற நிலைமையில் மாட்டியவர்கள், சிக்கியவர்கள் தான் குற்றவாளிகள் என்று ராஜாவையும், அதற்குப் பிறகு திடீரென்று என்னுடைய மகள் கனிமொழியையும் சிறையிலே வைத்து எட்டு மாத காலம் வாட்டினார்களே, இன்னமும் அந்த வழக்கு நடை பெற்றுக் கொண்டிருக்கிறதே, யாருடைய ஆட்சியில்? யார் இப்போது ஆட்சி யிலே இருக்கிறார்கள்? காங்கிரஸ்காரர்கள் தானே? எனவே அதையும் நாம் மறந்து விட மாட்டோம். மறந்து விடுவதற்கில்லை. ராஜாகனிமொழியை சிறை வைத்த காங்கிரஸை மறக்க முடியாது. களங்கம் ஏற்படுத்தியதையும் மறக்க முடியாது என்றெல்லாம் பேச வேண்டிய அவசியம் என்ன? ஊழலில் ஊறி நாறிப்போன காங்கிரஸே, வெட்கமில்லாமல் தேர்தல் கூட்டங்களில் ஊழலை ஒழிப்போம் என்று பேசுகிறது. இன்றோ லோக்பால் மசோதாவிற்கே நாங்கள் தான் காரணம் என்று மார்தட்டிக் கொள்கிறது, பிறகு, திமுக ஏன் கவலைப்பட வேண்டும்?

ராஜாவிற்கு ஏற்பட்ட அந்தச் சோதனை, ராஜாவுக்கு ஏற்பட்ட அந்தச் சங்கடம், அந்த அடக்கு முறை, அந்தக் களங்கம் இவைகள் எல்லாம் இன்றையதினம் டெல்லியிலே ஆட்சியிலே இருக்கின்ற காங்கிரஸ்காரர்களால் ஏற்படுத்தப்பட்டது அல்லவா? அவர்களால் மறைமுகமாகச் செய்யப்பட்ட மாய்மாலங்கள் அல்லவா? எனவே இந்தப் பொதுக்குழுவிலே அமர்ந்திருக்கின்ற உங்களுக்கெல்லாம் நான் உறுதி அளிக்கிறேன்.

வேதபிரகாஷ்

© 16-12-2013


[4] தினகரன், பொதுக்குழுவில்கருணாநிதிதிட்டவட்டம் : காங்கிரஸ், பாரதியஜனதாவுடன்திமுககூட்டணிஇல்லை,மாற்றம் செய்த நேரம்:12/16/2013 1:53:01 AM.

சோனியாவும், ஸ்டாலினும்: அயல்நாடுகளுக்குச் சென்றுவரும் மர்மங்கள்!

செப்ரெம்பர் 17, 2011

சோனியாவும், ஸ்டாலினும்: அயல்நாடுகளுக்குச் சென்றுவரும் மர்மங்கள்!

 

அதிகாரம், பலமுள்ள அரசியல்வாதிகளை நம்பி பிழைப்பு நடத்துக் கட்சிகள்: சோனியாவும், ஸ்டாலினும் இந்தியாவையும், தமிழகத்தையும் ஆளத்துடிக்கும் பலமும், அதிகாரமுள்ள அரசியல்வாதிகள். கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையை பலவிதங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருபவர்கள். இன்றளவில், விஷயங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும், அவற்றைத் தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமைகள் உள்ளன என்றெல்லாம் சொல்லப்படுள்ளது. அதற்கேற்றார்போல சட்டங்கள் கூட இருக்கின்றன. ஆனால், அத்தகையவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வரும்போது, தனிப்பட்ட முறையில், மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள, ஓய்வு எடுக்க, வார இறுதி நாட்களைக் கழிக்கச் சென்று வருகிறார்கள் என்று செய்திகள் வருகின்றன. ஆனால், இதனால் மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப் படுகின்றனர் என்பதை மக்களே அறியமுடியாத அளவிற்கு நிலைமை ஏற்ப்பட்டுள்ளது. சோனியா இந்தியாவில் இல்லாத போது, காங்கிரஸ்காரர்கள் உருப்படியான வேலை எதுவும் செய்யவில்லை[1], ஏனெனில் ஆணைகள் கிடைக்காததால், ஏனோதானோ என்று அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்தார்கள். இதற்கும், எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் இருந்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டதிற்கும் எந்த வேறுமையும் இல்லை. திமுகவைப் பொறுத்த வரையிலும், ஆட்சியில் இல்லாததால் அத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டிய எந்த பிரச்சினையும் இல்லை.

 

ஸ்டாலினின் லண்டன் பயணங்கள் (2008-2011): இங்கிலாந்திற்கு தமிழகத்திலிருந்து, குறிப்பாக திமுகவினர் அல்லது திமுகவை ஆதரிக்கும் நபர்கள், வியாபாரிகள்[2], நடிகர்கள், நடிகைகள்[3] சென்றுவருவதால், அவர்கள் தனிப்பட்ட முறையில் சென்று வருவதைத் தவிர, இந்தியாவை பாதிக்கும் வகையில் மற்ற விஷயங்களில் ஈடுபடுகிறார்களா என்று பார்க்க வேண்டிய நிலையில் இந்திய மக்கள் உள்ளார்கள்.

 

பிப்ரவரி 2011: கடந்த பிப்ரவரியில் 2011 சென்றபோது, திமுக-காங்கிரஸ் தேர்தல் பேச்சு வார்த்தைகள் பாதித்தன அப்பொழுது அவரது நண்பர் ராஜாசங்கர் செறிருந்தார்[4].

 

ஆகஸ்ட்-செப்டம்பர் 2009: முன்பு ஆகஸ்ட் 31, 2009 அன்று லண்டன் சென்றபோது, அமெரிக்கக் குழுவிடன் “கூவம் சம்பந்தமாக” நடத்த வேண்டிய பேச்சுவார்த்தைகளையும் நிறுத்துவிட்டு சென்றுள்ளார்[5]. அப்பொழுதும், சிகிச்சைக்குச் சென்றார் என்று குறிப்புகள் கொடுக்கப் பட்டனவேயன்றி, வேறெந்த விவரங்களும் அறிவிக்கப் படவில்லை. உதயநிதியும் சென்றிருந்தார். நாங்கள் தனிப்பட்ட முறையில் சென்றிருந்தோம், அரசு தரப்பில் செல்லவில்லை”, என்றார்[6].

 

ஜூன் 2008 – “வியாபார நிமித்தமாகச் சென்றாரா?”: அதற்கும் முன்பாக ஜூன் 2008ல் சென்றபோதும், இதே மாதிரி சொல்லப்பட்டது[7]. ஆனால் வியாபார நிமித்தமாக சென்றார் என்று ஆங்கில ஊடகங்கள் / பத்திரிக்கைகள் வெளியிட்டன. ஸ்டாலினுடைய இணைத்தளத்தில், ஒரு திமுக பக்தர், ஸ்டாலின் மருத்துவ சிகிச்சைக்காக லண்டனுக்குச் சென்றதைக் கேள்விபட்டு, அவரது ஆரோக்கியத்திற்காக ஆண்டவனை பிரார்த்திப்பதாக பதிவு செய்துள்ளார்[8]. நல்லவேளை, நாத்திகத் தந்தையார்[9] ஒன்றும் இடக்கு-மடக்காக எந்த கமண்டும் அடிக்கவில்லை போலும்!

 

இப்பொழுதைய பயணம் (செப்டம்பர் 2011): மு.க.ஸ்டாலின் கடந்த  4ஆம் தேதி  சென்னையில் இருந்து லண்டனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக புறப்பட்டு சென்றார்[10]. பிறகு 10 நாட்கள் ஓய்விற்குப் பிறகு, சென்றிருந்த, 14-09-2011 அன்று அதிகாலை சென்னை திரும்பினார். திமுக பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா, மகள், மறுமகன், பேரன்கள் மற்றும் குடும்பத்தினருடன் சென்றிருந்தார்[11]. 10 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை 3.15 மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் ஸ்டாலின் சென்னை திரும்பினார்[12].

 

இந்தியர்கள் ஏன் கவலைப் படவேண்டும்?தனிப்பட்ட நபர்களாக, இந்திய குடிமகன்களாக, யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். ஆனால், அரசியல், வியாபாரம், அரசு என்றெல்லாம் வரும் போது, அவர்கள் அவ்வாறு பிரித்துப் பார்ப்பதில்லை, முறைகளைக் கடைப்பிடிப்பதில்லை என்பதிலிருந்துதான், பொது மக்கள் கவலைப் படவேண்டியுள்ளது. சோனியா அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தபோது, யார்-யாரெல்லாம் சென்று பார்த்தார்கள், நலம் விசாரித்தார்கள், நலம் பெற வாழ்த்தினார்கள் என்று இந்தியர்களுக்குத் தெரியாது. ஆனனல், அவர்களில் வியாபார நிமித்தமாக அல்லது அப்படி யாராவது சென்று பார்த்து வைத்தால், நாளைக்கு உபயோகமாக இருக்குமே என்று பார்த்து வந்தவர்கள் யார் என்றும் இந்தியர்களுக்குத் தெரியாது. இங்குதான் பிரச்சினை வருகிறது. இத்தகைய அரசு-அரசியல் சாரா தனிப்பட்ட சந்திப்புகள், பிரயாணங்களில் மற்றவர்கள் இருப்பது பிரச்சினையை, வேறு கோணங்களிலும் திருப்புகிறது.


[1] இருக்கும்போதும் செய்யமாட்டார்கள் என்பது வேறு விஷயம்! காங்கிரஸ் அல்லாத ஆளுக் கட்சிகள் மற்றும் அவர்களது அரசுகளைக் கவிழ்க்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதை அரசு இந்திரங்களை உபயோகித்துச் செய்து வருவர். அந்த வேலையே, பெரியவேலை அவர்களுக்கு!

[2] இதில் ஒரு பெரிய பட்டியலே உள்ளது. அவர்கள் அமெரிக்கா, மொரிசியஸ், மாலத்திவு முதலிய நாடுகளுக்கும் சென்றுவருகின்றனர். சில ஒப்பந்தங்கள், பரிமாற்றங்கள் அங்குதான் செய்யவேண்டியுள்ளன.

[3] குஷ்புவும் அடிக்கடிச் சென்று வருவது குறிப்பிடத் தக்கது. ஒருமுறை நிருபர்கள் கேட்டபோது, ஹனிமூன்/தேன்நிலவிற்காக செல்வதாக கூறியுள்ளார்.

[6] ……..son, Udayanidhi) said his trip was personal: “There is nothing official and I did not go on behalf of the state government.”

http://www.outlookindia.com/article.aspx?261919

[7] The sudden visit set tongues wagging. According to sources in the rulign DMK party, Stalin and family had gone on a holiday. But some party sources said it was for a medical check-up and rest and others made it out to be a business visit.

http://www.thaindian.com/newsportal/politics/tamil-nadu-minister-stalin-family-in-london_10056695.html

[8] Dear Respected Sir first of all i wish and pray for the god to give good health for you. Recently i saw the news paper that you had been to London for Medical check up that makes me worried lot. Because i love your the way of doing under your control( rural minister)……………………………… If you have any direct email please let me know i wish to send e mail as a party man suggest my openion and etc..

Posted by Duraimurugan 

http://www.mkstalin.net/viewcomments.php?month=6&year=2008

[9] முன்பு ஒரு தொண்டர் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு வந்தபோது, “என்ன……நெற்றியில் ரத்தம் வருகிறது……….” என்று நக்கலாக கருணாநிதி கமண்ட் அடித்ததை நினைவு கூறவேண்டும்.

கோடம்பாக்கம் குஷ்புவும், ஹாலிவுட் ஜூலியா ராபர்ட்ஸும்

ஓகஸ்ட் 10, 2010

கோடம்பாக்கம் குஷ்புவும், ஹாலிவுட் ஜூலியா ராபர்ட்ஸும்

ஒருவேளை, ஒரே நாளில் அல்லது காலகட்டத்தில், இந்தியாவில் இரண்டு நடிகைகள், தமது இடங்களை விட்டு, வேறு இடத்திற்கு வந்து தமது நம்பிக்கைகளைப் பற்றி பேசியுள்ளது வியப்பாக உள்ளது.

கோடம்பாக்கம் குஷ்பு: இவரைப் பற்றி இப்பொழுது சொல்லவேண்டிய அவசியம் இல்லை. முஸ்லீமாக பிறந்து, “ஹிந்து” போல உலா வந்து, மக்களை ஏமாற்றி, கற்ப்பைப்பற்றி கேவலமாக பேசி, இப்பொழுது தான் “பெரியாரிஸ்ட்” என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். கோடம்பாக்கத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட, இந்த நடிகை, கருணாநிதியுடன் கைக்கோர்த்துக் கொண்டு, நாத்திகம், பெரியாரிஸம் என்றெல்லாம் பேச ஆரம்பித்துள்ளார்.

ஹாலிவுட் ஜூலியா ராபர்ட்ஸ்: ஆலிவுட் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஜூலியா ராபர்ட்ஸ்(42) ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் நடிப்பில் தனி முத்திரை பதித்து வரும் இவருக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் வெளியான பிரட்டி உமன் என்ற படம் வசூலில் சாதனை படைத்தது. இப்படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதையும் பென்று சாதனை படைத்தார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈட்பிரே அண்ட் லவ் என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள டெல்லி வந்திருந்தார் தொடர்ந்து 3 மாதங்கள் வரை இந்தியாவில் தங்கி இருந்தார். “ஈட் பிரே அண்ட் லவ்” படத்தில் ஜூலியா ராபர்ட்ஸ் விதவைப் பெண் கேரக்டரில் நடித்தார். கதைப்படி அவர் நிம்மதிக்காக இந்தியா வந்து கோவில்களில் வழிபடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றன. இதனால் அவருக்கு பல்வேறு இந்து கோவில்கள் ஆசிரமங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் நடிப்பதற்காக இந்து கோவிலுக்கு சென்ற அவருக்கு உண்மையிலேயே மன நிம்மதி, கடவுளின் அருள் ஆசி கிடைத்தது.

உலகின் சிறந்த மதம் மன அமைதி கிடைத்ததால் இந்து மதத்திற்கு மாறினேன்

இந்து மதத்துக்கு மாறினார் ஜூலியா ராபர்ட்ஸ், ஆகஸ்ட் 08,2010

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=57126

புதுடில்லி :ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஜூலியா ராபர்ட்ஸ்(42), இந்து மதத்துக்கு  மாறிவிட்டார். கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்கிறார். “அடுத்த பிறவியிலாவது நான் நிம்மதியாக இருக்க வேண்டும்’ என, மனமுருகிக் கூறியுள்ளார்.

எனது சொந்த நாடு ஜார் ஜியா. ரோமன் கத்தோலிக்க மதத்தில் பிறந்தவர். சிறுவயது முதலே வேதாகமத்தை (பைபிளை) படித்து வந்தேன். கிறிஸ்தவ கோவில்களுக்கு சென்று அவ்வப்போது வழிபடுவேன்.

ஆனாலும் என் வாழ்வில் தொடர்ந்து பிரச்சினைகள், குழப்பங்கள் இருந்து வந்தன. கடந்த ஆண்டு இந்தியா வந்த போது இந்து மத வழிபாடுகளால் ஈர்க்கப்பட்டேன். இந்த வழிப்பட்டால் என் வாழ்வை சீரழித்த பிரச்சினைகள் நொடிக்பொழுதில் மாய மானதை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். குழப்பமான நிலையில் இருந்த எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது.

இந்து கோவில்களில் அர்ச்சகர்கள் காட்டும் தீபத்தை கை வைத்து கும்பிடும் போது எனக்கு புத்துணர்ச்சி கிடைத்ததை உணர முடிந்தது.

எனது பிரார்த்தனையை கடவுள் கேட்டு உடனடியாக தீர்த்து விடுவது போன்ற பிரமிப்பு ஏற்பட்டது. நெற்றியில் இடும் திருநீறு தீயசக்திகளிடம் இருந்து என்னை கடவுள் பாதுகாப்பது போல உணர்ந்தேன். தற்போது எனது 3 குழந்தைகளுக்கும் திருநீறு பூசி வருகிறேன். கைகளில் புனிதமான சிவப்பு கயிரை கட்டிக் வருகிறேன். இந்து மதம் என் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது.

நான் ஒரு பெரியாரிஸ்ட்! நடிகை குஷ்பு அறிவிப்பு

http://www.viduthalai.periyar.org.in/20100810/news01.html

முஸ்லீமாக இருந்து பிறகு இந்து மாதிரி இருந்து, இப்பொழுது தான் பெரியாரிஸ்ட் என்று கூறிக்கொள்ளும் இவரையும் இந்தியர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

அய்தராபாத்தில் நேற்று பெரியார் திரைப் படம் தெலுங்கு மொழியில் வெளியீட்டிற்கான முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் இனமுரசு சத்ய ராஜ், தான் ஒரு பெரியார் கொள்கைப் பற்றாளன் என்பதை ஏற்கெனவே பிரகடனப்படுத்தியவர்.

அய்தராபாத்தில் நடைபெற்ற பெரியார் தெலுங்கு திரைப்பட முன்னோட்ட நிகழ்வில் பெரியார் திரைப்படத்தில் அன்னை மணியம் மையாராக நடித்த நடிகை குஷ்பு தன்னுடைய உரையில், அன்னை மணியம்மையாரைப் பற்றி எந்த படச் சுருளையும் தான் பார்க்கவில்லை. அவர் இயல்பாக இருக்கின்ற போட்டோக்களை மட்டுமே பார்த்தேன். அன்னை மணியம்மை யாரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளை மட்டுமே படித்தேன். திராவிடர் கழக தலைவர் வீரமணி அவர்கள் அன்னை மணியம்மையாரைப் பற்றித் தெரிந்து கொள்ள பல செய்திகளைக் கூறினார். அதுதான் நான் மணியம்மையாராக சிறப்பாக நடிப்ப தற்குக் காரணமாக இருந்தது.

நான் ஒரு பெரியாரிஸ்ட் என்பதை இந்த நேரத்தில் பிரகடனப்படுத்திக் கொள்வதில் பெருமை அடைகின்றேன் என்றும் குஷ்பு கூறினார். குஷ்பு இவ்வாறு அறிவித்ததை மேடையில் இருந்தவர்களும், பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தவர்களும் மகிழ்ந்து கைதட்டி வரவேற்றனர்.

கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்: அப்பொழுதும் இப்பொழுதும்!

ஜூன் 4, 2010

கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்: அப்பொழுதும் இப்பொழுதும்!

கருணாநிதி 87வது பிறந்தநாள் கொண்டாடுவது சந்தோஷமான விஷயம்தான்.

நிச்சயமாக ஒரு சிறந்த ராஜதந்திரம் மிக்க அரசியல்வாதி உள்ளதும் மகிழ்ச்சிதான்.

ஆனால், வாழ்நாள் முழுவதும், மக்களிடையே வெறுப்பை அதிகமாகச் சம்பாதித்துக் கொண்டதாகத்தான் தெரிகிறது.

இந்த முதிந்த வயதில் கூட, இந்திய இறையாண்மை எதிர்ப்பு……….., இந்தி எதிர்ப்பு……….., இந்துமத விரோதம்…………, பிராமண துவேஷம், ……………, ஆரிய-திராவிட இனவாதம்………….என்றுதான் இருந்திருக்கிறார்.

இதனால், இந்தியா-இந்திய.விரோதம், வடக்கு-தெற்கு, தமிழ்-இந்தி, ………………போன்ற வேற்றுமைகளை ஏற்படுத்தியுள்ளார்.

2008: கருணாநிதி பிறந்தநாளை குதூகலமாக கொண்டாட தொண்டர்களுக்கு தி.மு.க., பொதுசெயலர் அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளார். உடல் நலம் காரணமாக ஓய்வு எடுக்க விரும்புவதாக தமது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் , அந்நாளில் ( ஜூன் 3 2008) என்னை சந்திக்க தொண்டர்கள் வர வேண்டாம் என கருணாநிதி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கல்கியில்-வந்த-கார்ட்டூன்கல்கியில்-வந்த-கார்ட்டூன்

ஆனால் அவரது பிறந்த நாளை கொண்டாடாமல் இருக்க முடியாது என பிறந்த நாள் கொண்டாடும் போது தலைவருக்கு ஊக்கமும், புது உணர்ச்சியும் ஏற்படும் எனவே இந்நாளை கொண்டாட தொண்டர்கள் தயாராக வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருணாநிதி-2010-கொண்டாட்டம்கருணாநிதி-2010-கொண்டாட்டம்

2010: அமர்க்களமாகக் கொண்டாடப்பட்டது.

கருணாநிதி-2010-கொண்டாட்டம்-குஷ்புகருணாநிதி-2010-கொண்டாட்டம்-குஷ்பு

கேக் வெட்டியாகிவிட்டது.

குஷ்பு சேர்ந்தாகிவிட்டது.

குஷ்பு பேசியாகிவிட்டது.

குழ்பு-காட்டும்-அரசியல்-சின்னம்-2010குஷ்பு-காட்டும்-அரசியல்-சின்னம்-2010

குஷ்பு சின்னத்தைக் காட்டியாகிவிட்டது.

குஷ்புவும், கற்பும், கே.ஜி.பாலகிருஷ்ணனும், மற்ற நீதிபதிகளும்!

ஏப்ரல் 28, 2010
எதிர்பார்த்தபடியே குஷ்பு மீதான வழக்குகள் தள்ளுபடி!

 

 

 

Maxim-Kushboo

Maxim-Kushboo

திருமணத்திற்கு முன்பு பெண்கள் உடலுறவு வைத்துக் கொள்வது தொடர்பில், பிரபல திரைப்பட நடிகை குஷ்பு தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 22 வழக்குகளையும் இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்று அவர் கூறியிருந்தார். படித்த இளைஞர்கள் தமக்கு மனைவியாக வருபவர்கள் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாமில்லை என்றும் குஷ்பு கருத்து வெளியிட்டிருந்தார். 2005 ஆம் ஆண்டு பத்திரிகை பேட்டி ஒன்றில் அவர் வெளியிட்டிருந்த இந்த கருத்துக்களுக்கு எதிராக அவர் மீது 22 வழக்குகள் தமிழ்நாட்டின் வெவ்வேறு நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டிருந்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பல்வேறு நீதிமன்றங்களில் குஷ்பு மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து குஷ்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

சென்னை உயர்நீத்மன்ற தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் குஷ்பு மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் தீர்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், குஷ்புவின் மனுவை ஏற்று, இது தொடர்பாக அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்து இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டனர்.

திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை: கற்ப்புக்கரசி கண்ணகி பிறந்த நாட்டில், இப்படியொரு விவாதம் வந்து, அதற்கு தமிழனே தீர்ப்பும் அளித்திருப்பது, தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம் தான்! பெண்களுக்கான திருமண வயது 21 என்று அரசு விளம்பரங்கள் எல்லாம் சொல்கின்றன. ஆகையால் இனி, 21 வயது வரை வயதுக்கு வந்த பெண்கள்

பாலியல் உறவு வைத்துக் கொண்டால் யாரும் கேட்க முடியாது. பெற்றோர்கள் கூட என்ன செய்யவேண்டும் என்பது புரியவில்லை!படித்த இளைஞர்கள் தமக்கு மனைவியாக வருபவர்கள் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாமில்லை: படித்த இளைஞர்கள் என்ன அந்த அளவிற்கு கேடு கெட்டவர்களா என்று தெரியவில்லை. இல்லை, பெண்களும் அத்தகைய சோரம் போனவர்களாக இருந்து, தாலிக் கட்டிக் கொள்ளத் தயார் ஆகிறார்களா என்றும் தெரியவில்லை! அதாவது, ஒன்று பெண் வயதுக்கு வந்தவுடன் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும், இல்லையென்றால், கற்புள்ளதா இல்லையா என்ற ஆராய்ச்சியோ, சோதனயோ செய்யக் கூடாது!

முன்பு-குஷ்பு-நடித்த-கோலம்

முன்பு-குஷ்பு-நடித்த-கோலம்

நடிகை குஷ்பு ‘கற்பு’ வழக்கு : சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு
ஏப்ரல் 28,2010,00:00  IST

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=5728

சென்னை : தமிழ் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு கருத்து தெரிவித்த வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை குஷ்பு, தமிழ் பெண்களின் கற்பு குறித்து தனது கருத்தை தெரிவித்தார். இக்கருத்து, தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. கருத்து தெரிவித்த குஷ்புவை எதிர்த்து தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்களில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் மேட்டூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், குஷ்பு ஆஜரானார். வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், அதை ரத்து செய்ய மறுத்து விட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ‘பெஞ்ச்’ வழக்கை விசாரித்து வந்தது. பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது.