Posts Tagged ‘ஐம்புலன்களை வென்ற நிலை’

நான் ஆணே இல்லை, நாம் எப்படி செக்ஸில் ஈடுபட்டிருக்க முடியும்?

ஏப்ரல் 30, 2010

நான் ஆணே இல்லை, நாம் எப்படி செக்ஸில் ஈடுபட்டிருக்க முடியும்?

“நான் ஆணே இல்லை. ஆகவே எந்தவிதத்திலும் நான் பெண்களுடன் செக்ஸில் ஈடுபட்டிருக்க முடியாது. வேண்டுமானால், ஆண்மை பரிசோதனையை என்மீது பிரயோகம் செய்து பாருங்கள்” [“I’m not a man. There’s no way I could have indulged in sexual activities with women. Do a potency test on me”]. இப்படி சொன்னது நித்யானந்தா!

Nityananda-male-or-female

Nityananda-male-or-female

இருப்பினும் துப்பறியும் வீரர்கள் அதை நம்புவதாக இல்லையாம், ஏனெனில் பாஸ்போர்ட்டில் “ஆண்” என்றுதான் போட்டிருக்கிறது, “அலி” என்று போடவில்லை, என்று விசாரணையைத் தொடர்ந்துள்ளார்கள்!

குஷ்புவும், கற்பும், கே.ஜி.பாலகிருஷ்ணனும், மற்ற நீதிபதிகளும்!

ஏப்ரல் 28, 2010
எதிர்பார்த்தபடியே குஷ்பு மீதான வழக்குகள் தள்ளுபடி!

 

 

 

Maxim-Kushboo

Maxim-Kushboo

திருமணத்திற்கு முன்பு பெண்கள் உடலுறவு வைத்துக் கொள்வது தொடர்பில், பிரபல திரைப்பட நடிகை குஷ்பு தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 22 வழக்குகளையும் இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்று அவர் கூறியிருந்தார். படித்த இளைஞர்கள் தமக்கு மனைவியாக வருபவர்கள் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாமில்லை என்றும் குஷ்பு கருத்து வெளியிட்டிருந்தார். 2005 ஆம் ஆண்டு பத்திரிகை பேட்டி ஒன்றில் அவர் வெளியிட்டிருந்த இந்த கருத்துக்களுக்கு எதிராக அவர் மீது 22 வழக்குகள் தமிழ்நாட்டின் வெவ்வேறு நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டிருந்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பல்வேறு நீதிமன்றங்களில் குஷ்பு மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து குஷ்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

சென்னை உயர்நீத்மன்ற தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் குஷ்பு மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் தீர்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், குஷ்புவின் மனுவை ஏற்று, இது தொடர்பாக அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்து இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டனர்.

திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை: கற்ப்புக்கரசி கண்ணகி பிறந்த நாட்டில், இப்படியொரு விவாதம் வந்து, அதற்கு தமிழனே தீர்ப்பும் அளித்திருப்பது, தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம் தான்! பெண்களுக்கான திருமண வயது 21 என்று அரசு விளம்பரங்கள் எல்லாம் சொல்கின்றன. ஆகையால் இனி, 21 வயது வரை வயதுக்கு வந்த பெண்கள்

பாலியல் உறவு வைத்துக் கொண்டால் யாரும் கேட்க முடியாது. பெற்றோர்கள் கூட என்ன செய்யவேண்டும் என்பது புரியவில்லை!படித்த இளைஞர்கள் தமக்கு மனைவியாக வருபவர்கள் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாமில்லை: படித்த இளைஞர்கள் என்ன அந்த அளவிற்கு கேடு கெட்டவர்களா என்று தெரியவில்லை. இல்லை, பெண்களும் அத்தகைய சோரம் போனவர்களாக இருந்து, தாலிக் கட்டிக் கொள்ளத் தயார் ஆகிறார்களா என்றும் தெரியவில்லை! அதாவது, ஒன்று பெண் வயதுக்கு வந்தவுடன் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும், இல்லையென்றால், கற்புள்ளதா இல்லையா என்ற ஆராய்ச்சியோ, சோதனயோ செய்யக் கூடாது!

முன்பு-குஷ்பு-நடித்த-கோலம்

முன்பு-குஷ்பு-நடித்த-கோலம்

நடிகை குஷ்பு ‘கற்பு’ வழக்கு : சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு
ஏப்ரல் 28,2010,00:00  IST

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=5728

சென்னை : தமிழ் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு கருத்து தெரிவித்த வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை குஷ்பு, தமிழ் பெண்களின் கற்பு குறித்து தனது கருத்தை தெரிவித்தார். இக்கருத்து, தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. கருத்து தெரிவித்த குஷ்புவை எதிர்த்து தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்களில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் மேட்டூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், குஷ்பு ஆஜரானார். வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், அதை ரத்து செய்ய மறுத்து விட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ‘பெஞ்ச்’ வழக்கை விசாரித்து வந்தது. பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது.

பெரியாருடைய நிர்வாணம்: படங்கள், விளக்கங்கள், விவாதங்கள்!

திசெம்பர் 9, 2009

பெரியாருடைய நிர்வாணம்: படங்கள், விளக்கங்கள், விவாதங்கள்!

மின்-தளங்களில் பெரியாரின் நிர்வானத்தை பற்றிய விவாதம்: சமீபத்தில் சில அறிஞர்களிடையே, மின்-தளக் குழுக்களில் பெரியாருடய நிர்வாணத்தைப் பற்றி மிகவும் ஆன்மிக, தத்துவ, சித்தாந்த ரீதிகளில் விவாதங்கள் நடக்கின்றன.

பெரியார் ஜெர்மனியில் நிர்வாணமாக நின்றது ஒரு மிகப்பெரும் துறவுநிலை: “பெரியார் நிர்வாணமாக ஜெர்மனியில் நின்றது என்பது ஒரு மிகப்பெரும் துறவுநிலை. அது பாலிச்சை விழைவு அல்ல. மகாவீரருக்குப் பிறகு இந்தியத் துணைக்கண்டத்தில் தனது பிறப்புறப்பை மறைக்காமல் நின்ற சமூக ஆளுமை பெரியார் மட்டுமே. அந்த புகைப்படத்தை வெளியிடும் துணிவு பெரியாரியவாதிகளுக்கு இருந்தது. ஏனெனில் பெரியாரை முழுமையாக உள்வாங்கியவர்கள் எல்லாவித சமூக மதிப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள். தோழர் ஆனைமுத்துவைப் போல.”

எல்லொரும், மேற்கண்ட பத்தியைத் திரும்பத் திரும்ப எடுத்துக்காட்டுகின்றனர்!

http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/c3b8c66db6835dfb#

http://dravidatamils.blogspot.com/2006/09/blog-post_21.html

http://www.keetru.com/literature/essays/ramesh_prem.php

http://holyox.blogspot.com/2006/09/165.html

நான் இணைத்தளங்களில் தேடிவிட்டேன். பெரியாரின் அத்தகைய புகைப்படம் காணப்படவில்லை. பெரியார்

சாருநிவேதா, சொல்லியதாக, “வெளிநாடு சென்றிருந்த போது-நிர்வாணிகளாக இருந்த குழுவினரைச் சந்தித்திருக்கிறார். அப்போது பெரியாரும் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்“.

http://www.charuonline.com/Nov2009/WebulagamInt2.html

என்றுதான் உள்ளதேத் தவிர, அப்படம் எங்குயிருக்கிறது குறிப்பெதுவும் காணோம்!

நிர்வாண உறுப்பினர்களுடன் ஈவேரா

நிர்வாண உறுப்பினர்களுடன் ஈவேரா

இப்பொழுது (மே.2015) ஒருவர் இப்படத்தை பேஸ்புக்கில் போட்டிருக்கிறார். அதனை இங்கே சேர்த்துள்ளேன்.

ஆனால், அதே நேரத்தில் ஜைன திகம்பர சமிகளைத் தாக்குவது, அவைகளைக் கொச்சைப் படுத்தி பேசுவது, எழுதுவது, வீடியோ எடுத்துப் பரப்புவது எந்த நோக்கில் என்று தெரியவில்லை?

http://files.periyar.org.in/unmaionline/2008/20080702/page07.html

கிடைத்த பெரியாரின் நிர்வாணப் படங்கள்!: தேடிப்பார்த்ததில், பெரியாரின் நிர்வாணப்படங்கள் சம்பந்தப்பட்டவை, கீழ்கண்டவாறுதான் உள்ளன.

E. V. Ramaswamy Naicker with the members of Nude Society, Germany as claimed in their books

Periyar with the members of Nude Club, Germany

E. V. Ramaswamy Naicker, Erode in the Nude society, Germany

Periyar with the members of Nude Club, Germany

Periyar with Germany - Nude Society members

உள்ள படங்கள் எல்லாம், இவ்வாறுதான் உள்ளது. அதாவது, பெரியார் நன்றாக உடைகளை அணிந்து கொண்டுதான் இருக்கிறார்.

திக மற்றும் அத்தைகையவர் வெளியிட்டுள்ள மேற்காணும் படங்கள் புத்தகங்களிலேயே தெளிவாக இல்லை. அதனால் அதன் பிரதி-புகைப்படங்கள் இவ்வாறு காணப்படுகின்றன.

உண்மையில் அத்தகைய பெரியாரின் நிர்வாண புகைப்படங்கள் இருந்தால் வெளியிடுங்கள், நாமும் அத்தகைய தத்துவங்களை, சித்தாந்தங்களை, புலனடக்கு முறைகளை, இந்திரியங்களை அடக்கி “இந்திரன்” ஆகும் வித்தைகளை அறியலாம்!

நிர்வாண சாமியாருக்கு ‘ஜட்டி’http://files.periyar.org.in/unmaionline/2008/20080702/page07.html


ஈரோட்டில் கிரி அய்யர் பெண்ணிடம் அடிவாங்கியது நிர்வாணம் தந்த நிவாரணம் என்று கொண்டால், சென்னையில் மக்களின் இன்னல்களுக்கு நிவாரணம் தனது நிர்வாணம் தான் என்று ஊருக்கு தங்களது நிர்வாணம் மூலமே காட்டிக் (?) கொண்டு இருக்கும் திகம்பர சமண சாமியார்கள்.

சமீபத்தில் அருவருப்பில் அதிர்ந்து போன இன்னொரு நிகழ்வு. திண்டிவனத்தில் நிர்வாண சாமியாரின் மீது பெண்கள் பாலை ஊற்றி அது அவரது ஆண்குறியில் வழிந்த-போது அதைப் பிடித்து குடித்தார்கள் என்ற செய்திதான். மேலே சொன்ன சாமியார்கள் சென்னையில் உள்ள கொண்டித்தோப்பு பகுதியில் பொன்னிவளவன் தெருவில் உள்ள ஜெயின் மடத்தில் தங்கி நாள்தோறும் ஆண், பெண் என்ற பேதமில்லாமல் நிர்வாண தரி-சனமும், ஆசியும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்கள் தலையிலிருந்து பாதம் வரையில் வெண்மை நிறத்தில் கவுன் ஒன்றை மாட்டிக் கொண்டு நிர்வாண சாமியாருக்கு எடுபிடியாக இருக்-கிறார்கள். நல்ல வாய்ப்பாக, ஆணாதிக்கமோ, எதுவோ, திகம்பர சமண சாமியார்களில் பெண்கள் நிர்வாணமாக இல்லை. என்ன சாதிக்க நினைக்கிறாகள் இந்த நிர்வாணக் கோலத்தில்? இதனை கண்டித்து தி.க. இளைஞரணியினர் திரண்டு சென்று அந்த மடத்தின் முன் நிர்வாண சாமியார்-களுக்கு ஜட்டி (உள்ளாடை) கொடுக்க முயன்ற ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கைதானார்கள்.

பெரியார்
பெரியார்
பெரியார்

விவாதம்: பெரியாரின் நிர்வாணப் படங்கள் இருந்தால், ஏன் தைரியமாக வெளியிடக்கூடாது?

பெரியார் நிர்வாணமாக ஜெர்மானியில் நின்றது என்பது ஒரு மிகப்பெரும் துறவுநிலை: இங்கு துறவு, துறவுநிலை, நிர்வாணம், நிர்வாணமாக நின்றது என்பதெல்லாம், நாத்திகவாதிகள் / பகுத்தறிவுவாதிகள் / பெரியாரியவாதிகள் தாம் விளக்க வேண்டும். ஏனெனில், அவர் எதைத் துறந்தார் என்று ஒன்றும் தெரியவில்லை. ஏனெனில் அவர்களது அகராதியில் அந்த வார்த்தைகளுக்கு வேறு அர்த்தங்கள் இருக்கும்.
அது பாலிச்சை விழைவு அல்ல: “அது பாலிச்சை விழைவு அல்ல”, எனும்போது, எங்கு வேறுபடுத்தி கோடு கிழிப்பார்கள் என்று தெரியவில்லை. ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் சேர்ந்து வாழலாம், இல்லையென்றால் பிரிந்துவிடலாம் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதுமட்டுமா, ஆண்-ஆண், பெண்-பெண் கூட சேர்ந்து வாழலாம் என்று ஓரின-சமதர்மமும் வந்துவிட்டது! பிறகு, பெரியார், அவரது தொண்டர்கள் முதலியோர் மணம் புரிந்து கொண்டனர்,………………..என்பதெல்லாம் தெரியவில்லை!
மகாவீரருக்குப் பிறகு இந்தியத் துணைக்கண்டத்தில் தனது பிறப்புறப்பை மறைக்காமல் நின்ற ஆளுமை பெரியார் மட்டுமே: “மகாவீரருக்குப் பிறகு இந்தியத் துணைக்கண்டத்தில் தனது பிறப்புறப்பை மறைக்காமல் நின்ற சமூக ஆளுமை பெரியார் மட்டுமே”, என்று சொல்லிவிட்டுதான், மஹாவீரரைப் பின்பற்றும் சீடர்களைக் கேவலப்படுத்துகிறார்கள், தாக்குகிறார்கள்…………………இதுதான் “சமூக ஆளுமை”யா? அவர்களுக்கு இன்றளவும் பிறப்புறுப்பை மறைக்காமல் இந்தியா முழுவதும் சுற்றிவர தைரியம் இருந்தது. ஆனால், பெரியாருக்கு அவ்வாறு இல்லை, அவரது தொண்டர்களுக்கும் இல்லை!
அந்த புகைப்படத்தை வெளியிடும் துணிவு பெரியாரியவாதிகளுக்கு இருந்தது: ஏஏகெனவேக் குறிப்பிட்டது மாதிரி, இருப்பதெல்லாம், உடையோடு இருக்கும் படங்கள்தாம். அவையே தெளிவில்லாமல் இருக்கின்றன. அந்த புகைப்படத்தை வெளியிடும் துணிவு பெரியாரியவாதிகளுக்கு இருந்தால், இன்றும் தாராளமாக வெளியிடலாம்.

ஏனெனில் பெரியாரை முழுமையாக உள்வாங்கியவர்கள் எல்லாவித சமூக மதிப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள். தோழர் ஆனைமுத்துவைப் போல: பெரியாரின் கொள்கைகளை உள்வாங்கியவர்கள் எல்லாவித சமூக மதிப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்றால், ஏன் அவர்கள் தயங்கவேன்தும்?

அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?

நவம்பர் 29, 2009

அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?

இது “விடுதலை” என்கின்ற திராவிட கழகத்தினரின் நாளிதழில் “ஓடும் நதி” என்ற பெயரில் மறைந்து கொண்டு யாரோ ஒரு இந்து-விரோதி எழுதி வெளிவந்த சிறு கட்டுரையாகும். இன்றும் (டிசம்பர் 2013) கீழ்கண்ட தளத்தில் இருக்கின்றது:

http://viduthalai.periyar.org.in/20091129/news22.html

அதனால் தான், கீழ் கண்ட குறிப்பையும் நவம்பர் 2009லேயே செர்த்திருந்தேன்.

இதோ, ஐயப்பன் பக்தர்களையும் விட்டுவைப்பதில்லை.வருடா வருடம் இதே மாதிரியான தூஷணங்கள்! ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்காததால், இப்படியே அச்சடித்து இப்பத்திரக்கை நடதத்தப் படுகிறது.இதன் ஆசிரியர் கே. வீரமணியோ ஒரு நிகர்-பல்கலைக் கழகம் வைத்து நடத்துகிறார்.அதில் வேலை செய்யும் பலர் மாலை அணிந்துள்ளனர். அவர்கள் என்ன செய்வார்கள்?

அவர்கள் என்ன நினைப்பார்கள்?

அங்கு படிக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?

ஏனெனில் மாணவர்களில் பலரும் மாலை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!!

குறிப்பு: ஐய்யப்பப் பக்தர்களைப் புண்படுத்த இப்பதிவு செய்யப்படவில்லை. உண்மையில் நாத்திகவாதிகளின் மனப்பாங்கை எடுத்துக் காட்டி, அவர்களைன் போலித்தனத்தை எடுத்துக் காட்டவே நான் இப்பதிவை செய்துள்ளேன்.     

                                                                                                                  சென்னை, நவ. 29_ கேரளம் _ கேர என்ற மலையாள சொல்-லுக்கு தென்னை என்று பெயர். கேரளம் என்றால் தேங்காய் விளைகிற இடம் என்று பெயர். சந்தேகமாக இருந்-தால், உங்களுக்குத் தெரிந்த மலையாள சேட்டான், சேச்சியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கேரளாவிலிருந்து வந்த தேங்காயை, தமிழ்நாட்-டுத் தமிழன் விலைக்கு வாங்கி, தலையில் இரு-முடிகட்டி திரும்பவும் எங்கிருந்து வந்ததோ, அங்கேயே பக்தியின் பெயரால் கொண்டு போய் சேர்கிறான். அந்த தேங்காய்களை சபரிமலை கோவில் நிர்-வா-கமும் ஏதாவது எண்-ணைய் எடுக்கிற நிறுவனத்-திற்கு மொத்த விலைக்கு விற்று விடுகிறது. அந்த நிறுவனங்கள் தமிழ்-நாட்-டில் சிறு சிறு பாக்கெட், பாட்டில்களில் தேங்காய் எண்ணையை அடைத்து வந்து விற்கிறது. தேங்-காயை விலைக்கு வாங்-கிய தமிழன்,அதே தேங்-காயை, எண்ணைய் என்ற வடிவத்தில் திரும்ப-வும் விலைக்கு வாங்கு-கிறான். அதாவது புரிகிற மாதிரி சொல்வது என்-றால், ஒரு பொருளை இரண்டு முறை விலைக்கு வாங்குகிறான். கேரளக்காரன் தமிழ-னின் தலையில் இப்படித்-தான் மிளகாய் அரைக்-கிறான்! அய்யப்பனுக்கு மாலையணிந்து கோவி-லுக்கு போய் திரும்பும் வரை மிகவும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்-டும் சரியாகச் சொன்-னால், கோயிலுக்குப் போய் திரும்பும் வரைக்கு-மாவது நல்லவர்களைப் போல நடியுங்கள் என்-கிறார்கள்! கேரள அய்யப்பனுக்கு மாலை போட்டுப் போகிற தமிழர்கள் தயவு செய்து அய்யப்பனின் பிறப்பு, வளர்ப்பு கதையை படித்த பிறகு,தைரியம் இருந்தால் அதற்கு பிறகு மாலை போடுங்கள்! எவ்வளவுக் எவ்வளவு அசிங்கங்-கமாக, கேவலமாக இருக்க வேண்டுமோ, அவ்வள-வுக்கு அவ்வளவு ஆபாச-மாக இருக்கிறது, அய்யப்-பனின் பிறப்பு வளர்ப்பு வரலாறு! அவைகளை படித்தால் ஒழுக்கக் கேடு-கள் தான் நாடெங்கும் தலை விரித்தாடும்..! கேரளா கிறித்தவர்கள் அதிகம் நிறைந்த மாநிலம்.

அதாவது அய்யப்பன் பிறந்து வளர்ந்து கிழித்த-தாக கூறப்படும் கேரளத்-தில், கேரள மக்கள் அய்யப்-பன விட இயேசு கிறிஸ்துவைத் தான் அதிகம் பின்பற்று-கிறார்-கள்! இது ஒன்று போதாதா? அய்யப்பன் வெறும் பொய்யப்பன் என்று புரிந்து கொள்ள… அதா-வது தன்னை சிலுவை-யில் உயிரோடு அறைந்த போது தன்னையே காப்-பாற்றிக் கொள்ளாத இயேசு தான் இவர்களை காப்பாற்றும், சக்தி வாய்ந்த கடவுளாம்! கொடுமைடா சாமி! நீங்கள் சொல்வதெல்-லாம் சரிதான்ங்க, ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்னு இருக்கு, அதுக்கு பெயர் தான் கடவுள் என்பர்களே! கடவுளின் பெயரால் இந்த கேணத் தனங்கள், எதற்கு? கடைசியாக உங்களிடம் வேண்டிக் கொள்வ-தெல்-லாம், ஒன்றே ஒன்று தான்! தமிழர்களே! தமிழர்-களாக இருங்கள்!!

நன்றி: ஓடும் நதி

பின்குறிப்பு: இந்த இடுகை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடப்பட்டது. நாத்திகம் என்ற போர்வையில், வீரமணி எப்படி தூஷணம் செய்கிறார் என்பதைத்தான் எடுத்துக் காட் ட அவ்வாறு செய்யப்பட்டது. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்ற எண்ணம் அந்த மெத்த “படித்த” மேதாவிக்கு, நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தருக்குத் தெரியாமல் இருப்பதையும் எடுத்துக் காட்டப்பட்டது. இப்பொழுதும் இதற்கு பதில்கள் வருவதால், இக்குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

 2009லிருந்து 2013 வரை படிப்பவர்கள் இதனை முழுவது படிக்காமலேயே, என்னை திட்டி பதில்களை பதிவு செய்து வருகிறார்கள்.

ஆகவே, தயவு செய்து முழுமையாக படித்து விட்டு பதிலை இடுங்கள் .

வேதபிரகாஷ்

04-12-2013