Posts Tagged ‘இந்து மதம்’

கந்த சஷ்டி கவசம் முதல், கந்த புராணம் வரை: கருப்பு, கருப்பு-சிவப்புக் கூட்டத்தாரின் தாக்குதல்கள் – தேர்தல் நேரத்திலும் தொடர்ந்து இந்துவிரோத திமுக இவ்வாறு ஈடுபடுவது.

ஜனவரி 5, 2021

கந்த சஷ்டி கவசம் முதல், கந்த புராணம் வரை: கருப்பு, கருப்புசிவப்புக் கூட்டத்தாரின் தாக்குதல்கள் –  தேர்தல் நேரத்திலும் தொடர்ந்து இந்துவிரோத திமுக இவ்வாறு ஈடுபடுவது.

நாகர்கோவிலில் கூட்டத்தில்ஹிந்துக்களை வஞ்சிக்கும் கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது (03-01-2021): நாகர்கோவிலில் திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த சிவனடியார்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் ”ஹிந்துக்களை வஞ்சிக்கும் கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது[1]. இந்த கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் சொத்துகளை ஒரு சதுர அடி கூட விடாமல் மீட்டு கோயில்கள் வசம் ஒப்படைப்பது. அடியார்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு மருத்துவம், கல்வி உதவி வழங்க வேண்டும். சைவ மதத்துக்கு எதிராக தவறான கருத்து சொல்பவர்களை மாநிலம் முழுவதும் ஒரே குரலில் எதிர்க்க வேண்டும். ஹிந்துக்களை வஞ்சிக்கும் அரசியல் கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன[2]. இது விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் சிறப்பாகத் தெரிகிறது. இத்தகைய கூட்டங்கள் நிறைய நடத்தப் படவேண்டும். அத்தகைய செய்திகள் மக்களைச் சென்றட்டைய வேண்டும். குறிப்பாக, இன்றும் திக-திமுக திராவிடக் கட்சிகளை விசுவாசமாக ஆதரித்து வரும், சில சைவ சமூகத்தினர், இதுவரை நடந்துள்ள, நடந்து வரும் தீமைகளைக் கருத்திற்க் கொண்டு மாற வேண்டும்.

நெல்லையில் எதிர்ப்பு தெரிவித்த இந்து அமைப்பினர்: கந்தபுராண பாடலை திமுக கட்சி பாடல் போல் மாற்றி இழிவு படுத்தியதைக் கண்டித்து நெல்லை டவுனில் இந்து முன்னணியினர்,  சிவனடியார்கள், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் இணைந்து திருமுறைகள் பாடி பெருந்திரல் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்[3]. வான்முகில் வழாது பெய்க என்ற கந்தபுராண வாழ்த்து பாடலை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் திமுக தேர்தல் பிரச்சார பாடல் போல மாற்றி பதிவேற்றம் செய்த நபர்களையும் இறை வழிபாட்டு பாடல் கட்சி பாடல் போல் உருவாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நெல்லை டவுன் வாகையடி முனையில் இந்து முன்னணி சார்பில் பெருந்திரல் பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பிரார்த்தனை கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் சிவனடியார்கள் திருக்கூட்டம் இணைந்து தேவார திருவாசக திருமுறை பாடல்கள் பாடி இறைவனை வழிபட்டு பெருந்திரள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து கட்சி பாடலாக  மாற்றம் செய்து கந்தபுராண வாழ்த்துப் பாடலை இழிவுபடுத்திய நபர்கள் மீதும் சமூக வலைதளங்களில் அதை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது[4].

2020ல் காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கருப்பர் கூட்டத்தைக் கண்டித்தது: இந்து கடவுள்களை அவமதித்தால் நாக்கை துண்டிக்க பயப்பட தேவையில்லை என காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் 22-07-2020 அன்று தெரிவித்துள்ளார்[5]. கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கறுப்பர் கூட்ட யூ ட்யூப் சேனலுக்கு கண்டனம் தெரிவித்தார்.  தமிழகத்தில் இது போன்ற பேச்சுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்து மதத்தை இது போன்று இழிவுபடுத்தும் செயல்களில் யாராவது செயல்பட்டால் அவர்களின் நாக்கை துண்டிப்பதற்கும் கூட பயப்பட தேவையில்லை எனவும் ஆதீனம் பேசினார்[6].  உண்மையில், அவர் ஆதங்கத்துடன், பேசியுள்ளதை நினைவு கூறவேண்டும். தெய்வநம்பிக்கை ஆழமாக-உறுதியாக இருப்பது நல்லது தான், ஆனால், எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று சும்மா இருக்க முடியாது. தேர்தல், ஓட்டு, ஓட்டுவங்கி, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இத்தகைய இந்துமத-தூஷணங்களை செய்து வருவதால், நிச்சயமாக, இந்துக்கள் அதே முறையில், சரியான பதிலை சொல்லியாக வேண்டும். அவர்களுக்கு இந்து-ஆதரவு ஆட்சித் தேவையா அல்லது இந்து-விரோத ஆட்சி வேண்டுமா என்று இந்துக்கள் தான் தீர்மானிக்க வேண்டிய நிலையுள்ளது. “ஆவணன் ஆண்டால் என்ன, ராமன் ஆண்டால் என்ன” என்று இருந்தால், இதே இந்துவிரோத நிலைத் தான் தொடரும்.

2019ல் சில மடாதிபதிகள் பேசியது: சென்னை சேப்பாக்கத்தில் 12-04-2019 அன்று ஆதீனங்கள், துறவிகள், மடாதிபதிகள் என 11 பேர், தங்களது தேர்தல் நிலைப்பாட்டை அறிவித்தனர். அப்போது பேசிய பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள், இந்து மதத்திற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில், மக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்[7]. யார் இந்து மத தொண்டர்கள் என தங்களை அறிவிக்கிறார்களோ, குங்குமம் வைக்கிறார்களோ, அவர்களுக்கே ஆதரவளிக்க வேண்டும் எனவும், அவர் குறிப்பிட்டார்[8]. பின்னர் பேசிய கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வரர், தெய்வபக்தி நிறைந்த தமிழகத்தில் ஆன்மிகத்திற்கு எதிராக தலைவர்கள் பேசுவதற்கு கண்டனம் தெரிவித்தார். இதே நிலை, இப்பொழுது 2021லும் தொடர வேண்டும். இந்து அமைப்புகள் மறுபடியும் இத்தகைய கூட்டங்களைக் கூட்ட வேண்டும், இணதள பிரச்சாரங்களும் நடந்து வருவதால், அத்தகைய முறைகளையும் கையாள வேண்டும். சைவ மடங்கள், உழவாரப் பணி குழுக்கள் முதலியவற்றையும், அதில் ஈடுபடுத்தப் படவேண்டும்.

இந்துக்கள் கவனிக்க வேண்டியது, செய்ய வேண்டியது முதலியன: மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள், பின்னணி. அரசியல், அதிகாரம் போன்ற காரணிகளை உன்னிப்பாக அலசிய பின்னர் கீழ்காணும் அம்சங்கள் கொடுக்கப் படுக்கின்றன:

  1. முன்பு ஆண்டாள், இப்பொழுது முருகன் என்று திட்டம் போட்டு, இந்துக்களின் மங்களைப் புண்படுத்தி வருவது தெரிகிறது.
  2. உண்மையான நாத்திகம் என்றால், கடவுள் இல்லை என்பதும் உண்மையான கொள்கையாக இருக்க வேண்டும். ஆனால், நாத்திகர் என்று பிரகடனப் படுத்திக் கொண்டு, இந்து-அல்லாத கடவுளர்களை விமர்சிப்பது, தூஷிப்பது கிடையாது. எனவே, அவர்களது நாத்திகம், இந்துவிரோத நாத்திகம் ஆகிறது.
  3. அதனால், தான் கிறிஸ்தவ-முஸ்லிம் கோஷ்டிகள் இவர்களது மேடைகளில் பிரசங்கம் செய்கிறார்கள் மற்றும் கிறிஸ்தவ-முஸ்லிம் மேடைகளில், இந்துவிரோத நாத்திகர்-திராவிடத்துவ துவேசிகள் பேசி வருகிறார்கள்.
  4. கஞ்சி குடித்தும், கேக்-வெட்டி நக்கி சாப்பிட்டும், கிறிஸ்தவ-முஸ்லிம்களுக்கு ஜால்றா போட்டு வருகிறார்கள், பாராட்டி பேசுகிறார்கள்.
  5. புகார் கொடுத்தாலும், எப்.ஐ.ஆர் போட்டாலும், சட்டப் படி, இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவையெல்லாம் அப்படியே காலாவதியாகின்றன,
  6. அதனால் தான், செய்த குற்றங்களையே, திரும்பச் செய்து வருகிறார்கள். சட்டப் படி, தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற ரீதியில் அதே தூஷணங்களை செய்து வருகிறார்கள்.
  7. ஆகவே, சட்டப் படி நடவடிக்கை எடுக்க வைத்து, ஒருவனையாவது, தண்டனைக்கு உட்பத்த வைத்து, தண்டிக்கப் பட்டால், மற்றவர்களுக்கு பாடமாக்க இருக்கும், அச்சம் ஏற்படும்.
  8. இல்லையென்றால், பயமில்லாமல் போகும், “காலையில் கைது, மாலையில் விடுதலை,” போன்ற விளையாட்டாகி ஆகிவிடும்.
  9. தேர்தல் நேரத்தில் இவ்வாறு செய்யும் போது, அத்தகைய தேர்தல் சட்டங்கள் பிரிவுகளின் கீழ், உரிய சட்டமீறல்களை குறிப்பிட்டு, ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால், தேர்தலில் நிற்கமுடியாத நிலையையும் உண்டாக்கலாம்.
  10. தமிழகத்தில் இருக்கும் சுமார் 300 இந்து மடங்கள், அமைப்புகள் முதலியவை, இதில் ஒன்று பட்டு செயல்படவேண்டும்.

© வேதபிரகாஷ்

05-01-2021


[1] தினமலர், ஹிந்துக்களை வஞ்சிக்கும்கட்சிகளை ஆட்சிக்கு வரவிடக்கூடாது: சிவனடியார்கள் தீர்மானம், Added : ஜன 04, 2021 01:34

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2683101

[3] தினமலர், நெல்லை டவுணில் திமுகவைக் கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டம், பதிவு செய்த நாள் : 03 ஜனவரி 2021 18:44.

[4] http://www.dinamalarnellai.com/web/districtnews/52654

[5] தினத்தந்தி, இந்து கடவுள்களை அவமதித்தால் நாக்கை துண்டியுங்கள்காமாட்சிபுரி ஆதீனம், பதிவு : ஜூலை 23, 2020, 10:40 PM

[6] https://www.thanthitv.com/News/TamilNadu/2020/07/23224038/1543722/Hindu-Gods-Kamtchi-aadenam.vpf.vpf

[7] நியூஸ்.7.செனல், இந்து மதத்திற்கு விரோதமாக இருக்கும் சக்திகளுக்கு மக்கள் வாக்களிக்க கூடாது” : தமிழக இந்து துறவிகள் குழு, April 13, 2019 1 view Posted By : manoj.b, Authors. https://ns7.tv/ta/q7bcv9

[8]  https://ns7.tv/ta/q7bcv9  [now snapshot view is available accessed on 05-01-2021]

கந்த சஷ்டி கவசம் பிறகு, கந்த புராணம்: கருப்பு, கருப்பு-சிவப்புக் கூட்டத்தாரின் தாக்குதல்கள் – தொடர்ந்து இந்துவிரோத திமுக இவ்வாறு ஈடுபடுவது.

ஜனவரி 5, 2021

கந்த சஷ்டி கவசம் பிறகு, கந்த புராணம்: கருப்பு, கருப்புசிவப்புக் கூட்டத்தாரின் தாக்குதல்கள் –  தொடர்ந்து இந்துவிரோத திமுக இவ்வாறு ஈடுபடுவது.

இந்துவிரோதமும், இந்துவிரோத மறுப்பும்யுக்திகள், வழிமுறைகள்: சமீப காலமாக மதம் சார்ந்த நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவது டிரெண்டாக மாறிவிட்டது, என்கிறது ஊடகம், ஆனால், இந்து என்று முதலில் குறிப்பிடவில்லை. மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இது 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது, ஆனால், இந்துத்துவவாதிகளால், அதைக் கட்டுப் படுத்த முறையாக எதுவும் செய்ய முடியவில்லை. எதிர்-பிரச்சாரமும் சொதப்பலாகத் தான் இருந்து வருகிறது. அதாவது, இந்து விரோத நாத்திகர்கள், திராவிட பகுத்தறிவுகள், பெரியார் பிஞ்சுகள், ஈவேரா குஞ்சுகள் எல்லாம், இந்து கடவுளர்களை தூஷித்துக் கொக்கரித்துக் கொண்டிருக்கும் போது, இந்த இந்துத்துவவாதிகள், ஈவேரா, மணியம்மை, வீரமணிகளைத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.  இந்துத்துவ வாதிகள் இவ்வாறு முறையற்ற ஒப்பீட்டு விமர்சனங்களினால், தோற்றுப் போகின்றனர். முறையாக, முழுமையாக திராவிட சித்தாந்தத்தை, அதனை ஆதரிக்கும் அரசியல் மற்றும் அரசியல் ஆதரவு 70-100 ஆண்டுகள் பயனாளிகள் ஆதரவு முதலியவற்றை அறியாமல் அல்லது மறந்து, இவ்வாறு செய்து வருகின்றனர். அதனால், அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.

சைவர்கள் இந்துக்கள் அல்லர் போன்ற பேச்சுகள்அவற்றை ஆதரிக்கும் கூட்டங்கள்: இந்துவிரோத கும்பல்கள் வேண்டுமென்றே மடாதிபதிகள், சைவ குருமார்கள் என்று சிலரை வைத்துக் கொண்டும், தூஷணங்களை செய்து வருகின்றனர். 2020 டிசம்பரில் அதத்தைய கூத்து அரங்கேறியது. ஆனால், 2020 அக்டோபரில் உஷாரான சில மடாதிபதிகள், தங்கள் பெயர்கள் ஒரு மாநாட்டு அழைப்பிதழில் தோன்றியபோது, மறுத்து, ஒதுங்கினர்[1]. ஆனால், அவர்களது அனுமதி இல்லாமல் அவ்வாறு நடந்ததா என்று தெரியவில்லை[2]. சென்னை பல்கலைக்கழக “உலக சைவ மாநாட்டு கருத்தரங்கத்தில்” பேசிய இரு மடாதிபதிகள், “சைவர்கள் இந்துக்கள்” அல்ல போன்ற சித்தாந்தத்ததாதரித்துப் பேசியதை நினைவு கொள்ள வேண்டும். ஆகவே, இவையெல்லாம், ஏதோ ஒரு திட்டத்துடன், தொடர்ந்து நடப்பதாகத் தெரிகிறது. சைவ சித்தாந்தத் துறை சரவணன் வெளிப்படையாக பேசியது போல, கர்நாடக வீரசைவர்கள் இந்துக்கள் அல்லர் என்று சொல்லிக் கொள்வது போல, தாங்களும் அவ்வாறே, கூறிக் கொள்கிறோம் என்று பேசியதும் இங்குக் கவனிக்க வேண்டும். பிறகு, சைவ மடங்கள், இந்து அறநிலையத் துறையிலிருந்து வெளியேறி விடலாமே? ஒருவேளை அத்தகைய சதித்திட்டத்தைத் தான் தீட்டியுள்ளனர் போலும்.

கந்தபுராணம் பாடலை இழிவு படுத்தியதற்கு, காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் கண்டனம் தெரிவித்தது: ஆன்மிக பெரியோர்கள், ஆதீனங்கள், மடாதிபதிகள் இதுபோன்ற இந்து விரோத பேச்சுகளுக்கு, செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தும், மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தி.மு.க.,வினர் கந்தபுராணத்தை கொச்சைப்படுத்தி, கட்சி விளம்பரம் தேட முயன்றுள்ளனர். இதற்கு காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் கண்டனம் தெரிவித்துள்ளார். கந்தபுராணத்தில், ‛வான்முகில் வழாதுபெய்க, மலிவளம் சுரக்க மன்னர் கோன்முறை அரசு செய்க, குறைவிலாது உயிர்கள் வாழ்க, நான்மறை அறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்,’ என்று மங்கல வாழ்த்து பாடல் இடம்பெற்றுள்ளது[3].

வான்முகில் வழாது பெய்க
        மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
        குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
        நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
        விளங்குக உலக மெல்லாம்.   கந்தபுராணம்
மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம் பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம் நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப் புல்குக உயிர்கட் கெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க.   திருவிளையாடற்புராணம்

இதை மைந்தன் கோன்முறை அரசு என்று கருணாநிதி, ஸ்டாலின் படத்தை காண்பித்தும், மேன்மைகொள் சமூக நீதி ஐம்பெரும் அறங்கள் ஓங்க, நன்னெறி தொழில்கள் மல்க ‘ என்று பாடல்வரிகளை தஙகளது கட்சிவிளம்பரத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளனர்[4]. இது குறித்து காமாட்சிபுரி ஆதினம் கூறியதாவது[5]: “மேற்கூரிய கந்தபுராண பாடல் தேசிய கீதத்தை போன்று உலகம் சிறப்புற இறைவனிடம் வேண்டும் பாடல். பெரும்பான்மையான மக்கள் வழிபடும் பாடலை கொச்சைபடுத்தும் விதமாக அரசியல் கட்சி வெளியிட்டுள்ள பாடல் வரிகள் அமைத்துள்ளன. அரசியல் கட்சிகள் தங்களது கொள்கை கோட்பாடுகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் செயல்களை கைவிட வேண்டும். மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து வருமேயானால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்,” இவ்வாறு அவர் கூறினார்[6].

கந்த சஷ்டி கவசம் முதல் கந்த புராணம் வரை: சமீபத்தில், கந்தசஷ்டியை இழிவுபடுத்தி யூ டியூப்பில் வெளியான கருத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. அது ஓய்வதற்குள் தி.மு.க.,வினர் கந்தபுராணத்தை டப்பிங் செய்து வீடியோ பாடல் வெளியிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது. “இந்து என்ற சொல்லைக் கேட்டாலே எரிகிறது,” என்று சிலரைப் பேச வைத்து சிரித்து ரசித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் தற்போது கோவில்களில் பிரச்சாரக் கூட்டம் நடத்துவது, இந்து சமய நூல்களை புகழ் மாலை புனையப் பயன்படுத்துவது என்று கிளம்பி இருக்கிறார்[7]. ஆன்மீகப் பெரியோர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த போதும் இந்துக்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் விதமாக நடந்து கொள்வது தொடர்ந்து வருகிறது. இந்து என்று ஒரு மதமே கிடையாது என்று தி.மு.க கிறிஸ்துமஸ் விழாவில் கலையரசி நடராஜன் என்பவர் பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் தற்போது கந்த புராணப் பாடலைக் கொச்சைப்படுத்தும் விதமாக தி.மு.க பிரச்சாரப் பாடலாக பயன்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது[8].  ஆக, “கந்த சஷ்டி கவசம் முதல் கந்த புராணம் வரை,” போன்ற கேவலமான நாடகங்களை அரங்கேற்றி மக்களை ஏமாற்றும் வேலைகள் தேவையில்லை.

சைவசமய சின்னங்கள், இலக்கிய வரிகள் முதலியவற்றை உபயோகப் படுத்துவது: இந்த வீடியோவிலும், கருணாநிதி, ஸ்டாலினை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை, ராஜராஜன், ராஜேந்திரனுடன் ஒப்பிடும் வகையில், கங்கைகொண்ட சோழபுரம் சிற்பத்தைக் காட்டி, தாங்கள் இருக்கும் புகைப்படத்தை, “மைந்தன் கோன்முறை அரசு செய்க, என்று அற்பத் தனமாகக் காட்டுகின்றனர். அவ்வாறு ஒப்பிட்டுக் கொள்ள, கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் எந்த அருகதையும் இல்லை. ஏனெனில், பார்ப்பன அடிவருடிகள் என்று அந்த சோழர்களை இழித்துப் பேசியுள்ளதை கவனிக்க வேண்டும், பிறகு அத்தகைய, ஒப்பீடுப் பார்ப்பதில் என்ன வறட்டு சந்தோசம்? மேலும், இந்து விரோதத்துடன் நெற்றியில் குங்குமத்தை வைத்துக் கொண்டதை இகழ்ந்தவர் தந்தை கருணாநிதி. நெற்றியில் வைத்த குங்குமம், விபூதி, சந்தனம் முதலியவற்றை அழித்தவர் தனயன் ஸ்டாலின். இப்பொழுது வேண்டுமென்றே, கோவில்களுக்கு அருகில், கோவில் வளகங்களில், மைதானங்களில் கூட்டம் போட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இத்தகைய கேடுகெட்ட தூவேசிகளை உண்மையான இந்து யாரும் ஆதரிக்க மாட்டார்கள்.

© வேதபிரகாஷ்

05-01-2021


[1] தினசரி, இந்து ஆன்மீக விரோதிகள் நடத்தும் கூட்டத்தில் தாங்கள் பேசப் போவதில்லை: மறுத்துள்ள ஆதீனங்கள், செங்கோட்டை அஶ்ரீராம், 22-10-2020 4.05 மணி.

[2] https://dhinasari.com/latest-news/178399-perur-atheenam-denied-to-participate-tamilnadu-vizha-webinar.html

[3] வேல்ஸ்.மீடியா, கந்த புராணத்தை மாற்றி தேர்தல் பிரசார பாடல்! திமுகவுக்கு எதிராக ஆத்திகர்கள் கொதிப்பு, velsmedia team, ஜனவரி 4, 2021 3:06 pm.

[4] https://velsmedia.com/dmk-election-campaign-song-by-changing-kandapuranam-words/

[5] தினமலர், கந்த புராணத்தை வைத்து விளம்பரம்: தி.மு..,வுக்கு காமாட்சிபுரி ஆதினம் கண்டனம், Updated : ஜன 03, 2021 15:59 | Added : ஜன 03, 2021 15:58. https://www.dinamalar.com/news_detail.asp?id=2682846

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2682846&Print=1

[7] கதிர்.நியூஸ், கந்தபுராண பாடலில்சைவ நீதியைசமூகநீதிஎன்று மாற்றிய தி.மு.! ஆதீனம் கண்டனம்!, By Yendhizhai Krishnan | Mon, 4 Jan 2021

[8] https://kathir.news/tamil-nadu/dmk-condemns-aadeenam-for-changing-vegetarian-justice-to-so/cid1961034.htm

பகவத் கீதை, கிருஷ்ண தூஷணம், திரிபு விளக்கம், இந்துவிரோதக் கூட்டங்களின் தொடரும் சட்டமீறல்கள்! [1]

ஜூலை 29, 2020

பகவத் கீதை, கிருஷ்ண தூஷணம், திரிபு விளக்கம், இந்துவிரோதக் கூட்டங்களின் தொடரும் சட்டமீறல்கள்! [1]

EVR and RSS

இந்துவிரோதிகளும், இந்துத்துவவாதிகளும்: ஜூலை 11, 2020ல் வீரமணி மறுபடியும் அதே தூஷணத்தை செய்திருப்பதால், இதனை விளக்கமாக எழுத வேண்டிய அவசியம் உண்டாகி உள்ளது.  “இந்துத்துவம்” பேசிக் கொண்டு, தம்மை “இந்துவவாதிகள்,” என்று சொல்லிக் கொண்டு, இந்துமதத்தினையே தாங்கள் தான் காத்து வருகின்றது போலக் காட்டிக் கொண்டாலும், திடீரென்று, “பெரியார் கொள்கை தான் எங்கள் கொள்கை,” என்றெல்லாம் பேசியிருப்பது திகைப்படையச் செய்கிறது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதரவில்லாமல், அரசு-அதிகாரம் பெறமுடியாது என்றதால், இவ்வாறு சமரசம் செய்து கொள்கின்றனரோ என்ற சந்தேகமும் எழுகிறது. இந்து, இந்து நலன், இந்து பாதுபாப்பு முதலியவை, குறுகிய “அரசியல்,” அரசியல் கூட்டணி, அரசியல் ஆதாயம் போன்றவற்றில் சிக்க வைத்து, குறுக்கி விட முடியாது. அதனால் தான், மற்றுக் கருத்து கொண்டவர்கள், விவரங்களை எடுத்துக் கொண்டு, அரைகுறையாக புரிந்து கொண்டு, தூஷித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Bhagawat Gita, tilakk, Sedition
பகவத் கீதை எதிர்ப்புஆந்நியர் ஆட்சி முதல் திராவிட ஆட்சி வரை: பகவத் கீதையினை இந்துக்கள் ஆதரிப்பது அறிந்து, அதனை தூஷித்து புத்தகத்தை எழுதுவது, பேசுவது, தூஷிப்பது புதியதல்ல. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே, பகவத் கீதையை எதிர்த்து பிரச்சாரம் நடந்தது. சுமார் 150 ஆண்டு காலமாக இது நடந்து வருகிறது. தேசதுரோக அறிக்கை கமிட்டி, “பகவத் கீதை வன்முறையைத் தூண்டுகிறது,” அதனால், அதனை தடை செய்யவும் முற்பட்டது[1]. இந்திய புத்தகங்கள் ஸ்காட்லான்ட் யார்டுக்கு அனுப்பப் பட்டு புலன் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டது[2]. 1896ல் பிளேக்கினால் கோடிக் கணக்கான மக்கள் இறந்த போது, ஆங்கிலேயர் உகந்த நடவடிக்கை எடுக்காததால், திலகர் “கேசரி”யில் அவர்களைத் தாக்கி எழுதினார். 1659ல் சிவாஜி எப்படி ஒரு முகலாய தலபதியைக் கொன்றார் என்று குறிப்பிட்டார். பிறகு, ஆர்பாட்டக் காரர்கள், ஒரு ஆங்கிலேய அதிகாரியைக் கொன்றனர். அதனால், திலகருக்கு ஆறுவருடம் தீவாந்திர தண்டனை கொடுக்கப் பட்டது. இதனால், ஆங்கிலேயர் அவருக்கு திலகருக்கும், காந்திக்கும் இடையிலேயே கீதை ஆதரிப்பு-எதிர்ப்பு விவாதம் நடந்தது. காந்தி உண்மையில் கீதையை ஆதரிப்பது போல காட்டிக் கொண்டு, எதிர்க்கவே செய்தார்.  திலகர் வழக்கை வைத்துப் பார்த்தால், இப்பொழுது, வன்முறையினைத் தூண்டுபவர்கள், இந்துவிரோத திரவிடத்துவ, பெரியாரிஸ, கம்யூனிஸ, துலுக்கக் கூட்டங்கள் தான். அவ்வப்பொழுது, பெயரை மாற்றிக் கொள்கின்றன, ஆனால், வேலை செய்வது, ஊக்குவிப்பது அவர்கள் தான்.

Tilak argued his sedition case 1918

சமீபத்தைய எதிர்ப்புகள்: இந்திய வரலாற்றுப் பேரவை போன்ற கம்யூனிஸ-துலுக்க ஆதரவு அமைப்புகள் அத்தகைய ஆய்வுக் கட்டுரைகளை ஊக்குவித்தன[3]. அவ்வப்போது, ஆங்கிலத்தில், செய்திகள் வந்து கொண்டிருக்கும். சிலர், அரைகுறையாக திரித்து விளக்கம் கொடுப்பர்[4]. அவையெல்லாம் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கும், இன்றும் வந்து கொண்டிருக்கின்றன[5]. போதாகுறைக்கு, பகவத் கீதை, பௌத்தத்திலிருந்து காபியடித்து எழுதப் பட்டது என்றெல்லாம் சில ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். 2012ல் ரஷ்யாவில் தடை செய்யப் பட வேண்டும் என்று வழக்கு தொடரப் பட்டது, ஆனால், நீதிமன்றம் தள்ளுபடி செய்தது[6]. சென்ற வருடம் அண்ணா பல்கலைக் கழகத்தில், சேர்க்கப் பட்டது என்றபோதும், பிரச்சினையைக் கிளப்பினர்[7]. உண்மையில், பிளாடோ போன்றவர்களின் தத்துவத்துடன், இந்திய தத்துவத்தையும் படிக்க ஏற்பாடு செய்தபோது, எதிர்ப்புத் தெரிவித்தனர்[8]. எப்படி சைவ-வைணவ சர்ச்சை, சண்டை, எதிர்ப்புகள் இலக்கியங்களாக வெளிப்பட்டபோது, அவை மற்றவர்களால் சாதகமாக உபயோகித்துக் கொண்டார்களோ, அதேபோல இந்த விவரங்களை வைத்துக் கொண்டு, தன்னுடைய காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் முதலியவற்றைச் சேர்த்து இப்புத்தகத்தை வீரமணி எழுதித் தள்ளினார். இந்துஎதிர்ப்பு ஒன்றையே பிரதானமாக வைத்துக் கொண்டு, வீரமணி கூட்டம் திரும்பத் திரும்ப இந்த பிரச்சாரத்தை செய்து வருகின்றது. மேலே குறிப்பிட்ட இந்துவிரோத குப்பைகளை அள்ளிக் கொண்டு, இங்கு குப்பைக் கொட்ட முயல்கிறது இந்துவிரோதக் கூட்டம்.

Bhagawat Gita, tilakk, Sedition.s.24A1

ஜூலை 2020 – நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா காணொலியில் வீரமணி பேசியது[9]: “பகவத் கீதை ஏன், எதற்காக?” என்ற சிறிய நூலை வாங்கி நீங்கள் மேலும் விரிவாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி காணொலி மூலம் உரையாற்றியது[10], “இது உங்களையெல்லாம், நம்மையெல்லாம் குழப்புகிறது என்று மட்டும் நினைக்காதீர்கள். அர்ஜுனனையே குழப்புகிறது. கீதையிலேயே அதைச் சொல்லியிருக்கின்றான். கீதையினுடைய அத்தியாயம் மூன்றுசுலோகம் இரண்டிலே அர்ஜுனன் சொல்லுகிறான்:

ஜனார்த்தனா! (ஜனார்த்தனன் என்றால் கிருஷ்ணன்) என் னைக் குழப்பாதே!” கெஞ்சுகிறான் உனது பேச்சுக்கள் அனைத்தும் குழப்பமாய் இருக்கின்றன. குழப்பம் உண்டாவதால் எனது மதி மயங்குகிறதுமதிமயங்காமல் வேறு என்ன செய்யும்?…….”ஏதாவது ஒன்றைச் சொல்லி இதுதான் உயர்ந்தது என்று சொல். நான் அதைப் பின்பற்றுகிறேன். இல்லாவிட்டால் ஆளைவிடு. என்னைப் போட்டு குழப்பு குழப்பு என்று குழப்புகிறாயே!

உலகம் முழுவதும் எத்தனையோ தத்துவ ஞானிகள் படித்து பொருள் கொடுத்துள்ளாற்கள். ஆனால், இத ஆளுக்கு மட்டும் இப்படி தோன்றுகிறது: விசயம் தெரிந்தவர்கள் இதனைப் படித்தால், இந்த ஆளுக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதை நன்றாகவே தெரிந்து கொள்வார்கள். அது தான் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் டான், இந்த ஆளை யாரும் பொருட்படுத்துவது இல்லை. அதனாலேயே, தொடர்ந்து இப்படி குப்பைகளைக் கொட்டி வருவதும் விசித்திரமான விசயமே!

 …….ஒரு சுலோகத்தினைச் சொல்லி முடிக்க 5 நிமிடம் வேண்டும். 700 சுலோகங்களையும் சொல்லி முடிக்க 5 நாட்கள் வேண்டும்……..பயனை எதிர்பார்க்காமல் எவன் கடமையைச் செய்வான்? நாங்கள் வெட்டியாட்களாகவா வந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். பேசினால் அதனைக் கேட்பவர்களுக்குக் கொஞ்சமாவது புத்தி வருமே என்பதற்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர, நீ உழைத்துக் கொண்டே இரு, பலனை எதிர்பார்க்காதே, நான் கொடுப்பதை வாங்கிக் கொள். நீயாகக் கேட்காதே, கடமையைச் செய் என்கிற அறிவுரையை எல்லோரும் சொல்லுகிறார்கள். இதை எப்படிச் சொல்லுகிறார்கள் என்று புரியவில்லை?,” என்று பல உளறல்கள் உள்ளன. இங்கு முக்கியமானவை மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

K.Veeramanis anti-Hindu tirade, Viduthalai, 27-07-2020
2019ல் வெளியிட்டக் கருத்து: 2019ல் பேசிய / எழுதிய சமாசாரங்களும் ஒன்றும் புதியவை அல்ல. கடந்த 100-150 ஆண்டுகளாக, வெளிநாட்டவர் எழுதி வந்துள்ளதை தொகுத்தவை தான். “இதற்கான நியாயமான காரணங்கள் இதோ”, என்று வீரமணி சொல்வது[11]:

  1. கீதை ஒரு இந்து மத நூல் மட்டுமல்ல, ஜாதியை ஆதரித்து நியாயப்படுத்தும் நூல்.

“சதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம், குண – கர்ம விபாகச

தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்த்யா கர்த்தாரர மவ்யயம்”

(அத்தியாயம் 4, சுலோகம் 13)

அதாவது, ‘‘நாலு வருணங்களையும் நானே படைத்தேன். நானே அதனைப் படைத்தவனாக இருந்தாலும் அதனை மாற்றிட அல்லது திருத்தி அமைத்திட என்னால் முடியாது” என்று கூறும் நூல்.

  1. சூத்திரர்களும், பெண்களும்பாவயோனியில் பிறந்தவர்கள் என்று அவர்களைக் கேவலப்படுத்தும் நூல்.

“மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யேஸ்பி ஸ்யு, பா – யோன்ய

ஸத்ரியோ வைச்யாஸ் – ததா சூத்ராஸ் – தேஸ் பியாந்தி பராங்கதிம்”

(அத்தியாயம் 9, சுலோகம் 32)

அதாவது, ‘‘பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள். அதனால் அவர்கள் கீழானவர்கள். “பிராமணன், சத்திரியன், வைசியன் ஆகிய மூன்று வர்ணத்தாருக்கும் தொண்டூழியம் செய்வது ஒன்றே சூத்திரர்களின் இயல்பான கடமையாகும்” என்றும் கூறும் நூல் பகவத் கீதை. மகளிரும் படிக்கும் ஒரு பல்கலைக் கழகத்தில் இப்படி இழிவுபடுத்தும் நூல் இடம்பெறலாமா?

© வேதபிரகாஷ்

29-07-2020

Tilak, Gandhi and Gita

[1] Sedition Committee Report, 1918 found that Bhagawat Gita was inspiring extreme nationalist freedom fighters were resorting to violence by the teachings of Bhagawat Gita and therefore, it had to be proscribed.

[2] ஆங்கிலேய அரசு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பகவஹ் கீதைப் படித்து, ஊக்கம் கொண்டு தான், ஆங்கிலேய அதிகாரிகளைக் கொன்று வருகின்றனர் என்று நினைத்துக் கொண்டனர். உண்மையில் அவர்கள் தங்களது வாழ்க்கை நிலையில்லாதது, அதனால், உயிரை தேசத்திற்காக அர்ப்பணிக்கலாம் என்பதனைத் திரித்து விளக்கம் கொண்டது.

[3] Ganachari, Aravind. British official view of Bhagawat Gita as text book for the mental trainng of revolutionaryProceedings of the Indian History Congress. Vol. 56. Indian History Congress, 1995, pp.601-610.

[4] Bangalore Mirror, Gita propagates violence: Sreedhar, Prathibha Nandakumar, Updated: Feb 28, 2015, 22:21 IST.

[5] https://bangaloremirror.indiatimes.com/opinion/views/bhagavad-gita-violence/articleshow/46414314.cms

[6] Corley, Felix. “RUSSIA: Has «madness» of banning religious publications been stopped?».” Forum, 2012.

[7] Indian Express, Anna University includes Bhagavad Gita in curriculum, irks academics, Published: 26th September 2019 05:23 AM | Last Updated: 26th September 2019 10:00 AM

[8] https://www.newindianexpress.com/cities/chennai/2019/sep/26/anna-university-includes-bhagavad-gita-in-curriculum-irks-academics-2039110.html

[9] கே. வீரமணி, ‘‘பகவத் கீதை ஏன் எதற்காக,” July 28, 2020 • Viduthalai • கழகம்

[10]https://viduthalai.page/article/%E2%80%98%E2%80%98%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%22/JVUSo8.html

[11]  கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் 26.9.2019, முகாம்: பிலெடெல்ஃபியா (அமெரிக்கா). https://www.facebook.com/asiriyarkv/posts/2489306694438478

கோடம்பாக்கம் குஷ்புவும், ஹாலிவுட் ஜூலியா ராபர்ட்ஸும்

ஓகஸ்ட் 10, 2010

கோடம்பாக்கம் குஷ்புவும், ஹாலிவுட் ஜூலியா ராபர்ட்ஸும்

ஒருவேளை, ஒரே நாளில் அல்லது காலகட்டத்தில், இந்தியாவில் இரண்டு நடிகைகள், தமது இடங்களை விட்டு, வேறு இடத்திற்கு வந்து தமது நம்பிக்கைகளைப் பற்றி பேசியுள்ளது வியப்பாக உள்ளது.

கோடம்பாக்கம் குஷ்பு: இவரைப் பற்றி இப்பொழுது சொல்லவேண்டிய அவசியம் இல்லை. முஸ்லீமாக பிறந்து, “ஹிந்து” போல உலா வந்து, மக்களை ஏமாற்றி, கற்ப்பைப்பற்றி கேவலமாக பேசி, இப்பொழுது தான் “பெரியாரிஸ்ட்” என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். கோடம்பாக்கத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட, இந்த நடிகை, கருணாநிதியுடன் கைக்கோர்த்துக் கொண்டு, நாத்திகம், பெரியாரிஸம் என்றெல்லாம் பேச ஆரம்பித்துள்ளார்.

ஹாலிவுட் ஜூலியா ராபர்ட்ஸ்: ஆலிவுட் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஜூலியா ராபர்ட்ஸ்(42) ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் நடிப்பில் தனி முத்திரை பதித்து வரும் இவருக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் வெளியான பிரட்டி உமன் என்ற படம் வசூலில் சாதனை படைத்தது. இப்படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதையும் பென்று சாதனை படைத்தார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈட்பிரே அண்ட் லவ் என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள டெல்லி வந்திருந்தார் தொடர்ந்து 3 மாதங்கள் வரை இந்தியாவில் தங்கி இருந்தார். “ஈட் பிரே அண்ட் லவ்” படத்தில் ஜூலியா ராபர்ட்ஸ் விதவைப் பெண் கேரக்டரில் நடித்தார். கதைப்படி அவர் நிம்மதிக்காக இந்தியா வந்து கோவில்களில் வழிபடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றன. இதனால் அவருக்கு பல்வேறு இந்து கோவில்கள் ஆசிரமங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் நடிப்பதற்காக இந்து கோவிலுக்கு சென்ற அவருக்கு உண்மையிலேயே மன நிம்மதி, கடவுளின் அருள் ஆசி கிடைத்தது.

உலகின் சிறந்த மதம் மன அமைதி கிடைத்ததால் இந்து மதத்திற்கு மாறினேன்

இந்து மதத்துக்கு மாறினார் ஜூலியா ராபர்ட்ஸ், ஆகஸ்ட் 08,2010

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=57126

புதுடில்லி :ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஜூலியா ராபர்ட்ஸ்(42), இந்து மதத்துக்கு  மாறிவிட்டார். கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்கிறார். “அடுத்த பிறவியிலாவது நான் நிம்மதியாக இருக்க வேண்டும்’ என, மனமுருகிக் கூறியுள்ளார்.

எனது சொந்த நாடு ஜார் ஜியா. ரோமன் கத்தோலிக்க மதத்தில் பிறந்தவர். சிறுவயது முதலே வேதாகமத்தை (பைபிளை) படித்து வந்தேன். கிறிஸ்தவ கோவில்களுக்கு சென்று அவ்வப்போது வழிபடுவேன்.

ஆனாலும் என் வாழ்வில் தொடர்ந்து பிரச்சினைகள், குழப்பங்கள் இருந்து வந்தன. கடந்த ஆண்டு இந்தியா வந்த போது இந்து மத வழிபாடுகளால் ஈர்க்கப்பட்டேன். இந்த வழிப்பட்டால் என் வாழ்வை சீரழித்த பிரச்சினைகள் நொடிக்பொழுதில் மாய மானதை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். குழப்பமான நிலையில் இருந்த எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது.

இந்து கோவில்களில் அர்ச்சகர்கள் காட்டும் தீபத்தை கை வைத்து கும்பிடும் போது எனக்கு புத்துணர்ச்சி கிடைத்ததை உணர முடிந்தது.

எனது பிரார்த்தனையை கடவுள் கேட்டு உடனடியாக தீர்த்து விடுவது போன்ற பிரமிப்பு ஏற்பட்டது. நெற்றியில் இடும் திருநீறு தீயசக்திகளிடம் இருந்து என்னை கடவுள் பாதுகாப்பது போல உணர்ந்தேன். தற்போது எனது 3 குழந்தைகளுக்கும் திருநீறு பூசி வருகிறேன். கைகளில் புனிதமான சிவப்பு கயிரை கட்டிக் வருகிறேன். இந்து மதம் என் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது.

நான் ஒரு பெரியாரிஸ்ட்! நடிகை குஷ்பு அறிவிப்பு

http://www.viduthalai.periyar.org.in/20100810/news01.html

முஸ்லீமாக இருந்து பிறகு இந்து மாதிரி இருந்து, இப்பொழுது தான் பெரியாரிஸ்ட் என்று கூறிக்கொள்ளும் இவரையும் இந்தியர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

அய்தராபாத்தில் நேற்று பெரியார் திரைப் படம் தெலுங்கு மொழியில் வெளியீட்டிற்கான முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் இனமுரசு சத்ய ராஜ், தான் ஒரு பெரியார் கொள்கைப் பற்றாளன் என்பதை ஏற்கெனவே பிரகடனப்படுத்தியவர்.

அய்தராபாத்தில் நடைபெற்ற பெரியார் தெலுங்கு திரைப்பட முன்னோட்ட நிகழ்வில் பெரியார் திரைப்படத்தில் அன்னை மணியம் மையாராக நடித்த நடிகை குஷ்பு தன்னுடைய உரையில், அன்னை மணியம்மையாரைப் பற்றி எந்த படச் சுருளையும் தான் பார்க்கவில்லை. அவர் இயல்பாக இருக்கின்ற போட்டோக்களை மட்டுமே பார்த்தேன். அன்னை மணியம்மை யாரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளை மட்டுமே படித்தேன். திராவிடர் கழக தலைவர் வீரமணி அவர்கள் அன்னை மணியம்மையாரைப் பற்றித் தெரிந்து கொள்ள பல செய்திகளைக் கூறினார். அதுதான் நான் மணியம்மையாராக சிறப்பாக நடிப்ப தற்குக் காரணமாக இருந்தது.

நான் ஒரு பெரியாரிஸ்ட் என்பதை இந்த நேரத்தில் பிரகடனப்படுத்திக் கொள்வதில் பெருமை அடைகின்றேன் என்றும் குஷ்பு கூறினார். குஷ்பு இவ்வாறு அறிவித்ததை மேடையில் இருந்தவர்களும், பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தவர்களும் மகிழ்ந்து கைதட்டி வரவேற்றனர்.