Posts Tagged ‘ஆரியன்’

சிலை உடைத்த நாத்திகர்களுக்கு சிலை வைக்கும் கலாச்சாரத்தை உண்டாக்கிய திராவிடத்துவம்! ஸ்டாலின் – அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும் (2)

செப்ரெம்பர் 2, 2021

சிலை உடைத்த நாத்திகர்களுக்கு சிலை வைக்கும் கலாச்சாரத்தை உண்டாக்கிய திராவிடத்துவம்! ஸ்டாலின்அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும் (2)

ஸ்டாலின்அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும்: அப்போது எழுந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்மையில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தன்னை சந்தித்த போது இந்த கோரிக்கை தொடர்பாக தன்னிடம் வலியுறுத்துயதாக தெரிவித்தார்[1]. பெரியார் கட்டளையிட்டு திராவிடர் கழகம் வைத்த சிலையை மீண்டும் நிறுவ வேண்டுமென கி.வீரமணி கோரிக்கை வைத்ததையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்[2]. பொதுவான இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக சிலை வைக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தான் சுட்டிக் காட்டியதாக கூறிய முதல்வர், ஏற்கனவே நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுத்தான் சிலை வைக்கப்பட்டதாகவும் எனவே மீண்டும் அந்த இடத்தில் சிலை நிறுவ எந்த பிரச்சினையும் இல்லை என கி.வீரமணி கூறியதாகவும் முதல்வர் தெரிவித்தார்[3]. அண்ணா சாலையில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோருக்கு சிலைகள் இருப்பதை போன்று கருணாநிதி சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டுமென கி.வீரமணி மீண்டும் தன்னிடம் வலியுறுத்தியதாக கூறிய முதலமைச்சர், இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும் என கூறினார்[4].

மேற்காணும் பேச்சுகளில் உள்ள போலித் தனம், உண்மையற்ற நிலைகளுக்கு விளக்கம்:

  1. பலர் கருணாநிதியிடம், அவ்வாறு சிலை வைக்க வேண்டாம், நல்லதல்ல என்று அறிவுரை கூறினர்.
  2. ஒருநிலையில், குன்றக்குடியும் எடுத்துக் காட்டினார், ஒப்புக் கொள்ளவில்லை, ஆனால், சிலை திறப்பு விழாவில், அவரையே உபயோகப் படுத்திக் கொண்டனர்.
  3. வீரமணி பிடிவாதமாக இருந்தார். எல்லா வாதங்களையும் எதிர்க்க வேண்டுமானால், சிலை வைத்தே ஆகவேண்டும் என்று உசுப்பினார்.
  4. மவுண்ட் ரோடில் பெரியார், அண்ணா என்று சிலைகள் வரிசையாக இருக்கும் போது, அடுத்தது, கருணாநிதி சிலை இருக்க வேண்டும், என்று பகுத்தறிவுடன் எடுத்துக் காட்டினார்.
  5. கருணாநிதியின் எம்ஜிஆரின் மீதான வன்மப் பேச்சுகள் தான், அவரது ரசிகர்கள், தொண்டர்கள், முதலியோரை எதிர்மறை விளைவுக்குத் தள்ளியது.
  6. கருணாநிதியின் இத்தகைய செயல்களால் தான், 31-01-1976ல் ஜனாதிபதியா ஆட்சி நீக்க செய்யப் பட்டு, 31-01-1976 முதல் 30-06-1977 வரை ஜனாதிபதி ஆட்சி நடந்தது.
  7. 30-06-1977 அன்று எம்ஜிஅர் ஆட்சிக்கு வந்தார். நடந்த தேர்தலில் கருணாநிதி-திமுக படுதோல்வி அடைந்தது.
  8. 24-12-1987 அன்று எம்ஜிஆர் இறந்தாலும், 12-05-1996 வரை திமுக ஆட்சி நடந்தது.
  9. அதாவது, 17-02-1980 முதல் 13-05-1996 வரை, கருணாநிதி ஆட்சியில் இல்லை. 16 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில்லாமல் தான் இருந்தார். இவரது “பெரியார் விக்கிரகம்,” பெரியார் அருள், ஆசீர்வாதம், மகிமை முதலியவை வேலை செய்யவில்லை.
  10. அதை அவர், “அஞ்ஞான வாசம்” என்றாலும், அ. கணேசன் போன்ற ஜோதிடர்கள் உண்மையினை சொல்வர். இவர் நடத்திய பரிகார ஹோமங்கள், பூஜைகள் அவர் வீட்டிலிருப்பவர்களுக்குத் தெரியும்.

2018 – பெரியார் இருந்திருந்தால் ஏன் சிலை வைக்கிறீர்கள் எனக் கேட்டிருப்பார்கமல் ஹஸன்: தமிழகத்தில் பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரின் சிந்தனை, கருத்துக்களுக்கு எதிராக இருந்தவர்களின் செயல்பாடுகள் இன்றும் தொடர்கிறது என்று சொல்வதில்லை தவறொன்றும் இல்லை. சிலை வழிபாடுகளுக்கு எதிராக பேசிய பெரியாருக்கு எதற்காக சிலைகள் என்ற கேள்விகள் எப்பொழுதும் முன்வைக்கப்படும். அதற்கான பதிலை பெரியாரே அவர் வாழ்ந்த காலத்தில் கூறி விட்டு சென்றுள்ளார். என்றெல்லாம், பெரியாரிஸ்டுகள் வாதம் செய்து வருகிறார்கள். 2018-ல் பெரியார் சிலை உடைப்பு பற்றி பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்த போது தமிழகத்தில் அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. அந்நேரத்தில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமல்ஹாசன் “சிலைகள் வைப்பதில் வித்தியாசமான கருத்துடையவன் நான். ஆனால், அதை  உடைப்பது கேவலமான செயல். பெரியார் இருந்திருந்தால் ஏன் சிலை வைக்கிறீர்கள் எனக் கேட்டிருப்பார்,” என ஈரோட்டில் பேசி இருந்தார். இது திராவிடத்துவவாதிகளின் முகத்திரைகளைக் கிழித்து விட்டது. இதனால், மறுபடியும், அதற்கு விளக்கம் கொடுத்தனர்.

விடுதலை ஆதாரம் என்று பழையக் கதையை சொன்னது: 29-07-1944 அன்று கடலூரில் பெரியாரின் மீது ஒன்றை செருப்பு வீசப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. தன் மீது விழுந்த ஒற்றை செருப்பு தனக்கும் பயன்படாது, வீசியவருக்கும் பயன்பாடாது என்பதால் அதன் மற்றொரு ஜோடி செருப்பையும் பெற்றுக் கொண்டார் பெரியார் என்ற தகவல் விடுதலை நாளிலில் இடம்பெற்று இருக்கிறது. இதற்கு பின், அதே இடத்தில் 28 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு 1972-ல்  கருணாநிதி ஆட்சியில் கடலூர் மக்களால் பெரியாருக்கு சிலை திறக்கப்படுகிறது. கருணாநிதி திறந்து வைத்த சிலை திறப்பு நிகழ்சிக்கு முன்னிலை வகித்தார் ஈ.வெ.ரா.பெரியார். சிலைகள் வைப்பதற்கு பெரியாரே எதிர்ப்பார் என கமல்ஹாசன் கூறியது தவறான தகவல். சிலைகள் வைப்பதற்கு பெரியார் எதிர்ப்பு தெரிவித்து இருக்கமாட்டார். அதேபோன்று, ஏன் உயிருடன் இருந்தவர் தனக்கு தானே சிலை வைத்துக் கொண்டார் என சிலரும் கேள்வி கேட்பதுண்டு. ஏ.ஆர். வெங்கடாசலபதி போன்ற சரித்திராசிரியர்களும், இதைப் பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்வதில்லை. கருணாந்தம், எங்கேயாவது உட்கார்ந்து, தூங்கிக் கொண்டிருப்பார். சுப.வீரப் பாண்டியனும் கண்டுகொள்ளமட்டார். விடுதலை ராஜேந்திரன், கொளத்தூர் மணி பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைக்கலாம் என்று நியாயப் படுத்தி வாதித்தது: பெரியார் தனக்கு தானே சிலை வைத்துக் கொள்ளவில்லை. சிலைகள் மக்கள் மத்தியில் பகுத்தறிவு சிந்தனையை பிரச்சாரமாக மாற்றுவதாக இருக்க வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம். சிலை என்பது வழிபாட்டுக்குரியது அல்ல. பயன்பாட்டுக்கு உரியது என்று கூறியுள்ளார். சிலைகளே பகுத்தறிவு பிரச்சாரத்தை செய்யும் என அவர் நினைத்தார். “பிற்காலத்தில் ராமசாமினு ஒருத்தன் இருந்தான். அவன் பகுத்தறிவு பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருந்தானு பேசுவாங்க. அதுக்காக தான் இந்த சிலை,” என பெரியார் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பேசியதாக மின்னம்பலம் செய்தியில் வெளியாகி இருக்கிறது. விடுதலை நாளிதழில், உயிருடன் இருப்பவருக்கு சிலை வைப்பது தவறில்லை என்றே வெளிப்படுத்தி உள்ளனர். சென்னை சர்வகலாசாலை வைஸ் சான்ஸ்லர் டாக்டர் லட்சுமணசாமி, ஓய்வு பெற்ற சென்னை பிரதம நீதிபதி டாக்டர் ராஜாமன்னார், கர்மவீரர் காமராஜர் என பலருக்கும் உயிருடன் இருக்கும் போதே சிலை வைக்கப்பட்டது என விடுதலை நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியார் தன் பிறந்தநாள், சிலை திறப்பு, படத்திறப்பு போன்றவற்றை இயக்கத்தின் பிரச்சார கருவியாக பயன்படுத்தினார். அண்ணாவிற்கும் அவர் வாழ்ந்த காலத்தில் படத்திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று உள்ளன என்கிறார்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள்.

திகதிமுகவினரின் சமீபத்தைய சரித்திர உரிமை கோரிக்கைகள் சரிபார்க்கவேண்டும்: மேற்காணும் வாதங்கள், அவ்வாதங்களுக்கான ஆதாரங்கள், அவர்களுடைது தான். விடுதலையில் வந்த-வரும் செய்திகளை சரிபார்க்க, வேறொரு ஆவணம் அல்லது மூலத்தை வைத்து பரிசோதிக்க முயற்சிகளை செய்வது கிடையாது. ஒருதலைப் பட்சமாகவே, இத்தகைய வாத-விவாதங்கள், செய்திகளை வெளியிடுதல், ஏன் புத்தகங்கள் எழுதுவது, ஆராய்ச்சி செய்வது என்று நடந்து வருகின்றன. ஒரு சிலரே, ஈரோடு, பவானி, திருச்சி, கடலூர் என்று சென்று, அங்கிருக்கும் 60-90 வயதான முதியவர்களிடம் பேசி, விவரங்களை சேகரித்து வருகின்றனர். அவற்றில், இவர்களின் கூற்று, எந்த அளவுக்கு ஒருதலைப் பட்சமாக இருக்கிறது, ஏன் உண்மைக்குப் புறம்பாகவும் இருக்கிறது என்பது தெரிகிறது. அதனால் தான், ஈவேரா பிள்ளையார் உடைப்பு, ஜின்னாவுடனான சகவாசம், ஆங்கிலேயரிடம் சரண்டர் ஆனது, உனெஸ்கோ விருது போன்றவை எடுத்தும் காட்டி வருகின்றன.

அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும் என கூறினார்: ஸ்டாலின், கருணாநிதியில் மகன், முதலமைச்சர் இவ்வாறு கூறியப் பிறகு, யார் எதிர்க்கப் போகிறார்கள், எதிர்க்க முடியும். எந்த நீதிபதியும் மாறாக, தீர்ப்பும் கொடுக்க முடியாது. முதலமைச்சர் தீர்மானமாக, உறுதியாக சொல்லியாகி விட்டது, “அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும்.” எனவே, இனி, வீரமணி வேகமாக வேலை செய்ய ஆரம்பித்து விடுவார். 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, சோனியா காந்தி போன்றோரை வரவழைத்து, சிலைத் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடத்தப் படும். மற்ற எதிர்கட்சி தலைவர்களும் இருப்பார்கள். கடற்கரையில், கூட்டணி தேர்தல் பிரச்சாரக் கூட்டமும் நடைபெறும். அதிமுக-பாஜக எதிர்ப்பு முழுமையாக வெளிப்படும்.

© வேதபிரகாஷ்

02-09-2021


[1] மாலைமலர், அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலைமு..ஸ்டாலின் அறிவிப்பு, பதிவு: செப்டம்பர் 01, 2021 13:05 ISTமாற்றம்: செப்டம்பர் 01, 2021 15:20 IST.

[2] https://www.maalaimalar.com/news/topnews/2021/09/01130550/2973854/Tamil-News-MK-Stalin-announced-Karunanidhi-statue.vpf

[3] தினமலர், அண்ணாசாலையில் கருணாநிதிக்கு சிலை: முதல்வர் அறிவிப்பு, Updated : செப் 01, 2021  13:41 |  Added : செப் 01, 2021  13:39.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2835053

சிலை உடைத்த நாத்திகர்களுக்கு சிலை வைக்கும் கலாச்சாரத்தை உண்டாக்கிய திராவிடத்துவம்! சிலை உடைத்த அதே இடத்தில் சிலை வைக்கப் படும்! (1)

செப்ரெம்பர் 2, 2021

சிலை உடைத்த நாத்திகர்களுக்கு சிலை வைக்கும் கலாச்சாரத்தை உண்டாக்கிய திராவிடத்துவம்! சிலை உடைத்த அதே இடத்தில் சிலை வைக்கப் படும்! (1)

சிலை உடைத்த நாத்திகஇந்துவிரோதிகளுக்கு சிலை வைத்தல்: ஈவேரா பிள்ளையார் சிலைகளை உடைத்தது, உச்சநீதி மன்றத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டது, நிறைய தமிழக மக்களுக்கு, ஏன் பெரியார்/ஈவேரா பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்கேத் தெரியாது. ஈவேரா தனக்குத் தானே சிலை வைத்துக் கொண்டதற்கு நியாயம் கற்பிக்கும் வாதங்கள் எல்லாமே, அவர்களிடத்திலிருந்து தான் வந்துள்ளன. ஆனால், மற்றவர்கள் மறுத்துள்ளது, மறைக்கப் படுகிறது. சிலை வைத்து, கொடிக்கம்பம் நட்டு இடங்களை ஆக்கிரமித்துக் கொள்வது, கம்யூனிஸ்டுகளுக்கு திராவிடக் கட்சிகளுக்கு கைவந்த கலையாக இருந்து வருகிறது. உயிரோடிருக்கும் மனிதர்களுக்கு சிலை வைக்கும் வழக்கம் கிடையாது, அவ்வாறு யாரும் நினைத்தும் பார்க்க முடியாது, ஏனெனில், அது அமங்கலமாகக் கருதப் பட்டு வருகிறது. எனவே, 1972ல் ஈவேராவுக்கு கடலூரில் மற்றும் 1975ல் கருணாநிதிக்கு மவுண்ட் ரோடில் சிலைகள் வைத்து, விழா கொண்டாடியது, நிச்சயமாக, பகுத்தறிவுக்கு மட்டுமல்லாது, சாதாரண மனோதத்துவ ரீதியில் நோக்கும் போதும் ஒவ்வாதது, முரண்பாடானது.

சிலை உருவாக்கும் தன்மை (Iconogenesis) மற்றும் சிலைகளை உடைக்கும் வன்மம் (Iconoclasm): சிலை உருவாக்கும் தன்மை (Iconogenesis) மற்றும் சிலைகளை உடைக்கும் வன்மம் (Iconoclasm) இரண்டையும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இந்த நாட்டில் துலுக்கர் பெரும்பாலாக அதனை மெய்ப்பித்துள்ளனர். பிறகு போர்ச்சுகீசியர், டச்சு, டேனிஸ், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேய அடிப்படைவாத கிருத்துவர்களும் பால இடங்களில் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் சிலையுடைப்பு-கோவில் இடிப்பு வேலைகளை செய்துள்ளனர். இப்பொழுது, திராவிடத்துவவாதிகள் செய்து வருகின்றனர். ஆகவே, திராவிடத்துவ வாதிகள், நாத்திகத்துடன் நடத்திக் காட்டிய சிலையுடைப்புகள், ஆபாச ஊர்வலங்கள் அவர்களது, கொடிய-குரூர-அசிங்கமான-ஆபாசமான மனப் பாங்குகளைத் தான் எடுத்துக் காட்டியுள்ளன. மறுபடியும் அவற்றை உயிர்ப்பித்து, சிலைகளை வைத்து, கொண்டாடும் பட்சத்தில், இக்காலத்திலும் அதே வன்மத்துடன், கொடிய சிந்தனைகளுடன், திய-முரண்பாடுகளுடன், வாழ்ந்து வருகிறாற்கள் என்பது புலப் படுத்துகிறது. இவர்களால், சமூகத்திற்கு என்றுமே ஆபத்துதான். தாலிபான், ஐசிஸ், போன்ற தீவிரவாதிகளுக்கும், இந்த திராவிடத்துவ அடிப்படை-தீவிரவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஈவேரா கருணாநிதிக்கு சிலை வைக்க விரும்பியது (1971): அண்ணா மறைவுக்குப் பின்னர் முதல்வர் பதவியேற்றார், பின்னர் 1971-ம் ஆண்டு சட்டமன்றத்தை கலைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தேர்தலை திமுக சந்தித்தது. மிகப்பெரிய வெற்றியை திமுக இந்த தேர்தலில் பெற்றது. ஆகஸ்டு 14, 1971 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், பெரியார் ஏற்கெனவே தான் வைத்த கோரிக்கையை மீண்டும் அப்போதைய முதல்வர் கருணாநிதியை அருகில் வைத்துக்கொண்டே வைத்தார். செயற்கரிய சாதனை செய்தவர் என்பதால் சென்னை தலைநகரில் கருணாநிதிக்குச் சிலை வைக்கவேண்டும் என்று தம் விருப்பத்தை பெரியார் தெரிவித்தார்[1]. அதை மேடையில் இருந்த குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் ஆமோதித்தனர்[2]. அதே மேடையில் கருணாநிதி சிலை அமைப்புக் குழுவையும் பெரியார் அறிவித்தார்[3]. அப்போது கூட்டத்தில் பேசிய கருணாநிதி திமுக சார்பில் பெரியாருக்கு ஒரு சிலை திறக்கிறோம், அதன் பின்னர் எனக்கு சிலை திறக்கலாம் என்று அதைத் தட்டிக்கழித்தார்[4]. அதாவது, உயிருடன் இருக்கும் போது, சிலை வைக்கக் கூடாது என்று அவருக்குச் சொல்லப் பட்டதால் மறுத்தார்[5].

1973, ஈவேராவுக்கு சிலை வைத்த போது, மறுபடியும் கருணாநிதி சிலை பேச்சு எழுந்தது: அதன் பின்னர் 1973-ம் ஆண்டு பெரியார் மறைவுக்குப் பின்னர் திமுக சார்பில், சென்னை அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) பேராசிரியர் க.அன்பழகன், தலைமையில்,  மணியம்மை முன்னிலையில், பெரியார் சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். சிலை திறப்பு விழாவில் பேசிய அப்போதைய தி.க.தலைவர் மணியம்மை, “சொன்னபடி பெரியாருக்கு சிலை வைத்துவிட்டீர்கள். பெரியாருக்கு சிலை திறந்த பின்னர் எனக்கு சிலை வைக்கலாம் என்று பேசிய நீங்கள் இனியும் சாக்குப்போக்கு சொல்ல முடியாது தி.க.சார்பில் உங்களுக்குச் சிலை அமைக்க அனுமதி தரவேண்டும் என்று மேடையிலேயே கோரிக்கை வைத்தார். திராவிடர் கழகம் சார்பில் அண்ணா சாலையில் முழு உருவ வெண்கலைச் சிலை அமைக்க உள்ளோம், இதற்கு மறுப்பு கூறக்கூடாது,” என்று பேசினார்[6].

சிலை விவகாரத்தில் திமுகஅதிமுக மோதல்: சிலைத் திறப்பை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. துலுக்கர் எதிர்க்காதது ஆச்சரியமே! ஒருவேளை, அப்பொழுது தர்கா தான் இருந்தது என்று இப்பொழுது வாதிக்கலாம்! முதலமைச்சர் கலைஞர் வெளியூர் பயணத்தில் இருந்தபோது, இடையில் அ.தி.மு.க.வினால் ஏற்பட்ட சட்டப் போராட்டத்தையும் திராவிடர் கழகம் எதிர் கொண்டு வென்று, அண்ணாசாலை- ஜெனரல் பேட்டர்ஸ் சாலை சந்திப்பில் முறைப்படி அரசாணை பெற்று, 21.9.1975 அன்று பெரியதோர் திருவிழாவாக நடத்தினோம். (G.O. MS.No.877 Dated 21.5.1975, Rural Development and Local Administration Department). அந்த வழக்கை திராவிடர் கழகம் வென்று அண்ணாசாலை தர்கா அருகே 1975-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி கருணாநிதியின் வெண்கலச்சிலை திறக்கப்பட்டது.

1975ல் வைக்கப் பட்ட கருணாநிதி சிலை 1987ல் தகர்க்கப் பட்டது: 01-09-2021 அன்று, தமிழக சட்டப்பேரவையில் வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தஞ்சாவூர் திமுக உறுப்பினர் நீலமேகம், மவுண்ட் ரோடில் இருந்த கருணாநிதி சிலை பற்றி பேசியது, செய்தியாக வந்துள்ளது[7]. 1971 ஆம் ஆண்டு சென்னையில் கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும் என்று பெரியார் முடிவு செய்தார்[8]. அதன் பின்னர் 1975 ஆம் ஆண்டு அப்போதைய திராவிடர் கழகத் தலைவர் மணியம்மை, சென்னை அண்ணாசாலையில் கருணாநிதியின் சிலையை நிறுவி குன்றக்குடி அடிகளாரால் அந்த சிலை திறந்து வைக்கப்பட்டதாகவும் நீலமேகம் குறிப்பிட்டார்[9]. அதன் பின்னர், 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்தில் சில விஷமிகள் கருணாநிதி சிலையை சேதப்படுத்தியதாகவும், அதே இடத்தில் மீண்டும் கருணாநிதி சிலை வைக்க, கருணாநிதி வேண்டாம் என தடுத்துவிட்டதாக கூறினார்[10]. அப்போது ‘சின்ன தம்பி என் நெஞ்சில்தான் குத்தினான். முதுகில் குத்தவில்லை’ என்று கருணாநிதி கூறினார்[11]. எனவே பெரியார் நினைத்ததை மணியம்மை செய்து காட்டியதின் அடிப்படையில் மீண்டும் அண்ணாசாலையில் கருணாநிதியின் சிலையரரசின் சார்பில் நிறுவ வேண்டுமென நீலமேகம் கேட்டுக்கொண்டார்[12].

© வேதபிரகாஷ்

02-09-2021


[1] வேதபிரகாஷ், கருணாநிதி சிலை திறப்புசிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! [1], டிசம்பர் 17, 2018.

[2] https://dravidianatheism2.wordpress.com/2018/12/17/politics-of-karunanidhi-statue-unveiled-by-sonia-and-rahul-dravidian-myth/

[3] வேதபிரகாஷ், கருணாநிதி சிலை திறப்புசிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! [2], டிசம்பர் 17, 2018

[4].https://dravidianatheism2.wordpress.com/2018/12/17/karunanidhi-statue-unveiled-by-sonia-arya-dravidian-politics-or-corruption/

[5]  ஜோதிடர்களிடம் தயாளு அம்மாள் விசாரித்ததும், அதனால் மறுத்ததும் சிலருக்கேத் தெரிந்த விசயமாக இருந்தது. இப்பொழுது துர்கா கோவிலுக்குச் செல்வது எல்லாம், ஊடகங்களில் வருவது போல, அப்பொழுது, ஊடகங்களில் செய்திகள் வெளியிடுவது இல்லை.

[6]  நாத்திகம், பகுத்தறிவு என்ற கொள்கைகள் கொண்ட கருணாநிதி, வீரமையிடன் ஏன் மறுத்தார் என்பதையும், “இனியும் சாக்குப்போக்கு சொல்ல முடியாது……… இதற்கு மறுப்பு கூறக்கூடாது,” என்பதிலிருந்தும், பின்னணியை அறிந்து கொள்ளலாம்.

[7] தமிழ்.ஏ.பி.பி.லைவ்.நியூஸ், அண்ணா சாலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலைமுதல்வர் அறிவிப்பு, By: ராஜேஷ். எஸ் | Updated : 01 Sep 2021 12:53 PM (IST).

[8] https://tamil.abplive.com/news/tamil-nadu/kalaignar-karunanidhi-statue-in-anna-salai-says-cm-mk-stalin-in-tn-assembly-15249

[9] நியூஸ்.18.தமிழ், அண்ணா சாலையில் கருணாநிதி சிலை அமைக்கப்படும்முதல்வர் மு..ஸ்டாலின் உறுதி, Published by: Karthick S, First published:September 01, 2021, 17:07 IST.

[10] https://tamil.news18.com/amp/news/tamil-nadu/mkstalin-said-karunanidhi-statue-will-be-made-in-anna-road-skd-550141.html

[11] தினமணி, அண்ணாசாலையில் கருணாநிதிக்கு மீண்டும் சிலை அமைக்கப்படும்: முதல்வா் மு..ஸ்டாலின், By DIN  |   Published on : 02nd September 2021 03:01 AM.

[12] https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/sep/02/statue-of-karunanidhi-will-be-erected-again-in-anna-salai-3691334.html

கந்த சஷ்டி கவசம் முதல், கந்த புராணம் வரை: கருப்பு, கருப்பு-சிவப்புக் கூட்டத்தாரின் தாக்குதல்கள் – தேர்தல் நேரத்திலும் தொடர்ந்து இந்துவிரோத திமுக இவ்வாறு ஈடுபடுவது.

ஜனவரி 5, 2021

கந்த சஷ்டி கவசம் முதல், கந்த புராணம் வரை: கருப்பு, கருப்புசிவப்புக் கூட்டத்தாரின் தாக்குதல்கள் –  தேர்தல் நேரத்திலும் தொடர்ந்து இந்துவிரோத திமுக இவ்வாறு ஈடுபடுவது.

நாகர்கோவிலில் கூட்டத்தில்ஹிந்துக்களை வஞ்சிக்கும் கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது (03-01-2021): நாகர்கோவிலில் திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த சிவனடியார்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் ”ஹிந்துக்களை வஞ்சிக்கும் கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது[1]. இந்த கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் சொத்துகளை ஒரு சதுர அடி கூட விடாமல் மீட்டு கோயில்கள் வசம் ஒப்படைப்பது. அடியார்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு மருத்துவம், கல்வி உதவி வழங்க வேண்டும். சைவ மதத்துக்கு எதிராக தவறான கருத்து சொல்பவர்களை மாநிலம் முழுவதும் ஒரே குரலில் எதிர்க்க வேண்டும். ஹிந்துக்களை வஞ்சிக்கும் அரசியல் கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன[2]. இது விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் சிறப்பாகத் தெரிகிறது. இத்தகைய கூட்டங்கள் நிறைய நடத்தப் படவேண்டும். அத்தகைய செய்திகள் மக்களைச் சென்றட்டைய வேண்டும். குறிப்பாக, இன்றும் திக-திமுக திராவிடக் கட்சிகளை விசுவாசமாக ஆதரித்து வரும், சில சைவ சமூகத்தினர், இதுவரை நடந்துள்ள, நடந்து வரும் தீமைகளைக் கருத்திற்க் கொண்டு மாற வேண்டும்.

நெல்லையில் எதிர்ப்பு தெரிவித்த இந்து அமைப்பினர்: கந்தபுராண பாடலை திமுக கட்சி பாடல் போல் மாற்றி இழிவு படுத்தியதைக் கண்டித்து நெல்லை டவுனில் இந்து முன்னணியினர்,  சிவனடியார்கள், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் இணைந்து திருமுறைகள் பாடி பெருந்திரல் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்[3]. வான்முகில் வழாது பெய்க என்ற கந்தபுராண வாழ்த்து பாடலை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் திமுக தேர்தல் பிரச்சார பாடல் போல மாற்றி பதிவேற்றம் செய்த நபர்களையும் இறை வழிபாட்டு பாடல் கட்சி பாடல் போல் உருவாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நெல்லை டவுன் வாகையடி முனையில் இந்து முன்னணி சார்பில் பெருந்திரல் பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பிரார்த்தனை கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் சிவனடியார்கள் திருக்கூட்டம் இணைந்து தேவார திருவாசக திருமுறை பாடல்கள் பாடி இறைவனை வழிபட்டு பெருந்திரள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து கட்சி பாடலாக  மாற்றம் செய்து கந்தபுராண வாழ்த்துப் பாடலை இழிவுபடுத்திய நபர்கள் மீதும் சமூக வலைதளங்களில் அதை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது[4].

2020ல் காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கருப்பர் கூட்டத்தைக் கண்டித்தது: இந்து கடவுள்களை அவமதித்தால் நாக்கை துண்டிக்க பயப்பட தேவையில்லை என காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் 22-07-2020 அன்று தெரிவித்துள்ளார்[5]. கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கறுப்பர் கூட்ட யூ ட்யூப் சேனலுக்கு கண்டனம் தெரிவித்தார்.  தமிழகத்தில் இது போன்ற பேச்சுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்து மதத்தை இது போன்று இழிவுபடுத்தும் செயல்களில் யாராவது செயல்பட்டால் அவர்களின் நாக்கை துண்டிப்பதற்கும் கூட பயப்பட தேவையில்லை எனவும் ஆதீனம் பேசினார்[6].  உண்மையில், அவர் ஆதங்கத்துடன், பேசியுள்ளதை நினைவு கூறவேண்டும். தெய்வநம்பிக்கை ஆழமாக-உறுதியாக இருப்பது நல்லது தான், ஆனால், எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று சும்மா இருக்க முடியாது. தேர்தல், ஓட்டு, ஓட்டுவங்கி, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இத்தகைய இந்துமத-தூஷணங்களை செய்து வருவதால், நிச்சயமாக, இந்துக்கள் அதே முறையில், சரியான பதிலை சொல்லியாக வேண்டும். அவர்களுக்கு இந்து-ஆதரவு ஆட்சித் தேவையா அல்லது இந்து-விரோத ஆட்சி வேண்டுமா என்று இந்துக்கள் தான் தீர்மானிக்க வேண்டிய நிலையுள்ளது. “ஆவணன் ஆண்டால் என்ன, ராமன் ஆண்டால் என்ன” என்று இருந்தால், இதே இந்துவிரோத நிலைத் தான் தொடரும்.

2019ல் சில மடாதிபதிகள் பேசியது: சென்னை சேப்பாக்கத்தில் 12-04-2019 அன்று ஆதீனங்கள், துறவிகள், மடாதிபதிகள் என 11 பேர், தங்களது தேர்தல் நிலைப்பாட்டை அறிவித்தனர். அப்போது பேசிய பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள், இந்து மதத்திற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில், மக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்[7]. யார் இந்து மத தொண்டர்கள் என தங்களை அறிவிக்கிறார்களோ, குங்குமம் வைக்கிறார்களோ, அவர்களுக்கே ஆதரவளிக்க வேண்டும் எனவும், அவர் குறிப்பிட்டார்[8]. பின்னர் பேசிய கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வரர், தெய்வபக்தி நிறைந்த தமிழகத்தில் ஆன்மிகத்திற்கு எதிராக தலைவர்கள் பேசுவதற்கு கண்டனம் தெரிவித்தார். இதே நிலை, இப்பொழுது 2021லும் தொடர வேண்டும். இந்து அமைப்புகள் மறுபடியும் இத்தகைய கூட்டங்களைக் கூட்ட வேண்டும், இணதள பிரச்சாரங்களும் நடந்து வருவதால், அத்தகைய முறைகளையும் கையாள வேண்டும். சைவ மடங்கள், உழவாரப் பணி குழுக்கள் முதலியவற்றையும், அதில் ஈடுபடுத்தப் படவேண்டும்.

இந்துக்கள் கவனிக்க வேண்டியது, செய்ய வேண்டியது முதலியன: மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள், பின்னணி. அரசியல், அதிகாரம் போன்ற காரணிகளை உன்னிப்பாக அலசிய பின்னர் கீழ்காணும் அம்சங்கள் கொடுக்கப் படுக்கின்றன:

  1. முன்பு ஆண்டாள், இப்பொழுது முருகன் என்று திட்டம் போட்டு, இந்துக்களின் மங்களைப் புண்படுத்தி வருவது தெரிகிறது.
  2. உண்மையான நாத்திகம் என்றால், கடவுள் இல்லை என்பதும் உண்மையான கொள்கையாக இருக்க வேண்டும். ஆனால், நாத்திகர் என்று பிரகடனப் படுத்திக் கொண்டு, இந்து-அல்லாத கடவுளர்களை விமர்சிப்பது, தூஷிப்பது கிடையாது. எனவே, அவர்களது நாத்திகம், இந்துவிரோத நாத்திகம் ஆகிறது.
  3. அதனால், தான் கிறிஸ்தவ-முஸ்லிம் கோஷ்டிகள் இவர்களது மேடைகளில் பிரசங்கம் செய்கிறார்கள் மற்றும் கிறிஸ்தவ-முஸ்லிம் மேடைகளில், இந்துவிரோத நாத்திகர்-திராவிடத்துவ துவேசிகள் பேசி வருகிறார்கள்.
  4. கஞ்சி குடித்தும், கேக்-வெட்டி நக்கி சாப்பிட்டும், கிறிஸ்தவ-முஸ்லிம்களுக்கு ஜால்றா போட்டு வருகிறார்கள், பாராட்டி பேசுகிறார்கள்.
  5. புகார் கொடுத்தாலும், எப்.ஐ.ஆர் போட்டாலும், சட்டப் படி, இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவையெல்லாம் அப்படியே காலாவதியாகின்றன,
  6. அதனால் தான், செய்த குற்றங்களையே, திரும்பச் செய்து வருகிறார்கள். சட்டப் படி, தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற ரீதியில் அதே தூஷணங்களை செய்து வருகிறார்கள்.
  7. ஆகவே, சட்டப் படி நடவடிக்கை எடுக்க வைத்து, ஒருவனையாவது, தண்டனைக்கு உட்பத்த வைத்து, தண்டிக்கப் பட்டால், மற்றவர்களுக்கு பாடமாக்க இருக்கும், அச்சம் ஏற்படும்.
  8. இல்லையென்றால், பயமில்லாமல் போகும், “காலையில் கைது, மாலையில் விடுதலை,” போன்ற விளையாட்டாகி ஆகிவிடும்.
  9. தேர்தல் நேரத்தில் இவ்வாறு செய்யும் போது, அத்தகைய தேர்தல் சட்டங்கள் பிரிவுகளின் கீழ், உரிய சட்டமீறல்களை குறிப்பிட்டு, ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால், தேர்தலில் நிற்கமுடியாத நிலையையும் உண்டாக்கலாம்.
  10. தமிழகத்தில் இருக்கும் சுமார் 300 இந்து மடங்கள், அமைப்புகள் முதலியவை, இதில் ஒன்று பட்டு செயல்படவேண்டும்.

© வேதபிரகாஷ்

05-01-2021


[1] தினமலர், ஹிந்துக்களை வஞ்சிக்கும்கட்சிகளை ஆட்சிக்கு வரவிடக்கூடாது: சிவனடியார்கள் தீர்மானம், Added : ஜன 04, 2021 01:34

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2683101

[3] தினமலர், நெல்லை டவுணில் திமுகவைக் கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டம், பதிவு செய்த நாள் : 03 ஜனவரி 2021 18:44.

[4] http://www.dinamalarnellai.com/web/districtnews/52654

[5] தினத்தந்தி, இந்து கடவுள்களை அவமதித்தால் நாக்கை துண்டியுங்கள்காமாட்சிபுரி ஆதீனம், பதிவு : ஜூலை 23, 2020, 10:40 PM

[6] https://www.thanthitv.com/News/TamilNadu/2020/07/23224038/1543722/Hindu-Gods-Kamtchi-aadenam.vpf.vpf

[7] நியூஸ்.7.செனல், இந்து மதத்திற்கு விரோதமாக இருக்கும் சக்திகளுக்கு மக்கள் வாக்களிக்க கூடாது” : தமிழக இந்து துறவிகள் குழு, April 13, 2019 1 view Posted By : manoj.b, Authors. https://ns7.tv/ta/q7bcv9

[8]  https://ns7.tv/ta/q7bcv9  [now snapshot view is available accessed on 05-01-2021]

கந்த சஷ்டி கவசம் பிறகு, கந்த புராணம்: கருப்பு, கருப்பு-சிவப்புக் கூட்டத்தாரின் தாக்குதல்கள் – தொடர்ந்து இந்துவிரோத திமுக இவ்வாறு ஈடுபடுவது.

ஜனவரி 5, 2021

கந்த சஷ்டி கவசம் பிறகு, கந்த புராணம்: கருப்பு, கருப்புசிவப்புக் கூட்டத்தாரின் தாக்குதல்கள் –  தொடர்ந்து இந்துவிரோத திமுக இவ்வாறு ஈடுபடுவது.

இந்துவிரோதமும், இந்துவிரோத மறுப்பும்யுக்திகள், வழிமுறைகள்: சமீப காலமாக மதம் சார்ந்த நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவது டிரெண்டாக மாறிவிட்டது, என்கிறது ஊடகம், ஆனால், இந்து என்று முதலில் குறிப்பிடவில்லை. மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இது 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது, ஆனால், இந்துத்துவவாதிகளால், அதைக் கட்டுப் படுத்த முறையாக எதுவும் செய்ய முடியவில்லை. எதிர்-பிரச்சாரமும் சொதப்பலாகத் தான் இருந்து வருகிறது. அதாவது, இந்து விரோத நாத்திகர்கள், திராவிட பகுத்தறிவுகள், பெரியார் பிஞ்சுகள், ஈவேரா குஞ்சுகள் எல்லாம், இந்து கடவுளர்களை தூஷித்துக் கொக்கரித்துக் கொண்டிருக்கும் போது, இந்த இந்துத்துவவாதிகள், ஈவேரா, மணியம்மை, வீரமணிகளைத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.  இந்துத்துவ வாதிகள் இவ்வாறு முறையற்ற ஒப்பீட்டு விமர்சனங்களினால், தோற்றுப் போகின்றனர். முறையாக, முழுமையாக திராவிட சித்தாந்தத்தை, அதனை ஆதரிக்கும் அரசியல் மற்றும் அரசியல் ஆதரவு 70-100 ஆண்டுகள் பயனாளிகள் ஆதரவு முதலியவற்றை அறியாமல் அல்லது மறந்து, இவ்வாறு செய்து வருகின்றனர். அதனால், அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.

சைவர்கள் இந்துக்கள் அல்லர் போன்ற பேச்சுகள்அவற்றை ஆதரிக்கும் கூட்டங்கள்: இந்துவிரோத கும்பல்கள் வேண்டுமென்றே மடாதிபதிகள், சைவ குருமார்கள் என்று சிலரை வைத்துக் கொண்டும், தூஷணங்களை செய்து வருகின்றனர். 2020 டிசம்பரில் அதத்தைய கூத்து அரங்கேறியது. ஆனால், 2020 அக்டோபரில் உஷாரான சில மடாதிபதிகள், தங்கள் பெயர்கள் ஒரு மாநாட்டு அழைப்பிதழில் தோன்றியபோது, மறுத்து, ஒதுங்கினர்[1]. ஆனால், அவர்களது அனுமதி இல்லாமல் அவ்வாறு நடந்ததா என்று தெரியவில்லை[2]. சென்னை பல்கலைக்கழக “உலக சைவ மாநாட்டு கருத்தரங்கத்தில்” பேசிய இரு மடாதிபதிகள், “சைவர்கள் இந்துக்கள்” அல்ல போன்ற சித்தாந்தத்ததாதரித்துப் பேசியதை நினைவு கொள்ள வேண்டும். ஆகவே, இவையெல்லாம், ஏதோ ஒரு திட்டத்துடன், தொடர்ந்து நடப்பதாகத் தெரிகிறது. சைவ சித்தாந்தத் துறை சரவணன் வெளிப்படையாக பேசியது போல, கர்நாடக வீரசைவர்கள் இந்துக்கள் அல்லர் என்று சொல்லிக் கொள்வது போல, தாங்களும் அவ்வாறே, கூறிக் கொள்கிறோம் என்று பேசியதும் இங்குக் கவனிக்க வேண்டும். பிறகு, சைவ மடங்கள், இந்து அறநிலையத் துறையிலிருந்து வெளியேறி விடலாமே? ஒருவேளை அத்தகைய சதித்திட்டத்தைத் தான் தீட்டியுள்ளனர் போலும்.

கந்தபுராணம் பாடலை இழிவு படுத்தியதற்கு, காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் கண்டனம் தெரிவித்தது: ஆன்மிக பெரியோர்கள், ஆதீனங்கள், மடாதிபதிகள் இதுபோன்ற இந்து விரோத பேச்சுகளுக்கு, செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தும், மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தி.மு.க.,வினர் கந்தபுராணத்தை கொச்சைப்படுத்தி, கட்சி விளம்பரம் தேட முயன்றுள்ளனர். இதற்கு காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் கண்டனம் தெரிவித்துள்ளார். கந்தபுராணத்தில், ‛வான்முகில் வழாதுபெய்க, மலிவளம் சுரக்க மன்னர் கோன்முறை அரசு செய்க, குறைவிலாது உயிர்கள் வாழ்க, நான்மறை அறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்,’ என்று மங்கல வாழ்த்து பாடல் இடம்பெற்றுள்ளது[3].

வான்முகில் வழாது பெய்க
        மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
        குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
        நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
        விளங்குக உலக மெல்லாம்.   கந்தபுராணம்
மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம் பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம் நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப் புல்குக உயிர்கட் கெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க.   திருவிளையாடற்புராணம்

இதை மைந்தன் கோன்முறை அரசு என்று கருணாநிதி, ஸ்டாலின் படத்தை காண்பித்தும், மேன்மைகொள் சமூக நீதி ஐம்பெரும் அறங்கள் ஓங்க, நன்னெறி தொழில்கள் மல்க ‘ என்று பாடல்வரிகளை தஙகளது கட்சிவிளம்பரத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளனர்[4]. இது குறித்து காமாட்சிபுரி ஆதினம் கூறியதாவது[5]: “மேற்கூரிய கந்தபுராண பாடல் தேசிய கீதத்தை போன்று உலகம் சிறப்புற இறைவனிடம் வேண்டும் பாடல். பெரும்பான்மையான மக்கள் வழிபடும் பாடலை கொச்சைபடுத்தும் விதமாக அரசியல் கட்சி வெளியிட்டுள்ள பாடல் வரிகள் அமைத்துள்ளன. அரசியல் கட்சிகள் தங்களது கொள்கை கோட்பாடுகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் செயல்களை கைவிட வேண்டும். மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து வருமேயானால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்,” இவ்வாறு அவர் கூறினார்[6].

கந்த சஷ்டி கவசம் முதல் கந்த புராணம் வரை: சமீபத்தில், கந்தசஷ்டியை இழிவுபடுத்தி யூ டியூப்பில் வெளியான கருத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. அது ஓய்வதற்குள் தி.மு.க.,வினர் கந்தபுராணத்தை டப்பிங் செய்து வீடியோ பாடல் வெளியிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது. “இந்து என்ற சொல்லைக் கேட்டாலே எரிகிறது,” என்று சிலரைப் பேச வைத்து சிரித்து ரசித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் தற்போது கோவில்களில் பிரச்சாரக் கூட்டம் நடத்துவது, இந்து சமய நூல்களை புகழ் மாலை புனையப் பயன்படுத்துவது என்று கிளம்பி இருக்கிறார்[7]. ஆன்மீகப் பெரியோர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த போதும் இந்துக்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் விதமாக நடந்து கொள்வது தொடர்ந்து வருகிறது. இந்து என்று ஒரு மதமே கிடையாது என்று தி.மு.க கிறிஸ்துமஸ் விழாவில் கலையரசி நடராஜன் என்பவர் பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் தற்போது கந்த புராணப் பாடலைக் கொச்சைப்படுத்தும் விதமாக தி.மு.க பிரச்சாரப் பாடலாக பயன்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது[8].  ஆக, “கந்த சஷ்டி கவசம் முதல் கந்த புராணம் வரை,” போன்ற கேவலமான நாடகங்களை அரங்கேற்றி மக்களை ஏமாற்றும் வேலைகள் தேவையில்லை.

சைவசமய சின்னங்கள், இலக்கிய வரிகள் முதலியவற்றை உபயோகப் படுத்துவது: இந்த வீடியோவிலும், கருணாநிதி, ஸ்டாலினை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை, ராஜராஜன், ராஜேந்திரனுடன் ஒப்பிடும் வகையில், கங்கைகொண்ட சோழபுரம் சிற்பத்தைக் காட்டி, தாங்கள் இருக்கும் புகைப்படத்தை, “மைந்தன் கோன்முறை அரசு செய்க, என்று அற்பத் தனமாகக் காட்டுகின்றனர். அவ்வாறு ஒப்பிட்டுக் கொள்ள, கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் எந்த அருகதையும் இல்லை. ஏனெனில், பார்ப்பன அடிவருடிகள் என்று அந்த சோழர்களை இழித்துப் பேசியுள்ளதை கவனிக்க வேண்டும், பிறகு அத்தகைய, ஒப்பீடுப் பார்ப்பதில் என்ன வறட்டு சந்தோசம்? மேலும், இந்து விரோதத்துடன் நெற்றியில் குங்குமத்தை வைத்துக் கொண்டதை இகழ்ந்தவர் தந்தை கருணாநிதி. நெற்றியில் வைத்த குங்குமம், விபூதி, சந்தனம் முதலியவற்றை அழித்தவர் தனயன் ஸ்டாலின். இப்பொழுது வேண்டுமென்றே, கோவில்களுக்கு அருகில், கோவில் வளகங்களில், மைதானங்களில் கூட்டம் போட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இத்தகைய கேடுகெட்ட தூவேசிகளை உண்மையான இந்து யாரும் ஆதரிக்க மாட்டார்கள்.

© வேதபிரகாஷ்

05-01-2021


[1] தினசரி, இந்து ஆன்மீக விரோதிகள் நடத்தும் கூட்டத்தில் தாங்கள் பேசப் போவதில்லை: மறுத்துள்ள ஆதீனங்கள், செங்கோட்டை அஶ்ரீராம், 22-10-2020 4.05 மணி.

[2] https://dhinasari.com/latest-news/178399-perur-atheenam-denied-to-participate-tamilnadu-vizha-webinar.html

[3] வேல்ஸ்.மீடியா, கந்த புராணத்தை மாற்றி தேர்தல் பிரசார பாடல்! திமுகவுக்கு எதிராக ஆத்திகர்கள் கொதிப்பு, velsmedia team, ஜனவரி 4, 2021 3:06 pm.

[4] https://velsmedia.com/dmk-election-campaign-song-by-changing-kandapuranam-words/

[5] தினமலர், கந்த புராணத்தை வைத்து விளம்பரம்: தி.மு..,வுக்கு காமாட்சிபுரி ஆதினம் கண்டனம், Updated : ஜன 03, 2021 15:59 | Added : ஜன 03, 2021 15:58. https://www.dinamalar.com/news_detail.asp?id=2682846

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2682846&Print=1

[7] கதிர்.நியூஸ், கந்தபுராண பாடலில்சைவ நீதியைசமூகநீதிஎன்று மாற்றிய தி.மு.! ஆதீனம் கண்டனம்!, By Yendhizhai Krishnan | Mon, 4 Jan 2021

[8] https://kathir.news/tamil-nadu/dmk-condemns-aadeenam-for-changing-vegetarian-justice-to-so/cid1961034.htm

பகவத் கீதை, கிருஷ்ண தூஷணம், திரிபு விளக்கம், இந்துவிரோதக் கூட்டங்களின் தொடரும் சட்டமீறல்கள் – நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்! [2]

ஜூலை 29, 2020

பகவத் கீதை, கிருஷ்ண தூஷணம், திரிபு விளக்கம், இந்துவிரோதக் கூட்டங்களின் தொடரும் சட்டமீறல்கள்நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்! [2]

DK arheist discourse on Bhagawat Gita.his book

  1. இந்நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை (Secularism) கொள்கைக்கு முற்றிலும் முரணானது இது. இந்து மத நூலை இப்படி விருப்பப் பாடம் என்ற போர்வையோடு பல்கலைக் கழகத்தில் வைத்தால், மற்ற மதவாதிகளான இசுலாமியரின் ‘‘குரான்”, கிறித்துவர்களின் ‘‘பைபிள்”, சீக்கியர்களின் ‘‘கிரந்தம்”, பவுத்தர்களின் ‘‘தம்மபதம்”, ஜொராஷ்டர்களின் ‘‘அவெஸ்தா”, பகுத்தறிவாளர்களின் ‘‘கீதையின் மறுபக்கம்” நூல் – இவைகளை அதேபோல் விருப்பப் பாடமாக வைக்க வேண்டும் என்ற குரல் எழுந்தால், அதை ஏற்று துணைவேந்தரோ – அவரது ‘அகாடமிக் கவுன்சில்’ என்ற அமைப்பு தலையாட்டுமா?
  1. கீதை வன்முறையைத் தூண்டும் ஒரு கொலைகார நூல்!: முன்னாள் நீதிபதி எழுதிய ‘மகாத்மாவின் கொலை’ நூல். ‘தேசப்பிதா’ என்று அழைக்கப்படும் அண்ணல் காந்தியாரை சுட்டுக்கொன்ற – தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.சிடம் பயிற்சி பெற்ற நாதுராம் விநாயக் கோட்சே, நீதி மன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்திலேயே, தான் இந்த கொலை முடிவுக்கு வருவதற்குப் பெரிதும் துணை நின்று தூண்டிய நூல் ‘பகவத் கீதை’ என்று கூறியுள்ள நிலையில், ‘The Murder of the Mahatma’ – ‘மகாத்மாவின் கொலை’ என்ற தலைப்பில் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.டி.கோஸ்லா 1963 இல் எழுதிய நூலில், 1977 வரை மூன்று பதிப்புகள் வெளியாகி – விற்பனையாகி – இக்கருத்தை அவர் பதிவு செய்துள்ளார்! எவரே மறுப்பர்? பகவத் கீதை வன்முறையைத் தூண்டும் நூல்! கீதை கொலை நூல்தான் என்று சுவாமி சித்பவானந்தா எழுதிய விளக்கவு ரையிலேயே குறிப்பிட்டுள்ளார்! ‘‘இந்து சாஸ்திரங்களில் சொல்லப் பட்டபடி நடந்துகொள்வதுதான் நல்ல மனிதன் ஒருவருடைய கடமை – தர்மம் ஆகும்” என்பதே கோட்சே வாக்குமூலம். (அவர் கைப்பட எழுதியது ‘May it Please Your Honour’ என்ற தலைப்பில் ஒரு நூலாகவும் (ஆங்கிலத்தில்) அது வெளி வந்துள்ளது). ‘‘…தாயகத்தைக் காப்பாற்ற உயிரைக் கொடுத்தும் போராடவேண்டும் என்று ஹிந்துக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பகவத் கீதையிலிருந்து சில சுலோ கங்களைச் சொல்லி உணர்ச்சிகரமாகத் தனது வாக்குமூல உரையை முடித்தார்….” – இப்படி நீதிபதி ஜி.டி.கோஸ்லா அந்த நூலில் குறிப்பிடுகிறார்!

DK Veeramani discourse on Bhagawat Gita-28-07-2020-1

‘‘கடமையைச் செய்; பலனை எதிர் பார்க்காதே: ‘‘கடமையைச் செய்; பலனை எதிர் பார்க்காதே” என்பதில் கடமை என்பது ஜாதி – வருணத்தைக் காப்பாற்றும் கடமையைச் செய்யவேண்டும் என்று வன்முறையைத் தூண்டும் ஒரு நூல் பகவத் கீதை ஆகும். இப்படிப்பட்ட நூலில் இருப்பதாகத் தவறான மேற்கோள்களைக் காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர். குறளை விருப்பப் பாடமாக வைக்கட்டும்! திருக்குறள் போன்ற உலகப் பொது ஒழுக்க நூல் – ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாட்டில்’ அவரது குறளை விருப்பப் பாடமாக வைக்க வேண்டாமா? அண்ணா பல்கலைக் கழகத்தில் அண் ணாவின் அரிய சிந்தனைக் கருவூலங்களை வைக்கவேண்டாமா? அவர் பெயரால் அமைந்த பல்கலைக் கழகம் அல்லவா அது? தமிழ்நாடு முழுவதும் அறப்போர் கிளர்ச்சி உறுதி! இன்னும் ஒரு மாதத்திற்குள் இதைப் பின்வாங்கி மாற்றாவிடில், தமிழ்நாடு முழுவதும் அறப்போர்க் கிளர்ச்சி தொடர் போராட்டமாக, அண்ணா பல்கலைக் கழகம் முன் தொடங்கி, தொடருவது உறுதி! உறுதி!! பெரியார் மண்ணில் இப்படி உணர்ச் சிபூர்வ நெருப்புடன் நெருங்கும் முயற்சி யில் இப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஈடுபடக் கூடாது. ஒன்றுபட்டு கண்டனக் குரல் எழட்டும்! தமிழக அரசும், முதலமைச்சரும் – மதச்சார்பின்மைக்கு எதிரான இதனை அகற்றிட முழு முயற்சியில் உடனடியாக ஈடுபடவேண்டும்! ஒத்த கருத்துள்ள அனைவரும், அனைத்துக் கட்சித் தலைவர்களும், கல்வி யாளர்களும் ஒன்றுபட்டு கண்டனக்குரல் எழுப்பிட முன்வரவேண்டும்.

DK Veeramani discourse on Bhagawat Gita-28-07-2020-2

2017லும் இதே கருத்தை வெளியிட்டது[1]: சதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம் என்று கடவுள் அவதாரமான கண்ணன் கூறுகிறான் என்று எழுதி, ஜாதியைப் பாதுகாக்கிறது. கொலையை நியாயப்படுத்தும் நூல் இந்நூல் – காந்தியாரைக் கொன்ற கோட்சே, நான் கீதையைப் படித்தபிறகே இந்த முடிவுக்கு வந்தேன் என்று நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் தந்துள்ளான். இந்த வன்முறையைத் தூண்டும் நூலை- மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் புகுத்தினால் அது நஞ்சைப் புகுத்துவது அல்லவா? இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும். பகவத் கீதையை தேசிய நூலாக்க அரசு பிரகடனப்படுத்த வேண்டும் என்று முன்பு குரல் எழுப்பியவுடன் எதிர்ப்பு – கண்டனம் புயல்போல் கிளம்பியதால் அது பின்வாங்கப்பட்டது.மீண்டும் ஆழம் பார்க்கவே இம்முயற்சி; எல்லோரும் ஒன்று திரண்டு இம்முயற்சியை முறியடிக்க வேண்டும்” என்று வீரமணி தெரிவித்துள்ளார்[2].

DK Veeramani discourse on Bhagawat Gita-28-07-2020-3

கிருஷ்ணன் என்ன உனக்கு மட்டும்தானா தெரியும்? உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்!: வீரமணியை கடந்த ஆண்டுகளில் அதிகம் பாதித்துள்ளது ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா தான்! 2013ல் இப்படி பிதற்றியுள்ளார்[3], ஒரு கூட்டத்தில் பேசியது இப்படியுள்ளது, “உங்களுக்கு என்ன தெரியும்? உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்! ஆக, எங்கள் கிருஷ்ணனைப்பற்றி பேசிவிட்டார்களா என்று நீங்கள் கேட்கிறீர்கள். கிருஷ்ணன் என்ன உனக்கு மட்டும்தானா தெரியும்? உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்! ஏனென்றால், நீ கிருஷ்ணன் என்று சொல்கின்ற கடவுளைப்பற்றி, உன் மூக்கை சொறிந்து, திசை திருப்பிவிட்டிருக்கிறார்கள் யாரோ!” பாவம், அந்த அளவுக்கு குற்றம் கண்டுபிடிக்க கீதை பற்றி ஆராய்ச்சியே செய்துள்ளார் போலும். திமிருடன், இவ்வாறு ஒருமையில் பேசியிருப்பதை கவனிக்க வேண்டும். மனத்தில் எந்த அளவுக்கு வன்மம் இருந்தால் ஒழிய, இவ்வாறு பேச்சு வந்திருக்காது. பிறகு, இத்தகைய ஆட்களிடமிருந்து எதை எதிர்பார்க்க முடியும்?

DK Veeramani discourse on Bhagawat Gita-28-07-2020-4
கோர்ட்டில் கிருஷ்ணனையும் கூப்பிட முடியும்; கிருஷ்ணதாசர்களையும் கூப்பிட முடியும்: வீரமணி பொறிந்து தள்ளினார், “இன்னும் சில பேர் வழக்கு போடுவோம் என்று சொல் கிறார்கள். போடுங்கள்! உங்கள் வழக்கைத்தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்போதுதான், கோர்ட்டில் கிருஷ்ணனையும் கூப்பிட முடியும்; கிருஷ்ணதாசர்களையும் கூப்பிட முடியும். உன்னாலே வர முடியுமானால், வழக்கு போடுங்கள்!ஆதாரபூர்வமாக தாக்கல் செய்கிறோம்! கோர்ட்டில், நாங்கள் ஆதாரபூர்வமாக, கிருஷ்ணன் செய்த லீலைகளைப் படமாகப் போட்டு, குளத்தில் பெண்கள் எல்லாம் பாதி நிர்வாணமாக நிற்கிறார்கள்; சேலைகளைத் தூக்கிக்கொண்டு மரத்தின்மீது கிருஷ்ணன் இருக்கிறார் பாருங்கள் அந்தப் படத்தினை, நீதிபதி அவர்களே இதனை ஆதாரபூர்வமாக தாக்கல் செய்கிறோம் என்று சொன்னால், என்ன ஆவார் கிருஷ்ணன், அதனை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்”. எப்படி முகலாய போலித்தன சரித்திரவியல், கட்டுக்கதை உருவாக்கம், சித்திரங்கள் வரந்த விதம், இவர்களைப் போன்ற நாத்திகர்களால் உபயோகப்படுத்தப் படுகிறது என்பதனையும் கவனிக்க வேண்டும்.

DK Veeramani discourse on Bhagawat Gita-28-07-2020-5
ஒரு லட்சம் பிரதிக்குமேல் விற்பனையாகிய கீதையின் மறுபக்கம்: தன்னுடைய புத்தகத்தைப் பற்றி பீழ்த்திக் கொள்கிறார், “கீதையின் மறுபக்கம்! இதோ என் கைகளில் இருப்பது கீதையின் மறுபக்கம் நூல்! கிருஷ்ணன் உபதேசம் செய்தாராம்யாருக்கு, அர்ஜுனனுக்கு! அதுதான் கீதை! எதிர் எதிரே படைகள் இருக்கு. அந்தப் படையில் அர்ஜுனன் சண்டை போட போகிறாராம். அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக கிருஷ்ணன் போறாராம். அப்போது காதோடு காதாக கீதா உபதேசம் செய்றாராம். எங்கே? எதிரிப் படைகள் நிற்கின்ற இடத்தில் – 700 சுலோகம் முடியும் வரை எதிரிப் படைகள் அமைதியாக நிற்கின்றதாம். கீதையின் மறுபக்கம் நூல் இருக்கிறதே, ஒரு லட்சம் பிரதிக்குமேல் விற்பனையாகி இருக்கிறது. அதுமட்டுமல்ல, ஆங்கிலத்திலே, இந்தியிலே, எல்லா மொழிகளிலும் அச்சாகி இருக்கிறது. இதற்கு ஒரு வரி மறுப்பு கிடையாது”.  முதலில் வாங்கிப் படித்தார்களா, இல்லை, கண்டுகொள்ளவில்லையா என்பது தெரியவில்லை. ஏனெனில், ஏற்கெனவே தெரிந்த பொய்களை, திரட்டி புத்தகம் போட்டால், யாரும் படிக்க மாட்டார்கள், அதன், தரம் தெரிந்தவர், ஒதுக்கத்தான் செய்வார்கள். பிறகு, அதனைப் பற்றி தம்படாம் அடித்துக் கொள்வதில் என்ன பலனும் இல்லை.

© வேதபிரகாஷ்

29-07-2020

DK Veeramani discourse on Bhagawat Gita-28-07-2020-6

[1] தினபூமி, பகவத் கீதையை பள்ளிகளில் கட்டாயமாக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும்: வீரமணி, செவ்வாய்க்கிழமை, 23 மே 2017.

[2] http://www.thinaboomi.com/2017/05/23/72353.html?page=5

[3] வீரமணி, உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்!, விடுதலை, 03-10-2013.

DK Veeramani discourse on Bhagawat Gita-28-07-2020-8

தமிழர்-தமிழரல்லாதோர் பிரச்சினை உருவாக்கப் படக் கூடாது – சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது, கும்பல் கொலைக்கு நியாயம் கற்பிக்கக் கூடாது (1)

மே 17, 2018

தமிழர்தமிழரல்லாதோர் பிரச்சினை உருவாக்கப் படக் கூடாதுசட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது, கும்பல் கொலைக்கு நியாயம் கற்பிக்கக் கூடாது (1)

Dravidanadu, Annaurai - flipflop 1958

திராவிட சித்தாந்திகள் தமிழரை, தமிழகத்தை பிரித்து வைத்து, துவேசத்தை வளர்த்து வருவது: தமிழகத்தில் கடந்த நூறாண்டு காலத்தில், –

  1. தமிழ்-தமிழரல்லாதவர்,
  2. திராவிடன் – ஆரியன்,
  3. தென்னகத்தவன் – வடக்கத்தியன்,
  4. வடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது

போன்ற பிரச்சாரங்களால், மற்ற மொழி பேசும், மற்ற மாநிலத்தவர் மீது, மனங்களில் துவேசத்தை வளர்த்து கொண்டிருக்கிறார்கள். “வந்தேறி” தத்துவம் எப்பொழுதுமே உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துக் கொண்டு, மற்றவர்களைத் தாக்கப் பயம் படுத்தப் பட்டு வருகிறது. பிராமணர், மார்வாடி, குஜராத்தி, வடவிந்தியன் போன்ற பிரிவினை துவேசம் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த பிரச்சினை என்றாலும், “தமிழன்” என்று தான் அடைமொழி போட்டு செய்தி போடுவது, ஊடகங்களுக்கும் வாடிக்கையாக இருக்கிறது. ஶ்ரீலங்கா மதப்பிரச்சினை என்றாலும், “தமிழர்-முஸ்லிம்” என்று தான் செய்திகள் வெளியிட்டு, மதப்பிரச்சினையை மறைக்கப் பார்த்தனர். “காவிரி பிரச்சினை” என்றாலும், திராவிட அரசியல்வாதிகளின்  கையாலாகாத விசயத்தை மறைத்து, கர்நாடகாவை, கன்னட மொழி பேசுபவர்கள் மீது வெறுப்பை-காழ்ப்பை வளர்த்து வருகின்றனர். அதற்கு சத்தியராஜ், விவேக் போன்ற நடிகர்களும் உடந்தையாக இருந்து வருகின்றனர். ஒரு திரைப்படத்தில், “இது பெங்களூரு கத்தரிக்காய், காவிரி நீரால் வளர்ந்து பெரிதாக இருக்கிறது, அது தமிழக கத்திரிக்காய், சிறிதாக இருக்கிறது, காவிரி நீர் கிடைத்தால், அதுவும் பெரிதாக வளரும்,” என்று சொல்வது, பிரிவினையின் வக்கிரகத்தைத் தான் வெளிக்காட்டுகிறது.

Anti-Modi attitude, Dravida

மோடி எதிர்ப்பு, வடவிந்தியர் எதிர்ப்பும்: சமீப மாதங்களில் “ஜல்லிக் கட்டு” பாணியில், மோடிக்கு எதிர்ப்பு, ராணுவ மந்திரி மீது கல்லெறிதல் என்றெல்லாம் அரங்கேறியுள்ளன. லலித் மோடி, நீரவ் மோடி போன்றோரை, பிரதமர் மோடியுடன் இணைத்து நக்கல் அடிப்பதும், திராவிட இனவெறியில் உருவானது, ஊக்குவிப்பது. இதெல்லாம் ஏதோ, வீர-சூர-பராக்கிரம வேலைகளாக சித்தரிக்கப் பட்டு, சமூக ஊடகங்களில் செய்திகளை, வதந்திகளாகப் பரப்பி வருகின்றனர். அதற்கு பிரிவினைவாத திராவிட சித்தாந்த அரசியல்வாதிகள் தான் ஊக்குவிப்பாளர்களாக இருந்து வருகின்றனர். நோயாளியான, கருணாநிதிக்கே, கருப்புச் சட்டை போட்டு, மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல, ஸ்டாலின் போன்றவர்களே செய்திருக்கிறார்கள். இதனால், சாதாரண “தமிழ்” பேசும், தமிழனை உசுப்பி விட்டால் போலகிறது. நாமும், இதுபோல செய்தால், புகழடையலாம், நமது போட்டோ சமூக வலைதளங்களில் பரவும், பிரபலமாகி விடலாம் போன்ற பொய்யான உத்வேக மனப்பாங்கை அவன் கொள்கிறான். செயலிலும் இறங்கி விடுகிறான். “கும்பல்” என்ருவ்ரும் போது, “தரும அடி” பாணியில், எல்லோரும் அடிக்கிறார்கள். கொலையில் முடியும் போது, குற்றமாகி விடுகிறது. மோடி எதிர்ப்பை, மோடியே கண்டு கொள்ளாமல் சென்று விடலாம், ஆனால், கொலையை மறிக்க முடியாது.

Lynching Tamilnadu style- children trafiicking

குழந்தை கடத்தல், விழிப்பான கொலையாளிகள், கொலைகள்நரபலிகள், கும்பல் கொலைகள்: மாட்டிறைச்சி விவகாரத்தில், திருவண்ணாமலையில், மாட்டிறைச்சி உண்ணும் விழா நடைப் பெற்றதை நினைவு படுத்திக் கொள்ளவேண்டும். “மாட்டிறைச்சி கும்பல் கொலை” விவகாரத்தில், செல்யூலரிஸ ஊடகங்கள் அதிகமாகவே ஊளையிட்டன. இப்பொழுதைய “வடவிந்தியர்” படுகொலைகளும் திரித்துப் பேசப்படுகின்றன. ஆனால், “தமிழனை, தமிழன் கொன்று விட்டான்,” எனும்போது, எதிர்க்க்கப் படுகிறது. தி.இந்துவே, கருத்தை தைரியமாக வெளியிடுகிறது. ஆக, இதில் கூட பாரபட்சம் பார்ப்பது, படுகேவலமாக இருக்கிறது. வருடத்திற்கு 2000 குழந்தைகள் காணாமல் போவதும், ஆயிரக் கணக்கான குழந்தைகள் கிருத்துவ காப்பகங்களில், ஆஸ்ரமங்களில் கற்பழிப்பதும், செக்யூலரிஸ ஊடகங்களுக்கு வேறுவிதமாக தெரிகிறது போலும். திராவிட சித்தாந்திகளுக்கும் அது குற்றமாகத் தெரியவில்லை. இனமான தலைவர்களுக்கு, மானம், சூடு, சொரணை எல்லாம் வரவில்லை போலும். இத்தகைய, குரூர வன்மத்துடன் இருப்பதும், சமுதாயத்திற்கு தீங்குதான் விளைவிக்கும், குற்றங்கள் பெருகும். 1960லிருந்து, அத்தகைய நிலை தான் வளர்ந்து வருகிறது. குற்றங்களை, குற்ற்றங்களாக பாவிக்காமல், அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள், என்று பொதுப்படையான கருத்தை உருவாக்குவதும் குற்றமாகிறது[1]. ஆங்கிலேயர் எப்படி குறிப்பிட்ட குழுக்களை, “குற்றம் சேய்யும் கும்பல்” எண்ரு சட்டப்ப்டி அறிவித்தனரோ, அதுபோல இக்காலத்தில் அறிவிக்க முடியாது, என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்[2].

Criticizing outsiers - Tamilnadu style- 1

வதந்திகள் வடசென்னைப் பகுதிகளில் பரவுது ஏன்?: ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில், இரண்டு மாதங்களுக்கு முன், தனியாக இருக்கும் பெண்களை, மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்வதாக ஒரு செய்தி பரவியது[3]. இந்த வதந்தியால், அறிமுகம் இல்லாத புதிய நபர்களை, மக்கள் அடித்து நொறுக்கிய சம்பவங்களும் நடந்தன. அந்த பரபரப்பு சற்றே ஓய்ந்த நிலையில், தற்போது, குழந்தை கடத்தல் கும்பல் நடமாடுவதாக புரளி கிளம்பியுள்ளது. இந்த புரளி, சமூக வலைதளங்கள் மூலம், வேகமாக பரவி வருகிறது.இதனால், அப்பாவி நபர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர், மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை உள்ளது.இதை தவிர்க்கும் விதமாக, காவல் துறையினர், ஒலிபெருக்கி வாயிலாக, கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சந்தேகப்படும்படியான புதிய நபர்களை கண்டால், அவர்களை துன்புறுத்தாமல், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது. வட மாநில வாலிபர்கள் சிலரை, கிராம பொதுமக்கள் தாக்கிய பின், போலீசாரிடம் ஒப்படைக்கின்றனர். விசாரணைக்கு பின், அவர்கள் அப்பாவி நபர்கள் என்பது தெரிய வருகிறது. வட மாநிலத்தவர் மீது நடத்தும் தாக்குதலை தடுக்கும் வகையில், மாவட்ட எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி, அனைத்து காவல் நிலையத்திற்குட்பட்ட கிராமம் மற்றும் நகரங்களில், விழிப்புணர்வு கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதில், வடமாநிலத்தினர் மற்றும் அப்பாவிகள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளார்[4].

Criticizing outsiers - Tamilnadu style- 3

திருத்தணி, ஊத்துக்கோட்டை பகுதிகளில் மர்ம நபர்கள் திரிவதாக வதந்தி[5]: திருத்தணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, 98 கிராமங்களிலும், டி.எஸ்.பி., சேகர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வினாயகம் தலைமையிலான போலீசார், கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். நான்கு நாட்களாக, ஊத்துக்கோட்டை, அண்ணாநகர், எட்டிக்குளம், பாலவாக்கம், செஞ்சியகரம், ஆரணி, பெரியபாளையம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில், மர்ம நபர்கள் திரிவதாக வதந்தி பரவுகிறது. இதனால், அப்பகுதி இளைஞர்கள், இரவு நேரத்தில் உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன், சாலையில் திரிகின்றனர். அசம்பாவிதம் எதும் நிகழக்கூடாது என, ஊத்துக்கோட்டை போலீசார், ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்கின்றனர். மேலும், மக்கள் கூடும் இடங்களில், வட மாநிலத்தவர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்த கூடாது என, ‘நோட்டீஸ்’ ஒட்டியுள்ளனர். ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., சந்திரதாசன் கூறியதாவது: “குழந்தைகள் கடத்தல் என்ற செய்தி, வெறும் வதந்தி. கிராமங்களில், வெளியாட்கள் நடமாடினால் உடனடியாக அந்தந்த பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். அவர்களை தாக்குவது குற்றச் செயலாகும். இது போன்ற நடவடிக்கையில் யாரும் ஈடுபட வேண்டாம். மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறினார்[6].

 

© வேதபிரகாஷ்

17-05-2018

Holiday for Pongal and anti-Modi slogan

[1] மாலைமலர், கடலூரில் மீனவர்கள் மோதலில் ஒருவர் வெட்டிக்கொலை – 20 பேர் மீது வழக்குப்பதிவு, பதிவு: மே 16, 2018 11:19

[2] https://www.maalaimalar.com/News/District/2018/05/16111909/1163414/Cuddalore-fishermen-murder-case.vpf

[3] தினமலர், வட மாநில மக்களை அடிக்காதேஉதைக்காதே! போலீசார் விழிப்புணர்வு பிரசாரம், Added : மே 11, 2018 06:04.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=2018668

[5] தினமலர், வட மாநில மக்களை அடிக்காதேஉதைக்காதே! போலீசார் விழிப்புணர்வு பிரசாரம், Added : மே 11, 2018 06:04.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=2018668

ஆரிய-திராவிட போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது – வீரமணியின் புலம்பல் – அண்ணா-எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதா போன்ற தலைவர் வருவது கடினமே – ஜெயலலிதாவுக்கு முன்பும்-பின்னும் (5)

ஜனவரி 15, 2017

ஆரியதிராவிட போராட்டம் நடந்து கொண்டிருக்கிறதுவீரமணியின் புலம்பல்அண்ணாஎம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதா போன்ற தலைவர் வருவது கடினமேஜெயலலிதாவுக்கு முன்பும்பின்னும் (5)

aryan-myth-anna-tirade-against-brahmins

சிண்டு முடிந்திடுவோய் போற்றிஎன்ற  ‘துவஜா ரோகணம்செய்யத் தொடங்கிவிட்டனர்[1]: திராவிட இயக்கங்களுக்கு தாங்கள்தான் மாற்று என்ற பாஜகவினரின் ‘கரிசனம்’ அதிமுகவின் மீது கரைபுரண்டு ஓடத் தொடங்கிவிட்டது. எனவே அதிமுகவினருக்கு எச்சரிக்கை தேவை. இது நாடகமே என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார். அறிஞர் அண்ணா கூறிய, ”சிண்டு முடிந்திடுவோய் போற்றி” என்ற அனுபவ மொழிப்படி, அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பொறுப்பாளர்களிடையே பிளவை வலிந்து உண்டாக்கி, இடையே புகுந்து, நூல் பிளந்து பார்க்கும் முயற்சியில் ஈடுபடத் துவங்கிவிட்டனர். பல்வேறு கலகங்களை உருவாக்கிட, கட்டுக் கோப்பான அக்கட்சியினை ஜாதி அடிப்படையில் பிரித்தாள தங்களது பேனாக்கள்மூலம் ‘துவஜா ரோகணம்’ செய்யத் தொடங்கிவிட்டனர். எனவே, அதிமுகவின் சகோதரர்களே, சிண்டு முடிந்திடுவோரை, உங்கள்மீது திடீர் அனுதாபம், அளவற்ற ஆதரவு தருவது போல் நாடகம் போடுவோரை விழிப்போடு புரிந்துகொள்ளுங்கள். கட்சியின் கட்டுக்கோப்பை – கட்டுப்பாட்டை மறவாதீர். சிறுசிறு ஓட்டைகளைத் தேடி அலைந்து அவற்றைப் பெரிதாக்குகின்றனர். எனவே எச்சரிக்கை தேவை. இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்[2].

tears-and-ocean-droplets-jaya-comparison-21-08-2000கண்ணீர் துளிகளும், கடல்நீர் துளிகளும்: “கடல்நீர் துளிகள் கடலாகாது, கடலை விட்டுச் சென்ற அவை கடல் என்று தம்மை அறிவித்துக் கொள்ள முடியாது”, என்று நெடுஞ்செழியன் அதிமுகவை விட்டுச் சென்றவர்களை குறிப்பிட்டார். ஆகஸ்ட்.21, 2000 அன்று வி.ஆர்.நெடுஞ்செழியனின் புத்தகங்களை வெளியிடும் போது, ஜெயலலிதா அதனைச் சுட்டிக் காட்டி பேசினார். அண்ணா உயிருடன் இருக்கும் போது, அவரை சாடியவர்கள், மறைமுகமாக எதிர்த்தவர்கள் இன்று அண்ணாவைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள், என்று மறைமுகமாக விமர்சித்தார்[3]. கே. வீரமணி பிரதிகளைப் பெற்றுக் கொண்டார். 1948ல் பெரியார், திமுகவை “கண்ணீர் துளிகள்” என்று குறிப்பிட்டது தெரிந்ததே. 50 ஆண்டுகள் கழித்து, ஜெயலலிதா, அதிமுகவை விட்டு விலகியவர்களை “கடற்நீர் துளிகள்” என்று குறிப்பிட்டார்[4].

veeramani-with-jayalalitaசமூக நீதி வீராங்கனை: 1998ல் அதிமுக பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொண்டபோது, வீரமணி விமர்சித்தார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து செப்டம்பர் 2001ல் தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் தனதுதனித்தன்மையை ஜெயலலிதா நிலைநாட்டியுள்ளார் என்று திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி கூறினார்[5]. இதுதொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுப்ரீம் கோர்ட்தீர்ப்பை ஏற்று தனது பதவியை ஜெயலலிதா ராஜினாமா செய்துள்ளார். இதைபாராட்டுகிறேன். தனக்கு பதவி ஆசை இல்லை என்பதை அவர் நிரூபித்துள்ளார். மேலும், தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை, பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்கியுள்ளதன் மூலம் சமூக நீதியை காப்பதில் தான் எவ்வளவு உறுதியாக இருக்கிறேன் என்பதை அவர் நிரூபித்துள்ளார். இதை நான் வரவேற்கிறேன். புதிய முதல்வர் பன்னீர் செல்வம் பீடு நடை போட்டு செயல்பட வாழ்த்துகிறேன்”, என்றுகூறியுள்ளார் அவர்[6].

கரு-இந்திராவை வசை பாடியது- சர்வாதிகாரி, காந்தாரி.....பெண்களை அடக்கும், திட்டும், தூசிக்கும் திராவிடத் தலைவர்கள்: பெரியார் முதல் கருணாநிதி வரை என்னத்தான் “பகுத்தறிவு” என்றெல்லாம் பேசினால் கூட, அவர்களின் பலதார திருமணங்கள், தொடர்புகள், மக்களை அவர்கள் பெண்களை அடக்கியாள்பவர்களாகத் தான் சித்தரித்தது. பெரியார் தன்னைவிட இளைவரான மணியம்மையை திருமணம் செய்து கொண்டதை அண்ணா போன்ற தலைவர்களே வெளிப்படையாக எதிர்த்தனர், மற்றும் “கண்ணீர் துளிகளாக” திமுக உதயமாக காரணமாகியது. “நான் முற்றும் துறந்த முனிவனும் இல்லை, அவள் படி தாண்டா பத்தினியும் இல்லை”, என்றெல்லாம் பேசினாலும் கூட, அண்ணாவுக்கு குழந்தையில்லை என்பதனால் மக்களுக்கு இரக்கம் ஏற்பட்டது. இதே நிலைதான் எம்ஜியாருக்கும். பலதாரம் புரிந்த எம்ஜியார், இதனால் கண்டுகொள்ளவில்லை எனலாம். ஆனால், வீரமணியை, மணியம்மையை சொத்துக்காக அடக்கி வைக்கும் நபராகத்தான் கருதினர். கருணாநிதியின் முத்தார-மூன்று மனைவி-துணைவி பற்றி விவரிக்க வேண்டிய அவசியல் இல்லை. இந்நிலையில் எல்லோருக்கும் தெரிந்த, அறிந்த, புரிந்த ஜெயலலிதா உயர்ந்தது, ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.

கரு-இந்திராவை வசை பாடியது- மாத விடாய்ஜெயலலிதாவும், கரண் தாபரும்: ஆங்கிலம் மற்றும் இந்து மொழிகள் தெரிந்ததால், ஜெயலலிதாவுக்கு தேசியத் தலைவர்களுடன் நேரில் சந்தித்துப் பேசும் வசதியும் இருந்தது. கரண் டாபருடன் நடந்த பேட்டி திகைக்க வைத்தது, ஜெயலலிதாவின் பேச்சுத் திறமை, கேள்விகளை எதிர்கொள்ளும் திறமை, தாபரையே அதிர வைத்த ஆளுமை முதலியன படித்தவர்களையே சிந்திக்க வைத்தது. எதிரிகள் கூட பாராட்ட ஆரம்பித்தனர். பலமொழிகளில் நடித்த அனுபவத்தை ஜெயலலிதா அரசியலில் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார். அந்நிலையில், ஜெயலலிதா உட்கார்ந்த இடத்தில் சசிகலா உட்காருவது என்பது எப்ப்டி பட்டது என்பது சொல்ல வேண்டிய் அவசியம் இல்லை. இருவரும் பெண்கள் தான், இருப்பினும் வித்தியாசங்கள் பலப்பல உள்ளன.

dravidian-leaders-jaya-with-evr-and-karunanidhiஜெயலலிதாவை சதாய்த்த திராவிடத் தலைவர்கள்: திராவிடத் தலைவர்களின் ஆபாச வசைகளினால் தூற்றப்பட்ட போது, மக்கள் உள்ளுக்குள்ளே கொதித்தனர். ஊழல் என்பது, திராவிடத்துவ அரசியலோடுப் பின்னிப்பிணைந்ததாலும், எல்லோருக்கும் அதைப்பற்றி நன்றாகவே தெரிந்திருந்ததாலும், ஊழல் வழக்குகள் அவர் மீது போடப்பட்டபோது, அதிகமாக பாதிப்பு ஏற்படவில்லை. மாறாக, கருணாநிதி மற்றும் சுப்ரமணியன்ஸ்வாமி, அவரை சதாய்த்து, கஷ்டப்படுத்துவதாகவே மக்கள் நினைத்தனர். சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்டபோது, “திரௌபதி துகிலுரித்த நிகழ்ச்சி” போன்றநிலை, மக்களை அதிகமாகவே பாதித்தது. நிச்சயமாக திமுகவினர் “கௌரவர்களாகி”, கருணாநிதி, “துச்சாதனன்” ஆகி, தோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று. “எனக்கும் மூன்று துணைவியர் இருக்கிறார்கள், பெண்களைப் பற்றி எனக்கும் தெரியும்”, என்றெல்லாம் கருணாநிதி வசனம் பேசினாலும், மக்களிடம் அது எடுபடவில்லை. “முரசொலியில்” கருணாநிதியின் தூஷணம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருந்தது. சமீபத்தில் கூட “பாப்பாத்தி” என்றெல்லாம் ஏகவசனத்தில் தேர்தல் பிரச்சாரங்களில் பேசியது, நிச்சயமாக தமிழகப் பெண்களுக்குப் பிடிக்கவில்லை.

jaya-with-sonia-and-subramanian-swamyசுப்ரமணியன்சுவாமி, ஜெயலலிதாவைதிராவிடத் தலைவியாகமாற்றியது: “உள்ள சூத்திர ஆட்சியைக் காப்போம்மென்று சுவரொட்டிகளை ஒட்டியதை நினைவு கொள்ள வேண்டும். கருணாநிதி, “மறுபடியும் ஆரிய அம்மையார் பதவிக்கு வந்துவிடுவார்” என்றெல்லாம் எச்சரிக்கை ஓலமிட்டது ஞாபகத்தில் கொள்ள வேண்டும். “தமிழகத்தை தமிழன் தான் ஆளவேண்டும்” போன்ற கூக்குரல்களை எல்லாம் மீறித்தான், தமிழகத்தை தமிழர்-அல்லாதவர்கள் ஆட்டிப் படைத்தார்கள், ஆண்டார்கள் என்று, தனித்தமிழ்த்துவ, தமிழ்வெறித்துவப் பிரிவினைவாதிகள் பேசியும், எழுதியும் வந்த நிலை. ஆனால், “எல்லோரும் திராவிடர்கள்” என்பதை, ஆந்திரா தனி மாநிலம் ஆகியபோதும், கேரளா ஒப்புக் கொள்ளாத போதும், கர்நாடகா காவிரி விசயத்திலும் தோலுரித்துக் காட்டியது. அந்நிலையில், பிராமணரான, தமிழரல்லாத ஜெயலலிதா, முற்றிலும் திராவிடத்துவப் படுத்தப் பட்ட காரியத்திற்கு, இன்னொரு பிராமணரான, சுப்ரமணியன்சுவாமி காரணமானார். அவர் போட்ட வழக்குகள், ஜெயலிதாவைத் தனிமைப் படுத்தி, “திராவிடத் தலைவி”யாக்கியது!

anti-brahmin-jaya-criticismஊழல்காரணி ஜெயலலிதாவை பாதிக்காதது: ஊழலில் திளைத்த திமுக 1970களிலேயே வழக்குகளில் சிக்கிக் கொண்டது. கருணாநிதி, “ஊழலின் மறு உருவம்” போன்று சித்தரிக்கப் பட்டார். “இந்திரா-கருணாநிதி” கூட்டு அவ்வாறே முரண்பாடாகக் கருதப் பட்டது. “சோனியா-கருணாநிதி” கூட்டோ பாதாளத்தில் தள்ளி விட்டது. இரண்டு தீமைகள் இருக்கும் போது, பெரியது எடு, சிறியது எது அல்லது, எதனால் அதிக அளவு பாதிப்பில்லை என்று பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலையிலும், ஜெயலலிதா தனித்து நின்றார். “தமிழகத்தை இனி ஆண்டவன் கூட காப்பாற்ற முடியாது”, என்று ரஜினிகாந்த சொன்னது, நாத்திகரான கருணாநிதிக்கு, ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

jaya-cho-nexus-againat-sasikalaபெண்களை அடக்கும், திட்டும், தூசிக்கும் திராவிடத் தலைவர்கள்: பெரியார் முதல் கருணாநிதி வரை என்னத்தான் “பகுத்தறிவு” என்றெல்லாம் பேசினால் கூட, அவர்களின் பலதார திருமணங்கள், தொடர்புகள், மக்களை அவர்கள் பெண்களை அடக்கியாள்பவர்களாகத் தான் சித்தரித்தது. பெரியார் தன்னைவிட இளைவரான மணியம்மையை திருமணம் செய்து கொண்டதை அண்ணா போன்ற தலைவர்களே வெளிப்படையாக எதிர்த்தனர், மற்றும் “கண்ணீர் துளிகளாக” திமுக உதயமாக காரணமாகியது. “நான் முற்றும் துறந்த முனிவனும் இல்லை, அவள் படி தாண்டா பத்தினியும் இல்லை”, என்றெல்லாம் பேசினாலும் கூட, அண்ணாவுக்கு குழந்தையில்லை என்பதனால் மக்களுக்கு இரக்கம் ஏற்பட்டது. இதே நிலைதான் எம்ஜியாருக்கும். பலதாரம் புரிந்த எம்ஜியார், இதனால் கண்டுகொள்ளவில்லை எனலாம். ஆனால், வீரமணியை, மணியம்மையை சொத்துக்காக அடக்கி வைக்கும் நபராகத்தான் கருதினர். கருணாநிதியின் முத்தார-மூன்று மனைவி-துணைவி பற்றி விவரிக்க வேண்டிய அவசியல் இல்லை. இந்நிலையில் எல்லோருக்கும் தெரிந்த, அறிந்த, புரிந்த ஜெயலலிதா உயர்ந்தது, ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.

© வேதபிரகாஷ்

15-01-2017

admk-sucession-wars

[1] தமிழ்.ஒன்.இந்தியா, பிளவை உருவாக்கும் ஆரிய சக்திகளிடம் எச்சரிக்கையாக இருக்க அதிமுகவுக்கு வீரமணி அட்வைஸ் ! By: Karthikeyan, Updated: Thursday, December 8, 2016, 22:45 [IST]

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/k-veeramani-allegation-on-bjp-269339.html

[3] The Hindu, Jayalalitha move to appease partymen, Tuesday, August 22, 2000.

[4] Addressing partymen after releasing two books authored by former chairman, V.R. Nedunchezhiyan, Ms. Jayalalitha said, “none of those who hold the organisation as greater than themselves would be let down”. Quoting Nedunchezhiyan, she said those who had left the party were like droplets outside the ocean. “Once outside the ocean, the droplets cannot claim to be the ocean,” she said. While the AIADMK had faith in the people, its opponents believed in conspiracy. “The day is not far off when we will usher in MGR rule again.” Ms. Jayalalitha made a veiled attack on the ruling party saying those who had hurt Anna while he was alive were now claiming to be his followers.

http://www.thehindu.com/2000/08/22/stories/04222233.htm

[5] தமிழ்.ஒன்.இந்தியா, சமூக நீதி காத்த ஜெ.-வீரமணி புகழாரம், Published: Sunday, September 23, 2001, 5:30 [IST].

[6] http://tamil.oneindia.com/news/2001/09/23/veeramani.html

ஆரிய-திராவிட போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது, தொடர்கிறது – வீரமணியின் புலம்பல் – ஜெயலலிதாவுக்கு முன்பும்-பின்னும் (4)

ஜனவரி 15, 2017

ஆரியதிராவிட போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது, தொடர்கிறது  – வீரமணியின் புலம்பல்ஜெயலலிதாவுக்கு முன்பும்பின்னும் (4)

deepa-assertive

தீபாவை இயக்குவது பாஜக என்கிறீர்களா?: சசிகலாவை எதிர்க்க வலிமையான தலைவர்கள் இல்லாத நிலையில் உறவு என்ற பெயரில் தீபாவை பாஜக மறைமுகமாகத் தூண்டி வருகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஜெயலலிதாவின் உறவினர் என்பதைத் தவிர தீபாவுக்கு எந்தத் தகுதியும் இல்லை. ஆனால், சசிகலா கடந்த பல ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் இருந்து அவரது அரசியல் வியூகங்களை உணர்ந்தவர். அது செயல் வடிவம் பெற பெரும் பங்காற்றியவர். எனவே, தீபாவுடன் சசிகலாவை ஒப்பிடுவதே பெரும் தவறு.

தமிழக பிஜேபியிலும் ஜாதி அரசியல் உள்ளது என்பது நிதர்சனம். ஆகவே, தீபாவை பிஜேபி ஆதரிக்கிறது என்பது பொய். அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்கள், சசிகலாவின் எதேச்சதிகாரத்தை-சசிகலா-குடும்ப ஆட்சியை எதிர்ப்பவர்கள், எம்.ஜி.ஆர்-ஜெயலிதா அபிமானிகள் தான் தீபாவை ஆதரிக்கின்றனர். இது வெளிப்படையான உண்மை.

 j-jayakumar-marriage-in-1972-jaya-can-be-seen

ஜெயலலிதா மறைவால் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பாஜக தலைவர்கள் பேசி வருகிறார்களே?: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக ஓ.பன்னீர் செல்வமும், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும் பதவியேற்றுள்ளனர்.

எனவே, தமிழக அரசியலில் வெற்றிடம் எதுவும் இல்லை. உண்மையில் வெற்றிடம் இருப்பது ஆளுநர் மாளிகையில்தான். முதலில் அந்த வெற்றிடத்தை நிரப்பிவிட்டு அரசியல் வெற்றிடம் பற்றி பாஜகவினர் பேசட்டும். மிகப்பெரிய மாநிலமான தமிழகத்துக்கு தனியாக ஒரு ஆளுநரை நியமிக்காமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லை, ஸ்டாலினோ அரசியல் மற்றும் இதர விசயங்களில் பலமானவரோ, முதிர்ச்சியுள்ளவரோ இல்லை. ஜெயலலிதா இல்லாமல் இருந்தும், திமுகவினரால் ஒன்றும் செய்து விட முடியாது. உண்மையில், திமுக தனது பணபலத்தால், அதிமுகவை உடைக்க முடியும், ஆனால், ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது. இதுதான் பிரச்சினை.

deepa-i-will-enter-politics-with-pande

பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் கொள்கை ரீதியான வேறுபாடுகள் இல்லை என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியிருக்கிறாரே?: இப்படி பேசுவதும்கூட பாஜகவின் சதித் திட்டத்தின் ஓர் அங்கம்தான். ஜெயலலிதாவுக்கு கடவுள், மத நம்பிக்கை இருந்ததால் மட்டும் அதிமுக இந்துத்துவ கட்சியாகி விடாது.

இட ஒதுக்கீடு, சமூகநீதி, இந்தி எதிர்ப்பு என திராவிட இயக்கக் கொள்கைகளை என்றுமே அதிமுக விட்டுக் கொடுத்ததில்லை. இன்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நிகழ்ச்சியை அதிமுக நடத்துகிறது. பெரியாருக்கு விழா எடுக்கிறது. இதுவெல்லாம் பாஜகவின் கொள்கைகள்தானா என்பதை வெங்கய்ய நாயுடுதான் விளக்கவேண்டும். ஜெயலலிதா பார்ப்பனராக இருந்தாலும், பார்ப்பனர் கட்சியாக அதிமுகவை நடத்தவில்லை.

செக்யூலரிஸம் என்ற ரீதியில், இவருக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை என்பதை எடுத்துக் காட்டியுள்ளார். இந்து-எதிர்ப்பு நாத்திகத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இவற்றுடன் தான் அந்த பார்ப்பன-எதிர்ப்பும் வருகிறது. காலத்தின் கட்டாயத்தில், பிஜேபியும் அதையெல்லாம் செய்து வருகிறது. ஒருவேளை ஆட்சிக்கு வந்தால், அவற்ரையெல்லாம் “திராவிட பாரம்பரியப்படி” செய்யும். இப்பொழுது “ஜல்லிக்கட்டுக்கு” ஜால்ரா போடுவதும் அந்த விதத்தில் தான்.

deepa-who-supports-her

ஜெயலலிதாவுக்காக அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள், இனி பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்றும் வெங்கய்ய நாயுடு கூறியிருக்கிறாரே?:

அவர் தனது ஆசையை கூறியிருக்கிறார். அதிமுக தொண்டர்கள் திராவிட இயக்கக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள். அதனால்தான் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அதில் உறுதியாக நின்றனர். எனவே, அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள் ஒருபோதும் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். சமூகநீதிக்கு எதிரான மனநிலை கொண்ட பாஜகவை தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்.

அதிமுக-பிஜேபி கூட்டு என்பது, திமுக-பிஜேபி கூட்டு போன்றது. அப்பொழுது, திமுககாரர்கள் பிஜேபிக்கு ஓட்டுப் போடவில்லையா அல்லது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் டி.ஆர்.பாலு போன்றோருக்கு வேலை செய்யவில்லையா? வீரமணி இவ்வாறு பிதற்றுவது வேடிக்கையாக இருக்கிறது, மற்றும் அவரது பய்த்தை வெளிப்படுத்துகிறது.

deepa-who-supports-her-admk-disgruntlers

50 எம்.பி.க்களை வைத்துள்ள அதிமுகவை பாஜக பகைத்துக் கொள்ளும் என நினைக்கிறீர்களா?:

நாடாளுமன்றத்தில் 50 எம்.பி.க் களுடன் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து 3 ஆவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. இந்த அசுர பலத்துக்கு முன்பு எந்த அதிகாரமும், அச்சுறுத்தலும் சாதாரணம் என்பதை ஜெயலலிதா நிரூபித்து வந்தார். இதை உணர்ந்து இன்றைய அதிமுக தலைமை செயல்பட வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் தயவு பாஜகவுக்கு தேவை. இந்தச் சூழலை அதிமுக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஜி.எஸ்.டி விவகாரத்தில் தான் பிஜேபி பயந்து வந்த்து. ஜெயலலிதா மறிந்து விட்டதால் தான் மோடி, சசிகலா தலைமீது கைவைத்து, நடராசனுடன் பேசினார். இவர்கள் ஆதரவு இருந்தாலும், இல்லாவிட்டாலும், சட்டம் அமூலுக்கு வரும். ஆகவே, 50 எம்பிக்களை வைத்து, பாராளுமன்றத்தில் இனி பாட்டு பாடுவதை விடுத்து, மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு கலாட்டா செய்யலாம்.

jayas-death-created-a-vacuum-in-the-dravidian-polity

அதிமுக திராவிடக் கட்சி என்பதை திராவிட இயக்கத்தினரே ஏற்பதில்லை. ஆனால், நீங்கள் தாய்க் கழகம் என்ற முறையில் சசிகலாவுக்கு வேண்டு கோள் விடுப்பதாக கூறியுள்ளீர்களே?:

எங்களைப் பொறுத்தவரை அதிமுகவும் திராவிட கட்சிதான். திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை யான இட ஒதுக்கீடு, சமூக நீதியில் அதிமுக உறுதியாக உள்ளது. 31 சதவீத இட ஒதுக்கீடு 68 சதவீதமாக உயர அதிமுகவே காரணம். வைகோ எடுக்கும் முடிவுகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் மதிமுகவும் திராவிடக் கட்சிதான்.

குழப்பத்தில் உள்ள வீரமணிக்கு, திராவிடத்துவத்தை உயிரூட்ட திட்டம் போடுகிறார் போலும். இடவொதிக்கீடு பேசியே, தமிழகத்தை ஆண்டுவிட முடியாது, ஊழலைப் பற்றி பேசாதது, திராவிடத்துவத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. ஊழல் வழக்குகளில் சிக்கியதால் தான் சசிகலா-ஜெயலிலதா மாட்டிக் கொண்டனர், சிறை சென்றனர். வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

 deepa-at-jayas-tomb-marina

திமுகவை மட்டும் ஆதரித்து வந்த நீங்கள், இப்போது அதிமுகவையும் ஆதரிக்கிறீர்கள். இரு கட்சிகளையும் ஒன்றாகவே கருதுகிறீர்களா?:

திமுக, அதிமுக இரண்டும் திராவிடக் கட்சிகள். ஒரு தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன் – தம்பி போன்ற இயக்கங்கள். எதிரிகளுக்கு இடம் கொடுக்காமல் இந்த இயக்கத்தில் ஒன்று ஆளுங்கட்சியாகவும், மற்றொன்று எதிர்க்கட்சியாகவும் இருப்பதே பெரியார் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகும். எந்த ஆட்சியாக இருந்தாலும் நல்லது செய்தால் பாராட்டுவோம். கொள்கைப் பாதையிலிருந்து விலகிச் சென்றால் தவறுகளை சுட்டிக் காட்டுவோம்”, இவ்வாறு கி.வீரமணி கூறினார்[1].

திராவிடத்துவவாதிகள் எப்படியெல்லாம் பொய் சொல்வார்கள் என்பதற்கு, இவர் தான் உதாரணம். பெரியார் சொன்ன “கண்ணீர் துளிகள்”, மற்றும் நெடுஞ்செழியன் குறிப்பிட்ட “கடல்நீர் துளிகள்” முதலியவற்றை மறைத்துப் பேசுவது வீரமணியின் கைவைந்த கலை. ஊழலின் ஊற்று, சமுத்திரம் என்றெல்லாம் அதிமுக-திமுக வர்ணிக்கப் பட்டது, அப்பொழுது, அதற்கு காரணம் திகதானே? பிறகு இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது, “தவறுகளை சுட்டிக் காட்டுவோம்” என்பதற்கு?

© வேதபிரகாஷ்

15-01-2017

jaya-sasi-deepa-all-together-1992

[1] எம். சரவணன் நன்றி: ‘தி தமிழ் இந்து’ 13.1.2017