Posts Tagged ‘அறவோர்’

எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும் – கருணாநிதியின் திராவிட முழக்கம்!

பிப்ரவரி 24, 2012

எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும் – கருணாநிதியின் திராவிட முழக்கம்!

பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்!’: கருணாநிதி உருக்கமான வேண்டுகோள்[1]: “உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவுறுத்தி உள்ளார். இருப்பினும் அவரது குடும்பத்தில் உள்ள பாப்பாத்திகளையும், அந்த பாப்பாத்திகளுக்குப் பிறந்தவர்களையும் விரட்டியடிப்பாரா என்று தெரியவில்லை.
கருணநிதியின் அறிக்கை (கடிதமாக உள்ளது): திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா, 27ம் தேதி தி.மு.க., தலைமை நிலையத்தில், எனது தலைமையில், அன்பழகன் முன்னிலையில் நடக்கிறது. அதில், தி.க., வீரமணி, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மோகன், நன்னன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். திராவிட இயக்கத்தின் தோற்றம், அதன் மேன்மை பற்றியும் பேசுகிறார்கள்.

திராவிட நாடு கோரிக்கையை குப்பையில் போட்ட மாவீரர்கள்: ”ஒருவன் உள்ள வரையில்,  குருதி ஒரு சொட்டு  உள்ளவரையில் திராவிட நாட்டின் உரிமைக்குப் போரிடச் சிறிதும் பின்னிடல் இல்லை” என்றார் பாரதிதாசன். (பாராளுமன்றத்தில் அரசியல் நிர்ணய சட்டத்தில் தனிநாடு கேட்கும் கட்சிகளின் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்றதும், திராவிட வீரர்கள் தங்களின் வால்களை சுருட்டிக் கொண்டனர். அண்ணாதுரை பாராளுமன்றத்தில் பேசியதும் வேடிக்கைதான். ஏனெனில் கோரிக்கையை விட்டு ஆட்சியைப் பிடிததது திமுக!)

கால்டுவெல்லின் பொய்களை நம்பும் ஆட்கள் இங்குதான் இருப்பார்கள் போலும்[2]: கடந்த, 1856ல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல் தான், திராவிட மொழி பேசும் மக்கள் ஒரே இனத்தவர் எனக் குறிப்பிட்டார். திராவிடர் என்ற பெயரை அவர் தான் முதன் முதலாக உபயோகித்தார்என்ற குறிப்புகளும் உள்ளன (மாக்ஸ் முல்லரைத் தொடர்ந்து, கால்டுவெல்லும் தனது கருத்தை மாற்றிக் கொண்டார். ஆனால், அத்தகைய திருத்தம் செய்யப்பட்ட பதிப்பு இந்தியாவில் வெளியிடப் படவில்லை. இன்று ஆரியர்-திராவிடர் என்ற இனங்கள் எல்லாம் கட்டுக்கதை என்று மெய்பிக்கப் பட்டு விட்டது. சரித்திர ஆசிரியர்கள் யாரும் ஒப்புக் கொள்வதில்லை. அதுமட்டுமல்லாது திருட்டுத் தனமாக அகழ்வாய்வு செய்து பல ஆதாரங்களை மறைத்து விட்ட பாதகன் இந்த கால்டுவெல்[3]).

அரைத்த மாவை அரைக்கும் கருணாநிதி: மனோன்மணியம் எழுதிய சுந்தரம் பிள்ளை, “திராவிட நல் திருநாடும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்[4]. 1912ம் ஆண்டு தோன்றிய, “மெட்ராஸ் யுனைடெட் லீக்’ சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா, 1913, டாக்டர் நடேசன் மருத்துவமனைத் தோட்டத்தில் நடந்தது. “சங்கத்தின் பெயர், அதன் நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை’ என சிலர் பேசினர். அப்போது டாக்டர் நடேசன் தான், “திராவிடச் சங்கம் என்று பெயர் மாற்றலாம். ஏனென்றால், நாமெல்லாம் திராவிடர்களாயிற்றே’ என, முடிவைத் தெரிவித்தார். அதை, அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.

சரித்திரத்தைத் திரித்து கூறும் கருணாநிதி[5]: பிட்டி தியாகராயர் திராவிட இனத்தின் மீது மாறாத அன்பு கொண்டவர்.தொடக்கத்தில் தியாகராயர் பெரும் வைதீகராக இருந்தார். தன் இல்லத்திலேயே சிலை வைத்து புரோகிதரைக் கொண்டு பூஜை புனருத்தாரணம் எல்லாம் செய்து வந்தார்.   அப்படிப்பட்டவர் டாக்டர் நடேசன் தொடர்பு ஏற்பட்ட பிறகு, வைதீகத்திலிருந்து விலகி வந்து, பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பில் அதிகத் தீவிரம் காட்டத் தொடங்கினார்[6]. அப்படிப்பட்ட தியாகராயர் 1917ல் நடைபெற்ற சென்னை மாகாண முதலாவது நீதிக் கட்சி மாநாட்டில் உரையாற்றும்போது, பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிப்பது திராவிட மரபன்று. திருவள்ளுவர் முதலிய திராவிடத் தலைவர்கள் பிரம்மனின் முகத் துதித்தோர் யாம் என்று பெருமை பேசினாரில்லை.  பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கற்பித்தோரும் நால்வகைச் சாதி இந்நாட்டில் நாட்டினோரும் ஆரியரே. அவ்வருணாச்சிரமக் கோட்டையை இடித் தெறிய 2400 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய புத்தர் முயன்றார், முடியவில்லை. பின்னர் வந்த பல சீர்திருத்தவாதிகள் முயன்றனர், தோற்றனர். ராமானுசரும் புரோகிதக் கொடுமைகளைக் களைந்தெறிய ஒல்லும் வழியெல்லாம் முயன்றார், தோல்வியே கண்டார்.

திராவிடத் தலைவர்கள் ஆங்கிலேயர்களின் அடிவருடிகளான உண்மையை மறைக்கும் கருணாநிதி[7]: பார்ப்பனர் பிடி மேன்மேலும் அழுத்தமுற்றே வந்தது. தீண்டாமை, அண்டாமை, பாராமை முதலிய சமுதாயச் சீர்கேடுகளும்  படிப்படியே பரவிப் பெருகலாயின. அத்தகைய பலம் பொருந்திய சாதிக் கோட்டையை தகர்த்தெறிய, இதுவே தக்க காலம்.  இதுவே தக்க வாய்ப்பு என்று முழங்கினார். பி அண்ட் சி மில்லில் அப்போது ஒரு வேலை நிறுத்தப் போராட்டம். அதுகுறித்து தியாகராயருக்கும், ஆளுநராக இருந்த வெல்லிங்டன் பிரபுவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று, அதில் ஆத்திரமடைந்த தியாகராயர் வெளியே வந்து விட்டார்.  அப்போது முதலமைச்சர் பதவியில் இருந்த பனகல் அரசர் தியாகராயர் வெளியே வந்ததைக் கேள்விப்பட்டு, உடனடியாக ஆளுநரைச் சந்தித்து, எம் தலைவரிடம் மன்னிப்புக் கேட்காவிட்டால், எங்கள் மந்திரிசபை ராஜினாமா செய்யும் என்று தெரிவித்தாராம். ஆளுநரும் அவ்வாறே உடனடியாக மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தாராம். டாக்டர் நடேசனுக்கு துணை நின்ற மற்றொருவர் டாக்டர் டி.எம். நாயர். ஆரியர் வருகையிலிருந்து அவர் பேச்சைத் தொடங்கினால், இடையிலே புராண, இதிகாசக் கதைகளையெல்லாம் கூறி மக்களை உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தக் கூடிய பேச்சாளர். தென்னகத்தில் ஒன்றிரண்டு தவிர, மற்ற எல்லாப் பதவிகளிலும் பார்ப்பனர்கள் உட்கார்ந்து விட்டார்கள். உயர்நீதிமன்ற நீதிபதிகளாகநியமிக்கப்பட்ட ஒன்பது இந்தியரில், எட்டு பேர் பார்ப்பனர்கள், ஒருவர் நாயர். உதவி கலெக்டர்கள் 146 பேரில் 77 பேர் பார்ப்பனர்கள். 125 மாவட்ட நீதிபதிகளில் 93 பேர் பார்ப்பனர்கள். மக்கள் தொகையில் நூற்றுக்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர்கள், இத்தனை வேலைகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று இந்தப் புள்ளி விவரங்களை அடுக்கிச் சொல்லி, இந்த அநீதியை இப்படியே தொடர விடலாமா? என்று கர்ச்சிப்பார்.

“பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்கம்’ என்ற அறிக்கை: டி.எம்.நாயர், 1917ல், சென்னை ஸ்பர்டாங் சாலை அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையும், சர்.பிட்டி.தியாகராயர், 1918ல் நீதிக் கட்சியின் சார்பில் வெளியிட்ட, “பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்கம்’ என்ற அறிக்கையும், திராவிடருக்கான ஆதி ஆவணங்கள் எனப் போற்றப்படுகின்றன. டாக்டர் நாயரின் புகழ் பெற்ற அந்த உரையில், வீரத் திராவிடர்களே என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். லண்டனிலும், சென்னையிலும் என்னைப் பெரிய டாக்டர் என்று சொல்கிறார்கள். நான் எம்.டி. பட்டதாரி. எனக்கு ஏராளமான வருமானம் வருகிறது.  என் செலவு போக, என் வருமானத்தில் மீதப்படும் பணத்தையெல்லாம், என்னருமைத் தலைவர் பிட்டி தியாகராயரைப் போன்று, உங்களைப் போன்ற திராவிட மக்களைத் தட்டி எழுப்பும் நீதிக் கட்சியின் வளர்ச்சிக்காகச் செலவிடுவதில் பெருமைப்படுகிறேன். நாயரின் உரையில், “திராவிடத் தோழர்களே… நீங்கள் எல்லாம் உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, நீதிக் கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் மக்களுக்கு பலம் வரும். நம் எதிர்க்கட்சியான, பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்’ என முழங்கியதைத் தான், நான் இப்போதும் திரும்பக் கூற விரும்புகிறேன்.

முரசொலி மாறனின் புரட்டு வரலாறு[8]: “திராவிட இயக்க வரலாறு’ என, முரசொலி மாறன் எழுதிய நூலில், உயர் பதவியில் ஒரு பிராமணர் நியமிக்கப்பட்டால், உடனே தன் நியமன அதிகார வரம்புக்குட்பட்ட பிற பதவிகளிலும் தங்களது இனத்தாரைக் கொண்டு வந்து நிரப்புவதும், தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்’ என எழுதியதோடு, அதற்கு உதாரணங்கள் சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளார். வருவாய்த் துறை வாரியம் ஒருமுறை ஆய்வு நடத்திய போது ஜி. வெங்கட்ரமணையா என்கிற உயர் பதவி வகித்த பிராமணருக்கு உறவினர்களும், தொடர்புடையவர்களும் மாத்திரம் அந்தத் துறையில் 49 பேர் இருந்தது தெரியவந்ததாம். 1890 களில் செங்கற்பட்டிலும், சென்னை நகரிலும் தோன்றிய வெம்பாக்கம் அய்யங்கார் குடும்பம் (புகழ் பெற்ற சர். பாஷ்யம் அய்யங்கார் வகையறா) ஆங்கிலேயர் ஆட்சியில் கிடைக்கும் உத்தியோகங்களையெல்லாம் நன்கு நுகர்ந்தது.

ஐயர்கள் நாயர்கள் ஆனார்களா இல்லை நாயர்கள் ஐயர்கள் ஆனார்களா?: 1861லிருந்து 1921 வரை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஐவர் சட்டசபை உறுப்பினர்களாகவும், இருவர் அட்டர்னி ஜெனரல்களாகவும், மூவர் உயர்நீதி மன்ற நீதிபதிகளாகவும், மூவர் ஸ்மால்காஸ் கோர்ட் நீதிபதிகளாகவும், மாண்டேகு,செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தத்தில் உதயமான ஆட்சியில் ஒருவர் உள்துறை அமைச்சராகவும், மூவர் மாநில அரசின் துணை செகரட்டரிகளாகவும் இருந்திருக்கின்றனர். மேலும் பலர் தாசில்தாரர்களாகவும், பப்ளிக் பிராசிகியூட்டர்களாகவும், டெபுடி கலெக்டர்களாகவும் இருந்தனர் என்று மாறன் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்த உண்மை வரலாறுகளையெல்லாம் திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு நினைவு படுத்தும் வகையில்தான் திராவிட இயக்க 100ம் ஆண்டு தொடக்க விழா நடைபெறவுள்ளது. அந்த நிகழ்ச்சியில் நம்மைப்பற்றி புரிந்துகொள்ள தெரிந்து கொள்ளத்தக்க பல விவரங்களை சான்றோர் பலர் விளக்கிட உள்ளார்கள்.

உண்மை வரலாறு எது என்று தெரிந்தால் தமிழர்கள் உருப்பட்டு விடுவார்கள்[9]: இந்த உண்மை வரலாறுகளை எல்லாம் திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் தான், திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா நடக்கவுள்ளது. ஆண்டு முழுவதும் கொண்டாடப் போகிறோமே, துவக்க விழாவில் கலந்து கொள்ளாமல் விட்டால் என்ன என நினைத்துவிடக் கூடாது. இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார் (உண்மை வரலாறு என்னெவென்று தெரிந்து கொண்டால் தமிழர்கள் உருப்பட்டு விடுவார்கள். அவ்வாறு தெரியவிடாமல், தமிழர்களை இத்தகைய பொய்யான இனவாத சித்தாந்தங்களை வைத்துக் கொண்டு முட்டாள்கKஆல்லி விட்டதால், கடந்த 60-100 வருடங்களில் தமிழர்கள் முன்னேறாமல், பின் தங்கியே உள்ளர்கள்).

வேதபிரகாஷ்

24-02-2012


[1] தினமலர், பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்!’: கருணாநிதி உருக்கமான வேண்டுகோள், பிப்ரவரி 23,2012, http://www.dinamalar.com/News_detail.asp?Id=412586

[2] சி. பி. பிரௌன் என்ற பாதிரி தான் கால்டுவெல்லிற்கு சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்தார். அவர் கால்டுவெல்லின் அயோக்கியத்தனத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அவற்றைப் படித்தறிந்தால், தமிழர்கள் நிச்சயமாகத் திருந்துவார்கள். அதுமட்டுமல்லாது, கால்டுவெல் சாணார்களை பற்றி மிகவும் கேவலமாக தனது புத்தகத்தில் எழுதியுள்ளான். அதனால் அப்புத்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

http://dravidianatheism.wordpress.com/2011/02/18/denigrating-tamils-with-robert-caldwell/

http://dravidianatheism.wordpress.com/2010/01/30/caldwell-purana-continues/

http://dravidianatheism.wordpress.com/2010/01/30/house-of-caldwell-converted-to-memorial/

http://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-government/

[3] நாணயங்கள், முக்கியமான சரித்திர அதாரங்கள் மறைப்பு!:அங்கிருந்து ஆயிரக்கணக்கில், ஓலைச்சுவடி புத்தகங்களை எடுத்து இங்கிலாந்திற்கு அனுப்பினார். தமிழ் தொன்மையினை ஆராய்ந்து அதனை மாக்ஸ்முல்லரின் ஆராச்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தபோது, இந்தியாவின் ஒட்டுமொத்த ஒருமைப்பாடு அதிர்ச்சியளித்தது. ஓலைச்சுவடி புத்தகங்களைப் படித்து தாமரைப்பரணி ஆற்றங்கரையில் உள்ள பழைய காயல் என்ற ஊர்தான் மிகவும் பழமையானது என்று தெரிந்து கொண்டார். அதுமட்டுமல்லது அது பாண்டியர்களின் துறைமுகமாக இருந்தது, போன்ற விஷயங்களையும் தெரிந்து கொண்டார். பல இடங்களில் பழமையான நாணயங்கள் முதலியவற்றைக் கண்டதும் திகைத்தார். ஏனெனில், அவையெல்லாம், இந்திய ராஜ வம்சாவளியினரின் கடற்பயணங்களைக் குறிக்கும் ஆதாரங்களைக் கொண்டிருந்தன. சர் வால்டர் எல்லியட் எடுத்துக் காட்டியபடி, கப்பல் பொறிக்கப்பட்டுள்ள நாணயங்களையெல்லாம், சாமர்த்தியமாக மறைத்துவிட்டார். பிறகு அரசு பூர்வமாக அறிவிக்கவேண்டுமேயன்று, அனுமதியுடன் அகழ்வாய்வு மேற்கொண்டதுபோல், பிறகு பழங்கால கட்டிடங்கள், கோவில்கள் முதலியவற்றின் அஸ்திவாரங்களுக்கு அருகில் நோண்ட ஆரம்பித்தார்.  அதன்மூலமாகத்தான், தாழிகள், பளபலப்பான மற்றும் கலைநயம் பொருந்திய மண்பாண்டங்கள் , மீன் இலச்சினையுடைய பாண்டியர்களது நாணயங்கள் முதலியவற்றைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார். இப்படி திருட்டுத் தனமாக, அகழ்வாய்வு மேற்கொண்டு பல ஆதாரங்களை மறைத்தவர் தான் கால்டுவெல்.

http://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-government/

[4] அப்பாட்டிலேயே சில வரிகள் நீக்கப்பட்டன, மாற்றியமைக்கப் பட்டுள்ளன என்பதெல்லாம் தெரிந்தால், குட்டு வெளிப்பட்டு விடும்.

[6] தினகரன், திராவிட இயக்கத்தின் 100ம் ஆண்டு விழா திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு, http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=3671

[7] பி. ராமமூர்த்தி, ஆரிய மாயையா? திராவிட மாயையா? விடுதலைப் போரும், திராவிட இயக்கமும், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1987.

[8] முரசொலி மாறன், ஏன் வேண்டும் இந்த இன்பத் திராவிடம், முத்துவேல் பதிப்பகம், திருச்சிராப்பள்ளி, 1957.

[9] குணா, திராவிடத்தால் வீழ்ந்தோம், தமிழக ஆய்வரண், பெங்களூர், 1995.