Posts Tagged ‘அண்ணா’

சிலை உடைத்த நாத்திகர்களுக்கு சிலை வைக்கும் கலாச்சாரத்தை உண்டாக்கிய திராவிடத்துவம்! சிலை உடைத்த அதே இடத்தில் சிலை வைக்கப் படும்! (1)

செப்ரெம்பர் 2, 2021

சிலை உடைத்த நாத்திகர்களுக்கு சிலை வைக்கும் கலாச்சாரத்தை உண்டாக்கிய திராவிடத்துவம்! சிலை உடைத்த அதே இடத்தில் சிலை வைக்கப் படும்! (1)

சிலை உடைத்த நாத்திகஇந்துவிரோதிகளுக்கு சிலை வைத்தல்: ஈவேரா பிள்ளையார் சிலைகளை உடைத்தது, உச்சநீதி மன்றத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டது, நிறைய தமிழக மக்களுக்கு, ஏன் பெரியார்/ஈவேரா பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்கேத் தெரியாது. ஈவேரா தனக்குத் தானே சிலை வைத்துக் கொண்டதற்கு நியாயம் கற்பிக்கும் வாதங்கள் எல்லாமே, அவர்களிடத்திலிருந்து தான் வந்துள்ளன. ஆனால், மற்றவர்கள் மறுத்துள்ளது, மறைக்கப் படுகிறது. சிலை வைத்து, கொடிக்கம்பம் நட்டு இடங்களை ஆக்கிரமித்துக் கொள்வது, கம்யூனிஸ்டுகளுக்கு திராவிடக் கட்சிகளுக்கு கைவந்த கலையாக இருந்து வருகிறது. உயிரோடிருக்கும் மனிதர்களுக்கு சிலை வைக்கும் வழக்கம் கிடையாது, அவ்வாறு யாரும் நினைத்தும் பார்க்க முடியாது, ஏனெனில், அது அமங்கலமாகக் கருதப் பட்டு வருகிறது. எனவே, 1972ல் ஈவேராவுக்கு கடலூரில் மற்றும் 1975ல் கருணாநிதிக்கு மவுண்ட் ரோடில் சிலைகள் வைத்து, விழா கொண்டாடியது, நிச்சயமாக, பகுத்தறிவுக்கு மட்டுமல்லாது, சாதாரண மனோதத்துவ ரீதியில் நோக்கும் போதும் ஒவ்வாதது, முரண்பாடானது.

சிலை உருவாக்கும் தன்மை (Iconogenesis) மற்றும் சிலைகளை உடைக்கும் வன்மம் (Iconoclasm): சிலை உருவாக்கும் தன்மை (Iconogenesis) மற்றும் சிலைகளை உடைக்கும் வன்மம் (Iconoclasm) இரண்டையும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இந்த நாட்டில் துலுக்கர் பெரும்பாலாக அதனை மெய்ப்பித்துள்ளனர். பிறகு போர்ச்சுகீசியர், டச்சு, டேனிஸ், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேய அடிப்படைவாத கிருத்துவர்களும் பால இடங்களில் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் சிலையுடைப்பு-கோவில் இடிப்பு வேலைகளை செய்துள்ளனர். இப்பொழுது, திராவிடத்துவவாதிகள் செய்து வருகின்றனர். ஆகவே, திராவிடத்துவ வாதிகள், நாத்திகத்துடன் நடத்திக் காட்டிய சிலையுடைப்புகள், ஆபாச ஊர்வலங்கள் அவர்களது, கொடிய-குரூர-அசிங்கமான-ஆபாசமான மனப் பாங்குகளைத் தான் எடுத்துக் காட்டியுள்ளன. மறுபடியும் அவற்றை உயிர்ப்பித்து, சிலைகளை வைத்து, கொண்டாடும் பட்சத்தில், இக்காலத்திலும் அதே வன்மத்துடன், கொடிய சிந்தனைகளுடன், திய-முரண்பாடுகளுடன், வாழ்ந்து வருகிறாற்கள் என்பது புலப் படுத்துகிறது. இவர்களால், சமூகத்திற்கு என்றுமே ஆபத்துதான். தாலிபான், ஐசிஸ், போன்ற தீவிரவாதிகளுக்கும், இந்த திராவிடத்துவ அடிப்படை-தீவிரவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஈவேரா கருணாநிதிக்கு சிலை வைக்க விரும்பியது (1971): அண்ணா மறைவுக்குப் பின்னர் முதல்வர் பதவியேற்றார், பின்னர் 1971-ம் ஆண்டு சட்டமன்றத்தை கலைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தேர்தலை திமுக சந்தித்தது. மிகப்பெரிய வெற்றியை திமுக இந்த தேர்தலில் பெற்றது. ஆகஸ்டு 14, 1971 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், பெரியார் ஏற்கெனவே தான் வைத்த கோரிக்கையை மீண்டும் அப்போதைய முதல்வர் கருணாநிதியை அருகில் வைத்துக்கொண்டே வைத்தார். செயற்கரிய சாதனை செய்தவர் என்பதால் சென்னை தலைநகரில் கருணாநிதிக்குச் சிலை வைக்கவேண்டும் என்று தம் விருப்பத்தை பெரியார் தெரிவித்தார்[1]. அதை மேடையில் இருந்த குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் ஆமோதித்தனர்[2]. அதே மேடையில் கருணாநிதி சிலை அமைப்புக் குழுவையும் பெரியார் அறிவித்தார்[3]. அப்போது கூட்டத்தில் பேசிய கருணாநிதி திமுக சார்பில் பெரியாருக்கு ஒரு சிலை திறக்கிறோம், அதன் பின்னர் எனக்கு சிலை திறக்கலாம் என்று அதைத் தட்டிக்கழித்தார்[4]. அதாவது, உயிருடன் இருக்கும் போது, சிலை வைக்கக் கூடாது என்று அவருக்குச் சொல்லப் பட்டதால் மறுத்தார்[5].

1973, ஈவேராவுக்கு சிலை வைத்த போது, மறுபடியும் கருணாநிதி சிலை பேச்சு எழுந்தது: அதன் பின்னர் 1973-ம் ஆண்டு பெரியார் மறைவுக்குப் பின்னர் திமுக சார்பில், சென்னை அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) பேராசிரியர் க.அன்பழகன், தலைமையில்,  மணியம்மை முன்னிலையில், பெரியார் சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். சிலை திறப்பு விழாவில் பேசிய அப்போதைய தி.க.தலைவர் மணியம்மை, “சொன்னபடி பெரியாருக்கு சிலை வைத்துவிட்டீர்கள். பெரியாருக்கு சிலை திறந்த பின்னர் எனக்கு சிலை வைக்கலாம் என்று பேசிய நீங்கள் இனியும் சாக்குப்போக்கு சொல்ல முடியாது தி.க.சார்பில் உங்களுக்குச் சிலை அமைக்க அனுமதி தரவேண்டும் என்று மேடையிலேயே கோரிக்கை வைத்தார். திராவிடர் கழகம் சார்பில் அண்ணா சாலையில் முழு உருவ வெண்கலைச் சிலை அமைக்க உள்ளோம், இதற்கு மறுப்பு கூறக்கூடாது,” என்று பேசினார்[6].

சிலை விவகாரத்தில் திமுகஅதிமுக மோதல்: சிலைத் திறப்பை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. துலுக்கர் எதிர்க்காதது ஆச்சரியமே! ஒருவேளை, அப்பொழுது தர்கா தான் இருந்தது என்று இப்பொழுது வாதிக்கலாம்! முதலமைச்சர் கலைஞர் வெளியூர் பயணத்தில் இருந்தபோது, இடையில் அ.தி.மு.க.வினால் ஏற்பட்ட சட்டப் போராட்டத்தையும் திராவிடர் கழகம் எதிர் கொண்டு வென்று, அண்ணாசாலை- ஜெனரல் பேட்டர்ஸ் சாலை சந்திப்பில் முறைப்படி அரசாணை பெற்று, 21.9.1975 அன்று பெரியதோர் திருவிழாவாக நடத்தினோம். (G.O. MS.No.877 Dated 21.5.1975, Rural Development and Local Administration Department). அந்த வழக்கை திராவிடர் கழகம் வென்று அண்ணாசாலை தர்கா அருகே 1975-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி கருணாநிதியின் வெண்கலச்சிலை திறக்கப்பட்டது.

1975ல் வைக்கப் பட்ட கருணாநிதி சிலை 1987ல் தகர்க்கப் பட்டது: 01-09-2021 அன்று, தமிழக சட்டப்பேரவையில் வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தஞ்சாவூர் திமுக உறுப்பினர் நீலமேகம், மவுண்ட் ரோடில் இருந்த கருணாநிதி சிலை பற்றி பேசியது, செய்தியாக வந்துள்ளது[7]. 1971 ஆம் ஆண்டு சென்னையில் கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும் என்று பெரியார் முடிவு செய்தார்[8]. அதன் பின்னர் 1975 ஆம் ஆண்டு அப்போதைய திராவிடர் கழகத் தலைவர் மணியம்மை, சென்னை அண்ணாசாலையில் கருணாநிதியின் சிலையை நிறுவி குன்றக்குடி அடிகளாரால் அந்த சிலை திறந்து வைக்கப்பட்டதாகவும் நீலமேகம் குறிப்பிட்டார்[9]. அதன் பின்னர், 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்தில் சில விஷமிகள் கருணாநிதி சிலையை சேதப்படுத்தியதாகவும், அதே இடத்தில் மீண்டும் கருணாநிதி சிலை வைக்க, கருணாநிதி வேண்டாம் என தடுத்துவிட்டதாக கூறினார்[10]. அப்போது ‘சின்ன தம்பி என் நெஞ்சில்தான் குத்தினான். முதுகில் குத்தவில்லை’ என்று கருணாநிதி கூறினார்[11]. எனவே பெரியார் நினைத்ததை மணியம்மை செய்து காட்டியதின் அடிப்படையில் மீண்டும் அண்ணாசாலையில் கருணாநிதியின் சிலையரரசின் சார்பில் நிறுவ வேண்டுமென நீலமேகம் கேட்டுக்கொண்டார்[12].

© வேதபிரகாஷ்

02-09-2021


[1] வேதபிரகாஷ், கருணாநிதி சிலை திறப்புசிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! [1], டிசம்பர் 17, 2018.

[2] https://dravidianatheism2.wordpress.com/2018/12/17/politics-of-karunanidhi-statue-unveiled-by-sonia-and-rahul-dravidian-myth/

[3] வேதபிரகாஷ், கருணாநிதி சிலை திறப்புசிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! [2], டிசம்பர் 17, 2018

[4].https://dravidianatheism2.wordpress.com/2018/12/17/karunanidhi-statue-unveiled-by-sonia-arya-dravidian-politics-or-corruption/

[5]  ஜோதிடர்களிடம் தயாளு அம்மாள் விசாரித்ததும், அதனால் மறுத்ததும் சிலருக்கேத் தெரிந்த விசயமாக இருந்தது. இப்பொழுது துர்கா கோவிலுக்குச் செல்வது எல்லாம், ஊடகங்களில் வருவது போல, அப்பொழுது, ஊடகங்களில் செய்திகள் வெளியிடுவது இல்லை.

[6]  நாத்திகம், பகுத்தறிவு என்ற கொள்கைகள் கொண்ட கருணாநிதி, வீரமையிடன் ஏன் மறுத்தார் என்பதையும், “இனியும் சாக்குப்போக்கு சொல்ல முடியாது……… இதற்கு மறுப்பு கூறக்கூடாது,” என்பதிலிருந்தும், பின்னணியை அறிந்து கொள்ளலாம்.

[7] தமிழ்.ஏ.பி.பி.லைவ்.நியூஸ், அண்ணா சாலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலைமுதல்வர் அறிவிப்பு, By: ராஜேஷ். எஸ் | Updated : 01 Sep 2021 12:53 PM (IST).

[8] https://tamil.abplive.com/news/tamil-nadu/kalaignar-karunanidhi-statue-in-anna-salai-says-cm-mk-stalin-in-tn-assembly-15249

[9] நியூஸ்.18.தமிழ், அண்ணா சாலையில் கருணாநிதி சிலை அமைக்கப்படும்முதல்வர் மு..ஸ்டாலின் உறுதி, Published by: Karthick S, First published:September 01, 2021, 17:07 IST.

[10] https://tamil.news18.com/amp/news/tamil-nadu/mkstalin-said-karunanidhi-statue-will-be-made-in-anna-road-skd-550141.html

[11] தினமணி, அண்ணாசாலையில் கருணாநிதிக்கு மீண்டும் சிலை அமைக்கப்படும்: முதல்வா் மு..ஸ்டாலின், By DIN  |   Published on : 02nd September 2021 03:01 AM.

[12] https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/sep/02/statue-of-karunanidhi-will-be-erected-again-in-anna-salai-3691334.html

கருணாநிதி சிலை திறப்பு – சிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! [1]

திசெம்பர் 17, 2018

கருணாநிதி சிலை திறப்புசிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! [1]

EVR idol breaking case

பிள்ளையார் சிலையை உடைத்தவன், அப்பனுக்கு சிலை வைக்கத் துடித்த கதை சொல்லும் பிள்ளை: தமிழகத்தில் சிலை-அரசியல் என்பது திக-திமுக கட்சிகளோடு பின்னிப் பிணைந்து, பிறகு அதிமுகவையும் ஆட்டிப் படைக்கிறது. அம்பேத்கர் சிலை அரசியல் என்பது பிறகு வந்தது. அது தேவர் சிலை அரசியலோடு சேர்ந்து கொண்டு, கலவரங்களில் முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.மோஹன் கமிட்டியின் படி, சிலைகள் அவமதிக்கப் படுவதால் தான், தமிழகத்தில் கலவரங்கள் நடக்கின்றன என்று 1998லேயே எடுத்துக் காட்டினார்[1]. தேவர் ஜாதியினர் சிலைகள் 227, மஹாத்மா காந்தி 81 மற்றும் அம்பேத்கர் 66 இருப்பதாக இன்னொரு அறிக்கைக் குறிப்பிடுகிறது[2]. இதனால், புதிய சிலைகள் வைக்கக் கூடாது என்ற கருத்தும் உருவாகி வருகிறது. இங்கும் சிலையுடைப்பு அரசியலை ஆரம்பித்து வைத்தது ஈவேரா தான். உச்சநீதி மன்றம் அவரைக் கண்டித்துள்ளது, ஆனால், அவர் தான் கருணாநிதிக்கு சிலை வைப்பேன் என்று பிடிவாதம் பிடித்ததை இப்பொழுது அறிகிறோம்!

Avvai, Valluvar, Kambar, Ilango

1968ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த்த்தும், சிலைகள் வைத்ததும்: 1968ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த போதே, யாருக்கெல்லாம் சிலை வைப்பது, எடுப்பது என்பது பற்றியெல்லாம், ஏகப்பட்ட குழப்பம்,, பிரச்சினை, எதிர்ப்பு, ஆதரவு எல்லாமே நடந்தேறியது. முதலில் பெஸ்கி, போப் சிலைகள் வைக்க திட்டம் இல்லை. அப்பொழுது, யாரோ ஒருவர் லெஸ்லி நியூபிகின் என்ற சி.எஸ்.ஐ பிஷப்பிற்கு போன் செய்து, அவர்கள் சிலைகள் சேர்க்கப் பட வேண்டும் என்று அறிவித்தானாம். உடனே, புரொடெஸ்டென்ட் நியூபிகின், கத்தோலிக்க ஆர். அருளப்பாவுடன் ஆலோசனை செய்து, சிலைகள் வைக்க திட்டம் போட்டனர். லெஸ்லி அண்ணாவின் மிக நெருங்கிய நண்பர், சிறுவயதில் காஞ்சிபுரத்திலிருந்தே பழக்கம் உண்டு. அவர் சொல்லை அண்ணா தட்டவே மாட்டார் என்ற அளவுக்கு நெருக்கம் என்று நியூபிகின் முன்வாந்தார். இதற்குள் செய்தி அரசுக்குச் சென்றவுடன், செல்யூலரிஸ முறைப்படி, உமறுப் புலவருக்கு சிலை வைக்கலாம், என்று மனவை முஸ்தபா[3] [1935-2017] சொன்னார்.  ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், கைவிடப் பட்டது. மபொசி இளங்கோ அடிகள் சிலை வைக்க வேண்டும் என்றதை, கருணாநிதி விரும்பவில்லை. ஆக, தீர்மானிக்கப் பட்ட சிலைகள் இவ்வாறு வைக்கப் பட்டன.

Bharati, dasan, Pope, Caldwell

எண் திறந்து வைக்கப் பட்ட தேதி சிலை விழாத் தலைவர் திறந்து வைத்தவர்
1 02-01-1968 திருவள்ளுவர் இஆ. நெடுஞ்செழியன் கி.ஆ.பெ. விசுவநாதன்
2 02-01-1968 அவ்வையார் சத்தியவாணி முத்து எஸ்.எஸ். வாசன்
3 02-01-1968 கம்பர் ஏ. கோவிந்தசாமி மீ. பக்தவட்சலம்
4 02-01-1968 கண்ணகி    
5 02-01-1968 சுப்பிரமணிய பாரதி மாதவன் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
6 02-01-1968 வீர்மாமுனிவர் சாதிக் பாஷா அருளப்பா
7 02-01-1968 கி.யூ.போப் சி.பா. ஆதித்தனார் பிஷப் லெஸ்லி நியூபிகின்
8 02-01-1968 பாரதிதாசன் மா.முத்துசாமி மு. வரராசனார்
9 02-01-1968 வி.ஓ.சிதம்பரம்    
10 07-11-1971 இளங்கோ அடிகள் இரா. நெடுஞ்செழியன் ம.பொ.சிவஞானம்

Arulappa, CNA, Lesslieகண்ணகி சிலை உலகத் தமிழ் மாநாட்டின் போது வைக்கப் பட்டது. ஆனால் அது டிசம்பர் 10, 2001 அன்று, மெரினா கடற்கரையை நவீனப் படுத்தும் சாக்கில் இடிக்கப் பட்டது. போதாகுறைக்கு, அச்சிலையால் தான் சென்னை பஞ்சத்தால் நீரின்றி தவிக்கிறது என்றும் சொல்லப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தபோது, கருணாநிதி, ஜூன்.3, 2006ல் அதே இடத்தில் கண்ணகி சிலை வைத்தார். இப்படி சிலை சண்டை.

கருணாநிதிக்கு 1975ல் வைத்த சிலை 1987ல் இடிக்கப் பட்டது: 1975ல் கருணாநிதியின் சிலை மசூதிக்கு முன்பாக, அவர் ஆட்சியில் இருக்கும் போதே, ஜெனரல் பாட்டர்ஸன் – மவுண்ட் ரோடு சந்திப்பில் வைக்கப் பட்டது. அப்பொழுதே “உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைப்பதா, விக்கிரங்களை / சிலைகளை எதிர்ப்பவர், தனக்குத் தானே சிலை வைத்துக் கொள்வதா, இதனால், தீமை ஏற்படும்……….,” போன்ற பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப் பட்டன. ஆத்திகரான, கடவுளை நம்பிய குன்றக்குடி அடிகள், நாத்திகரான-இந்துவிரோதியான, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்! இருப்பினும், கருணாநிதிக்கு விருப்பம் இருந்ததால், நிறைவேற்றப்பட்டது. எந்த சாத்திரம் என்னவாகிற்றோ, எம்ஜிஆர் 1987ல் இறந்த போது, கருணாநிதி உயிரோடிருந்த நிலையில் சிலை உடைக்கப் பட்டது. ஒரு இளைஞன் கடப்பாரையினால், சிலையை உடைக்கும் காட்சியின் புகைப்படங்கள், நாளிதழ்களில் வெளிவந்தன. அது கண்டு போபப்பட்ட  கருணாநிதி, “அது மற்றவகளுக்கு இறுதி சிரிப்பாக இருக்கலாம், ஆனால், என் தம்பி என் நெஞ்சில் குத்தி விட்டான்”, என்று இளைஞன் உடைத்த படத்தின் கீழே எழுதினார்.

Karunanidhi statue demolished by a youth- 24-12-1987-main

உயிருடன் இருந்த போது வைக்கப் பட்ட சிலைகள்: தமிழக அரசியல் வரலாற்றில் உயிருடன் இருக்கும்போதே சிலை அமைக்கப்பட்ட தலைவர்கள் இரண்டுபேர் ஒன்று காமராஜர் மற்றொன்று கருணாநிதி. சிலை அமைக்கப்பட்டு மீண்டும் புதிய சிலை அமைக்கப்பட்ட தலைவர்கள் இரண்டுபேர். ஒன்று கருணாநிதி மற்றொன்று ஜெயலலிதா. இது சம்மீபத்தில் ஏற்பட்ட கோளாறுகள். கருணாநிதிக்கு முதன் முதலில் சிலை வைக்கவேண்டும் என்று அறிக்கை விட்டவர் பெரியார். அண்ணா உயிருடன் இருக்கும்போதே 1968-ம் ஆண்டே பெரியார் இந்த வேண்டுகோளை வைத்தார். 1968 இலும்,1971 ஆகஸ்டு 14 இலும் இருமுறை அறிவித்தார் பெரியார்! அதற்கு முன் உயிருடன் இருந்தவர்களில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் காமராஜருக்கு மட்டுமே ஜிம்கானா கிளப் அருகே சிலை திறக்கப்பட்டிருந்தது. அதை நேரு திறந்து வைத்தார்.

Karunanidhi statue demolished by a youth- 24-12-1987

ஈவேரா கருணாநிதிக்கு சிலை வைக்க விரும்பியது (1971): அண்ணா மறைவுக்குப் பின்னர் முதல்வர் பதவியேற்றார், பின்னர் 1971-ம் ஆண்டு சட்டமன்றத்தை கலைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தேர்தலை திமுக சந்தித்தது. மிகப்பெரிய வெற்றியை திமுக இந்த தேர்தலில் பெற்றது. ஆகஸ்டு 14, 1971 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், பெரியார் ஏற்கெனவே தான் வைத்த கோரிக்கையை மீண்டும் அப்போதைய முதல்வர் கருணாநிதியை அருகில் வைத்துக்கொண்டே வைத்தார். செயற்கரிய சாதனை செய்தவர் என்பதால் சென்னை தலைநகரில் கருணாநிதிக்குச் சிலை வைக்கவேண்டும் என்று தம் விருப்பத்தை பெரியார் தெரிவித்தார். அதை மேடையில் இருந்த குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் ஆமோதித்தனர். அதே மேடையில் கருணாநிதி சிலை அமைப்புக் குழுவையும் பெரியார் அறிவித்தார். அப்போது கூட்டத்தில் பேசிய கருணாநிதி திமுக சார்பில் பெரியாருக்கு ஒரு சிலை திறக்கிறோம், அதன் பின்னர் எனக்கு சிலை திறக்கலாம் என்று அதைத் தட்டிக்கழித்தார்.

வேதபிரகாஷ்

16-12-2018.

EVR statue opened by Karu - EVR, Karu and others can be seen

[1] In October 1998 the Times of India (ToI) reported that a high-level committee headed by retired Supreme Court judge S.Mohan to investigate caste conflict in southern Tamil Nadu had made special note of statues: “Justice Mohan observed that most of the clashes that took place in the region were because of desecration of statues and both the government and private bodies were advised to desist from installing new statues.”

Times of India, View: Statue politics & shifting sands of time, By Vikram Doctor, ET Bureau|Updated: Mar 10, 2018, 10.57 AM IST

[2] Another ToI report on the committee showed the scale of the problem: “statistics in the report reveal that there are over 708 statues of various leaders in nine southern districts of Tamil Nadu alone.” Of these 227 were of dominant Thevar community leaders, 81 were of Mahatma Gandhi and 66 were of Dr.Ambedkar. Riots often sprang from mere rumours about disrespect to statues and sometimes communities disfigured their own leaders’ statues “as an excuse for attacking the other.”

https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/view-statue-politics-shifting-sands-of-time/articleshow/63241372.cms

[3] தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாக இயக்குநராக 40 ஆண்டுகள், ‘புத்தக நண்பன்’ (புக் பிரண்ட் – மாத இதழ்) ஆசிரியராக 4 ஆண்டுகள், யுனெஸ்கோ கூரியர் – பன்னாட்டு மாத இதழ் – ஆசிரியராக 35 ஆண்டுகள், என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தலைமை பொறுப்பாசிரியர் – தமிழ் பதிப்பு, முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட ‘சுதந்திர பொன்விழா குழு” முன்னாள் உறுப்பினராகவும், முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு உயர்கல்வி – தமிழ் ஆக்கப்பணிக்குழு முன்னாள் உறுப்பினராகவும், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் இணைச் செயலாளராகவும், உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி வரும் சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் இந்தியக் குழுவின் முன்னாள் இணைச் செயலாளராகவும், ‘பாரதிய ஞானபீடப் பரிசு தேர்வுக்குழு’ உறுப்பினராகவும், 1968, 1982, 1987, 1995 ஆண்டுகளில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் 7 ஆய்வுக் கட்டுரைகள் படித்துள்ளார்.

ஆரிய-திராவிட போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது – வீரமணியின் புலம்பல் – அண்ணா-எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதா போன்ற தலைவர் வருவது கடினமே – ஜெயலலிதாவுக்கு முன்பும்-பின்னும் (5)

ஜனவரி 15, 2017

ஆரியதிராவிட போராட்டம் நடந்து கொண்டிருக்கிறதுவீரமணியின் புலம்பல்அண்ணாஎம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதா போன்ற தலைவர் வருவது கடினமேஜெயலலிதாவுக்கு முன்பும்பின்னும் (5)

aryan-myth-anna-tirade-against-brahmins

சிண்டு முடிந்திடுவோய் போற்றிஎன்ற  ‘துவஜா ரோகணம்செய்யத் தொடங்கிவிட்டனர்[1]: திராவிட இயக்கங்களுக்கு தாங்கள்தான் மாற்று என்ற பாஜகவினரின் ‘கரிசனம்’ அதிமுகவின் மீது கரைபுரண்டு ஓடத் தொடங்கிவிட்டது. எனவே அதிமுகவினருக்கு எச்சரிக்கை தேவை. இது நாடகமே என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார். அறிஞர் அண்ணா கூறிய, ”சிண்டு முடிந்திடுவோய் போற்றி” என்ற அனுபவ மொழிப்படி, அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பொறுப்பாளர்களிடையே பிளவை வலிந்து உண்டாக்கி, இடையே புகுந்து, நூல் பிளந்து பார்க்கும் முயற்சியில் ஈடுபடத் துவங்கிவிட்டனர். பல்வேறு கலகங்களை உருவாக்கிட, கட்டுக் கோப்பான அக்கட்சியினை ஜாதி அடிப்படையில் பிரித்தாள தங்களது பேனாக்கள்மூலம் ‘துவஜா ரோகணம்’ செய்யத் தொடங்கிவிட்டனர். எனவே, அதிமுகவின் சகோதரர்களே, சிண்டு முடிந்திடுவோரை, உங்கள்மீது திடீர் அனுதாபம், அளவற்ற ஆதரவு தருவது போல் நாடகம் போடுவோரை விழிப்போடு புரிந்துகொள்ளுங்கள். கட்சியின் கட்டுக்கோப்பை – கட்டுப்பாட்டை மறவாதீர். சிறுசிறு ஓட்டைகளைத் தேடி அலைந்து அவற்றைப் பெரிதாக்குகின்றனர். எனவே எச்சரிக்கை தேவை. இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்[2].

tears-and-ocean-droplets-jaya-comparison-21-08-2000கண்ணீர் துளிகளும், கடல்நீர் துளிகளும்: “கடல்நீர் துளிகள் கடலாகாது, கடலை விட்டுச் சென்ற அவை கடல் என்று தம்மை அறிவித்துக் கொள்ள முடியாது”, என்று நெடுஞ்செழியன் அதிமுகவை விட்டுச் சென்றவர்களை குறிப்பிட்டார். ஆகஸ்ட்.21, 2000 அன்று வி.ஆர்.நெடுஞ்செழியனின் புத்தகங்களை வெளியிடும் போது, ஜெயலலிதா அதனைச் சுட்டிக் காட்டி பேசினார். அண்ணா உயிருடன் இருக்கும் போது, அவரை சாடியவர்கள், மறைமுகமாக எதிர்த்தவர்கள் இன்று அண்ணாவைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள், என்று மறைமுகமாக விமர்சித்தார்[3]. கே. வீரமணி பிரதிகளைப் பெற்றுக் கொண்டார். 1948ல் பெரியார், திமுகவை “கண்ணீர் துளிகள்” என்று குறிப்பிட்டது தெரிந்ததே. 50 ஆண்டுகள் கழித்து, ஜெயலலிதா, அதிமுகவை விட்டு விலகியவர்களை “கடற்நீர் துளிகள்” என்று குறிப்பிட்டார்[4].

veeramani-with-jayalalitaசமூக நீதி வீராங்கனை: 1998ல் அதிமுக பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொண்டபோது, வீரமணி விமர்சித்தார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து செப்டம்பர் 2001ல் தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் தனதுதனித்தன்மையை ஜெயலலிதா நிலைநாட்டியுள்ளார் என்று திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி கூறினார்[5]. இதுதொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுப்ரீம் கோர்ட்தீர்ப்பை ஏற்று தனது பதவியை ஜெயலலிதா ராஜினாமா செய்துள்ளார். இதைபாராட்டுகிறேன். தனக்கு பதவி ஆசை இல்லை என்பதை அவர் நிரூபித்துள்ளார். மேலும், தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை, பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்கியுள்ளதன் மூலம் சமூக நீதியை காப்பதில் தான் எவ்வளவு உறுதியாக இருக்கிறேன் என்பதை அவர் நிரூபித்துள்ளார். இதை நான் வரவேற்கிறேன். புதிய முதல்வர் பன்னீர் செல்வம் பீடு நடை போட்டு செயல்பட வாழ்த்துகிறேன்”, என்றுகூறியுள்ளார் அவர்[6].

கரு-இந்திராவை வசை பாடியது- சர்வாதிகாரி, காந்தாரி.....பெண்களை அடக்கும், திட்டும், தூசிக்கும் திராவிடத் தலைவர்கள்: பெரியார் முதல் கருணாநிதி வரை என்னத்தான் “பகுத்தறிவு” என்றெல்லாம் பேசினால் கூட, அவர்களின் பலதார திருமணங்கள், தொடர்புகள், மக்களை அவர்கள் பெண்களை அடக்கியாள்பவர்களாகத் தான் சித்தரித்தது. பெரியார் தன்னைவிட இளைவரான மணியம்மையை திருமணம் செய்து கொண்டதை அண்ணா போன்ற தலைவர்களே வெளிப்படையாக எதிர்த்தனர், மற்றும் “கண்ணீர் துளிகளாக” திமுக உதயமாக காரணமாகியது. “நான் முற்றும் துறந்த முனிவனும் இல்லை, அவள் படி தாண்டா பத்தினியும் இல்லை”, என்றெல்லாம் பேசினாலும் கூட, அண்ணாவுக்கு குழந்தையில்லை என்பதனால் மக்களுக்கு இரக்கம் ஏற்பட்டது. இதே நிலைதான் எம்ஜியாருக்கும். பலதாரம் புரிந்த எம்ஜியார், இதனால் கண்டுகொள்ளவில்லை எனலாம். ஆனால், வீரமணியை, மணியம்மையை சொத்துக்காக அடக்கி வைக்கும் நபராகத்தான் கருதினர். கருணாநிதியின் முத்தார-மூன்று மனைவி-துணைவி பற்றி விவரிக்க வேண்டிய அவசியல் இல்லை. இந்நிலையில் எல்லோருக்கும் தெரிந்த, அறிந்த, புரிந்த ஜெயலலிதா உயர்ந்தது, ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.

கரு-இந்திராவை வசை பாடியது- மாத விடாய்ஜெயலலிதாவும், கரண் தாபரும்: ஆங்கிலம் மற்றும் இந்து மொழிகள் தெரிந்ததால், ஜெயலலிதாவுக்கு தேசியத் தலைவர்களுடன் நேரில் சந்தித்துப் பேசும் வசதியும் இருந்தது. கரண் டாபருடன் நடந்த பேட்டி திகைக்க வைத்தது, ஜெயலலிதாவின் பேச்சுத் திறமை, கேள்விகளை எதிர்கொள்ளும் திறமை, தாபரையே அதிர வைத்த ஆளுமை முதலியன படித்தவர்களையே சிந்திக்க வைத்தது. எதிரிகள் கூட பாராட்ட ஆரம்பித்தனர். பலமொழிகளில் நடித்த அனுபவத்தை ஜெயலலிதா அரசியலில் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார். அந்நிலையில், ஜெயலலிதா உட்கார்ந்த இடத்தில் சசிகலா உட்காருவது என்பது எப்ப்டி பட்டது என்பது சொல்ல வேண்டிய் அவசியம் இல்லை. இருவரும் பெண்கள் தான், இருப்பினும் வித்தியாசங்கள் பலப்பல உள்ளன.

dravidian-leaders-jaya-with-evr-and-karunanidhiஜெயலலிதாவை சதாய்த்த திராவிடத் தலைவர்கள்: திராவிடத் தலைவர்களின் ஆபாச வசைகளினால் தூற்றப்பட்ட போது, மக்கள் உள்ளுக்குள்ளே கொதித்தனர். ஊழல் என்பது, திராவிடத்துவ அரசியலோடுப் பின்னிப்பிணைந்ததாலும், எல்லோருக்கும் அதைப்பற்றி நன்றாகவே தெரிந்திருந்ததாலும், ஊழல் வழக்குகள் அவர் மீது போடப்பட்டபோது, அதிகமாக பாதிப்பு ஏற்படவில்லை. மாறாக, கருணாநிதி மற்றும் சுப்ரமணியன்ஸ்வாமி, அவரை சதாய்த்து, கஷ்டப்படுத்துவதாகவே மக்கள் நினைத்தனர். சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்டபோது, “திரௌபதி துகிலுரித்த நிகழ்ச்சி” போன்றநிலை, மக்களை அதிகமாகவே பாதித்தது. நிச்சயமாக திமுகவினர் “கௌரவர்களாகி”, கருணாநிதி, “துச்சாதனன்” ஆகி, தோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று. “எனக்கும் மூன்று துணைவியர் இருக்கிறார்கள், பெண்களைப் பற்றி எனக்கும் தெரியும்”, என்றெல்லாம் கருணாநிதி வசனம் பேசினாலும், மக்களிடம் அது எடுபடவில்லை. “முரசொலியில்” கருணாநிதியின் தூஷணம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருந்தது. சமீபத்தில் கூட “பாப்பாத்தி” என்றெல்லாம் ஏகவசனத்தில் தேர்தல் பிரச்சாரங்களில் பேசியது, நிச்சயமாக தமிழகப் பெண்களுக்குப் பிடிக்கவில்லை.

jaya-with-sonia-and-subramanian-swamyசுப்ரமணியன்சுவாமி, ஜெயலலிதாவைதிராவிடத் தலைவியாகமாற்றியது: “உள்ள சூத்திர ஆட்சியைக் காப்போம்மென்று சுவரொட்டிகளை ஒட்டியதை நினைவு கொள்ள வேண்டும். கருணாநிதி, “மறுபடியும் ஆரிய அம்மையார் பதவிக்கு வந்துவிடுவார்” என்றெல்லாம் எச்சரிக்கை ஓலமிட்டது ஞாபகத்தில் கொள்ள வேண்டும். “தமிழகத்தை தமிழன் தான் ஆளவேண்டும்” போன்ற கூக்குரல்களை எல்லாம் மீறித்தான், தமிழகத்தை தமிழர்-அல்லாதவர்கள் ஆட்டிப் படைத்தார்கள், ஆண்டார்கள் என்று, தனித்தமிழ்த்துவ, தமிழ்வெறித்துவப் பிரிவினைவாதிகள் பேசியும், எழுதியும் வந்த நிலை. ஆனால், “எல்லோரும் திராவிடர்கள்” என்பதை, ஆந்திரா தனி மாநிலம் ஆகியபோதும், கேரளா ஒப்புக் கொள்ளாத போதும், கர்நாடகா காவிரி விசயத்திலும் தோலுரித்துக் காட்டியது. அந்நிலையில், பிராமணரான, தமிழரல்லாத ஜெயலலிதா, முற்றிலும் திராவிடத்துவப் படுத்தப் பட்ட காரியத்திற்கு, இன்னொரு பிராமணரான, சுப்ரமணியன்சுவாமி காரணமானார். அவர் போட்ட வழக்குகள், ஜெயலிதாவைத் தனிமைப் படுத்தி, “திராவிடத் தலைவி”யாக்கியது!

anti-brahmin-jaya-criticismஊழல்காரணி ஜெயலலிதாவை பாதிக்காதது: ஊழலில் திளைத்த திமுக 1970களிலேயே வழக்குகளில் சிக்கிக் கொண்டது. கருணாநிதி, “ஊழலின் மறு உருவம்” போன்று சித்தரிக்கப் பட்டார். “இந்திரா-கருணாநிதி” கூட்டு அவ்வாறே முரண்பாடாகக் கருதப் பட்டது. “சோனியா-கருணாநிதி” கூட்டோ பாதாளத்தில் தள்ளி விட்டது. இரண்டு தீமைகள் இருக்கும் போது, பெரியது எடு, சிறியது எது அல்லது, எதனால் அதிக அளவு பாதிப்பில்லை என்று பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலையிலும், ஜெயலலிதா தனித்து நின்றார். “தமிழகத்தை இனி ஆண்டவன் கூட காப்பாற்ற முடியாது”, என்று ரஜினிகாந்த சொன்னது, நாத்திகரான கருணாநிதிக்கு, ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

jaya-cho-nexus-againat-sasikalaபெண்களை அடக்கும், திட்டும், தூசிக்கும் திராவிடத் தலைவர்கள்: பெரியார் முதல் கருணாநிதி வரை என்னத்தான் “பகுத்தறிவு” என்றெல்லாம் பேசினால் கூட, அவர்களின் பலதார திருமணங்கள், தொடர்புகள், மக்களை அவர்கள் பெண்களை அடக்கியாள்பவர்களாகத் தான் சித்தரித்தது. பெரியார் தன்னைவிட இளைவரான மணியம்மையை திருமணம் செய்து கொண்டதை அண்ணா போன்ற தலைவர்களே வெளிப்படையாக எதிர்த்தனர், மற்றும் “கண்ணீர் துளிகளாக” திமுக உதயமாக காரணமாகியது. “நான் முற்றும் துறந்த முனிவனும் இல்லை, அவள் படி தாண்டா பத்தினியும் இல்லை”, என்றெல்லாம் பேசினாலும் கூட, அண்ணாவுக்கு குழந்தையில்லை என்பதனால் மக்களுக்கு இரக்கம் ஏற்பட்டது. இதே நிலைதான் எம்ஜியாருக்கும். பலதாரம் புரிந்த எம்ஜியார், இதனால் கண்டுகொள்ளவில்லை எனலாம். ஆனால், வீரமணியை, மணியம்மையை சொத்துக்காக அடக்கி வைக்கும் நபராகத்தான் கருதினர். கருணாநிதியின் முத்தார-மூன்று மனைவி-துணைவி பற்றி விவரிக்க வேண்டிய அவசியல் இல்லை. இந்நிலையில் எல்லோருக்கும் தெரிந்த, அறிந்த, புரிந்த ஜெயலலிதா உயர்ந்தது, ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.

© வேதபிரகாஷ்

15-01-2017

admk-sucession-wars

[1] தமிழ்.ஒன்.இந்தியா, பிளவை உருவாக்கும் ஆரிய சக்திகளிடம் எச்சரிக்கையாக இருக்க அதிமுகவுக்கு வீரமணி அட்வைஸ் ! By: Karthikeyan, Updated: Thursday, December 8, 2016, 22:45 [IST]

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/k-veeramani-allegation-on-bjp-269339.html

[3] The Hindu, Jayalalitha move to appease partymen, Tuesday, August 22, 2000.

[4] Addressing partymen after releasing two books authored by former chairman, V.R. Nedunchezhiyan, Ms. Jayalalitha said, “none of those who hold the organisation as greater than themselves would be let down”. Quoting Nedunchezhiyan, she said those who had left the party were like droplets outside the ocean. “Once outside the ocean, the droplets cannot claim to be the ocean,” she said. While the AIADMK had faith in the people, its opponents believed in conspiracy. “The day is not far off when we will usher in MGR rule again.” Ms. Jayalalitha made a veiled attack on the ruling party saying those who had hurt Anna while he was alive were now claiming to be his followers.

http://www.thehindu.com/2000/08/22/stories/04222233.htm

[5] தமிழ்.ஒன்.இந்தியா, சமூக நீதி காத்த ஜெ.-வீரமணி புகழாரம், Published: Sunday, September 23, 2001, 5:30 [IST].

[6] http://tamil.oneindia.com/news/2001/09/23/veeramani.html

ஜெயலலிதாவுக்கு முன்பு மற்றும் ஜெயலலிதாவுக்கு பின்பு: திராவிட கட்சிகளும், நிலையும், உருமாறுகின்ற தேவைகளும்!

திசெம்பர் 11, 2016

ஜெயலலிதாவுக்கு முன்பு மற்றும் ஜெயலலிதாவுக்கு பின்பு: திராவிட கட்சிகளும், நிலையும், உருமாறுகின்ற தேவைகளும்!

aiadmk-opposition-to-gautami

மோடியை சந்தித்த பிறகு கௌதமி சதி செய்கிறாரா அதிமுக கேட்கிறது: இதனால் நடிகை கவுதமிக்கு அ.தி.மு.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுபற்றி அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் ‘மாலைமலர்’ நிருபரிடம், மற்ற விவரங்களை விளக்கி விட்டு, கூறியதாவது[1]:- “…….நான் கவுதமியை கேட்கிறேன், நீ எந்த உலகத்தில் இருக்கிறாய்? இதுபோன்ற அத்துமீறலை நிறுத்திக் கொள்வது நல்லது. ஏற்கனவே கவுதமி, பிரதமரை ஒருமுறை சந்தித்து வந்துள்ளார். இதற்கு பின்னால் ஏதோ ஒரு சதி திட்டம் இருக்கிறதோ என நான் சந்தேகிக்கிறேன்”. இதேபோல செய்தி தொடர்பாளர் தீரன், முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வளர்மதி ஆகியோரும் கவுதமியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்[2]. இந்த சதிக்கு சகோதரி கவுதமி விலைபோய் விட்டாரா? என்ற ஐயம் எழுகிறது. ஆகவே இது தேவையில்லாத பிரச்சனை. இதை யாரும் விவாதம் ஆக்க வேண்டாம். திருச்சியில் நேற்று கவுதமியின் உருவப்படத்தை அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் தீயிட்டு எரித்தனர்[3]. மேலும் கவுதமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து அ.தி.மு.க.வினர் கூறுகையில், “ஜெயலலிதா மறைவில் எந்த சந்தேகங்களும் இல்லை. அவர் ஆஸ்பத்திரியில் இருந்த போது அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரில் சென்று விசாரித்து உள்ளனர். எனவே அவருடைய மறைவை கவுதமி விமர்சித்துள்ளது கண்டிக்கத்தக்கது,” என்றனர்[4].

modi-formula-dravidian-tangle-intriguingஜெயலலிதா இறப்பை வைத்து லாபம் பார்க்கத் துடிப்பது ஏன்?: கடந்த இரண்டு மாதங்களாக ஜெயலலிதாவின் ஆஸ்பத்திரிவாசம் பெரிய செய்தியாக இருந்து வந்துள்ளது. இப்பொழுதோ, அது பெரிதாகி விட்டது. ஜி.எஸ்.டியை விட, இதைப் பற்றித்தான் அதிகமாக பேசுகின்றனர். சமூக ஊடகங்களின் கீழ்த்தரமான பதிவுகள், சமூக ஊடகங்களின் தரத்தையேக் குறைத்து விட்டது. கட்சிசார்புடன் வேலைசெய்யும் பலரை வெளிகாட்டி வருகிறது. தகவல் தொழிற்நுட்ப சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கும்போது, அலறும் சிலர், ஜெயலலிதாவை இறந்த பின்னரும் மோசமாக விமர்சித்து வருவதை மற்றவர்களும் கவனித்து வருகிறார்கள். பொதுவாக, இந்தியாவில் இறந்தவர்களைப் பற்றி அதிகமாக விமர்சிப்பதில்லை. குறிப்பாக பெண்ணை அவ்வாறு செய்வதில்லை. ஆனால், ஜெயலலிதா விசயத்தில் இரண்டும் மீறப்படுகின்றன. இது அந்த விமர்சர்களுக்கு, அவர்களை சார்ந்த அரசியல் கட்சிகளுக்கு, சித்தாந்த கூட்டங்களுக்கு எதிராக போகும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ல வேண்டும்.

dmk-tries-to-break-aidmk-rajathi-meetingதிமுகவில் நடந்து வரும் மாற்றங்கள்: திராவிடக் கட்சிகளில் மாற்றம், உருவமைப்பு, முதலியவை ஏற்படுமா என்ற யேஷ்யங்கள் ஏற்பட்டுள்ளன. திமுக மறுபடியும் உயிர்த்தெழ வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. எப்படியாவது, அதிமுகவைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணம் சென்ற மாதங்களை விட அதிகமாகி விட்டது. ஆனால் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும் எண்ணமும் உள்ளது. ஸ்டாலின் ஜெயலலிதாவுக்கு மரியாதை செல்லுத்தியதும், ராகுல் கருணாநிதியை பார்க்காமல் சென்றதும், மோடி சசிகலா-நடராஜன் முதலியோருடன் பேசியதும், அழகிரி கருணாநிதியை வந்து சந்தித்ததும் நிச்சயமாக அத்தகைய திட்டத்தை எடுத்துக் காட்டுகிறது. கருணாநிதியும் உடல்நிலை சரியாக இல்லாத நிலையில், திமுகவிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. “ஜெயலலிதா-கருணாநிதி ஆஸ்பத்திரிவாசம்” நிச்சயமாக பாரபட்சமாக விமர்சிக்கப் பட்டது. கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைமை ஸ்டாலினுக்குத்தான் செல்லும் என்றாலும், அழகிரி விடுவதாக இல்லை. இதுவரை மறைந்திருந்த ராஜா, மற்படியும், வெளிவந்து ஸ்டாலினுடன் வலம் வருகிறார்.

rahul-karuna-ladaiகாங்கிரஸில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்: 2ஜி ஊழல் காங்கிரஸ்-திமுக கட்சிகளை இணைத்து வைத்தாலும், அதே விசயம் அவர்களை பாதித்து வருகின்றது என்பதும் தெரிந்த விசயமாக இருக்கிறது. கடந்த தேர்தலில் திமுகவின் தோல்விக்கு அது ஒரு முக்கியமான அம்சமாக இருந்தது. ஊழல் என்றாலே கருணாநிதி என்ற பழைய பிம்பம் மறுபடியும் பிரதிபலித்ததால், மக்கள் ஜெயலலிதாவைத்தான் தேர்ந்தெடுத்தனர். கருணாநியை தமிழக மக்கள் என்றுமே ஊழலில்லாத முறையில் பார்க்க முடிவதில்லை. 2ஜி ஊழல் ஏதோ திமுகவுடன் தான் இணைந்திருக்கிறது என்பது போல காட்ட வேண்டும் என்று ராகுல், தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் கருணாநிதியை சந்திக்காமல் சென்று வருகிறார். இப்பொழுதும், ஜெயலலிதாவைப் பார்த்து மரியாதை செல்லுத்தி விட்டு செல்லும் போது, கருணாநிதியை ஏன் பார்க்கவில்லை என்று கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ராகுலுக்கு கருணாநிதியை விலக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது என்பது மர்மமாக இருக்கிறது.

jaya-corruption-cases-jailed-releasedஊழலை மீறி ஜெயித்த ஜெயலலிதா: ஜெயலலிதா உண்மையாக ஊழல் செய்தாரா அல்லது சசிகலா அண்ட் கம்பெனியால் மாட்டிக் கொண்டாரா, சுப்ரமணியன் சுவாமி மாட்டி வைத்தாரா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்தாலும், சட்ட-வழக்குகளை சீர்தூக்கிப் பார்த்தாலும், மக்கள் அவற்றைக் கன்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது. குறிப்பாக அவர் கருணாநிதி போன்ற ஆண்களால் பலிவாங்கப் படுகிறார் என்ற எண்ணம் அதிகமாகியது. தமிழக பென்களின் ஆதரவு இன்னும் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. இலவசதிட்டங்கள் எல்லாமெ பெரும்பாலும், பெண்களுக்கு என்பதை கவனிக்க வேண்டும். இதனால் தான் பெண்களின் ஆதரவு, இறந்த பின்னர் இன்னும் அதிகமாகியுள்ளதை கவனிக்கலாம். இனி ஜெயலலிதாவை, எம்.ஜி.ஆரைப் போன்று ஒரு ஓட்டுக்களை இழுக்கும் சின்னமாக்கி விட்டால், அவர் பெயரைச் சொல்லி இனி ஓட்டுகள் கேட்கலாம், மக்களும் ஓட்டுப் போடுவார்கள். எம்.ஜி.ஆர் படத்தை மற்ற கட்சிகள் போடுவதைப் போல, ஜெயலலிதா படத்தை போட முடியாது. அந்த விசயத்தில் அதிமுகவுக்கு லாபம் தான். இனி “எம்.ஜி.ஆர்-ஜெயலிதா” சின்னம் அமோகமான வெற்றிசின்னமாக இருக்கும். இதை எதிர்த்து யார் பேசினாலும் மக்கள் நிச்சயமாக நிராகரிப்பார். மேலும் இன்றைய இணைதள ஞானம் பரவியுள்ள காலத்தில், இளைஞர்களின் ஆதரவும் ஜெயலலிதாவுக்கு உள்ளது. அரசியலை சீர்துக்கிப் பார்க்கும் அவர்களிடத்தில் எப்படி மோடிக்கு ஆதரவு அளித்து வருகின்றனரோ, அத்தகைய ஆதரவு “எம்.ஜி.ஆர்-ஜெயலிதா” சின்னத்திற்குக் கிடைக்கும். ஆனால், அதிமுக ஊழலற்ற நிர்வாகத்துடன் செயல்பட வேண்டும். மோடி போன்று முன்னேற்றம், வளர்ச்சி, உன்னதி, மேன்மை என்ற ரீதியில் செயல்பட வேண்டும். மறுபடியும் வட்டம்-மாவட்டம்-கார்ப்பரேஷன் என்று ஊழல்களை ஆரம்பித்தால், இக்கால இளைஞர்கள் தூக்கி எரிந்து விடுவார்கள்.

anna-mgr-jaya-funeralsஅண்ணா, எம்.ஜி.ஆர், அம்மா சின்னங்கள்: தமிழகத்தைப் பொறுத்த வரையில், அண்ணா, எம்.ஜி.ஆர் சின்னங்களுக்குப் பிறகு “அம்மா” தான் வந்துள்ளது. அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், அடுத்து ஜெயலிதாவால் தான் மக்களைக் கவர முடிந்துள்ளது. திமுக “எம்.ஜி.ஆர்”ஐ வைத்துதான் ஓட்டு கேட்டது. அதிமுகவும் “எம்.ஜி.ஆர்”ஐ வைத்துதான் ஓட்டு கேட்டது. எம்.ஜி.ஆர் தெர்ந்தெடுத்தது –ஜெயலிதாவை. ஆனால், ஜெயலிதா யாரையும் நம்பவில்லை, தெர்ந்தெடுக்கவில்லை, தன்னை வைத்தே எல்லாவற்றையும் நடத்தினார். முக்கியமாக பொறுப்பேற்றுக் கொண்டார். மற்றவர்கள் மீது திணிக்கவில்லை, சுமத்தவில்லை, பழிபோடவில்லை. ஆக தமிழக மக்களை ஈர்க்கவோ, ஓட்டுகளை சேர்க்கவோ  அண்ணா, எம்.ஜி.ஆர், அம்மா சின்னங்களே தவிர மற்றவையெல்ல. இனி திராவிட உதிரிக்கட்சிகள், பெரியார், அண்ணா, அம்பேத்கர், காந்தி, நேரு, எம்.ஜி.ஆர், என்ற முரண்பட்ட தலைவர்கள் சின்னங்களுடன் அம்மாவையும் சேர்ப்பார்கள். ஏன் முஸ்லிம் கட்சிகள் மட்டுமல்ல, பிஜேபியும் அம்மாவை சேர்த்துக் கொள்வார்கள்.

© வேதபிரகாஷ்

12-12-2016

jayalalita-aasaulted

[1] மாலைமலர், ஜெயலலிதா மரணம்: கவுதமியின் சந்தேகத்தின் பின்னால் சதி, பதிவு: டிசம்பர் 10, 2016 13:29, மாற்றம்: டிசம்பர் 10, 2016 13:30

[2] http://www.maalaimalar.com/News/District/2016/12/10132959/1055425/Gauthami-suspicion-conspiracy-for-Jayalalithaa-Died.vpf

[3] தினதந்தி, ஜெயலலிதா மரணம் குறித்து விமர்சனம்: நடிகை கவுதமி உருவப்படத்தை .தி.மு..வினர் எரித்தனர், பதிவு செய்த நாள்: ஞாயிறு, டிசம்பர் 11,2016, 2:32 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, டிசம்பர் 11,2016, 2:32 AM IST

[4] http://www.dailythanthi.com/News/State/2016/12/11023224/Jayalalithaa-death-Review-Actress-kavutami-cutout.vpf

திராவிட இயக்கம், கூடா ஒழுக்கம், அரசியல் நாகரிகம், புலம்பும் பகுத்தறிவு, ஆரியத்தை விரும்பும் திராவிடத்தின் தந்திரம் என்னவோ? (2)

பிப்ரவரி 25, 2015

திராவிட இயக்கம், கூடா ஒழுக்கம், அரசியல் நாகரிகம், புலம்பும் பகுத்தறிவு, ஆரியத்தை விரும்பும் திராவிடத்தின் தந்திரம் என்னவோ? (2)

Anna 1967_The Hindu Photo

Anna 1967_The Hindu Photo

வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரிய கூடா ஒழுக்கம்: வீரமணி இன்று ஏதோ திராவிட கலாச்சாரத்தில் இத்தகைய “கூடா ஒழுக்கம்” வந்துவிட்டது போல புலம்பியுள்ளார். ஆனால், கடந்த 70-90 வருடங்களில் வருடங்களில் திராவிடத்தின் பெயரால் என்னென்னவெல்லாம் அரங்கேறியுள்ளன என்பதையும் பெரியாரின் “……….பையன்கள்”, அண்ணாவின் “உடன் பிறப்புகள்”, கருணாநிதியின் “கழகக் கண்மணிகள்”, எம்ஜியாரின் “ரத்தத்தின் ரத்தங்கள்”……..முதலியோர் நினைத்துப் பார்க்க வேண்டும். 1940களில் ஜின்னாவின் கூட்டு வைத்துக் கொண்ட போது, அவர் ஏதோ திராவிடர்களுக்கு உதவுவார் என்று கனவு கண்ட போது, பெரியாரை உதாசீனப் படுத்தி, ஜின்னா தூக்கியெறிந்தார்[1]. தான் முகமதியர்களுக்கு மட்டும் தான் பாடுபட முடியும் என்று துரத்தி விட்டார். 1950களில் அம்பேத்கரைத் தொடர்ந்த போதும், பெரியார் விரட்டப்பட்டார்[2]. அதாவது, பெரியாரைப் பற்றி அந்த அளவுக்கு எடை போட்டு வைத்திருந்தனர். அப்பொழுது அண்ணா கூட இருந்ததால், பெரியாரின் பலவீனங்களையும் நன்றாக அறிந்து கொண்டிருந்தார். அதனால் தான், மணியம்மையை கல்யாணம் செய்து கொண்டதும், பிரிந்து விட்டார். “கண்ணீர் துளிகளே” அந்த கூடா திருமணத்தினால் தானே உண்டாகியது. அப்பொழுது ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைப்பட்டவர்கள், பிறகு சுயமரியாதை / சீர்திருத்தத் திருமணங்களுக்கும் வருத்தப்பட வேண்டியதாயிற்று[3]. 1970களில் பதவிக்கு வந்ததும், சட்டத்திருத்தத்தின் மூலம் தான் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. பகுத்தறிவினாலோ, பகுத்தறிவு பகலவன்களின் மூலமோ முடியவில்லை.

February 26, 1973- CM. Karunanidhi presents the budget for the year 1973-74

February 26, 1973- C .M. Karunanidhi presents the budget for the year 1973-74 – The Hindu photo

தலைவர்களே, வடநாட்டைப் பாருங்கள்!: ஆஹா, வீரமணி தா ஏதோ அண்ணா மாதிரி நினைத்துக் கொண்டு விட்டார் போலும். “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது”, என்று சொல்லியே அப்பொழுது திராவிட அரசியல்வாதிகள் ஏமாற்ற ஆரம்பித்தனர். “வடநாட்டைப் பார்த்து தமிழ்நாட்டவர் கற்றுக் கொள்ளும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் எவ்வளவு கடுமையாக கட்சித் தலைவர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ பேசித் தாக்கிக் கொண்டாலும் மத்திய அரங்கம் (Central Hall Parliament) என்ற நாடாளுமன்ற அரங்கில் நுழையும்போது, தோள் மேல் கைபோட்டு, நட்புறவும் நயத்தக்க நனி நாகரிகமும் பொங்கி வழிவது போல் பேசிக் கொள்ளும் நடைமுறை வெகு சர்வ சாதாரணம் ஆனால்தமிழ்நாட்டில்….?”, இப்படி புலம்ப வேண்டிய அவசியமே இல்லை. திராவிடம் பேசியே, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்ன்டகாரர்களை மிரட்டினர். பிராமணர்-அல்லாத இயக்கத்தில் ஒன்றாக வந்தபோது, நாத்திகம் பேசி அவர்களை விரட்டினர். தமிழ்-பெருமை பாராட்டி, அவர்களது உணர்வுகளை போட்டு மிதித்தனர். இதனால், அவர்கள் ஒருவரொருவராக விலகிச் செல்ல ஆரம்பித்தனர்[4].

June 17, 1967- C.N. Annadurai, Chief Minister is seen presenting the budget for the year 1967-68 on the floor of the Legislative Assembly.

June 17, 1967- C.N. Annadurai, Chief Minister is seen presenting the budget for the year 1967-68 on the floor of the Legislative Assembly- The Hindu photo

தமிழ்நாட்டில் நடப்பது என்ன?: ஆரியம்-திராவிடம், ஆரியர்-திராவிடர், பிராமணர்-பிராமணர்-அல்லாதோர், சமஸ்கிருதம்-தமிழ் என்றெல்லாம் பேசி தமிழர்களைப் பிரித்தனர். ஜெயலலிதா முதலமைச்சர் ஆகியதும், இனிமேல் அது செல்லாது என்றவுடன், ஜாதி சங்களை உண்டாக்கி, ஜாதிவெறியை ஊட்டி, கலவரங்களை ஏற்படுத்தி மக்களைப் பிரித்து வந்தனர். கூட கம்யூனிஸ்டுகள், கிருத்துவர், முகமதியர்கள் உதவியோடு, “மாநில சுயயாட்சி”[5], “தமிழ்நாடு தனிநாடு”, “தமிழ் தேசியம்” போன்ற பிரிவினைவாதிகளோடு[6] மக்களை இன்னும் வெறியேற்றி, தீவிரவாதிகளாக்கினர். ஈழப்பிரச்சினை இவர்களுக்கு அல்வா மாதிரி ஆயிற்று. இந்த குழப்பங்களில் கிருத்துவர், முகமதியர்கள் மக்களை மதம் மாற்ற ஆரம்பித்தனர். மேலும் பிரச்சினைகள் ஏற்பட்டன. தென் மாநிலங்களில் கலவரங்கள் ஏற்பட்டன. அண்ணா 1970களில்“மாநில சுயயாட்சி”யைக் கைவிட்டார்; கருணாநிதி பிறகு “தமிழ்நாடு தனிநாடு” கோரிக்க்லையை மறந்தார்; “தமிழ் தேசியம்” போன்ற பிரிவினைவாதிகளை கருணாநிதி, எம்ஜியார் மற்றும் ஜெயலலிதாவே அடக்க வேண்டியதாயிற்று. இருப்பினும், குணா, தியாகு, நெடுமாறன் கோஷ்டிகள் அவ்வப்போது கலாட்டா செய்து கொண்டு வருகிறார்கள்.

June 19, 1980- M.G. Ramachandran being sworn in as Member of the Tamil Nadu Assembly.

June 19, 1980- M.G. Ramachandran being sworn in as Member of the Tamil Nadu Assembly- The Hindu photo

பிறந்த நாளிலாவது வாழ்த்து கூறக் கூடாதா?: “திராவிடர் இயக்கத்தின் பிறப்புக்குப் பின் இந்நிலை என்பது கசப்பான உண்மையாகும். இதனை நாம் வெட்கத்தோடும், வேதனையோடும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்”, என்றால், அந்நிலை எப்படி உருவாயிற்று என்று உண்மையினை ஒப்புக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கக் கூடாது என்ற கலாச்சாரத்தை உண்டாக்கியது திராவிட அரசியல். குறிப்பாக மற்றவர்களை ஏகவசனத்தில் விளிப்பது, அசிங்கமாக மெட்ராஸ் பாசையில் திட்டுவது, ஆபாசமான வார்த்தைகளுடன் பொது இடங்களில், ஏன் மேடைகளிலேயே பேசுவது முதலிய நாகரிகத்தை உண்டாக்கியது அவர்கள் தாம்.  வடநாட்டுத் தலைவர்கள் பலரிடமும் நான் பழகியுள்ளேன்எந்தவித பந்தாவும் இல்லாமல் பழகுபவர்கள் அவர்கள். தமிழ்நாட்டில் தான் இப்படி ஒரு வெறுக்கத்தக்க நோய் எப்படியோ கடந்த 30 ஆண்டுகளாகப் பரவி விட்டது. யார்மீதும் குற்றம் சுமத்தி புண்ணைக்குடைய விரும்பவில்லை நாம்”, என்று நொந்து போய் கூறியபிறகு, புண்ணிற்கு மருந்து போட்டால்தானே ஆறச்செய்யும்! இல்லையென்றால், இனும் புரையேறி சாவில் முடித்து விடாதா?

February 6, 1989- Jayalalithaa taking oath . Karunanidhi, looks on.

February 6, 1989- Jayalalithaa taking oath . Karunanidhi, looks on – The Hindu photo

வடக்கத்திய ஆரியர்கள் எப்படி பண்புள்ளவர்களாக இருக்கிறார்கள்?: “வடநாட்டுத் தலைவர்கள் பலரிடமும் நான் பழகியுள்ளேன்எந்தவித பந்தாவும் இல்லாமல் பழகுபவர்கள் அவர்கள்.”, இப்படி சொல்லியிருப்பது ஆர்.எஸ்.எஸ்காரர்களோ, பிஜேபிக்காரர்களோ இல்லை. இனமான தலைவர், தமிழர் தலைவர் திருவாளார் கி. வீரமணி தான். அவர்கள் ஆரியர்கள், இந்தி மொழி பேசுபவர்கள், இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள், கடவுளை நம்புகிறாவர்கள்………………என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், தெற்கத்தையத் தலைவர்களோ, திராவிடர்கள், தமிழ் மொழி பேசிபவர்கள், இந்துமதவிரோதிகள், கடவுளை-குறிப்பாக இந்து கடவுளை நம்ப மாட்டார்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அப்படியென்றால், எது வடத்தையத் தலைவர்களை, பண்புடன், பாசத்துடன், பந்தா இல்லாமல் பழகச் செய்கிறது?  ஒழுக்கம், கட்டுப்பாடு, நாகரிகம், மற்றவர்களை மதிக்கும் குணம் முதலியவை எப்படி வருகின்றன? பெரியார் முதல் மற்ற திராவிடத் தலைவர்கள் ஏன் அத்தகைய ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கவில்லை? “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” பேசியவர்கள் ஏன் அவற்றை காற்றில் விட்டு, இன்று புண்ணோடு சுற்றுகின்றனர்?

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது - மதி கார்ட்டூன்

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது – மதி கார்ட்டூன்

பெண்களை, பெண்மையை, பெண்ணியத்தை மதிக்காத திராவிடம்: பொதுவாக திராவிடத் தலைவர்கள் எல்லோருமே ஒன்றிற்கு மேற்பட்ட மனைவி-துணைவி வைத்திருப்பவர்கள் தாம்[7]. இத்தகைய இல்லறப் பிரச்சினையே, பெரும்பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. பொது கூட்டங்களில், ஏன் சட்டசபையிலேயே, சிலேடையாக பேசுவது என்ற பாணியில் அசிங்கமாக, ஆபாசமாக அண்ணாதுரை, கருணாநிதி, மற்ற அமைச்சர்கள் பலமுறை பேசியுள்ளனர். கெட்ட வார்த்தை பிரயோகங்கள் சாதாரணமாக கையாளப்பட்டு வந்துள்ளன. ஜெயலலிதா பிறந்த நாள் அன்று இவர் இதை வெளியிட்டிருப்பது அரசியல் நோக்கம் கொண்டது என்பது தெரிந்த விசயமே. முன்பு ஜெயலலிதா பதவிக்கு வந்த போது, “ஆரிய-திராவிட யுத்தம் தொடர்கிறது!” என்று புத்தகத்தை வெளியிட்டார். ஜெயலலிதா பாப்பாத்தி என்ற வசைகளை, தூஷணங்களை தாராளமாக வெளியிட்டார். போதாகுறைக்கு சட்டசபையிலேயே ஜெயலலிதாவின் ஜாக்கெட்டைக் கிழித்து[8], புடவையை உருவ முயன்ற நாகரிகமான திராவிடர்கள் இவர்கள்[9]. கருணாநிதியோ, வழக்கம் போல துளிக்கூட நாகரிகம் இல்லாமல், சோபன் பாபுவுடன் இருந்த போட்டோக்களை “முரசொலி”யில் போட்டு மகிழ்ந்தார். 1960களில் அனந்தநாயகியைப் பற்றி பேசியதெல்லாம் இவர்கள் மறந்து விட்டார்கள் போலும்[10].

© வேதபிரகாஷ்

25-02-2015


 

[1] ஜின்னா பெரியாருக்கு எழுதியுள்ள கடிதங்களைப் பார்க்கவும். அக்கடிதங்களில் பெரியார் ஒரு நிலையற்ற மணிதர் என்று சாடியுள்ளார்.

[2] பெரியார் பௌத்தத்தை ஏற்க வந்தபோது, அம்பேத்கர் வேண்டாம் என்று சொல்லி திருப்பி அனுப்பினார்.

[3] திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனது திராவிட குழப்பங்களை முரண்பாடுகளைச் சரிசெய்து கொள்ள ஆரம்பித்தது. “தமிழ்-தமிழ்” என்று தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களுக்கு எதிராக போகும் நோக்கு பல பிரச்சினைகளை சமுதாயத்தில் ஏற்படுத்தியதை திராவிட சித்தாந்திகள் கண்டு, அதற்கான வழிமுறைகளையும் ஆய்ந்தனர். 1969ல் அண்ணாதுரை தலைமையில் ஆட்சிக்கு வந்ததும், முதலில் அத்திருமணபங்களை செல்லுபடியாக்க சுயமரியாதை திருமணம் சட்ட வடிவம் (28.11.1967) மசோதாவை அறிமுகப்படுத்தினர். “சுயமரியாதை திருமணம்” கிளப்பிய அவலத்தை இந்து திருமண சட்டத்தில் (The Hindu Marriage Act, 1956) பிரிவு 7A என்றதை நுழைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்

[4] பனகல் ராஜா, நாயர் முதலியோர் விலகிய காரணங்களை யோசித்துப் பார்க்கலாம். ஒரு நிலையில், எதுவும் கிடைக்கவில்லை என்ற போது, அவர்களை “ஆங்கிலேயர்களின் கைகூலிகள்” என்று ஏசப்பட்டனர்.

[5] கருணாநிதி மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதுடன் அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு பேசி ஏமாற்றினார். அரசியல் நிர்ணய சட்டத்தில் அதை அடக்கும் பிரிவு ஏற்படுத்தப் பட்டவுடன் அடங்கி விட்டார். துக்ளாக்கில் “இது மாநில சுயயாட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடம்” என்று கிண்டலடித்தது ஞாபகம் இருக்கலாம்!

[6] இவையெல்லாம் மார்க்சிஸ்டு, லெனினிஸ்டு, உதிரிகள், வகையறாக்கள் செய்து வந்த கலாட்டாக்கள்; ஒரு நிலையில் பாமக கூட இக்கோரிக்கையை வைத்து, பிறகு அடங்கி விட்டது.

[7] பெரிய்சாருக்கு இரண்டு – நாகம்மை, மணியம்மை; கருணாநிதிக்கு மூன்று- பத்மாவதி, தயாளு அம்மாள், ராசாத்தி அம்மாள், என்ற விவரங்களை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

[8] http://yessveeramani.livejournal.com/84131.html

[9] JAYALALITHA loyalists have a pet theory about her hatred towards Karunanidhi and the DMK. They point to an incident which occurred in the Tamil Nadu assembly on March 25, 1989, when a DMKMLA tugged at Jayalalitha’s cape. She was quick to reap political mileage and the AIADMK drew a parallel with the disrobing of Draupadi. Karunanidhi was compared to Duryodhan. In fact, Jayalalitha kept harping on the incident in her 1991 election campaign.

 http://www.outlookindia.com/article/The-Revenge-Of-Draupadi/205451

[10] நாடாவை அவிழ்த்து பார்த்தால் தெரியும்” சட்டசபையில் சொல்லி, எதிர்ப்பு எழுந்தபோது, ” நான் சொன்னது கோப்பு நாடாவை”, என்று மாற்றி சொல்லித் தப்பித்துக் கொண்டார்.

எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும் – கருணாநிதியின் திராவிட முழக்கம்!

பிப்ரவரி 24, 2012

எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும் – கருணாநிதியின் திராவிட முழக்கம்!

பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்!’: கருணாநிதி உருக்கமான வேண்டுகோள்[1]: “உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவுறுத்தி உள்ளார். இருப்பினும் அவரது குடும்பத்தில் உள்ள பாப்பாத்திகளையும், அந்த பாப்பாத்திகளுக்குப் பிறந்தவர்களையும் விரட்டியடிப்பாரா என்று தெரியவில்லை.
கருணநிதியின் அறிக்கை (கடிதமாக உள்ளது): திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா, 27ம் தேதி தி.மு.க., தலைமை நிலையத்தில், எனது தலைமையில், அன்பழகன் முன்னிலையில் நடக்கிறது. அதில், தி.க., வீரமணி, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மோகன், நன்னன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். திராவிட இயக்கத்தின் தோற்றம், அதன் மேன்மை பற்றியும் பேசுகிறார்கள்.

திராவிட நாடு கோரிக்கையை குப்பையில் போட்ட மாவீரர்கள்: ”ஒருவன் உள்ள வரையில்,  குருதி ஒரு சொட்டு  உள்ளவரையில் திராவிட நாட்டின் உரிமைக்குப் போரிடச் சிறிதும் பின்னிடல் இல்லை” என்றார் பாரதிதாசன். (பாராளுமன்றத்தில் அரசியல் நிர்ணய சட்டத்தில் தனிநாடு கேட்கும் கட்சிகளின் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்றதும், திராவிட வீரர்கள் தங்களின் வால்களை சுருட்டிக் கொண்டனர். அண்ணாதுரை பாராளுமன்றத்தில் பேசியதும் வேடிக்கைதான். ஏனெனில் கோரிக்கையை விட்டு ஆட்சியைப் பிடிததது திமுக!)

கால்டுவெல்லின் பொய்களை நம்பும் ஆட்கள் இங்குதான் இருப்பார்கள் போலும்[2]: கடந்த, 1856ல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல் தான், திராவிட மொழி பேசும் மக்கள் ஒரே இனத்தவர் எனக் குறிப்பிட்டார். திராவிடர் என்ற பெயரை அவர் தான் முதன் முதலாக உபயோகித்தார்என்ற குறிப்புகளும் உள்ளன (மாக்ஸ் முல்லரைத் தொடர்ந்து, கால்டுவெல்லும் தனது கருத்தை மாற்றிக் கொண்டார். ஆனால், அத்தகைய திருத்தம் செய்யப்பட்ட பதிப்பு இந்தியாவில் வெளியிடப் படவில்லை. இன்று ஆரியர்-திராவிடர் என்ற இனங்கள் எல்லாம் கட்டுக்கதை என்று மெய்பிக்கப் பட்டு விட்டது. சரித்திர ஆசிரியர்கள் யாரும் ஒப்புக் கொள்வதில்லை. அதுமட்டுமல்லாது திருட்டுத் தனமாக அகழ்வாய்வு செய்து பல ஆதாரங்களை மறைத்து விட்ட பாதகன் இந்த கால்டுவெல்[3]).

அரைத்த மாவை அரைக்கும் கருணாநிதி: மனோன்மணியம் எழுதிய சுந்தரம் பிள்ளை, “திராவிட நல் திருநாடும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்[4]. 1912ம் ஆண்டு தோன்றிய, “மெட்ராஸ் யுனைடெட் லீக்’ சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா, 1913, டாக்டர் நடேசன் மருத்துவமனைத் தோட்டத்தில் நடந்தது. “சங்கத்தின் பெயர், அதன் நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை’ என சிலர் பேசினர். அப்போது டாக்டர் நடேசன் தான், “திராவிடச் சங்கம் என்று பெயர் மாற்றலாம். ஏனென்றால், நாமெல்லாம் திராவிடர்களாயிற்றே’ என, முடிவைத் தெரிவித்தார். அதை, அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.

சரித்திரத்தைத் திரித்து கூறும் கருணாநிதி[5]: பிட்டி தியாகராயர் திராவிட இனத்தின் மீது மாறாத அன்பு கொண்டவர்.தொடக்கத்தில் தியாகராயர் பெரும் வைதீகராக இருந்தார். தன் இல்லத்திலேயே சிலை வைத்து புரோகிதரைக் கொண்டு பூஜை புனருத்தாரணம் எல்லாம் செய்து வந்தார்.   அப்படிப்பட்டவர் டாக்டர் நடேசன் தொடர்பு ஏற்பட்ட பிறகு, வைதீகத்திலிருந்து விலகி வந்து, பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பில் அதிகத் தீவிரம் காட்டத் தொடங்கினார்[6]. அப்படிப்பட்ட தியாகராயர் 1917ல் நடைபெற்ற சென்னை மாகாண முதலாவது நீதிக் கட்சி மாநாட்டில் உரையாற்றும்போது, பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிப்பது திராவிட மரபன்று. திருவள்ளுவர் முதலிய திராவிடத் தலைவர்கள் பிரம்மனின் முகத் துதித்தோர் யாம் என்று பெருமை பேசினாரில்லை.  பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கற்பித்தோரும் நால்வகைச் சாதி இந்நாட்டில் நாட்டினோரும் ஆரியரே. அவ்வருணாச்சிரமக் கோட்டையை இடித் தெறிய 2400 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய புத்தர் முயன்றார், முடியவில்லை. பின்னர் வந்த பல சீர்திருத்தவாதிகள் முயன்றனர், தோற்றனர். ராமானுசரும் புரோகிதக் கொடுமைகளைக் களைந்தெறிய ஒல்லும் வழியெல்லாம் முயன்றார், தோல்வியே கண்டார்.

திராவிடத் தலைவர்கள் ஆங்கிலேயர்களின் அடிவருடிகளான உண்மையை மறைக்கும் கருணாநிதி[7]: பார்ப்பனர் பிடி மேன்மேலும் அழுத்தமுற்றே வந்தது. தீண்டாமை, அண்டாமை, பாராமை முதலிய சமுதாயச் சீர்கேடுகளும்  படிப்படியே பரவிப் பெருகலாயின. அத்தகைய பலம் பொருந்திய சாதிக் கோட்டையை தகர்த்தெறிய, இதுவே தக்க காலம்.  இதுவே தக்க வாய்ப்பு என்று முழங்கினார். பி அண்ட் சி மில்லில் அப்போது ஒரு வேலை நிறுத்தப் போராட்டம். அதுகுறித்து தியாகராயருக்கும், ஆளுநராக இருந்த வெல்லிங்டன் பிரபுவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று, அதில் ஆத்திரமடைந்த தியாகராயர் வெளியே வந்து விட்டார்.  அப்போது முதலமைச்சர் பதவியில் இருந்த பனகல் அரசர் தியாகராயர் வெளியே வந்ததைக் கேள்விப்பட்டு, உடனடியாக ஆளுநரைச் சந்தித்து, எம் தலைவரிடம் மன்னிப்புக் கேட்காவிட்டால், எங்கள் மந்திரிசபை ராஜினாமா செய்யும் என்று தெரிவித்தாராம். ஆளுநரும் அவ்வாறே உடனடியாக மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தாராம். டாக்டர் நடேசனுக்கு துணை நின்ற மற்றொருவர் டாக்டர் டி.எம். நாயர். ஆரியர் வருகையிலிருந்து அவர் பேச்சைத் தொடங்கினால், இடையிலே புராண, இதிகாசக் கதைகளையெல்லாம் கூறி மக்களை உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தக் கூடிய பேச்சாளர். தென்னகத்தில் ஒன்றிரண்டு தவிர, மற்ற எல்லாப் பதவிகளிலும் பார்ப்பனர்கள் உட்கார்ந்து விட்டார்கள். உயர்நீதிமன்ற நீதிபதிகளாகநியமிக்கப்பட்ட ஒன்பது இந்தியரில், எட்டு பேர் பார்ப்பனர்கள், ஒருவர் நாயர். உதவி கலெக்டர்கள் 146 பேரில் 77 பேர் பார்ப்பனர்கள். 125 மாவட்ட நீதிபதிகளில் 93 பேர் பார்ப்பனர்கள். மக்கள் தொகையில் நூற்றுக்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர்கள், இத்தனை வேலைகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று இந்தப் புள்ளி விவரங்களை அடுக்கிச் சொல்லி, இந்த அநீதியை இப்படியே தொடர விடலாமா? என்று கர்ச்சிப்பார்.

“பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்கம்’ என்ற அறிக்கை: டி.எம்.நாயர், 1917ல், சென்னை ஸ்பர்டாங் சாலை அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையும், சர்.பிட்டி.தியாகராயர், 1918ல் நீதிக் கட்சியின் சார்பில் வெளியிட்ட, “பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்கம்’ என்ற அறிக்கையும், திராவிடருக்கான ஆதி ஆவணங்கள் எனப் போற்றப்படுகின்றன. டாக்டர் நாயரின் புகழ் பெற்ற அந்த உரையில், வீரத் திராவிடர்களே என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். லண்டனிலும், சென்னையிலும் என்னைப் பெரிய டாக்டர் என்று சொல்கிறார்கள். நான் எம்.டி. பட்டதாரி. எனக்கு ஏராளமான வருமானம் வருகிறது.  என் செலவு போக, என் வருமானத்தில் மீதப்படும் பணத்தையெல்லாம், என்னருமைத் தலைவர் பிட்டி தியாகராயரைப் போன்று, உங்களைப் போன்ற திராவிட மக்களைத் தட்டி எழுப்பும் நீதிக் கட்சியின் வளர்ச்சிக்காகச் செலவிடுவதில் பெருமைப்படுகிறேன். நாயரின் உரையில், “திராவிடத் தோழர்களே… நீங்கள் எல்லாம் உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, நீதிக் கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் மக்களுக்கு பலம் வரும். நம் எதிர்க்கட்சியான, பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்’ என முழங்கியதைத் தான், நான் இப்போதும் திரும்பக் கூற விரும்புகிறேன்.

முரசொலி மாறனின் புரட்டு வரலாறு[8]: “திராவிட இயக்க வரலாறு’ என, முரசொலி மாறன் எழுதிய நூலில், உயர் பதவியில் ஒரு பிராமணர் நியமிக்கப்பட்டால், உடனே தன் நியமன அதிகார வரம்புக்குட்பட்ட பிற பதவிகளிலும் தங்களது இனத்தாரைக் கொண்டு வந்து நிரப்புவதும், தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்’ என எழுதியதோடு, அதற்கு உதாரணங்கள் சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளார். வருவாய்த் துறை வாரியம் ஒருமுறை ஆய்வு நடத்திய போது ஜி. வெங்கட்ரமணையா என்கிற உயர் பதவி வகித்த பிராமணருக்கு உறவினர்களும், தொடர்புடையவர்களும் மாத்திரம் அந்தத் துறையில் 49 பேர் இருந்தது தெரியவந்ததாம். 1890 களில் செங்கற்பட்டிலும், சென்னை நகரிலும் தோன்றிய வெம்பாக்கம் அய்யங்கார் குடும்பம் (புகழ் பெற்ற சர். பாஷ்யம் அய்யங்கார் வகையறா) ஆங்கிலேயர் ஆட்சியில் கிடைக்கும் உத்தியோகங்களையெல்லாம் நன்கு நுகர்ந்தது.

ஐயர்கள் நாயர்கள் ஆனார்களா இல்லை நாயர்கள் ஐயர்கள் ஆனார்களா?: 1861லிருந்து 1921 வரை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஐவர் சட்டசபை உறுப்பினர்களாகவும், இருவர் அட்டர்னி ஜெனரல்களாகவும், மூவர் உயர்நீதி மன்ற நீதிபதிகளாகவும், மூவர் ஸ்மால்காஸ் கோர்ட் நீதிபதிகளாகவும், மாண்டேகு,செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தத்தில் உதயமான ஆட்சியில் ஒருவர் உள்துறை அமைச்சராகவும், மூவர் மாநில அரசின் துணை செகரட்டரிகளாகவும் இருந்திருக்கின்றனர். மேலும் பலர் தாசில்தாரர்களாகவும், பப்ளிக் பிராசிகியூட்டர்களாகவும், டெபுடி கலெக்டர்களாகவும் இருந்தனர் என்று மாறன் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்த உண்மை வரலாறுகளையெல்லாம் திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு நினைவு படுத்தும் வகையில்தான் திராவிட இயக்க 100ம் ஆண்டு தொடக்க விழா நடைபெறவுள்ளது. அந்த நிகழ்ச்சியில் நம்மைப்பற்றி புரிந்துகொள்ள தெரிந்து கொள்ளத்தக்க பல விவரங்களை சான்றோர் பலர் விளக்கிட உள்ளார்கள்.

உண்மை வரலாறு எது என்று தெரிந்தால் தமிழர்கள் உருப்பட்டு விடுவார்கள்[9]: இந்த உண்மை வரலாறுகளை எல்லாம் திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் தான், திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா நடக்கவுள்ளது. ஆண்டு முழுவதும் கொண்டாடப் போகிறோமே, துவக்க விழாவில் கலந்து கொள்ளாமல் விட்டால் என்ன என நினைத்துவிடக் கூடாது. இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார் (உண்மை வரலாறு என்னெவென்று தெரிந்து கொண்டால் தமிழர்கள் உருப்பட்டு விடுவார்கள். அவ்வாறு தெரியவிடாமல், தமிழர்களை இத்தகைய பொய்யான இனவாத சித்தாந்தங்களை வைத்துக் கொண்டு முட்டாள்கKஆல்லி விட்டதால், கடந்த 60-100 வருடங்களில் தமிழர்கள் முன்னேறாமல், பின் தங்கியே உள்ளர்கள்).

வேதபிரகாஷ்

24-02-2012


[1] தினமலர், பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்!’: கருணாநிதி உருக்கமான வேண்டுகோள், பிப்ரவரி 23,2012, http://www.dinamalar.com/News_detail.asp?Id=412586

[2] சி. பி. பிரௌன் என்ற பாதிரி தான் கால்டுவெல்லிற்கு சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்தார். அவர் கால்டுவெல்லின் அயோக்கியத்தனத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அவற்றைப் படித்தறிந்தால், தமிழர்கள் நிச்சயமாகத் திருந்துவார்கள். அதுமட்டுமல்லாது, கால்டுவெல் சாணார்களை பற்றி மிகவும் கேவலமாக தனது புத்தகத்தில் எழுதியுள்ளான். அதனால் அப்புத்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

http://dravidianatheism.wordpress.com/2011/02/18/denigrating-tamils-with-robert-caldwell/

http://dravidianatheism.wordpress.com/2010/01/30/caldwell-purana-continues/

http://dravidianatheism.wordpress.com/2010/01/30/house-of-caldwell-converted-to-memorial/

http://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-government/

[3] நாணயங்கள், முக்கியமான சரித்திர அதாரங்கள் மறைப்பு!:அங்கிருந்து ஆயிரக்கணக்கில், ஓலைச்சுவடி புத்தகங்களை எடுத்து இங்கிலாந்திற்கு அனுப்பினார். தமிழ் தொன்மையினை ஆராய்ந்து அதனை மாக்ஸ்முல்லரின் ஆராச்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தபோது, இந்தியாவின் ஒட்டுமொத்த ஒருமைப்பாடு அதிர்ச்சியளித்தது. ஓலைச்சுவடி புத்தகங்களைப் படித்து தாமரைப்பரணி ஆற்றங்கரையில் உள்ள பழைய காயல் என்ற ஊர்தான் மிகவும் பழமையானது என்று தெரிந்து கொண்டார். அதுமட்டுமல்லது அது பாண்டியர்களின் துறைமுகமாக இருந்தது, போன்ற விஷயங்களையும் தெரிந்து கொண்டார். பல இடங்களில் பழமையான நாணயங்கள் முதலியவற்றைக் கண்டதும் திகைத்தார். ஏனெனில், அவையெல்லாம், இந்திய ராஜ வம்சாவளியினரின் கடற்பயணங்களைக் குறிக்கும் ஆதாரங்களைக் கொண்டிருந்தன. சர் வால்டர் எல்லியட் எடுத்துக் காட்டியபடி, கப்பல் பொறிக்கப்பட்டுள்ள நாணயங்களையெல்லாம், சாமர்த்தியமாக மறைத்துவிட்டார். பிறகு அரசு பூர்வமாக அறிவிக்கவேண்டுமேயன்று, அனுமதியுடன் அகழ்வாய்வு மேற்கொண்டதுபோல், பிறகு பழங்கால கட்டிடங்கள், கோவில்கள் முதலியவற்றின் அஸ்திவாரங்களுக்கு அருகில் நோண்ட ஆரம்பித்தார்.  அதன்மூலமாகத்தான், தாழிகள், பளபலப்பான மற்றும் கலைநயம் பொருந்திய மண்பாண்டங்கள் , மீன் இலச்சினையுடைய பாண்டியர்களது நாணயங்கள் முதலியவற்றைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார். இப்படி திருட்டுத் தனமாக, அகழ்வாய்வு மேற்கொண்டு பல ஆதாரங்களை மறைத்தவர் தான் கால்டுவெல்.

http://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-government/

[4] அப்பாட்டிலேயே சில வரிகள் நீக்கப்பட்டன, மாற்றியமைக்கப் பட்டுள்ளன என்பதெல்லாம் தெரிந்தால், குட்டு வெளிப்பட்டு விடும்.

[6] தினகரன், திராவிட இயக்கத்தின் 100ம் ஆண்டு விழா திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு, http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=3671

[7] பி. ராமமூர்த்தி, ஆரிய மாயையா? திராவிட மாயையா? விடுதலைப் போரும், திராவிட இயக்கமும், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1987.

[8] முரசொலி மாறன், ஏன் வேண்டும் இந்த இன்பத் திராவிடம், முத்துவேல் பதிப்பகம், திருச்சிராப்பள்ளி, 1957.

[9] குணா, திராவிடத்தால் வீழ்ந்தோம், தமிழக ஆய்வரண், பெங்களூர், 1995.