கோடம்பாக்கம் குஷ்புவும், ஹாலிவுட் ஜூலியா ராபர்ட்ஸும்
ஒருவேளை, ஒரே நாளில் அல்லது காலகட்டத்தில், இந்தியாவில் இரண்டு நடிகைகள், தமது இடங்களை விட்டு, வேறு இடத்திற்கு வந்து தமது நம்பிக்கைகளைப் பற்றி பேசியுள்ளது வியப்பாக உள்ளது.
கோடம்பாக்கம் குஷ்பு: இவரைப் பற்றி இப்பொழுது சொல்லவேண்டிய அவசியம் இல்லை. முஸ்லீமாக பிறந்து, “ஹிந்து” போல உலா வந்து, மக்களை ஏமாற்றி, கற்ப்பைப்பற்றி கேவலமாக பேசி, இப்பொழுது தான் “பெரியாரிஸ்ட்” என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். கோடம்பாக்கத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட, இந்த நடிகை, கருணாநிதியுடன் கைக்கோர்த்துக் கொண்டு, நாத்திகம், பெரியாரிஸம் என்றெல்லாம் பேச ஆரம்பித்துள்ளார்.
ஹாலிவுட் ஜூலியா ராபர்ட்ஸ்: ஆலிவுட் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஜூலியா ராபர்ட்ஸ்(42) ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் நடிப்பில் தனி முத்திரை பதித்து வரும் இவருக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் வெளியான பிரட்டி உமன் என்ற படம் வசூலில் சாதனை படைத்தது. இப்படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதையும் பென்று சாதனை படைத்தார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈட்பிரே அண்ட் லவ் என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள டெல்லி வந்திருந்தார் தொடர்ந்து 3 மாதங்கள் வரை இந்தியாவில் தங்கி இருந்தார். “ஈட் பிரே அண்ட் லவ்” படத்தில் ஜூலியா ராபர்ட்ஸ் விதவைப் பெண் கேரக்டரில் நடித்தார். கதைப்படி அவர் நிம்மதிக்காக இந்தியா வந்து கோவில்களில் வழிபடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றன. இதனால் அவருக்கு பல்வேறு இந்து கோவில்கள் ஆசிரமங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் நடிப்பதற்காக இந்து கோவிலுக்கு சென்ற அவருக்கு உண்மையிலேயே மன நிம்மதி, கடவுளின் அருள் ஆசி கிடைத்தது.
உலகின் சிறந்த மதம் மன அமைதி கிடைத்ததால் இந்து மதத்திற்கு மாறினேன்
இந்து மதத்துக்கு மாறினார் ஜூலியா ராபர்ட்ஸ், ஆகஸ்ட் 08,2010
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=57126
புதுடில்லி :ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஜூலியா ராபர்ட்ஸ்(42), இந்து மதத்துக்கு மாறிவிட்டார். கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்கிறார். “அடுத்த பிறவியிலாவது நான் நிம்மதியாக இருக்க வேண்டும்’ என, மனமுருகிக் கூறியுள்ளார்.
எனது சொந்த நாடு ஜார் ஜியா. ரோமன் கத்தோலிக்க மதத்தில் பிறந்தவர். சிறுவயது முதலே வேதாகமத்தை (பைபிளை) படித்து வந்தேன். கிறிஸ்தவ கோவில்களுக்கு சென்று அவ்வப்போது வழிபடுவேன்.
ஆனாலும் என் வாழ்வில் தொடர்ந்து பிரச்சினைகள், குழப்பங்கள் இருந்து வந்தன. கடந்த ஆண்டு இந்தியா வந்த போது இந்து மத வழிபாடுகளால் ஈர்க்கப்பட்டேன். இந்த வழிப்பட்டால் என் வாழ்வை சீரழித்த பிரச்சினைகள் நொடிக்பொழுதில் மாய மானதை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். குழப்பமான நிலையில் இருந்த எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது.
இந்து கோவில்களில் அர்ச்சகர்கள் காட்டும் தீபத்தை கை வைத்து கும்பிடும் போது எனக்கு புத்துணர்ச்சி கிடைத்ததை உணர முடிந்தது.
எனது பிரார்த்தனையை கடவுள் கேட்டு உடனடியாக தீர்த்து விடுவது போன்ற பிரமிப்பு ஏற்பட்டது. நெற்றியில் இடும் திருநீறு தீயசக்திகளிடம் இருந்து என்னை கடவுள் பாதுகாப்பது போல உணர்ந்தேன். தற்போது எனது 3 குழந்தைகளுக்கும் திருநீறு பூசி வருகிறேன். கைகளில் புனிதமான சிவப்பு கயிரை கட்டிக் வருகிறேன். இந்து மதம் என் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது.
நான் ஒரு பெரியாரிஸ்ட்! நடிகை குஷ்பு அறிவிப்பு
http://www.viduthalai.periyar.org.in/20100810/news01.html
முஸ்லீமாக இருந்து பிறகு இந்து மாதிரி இருந்து, இப்பொழுது தான் பெரியாரிஸ்ட் என்று கூறிக்கொள்ளும் இவரையும் இந்தியர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். |
அய்தராபாத்தில் நேற்று பெரியார் திரைப் படம் தெலுங்கு மொழியில் வெளியீட்டிற்கான முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் இனமுரசு சத்ய ராஜ், தான் ஒரு பெரியார் கொள்கைப் பற்றாளன் என்பதை ஏற்கெனவே பிரகடனப்படுத்தியவர்.
அய்தராபாத்தில் நடைபெற்ற பெரியார் தெலுங்கு திரைப்பட முன்னோட்ட நிகழ்வில் பெரியார் திரைப்படத்தில் அன்னை மணியம் மையாராக நடித்த நடிகை குஷ்பு தன்னுடைய உரையில், அன்னை மணியம்மையாரைப் பற்றி எந்த படச் சுருளையும் தான் பார்க்கவில்லை. அவர் இயல்பாக இருக்கின்ற போட்டோக்களை மட்டுமே பார்த்தேன். அன்னை மணியம்மை யாரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளை மட்டுமே படித்தேன். திராவிடர் கழக தலைவர் வீரமணி அவர்கள் அன்னை மணியம்மையாரைப் பற்றித் தெரிந்து கொள்ள பல செய்திகளைக் கூறினார். அதுதான் நான் மணியம்மையாராக சிறப்பாக நடிப்ப தற்குக் காரணமாக இருந்தது.
நான் ஒரு பெரியாரிஸ்ட் என்பதை இந்த நேரத்தில் பிரகடனப்படுத்திக் கொள்வதில் பெருமை அடைகின்றேன் என்றும் குஷ்பு கூறினார். குஷ்பு இவ்வாறு அறிவித்ததை மேடையில் இருந்தவர்களும், பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தவர்களும் மகிழ்ந்து கைதட்டி வரவேற்றனர்.