Archive for the ‘வேல்’ Category

கந்த சஷ்டி கவசம் முதல், கந்த புராணம் வரை: கருப்பு, கருப்பு-சிவப்புக் கூட்டத்தாரின் தாக்குதல்கள் – தேர்தல் நேரத்திலும் தொடர்ந்து இந்துவிரோத திமுக இவ்வாறு ஈடுபடுவது.

ஜனவரி 5, 2021

கந்த சஷ்டி கவசம் முதல், கந்த புராணம் வரை: கருப்பு, கருப்புசிவப்புக் கூட்டத்தாரின் தாக்குதல்கள் –  தேர்தல் நேரத்திலும் தொடர்ந்து இந்துவிரோத திமுக இவ்வாறு ஈடுபடுவது.

நாகர்கோவிலில் கூட்டத்தில்ஹிந்துக்களை வஞ்சிக்கும் கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது (03-01-2021): நாகர்கோவிலில் திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த சிவனடியார்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் ”ஹிந்துக்களை வஞ்சிக்கும் கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது[1]. இந்த கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் சொத்துகளை ஒரு சதுர அடி கூட விடாமல் மீட்டு கோயில்கள் வசம் ஒப்படைப்பது. அடியார்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு மருத்துவம், கல்வி உதவி வழங்க வேண்டும். சைவ மதத்துக்கு எதிராக தவறான கருத்து சொல்பவர்களை மாநிலம் முழுவதும் ஒரே குரலில் எதிர்க்க வேண்டும். ஹிந்துக்களை வஞ்சிக்கும் அரசியல் கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன[2]. இது விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் சிறப்பாகத் தெரிகிறது. இத்தகைய கூட்டங்கள் நிறைய நடத்தப் படவேண்டும். அத்தகைய செய்திகள் மக்களைச் சென்றட்டைய வேண்டும். குறிப்பாக, இன்றும் திக-திமுக திராவிடக் கட்சிகளை விசுவாசமாக ஆதரித்து வரும், சில சைவ சமூகத்தினர், இதுவரை நடந்துள்ள, நடந்து வரும் தீமைகளைக் கருத்திற்க் கொண்டு மாற வேண்டும்.

நெல்லையில் எதிர்ப்பு தெரிவித்த இந்து அமைப்பினர்: கந்தபுராண பாடலை திமுக கட்சி பாடல் போல் மாற்றி இழிவு படுத்தியதைக் கண்டித்து நெல்லை டவுனில் இந்து முன்னணியினர்,  சிவனடியார்கள், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் இணைந்து திருமுறைகள் பாடி பெருந்திரல் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்[3]. வான்முகில் வழாது பெய்க என்ற கந்தபுராண வாழ்த்து பாடலை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் திமுக தேர்தல் பிரச்சார பாடல் போல மாற்றி பதிவேற்றம் செய்த நபர்களையும் இறை வழிபாட்டு பாடல் கட்சி பாடல் போல் உருவாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நெல்லை டவுன் வாகையடி முனையில் இந்து முன்னணி சார்பில் பெருந்திரல் பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பிரார்த்தனை கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் சிவனடியார்கள் திருக்கூட்டம் இணைந்து தேவார திருவாசக திருமுறை பாடல்கள் பாடி இறைவனை வழிபட்டு பெருந்திரள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து கட்சி பாடலாக  மாற்றம் செய்து கந்தபுராண வாழ்த்துப் பாடலை இழிவுபடுத்திய நபர்கள் மீதும் சமூக வலைதளங்களில் அதை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது[4].

2020ல் காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கருப்பர் கூட்டத்தைக் கண்டித்தது: இந்து கடவுள்களை அவமதித்தால் நாக்கை துண்டிக்க பயப்பட தேவையில்லை என காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் 22-07-2020 அன்று தெரிவித்துள்ளார்[5]. கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கறுப்பர் கூட்ட யூ ட்யூப் சேனலுக்கு கண்டனம் தெரிவித்தார்.  தமிழகத்தில் இது போன்ற பேச்சுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்து மதத்தை இது போன்று இழிவுபடுத்தும் செயல்களில் யாராவது செயல்பட்டால் அவர்களின் நாக்கை துண்டிப்பதற்கும் கூட பயப்பட தேவையில்லை எனவும் ஆதீனம் பேசினார்[6].  உண்மையில், அவர் ஆதங்கத்துடன், பேசியுள்ளதை நினைவு கூறவேண்டும். தெய்வநம்பிக்கை ஆழமாக-உறுதியாக இருப்பது நல்லது தான், ஆனால், எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று சும்மா இருக்க முடியாது. தேர்தல், ஓட்டு, ஓட்டுவங்கி, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இத்தகைய இந்துமத-தூஷணங்களை செய்து வருவதால், நிச்சயமாக, இந்துக்கள் அதே முறையில், சரியான பதிலை சொல்லியாக வேண்டும். அவர்களுக்கு இந்து-ஆதரவு ஆட்சித் தேவையா அல்லது இந்து-விரோத ஆட்சி வேண்டுமா என்று இந்துக்கள் தான் தீர்மானிக்க வேண்டிய நிலையுள்ளது. “ஆவணன் ஆண்டால் என்ன, ராமன் ஆண்டால் என்ன” என்று இருந்தால், இதே இந்துவிரோத நிலைத் தான் தொடரும்.

2019ல் சில மடாதிபதிகள் பேசியது: சென்னை சேப்பாக்கத்தில் 12-04-2019 அன்று ஆதீனங்கள், துறவிகள், மடாதிபதிகள் என 11 பேர், தங்களது தேர்தல் நிலைப்பாட்டை அறிவித்தனர். அப்போது பேசிய பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள், இந்து மதத்திற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில், மக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்[7]. யார் இந்து மத தொண்டர்கள் என தங்களை அறிவிக்கிறார்களோ, குங்குமம் வைக்கிறார்களோ, அவர்களுக்கே ஆதரவளிக்க வேண்டும் எனவும், அவர் குறிப்பிட்டார்[8]. பின்னர் பேசிய கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வரர், தெய்வபக்தி நிறைந்த தமிழகத்தில் ஆன்மிகத்திற்கு எதிராக தலைவர்கள் பேசுவதற்கு கண்டனம் தெரிவித்தார். இதே நிலை, இப்பொழுது 2021லும் தொடர வேண்டும். இந்து அமைப்புகள் மறுபடியும் இத்தகைய கூட்டங்களைக் கூட்ட வேண்டும், இணதள பிரச்சாரங்களும் நடந்து வருவதால், அத்தகைய முறைகளையும் கையாள வேண்டும். சைவ மடங்கள், உழவாரப் பணி குழுக்கள் முதலியவற்றையும், அதில் ஈடுபடுத்தப் படவேண்டும்.

இந்துக்கள் கவனிக்க வேண்டியது, செய்ய வேண்டியது முதலியன: மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள், பின்னணி. அரசியல், அதிகாரம் போன்ற காரணிகளை உன்னிப்பாக அலசிய பின்னர் கீழ்காணும் அம்சங்கள் கொடுக்கப் படுக்கின்றன:

  1. முன்பு ஆண்டாள், இப்பொழுது முருகன் என்று திட்டம் போட்டு, இந்துக்களின் மங்களைப் புண்படுத்தி வருவது தெரிகிறது.
  2. உண்மையான நாத்திகம் என்றால், கடவுள் இல்லை என்பதும் உண்மையான கொள்கையாக இருக்க வேண்டும். ஆனால், நாத்திகர் என்று பிரகடனப் படுத்திக் கொண்டு, இந்து-அல்லாத கடவுளர்களை விமர்சிப்பது, தூஷிப்பது கிடையாது. எனவே, அவர்களது நாத்திகம், இந்துவிரோத நாத்திகம் ஆகிறது.
  3. அதனால், தான் கிறிஸ்தவ-முஸ்லிம் கோஷ்டிகள் இவர்களது மேடைகளில் பிரசங்கம் செய்கிறார்கள் மற்றும் கிறிஸ்தவ-முஸ்லிம் மேடைகளில், இந்துவிரோத நாத்திகர்-திராவிடத்துவ துவேசிகள் பேசி வருகிறார்கள்.
  4. கஞ்சி குடித்தும், கேக்-வெட்டி நக்கி சாப்பிட்டும், கிறிஸ்தவ-முஸ்லிம்களுக்கு ஜால்றா போட்டு வருகிறார்கள், பாராட்டி பேசுகிறார்கள்.
  5. புகார் கொடுத்தாலும், எப்.ஐ.ஆர் போட்டாலும், சட்டப் படி, இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவையெல்லாம் அப்படியே காலாவதியாகின்றன,
  6. அதனால் தான், செய்த குற்றங்களையே, திரும்பச் செய்து வருகிறார்கள். சட்டப் படி, தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற ரீதியில் அதே தூஷணங்களை செய்து வருகிறார்கள்.
  7. ஆகவே, சட்டப் படி நடவடிக்கை எடுக்க வைத்து, ஒருவனையாவது, தண்டனைக்கு உட்பத்த வைத்து, தண்டிக்கப் பட்டால், மற்றவர்களுக்கு பாடமாக்க இருக்கும், அச்சம் ஏற்படும்.
  8. இல்லையென்றால், பயமில்லாமல் போகும், “காலையில் கைது, மாலையில் விடுதலை,” போன்ற விளையாட்டாகி ஆகிவிடும்.
  9. தேர்தல் நேரத்தில் இவ்வாறு செய்யும் போது, அத்தகைய தேர்தல் சட்டங்கள் பிரிவுகளின் கீழ், உரிய சட்டமீறல்களை குறிப்பிட்டு, ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால், தேர்தலில் நிற்கமுடியாத நிலையையும் உண்டாக்கலாம்.
  10. தமிழகத்தில் இருக்கும் சுமார் 300 இந்து மடங்கள், அமைப்புகள் முதலியவை, இதில் ஒன்று பட்டு செயல்படவேண்டும்.

© வேதபிரகாஷ்

05-01-2021


[1] தினமலர், ஹிந்துக்களை வஞ்சிக்கும்கட்சிகளை ஆட்சிக்கு வரவிடக்கூடாது: சிவனடியார்கள் தீர்மானம், Added : ஜன 04, 2021 01:34

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2683101

[3] தினமலர், நெல்லை டவுணில் திமுகவைக் கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டம், பதிவு செய்த நாள் : 03 ஜனவரி 2021 18:44.

[4] http://www.dinamalarnellai.com/web/districtnews/52654

[5] தினத்தந்தி, இந்து கடவுள்களை அவமதித்தால் நாக்கை துண்டியுங்கள்காமாட்சிபுரி ஆதீனம், பதிவு : ஜூலை 23, 2020, 10:40 PM

[6] https://www.thanthitv.com/News/TamilNadu/2020/07/23224038/1543722/Hindu-Gods-Kamtchi-aadenam.vpf.vpf

[7] நியூஸ்.7.செனல், இந்து மதத்திற்கு விரோதமாக இருக்கும் சக்திகளுக்கு மக்கள் வாக்களிக்க கூடாது” : தமிழக இந்து துறவிகள் குழு, April 13, 2019 1 view Posted By : manoj.b, Authors. https://ns7.tv/ta/q7bcv9

[8]  https://ns7.tv/ta/q7bcv9  [now snapshot view is available accessed on 05-01-2021]

இந்துத்துவ பாதையில் திமுக: பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி: உதயநிதி விபூதி பூசுவது, துர்கா கோவில் கட்டுவது முதலியன(2)

நவம்பர் 30, 2020

இந்துத்துவ பாதையில் திமுக: பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி: உதயநிதி விபூதி பூசுவது, துர்கா கோவில் கட்டுவது முதலியன(2)

செக்யூலரிஸ வாழ்த்துகளிலிருந்து, கம்யூனலிஸ வாழ்த்துகள்: ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்றபண்டிகைகளுக்கு தவறாமல் வாழ்த்து கூறும் திமுக, தீபாவளிபண்டிகைக்கு வாழ்த்து கூறுவதுஇல்லை. ஆனால், திமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சியில் இந்த ஆண்டு முதல்முறையாக ‘தீப ஒளித் திருநாள்’ கொண்டாட்டங்கள் என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. தவிர, திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் ஒன்றியச் செயலாளர் போன்ற முக்கிய நிர்வாகிகளும் சமூக ஊடகங்களில் முதல்முறையாக இந்த ஆண்டு தீபாவளி வாழ்த்துச் செய்திகளை பதிவிட்டனர். அதாவது, பெண்டாட்டியை வைத்து சாமி கும்பிடுவது போல, திமுக அரசியல்வாதியை வைத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு, ஓட்டுக்குத் தான் வாழ்த்துத் தெர்விக்கின்றனர் என்பது இந்துக்கள் தெரிந்து கொள்வார்கள்.

சிறுபான்மையினரின் வாக்குகளை தக்கவைக்கும் அதேநேரம், பெரும்பான்மையினரின் வாக்குகளை இழந்துவிடக் கூடாது: முன்பெல்லாம் எங்காவது கோயில் இடிக்கப்பட்டால் பாஜக, இந்து அமைப்பினர் மட்டுமே போராடுவார்கள். சமீபகாலமாக கோயில்களுக்காக திமுகவினரும் குரல் கொடுக்கின்றனர். தூத்துக்குடியில் விநாயகர் கோயில் அகற்றப்பட்டதை கண்டித்து திமுக எம்எல்ஏ கீதா ஜீவன் போராடியதும், திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆர்.எஸ்.பாரதி வழிபட்டதும் முக்கிய நிகழ்வுகளாகப் பார்க்கப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக, வரும் 2021 பேரவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று தீவிரமாக போராடி வருகிறது. அமித் ஷாவின் சென்னை வருகைக்குப் பிறகு திமுக எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. சிறுபான்மையினரின் வாக்குகளை தக்கவைக்கும் அதேநேரம், பெரும்பான்மையினரின் வாக்குகளை இழந்துவிடக் கூடாது என்று கவனத்துடன் திமுக காய் நகர்த்தி வருகிறது. இந்த பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி எந்த அளவுக்கு உதவும் என்பது 2021 தேர்தல் நிரூபித்து விடும்.

மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை தலைவர் ராம. சேயோன், திமுகவின் இந்து முகமா?:  ராம.சேயோன் என்பவர் –

  • மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் 
  • திமுக மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் ராம.சேயோன்
  • நாகை வடக்கு மாவட்ட தி.மு.க வழக்கறிஞர்கள் அணியின் மாவட்ட அமைப்பாளரும்,
  • நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. சட்ட பாதுகாப்பு குழு தலைவர்
  • மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் நிறுவனர் 
  • மயிலாடுதுறை ஆன்மீக பேரவை ஒருங்கிணைப்பாளர்

பல பொறுப்புகளில் இருக்கிறார் என்று தெரிகிறது. 20-11-2020 அன்று ஆதீனத்தை உதயநிதியை சந்திக்கச் செய்தது, பரிசு பொருட்களை பறிமாறிக் கொண்டது, பிரசாதம் பெற்றது, ஆசிர்வாதம் பெற்று விபூதி பூசிக் கொண்டது, புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டு, முதல் பிரதியைப் பெற்றது, என்று அனைத்தையும் ஏற்பாடு செய்தது, இந்த ராம.சேயோன் தான். திமுகவின் இந்து முகம் போன்று, இவர் காட்டப் படுகிறார் மற்றும் செயல்படுகிறார் என்று தெரிகிறது. ஆகவே, எல்லாவற்றையும் கவனிக்கும் போது, மென்மையான இந்துத்துவம் கடைபிடிக்க அரம்பித்துள்ளது திண்ணம், உறுதி.

இந்துவிரோதி ஸ்டாலின் திடீரென்று கோவில்களுக்கு வக்காலத்து வாங்குவது (மார்ச்.2020): ‘இந்துக்களுக்கு நாங்கள் விரோதி அல்ல. என் மனைவி கோவில்களுக்கு செல்கிறார். அதை நான் தடுத்ததே இல்லை’ என, பிரசார மேடைகளில், ஸ்டாலின் 2019 ல் விளக்கம் கொடுத்ததை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள புரதான கோயில்களை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.. அதாவது, பிரஹலாத் சிங், கலாச்சாரத் துறைஅமைச்சர், “……..மேலும் தொன்மையான கோவில்கள் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் வர வேண்டும்,” என்று பாராளுமன்றத்தில் பேசினார். இதற்கு, தமிழக தொல்லியல் துறை ஆய்வறிஞர்கள், தொல்லியல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழர்களின் நாகரிகத்தை – கலாசாரத்தை சிதைக்க மத்திய பா.ஜ.க அரசு முயற்சி செய்தால் தி.மு.க சார்பில் தமிழ் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்று அவை விளக்கின. இதுகுறித்து ஸ்டாலின் அறிக்கையும் வெளியிட்டுள்ளது தமாஷாக இருந்தது.

1991க்குப் பிறகு 2006, அதற்குப் பிறகு 2021 என்று பொருந்தி வருவது எப்படி? (செப்டம்பர் 2020): மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என தனது குலதெய்வம் கோயிலை புனரமைத்து வருகிறார் துர்கா ஸ்டாலின், இப்படி சில செய்திகள் வந்துள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், தன் குல தெய்வமான அங்காளம்மன் கோயிலை புதுப்பித்து கட்டி வருகிறார்.

  1. கருணாநிதி குடும்பம் கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடித்து வரும் நிலையில் கோயில், குளம் என பக்திமயமாக கடவுள் பற்றுதலோடு வலம் வருகிறார் ஸ்டாலின் மனைவி துர்கா. இவர் இவ்வாறெல்லாம் செய்வது புதியதல்ல.
  2. காசிக்கு எல்லாம் கூட சென்று வந்தார். ஆனால், புடவை வாங்கினேன் என்ற ரீதியில் பேசியது, தமாஷாக இருந்தது. ஆனால், நிச்சயமாக மாமனாரான நாத்திகரின் ஆன்மா சாந்தியடைவே சென்றது வெளிப்படையான உண்மை. பாவம் இல்லாத ஆன்மா எப்படி சாந்தி அடைந்தது என்பதை இல்லாத கடவுளைத் தான் கேட்க வேண்டும்.
  3. 1991ல் திருக்குவளைக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
  4. அதற்குப் பிறகு 15 ஆண்டுகள் கழித்து, மறுபடியும் 15 ஆண்டுகள் கழித்து, 2006ல் ஒரு வாரம் விமர்சியையாக மகா கணபதி ஹோமம், 04-07-2006 அன்று நடந்தது. கணபதி ஹோமத்தை யார் செய்தார்கள் என்று ஈவேரா, அண்ணா அல்லது கருணாநிதி சமாதியில் தான் சென்ற் கேட்க வேண்டும்.
  5. பிறகு 08-07-2006 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. பூசாரி கலிய பெருமாள் மற்றும் ஊரார் எல்லா ஏற்பாடுகளும் செய்தனர். ஸ்டாலின் தவிர எல்லா குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதேப் போல, செய்திகளும் வெளி வந்தன.
  6. ஆக, மறுபடியும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2021 ஆண்டு வருகிறது. அது அடுத்த ஆண்டுதான், ஆனால், தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்கப் போகின்ற வருடம்.  ஆனால், கோவில் மாறிவிட்டது போலும்!

அதிமுக, பிஜேபி என்ன செய்யப் போகின்றன?: ஜெயலலிதா இல்லாத நிலையில், அதிமுகவிற்கு அவரைப் போன்ற ஓட்டுக்களைக் குவிக்கும் தலைவர் இல்லை. அதனால் தான், இன்று வரை “அம்மாவின் ஆட்சி” என்றே பேசி வருகின்றனர். பிஜேபியைப் பொறுத்த வரையில், இது அவர்களுக்குப் பெருத்த இடி என்றே சொல்லலாம். ஏனெனில், அத்தகைய, “திராவிடத்துவ ஆன்மீகம்,” அல்லது “போலி ஆன்மீகம்” என்று, திமுக எப்படி பயன்படுத்தினாலும், அது அவர்களுக்கு சாதகமாகவே போகும்.  தேர்தல் பிரச்சாரத்தினால், மேடைப் பேச்சுகளால் பிஜேபிக்கு ஓட்டு கிடைக்காது. ஆக, திமுக

  1. திராவிடத்துவ மென்மையான இந்துத்துவம்
  2. இந்துத்துவ மென்மையான திராவிடத்துவம்
  3. திராவிடத்துவ நாத்திகம்
  4. திராவித்துவ இந்துவிரோத நாத்திகம்.
  5. திராவிடத்துவ இந்துத்துவம்.

என்று எதைப் பின்பற்றினாலும், ஒவ்வொரு வகையிலும் ஓட்டு கிடைக்கும். ஆனால், மற்ற கட்சிகளுக்கு என்ன கிடைக்கும்? திமுகவிற்கு 70 ஆண்டு விசுவாசத் தொண்டர்கள் உள்ளனர். அதனால் பதவிக்கு வந்த நீதிபதிகள், அதிகாரிகள் (எல்லாத் துறைகளையும் சேர்த்து) முதலியோர் உள்ளனர். அவர்களது மகள்-மகன் என்று அடுத்த தலைமுறை வாரிசுகள் உள்ளனர். அவர்கள் ஜாதி வாரியாக, விசுவாசமாக வேலை செய்து, பலன் பெற்று வருகின்றனர், நன்றாக சம்பாதித்து வருகின்றனர். இவற்றையெல்லாம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை.பிஜேபியினர் இந்த கட்டமைப்பை உடைக்க முடியுமா? திமுக போன்ற அஸ்திவாரம் இல்லாமல், 3% ஓட்டு வங்கியை வைத்துக் கொண்டு, ஆட்சியைப் பிடிப்பேன் என்று கனவு காண்பது அபத்தமானது.

© வேதபிரகாஷ்

30-11-2020

இந்துத்துவ பாதையில் திமுக: பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி எந்த அளவுக்கு உதவும் என்பது 2021 தேர்தல் நிரூபித்து விடும் (1)

நவம்பர் 30, 2020

இந்துத்துவ பாதையில் திமுக: பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி எந்த அளவுக்கு உதவும் என்பது 2021 தேர்தல் நிரூபித்து விடும் (1)

வேல் யாத்திரையில் பிஜேபிக்கு எதிராக திமுக போட்டி: “நமது நிருபர்” என்று தினமலரில் இச்செய்தி வந்துள்ளது[1]. தமிழக பா.ஜ., வேல்யாத்திரை நடத்தி வரும் நிலையில், சென்னையில் இருந்து, வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு, தி.மு.க., – எம்.எல்.ஏ., மோகன் 27-11-2020 அன்று வேல் யாத்திரை மேற்கொண்டார்[2]. நியூஸ்.டி.எம்.தமிழ்[3], “வல்லக்கோட்டை அருள்மிகு முருகன் திருக்கோவிலுக்கு, தி.மு.. எம்.எல்.., மோகன் வேல் யாத்திரை மேற்கொண்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,” என்று ஆரம்பித்து, “இந்த தகவல் அறிந்த திமுக தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல்,” என்று முடித்துள்ளது[4] தமாஷாக இருக்கிறது. கருணாநிதி முதல் இப்பொழுது, உதயநிதி வரை, பெண்டாட்டி, அம்மா, மகள், அக்காள்,தங்கை என்று பெண்களை சாமி கும்பிட வைத்து, பலன் பெற்று, வெளியில், மேடைகளில் திராவிட நாத்திகம் பேசும், இந்து விரோதிகளாகத் தான், அவர்கள் இருந்திருக்கிறார்கள்,இருக்கிறார்கள். திக-திமுகவினருக்கு, இந்த நாடகம், இரட்டை வேடம் முதலியவைத் தெரிந்த விசயங்கள் தான்.

திமுக எம்.எல்.ஏ வேல் யாத்திரை செல்வது, பக்தியா, அரசியலா?: தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தி, கருப்பர் கூட்டத்தினர் சமூக வலை தளங்களில், ‘வீடியோ’ வெளியிட்டனர். இதற்கு, தமிழக பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை நடத்தியது. கருப்பர் கூட்டத்தை சேர்ந்தவர்கள், ‘குண்டர்’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், கடவுள் முருகனை இழிவுபடுத்துவோருக்கு எதிராக, தமிழக பா.ஜ., தலைவர் முருகன், வேல் யாத்திரை நடத்தி வருகிறார். அந்நிலையில், திமுக அவற்றை ஒடுக்க, தடுக்க மாற்றாக சில வழிமுறைகளைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளது. இதை, பிரஷாந்த் குமார் சொல்லிக் கொடுத்த யுக்தியா அல்லது திமுகவினரே திட்டமிட்டு, இந்துக்களை ஏமாற்ற முயல்கிறார்களா என்று கவனிக்க வேண்டும். எப்படியாகிலும் மே 2021ற்குள்தெரிந்து விடும்.

வல்லக்கோட்டைக்கு வேல் யாத்திரை செய்த திமுக எம்.எல்.வல்லான் என்ற அரக்கன்: திருத்தணி முருகன் கோவிலில் துவங்கிய இந்த யாத்திரை, அறுபடை வீடுகளில் வழிபாடு நடத்திய பின், திருச்செந்துாரில் முடிகிறது. இந்நிலையில், அண்ணாநகர் தொகுதி, தி.மு.க., – எம்.எல்.ஏ., மோகன் தலைமையில், பகுதி செயலர் ராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் முருகன் உட்பட, 50 தி.மு.க., நிர்வாகிகள், நேற்று சென்னை அமைந்தகரையில் உள்ள கன்னியம்மன் கோவிலுக்கு சென்றனர். கோவிலில் வேலுக்கு மாலை அணிவித்து பூஜை செய்தனர். பின், அங்கிருந்து அனைவரும், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, 9 கி.மீ., தொலைவில் உள்ள, வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு, வேலுடன் யாத்திரை புறப்பட்டு சென்றனர். வல்லான் என்ற அரக்கன், தேவர்களை சித்ரவதை செய்த தாகவும், முருகப்பெருமான் அவனை வீழ்த்தி அமைதியை நிலைநாட்டியதாகவும், அவரை பெருமைப்படுத்தும் வகையில், வல்லக்கோட்டை முருகன் கோவில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு புராணம் பாடி,  அண்ணாநகர் தொகுதி, தி.மு.க., – எம்.எல்.ஏ., மோகன் தலைமையில், 50 பேர் அனுமதியுடன் வேல் யாத்திரை சென்றது விவரிக்கப் பட்டது.

57 ஆண்டுகளாக சபரிமலைக்கு செல்வது, ஆண்டு தோறும் வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு செல்வது: வேல் யாத்திரை குறித்து, மோகன் எம்.எல்.ஏ., கூறியதாவது:வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு, 33வது ஆண்டாக யாத்திரை செல்கிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு. கடந்த, 57 ஆண்டுகளாக சபரிமலைக்கும் மாலை அணிந்து, விரதம் இருந்து, அய்யப்பனை தரிசித்து வருகிறேன். ஆண்டு தோறும் வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு, 2,௦௦௦ பக்தர்களுடன் செல்வேன். கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டு, 50 பேருக்கு தான் அனுமதி கிடைத்துள்ளது. வரும், 202௧ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும்; கொரோனா தாக்கத்திலிருந்து, உலக மக்கள் விடுபட வேண்டும். புயல் மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்கள் மீள வேண்டும். இவை உட்பட, சில வேண்டுதல்களுடன், நானும், மற்றவர்களும் யாத்திரை மேற்கொள்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார். பிறகு, இந்த எம்.எல்.ஏ.வை, கருணாநிதி கிண்டல் அடிக்காதது, கண்டிக்காதது, முன்னர் செய்திகள் வராதது வியப்பே. குங்குமம் பூசிய, ஒருவரைப் பார்த்தே, “என்ன நெற்றியில் ரத்தமா?,” என்ற கேட்ட தலைவர், இவரை எப்படி விட்டு வைத்தார் என்று தெரியவில்லை.


பாஜகவின் எழுச்சியால் தமிழக அரசியல் களம் மாறத் தொடங்கியுள்ளது[5]: ‘இந்து விரோதக் கட்சி’ என்ற முத்திரையை போக்கும் முயற்சியில் திமுகவினர் களமிறங்கி உள்ளனர்[6]. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் தொடர்ந்து 2-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக, நாடு முழுவதும் கட்சியை வலுப்படுத்தி வருகிறது. 1 முதல் 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுவந்த ஹரியாணா, வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள், காங்கிரஸை வீழ்த்தி அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்குகடும் போட்டியை ஏற்படுத்தியது, தெலங்கானாவில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதியை வீழ்த்தியது என்று பாஜகவின் எழுச்சி மற்றகட்சிகளை உற்றுநோக்க வைத்துள்ளது.

திமுகவை எதிர்த்து பிஜேபி செய்யும் பிரச்சாரம்: தமிழகத்தில் பாஜக இதுவரை 3 சதவீத வாக்குகளை தாண்டவில்லை. 1996 சட்டப்பேரவை தேர்தலில் தனித்து ஒரு தொகுதியில் வென்ற பாஜக, 2001-ல் திமுக கூட்டணியில் 4 தொகுதிகளை வென்றது. அதன் பிறகு எவ்வளவு முயன்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவால் ஓரிடத்தில்கூட வெல்ல முடியவில்லை. ஆனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கணிசமான இடங்களில் வெல்ல பாஜக வியூகம் வகுத்துவருகிறது. அதிமுக அரசின் தடையையும் மீறி தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மேற்கொண்டு வரும் வேல் யாத்திரைக்கு கிடைத்த வரவேற்பால் அக்கட்சியினர் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் என்றுபாஜகவுக்கு செல்வாக்கே இல்லாத இடங்களிலும் வேல் யாத்திரைக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டது தமிழகத்திலும் பாஜக எழுச்சி பெறுகிறதோ என்ற எச்சரிக்கையை திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. முகநூல், ட்விட்டர், யூ-டியூப், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுகவுக்கு சவால்விடும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களிலும், வேல் யாத்திரையின்போதும் திமுகவை இந்து விரோதக் கட்சி என்று பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை இழந்துவிடுவோமோ என்று திமுகவினர் நினைக்கத் தொடங்கியுள்ளனர்.

திமுக தனது வியூகத்தை மாற்றத் தொடங்கியுள்ளது: இதனால், திமுக தனது வியூகத்தை மாற்றத் தொடங்கியுள்ளது. கடந்த 20-ம் தேதி நாகை மாவட்டம் திருக்குவளையில் தனது சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சார பயணத்தை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார். அப்போது, வேளாங்கண்ணி தேவாலயத்தின் தலைவருடன் காணொலியில் பேசுவதை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார். நாத்திக வாதம் பேசும் திமுக, இந்து அல்லாத மற்றமதத்தவர்களுடன் நெருக்கம் காட்டுவது ஏன் என்று சமூக ஊடகங்களில் பாஜகவினர் கிண்டலடித்தனர். அதைத் தொடர்ந்து மறுநாளே, திருவாவடுதுறை ஆதீனத்தை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்துஆசி பெற்றார். இந்த படத்தை சமூகஊடகங்களில் பெரிய அளவில் திமுகவினர் விளம்பரம் செய்தனர். இந்து விரோதக் கட்சி என்ற குற்றச்சாட்டை மாற்றும் திமுகவின் உத்தியாகவே இதை அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

© வேதபிரகாஷ்

30-11-2020


[1] தினமலர், வேல் யாத்திரை சென்ற தி.மு.., – எம்.எல்.., Updated : நவ 29, 2020 00:47, Added : நவ 28, 2020 22:50.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2661203

[3] நியூஸ்.தமிழ், திமுக எம்எல்ஏ நடத்திய வேல் யாத்திரை !, By Newstm Desk | Sun, 29 Nov 2020

[4] https://newstm.in/tamilnadu/vail-pilgrimage-conducted-by-dmk-mla/cid1821284.htm

[5] தமிழ்.இந்து, தீபாவளிக்கு வாழ்த்துகோயில்களுக்காக போராட்டம்… ‘இந்து விரோதக் கட்சிஎன்ற முத்திரையை அகற்ற களமிறங்கும் திமுக: பாஜகவின் எழுச்சியால் மாறும் தமிழக அரசியல் களம், செய்திப்பிரிவு, Published : 30 Nov 2020 03:10 am; Updated : 30 Nov 2020 06:57 am

[6]  https://www.hindutamil.in/news/tamilnadu/606735-tamil-nadu-political-arena.html

கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி: இவர்கள் விபூதி வைத்தால் என்ன, துடைத்தால் என்ன? அவர்களுக்கு அதெல்லாம் சகஜம் ஆனால், திராவிடத்துவவாதிகளின் வழிகளை இந்துத்துவவாதிகள் பின்பற்றுவது ஏன்? (2)

நவம்பர் 23, 2020

கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி: இவர்கள் விபூதி வைத்தால் என்ன, துடைத்தால் என்ன? அவர்களுக்கு அதெல்லாம் சகஜம் ஆனால், திராவிடத்துவவாதிகளின் வழிகளை இந்துத்துவவாதிகள் பின்பற்றுவது ஏன்? (2)

தந்தை விபூதி அழித்தான், தனயன் வைத்துக் கொண்டான்: மயிலாடுதுறை உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கல்லூரி மாணவிகளிடம் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார்[1]. அதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவிகள் உதயநிதி ஸ்டாலினுடன் ஆர்வமுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். 22-11-2020 அன்று மூன்றாவது நாளாக கும்பகோணத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் உதயநிதி ஸ்டாலின் கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் பலியான குழந்தைகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகினார். பின்னர் திருபுவனத்தில் நெசவாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் கும்பகோணத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டார். தேவர் குருபூஜைக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அங்கு அவருக்கு வழங்கப்பட்ட திருநீற்றை நெற்றியில் இருந்து அழித்த விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை[2]. ஆனால் ஸ்டாலின் மகனான உதயநிதி தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்று திருநீறு பூசியிருக்கிறார்.இது கட்சித் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது[3], என்று ஊடகங்கள் குறிப்பிட்டாலும், தந்தையும்-தனயனும் திட்டத்துடன் தான் செயல்படுகின்றனர் என்பது நன்றாகவே தெரிகின்றது.

21-11-2020 அன்றே, தருமபுரி ஆதீனம் புகைப்படங்களைப் போட்டு, சந்திப்பை பதிவு செய்தது:  முதலில், இச்சந்திப்பு, பல கேள்விகளை எழுப்பின.

  1. இரவு பத்து மணிக்கு மேலே மடத்தில், இப்படி நாத்திகவாதியை வரவழைத்து, ஆசிர்வதித்து, பிரசாதம் கொடுக்கும் படலம் நடக்குமா?
  2. “பெண்டாட்டியை வைத்து சாமி கும்பிடற ஆட்கள்,” அரசியலில் வெற்றி என்றால், தானே வந்து கும்பிடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை!
  3. ‘தமிழ் கடவுள் சேயோன்’ என்ற ஆன்மிக நூலை சந்நிதானம் வெளியிட, முதல் பிரதியை உதயநிதி பெறுவதில் என்ன வியப்பு, ஞான பழத்தையா கொடுத்தார்?
  4. “இரவு எத்தனை மணி ஆனாலும் தருமபுரம் குருமகா சந்நிதானத்தைச் சந்தித்து ஆசி பெறுவேன்,” என்று உதயநிதி கூறினார் என்றால், என்ன நாடகம் இது?
  5. வேலை வைத்து இந்துதுவவாதிகள் வேலை செய்யும் போது, நாத்திகரும், “தமிழ் கடவுள் சேயோன்’ என்று வினை செய்தால், அம்மை-அப்பனே வரவேண்டும்!

போன்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், “திமுக இளைஞர்அணிசெயலர் உதயநிதிஸ்டாலின் தருமையாதீன குருமணிகளிடம் ஆசிபெற்றார்,” என்றும், “தாத்தாவும் பேரனும் தருமையாதீனத்தில்,” தலைப்பிட்டு, 21-11-2020 அன்றே, தருமபுரி ஆதீனம் புகைப்படங்களைப் போட்டு, சந்திப்பை பதிவு செய்தது. அதனால், திமுக மற்றும் மடம் இதனை, ரகசியமாக வைத்துக் கொள்ளவில்லை அல்லது சதிப்பு அத்தகையதல்ல, வெளிப்படையானது அல்லது வெளிப்படுத்த வேண்டிடியது என்று தீர்மானத்துடன் இருந்தது தெரிகிறது. ஊடகங்களிலும் அப்புகைப்படங்கள் வெளிவந்துவிட்டன. கருணாநிதி மற்றும் முந்தைய மடாதிபதி இருக்கும் புகைபடத்தை, பிரேம்-அலங்காரத்துடன் நினைவுப் பரிசாக கொடுத்தது, இது ஒரு தீர்மானிக்கப் பட்ட சந்திப்பு என்பதனை உறுதி செய்கிறது.  சைவர்களோ, பக்தர்களோ, இவ்வாறு முறைகள் மீறப் படுகின்றன என்று கண்டிக்கவில்லை.

தாத்தாவும் பேரனும் தருமையாதீனத்தில், என்று நினைவு பரிசு அளித்தது !
தாத்தா முதல் பேரன் வரை தருமபுர ஆதீன தொடர்புகள்!

இந்துத்துவ வாதிகளின் தமாஷாக்கள்: “தேர்தல் நாடகத்தை ஆரம்பித்துவிட்டனர். இந்துக்களுக்கு மீண்டும் சொல்கிறேன் முருகனுக்குக் காவடி தூக்கினாலும் ஒரு பொழுதும் திமுகவை நம்பிவிட வேண்டாம். பதவிக்காக அனைத்து நாடகத்தையும் வெக்கமே இல்லாமல் இந்த குடும்பம் நடத்தும். கறுப்பர் கூட்டம் நடத்தியதே திமுக ஆதரவாளர்கள், நிர்வாகிகள் தான்.

  1. கறுப்பர் கூட்டத்தை ஏன் திமுக ஸ்டாலின் கண்டிக்கவில்லை?
  2. இந்துகளை பண்டிகைக்கு மட்டும் ஏன் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பது இல்லை?
  3. திக அமைக்கும் மேடைகளில் ஏன் இந்து கடவுள்களை அருவருப்பாக திட்ட திமுக ஆதரவாளர்க்ள் அனுமதிக்கிறார்கள்?
  4. இதே இஸ்லாமிய கிருஸ்தவரை ஏன் பேசுவது கூட இல்லை?

இந்த நான்கு கேள்வி கேளுங்கள் எங்கே உதய நிதி வந்தாலும். (ஆம இந்த பெரியாரியவாதிகளை உதயநிதி தன் வீட்டு நாய் என்று நினைக்கிறாரா? சுயமரியாதை சுயமரியாதை என்று உதயநிதிக்கு சொம்பு தூக்கும் அளவுக்கு வந்துவிட்டார் சுபவீ. இதெல்லாம் ஒரு வாழ்க்கை!),” என்று பெரிய வீராப்பாக மாரிதாஸ் பதிவு செய்வது தமாஷாக இருக்கிறது. இதில் ஒன்றும் விசயமே இல்லை. 1960களிலிருந்து, நேரிடையாக தமிழக அரசியலை கவனித்து வருபவர்களுக்கு இது ஒரு ஜோக்! “இந்துக்களுக்கு மீண்டும் சொல்கிறேன் முருகனுக்குக் காவடி தூக்கினாலும் ஒரு பொழுதும் திமுகவை நம்பிவிட வேண்டாம்,” என்று சொல்வது தமாஷ். ஏதோ ஒட்டு மொத்த இந்துக்களுக்கு அறிவுரை சொல்கிறேன் என்ற ஆணவம் தான் உள்ளது. கமலாலயத்தில் 12-11-2020 அன்று கிருத்துவ பாஸ்டர்கள் ஜெபம் செய்த போது, இவரைக் காணோம், இப்பொழுது இதற்கெல்லாம் குதிக்கிறார்[4]. ஆக, இதெல்லாம் தேர்தல் வரை உச்சக்கட்டத்தில் இருக்கும்.

இந்த நடத்தை ஆதரித்து போற்றும் இந்துத்துவவாதிகள்!

பெண்டாட்டியை வைத்து சாமி கும்பிடற ஆட்கள்,”  அரசியலில் வெற்றி என்றால், தானே வந்து கும்பிடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை: தினமலர், “தேர்தல் வருகிறது., புறப்படுவோம் கோவிலுக்கும், மடத்திற்கும்,“ என்று செய்தி வெளியிட்டுள்ளது[5]. ஆகவே, பெண்டாட்டியை வைத்து சாமி கும்பிடற ஆட்கள்,”  அரசியலில் வெற்றி என்றால், தானே வந்து கும்பிடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை,” என்பது தான் நிதர்சனம். ஶ்ரீ ராமகோபாலன் முன்னரே, “பெண்டாட்டியை வைத்து சாமி கும்பிடற ஆட்கள்,” என்று திராவிட நாத்திக- இந்துவிரோதிகளைக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, 2020ல் அதைப் பற்றி கண்டுபிடித்து, பெரிய ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை! இந்துக்கள், குறிப்பாக இந்துத்துவ வாதிகள் மாறுவதை கவனிக்க வேண்டும். அரசியல், அதிகாரம், பணம், பதவி……….என்றால் மாறும், மாறி விடும் போக்கைக் கவனிக்க வேண்டும். கருத்து-பதில் கருத்து என்ற உரையாடலைக் கூட சகித்துக் கொள்ளாமல் இருக்கும், இந்துத்துவ பண்டிதர்கள் இருப்பது திகைப்பாக இருக்கிறது! ஓட்டுவங்கி என்ற ரீதியில், மக்களை ஜாதி, மதம் என்று பார்க்கும் போது, எல்லா கட்சிகளும் ஒன்றாகத்தான் ஆகின்றனர். இந்துக்களுக்கு என்று, உண்மையான இந்துத்துவம் பேசும் சித்தாநந்தவாதிகளே, மாறும் போது, திராவிடத்துவவாதிகளை குறைச் சொல்வது எந்த பிரயோஜனும் இல்லை. “திருவாரூர் தேரை நாங்கள் தான் ஓட வைத்தோம்,” என்றெல்லாம் கூறிக்கொண்டதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வேல் யாத்திரையில், பெண்கள் தெருவில் ஆட்டம் போட்டது. இந்த நடத்தை ஆதரித்து போற்றும் இந்துத்துவவாதிகள்!
இந்துத்துவப் பண்டிதர் ஆதரித்து பெரிய விளக்கம் கொடுத்தது!

வேல் யாத்திரையில் பெண்களை வைத்து நடனம்: வேல் யாத்திரையின் போது, நடுத்தெருவில், பெண்கள் சினிமா பாணியில் ஆடுவதாக ஒரு வீடியோ சுற்றில் உள்ளது. திராவிடத்துவவாதிகள் பாணியில், இதுக்கள் செல்ல வேண்டிய அவசியல் இல்லை. தெரிந்தும், அதனை ஆதரிக்க வேண்டும், நியாயப் படுத்த வேண்டும் என்று வலுக்கட்டாயமாக இந்துத்துவவாதிகள் ஆதரித்து வருகின்றனர். இந்துத்துவம் ஏன் இப்படி நீர்க்கப் படுகிறது, என்ற கோணத்தில் கவலைப் படவில்லை. மாறாக, ஸ்டான்லி ராஜன் (Stanely Rajan) என்ற இந்துத்தவ வாதி, வலதுசாரி பண்டிதர் ஒரு பெரிய விளக்கம் கொடுத்துள்ளது திகைப்பாக இருக்கிறது. அவர் “தேவதாசி” என்றெல்லாம் விளக்கம் கொடுத்துள்ளார். முன்பு, சொர்ணமால்யா “தேவதாசி” சிஸ்டத்தை ஏதோ ஒரு கூட்டத்தில் (பரத நாட்டியம் வாழவேண்டும், வார வேண்டும் என்ற ரீதியில்) ஆதரித்த போது, என்ன நடந்தது என்பதை ஞாபகத்தில் கொள்ளவில்லை. அரசியல் என்ற போதை-மயக்கத்தில் இருப்பதால், மற்றவையெல்லாம் இவர்கள் கண்களுக்கு, மனங்களுக்கு தெரியாமல் போகிறது என்று தெரிகிறது. மனசாட்சி இல்லாமல் வாத-விவாதங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்துவிரோதிகளை வெல்ல, அவர்களது வழிகளையே நாங்கள் பின்பற்றுவோம் என்பது போல இந்துத்துவாதிகள் நடந்து கொள்வது சரியில்லை.

©வேதபிரகாஷ்

23-11-2020


[1] https://www.hindutamil.in/news/todays-paper/tnadu/604361-.html

[2] தமிழ்.ஏசியன்.நெட்.நியூஸ், அப்பா நாத்தீகவாதியாம்.! மகன் ஆன்மீகவாதியாம். திமுக கொள்கையை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்..!, By T Balamurukan, Mayiladuthurai, First Published 23, Nov 2020, 7:43 AM

[3] https://tamil.asianetnews.com/politics/dad-is-an-atheist-the-son-is-a-spiritualist-netizens-tore-up-dmk-policy-and-hung-up–qk8cbj

[4]  பதில் சொல்ல முடியாமல் தடுத்துள்ளார். கருத்து-பதில் கருத்து என்ற  உரையாடலைக் கூட சகித்துக் கொள்ளாமல் இருக்கும், இந்துத்துவ பண்டிதர்கள் இருப்பது திகைப்பாக இருக்கிறது!

[5] தினமலர், தேர்தல் வருகிறது., புறப்படுவோம் கோவிலுக்கும், மடத்திற்கும்., Updated: நவ 22, 2020 15:44 | Added : நவ 22, 2020 14:38.

“பால் கமிஷன் அறிக்கை” மர்மங்கள்!

நவம்பர் 28, 2009

“பால் கமிஷன் அறிக்கை” மர்மங்கள்

நாளென் செய்யும், கோளென் செய்யும்” என்று நாத்திகர்ளும், ஆத்திகர்களும் கேட்கலாம். ஆனால், சரித்திரரீதியில் கடந்தகாலத்தை அதாவது இப்பொழுதைய 50-60 ஆண்டுகால நடப்புகளை நினைவில் வைத்திருந்தாலே அத்தகைய சம்பந்தத்தைப் பார்க்கலாம். “நவம்பர் 26” “26/11” என்று குறிப்பிட்டு எழுதுகிறார்களே, இது என்ன மூடநம்பிக்கையா, பகுத்தறிவா என்று நவீன மனங்கள் கேட்கலாம். ஆனால், அந்த 26-11 26/11 தேதிகள் நிச்சயம் கருணாநிதியை பாதித்துள்ளன. எவ்வளவு ஒப்புமைகள் பாருங்கள்!

லிபரான் அறிக்கை பால் அறிக்கை
    1. 1. மன்மோஹன் சிங் லிபரான் மன்மோஹன் சிங் மற்றும் சிதம்பரத்திடம் அறிக்கையைக் கொடுக்கிறார். மன்மோஹன் சிங்

அமெரிக்கா சென்றுவிடுகிறார்

    .
    1. 2.

24-11-2009

    மன்மோஹன் சிங் லிபரான் அறிக்கை விவரங்கள் கசிங்கின்றன! வெளியிட்ட நாளிதழ் “உள்துறை” அமைச்சகத்திடம் விவரங்கள் பெற்றதாகக் கூறுகிறது!
    1. 3.

26-11-2009

    நெருங்குகிறது. ஆகவே, அத்தேதியில் இது விவாதத்தைக் கிளம்பவேண்டும் என்ற போக்கு நன்றாகவே தெரிகிறது.
    4. அக்காலத்தில் பி.ஜே.பியுடன் இருந்தவர்கள் இன்று குற்றஞ்சாட்டுகின்றனர்!
    5. இனி கல்யாண்சிங் காங்கிரஸில் சேரவேண்டியதுதான் பாக்கி! ஜஸ்வந்த சிங்கிற்கு ஏற்கெனவே கதவு திறந்திருக்கிறது!
1. சி. ஜே. ஆர், பால் [அன்றைய கமிஷனின் அறிக்கையாளர்] தனது அறிக்கையை அரசிடம் கொடுத்து அமெரிக்கா சென்றுவிடுகிறார்.

2. 24-11-1981; அமைக்கப்பட்ட நீதிபதி பால் கமிஷன் அறிக்கையை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி  அறிக்கையின் பிரதியைக் கைப்பற்றி நிருபர்களிடம் வெளியிட்டார்.

3. 26-11-1989 அன்றுதான் திருச்செந்தூர் கோயில் விடுதியில் கோவில் அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்

4. கருணாநிதி குற்றஞ்சாட்டிய ஆர். எம். வீரப்பன் இன்று நண்பராகிறார்!

5. தண்டிக்கப்பட்ட அன்றைய அரசு அதிகாரி சண்முக நாதன் இப்போதும் கருணாநிதியின் செயலாளராக இருக்கிறார்!

26-11-1980: “திருச்செந்தூர் கோயில் விடுதியில் கோவில் அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்”, என்ற செய்தி, கொலை என்றெல்லாம் தமிழிதழ்களில் வெளிவந்தன. ஆளும் அதிமுக மற்றும் எதிர் கட்சி திமுக ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டனர். உண்டியல் பணத்தை சுப்பிரமணியப்பிள்ளையே திருடி மாட்டிக் கொண்டதாகவும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஆர்.எம்.வீ முதல் அ.தி.முகவினர் எல்லாரும் பிரசாரம் செய்தார்கள்[1]. கருணாநிதியும் தி.முகவும் இதை மறுத்தார்கள். உண்டியலில் இருந்த வைர வேலைத் திருடிக் கொண்டது வீரப்பன்தான் என்றும் அதைத் தட்டிக் கேட்ட நேர்மையான அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை கொலை செய்யப்பட்டதாகவும் தி.மு.க குற்றம் சாட்டியது. பதிலுக்கு அதிமுக, திமுகவைக் குற்றஞ்சாட்டியது!

-12-1980: திருச்செந்தூர் கோயில் உதவி ஆணையர் சுப்பிரமணியப் பிள்ளை கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு, அதற்கு சி. ஜே. ஆர். பால், என்ற ஓய்வு பெற்ற நிதிபதி உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.

1981: அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப் பட்டது. நீதிபதி சி.ஜெ.ஆர்.பால் அறிக்கையைக் கொடுத்துவிட்டு அடுத்த விமானத்தில் ஒரேயடியாக அமெரிக்கா சென்று செட்டிலாகிவிட்டார்.

1981: அதற்குள் அறிக்கையின் நகல் கருணாநிதிக்குக் கிடைக்கிறது.

24-11-1981; அமைக்கப்பட்ட நீதிபதி பால் கமிஷன் அறிக்கையை 24-11-1981-ல் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி  அறிக்கையின் பிரதியைக் கைப்பற்றி நிருபர்களிடம் வெளியிட்டார்.

01-02-1982: G. O. M. S. No. 161  பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு – ஆ) 01-02-1982 தேதியிட்ட, ஆணை வெளியிடப்பட்டது.

01-02-1982: இந்து அறநிலை மற்றும் காப்பாணையத்தின் சரிபார்க்கும் அதிகாரி இறந்ததற்கான காரணங்களை ஆய்ந்து வெளியிட்ட சி. ஜே. ஆர். பால், என்ற ஓய்வு பெற்ற நிதிபதியின் பரிந்துரைகள் சட்டசபையில் பார்வைக்கு வைக்கப்பட்டது.

11-02-1982: வீரப்பன், செய்தி மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் கீழ்கண்ட தீர்மானத்தை வைத்தார்[2]:

26 நவம்பர் 1980 என்று சி. சுப்பிரமணியப் பிள்ளை, இந்து அறநிலை மற்றும் காப்பாணையத்தின் சரிபார்க்கும் அதிகாரி இறந்ததற்கான காரணங்களை ஆய்ந்து வெளியிட்ட சி. ஜே. ஆர். பால், என்ற ஓய்வு பெற்ற நிதிபதியின் பரிந்துரைகள்  (02-02-1981 அன்று அவையில் வைக்கப்பட்டது) G. O. M. S. No. 161  பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு – ஆ) 01-02-1982 தேதியிட்டது, ஆணைக்கு பிற்சேர்க்கையாக இணக்க்ப்பட்ட அரசாங்கத்தால் எடுக்கப் பட்ட நடவடிக்கைப் பற்றி விவாதம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்த விவாதம் 11 முதல் 13 வரை நடந்தது, 14 உறுப்பினர்கள் பங்கு கொண்டார்கள்”.”

13-02-1982: பால் கமிஷன் அறிக்கைப் பற்றிய விவாதம் தொடங்கியது. விவாதத்தில் சட்டப் பேரவையில் பேசிய கரு, அறிக்கை எவ்வாறு வெளியானது என்பது குறித்து ஆராயாமல் அதில் கூறியுள்ளது பற்றி கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

அறிக்கை கசிந்த குற்றத்திற்காக, அரசு அதிகாரிகள் சதாசிவம் (மொழி பெயர்ப்புத் துறை) மற்றும் சண்முக நாதன் இருவர் மீதும் எம்.ஜி.ஆர் அரசு கடும் நடவடிக்கை எடுத்தது.

15-02-1982: கருணாநிதி மதுரையிலிருந்து, திருச்செந்தூர் வரை நெடும்பயணம் என்று ஆரம்பித்தார்.

22-02-1982: திருச்செந்தூர் அடைந்து பயணம் முடித்துக் கொள்ளப் பட்டது.

26-11-1982: எஸ். கேசவ ஆதித்தன்,  ஒரு கார் விபத்தில் மரணம் அடைந்தார். 26-10-1980 அன்று, சுப்பிரமணியப்பிள்ளை மர்மமான முறையில் இறந்து கிடந்தார் / கொல்லப்பட்டார் என்றால், அதே தேதியில் இரண்டு வருடங்கள் கழித்து, இறந்தது ஆச்சரியம் தான்!

ஆர்.எம்.வீரப்பனின் இருமுகங்கள்: ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர் உயிரோட இருக்கும்போது அவருக்கு நெருக்கமாக இருந்தார். அற நிலைய அமைச்சர் பொருப்பில் இருந்து நிறைய சம்பாதித்தார். அவர் இறந்த்கபிறகு, தானே முதலமைச்சர் ஆகவேண்டும் என்ற ஆசையும் வளர்ந்தது. இதனால்தான், ஜானகி ராமச்சந்திரனைத் தூண்டிவிட்டு அவரை முதல்வராக்கி, அதிமுகவைப் பிளக்கப் பார்த்தார். அப்பொழுது ஜெயலலிதா வெளியேற்றப்பட்டதால், கருணாநிதியும் ஆதரித்தார். இப்போழுதோ கருவை ஆதரிக்கிறார்!

கருணாநிதி, சிதம்பரம், மற்றவர்களின் இருமுகங்கள், இரு நாக்குகள்: கருணாநிதி பி.ஜே.பியுடன் கூட்டு சேர்ந்துதான், மாறன் அமைச்சராக இருக்கமுடிந்தது. சிதம்பரம், ஒரு நேரத்தில் பி.ஜே.பியில் ஐக்கியமாக வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், சில பி.ஜே.பி காரர்கள் சிதம்பரம் பி.ஜே.பியில் சேருவதைக் கடுமையாக எதிர்த்தனர்.

வேதபிரகாஷ்

28-11-2009

 


[1] ஞாநி , மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள் , திண்ணை.காம்,

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20411253&format=html

[2] The Tamilnadu Legislative Assembly, Seventh Legislative Assembly, Fourth Session – First meeting (From 2nd February, 1982 to 19th February 1982), ப. 19, இங்கே பார்க்கவும்:

http://www.assembly.tn.gov.in/archive/Resumes/07assly/07_04_1.pdf