Archive for the ‘ரசீது’ Category

தமிழகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம் (3)

நவம்பர் 7, 2011

தமிழகத்தில் வெடிகுண்டு யாரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம் (3)


தமிழகத்தில் எப்படி வெடிகுண்டு கலாச்சார ஆரம்பித்தது, ஊக்குவிக்கப்பட்டது, வளர்ந்தது, பரவியது என்பதைப் பற்றி முந்தைய கட்டுரையில் விளக்கப் பட்டுள்ளது[1]. தீவிரவாதக் குழுக்கள் வெடிகுண்டுகளை உபயோகித்து அப்பாவி மக்களைக் கொன்று, பயங்கரவாதம் மூலம் பீதியை பரப்ப எண்ணுகின்றன[2]. எப்படி ஜிஹாத் கத்தியிலிருந்து வெடிகுண்டு முறைக்கு மாறியுள்ளது என்பதும் எடுத்துக் கட்டப்பட்டது[3]. வெளிப்படையாக “கருப்பு தினம்” என்றெல்லாம் அக்குழுக்கள் சுவரொட்டிகள் ஒட்டுகின்றன, பொது இடங்களில் குண்டுகளை வைக்கின்றன. ஆனால், போலீஸார் ஏதோ செய்திகளை வெளியிடுவதோடு நின்று விடுகின்றனர்.

 

பயங்கரவாதிகளுக்கு வெடிமருந்து சப்ளை எப்படி? தினமலர் சிறப்பு நிருபர், தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “வெடிமருந்து விற்பனையில் நடக்கும் முறைகேடுகளால், தமிழகத்தின் அமைதிக்கு பெரும் ஆபத்து காத்திருக்கிறது. மதுரையில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை கொல்ல பயங்கரவாதிகள் பைப் வெடிகுண்டு வைத்த சம்பவத்துக்கு பிறகாவது, மத்திய அரசின் வெடிமருந்து

தினமலர் 06-11-2011 தேதியிட்ட நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் கல்குவாரிக்கு என்று விற்கப்படும் / வாங்கப் படும் வெடிமருந்துகள் எப்படி கணக்கில்லாமல் விற்கப்பட்டு தீவிரவாதிகளின் கைகளுக்குச் செல்கிறது என்று விளக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டுத்துறை, மாநில வருவாய்த்துறை மற்றும் போலீஸ் துறையினர் உஷாரடைய வேண்டும். ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக பிரசார யாத்திரை மேற்கொண்டிருக்கும் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, கடந்த மாதம் 28ம் தேதி, 2011 மதுரை – ராஜபாளையம் சாலையில் திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டி தரைமட்ட பாலம் வழியாக செல்லவிருந்தார். இவரது பயணத்திட்டத்தை அறிந்த பயங்கரவாதிகள், பாலத்தின் கீழ் பைப் வெடிகுண்டை வைத்து நாசவேலை செய்திருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் குண்டு கைப்பற்றப்பட்டு, தகுந்த நேரத்தில் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி.,(சிறப்பு புலன்விசாரணைக் குழு)யினர் மதுரை, சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த இஸ்மத், நெல்பேட்டையைச் சேர்ந்த அப்துல் ரகுமான், சென்னையைச் சேர்ந்த அல்டாப் உள்ளிட்டோரை கைது செய்தனர். இந்நபர்கள், சில ஆண்டுகளுக்கு முன் கர்நாடக மாநிலம், பெங்களூரில் தமிழக அதிரடிப்படை போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி இமாம்அலியின் ஆதரவாளர்கள் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
வெடி மருந்து விற்பனையாளர்களிடம் விசாரணைம் சோதனை: அத்வானியை கொல்ல திட்டமிட்ட பயங்கரவாதிகளுக்கு வெடிமருந்துகளை சப்ளை செய்தவர்கள்

வெடிமருந்துகள் கடைசி வரை யாருக்குச் செல்கின்றன அல்லது கடைசி பயனாளி இவர் தான் என்ற முறையில் ஒரு சான்றிதழ் / அத்தாட்சி பத்திரம் கொடுக்கப்படவேண்டும் என்று நிர்பந்திக்க வேண்டும். இல்லையென்றால் அல்லது அதற்கும் மீறி வெடிமருந்துகள் தீவிரவாதிகளின் கைகளுக்குச் சென்றல், விற்றவர்கள் தான் பொறுப்பு என்றிருக்க வேண்டும்.

யார் என்ற கோணத்திலும் சி.பி.சி.ஐ.டி., (எஸ்.ஐ.டி.,) விசாரிக்கிறது. பணத்துக்காக பயங்கரவாதிகளுக்கு வெடிமருந்துகள் விற்கப்பட்டதா அல்லது சதித்திட்டத்துக்கு உடந்தையாக இருந்து சப்ளை செய்தனரா என்ற மர்மம் நீடிக்கிறது. இதற்கிடையே, மதுரையில் நடந்த சதிச்செயல் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் வெடிமருந்து டீலர்கள், சப் – டீலர்களின் குடோன்களில் போலீசார், வருவாய் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். வெடிமருந்து கொள்முதல் அளவு, விற்பனை அளவு, கையிருப்பு அளவை ஆய்வு செய்தனர். ஒவ்வொரு முறையும் ஏதாவது அசம்பாவிதம் நடந்தபிறகே இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. வழக்கமான ஆய்வுகள் முறைப்படி நடப்பதில்லை.
போலி ஆவணம் தயாரிக்கும் டீலர்கள் – கல்குவாரி பெயரில் வெடிமருந்து திருப்பப்படும் விதம்: விழிக்காவிடில் பெரும் ஆபத்து: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கல் குவாரிகள் உள்ளன. இங்கு உடைக்கப்படும் பாறைகள் புளூ மெட்டல் மற்றும் “டஸ்ட்’டாக (துகள்) மாற்றப்பட்டு கட்டடம் கட்டுமானம், பாலங்கள், சாலை உள்ளிட்ட பொதுப்பணிகளுக்கு சப்ளையாகின்றன.

குவாரிகள் மட்டுமல்லாது, கிணறு தோன்றுபவர்கள், ரோடு போடுபவர்கள், வீடு கட்டுபவர்கள், விவசாயம் செய்பவர்கள், நிலத்தை சீர்செய்பவர்கள் என்று பலர் குறிப்பிட்ட காரணங்களுக்காக வெடிமருந்துகளை வாங்குகின்றன. இவை யார் கைகளில் செல்கின்றன என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

பாறைகளை உடைக்க ஜெலட்டின் வெடிமருந்து டெட்டனேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. வெடிமருந்துகளை இருப்பு வைத்திருக்கவும், கையாளவும் இரண்டு, மூன்று பெயர்களில் லைசென்ஸ் பெற்றிருக்கும் கல் குவாரி அதிபர்கள், தங்களுக்கு தேவையான வெடிமருந்துகளை டீலர்களிடம் கொள்முதல் செய்கின்றனர்; இங்கு தான் முறைகேடு துவங்குகிறது.குவாரி அதிபர்களின் தேவைக்கும் அதிகமாகவும் சில நேரங்களில் வெடிமருந்துகள் சப்ளை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. வழக்கமாக குறைந்த அளவிலேயே வெடிமருந்து கொள்முதல் செய்யும் லைசென்ஸ்தாரர்களின் பெயரில் போலி ரசீதுகளை போடும் டீலர்கள், அதிகமாக வெடிமருந்து கேட்கும் நபர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்று விடுகின்றனர்[4]. இவ்வாறு டீலரிடம் கொள்முதல் செய்யப்படும் வெடிமருந்துகளை “இ – வெகிக்கிள்’ (எக்ஸ்ப்ளோசிவ் வெகிக்கிள்) என்றழைக்கப்படும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வசதி கொண்ட வாகனத்தில், குவாரிகளுக்கு எடுத்துச் செல்வது கிடையாது. பாதுகாப்பு விதிகளை அப்பட்டமாக மீறி கார், ஜீப், வேன்களில் எடுத்துச் செல்கின்றனர். இதனால், சாலையில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து நேரிடும் அபாயம் உள்ளது.
லைசென்ஸ் இல்லாத தனி நபர்களுக்கு வெடிமருந்து விற்பனை: லைசென்ஸ் இல்லாத நபர்களுக்கு வெடிமருந்துகளை விற்கக்கூடாது என்பது விதி. லைசென்ஸ்

ரேஷன் கடைகளில் ஒவ்வொரு நாள் இறுதியில், உள்ள ஸ்டாக் முழுவதும் விற்றுவிட்டதைப் போன்று, வாங்காத கார்டுகளின் எண்களைப் போட்டு பொருள் வாங்கியுள்ளது போலக் காட்டி, பில் போட்டு, அப்பொருட்களை ஹோட்டல்காரர்கள் / மளிகைக் கடைக்காரர்களுக்கு விற்றுவிடுவர். அம்முறையை வெடிமருந்து உருமம் பெற்ற விற்பனையாளர்கள் எப்படி செய்ய முடியும்?

பெற்ற நபர்களே வாங்கிச் சென்றாலும் பாறையை உடைக்க, கிணறு வெட்ட அவர்களாகவே வெடி வைத்துவிட முடியாது; அதற்கென லைசென்ஸ் பெற்ற நபர்களும் (ஷார்ட் பயரர்) உள்ளனர். ஆனால், வெடிமருந்து டீலர்களில் சிலர் அதிக லாபத்தையே நோக்கமாக கொண்டு, லைசென்ஸ் இல்லாதவர்களுக்கும் வெடிமருந்துகளை விற்று விடுகின்றனர். இதற்கான “கணக்கை’ நேர்செய்ய, லைசென்ஸ் பெற்றவர்களின் பெயரில் போலி விற்பனை ரசீது போட்டு விடுகின்றனர். இப்படி சாதாரணமன “ரேஷன் கடை” முறையை, வெடிமருந்து விற்பனையாளர்களும் பின்பற்றுகிறார்கள் என்றால் நம்பமுடியவில்லை.
1998வது மாதிரி பின்பற்றப்படுகிறதா – பயங்கரவாதிகளுக்கு வசதி: டீலர்களின் முறைகேடான செயல்கள் பயங்கரவாத செயல்களுக்கு பெரிதும் துணை போகின்றன. சதித்திட்டத்தை அரங்கேற்ற திட்டமிடும் உள்ளூர் பயங்கரவாதிகள், கூடுதல் தொகையை கொடுத்து எளிதாக வெடிமருந்துகளை வாங்கிவிடுகின்றனர். அதன்பின், எங்காவது ஓரிடத்தில் குண்டுவெடிப்பு அல்லது சதிச் செயல்கள் நடந்ததும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தூக்கம் கலைந்து எழுகின்றனர். கோவை நகரில் கடந்த 1998, பிப்., 14ல் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பல ஆயிரம் கிலோ வெடிமருந்துகள் கோவைக்கு கடத்தி வரப்பட்டு பைப் வெடிகுண்டு, டீ கேன் குண்டு, பார்சல் குண்டுகள் தயாரிக்கப்பட்டன. குண்டு வெடிப்பு நிகழ்ந்ததும் மைசூரு வெடிமருந்து வியாபாரி ரியாசுர் ரகுமான் கைது செய்யப்பட்டார்; வெடிமருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் முறையாக அவரது குடோனில் ஆய்வு

தீவிரவாதிகளே தங்களது தேவைகளுக்காக, பினாமிகளை அல்லது வேண்டியவர்களுக்கு டீலர்சிப் வாங்க பணம் கொடுத்து அவ்வாறே “டீலர்களை” வைத்திருந்தால், கிணறு வெட்டினேன், நிலத்தைச் சரிசெய்தேன் என்று கணக்கை முடிப்பது ஒன்றும் கடினமான செயல் இல்லையே?

நடத்தியிருந்தால் குண்டு வெடிப்பு சதியை தடுத்திருக்க முடியும். அலட்சியத்தால் குண்டுவெடிப்பு நிகழ்ந்து 58 பேர் உயிரிழந்து, 250 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அடுத்த சதிச்செயலாக மதுரையில் அத்வானிக்கு குறி வைக்கப்பட்டது. இதில், 7 கிலோ ஜெலட்டின், டெட்டேனேட்டர்கள் பயன்படுத்தப்பட்டன. இச்சம்பவம், லைசென்ஸ் பெறாத தனி நபர்களுக்கும் வெடிமருந்துகள் தாராளமாக சப்ளையாவதை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்பிறகாவது, வெடிமருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உஷாரடைந்து தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும். இல்லாவிடில், தமிழகத்தில், பயங்கரவாத செயல்கள் மீண்டும் தலைதூக்கும்.
வெடிமருந்து முறைகேடுகள் குறித்து, போலீஸார் ஆராய வேண்டிய விவரங்கள் – ஓய்வு பெற்ற கூடுதல் டி.ஜி.பி., ஒருவர் கூறியதாவது: “டீலர்களின் வெடிமருந்து குடோன்களை அவ்வப்போது ஆய்வு செய்து, பாதுகாப்பு விதிகளை அமல்படுத்தும் அதிகாரம் வெடிமருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், தாசில்தார் அந்தஸ்துக்கும் குறையாக வருவாய் அதிகாரிகள், டி.எஸ். பி.,கள், ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்களுக்கு உண்டு. இவர்கள், வெடிமருந்து குடோன்களில் குறித்த கால இடை வெளியில்

தணிக்கைச் செய்யப்பட வேண்டும் என்றால், அதில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் செய்தாக வேண்டும். நாட்டின் பாதுகாப்பு, மக்களின் உயிர் என முக்கியமான விஷயங்கள் இருப்பதால், அவ்வேலைக்கு நாட்டுப் பற்றுள்ள, லஞ்சம் வாங்காத, நாணயமான அதிகாரிகள் நியமிக்கப் படவேண்டும். முன்பு மும்பையில் ஆர்.டி.எக்ஸை அனுமதித்த அதிகாரிகள் போல இருந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை.

சோதனை நடத்த வேண்டும். டீலர்களில் பலரும் “நெ.2 பிசினஸ்’ (முறைகேடான விற்பனை) செய்ய வாய்ப்பிருக்கிறது. அதிகாரிகள் சோதனை நடத்தும்போது வெடிமருந்து சட்டத்தின்படி வரையறுக்கப்பட்ட அளவில் மட்டுமே வெடிமருந்துகள் அந்த குடோனில் கையாளப்படுகிறதா, கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளதா, போலி ரசீது புத்தகங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா, வெடிமருந்து இருப்பு வைக்கப்பட்டிருக்கும் “மெகஸின்’களில் கூடுதல் எண்ணிக்கையில் வெடிமருந்துகள் வைக்கப்பட்டுள்ளதா, கடந்த காலங்களில் எவ்வளவு வெடிமருந்துகள் விற்பனையாகியுள்ளன, தற்போது விற்பனை அதிகரித்திருந்தால் அதற்கான காரணம் என்ன, என்று பல கோணங்களிலும் ஆராய வேண்டும். லைசென்ஸ் பெற்ற நபர்களின் பெயரில் போலி ரசீதுகளை போட்டு விற்பனை செய்யவும் வாய்ப்புள்ளதால், சம்பந்தப்பட்ட லைசென்ஸ்தாரர்களிடமும் நேரடியாக விசாரிக்க வேண்டும்”.
தணிக்கைச் செய்யப்படாதலால் தீவிரவாதிகளுக்கு ஏதுவாக உள்ள வியாபாரம்: முறைகேடு நடந்திருந்தால் வெடிமருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி, “டீலர்ஷிப்’ லைசென்சை ரத்து செய்ய பரிந்துரைக்க வேணடும்.

தெளிவாக அல்லது வெளிப்படையாக உள்ள அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்க முடியாது என்பது இல்லை ஆனால், வேறு காரணிகளால் அதிகாரிகள் கட்டுண்டு கிடந்தால் அல்லது தீவிரவாதிகளின் கைகூலிகளாக இருந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது.

அப்போதுதான், பயங்கரவாதிகளுக்கு வெடிமருந்து சப்ளையாகாமல் தடுக்க முடியும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுபோன்ற முறையான சோதனைகள் பெரும்பாலான இடங்களில் நடப்பதில்லை. இதன் காரணமாக, சதிச்செயல் நடப்பதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன. மதுரையில் பா.ஜ., தலைவர் அத்வானியை குறிவைத்து, பாலத்தின் கீழ் குண்டு வைக்கப்பட்ட பின்னணியிலும், வெடிமருந்து டீலரின் முறைகேடு இருக்க வாய்ப்புள்ளது. இச்சதிச்செயலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு வெடிமருந்து சப்ளை செய்த டீலர் யார், இதுபோன்ற முறைகேடு எவ்வளவு காலமாக நடந்து வந்திருக்கிறது என்பதை கண்டறிந்தால் பல தகவல்கள் வெளியாகக்கூடும்.
டீலர்-சப்-டீலர்-வாங்குபவர் தொடரை விசாரிக்க வேண்டும்: உள்ளூர் வெடிமருந்து டீலர்கள், தன்னிச்சையாக முறைகேட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் மிக, மிக குறைவு. வெடிமருந்து தயாரிப்பு கம்பெனியில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும்

முன்னமே குறிப்பிட்டப்படி, தணிக்கை முறை மூலம், எளிதாக வெடிமருந்துகள் கடைசி பயனாளி வரை செல்வதை கண்காணிக்க முடியும். எல்லோருடைய விவரங்களையும் – புகைப்படம் / அடையாள அட்டை, பேன் நம்பர், உள்ளிட்ட கணினியில் பதிவு செய்து கொண்டால் யாரும் தப்பிக்க முடியாது.

மெயின் டீலர்களின் துணை இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன. காரணம், வெடிமருந்து தயாரிப்பு கம்பெனியில் இருந்து வெளியே அனுப்பப்படும் ஒவ்வொரு கிராம் வெடிமருந்துக்கும் கணக்கு விவரங்கள் பராமரிக்கப்படுகின்றன. எனவே, நாசவேலை தடுப்பு கண்காணிப்பு நடவடிக்கையை வெடிமருந்து உற்பத்தி கம்பெனிகளில் இருந்து குவாரிகளுக்கு சப்ளை செய்யும் டீலர்கள் வரை தொடர வேண்டும். தமிழகத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்தும் போது, அண்டை மாநிலங்களில் இருந்து கடத்தி வரவும் வாய்ப்புள்ளது. இதனால், மாநில எல்லைச் சாலைகளில் சோதனை நடவடிக்கைகளை இடைவிடாது மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, ஓய்வு பெற்ற கூடுதல் டி.ஜி.பி., தெரிவித்தார்.
மூட்டை மூட்டையாக வெடிமருந்துகள் பறிமுதல்[5]: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போலி ஆவணம் மூலமாக விற்பனை செய்யப்பட்ட வெடிமருந்துகள், போலீசாரின் சோதனையில் அடுத்தடுத்து பிடிபட்டுள்ளன.

  • கடந்த 2010, ஜன.,16ல் சேலம், ஜலகண்டாபுரத்திலுள்ள தனியார் மில்லில் சோதனை நடத்திய போலீசார் 20 ஜெலட்டின், 40 எலக்ட்ரானிக் டெட்டனேடர்களை பறிமுதல் செய்து, வெங்கிடு என்பவரை கைது செய்தனர்.
  • 2010, மார்ச் 2ல் தர்மபுரி, பென்னாகரம், பாப்பாரபட்டியில் செல்லபாண்டி என்பவரது வீட்டில் 20 ஜெலட்டின் உள்ளிட்ட வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
  • 2010, ஏப்.,5ல் நீலகிரி மாவட்டம், கூடலூர், கீழ்நாடுகானி கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்திய போலீசார் 38 ஜெலட்டின், 118 டெட்டனேட்டர்கள், 110 பியூஸ் ஒயர்களை பறிமுதல் செய்து, சுப்ரமணியம் என்பவரை கைது செய்தனர்.
  • 2010, ஆக.,14ல் அரச்சலூரில் சோதனை நடத்திய போலீசார் மணி என்பவரது வீட்டில் இருந்து 100 ஜெலட்டின் மற்றும் டெட்டனேட்டர்களை கைப்பற்றினர்.
  • 2011, ஏப்.,21ல், தேனி மாவட்டம், குமுளி – கம்பம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் டவுன் பஸ்சில் 12 மூட்டைகளாக கடத்தி வரப்பட்ட 600 ஜெலட்டின்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, மொக்கைராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். மேற்கண்ட சம்பவங்கள் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. வெடிமருந்து டீலர்களுக்கு கூடுதல் விலை கொடுத்து வெடிமருந்துகளை வாங்கிச் சென்றுள்ளனர். பாறை உடைக்க, கிணறு வெட்ட என, பல்வேறு காரணங்களை பிடிபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், வெடிமருந்துகளை கையாள்வதற்கான லைசென்ஸ் பெறாத நபர்களுக்கு, வெடிமருந்துகளை முறைகேடாக விற்பனை செய்துள்ள சம்பவம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கூடுதல் தொகை கொடுத்தால் போதும் யாருக்கு வேண்டுமானாலும் வெடிமருந்து கிடைக்கும் என்ற வாய்ப்பை பயங்கரவாதிகள் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தால் தமிழகத்தின் நிலை என்னாவது, என்ற அச்சம் போலீசுக்கும் உள்ளது. இதுகுறித்து டி.எஸ்.பி., ஒருவர் கூறுகையில், “லைசென்ஸ் பெறாத நபர்களுக்கு வெடிமருந்துகளை விற்பனை செய்த டீலர்கள் குறித்து முறைப்படி அறிக்கை அனுப்புகிறோம். ஆனால், முறைகேட்டில் ஈடுபட்ட டீலர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படுவதில்லை. இதுவே, முறைகேடுகள் அதிகரிக்க காரணம்’ என்றார்.

வேதபிரகாஷ்

07-11-2011


[1] வேதபிரகாஷ், தமிழகத்தில்வெடிகுண்டுதயரிப்பு, வெடிப்பொருட்கள்உபயோகம், வெடிகுண்டுகலாச்சாரம் (2), https://dravidianatheism2.wordpress.com/2011/10/29/bomb-blasts-in-tamilnadu-manufacture-logistics/

[2] வேதபிரகாஷ், தமிழகத்தில் வெடிகுண்டு தயரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம், https://dravidianatheism2.wordpress.com/2011/10/29/terror-bomb-manufacture-attacks-in-tamilnadu/

[3] வேதபிரகாஷ், கத்தியிலிருந்து குண்டுவெடுப்பு வரைமாறிவரும் ஜிஹாதின் தன்மை!, http://islamindia.wordpress.com/2011/09/11/transformation-of-jihadi-terror/

[5] சிறப்பு நிருபர், தினமலர், பயங்கரவாதிகளுக்கு வெடிமருந்து சப்ளை எப்படி? போலி ஆவணம் தயாரிக்கும் டீலர்கள், ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 06, 2911,

தமிழகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம் (2)

ஒக்ரோபர் 29, 2011
தமிழகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம் (2)
தமிழகத்தில் வெடிப்பொருட்கள், குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்: அருவங்காடு என்ற இடத்தில் இருக்கும் கார்டைட் நிறுவனம், இந்திய ராணுவத்திற்கு சப்ளை செய்கிறது[1]. தமிழக அரசு நிறுவனமான[2] “தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் லிமிடெட்” என்ற தொழிற்சாலையில் ரசாயன வெடிகுண்டு வகைகள் தயாரிக்கப் படுகின்றன[3]. குறிப்பாக அத்தொழிற்சாலை உற்பத்தி செய்யும் ரசாயன வெடிமருந்து கலவைகளில் இவ்வகை – நைட்ரோ செல்லூலோஸ் வருகிறது. நைட்ரோ செல்லூலோஸ் வகைகளில் ( Emulsion Explosives)  மூன்று வகைகள் உள்ளன[4]
  1. Non-Permitted – அனுமதிக்கப்படாதவை
  2. Permitted – அனுமதிக்கப்பட்டவை
  3. Seismic – பூமியதிர்வு ஆராய்ச்சி முதலியவற்றிற்கு உபயோகப்படுத்தப்படுபவை.

பென்டா எரித்ரிடோல் டிரை நைட்ரேட் என்ற [PETN (Pentaerythritol Tri-Nitrate) explosive] வெடிவகைகளும் உபயோகப் படுத்தப் படுகின்றன[5]. சமீபத்தில் இந்த வெடி மருந்துகள் கொண்ட குண்டுகளைத்தான் தீவிரவாதிகள் உபயோகப் படுத்தியுள்ளனர். இத்தகைய ரசாயனப் பொருட்கள் உபயோகம், அவற்றை பயன்படுத்தக் கூடிய முறைகளை அறிந்தவர்கள் என்று தெரிகிறது. குறிப்பாக தீவிரவாதத்திற்கு அவற்றை மாற்றியமைத்து குண்டுவெடித்து நாசவேலை செய்யும் பின்னணியையும் காட்டுகிறது[6]. இவை மொத்தமாக நியமிக்கப்பட்ட விற்பனை ஏஜென்டுகள் மூலம் விற்க்கப்படுகின்றன[7] மற்றும் மாநில வாரியாக டீலர்களும் உள்ளனர்[8]. முன்பு சந்திரபாபு நாயுடு கார்கள் செல்லும்போது, நக்ஸலைட்டுகளால் இந்த வகை குண்டுகள் உபயோயோகிக்கப்பட்டன[9]. அப்பொழுது உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனெவே, குவாரிகளுக்கு என்று வாங்கிச் செல்லும் வெடிமருந்துகள், குண்டுகள் முதலியவை தீவிரவாதிகளுக்குச் செல்கின்றன, அவர்கள் அவற்றை வெடிகுண்டுகளாக தயாரித்து, டைமர் முதலியவற்றுடன் உபயோகப் படுத்துகிறார்கள் என்று தெரிகிறது[10]. தமிழகத்தில் வெடித்துவரும் “பைப் வெடிகுண்டுகள்” குறிப்பிட்ட குழிவினரைக் காட்டுகிறது எனலாம்.

 

யாருக்கு தொடர்பு? – வழக்கை திசைத் திருப்பவா, உண்மையினை அறிந்து கொள்ளவா?  இப்பொழுதெல்லாம் போலீஸாரும், டாக்டர்களைப் போல ஆகிவிட்டார்கள், பதில் சொல்கிறார்கள் – “விசாரணை ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இது சம்பந்தப் பட்ட வல்லுனர்கள் அறிக்கை கொடுத்த பிறகு தான் மற்ற விவரங்கள் சொல்லமுடியும். நாங்கள் அதைப் பற்றி ஒன்றும் கூறாமுடியாது”, என்றா ரீதியில் பதில் அளிக்கின்றனர்.  போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “நேற்று அதிகாலை 3.30 மணியளவில் வடஇந்தியரை போல காணப்பட்ட மர்ம நபர், பாலம் அருகே நடமாடி கொண்டிருந்ததாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது[11]. வெடிகுண்டுகளை மணல் மூட்டைகளுக்கிடையே வைத்து பிரித்தபோது, அதில் 7 கிலோ எடையுள்ள, “ஹை பவர் ஜெலட்டின் ஜெல்’ வைக்கப்பட்டிருந்தது[12]; [தமிழன் டிவி எப்படி ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து நிரப்பப்பட்டும் …….என்று வெளியிட்டுள்ளது என்று தெரியவில்லை[13]. ஆர்.டி.எக்ஸ் என்பது சைகிளோ-டிரை-எதிலமைன்-டிரைநைட்ரோ அமைன் (Cyclotrimethylenetrinitramine) என்பதாகும்] அதனுடன் டெட்டனேட்டர்களும் இணைக்கப்பட்டிருந்தன. அவை செயலிழக்க வைக்கப்பட்டன. “ஜெல் 90′ வகையைச் சேர்ந்த இந்த வெடி மருந்துகள் எங்கிருந்து வாங்கப்பட்டன என்பது குறித்து, விசாரணை நடக்கிறது. இந்த வகை வெடி மருந்து, அரசு வெடி மருந்து கிட்டங்கியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் நக்சலைட்கள், வடமாநில பயங்கரவாதிகள் அல்லது ஏதாவது அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாமா என, போலீசார் விசாரிக்கின்றனர். சம்பவ இடத்தில் மத்திய உளவுப்பிரிவு, கியூ, சிறப்பு புலனாய்வு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவு அதிகாரிகள் குவிந்தனர். முதற்கட்ட விசாரணையில் வெடிகுண்டு தயாரிப்பில் கை தேர்ந்தவர்களால் மட்டுமே இச்செயலில் ஈடுபட்டிருக்க முடியும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அத்வானியின் கார் வரும்போது ஒருவர் பேட்டரியை இயக்கினால் வெடிக்கும் வகையில் குண்டு தயாரிக்கப்பட்டிருந்தது. தீவிரவாத அமைப்புகள் அல்லது நக்சலைட் இயக்கத்தினர் யாரும் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[14].


ஆலம்பட்டியை தேர்வு செய்தது ஏன்? குறுகிய பாலம் என்பதனால், ஒரு வண்டி போகும் போது, எதிரில் வரும் வண்டி நின்று வழிவிட வேண்டும். அத்தகைய பாலத்தைத் தேர்ந்தெடுத்தது சந்தேகத்தையெழுப்புகிறது.

  • “இசட்’ பிரிவு பாதுகாப்பில் உள்ள தலைவர்கள் வரும் போது, அவர்கள் செல்லும் பாதையில், பாலங்கள் உட்பட முக்கிய கிராமங்களில் இரவு நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். ஆனால், வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த பாலத்தில் இரவு நேரத்திலும், நேற்று காலையிலும் கூட பாதுகாப்பிற்காக யாரும் நிறுத்தப்படவில்லை[15].
  • திருமங்கலம் – ராஜபாளையம் இடையே உள்ள ரோட்டில் இந்த ஆலம்பட்டி தரைப்பாலம் மட்டும் தான் குறுகியது. எனவே, யாரும் தப்பிவிடக் கூடாது என்பதற்காக வெடிகுண்டு வைத்தவர்கள் இப்பாலத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.
  • போலீசார் கூறுகையில், “சக்தி வாய்ந்த இந்த வெடிகுண்டு வெடித்திருந்தால், பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும். பைப்பிற்குள், 4 பிளாஸ்டிக் பைகளில், 4 அடிக்கு கருமருந்து அடைக்கப்பட்டிருந்தது. இந்த குண்டை, மொபைல் போன் மூலம் “ஆபரேட்’ செய்ய திட்டமிட்டிருக்கலாம்’ என்றனர்.
  •  பாலத்தின் அடியில் வெடிகுண்டு இருப்பது தெரிந்ததும், ஒரு மணி நேரம் இப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
  • இச்சம்பவத்தால், அத்வானி ஆலம்பட்டி வழியாகச் செல்லாமல், விருதுநகர், சிவகாசி நான்கு வழிச்சாலை வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார்[16].


கோவையை தொடர்ந்து மதுரையிலும் குறி: அத்வானி, 1998ம் ஆண்டில் லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக கோவை வந்தபோது, தொடர் குண்டு வெடிப்பு நடந்ததில் பலர் பலியாகினர்; விமானம் தாமதமாக வந்ததால், அத்வானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இந்நிலையில், மதுரையில் நேற்று அவரை குறி வைத்தே குண்டு வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக இதற்கான வேலையில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர். பயமுறுத்தவோ, எச்சரிக்கவோ அல்லாமல், தாக்குதல் நடத்தும் நோக்கிலேயே குண்டு வைக்கப்பட்டிருக்கலாம். இதற்காகவே ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில், குறுகிய பாலத்தில் சதியை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர் என, போலீசார் கருதுகின்றனர்.மதுரை சிறையில் இருந்து விசாரணை கைதிகளை, ஆலம்பட்டி வழியாக தென்காசி கோர்ட்டிற்கு போலீசார் அழைத்துச் செல்வது வழக்கம். கைதிகளில் யாரையாவது கொலை செய்ய, இந்த குண்டுகள் வைக்கப்பட்டதா என்றும் விசாரணை நடக்கிறது. காரணம், இரு ஆண்டுகளுக்கு முன், மதுரை ரிங் ரோடு ஓடைப் பாலத்தின் அடியில், நெல்லையில் இருந்து வந்த கைதிகளை கொல்ல வைக்கப்பட்டிருந்த, “கூஜா வெடிகுண்டுகள்’ கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தொடரும் மிரட்டல் – நகைச்சுவையாக மாற்றப்பட்ட குண்டுவெடிப்புகள் : மதுரைக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் இருந்து வருகிறது. ஐந்து மாதங்களுக்கு முன், மாட்டுத்தாவணி எதிரே இருந்த டாஸ்மாக் கடையில் வெடிகுண்டு வெடித்தது. கடந்த செப்., 30ல் புதூர் அரசு பஸ் டெப்போவில் டைம் பாம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, அத்வானி செல்லும் பாதையில், சக்தி வாய்ந்த குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலுக்கு, பயமுறுத்தலுக்குக் கூட வெடிகுண்டுகளை உபயோகப் படுத்தப் படுகின்றன என்றால், அத்தகைய கொடூரம் மனங்களில் வேடிக்கையாக, விளையாட்டாக ஆகிவிட்டது போலும். அதற்கேற்ற முறையில், குண்டு வெடிப்பது எப்பது தமிழ் திரைப்படங்களில் “ஜோக்காகி” விட்டது. அது மனிதர்களைக் குரூரமாக கொல்ல உபயோகப்படுத்தப் படும் தீவிர வாதம் / பயங்கரவாதம் என்ற எண்ணத்திற்குப் பதிலாக “தமாஷாக” எடுத்துக் கொள்ளும் நிலையை தமிழ்த்திரைப்பட நகைச்சுவை மாற்றிவிட்டிருக்கிறது.


தேசதுரோகிகளின் முயற்சி:பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியும், நிதர்சனமும்: “அத்வானி யாத்திரை வழியில் வெடிகுண்டு வைத்தது தேசதுரோகிகளின் முயற்சியாக இருக்க வேண்டும்,” என மாநில பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.அவர் தினமலர் நிருபரிடம் கூறியதாவது: “இச்செயல் கோழைத்தனமான ஒன்று. இதுபற்றி பா.ஜ., கவலை கொள்ளவில்லை. போலீசார் நடவடிக்கை எடுப்பர். அத்வானியின் யாத்திரை, ஊழல், லஞ்சம் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிரானது என அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். யாத்திரை, யாருக்கும் எதிரானது அல்ல என தெரிந்த பிறகும், இத்தகைய முயற்சிகள் நடப்பது தேசதுரோகிகளின் முயற்சிகளாக தான் இருக்க முடியும். நாடு நன்றாக இருக்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என நினைப்பவர்கள், இத்தகைய செயல்களில் ஈடுபட மாட்டார்கள், என்றார். மூப்பனார் முதல் கருணாநிதி வரை இவர்கள் எப்பொழுதும் தாங்களே குண்டு வைத்துக் கொள்வர்கள்[17] என்று ஜோக் அடித்துள்ளதையும் நினைவு கூரத்தக்கது”. இதுவும் இன்றைய சூழ்நிலைகளில் முக்கியமாகிறது, ஏனெனில், இணியதள தாக்குதல்களில் மறைந்து தாக்கும் சூராதி சூரர்கள் இத்தகைய வாதத்தை வைத்து ஏமாற்றப் பார்க்கின்றனர் என்பதைவிட, உண்மையை மறைக்க பிரச்சார யுக்தியாக பயன்படுத்துகின்றனர். செய்த குற்றங்களோ, செத்தவர்களோ பொய்யில்லை. குறைந்த தண்டனைகள் பெற்று வெளியில் வந்துவிட்டதால், அவர்கள் புனிதர்கள் ஆகிவிட மாட்டார்கள், ஏனெனில் செத்தவர்களின் மனைவி-மக்களுக்கு, உறவினர்களுக்கு கொலையாளிகள் யார் என்று நன்றாகவே தெரியும். அவர்கள் நடமாடி வரும்போது, உலா வரும்போது, அப்போது பார்க்கும் போது கொலைகாரகள் போகிறார்கள் என்று தான் நினைப்பர்கள்.

   

“பவர் ஜெல்” வெடி மருந்து என்றால் என்ன?: பல்வேறு ரசாயனங்களில் இருந்து வெடி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன[18]. அதுமட்டுமல்லாது வெடிகுண்டுகள் தயாரிப்பது பற்றி புத்தகங்களை வேறு வெளியிடுகிறார்கள். அல்-குவைதா, தலிபான் போன்ற குழுக்கள் ரசாயன படிப்புப் படித்த இளைஞர்களை வைத்துக் கொண்டு, குண்டுகளைத் தயாரிப்பது, வெடிப்பது பற்றிய கையேடுகளைத் தயாரித்து, தீவிரவாத இளைஞர்களுக்கு, புதிய தீவிரவாதிகளுக்குக் கொடுக்கிறார்கள். இவற்றில், “பவர் ஜெல் வெடி மருந்து’ ஒரு வகை. நைட்ரோகிளிசரின்[19], டி.என்.டி., அசிட்டோன் பெராக்சைடு, ஆர்.டி.எக்ஸ்., அல்லது நைட்ரோசெல்லுலரஸ் ஆகிய ரசாயன பொருட்களை அதிக அழுத்தத்தில் சிலிண்டர் அல்லது பைப்பில் அடைத்து, அதை திடீரென எரிய வைத்தால், அதிக சக்தி, வெப்பம் மற்றும் நெருப்பு வெளிப்படும். இது சில மீட்டர் சுற்றளவுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.வெடி மருந்தை வெடிக்கச் செய்வதற்கு, திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படும். இதனால், இவ்வகை வெடிகுண்டுகள், “பவர் ஜெல்’ என அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ராணுவத்தில் மட்டுமல்லாது இவ்வகை வெடிகுண்டுகள் குவாரிகளிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு அவை எளிதில் கிடைப்பதால், அவறையே வெடிகுண்டுகளாக தீவிரவாதிகள் பயன்படுத்துகின்றனர்.

வேதபிரகாஷ்

28-10-2011


[2] TEL, a Government of Tamilnadu Enterprise, has a comprehensive product range, which facilitates single window delivery of complete range of explosives and accessories to its customers.

[13] ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் ரத ஊர்வலம் மேற்கொண்டுள்ள பா.ஜ.க.மூத்தத்தலைவர் அத்வானி நேற்று காலை ஊர்வலத்திற்கு தயாராகி இருந்த நிலையில் மதுரை-இராஜபாளையம் நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி என்ற கிராமத்தில் தரைப்பாலம் ஒன்றின் கீழ் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அப்போது காவல்துறை அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டதில் 6- அடி நீளமுள்ள குழாயில் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து நிரப்பப்பட்டும், 25-மீட்டர் நீளமுள்ள மின்கம்பியில் இணைக்கப்பட்டும் கிடந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. http://tamilantelevision.com/news.php?Id=1319868919

[16] நன்றி – தினமலர்.

[17] காமராஜர் அரங்கத்தில் நடந்த மாநாட்டில் மூப்பனார், கருணாநிதி முதலியோர் அவ்வாறு வெளிப்படையாக கிண்டலடித்து, நக்கலாக பேசியபோது, பலர் அதை கேட்க நேர்ந்துள்ளது. அபொழுது தான் மூப்பனாரின் மீதிருந்த மதிப்பும் சரிந்தது. அடடா மூப்பனாரை போன்றவர்கள் கூட இவ்வாறு பேசுகிறார்களே என்று வியப்படைய நேர்ந்தது, வருத்தப்படவும் செய்தது.

தமிழகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம் (1)

ஒக்ரோபர் 29, 2011

தமிழகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம் (1)

தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி வருவது: 1984 சென்னை / 1998 கோவை வெடிகுண்டு வெடிப்புகளுக்குப் பிறகு, தமிழகத்தில் அவ்வப்போது வெடிகுண்டு வெடிப்பது உண்மையாகி விட்டது[1].  அல்-உம்மா, சிமி[2] முதலிய இயக்கங்கள் தடை செய்யப்பட்டாலும் பல உருவங்களில் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அயல்நாட்டில் தீவிரவாதத்தில் ஈடுபடும் வழக்குகளும் வெளிவருகின்றன[3]. பணப்புழக்கம், கள்ளநோட்டுப் புழக்கம் அவற்றுடன் தீவிரவாதிகளின் இணைப்பு முதலியன தெரியவருகின்றன[4]. வழக்குகள் தாமதம், அரசியல் தலையீடு என்றெல்லாம் இருந்தாலும் குண்டுகள் வெடித்ததை மறைக்க முடியாது, ரத்தம் சிந்தியது, உடல்கள் சிதறியது, அடையாளமே தெரியாமல் போனது, கை-கால்கள் துண்டானது, அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது பொய்யாகாது, காயமடைந்தது முதலியன மறக்க முடியாது. குண்டு வெடிப்புகள் தமிழ் குழுமங்களிலிருந்து முஸ்லீம் அமைப்புகளுக்கு மாறியுள்ளது என்பதில்லை, ஆனால் அத்தகைய தொழிற்நுட்பம், குண்டுகள் தயாரிப்பு, அதற்குண்டான ஆதரவு, பணபலம், எல்லாவற்றிற்கும் மேலாக அவ்வாறு செய்யவேண்டும் என்ற மனப்பாங்கு முதலியன உள்ளன / நடந்து கொண்டு வந்துள்ளன என்பது நிதர்சனமாகத்தான் உள்ளது.

   

குறிப்பாக நவீன யுக்திகளை கையாலுவது, குறிப்பிட்ட தொழிழ்நுட்பத்தை உபயோகப்படுத்துவது, அதை சிறிதே மாற்றியமைப்பது, ஆனால், அதனால் பெருத்த யிர்சேதம், நாசம் குறிப்பாக பீதியை உண்டாக்குவது என குறிப்பிட்ட இயக்கங்கள் செயல்பட்டுவருகின்றன. இருப்பினும் வெடிகுண்டு புரளி செய்தி வருவது, அதைப் பற்றி கவலையில்லாமல் கிண்டலாக, நக்கலாக, பேசுவது, எழுதுவது, சினிமாக்களில் அதிகமாக “ஜோக்குகளாக” தயாரித்து வெளியிடுவது, செனல்கள் அவற்றை பலதடவை ஒலி-ஒளிபரப்பி கேலிக்கூத்தாக்கிவிட்டது முதலியன அதனை மறக்க-மரக்கச் செய்துவிட்டன போலும். இப்பொழுது மறுபடியும் ஞாபகப்படுத்துகிறது. மதுரை ஜிஹாதி ஒருவன் பிரான்ஸில் கைது செய்யப்பட்டான்[5]. தமிழகத்தில் நடந்து வந்துள்ள குண்டுவெடிப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன[6].

தேதி

இடம்

இறந்தவர்

காயமடைந்தவர்

சம்பந்தப்பட்ட / பொறுப்பேற்ற இயக்கம்

02-08-1984 சென்னை விமான நிலையம்

30

37

தமீழீழப் போராளிகள்
15-03-1987 மலைக்கோட்டை விரைவு ரெயில், மருதையாறு பாலம், அரியலூர்

26

140

தமிழ்நாடு விடுதலைப் படை[7]
11-05-1988 TNLA carries out a bomb explosion on the carpet bed map of India in the Government Botanical Garden in Ooty. தமிழ்நாடு விடுதலைப் படை
21-05-1991 திருப்பெரும்புதூர்

18

விடுதலை புலிகள்
20-04-1992 சுருளிப்பட்டி, தேனி மாவட்டம்

1

தமிழக மக்கள் விடுதலைப்படை
08-08-1993 ஆர்.எஸ்.எஸ். அலுவலகம், சென்னை

11

முஸ்லீம் அமைப்பு
18-11-1993 குள்ளஞ்சாவடி, கடலூர் மாவட்டம்

1

தமிழ்நாடு விடுதலைப் படை
29-03-1994 TNLA leader Lenin is killed during a bomb blast while he was on his way to plant a bomb at the Muhtandikuppam police station near Cuddalore. தமிழ்நாடு விடுதலைப் படை
25-05-1994 அம்மாப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்

1

7

விடுதலைப்புலி
14-04-1995 இந்து முன்னணி அலுவலகம், சென்னை

2

4

முஸ்லீம் அமைப்பு
22-09-1993 சங்கரராமன் மீது குண்டு வீச்சு
18-05-1996 மீனாட்சி கோவில், மதுரை முஸ்லீம் அமைப்பு
10-07-1997 மணிரத்னம் வீட்டின் மீது குண்டு வீசப்பட்டது முஸ்லீம் அமைப்பு
1997 பூபாலன் மீது குண்டு வீசப்பட்டது, கோயம்புத்தூர் ஜெயில் முஸ்லீம் அமைப்பு
13-08-1997 கொடுங்கையூர், சென்னை

80 குண்டுகள், 30,000 ஜிலேடின் குச்சிகள் பறிமுதல், சிலர் கைது

முஸ்லீம் அமைப்பு
01-12-1997 உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம்

3

முஸ்லீம் அமைப்பு
03-07-1995 இந்து முன்னணி, நாகப்பட்டணம்

1

முஸ்லீம் அமைப்பு
06-02-1998 சாலியமங்கலம், தஞ்சாவூர் மாவட்டம்

3

முஸ்லீம் அமைப்பு
14-02-1998 கோயம்புத்தூர்

16

44

முஸ்லீம் அமைப்பு
04-1999 The TNLA blasts television towers at Tuticorin. தமிழ்நாடு விடுதலைப் படை
03-2000 The TNLA blast a railway track at Thiruppapuliyur in the Cuddalore district[8] தமிழ்நாடு விடுதலைப் படை
14-04-2001 Country-made bombs, guns seized in Tamilnadu, four arrested – On April 14, police claimed to have arrested four persons and seized two country-made guns and nine country-made bombs from them at Palayamkottai.
16-05-2001 Nine Al-Umma men sentenced to life in Coimbatore, Tamilnadu. Nine of the 12 activists of the Islamic fundamentalist organization Al-Umma accused in the Udumalpet bomb blast case were sentenced to life imprisonment by a special court in Coimbatore, on May 15. Three persons were killed and four others injured in the blast triggered in Udumalpet, earlier on December 12, 1997[9].

 

குண்டு தயாரிப்பு விவரம்[10]: உள்ளுக்குள்ளே வெடித்து நாசத்தை உண்டாக்கும் குண்டுகளை (IED = Internally explosive Devices) உருவாக்குதல், தயாரித்தல் (Ammonium Nitrate / RDX),”டைமர்” முதலிய மின்னணு கருவிகளை உபயோகித்தல் முதலிய முறைகளைப் பயன்படுத்தலில், குறிப்பிட்ட இஸ்லாமிய தீவிரவாதிக் குழுக்கள் வல்லுனர்களக இருக்கிறார்கள்[11]. கடந்த குண்டவெடிப்புகளில், இத்தகைய முறை கையாளப்பட்டுள்ளது.  மும்பையிலும் அதே முறை கையாளப்பட்டுள்ளது. மொத்தம் டிபன்-பாக்ஸுகளில் வைக்கப்பட்ட ஏழு குண்டுகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[12]. வழக்கம் போல அவை துணிபைகளில் வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்புகள் பீதியை உண்டாக்கவில்லை, மாறாக அழிவை உண்டாக்கவே செய்துள்ளன[13]. லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி (இந்திய இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு) முதலியோர்களின் கைவேலை தெரிகிறது என்று வெடிகுண்டு வெடிக்கப்பட்ட இடங்களினின்று பெற்ற ஆதாரங்களை வைத்து எடித்துக்காட்டியுள்ளனர்[14]. அவர்களை கண்காணித்து வருவதாக புலன் விசாரணை செய்யும் குழுக்கள் கூறுகின்றன[15]. மும்பையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளது ஒன்றும் புதியதல்ல. புனாய்வுத்துறை மும்பை மறுபடியும் தாக்குதலுக்குள்ளாகும் என்று தெளிவாக எச்சரித்தது[16]. ஆனல் உள்துறை அமைச்சகம் இதை மறுத்தது. ஆனால், குண்டுகள் வெடிக்கத்தான் செய்தான், மக்கள் இறக்கத்தான் செய்தனர், கொன்ற குரூரக் கொலையாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.

பா.ஜ., தலைவர் அத்வானி செல்லும் பாதையில் பயங்கர சதி[17]: அத்வானியைக் கொல்லவேண்டும் என்பதில்  தீவிரவாதிகள் குறியாகத்தான் உள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் வரும்போது கொல்ல வேண்டும் என்ற எண்ணம் வலுவாகவே இருக்கின்றது. இந்த தடவையும் அத்தகைய முயற்சி நடந்துள்ளதா என்று ஆராய வேண்டியுள்ளது. ஏற்கெனெவே ஐ.பி அவர்மீதான தீவிரவாத தாக்குதல் உள்ளது என்று எச்சரித்துள்ளது[18]. “லால் கிருஷ்ண அத்வானி இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர். பல தீவிரவாத தாக்குதல் பட்டியிலில் அவர் பெயர் முதலில் உள்ளதால், அவருக்கு இஜெஇ-பிளஸ் என்ற பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளாது. அவர் 20 மாநிலங்களில் 38 நாட்கள் பிரயணம் மேற்கொண்டிருப்பதமால் அந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது”. அதாவது இந்த நாட்டில் வெளிப்படையாகவே தீவிரவாதிகள் அத்வானியைக் கொல்வோம் என்று கொக்க்ரித்துக் கொண்டலையும் கூட்டம் உள்ளது என்று இந்திய ரகசிய அமைப்பே ஒப்புக் கொள்கிறது. பிறக் அத்தகைய இயக்கத்தை அல்லது அவ்வாறு அறிந்த  மனிதர்களை எப்படி சுதந்திரமாக விட்டு வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ரத யாத்திரை செல்லவிருந்த பாதையில், ஓடைப் பாலத்தின் அடியில் சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, மாற்றுப் பாதையில் அத்வானியின் வண்டி சென்றது. செல்லும் பாதையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அத்வானியின் உயிருக்கு குறி வைத்து, இந்த குண்டுகளை வைத்தது யார்? என, போலீசார் விசாரித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், கோவையில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த அத்வானியை குறிவைத்து வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டன. இப்போது மதுரையிலும் அத்வானிக்கு குறி வைத்து குண்டு வைத்துள்ள சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[19].


பிரச்சினை வேறு என்றாலும் குறிக்கோள் ஒன்றாகத்தான் உள்ளது: அரசியல் ரீதியில் கட்சிகள் தங்களது பிரச்சினைகளை மாற்றிக் கொண்டு பிரச்சாரம் செய்யலாம். ஆனால், சித்தாந்த ரீதியிலான போராட்டங்கள், ஈடுபட்ட குழுமங்களுக்கு ஒன்தாகத்தான் உள்ளது. எதிரிகளும் மாறுவதில்லை. ஊழலை எதிர்த்து அத்வானி மேற்கொண்டுள்ள மக்கள் விழிப்புணர்வு யாத்திரை, நேற்று காலை 10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டது. திருமங்கலம் வழியாகச் சென்று ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பொதுக்கூட்டத்தில், அத்வானி பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.திருமங்கலத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள ஆலம்பட்டியில் ஓடைப் பாலத்தின் அருகே, அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், 40, என்பவர் நேற்று காலை 7.30 மணிக்கு விறகு வெட்டச் சென்றார். அப்போது, பச்சை நிற ஒயர்கள் அவரது காலில் பட்டது. அந்த ஒயர்களை பின்தொடர்ந்து சென்று பார்த்தபோது, பாலத்தின் அடியில், மடை உள்ளே செடி, கொடிகளை மறைத்து ஏதோ பொருள் இருந்தது தெரிய வந்தது. அதை அகற்றிப் பார்த்தபோது, உள்ளே 5 அடி நீளமுள்ள 2.5 அங்குலம் விட்டம் கொண்ட இரு பி.வி.சி., பைப்புகள் இருந்தன[20]. இருபக்கங்களும் மூடியிருந்து, இணைக்கப் பட்ட வயர் 50 மீட்டர் தொலைவு வரை நீண்டிருந்தது. அங்கு போட்டார் சைக்கிள்களில் உயோகப்படுத்தப் படும் 12-வோல்ட் பேட்டரியும் காணப்பட்டது. ஜெல் எனப்படுகின்ற ரசாயன வகை வெடிப்பொருள் எளிதாக வெடிக்கக் கூடியவை. பாறைகளை பிளக்க குவாரிகளில் உபயோகப்படுத்தி வருகின்றனர்[21].


பேட்டரியுடன் குண்டு இணைப்பு: போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் குவிந்தனர். அந்த பைப்புகளை சோதனை செய்தபோது, அது பைப் வெடிகுண்டுகள் என தெரிய வந்தது. மதுரை வெடிகுண்டு தடுப்பு போலீசார், கயிற்றின் உதவியோடு வெடிகுண்டுகளை வெளியில் இழுத்தனர். அப்போது, வெற்று பைப் மட்டும் வெளியே வந்தது. பின், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 4 அடி நீள பைப் வெடிகுண்டை வெளியே எடுத்தனர். அந்த குண்டு, ஒயர் மூலம் 100 மீட்டர் தொலைவில் 12 வோல்ட் மின்சக்தி கொண்ட பேட்டரியுடன் இணைக்கப்பட்டிருந்தது[22].

வேதபிரகாஷ்

28-10-2011


[1] வேதபிரகாஷ், ஜோசப் பாஸ்கரன், அம்மோனியம்நைட்ரேட், குண்டுவெடிப்பு, http://atrocitiesonindians.wordpress.com/2010/11/06/ammonium-nitrate-bomb-manufacture-joseph-tamilnadu/

[3] Union Home Minister P. Chidambaram said that Mohammad Niaz Abdul Rashid, the Indian engineer who was arrested by French Police for alleged links with al Qaida, had been involved with the affiliates of the outlawed SIMI in Tamil Nadu.

[4] FICNs sourced from Pakistan via Bangladesh, with a total face value of .2 million INR was seized and five persons arrestedin Chennai in Tamil Nadu.

[5] வேதபிரகாஷ், தமிழகத்துஜிஹாதிதீவிரவாதிபிரான்ஸில்பிடிபட்டான்: உள்ளூரில்வளரும்தீவிரவாதத்தின்அபாயம்அதிகரித்துவருகிறது!, http://islamindia.wordpress.com/2011/05/25/1443-indian-home-grown-jihadi-tamil-grown/

[6] மேலும் விவரங்கள் கிடைக்கும் போது மாற்றப்படும், சேர்ந்துக் கொள்ளப்படும்.

[11]  இவர்கள் எல்லாமே முஸ்லீம்களாக இருப்பதனால், புலன் விசாரணைக் குழுக்கள், போலீஸ் முதலியோர் அரசியல் நிர்பந்தங்களினால், முரணான செய்திகளை ஊடகங்களுக்கு கொடுத்து, அதன் மூலம் வழக்கில் தீவிரவாதிகளுக்கு சந்தேகத்தின் அடைப்படையில் அல்லது போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை அடைகிறார்கள். பிறகு மற்ற வழக்குகளில் அவர்களை சிறையில் வைத்துள்ளார்கள். அல்லது பைலில் வெளியில் வந்ததும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் (துபாய், கடார்..) சென்று மறைந்து வாழ்கிறார்கள் மற்றும் தொடர்ந்து இத்தகைய தீவிரவாத செயல்களை செய்து வருகிறார்கள்.

[17] தினமலர், பா.., தலைவர்அத்வானிசெல்லும்பாதையில்பயங்கரசதி, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=339525; இப்பத்திரிக்கை இப்படி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. இது உண்மையா அல்லது சாத்தியக்குறுகள் என்ன, பின்னணி என்ன என்பதை இக்கட்டுரையில் அலசப்படுகிறது.

[18] Lal Krishna Advani is one of the senior most political leaders in the country. He has a Z+ security cover and is on the target lists of several terror groups. And as Advani continues his 38-day Rath Yatra across 20 states, the Intelligence Bureau (IB) has sounded a warning over his security cover.

http://www.timesnow.tv/IB-warns-of-threat-to-Advanis-yatra/videoshow/4387027.cms

[21] Two pipe bombs, one of which was packed with “Gell-19” explosives usually used in granite quarrying, were found in one of the culvert tunnels at Alampatti.

[22] The PVC pipe, with 12 cm diameter, was in two sections, and closed with lids on both ends. A wire was connected to a detonator for a distance of about 50 metres. The 12-volt battery, used in two-wheelers, was found under a Palmyra tree at a distance. The explosive was defused at a place away from the causeway and removed to an undisclosed place for analysis. The wire was found concealed under heaps of grass and a sari. ‘Power gel’ is referred to as a “power-sensitive, high explosive” used for blasting rocks.