Archive for the ‘மாயை’ Category

தமிழ், தமிழகம், தமிழ்நாடு: தனித்தமிழ் இயக்கம்-திராவிட இனவெறி மற்றவர்களிடமிருந்து பிரித்தது, மொழிவாரி மாநிலங்கள் உருவானதில் தனிமைப்படுத்தப் பட்ட நிலை [2]

ஏப்ரல் 20, 2018

தமிழ், தமிழகம், தமிழ்நாடு: தனித்தமிழ் இயக்கம்திராவிட இனவெறி மற்றவர்களிடமிருந்து பிரித்தது, மொழிவாரி மாநிலங்கள் உருவானதில் தனிமைப்படுத்தப் பட்ட நிலை [2]

Tamil vs Telugu, Bhattiporlu

தமிழ், தமிழர், தமிழ்நாடு [திராவிடக் கட்டுகதை] என்று மூளைசலவை செய்து, தமிழ்நாட்டை கெடுத்து, சீரழித்ததே, இந்த கோஷ்டிகள் தாம்: 1930-40களில் தனித்தமிழ் இயக்கம், திராவிட இனக் கட்டுக்கதைகளை வளர்த்தன. சைவம் என்ற போர்வையில், வைணவத்தை எதிர்த்து, தெலுங்கு பேசும் மக்களை அவமதித்த போக்கு, நீதிகட்சியைக் குலைத்து, திராவிட கழக போர்வையில், தமிழக பிரிவினை உருவெடுத்தது. ஆனால், அத்தகைய தேசவிரோத கொள்கையிலிருந்து மற்ற மொழி மக்கள் வேறுபட்டனர். 1940-50 திராவிட இனவெறி கட்டுக் கதைகளினால் தான், முதலில் ஆந்திரா தனியாகப் பிரிந்தது, முதல் மொழிவாரி மாநிலமானது[1]. தொடர்ந்து “தமிழ்” தான் உயர்ந்தது, அதிலுருந்து தான் மற்ற மொழிகள் தோன்றின என்பதனை சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, தெலுங்கு மக்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பட்டிபோர்லு [Bhattiporlu] வரிவடிவங்களை [script] மற்றும் கல்வெட்டுகளை [inscriptions] வைத்துக் கொண்டு, தெலுங்கு வரிவடிவம் BCE மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று வாதிட்டனர். “தமிழ்நாடு” உருவானபோது கூட, எல்லை தகராறுகளில் கேரளா, ஆந்திரா மற்றும் ஆந்திராவுடன் எதிராகவே இருந்தது. தமிழநாட்டைத் தவிர மற்ற மாநில மக்கள் தாங்கள் “திராவிடர்கள்” என்றெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், திராவிடத்துவ சித்தாந்தம் தமிழ்நாடு மாநிலத்துடன் சுருங்கி விட்டது. காவிரி பிரச்சினையில், முன்னர் பாமகவினால், அதிகமாகவே வெறியூட்டப் பட்டு, பிறகு திராவிட பிரிவினைவாதிகளால் தீயூட்டப் பட்டது. அப்பொழுது, இங்கு “உடுப்பி” ஹோட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஶ்ரீ ராகவேந்திர மடங்களும் தாக்கப்பட்டன.

Kannadigas - woodland hotel attacked- Sept.2016

தமிழகத்தில் நடந்த எல்.டி.டி..யின் வாரிசு / அதிகாரச் சண்டை திசைமாறியுள்ள நிலை: எல்.டி.டி.ஈ.யின் வாரிசு சண்டை தமிழக அரசியல் கட்சிகள், பெரிய புள்ளிகள் மற்றும் சித்தாந்தவாதிகளிடம் அதிகமாகவே வெளிப்படுகிறது. முன்பு, ஒரு நபரால் கட்டுக்கோப்பாக வைத்திருந்தது, சிதறிவிட்டது. எல்.டி.டி.ஈ.யின் பங்கு போதை மருந்து கடத்தல், விநியோகம் மற்றும் வியாபாரம், வெடிகுண்டுகள், ஆயுதங்கள் வாங்கல்-விற்றல், தமிழ்த் திரைப்பட விநியோகம், திருட்டு சிடி-விசிடி, குறிப்பிட்ட மின்னணு உதிரிகள் என பல விஷயங்களில் இருந்தது, இன்றும் இருக்கிறது[2]. போதை மருந்து கடத்தல் விவகாரங்கள் அப்பட்டமாக இருந்தாலும், தமிழக ஊடகங்கள் மறைத்தே வந்ததன-வருகின்றன[3]. இதனால் தான் “மத்திய அரசு எதிர்ப்பு” அடிக்கடி ஏற்படுகிறது. தெற்கு மாவட்டங்களில் மீனவர்களின் உதவிகளுடன் அத்தகைய சட்டமீறல்கள் நடந்து வருவதால், எல்லா கட்சிகளில் சம்பந்தங்களும் காக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதிகாரப் பிரயோகம், அதிகாரப் பகிர்வு முதலியன யாரிடம் இருப்பது என்பது பற்றிதான் சண்டை-சச்சரவு நடந்து கொண்டிருக்கிறது. இதில் தமிழகத்தைச் சார்ந்தவர்கள், ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்கள் மற்றும் இரண்டிலும் அல்லது கனடா-பாரிஸ்-அமெரிக்காவில் இருப்பவர்கள் என்று மூன்று குழுக்களாக செயல்படுகின்றனர்[4]. திரைத்துறை, அரசியல் முதலிய பகிர்வு போராட்டங்கள் வைகோ, நெடுமாறன், செபாஸ்டியன் சீமான்[5], ஜெகத் காஸ்பர்…………என்று பலநேரங்களில் வெளிப்படும். கடந்த குறுகிய காலத்தில், நிறைய அளவு பணம் திரைப்படம், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள் முதலியவற்றில் முதலீடு செய்யப்படுகிறது. அந்நிலையில், குறிப்பிட்ட தனிநபர்கள், குழுமங்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் குவியும் போது, நிச்சயமாக சண்டை வரத்தான் செய்கிறது. அதுமட்டுமல்லாது மத்தியில் மற்றும் மாநிலத்தில் தனித்தனி கூட்டணிக் கட்சியினருக்கு, பெரும்பாலான பணம் செல்லும்போதும் மற்றவர்களுக்கு கடுப்பாகிறது.

Holiday for Pongal and anti-Modi slogan

தீவிர தமிழ்வாத பிரிவினை கொலைகளில் முடிந்தது: 1984-89களில் எல்.டி.டி.இ வைத்துக் கொண்டு கருணாநிதியும் பிரிவினைவாத கோஷ்டிகளுடன் செயல்பட்டார். அவர்கள் நடத்திய உயநிர்ணய, பிரிவினைவாத மாநாடுகள் பெயரளவில் தடை செய்யப் பட்டன. இதனால், விடுதலை புலிகள் முதல், விடுதலை குயில்கள் வரை எல்லாம் ஊக்குவிக்கப் பட்டன. வி.பி.சிங் ஆட்சிகாலத்தில், பாமக போன்ற கட்சிகளும் “சுயநிர்ணயம்” போர்வையில் பிரிவினைவாதம் பேசியுள்ளது. பாமகவினால் தமிழக-கர்நாடக விசரிசல்கள் பெரிதாகின, அமைச்சர் பதவி கிடைத்ததும் பாமக அடங்கி விட்டது. மற்றவை “மண்டல்” போர்வையில் கலாட்டா செய்து வந்தன. இவர் 21 மே 1991 ராஜிவ் காந்தி படுகொலை திராவிட அரசியல்வாதிகளின் முகத்திரைகளைக் கிழித்து, அவர்களது தேசவிரோத கள்ளக்கடத்தல், வரியேய்த்தல், போதை மருந்து விரயாபாரம் என்று பற்பல சட்டமீறல்கள், குற்றங்கள் முதலியவற்றை எடுத்துக் காட்டின. 1996-2004ல், பதவி போதையில், திமுக சுருண்டு கிடந்தது. 2004-2014களில் ஊழலில் மிதந்து, கோடிகளை அள்ளி, ஊடக சாம்ராஜ்ஜியத்தை நிலைப் படுத்திக் கொண்டது. டிவி அதிரடி தாக்கம், பிரச்சார யுக்திகளினால் திராவிட குற்றங்களுக்கு வெள்ளையெடித்து, அதே நேரத்தில், காங்கிரசுக்கு சாதகமாக, இந்து-விரோத பிரச்சாரத்தை “பிஜேபி-எதிர்ப்பு” போர்வையில் நடத்தியது[6], நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், சத்தியராஜ் போன்ற நடிகர்களால் எதிர்மறை விளைவுகள் அதிகமாக ஏற்பட்டன. ரஜினியின் நிலையற்ற தன்மை மற்றும் இப்பொழுதைய கமல் ஹஸனின் பாரபட்சம் மிக்க பேச்சுகள்-நடவடிக்கைகள் போலித் தனமாக இருக்கின்றன. இப்பொழுது கூட, கமல்-ரஜினி பிளவுகள் போலித்தனத்தையே எடுத்துக் காட்டுகின்றன.

Dravidastan, new slogan 2018

கார்புரேட்டுகளின் தொடர்புகள், அயல்நாட்டு வியாபாரங்கள், வரியேப்பு, மோடிஎதிர்ப்பு: கார்புரேட்டுகளின் விளம்பரப் பணம் கொட்டி, வியாபாரம் சினிமாக்களில் பெருகி, பணத் தோட்டத்தில்[7], அதிகார போதையுடன், சுகபோகங்களை அனுபவித்தன. இதில் கம்யூனிஸம் பேசும் வகையறாக்களும் அடக்கம். இவற்றில் கடல்கடந்த வியாபார தொடர்புகள், இணைப்புகள், பண பரிவர்த்தனைகள் எல்லாமும் அடக்கம். எந்த திராவிடக் கட்சியும், பிரிவினைவாத கோஷ்டியும், சினிமாக்காரனும் இதில் சோடை போனதில்லை. அரசியல்வாதிகள் மற்றும் சினிமாக்காரர்களின் அடிக்கடி அமெரிக்க-ஐரோப்பிய பயணங்கள் அவற்றை வெளிப்படுத்தின. மோடியின் “கருப்புப் பண வேட்டை” முதலியவை இவர்களை பாதித்ததால் தான், மோடியை எதிர்க்க ஆரம்பித்தார்கள். ஆக, கள்ளப்பணம், வரியேய்ப்புகளில் ஈடுபட்ட கூட்டங்கள் தாம் இன்று தெருக்களில் கருப்பு சட்டம் அணிந்து கலாட்டா செய்து, பொது மக்களை இம்சித்து வருகின்றனர். திர்ப்புகள் சேவை வரி முதல் ஜிஎஸ்டி வரை இதில் உள்ளதை கவனிக்கலாம். இருப்பினும் வியாபாரம் செய்பவன், லாபங்களில் கொழுப்பதினால், அமைதியாகவே இருக்கிறான்.

© வேதபிரகாஷ்

19-04-2018

Karunanidhi, separate Tamilnadu

[1] Andhra Pradesh was carved out of Madras Presidency on October 1, 1953. This gave a death blow to the concept of “Dravidastan” and the separate nation for “Dravidian speaking people.” In other words, the “Dravidian” demand was restricted to “Tamilnadu.” The linguistic formation of States took place in 1956 with Kerala and Karnataka. Thus, “Dravidastan” was reduced to “Tamilnadu”.

[2] Citing Royal Canadian Mounted Police sources the Jane’s Intelligence Review said the Liberation Tigers of Tamil Eelam (LTTE) controls portion of US Dollar one billion drug market in the Canadian city of Montreal. The Jane’s Intelligence Review said that one of the main ways of earning money out of its USD 200-300 million annual income of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) is narcotics smuggling using its merchant ships, which also transports illicit arms and explosives which they procure all over the world for a separatist insurgency in the Indian Ocean island of Sri Lanka.

Steven W. Casteel, Narco-Terrorism: International Drug Traffickingand Terrorism – a Dangerous MixStatement ofSteven W. Casteel Assistant Administrator for Intelligence Before theSenate Committee on the Judiciary May 20, 2003; http://www.justice.gov/dea/pubs/cngrtest/ct052003.html

[3] Kartikeya, LTTE fall will alter drug trade in India, TOI, May 30, 2009, Read more: ‘LTTE fall will alter drug trade in India’ – Mumbai – City – The Times of Indiahttp://timesofindia.indiatimes.com/city/mumbai/LTTE-fall-will-alter-drug-trade-in-India/articleshow/4595554.cms#ixzz0xzdLhzpw

http://timesofindia.indiatimes.com/city/mumbai/LTTE-fall-will-alter-drug-trade-in-India/articleshow/4595554.cms

[4] http://www.eurasiareview.com/201006143193/sri-lanka-ltte-diaspora-wars-south-asia-intelligence-review.html

[5] செபாஸ்டியன் சீமான், ஜகத் காஸ்பரை இந்தியாவின் ஒற்றன் என்றெல்லாம் சொல்வதும், ஏதோ பெரிய விடுதலைப் போராளி போல நடந்து கொள்வதும், அதேபோல ஜகத் காஸ்பர் வெளிப்படையாக எல்.டி.டி.ஈ.யினரை ஆதரித்து பேசுவது-எழுதுவது சென்று செய்தாலும், கண்டு கொள்ளாமல் இருப்பது, முதலியவை தமிழகத்தில் வேடிக்கையான விஷயங்களே.

[6] சன் குழும நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், சீரியல்கள் முதலியவற்றை அலசிப் பார்க்கும் போது, இது வெளிக்காட்டுகிறது.

[7] அண்ணாவின் “பணத்தோட்டம்” திராவிட அரசியல் மற்றும் கம்பெனிகளின் கூட்டுக் கொள்ளை, வரியேய்ப்பு முதலியவற்றை காட்டுவது மட்டுமல்லாது, சினிமா-கிரிக்கெட் தொடர்புகளையும் வெளிப்படுத்தி விட்டன.

அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?

நவம்பர் 29, 2009

அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?

இது “விடுதலை” என்கின்ற திராவிட கழகத்தினரின் நாளிதழில் “ஓடும் நதி” என்ற பெயரில் மறைந்து கொண்டு யாரோ ஒரு இந்து-விரோதி எழுதி வெளிவந்த சிறு கட்டுரையாகும். இன்றும் (டிசம்பர் 2013) கீழ்கண்ட தளத்தில் இருக்கின்றது:

http://viduthalai.periyar.org.in/20091129/news22.html

அதனால் தான், கீழ் கண்ட குறிப்பையும் நவம்பர் 2009லேயே செர்த்திருந்தேன்.

இதோ, ஐயப்பன் பக்தர்களையும் விட்டுவைப்பதில்லை.வருடா வருடம் இதே மாதிரியான தூஷணங்கள்! ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்காததால், இப்படியே அச்சடித்து இப்பத்திரக்கை நடதத்தப் படுகிறது.இதன் ஆசிரியர் கே. வீரமணியோ ஒரு நிகர்-பல்கலைக் கழகம் வைத்து நடத்துகிறார்.அதில் வேலை செய்யும் பலர் மாலை அணிந்துள்ளனர். அவர்கள் என்ன செய்வார்கள்?

அவர்கள் என்ன நினைப்பார்கள்?

அங்கு படிக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?

ஏனெனில் மாணவர்களில் பலரும் மாலை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!!

குறிப்பு: ஐய்யப்பப் பக்தர்களைப் புண்படுத்த இப்பதிவு செய்யப்படவில்லை. உண்மையில் நாத்திகவாதிகளின் மனப்பாங்கை எடுத்துக் காட்டி, அவர்களைன் போலித்தனத்தை எடுத்துக் காட்டவே நான் இப்பதிவை செய்துள்ளேன்.     

                                                                                                                  சென்னை, நவ. 29_ கேரளம் _ கேர என்ற மலையாள சொல்-லுக்கு தென்னை என்று பெயர். கேரளம் என்றால் தேங்காய் விளைகிற இடம் என்று பெயர். சந்தேகமாக இருந்-தால், உங்களுக்குத் தெரிந்த மலையாள சேட்டான், சேச்சியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கேரளாவிலிருந்து வந்த தேங்காயை, தமிழ்நாட்-டுத் தமிழன் விலைக்கு வாங்கி, தலையில் இரு-முடிகட்டி திரும்பவும் எங்கிருந்து வந்ததோ, அங்கேயே பக்தியின் பெயரால் கொண்டு போய் சேர்கிறான். அந்த தேங்காய்களை சபரிமலை கோவில் நிர்-வா-கமும் ஏதாவது எண்-ணைய் எடுக்கிற நிறுவனத்-திற்கு மொத்த விலைக்கு விற்று விடுகிறது. அந்த நிறுவனங்கள் தமிழ்-நாட்-டில் சிறு சிறு பாக்கெட், பாட்டில்களில் தேங்காய் எண்ணையை அடைத்து வந்து விற்கிறது. தேங்-காயை விலைக்கு வாங்-கிய தமிழன்,அதே தேங்-காயை, எண்ணைய் என்ற வடிவத்தில் திரும்ப-வும் விலைக்கு வாங்கு-கிறான். அதாவது புரிகிற மாதிரி சொல்வது என்-றால், ஒரு பொருளை இரண்டு முறை விலைக்கு வாங்குகிறான். கேரளக்காரன் தமிழ-னின் தலையில் இப்படித்-தான் மிளகாய் அரைக்-கிறான்! அய்யப்பனுக்கு மாலையணிந்து கோவி-லுக்கு போய் திரும்பும் வரை மிகவும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்-டும் சரியாகச் சொன்-னால், கோயிலுக்குப் போய் திரும்பும் வரைக்கு-மாவது நல்லவர்களைப் போல நடியுங்கள் என்-கிறார்கள்! கேரள அய்யப்பனுக்கு மாலை போட்டுப் போகிற தமிழர்கள் தயவு செய்து அய்யப்பனின் பிறப்பு, வளர்ப்பு கதையை படித்த பிறகு,தைரியம் இருந்தால் அதற்கு பிறகு மாலை போடுங்கள்! எவ்வளவுக் எவ்வளவு அசிங்கங்-கமாக, கேவலமாக இருக்க வேண்டுமோ, அவ்வள-வுக்கு அவ்வளவு ஆபாச-மாக இருக்கிறது, அய்யப்-பனின் பிறப்பு வளர்ப்பு வரலாறு! அவைகளை படித்தால் ஒழுக்கக் கேடு-கள் தான் நாடெங்கும் தலை விரித்தாடும்..! கேரளா கிறித்தவர்கள் அதிகம் நிறைந்த மாநிலம்.

அதாவது அய்யப்பன் பிறந்து வளர்ந்து கிழித்த-தாக கூறப்படும் கேரளத்-தில், கேரள மக்கள் அய்யப்-பன விட இயேசு கிறிஸ்துவைத் தான் அதிகம் பின்பற்று-கிறார்-கள்! இது ஒன்று போதாதா? அய்யப்பன் வெறும் பொய்யப்பன் என்று புரிந்து கொள்ள… அதா-வது தன்னை சிலுவை-யில் உயிரோடு அறைந்த போது தன்னையே காப்-பாற்றிக் கொள்ளாத இயேசு தான் இவர்களை காப்பாற்றும், சக்தி வாய்ந்த கடவுளாம்! கொடுமைடா சாமி! நீங்கள் சொல்வதெல்-லாம் சரிதான்ங்க, ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்னு இருக்கு, அதுக்கு பெயர் தான் கடவுள் என்பர்களே! கடவுளின் பெயரால் இந்த கேணத் தனங்கள், எதற்கு? கடைசியாக உங்களிடம் வேண்டிக் கொள்வ-தெல்-லாம், ஒன்றே ஒன்று தான்! தமிழர்களே! தமிழர்-களாக இருங்கள்!!

நன்றி: ஓடும் நதி

பின்குறிப்பு: இந்த இடுகை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடப்பட்டது. நாத்திகம் என்ற போர்வையில், வீரமணி எப்படி தூஷணம் செய்கிறார் என்பதைத்தான் எடுத்துக் காட் ட அவ்வாறு செய்யப்பட்டது. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்ற எண்ணம் அந்த மெத்த “படித்த” மேதாவிக்கு, நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தருக்குத் தெரியாமல் இருப்பதையும் எடுத்துக் காட்டப்பட்டது. இப்பொழுதும் இதற்கு பதில்கள் வருவதால், இக்குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

 2009லிருந்து 2013 வரை படிப்பவர்கள் இதனை முழுவது படிக்காமலேயே, என்னை திட்டி பதில்களை பதிவு செய்து வருகிறார்கள்.

ஆகவே, தயவு செய்து முழுமையாக படித்து விட்டு பதிலை இடுங்கள் .

வேதபிரகாஷ்

04-12-2013