Archive for the ‘மாட்டுக்கறி தின்பது’ Category

ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், குங்குமத்தை அழித்ததும், இப்பொழுது சனியைப் பற்றி பேசும் ஸ்டாலினும், வாய்ச்சொல் கேட்டு அஞ்சும் கனிமொழியும்! (3)

ஜனவரி 16, 2018

ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், குங்குமத்தை அழித்ததும், இப்பொழுது சனியைப் பற்றி பேசும் ஸ்டாலினும், வாய்ச்சொல் கேட்டு அஞ்சும் கனிமொழியும்! (3)

Kanimozhi confession -13-01-2018-2

10 ஆண்டுகளுக்கு முன்பு (2008) பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்றுக் கூறியதை பொறுத்து ரௌத்திரம் பழகாததன் விளைவை தான் தற்போது அனுபவிப்பது (2018): ஆரூர் புதியவனின் “சொற்களால் ஒரு சுதந்திரப் போர்” நூல் வெளியீட்டு விழா சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற கனிமொழி எம்.பி நூலை வெளியிட்டதுடன், சிறப்புரை நிகழ்த்தினார். ஜி.எஸ்.டி., முத்தலாக் என எல்லா திசைகளிலும் மக்களை ஒடுக்கும், அச்சுறுத்தும் நிகழ்வுகள் நடைபெறுவதாக குறிப்பிட்ட கனிமொழி, இவைகள் குறித்து பேசாததன் விளைவாக நமது மௌனமே நம்மை அழித்துவிடும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழன் ரௌத்திரம் பழகுவதை நிறுத்திக் கொண்டதால் தான் இந்த நிலையில் தமிழன் உள்ளதாகக் கூறிய கனிமொழி, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்றுக் கூறியதை நாம் பொறுத்துக் கொண்டு ரௌத்திரம் பழகாததன் விளைவை தான் தற்போது அனுபவித்து வருவதாக அதே நூல் வெளியீட்டு விழாவில் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டதை நினைவுக்கூர்ந்து அது சரியான கருத்து என்றார். சுயமரியாதையை இழந்துவிட்டு ஏதுமில்லை என்றுக் கூறிய கனிமொழி, நம் வாழ்க்கையில் வெள்ளை என்ற ஒளி உருவாக வேண்டும் எனில் நாம் கருப்பில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்றும், பெரியார் என்ற கருப்புச்சட்டை இல்லாமல் விடியல் இல்லை என்று குறிப்பிட்டார்.

Kanimozhi confession -13-01-2018-1

ஆண்டாள் எந்த சாதியில் பிறந்திருந்தால் என்ன?: ஜாதி என்ற சொல்லையே அழிக்க வேண்டும், ஜாதியே இல்லாத நிலையை உருவாக்குவதே திராவிட அரசியலின் அடிநாதம் என்றுக் கூறிய கனிமொழி, ஜாதியைக் கொண்டு ஒருவன் ஒருவரை ஒடுக்கினால் அதையே ஆயுதமாக தூக்க வேண்டியது அவசியமாகிறது என்றும் குறிப்பிட்டார். நாம் தூக்க வேண்டிய ஆயுதம் எதுவென தீர்மானிப்பது எதிரியே என்றும் கனிமொழி தெரிவித்தார். ஜாதி இல்லை என்று எல்லோரும் சொல்கிறோம், எந்த ஜாதியில் பிறந்தவரும் என்னை வந்து சேரலாம் என்று கண்ணபிரான் கூறுவதாக கீதை சொல்கிறது எனில், ஆண்டாள் எந்த சாதியில் பிறந்திருந்தால் என்ன? ஆண்டாள் பிறப்பால் தலித்தாக இருந்திருக்கலாம், எந்த சாதியாகவும் இருந்திருக்கலாம் எதுவாய் இருந்தால் என்ன? அதில் என்ன பிரச்சனை எனவும் கனிமொழி குறிப்பிட்டார். இப்படிப்பட்ட விவாதங்களை நிகழ்த்தவில்லை எனில், பயந்திருப்போம் எனில், நிச்சயமாக தமிழினம் சுயமரியாதை அற்ற இனமாக, அடையாளம் அற்ற இனமாக, எதையெல்லாம் போராடி சாதித்தோமோ அதையெல்லாம் இழந்துவிடும் இனமாக மாறிவிடும் சூழல் நிலவுவதாக கனிமொழி தெரிவித்தார்.

Kanimozhi confession -13-01-2018-3

கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி: கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி, உடல்நலம் சரியில்லாதபோது உதவியாளர் வைத்துவிடும் விபூதியைக் கூட அழித்துவிடுபவர் கருணாநிதி என்று தெரிவித்தார். தனது தாயார் கோவிலுக்குச் செல்வது குறித்து சிலர் கேட்பதாகவும், தனது தாயார் கோவிலுக்கு செல்வதற்கான உரிமைக்காகவும் தான் போராடுவதாக தெரிவித்தார்[1]. நிகழ்வின் போது தனது வீட்டில் நடைபெற்ற சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டு கனிமொழி பேசினார். “இப்போதும் இருவரும் (கருணாநிதி, கனிமொழி) கடவுளை மறுப்பது ஏன்?” என தனது தாயார் கேட்டதாகவும், “தலைவர் (கருணாநிதி) தற்போது (கடவுள் விடயத்தில்) தனது கருத்தை சிறிது மாற்றியிருப்பார்” என்று தாயார் குறிப்பிட்டதாகவும், இது தொடர்பாக கருணாநிதியிடம் “கடவுள் இருக்கிறாரா?” என கேட்டபோது, வாய் பேசமுடியாத நிலையில், “இல்லை” என கருணாநிதி தலையசைத்ததாகவும் கனிமொழி குறிப்பிட்டார்[2]. தனது வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த கனிமொழி, கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்று குறிப்பிட்டார்[3]. மேலும், எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்[4].

 

15-01-2018 -Arur Pudhiyavan, book release.215-01-2018 கனிமொழி பேச்சு: ஆரூர் புதியவனின்[5]  புத்தக வெளியீட்டின் போது, இவ்வாறு கனிமொழி பேசியது பல உண்மைகளை எடுத்துக் காட்டுகிறது. ராம கோபாலன், “இவர்கள் எல்லோருமே, தங்களது பெண்டாட்டிகளை வைத்து சாமி கும்பிடுகின்ற கூட்டம்”, என்று பேசியதுண்டு. அதை கனிமொழி இப்பொழுது ஒப்புக் கொண்டுள்ளார் என்றாகிறது. அம்மாவின் “சாமி கும்பிடுகின்ற உரிமைக்கு”. இவர் என்ன போராடுவது? அப்பொழுது அவ்வுரிமையை யார் பறித்தது என்ற கேள்வி எழுகின்றது. நாத்திக துணைவன் அவ்வாறு தடுத்துக் கொண்டிருந்தால், அது அவனது ஆணாதிக்கத்தைத் தான் எடுத்துக் காட்டுகிறது. 93 வயதாகியும் துணைவியை ஆட்டிப் படைக்கிறார் என்றால், அதை மகள் எடுத்துக் கஆட்டவேண்டும். மாறாக அவரது உரிமைக்குப் போராடுகிறேன் என்றால், தந்தையை எதிர்த்தாப் போராடப் போகிறார்?

15-01-2018 -Arur Pudhiyavan, book release

கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டது: “கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி, உடல்நலம் சரியில்லாதபோது உதவியாளர் வைத்துவிடும் விபூதியைக் கூட அழித்துவிடுபவர் கருணாநிதி”, என்ற போதும் அவரது மனம், மனசாட்சி உறுத்துவதை அறியலாம்.  உதவியாளர் விபூதியை வைப்பதற்கு கருணாநிதி ஏன் அனுமதிக்க வேண்டும், பிறகு ஏன் அழிக்க வேண்டும்? அப்படியென்றால், வைத்தால் ஏதோ பலன் கிடைக்கும் அன்ற ஆசை, நப்பாசை உள்ளுக்குள் இருக்கிறது என்றாகிறது. முதல் நாத்திகப் பழமான, கனிக்கு அத்தகைய நம்பிக்கையே இருக்கக் கூடாது ஆயிற்றே? யாரோ சொன்னார்கள் என்றால் பலித்து விடுமா என்ன? அதென்ன சாபமா, செய்வினையா, திருஷ்டியா, ….அதையெல்லாம் நம்ப வேண்டிய அவசியமே இல்லையே? பிறகு, அப்படி நம்பி வருத்தப் படுவது எடைக் காட்டுகிறது? வைத்த விபூதியையேத் துடைத்துப் போடும் அளவிற்கு நாத்திகம்-பகுத்தறிவு ஊறியிருக்கும் போது, இதெல்லாம் ஒரு விசயமா என்ன?

15-01-2018 - Kanimozhi on atheism-regrets about the comments on karu

கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும்: “கடவுள் விடயத்தில் தனது கருத்தை சிறிது மாற்றியிருப்பார்” என்று தாயார் குறிப்பிட்டதாகவும், இது தொடர்பாக கருணாநிதியிடம் “கடவுள் இருக்கிறாரா?” என கேட்டபோது, வாய் பேசமுடியாத நிலையில், “இல்லை” என கருணாநிதி தலையசைத்ததாகவும் கனிமொழி குறிப்பிட்டார்[6]. தனது வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த கனிமொழி, கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்று கனிமொழி குறிப்பிட்டார்[7]. அதாவது ராஜாத்தி அம்மாள்  கோவில்-கோவிலாக சென்று, கும்பிட்டு, அர்ச்சனை செய்து, பிரசாதம் வாங்கி வருவார், புருடன் சாப்பிடுவான் என்று, ஆனால் சாப்பிட்டப் பட்டதா-இல்லையா என்பது ரகசியம். பிறகு, சாய் பாபா வந்தபோது ஏன் காலில் விழுந்து கும்பிட வேண்டும்? எப்படியோ கனிமொழியின் மனம், மனசாட்சி உறுத்த ஆரம்பித்து விட்டது. அதனால், இந்த அளவுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியதாக உள்ளது போலும்.

© வேதபிரகாஷ்

16-01-2018

15-01-2018 - Kanimozhi on atheism

[1] நியூஸ்..7.செய்தி, எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது!” : கனிமொழி, January 15, 2018. Last Modified திங்கள், 15 ஜனவரி 2018 (23:00 IST).

[2] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/15/1/2018/kanimozhi-mp-karunanidhi-athist-philosaphy

[3] தமிழ்.வெப்.துனியா, என்ன ஆனாலும் திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது: கனிமொழி, January 15, 2018.

[4] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/we-don-t-stop-atheism-speech-says-kanimozhi-118011500020_1.html

[5] பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி, சென்னை மேடவாக்கம் காயிதேமில்லத் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர், தமுமுக வின் மாநிலச் செயலாளர், மக்கள் உரிமை வார இதழின் இணை ஆசிரியர்.

[6] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/15/1/2018/kanimozhi-mp-karunanidhi-athist-philosaphy

[7] தமிழ்.வெப்.துனியா, என்ன ஆனாலும் திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது: கனிமொழி, January 15, 2018.

 

ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், மாட்டுக்கறிக்கு ஆதரித்ததும், குங்குமத்தை அழித்ததும் தமிழ்நாட்டவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் – இப்பொழுது சனியைப் பற்றி பேசும் ஸ்டாலின் (2)

ஜனவரி 16, 2018

ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், மாட்டுக்கறிக்கு ஆதரித்ததும், குங்குமத்தை அழித்ததும் தமிழ்நாட்டவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்இப்பொழுது சனியைப் பற்றி பேசும் ஸ்டாலின் (2)

Blood pongal - as Kru compared kumkum with blood

போகி திருநாளும், பிடித்துள்ள சனியும்: ஸ்டாலின் பேசியது, “இன்று போகி திருநாள். போகி என்றால் பழையன கழிதலும், புதிய புகுதலும் என்ற நிலையில், நம்மை பிடித்துள்ள சனி இன்றோடு ஒழிந்திட வேண்டும். வீட்டிலிருக்கும் பழையனவற்றை மட்டுமல்ல, இந்த நாட்டிலிருக்கும் பழையனவற்றையும் அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு உருவாகியிருக்கிறது[1]. அந்தளவுக்கு, ஏறக்குறைய 20 ஆண்டுகள் பின்தங்கி, மோசமான நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு, நாளைய தினம் தை பிறக்கின்ற நேரத்தில் ஒரு நல்ல விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கை நமக்கெல்லாம் உருவாகி இருக்கிறது. எனவே, நம்முடைய தமிழகத்தை காப்பாற்ற, தமிழகத்துக்கு ஒரு விடிவுகாலத்தை உருவாக்கிட, தமிழக மக்களுக்குத் தேவையான திட்டங்களை உருவாக்கிட வேண்டுமென்று, இந்த தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவில் உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கையோடு உங்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டும் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறினார்[2]. இனி தளபதியை மாடு முட்ட வந்த விவகாரத்தை கவனிப்போம்.

Cow marched towards Stalin - 14-01-2018, twitter

மாடு முட்ட வந்த சமாசாரம்: வேடிக்கை என்னவென்றால், தளபதியை மாடு முட்ட வந்த விவகாரத்தை “தினமலர்” மட்டுமே வெளியிட்டதாகத் தெரிகிறது. ஒரு வீடியூ 15-01-2018 காலையில் தேடியபோது காணப்பட்டது. மதியம் காணப்படவில்லை. கொளத்துாரில், ஸ்டாலினை மாடு முட்ட வந்ததால், மாட்டிற்காக செய்யவிருந்த பூஜையை, ஸ்டாலின் ரத்து செய்தார்.தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க., செயல் தலைவருமான ஸ்டாலினின் சொந்த தொகுதி கொளத்துார். இந்த தொகுதிக்கு உட்பட்ட, பெரவள்ளூர், பெரியார் நகர் பகுதிக்கு வந்தார். கொளத்துார் வீதிநகர் பகுதியில், நடந்த பொங்கல் விழாவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஸ்டாலின், 9:00 மணிக்கே வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.ஆனால், 12:௦௦ மணிக்கு வந்த ஸ்டாலின், பொங்கல் விழா நடைபெறும் இடத்தில் இருந்த பசுமாட்டிற்கு மாலை போட சென்றார்.ஆனால், அந்த மாடு முட்ட வரவே, கோபமடைந்த ஸ்டாலின், மாலையை கட்சி தொண்டர் ஒருவரிடம் கொடுத்து மாட்டிற்கு போடச் சொன்னார்[3]. மேலும், பசு மாட்டிற்கு செய்யவிருந்த பூஜையையும் வேண்டாம் என்று கூறி மறுத்து விட்டார்[4]. சென்ற ஜூன் 2017ல் மாட்டுக்கறியை ஆதரித்துப் பேசியதை நினைவு கொள்ளலாம்[5]. இப்படி இரட்டை வேடும் போடும் இவர், பொங்கல் வாழ்த்து என்று இணைதளத்தில் படம் போடும் போது, மாட்டை சேர்த்துக் கொள்கிறார்.

Cow and stalin - DM-14_01_2018_016_026

மிருகம் போலி நாத்திகனின் முகமூடியைக் கிழித்து விட்டது: ஸ்டாலினை மாடு முட்ட வந்தது, மாலை போட மறுத்தது, போலி நாத்திகத்தை தோலுரித்திக் காட்டுகிறது. குங்குமத்தை அழித்த ஸ்டாலினை மாடு முட்ட வந்தது, திராவிட நாத்திகத்திற்கு சரியான அடி! பகுத்தறிவால் எந்த விளக்கமும் கொடுக்க முடியாது! முன்னர் கருணாநிதி, திமுக தொண்டர் குங்குமத்துடன் வந்தபோது, நக்கலாக, “என்ன நெற்றியில் ரத்தமா?”, என்ற கேட்ட வயதான தந்தை கருணாநிதியின் வக்கிரம் தான், தனயன், நெற்றியில் இட்ட குங்குமத்தை அழித்தபோது புலப்பட்டது. பிறகு தனது தாயார், துணைவியார், சகோதரி என்று எல்லோரும் ஏன் குங்குமம் வைக்கின்றனர், அவற்றை அழிக்காமல் இருக்கும் இவரது யோக்கியதை என்ன என்பதனை கவனிக்க வேண்டும். ஸ்டாலின் – மாடு முட்ட வந்தால் வீரத்தமிழா, கோபம் வரக்கூடாது, கொம்புகளைப் பிடித்து அடலேறு போல அடக்கி வீரத்தைக் காட்ட வேண்டும்! ஜல்லைக் கட்டுக்கு வீரம் பேசிய இந்த தளபதி கோழை போல ஓடி போனது, கேவலமானது. வயதாகி விட்டது என்று சொல்லலாம், அப்பொழுது, வயதிற்கு வேண்டிய நாகரிகம் அப்பனுக்கும், மகனுக்கும் இல்லாத்தும் கேவலம் தான். நம்பிக்கையில்லாத ஸ்டாலின் சனி பற்றி பேசுவது, அவரது பொலித்தனத்தின் உச்சம்! பிறகு ராகு-கேது எல்லாம் வரும் போல!

Cow marched towards Stalin - 14-01-2018, Chennai.Karu enquires

போகி பண்டிகையில், பழையது கலைந்து, புதியதை உருவாக்குவோம். தமிழகத்தை சனிபிடித்து ஆட்சி செய்கிறது.தை பிறந்தால் வழிபிறக்கும், பெரியாரா இப்படி சொல்லிக் கொடுத்தார்? பண்டிகைகளைக் கேவலப்படுத்திய ஈவேரா மற்றும் திக முதலியவற்றை தமிழக மக்கள் அறிந்து, புரிந்து கொண்டு விட்டனர். ஹேமமாலினியையும், ஸ்டாலினையும் மாடு முட்ட வந்ததில் உள்ள ஒற்றுமை, வேற்றுமை என்ன என்று பார்த்தால், முன்னவர் பிராமண்ராக இருந்தாலும், தான் கடமையை செய்யும் போது முட்ட வந்தது. ஆனால், இங்கோ, பொங்கல் வைத்து, பசுக்கு மாலை போட வந்த போது முட்டப் பார்த்தது. ஆக, அந்த ஜீவனுக்கு, இந்த மனிதனின் போலித் தனம் தெரிந்திருக்கிறது.

Stalin, atheist visiting temples- 13-01-2018

இந்து மதம் மட்டுமல்ல எந்த மதத்தை இழிவுபடுத்தினாலும் தி.மு.. அதை ஏற்காது: வைரமுத்து-ராஜா விவகாரத்தில், ஸ்டாலின் கூறிய இரு வரியை பெரியதாக எடுத்துக் கொள்ள முடியாது[6]. இந்து மதம் மட்டுமல்ல எந்த மதத்தை இழிவுபடுத்தினாலும் தி.மு.க. அதை ஏற்காது ஊக்கப்படுத்தாது, உடன்படாது. என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்[7]. ஆனால், அவர் அவ்வாறு செய்துள்ளாரா என்று பார்த்தால் ஒன்றும் கிடையாது. ஊடகங்களும் பதிலுக்கு எந்த கேள்வியையும் கேட்கவில்லை[8]. திமுக உடன்படாது என்றால், தான் உடன் படுவேன், ஊக்குவிப்பேன், ஏற்பேன் என்றாகிறது[9]. இது பேட்டியில் ஏதோ குறிப்பிட்டிருக்கிறார், அவ்வளவுதான், ஏனெனில், இதுவரை, இந்து மதம் தாக்கப் பட்டபோது, இவர் வாயை மூடிக் கொண்டுதான் இருந்தார். இப்பொழுது கூட கனிமொழி பேசியதற்கு ஒன்றையும் சொல்லக் காணோம். அதென்ன அப்பேச்சு இழிவு படுத்தியதாக ஆகாதா? அவ்வளவு ஏன், இவரது தந்தை பேசியது எல்லாம் ஞாபகப் படுத்திக் கொண்டால், இவரது மனதுக்கு, மனசாட்சிக்குத் தெரியாமலா போய் விட்டது? வைத்த குங்குனத்தை அழித்தபோது, இவர் என்ன செய்ததாக அர்த்தம்? ஆகவே, இந்த ஒரு வரியை வைத்து, இவரது குணத்தை ஒன்றும் எடை போட முடியாது. மேலும், ஊடகங்கள், பசு முட்ட வந்ததை மறைத்ததிலிருந்தே, அவகளது வழக்கமான, செக்யூலரிஸத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Karunanidhi meeting DNK 13-01-2018

பொங்கல் அன்று கனிமொழி வீட்டிற்கு சென்ற கருணாநிதி: ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்து கனிமொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்[10]. இதேபோல் திமுக தொண்டர்களும் ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக மக்களுக்கு கனி மொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்து உள்ளார்[11]. இந்த ஆண்டாவது தமிழக மக்களுக்கு விடிவுகாலம் பிறக்க வேண்டும் என கூறி உள்ளார். வழக்கமாக பொங்கல் அன்று கருணாநிதி வீடு களை கட்டும். இந்த ஆண்டும், சி.ஐ.டி காலணி வீட்டில் தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பொங்கல் அன்று கோபாலபுரம் வீட்டில் தொண்டர்களைப் பார்த்து கையசைத்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Stalin, atheist visiting temples-duplicity- 60th marriage

கோபாலபுரம் வீட்டில் இருக்கும் கருணாநிதி, பொங்கல் அன்று தொண்டர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தனித்தனியாக தொண்டர்களை பார்க்க மருத்துவர்கள் அனுமதி தரவில்லை. நோய் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்று தடை போட்டுவிட்டனர். இந்நிலையில், 15 மாதங்களுக்கு பிறகு சென்னை சி.ஐ.டி காலணி வீட்டிற்கு ஜனவரி 15-ம் தேதி இரவு 9 மணிக்கு சென்றார் கருணாநிதி[12]. வீட்டுக்கு வந்த கருணாநிதியை அவரது மகள் கனிமொழி வரவேற்றார். ராஜாத்தி அம்மாள், அரவிந்தன் ஆகியோர் கருணாநிதியை வீட்டுக்குள் அழைத்து சென்றனர். ”வீட்டுக்கு அப்பா வந்தது மகிழ்சி அளிக்கிறது’ என்றார் கனிமொழி[13]. ஆக அப்பனை, அண்னனை மகள் சந்தித்தாள், என்று சொல்லாமல், ஏதோ ஒரு தலைவர், இன்னொருவரஇப் பார்த்தார் என்று செய்தி போட்டிருப்பது, நிருபர்கள், செய்தியாளர்களின் அடிமைத் தனத்தைக் காட்டுகிறது. “பொங்கல் இனாம்” கனமாக இருந்தது போலும். இதை ஏன் குறிப்பிட்டுகின்றேன் என்றால், மாடு முட்டிய விசயத்தை மறைத்ததால், அதனைப் பற்றி, பகுத்தறிவோடு செய்தி வெளியிட்டு விவாதிக்காமல் இருந்ததால் தான்.

© வேதபிரகாஷ்

16-01-2018

Stalin, atheist visiting temples-duplicity- 13-01-2018

[1] பாலிமர்.நியூஸ், கொளத்தூர் தொகுதி பொங்கல் விழாக்களில் மு..ஸ்டாலின் பங்கேற்பு, 13-ஜன-2018 12:43

[2]https://www.polimernews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/

[3] தினமலர், முட்ட வந்தது பசு மாடு பூஜையை நிராகரித்த ஸ்டாலின், Added : ஜன 14, 2018 04:39.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1938542

[5] http://www.timesnownews.com/india/video/beef-ban-dmk-protest-mk-stalin-iit-madras-assault/62078

 

[6] பாலிமர்.நியூஸ், எந்த மதத்தை இழிவுபடுத்தினாலும் தி.மு.. அதை ஏற்காதுமு..ஸ்டாலின், 13-ஜன-2018 15:04

[7]https://www.polimernews.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5/

[8] தி.இந்து, அதிமுக ஆட்சி அகலவேண்ண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு: ஸ்டா;இன் பேட்டி, Published :  13 Jan 2018  15:50 IST; Updated :  13 Jan 2018  15:50 IST

[9] http://tamil.thehindu.com/tamilnadu/article22436018.ece

[10] தினத்தந்தி, தமிழக மக்களுக்கு கனிமொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார், ஜனவரி 14, 2018, 10:23 AM

[11] http://www.dailythanthi.com/News/TopNews/2018/01/14102338/Kanimozhi-for-Tamil-people-Pongal-greeted.vpf

[12] விகடன், கனிமொழி வீட்டில் கருணாநிதி….!, எஸ். முத்துகிருஷ்ணன், Posted Date : 01:15 (16/01/2018); Last updated : 01:15 (16/01/2018)

[13] https://www.vikatan.com/news/tamilnadu/113646-karunanidhi-went-to-kanimozhis-cit-colony-house-after-15-months.html – vuukle_div

மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது திராவிடர்களின், பகுத்தறிவா மடத்தனமா?

ஜனவரி 15, 2010

மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது திராவிடர்களின் பகுத்தறிவா, மடத்தனமா?

மாட்டுக்கறியைத் தின்றுகொண்டே மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது நாதிகமா, பகுத்தறிவா?

பாலூட்டும் அன்பிலே அன்னை நீயே : இன்று மாட்டுப்பொங்கல்
ஜனவரி 15,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6281

Front page news and headlines today
மாட்டுப்பொங்கல் வழிபாடு: மாட்டுப்பொங்கலன்றும், பிறநாட்களிலும் மாலை 6 மணிக்கு (பசுக்கள் மேய்ச்சல் முடித்து திரும்பும் உத்தேச வேளை) வாசகர்கள் கிருஷ்ண பரமாத்மாவை மனதில் நிறுத்தி இந்த ஸ்தோத்திரத்தைச் சொன்னால் நன்மை பெருகும். ஆயர்பாடிக்கு அலங்காரமாய் இருப்பவரும், எல்லா பாவங்களையும் போக்குபவரும், எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பவரும், மயில்தோகையைத் தலையில் சூடியவரும், இனிமையான புல்லாங்குழலைக் கையில் கொண்டவரும், மன்மதன் போல் அழகுள்ளவரும், மதுராநகரம் பெற்ற பாக்கியமாகத் திகழ்பவருமான ஸ்ரீகிருஷ்ணரை நமஸ்கரிக்கின்றேன்.மன்மதனுடைய கர்வத்தைப் போக்குபவரும், நீண்டதும், அசைந்து அழகுசெய்வதுமான கண்களைக் கொண்டவரும், பசுக்களை பாதுகாப்போரின் கஷ்டத்தைப் போக்குபவரும், செந்தாமரை போன்ற கண்களைப் பெற்றவருமான ஸ்ரீகிருஷ்ணரைப் போற்றுகின்றேன்.தாமரை போன்ற கைகளால் கோவர்த்தனகிரியைத் தூக்கியவரும், இந்திரனின் கர்வத்தைப் போக்கியவரும், மிக அழகான கன்னங்களைக் கொண்டவரும், கோபியர்கள் கொஞ்சும் ரமணனாகத் திகழ்பவரும், யசோதைக்கு மகிழ்ச்சியைத் தந்தவருமான ஸ்ரீகிருஷ்ணரைத் துதிக்கிறேன். எங்கள் மனதில் எப்போதும் தன் திருப்பாத கமலங்களை வைத்தவரும், தவப்பயனை நந்தகோபனுக்கு தந்தவரும், எல்லா தோஷங்களையும் அடியோடு போக்குபவரும், எல்லா உலகங்களையும் காப்பவரும், கோபியர்களின் மனதில் குடிகொண்டவருமான ஸ்ரீகிருஷ்ணரைத் தியானிக்கின்றேன்.பூபாரத்தைத் தீர்த்தவரும், சம்சார சாகரத்தைத் தாண்டச் செய்பவரும், யசோதையிடம் பாலைத்திருடி விளையாடல் புரிந்தவரும், கடைக்கண்களைக் காட்டி அருள்பவரும், சாதுக்களின் நெஞ்சில் வைத்துப் பூஜிக்கப்படுபவருமான ஸ்ரீகிருஷ்ணரை போற்றுகின்றேன். நற்குணங்களின் இருப்பிடமானவரும், சுகங்களின் பிறப்பிடமானவரும், கருணையின் விலாசமாகத் திகழ்பவரும், அசுரர்களை துவம்சம் செய்பவரும், இடைக்குலத்தில் உதித்தவரும், விளையாடல்களில் ஆசை கொண்டவரும், மின்னல் போன்ற பீதாம்பரத்தை தரித்தவரும், மேகம் போல் கருநீலவண்ணம் கொண்டவருமான ஸ்ரீகிருஷ்ணரை வணங்குகின்றேன். பசு மேய்ப்போருக்கு ஆனந்தம் தருபவரும், பத்மம் போன்ற இதயத்தில் மோகத்தை உண்டாக்குபவரும், பிரகாசிக்கும் சூரியன் போல ஒளிகொண்டவரும், விரும்பியதை அன்பர்களுக்கு தருபவரும், கடைக் கண்களால் அருள்பவரும், வேணுகானம் இசைப்பவரும், யதுகுலத் தலைவனாக இருப்பவருமான ஸ்ரீகிருஷ்ணரை சரணடைகின்றேன். கோபியர்களின் மனவீட்டில் குடியிருப்பவரான கிருஷ்ணா! உம்மை எப்போதும் துதிக்கும் பாக்கியத்தை தந்தருள்வாயாக. திவ்ய சரிதமான உம் சரிதத்தை கானமாகப் பாடும்படி அருள்புரிவீராக. உமது நாமத்தை ஜபிப்பவர்கள் ஒவ்வொரு பிறவியிலும் சிறந்த பக்திமானாகத் திகழும் பாக்கியத்தை தருவீராக.

பஞ்சகவ்யம் என்றால் என்ன? “கவ்யம்’ என்றால் “கவ்’ (பசு) சம்பந்தப்பட்டது என்று பொருள். பால், தயிர், நெய் என்னும் சத்தான மூன்று பொருள்களுடன், பாலுக்கு எதிரிடையானவையாகத் தோன்றும் கோமயம்(பசுஞ்சாணம்), கோமியம் (பசு மூத்திரம்) ஆகியவை கலந்து தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம். இதை சாஸ்திரம், “”க்ஷீரம், ததி, ததா சாஜ்யம், மூத்ரம், கோமயம் ஏ ச, ” என்று குறிப்பிடுகிறது. இதை சிவனுக்கு அபிஷேகம் செய்வர். இதைப் பிரசாதமாக சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லது.

மாட்டுக்கொட்டிலில் அமர்ந்து சாமி கும்பிடுங்க! பூஜையறை, சமுத்திரக்கரை, நதிக்கரை, தெய்வசன்னதி, மகான்களின் சமாதி ஆகிய புண்ணியமான இடங்களில் தெய்வநாமங்களைச் சொல்வது சிறப்பு. இந்த இடங்களை எல்லாம் விட கோடிமடங்கு நன்மை தரும் இடம் “கோஷ்டம்’ என்னும் மாட்டுக்கொட்டிலாகும். ஏனென்றால், பசுவின் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்களும் குடிகொண்டுள்ளனர். சகல புண்ணிய தீர்த்தங்களும் அதன் உடம்பில் வாசம் செய்கின்றன. பிரம்மா உலகநன்மைக்காக காமதேனு பசுவினைப் படைத்தபோது, புனிதமான அதன் உடலில் குடியிருக்க அனைத்து தேவர்களும் முகம் முதல் வால்வரை ஓடிவந்து இடம்பிடித்துக் கொண்டனர். லட்சுமியும், கங்கையும் தாமதமாக வந்ததால் இடம் இல்லாமல் தயங்கி நின்றனர். காமதேனு கோமயமான பிருஷ்டபாகத்தில் (பின் பக்கம்) இடம் தந்து அவ்விருவரையும் தங்கும்படி வேண்டிக்கொண்டது. கோயிலுக்குச் சென்றால் குறிப்பிட்ட தெய்வங்களை மட்டுமே தரிசிக்க முடியும். ஆனால், பசுவின் உடம்பிலோ இல்லாத தேவதைகளே இல்லை. அதனால், நம் கண் முன்னே நடமாடும் கோயிலாக பசுமாடு அமைந்துள்ளது. பசுவிற்கு செய்யும் சேவை சகலதெய்வங்களுக்கும் செய்யும் புண்ணிய சேவையாகும்.

பேசும் விலங்கு: வாயில்லா ஜீவன் என்று பொதுவாக விலங்குகளைச் சொல்வார்கள். ஆனால், பசு மட்டும் ஒரே ஒரு சொல்லைப் பேசும். அதுதான் “அம்மா’. அடிவயிற்றிலிருந்து அம்மா என்று பசு கத்துவது, நம்மைப் பெற்ற தாயை நினைவூட்டும். அம்மா நமக்கு பாலூட்டி சீராட்டி வளர்த்தாள். பெற்றதாயின் கடமை கூட இரண்டு, மூன்று வயதோடு முடிந்து விடுகிறது. ஆனால், பசுவோ நம் வாழ்நாள் வரையிலும் நமக்குத் தேவையான பால், தயிர், நெய் என்று பலவித உணவுகளைத் தந்து நம்மைக் காப்பாற்றுகிறது. வயதானவர்களுக்கும், நோயாளிகளுக்கும் ஏதும் சாப்பிட முடியாவிட்டாலும், பால் கொடுத்து காப்பாற்றுவார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை பால் மனிதனுக்கு அவசியம். மனிதன் இறக்கும் தருவாயில், அவனது வாயில் பால் ஊற்றுவதுண்டு. இறந்த பிறகு, சிதையிலும் பால் ஊற்றும் சடங்கு இருக்கிறது. அந்தவகையில், நம் உயிரைக் காப்பதிலும், வாழ்வோடு ஒன்றிப்போன பொருளாகவும் பசும்பால் உள்ளது. அதனால்தான் பசுவையும் நமது அன்னையாக எண்ணி “கோமாதா’ என்று பெயர் சூட்டி பெருமைப்படுத்தியுள்ளோம்.

செல்வவளம் பெருக கோபூஜை: பசுவின் உடம்பில் அத்தனை தெய்வங்கள் இருந்தாலும், அதில் சிறப்பம்சமாக செல்வ தேவதையான லட்சுமியையே குறிப்பிடுவர். லட்சுமி பசுவின் உடம்பில் இருக்கிறாள் என்பதை விட, பசுமாட்டினையே லட்சுமியாக பாவித்து வழிபடுகிறோம். திருமகள் வாசம் செய்யும் இடங்கள் ஐந்து. சுமங்கலிப் பெண்ணின் வகிடு, மலர்ந்த தாமரை, யானையின் மத்தகம்(தலை), வில்வ இலை ஆகிய நான்கைத் தவிர, பசுவின் பிருஷ்ட (பின்பகுதி) பாகத்திலும் அவள் குடியிருக்கிறாள். கோயில்களில் ஒவ்வொருநாளும் அதிகாலையில் கோபூஜை செய்யப்படும். அப்போது பசுவின் பின் பாகத்துக்கு பூஜை செய்வதைக் காணலாம். பசுவுக்குச் செய்யப்படும் கோபூஜையால் திருமகளான லட்சுமியின் அருள் பெருகும்.

கொம்புப் பால் அபிஷேகம்: சிவனுக்குச் செய்யப்படும் அபிஷேகங்களில் பசுவின் கொம்பினால் செய்யப்படும் பாலபிஷேகம் மிகவும் புனிதமானது. இதனால், முற்பிறவியில் செய்த பாவவினைகள் கூட நம்மை விட்டு அகன்று விடும். அதேபோல, பசுவின் வயிற்றில் இருந்து எடுக்கப்படும் கோரோசனை என்னும் வாசனைத் திரவியமும் வழிபாட்டில் பயன்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் கூட மருந்து சாப்பிடும்போது “அனுபானம்’ என்ற பெயரில் பசும்பாலைக் குடிக்கும் முறை உண்டு. சங்கீதத்திலும் பசுவின் தோலைப் பயன்படுத்துகிறார்கள். தவில் போன்ற வாத்திய கருவிகளுக்கும் பசுவின் தோலையே பயன்படுத்துகிறார்கள்.

நீராடுங்கள்! நீறாடுங்கள்! தினமும் உடல்தூய்மைக்காக நீராடுகிறோம். நீராடினால் நம் உடல் மட்டும் தூய்மையாகும். அதோடு நாளும் “நீறாடினால்’ உள்ளமும் தூய்மையாகும். நீறு என்றால் திருநீறு. இதைவிட உயர்ந்த பொருள் வேறு இல்லை என்பதை திருஞானசம்பந்தர் “மந்திரமாவது நீறு’ என்று தொடங்கும் திருநீற்றுப்பதிகத்தில் விரிவாகக் கூறியுள்ளார். பசுவின் சாணத்தை புடமிட்டே திருநீறான விபூதியைத் தயாரிக்கிறார்கள். திருநீற்றினை அணியாதவர்களை “நீறில்லா நெற்றி பாழ்’என்கிறார் அவ்வைப் பாட்டி. நீராடிய பின் பக்தியோடு திருநீற்றுப்பதிகம் சொல்லி திருநீறைப் பூசிக் கொண்டால் எல்லா நன்மைகளும் பெருகும் என்கிறார் திருஞானசம்பந்தர்.

கோதூளி லக்னம்: பசுவின் பாதத்தூளி (பாதம் பட்ட தூசு) மிகவும் உயர்ந்தது என்று மகான்கள் சொல்லியிருக்கிறார்கள். பசுக்கள் மேய்ந்து விட்டு, கொட்டிலுக்குத் திரும்பும் போது, அதன் குளம்படிகள் பட்டு எழுகின்ற புழுதிப்படலம் நம் மீது படுவது மிகுந்த நன்மை தரும். கங்கை போன்ற புண்ணியநதிகளில் நீராடியதற்குச் சமம். திருமால், பாலகிருஷ்ணனாக கோகுலத்தில் வசித்த போது, பசுக்கள் எழுப்பிய தூசில் திளைத்தாடியதால் “கோதூளி தூஸரிதன்’ என்று அவருக்கு பெயர் உண்டு. கோதூளி பட்டதால் தான் பாலகிருஷ்ணனுக்கு சவுபாக்கியங்களும், அழகும் உண்டானதாக ஆதிசங்கரர் பாடுகிறார். பசுமாடுகள் மேய்ச்சலை முடித்த கொட்டிலுக்கு திரும்புகிற மாலை வேளையை “கோதூளி லக்னம்’ என்பர். இவ்வேளையில் செய்யும் செயல்கள் யாவும் நன்மை தரும் என்றும், விரைவில் நிறைவேறி பலன்தரும் என்றும் ஜோதிடசாஸ்திரம் கூறுகிறது.

பால்வளம் பெருக்கும் வழிபாடு: விஷ்ணு, கிருஷ்ணாவதாரம் எடுத்து, கோபாலன் என்ற பெயரில் ஆயர்பாடியில் வசித்தார். அவர் பசுக்களோடு இரண்டறக் கலந்து உறவாடி மகிழ்ந்தார். பெருமாளுடைய அவதாரங்களில் பூர்ணாவதாரம் எனப்படும் கிருஷ்ணாவதாரமே முழுமையானது. கிருஷ்ணனின் வரலாறு சர்க்கரைப் பந்தலில் பெய்த தேன் மழையாய் இனித்திடும் என்பார்கள் பாகவதர்கள். வேணுகோபாலன் பசுக்களை மேய்த்தபோது அவருடைய புல்லாங்குழல் நாதம் கேட்ட பசுக்கள் தங்களையும் மறந்து பகவானின் இடதுபாதத்தை ருசித்து ஆனந்தம் கொண்டன. இதை உணர்த்தும் வகையில் பூமியில் இடதுபாதத்தை ஊன்றச் செய்து, அதை பசுஒன்று தன் நாவினால் சுவைப்பது போல சித்திரத்தை வரைந்திருப்பர். இந்தக் கோலத்தில் கிருஷ்ணரை வழிபட்டால் வீட்டில் பால்பாக்கியம் பெருகி செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

கைப்பிடி புல்லாவது கொடுங்க! கோபூஜையை எல்லாரும் செய்ய முடியாது. ஆனால், கோகிராஸம் என்பதை நாம் அனைவரும் எளிதாகச் செய்யமுடியும். இதனை திருமந்திரத்தில் திருமூலர் “”பசுவுக்கு ஒரு வாயுறை” என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருநாளும் பசுமாட்டிற்கு ஒரு கையளவு பசும்புல்லாவது கொடுப்பதை “”கோகிராஸம்” என்கிறது தர்மசாஸ்திரம். இதனால் நமக்கு அளவில்லாத பெரும்புண்ணியம் உண்டாகும். குறிப்பாக பசுமாடு விரும்பி உண்ணும் அகத்திக்கீரை, பசும்புல், வாழைப்பழம் போன்றவற்றில் நம்மால் முடிந்ததை உண்ணக் கொடுக்க வேண்டும். இச்செயலால் நம் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.