Archive for the ‘மத வித்தியாசம்’ Category

நாத்திகமும், ஆத்திகமும்: அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – IV

ஜனவரி 16, 2010

அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – IV

© வேதபிரகாஷ்

முன்பு இம்மாநாட்டின் நிகழ்வுகளை பத்திதுள்ளேன்[1]அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – I to III! இதில் தீர்மானங்கள் சம்பந்தமான விவரங்கள் கொடுக்கப்படுகின்றன.

7வது பகுத்தறிவாளர் கழக மாநாட்டின் தீமானங்கள்!: இரண்டாவது நாளில் (27-12-2009, ஞாயிற்றுக் கிழமை) மாநாட்டின் தீர்மானங்கள் முதலில் வாசிக்கப்பட்டு, அதன் விவரங்கள் பின்னணி நரேந்திர நாயக்கினால் விளக்கப்பட்டன:

1. இந்திய அரசு மதத்தை அரசியலிலிருந்து பிரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக ஒரு சட்டவடிவை உண்டாக்கி, சட்டமாக்க வேண்டும்[2]. லிப்ரான் கமிஷன் அறிக்கையிலும் இக்கருத்து சொல்லப்பட்டிருக்கிறது[3].

2. விளம்பரங்களில் வரும் மூட நம்பிக்கைகள் நிறுத்தப்படவேண்டும். அதாவது விளம்பரங்கள் மூடநம்பிக்கைகள் பரப்ப உபயோகிக்கக்கூடாது[4].

3. பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) அமூலாக்க வேண்டும்[5]. ஏற்கெனவே இரண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இதனை வலியுறுத்துள்ளது.

4. அயல்நாட்டிலிருந்து ஊக்குவிக்கப்படும் தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்[6]. அதுமட்டுமல்லாது, எல்லாவிதமான தீவிரவாதங்களும் ஒழிக்கப்படவேண்டும்.

5. அரசியல் நிர்ணயச் சட்டத்தின் சரத்து 31 (Art.31), முக்கியமாக சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகை நீக்கப்படவேண்டும். எல்லாமதங்களின் உரிமைகளும் மதிக்கப்படவேண்டும் (Art.14) என்பதைவிட, சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று மாற்றவேண்டும்.

6. கொடுக்கப்படும் மான்யங்கள் (Subsidies) அறவே ஒழிக்கப்படவேண்டும்.

7. சிறப்புத் திருமண சட்டத்தினைத் திருத்தி (Special marriage Act), பதிவு செய்தல் என்பது எல்லா மதங்களுக்கும் கட்டாயமாக்கவேண்டும்[7].

8. பொது இடங்களில் மதசம்பந்தமான அடையாளங்கள் / சின்னங்கள் வைப்பது நீக்கப்படவேண்டும். அவ்வாறே வழிபடும் இடங்கள் உள்ளதும் நீக்கப்படவேண்டும்.

9. ஸ்ரீலங்கத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது[8].

10. போலி-விஞ்ஞானம் ரீதியில் / மூலமாக பரப்பப்படும் மூடநம்பிக்கைகளை அரசு உரிய முறையில் தடுக்க ஆவன செய்யவேண்டும்.

நாயக்கின் விளக்கம் இந்து-விரொதமாகத்தான் இருந்தது: ஒவ்வொரு தீர்மானம் முன்மொழியும் போது, நரேந்திர நாயக் விளக்கங்கொடுத்து, இது தெரிந்த விஷயம்தான், இதை நிறைவேற்றுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று நினைக்கிறேன் / இல்லை என்ற ரீதியில் பேசினார். மூடநம்பிக்கை பற்றி விவாதிக்கும் போது, செக்யூலரிஸ பாணியில், இந்து-எதிர்ப்பாக இருந்தது ஆச்சரியமான இருந்தது. “அயல்நாட்டிலிருந்து ஊக்குவிக்கப்படும் தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்”, என்றப்பொது, சில குரல்கள் எழுந்தன, உடனே அவர், “எல்லாவிதமான தீவிரவாதங்களும் ஒழிக்கப்படவேண்டும்” என்று சேர்த்துக் கொள்கிறேன் என்றார். அரசியல் நிர்ணயச் சட்டத்தின் சரத்து 31 பற்றிய விவாதம் வந்தபோது “சரண்டர்” ஆகிய நிலைதான் ஏற்பட்டது[9]. “பொது இடங்களில் மதசம்பந்தமான அடையாளங்கள் / சின்னங்கள் வைப்பது நீக்கப்படவேண்டும். அவ்வாறே வழிபடும் இடங்கள் உள்ளதும் நீக்கப்படவேண்டும்”, என்று சமீபத்தை தீர்ப்பின்படி, தீமானத்தை கொண்டுவந்தாலும், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் செய்துவரும் ஆக்கிரமிப்பு முதலியவைப் பற்றி மூச்சுவிடவில்லை. தெருக்களில் உள்ள கோவில்கள் உடனே அகற்றப்படவேண்டும் என்றுதான் பேசினார்[10]. “ஈழத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது” என்பதற்கும் எதிர்ப்பு இருந்தது. நாயக் அதனை, ஸ்ரீலங்கத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது”, என்று மாற்றிவிட்டார்!

ஐந்தாவது தீர்மானத்திற்கு எதிர்ப்பு: தீர்மானங்களை கூட்டமைப்பின் தென் மண்டலச் செயலாளர் வா.நேரு முன்மொழிந்தார். கூட்டமைப்பின் பிற அமைப்பின் சார்பாக அளிக்கப்பட்ட சிறுபான்-மையினரின் சிறப்பு உரிமைகளை அரச-மைப்புச் சட்டத்திலி-ருந்து நீக்க வேண்டுகோள் விடுத்த – தீர்மான முன்-வரைவின் மீது பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தனது எதிர்ப்பினை பதிவு செய்தார்[11]. சிறுபான்-மையினருக்கான சிறப்பு உரிமைகள் இந்நாட்டில் ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்துமத அமைப்புகளின் செயல்களுக்கு ஒரு பாதுகாப்பாக, சமத்துவத்தைப் பேண வழிகோலும் வேறுபாட்டு உரிமையாக, மனிதநேயத்தைப் பேணும் உரிமையாக உள்ள நிலைமையினை விளக்கி, அந்த சிறப்பு உரிமைகள் மேலும் மேலும் சீர்மைப்படுத்தப்பட்ட வேண்டியதன் அவசியத்தை விளக்கிப் பேசினார். இத்தகைய வலிந்து ஆதரிக்கும் நிலையில், மற்ற மதத்தினர்க்கு இந்த அமைப்பில் யாரும் இல்லை போலயிருக்கிறது.

முஸ்லிம்களே இல்லாத மாநாட்டில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்த நாத்திகர்கள்: நம்பிக்கையில்லாதவர், மூடநம்பிக்கை எதிர்ப்பவர், கடவுட்மறுப்பு சித்தாந்திகள், நாத்திகவாதிகள், பகுத்தறிவு வாதிகள் என்றேல்லாம் சொல்லிக் கொண்டு கூடியிருந்த கூட்டத்தில் ஒரு முஸ்லிமும் இல்லதது ஆச்சரியமாகவே இருந்தது. ஆனால், மேலே குறிப்பிட்ட ஐந்தாவது தீர்மானத்திற்லு கருப்புச் சாடைகள் எதிர்ப்பு தெரிவித்தன. சிறுபான்மை-யினர் உரிமையினை பாதிக்கும் அந்த தீர்மான முன்வரைவினை நீக்குவ-தற்கு பகுத்தறிவாளர் கழகம் எடுத்து வைத்த வாதங்களை பொதுக்குழு உணர்ந்து முன்வரைவு நிலையிலேயே அதற்கு முடிவு கட்டப்பட்டு அது நீக்கப்பட்டுவிட்டது.

நாத்திகர்களும், போலி-நாத்திகர்களும்: இந்தி பேசும் நாத்திகர்களைக் கண்டு, குறிப்பாகக் கேட்டு நமது கருப்புச் சட்டைகள் முழித்தது, அதிர்ந்தது முதலியன பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. இந்த 7வது ரேஸனலிஸ்ட் மாநாட்டிலேயே, போலி, சாதாரண மற்றும் பாரபட்சமுள்ள, குழப்பவாத, சந்தர்ப்பவாத நாத்திகர்களை மற்றும் நாத்திகவாதிகளைக் காணமுடிகிறது. அவர்களுக்குள் உள்ள முரண்பாடுகளும் வெளிப்படுகின்றன:

1. இந்து-விரோத நாத்திகம்: இந்தியாவில் இந்துக்கள் அதிகமாக இருப்பதால், இந்துமதத்தை எதிர்க்கிறோம் அன்றாலும், அத்தகைய வாதம், 100% நாத்திகமாக இல்லாமல், இந்து-விரோதமாகவே இருக்கிறது. வட-இந்தியாவில் எடுபடுவதில்லை என்று இந்த மாநாட்டிலேயே ஒப்புக்கொள்கிறர்கள்.

2. கிருத்துமத சார்புள்ள நாத்திகம்: தம்மை நாத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், கிருத்துவ அடிப்படை நம்பிக்கைகளைப் பற்றி விமர்சிக்க மாட்டார்கள் (பாவத்தின் சித்தாந்தம், ஆண் உறவு இல்லாமல் குழந்தை பிறப்பது, சிலுவையில் மரித்தது, உயிர்த்தெழுந்தது, ஆகாயத்தில் சென்றது……………….முதலியன), குறைகூற மாட்டார்கள். பொதுவான விஷயங்களை பேசி, உள்ள எல்லா சமூக-சீரழிவுகளுக்கும் இந்துமதம்தான் காரணம், ஆகையால் இந்துமதம் ஒழிக்கப் படவேண்டும் என்றும் பேசுவர்.

3. முஸ்லிம் மத சார்புள்ள நாத்திகம்: தம்மை நாத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், முஸ்லிம் மற்றும் இஸ்லாம் பற்றி மூச்சுக்கூட விடமாட்டர்கள். அடிப்படை நம்பிக்கைகளைப் பற்றி விமர்சிக்க மாட்டார்கள். பொதுவான விஷயங்களை பேசி, உள்ள எல்லா சமூக-சீரழிவுகளுக்கும் இந்துமதம்தான் காரணம், ஆகையால் இந்துமதம் ஒழிக்கப் படவேண்டும் என்றும் பேசுவர்[12].

4. தியானம், யோகா முதலியவற்றவை எதிர்க்கும் நாத்திகம்: சமீபத்தில் இத்தகையவற்றிற்கு மேலைநாடுகளில் அங்கீகாரம் கிடைத்ததாலும், அதன் பலனால், மக்கள் பலர் அவற்றைக் கடைப்பிடிப்பதாலும், தங்களுக்கு பாதிப்பு என்ற முறையில் எதிர்க்கின்றனர். வேடிக்கையென்னவென்றால், அதையே கிருத்துவர்கள், முஸ்லிம்கள் செய்தால் எதிர்க்கமாட்டார்கள். ஏனனில் அவர்களும் ஆஸ்ரமங்கள் வைத்துக் கொண்டு அப்பய்ற்ச்சிகளை மற்றவர்களுக்கு அளிக்கிறார்கள்[13].

5. சோதிடத்தையும், வானவியலையும் குழப்பும் நாத்திகம்: வேண்டுமென்றே சோதிடத்தையும் வானியலையும் குழப்பி, இந்திய வானியலை தூஷிப்பார்கள். விஷயம் இல்லையென்றால், இன்னென்ன தேதிகளில் சூரியகிரகணம், சந்திரகிரகணம், கோள்கள் ஒரே கோட்டில் வருவது முதலியன சோதிட-பஞ்சாங்களில் குறிப்பிடமுடியாது. வானியல் என்பது ஆண்டாண்டு காலமான நிகழ்வுகளை உன்னிப்பாக பல இடங்களில் பார்ப்பது, குறித்து வைப்பது, தொகுப்பது மற்றும் அதன் மூலம் அத்தகைய நிகழ்வுகள் ஏற்படும் என்று கூறுவது. 108 ஆண்டுகளுக்கு ஒருமுறை கங்கண கிரகணம் ஏற்படும், கோள்கள் ஒரே கிரமமாக வரும் முதலியன சோதிடம் ஆகாது, மூடநம்பிக்கையாகாது. பிறகெப்படி, பஞ்சாங்கள் அவற்றைக் குறிப்பிடுகின்றன?

6. நாத்திகத்தையும், பகுத்தறிவையும் குழப்பும் நாத்திகம்: இது “திராவிடம்” பேசும் “தமிழர்களிடம்” அதிகம் காணப்படுகிறது. அம்பேத்கரிஸம் முதலியன பேசுபவரிடமும் காணப்படும். நாத்திகம் என்பது கடவுட்தன்மையினை அறவோடு மறுப்பது. பகுத்தறிவு என்பது ஓரளவிற்கு மனித அறிவிற்கு புரிகிண்ர அளவில் ஏற்றுக்கொள்வது. இரண்டும் ஒன்றல்ல.

7. மூடநம்பிக்கையை எதிர்க்கும் நாத்திகம்: மேகங்கள் திரண்டு வந்தால் மழை பெய்யும் போன்றவையும் மூடநம்பிக்கைதான். ஏனெனில் மழை பெய்யலாம், பெய்யாமலும் இருக்கலாம்[14]. மழைகாலத்தில் மழை வரும், வெயில் காலத்தில் வெயில் வரும் என்பதெல்லாம் இப்பொழுது மாறிவிட்டன. இது பூகோளக் கோளாறு / பிறழ்ச்சி. அதிக விளைச்சல் இருந்தால் விலை முறைந்துவிடும் முதலியனவும் மூடநம்பிக்கைதான். ஏனெனில் பலநேரங்களில் அவ்வாறு விலை குறைவதில்லை. அரசு வரிவிகிதங்களைக் குறைக்கின்றது, சலுகைகளை அள்ளிவீசுகிறது, இருப்பினும் இப்பொழுது கட்டிடப் பொருட்கள் விலை 2003லிருந்து ஏறுமுகமாகவே உள்ளன[15]. இப்படி பல உதாரணங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். பங்குச் சந்தையைப் பற்றி கேட்கவே வேண்டாம்!

8. செக்யூலரிஸ நாத்திகம்: இது இந்தியாவிற்கே உரித்தானது. இந்த மூடநம்பிக்கை இங்கிருந்து இப்பொழுது உலகம் முழுவதும் பரவி வருகிறது எனலாம்.

9. நவநாகரிக நாத்திகம்: அதாவது, பெண்கள் “பெண்கள் கிளப்பிற்கு போவது” என்ற ரீதியில் உள்ள நாத்திகர்கள்! பெயரளவில் நாத்திகர்கள் எனலாம். திக, திமுக, பாமக மற்றும் அம்பேத்கரிஸம் முதலிய கோஷ்டிகளில் அதிகமாகக் காணலாம். இவர்களைப் பொறுத்தவரைக்கும் அவர்கள் குடும்பத்தில் ஆண்கள் நாத்திகர், பெண்கள் ஆத்திகர்!

10. விஞ்ஞானம் பேசும் நாத்திகம்: ஓரளவிற்கு விஞ்ஞானம் பேசினாலும், ஒரு நிலையில் அதிலும் மூடநம்பிக்கை வந்துவிடும்[16]. இப்பொழுது மரபணு மற்றும் இனங்களைப் பற்றியும், மொழிகள் உண்டானது, நியாண்டர்தால் குரங்கு எப்படி பாடியது, பேசியது, ஆடியது போன்ற ஆராய்ச்சிகளினின்று அத்தகைய விஞ்ஞான-நாத்திகத்தை அறியலாம்[17].

© வேதபிரகாஷ்

16-01-2009


[1] வேதபிரகாஷ், அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால், விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்:

https://dravidianatheism2.wordpress.com/2009/12/26/அகிலஇந்தியபகுத்தறிவாளர/

வேதபிரகாஷ், திராவிட பொய்களும், திரிபுகளும், பிரச்சாரங்களும், மேலும் விவரங்களுக்கு:

https://dravidianatheism2.wordpress.com/page/2/ மற்றும் https://dravidianatheism2.wordpress.com/page/3/

[2] மும்பையில் அத்தகைய வரைசட்டத்தை சட்டசபையில் கொண்டுவந்ததாகவும், ஆனால் மாநில அரசு தாமதப் படுத்துவதாகவும் நாயக் தெரிவித்தார்.

[3] கமிஷனின் அறிக்கைகளை, இந்திய அரசொயல்வாதிகள் என்றுமே மதிப்பதில்லை. மேலும் இந்த லிப்ரான் கமிஷன், முகுக்க-முழுக்க அரச்சியல் நோக்கம் கொண்டது என்பது அப்பட்டமாகத் தெரிவதால், சட்டரிதியில் யாரும் அதை பெரிதாகக் கொள்ளவில்லை. இரண்டு-மூன்று நாட்களில் ஊடகங்களேஅடங்கிவிட்டன.

[4] சிவப்பாக கிரீம், ஆண்கள் அழகாகக் கிரீம், முலைகளை பெரிதாக்க கிரீம் முதலியவற்றை எதிர்க்காதது ஆச்சரியமே!

[5] Smt. Sarla Mudgal, President, Kalyani and others vs. Union of India and other, AIR 1995 Supreme Court 1531 மற்றும் John Vallamattom v. Union of India AIR 2003 SC 2902.

திகவினர்-கருப்புச்சட்டைகள் இதனை எதிர்க்காதது ஆச்சரியமே. ஒருவேளை அதைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ளவில்லையா அல்லத் அவர்களது முஸ்லிம் நண்பர்கள் அதைப் பற்றி சொல்லவில்லையா அல்லது அத்தகைய தீர்மானம் வரும் என்பதை எதிர்பார்க்கவில்லையா?

http://vedaprakash.indiainteracts.in/2009/03/15/islam-goes-hi-tech-whether-it-is-terrorism-or-divorce/

Mohammad Ahmed Khan v. Shah Bano Begum – AIR 1985 SC 945 –  இதுதான் ராஜிவ் காந்தி சட்டத்தை வளைத்து, முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்குத் துணைப்போய், ஒரு புதிய சட்டத்தை முகமதியர்க்லளுக்க்ய்=உ ஏற்படுத்தியது.

John Vallamattom v. Union of India AIR 2003 SC 2902 – சரளா முத்கல் வழக்கு அடுத்து உச்சநீதிமன்றத்தில், மறுபடியும் அரசாங்கத்திற்கு ஒரு பொது சிவில் சட்டத்தை எடுத்துவரவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது. ஆனால், நமது செக்யூலரிஸ அரசியல்வாதிகள் அமைதி காக்கின்றனர். மற்ற நேரங்களில் நீதிமன்ற தீர்ப்புபடித்தான் நடப்பொம் என்று முழக்கமிடும் வீரர்கள் இப்பொழுது ஊமையாகிவிடுகிண்ரனர். இதுதான் இந்தியாவில் சட்டத்தை, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மத்திக்கும் லட்சணம்!

இதை “சட்ட / நீதி நாத்திகம்” என்று கூட கூறலாம்!

[6] அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது என்ன என்பது நாத்திகர்கள் பகுத்தறிவுவாதிகளுக்குத் தெரிந்திருப்பது சந்தோஷமான விஷயம்தான்.

[7] தமிழ்நாட்டில் அத்தகைய சட்டம் எடுத்து வந்துள்ளபோது, முஸ்லிம்கள் எதிர்த்துள்ளதை கருத்தில் கொள்ளவேண்டும்.

[8] திகவினர்-கருப்புச்சட்டைகள் இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. தமிழர்களுக்கு போராடுவோம், உயிர்விடுவோம் என்று பேசும் இவர்கள் அமைதியாக இருந்தனர். “ஈழம்” என்ற வார்த்தைக்கு வடமாநிலத்தவர் எதிர்ப்புத் தெரிவித்து அதை “ஸ்ரீலங்கா” என்று மாற்றியபோதும் கண்டுகொள்ளவில்லை.

[9] அவருக்குப் பிடிக்கவில்லை என்பது, அவர்முகபாவம் காட்டியது. இருப்பினும் நன்பர்களின் அழுத்ததால், சமரசம் செய்துகொண்டார் எனலாம்.

[10] மசூதி கட்ட நிலங்களை ஆக்கரமிப்பு செய்கின்றனர். பிறகு பட்டா வாங்கி சரிசெய்து கொள்கின்றனர். கிருத்துவர்களும் அதே வேலைத்தான் செய்து வருகின்றனர். அவர்கள் முதலில் சிலுவையை நட்டுவிடுவார்கள். பிறகு அதனைச் சுற்றி மேடைக் கட்ட்வார்கள். வரம் வாரம் தொழுகிறேன் என்று கூட்டம் கூட்டுவார்கள். பிறகு சுவர்கள், கூரை என வரும்………….அந்த இடத்தையே ஆக்கரமித்துவிடுவார்கள்.

[11] http://viduthalai.periyar.org.in/20091231/news19.html

[12] இப்பொழுது சிதம்பரத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். உள்துறை அமைச்சர் ஸ்தானத்தில் இருந்து கொண்டு, ஜிஹாத் சொல்லி பல குண்டுவெடிப்புகளை மேற்கொண்டு, அப்பாவி மக்களைக் கொன்று குவித்தபிறகும், ஜிஹாத் இல்லை என்று பேசும் போக்கு!

[13] இதைப் பற்றி தனியாகவே எழுதலாம். கேரளத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதிலும் இப்பொழுது முஸ்லிம் சோதிடர்கள் அதிகமாகக் கிளம்பிவிட்டர்கள்! அரசு பேருந்துகளில் வேறு விளம்பரம் செய்து கொள்கிறார்கள்!

[14] சன், கலைஞர் டிவிகளில் ரமணர் உதிக்கும் முத்துகளைக் கேட்டு முடிவு செய்து கொள்ளலாம்.

[15] இரும்பைப் பொருத்த வரைக்கும் உற்பத்தியாளர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் முதலியோர் சேந்து கொள்ளையடிக்கின்றனர். பல அரசியல்வாதிகளே அத்தகைய இரும்பு தொழிற்சாலைகள் வைத்துக் கொண்டு கொள்ளையடிக்கிறார்கள்.

[16] சிவப்பாக கிரீம், ஆண்கள் அழகாகக் கிரீம், முலைகளை பெரிதாக்க கிரீம் முதலியவற்றை எதிர்க்காதது ஆச்சரியமே!

[17] மேனாட்டு விஞ்ஞானிகளிடன் இது அதிகமாகக் காணப்படுகிறது. விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி செய்தாலும், ஒரு நேரத்தில் தமது கிருத்துவமத அடிப்படைவாத்தில் மூழ்கி வேறுவிதமான விளக்கங்கள் கொடுப்பர், அதாவது பைபிளுக்கு எதிராக போகாமல், விளக்கம் கொடுப்பர்!

கைவிட்டு விட்டாரே ஏசுபிரான்! தேவாலயம் சென்று திரும்பியவர்கள்மீது தாக்குதல்:7 பேர் பலி!!

ஜனவரி 9, 2010

திகவினருக்கு தைரிய வந்து விட்டதா அல்லது வீரமணிக்கு ரோசம் வந்துவிட்டததா?

தேவாலயம் சென்று திரும்பியவர்கள்மீது தாக்குதல்:7 பேர் பலி

இப்படியொரு தலைப்பில் “விடுதலை”யில் செய்தி!

http://viduthalai.periyar.org.in/20100108/news25.html

கெய்ரோ,ஜன.8_- எகிப்தில் தேவாலயம் சென்று திரும்பியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்-பாக்கிச் சூடு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்-டனர்.

எகிப்தின் கெனா மாகாணத்தில் உள்ள நாக் ஹமாதி நகரில் உள்ள தேவாலயம் அருகே நேற்றிரவு இந்த தாக்குதல் நடந்துள்ளது.

நள்ளிரவுக்கு சற்று முன்னதாக நடைபெற்ற கிறித்துமஸ் பண்டிகை-யை-யொட்டிய சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டுவிட்டு, கிறிஸ்தவர்கள் ஏராள-மானோர் வீடு திரும்பிக்-கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ஒரு காரில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், திடீ-ரென தேவாலயத்திலி-ருந்து திரும்பிக் கொண்-டிருந்தவர்கள் மீது சர-மாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டது.

இதில் ஒரு தனியார் பாது-காவலர் ஒருவர் உள்பட ஏழு பேர் கொல்லப்-பட்டதாக எகிப்து உள்-துறை அமைச்சக அதி-காரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம், இதே பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் கிறித்துவர் ஒருவ-ரால் பாலியல் வன்-கலவி செய்யப்பட்டதற்கு பழிக்-குப் பழி வாங்கும் வித-மாகவே இந்த தாக்-குதல் நடத்தப்பட்டுள்ள-தாக கூறப்படுகிறது.

விமர்சனம்:

முன்பே குறிப்பிட்டது மாதிரி, நான் “விடுதலை” படிக்கிறேன், அது என்னைப் படிக்கிறது!

Egypt church attack sparks riots
Arab News

VENTING ANGER: Protesters during clashes in Qena near Luxor, on Thursday. (EPA)

CAIRO/JEDDAH: Thousands clashed with police during a funeral procession Thursday for six of seven people killed in an attack on churchgoers leaving a midnight mass for Coptic Christians, security officials said.

Two Copts injured in the shooting died Thursday night. Their deaths brought the number of Copts killed in the attack to eight, most of them teenagers. A Muslim policeman guarding the church was also killed in the attack.

Throughout the day, protesters in the southern town of Nag Hammadi pelted police with rocks and damaged cars and stores.

Early in the day, they smashed ambulances outside a hospital in frustration over delays in turning over the bodies for burial. A security official said police fired tear gas to disperse the crowd.

The riots resumed after the burial services, with angry Copts smashing shop windows, chasing Muslims off the streets and bringing down street light poles. The riots continued into the late afternoon.

எகிப்திய கிருத்துவர்கள் போலீஸுடன் மோதுகின்ரனர்!

Egyptian Christians Clash With Police

Associated Press

An Egyptian Coptic church appears behind a mosque in Cairo

இவர்கள் கிருஸ்துமஸ்ஸை இப்பொழுது கொண்டாடுவது ஆச்சரியமாக இல்லையா?

Egypt holds Copt killing suspects
The shooting outside a church on Wednesday night sparked clashes the following day [EPA]

Egyptian police have arrested three people over the fatal shooting of six Christian Copts and a security guard outside a church in the south of the country.

The men were detained on Friday as police searched an area of fields close to where the attack took place in Nagaa Hammadi, about 60km north of Luxor.

“As a result of the security services’ efforts to arrest the criminals [behind] the killing of seven citizens in Nagaa Hammadi, on Friday morning Mohammed al-Kawmi, Kurshi Abul Haggag and Hindawi Hassan surrendered,” an interior ministry statement said.

இந்த கிருத்துவர்கள், மற்ற கிருத்துவர்களைப் போலல்லாமல்,  ஜனவர் 7ம் தேதிதான் கிருத்து பிறந்த நாளை கொண்டாடுகின்றனர்!

நிலவுக்கே களங்கம், குறை இல்லாமல் அரசில்லை, குற்றம் இருந்தால் தண்டியுங்கள்: சொல்வது கருணாநிதி!

ஜனவரி 2, 2010
நிலவுக்கே களங்கம், குறை இல்லாமல் அரசில்லை, குற்றம் இருந்தால் தண்டியுங்கள்: சொல்வது கருணாநிதி!
ஆட்சியைக் கவிழ்க்க எண்ண வேண்டாம்: முதல்வர்
First Published : 02 Jan 2010 12:17:00 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=177141&SectionID=129&MainSectionID=…………….

இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை, சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார் முதல்வர் கருணாநிதி. உடன், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், வருவாய் மற்று

“குற்றங்களைப் பெரிதாக்கி திமுக ஆட்சியை கவிழ்க்க எண்ண வேண்டாம்”: சென்னை, ஜன.1: “குற்றங்களைப் பெரிதாக்கி திமுக ஆட்சியை கவிழ்க்க எண்ண வேண்டாம்” என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார், கருணாநிதி. இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது:”கடந்த 2001-ம் ஆண்டில் வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. காரணம், அந்த ஆண்டில் தேர்தல் முடிந்து வேறு ஆட்சி வந்தது. அவர்கள் இந்தத் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். திமுக அரசு இப்படி நிறுத்தியிருந்தால், வாரந்தோறும் சென்னை, திருச்சி, மதுரை, வேலூர், விழுப்புரம் என்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று இருக்கும். இப்போது அப்படி நடைபெறாமல் இந்தத் திட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

நிறுத்தப்பட்டதற்குக் காரணம்: 2001-ம் ஆண்டு நிறுத்தப்பட்ட இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், 2002, 2003-ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்படவில்லை.ஆனால், 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அந்த ஆண்டு இந்தத் திட்டத்தை மீண்டும் அன்றிருந்த ஆட்சியாளர்கள் அரைகுறையாக நிறைவேற்றினார்கள்.திமுகவைப் பொறுத்தவரை, தேர்தலுக்காக அல்ல; கட்சி அரசியலுக்காக அல்ல, மக்களை மகிழ்ச்சியடையச் செய்ய பொங்கல் கொண்டாடுகின்ற அந்த நாளிலாவது அவர்கள் பூரிப்போடு இருக்க வேண்டும். இதனால், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினோம். ஒரு அரசு மக்களுக்காக இருக்கின்ற அரசு; தேர்தலுக்காக இருக்கின்ற அரசு அல்ல என்பதை எடுத்துக் காட்டுகின்ற வகையில் இந்தத் திட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

குறை இல்லாமல்: ஒரு நாட்டில் ஒரு அரசு, அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அந்த மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். அதை குறை கூறுபவர்களும் இருப்பார்கள். குறை இல்லாமல் ஒரு அரசு இருக்க முடியாது. குறை இருந்தால் சொல்லுங்கள்; கேட்கிறோம். குற்றம் இருந்தால் கண்டியுங்கள்; தண்டியுங்கள். அதற்குப் பணிகிறோம் என்பதுதான் இந்த அரசின் கொள்கை, லட்சியமாக இருந்து வருகிறது.குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே குறை சொல்லிக் கொண்டிருந்தால் அது ஜனநாயகம் அல்ல. குறை கண்ட இடத்தில் அதைச் சொல்வதும், அதைத் திருத்திக் கொள்வதும்தான் ஜனநாயகம்.

நிலவுக்கே களங்கம்: நிலவுக்கே களங்கம் இருப்பதாகச் சொல்கிறோம். அதைப் போல முழு நிலவாக இருந்தாலும் எங்கேயோ ஒரு கரும்புள்ளி இருக்கத்தான் செய்யும். அதைச் சுட்டிக் காட்டி இந்த அரசோடு ஒத்துழைத்து அதை நீக்குவதற்குப் பாடுபட வேண்டும். அதையே குற்றமாகச் சொல்லி அந்தக் குற்றத்தையே பெரிதாக்கி நிலவு பெரிதா, அதிலே இருக்கின்ற களங்கம் பெரிதா என்பதில் போட்டி போட்டுக் கொண்டு களங்கத்தைப் பெரிதாக்கி ஆட்சியைக் கவிழ்த்து விடலாம்; ஆட்சியை ஒழித்து விடலாம் என யாரும் கருதக் கூடாது” என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.

மன்னிக்க வேண்டும் கலைஞரே! உண்மையென்னவென்றால் “கலைஞர்” முன்னம் தமிழுக்காக செய்த காரியங்களை “கருணாநிதி” என்ற அரசியல்வாதி தமிழை, தமிழகத்தைக் கெடுத்து விட்டான் என்பதுதான் உண்மை.

* நாத்திகப் போர்வையில், ஆலயங்களை சூரையாடினாய்;

* செக்யூலரிஸக் கஞ்சி குடித்து, தாமஸ் படம் காட்டி இந்து விரோதியானாய்;

* சமத்துவம் பேசி கடவுளர்களின் படிப்பென்ன என்று கேட்டாய்;

* பலகலைகழகங்கள் பலவற்றை அதிகரித்து பட்டங்களை அள்ளினாய்;

* மனைவி-துணைவி-மகள் நெற்றிகளில் இருப்பதை மறந்து, தொண்டனின் நெற்றியில் என்ன ரத்தம் என்று கேட்டாய்;

* ஆன்மீகப் போர்வையிலே கடவுள் ஆக முயன்றாய்;

* முட்டாள்பெட்டி, மடக்கம்பி இணைப்புகள், தினசரி ஆட்டங்கள் மூலம் படிப்பைக் கெடுத்தாய்;

* ஒரு ரூபாயில் அரிசி விற்க பத்து ரூபாய் செலவு செய்கிறாய்;

* கோடிகளை பெற்றவுடன் கோடிகளை மறைத்தாய்;

* ஓய்விற்கே ஓய்வு கொடுத்தாய்;

இன்னும் பலவற்றை என்னுடைய பதிவுகளில் http://www.indiainteracts.com, http://www.dravidianatheism.wordpress.com மற்றும் http://www.dravidianatheism2.wordpress.com காணலாம். இதெல்லாம் தவறல்ல, மாபெரும் சமூகக் குற்றங்கள், மக்கள் விரோதச் செயல்கள்! எப்படி மக்கள் மறப்பார்கள்?

மதங்களையும்,மதப்பிரிவுகளையும் நாத்திகர்கள் ஏன் எதிர்க்கின்றனர்?

திசெம்பர் 26, 2009

மதங்களையும்,மதப்பிரிவுகளையும் நாத்திகர்கள் ஏன் எதிர்க்கின்றனர்?

ரஸ்ஸல் பிளாக்போர்ட்

http://viduthalai.periyar.org.in/20091226/spage05.html#

http://viduthalai.periyar.org.in/20091226/snews06.html

எதிர்பார்த்ததுபோல், மேற்கத்திய குடியாட்சி நாடுகளில் மட்டுமாவது 1970, 1990 -களில் மதத்தின் தாக்கம் மங்கிவிடவில்லை. மத அமைப்புகள் இன்னமும் கூட தீவிரமாகப் பிரச்-சாரம் செய்து அதிகார வர்க்கத்-தினரின் ஆதரவைத் திரட்டிக் கொண்-டிருப்-பதைக் காணலாம். கருக்கலைப்பு, குளோனிங் மருத்துவ ஆராய்ச்சி, கருத்தடுப்பு சாதனங்கள் ஆகியவற்றை இப்போதும் கூட இந்த மதமோ அந்த மதமோ ஏதோ ஒன்று எதிர்த்துக் கொண்டுதான் இருக்கின்-றது. பாது-காப்பான உடலுறவு என்பது கடவு-ளால் விதிக்கப்பட்ட நியதிக்கு விரோதமானது என்று கூறி, எய்ட்ஸ் நோய் தடுப்பு முறை-களுக்கும் மதம் குந்தகம் விளைவிக்-கிறது.

சாவும் வராமல் தீர்க்க முடியாத நோய்களினால் தொடர்ந்து வேத-னைப்பட்டு, கேவலப்பட்டு வருபவர்-கள் கருணைக் கொலை செய்யப்-படு-வதையும் பெரும்பாலான மத அமைப்-புகள் கடுமையாக எதிர்க்கின்றன. மதச்சார்பற்றவை என்று கருதப்-படும் ஆஸ்திரேலியா போன்ற நாட்டு அரசு-கள் கூட ஒழுக்க நெறி பற்றி கிறித்துவ தேவாலயங்கள் மற்றும் அமைப்புகள் கொண்டுள்ள கவலை-கள், அக்கறைக்கு வெளிப்படை-யாகத் துணை போகின்-றன. என்றா-லும், அமெரிக்காவில் இந்த நிலை மிகமிக மோசமாக உள்ளது. 1970 மற்றும் 1980 களில் அமெரிக்க மத-வாத பிற்போக்கு சக்திகள் தங்களின் அமைப்புகளைப் பலப்படுத்துவதில் வியக்கத்தக்க பெரு வெற்றியைப் பெற்றன. நிதிவசதி நிறைந்த தகவல் தொடர்பு அமைப்புகள், சிந்தனை-யாளர்கள், அவர்களின் சொந்த பல்கலைக் கழகங்களையும் கூட அவை கொண்டிருந்தன. தற்போதைய நிலையைச் சற்று பாருங்கள். உல-கத்தை கடவுள் உருவாக்கினார் என்ற அவர்-களின் கதையை மறுக்கும் பொது அறிவி-யல் நிறுவனங்களை சீர்குலைக்க தந்-திரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்-டன. செல்வாக்கு மிகுந்த ஒரு தீவிர மதவாத இயக்கம் நாட்டை ஒரு கிறித்துவ மத நாடாக மாற்ற விரும்பு-கிறது. முந்தைய புஷ் அரசு நாட்டை அந்த பாதையில் வெகு தொலைவுக்கு அழைத்துச் சென்றுவிட்டது. புஷ்ஷைப் போலன்றி தாராள கருத்து கொண்ட ஒரு அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டது வலதுசாரி மத அமைப்புகளிடையே ஒரு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்-ளது. அமெரிக்காவில் நிலவும் மதவெறி உண்மையானது; அது வெளிப்-படுத்தப்-படும் பல வழிகளில் எந்தவித ரகசி-யமோ அல்லது தாராள மனப்பான்-மையோ கிடையாது.

மாறுபட்ட ஓர் உலகில், மத போத-னைகளின் யோக்கியதை பற்றி ஆராய்ச்சி மேற் கொள்வது பயனுள்ள-தாக இருக்கலாம். மதக் கோட்பாட்-டில் உறுதியளிக்கப் பட்டிருக்கும் ஒழுக்க நெறிக்கு வழிகாட்டுதல், பிரபஞ்ச இயக்கத்தைப் பற்றிய ஆழ்ந்த அறிவு, ஆன்மீக விடுதலை மற்றும் இது போன்ற-வற்றில், எதை ஒன்றையாவது நிறைவேற்ற முடியுமா என்று நாம் கேட்கக்கூடும். இந்தப் பிரச்சினைகள் எந்த வித விருப்பு, வெறுப்பும் இன்றி விவாதிக்கப்பட்டிருக்கலாம். மதத்தைக் குறை கூறும் நம்மில் சிலர் தேவால-யம், மசூதி மற்றும் இதர மத வழி-பாட்டுத் தலங்களின் செயல்பாடுகள் நாட்டின் ஆட்சி அதிகாரத்திலிருந்து பிரித்து வைக்கப்படவேண்டும் என்று வாதிடுவதுடன் மனநிறை வடைந்து விடக்கூடும். ஆனால், இழப்புக் கேடாக நாம் அத்தகைய ஓர் உலகில் வாழ-வில்லை.

உண்மையான இந்த உலகில், நாடுகள் மற்றும் அரசுகள் மதச்சார்-பற்று இருப்பது என்ற கருத்தை எதிர்ப்பதற்-கான அவர்களின் சொந்த காரணங்களை தேவாலயங்களின் மத அமைப்புகளும் கொண்டிருக்கின்றன. அவற்றில் சில, தனிப்பட்ட மனி-தனின் ஆன்மிக விடுதலையை, அர-சியலில் அதிகாரம் செலுத்துவது என்பதில் இருந்து துல்லியமாகப் பிரித்துக் காண்பதில்லை. . மதச்சார்-பின்மையின் நோக்கமும், அரசின் நோக்கமும், மத நோக்கம் மற்றும் தனிப்பட்டவர்களின் நோக்கத்-துடன் தொடர்பு அற்று சுதந்திரமாக இருப்-பவை என்ற கருத்தில் நம்பிக்கை அற்றவர்களாக அவர்கள் இருக்கக்-கூடும். உண்மையில் நிலவும் சமூகத்-தின் பன்முகத்தன்மையை அவர்களில் சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை என்-பது தெளிவாக தெரிகிறது. மாறாக, கட-வுளின் அருளால் தங்களின் கருத்துகள் உண்மையில் நிலை-பெறும் காலம் ஒன்று வரும் என்று அவர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றனர்.

அரசியல் களத்தில் மதம் உரிமை கோரும்போது, அந்த அதிகாரத்தை மதம் எங்கிருந்து பெற்றது என்று நாத்திகர்கள் கேள்வி எழுப்புவதில் வியப்பேதுமில்லை; அது முற்றிலும் நியாயமானதே. மதஅமைப்புகளும் அதன் தலைவர்களும், ஒரு கடவுளின் சார்பாக தாங்கள் அந்த உரிமையைக் கோருவதாகக் கூறினால், கடவுளே அந்த உரிமையைக் கோருகிறதா அல்லது அதன் சார்பாக அந்த உரிமையை மதமும், தலைவர்-களும் கோருகின்றனரா என்று கேட்பதும் நியாயமானதே. இந்தக் கடவுள் உண்மையில் இருக்கிறாரா? அப்படியானால் அதற்கான அத்-தாட்சி என்ன? ஒரு வேளை அது போன்ற கட-வுள் இருக்கிறார் என்றாலும், அவரது விருப்பங்கள் ஏன் சட்டங்களாக மாற்-றப்பட வேண்டும்? எந்தக் கடவுளின் சார்பாகவும் இந்த உரிமையைத் தாங்கள் கோரவில்லை என்று மதத் தலைவர்கள் கூறுவார்-களே ஆனால், மற்ற எவரையும் விட அதிக அதிகாரம் பெற்றவர்களாக எப்படி அவர்கள் இருக்கிறார்கள்? அவர்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் என்ன? முட்டாள்தனமான கருத்து கொண்டவ மதவாதிகளுக்கு அதிகாரமும், செல்வாக்கும், சலுகை-களும் அளிக்கப் படும்போதெல்லாம், நாகரிக-மாக கேலியும் கிண்டலும் செய்வது மேலானது. என்றாலும், இத்தகைய நாகரிகத்திற்கும், ஒட்டு மொத்தமாக தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாட்டு விதித்துக் கொள்வ-தற்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. டார்வினின் உயிர்த் தோற்றத்தை மறுக்காத மிதவாதிகளின் மத நம்பிக்கைகளை நாகரிகமாகவும், நற்சிந்தனையுடனும் கூட விமர்சனம் செய்வதை ஊக்கு-விக்கக்கூடாது என்று சில அமெரிக்க நாத்திகர்கள் எண்ணு-வது வருந்தத்-தக்கது. நம்மைப் பற்றியும், நாம் வாழும் பிரபஞ்சத்தைப் பற்றியும் அறி-வியல் அடிப்படையிலான கண்டு-பிடிப்புகளை ஏற்றுக் கொள்ளும் நாத்திகர்களின் இத்தகைய அணுகு முறை-யிலான வாதங்களை நம்மால் வரவேற்க இயலவில்லை. இத்தகைய விட்டுக் கொடுக்கும் நாத்திகர்கள் அறிவியல் மீது, குறிப்பாக பொது பள்ளிகளில் டார்வினின் உயிர்-தோற்றம் பற்றி கற்பிப்பது பற்றி, மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். தங்களின் இந்த நிலைக்கு பொது-மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக, அமெரிக்காவில் ஏற்பட்ட பல்வேறு-பட்ட அறிவியல் அடிப்படையிலான மனித இயல் மாற்றங்களை அவை உள்ளவாறு ஏற்றுக் கொள்வதே அறி-வுடமை என்று கருதுகின்றனர். உயிர்த்தோற்றக் கோட்பாட்டினை அதிக எண்ணிக்கை கொண்ட அமெரிக்கர்களுக்குக் கற்பிக்க வேண்-டும் என்று விரும்பும் அவர்கள் அதனை நாத்திகத்துடன் இணைத்து பேசப்படுவதை மட்டும் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை.

இதை ஒரு முறை நீங்கள் ஏற்றுக் கொண்டால், உங்களது அனைத்து வகையான பகுத்தறிவு மனப்பான்-மையும் காணாமல் போய்விடுகிறது. அதன் பின், உண்மை என்ன என்-பதை விட, மக்-களை எப்படி கவர்-வது என்ற நோக்-கத்தைக் கொண்-டதாகவே உங்களது அணுகுமுறை மாறிவிடும். கோடிக்கணக்-கான ஆண்டுகள் விலங்கினங்களாகத் துன்புற்ற பின் வளர்ச்சியை மனி-தர்கள் அடைந்துள்ளனர் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளும்-போது, மக்களின் பாவத்தை மன்னிக்-கும் அன்பு கொண்ட ஒரு கடவுள் உள்ளார் என்ற மத-நம்பிக்கையைப் பெற்றிருப்பது எளி-தானதாகவும், பொருத்தமானதாகவும் இருக்காது என்று சுட்டிக் காட்டு-வதையும் அவர்கள் விரும்புவதில்லை. மதக் கருத்துகள் மீது உயிர்த்தோற்றக் கோட்-பாடு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி கேட்கவும் அவர்கள் விரும்புவ-தில்லை. மற்றவர்களும் இதைப் போன்ற ஆபத்தானவற்றைப் பற்றிப் பேசுவதை அவர்கள் விரும்புவ-தில்லை.

ஆனால் இது ஒரு தவறான நிலைப்-பாடாகும். அறிவியல் கணக்-குப்படி உலகம் தோன்றி 4.6 பில்-லியன் ஆண்டுகள் ஆகின்றன என்-பதை ஏற்றுக் கொள்ளும் சிந்தனைத் திறம் கொண்ட மிதவாதக் கிறித்த-வர்கள் தங்கள் மதநம்பிக்கையைப் பற்றி உயிர்த்தோற்றக் கோட்பாடு ஆழ்ந்த கேள்விகளை எழுப்புவதைக் காணலாம். அவர்களிடமிருந்து இதை மறைக்க முயற்சிப்பது வீணானதும், அவர்களை அவமானப் படுத்துவதும் ஆகும். நமது பூமி 10,000 ஆண்டுகளுக்குள்தான் தோன்றியது என்பது போன்ற பல நம்பிக்கைகளைக் கொண்ட தீவிர மதவாதிகளைத் திருப்திபடுத்தி, அவர்களை அறிவியலுடன் நட்பு கொண்ட மதவாதிகளாக மாற்றும் முயற்சியும் வீணாணதே. அவர்-களைப் பொருத்தவரை, இந்த பூமியின் வயதும், ஒவ்வொரு உயிரின் தோற்றமும், அவர்களின் ஒருங்-கிணைந்த ஆன்மின நடைமுறையின் மய்யத்தில் இருக்கும் கோட்பாடு-களாகும்

எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது என்ற கொள்கை சரியான வழியல்ல. நாத்திகர்கள் அதிகமாகப் பேசாமல் அடக்கமாக இருக்க வேண்-டும் என்று கூறப்படுவதையோ, ஆற்றல் மிகுந்த முறையில் விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படு-வதையோ என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு செய்தால் அறிவி-யலுடன் கூடிய ஆன்மிகத்தை ஆதரிக்-கும் போலி நாத்திகர்களுக்கு நாம் இடம் கொடுத்ததாக ஆகிவிடும்.

கடவுள் நம்பிக்கை நமக்கு இல்லை என்பதையும், இயற்கையை மீறிய அனைத்து வகை மதக்கோட்பாடு-களையும் நாம் ஏற்பதில்லை என்பதை-யும் விளக்கி நாம் பேசவேண்டிய நேர-மிது. மதங்கள் முற்றிலுமாக அழிக்கப்-பட்டு விடமுடியாது. நமது நோக்கமும் அதுவல்ல. என்றாலும் மதத்துடன் தொடர்புடைய பல மூடநம்பிக்கை-களை மக்களுக்கு நாம் எடுத்துக் கூற-வேண்டும். எந்த மதத்தினருக்கும் பகுத்தறிவு கிடையாது என்பதையும் கொடுமை, சோகம், அறியாமை மனித உரிமை மறுப்பு அல்லது மீறல் ஆகியவற்றை அனைத்து மதங்களும் வளர்க்கவே செய்கின்றன என்பதையும் நாத்திகர்களான நாம் தெளிவாக எடுத்துக் கூறத்தான் வேண்டும். மதத் தலைவர்கள் ஒழுக்க நெறியில் நமக்கு வழிகாட்டிகள் அல்ல. ஒழுக்கத்தைப் போதிக்கும் அதிகாரத்தை மதபோதகர்-களுக்கும், இமாம்களுக்கும், சாமியார் களுக்கும், கடவுள் மனிதர்களுக்கும் அளிக்கப்பட்டு இருப்பதை நாம் தட்டிக் கேட்கத்தான் வேண்டும்.

(நன்றி: ‘தி ஆஸ்திரேலியன் அதிஸ்ட்’ – நவம்பர் – டிசம்பர், 2009
மொழியாக்கம்: த.க.பாலகிருட்டிணன்)

அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால்!

திசெம்பர் 26, 2009

அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால்!

பெரியார் திடலில் அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு தொடங்கியது. பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அறிவியல் மனப்பான்மை, மனித நேயம் கொண்ட புதிய சமுதாயத்தை நவீன சாதனங்கள்மூலம் உருவாக்குவோம்!

அகில இந்தியப் பகுத்தறிவாளர் கூட்டமைப்பின் 7 ஆவது இந்திய மாநாட்டு மலரை விஜயவாடா நாத்திக மய்யத்தின் இயக்குநர் டாக்டர் விஜயம் வெளியிட்டார் (சென்னை, பெரியார் திடல், 26.12.2009).

சென்னை, டிச. 26-_ அறிவியல் மனப்பான்மை, மனித நேயம் கொண்ட புதிய சமுதாயத்தை உரு-வாக்குவோம் என்று இன்று சென்னை பெரி-யார் திடலில் தொடங்-கிய பகுத்தறிவு சங்கங்-களின் கூட்டமைப்பின் 7 ஆவது தேசிய மாநாட்-டில் திராவிடர் கழக தலை-வர் தமிழர் தலைவர் கி.வீரமணி அறிவித்தார்.

வீரமணியின் உரை: மாநாட்டை தொடங்கி வைத்து கி.வீரமணி அவர்கள் இன்று ஆற்றிய உரை வருமாறு:-

பெரியாருடைய நிலமாகிய தமிழகம் ஒரு பகுத்தறிவு மாநிலம். இது மனிதநேய மாநிலம்; சமூகநீதி மாநிலம்; இவற்றையெல்லாம் குறிப்பது சுயமரியாதை இயக்கம் என்பதாகும். இப்பொழுது மின்னி-யல் ஊடகங்கள்மூலம் செய்திகள் பரவுகின்றன. இப்பொழுதுள்ள தொலைத்தொடர்பு ஊட-கங்கள் வரப்-போவ-தைப் பற்றி 50, 60 ஆண்டு-களுக்கு முன்பே பெரியார் தொலைநோக்-காகக் கூறினார். உயர்-படிப்புப் படிக்காத பெரி-யார் இவற்றையெல்லாம் கூற முடிந்ததற்குக்காரணம், அவர் எதையும் பகுத்தறிவு அடிப்படையில் கண்டார் என்பதுதான். மூட நம்பிக்கையை வெளிப்படுத்துவதில் மறைந்த நண்பர் பிரேமானந்த் முன்னோடியாகத் திகழ்ந்தார். விஞ்ஞானிகள் சாய்பாபாவிற்குப் பணியும் காலத்தில் பிரேமானந்த், அந்தச் சாமியாரின் உண்மையான போலித்தனத்தை வெளிப்படுத்தினார். அண்மையில் காஞ்சிபுரத்தில் அர்ச்சகர் ஒருவர் கருவறையில் பல பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினார். அவர் கடவுளின் தண்டனையைப்-பற்றிக் கவலைப்படவில்லை; கருவறையில் இருப்பது கல் என்று அவருக்குத் தெரியும் [பாதிரியார்கள் அமெரிக்காவில் இல்லை சென்னையிலேயே பல பெண்களை அவ்வாறே நடத்தியுள்ளர்கள். வி ஹியூம்ஸ் என்ற காமக்கொடூரனும் இதே சென்னையில் நூற்றுக் கணக்கான சிறுமியர்-சிறுமிகளை பாலியல் வன்கலவி செய்ததுடன், வரும் அந்நிய நாட்டினருக்கும் பகிர்ந்தளித்துள்ளான். கொசுரு – பாலியில் படம் எடுப்பது, இணைதளத்தில் போடுவது. எல்லாமே சென்னையில் தான் நடந்தன. இந்த நாத்திகம் இதைப் பற்றி மூச்சு விடாது].

‘FIRA’ ஏழாவது மாநாட்டினை தொடங்கி வைத்து கி. வீரமணி உரையாற்றுகிறார் (சென்னை, பெரியார் திடல், 26.12.2009)

அமெரிக்காவின் மூட நம்பிக்கை எதனால்? நிஷீஷீபீ ஷ்வீtலீஷீut நிஷீபீ எனும் நூலில் ஒருவர் நல்லவராக இருப்பதற்கு மத நம்பிக்கை தேவை-யில்லை என்பது விளக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா செல்வச் செழிப்புமிக்க நாடாக இருக்கலாம். ஆனால், மூட நம்பிக்கையில், மத நம்பிக்-கை-யில் இருந்து அவர்கள் இன்னும் விடுபட இல்லை; இப்பொழுது மெல்ல மெல்லச் சுதந்திரமாகச் சிந்திக்-கிறார்கள். குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்-பட்ட பின்பு, ஒபாமா ஆற்றிய வுரையில், அமெரிக்கா, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் உரியது எனக் கூறினார்.

இந்து-விரோத நாத்திகம்: இந்து மதத்தில் இருந்து ஜாதியைக் கழித்து-விட்டால் கிடைப்பது பூஜ்யம். இந்து மதத்தின்-படி-யான சமுதாயம் படிநிலை ஏற்றத் தாழ்வைக் கொண்-டது என பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் கூறி-யுள்ளார். இந்தச் சமுதாயத்தை மாற்றியமைக்க வேண்டும். ஜாதிக்கு மூல காரணமான கடவுளை ஒழிக்கவேண்டும் என்றார் தந்தை பெரியார். பெரியார் கூறியுள்ளபடி, கடவுளை மறந்து மனித நலத்தை எண்ணி உழைக்கவேண்டும். அரசியல் வேற்றுமை கடந்து வலிமையான பகுத்தறிவு இயக்கத்தை நாம் வளர்க்கவேண்டும். தொலைக்காட்சி போன்ற நவீன சாதனங்கள்மூலம் நம் மனிதநேயப் பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பவேண்டும் என்று கூறினார்.

பகுத்தறிவினால் கல்வி கொடுக்கமுடியவில்லை: இந்தியாவில் பல கோடிப் பேர் போதுமான கல்வியறிவு பெற்றவர்களாக இல்லை.உலகத்தின் உணமைகளை அறியாதவர்களாக அவர்கள் உள்ளனர்.இதனால் அவர்கள் அர்ச்சகர்கள், மந்திர-வாதிகள், சாமியார்கள், பூசாரிகள், ஜோதிடர்-கள், குறி சொல்லிகள் போன்ற மதவாத சக்திகளால் நம் மக்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள். இதனால் மூட நம்பிக்கையில் பெரும்பாலான மக்கள் மூழ்கிக் கிடக்கின்றனர். சாதாரண மக்களை தந்திரமாக ஏமாற்றி அவர்களைச் சுரண்டி பிழைப்பதையே மதவாதிகள் தொழிலாக கொண்டுள்ளனர். இதுபோன்ற சமூகக் கிருமிகளிடமிருந்து அப்பாவி மக்களை காப்பாற்றுவதற்காக பொதுகூட்-டங்கள், கருத்தரங்குகள், கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவைகளை நடத்தி பொது-மக்களை விழிப்புணர்ச்சி பெற வைப்பது பகுத்தறி-வாளர்களின் கடமை ஆகும். 1976 இல் கொண்டு வரப்பட்ட 42 ஆவது இந்திய அரசமைப்புச் சட்டம் இதனை ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகவே வரையறுத்துள்ளது. ஆனால் அரசு அதிகார வர்க்கத்தில் உள்ள மூத்த அதிகாரி முதல் கடைநிலை ஊழியர் வரை இக்கடமையிலிருந்து விலகி நடப்பது வருத்தமளிக்கிறது. ஏவுகணைகள், ராக்கெட்டுகள் போன்ற விஞ்ஞானத்தின் உச்சபட்ச ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் கூட அதனை விண்ணில் செலுத்துவதற்கு முன் பூஜைகள் நடத்துகின்றனர் என்பது கேவலமான நடவடிக்கை ஆகும்.

அகில இந்திய பகுத்தறிவாளர் கழக (7FIRA) கூட்டமைப்பு மாநாட்டிற்கு திரண்டிருந்த பேராளர்கள் (சென்னை, பெரியார் திடல், 26.12.2009)

காவல் நிலையத்தில் ஆடு வெட்டுவதா? அதேபோல் மக்களைக் காப்பாற்றுவதற்காக உள்ள காவல் துறையினர் அவர்கள் பணி புரியும் காவல் நிலையங்களை ‘ஆவிகளிடமிருந்து’ காப்பாற்று-வதற்காக ஆடுகள் வெட்டிப் பலி கொடுக்கும் அநியாயங்களை என்ன சொல்வது! இவ்வாறு செய்வ-தன் மூலம் இதுவரை எந்தப் பிரச்சினைக்காவது தீர்வு கண்டார்களா? தீயவழிகளில் ஈடுபட்டு பணம் சம்பதிப்பவர்கள் அதற்கு பரிகாரம் தேடும் விதமாக அடுத்தவனின் பணத்தை வைத்து இவர்கள் கோயில்களுக்கு செலவு செய்து வரும் கொடுமை இங்கே தொடர்ந்து கொண்டிருக்கிறது.இது அவர்களால் நம்பப்படும் கடவுளுக்கு லஞ்சம் கொடுபதுதானே? சொல்லப்-போனால் மனிதனின் லஞ்ச நடவடிக்கை இது போன்ற கோயில் பூஜைகளிலிருந்துதான் தொடங்-கு-கிறது என்று கூறலாம். ஆனால் இதே காரியங்களை பகுத்தறிவாளர்கள் அணுகும் முறை முற்றிலும் வேறு-பட்டுள்ளது. பகுத்தறிவாளர்களால்தான் இது-போன்ற குருட்டு நம்பிக்கைகளை அழித்தொழித்து மக்களை விழிப்புணர்ச்சி அடையச் செய்ய முடியும். அதனால்-தான் தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட இந்த மகத்தான பணி மிகப் பெரிய மக்கள் இயக்கமாக மாறத் தொடங்கி உள்ளது என்று கூறினார். [முஸ்லிம்கள் மாடு, ஒட்டங்கள் வெட்டுவது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே ஏன்?]

அ.இ. பகுத்தறிவாளர் கூட்டமைப்பின் மாநாடு: அகில இந்தியப் பகுத்தறிவாளர் கூட்டமைப்பின் (திமிஸிகி) 7 ஆவது இந்திய மாநாடு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் இன்று (26.12.2009) காலை 11 மணிக்குத் தொடங்கியது. மாநாட்டுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெருமக்கள், பிரதிநிதிகள் வந்திருந்தனர். மாநாட்டுக்கு இவ்வமைப்பின் அகில இந்தியத் தலைவர் நரேந்திர நாயக் தலைமை வகித்தார். தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் வா. நேரு வரவேற்புரையாற்றினார். மாநாட்டுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு விழாக் குழுவினரால் சால்வை அணிவிக்கப்பட்டு சிறப்பு செய்விக்கப்பட்டது. தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகப் பொதுச்-செயலாளர் வீ. குமரேசன் நிகழ்ச்சிகளை ஒருங்-கிணைத்து இணைப்புரை வழங்கினார்.

நரேந்திர நாயக், தலைவர் உரை: கூட்டமைப்பின் தலைவரும், மாநாட்டின் தலைவருமான நரேந்திர நாயக் தமது தலைமை-யுரையில் குறிப்பிட்டதாவது: இக்கூட்டமைப்பின் நிறுவனர் பிரேமானந்த் அண்மையில் இறந்தார்; வழி-காட்டி-யாகத் திகழ்ந்தார், அவரை நினைவுகூர்வோம். இப்பொழுது இக்கூட்டமைப்பில் 70 அமைப்புகள் உள்ளன. அறிவியல் பார்வை, மனித நேயம், சமயச் சார்பின்மை ஆகியவை இக்கூட்டமைப்பின் நெறிகள். தெய்வீக அதிசயங்களை வெளிப்படுத்துவது எனத் தொடங்கியபொழுது பகுத்தறிவு இயக்கம் நன்கு தெரியப் படலாயிற்று. டாக்டர் ஆபிரகாம் கோவூர் இவ்வகையில் பல இடங்களில் செய்முறையின் மூலம் பகுத்தறிவுச் சிந்தனையைப் பரப்பினார். தமிழகத்தில் பகுத்தறிவு இயக்கம் மக்கள் இயக்கமாக வளர்ந்தது; பெரியாருக்கு வணக்கம் தெரிவிக்காதவர் தமிழக ஆட்சிக் கட்டிலில் எவரும் இலர். நம்மிடையே உள்ள வேற்றுமைகளை மறந்து, ஒன்றுபடுத்தும் கூறுகளைக் கொண்டு செயல்-படுவோம்.  இன்று, ஊடகங்கள் மூட நம்பிக்கையைப் பரப்பு-வோரிடம் உள்ளன. அறிவியலை அவர்கள் பயன்-படுத்துவது வருந்தத்தக்கது.  நாம் பல இடங்களுக்குச் சென்று அறிவியலைப் பரப்பவேண்டும்; அற்புதங்களைப் பொய்யெனக் காட்டவேண்டும். கருநாடகத்தில், ரவிசங்கர் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளை அரசே பாராட்டி வளர்ப்பது வேதனைக்குரியது. மந்திரமா? தந்திரமா? போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி போலித்தனங்களை, பொய்களை வெளிப்படுத்துகிறோம். ஆனால், புதிய பொய்கள் வளர்க்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ‘யோகா’ என்பது எல்லா நோய்களையும் குணப்படுத்தும் எனக் கூறத் தொடங்கியுள்ளனர். மூட நம்பிக்கையைப் பரப்புகிறவர்கள், அண்மைக்-காலத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். நாம் பகுத்தறிவைப் பயன்படுத்துவதற்கு அதைப் பயன்படுத்தவேண்டும். புதிய இளைய தலைமுறையை வளர்க்கவேண்டும் என்று கூறினார்.

நாத்திக மாநாடு மலர் வெளியீடு: மாநாட்டு மலரை விஜயவாடா நாத்திக மய்ய இயக்குநர் டாக்டர் விஜயம் வெளியிட்டார். தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகப் புரவலர் கி. வீரமணி, பி. சந்தர் (நியூடெல்லி) ஆகியோர் மலரைப் பெற்றுக்கொண்டனர்.

இன்று (26.12.2009) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற அகில இந்திய பகுத்தறிவாளர் கழக (7tலீ திமிஸிகி) கூட்டமைப்பு மாநாட்டில் சிறப்பு மலரை விஜயவாடா நாத்திக மய்ய நிருவாக இயக்குநர் டாக்டர் ஜி.விஜயம் வெளியிட்டார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பி.சந்தர் (டெல்லி) ஆகியோர் மலரை பெற்றுக் கொண்டனர்.

….

அசட்டு அஹமதுவும், கருவும் கருணாநிதியும்!

திசெம்பர் 24, 2009
அசட்டு அஹமதுவும், கருவும் கருணாநிதியும்!

செக்யூலரிஸம் பேசியோ, இஸ்லாம் பேசியோ விளக்கேற்ற மறுத்தது செக்யூலரிஸ நாட்டின் அமைச்சர் அஹமது!

அவர் மறந்தது தான் எல்லா இந்தியர்களுக்கும் இந்திய நிர்ணயச் சட்டத்தின் படி அமைச்சர் என்பதை!

அங்குதான் அவரது அசட்டுத்தனம் வெளிப்பட்டது!

செக்யூலரிஸத்தை மதிக்கும் / மித்திக்கும் போக்கையும் இந்தியர்கள் அடையாளம் கண்டு கொண்டனர்.

இந்த கருவைப் பற்றிப் பேசவே வேண்டாம்.

வயசானாலும், செக்யூலரிஸ விசயத்தில் பத்து அஹமதுக்களையும் மேலேயுள்ள நிலையில் உள்ளவர்.

அதில் ISO 9001, 10009 என்றெல்லாம் கொடுத்தாலும் தகும்!

அவர் சொல்கிறார், “ரயில் இன்ஜின் மத்திய அரசு என்று வைத்துக் கொண்டால், அதில் இணைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் மாநில அரசுகள் மாதிரி. சில பெட்டிகளில் கோளாறு ஏற்பட்டுள்ளது“, என்றெல்லாம்!

இங்கு வரிசையாக நின்றுகொண்டு பச்சைக் கொடிகள் ஏந்தியுள்ளனர்?

ஏன் சிவப்புக் கொடிகள் கூடாது?

கொடிகளைக் கவிழ்த்து ஆட்டுகிறார்களே?

ஏன் தூக்கி ஆட்டக்கூடாது?

இன்று இப்படியெல்லாம் பேசும் தேசியம், இன்றும் அப்படி-இப்படி மாநில சுய ஆட்சி என்ற பிரிவினையும் பேசுகிறதே, ஏன்?

இத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தாலும், இந்தியாவைப் பற்றி தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றனறே, அம்மாதிரி நடிக்க்கின்றனறே, அதுவும் இந்த பழுத்த, முதிர்ந்த, பக்குவப்பட்ட நிலையில் அவ்வ்வாறு பேசுகின்றனறே, அதை என்னவென்பது?

மாநில அரசுகள் போன்றது ரயில் பெட்டிகள் : முதல்வர் கருணாநிதி பேச்சு
டிசம்பர் 23,2009,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6030&ncat=&archive=1&showfrom=12/23/2009

Front page news and headlines todayசென்னை : “மாநில அரசுகள் போன்றது ரயில் பெட்டிகள். தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் பல புதிய ரயில்களும் இயக்க வேண்டும் ,’ என்று முதல்வர் கருணாநிதி மத்திய அரசை கேட்டுக் கொண்டார்.

சென்னை சென்ட்ரல் – மங்களூர் இடையே, வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ், வாரத்தில் ஆறு நாட்களுக்கும், ஜம்முதாவி – மதுரை இடையே வாரம் இருமுறை இயக்கப்பட்டு வந்த ஜம்முதாவி – மதுரை எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட்டும், திருநெல்வேலி – பிலாஸ்பூர் இடையே வாராந்திர ரயிலும், கன்னியாகுமரி – ராமேஸ்வரம் இடையே, வாரத்தில் மூன்று நாட்கள் அதிவேக விரைவு ரயில்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு, இந்த ரயில்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: இன்னும் பல ஊர்களுக்கு ரயில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு, புதிய ரயில்களை, பாதைகளை அமைத்து தரவேண்டும். ரயில் இன்ஜின் மத்திய அரசு என்று வைத்துக் கொண்டால், அதில் இணைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் மாநில அரசுகள் மாதிரி. சில பெட்டிகளில் கோளாறு ஏற்பட்டுள்ளது. பெட்டிகள் கழண்டு போய்விடாமலும், பிரிந்து போய்விடாமலும் ஒற்றுமைப்படுத்தி இலகுவாக இழுத்துச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் தேசிய நிலை இல்லாமல் போய்விடும். எனது சொந்த ஊரான திருக்குவளைக்கு, புதிய ரயில் பாதை அமைக்க திட்டம் உள்ளது. இதை, மத்திய ரயில்வே இணை அமைச்சர் அகமது விரைவாக செயல்படுத்த வேண்டும், என்றார்.

மதுரை: ஜம்முதாவி – நெல்லை வரை நீட்டிக்கப்பட்ட ரயிலை , மதுரையிலிருந்து தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் அனில்சிங்கால் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இன்ஜினியர் தங்கராஜ், முதுநிலை தொழில்நுட்ப அலுவலர் அப்துல்கபர் பங்கேற்றனர். ஜம்முதாவி-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் (6788) ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் மதுரைக்கு பகல் 2.50 மணிக்கு வந்து சேரும். பகல் 3 மணிக்கு புறப்பட்டு மாலை 6.20 க்கு திருநெல்வேலி சென்று அடையும். திருநெல்வேலி- ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரயில் (6787) திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து பகல் 3.45 க்கு புறப்பட்டு, மதுரைக்கு இரவு 7க்கு வந்து சேரும். இரவு 7.15 க்கு புறப்படும். இவை விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சியில் நின்று செல்லும். ஜம்மு தாவியில் நாளை, திருநெல்வேலியில் டிச.,25 லிருந்து முறைப்படி இயக்கப்படும்.

நெல்லை: திருநெல் வேலி – பிலாஸ்பூர் ரயில் துவக்க விழா நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது. நெல்லை எம்.பி.,ராமசுப்பு, மதுரை மண்டல மூத்த வணிக அதிகாரி ஹோசியார்சந்த், மண்டல இன்ஜினியர் ராம்கிஷோர், நெல்லை நிலைய அதிகாரி கல்யாணி ஆகியோர் பங்கேற்றனர்.

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் சபாபதி மோகனின் இந்து விரோத பேச்சு!

திசெம்பர் 15, 2009

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடும், சபாபதி  மோகனின் இந்து விரோத பேச்சும்!

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநில மாநாடு: இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநில மாநாடு சோழிங்க நல்லூரில் உள்ள முகமது சதக் கலை அறிவியல் கல்லூரியில் 13-12-2009 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இஸ்லாத்தின் பல பரிமாணங்கள் ஆய்வுக் கட்டுரைகள் மூலம் விவாதிக்கப் பட்டது. அவை அடங்கிய – 89 ஆய்வுக் கட்டுரைகள் – ஆய்வுத் தொகுப்பும் வெளியிடப் பட்டது.

இந்துவிரோத பேச்சு: அதில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சபாபதி மோகன் பேசிய பேச்சு இந்து விரோதமாக இருந்தது கண்டு சிலர் வியந்தனர். தான் ஒரு நாத்திகன் என்று சொல்லிக் கொண்டு அவர் பேசியவிதம் சரியாகயில்லை. வேடிக்கை என்னவென்றால் அத்தகைய நாத்திகம் பேசுபவர்கள் எப்படி முஸ்லீம்களுடன் ஒத்துப் போகின்றார்கள் என்பதுதான்? அத்தகைய முரண்பாடுகளைக் கவனிப்பவர்கள் நிச்சயமாகப் புரிந்து கொள்வார்கள், அத்தகைய நாத்திகவாதிகள் இந்து-விரோதிகளாக இருப்பதனால் தான் முஸ்லீம்கள் அவர்களை தங்களது மேடைகளில் இடம் கொடுத்துப் பாராட்டுகின்றனர். கிருத்துவர்களின் போக்கும் இதுமாதிரியே உள்ளது.

லுங்கி கட்டிய முஸ்லீம், சிலுவை போட்ட கிருத்துவன்: தனது தலைவர்கள் லுங்கி கட்டிய முஸ்லீமாக, சிலுவை போட்ட கிருத்துவனாக இருந்தனர் என்று சொல்லி இந்துக்களைத் தாக்கிப் பேசுவது பண்பற்ற முறையாகத் தோன்றியது. பிறகு எதற்கு “இந்து” என்று பல விண்ணப்பங்களில், ஆவணங்களில் தங்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும்? இத்தகைய போலி நாத்திகர்கள் கோடிக்கணக்காக உள்ள இந்துக்களின் நம்பிக்கையை எடைபோடவும் தகுதியில்லை, விமர்சனிக்கவும் யோக்கியதை இல்லை.

இந்துக்களின் மூடநம்பிக்கை மற்றும் தீவிரவாதம்: திராவிட நாத்திகம் தமிழகத்தில் இருப்பதனால்தான் இந்துக்கள் இங்கு ஒன்றும் செய்யமுடியவில்லை. அப்படி அவர்கள் யாதாவது செய்தால், திராவிட சம்மட்டி அவர்களை அடக்கிவிடும், இந்துக்கள் ஏதோ மூடநம்பிக்கை உள்ளவர்கள் போலவும், அவர்களது தீவிரவாதம் அடக்கப்படவேண்டுமானால், அத்தகைய இஸ்லாமிய மாநாடுகள் எல்லா நகரங்களிலும் நடத்தப் படவேண்டும் என்றெல்லாம் பேசியது வியப்பாக இருந்தது.

“மதத்தால் முஸ்லீம், மொழியால் தமிழன்” என்றால் தமிழர்களில் இந்துக்கள் இல்லையா, அல்லது இந்துக்கள் தமிழர்களாக இல்லையா?: இவ்வாறு முஸ்லீம்கள் பேசி பெருமைக் கொள்ளும்போது, இவர்கள் மட்டும் எப்படி, நாங்கள் நாத்திகர்கள், தமிழர்கள் என்று கூறிக் கொள்ளமுடியும்? மதத்தால் இந்துக்கள், மொழியால் இந்துக்கள் என்றுள்ளவர்கள் என்ன இத்தகைய கூட்டாளிகளைவிட தாழ்ந்தவர்களா? யாரை ஏமாற்ற இத்தகைய வாசகங்கள்? இந்துக்கள் தமிழராக அல்லது தமிழர் இந்துக்களாக இருக்கமுடியாது என்று இப்படி மறைமுகமாக உணர்த்த இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? இப்படி பேசுவதற்கு ஒரு பல்கலைகழகத்திற்கு துணைவேந்தர் என்றிருக்கும் இவருக்கு வெட்கமாக இல்லை? ஏன் அவர் பல்கலையில் படிக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?

உயர்ந்தவர் / தாழ்ந்தவர்: தேவையில்லாமல், இந்துக்கள் நடத்தும் விழாக்களில் அவர் கீழே உட்காரவேண்டும், ஆனால் இங்கு மற்றவர்களுடன் மேடையில் உட்கார சந்தர்ப்பம் கிடைத்தது என்று பேசியதில் பொருளே இல்லை. மேலே மேடையில் அன்று உட்கார்ந்திருந்தவர் எல்லோரும் பெரியவர்கள் / உயர்ந்தவர் இல்லை. கீழே பிளாஸ்டிக் நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தவர் எல்லோரும் சிறியவர் / தாழ்ந்தவர் இல்லை. சந்தர்ப்பம் கிடைத்ததால், மேடையில் உட்கார்ந்திருக்கின்றனர்!

பேசியதையே திரும்ப பேசுதல்: பேச்சின் முடிவில் 90 மலர்களின் பெயரைச் சொல்லி வாழ்த்தியதும் செயற்கையாக இருந்தது, ஏனெனில், அவர் எல்லா இடங்களிலும் அவ்வாறே பேசுவது சிலருக்குத் தான் தெரியும். அப்படியே “டப்பா அடுத்து வைத்ததினால்” அவ்வாறு கூறுகிறார்! உதாரணத்திற்கு, பாரதியார் பல்கலையில் அண்ணாதுரை நூற்றாண்டு நிறைவு விழா 07-10-2009 அன்று நடந்தபோது, அவ்விழாவில் 90 விதமான மலர்களின் பெயரை கூறி மாணவர்களை சபாபதி மோகன் வாழ்த்தினார்! இங்கும்  இன்று 13-12-2009, அதே பாட்டு பாடி பேச்சை முடித்துக் கொண்டார்!

யார் இந்த நபர்? “நான் உங்களில் (திமுக) ஒருவனாக இருப்பேன்” : சபாபதி மோகன் பேச்சு, பரபரப்பு (10-05-2008): பாளையங்கோட்டையில் திருநெல்வேலி மாவட்ட திமுக அவைத் தலைவர் சுப. சீதாராமன் எழுதிய “அதியமான் நெஞ்சமும் -அன்புத் தலைவர் உள்ளமும்’ நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் நூலை வெளியிட்டார். விழாவில் சட்டப் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் உள்ளிட்ட திமுகவைச் சேர்ந்த மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

திமுக கொடுத்த பதவி: வெளியீட்டு விழாவில், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சபாபதி மோகன் கலந்து கொண்டு பேசினார். “ இந்த விழாவில் நான் கலந்து கொண்டதன் மூலம் என்றும் உங்களோடுதான் இருப்பேன் என்று கூறிக் கொள்கிறேன். கறுப்புசிவப்பு கரை வேட்டி கட்டியவனாக இல்லாவிட்டாலும் உங்களில் ஒருவனாக இருப்பேன்….இங்கு நான் துணைவேந்தராக பொறுப்பேற்ற பிறகு எனக்கு வீடு பார்ப்பது முதல் எல்லா பணிகளையும் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். தலைவர் உள்ளம் எப்படிப்பட்டது என்பதற்கு நான் உட்கார்ந்திருக்கும் நாற்காலியை பார்த்தாலே தெரியும். அது எத்தனை பெரிய நாற்காலி என்பது எல்லோருக்கும் தெரியும். எனக்கு அந்த வாய்ப்பைத் தந்த தலைவரை வணங்குகிறேன்”.
அப்பதவியே சர்சைக்குரியது: சபாபதி மோகனுக்கு திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி கொடுத்ததற்கு பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் இந்த பேச்சு குறிப்பிடத்தக்கது. கட்சிமாறிகளுக்குப் பதவி கிடைத்ததால், விசுவாசம் பொங்க பேசி தனது பதவியைத் தக்கவைக்க வேலை செய்து வருகிறார். அதனால் கீழ்கண்டவாறு கருணாநிதி புராணம் பாடுகிறார்!

.ம.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்குத் தாவி பின்னர், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தரான சபாபதி மோகன் பேச்சு: “தனது 14ம் வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டம், 16ம் வயதில் தமிழ் மாணவர்கள் சங்கம், 17ம் வயதில் அன்பழகனை அழைத்து சங்கம் சார்பில் மாநாடு, 29ம் வயதில் கல்லக்குடி ரயில் மறியல். மேலும், பல போராட்டங்களிலும் கருணாநிதி பங்கு பெற்றார். கடந்த 1958ம் ஆண்டில் சட்டசபையில் சேது சமுத்திரத் திட்டம் பற்றி பேசினார். 50 ஆண்டுகளுக்கு முன்னர் தனது பாட்டு மூலம் நதிகளை இணைத்தார்; தற்போது தனது 84ம் வயதில் நாட்டு நதிகளை இணைப்பது பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்”, என்றேல்லாம் பேசுகிறார்!

இந்துக்களுக்கு அடையாளம் இல்லையா? லுங்கி கட்டியவன் முஸ்லீம், சிலுவை போட்டவன் கிருத்துவன் என்றால் இந்து யார்? அவனது அடையாளம் என்ன என்பதுதானே கேட்கப்படுககறது? அதனால்தானே நெற்றியில் குங்குமம், விபூதி, திருமண், பொட்டு என வைத்தால் கேலியும் கிண்டலும் பேசப்படுகிறது? அதற்காகத் தானே கருணாநிதி தமது தொண்டர்களயும் பெயர்சொல்லி என்ன நெற்றியில் ரத்தமா என்று நக்கலாகக் கேட்கிறார்? அதுவே குல்லா போட்டு கஞ்சிக் குடிக்கும்போது அத்தகைய நக்கலும், கிண்டலும், கேலியும் வருவதில்லையே? வந்தாலும் அது இந்துக்களுக்கு எதிராகத் தானேத் திரும்புகின்றன?.

சமய நல்லிணக்க உணர்வு: “இம்மாநாடுகளால் சமய நல்லுணர்வு மலர்ந்திருக்கிறது”, என்று கூறுகிறார்கள்! எப்படி, இங்கு “சமயம்” என்றால் “சந்தர்ப்பம்” என்று பொருள் கொண்டு, இவ்வாறு முஸ்லிம்கள் மற்றும் இந்து-விரோதி திராவிட நாத்திகர்களின் “கூட்டு சமய” உணர்வு, பனப்பாங்கு, அவ்வாறானப் பேச்சுகள் நன்றாக மலர்ந்திருக்கிறது என்கிறார்களா? ஆகவே முஸ்லிம்கள் எந்த சமய, யாருடைய சமய நல்லுணர்வு மலரச் செய்கிறர்ர்கள் என்பதனைத் தெளீவு படுத்த வேண்டும்.

இலக்கியத்தால் மட்டுமே இதயங்களை இணைக்க முடியும்: இத்தகைய இந்து-விரோத பேச்சுகளால் எப்படி இதயங்களை இணைக்கப் போகிறர்கள்? திராவிட நாத்திகம் எப்படி இதற்கு உடன் போகும்? இப்பொழுது கூட இஸ்லாம் இல்லாத இலக்கியத்தை வெறுத்து, தூஷிக்கிறதே? அதாவது குறிப்பாக இந்து இலக்கியங்களை அவமதிப்புச் செய்கிறதே? பிறகென்ன இணக்கம்? புதிய முழக்கம்?

முஸ்லீம்களின் கவனத்திற்கு: ஏற்கெனவே ரம்ஜான் கஞ்சி விழாக்களை அரசியலாக்கி, இந்து விரோத விழாக்களாக மாற்றி உள்ளது அனைவரும் அறிவர். இந்துக்களுக்கும் அத்தகைய உண்ணாநோன்புகள் உண்டு ஆனால், அவர்கள் அப்பெயரில் நிறைய பட்சணங்கள் செய்து சாப்பிடுவர், ஆனால் முஸ்லீம்கள்தான் உண்மையாக 40 நாட்களும் உண்ணாநோன்பு கடைப் பிடிக்கின்றர் என்றெல்லாம் குல்லாப் போட்டுக் கொண்டு கஞ்சி குடித்துக் கொண்டே கருணாநிதி கேலி பேசியது அனைவருக்கும் ஞபகம் இருக்கிறது. இன்றைய வருடம் அந்த கேகிக்கூத்தை பேராசிரியர் என்று சொல்லிக் கொள்ளும் அன்பழகன் செய்தார்!

இதுப்போலத்தான், இந்த சபாபதி மோகனின் பேச்சு. ரம்ஜான் கஞ்சி குடிக்கும் விழாக்கள் மாதிரி இப்படி எல்லா முஸ்லிம் மேடைகளையும் “நான் நாத்திகன்” என்று சொல்லிக் கொண்டு இந்துக்களை விமர்சனிக்க தொடர்ந்து உபயோகிக்கப் பட்டால், பிறகு இதில் முஸ்லிம்களுக்கும் அத்தகைய நாத்திகர்களுக்கும் தொடர்பு உள்ளது மற்றும் அவர்கள் திட்டமிட்டே அவ்வாறான பேச்சுகளைப் பேசுகிறார்கள் என்று கொள்ளவேண்டியதாக உள்ளது.

நிச்சயமாக இப்போக்கு முஸ்லீம்களின் இந்து-விரோத மனப்பாங்கைத் தான் காட்டுகிறது. இப்படி வெறுப்பை, காழ்ப்பை, பகைமையை வளர்ப்பது நல்லதா என்று அவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

திராவிடப் பெண்மையின் மதசார்பின்மை!

திசெம்பர் 12, 2009

திராவிடப் பெண்மையின்  மதசார்பின்மை!

திராவிட பாரம்பரயம், சம்பிராதயம், கலாச்சாரம் மற்றும் நாகரிகம் பேசும் புரட்சிப் பெண், கலைஞரின் வழித்தோன்றல், சித்தர்களுக்கும் புதுவிளக்கம் கொடுக்கும் “வார்த்தை பெண்-சித்தர்”, திருமதி கனிமொழியின் சமத்துவம், சகோதரித்துவம், மதசார்பின்மைப் பற்றி யாரும் பேசுவதாகத் தெரியவில்லை!

ஊடகங்கள் ஒரு தனிப்பட்ட பெண்ணிற்கு, அரசியல் ரீதியாக, மற்ற சமூக நிகழ்வுகள், மற்ற பிரச்சினகளில் இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, அதுவும் தமிழகத்லிருந்து தேந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற அங்கத்தினராக இருக்கும் அவரது பேச்சு, எழுத்து மற்றும் சமூக உரையாடல்கள் முதலியவற்றை ஒதுக்கிவிடமுடியாது.

தமிழகப் பெண்களின் “பெண்களை”ப் பற்றிய மனப்பாங்கு அலாதியானது. “பெண்ணென்றால் பேயும் இரங்கும்” என்பது தமிழ் பழமொழி!

“பேய்” உள்ளதா இல்லையா என்பது திராவிட நாத்திகத்தில் சர்ச்சையில் இருக்கலாம். ஆனால் பெரியார், அண்ணா முதலியோர்களின் ஆத்மாக்களை நம்புகிறார்கள்!  அவர்களது ஊடகங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம், ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்து வருகின்றன!

இந்நிலையில், கனிமொழி இந்த இடைத்தேர்தல் நேரத்தில் உலா வருகிறார். அதைப் பற்றி யாரும் கவலைப் படபோவதில்லை, ஆனால்  ரம்ஜான் கஞ்சி குடித்து உளறும் பணியில் அம்மையார் இப்பொழுது தந்தையைப் பின்பற்றுவதால், அவரது முக்கியத்துவம் வருகிறது.

kanimozhi-kaayalpatnam-muslims

கனிமொழி முஸ்லிம் பெண்களுடன் கலந்துரையாடுதல்!

இதே மாதிரி, சமத்துவம், சகோதரித்துவம், மதசார்பின்மை ரீதியாக இவர் மற்ற மத / சமயப் பெண்களுடன் “கலந்துரையாடல்களை” மேற்கொண்டுவருகிறாரா என்று தெரியவில்லை!

முஸ்லிம் பெண்களுடன் பிரச்சினைகள் பற்றி உரையாடல்

முஸ்லிம் பெண்களுடன் பிரச்சினைகள் பற்றி உரையாடல்

இது தேர்தல் “தேர்ந்தெடுப்பு”ப் பாரபட்சமா, அரசியல்-வேறுபாடா, மத-வித்தியாசமா, திராவிட-பாகுபாடா…..எந்த கொள்கை என்று தெரியவில்லை!

இச்சகோதரியின் “சகோதரித்துவம்’ புரியவில்லை!