Archive for the ‘நிர்வாணி’ Category

நித்யானந்தாவின் மீது அமெரிக்க சாமி நித்ய பிரபா செக்ஸ் புகார்!

மார்ச் 30, 2010

நித்யானந்தாவின் மீது அமெரிக்க சாமி நித்ய பிரபா செக்ஸ் புகார்!

நித்யானந்தாவை காணவில்லையாம்: இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாமியார் நித்தியானந்தா மீது அமெரிக்காவிலும் செக்ஸ் மோசடி புகார் எழுந்துள்ளது. நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு வீடியோவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் நித்தியானந்தா. தற்போது இருவரும் தலைமறைவாகி விட்டனர். வீடியோக்கள் மூலம் அவ்வப்போது பேசி வருகிறார் நித்தியானந்தா.

கடல் தாண்டி செக்ஸ்-புகார்: அவர் மீதான வழக்குகளை கர்நாடக போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கடல் தாண்டி அமெரிககாவிலும் நித்தியானந்தா மீது செக்ஸ் லீலை புகார் எழுந்துள்ளது. கலிபோர்னியா மாகாணம் சான் ஜோஸ் பகுதியை சேர்ந்த டக்ளஸ் மெக்கல்லர் என்ற முன்னாள் சீடர், அம்மாகாண அட்டர்னி ஜெனரல் ஜெர்ரி பிரவுனிடம் இதுதொடர்பான புகாரை அளித்துள்ளார்.

நித்ய பிரபா நித்யானந்தாவின் மீது புகார்: அந்த அமெரிக்கருக்கு நித்தியானந்தா வைத்த பெயர் சுவாமி நித்ய பிரபா என்பதாகும். அவர் தனது மனுவில்,  அமெரிக்காவில் பல இடங்களில் நித்யானந்தாவுக்கு ஆசிரமங்கள் உள்ளன. அங்கு வரும்போது, அவரது தனிப்பட்ட குடியிருப்பில், அழகான பெண்களுடன்தான் இருப்பார். அவர்களுடன்தான் சாப்பிடுவார். ஒருமுறை, கலிபோர்னியா மாகாணம் நார்வாக் பகுதியில் உள்ள சனாதன் தர்மா கோவிலில் 2 நாட்கள் பயிற்சி முகாமுக்கு நித்யானந்தா வந்திருந்தார்.

வெளியில் காவலுக்கு நிற்க வைத்தார்…அப்போது, அவரை தனியறையில் ஒரு பெண் சந்தித்தார். அப்பெண்ணுடன் தனிமையில் இருக்கும்போது, வேறு யாரும் வந்து விடாமல் பார்த்துக் கொள்ளுமாறு நித்யானந்தா என்னை கதவு அருகே காவலுக்கு நிற்க சொன்னார். மேலும், இந்து மத நம்பிக்கைகளை நித்யானந்தா தவறாக பயன்படுத்தினார். ஆசிரமத்தில் இருப்பவர்களை அவர் அடிக்கவும் செய்வார். எனது வங்கிக் கணக்கில் இருந்து 4 லட்சம் டாலர் பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளார்.

அமெரிக்க ஸ்டைலில் ஆபாஷ புகார்: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில், நான் 2007-ம் ஆண்டு ஜுன் மாதம், ஒரு வார கால தியான பயிற்சிக்காக தங்கி இருந்தேன். அந்த தியான வகுப்பின்போது, நான் மயக்க நிலையில் இருந்தேன். ஏதோ மருந்து காரணமாக, நான் உணர்வை இழந்தது போல இருந்தது.  அந்த தியான வகுப்பின்போது, நித்யானந்தா, யாகம் வளர்த்தார். பக்தர்கள் அனைவரும் தங்கள் தலைமுடியை வெட்டி, தீயில் போடுமாறு சொன்னார். மேலும், அவர் அந்த தீயில் கஞ்சா விதை போல தோன்றிய ஏதோ ஒன்றை போட்டார் என்று கூறியுள்ளார்.  அமெரிக்காவுக்கு நித்தியானந்தா செல்லும்போதெல்லாம் அவருடன் இரு தமிழ்ப் பட நடிகைகளும் செல்வார்கள், அங்கு நிர்வாண நடனம் ஆடுவார்கள் என்றெல்லாம் சமீபத்தில் செய்திகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம். இந்தப் பின்னணியில்தான் அமெரிக்கர் ஒருவர், நித்தியானந்தா மீது செக்ஸ் புகார் அளித்துள்ளார்.

காந்த படுக்கை விவகாரத்தில் சன் டிவி நிருபர் (பழைய செய்தி)!

மார்ச் 7, 2010

காந்த படுக்கை விவகாரத்தில் சன் டிவி நிருபர்!

[லெனின் கருப்பன் உள்ளாரா என்று தேடப்படுகிறது]

“காந்த படுக்கை மோசடி” தொடர்பாக நீதிமன்ற நடவரிக்கைகளைப் படம் பிடிக்க வந்த சில நிருபர்களில் சுரேஸ் என்பரும் இருந்தார். அப்பொழுது குற்றம் சாட்டப் பட்ட தரப்பில் ஆஜரான ராமசாமி என்ற வக்கீல் அதிகாரம் இல்லாமல் நீதிமன்றத்திற்குள் படமெடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். (Asian Age 6.2.03)

கே. கே. சுரேஸ்குமார் “காந்த படுக்கை மோசடி” தொடர்பாக ஒரு வழக்கறிஞர் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார்.  இவர் சன் டிவியில் நிருபராக வேலை செய்து வந்தார்.  இவர் தமது நன்பர்களுடன் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் வக்கில்களுடன் வாதிட்டதாகவும், அதில் மிரட்டியதாகவும் சொல்லப்பட்டது. அதனால் பார் அசோசியேசனின் தலைவர்  ஜெயபாலன் (IV metropolitan magistrate) அவர்களிடம் புகார் கொடுத்தார். சுரேஸ்குமாரும் கோட்டூர்புரம் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். பிப்ரவரி 4, 2003 அன்று வழக்கை விசாரித்து, அவருக்கு பிணை-விடுதலை அளிக்கப்பட்டது. (The Hindu dated 05.02.2003)

MEDIA/FREEDOM OF PRESS – 2003, Compiled By K. Samu,Human Rights Documentation,Indian Social Institute, Lodi Road, New Delhi

Click to access Media-2003.pdf

காந்த படுக்கை மோசடி பற்றிய நீதிமன்ற தீர்ப்புகளை இங்கே பார்க்கலாம்:

http://www.indiankanoon.org/doc/378163/

http://www.indiankanoon.org/doc/267753/

சாமியாருடன் நடிகை ரஞ்சிதா படுக்கை அறை காட்சிகள்; நாடு முழுவதும் பரபரப்பு!

மார்ச் 3, 2010
சாமியாருடன் நடிகை ரஞ்சிதா படுக்கை அறை காட்சிகள்; நாடு முழுவதும் பரபரப்பு
மார்ச் 03,2010,11:00  IST

http://www.dinamalar.com/topnewsdetail.asp?news_id=1795

Top world news stories and headlines detail

மேலும் படங்கள் >> சென்னை: தமிழ் நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழ் திரையுலகம் என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தாவின் இயற்பெயர் ராஜசேகரன். இவருக்கு தமிழகத்திலும், கர்நாடகாவிலும் ஆசிரமங்கள் உள்ளன. பெங்களூருவில் மைசூர் சாலையில் உள்ள பிடுதி பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நித்தியானந்த தியான பீடம் என்ற ஆசிரமம் உள்ளது. இதுதான் நித்தியானந்தாவின் ‌தலைமையகம்.

32 வயதே நிரம்பிய நித்தியானந்தா, கதவை திற காற்று வரும் என்ற தலைப்பில் போதனைகளை கூறி வந்தார். லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டிருக்கும் அவர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் நித்தியானந்தா, அந்த நடிகையிடம்  சில்மிஷங்களில் ஈடுபடுவது போலவும், உல்லாசமாக படுக்கையை பகிர்ந்து கொள்வது போலவும், தண்ணீர் கொடுப்பது போன்றும், மாத்திரை கொடுப்பது போன்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆனால் அந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. நித்தியானந்தாவின் முகத்திரையை கிழித்திருக்கும் இந்த வீடியோவில் அவருடன் உல்லாசமாக இருக்கும் நடிகை ரஞ்சிதா, பாரதிராஜாவின் படத்தில் அறிமுகமான‌வனர்; பாரதிராஜாவின்  சின்னத்திரை  தொடரிலும் நடித்தவர்.

என்ன செய்யப்போகிறது தமிழ் திரையுலகம்? : நடிகை புவனேஸ்வரி விபசார வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பத்திரிகைகளில் வெளியான செய்தியை கண்டித்து நடந்த ‌தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் பேசிய நடிகர், நடிகைகள் பலரும் ஆபாசமாக பேசி பத்திரிகையாளர்களை விமர்சித்தனர். இந்தக் கூட்டத்தில், சரத்குமார், ராதா ரவி, விஜயகுமார், சத்யராஜ், அருண் விஜய், மனோபாலா மற்றும் சில நடிகைககள், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தாக்கிப் பேசிய தகாத வார்த்தைகளை அச்சில் கூட ஏற்ற முடியாது. “இதுபோன்ற செய்திகளால் பாதிக்கப்பட்ட நடிகைகளின் வழக்கு செலவுக்காக, ஒரு தனி சட்ட அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதற்கான முழு செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்’ என்று நடிகர் சூர்யா கூறினார்.  “பத்திரிகையாளர்களை வெட்டியிருப்பேன்’ என்று விஜயகுமார் கொந்தளித்தார். “நாற்காலிக்கு கீழே கேமராவை வைத்து, நாகரிகமற்ற முறையில் படம் பிடிப்பவர்கள் பத்திரிகையாளர்கள், ஈனப்பிறவிகள் என்றும், சூர்யா குமுறினார்.  நடிகர் – நடிகைகளின் இந்த பேச்சு பத்திரிகையாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தி்ல பேசிய நடிகர் சூர்யா, நடிகைகளை பாதுகாக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும் நான் கொடுக்கிறேன், என்று கூறினார்.

நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? “சுவாமி நித்யானந்தாருடன்’ கொஞ்சும் நடிகை ரஞ்சிதா, மெய் மறந்து இருக்கும் வீடியோ காட்சிகள், தற்போது உலகம் முழுவதும் உலா வந்து கொண்டிருக்கின்றன. சினிமா நடிகை ரஞ்சிதாவுடன் சல்லாபிக்கும் காட்சிகள், ஆபாசத்தின் உச்ச கட்டம். இந்த சல்லாபம், ஒரு நாள் மட்டும் நடந்தவை அல்ல; பல நாள் நடந்தவை; இப்போது சந்திக்கு வந்துவிட்டது. நடிகர் சூர்யா, சாமியாருடன் உல்லாசமாக இருக்கும் நடிகைகளுக்கும் சட்டப்பூர்வ பாதுகாப்பு கொடுப்பாரா? எதற்கெடுத்தாலும் கண்டனக் குரல் எழுப்பி, கூட்டம் நடத்தி, கண்டன தீர்மானம் போடும் நடிகர் சங்கம், இந்த சர்ச்சைக்குரிய நடிகை மீதும் கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமா?

சினிமாக்காரர்கள் சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும்: இதுபோன்று செய்திகள், சந்திக்கு வந்து விட்ட பிறகாவது, தமிழ்த் திரையுலம் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும். குற்றத்தை சுட்டிக் காட்டுபவர்கள் மீது பொய் வழக்கு போடுவதற்கு முன், தங்கள் மீது விபசார வழக்குகள் பாயாமல் தடுத்துக் கொண்டால், புண்ணியம். சினிமாக்காரர்கள் சொன்னதுபோல, “அடுத்து வரும் தலைமுறையும் அவர்களது குடும்பத்தினரும் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்’ என்பதை ரஞ்சிதா போன்ற நடிகைகளும் அவர்களுக்காக வக்காலத்து வாங்கிய தென்னிந்திய நடிகர் சங்கமும், இவர்களுக்காக சென்னையில் 90 ஏக்கர் வழங்கிய தமிழக அரசும் சிந்திக்கட்டும்.

ஆசிரமம் சூறை!: சுவாமி நித்தியானந்தா நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது ஆசிரமங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்தை இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர். நித்தியானந்தாவின் படங்களை தீ வைத்து கொளுத்தினர். புதுவையிலும் ஏராளமான பொதுமக்கள் நித்தியானந்தாவின் ஆசிரமத்தை சூறையாடினார்கள். மேலும் கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் ஆசிரமங்களை சூறையாடி வரும் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள், சுவாமி நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவரது சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நித்யானந்த மடம் சார்பில் திடீர் விளக்கம்: மிகுந்த பரபரப்புக்கு இடையில் ஆஸ்ரமத்தில் இருந்த நித்ய சத்யானந்த சுவாமிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தியான பீடத்தின் முகவரியோ, யாருடைய கையெழுத்தும் இல்லாமலே இந்த அறிக்கை இடம் பெற்றிருந்தது. மார்ச் 2ம் தேதி இரவில் வெளியான தொலைக்காட்சி ஒளிபரப்பில் இடம் பெற்ற தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. இந்த காட்சிகள் அனைத்திலும் கிராபிக்ஸ் செய்யப்பட்டு, திட்டமிட்டு சதி செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளோம். விரைவில் இது குறித்து முடிவு செய்யப்படும். இந்த நேரத்தில் நாங்கள் பக்தர்களுக்கும், அபிமானிகளுக்கும் எங்களின் நிலைமையை தெளிவாக கூறுகிறோம். இதனால், மிகவும் மனமுடைந்த நிலையில் உள்ளோம். எங்களுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து பக்தர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். பொது வாழ்க்கையில் ஏழு ஆண்டுகளாக நித்யானந்த சுவாமிகள், பல சேவைகளை செய்துள்ளார். பல்வேறு நாடுகளிலிருந்து 20 லட்சம் பக்தர்கள், நித்யானந்த சுவாமிகளின் ஆதரவாளர்களாக உள்ளனர். வாழ்க்கையின் தத்துவம் குறித்து பல்வேறு நாடுகளில் சுவாமிகள் விளக்கியுள்ளார். இந்த நேரத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமிகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இதற்கு மேலும் இதை விளக்குவதற்கு வார்த்தைகளில்லை என்று தியான பீடத்தின் பணிகள் குறித்து நீண்ட விளக்கமளித்துள்ளனர்.