Archive for the ‘நாதஸ்வரம்’ Category

தீயினால் சுட்ட வடு, உள்ளாரும் ஆறாதே நாவினால் சுட்ட வடு – யாகாவாராயிமும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு – திராவிடத்துவத்தின் துவேச-தூஷணங்கள், வசைபாடல்கள் மற்றும் நிந்தனைகள்!

ஏப்ரல் 9, 2016

தீயினால் சுட்ட வடு, உள்ளாரும் ஆறாதே நாவினால் சுட்ட வடுயாகாவாராயிமும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு திராவிடத்துவத்தின் துவேசதூஷணங்கள், வசைபாடல்கள் மற்றும் நிந்தனைகள்!

Karunanidhi - how he abused other leaders

வாய்பேச்சு தீவிரவாததால் வெறுப்புகாழ்ப்புதுவேசம் வளர்த்து பொருளாதாரத்தை சீர்குலைத்தது[1]: இந்திய-தேசிய விரோதக் கொள்கைகளினால், மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் தமிழ்நாட்டு மக்களை வித்தியாசமாக நினைத்தார்கள். இந்தி பேசும் மக்கள், தமது மொழிக்கு விரோதமாக இப்படி செயல்படுகின்றனர் என்றும் என்று திகைத்தும் இருந்தார்கள். ஏனெனில், அவர்களுக்கு, இவர்கள் (தங்களை திராவிடர்கள் என்று சொல்லிக் கொல்பவர்கள் இந்தியை ஏன் வெறுக்கிறார்கள் என்று கூட தெரியாமல் இருந்தார்கள்).  இந்தியை எதிர்ப்போம் என்று இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தினர், அதில் தீக்குளிப்பு, தீவைப்பு போன்ற வன்முறைகளும் நடந்தன. ரெயில் பயணிகள் அதிக அளவில் பாதிக்கப் பட்டனர். பிறகு, இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டவர்களை “மொழிப்போர் தியாகிகள்” என்று பட்டங்கள், பென்சன் எல்லாம் கொடுத்தனர். இவையெல்லாம் இந்தி பேசும் மக்களுக்கு வியப்பாக இருந்தது. இந்தியர்களாக இருந்து கொண்டு, ஒரு மொழியை எதிர்த்தால் எப்படி தியாகிகள் ஆவார்கள் என்று அவர்கள் கேட்கவும் செய்தனர். மற்ற மாநிலங்களில் தொழிற்சாலைகள் அதிகமாக வளர்ந்தன, ஆனால், தமிழகத்தில் தொழிற்சாலைகள்வைக்க இந்தி பேசும் அல்லது வடவிந்தியர்கள் தயங்கினர். டிவிஎஸ், அசோக் லேலேண்ட், ஈஸ்வரன் அண்ட் சன்ஸ், போன்ற பிராமணக் கம்பெனிகள் / தொழிற்சாலைகள் தவிர மற்றவையெல்லாம், 1990, 2000 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தவை என்று நோக்கத்தக்கது.

கரு-இந்திராவை வசை பாடியது- சர்வாதிகாரி, காந்தாரி.....

கருணாநிதி இந்திராகாந்தியை தூஷித்த விதம்: கருணாநிதி, இந்திராகாந்தியை மிகவும் மோசமாக திட்டியுள்ளார். உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்ப்போம்:

  1. முரசொலியில் இந்திராகாந்தியை ஹிட்லர் போல் “கார்ட்டூன்” … “கிராப் வெட்டிய காஷ்மீரத்து பாப்பாத்தி” என்று, ஜாதி …
  2. “இந்திராவே…காங்கிரஸ் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா…?” என்று, அகில இந்தியகாங்கிரஸ் தலைவரான இந்திராவை இழிவுபடுத்தினார்.
  3. “எருமையும், இரண்டு எருமைக் கன்றுகளும் தமிழகம் வருகின்றன…” என்று இந்திரா, ராஜீவ், சஞ்சய் காந்தி வருகையை வக்கணையாக வர்ணித்தார்.
  4. “விதவை இந்திரா விரும்பினால் விதவைகள் மறுமணத் திட்டத்தின்படி மறுமணம் செய்து, என்னிடம் இட்லிக் கொப்பறையும், தையல் மிஷினும் பெற்றுக்கொள்ளட்டும்” என்று, கருணாநிதி கூறியதை காங்கிரஸ் தலைவர்கள் அவ்வளவு சுலபமாக மறந்திருக்க மாட்டார்கள்.
  5. “…அவசரச் சட்டம் கொண்டு வந்த அடங்காப்பிடாரி, சதிகாரி, சண்டாளி, சர்வாதிகாரி, சூனியக்காரி, சூர்ப்பனகை, பூதகி, காந்தாரி, கவுதாரி, கூனி, விதவை…” என்று விஷத்தைக் கக்கினார் கருணாநிதி.
  6. மிசாக் கொடுமைக்காரி, சேலை கட்டிய ஹிட்லர், முசோலினி…” என்று, இந்திராவை இழிவுபடுத்தினார். முரசொலியில் இந்திராகாந்தியை ஹிட்லர் போல் “கார்ட்டூன்” போட்டார். “கிராப் வெட்டிய காஷ்மீரத்து பாப்பாத்தி” என்று, ஜாதி துவேஷத்தைத் தூண்டினார்.
  7. மதுரை வரும் பூதகி இந்திராவிற்கு கருப்புக்கொடி காட்டுவோம். டில்லிக்கு திரும்பிச் செல்லவிடக்கூடாது என்று கொக்கரித்து, கொலைவெறித் தாக்குதல் நடத்தினார் கருணாநிதி. கருணாநிதியின் காலிகளால் ரத்தக் காயம் பட்டு உயிரைப் பணயம் வைத்து இந்திரா காந்தியை அதிர்ஷ்டவசமாகக் காப்பாற்றினார் பழ.நெடுமாறன்.
  8. “…பழ.நெடுமாறன் மேல் பட்ட ரத்தம் மாதவிடாய் ரத்தம்” என்று, தமிழ்ப் பெண்கள் வெட்கித் தலைகுனிய பெண்மையை இழிவுபடுத்தினார் ரத்தக் கருணாநிதி.

கரு-காமராஜரை வசை பாடியது-ஜாண்டக்காக்கா, மரமேறி, கட்டப்பீடி

கருணாநிதியின் அர்ச்சனைக்கள் தொடர்கின்றன: கருணாநிதி, காந்தி முதல் ராஜாஜி வரை காங்கிரஸ் தலைவர்கள்; தமிழக கட்சித்தலைவர்கள் என்று ஒருவரையும் விட்டு வைக்காமல் கேவலமான, மோசமான, ஆபாசமான, வக்கிர வார்த்தைகளினால் வசைபாடித் திட்டியுள்ளார். உதாரணத்திற்கு சில கொடுக்கப்படுகின்றன.

  1. காந்தியை வசைப்பாடியது – கன்னிப் பெண்களின் தோள்களில் கைபோட்டு களிப்படைந்தவர் காந்தி.
  2. நேரு-பண்டாரநாயக சந்திப்பைக் கொச்சைப் படுத்தி பேசியது – நேருவோ மனைவியை இழந்தவர் சிறிமாவோ பண்டார நாயகாவோ கணவரை இழந்தவர், இவ்விருவரும் இரண்டு மணி நேரம் தனிமையில் என்ன பேசியிருப்பார்கள் உடன்பிறப்பே.
  3. இந்திரா காந்தியைத் திட்டிய வசை வார்த்தைகள்: சண்டாளி , சதிகாரி , சர்வாதிகாரி , ஹிட்லர், முசோலினி , பேய் , பிசாசு பூதகி என்று இந்திரா காந்தியைத் திட்டியது.
  4. காமராஜரைத் திட்டியது: அண்டங் காக்கா, காண்டாமிருகத் தோலர் , எருமைத் தோலர் , மரமேறி , பனை ஏறி , கட்டபீடி என காமராஜரை ஒருமையில் வசை பாடியது.
  5. எம்.ஜி.ஆரைத் திட்டிய விதம் – நடிகன், காத்தாடி, கிழவன், மலையாளி , அட்டைக் கத்தி, கோமாளி, ஊமையன், அலி என்றெல்லாம் எம்ஜியாரை வசை பாடியது.
  6. மூப்பனாரைக் கிண்டல் அடித்தது – காவிரி தென்பெண்ணை பாலாறு , மூப்பனார் மூளையில் கோளாறு என்று வசை பாடியது.
  7. பல தலைவர்களை ஏளனம் பேசியது – ஐஸ்ப்ரூட் சம்பத், வாழப்பாடி ஒரு வழிப்போக்கன், செவிடன் ஜீவானந்தன், நொண்டி பா. ராமமூர்த்தி, கக்கன் என்ன கொக்கா? என்றெல்லாம் பேசியது.
  8. ராஜாஜி முதலிய காங்கிரஸ் தலைவர்களைக் கேவலமாகத்திட்டியது – குல்லுக பட்டர் ராஜகோபாலாச்சாரி, கைபர் கணவாய் வழியே வந்த வந்தேறி வெங்கட்ராமன், குரங்கன் பக்தவத்சலம், துரோகி பண்ருட்டி ராமச்சந்திரன், ஈனப் பிறவி இரா. செழியன், சீமான் வீட்டு கன்றுக் குட்டி சின்னப் பைய்யன், ஈ-எறும்பு, கொசு , தத்துப் போன ஓசி பணக்காரன் பா.சிதம்பரம் .
  9. பிஜேபி தலைவர்களை வசைபாடியது – பண்டாரம், பரதேசி, கமண்டலம், காவி உடை, ஆக்டோபஸ் ஜந்துக்கள், கூனை நிமிர்த்த முடியாத ஒட்டகங்கலான வாஜ்பாய்கள் அத்வானிகள், இல. கணேசன்கள்
  10. சோனியாவை வெள்லைக்காரி என்றது – ராஜீவ் போல நான் ஒன்றும் வெளின்னாட்டுக்காரியை கல்யாணம் செய்துக் கொள்ளவில்லை என்று சோனியாவை நிந்தித்தது.
  11. ஜெயலலிதாவை கீழ்த்தனமான வார்த்தைகள் உபயோகப்படுத்தித் திட்டியது – காந்தாரி, கவுதாரி, சூர்பனகை, காதறுந்த காலி, மூக்கறுந்த மூளி பால்கனி பாவை, தனியே பேசலாம் வா உனக்கு சேதாரம் எதுவும் ஏற்படாது, என்றெல்லாம் ஜெயலலிதாவை வசைபாடி இழிவுப்படுத்தியது.
  12. வைகோவை வாரி விட்டு திட்டிய விதம் – துரு பிடித்த வாள், குளத்தை விட்டு ஓடிய மீன், கலிங்கப் பட்டி களிமண் என்று வைகோவைத் திட்டியது.
  13. ராம்தாஸ், இளங்கோவனைத் திட்டியது – தடித்த நாக்கர் இராமதாஸ், இறுமாப்பு இளங்கோவன் என்றெல்லாம் ஒருமையில் வசை பாடியது.

கரு-எம்ஜியாரை வசை பாடியது- கிழவன், கூத்தாடி

தீயினால் சுட்ட வடு, உள்ளாரும் ஆறாதே நாவினால் சுட்ட வடுயாகாவாராயிமும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு: திருவள்ளுவர் சொன்னதையெல்லாம், இவர்களுக்கு சொல்லிக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், இவகள் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவர்கள். தமிழின் உயிர், உயிரின் வேர், வேரின் மூலம், மூலத்தின் ஆதாரம், ஆதாரத்தின் ஆரம்பன்…….என்றெல்லாம் இருந்து வருவதால், இவர்களுக்கு ஈடு-இணை யாரும் இல்லை. தமிழில் வசைபாட இவர்களுக்குத்தான் எல்லா உரிமைகளும் உள்ளன. மமதை அதிகமாகி விட்டால், திருவள்ளுவருக்கு தமிழே நான்தான் சொல்லிக் கொடுத்தேன் என்ற அளவுக்கும் போயிருக்கிறார்கள். இல்லை அவர்களையும் திட்டுகின்ற உரிமைகளைக் கொண்டிருந்தார்கள். அதனால் தான், ஈவேரா போன்றோர் அவர்களையு விட்டு வைக்கவில்லை. “இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் இரண்டு மூன்று புலவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள் 1. தொல்காப்பியன், 2. திருவள்ளுவன், 3. கம்பன். இம்மூவரில்,

  1. தொல்காப்பியன் ஆரியக்கூலி, ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்துவிட்ட மாபெரும் துரோகி.
  2. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச்சென்றான்.
  3. கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் – தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுப்படுத்தி கூலிவாங்கி பிழைக்கும் மாபெரும் தமிழ்த் துரோகியே ஆவான். முழுப்பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன். தன்னைப் பார்ப்பானாகவே கருதிக்கொண்டு பார்ப்பான் கூட சொல்லப்பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான். இம்மூவர்களும் ஜாதியையும், ஜாதித் தொழிலையும் ஏற்றுக்கொண்டவர்கள் ஆவார்கள்”.

இப்படி சர்வாதிகாரத் தோரணையும் எல்லோரையும் திட்டித் தீர்க்கும் போக்கை உண்டாக்கியப் பிறகு, அவரைப் பின்பற்றி வருபவர்களிடம் நாகரிகம், மரியாதை, முதலியவற்றை எதிர்பார்க்க முடியுமா?

Arya-Dravidian war, battle continue - Anna-Karu-

[1] https://dravidianatheism2.wordpress.com/2012/03/07/karunanidhi-grinds-anti-brahmin-bogey-again/

வசைபாடி மன்னிப்புக் கேட்கும் திராவிடத்துவத்தின் மகத்துவம் என்ன – மன்னிப்பினால் துவேச-தூஷணங்களின் தாக்குதல் அடங்குமா, மறையுமா, குறையுமா?

ஏப்ரல் 9, 2016

வசைபாடி மன்னிப்புக் கேட்கும் திராவிடத்துவத்தின் மகத்துவம் என்ன – மன்னிப்பினால் துவேச-தூஷணங்களின் தாக்குதல் அடங்குமா, மறையுமா, குறையுமா?

கரு முஸ்லிம் லீக், குழுக்களுடன்

திராவிட கட்சி பேரங்களில் ஈடுபட்ட முஸ்லிம்கள்:. “நேற்று (ஏப்.6) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்கலை சந்தித்தபோது, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விளக்கம் அளித்தேன். அக்கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும், சில மாவட்டச் செயலாளர்களும் அக்கட்சித் தலைமை சட்டமன்ற தேர்தல் குறித்து மார்ச் 23ஆம் தேதியன்று எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைமையைக் கடுமையாக விமர்சித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கூறிய கருத்துகளுக்குப் பதில் சொல்லும் விதத்தில் சில விளக்கங்கள் அளித்தேன். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினரை தலைமைக்கு எதிராக அறிக்கை விடச் செய்ய திராவிட முன்னேற்றக் கழகம் கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து, வலை வீசுகிரார்கள், அதற்குச் சாட்சியமாக திருநெல்வேலி மாவட்டத்தில் தேமுதிக நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் முகமது அலி என்பவரை அக்கட்சித் தலைமைக்கு எதிராக அழைத்து வந்தால் அவருக்கு 3 கோடியும், அழைத்து வருபவருக்கு 50 லட்ச ரூபாயும் தருவதாக, கோல்டன் கான் என்ற இஸ்லாமிய நண்பரிடம், தேனியைச் சேர்ந்த நஜ்முதீன் பேசி இருக்கிறார் என்ற தகவலைச் சொன்னேன்[1]. வைகோ அறிக்கை தொடர்கிறது.

கரு-இந்திராவை வசை பாடியது- மாத விடாய்நான் வணங்கும் தெய்வமான என் அன்னை மாரியம்மாள் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்: “பணம் வாங்கிக் கொண்டு கட்சி மாறுவது இழிவானது என்று கூறியபோது, இது உலகத்தின் ஆதித்தொழிலைப் போன்றது என்று கூறினேன். ஆனால், அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களைக் குறித்தோ, அவரது குடும்பத்தினர் குறித்தோ, மறைமுகமாக இப்படிச் சொல்ல வேண்டும் என்று இம்மி அளவும் என் மனதில் எண்ணம் இல்லை என்பதை, நான் வணங்கும் தெய்வமான என் அன்னை மாரியம்மாள் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். ஆனால், அதன்பின் நாதஸ்வரம் வாசிக்கும் அகலை அவருக்குத் தெரியும் என்று கூறியது, தவறாகப் பொருள் கொள்ளும்படி ஆகி விட்டது. அது மிகப்பெரிய தவறுதான், அண்ணன் கலைஞர் அவர்களைச் சாதியைக் குறித்து நான் இப்படிச் சொன்னதாகப் பழிப்பதற்கும் நான் ஆளாகி விட்டதை எண்ணி வேதனைப்படுகிறேன். நான் சாதிய உணர்வுகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவன், அதை அண்ணன் கலைகர் அவர்களே அறிவார்கள்.” வைகோ அறிக்கை தொடர்கிறது.

வைகோ 1978ல் பேசும் படம் - திருமலை நாயக்கர் விழா

என் உயிர் பிரியும் வரை உங்களுக்கு நான் கும்பகர்ணனாகவே இருப்பேன்:  “அண்ணன் கலைஞர் அவர்களை 30 ஆண்டுகளாக என் நெஞ்சில் வைத்துப் போற்றியவன் நான். அவர் மீது துரும்பு படுவதர்கும் சகிக்காதவனாக, அவருக்கு ஒரு கேடு என்றால் அதைத் தடுக்க என் உயிரையும் தத்தம் செய்யச் சித்தமாக இருந்தவன் நான். அதனால் தான் 1993 அக்டோபர் 3 இல் என் மீது கொலைப்பழி சுமத்தப்பட்டபோது, என் உயிர் பிரியும் வரை உங்களுக்கு நான் கும்பகர்ணனாகவே இருப்பேன் என்று அறிக்கை விட்டேன். ஆனால், உலகின் ஆதித் தொழில் என்று கலைஞர் குடும்பத்தைக் குறிப்பிட்டு நான் கூறியதாகக் கருதுவதற்கு ஒரு இடம் ஏற்பட்டு விட்டதே என்பதை நினைக்கும்போது என் மேனி முழுவதும் நடுக்கமுற்றது என்பதை என் அருகில் இருந்தவர்கள் அறிவார்கள். இப்படி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன். அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். அண்ணன் கலைஞர் அவர்கள் தாயுள்ளத்தோடு என் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன், ”  இவ்வாறு அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.  வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்[2]. அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கின்றேன். என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்[3].

Anti-Hindu Karunanidhiதிராவிடத் தலைவர்களின் பரஸ்பர வசைபாடுகள்: 1960களிலிருந்தே, பொதுவாக திராவிட சித்தாந்திகள், மேடை பேச்சாளிகள், அரசியல்வாதிகள், முதலியோர் ஆபாசமாக, கொச்சையாக, கேவலமாக, இரட்டை அர்த்தம் தொணிக்க பேசுவது எல்லாம் சகஜமாக இருந்தது. இப்பொழுது, ஊடகங்கள் மூலம் அவை பரவி வருவதால், இக்காலத்தவர், அடடா என்ன பெரியார், அண்ணா, கருணாநிதி …… முதலியோர் இப்படியா பேசினர் என்று திகைக்கின்றனர். இதனால், அவர்களைப் பற்றிய கருத்துகளும் இளைஞர்களிடையே மாறி வருகின்றன. உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்ப்போம்[4]:

  1. கருணாநிதி ‘காமராஜரின் தாய் கருவாடு விற்றவர்’ என்று சொன்ன போது கண்ணதாசன் தாக்குதல் மிகக்கடுமையாக இருந்தது. “என் தலைவனின் தாய் கருவாடு மட்டும் தான் விற்றார்” [அப்படியென்றால், வேறென்னதை விற்றார் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?].
  2. கண்ணதாசன் இறந்த போது கருணாநிதி இரங்கல், “தென்றலாய் வீசியவனும் நீ! நெருப்பாய் சுட்டவனும் நீ! தாக்குகின்ற கணை எத்தனை நீ தொடுத்த போதும் அத்தனையும் தாங்கும் என் நெஞ்சே உன் அன்னை!”  [அதாவது கருணாநிதி, பதிலுக்கு, உங்கம்மாதான் அப்படி செய்வாள் என்பது போல சாவு-இரங்களிலும் மறக்காமல் வசைப்பாடி பழித்தீர்த்துக் கொண்டுள்ளார்]
  3. எம்.ஜி.ஆர் புதுகட்சி ஆரம்பித்த போது கருணா நிதியின் எள்ளல் அன்று – எம்.ஜி.ஆர், “கூத்தாடி”, அதிமுக “நடிகர் கட்சி!” தன் மீதான “கூத்தாடி” …..என்றெல்லாம் பேசினார் [ஆனால், அண்ணா, முதலியோர் நாடகம்-சினிமா துறைகளில் நடிகனாக, எழுத்தாளராக…….வேலைப் பார்த்து பணம் சம்பாதித்தை மறந்து-மறைத்து வசைப்பாடியது].
  4. இதனால், அத்தகைய விமர்சனத்திற்கும், அதிமுக – ’நடிகர் கட்சி’ எள்ளலுக்கும் எம்.ஜி.ஆர் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து சொன்னார், “கருணாநிதி தாசி பரம்பரை” என்றார் [என்ன செய்வது, பொறுமைக்கும் ஒரு இல்லையுண்டல்லவா, பொதுவாக எம்ஜியார் அப்படியெல்லாம் பேச மாட்டார். ஆனால், தூண்டப்பட்டார்].
  5. எம்.ஜி.ஆர் மறைந்த போது கருணாநிதி புகழாரம், “சொல்வாக்கும் செல்வாக்கும் மிகுந்த முதலமைச்சர்!” [அதாவது கருணாநிதி, பதிலுக்கு, “சொல்வாக்கு” என்று குறிப்பிட்டு சாவு-இரங்களிலும் மறக்காமல் வசைப்பாடி பழித்தீர்த்துக் கொண்டுள்ளார்]

அதாவது, தொடர்ச்சியாக ஒருவரை மோசமாக விமர்சித்துக் கொண்டே இருந்தால், ஒருநிலையில், யாரும் பொறுமை இழக்க நேரிடும் என்பதற்காக இது எடுத்துக் காட்டப் படுகிறது. மேலும், பெரியார், அண்ணா, கருணாநிதி ……போன்றோர் இவாறெல்லாம் பேச வேண்டிய அவசியம் என்ன என்பதும் நோக்கத்தக்கது.

பார்ப்பன கூட்டம் நடுங்க வேண்டும் - 23-02-2012

பிராமண எதிர்ப்பு விளைவுகள்யாரோஅனோனிமஸ்” என்று பதிவாகியுள்ளது[5]: தமிழகத்தில் பிராமணர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதை யாரும் பதிவி செய்து வைக்கவில்லை என்றே தெரிகிறது. பெரியாரிலிருந்து, இன்று கருணாநிதி வரை “பார்ப்பன எதிர்ப்பு”, “பார்ப்பனீய எதிர்ப்பு”, “ஆரியர் துவேசம்” போன்ற போர்வைகளில் பிராமணர்கள் பலவிதங்களில் பலவித தாக்குதல்களுக்கு உட்படுத்தப் பட்டு வருகிறார்கள். உதாரணத்திற்கு, பிராமணர்கள் தாக்கப்படுவது குறித்து ஒருவர் பதிவு செய்துள்ளதை இங்கு குறிப்பிடுகிறேன். “புத்தூர் அக்ரஹாரத்திலும், ஸ்ரீரங்கத்திலும் இன்னும் நூற்றுக்கணக்கான அக்ரஹாரங்களிலும் பிராமணர்கள் ஒவ்வொரு முறையும் தி மு க வெற்றி பெறும் பொழுது தாக்கப் பட்டே வருகிறார்கள். உடம்பு பூராவும் ரத்தக் காயங்களுடன் கொலை வெறி பிடித்த தி மு க வினரால் தாக்கப் பட்டு உயிர் தப்பி வீடு வந்த என் தந்தையை சிறு வயதில் நான் கண்டு அடைந்த நடுக்கம் இன்று வரை போகவில்லை. தமிழ் நாட்டு பிராமணர்கள் மனதில் ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் வாழ்ந்த யூதர்களிடம் இருந்த அதே அச்சம் நிலவி வருகிறது என்பதே உண்மை நிலை. இன்று கருணாநிதி முரசொலியில் ஜெயலலிதாவை எத்தனை முறை கடும் வெறியுடன் பாப்பாத்தி என்று எழுதியிருக்கிறார் என்பதைப் படித்தீர்களா? அதைக் கண்டித்து ஒரு கட்டுரை எழுதும் நேர்மை உங்களுக்கு உண்டா? அதைப் படிக்கும் ஒவ்வொரு பிராமணன் மனதிலும் அச்ச உணர்வு ஏற்படுவதில்லை என்று எப்படிக் கூசாமல் எழுத முடிகிறது?” “கருணாநிதியின் பிராமண துவேஷம் ஏன்?’ என்ற கட்டுரையில் அப்பின்னணியை விவரித்துள்ளேன்[6]. சென்ற தேர்தலுக்குப் பிறகு, திராவிட இயக்க நூற்றாண்டு துவக்க விழா நேரத்தில், கருணாநிதி ஜெயலலிதாவைத் தாக்குவது போல, பிரமணர்களின் மீது அவதூறாக, வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியது ஞாபகத்தில் கொள்ளலாம்[7]. பொய்களை வைத்து, தனக்கேயுரிய பேச்சை தமிழர்கள் நினைவு கொள்ள வேண்டும்[8].

 Jayalalitha running out of TN Assembly on March 25 1989.2

© வேதபிரகாஷ்

09-04-2016

[1] முஸ்லிம்கள் பணம் கொடுக்க வருவது, எதிர்-எதிராகத் தூண்டி விடுவது, முதலிய விவகாரங்கள் என்ன என்பதையும் ஊடகங்கள் விளக்கவில்லை.

[2] தமிழ்.ஒன்.இந்தியா, இது என் வாழ்நாள் குற்றம்: கருணாநிதி குறித்து ஜாதிரீதியான விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்ட வைகோ!, By: Karthikeyan, Updated: Thursday, April 7, 2016, 10:52 [IST].

[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-apology-the-speech-about-karunanidhi-250651.html

[4] திராவிட அரசியல் பாரம்பரியத்தில் இப்படி தலைவர்கள் பரஸ்பர வசைப்பாடல், திட்டுகள், தூஷணங்கள் முதலியவற்றில் ஈடுப்பட்டுள்ளது, ஈடுபட்டு வருவது, அவர்களுக்கேயுரிய நாகரிகத்தைக் காட்டுகிறது.

[5]  வேதனையுடன் ச. திருமலை – Wed Nov 05, 12:00:00 AM GMT+5:30;

http://www.badriseshadri.in/2008/11/blog-post_04.html

[6]https://dravidianatheism2.wordpress.com/2010/01/17/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/

[7] https://dravidianatheism2.wordpress.com/2012/03/07/karunanidhi-grinds-anti-brahmin-bogey-again/

[8] https://dravidianatheism2.wordpress.com/2012/02/24/564-karunanidhi-spewing-old-hypothesis-enjoying-his-leisure/

திராவிடத் தலைவர்களின் அநாகரிகமான திட்டுகள், ஆபாசமான நிந்தனைகள் மற்றும் மோசமான வசைப்பாடல்கள் ஏன்?

ஏப்ரல் 9, 2016

திராவிடத் தலைவர்களின் அநாகரிகமான திட்டுகள், ஆபாசமான நிந்தனைகள் மற்றும் மோசமான வசைப்பாடல்கள் ஏன்?

கருவை வணங்க்கும் வைகோகருணாதியை வைகோ ன்ன சொல்லி வசை பாடினார்?: தேமுதிக-வில் இருந்து அக்கட்சி நிர்வாகிகளும், எம்.எல்.ஏ களும் வெளியேறுவதற்கு காரணம் திமுக தான் என்று குற்றம் சாட்டிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்த செயலை செய்யும் திமுக, வேறு ஏதாவது ஒரு தொழிலை செய்யலாம், என்றும் அது எந்த தொழில் என்று நான் சொன்னால், என் மீது ஊடகங்கள் என்னை விமர்சிக்கும், அந்த தொழில் ஆதி காலத்தில் இருந்து இருக்கிறது. அந்த தொழிலுக்கு அரசு அனுமதி தர வேண்டும், என்றும் தற்போது வலியுறுத்தி வருகிறார்கள், அப்படிப்பட்ட தொழிலை கருணாநிதியும், தேமுதிக-வுக்கு எதிராக போர்கொடி உயர்த்தியுள்ள சந்திரகுமாரும் செய்யலாம், என்று பேசிய வைகோ, இறுதியில் கருணாநிதியின் குடும்ப தொழில் நாதஸ்வரம், அதைகூட அவர் செய்யலாம், என்று சொன்னார்[1].”கலைஞர் நல்லா ஊதுவார்” என்று முன்பு ஒருமுறை பேசினார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இப்போது வைகோவும் அதே பொருளில் பேசியுள்ளார். வேறு தொழில் செய்யலாமே என்று கேட்டுவிடலாம்………உலகம் பூராக பிரசித்தி பெற்ற ஆதிமனிதன் காலம் இருக்கிற / தொட்டு செய்து வந்த தொழில். அட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டு வருகிற்ர்ரகள். அந்த தொழிலை இவர் செய்யலாம். கலைஞரும் செய்யலம், இவங்களும் செய்யலாம்,…..என்றெல்லாம் வீடியோவில் பதிவாகியுள்ளது[2].

வைகோ, கரு, நாதஸ்வரம் 2016 வசைபாடல்கருணாநிதி குறித்து ஜாதி ரீதியாக அப்படி என்னதான் பேசினார் வைகோ[3]: தமிழ்.ஒன்.இந்தியா வைகோ பேசியதை இவ்வாறு வெளியிட்டுள்ளது, “தேமுதிகவின் சந்திரகுமார் செய்தது பச்சைதுரோகம்இதைவிட நீ பாலில் விஷத்தைக் கொடுத்துவிஜயகாந்துக்கு விஷத்தைக் கொடுத்திருக்கலாம்சோத்துல விஷத்தைப் போட்டிருக்கலாம்.. போடுவீங்க நீங்கஇந்த மாதிரி ஆளுகநாங்க நம்புறவனுக்காக தலையை கொடுப்போம்நம்புறவனுக்காக உயிரை கொடுப்போம்இந்த மாதிரியான கீழ்த்தரமான ஈனத்தனமான வேலை…. இதை ரொம்ப கடுமையான வார்த்தையில் சொல்லனும்னா வேற ஒரு தொழில் இருக்கு.. அந்த தொழிலை செய்யலாம்னு சொல்லலாம்எம் மேல ரொம்ப பிரியமான டிவிகள் 2,3 டிவி இங்கே இருக்குஅவங்க இதை எடுத்துப் போட்டு உலகம் பூராவும் என்னை டேமேஜ் பண்ணிடுவாங்கபயப்பட வேண்டியிருக்கு உங்களுக்குநான் இதைவிட இன்னொரு தொழில் பண்ணலாமேன்னு கேட்டுறலாம்..அது என்ன தொழில்னு சொல்றாங்க.. தறி நெசவா இருக்கும்உழுவதா இருக்கும்உழவு செய்யறதா இருக்கும்பிசினஸ் பண்றதா இருக்கும்வேற ஒரு தொழில்உலகம் பூராவும் பிரசித்தி பெற்று ஆதி மனிதன் காலத்தில் இருக்கிற ஒரு தொழில்அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பல பேர் கேட்டு கொண்டிருக்கிறார்கள்…. அந்த தொழிலை செய்யலாம் இவங்ககலைஞரும் செய்யலாம்.. இவங்களும் செய்யலாம்…. நாநான் ஒன்னும் தப்பா சொல்லலைங்கஅவரு நாதஸ்வரம் வாசிக்கக் கூடிய தொழிலும் தெரியும்அதனால சொன்னேன்ஒன்னும் இழிவா சொல்லலைஉலகத்தின் தலைசிறந்த இசை தமிழிசை. அதுக்குதான் உயர்வா சொல்றேன் அண்ணன் கலைஞரை….”,  இவ்வாறு வைகோ கூறியிருந்தார்[4].

February 26, 1973- CM. Karunanidhi presents the budget for the year 1973-74

February 26, 1973- CM. Karunanidhi presents the budget for the year 1973-74

உலகம் பூராவும் பிரசித்தி பெற்று ஆதி மனிதன் காலத்தில் இருக்கிற ஒரு தொழில்அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பல பேர் கேட்டு கொண்டிருக்கிறார்கள்….: “தொழில்” என்பது இங்கு குறிப்பிட்டுள்ளதை “நாதஸ்வரம் ஊதும் தொழில்” என்று மாற்றி விளக்கம் அளித்துள்ளது, ஊடகங்களில் ஏமாற்று வேலையே எனலாம். ஏனெனில்,

  1. நாதஸ்வரம் ஊதுவது, வைகோ சொன்னது போல, “உலகம் பூராவும் பிரசித்தி பெற்று ஆதி மனிதன் காலத்தில் இருக்கிற ஒரு தொழில்” அல்ல.
  2. அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பல பேர் கேட்டு கொண்டிருக்கிறார்கள்….” – அம்மாதிரி நாதஸ்வரம் ஊதுவதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பல பேர் கேட்டு கொண்டிருக்கிறார்கள்….என்பது அபத்தமானது.
  3. “அந்த தொழிலை செய்யலாம் இவங்ககலைஞரும் செய்யலாம்.. இவங்களும் செய்யலாம்…. நாநான் ஒன்னும் தப்பா சொல்லலைங்க…” – என்றது தேவதாசித் தொழிலை, விபச்சாரத்தைத் தான் குறிப்பிடுகிறார் என்பது தெரிகிறது. [இப்பொழுது அறிக்கையிலும் அதையே கூறியிருப்பது நோக்கத்தக்கது – “பணம் வாங்கிக் கொண்டு கட்சி மாறுவது இழிவானது என்று கூறியபோது, இது உலகத்தின் ஆதித்தொழிலைப் போன்றது என்று கூறினேன்.” பணத்தை வாங்கிக் கொண்டு ஆளை மாற்றுவது……அதுக்கும் பொருந்தும்]
  4. அவரு நாதஸ்வரம் வாசிக்கக் கூடிய தொழிலும் தெரியும்அதனால சொன்னேன்…” – அதாவது நக்கலாக சேர்த்து சொன்னது, அதாவது, அதுவும் தெரியும், இதுவும் தெரியும் என்கிறார்.
  5. “ஒன்னும் இழிவா சொல்லலைஉலகத்தின் தலைசிறந்த இசை தமிழிசை. அதுக்குதான் உயர்வா சொல்றேன் அண்ணன் கலைஞரை…” – பிறகு மாற்றி சமாளிக்கிறார்.
  6. “பச்சைதுரோகம்இதைவிட நீ பாலில் விஷத்தைக் கொடுத்துவிஜயகாந்துக்கு விஷத்தைக் கொடுத்திருக்கலாம்சோத்துல விஷத்தைப் போட்டிருக்கலாம்.. போடுவீங்க நீங்கஇந்த மாதிரி ஆளுக…” – என்று ஆரம்பித்து முடித்து வ்தத்தைக் கவனிக்கத்தக்கது.
  7. “நாங்க நம்புறவனுக்காக தலையை கொடுப்போம்நம்புறவனுக்காக உயிரை கொடுப்போம்…” – நம்பிக்கை துரோகம்.
  8. “இந்த மாதிரியான கீழ்த்தரமான ஈனத்தனமான வேலை….” – துரோகம், பச்சைதுரோகம், விஷம் கலப்பது என்று கடைசியாக விசயத்திற்கு வருவது.
  9. “இதை ரொம்ப கடுமையான வார்த்தையில் சொல்லனும்னா வேற ஒரு தொழில் இருக்கு.. அந்த தொழிலை செய்யலாம்னு சொல்லலாம்…”, – என்றுதான் முடித்திருக்கிறார்.
  10. பிறகு தான் சமாளிக்கும் வகையில், “அவரு நாதஸ்வரம் வாசிக்கக் கூடிய தொழிலும் தெரியும்அதனால சொன்னேன்ஒன்னும் இழிவா சொல்லலைஉலகத்தின் தலைசிறந்த இசை தமிழிசை. அதுக்குதான் உயர்வா சொல்றேன் அண்ணன் கலைஞரை…..” என்று முடித்திருக்கிறார்.

ஆகவே “ஜாதி”யைப் பற்றி சொன்னாரா, “குலத்தை”ப்பற்றி சொன்னாரா, “குலத்தொழிலை”ப்பற்றி சொன்னாரா என்பதை படித்தேத் தெரிந்து கொள்ளலாம்[5]. திராவிட கலாச்சாரத்தின் பேச்சுத் தொழில் இவ்வாறுதான் இருக்கிறது. 1960களில் இருந்தது, இப்பொழுதும் உள்ளது.

வைகோ, கரு, நாதஸ்வரம் 2016 கொடும்பாவி எரிப்புவைகோவுக்கு கிளம்பிய எதிர்ப்பு: தேர்தல் நேரத்தில், கட்சிகள் பிளவு பட்டு, கூட்டணிக் குழப்பங்களில் சிக்கியுள்ள நிலையில், எத்தலைவருக்கும், இத்தகைய உணர்ச்சிப்பூவமான பிரச்சினையை எதிர்கொள்ள விருப்பமில்லை. மேலும், தேர்தல் நேரத்தில் புகார்கள், வழக்குகள் என்று சிக்கிக்கொள்ள விருப்பமில்லை. இதையடுத்து, கருணாநிதியை தரக்குறைவாக பேசிய வைகோவுக்கு கண்டனம் தெரிவித்து, மு.க.அழகிரி ஆதரவாளர்கள், தமிழகம் முழுவதும் வைகோவின் உருவபொம்மையை எரித்தனர். ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஏன் எரிக்கவில்லை என்று ஊடகங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. தி.மு.க.வினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து[6] தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திரண்டு தி.மு.க.வினர் வைகோ உருவ பொம்மையை நூற்றுக்கும் மேலான இடங்களில் எரித்து அவருக்கு எதிராக கோஷம் எழுப்பிவருகின்றனர்[7]. பல அரசியல் தலைவர்கள் வைகோவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இவர்களின் மீது வழக்குப் பதிவு என்று தொடர்கிறது[8]. மக்கள் நலக் கூட்டணி  தலைவர்கள் சிலர் கூட, வைகோவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகைகளுக்கு பேட்டிக்கொடுத்தனர். இந்த நிலையில், தரக்குறைவான தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ள வைகோ, திமுக தலைவர் மு.கருணாநிதியும் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள மன்னிப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது[9]:

© வேதபிரகாஷ்

09-04-2016

[1] தமிழ்.சென்னை.ஆன்லைன், கருணாநிதியின் ஜாதி குறித்து விமர்சனம் : பகிரங்க மன்னிப்பு கேட்டார் வைகோ, Published On : Apr 07, 2016.

[2] https://www.youtube.com/watch?v=q56ZR4pXjqA;  https://youtu.be/cFlukvDae5c?t=7

[3] தமிழ்.ஒன்.இந்தியா, கருணாநிதி குறித்து ஜாதி ரீதியாக அப்படி என்னதான் பேசினார் வைகோ?, By: Mathi, Updated: Thursday, April 7, 2016, 10:53 [IST]

[4] Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-s-castiest-remark-on-karunanidhi-250668.html

[5] இவர்கள் தாம் அப்பொழுது, “ராஜாஜி குலத்தொழில் முறையை” ஆதரிக்கிறார் என்று எதிர்த்தவர்கள், அதனைக் கொச்சைப்படுத்திப் பேசியவர்கள், ராஜாஜியை வைது வசைப்பாடியவர்கள் என்பதனையும் ஞாபகத்தில் கொள்ளலாம்.

[6] http://www.maalaimalar.com/News/TopNews/2016/04/07114943/1003620/Vaiko-effigy-burning-in-TN-across.vpf

[7] மாலைமலர், தமிழகம் முழுவதும் 100 இடங்களில் வைகோ உருவபொம்மை எரிப்பு: தி.மு..வினர் 2–வது நாளாக போராட்டம், பதிவு: ஏப்ரல் 07, 2016 11:04

[8]http://www.dinamani.com/edition_vellore/thiruvannamalai/2016/04/09/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE/article3371170.ece

[9] http://tamil.chennaionline.com/news/chennai/newsitem.aspx?NEWSID=52c7f082-09dd-444f-aeb0-7794cd2058d2&CATEGORYNAME=TCHN

தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் நடந்த திருமணத்தில் தாலி கட்டப்படாமல், “ரெடிமேட் தாலி” ஏன் அணிவிக்கப்பட்டது?

செப்ரெம்பர் 10, 2013

தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் நடந்த திருமணத்தில் தாலி கட்டப்படாமல், “ரெடிமேட் தாலி”  ஏன் அணிவிக்கப்பட்டது?

முக்கியமான குறிப்பு: சீமான்-கயல்விழி திருமணம் அவர்களது சொந்த விவகாரம். அவர்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. அவர்கள் எப்பட் வேண்டுமானாலும், எங்கேயாவது, எந்தவிதத்திலும், திருமணம் செய்து கொள்ளலாம். அது அவ்ழர்களது தனிப்பட்ட விவகாரம். அதைப் பற்றி இங்கு விமர்சிக்கப் படவில்லை. “தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது”, என்று ஊடகங்கள் பறைச்சாற்றியுள்ளதால், தமிழகர்கள் உண்மை என்ன அறிந்தாக வேண்டிய நிலை உள்ளது.சீமான் போன்ற நாத்திகக்காரர்கள், பெரியார்-சுயமரியாதை முகமூடிகளை அணிந்து கொண்டு, இந்துக்களை மிக்கக் கடுமையாக விமர்சித்துள்ளாதாலும், தமிழர்களை அவர்களது உண்மையான கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் முதலியவற்றை அறியாமல் செய்து விட்டதாலும், சில உண்மைகளை சொல்ல வேண்டிய அவசியத்தில் கீழ்கண்ட கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன.
தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது!

தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது!

தமிழ் முறை மற்றும் எது சீர்திருத்த முறை எது: தமிழ்முறை மற்றும் எது சீர்திருத்தமுறை சீமான் – கயல்விழி திருமணம் தமிழ் ஆராய்ச்சியாளர்களை உசுப்பியுள்ளது எனலாம். ஏனெனில் சாதாரணமாக, ஒரு கல்யாணத்தில் என்ன நடக்கவேண்டுமே எல்லாமே நடந்தது. “தீ” தான் வளர்க்கப் படவில்லை. தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் நடந்த கல்யாணம் எனும்போது, எது தமிழ்முறை மற்றும் எது சீர்திருத்தமுறை என்ற கேள்விகள் எழுகின்றன. திராவிட இயக்கத்தின் படி, சுயமரியாதை திருமணங்கள் நடந்தன. ஆனால், அவையெல்லாம் செல்லுபடியாகாது என்ற நிலையும் ஏற்பட்டது. அண்ணாதுரை பதவிக்கு வந்ததும், இந்து திருமணச் சட்டத்தில் ஒரு பிரிவை சேர்த்துக் கொண்டு, திராவிடர்களின் சுயமரியாதையைக் காப்பாற்றினார்! அதாவது தங்களை “இந்துக்கள்” என்று ஒப்புக்கொண்டுதான் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.

தாலி கட்டுவதா, அணிவிப்பதா, தொங்கவிடுவதா - எது தமிழ்முறை,  சீர்திருத்த முறை  திருமணம்?

தாலி கட்டுவதா, அணிவிப்பதா, தொங்கவிடுவதா – எது தமிழ்முறை, சீர்திருத்த முறை திருமணம்?

பட்டுவேட்டி,  பட்டுசட்டை,  பட்டுசேலை முதலியன எந்த முறை?: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்– காளிமுத்துவின் மகள் கயல்விழி திருமணம் சென்னையில் 08-09-2013 அன்று காலையில் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடந்தது.  தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். சீமான் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து இருந்தார். மணப்பெண் கயல்விழி தங்கநிற பட்டு சேலை அணிந்து இருந்தார், என்று ஊடகங்கள் விவரித்தன. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வெளியிட்டப்பட்டன. தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது[1].  ஆனால், இவையெல்லாம் என்று விவரிக்கப்படவில்லை. இவற்றிற்கு பதிலாக கருப்புக் கலரில் உடைகள் அணிந்து கொண்டு புரட்சிகரமான இணையும் நிகழ்ச்சியை செய்திருக்கலாம். ராமருக்கே செருப்பு மாலைகள் போட்ட பகுத்தறிவாளிகள் என்பதனால், பூமாலைகளுக்குப் பதிலாக வேறெந்த மாலைகளை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், ஏன் செய்யவில்லை?

10.06க்குதாலிஅணிவித்தது: சீமான் பட்டு, வேட்டி சட்டை அணிந்து காலை 9.20 மணியளவில் மண மேடைக்கு வந்தார். கயல்விழி பொன்நிற பட்டு சேலை அணிந்து 9.45 மணியளவில் மண மேடைக்கு அழைத்து வரப்பட்டார். தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. அதன்பின் சீமானும்–கயல்விழியும் இணைந்து திருமணத்துக்கு வந்திருந்தவர்களை பார்த்து கை குப்பி வரவேற்றனர். சீமான்–கயல்விழி திருமணத்தை உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், காலை 10.05 மணிக்கு தமிழில் முதல் எழுத்தான ‘அ’ எழுத்து பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை சீமான் கையில் எடுத்து கொடுத்தார். பாவம் அப்பொழுது அவரைத் தாங்கலாக இருக்கச் செய்யவேண்டியதாயிற்று. அதை கயல்விழி கழுத்தில் சீமான் அணிவித்தார். அதைத் தொடர்ந்து சீமானும், கயல்விழி இருவரும் மாலை மாற்றிக்கொண்டார்கள். இதெல்லாம் எந்த முறை என்று தெரியவில்லை.

சுபமுகூர்த்த தினத்தில்,  சுபமங்கல நேரத்தில் ஏன்  “புரோசு மயக்கி”  தாலி கட்டி (இல்லை அணிவித்து), மேளதாளத்துடன் திருமணம் நடத்த வேண்டும்?: நாட்களை, மதங்களை, ஏன் ஆண்டுகளையே மாற்றி ஏன் இப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும்? 08-09-2013 மிக்கவும் சிறந்த சுபமுகூர்த்த நாள் என்பது தமிழகத்தில் உள்ள படிக்காதவனுக்குக் கூட நன்றாகத் தெரியும். அன்று பேருந்துகள், ரெயில்கள், மற்ற வண்டிகள் என்று எல்லாவற்றிலும் திருமணங்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். ஆகவே, சுபமுகூர்த்த தினத்தில், சுபமங்கல நேரத்தில் ஏன் “புரோசு மயக்கி” தாலிகட்டி, மேளதாளத்துடன் திருமணம் நடத்த வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது?

  • பெரியார் இப்படித்தான் திருமணம் செய்யவேண்டும் என்று வரையறைத்தாரா?
  • இனமானத் தலைவர் வீரமணி இப்படித்தான் திருமணம் நடத்தி வைக்கிறாரா?
  • முத்தமிழ் வித்தகர், முத்தாரக் கணவன் இப்படித்தான் மணமக்களை சேர்த்து வைக்கிறாரா?

ராகுகாலம் (காலை 4.30 – 6.00) இல்லை; எமகண்டம் (12.00 – 01.30) இல்லை; கரணன் (10.30ம் – 12.00) இல்லை – நல்ல சுபமுகூர்த்த நேரம் = 7.30 – 8.30, ஆனால், அதற்கு மேலும் 10.30 வரை மணப்பெண், மணமகன் நட்சத்திரத்தின் படி நடத்தலாம். சீமானின் ராசி தனுஸ் / தனுசு [Sagittarius], தொடர்புடைய நட்சத்திரங்கள் மூலம், பூராடம், உத்திராடம் (பாதம்-1). தனுசுக்குப் பொறுத்தமான பெண்ராசி – கடகம் என்றால், அது கயல்விழியுடையதா என்று பார்க்கவேண்டும். ஆகவே, கயல்விழியின் நட்சத்திரம் ஹஸ்தம் அல்லது சித்திரை என்றிருக்க வேண்டும். எந்த திராவிட சோதிடர், சுயமரியதை கணியன், அல்லது பகுத்தறிவு பார்ப்பனன் இந்த நேரத்தைக் கணித்துக் கொடுத்தான் என்று தெரியவில்லை.

தாலி கட்டுவதற்கும்,  அணிவிப்பதற்கும் என்ன வித்தியாசம்?: பொதுவாக தாலி கட்டும் போது, மூன்று முடிச்சுகள் போடுவது வழக்கம். ஆனால், தயாராக செய்து வைத்தத் தாலியை, ஏதோ நகையை அணிவிப்பது போல அணிவிப்பது எதில் சேர்த்தி என்று தெரியவில்லை. அதற்கு மேள வாத்தியங்கள் ஏன் முழங்க வேண்டும் என்று தெரியவில்லை. முன்பிருந்த பழக்க-வழக்கங்களை மாற்றவேண்டும் என்றால், புதியதாக மாற்று சடங்குகளை உருவாக்கி அறிமுகப்படுத்த வேண்டும். சுயமரியாதை திருமணங்கள் செல்லாது என்ரபோது, பகுத்தறிவுகள் கலங்கிவிட்டன. நீதிமன்றத் தீர்ப்புகளில் பொதுவாக திருமணங்களில் செய்யப்பட்டுவரும் சடங்குகள் ஏதாவது செய்யப்பட்டன என்று மெய்ப்பித்தால் தான் கணவன் -மனைவி தாம்பத்திய உறவு உரிமைகள் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டவுடன், திராவிடர்கள் 1962ற்குப் பிறகு ஒன்று-ஓன்றாக சேர்த்துக் கொண்டு விட்டனர். ஐயர், ஹோமம் இல்லாமல் மற்ற எல்லாவற்ரையும் சேர்த்துக் கொண்டுதான், இந்த நாத்திகவாதிகள், பெரியார் குஞ்சுகள், திராவிட வித்தகர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

பொய்யும்,  வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப: தொல்காப்பியர், “பொய்யும், வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப” என்று கூறியுள்ளார். அதாவது, களவு மற்றும் கற்பு நெறிகள் பின்பற்ரி வந்த காலத்தில், ஆண்கள் பொய் சொல்வது, இதனால் சமூகத்தில் வழுவு ஏற்படுதல் என்ற்றிருந்த நேரத்தில் ஐயர் / மேலோர் கரணங்களை, தாலிகட்டுவது போன்ற சடங்குமுறைகளை அறிமுகப்படுத்தினர். இவற்றை சங்ககால மக்களும் பின்பற்றி வந்தார்கள். சுமார் 2500 வருடங்களுக்குப் பிறகு தான், அதாவது அவர்கள் “திராவிடர்கள்” ஆனபிறகு, “சுயமரியாதை திருமணம்” என்று வேதமுறை ஒழித்து ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அவை செல்லாது என்றபோது, மறுபடியும் மந்திரங்கள், தீவளர்த்தல் இன்றி மற்றவை சேர்த்துக் கொள்ளப்பட்டன. அதனால்தான், தாலி நிலைத்தது. ஆக, பெரியார் ஐயரிடம் தோற்றுவிட்டார். இப்பொழுது, கருணாநிதி, வீரமணி, நெட்டுமாறன் போன்ற “ஐயர்கள்” கிளம்பியுள்ளார்கள். இவர்களைத்தான் நான் “திராவிட புரோகிதர்கள்” என்று குறிப்பிட்டுள்ளேன்.

பத்துப்பாட்டு — எட்டுத்தொகை சொல்லாதவை தமிழ் முறையா?: தமிழ் முதல் எழுத்தான “அ” பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை பழ.நெடுமாறன் எடுத்து கொடுக்க அதை சீமான் கயல்விழி கழுத்தில் அணிவித்தார்[2]. பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். சீமான் தாலி கட்டுவதற்கு முன் மேடையில் வைக்கப்பட்டு இருந்த பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பானுமதி அம்மாள், காளிமுத்து, மணிவண்ணன் ஆகியோர் படங்களுக்கு மாலை அணிவித்தார். அப்போது மணமக்களும், நாம் தமிழர் கட்சியினரும் ஈழப் போரில் உயிர் நீத்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உறுதி மொழி எடுத்து கொண்டனர். திருமண மேடையில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் அவரது மனைவி மதிவதனி ஆகியோர் திருமண கோலத்தில் இருக்கும் படம் பொறித்த பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டு இருந்தது. மேடையின் இடது புறத்தில் பெரியார் புகைப்படமும், வலது புறத்தில் திருவள்ளுவர் படமும் வைக்கப்பட்டு இருந்தது. சீமான் பிரபாகரனுடன் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் விழா அரங்கிலும், வெளியிலும் ஏராளமாக வைக்கப்பட்டு இருந்தன[3].

திராவிட்ட புரோகிதர்கள் நடத்தி வைத்துள்ள சில திருமணங்கள்:

மு. ரமேசு _ இ. சிவசங்கரி ஆகியோரது வாழ்க்கை இணைநல ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் உடன் உள்ளனர் (மதுரை, 31.1.2010).

ரா. சுதேஷ்பாபு _ ஸ்வீட்டி ஏஞ்சலின் பிளாரன்ஸ் ஆகியோரின் மண விழாவினை துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தி வைத்தார். தமிழர் தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர் (சென்னை, 1.02.2010).

© வேதபிரகாஷ்

10-09-2013