Archive for the ‘தேர்ந்தெடுப்புப் பாரபட்சம்’ Category

வடகிழக்கு மாநில லாட்டரி சீட்டுகள், தமிழகத்தில் விற்பனை, சட்டமீறல்கள்

மார்ச் 29, 2010

வடகிழக்கு மாநில லாட்டரி சீட்டுகள், தமிழகத்தில் விற்பனை, சட்டமீறல்கள்

வேதபிரகாஷ்

உலகத்திலேயே லாட்டரி சீட்டுகள் அதிகமாக விற்பது தமிழகத்தில் தான்: குடி, விபச்சாரம், போதைப் பொருள், திருட்டி விசிடி / டிவிடி, பொருட்கடத்தல் முதலியவற்றுடன் அமோகமாக நடக்கும் தொழில்தான் லாட்டரி. தமிழ் மக்களுக்கு இதன் மீது ஒரு அலாதியான காதல், ஊடல், கிரக்கம், மயக்கம்…எல்லாமே உண்டு. தமிழ், தமிழ் மக்கள், தமிழ்நாடு என்று “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’, என்ற மயக்கத்தில் இருந்தபோது, எல்லாருமே தமிழில் லாட்டரி டிக்கெட் அச்சடித்து, தமிழிலேயே பேசி, தமிழகத்தில் லாட்டரி விற்றது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். குடிக்கக் கூழ் இருந்தாலும், இல்லாவிட்டாலும், சாப்பிட சாப்பாடு இருந்தாலும், இல்லாவிட்டாலும், லாட்டரி வாங்குவது தமிழனது தலையாயக் கடமையாக இருந்தது. அலுவகங்களில் கூட்டு சேர்ந்து கட்டுக்கட்டாக லாட்டரி வாங்குவார்கள். அதாவது, பண்டிலாக வாங்கினால் ஒரு பரிசு நிச்சயம் என்ற பகுத்தறிவோடு வாங்கினார்கள். உடனே, லாட்டரி விற்பவர்கள் அந்த சோதிடத்தை நடைமுறைப் படுத்தினார்கள்! அதாவது ஒரு கட்டு – 100 சீட்டுகள் வாங்கினால் ஒரு பரிசு நிச்சயம், என்றதும் ஆயிரக்கணக்கான வாங்க ஆரம்பித்தார்கள்!

“மார்டின் நிகழ்வு” (Martin phenomenon): அந்நிலையில் லாட்டரி சீட்டு விற்றே மில்லியனரான சாண்டியகோ மார்டின் சென்னையில்தான் உண்டு[1]. கே.ஏ.எஸ். ராமதாஸையும் மறந்திருக்க முடியாது. “மார்டின் நிகழ்வு” (Martin phenomenon) என்பது நிச்சயமாக ஒரு அதிசயமானதுதான். ஆகையால்தான் உதாரணத்திற்காக அது எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது மட்டுமல்லாமல், அதைச் சுற்றி மற்ற விஷயங்களும் வருகின்றன. மார்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒரு பெரிய தாதா, இல்லை அதற்கும் மேலே. இந்திய ஜனாதிபதி-பிரதம மந்திரிக்குக் கூடக் கிடைக்காத மரியாதை மார்ட்டினுக்குத் தான் கிடைக்கும். அதே போல தமிழகத்திலும் மரியாதை, அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு. கருணாநிதி ஆட்சியின் ஆரம்பத்தில் மார்ட்டினை விசாரிக்கும் படலம் ஆரம்பித்தது[2]. வரி ஏய்ப்பிலும் மார்டினின் கம்பெனிகள் சம்பந்தப் பட்டுள்ளன[3]. பர்மாவிலிருந்து வந்த மார்டின் சட்டத்திற்கு புரம்பாக லாட்டரி சீட்டு விற்பனை நடத்தி சம்பாதித்துள்ளது ரூ. 7200 கோடிகளாம்! இரண்டு  முறை சட்டரீதியில் நடவடிக்கை எடுத்தும், குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப் பட்டும் சுதந்திரமாக திரிந்து வருவதுதான் மார்டினின் திறமை. அது மட்டுமல்லாது, FICCI எனப்படுகின்ற இந்தியாவின் பிரதம வியாபார நிறுவனத்தின் அங்கமான அனைத்திந்திய லாட்டரி வியாபார மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்துறை கூட்டமைப்பு (All India Federation of Lottery Trade and Allied Industry) என்பதில் அபரீதமான பங்கு வகிப்பதும் தெரிந்த விஷயமே[4].

மார்டின், திமுக, செம்மொழி, வியாபாரம்: சாண்டியாகோ மார்டின் கடந்த டிசம்பர் மாதம் 2009 சென்னைக்கு வந்தபோது, செம்மொழி மாநாடு சம்பந்தமான கூட்டத்தில் பங்கு கொண்டதாகத் தெரிகிறது. செம்மொழி மாநாடு ஒரு “ஹை-டெக்” வியாபாரமாகி விட்டதால், மார்டினையும் சம்பந்தப் படுத்த திமுக விரும்புகிறது. இவ்வாறு மார்டினின் திமுக மற்றும் காங்கிரஸின் தொடர்பும்[5] பக கதைகளைச் சொல்கின்றன[6]. ஒரு நிலையில் இக்கட்சிகள் மார்டினை லோக் / ராஜ்ய சபாவிற்கு தேந்தெடுக்கவும் பரிந்துரைத்தன[7]. அதுமட்டுமல்லாது, “சாஃப்ட்-வேர் நிபுணர்கள்” பலர் பிரத்யேகமாக வேலைக்கு அமர்த்தப் பட்டு[8], தனது சாம்ராஜ்யத்தை நடத்துகிறதும் மார்டினுடைய கம்பெனிகள் மூலம் அறியலாம்[9]. லைபிரிய நாட்டின் கௌரவ கவுன்சிலராக இருப்பதும் மார்டிந்தான்! பூடான் நாட்டு அரசு[10] லாட்டரி விற்கும் உரிமையே மார்டினுக்குத் தான் கொடுத்துள்ளது! மார்டினே சொல்வது என்னவென்றால், பூடான் லாட்டரி அதிக அளவில் விற்பது மேற்கு வங்காளம் மற்றும் கேரளாதான் என்ற விஷயம். அதாவது கம்யூனிஸ சித்தாந்தத்தில் ஊறிய மக்கள், அதிகமான படித்துள்ளவர் கொண்ட மாநிலங்கள், என்றெல்லாம் உள்ளவர்கள் தாம் எனும்போது உண்மையே உன் நிலை என்ன என்றுதான் கேட்கவேண்டியதுள்ளது!

தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்டதே இந்த ஊழலை ஊக்குவிப்பதற்கே: தமிழகத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டது, ஏதோ புண்ணியமான காரியம் என்று நினைத்துக் கொள்ளவேண்டாம். அதுதான் தமிழக அரசியல்வாதிகளின் முதல் சம்பந்தமே. எப்படி விபச்சாரம் தடைசெய்யப் பட்டுள்ளதோ அதுபோல! இன்றைக்கு தினம்-தினம் தமிழகத்தில் என்ன நுழைகின்றன என்று பார்த்தால் – விபச்சாரிகள், போலி மருந்து, போதை மருந்து, லாட்டரி, ஆயுதங்கள், தீவிரவாதிகள்……………..முதலியவைதாம்! இது நிச்சயமாக இங்குள்ளவர்களின் சம்பந்தத்தை எடுத்துக் காட்டுகிறது. கீழ் காணும் செய்திகள் தினமலர் இணைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. இது மாதிரி ஆயிரக் கணக்கான செய்திகள் உள்ளன. அவற்றை கவனமாகப் படிக்கும்போது, லாட்டரி சீட்டு வியாபாரம், அதிலும் தடை செய்யப் பட்ட பிறகும் தமிழகத்தில் நடப்பது, ஒன்றும் ஆச்சரியப்படக்கூடிய விஷயமாகத் தெரியவில்லை. சினிமா, தொழிற்துறை, …………………மற்றவர்கள் இதில் ஈடுபட்டிருப்பது, அரசியல்வாதிகள், போலீஸார், மற்ற துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு……………..முதலியன தாராளமாகவே தெரிகின்றன[11].

பெங்களூர் படும் பாடு: இத்தகைய கலப்பட அரசியல், மசாலா-குற்றங்கள், தடை செய்யப் பட்ட வியாபாரங்கள், ஜிஹாதி-தீவிரவாதம், கிருத்துவ அடிப்படைவாதம், போக்குவரத்துகள் முதலியவற்றில் பெங்களூர் சிக்கி பரிதவிப்பது கண்கூடாக உள்ளது. முன்பு ஃபிளின் ஆஸ்திரேலிய கடத்தல்வாதியும் இங்குதான் புராதனமான நாணயங்கள், பொருட்கள் வாங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளான். கருணாநிதி பெங்களூர் சென்று தங்குவதும், கிருஷ்ணா[12] இங்கு வருவதும், இருவருக்கும் லாட்டரி அதிபர்களுக்கு இடையேயுள்ள பந்தம், பிணைப்பு, இணைப்பு முதலியனவும் நோக்கத்தக்கதே[13]. ஆன்-லைன் லாட்டரி, அதற்கு சம்மந்தப் பட்டுள்ள அரசியல்வாதிகள், மென்பொருள் நிபுணர்கள்[14], ஊடகங்கள் அளிக்கும் விளம்பர செய்திகள் முதலியனவும் இதில் உள்ளன[15]. நீதிபதி தினகரன் சமாசாரமும் அங்குதான் உள்ளது. எல்லைகளைத் தாண்டிய திராவிட தீவிரவாதமும் அங்குதான் செயல்பட்டது. நக்கீரனின் போக்குவரத்தும் அங்குதான் உள்ளது. சம்பந்தப் பட்டுள்ள கே. பி. என். டிராவல்ஸ் வண்டிகளும் இங்கிருந்துதான் சேலம் கோயம்புத்தூர் முதலிய ஊர்களுக்கு தினமும் சென்று வருகின்றன. இதற்கும் திமுகவிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பும் தெரிந்ததே. யார்-யார்கூட வேண்டுமானாலும் தொடர்பு வைத்துக் கொள்ளட்டும், என்ன வியாபாரம்-தொழில் வேண்டுமானலும் செய்யட்டும். அது அவர்களது சொந்த விஷயம். ஆனால் மக்கள் பாதிக்கப் படும்போது, பொது பிரச்சினையாகிறது. இந்நிலையில் தமிழக மக்களை மட்டுமல்லாது, இந்திய மக்களையும் யார் காப்பாற்றப் போகிறார்கள்?

லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் : துணை நடிகர் உட்பட இருவர் கைது[16] (28-03-2010): சென்னை, பூந்தமல்லி அருகே, திருட்டுத்தனமாக வெளிமாநில லாட்டரி சீட்டுக்களை விற்று வந்த பிரபல லாட்டரி வியாபாரியும், அவருக்கு உடந்தையாக இருந்த துணை நடிகரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  பட்டாபிராமைச் சேர்ந்தவர் சுரேஷ் (எ) பூவை ராஜா(32). தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கள் தடை செய்வதற்கு முன், பூந்தமல்லியில் பிரபல லாட்டரி வியாபாரியாக இருந்தார். பின், வெளிமாநில லாட்டரி சீட்டுக்களை வாங்கி வந்து, திருட்டுத்தனமாக விற்பனை செய்தார். இது தொடர்பாக அவர் பலமுறை கைதானார். போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்ததால், கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், பூந்தமல்லி அருகே பூவை ராஜா பதுங்கியிருப்பதாகவும், திருட்டுத்தனமாக வெளிமாநில லாட்டரி சீட்டுக்களை விற்று வருவதாகவும் தகவல் கிடைத்தது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

ரியல் எஸ்டேட், சினிமா, லாட்டரி சீட்டு – தொடர்பு: பூந்தமல்லி, கிழக்கு மாடவீதியில், ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் மகேஷ்ராஜா (38) என்பவரின் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். பூவை ராஜா, மகேஷ்ராஜா இருவரையும் கைது செய்தனர். அங்கிருந்த 10 லட்சம் ரூபாய் லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், திருட்டுத்தனமாக லாட்டரி டிக்கெட்டுகள் விற்க உடந்தையாக இருந்த மகேஷ்ராஜா, காதலுக்கு தலைவணங்கு என்ற படத்தில் கதாநாயகனின் நண்பராக நடித்து வரும் துணை நடிகர் என்பது தெரிய வந்தது. புதுப்பட “டிவிடி’க்கள் பறிமுதல்: அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அங்குள்ள அத்திப்பட்டு, பாலம் அருகே புதுப்பட “டிவிடி’க்களை விற்பனை செய்து கொண்டிருந்த முகப்பேரைச் சேர்ந்த சிஜூ (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

குன்னூரில் ரூ. 19 கோடி மதிப்புள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல்[17] (26-03-2010): Last Updated :

குன்னூர், மார்ச் 26- குன்னூரில் ரூ. 19 கோடி மதிப்புள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுகள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன. குன்னூரில் இன்று போலீஸôர் நடத்திய வாகன சோதனையின்போது ஒரு லாரியில் இந்த லாட்டரி சீட்டுகள் மொத்தம் 197 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட லாரி கேரள மாநிலத்திலிருந்து ஆந்திராவுக்கு செல்லும் வழியில் குன்னூரில் பிடிபட்டுள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அனுப்பி பெரும் மோசடி[18]: லாட்டரியுடன் துப்பாக்கியும் அனுப்பிய நபர் கைது (25-02-2010): தமிழகத்தில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிச் சீட்டுகளை, பார்சல் சர்வீஸ் மூலம் தமிழகம் முழுவதும் அனுப்பிய நபரை போலீசார் கைது செய்தனர். ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான லாட்டரிச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட நபர் இரண்டு மாதங்களில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான லாட்டரிச் சீட்டுகளை தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் இதே போல அனுப்பியுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் விசாரணையில் வெளியாகியுள்ளது. சென்னையிலிருந்து அருப்புக்கோட்டைக்கு, கே.பி.என்., டிராவல்ஸ் பார்சல் சர்வீஸ் வேனில், பார்சல் மூலம் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அருப்புக்கோட்டை, டிராவல்ஸ் அலுவலகத்தை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். நேற்று முன்தினம் காலை 11:30 மணிக்கு, இரண்டு பேர் சென்னையிலிருந்து வந்த பார்சலை வாங்க வந்தபோது, போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்கள் வாங்கிய பார்சலை சோதனை செய்தபோது, பட்டுச் சேலைகளுக்கு நடுவே இரண்டு 9 எம்.எம்., ரக கைத்துப்பாக்கிகள்,  27 தோட்டாக்கள் இருந்தன. இத்துப்பாக்கி பார்சலை வாங்க வந்த விருதுநகர் வாகைக்குளத்தைச் சேர்ந்த மணிகண்டன், பண்ணை மூன்றடைப்பைச் சேர்ந்த செல்வராஜ் ஆகிய இருவர் பிடிபட்டனர் .  எம்.ரெட்டியப்பட்டியைச் சேர்ந்த குமார் என்பவர் பார்சலை வாங்கி வருமாறு தங்களை அனுப்பியதாக இருவரும்  தெரிவித்தனர். இதையடுத்து, குமாரையும் போலீசார் கைது செய்தனர்.

கே.பி.என்., டிராவல்ஸ் அலுவலகம் சோதனை (22-02-2010): சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள கே.பி.என்., டிராவல்ஸ் அலுவலகம் மூலம் கடந்த 22ம் தேதி, சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் என்ற பெயரில், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மீனா என்பவருக்கு அனுப்பியது தெரிந்தது. சுரேஷ் என்ற பெயரில் ஏற்கனவே சில பார்சல்கள் அனுப்பப்பட்டிருப்பதாகவும், தற்போது மீண்டும் ஒரு பார்சல் சிந்தாதிரிப்பேட்டை கே.பி.என்., அலுவலகத்தில் வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, சுரேஷ் பெயரில் வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக 19 பெரிய பார்சல்கள் இருந்தது தெரிந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றி சோதனையிட்டபோது சேலம், நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், கரூர், திருப்பத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சி, ஒட்டன்சத்திரம் ஆகிய ஊர்களுக்கு அனுப்புவதற்காக 43 சிறிய பார்சல்களில் நாகாலாந்து மாநில லாட்டரிச் சீட்டுகள் இருந்தது தெரிந்தது. இவற்றின் மதிப்பு ஆறு கோடி ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

விமானத்தின் மூலம் கடத்தல்: விஜய் கிளியரிங் ஏஜன்சி மூலம் அனுப்பப்பட்ட பார்சல் புக்கிங் ரசீதில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டபோது, அது போலி என தெரிந்தது. பழைய ரசீதுகளை ஆய்வு செய்தபோது, மற்றொரு மொபைல் எண் சிக்கியது. இதன்மூலம், சுரேஷ் என்ற பெயரில் பார்சலை அனுப்பிய ஏழு கிணறு தாயப்பன்முதலி தெருவைச் சேர்ந்த கோபியை (44) போலீசார் கைது செய்தனர். லாட்டரி பார்சல்களை அனுப்ப கோபிக்கு, கிலோவிற்கு ஐந்து ரூபாய் கமிஷனாக வழங்கப்பட்டது. கோல்கட்டாவைச் சேர்ந்த அல்மா என்டர்பிரைசஸ் நிறுவனம் மூலம் அமிதாப், வசந்தகுமார் ஆகிய இருவர் விமானம் மூலம் லாட்டரிச் சீட்டுகளை அனுப்புவதாகவும், அவர்களது அறிவுரையின் பேரில் தமிழகத்தில் பல ஊர்களுக்கு அவற்றை பிரித்து அனுப்பி வந்ததாகவும் கோபி ஒப்புக் கொண்டார். மூன்று நாட்களுக்கு முன், சேலைகளுக்கு நடுவே மறைத்து வைத்து இரு கைத்துப்பாக்கிகளை பார்சலில் அனுப்பியதையும் கோபி ஒப்புக் கொண்டார். கோபிக்கு துப்பாக்கி மற்றும் வெளிமாநில லாட்டரிகளை விமானம் மூலம் அனுப்பிய நபர்கள் குறித்து விசாரணை நடத்த தனிப்படை போலீசார் கோல்கட்டா விரைகின்றனர். கைத்துப்பாக்கிகள் மேற்கு வங்கத்தில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டவை என தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இதற்கு முன் கோபி மூலமாக எத்தனை பேர், என்னென்ன ஆயுதங்களை வாங்கியுள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரிக்கவுள்ளனர்.

தடையையும் மீறி நடக்கும் அமோகமான வியாபாரம்: லாட்டரிச் சீட்டில் பணம் இழந்ததால் பல குடும்பங்கள் அவதிப்பட்டதையடுத்து, தமிழக அரசு லாட்டரிச் சீட்டு விற்பனையை தடை செய்தது. வெளிமாநிலங்களில் அச்சிடப்பட்டு லாட்டரிச் சீட்டுகளையும் தமிழகத்தில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் வெளிமாநில லாட்டரிச் சீட்டுகளை விற்பனை கனஜோராக நடந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. போலீசாரால் கைது செய்யப்பட்ட கோபி, கடந்த இரண்டு மாதங்களாக கோல்கட்டாவிலிருந்து வந்த வெளிமாநில லாட்டரிச் சீட்டுகளை பார்சல் மூலம் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வந்துள்ளார்.  இதனால், கடந்த இரு மாதங்களில் (டிசம்பர் 2009, ஜனவரி 2010) மட்டும் கோபி, 100 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிமாநில லாட்டரிச் சீட்டுகளை பார்சல் சர்வீஸ் மூலம் தமிழகம் முழுவதும் அனுப்பி வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மதுரை ரவுடிகளுடன் சம்பந்தம் – சி.பி.சி..டி.,க்கு மாற்றம்?: அரசின் தடையையும் மீறி தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெளிமாநில லாட்டரி விற்பனை தடையின்றி நடந்துள்ளது. வெளிமாநில லாட்டரிகள் எங்கிருந்து வருகின்றன; தமிழகத்தில் வெளிமாநில லாட்டரி விற்பனையில் ஈடுபடுவது யார்; இவ்வளவு நாட்களாக லாட்டரி விற்பனை வெளியே தெரியாமல் இருந்தது எப்படி என்ற கோணங்களில் விசாரணை நடக்கவுள்ளது. அருப்புக்கோட்டைக்கு பார்சலில் அனுப்பப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகள், மதுரையைச் சேர்ந்த ரவுடி ஒருவருக்கும், அவரது மைத்துனருக்கும் அனுப்பப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், தமிழகத்தில் சட்டவிரோத துப்பாக்கி கடத்தல்[19] குறித்தும் தீவிர விசாரணை நடக்கவுள்ளது. அருப்புக்கோட்டையில் பார்சல் மூலம் அனுப்பப்பட்ட கைத்துப்பாக்கிகள் குறித்து அரசு மற்றும் போலீஸ் உயர்அதிகாரிகள் ஏற்கனவே ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

டீராவல்ஸ், பார்சல், கூரியர் – தொடர்பு: டிராவல்ஸ் பார்சல்களை கண்காணிக்க போலீஸ் திட்டம்: ரயில், பஸ்சில் சட்ட விரோத பொருட்களை கடத்தினால், எளிதில் போலீசாரிடம் சிக்க வாய்ப்புள்ளது. டிராவல்ஸ் நிறுவன பார்சல்கள் மற்றும் கூரியர்கள் மூலம்  துப்பாக்கி, போதைப் பொருட்கள், கடத்தல் பொருட்கள், வெடிமருந்துகள், வெளிமாநில லாட்டரிகள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை எடுத்துச் செல்லும்போது, போலீசாரின் பிடியிலிருந்து எளிதில் தப்ப முடியும். டிராவல்ஸ் மற்றும் கூரியர் நிறுவனங்களும் பார்சல்களில் என்ன உள்ளது என்பதை பல சமயங்களில் சோதிப்பதில்லை.  இதனால், பார்சல் மற்றும் கூரியர்களை கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் ஷகீல் அக்தர் நிருபர்களிடம் கூறும்போது, “”பார்சல்கள், கூரியர்கள் மூலம் துப்பாக்கி, வெடிமருந்து உட்பட சட்டத்திற்கு புறம்பான பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க திட்டம் வகுக்கப்படவுள்ளது. விரைவில் உயர் அதிகாரிகள் கலந்து பேசி, பார்சல்களை கண்காணிப்பதற்கான நடைமுறைகள் வகுக்கப்படும். அந்நடைமுறைகள் பார்சல் மற்றும் கூரியர் நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்படும்,” என்றார். இப்படி ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக சட்டம் இருக்கிறதா, இல்லையா என்று போலீஸாரே ஆராய்ச்சி செய்வது, அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது முதலியன குற்றாவாளிகளுக்கு ஆலோசனை சொல்வது போல இருக்கிறது!

சூடு பறக்கும் லாட்டரி சீட்டு விற்பனை :கண்டும் காணாத போலீசார்[20]: சேலம் மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை, அமோகமாக நடக்கிறது. சேலம் மாவட்டத்தில், நாகாலாந்து, சிக்கிம், கேரளா உள்ளிட்ட வெளிமாநில லாட்டரி விற்பனை, சக்கை போடு போடுகிறது.வெளிமாநிலங்களில் இருந்து லாட்டரி சீட்டுகள் மொத்தமாக சேலம் கொண்டு வரப்பட்டு, பஸ், கார், டூவீலர் மூலம் ஏரியா வாரியாக மாவட்டம் முழுவதும் அனுப்பப்படுகிறது. பகுதி வாரியாக இருக்கும் மொத்த லாட்டரி வியாபாரிகள், தங்களுக்கு கீழ் சில்லரை வியாபாரிகள் மூலம் பல லட்சம் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்கின்றனர்.பத்து சேம் பார்ச்சூன், 12 சேம் சிங்கம், 20 சேம் குயில், 30 சேம் ரோசா, 50 சேம் டீர், 100 சேம் நல்லநேரம், 200 சேம் குமரன், 300 சேம் டயம் லட்சுமி, 400 சேம் மணி லட்சுமி, 500 சேம் உள்ளிட்ட பெயரில், லாட்டரி சீட்டு விற்பனை கொடி கட்டி பறக்கிறது.  பில், போனஸ் உடன் விற்கப்படும் 100 லாட்டரி சீட்டு 90 ரூபாய்க்கும், பில் மற்றும் போனஸ் இன்றி “கட்டிங்’ லாட்டரி 100 டிக்கெட் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நகாலாந்து லாட்டரி மாலையிலே குலுக்கல்: லாட்டரி சீட்டுகள் நாள்தோறும் மாலை 3 மணிக்கு குலுக்கல் நடத்தப்பட்டு, அதன் முடிவு அடங்கிய பட்டியல் மாலை 6 மணிக்கு பேக்ஸ் மூலம் எல்லா வியாபாரிகளுக்கும் அனுப்பப்படுகிறது. இது வரை, மாலை 3 மணிக்கு குலுக்கல் நடக்கும் லாட்டரி சீட்டுகள் மட்டும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது, மாலை 7 மணிக்கு குலுக்கல் நடக்கும் லாட்டரி சீட்டுகளும் வெளியிடப்பட்டுள்ளது. நாகாலாந்து மாநிலத்தில் இருந்து வெளிவரும் 3 மணி குலுக்கல் லாட்டரி சீட்டு போலவே ஈவ்னிங் 7 மணி குலுக்கல் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. பத்து சேம் முதல் 200 சேம் வரையில் ஈவ்னிங் 7 மணி குலுக்கல் லாட்டரி பிப்., 15ம் தேதி முதல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.இதனால், அப்பாவி ஏழைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். உள்ளுர் போலீசார், ஆளுங்கட்சியினரை லாட்டரி அதிபர்கள் கவனிப்பதால், அவர்கள் கண்டுகொள்வதில்லை.போலீசார் மாமூலுக்கு ஆசைப்பட்டு, லாட்டரி விற்பனையை கண்டுகொள்வதில்லை. குறிப்பாக, சேலம் புறநகர் மாவட்டத்தில் கொண்டலாம்பட்டி, ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து தான், மாவட்டம் முழுவதற்கும், மாநகர பகுதிக்கு லாட்டரி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2 கோடி ரூபாய்க்கு லாட்டரி சீட்டுக்கள் திருச்சி ரயில் நிலையத்தில் சிக்கின[21]:  ரயில் மூலம் திருச்சிக்குக் கடத்திவரப்பட்ட இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான, தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுக்களைப் பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், இதுதொடர்பாக வியாபாரிகள் மூவரைக் கைது செய்தனர். ஈரோட்டிலிருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் வந்த பாசஞ்சர் ரயிலில் சாக்குமூட்டையில் இருந்த சரக்குகளை ரயில்வே ஊழியர்கள் இறக்கினர். அப்போது சிலவற்றில் இருந்த லாட்டரிச் சீட்டுக்கள் கீழே கொட்டின. இதுகுறித்து ஆர்.பி.எப்., போலீசுக்குத் தகவல் கிடைத்தது. போலீசார், ரயிலில் இருந்து இறக்கப்பட்ட 28 மூட்டையைப் பிரித்துப் பார்த்ததில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான, தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிச் சீட்டுக்கள் இருந்தது தெரியவந்தது. இந்த லாட்டரிச் சீட்டுக்கள் அனைத்தும் திருச்சி ரயில்வே போலீசாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.

வடகிழக்கு இந்தியா-தமிழகத்திற்கு உள்ள தொடர்பு: ரயிலில் வந்த லாட்டரிச் சீட்டுக்களை எடுப்பதற்காக வந்த ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த செல்வம், அருணாச்சலம் ஆகிய இருவரையும் மடக்கிய போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆர்.கே.பாண்டே என்பவர் கோல்கட்டாவில் இருந்து ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருச்சி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த லாட்டரி வியாபாரிகளுக்கு அனுப்பியதாகக் கூறினர். இவர்கள் கொடுத்த தகவலின்படி, ரயில் மூலம் லாட்டரிச் சீட்டுக்களைக் கடத்த உதவியதாக சென்னையைச் சேர்ந்த கோபி என்ற வியாபாரி கைது செய்யப்பட்டார். லாட்டரிச் சீட்டுக்கள் கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என, திருச்சி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். ரயில் மூலம் அடிக்கடி திருச்சிக்கு, தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுக்கள், பார்சல் போர்வையில் நீண்டகாலமாகக் கடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது தான் முதன்முறையாகப் போலீசிடம் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சேலத்தில் வெளிநாட்டு லாட்டரி சீட்டு விற்ற 53 பேர் கைது[22]: லாட்டரி சீட்டு விற்ற 53 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில், லாட்டரி சீட்டு விற்பனை கனஜோராக நடப்பதாக, போலீசுக்கு புகார்கள் வந்தன. போலீஸ் துணை கமிஷனர் ஜான் நிக்கல்சன் தலைமையில், போலீசார் திடீர் சோதனை நடத்தினர். 20 ஆயிரம் வெளிமாநில லாட்டரி சீட்டுக்கள், 49 ஆயிரத்து 880 ரூபாய், 23 மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. குபேரன் என்பவருக்கு சொந்தமான கடையில் 4,875 லாட்டரி சீட்டுக்கள், 31 ஆயிரத்து 885 ரூபாய் ரொக்க பணம், ஏழு மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டன. குபேரன் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் அனைத்தும் அருணாசல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. சீட்டுகளை சேலம் வியாபாரிகள் பெங்களூரு, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து வாங்கி வந்து, சேலத்தில் விற்பனை செய்வதும் விசாரணையில் தெரிய வந்தது.

லாட்டரி சீட்டு விற்றால் குண்டர் சட்டம்: ராமதாஸ்[23]: “தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுக்களை விற்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்’ என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க., நிறுவனத் தலைவர் ராமதாஸ் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. லாட்டரி சீட்டை பயந்து விற்கும் காலம் போய் பகிரங்கமாய் விற்கிறார்கள். வெளிமாநில லாட்டரி சீட்டுகள் இங்கு போலியாக அச்சடித்து விற்கப்படுகிறது. சில இடங்களில் போலீசாரின் துணையுடனும், பல இடங்களில் அரசியல்வாதிகள் துணையுடனும் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகின்றன. லாட்டரி சீட்டு விற்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அதே போல், பள்ளி, கல்லூரி அருகில் கஞ்சா விற்பனையும் நடந்து வருகிறது. இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.

வேதபிரகாஷ்

29-03-2010


[1] SS-TV, SS-Lottery, Sur-Sangeet, etc., are owned by Santiago Martin. The ultra-modern offices at Chennai have been attraction to everybody, as everyday sleezy girls used come, while away time outside, before and after attending duty. Many sigh heavily when such girls go away in bikes with boys, who either used to come there to pick-up or come-and-go-together!

[2] டெலிவிஷன்–பாயின்ட், SS Music’s Santiago Martin in trouble over lottery business, http://www.televisionpoint.com/news2007/newsfullstory.php?id=1192264947

[3] In a very recent decision in Union of India Vs. Martin Lottery Agencies Ltd. (2009-VIL-01-SC-ST), the Supreme Court had occasion to deal with some fundamental principles relating to taxation of services.

http://www.business-standard.com/india/news/service-taxsalelottery-tickets/357677/

[4] http://www.tehelka.com/story_main43.asp?filename=Ne130210the_trader.asp

[5] Amongst those who welcomed the Chief Minister’s offer was, rather surprisingly, Subhash Chandra, the chairman of the Zee group. Ultra Entertainment Solutions Pvt. Ltd, a Zee group company, was awarded the licence in August 2002 by the State government to act as its agent in the online lottery business after an open tendering process.

[6] Last December, he visited Chennai to attend a meeting convened by the ruling DMK, which wanted him to be in the reception committee of World Tamil Conference scheduled for August. “It was one more attempt to gain acceptance among the political circles in the south,” a top DMK source told TEHELKA, adding: “Martin also has a direct connect with an influential Congress leader based in the national capital.

http://www.tehelka.com/story_main43.asp?filename=Ne130210the_trader.asp

[7] பிணராயி விஜயன் மார்டின் பெயரைப் பரிந்துரைத்தாகத் தெரிகிறது. P. Jayarajan prominent leader of the ruling CPI(M) general manager of Deshabhimani has reiterated the charges he made in the Kerala Assembly against the widely respected newspapersays sensationalism is the hallmark of yellow journalism and Mathrubhumi, by reporting that Deshabhimani has taken Rs 2 crores from a tainted lottery king Santiago Martin in the form of bonds, has invited the charges against it.

[8] Ramu Annamalai Ramasamy, Usman Fayaz

[9] Inlott Technologies Private Limited, InLott E Gaming Services Limited,

[10] Economic Times, Bhutan appoints Indian distributor for its paper lottery, 9 Dec 2007, 0830 hrs IST, PTI

http://economictimes.indiatimes.com/news/economy/foreign-trade/Bhutan-appoints-Indian-distributor-for-its-paper-lottery/articleshow/2608014.cms\

[11] Parvati Menon, The Lure f e-lottetry, fr more details, see here;

http://www.hinduonnet.com/fline/fl2023/stories/20031121001405000.htm

[12] The times of India News service, Other states copy Karnataka, join e-lottery race, Jul 31, 2001, 11.22pm IST

http://timesofindia.indiatimes.com/city/bangalore/Other-states-copy-Karnataka-join-e-lottery-race/articleshow/683183603.cms

[13]Writ against Nagaland’s Inlott lottery; 7 Oct, 2003, 2110 hrs IST,TNN;

Chief Justice N K Jain and Justice V G Sabahit of the Karnataka High Court on Tuesday issued notices to the Union and state governmen ts, Director of Lotteries among others following a petition filed by a city advocate seeking a ban on the sale and distribution of “Inlott lottery” tickets and prohibit the said lottery being run by the Nagaland government. S Umesh, in the petition contended that the Nagaland government had started Inlott lottery which is being run by Inlott Technology, Chennai. The tickets were being distributed and sold by three private traders. The lottery was unauthorised and illegal but the state government had not taken any action against it, the petitioner contended.

http://archives.infotech.indiatimes.com/articleshow/220372.cms

[14] D. S. Mathumathi, e-lottery bug bites top coporates, for more details, see here:

http://www.thehindubusinessline.com/2003/04/02/stories/2003040202620500.htm

[15] The Hindu, e-lottery banega crorepati, for more details, see here:

http://www.hinduonnet.com/thehindu/mp/2002/10/24/stories/2002102400300100.htm

[16] தினமலர், லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் : துணை நடிகர் உட்பட இருவர் கைது: மார்ச் 29,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=9419

[17] தினமணி, First Published : 26 Mar 2010 04:14:50 PM IST

[18] தினமலர், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அனுப்பி பெரும் மோசடி: துப்பாக்கியும் அனுப்பிய நபர் கைது, பிப்ரவரி 26,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=16575

[19] தமிழகத்தில் சட்டவிரோத துப்பாக்கி கடத்தல், ரௌடிகள் தொடர்பு, அரசியல்வாதிகளின் ஆதரவு முதலியன பல பரிமாணங்களுடன் பிரச்சினை உருவெடுக்கிறது.

[20] தினமலர், சூடு பறக்கும் லாட்டரி சீட்டு விற்பனை :கண்டும் காணாத போலீசார் , பிப்ரவரி 22,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6686

[21] தினமலர், 2 கோடி ரூபாய்க்கு லாட்டரி சீட்டுக்கள் திருச்சி ரயில் நிலையத்தில் சிக்கின, ஜூன் 20,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=10917

[22] தினமலர், லாட்டரி சீட்டு விற்ற 53 பேர் கைது:  ஆகஸ்ட் 22,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=12272

[23] தினமலர், லாட்டரி சீட்டு விற்றால் குண்டர் சட்டம்: ராமதாஸ், மே 14,2008,00:00  IST,

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=1493&ncat=TN&archive=1&showfrom=5/14/2008

நாத்திகமும், ஆத்திகமும்: அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – IV

ஜனவரி 16, 2010

அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – IV

© வேதபிரகாஷ்

முன்பு இம்மாநாட்டின் நிகழ்வுகளை பத்திதுள்ளேன்[1]அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – I to III! இதில் தீர்மானங்கள் சம்பந்தமான விவரங்கள் கொடுக்கப்படுகின்றன.

7வது பகுத்தறிவாளர் கழக மாநாட்டின் தீமானங்கள்!: இரண்டாவது நாளில் (27-12-2009, ஞாயிற்றுக் கிழமை) மாநாட்டின் தீர்மானங்கள் முதலில் வாசிக்கப்பட்டு, அதன் விவரங்கள் பின்னணி நரேந்திர நாயக்கினால் விளக்கப்பட்டன:

1. இந்திய அரசு மதத்தை அரசியலிலிருந்து பிரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக ஒரு சட்டவடிவை உண்டாக்கி, சட்டமாக்க வேண்டும்[2]. லிப்ரான் கமிஷன் அறிக்கையிலும் இக்கருத்து சொல்லப்பட்டிருக்கிறது[3].

2. விளம்பரங்களில் வரும் மூட நம்பிக்கைகள் நிறுத்தப்படவேண்டும். அதாவது விளம்பரங்கள் மூடநம்பிக்கைகள் பரப்ப உபயோகிக்கக்கூடாது[4].

3. பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) அமூலாக்க வேண்டும்[5]. ஏற்கெனவே இரண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இதனை வலியுறுத்துள்ளது.

4. அயல்நாட்டிலிருந்து ஊக்குவிக்கப்படும் தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்[6]. அதுமட்டுமல்லாது, எல்லாவிதமான தீவிரவாதங்களும் ஒழிக்கப்படவேண்டும்.

5. அரசியல் நிர்ணயச் சட்டத்தின் சரத்து 31 (Art.31), முக்கியமாக சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகை நீக்கப்படவேண்டும். எல்லாமதங்களின் உரிமைகளும் மதிக்கப்படவேண்டும் (Art.14) என்பதைவிட, சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று மாற்றவேண்டும்.

6. கொடுக்கப்படும் மான்யங்கள் (Subsidies) அறவே ஒழிக்கப்படவேண்டும்.

7. சிறப்புத் திருமண சட்டத்தினைத் திருத்தி (Special marriage Act), பதிவு செய்தல் என்பது எல்லா மதங்களுக்கும் கட்டாயமாக்கவேண்டும்[7].

8. பொது இடங்களில் மதசம்பந்தமான அடையாளங்கள் / சின்னங்கள் வைப்பது நீக்கப்படவேண்டும். அவ்வாறே வழிபடும் இடங்கள் உள்ளதும் நீக்கப்படவேண்டும்.

9. ஸ்ரீலங்கத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது[8].

10. போலி-விஞ்ஞானம் ரீதியில் / மூலமாக பரப்பப்படும் மூடநம்பிக்கைகளை அரசு உரிய முறையில் தடுக்க ஆவன செய்யவேண்டும்.

நாயக்கின் விளக்கம் இந்து-விரொதமாகத்தான் இருந்தது: ஒவ்வொரு தீர்மானம் முன்மொழியும் போது, நரேந்திர நாயக் விளக்கங்கொடுத்து, இது தெரிந்த விஷயம்தான், இதை நிறைவேற்றுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று நினைக்கிறேன் / இல்லை என்ற ரீதியில் பேசினார். மூடநம்பிக்கை பற்றி விவாதிக்கும் போது, செக்யூலரிஸ பாணியில், இந்து-எதிர்ப்பாக இருந்தது ஆச்சரியமான இருந்தது. “அயல்நாட்டிலிருந்து ஊக்குவிக்கப்படும் தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்”, என்றப்பொது, சில குரல்கள் எழுந்தன, உடனே அவர், “எல்லாவிதமான தீவிரவாதங்களும் ஒழிக்கப்படவேண்டும்” என்று சேர்த்துக் கொள்கிறேன் என்றார். அரசியல் நிர்ணயச் சட்டத்தின் சரத்து 31 பற்றிய விவாதம் வந்தபோது “சரண்டர்” ஆகிய நிலைதான் ஏற்பட்டது[9]. “பொது இடங்களில் மதசம்பந்தமான அடையாளங்கள் / சின்னங்கள் வைப்பது நீக்கப்படவேண்டும். அவ்வாறே வழிபடும் இடங்கள் உள்ளதும் நீக்கப்படவேண்டும்”, என்று சமீபத்தை தீர்ப்பின்படி, தீமானத்தை கொண்டுவந்தாலும், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் செய்துவரும் ஆக்கிரமிப்பு முதலியவைப் பற்றி மூச்சுவிடவில்லை. தெருக்களில் உள்ள கோவில்கள் உடனே அகற்றப்படவேண்டும் என்றுதான் பேசினார்[10]. “ஈழத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது” என்பதற்கும் எதிர்ப்பு இருந்தது. நாயக் அதனை, ஸ்ரீலங்கத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது”, என்று மாற்றிவிட்டார்!

ஐந்தாவது தீர்மானத்திற்கு எதிர்ப்பு: தீர்மானங்களை கூட்டமைப்பின் தென் மண்டலச் செயலாளர் வா.நேரு முன்மொழிந்தார். கூட்டமைப்பின் பிற அமைப்பின் சார்பாக அளிக்கப்பட்ட சிறுபான்-மையினரின் சிறப்பு உரிமைகளை அரச-மைப்புச் சட்டத்திலி-ருந்து நீக்க வேண்டுகோள் விடுத்த – தீர்மான முன்-வரைவின் மீது பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தனது எதிர்ப்பினை பதிவு செய்தார்[11]. சிறுபான்-மையினருக்கான சிறப்பு உரிமைகள் இந்நாட்டில் ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்துமத அமைப்புகளின் செயல்களுக்கு ஒரு பாதுகாப்பாக, சமத்துவத்தைப் பேண வழிகோலும் வேறுபாட்டு உரிமையாக, மனிதநேயத்தைப் பேணும் உரிமையாக உள்ள நிலைமையினை விளக்கி, அந்த சிறப்பு உரிமைகள் மேலும் மேலும் சீர்மைப்படுத்தப்பட்ட வேண்டியதன் அவசியத்தை விளக்கிப் பேசினார். இத்தகைய வலிந்து ஆதரிக்கும் நிலையில், மற்ற மதத்தினர்க்கு இந்த அமைப்பில் யாரும் இல்லை போலயிருக்கிறது.

முஸ்லிம்களே இல்லாத மாநாட்டில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்த நாத்திகர்கள்: நம்பிக்கையில்லாதவர், மூடநம்பிக்கை எதிர்ப்பவர், கடவுட்மறுப்பு சித்தாந்திகள், நாத்திகவாதிகள், பகுத்தறிவு வாதிகள் என்றேல்லாம் சொல்லிக் கொண்டு கூடியிருந்த கூட்டத்தில் ஒரு முஸ்லிமும் இல்லதது ஆச்சரியமாகவே இருந்தது. ஆனால், மேலே குறிப்பிட்ட ஐந்தாவது தீர்மானத்திற்லு கருப்புச் சாடைகள் எதிர்ப்பு தெரிவித்தன. சிறுபான்மை-யினர் உரிமையினை பாதிக்கும் அந்த தீர்மான முன்வரைவினை நீக்குவ-தற்கு பகுத்தறிவாளர் கழகம் எடுத்து வைத்த வாதங்களை பொதுக்குழு உணர்ந்து முன்வரைவு நிலையிலேயே அதற்கு முடிவு கட்டப்பட்டு அது நீக்கப்பட்டுவிட்டது.

நாத்திகர்களும், போலி-நாத்திகர்களும்: இந்தி பேசும் நாத்திகர்களைக் கண்டு, குறிப்பாகக் கேட்டு நமது கருப்புச் சட்டைகள் முழித்தது, அதிர்ந்தது முதலியன பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. இந்த 7வது ரேஸனலிஸ்ட் மாநாட்டிலேயே, போலி, சாதாரண மற்றும் பாரபட்சமுள்ள, குழப்பவாத, சந்தர்ப்பவாத நாத்திகர்களை மற்றும் நாத்திகவாதிகளைக் காணமுடிகிறது. அவர்களுக்குள் உள்ள முரண்பாடுகளும் வெளிப்படுகின்றன:

1. இந்து-விரோத நாத்திகம்: இந்தியாவில் இந்துக்கள் அதிகமாக இருப்பதால், இந்துமதத்தை எதிர்க்கிறோம் அன்றாலும், அத்தகைய வாதம், 100% நாத்திகமாக இல்லாமல், இந்து-விரோதமாகவே இருக்கிறது. வட-இந்தியாவில் எடுபடுவதில்லை என்று இந்த மாநாட்டிலேயே ஒப்புக்கொள்கிறர்கள்.

2. கிருத்துமத சார்புள்ள நாத்திகம்: தம்மை நாத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், கிருத்துவ அடிப்படை நம்பிக்கைகளைப் பற்றி விமர்சிக்க மாட்டார்கள் (பாவத்தின் சித்தாந்தம், ஆண் உறவு இல்லாமல் குழந்தை பிறப்பது, சிலுவையில் மரித்தது, உயிர்த்தெழுந்தது, ஆகாயத்தில் சென்றது……………….முதலியன), குறைகூற மாட்டார்கள். பொதுவான விஷயங்களை பேசி, உள்ள எல்லா சமூக-சீரழிவுகளுக்கும் இந்துமதம்தான் காரணம், ஆகையால் இந்துமதம் ஒழிக்கப் படவேண்டும் என்றும் பேசுவர்.

3. முஸ்லிம் மத சார்புள்ள நாத்திகம்: தம்மை நாத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், முஸ்லிம் மற்றும் இஸ்லாம் பற்றி மூச்சுக்கூட விடமாட்டர்கள். அடிப்படை நம்பிக்கைகளைப் பற்றி விமர்சிக்க மாட்டார்கள். பொதுவான விஷயங்களை பேசி, உள்ள எல்லா சமூக-சீரழிவுகளுக்கும் இந்துமதம்தான் காரணம், ஆகையால் இந்துமதம் ஒழிக்கப் படவேண்டும் என்றும் பேசுவர்[12].

4. தியானம், யோகா முதலியவற்றவை எதிர்க்கும் நாத்திகம்: சமீபத்தில் இத்தகையவற்றிற்கு மேலைநாடுகளில் அங்கீகாரம் கிடைத்ததாலும், அதன் பலனால், மக்கள் பலர் அவற்றைக் கடைப்பிடிப்பதாலும், தங்களுக்கு பாதிப்பு என்ற முறையில் எதிர்க்கின்றனர். வேடிக்கையென்னவென்றால், அதையே கிருத்துவர்கள், முஸ்லிம்கள் செய்தால் எதிர்க்கமாட்டார்கள். ஏனனில் அவர்களும் ஆஸ்ரமங்கள் வைத்துக் கொண்டு அப்பய்ற்ச்சிகளை மற்றவர்களுக்கு அளிக்கிறார்கள்[13].

5. சோதிடத்தையும், வானவியலையும் குழப்பும் நாத்திகம்: வேண்டுமென்றே சோதிடத்தையும் வானியலையும் குழப்பி, இந்திய வானியலை தூஷிப்பார்கள். விஷயம் இல்லையென்றால், இன்னென்ன தேதிகளில் சூரியகிரகணம், சந்திரகிரகணம், கோள்கள் ஒரே கோட்டில் வருவது முதலியன சோதிட-பஞ்சாங்களில் குறிப்பிடமுடியாது. வானியல் என்பது ஆண்டாண்டு காலமான நிகழ்வுகளை உன்னிப்பாக பல இடங்களில் பார்ப்பது, குறித்து வைப்பது, தொகுப்பது மற்றும் அதன் மூலம் அத்தகைய நிகழ்வுகள் ஏற்படும் என்று கூறுவது. 108 ஆண்டுகளுக்கு ஒருமுறை கங்கண கிரகணம் ஏற்படும், கோள்கள் ஒரே கிரமமாக வரும் முதலியன சோதிடம் ஆகாது, மூடநம்பிக்கையாகாது. பிறகெப்படி, பஞ்சாங்கள் அவற்றைக் குறிப்பிடுகின்றன?

6. நாத்திகத்தையும், பகுத்தறிவையும் குழப்பும் நாத்திகம்: இது “திராவிடம்” பேசும் “தமிழர்களிடம்” அதிகம் காணப்படுகிறது. அம்பேத்கரிஸம் முதலியன பேசுபவரிடமும் காணப்படும். நாத்திகம் என்பது கடவுட்தன்மையினை அறவோடு மறுப்பது. பகுத்தறிவு என்பது ஓரளவிற்கு மனித அறிவிற்கு புரிகிண்ர அளவில் ஏற்றுக்கொள்வது. இரண்டும் ஒன்றல்ல.

7. மூடநம்பிக்கையை எதிர்க்கும் நாத்திகம்: மேகங்கள் திரண்டு வந்தால் மழை பெய்யும் போன்றவையும் மூடநம்பிக்கைதான். ஏனெனில் மழை பெய்யலாம், பெய்யாமலும் இருக்கலாம்[14]. மழைகாலத்தில் மழை வரும், வெயில் காலத்தில் வெயில் வரும் என்பதெல்லாம் இப்பொழுது மாறிவிட்டன. இது பூகோளக் கோளாறு / பிறழ்ச்சி. அதிக விளைச்சல் இருந்தால் விலை முறைந்துவிடும் முதலியனவும் மூடநம்பிக்கைதான். ஏனெனில் பலநேரங்களில் அவ்வாறு விலை குறைவதில்லை. அரசு வரிவிகிதங்களைக் குறைக்கின்றது, சலுகைகளை அள்ளிவீசுகிறது, இருப்பினும் இப்பொழுது கட்டிடப் பொருட்கள் விலை 2003லிருந்து ஏறுமுகமாகவே உள்ளன[15]. இப்படி பல உதாரணங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். பங்குச் சந்தையைப் பற்றி கேட்கவே வேண்டாம்!

8. செக்யூலரிஸ நாத்திகம்: இது இந்தியாவிற்கே உரித்தானது. இந்த மூடநம்பிக்கை இங்கிருந்து இப்பொழுது உலகம் முழுவதும் பரவி வருகிறது எனலாம்.

9. நவநாகரிக நாத்திகம்: அதாவது, பெண்கள் “பெண்கள் கிளப்பிற்கு போவது” என்ற ரீதியில் உள்ள நாத்திகர்கள்! பெயரளவில் நாத்திகர்கள் எனலாம். திக, திமுக, பாமக மற்றும் அம்பேத்கரிஸம் முதலிய கோஷ்டிகளில் அதிகமாகக் காணலாம். இவர்களைப் பொறுத்தவரைக்கும் அவர்கள் குடும்பத்தில் ஆண்கள் நாத்திகர், பெண்கள் ஆத்திகர்!

10. விஞ்ஞானம் பேசும் நாத்திகம்: ஓரளவிற்கு விஞ்ஞானம் பேசினாலும், ஒரு நிலையில் அதிலும் மூடநம்பிக்கை வந்துவிடும்[16]. இப்பொழுது மரபணு மற்றும் இனங்களைப் பற்றியும், மொழிகள் உண்டானது, நியாண்டர்தால் குரங்கு எப்படி பாடியது, பேசியது, ஆடியது போன்ற ஆராய்ச்சிகளினின்று அத்தகைய விஞ்ஞான-நாத்திகத்தை அறியலாம்[17].

© வேதபிரகாஷ்

16-01-2009


[1] வேதபிரகாஷ், அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால், விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்:

https://dravidianatheism2.wordpress.com/2009/12/26/அகிலஇந்தியபகுத்தறிவாளர/

வேதபிரகாஷ், திராவிட பொய்களும், திரிபுகளும், பிரச்சாரங்களும், மேலும் விவரங்களுக்கு:

https://dravidianatheism2.wordpress.com/page/2/ மற்றும் https://dravidianatheism2.wordpress.com/page/3/

[2] மும்பையில் அத்தகைய வரைசட்டத்தை சட்டசபையில் கொண்டுவந்ததாகவும், ஆனால் மாநில அரசு தாமதப் படுத்துவதாகவும் நாயக் தெரிவித்தார்.

[3] கமிஷனின் அறிக்கைகளை, இந்திய அரசொயல்வாதிகள் என்றுமே மதிப்பதில்லை. மேலும் இந்த லிப்ரான் கமிஷன், முகுக்க-முழுக்க அரச்சியல் நோக்கம் கொண்டது என்பது அப்பட்டமாகத் தெரிவதால், சட்டரிதியில் யாரும் அதை பெரிதாகக் கொள்ளவில்லை. இரண்டு-மூன்று நாட்களில் ஊடகங்களேஅடங்கிவிட்டன.

[4] சிவப்பாக கிரீம், ஆண்கள் அழகாகக் கிரீம், முலைகளை பெரிதாக்க கிரீம் முதலியவற்றை எதிர்க்காதது ஆச்சரியமே!

[5] Smt. Sarla Mudgal, President, Kalyani and others vs. Union of India and other, AIR 1995 Supreme Court 1531 மற்றும் John Vallamattom v. Union of India AIR 2003 SC 2902.

திகவினர்-கருப்புச்சட்டைகள் இதனை எதிர்க்காதது ஆச்சரியமே. ஒருவேளை அதைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ளவில்லையா அல்லத் அவர்களது முஸ்லிம் நண்பர்கள் அதைப் பற்றி சொல்லவில்லையா அல்லது அத்தகைய தீர்மானம் வரும் என்பதை எதிர்பார்க்கவில்லையா?

http://vedaprakash.indiainteracts.in/2009/03/15/islam-goes-hi-tech-whether-it-is-terrorism-or-divorce/

Mohammad Ahmed Khan v. Shah Bano Begum – AIR 1985 SC 945 –  இதுதான் ராஜிவ் காந்தி சட்டத்தை வளைத்து, முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்குத் துணைப்போய், ஒரு புதிய சட்டத்தை முகமதியர்க்லளுக்க்ய்=உ ஏற்படுத்தியது.

John Vallamattom v. Union of India AIR 2003 SC 2902 – சரளா முத்கல் வழக்கு அடுத்து உச்சநீதிமன்றத்தில், மறுபடியும் அரசாங்கத்திற்கு ஒரு பொது சிவில் சட்டத்தை எடுத்துவரவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது. ஆனால், நமது செக்யூலரிஸ அரசியல்வாதிகள் அமைதி காக்கின்றனர். மற்ற நேரங்களில் நீதிமன்ற தீர்ப்புபடித்தான் நடப்பொம் என்று முழக்கமிடும் வீரர்கள் இப்பொழுது ஊமையாகிவிடுகிண்ரனர். இதுதான் இந்தியாவில் சட்டத்தை, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மத்திக்கும் லட்சணம்!

இதை “சட்ட / நீதி நாத்திகம்” என்று கூட கூறலாம்!

[6] அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது என்ன என்பது நாத்திகர்கள் பகுத்தறிவுவாதிகளுக்குத் தெரிந்திருப்பது சந்தோஷமான விஷயம்தான்.

[7] தமிழ்நாட்டில் அத்தகைய சட்டம் எடுத்து வந்துள்ளபோது, முஸ்லிம்கள் எதிர்த்துள்ளதை கருத்தில் கொள்ளவேண்டும்.

[8] திகவினர்-கருப்புச்சட்டைகள் இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. தமிழர்களுக்கு போராடுவோம், உயிர்விடுவோம் என்று பேசும் இவர்கள் அமைதியாக இருந்தனர். “ஈழம்” என்ற வார்த்தைக்கு வடமாநிலத்தவர் எதிர்ப்புத் தெரிவித்து அதை “ஸ்ரீலங்கா” என்று மாற்றியபோதும் கண்டுகொள்ளவில்லை.

[9] அவருக்குப் பிடிக்கவில்லை என்பது, அவர்முகபாவம் காட்டியது. இருப்பினும் நன்பர்களின் அழுத்ததால், சமரசம் செய்துகொண்டார் எனலாம்.

[10] மசூதி கட்ட நிலங்களை ஆக்கரமிப்பு செய்கின்றனர். பிறகு பட்டா வாங்கி சரிசெய்து கொள்கின்றனர். கிருத்துவர்களும் அதே வேலைத்தான் செய்து வருகின்றனர். அவர்கள் முதலில் சிலுவையை நட்டுவிடுவார்கள். பிறகு அதனைச் சுற்றி மேடைக் கட்ட்வார்கள். வரம் வாரம் தொழுகிறேன் என்று கூட்டம் கூட்டுவார்கள். பிறகு சுவர்கள், கூரை என வரும்………….அந்த இடத்தையே ஆக்கரமித்துவிடுவார்கள்.

[11] http://viduthalai.periyar.org.in/20091231/news19.html

[12] இப்பொழுது சிதம்பரத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். உள்துறை அமைச்சர் ஸ்தானத்தில் இருந்து கொண்டு, ஜிஹாத் சொல்லி பல குண்டுவெடிப்புகளை மேற்கொண்டு, அப்பாவி மக்களைக் கொன்று குவித்தபிறகும், ஜிஹாத் இல்லை என்று பேசும் போக்கு!

[13] இதைப் பற்றி தனியாகவே எழுதலாம். கேரளத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதிலும் இப்பொழுது முஸ்லிம் சோதிடர்கள் அதிகமாகக் கிளம்பிவிட்டர்கள்! அரசு பேருந்துகளில் வேறு விளம்பரம் செய்து கொள்கிறார்கள்!

[14] சன், கலைஞர் டிவிகளில் ரமணர் உதிக்கும் முத்துகளைக் கேட்டு முடிவு செய்து கொள்ளலாம்.

[15] இரும்பைப் பொருத்த வரைக்கும் உற்பத்தியாளர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் முதலியோர் சேந்து கொள்ளையடிக்கின்றனர். பல அரசியல்வாதிகளே அத்தகைய இரும்பு தொழிற்சாலைகள் வைத்துக் கொண்டு கொள்ளையடிக்கிறார்கள்.

[16] சிவப்பாக கிரீம், ஆண்கள் அழகாகக் கிரீம், முலைகளை பெரிதாக்க கிரீம் முதலியவற்றை எதிர்க்காதது ஆச்சரியமே!

[17] மேனாட்டு விஞ்ஞானிகளிடன் இது அதிகமாகக் காணப்படுகிறது. விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி செய்தாலும், ஒரு நேரத்தில் தமது கிருத்துவமத அடிப்படைவாத்தில் மூழ்கி வேறுவிதமான விளக்கங்கள் கொடுப்பர், அதாவது பைபிளுக்கு எதிராக போகாமல், விளக்கம் கொடுப்பர்!

கைவிட்டு விட்டாரே ஏசுபிரான்! தேவாலயம் சென்று திரும்பியவர்கள்மீது தாக்குதல்:7 பேர் பலி!!

ஜனவரி 9, 2010

திகவினருக்கு தைரிய வந்து விட்டதா அல்லது வீரமணிக்கு ரோசம் வந்துவிட்டததா?

தேவாலயம் சென்று திரும்பியவர்கள்மீது தாக்குதல்:7 பேர் பலி

இப்படியொரு தலைப்பில் “விடுதலை”யில் செய்தி!

http://viduthalai.periyar.org.in/20100108/news25.html

கெய்ரோ,ஜன.8_- எகிப்தில் தேவாலயம் சென்று திரும்பியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்-பாக்கிச் சூடு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்-டனர்.

எகிப்தின் கெனா மாகாணத்தில் உள்ள நாக் ஹமாதி நகரில் உள்ள தேவாலயம் அருகே நேற்றிரவு இந்த தாக்குதல் நடந்துள்ளது.

நள்ளிரவுக்கு சற்று முன்னதாக நடைபெற்ற கிறித்துமஸ் பண்டிகை-யை-யொட்டிய சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டுவிட்டு, கிறிஸ்தவர்கள் ஏராள-மானோர் வீடு திரும்பிக்-கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ஒரு காரில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், திடீ-ரென தேவாலயத்திலி-ருந்து திரும்பிக் கொண்-டிருந்தவர்கள் மீது சர-மாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டது.

இதில் ஒரு தனியார் பாது-காவலர் ஒருவர் உள்பட ஏழு பேர் கொல்லப்-பட்டதாக எகிப்து உள்-துறை அமைச்சக அதி-காரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம், இதே பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் கிறித்துவர் ஒருவ-ரால் பாலியல் வன்-கலவி செய்யப்பட்டதற்கு பழிக்-குப் பழி வாங்கும் வித-மாகவே இந்த தாக்-குதல் நடத்தப்பட்டுள்ள-தாக கூறப்படுகிறது.

விமர்சனம்:

முன்பே குறிப்பிட்டது மாதிரி, நான் “விடுதலை” படிக்கிறேன், அது என்னைப் படிக்கிறது!

Egypt church attack sparks riots
Arab News

VENTING ANGER: Protesters during clashes in Qena near Luxor, on Thursday. (EPA)

CAIRO/JEDDAH: Thousands clashed with police during a funeral procession Thursday for six of seven people killed in an attack on churchgoers leaving a midnight mass for Coptic Christians, security officials said.

Two Copts injured in the shooting died Thursday night. Their deaths brought the number of Copts killed in the attack to eight, most of them teenagers. A Muslim policeman guarding the church was also killed in the attack.

Throughout the day, protesters in the southern town of Nag Hammadi pelted police with rocks and damaged cars and stores.

Early in the day, they smashed ambulances outside a hospital in frustration over delays in turning over the bodies for burial. A security official said police fired tear gas to disperse the crowd.

The riots resumed after the burial services, with angry Copts smashing shop windows, chasing Muslims off the streets and bringing down street light poles. The riots continued into the late afternoon.

எகிப்திய கிருத்துவர்கள் போலீஸுடன் மோதுகின்ரனர்!

Egyptian Christians Clash With Police

Associated Press

An Egyptian Coptic church appears behind a mosque in Cairo

இவர்கள் கிருஸ்துமஸ்ஸை இப்பொழுது கொண்டாடுவது ஆச்சரியமாக இல்லையா?

Egypt holds Copt killing suspects
The shooting outside a church on Wednesday night sparked clashes the following day [EPA]

Egyptian police have arrested three people over the fatal shooting of six Christian Copts and a security guard outside a church in the south of the country.

The men were detained on Friday as police searched an area of fields close to where the attack took place in Nagaa Hammadi, about 60km north of Luxor.

“As a result of the security services’ efforts to arrest the criminals [behind] the killing of seven citizens in Nagaa Hammadi, on Friday morning Mohammed al-Kawmi, Kurshi Abul Haggag and Hindawi Hassan surrendered,” an interior ministry statement said.

இந்த கிருத்துவர்கள், மற்ற கிருத்துவர்களைப் போலல்லாமல்,  ஜனவர் 7ம் தேதிதான் கிருத்து பிறந்த நாளை கொண்டாடுகின்றனர்!

நிலவுக்கே களங்கம், குறை இல்லாமல் அரசில்லை, குற்றம் இருந்தால் தண்டியுங்கள்: சொல்வது கருணாநிதி!

ஜனவரி 2, 2010
நிலவுக்கே களங்கம், குறை இல்லாமல் அரசில்லை, குற்றம் இருந்தால் தண்டியுங்கள்: சொல்வது கருணாநிதி!
ஆட்சியைக் கவிழ்க்க எண்ண வேண்டாம்: முதல்வர்
First Published : 02 Jan 2010 12:17:00 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=177141&SectionID=129&MainSectionID=…………….

இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை, சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார் முதல்வர் கருணாநிதி. உடன், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், வருவாய் மற்று

“குற்றங்களைப் பெரிதாக்கி திமுக ஆட்சியை கவிழ்க்க எண்ண வேண்டாம்”: சென்னை, ஜன.1: “குற்றங்களைப் பெரிதாக்கி திமுக ஆட்சியை கவிழ்க்க எண்ண வேண்டாம்” என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார், கருணாநிதி. இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது:”கடந்த 2001-ம் ஆண்டில் வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. காரணம், அந்த ஆண்டில் தேர்தல் முடிந்து வேறு ஆட்சி வந்தது. அவர்கள் இந்தத் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். திமுக அரசு இப்படி நிறுத்தியிருந்தால், வாரந்தோறும் சென்னை, திருச்சி, மதுரை, வேலூர், விழுப்புரம் என்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று இருக்கும். இப்போது அப்படி நடைபெறாமல் இந்தத் திட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

நிறுத்தப்பட்டதற்குக் காரணம்: 2001-ம் ஆண்டு நிறுத்தப்பட்ட இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், 2002, 2003-ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்படவில்லை.ஆனால், 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அந்த ஆண்டு இந்தத் திட்டத்தை மீண்டும் அன்றிருந்த ஆட்சியாளர்கள் அரைகுறையாக நிறைவேற்றினார்கள்.திமுகவைப் பொறுத்தவரை, தேர்தலுக்காக அல்ல; கட்சி அரசியலுக்காக அல்ல, மக்களை மகிழ்ச்சியடையச் செய்ய பொங்கல் கொண்டாடுகின்ற அந்த நாளிலாவது அவர்கள் பூரிப்போடு இருக்க வேண்டும். இதனால், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினோம். ஒரு அரசு மக்களுக்காக இருக்கின்ற அரசு; தேர்தலுக்காக இருக்கின்ற அரசு அல்ல என்பதை எடுத்துக் காட்டுகின்ற வகையில் இந்தத் திட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

குறை இல்லாமல்: ஒரு நாட்டில் ஒரு அரசு, அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அந்த மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். அதை குறை கூறுபவர்களும் இருப்பார்கள். குறை இல்லாமல் ஒரு அரசு இருக்க முடியாது. குறை இருந்தால் சொல்லுங்கள்; கேட்கிறோம். குற்றம் இருந்தால் கண்டியுங்கள்; தண்டியுங்கள். அதற்குப் பணிகிறோம் என்பதுதான் இந்த அரசின் கொள்கை, லட்சியமாக இருந்து வருகிறது.குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே குறை சொல்லிக் கொண்டிருந்தால் அது ஜனநாயகம் அல்ல. குறை கண்ட இடத்தில் அதைச் சொல்வதும், அதைத் திருத்திக் கொள்வதும்தான் ஜனநாயகம்.

நிலவுக்கே களங்கம்: நிலவுக்கே களங்கம் இருப்பதாகச் சொல்கிறோம். அதைப் போல முழு நிலவாக இருந்தாலும் எங்கேயோ ஒரு கரும்புள்ளி இருக்கத்தான் செய்யும். அதைச் சுட்டிக் காட்டி இந்த அரசோடு ஒத்துழைத்து அதை நீக்குவதற்குப் பாடுபட வேண்டும். அதையே குற்றமாகச் சொல்லி அந்தக் குற்றத்தையே பெரிதாக்கி நிலவு பெரிதா, அதிலே இருக்கின்ற களங்கம் பெரிதா என்பதில் போட்டி போட்டுக் கொண்டு களங்கத்தைப் பெரிதாக்கி ஆட்சியைக் கவிழ்த்து விடலாம்; ஆட்சியை ஒழித்து விடலாம் என யாரும் கருதக் கூடாது” என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.

மன்னிக்க வேண்டும் கலைஞரே! உண்மையென்னவென்றால் “கலைஞர்” முன்னம் தமிழுக்காக செய்த காரியங்களை “கருணாநிதி” என்ற அரசியல்வாதி தமிழை, தமிழகத்தைக் கெடுத்து விட்டான் என்பதுதான் உண்மை.

* நாத்திகப் போர்வையில், ஆலயங்களை சூரையாடினாய்;

* செக்யூலரிஸக் கஞ்சி குடித்து, தாமஸ் படம் காட்டி இந்து விரோதியானாய்;

* சமத்துவம் பேசி கடவுளர்களின் படிப்பென்ன என்று கேட்டாய்;

* பலகலைகழகங்கள் பலவற்றை அதிகரித்து பட்டங்களை அள்ளினாய்;

* மனைவி-துணைவி-மகள் நெற்றிகளில் இருப்பதை மறந்து, தொண்டனின் நெற்றியில் என்ன ரத்தம் என்று கேட்டாய்;

* ஆன்மீகப் போர்வையிலே கடவுள் ஆக முயன்றாய்;

* முட்டாள்பெட்டி, மடக்கம்பி இணைப்புகள், தினசரி ஆட்டங்கள் மூலம் படிப்பைக் கெடுத்தாய்;

* ஒரு ரூபாயில் அரிசி விற்க பத்து ரூபாய் செலவு செய்கிறாய்;

* கோடிகளை பெற்றவுடன் கோடிகளை மறைத்தாய்;

* ஓய்விற்கே ஓய்வு கொடுத்தாய்;

இன்னும் பலவற்றை என்னுடைய பதிவுகளில் http://www.indiainteracts.com, http://www.dravidianatheism.wordpress.com மற்றும் http://www.dravidianatheism2.wordpress.com காணலாம். இதெல்லாம் தவறல்ல, மாபெரும் சமூகக் குற்றங்கள், மக்கள் விரோதச் செயல்கள்! எப்படி மக்கள் மறப்பார்கள்?

அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – II

திசெம்பர் 27, 2009

அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – II

குறிப்பு: மாநாட்டில் இவர்கள் பேசியதற்கும், “விடுதலை” கீழ்கண்டவாறு பிரசுரித்துள்ளதற்கும் வேறுபாடுகள் உள்ளன.

“நாத்திகம்” (atheism) என்பதற்கு பதிலாக “Rationalism” என்ற போர்வையில் விவாதங்கள் வைக்கப் படுகின்றன. அதனை “பகுத்தறிவு” என்று தமிழில் பேசப்படுகிறது.  agnosticism, skepticism, non-belief in religious system முதலிய கோணங்களில் விவாதிப்பதும், விஞ்ஞான ரீதியில் தர்க்கம் செய்வதும் ஒன்றாகாது. ஆனால் நாத்திகத்தை மறைத்து விஞ்ஞான போர்வையில் பலரக சித்தாந்திகள் ஒன்றுகூடி, இவ்வாறாக பேசுவது நன்றாகவே தெரிகிறது.

“பகுத்தறிவு” என்றே  முதலில் “விதலையில்” வெளிவந்தது அப்ப்டியே கொடுக்கப்படுகிறது:

வகுப்பு வெறியை முறியடிக்க பெரியாரின் சிந்தனைகளே தேவை: இந்திய பகுத்தறிவாளர் மாநாட்டில் கு.வெ.கி.ஆசான், அ.அருள்மொழி, ஆர்.ஜி.ராவ், வித்யாபூஷன்

http://viduthalai.periyar.org.in/20091227/news11.html

சென்னை, டிச.27_ வகுப்பு வெறியை முறி-யடிக்க பெரியாரின் சிந்-தனைகள்தான் பயன்-படும் என்று வித்யா பூஷன்-ராவத் நேற்று சென்னை பெரியார் திடலில் நடை-பெற்ற மாநாட்டில் கூறி விளக்கமளித்தார். 7ஆவது தேசிய மாநாடு டிசம்பர் 26 பிற்பகல் மற்-றும் மாலை நிகழ்ச்-சிகள் நேற்று நடைபெற்றன. அதன் தொடர்ச்சி வருமாறு: வகுப்புவாதத்தை ஒழிப்பதில் பகுத்தறிவு இயக்கங்களின் பங்கு எனும் தலைப்பில் முதல் கருத்தரங்கு நேற்று (26.12.2009) மாலை இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திட-லில் நடைபெற்றது.

கு.வெ.கிஆசான்: பெரியார் பேருரை-யாளர் கு.வெ.கி.ஆசான் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குத் தலைமை-யேற்றார். ஆங்கிலத்தில் உள்ள கம்யூனல் எனும் சொல்லை வகுப்புவாதம் எனும் விரும்பத்தகாத பொருளில் இந்தியா-வில்-தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். சமுதாயமாக மக்கள் வாழ்-வது, ஒன்றைப் பொது-வாக அவர்கள் பயன்-படுத்துவது ஆகியவை-தான் அச்சொல்லின் இயல்பான பொருள் என்-பதைத் தெளிவுபடுத்-தினார். 1964இல் வெளி-யான கன்சைஸ் ஆக்ஸ்ஃ-போர்டு அகராதியின்படி, சமுதாயங்களுக்கு இடையே பகையுணர்வு எனும் பொருளில், கம்யூ-னல் எனும் சொல் இந்-தி-யாவில் பயன்படத் தொடங்-கியதை எடுத்துக்காட்-டினார்.

இந்து முஸ்லிம் பகை: பெரும்பான்மை இந்து மதத்தினர் சிறு-பான்மை மத்தினரை ஒதுக்கி, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முற்-பட்ட பொழுது, சிறு-பான்-மையர் சட்டப் பாதுகாப்பை வகுப்பு-ரிமையின் அடிப்படையில் கேட்டனர். அது மறுக்-கப்பட்ட பொழுது இந்து, முஸ்லீம் பகை ஏற்பட்டு, பாகிஸ்தான் பிரிவினை-யில் முடிந்தது.

வி.பி.சிங் ஆட்சியில்: மேல்ஜாதியார் ஆதிக்-கத்தில் இருந்து, ஒடுக்கப்-பட்ட, ஒதுக்கப்பட்ட, அழுத்தப்பட்ட ஜாதியார் பாதுகாப்புப் பெற, இட-ஒதுக்கீட்டைக் கோரினர். அதை விழிப்புணர்வுடன் தென்நாடு முன்-னெடுத்-தது. ஆனால் வடபுலத்-தில் வகுப்புரிமை இயக்கம் வலுப்பெறவில்லை. மண்-டல் ஆணையத்தின் பரிந்-துரைப்படி, வி.பி.சிங் பிர-தமராக இருந்த பொழுது, மத்திய அரசில் பணி-யிடங்களுக்குப் பிற்படுத்-தப்பட்டோருக்கு இட-ஒதுக்கீடு அளித்தது. அதைத் தென் மாநிலங்கள் மகிழ்-வுடன் வரவேற்றன. ஆனால் வட இந்தியாவில் மேல்-ஜாதியாரின் தூண்டுத-லால் கலவரம் உண்டா-யிற்று.

உச்சகட்ட கலவரங்கள்: உண்மையான பிரச்-சினையிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்ப, மதவெறியை இந்துத்-துவா சக்திகள் கிளப்பு-கின்றன. உண்மையான பிரச்சினைகளை மறைத்து, உணர்ச்சிகளை எழுப்பி, கற்பனைப் பிரச்-சினை-களைக் கொண்டு, சிறு-பான்மை மதத்தினர் மீது வெறுப்பை வளர்த்து கல-வரங்களைத் தொடர்ந்து நடத்துகின்றன. 1992இல் பாபர் மசூதி இடிப்பும், 2002இல் குஜராத் கல-வரங்களும் அவற்றில் உச்சகட்டமானவை.

பொதுமக்களின் கவ-னம் தவறான பாதையில் செல்லும் வரை, அவர் மீது தங்கள் ஆதிக்கம் நிலை-பெறும் என்பது படித்த, மற்றும் பணக்-காரக் கூட்டத்தினரின் கணிப்பாகும். ஆகையால் உண்மைப் பிரச்சினைகளில் இருந்து எளிய மக்களின் கவனத்-தைத் திருப்புதல், கலவரத்-தைத் தூண்டுதல், பக்தி-போதையை ஏற்றுதல், மதவெறியை ஊக்கு-வித்தல் முதலியவற்றில் மதவாதிகள் ஈடுபட்டு உள்ளனர். இவர்களின் முயற்சியை முறியடிக்கும் வகையில் பகுத்தறி-வா-ளர்கள் மக்களுக்கு உண்-மைகளைச் சொல்ல வேண்டும், மூடநம்பிக்-கைகளை முறியடிக்க வேண்டும், அறிவியல் பார்வையை உண்டாக்க வேண்டும். இவை போன்ற நடவடிக்கைகளால் விழிப்-படைந்த மக்கள் தேவையான காரியங்-களுக்கும் உரிமைகளுக்-கும் முயற்சி எடுத்துக்கொள்-வார்-கள். வீண் உணர்ச்-சிக்கு ஆட்பட்டு வகுப்-புக் கலவரங்களில் ஈடு-பட-மாட்டார்கள், வகுப்பு-வாதத்தை முறியடிப்-பார்-கள். இவ்வாறு கு.வெ.கி. ஆசான் உரையாற்றினார்.

வழக்கறிஞர் அ.அருள்மொழி: உயர்நீதிமன்ற வழக்கு-ரை-ஞர் அ.அருள்மொழி பேசுகையில், புத்தரின் போதனைகள் மறக்-கடிக்-கப்பட்டு, வேதியத்தின் அடிப்படையில் கதைகள் பரப்பப்படுவதைக் கண்-டித்தார். சென்னை மாகா-ணத்தில் நீதிக்கட்சி அரசு எல்லாப் பிரிவு மக்களுக்-கும் நீதி கிடைக்கும் வகை-யில் வகுப்புரிமை ஆணை பிறப்பித்து மக்களாட்-சியை உறுதிப்படுத்தியது. இவ்வாறு அனைவருக்-கும் தெரிய வேண்டும். இன்னும் தீண்டாமை-யைக் குற்றம் அற்றது எனக் கூறுவோர் இருக்-கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

கோவா அறிவியல் பேரவைத் தலைவர், ஆர்.ஜி.ராவ்: இக்காலகட்டத்தில் தேவைப்படுவது மனித-நேயம் என்றார். மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும், அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

வித்யாபூஷன் ராவத்: டெல்லி, சமூக வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர், வித்யா பூஷன் ராவத் கருத்து அறிவிக்கையில் பெரியாரின் எண்ணங்-கள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு எல்லோரிடமும் பரவ வேண்டும் என்றார். வகுப்பு நெறியை முறி-யடிக்க பெரியார் சிந்த-னை-கள் பயன்படும். காந்தி-யார் கூறிய மதச் சார்பின்மை பார்ப்-பனியம் சார்ந்த மதச் சார்பின்மை. பெரியாரின் மதச் சார்பின்மை, மனித நேயம் சார்ந்தது. மதச் சார்பின்மை வர்ணாஸ்-சிரம தர்மத்தை மறுப்ப-தாக இருக்க வேண்டும் என்றார்.

பி.எஸ்.பர்னாலா: பர்னாலா மத குருக்-கள் மூடநம்பிக்கை-களைப் பரப்புவது வருத்தத்திற்கு உரியது எனக்கூறி, பகுத்-தறிவாளர்கள் மக்களை இன்னும் அதிக அளவில் நாடு முழுவதும் சந்தித்-துப் பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.

விமர்சனம்:

ஹிந்தியில் பேசியதை அப்படியே மொழி பெயர்க்கப் படவில்லை.

முன்பே குறிப்பிட்டபடி –
* காரணங்களை அறியாமல் ஏற்றுக் கொள்ளமுடியாது என்ற தன்மை (rationalism),
* ஏற்றுக்கொண்டுள்ள ஞானத்தை மறுத்தல் / எதையும் அறிய முடியாது என்று வாதித்தல் (agnosticism),
* சந்தேகித்தல்/நம்பிக்கையின்மை (skepticism),
* மதத்தில் நம்பிக்கையின்மை (non-belief in religious system),
* கடவுளை மறுத்தல் (atheism),
* விஞ்ஞான நம்பிக்கை (Scientific temper)
முதலியவற்றை குழப்பிப்பேசும் பல கோஷ்டிகள் இந்த கூட்டமைப்பில் உள்ளனர்.
ஆனால் திகவினரோ இந்து எதிர்ப்பாளர்கள் என்று அவர்களில் பலருக்குத் தெரியவில்லை.
பொது சிவில் சட்டத்தை அமூலாக்க வேண்டும் என்று தீர்மானத்தை (எண்.3) நிறைவேற்றியபோது, கருப்புச்சட்டைகள் திகைத்துக் கொண்டிருந்ததைப் பார்க்கமுடிந்தது.

மதங்களையும்,மதப்பிரிவுகளையும் நாத்திகர்கள் ஏன் எதிர்க்கின்றனர்?

திசெம்பர் 26, 2009

மதங்களையும்,மதப்பிரிவுகளையும் நாத்திகர்கள் ஏன் எதிர்க்கின்றனர்?

ரஸ்ஸல் பிளாக்போர்ட்

http://viduthalai.periyar.org.in/20091226/spage05.html#

http://viduthalai.periyar.org.in/20091226/snews06.html

எதிர்பார்த்ததுபோல், மேற்கத்திய குடியாட்சி நாடுகளில் மட்டுமாவது 1970, 1990 -களில் மதத்தின் தாக்கம் மங்கிவிடவில்லை. மத அமைப்புகள் இன்னமும் கூட தீவிரமாகப் பிரச்-சாரம் செய்து அதிகார வர்க்கத்-தினரின் ஆதரவைத் திரட்டிக் கொண்-டிருப்-பதைக் காணலாம். கருக்கலைப்பு, குளோனிங் மருத்துவ ஆராய்ச்சி, கருத்தடுப்பு சாதனங்கள் ஆகியவற்றை இப்போதும் கூட இந்த மதமோ அந்த மதமோ ஏதோ ஒன்று எதிர்த்துக் கொண்டுதான் இருக்கின்-றது. பாது-காப்பான உடலுறவு என்பது கடவு-ளால் விதிக்கப்பட்ட நியதிக்கு விரோதமானது என்று கூறி, எய்ட்ஸ் நோய் தடுப்பு முறை-களுக்கும் மதம் குந்தகம் விளைவிக்-கிறது.

சாவும் வராமல் தீர்க்க முடியாத நோய்களினால் தொடர்ந்து வேத-னைப்பட்டு, கேவலப்பட்டு வருபவர்-கள் கருணைக் கொலை செய்யப்-படு-வதையும் பெரும்பாலான மத அமைப்-புகள் கடுமையாக எதிர்க்கின்றன. மதச்சார்பற்றவை என்று கருதப்-படும் ஆஸ்திரேலியா போன்ற நாட்டு அரசு-கள் கூட ஒழுக்க நெறி பற்றி கிறித்துவ தேவாலயங்கள் மற்றும் அமைப்புகள் கொண்டுள்ள கவலை-கள், அக்கறைக்கு வெளிப்படை-யாகத் துணை போகின்-றன. என்றா-லும், அமெரிக்காவில் இந்த நிலை மிகமிக மோசமாக உள்ளது. 1970 மற்றும் 1980 களில் அமெரிக்க மத-வாத பிற்போக்கு சக்திகள் தங்களின் அமைப்புகளைப் பலப்படுத்துவதில் வியக்கத்தக்க பெரு வெற்றியைப் பெற்றன. நிதிவசதி நிறைந்த தகவல் தொடர்பு அமைப்புகள், சிந்தனை-யாளர்கள், அவர்களின் சொந்த பல்கலைக் கழகங்களையும் கூட அவை கொண்டிருந்தன. தற்போதைய நிலையைச் சற்று பாருங்கள். உல-கத்தை கடவுள் உருவாக்கினார் என்ற அவர்-களின் கதையை மறுக்கும் பொது அறிவி-யல் நிறுவனங்களை சீர்குலைக்க தந்-திரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்-டன. செல்வாக்கு மிகுந்த ஒரு தீவிர மதவாத இயக்கம் நாட்டை ஒரு கிறித்துவ மத நாடாக மாற்ற விரும்பு-கிறது. முந்தைய புஷ் அரசு நாட்டை அந்த பாதையில் வெகு தொலைவுக்கு அழைத்துச் சென்றுவிட்டது. புஷ்ஷைப் போலன்றி தாராள கருத்து கொண்ட ஒரு அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டது வலதுசாரி மத அமைப்புகளிடையே ஒரு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்-ளது. அமெரிக்காவில் நிலவும் மதவெறி உண்மையானது; அது வெளிப்-படுத்தப்-படும் பல வழிகளில் எந்தவித ரகசி-யமோ அல்லது தாராள மனப்பான்-மையோ கிடையாது.

மாறுபட்ட ஓர் உலகில், மத போத-னைகளின் யோக்கியதை பற்றி ஆராய்ச்சி மேற் கொள்வது பயனுள்ள-தாக இருக்கலாம். மதக் கோட்பாட்-டில் உறுதியளிக்கப் பட்டிருக்கும் ஒழுக்க நெறிக்கு வழிகாட்டுதல், பிரபஞ்ச இயக்கத்தைப் பற்றிய ஆழ்ந்த அறிவு, ஆன்மீக விடுதலை மற்றும் இது போன்ற-வற்றில், எதை ஒன்றையாவது நிறைவேற்ற முடியுமா என்று நாம் கேட்கக்கூடும். இந்தப் பிரச்சினைகள் எந்த வித விருப்பு, வெறுப்பும் இன்றி விவாதிக்கப்பட்டிருக்கலாம். மதத்தைக் குறை கூறும் நம்மில் சிலர் தேவால-யம், மசூதி மற்றும் இதர மத வழி-பாட்டுத் தலங்களின் செயல்பாடுகள் நாட்டின் ஆட்சி அதிகாரத்திலிருந்து பிரித்து வைக்கப்படவேண்டும் என்று வாதிடுவதுடன் மனநிறை வடைந்து விடக்கூடும். ஆனால், இழப்புக் கேடாக நாம் அத்தகைய ஓர் உலகில் வாழ-வில்லை.

உண்மையான இந்த உலகில், நாடுகள் மற்றும் அரசுகள் மதச்சார்-பற்று இருப்பது என்ற கருத்தை எதிர்ப்பதற்-கான அவர்களின் சொந்த காரணங்களை தேவாலயங்களின் மத அமைப்புகளும் கொண்டிருக்கின்றன. அவற்றில் சில, தனிப்பட்ட மனி-தனின் ஆன்மிக விடுதலையை, அர-சியலில் அதிகாரம் செலுத்துவது என்பதில் இருந்து துல்லியமாகப் பிரித்துக் காண்பதில்லை. . மதச்சார்-பின்மையின் நோக்கமும், அரசின் நோக்கமும், மத நோக்கம் மற்றும் தனிப்பட்டவர்களின் நோக்கத்-துடன் தொடர்பு அற்று சுதந்திரமாக இருப்-பவை என்ற கருத்தில் நம்பிக்கை அற்றவர்களாக அவர்கள் இருக்கக்-கூடும். உண்மையில் நிலவும் சமூகத்-தின் பன்முகத்தன்மையை அவர்களில் சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை என்-பது தெளிவாக தெரிகிறது. மாறாக, கட-வுளின் அருளால் தங்களின் கருத்துகள் உண்மையில் நிலை-பெறும் காலம் ஒன்று வரும் என்று அவர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றனர்.

அரசியல் களத்தில் மதம் உரிமை கோரும்போது, அந்த அதிகாரத்தை மதம் எங்கிருந்து பெற்றது என்று நாத்திகர்கள் கேள்வி எழுப்புவதில் வியப்பேதுமில்லை; அது முற்றிலும் நியாயமானதே. மதஅமைப்புகளும் அதன் தலைவர்களும், ஒரு கடவுளின் சார்பாக தாங்கள் அந்த உரிமையைக் கோருவதாகக் கூறினால், கடவுளே அந்த உரிமையைக் கோருகிறதா அல்லது அதன் சார்பாக அந்த உரிமையை மதமும், தலைவர்-களும் கோருகின்றனரா என்று கேட்பதும் நியாயமானதே. இந்தக் கடவுள் உண்மையில் இருக்கிறாரா? அப்படியானால் அதற்கான அத்-தாட்சி என்ன? ஒரு வேளை அது போன்ற கட-வுள் இருக்கிறார் என்றாலும், அவரது விருப்பங்கள் ஏன் சட்டங்களாக மாற்-றப்பட வேண்டும்? எந்தக் கடவுளின் சார்பாகவும் இந்த உரிமையைத் தாங்கள் கோரவில்லை என்று மதத் தலைவர்கள் கூறுவார்-களே ஆனால், மற்ற எவரையும் விட அதிக அதிகாரம் பெற்றவர்களாக எப்படி அவர்கள் இருக்கிறார்கள்? அவர்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் என்ன? முட்டாள்தனமான கருத்து கொண்டவ மதவாதிகளுக்கு அதிகாரமும், செல்வாக்கும், சலுகை-களும் அளிக்கப் படும்போதெல்லாம், நாகரிக-மாக கேலியும் கிண்டலும் செய்வது மேலானது. என்றாலும், இத்தகைய நாகரிகத்திற்கும், ஒட்டு மொத்தமாக தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாட்டு விதித்துக் கொள்வ-தற்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. டார்வினின் உயிர்த் தோற்றத்தை மறுக்காத மிதவாதிகளின் மத நம்பிக்கைகளை நாகரிகமாகவும், நற்சிந்தனையுடனும் கூட விமர்சனம் செய்வதை ஊக்கு-விக்கக்கூடாது என்று சில அமெரிக்க நாத்திகர்கள் எண்ணு-வது வருந்தத்-தக்கது. நம்மைப் பற்றியும், நாம் வாழும் பிரபஞ்சத்தைப் பற்றியும் அறி-வியல் அடிப்படையிலான கண்டு-பிடிப்புகளை ஏற்றுக் கொள்ளும் நாத்திகர்களின் இத்தகைய அணுகு முறை-யிலான வாதங்களை நம்மால் வரவேற்க இயலவில்லை. இத்தகைய விட்டுக் கொடுக்கும் நாத்திகர்கள் அறிவியல் மீது, குறிப்பாக பொது பள்ளிகளில் டார்வினின் உயிர்-தோற்றம் பற்றி கற்பிப்பது பற்றி, மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். தங்களின் இந்த நிலைக்கு பொது-மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக, அமெரிக்காவில் ஏற்பட்ட பல்வேறு-பட்ட அறிவியல் அடிப்படையிலான மனித இயல் மாற்றங்களை அவை உள்ளவாறு ஏற்றுக் கொள்வதே அறி-வுடமை என்று கருதுகின்றனர். உயிர்த்தோற்றக் கோட்பாட்டினை அதிக எண்ணிக்கை கொண்ட அமெரிக்கர்களுக்குக் கற்பிக்க வேண்-டும் என்று விரும்பும் அவர்கள் அதனை நாத்திகத்துடன் இணைத்து பேசப்படுவதை மட்டும் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை.

இதை ஒரு முறை நீங்கள் ஏற்றுக் கொண்டால், உங்களது அனைத்து வகையான பகுத்தறிவு மனப்பான்-மையும் காணாமல் போய்விடுகிறது. அதன் பின், உண்மை என்ன என்-பதை விட, மக்-களை எப்படி கவர்-வது என்ற நோக்-கத்தைக் கொண்-டதாகவே உங்களது அணுகுமுறை மாறிவிடும். கோடிக்கணக்-கான ஆண்டுகள் விலங்கினங்களாகத் துன்புற்ற பின் வளர்ச்சியை மனி-தர்கள் அடைந்துள்ளனர் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளும்-போது, மக்களின் பாவத்தை மன்னிக்-கும் அன்பு கொண்ட ஒரு கடவுள் உள்ளார் என்ற மத-நம்பிக்கையைப் பெற்றிருப்பது எளி-தானதாகவும், பொருத்தமானதாகவும் இருக்காது என்று சுட்டிக் காட்டு-வதையும் அவர்கள் விரும்புவதில்லை. மதக் கருத்துகள் மீது உயிர்த்தோற்றக் கோட்-பாடு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி கேட்கவும் அவர்கள் விரும்புவ-தில்லை. மற்றவர்களும் இதைப் போன்ற ஆபத்தானவற்றைப் பற்றிப் பேசுவதை அவர்கள் விரும்புவ-தில்லை.

ஆனால் இது ஒரு தவறான நிலைப்-பாடாகும். அறிவியல் கணக்-குப்படி உலகம் தோன்றி 4.6 பில்-லியன் ஆண்டுகள் ஆகின்றன என்-பதை ஏற்றுக் கொள்ளும் சிந்தனைத் திறம் கொண்ட மிதவாதக் கிறித்த-வர்கள் தங்கள் மதநம்பிக்கையைப் பற்றி உயிர்த்தோற்றக் கோட்பாடு ஆழ்ந்த கேள்விகளை எழுப்புவதைக் காணலாம். அவர்களிடமிருந்து இதை மறைக்க முயற்சிப்பது வீணானதும், அவர்களை அவமானப் படுத்துவதும் ஆகும். நமது பூமி 10,000 ஆண்டுகளுக்குள்தான் தோன்றியது என்பது போன்ற பல நம்பிக்கைகளைக் கொண்ட தீவிர மதவாதிகளைத் திருப்திபடுத்தி, அவர்களை அறிவியலுடன் நட்பு கொண்ட மதவாதிகளாக மாற்றும் முயற்சியும் வீணாணதே. அவர்-களைப் பொருத்தவரை, இந்த பூமியின் வயதும், ஒவ்வொரு உயிரின் தோற்றமும், அவர்களின் ஒருங்-கிணைந்த ஆன்மின நடைமுறையின் மய்யத்தில் இருக்கும் கோட்பாடு-களாகும்

எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது என்ற கொள்கை சரியான வழியல்ல. நாத்திகர்கள் அதிகமாகப் பேசாமல் அடக்கமாக இருக்க வேண்-டும் என்று கூறப்படுவதையோ, ஆற்றல் மிகுந்த முறையில் விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படு-வதையோ என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு செய்தால் அறிவி-யலுடன் கூடிய ஆன்மிகத்தை ஆதரிக்-கும் போலி நாத்திகர்களுக்கு நாம் இடம் கொடுத்ததாக ஆகிவிடும்.

கடவுள் நம்பிக்கை நமக்கு இல்லை என்பதையும், இயற்கையை மீறிய அனைத்து வகை மதக்கோட்பாடு-களையும் நாம் ஏற்பதில்லை என்பதை-யும் விளக்கி நாம் பேசவேண்டிய நேர-மிது. மதங்கள் முற்றிலுமாக அழிக்கப்-பட்டு விடமுடியாது. நமது நோக்கமும் அதுவல்ல. என்றாலும் மதத்துடன் தொடர்புடைய பல மூடநம்பிக்கை-களை மக்களுக்கு நாம் எடுத்துக் கூற-வேண்டும். எந்த மதத்தினருக்கும் பகுத்தறிவு கிடையாது என்பதையும் கொடுமை, சோகம், அறியாமை மனித உரிமை மறுப்பு அல்லது மீறல் ஆகியவற்றை அனைத்து மதங்களும் வளர்க்கவே செய்கின்றன என்பதையும் நாத்திகர்களான நாம் தெளிவாக எடுத்துக் கூறத்தான் வேண்டும். மதத் தலைவர்கள் ஒழுக்க நெறியில் நமக்கு வழிகாட்டிகள் அல்ல. ஒழுக்கத்தைப் போதிக்கும் அதிகாரத்தை மதபோதகர்-களுக்கும், இமாம்களுக்கும், சாமியார் களுக்கும், கடவுள் மனிதர்களுக்கும் அளிக்கப்பட்டு இருப்பதை நாம் தட்டிக் கேட்கத்தான் வேண்டும்.

(நன்றி: ‘தி ஆஸ்திரேலியன் அதிஸ்ட்’ – நவம்பர் – டிசம்பர், 2009
மொழியாக்கம்: த.க.பாலகிருட்டிணன்)

அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால்!

திசெம்பர் 26, 2009

அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால்!

பெரியார் திடலில் அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு தொடங்கியது. பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அறிவியல் மனப்பான்மை, மனித நேயம் கொண்ட புதிய சமுதாயத்தை நவீன சாதனங்கள்மூலம் உருவாக்குவோம்!

அகில இந்தியப் பகுத்தறிவாளர் கூட்டமைப்பின் 7 ஆவது இந்திய மாநாட்டு மலரை விஜயவாடா நாத்திக மய்யத்தின் இயக்குநர் டாக்டர் விஜயம் வெளியிட்டார் (சென்னை, பெரியார் திடல், 26.12.2009).

சென்னை, டிச. 26-_ அறிவியல் மனப்பான்மை, மனித நேயம் கொண்ட புதிய சமுதாயத்தை உரு-வாக்குவோம் என்று இன்று சென்னை பெரி-யார் திடலில் தொடங்-கிய பகுத்தறிவு சங்கங்-களின் கூட்டமைப்பின் 7 ஆவது தேசிய மாநாட்-டில் திராவிடர் கழக தலை-வர் தமிழர் தலைவர் கி.வீரமணி அறிவித்தார்.

வீரமணியின் உரை: மாநாட்டை தொடங்கி வைத்து கி.வீரமணி அவர்கள் இன்று ஆற்றிய உரை வருமாறு:-

பெரியாருடைய நிலமாகிய தமிழகம் ஒரு பகுத்தறிவு மாநிலம். இது மனிதநேய மாநிலம்; சமூகநீதி மாநிலம்; இவற்றையெல்லாம் குறிப்பது சுயமரியாதை இயக்கம் என்பதாகும். இப்பொழுது மின்னி-யல் ஊடகங்கள்மூலம் செய்திகள் பரவுகின்றன. இப்பொழுதுள்ள தொலைத்தொடர்பு ஊட-கங்கள் வரப்-போவ-தைப் பற்றி 50, 60 ஆண்டு-களுக்கு முன்பே பெரியார் தொலைநோக்-காகக் கூறினார். உயர்-படிப்புப் படிக்காத பெரி-யார் இவற்றையெல்லாம் கூற முடிந்ததற்குக்காரணம், அவர் எதையும் பகுத்தறிவு அடிப்படையில் கண்டார் என்பதுதான். மூட நம்பிக்கையை வெளிப்படுத்துவதில் மறைந்த நண்பர் பிரேமானந்த் முன்னோடியாகத் திகழ்ந்தார். விஞ்ஞானிகள் சாய்பாபாவிற்குப் பணியும் காலத்தில் பிரேமானந்த், அந்தச் சாமியாரின் உண்மையான போலித்தனத்தை வெளிப்படுத்தினார். அண்மையில் காஞ்சிபுரத்தில் அர்ச்சகர் ஒருவர் கருவறையில் பல பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினார். அவர் கடவுளின் தண்டனையைப்-பற்றிக் கவலைப்படவில்லை; கருவறையில் இருப்பது கல் என்று அவருக்குத் தெரியும் [பாதிரியார்கள் அமெரிக்காவில் இல்லை சென்னையிலேயே பல பெண்களை அவ்வாறே நடத்தியுள்ளர்கள். வி ஹியூம்ஸ் என்ற காமக்கொடூரனும் இதே சென்னையில் நூற்றுக் கணக்கான சிறுமியர்-சிறுமிகளை பாலியல் வன்கலவி செய்ததுடன், வரும் அந்நிய நாட்டினருக்கும் பகிர்ந்தளித்துள்ளான். கொசுரு – பாலியில் படம் எடுப்பது, இணைதளத்தில் போடுவது. எல்லாமே சென்னையில் தான் நடந்தன. இந்த நாத்திகம் இதைப் பற்றி மூச்சு விடாது].

‘FIRA’ ஏழாவது மாநாட்டினை தொடங்கி வைத்து கி. வீரமணி உரையாற்றுகிறார் (சென்னை, பெரியார் திடல், 26.12.2009)

அமெரிக்காவின் மூட நம்பிக்கை எதனால்? நிஷீஷீபீ ஷ்வீtலீஷீut நிஷீபீ எனும் நூலில் ஒருவர் நல்லவராக இருப்பதற்கு மத நம்பிக்கை தேவை-யில்லை என்பது விளக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா செல்வச் செழிப்புமிக்க நாடாக இருக்கலாம். ஆனால், மூட நம்பிக்கையில், மத நம்பிக்-கை-யில் இருந்து அவர்கள் இன்னும் விடுபட இல்லை; இப்பொழுது மெல்ல மெல்லச் சுதந்திரமாகச் சிந்திக்-கிறார்கள். குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்-பட்ட பின்பு, ஒபாமா ஆற்றிய வுரையில், அமெரிக்கா, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் உரியது எனக் கூறினார்.

இந்து-விரோத நாத்திகம்: இந்து மதத்தில் இருந்து ஜாதியைக் கழித்து-விட்டால் கிடைப்பது பூஜ்யம். இந்து மதத்தின்-படி-யான சமுதாயம் படிநிலை ஏற்றத் தாழ்வைக் கொண்-டது என பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் கூறி-யுள்ளார். இந்தச் சமுதாயத்தை மாற்றியமைக்க வேண்டும். ஜாதிக்கு மூல காரணமான கடவுளை ஒழிக்கவேண்டும் என்றார் தந்தை பெரியார். பெரியார் கூறியுள்ளபடி, கடவுளை மறந்து மனித நலத்தை எண்ணி உழைக்கவேண்டும். அரசியல் வேற்றுமை கடந்து வலிமையான பகுத்தறிவு இயக்கத்தை நாம் வளர்க்கவேண்டும். தொலைக்காட்சி போன்ற நவீன சாதனங்கள்மூலம் நம் மனிதநேயப் பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பவேண்டும் என்று கூறினார்.

பகுத்தறிவினால் கல்வி கொடுக்கமுடியவில்லை: இந்தியாவில் பல கோடிப் பேர் போதுமான கல்வியறிவு பெற்றவர்களாக இல்லை.உலகத்தின் உணமைகளை அறியாதவர்களாக அவர்கள் உள்ளனர்.இதனால் அவர்கள் அர்ச்சகர்கள், மந்திர-வாதிகள், சாமியார்கள், பூசாரிகள், ஜோதிடர்-கள், குறி சொல்லிகள் போன்ற மதவாத சக்திகளால் நம் மக்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள். இதனால் மூட நம்பிக்கையில் பெரும்பாலான மக்கள் மூழ்கிக் கிடக்கின்றனர். சாதாரண மக்களை தந்திரமாக ஏமாற்றி அவர்களைச் சுரண்டி பிழைப்பதையே மதவாதிகள் தொழிலாக கொண்டுள்ளனர். இதுபோன்ற சமூகக் கிருமிகளிடமிருந்து அப்பாவி மக்களை காப்பாற்றுவதற்காக பொதுகூட்-டங்கள், கருத்தரங்குகள், கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவைகளை நடத்தி பொது-மக்களை விழிப்புணர்ச்சி பெற வைப்பது பகுத்தறி-வாளர்களின் கடமை ஆகும். 1976 இல் கொண்டு வரப்பட்ட 42 ஆவது இந்திய அரசமைப்புச் சட்டம் இதனை ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகவே வரையறுத்துள்ளது. ஆனால் அரசு அதிகார வர்க்கத்தில் உள்ள மூத்த அதிகாரி முதல் கடைநிலை ஊழியர் வரை இக்கடமையிலிருந்து விலகி நடப்பது வருத்தமளிக்கிறது. ஏவுகணைகள், ராக்கெட்டுகள் போன்ற விஞ்ஞானத்தின் உச்சபட்ச ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் கூட அதனை விண்ணில் செலுத்துவதற்கு முன் பூஜைகள் நடத்துகின்றனர் என்பது கேவலமான நடவடிக்கை ஆகும்.

அகில இந்திய பகுத்தறிவாளர் கழக (7FIRA) கூட்டமைப்பு மாநாட்டிற்கு திரண்டிருந்த பேராளர்கள் (சென்னை, பெரியார் திடல், 26.12.2009)

காவல் நிலையத்தில் ஆடு வெட்டுவதா? அதேபோல் மக்களைக் காப்பாற்றுவதற்காக உள்ள காவல் துறையினர் அவர்கள் பணி புரியும் காவல் நிலையங்களை ‘ஆவிகளிடமிருந்து’ காப்பாற்று-வதற்காக ஆடுகள் வெட்டிப் பலி கொடுக்கும் அநியாயங்களை என்ன சொல்வது! இவ்வாறு செய்வ-தன் மூலம் இதுவரை எந்தப் பிரச்சினைக்காவது தீர்வு கண்டார்களா? தீயவழிகளில் ஈடுபட்டு பணம் சம்பதிப்பவர்கள் அதற்கு பரிகாரம் தேடும் விதமாக அடுத்தவனின் பணத்தை வைத்து இவர்கள் கோயில்களுக்கு செலவு செய்து வரும் கொடுமை இங்கே தொடர்ந்து கொண்டிருக்கிறது.இது அவர்களால் நம்பப்படும் கடவுளுக்கு லஞ்சம் கொடுபதுதானே? சொல்லப்-போனால் மனிதனின் லஞ்ச நடவடிக்கை இது போன்ற கோயில் பூஜைகளிலிருந்துதான் தொடங்-கு-கிறது என்று கூறலாம். ஆனால் இதே காரியங்களை பகுத்தறிவாளர்கள் அணுகும் முறை முற்றிலும் வேறு-பட்டுள்ளது. பகுத்தறிவாளர்களால்தான் இது-போன்ற குருட்டு நம்பிக்கைகளை அழித்தொழித்து மக்களை விழிப்புணர்ச்சி அடையச் செய்ய முடியும். அதனால்-தான் தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட இந்த மகத்தான பணி மிகப் பெரிய மக்கள் இயக்கமாக மாறத் தொடங்கி உள்ளது என்று கூறினார். [முஸ்லிம்கள் மாடு, ஒட்டங்கள் வெட்டுவது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே ஏன்?]

அ.இ. பகுத்தறிவாளர் கூட்டமைப்பின் மாநாடு: அகில இந்தியப் பகுத்தறிவாளர் கூட்டமைப்பின் (திமிஸிகி) 7 ஆவது இந்திய மாநாடு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் இன்று (26.12.2009) காலை 11 மணிக்குத் தொடங்கியது. மாநாட்டுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெருமக்கள், பிரதிநிதிகள் வந்திருந்தனர். மாநாட்டுக்கு இவ்வமைப்பின் அகில இந்தியத் தலைவர் நரேந்திர நாயக் தலைமை வகித்தார். தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் வா. நேரு வரவேற்புரையாற்றினார். மாநாட்டுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு விழாக் குழுவினரால் சால்வை அணிவிக்கப்பட்டு சிறப்பு செய்விக்கப்பட்டது. தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகப் பொதுச்-செயலாளர் வீ. குமரேசன் நிகழ்ச்சிகளை ஒருங்-கிணைத்து இணைப்புரை வழங்கினார்.

நரேந்திர நாயக், தலைவர் உரை: கூட்டமைப்பின் தலைவரும், மாநாட்டின் தலைவருமான நரேந்திர நாயக் தமது தலைமை-யுரையில் குறிப்பிட்டதாவது: இக்கூட்டமைப்பின் நிறுவனர் பிரேமானந்த் அண்மையில் இறந்தார்; வழி-காட்டி-யாகத் திகழ்ந்தார், அவரை நினைவுகூர்வோம். இப்பொழுது இக்கூட்டமைப்பில் 70 அமைப்புகள் உள்ளன. அறிவியல் பார்வை, மனித நேயம், சமயச் சார்பின்மை ஆகியவை இக்கூட்டமைப்பின் நெறிகள். தெய்வீக அதிசயங்களை வெளிப்படுத்துவது எனத் தொடங்கியபொழுது பகுத்தறிவு இயக்கம் நன்கு தெரியப் படலாயிற்று. டாக்டர் ஆபிரகாம் கோவூர் இவ்வகையில் பல இடங்களில் செய்முறையின் மூலம் பகுத்தறிவுச் சிந்தனையைப் பரப்பினார். தமிழகத்தில் பகுத்தறிவு இயக்கம் மக்கள் இயக்கமாக வளர்ந்தது; பெரியாருக்கு வணக்கம் தெரிவிக்காதவர் தமிழக ஆட்சிக் கட்டிலில் எவரும் இலர். நம்மிடையே உள்ள வேற்றுமைகளை மறந்து, ஒன்றுபடுத்தும் கூறுகளைக் கொண்டு செயல்-படுவோம்.  இன்று, ஊடகங்கள் மூட நம்பிக்கையைப் பரப்பு-வோரிடம் உள்ளன. அறிவியலை அவர்கள் பயன்-படுத்துவது வருந்தத்தக்கது.  நாம் பல இடங்களுக்குச் சென்று அறிவியலைப் பரப்பவேண்டும்; அற்புதங்களைப் பொய்யெனக் காட்டவேண்டும். கருநாடகத்தில், ரவிசங்கர் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளை அரசே பாராட்டி வளர்ப்பது வேதனைக்குரியது. மந்திரமா? தந்திரமா? போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி போலித்தனங்களை, பொய்களை வெளிப்படுத்துகிறோம். ஆனால், புதிய பொய்கள் வளர்க்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ‘யோகா’ என்பது எல்லா நோய்களையும் குணப்படுத்தும் எனக் கூறத் தொடங்கியுள்ளனர். மூட நம்பிக்கையைப் பரப்புகிறவர்கள், அண்மைக்-காலத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். நாம் பகுத்தறிவைப் பயன்படுத்துவதற்கு அதைப் பயன்படுத்தவேண்டும். புதிய இளைய தலைமுறையை வளர்க்கவேண்டும் என்று கூறினார்.

நாத்திக மாநாடு மலர் வெளியீடு: மாநாட்டு மலரை விஜயவாடா நாத்திக மய்ய இயக்குநர் டாக்டர் விஜயம் வெளியிட்டார். தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகப் புரவலர் கி. வீரமணி, பி. சந்தர் (நியூடெல்லி) ஆகியோர் மலரைப் பெற்றுக்கொண்டனர்.

இன்று (26.12.2009) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற அகில இந்திய பகுத்தறிவாளர் கழக (7tலீ திமிஸிகி) கூட்டமைப்பு மாநாட்டில் சிறப்பு மலரை விஜயவாடா நாத்திக மய்ய நிருவாக இயக்குநர் டாக்டர் ஜி.விஜயம் வெளியிட்டார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பி.சந்தர் (டெல்லி) ஆகியோர் மலரை பெற்றுக் கொண்டனர்.

….

திராவிடப் பெண்மையின் மதசார்பின்மை!

திசெம்பர் 12, 2009

திராவிடப் பெண்மையின்  மதசார்பின்மை!

திராவிட பாரம்பரயம், சம்பிராதயம், கலாச்சாரம் மற்றும் நாகரிகம் பேசும் புரட்சிப் பெண், கலைஞரின் வழித்தோன்றல், சித்தர்களுக்கும் புதுவிளக்கம் கொடுக்கும் “வார்த்தை பெண்-சித்தர்”, திருமதி கனிமொழியின் சமத்துவம், சகோதரித்துவம், மதசார்பின்மைப் பற்றி யாரும் பேசுவதாகத் தெரியவில்லை!

ஊடகங்கள் ஒரு தனிப்பட்ட பெண்ணிற்கு, அரசியல் ரீதியாக, மற்ற சமூக நிகழ்வுகள், மற்ற பிரச்சினகளில் இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, அதுவும் தமிழகத்லிருந்து தேந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற அங்கத்தினராக இருக்கும் அவரது பேச்சு, எழுத்து மற்றும் சமூக உரையாடல்கள் முதலியவற்றை ஒதுக்கிவிடமுடியாது.

தமிழகப் பெண்களின் “பெண்களை”ப் பற்றிய மனப்பாங்கு அலாதியானது. “பெண்ணென்றால் பேயும் இரங்கும்” என்பது தமிழ் பழமொழி!

“பேய்” உள்ளதா இல்லையா என்பது திராவிட நாத்திகத்தில் சர்ச்சையில் இருக்கலாம். ஆனால் பெரியார், அண்ணா முதலியோர்களின் ஆத்மாக்களை நம்புகிறார்கள்!  அவர்களது ஊடகங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம், ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்து வருகின்றன!

இந்நிலையில், கனிமொழி இந்த இடைத்தேர்தல் நேரத்தில் உலா வருகிறார். அதைப் பற்றி யாரும் கவலைப் படபோவதில்லை, ஆனால்  ரம்ஜான் கஞ்சி குடித்து உளறும் பணியில் அம்மையார் இப்பொழுது தந்தையைப் பின்பற்றுவதால், அவரது முக்கியத்துவம் வருகிறது.

kanimozhi-kaayalpatnam-muslims

கனிமொழி முஸ்லிம் பெண்களுடன் கலந்துரையாடுதல்!

இதே மாதிரி, சமத்துவம், சகோதரித்துவம், மதசார்பின்மை ரீதியாக இவர் மற்ற மத / சமயப் பெண்களுடன் “கலந்துரையாடல்களை” மேற்கொண்டுவருகிறாரா என்று தெரியவில்லை!

முஸ்லிம் பெண்களுடன் பிரச்சினைகள் பற்றி உரையாடல்

முஸ்லிம் பெண்களுடன் பிரச்சினைகள் பற்றி உரையாடல்

இது தேர்தல் “தேர்ந்தெடுப்பு”ப் பாரபட்சமா, அரசியல்-வேறுபாடா, மத-வித்தியாசமா, திராவிட-பாகுபாடா…..எந்த கொள்கை என்று தெரியவில்லை!

இச்சகோதரியின் “சகோதரித்துவம்’ புரியவில்லை!