Archive for the ‘தேசதுரோகம்’ Category

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும் – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (1)

மே 15, 2022

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும் தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (1)

தமிழகத்தில் இரண்டாவதாக அதிக தேசதுரோக வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன: தமிழகத்தில் கடந்த 2010 முதல் 2020ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் அதிகளவு தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதால், நாட்டிலேயே 2வது இடத்தை பெற்றுள்ளது[1]. இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது[2] என்று தினகரன் கூறுவது வேடிக்கைதான். தேச துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவு குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு  தரப்பு வாதாடி வந்தது. ஆனால், இந்தச் சட்டம் தவறாகப்  பயன்படுத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஒன்றிய அரசின் தரப்பில் கூறப்பட்டது. அதனால், தற்போது நிலுவையில் இருக்கும் தேசதுரோக வழக்குகளையும், இடைப்பட்ட காலத்தில் பதிவு செய்யப்பட்ட தேசதுரோக வழக்குகளையும் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விபரங்கள் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசப் படுவது புதியதல்ல: அதிமுக ஆட்சியில் அதிகம், திமுக ஆட்சியில் அதிகம் / குறைவு என்பதெல்லாம் விசயமே இல்லை, ஏனெனில், தமிழ்-தமிழ்நாடு-தமிழ்தேசம்-தமிழ்தேசியம் என்றெல்லாம் பேசி பிரிவினைவாதத்தில், பிரிவினையில் ஈடுபட்டவர்கள், ஈடுபட்டு வருபவர்கள் அதிகமாக இருக்கின்றனர். கருணாநிதி முதலமைச்சராக இருந்த பொழுது அத்தகையோரின் மாநாடுகளுக்கு தடை விதித்துள்ளனர். கொடைக்கானல் டிவி நிலையத்தில் குண்டுவெடிப்பு, மீன்சுருட்டியில் இந்தியன் வங்கி கொள்ளை-கொலை……போன்றவை ஞாபகத்தில் கொள்ளலாம். தமிழீழம் போர்வையிலும், பல குழுக்கள் செயல் பட்டு வந்தது-வருபவை அறியப் பட்டவையே. இப்பொழுது கிலாபா போர்வையில் முஸ்லிம் குழுக்கள் வேலை செய்து வருகின்றன. ஆகவே, தமிழகத்தில் “ஒன்றிய” போர்வையில் நடந்து வரும் பேச்சுகளும் கவனிக்கப் பட்டு வருகின்றன. “மாநில சுயயாட்சி,” “திராவிடியன் ஸ்டாக்,” “திராவியன் மாடல்” என்பவை எல்லாம் அவற்றின் முகமூடிகளே. ஏனெனில், இப்பொழுது இனம், இனவாதம் எல்லாம் யாரும், எந்நாடிலும் பேசுவதில்லை.

ஐபிசியின் பிரிவு  124ன் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு: தேசதுரோக வழக்கின்படி, எந்தவொரு நபரும் அரசுக்கு எதிரான கருத்துக்களை எழுதினாலோ அல்லது பேசினாலோ அல்லது அத்தகைய உள்ளடக்கத்தை ஆதரித்தாலோ அல்லது தேசிய சின்னங்கள் மூலம்  அரசியலமைப்பை இழிவுபடுத்த முயன்றால், அவர் மீது ஐபிசி-யின் பிரிவு  124ஏ-ன் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படலாம். மேலும், தேச விரோத அமைப்போடு தொடர்புடையவராகவோ அல்லது அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டால் அவருக்கு எதிராகவும் தேசத்துரோக வழக்கு பதிய முடியும். இந்நிலையில், தேசத் துரோகச் சட்டம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது என்று தினகரன் குறிப்பிடுவது தமாஷான விசயம் தான். எல்லாவற்றையும் அதிமுக ஆட்சியின் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த ஐந்தாண்டுகள் பற்றி, பிறகு தான் எடைபோட முடியும். தங்களுக்குத் தானே சான்றிதழ் கொடுத்துக் கொள்ளலாம், ஆனால், மக்களை ஏமாற்ற முடியாது.

2010-2022 ஆண்டுகளில் பதிவான வழக்குகள் எண்ணிக்கை: நாடு முழுவதும் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அதிகளவு தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்த மாநிலமாக பீகார் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை, பீகாரில் மட்டும் 168 தேசதுரோக வழக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து –

தமிழ்நாட்டில் – 139, உத்தரப் பிரதேசத்தில் – 115, ஜார்கண்ட்டில் -62, கர்நாடகாவில் – 50, ஒடிசாவில் – 30, அரியானாவில் – 29, ஜம்மு காஷ்மீரில் – 26,மேற்குவங்கத்தில் – 22, பஞ்சாப்பில் – 21, குஜராத்தில் – 17, இமாச்சல் பிரதேசத்தில் – 15, டெல்லியில் – 14, லட்சத்தீவில் – 14, கேரளாவில் – 14

என்ற வரிசையில் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் திமுக அரசு பெருமைப் பட்டுக் கொள்வதில் ஒன்றும் இல்லை. இந்த ஒரு வருடத்தில், இந்துவிரோத செயல்கள் எவ்வளவு நடந்துள்ளன என்பதை கவனிக்கலாம். அவையெல்லாம் பெருமை சேர்ப்பவை அல்ல. ஒரு நிலையில் அவையும் தேசவிரோதம் ஆகும்.

வழக்குகள் அதிகம், ஆனால், குற்றம் நிரூபிக்கப் படுவது குறைஆக உள்ளது: மேலும், கடந்த 2016 மற்றும் 2019 ஆண்டுக்கு இடையில், தேசத்துரோக வழக்குகளின் எண்ணிக்கை 160 சதவீதம் (93 வழக்குகள்) அதிகரித்துள்ளது. ஆனால் 2019ம் ஆண்டில் தண்டனை விகிதம் என்று பார்த்தால் 3.3 சதவீதமாக உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 93 பேரில் இருவர் மட்டுமே குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தை பொருத்தமட்டில் 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அதிகளவு தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த காலக் கட்டத்தில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது, என்று தினகரன் குறிப்பிட்டு சந்தோசப்படுகிறது. ஆனால், திமுகவின் பிரிவினைவாதம் உலகம் அறிந்தது. இப்பொழுதைய “ஒன்றிய” நிலை தொடர்ந்து, கவர்னர் தாக்கப் பட்டால், த்ஹிராவிடியன் மாடல் தகர்ந்து விடும். சடம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருந்தால், முடிவு வேறு மாதிரி சென்று விடும்..

152 ஆண்டுகள் பழமையான தேசவிரோத சட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்தது: 152 ஆண்டுகள் பழமையான தேசவிரோத சட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது[3]. 124 ஏ சட்டத்தின் கீழ் வழக்கு பதியவும் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், தேச துரோக சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளவர்கள் ஜாமீன் பெற விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளது[4]. ஆங்கிலேயே காலனிய ஆட்சியின்போது அரசுக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் விதமாக தேசத்துரோக வழக்குகள் பதியப்பட்டன. நாடு விடுதலை பெற்ற பின்னரும் காலனிய சட்டமான தேசத் துரோக வழக்கு பதியப்பட்டு வருகிறது.இந்நிலையில், அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது  124A சட்டப்பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்குப் பதியப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. எனவே, காலனியத்துவ தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவான 124A-ஐ ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது.

பத்திரிக்கை சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன: தேச துரோக சட்டத்துக்கு தடைகோரி எடிட்டர்ஸ் கில்டு, பத்திரிக்கையாளர் அருண் சோரி, எம்பி மௌவா மைத்ரா, பி.யு.சி.எல் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. வழக்கு 11-05-2022 அன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசும் மாநில அரசுகளும் தேச விரோத சட்டத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது[5]. தலைமை நீதிபதி அமர்வு, அதனையும் மீறி ஏதேனும் வழக்குகள் எங்காவது பதிவு செய்யப்பட்டால் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டது[6]. இதுதொடர்புடைய வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த சட்டத்தை பயன்படுத்தாமல் இருக்க மத்திய அரசு மாநிலங்களுக்கு கூடுதல் ஆலோசனைகளை வழங்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட 13 ஆயிரம் பேர் நீதிமன்றங்கள் மூலம் ஜாமின் பெற்றுக்கொள்ளவும் உச்சநீதிமனறம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

© வேதபிரகாஷ்

15-05-2022


[1] தினகரன், 2010 முதல் 2020ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் தேச துரோக வழக்கு பதிந்ததில் தமிழ்நாடு 2வது இடம்: சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு மத்தியில் அதிர்ச்சி தகவல், 2022-05-11@ 15:05:14.

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=764520 

[3] NEWS18 TAMIL, தேச துரோக வழக்கு பதிய உச்ச நீதிமன்றம் தடை.. சட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு, Published by:Murugesh M, LAST UPDATED : MAY 11, 2022, 13:41 IST. First published: May 11, 2022, 13:40 IST.

[4] https://tamil.news18.com/news/national/breaking-sedition-law-in-abeyance-supreme-court-urges-centre-states-not-to-file-firs-invoking-section-124a-mur-743986.html

[5] தமிழ்.இந்தியன்.இக்ஸ்பிரஸ், அரசு மறுபரிசீலனை செய்யும் வரை தேச துரோக விசாரணையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!, Written by WebDesk, Updated: May 11, 2022 10:05:24 pm

[6] https://tamil.indianexpress.com/india/supreme-court-interim-order-on-sedition-section-124a-centre-452724/

திராவிட மொழி பேசும் திராவிட இனத்தவர் பலூச்சிஸ்தான் மக்கள் ஜின்னா சிலையைத் தகர்த்துள்ளனர் – தமிழகத்தில் இருக்கும் இனமானத் தலைவர்கள், திராவிடியன் ஸ்டாக் வகையறாக்கள் என்ன செய்வார்கள்?

செப்ரெம்பர் 28, 2021

திராவிட மொழி பேசும் திராவிட இனத்தவர் பலூச்சிஸ்தான் மக்கள் ஜின்னா சிலையைத் தகர்த்துள்ளனர் – தமிழகத்தில் இருக்கும் இனமானத் தலைவர்கள், திராவிடியன் ஸ்டாக் வகையறாக்கள் என்ன செய்வார்கள்?

ஜின்னா சிலை தகர்க்கப் பட்டது
இந்த தாக்குதலுக்கு பலுாச் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்

பாகிஸ்தானின் அடக்குமுறைகளை பலூச்சிஸ்தான் எதிர்த்து வருகின்றது: நம் அண்டை நாடான பாகிஸ்தான் நிறுவனரான முகமது அலி ஜின்னா, அந்த நாட்டின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி ஏற்றார். காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், 1948ல் காலமானார். இவர் தன் கடைசி நாட்களில் வசித்து வந்த குடியிருப்பு கட்டடம், தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 121 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடம், பலுாசிஸ்தான் மாகாணத்தின் ஜியாரத் பகுதியில் இருந்தது. எனினும் 2013ல் பலுாச் பயங்கரவாதிகளால் அந்த கட்டடம் தகர்க்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது. இதில், அந்த கட்டடம் முழுதும் சேதமடைந்தது. பாகிஸ்தானின் நான்கு மாநிலங்களில் பலூச்சிஸ்தானும் ஒன்று. இம்மாநிலத்தவர் தனிநாடு கேட்டுப் போராடி வருகிறனர்[1]. இதனால், அவ்வப்பொழுது, தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப் பட்டு வருகின்றன[2]. பலுசிஸ்தானின் துறைமுக நகரான குவாதரில் பாதுகாப்பு மிகுந்த மெரைன் டிரைவ் பகுதியில் கடந்த ஜூன் மாதம் முகமது அலி ஜின்னாவின் சிலை நிறுவப்பட்டது[3]. கடற்கரை பகுதியான இங்கு, சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். விடுமுறை நாட்களில் உள்ளூர் மக்களின் கூட்டமும் இருக்கும். இந்நிலையில் 26-09-2021 காலையில் சிலைக்கு அடியில் குண்டு வெடித்ததில் சிலை வெடித்து சிதறியது[4].

சிலை அடியில் குண்டு வைத்துத் தகர்த்தார்கள்
ஜூன் 2021ல் தான் அச்சிலை நிறுவப்பட்டது

ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினத்தில் குண்டு வைத்து தகர்க்கப் பட்டது: பலூச்சிஸ்தான் மாகாணத்தின் குவாடர் பகுதியில் முகமது அலி ஜின்னாவின் சிலை வைத்தது அங்குள்ள மக்களுக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில், பாகிஸ்தான் வலுக்கட்டாயமாக, தங்களது பகுதியை பகிஸ்தானுடான் இணைத்து விட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். இதனால், 26-09-2021 அன்று குண்டு வைத்து தகர்க்கப் பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது[5]. இந்த தாக்குதலுக்கு பலுாச் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்[6]. சுற்றுலா பயணியர் அதிகம் கூடும் கடற்கரை நகரமான இங்கு, சமீபத்தில் தான் இந்த சிலை நிறுவப்பட்டது[7]. இதுகுறித்து குவாதர் துணை ஆணையரான ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் அப்துல் கபீர் கான் கூறும்போது, “சுற்றுலாப் பயணிகளை போல அப்பகுதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள், ஜின்னாவின் சிலையை குண்டு வைத்து தகர்த்துள்ளனர். இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை[8]. இந்த சம்பவத்தை அனைத்து கோணங்களிலும் விசாரிக்க விரும்புகிறோம்[9]. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படு வார்கள்,” என்றார்[10]. இந்த சிலை தகர்ப்பு சம்பவம் குறித்து, உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, பாக்., ராணுவம் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது[11]. வழக்கம் போல, உண்மையினை வெளியிடாமல், “தீவிரவாதிகள் கைவரிசை: பாகிஸ்தானில் ஜின்னா சிலை தகர்ப்பு,” என்றெல்லாம் செய்திகள் வெளியிடப் பட்டுள்ளது[12].

உலக சுற்றுலா தினம் கொண்டாடும் நேரத்தில் உடைக்கப் பட்டது.
பலூச்சிஸ்தான் என்பது, பாகிஸ்தானை விட பெரிய பிரதேசம் ஆகும். அது கிழக்கில் பாகிஸ்தான், வடக்கில் ஆப்கானிஸ்தான், மேற்கில் ஈரான், தெற்கில் அரபிக் கடல் என்று பெரிய பிரதேசமாக இருக்கிறது.
பராஹவி மொழி (Brahui language, بروہی) அல்லது பிராவி மொழி (براوِ) பராஹவி இனத்தவரால் பேசப்படுகிறது. இது சிறிய அளவில் ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது ஆயினும், பாகிஸ்தானின், பலூச்சிஸ்தான் மாகாணத்திலேயே பெருமளவில் புழங்கி வருகிறது. 2005 ஆம் ஆண்டில் எத்னோலாக் பதிப்பில் 22 லட்சம் எனக் கணிக்கப்பட்டுள்ள இதன் பேசுவோர் தொகையில் 90 வீதமானோர் பாகிஸ்தானிலேயே உள்ளனர்.

26—09-2021 ஞாயிற்றுக் கிழமை, 27-09-2021 உலக சுற்றுநாள் தினம்: பாகிஸ்தானியர் உலக சுற்றுலா தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடி இருக்கின்றனர் போலிருக்கிறது. சுற்றுலா பயணிகள் என்று, குவாதர் என்ற கடற்கரை நகரத்தில், மரைன் டிரைவ் இடத்திற்கு வந்துள்ளனர். அங்கிருக்கும் மொஹம்மது அலி ஜின்னாவின் சிலைக்குக் கீழ் குண்டை வைத்துத் தகர்த்துள்ளனர்! ஜின்னா சிலை ஜூன் 2021ல் தான் மரைன் டிரைவ் கடற்கரையில் நிறுவப் பட்டது. இதனை, பலோக் / பலூச்சி மக்கள் விரும்பவில்லை. இதனால் பலூச்சிஸ்தான் லிபரேஷன் பார்ட்டி / பலூச்சிஸ்தான் விடுதலை வேண்டி போராடும் கட்சி குண்டு வைத்துத் தகர்த்துள்ளது. தாங்கள் தான் அவ்வாறு செய்தோம் என்றும் ஒப்புக் கொண்டுள்ளது! பலூச்சிஸ்தான் என்பது, பாகிஸ்தானை விட பெரிய பிரதேசம் ஆகும். அது கிழக்கில் பாகிஸ்தான், வடக்கில் ஆப்கானிஸ்தான், மேற்கில் ஈரான், தெற்கில் அரபிக் கடல் என்று பெரிய பிரதேசமாக இருக்கிறது. சர்ப்ராஸ் பகுடி என்ற பலூச்சிஸ்தான் செனேடர், இது பாகிஸ்தானின் சித்தாந்தத்திற்கு எதிரான தாக்குதல்! ஜின்னாவின் வீட்டைத் தாக்கியவர்கள் எவ்வாறு தண்டிக்கப் பட்டனரோ, அதே போல, இவர்களும் (ஜின்னா சிலையைத் தகர்தவர்களும்) தண்டிக்கப் பட வேண்டும் என்று கொதித்து, டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்!

ஈவேரா நாயக்கரை ஜின்னா நன்றாக ஏமாற்றினார், அண்ணா ஒத்து ஊதினார் ஆனால், திராவிடஸ்தானம் செய்த்து விட்டது: 1940ல் ஜின்னா வீட்டில், ஜின்னா, ஈவேரா, அம்பேத்கார் கூடி பேசி, இந்தியாவைத் துண்டாட திட்டம் போட்டனர். அப்பொழுது அண்ணாதுரை முதலியோரும் கூட இருந்தனர். அம்பேத்கர், இது நமக்கு உதவாது என்று ஒதுங்கி விட்டார். ஆங்கிலேயர் அமைச்சர் பதவி கொடுத்தது. ஜின்னா, ஈவேராவுக்கு நோஸ்-கட் கொடுத்தார், அதாவது, தான் முஸ்லிம் என்பதால், முஸ்லிம்களுக்குத் தான் பாடுபடுவேன் என்று எழுத்து மூலமே தெரிவித்து சாடினார். அண்ணாவே இனம் இனத்தோடு சேரும் என்றெல்லாம் வாய்-சவடால் மூலம் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார். கடைசியில் ஜின்னாவுக்கு பகிஸ்தான் கிடைத்தது. அன்ணா பிரிந்து போன போது, ஈவேராவோ, அண்ணாவோ திராவிட உணர்வுடன், திராவிட மொழி பேசும் பலூச்சிஸ்தான் மக்களுக்குக் குரல் கொடுக்கவில்லை. “அடைந்தால் திராவிட நாடு, இல்லையென்றால் சுடுகாடு,” என்றெல்லாம் வசனம் பேசிக் கொண்டிருந்தார். பெரியாரான, ஈவேராவும் அவ்வப்பொழுது கலாட்டா செய்து கொண்டிருந்தார். யாரும் கண்டுகொள்ளவில்லை. நேரு மிரட்டியதில், பயந்து போன அண்ணா, திராவிட நாடு கொள்கையில் குப்பைத் தொட்டியில் போட்டு, தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சர் ஆனார்.

திராவிடத்துவத்தில் ஊறிய கருணாநிதியும் கண்டுகொள்ளவில்லை: கருணாநிதி எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற திட்டத்தில் இருந்ததால், முகமது இஸ்மாயிலுடன் தாஜா செய்து, முஸ்லிம் ஓட்டைத் தாக்க வைத்துக் கொண்டார். நெடுஞ்செழியன் முதலியாரை ஓரங்கட்டினார். மாநில சுயயாட்சி என்று அவ்வப்பொழுது ஊதிக் கொண்டிருந்தார். ஆனால், திராவிட மொழி பேசும் பலூச்சிஸ்தான் மக்களுக்குக் குரல் கொடுக்கவில்லை. அப்படி செய்தால் முஸ்லிம் லீக் கழட்டி விடும் என்று நன்றாகத் தெரியும். ஆக, திராவிடப் பாட்டைப் பாடிக் கொண்டு, துலுக்கருடன் ஆட்டம் போட்டு வந்தார். அது கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகளிலும், கைதிகளை விடுதலை செய்ததிலிருந்தும் நன்றாகவே வெளிப்பட்டது. தமிழே, தமிழின் உயிரே, உயிரின் மூச்சே, மூச்சின் வாசமே, வாசத்தின் இருப்பிடமே என்றெல்லாம் அடுக்கிக் கொண்டு போவார்கள். திராவிட நாடு அம்போ தான்.

2021ல் ஸ்டாலின், திராவிடியன் ஸ்டாக் என்று கிளம்பியுள்ளார்: முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற நான் என்று பதவியேற்று, தான் திராவிடியன் ஸ்டாக் என்று குறிப்பிட்டுக் கொண்டாலும், விளம்பர அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான், திராவிட மொழி பேசும், தனிநாடு கேட்கும், திராவிட இனத்தவரான பலூச்சிஸ்தான் மக்கள் ஜின்னாவில் சிலையை தகர்த்துள்ளனர். இங்கு, கருணாநிதிக்கும், பெரியாருக்கும் சிலைகள் வைப்போம் என்று கிளம்பியுள்ளனர். பிரஹூயி, பிரோஹி, பிரஹூய், என்றெல்லாம் குறிப்பிடப் படுகின்ற மொழி திராவிடக் குடும்ப மொழி என்று திராவிடத்துவ வாதிகள் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள், இன்றும் மேடைகளில் டமாரம் அடிக்கிறார்கள்! பிறகு, அம்மொழி பேசும் மக்களைக் கொடுமைப் படுத்தும் பாகிஸ்தானை ஏன் திராவிடத்துவ வாதிகள் கண்டு கொள்வதில்லை?

ஸ்டாலின் திராவிட மொழிபேசும் திராவிட இனமக்களை ஆதரிப்பாரா, எதிர்ப்பாரா?: பராஹவி மொழி (Brahui language, بروہی) அல்லது பிராவி மொழி (براوِ) பராஹவி இனத்தவரால் பேசப்படுகிறது. இது சிறிய அளவில் ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது ஆயினும், பாகிஸ்தானின், பலூச்சிஸ்தான் மாகாணத்திலேயே பெருமளவில் புழங்கி வருகிறது. 2005 ஆம் ஆண்டில் எத்னோலாக் பதிப்பில் 22 லட்சம் எனக் கணிக்கப்பட்டுள்ள இதன் பேசுவோர் தொகையில் 90 வீதமானோர் பாகிஸ்தானிலேயே உள்ளனர். சிந்து, பலூச்சிஸ்தான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முப்பதுக்கு மேற்பட்ட இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். பிரஹூ / பிராகுவி மொழி பேசும் மக்களைக் கொடுமைப் படுத்தும் பாகிஸ்தானை ஏன் திராவிடத்துவ வாதிகள் கண்டு கொள்வதில்லை? நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று பெருமை பேசிய, ஸ்டாலின், ஜின்னா சிலை தகர்த்த திராவிட மொழி பேசுபவர்களை எதிர்ப்பாரா, ஆதரிப்பாரா? இனமான திராவிடத் தலைவர் வீரமணி இதையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை. நாகநாதன், ஜகதீசன், கருணானந்தன், சுப.வீரப்பாண்டியன், கலி.பூங்குன்றன், விடுதலை ராஜேந்திரன் முதலியோர் என்ன செய்வார்கள் என்று பார்ப்போம்!

© வேதபிரகாஷ்

28-09-2021


[1] தினத்தந்தி, பாகிஸ்தானை தோற்றுவித்த முகமது அலி ஜின்னாவின் சிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்பு, பதிவு: செப்டம்பர் 27,  2021 15:08 PM

[2] https://www.dailythanthi.com/News/World/2021/09/27150825/Bomb-blast-at-the-statue-of-Muhammad-Ali-Jinnah-the.vpf

[3] தமிழ்.இந்து, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜின்னா சிலை தகர்ப்பு: தீவிரவாதிகள் அட்டூழியம், செய்திப்பிரிவு, Published : 28 Sep 2021 03:17 AM; Last Updated : 28 Sep 2021 05:50 AM.

[4] https://www.hindutamil.in/news/world/720754-jinnah-statue-in-gwadar-blown-up-using-explosives.html

[5] தினமலர், ஜின்னா சிலை பாக்.,கில் தகர்ப்பு, Added : செப் 28, 2021  02:04

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2855012

[7] நியூஸ்7தமிழ், முகமது அலி ஜின்னா சிலை தகர்ப்பு: தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு, by EzhilarasanSeptember 28, 2021

[8] https://news7tamil.live/jinnahs-statue-destroyed-in-blast-in-pakistans-balochistan-bla-claims-responsibility.html

[9] மாலைமுரசு,முகமது அலி ஜின்னா சிலை குண்டு வைத்து தகர்ப்பு…  தாக்குதலுக்கு பலுாச் பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு.., webteamSep 28, 2021 – 07:23Updated: Sep 28, 2021 – 07:24.

[10] https://www.malaimurasu.com/posts/worldnews/Mohammed-Ali-Jinnah-statue-bombed

[11] தினகரன், தீவிரவாதிகள் கைவரிசை: பாகிஸ்தானில் ஜின்னா சிலை தகர்ப்பு, 2021-09-28@ 00:02:47

[12] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=708283

பகவத் கீதை, கிருஷ்ண தூஷணம், திரிபு விளக்கம், இந்துவிரோதக் கூட்டங்களின் தொடரும் சட்டமீறல்கள்! [1]

ஜூலை 29, 2020

பகவத் கீதை, கிருஷ்ண தூஷணம், திரிபு விளக்கம், இந்துவிரோதக் கூட்டங்களின் தொடரும் சட்டமீறல்கள்! [1]

EVR and RSS

இந்துவிரோதிகளும், இந்துத்துவவாதிகளும்: ஜூலை 11, 2020ல் வீரமணி மறுபடியும் அதே தூஷணத்தை செய்திருப்பதால், இதனை விளக்கமாக எழுத வேண்டிய அவசியம் உண்டாகி உள்ளது.  “இந்துத்துவம்” பேசிக் கொண்டு, தம்மை “இந்துவவாதிகள்,” என்று சொல்லிக் கொண்டு, இந்துமதத்தினையே தாங்கள் தான் காத்து வருகின்றது போலக் காட்டிக் கொண்டாலும், திடீரென்று, “பெரியார் கொள்கை தான் எங்கள் கொள்கை,” என்றெல்லாம் பேசியிருப்பது திகைப்படையச் செய்கிறது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதரவில்லாமல், அரசு-அதிகாரம் பெறமுடியாது என்றதால், இவ்வாறு சமரசம் செய்து கொள்கின்றனரோ என்ற சந்தேகமும் எழுகிறது. இந்து, இந்து நலன், இந்து பாதுபாப்பு முதலியவை, குறுகிய “அரசியல்,” அரசியல் கூட்டணி, அரசியல் ஆதாயம் போன்றவற்றில் சிக்க வைத்து, குறுக்கி விட முடியாது. அதனால் தான், மற்றுக் கருத்து கொண்டவர்கள், விவரங்களை எடுத்துக் கொண்டு, அரைகுறையாக புரிந்து கொண்டு, தூஷித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Bhagawat Gita, tilakk, Sedition
பகவத் கீதை எதிர்ப்புஆந்நியர் ஆட்சி முதல் திராவிட ஆட்சி வரை: பகவத் கீதையினை இந்துக்கள் ஆதரிப்பது அறிந்து, அதனை தூஷித்து புத்தகத்தை எழுதுவது, பேசுவது, தூஷிப்பது புதியதல்ல. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே, பகவத் கீதையை எதிர்த்து பிரச்சாரம் நடந்தது. சுமார் 150 ஆண்டு காலமாக இது நடந்து வருகிறது. தேசதுரோக அறிக்கை கமிட்டி, “பகவத் கீதை வன்முறையைத் தூண்டுகிறது,” அதனால், அதனை தடை செய்யவும் முற்பட்டது[1]. இந்திய புத்தகங்கள் ஸ்காட்லான்ட் யார்டுக்கு அனுப்பப் பட்டு புலன் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டது[2]. 1896ல் பிளேக்கினால் கோடிக் கணக்கான மக்கள் இறந்த போது, ஆங்கிலேயர் உகந்த நடவடிக்கை எடுக்காததால், திலகர் “கேசரி”யில் அவர்களைத் தாக்கி எழுதினார். 1659ல் சிவாஜி எப்படி ஒரு முகலாய தலபதியைக் கொன்றார் என்று குறிப்பிட்டார். பிறகு, ஆர்பாட்டக் காரர்கள், ஒரு ஆங்கிலேய அதிகாரியைக் கொன்றனர். அதனால், திலகருக்கு ஆறுவருடம் தீவாந்திர தண்டனை கொடுக்கப் பட்டது. இதனால், ஆங்கிலேயர் அவருக்கு திலகருக்கும், காந்திக்கும் இடையிலேயே கீதை ஆதரிப்பு-எதிர்ப்பு விவாதம் நடந்தது. காந்தி உண்மையில் கீதையை ஆதரிப்பது போல காட்டிக் கொண்டு, எதிர்க்கவே செய்தார்.  திலகர் வழக்கை வைத்துப் பார்த்தால், இப்பொழுது, வன்முறையினைத் தூண்டுபவர்கள், இந்துவிரோத திரவிடத்துவ, பெரியாரிஸ, கம்யூனிஸ, துலுக்கக் கூட்டங்கள் தான். அவ்வப்பொழுது, பெயரை மாற்றிக் கொள்கின்றன, ஆனால், வேலை செய்வது, ஊக்குவிப்பது அவர்கள் தான்.

Tilak argued his sedition case 1918

சமீபத்தைய எதிர்ப்புகள்: இந்திய வரலாற்றுப் பேரவை போன்ற கம்யூனிஸ-துலுக்க ஆதரவு அமைப்புகள் அத்தகைய ஆய்வுக் கட்டுரைகளை ஊக்குவித்தன[3]. அவ்வப்போது, ஆங்கிலத்தில், செய்திகள் வந்து கொண்டிருக்கும். சிலர், அரைகுறையாக திரித்து விளக்கம் கொடுப்பர்[4]. அவையெல்லாம் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கும், இன்றும் வந்து கொண்டிருக்கின்றன[5]. போதாகுறைக்கு, பகவத் கீதை, பௌத்தத்திலிருந்து காபியடித்து எழுதப் பட்டது என்றெல்லாம் சில ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். 2012ல் ரஷ்யாவில் தடை செய்யப் பட வேண்டும் என்று வழக்கு தொடரப் பட்டது, ஆனால், நீதிமன்றம் தள்ளுபடி செய்தது[6]. சென்ற வருடம் அண்ணா பல்கலைக் கழகத்தில், சேர்க்கப் பட்டது என்றபோதும், பிரச்சினையைக் கிளப்பினர்[7]. உண்மையில், பிளாடோ போன்றவர்களின் தத்துவத்துடன், இந்திய தத்துவத்தையும் படிக்க ஏற்பாடு செய்தபோது, எதிர்ப்புத் தெரிவித்தனர்[8]. எப்படி சைவ-வைணவ சர்ச்சை, சண்டை, எதிர்ப்புகள் இலக்கியங்களாக வெளிப்பட்டபோது, அவை மற்றவர்களால் சாதகமாக உபயோகித்துக் கொண்டார்களோ, அதேபோல இந்த விவரங்களை வைத்துக் கொண்டு, தன்னுடைய காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் முதலியவற்றைச் சேர்த்து இப்புத்தகத்தை வீரமணி எழுதித் தள்ளினார். இந்துஎதிர்ப்பு ஒன்றையே பிரதானமாக வைத்துக் கொண்டு, வீரமணி கூட்டம் திரும்பத் திரும்ப இந்த பிரச்சாரத்தை செய்து வருகின்றது. மேலே குறிப்பிட்ட இந்துவிரோத குப்பைகளை அள்ளிக் கொண்டு, இங்கு குப்பைக் கொட்ட முயல்கிறது இந்துவிரோதக் கூட்டம்.

Bhagawat Gita, tilakk, Sedition.s.24A1

ஜூலை 2020 – நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா காணொலியில் வீரமணி பேசியது[9]: “பகவத் கீதை ஏன், எதற்காக?” என்ற சிறிய நூலை வாங்கி நீங்கள் மேலும் விரிவாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி காணொலி மூலம் உரையாற்றியது[10], “இது உங்களையெல்லாம், நம்மையெல்லாம் குழப்புகிறது என்று மட்டும் நினைக்காதீர்கள். அர்ஜுனனையே குழப்புகிறது. கீதையிலேயே அதைச் சொல்லியிருக்கின்றான். கீதையினுடைய அத்தியாயம் மூன்றுசுலோகம் இரண்டிலே அர்ஜுனன் சொல்லுகிறான்:

ஜனார்த்தனா! (ஜனார்த்தனன் என்றால் கிருஷ்ணன்) என் னைக் குழப்பாதே!” கெஞ்சுகிறான் உனது பேச்சுக்கள் அனைத்தும் குழப்பமாய் இருக்கின்றன. குழப்பம் உண்டாவதால் எனது மதி மயங்குகிறதுமதிமயங்காமல் வேறு என்ன செய்யும்?…….”ஏதாவது ஒன்றைச் சொல்லி இதுதான் உயர்ந்தது என்று சொல். நான் அதைப் பின்பற்றுகிறேன். இல்லாவிட்டால் ஆளைவிடு. என்னைப் போட்டு குழப்பு குழப்பு என்று குழப்புகிறாயே!

உலகம் முழுவதும் எத்தனையோ தத்துவ ஞானிகள் படித்து பொருள் கொடுத்துள்ளாற்கள். ஆனால், இத ஆளுக்கு மட்டும் இப்படி தோன்றுகிறது: விசயம் தெரிந்தவர்கள் இதனைப் படித்தால், இந்த ஆளுக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதை நன்றாகவே தெரிந்து கொள்வார்கள். அது தான் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் டான், இந்த ஆளை யாரும் பொருட்படுத்துவது இல்லை. அதனாலேயே, தொடர்ந்து இப்படி குப்பைகளைக் கொட்டி வருவதும் விசித்திரமான விசயமே!

 …….ஒரு சுலோகத்தினைச் சொல்லி முடிக்க 5 நிமிடம் வேண்டும். 700 சுலோகங்களையும் சொல்லி முடிக்க 5 நாட்கள் வேண்டும்……..பயனை எதிர்பார்க்காமல் எவன் கடமையைச் செய்வான்? நாங்கள் வெட்டியாட்களாகவா வந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். பேசினால் அதனைக் கேட்பவர்களுக்குக் கொஞ்சமாவது புத்தி வருமே என்பதற்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர, நீ உழைத்துக் கொண்டே இரு, பலனை எதிர்பார்க்காதே, நான் கொடுப்பதை வாங்கிக் கொள். நீயாகக் கேட்காதே, கடமையைச் செய் என்கிற அறிவுரையை எல்லோரும் சொல்லுகிறார்கள். இதை எப்படிச் சொல்லுகிறார்கள் என்று புரியவில்லை?,” என்று பல உளறல்கள் உள்ளன. இங்கு முக்கியமானவை மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

K.Veeramanis anti-Hindu tirade, Viduthalai, 27-07-2020
2019ல் வெளியிட்டக் கருத்து: 2019ல் பேசிய / எழுதிய சமாசாரங்களும் ஒன்றும் புதியவை அல்ல. கடந்த 100-150 ஆண்டுகளாக, வெளிநாட்டவர் எழுதி வந்துள்ளதை தொகுத்தவை தான். “இதற்கான நியாயமான காரணங்கள் இதோ”, என்று வீரமணி சொல்வது[11]:

  1. கீதை ஒரு இந்து மத நூல் மட்டுமல்ல, ஜாதியை ஆதரித்து நியாயப்படுத்தும் நூல்.

“சதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம், குண – கர்ம விபாகச

தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்த்யா கர்த்தாரர மவ்யயம்”

(அத்தியாயம் 4, சுலோகம் 13)

அதாவது, ‘‘நாலு வருணங்களையும் நானே படைத்தேன். நானே அதனைப் படைத்தவனாக இருந்தாலும் அதனை மாற்றிட அல்லது திருத்தி அமைத்திட என்னால் முடியாது” என்று கூறும் நூல்.

  1. சூத்திரர்களும், பெண்களும்பாவயோனியில் பிறந்தவர்கள் என்று அவர்களைக் கேவலப்படுத்தும் நூல்.

“மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யேஸ்பி ஸ்யு, பா – யோன்ய

ஸத்ரியோ வைச்யாஸ் – ததா சூத்ராஸ் – தேஸ் பியாந்தி பராங்கதிம்”

(அத்தியாயம் 9, சுலோகம் 32)

அதாவது, ‘‘பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள். அதனால் அவர்கள் கீழானவர்கள். “பிராமணன், சத்திரியன், வைசியன் ஆகிய மூன்று வர்ணத்தாருக்கும் தொண்டூழியம் செய்வது ஒன்றே சூத்திரர்களின் இயல்பான கடமையாகும்” என்றும் கூறும் நூல் பகவத் கீதை. மகளிரும் படிக்கும் ஒரு பல்கலைக் கழகத்தில் இப்படி இழிவுபடுத்தும் நூல் இடம்பெறலாமா?

© வேதபிரகாஷ்

29-07-2020

Tilak, Gandhi and Gita

[1] Sedition Committee Report, 1918 found that Bhagawat Gita was inspiring extreme nationalist freedom fighters were resorting to violence by the teachings of Bhagawat Gita and therefore, it had to be proscribed.

[2] ஆங்கிலேய அரசு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பகவஹ் கீதைப் படித்து, ஊக்கம் கொண்டு தான், ஆங்கிலேய அதிகாரிகளைக் கொன்று வருகின்றனர் என்று நினைத்துக் கொண்டனர். உண்மையில் அவர்கள் தங்களது வாழ்க்கை நிலையில்லாதது, அதனால், உயிரை தேசத்திற்காக அர்ப்பணிக்கலாம் என்பதனைத் திரித்து விளக்கம் கொண்டது.

[3] Ganachari, Aravind. British official view of Bhagawat Gita as text book for the mental trainng of revolutionaryProceedings of the Indian History Congress. Vol. 56. Indian History Congress, 1995, pp.601-610.

[4] Bangalore Mirror, Gita propagates violence: Sreedhar, Prathibha Nandakumar, Updated: Feb 28, 2015, 22:21 IST.

[5] https://bangaloremirror.indiatimes.com/opinion/views/bhagavad-gita-violence/articleshow/46414314.cms

[6] Corley, Felix. “RUSSIA: Has «madness» of banning religious publications been stopped?».” Forum, 2012.

[7] Indian Express, Anna University includes Bhagavad Gita in curriculum, irks academics, Published: 26th September 2019 05:23 AM | Last Updated: 26th September 2019 10:00 AM

[8] https://www.newindianexpress.com/cities/chennai/2019/sep/26/anna-university-includes-bhagavad-gita-in-curriculum-irks-academics-2039110.html

[9] கே. வீரமணி, ‘‘பகவத் கீதை ஏன் எதற்காக,” July 28, 2020 • Viduthalai • கழகம்

[10]https://viduthalai.page/article/%E2%80%98%E2%80%98%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%22/JVUSo8.html

[11]  கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் 26.9.2019, முகாம்: பிலெடெல்ஃபியா (அமெரிக்கா). https://www.facebook.com/asiriyarkv/posts/2489306694438478