Archive for the ‘துறந்தவர்’ Category

சட்டத்திற்கு புறம்பாக ஏதும் செய்யவில்லை: சாமியார் நித்தியானந்தா!

மார்ச் 7, 2010

பிரச்சினையில் உள்ளது தினகரன் பத்திரிக்கையும் ஒன்று.
வியப்பாக, அதுவே இப்படியொரு செய்தியை வெளியிட்டுள்ளது!

சட்டத்திற்கு புறம்பாக ஏதும் செய்யவில்லை: சாமியார் நித்தியானந்தா[ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 12:51.49 PM GMT +05:30 ]

http://www.newindianews.com/view.php

.?2bdRfmAc3dc036QAY3e4a4qe0AKcd0eavXO4A2cd22Amlvxa2ecKU46A4ce0eYmM0604b43cYDRLd0

சென்னையிலுள்ள வழக்குரைஞர் ஸ்ரீதருக்கு சாமியார் நித்தியானந்தா தனது பேச்சுகள் அடங்கிய சி.டி.யை அனுப்பி வைத்துள்ளார். அதில் தான் சட்டத்திற்கு புறம்பாக ஏதும் செய்யவில்லை என்றும் இவை எதிரிகளின் சதித்திட்டம் என்றும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்யானந்தா ஒன்றாக இருப்பது போன்று படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சாமியார் மீது சென்னை போலீசார் 2-வழக்குகளை பதிவு செய்தனர். அவர் எங்கு இருக்கிறார் என்பது மர்மமாக இருந்து வந்தது.

இந்நிலையில் வீடியோ மூலமாக நித்யானந்தா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் உள்ள அவரது வக்கீல் ஸ்ரீதருக்கு தனது பேச்சுகள் அடங்கிய சி.டி.யை அனுப்பி வைத்துள்ளார். அதில் நித்யானந்தா கூறியிருப்பதாவது:-

எனக்கு எதிராக விஷமிகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர். இதுவே என்னை பற்றி தவறான தகவல்கள் வெளிவர காரணமாகும். என் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக நான் சந்திக்க தயாராக உள்ளேன்.

இவ்வாறு நித்யானந்தா கூறியுள்ளதாக அவரது வக்கீல் ஸ்ரீதர் தெரிவிதார்.

இதற்கிடையே நடிகை ரஞ்சிதாவும், நித்யானந்தா சாமியாரும் ஒன்றாக இருப்பது போன்ற படங்களை நான்தான் எடுத்தேன் என்று சாமியாரின் சீடர் லெனின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இவர் கொடுத்த புகாரின் பேரில் நித்யானந்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமியாரின் அந்தரங்க விஷயங்களை லெனின் படம் எடுத்து வெளியிட்டதும் சட்டப்படி குற்றமாகும். இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்யலாம் என்று சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நித்யானந்தாவை லெனின் ஆபாசமாக படம் எடுத்து வெளியிட்டது எந்த மாதிரியான குற்றம் என்பது குறித்து வக்கீல் வானதி சீனிவாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தகவல் தொழில் நுட்ப சட்டப்படி, ஒருவரின் அந்தரங்க விஷயங்களை ஆபாசமாக படம் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் ஆபாசபடம் எடுத்த லெனின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யலாம்.

இந்த குற்றம் நிருபிக்கப்பட்டால் லெனினுக்கு 2-ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

இதேபோல் கேபிள் டிவி. ஒளிபரப்பு சட்டத்தின் கீழ், உள்ளங்களை மாசுபடுத்தும் விதத்தில், ஆபாசமான காட்சிகளை காட்டுவதும் தவறானது. இதுவும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்

காந்த படுக்கை விவகாரத்தில் சன் டிவி நிருபர் (பழைய செய்தி)!

மார்ச் 7, 2010

காந்த படுக்கை விவகாரத்தில் சன் டிவி நிருபர்!

[லெனின் கருப்பன் உள்ளாரா என்று தேடப்படுகிறது]

“காந்த படுக்கை மோசடி” தொடர்பாக நீதிமன்ற நடவரிக்கைகளைப் படம் பிடிக்க வந்த சில நிருபர்களில் சுரேஸ் என்பரும் இருந்தார். அப்பொழுது குற்றம் சாட்டப் பட்ட தரப்பில் ஆஜரான ராமசாமி என்ற வக்கீல் அதிகாரம் இல்லாமல் நீதிமன்றத்திற்குள் படமெடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். (Asian Age 6.2.03)

கே. கே. சுரேஸ்குமார் “காந்த படுக்கை மோசடி” தொடர்பாக ஒரு வழக்கறிஞர் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார்.  இவர் சன் டிவியில் நிருபராக வேலை செய்து வந்தார்.  இவர் தமது நன்பர்களுடன் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் வக்கில்களுடன் வாதிட்டதாகவும், அதில் மிரட்டியதாகவும் சொல்லப்பட்டது. அதனால் பார் அசோசியேசனின் தலைவர்  ஜெயபாலன் (IV metropolitan magistrate) அவர்களிடம் புகார் கொடுத்தார். சுரேஸ்குமாரும் கோட்டூர்புரம் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். பிப்ரவரி 4, 2003 அன்று வழக்கை விசாரித்து, அவருக்கு பிணை-விடுதலை அளிக்கப்பட்டது. (The Hindu dated 05.02.2003)

MEDIA/FREEDOM OF PRESS – 2003, Compiled By K. Samu,Human Rights Documentation,Indian Social Institute, Lodi Road, New Delhi

Click to access Media-2003.pdf

காந்த படுக்கை மோசடி பற்றிய நீதிமன்ற தீர்ப்புகளை இங்கே பார்க்கலாம்:

http://www.indiankanoon.org/doc/378163/

http://www.indiankanoon.org/doc/267753/

பெரியாரும், பகவான் ரமண ரிஷியும்!

ஜனவரி 26, 2010

கடவுள், மதம், ஜாதி இல்லை என்ற பெரியார் மனிதநேயத்திற்காக பாடுபட்டார்
பகவான் ரமண ரிஷியோ தன் குடும்பத்திற்காக பாடுபட்டார்
சிவகாசி பொதுக்கூட்டத்தில் தமிழர்தலைவர் விளக்கம்

http://viduthalai.periyar.org.in/20100126/news12.html

சிவகாசி, ஜன.26_ கட-வுள், மதம், ஜாதி இல்லை என்று சொன்ன பெரி-யார் மனிதநேயத்-திற்காக பாடுபட்டார். மக்களை ஒன்றுபடுத்-தினார். கட-வுள் ரமண-ரிஷி மக்க-ளுக்கு எந்த பயனும் செய்யவில்லை. குடும்பத்-திற்கே பயன்-பட்டார் என்று திராவி-டர் கழக தலைவர், தமிழர் தலை-வர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவு-ரையாற்-றி-னார்.

தமிழர் தலைவர் கி.வீர-மணி அவர்கள் ஆற்றிய உரை-யின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு: தவறு செய்தால் தண்டனை உண்டு

தவறு செய்தால் தண்-டனை அனுபவிக்க வேண்-டும். இதுதான் வள்ளு-வரு-டைய வாழ்க்கை முறை. இதுதான் தமிழ-னுடைய வாழ்க்கை முறை தவறு செய்யாமல் வாழுங்-கள் என்று திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கிறது.

மீறி தவறு செய்து-விட்டால் அதற்குரிய தண்டனையை அனுப-விக்கத் தயாராகுங்கள். இதுதான் தமிழர்க-ளு-டைய வாழ்க்கை முறை. தவறு செய்யக்கூடாது என்பது தமிழர்களுடைய பண்பாட்டு முறை. தவறு செய்வது என்பது ஆரிய பண்பாட்டு படை யெடுப்-பினாலே வந்த ஒன்று. இவற்றை எல்லாம் நீங்-கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரியாரியக்கம் வெறுக்க வேண்டியது அல்ல. மாறாக ஒவ்வொரு-வரும் பங்கேற்க வேண்-டிய இயக்கம். பெரியார்-காமராஜர்

தமிழ்நாட்டிலே இந்த அளவுக்கு கல்வி வளர்ந்-திருக்கிறது என்றால் அதற்கு அடித்தள-மிட்-டவர் காமராஜர் அல்-லவா? தந்தை பெரியார் இல்லாவிட்டால் காம-ராஜர் ஆட்சிக்கு அவ்-வ-ளவு பெரிய பலம் வந்தி-ருக்குமா? எனவே எல்லா துறைகளிலும் அறிவியல் வாழ்வியல் இப்படி எல்-லாவற்றை-யும் சொல்லிக்-கொடுக்-கின்ற இயக்கம் இந்த இயக்கம்.

பெரியாருடைய இயக்-கத்தில் உள்ளவர்கள், பெரியாருடைய தொண்-டர்கள் அனாவசிய செலவு செய்ய மாட்-டார்களே.

இங்கே கூட அய்யா அவர்கள் ரூ.50 ஆயி-ரத்தை தாராளமாக நன்கொடை கொடுத்-தார். ஏன் கொடுத்தார்? அனாவசிய செலவு என்-பது கருப்பு சட்டைக்-கார-னுக்கு கிடையவே கிடை-யாது.

பெரியார் இயக்கத்தில் இல்லாமல் இருந்தி-ருந்-தால் கோவிலுக்கு செலவு செய்ய வேண்-டும். திரு-விழாவுக்கு செலவு செய்ய வேண்-டும். அதைவிட அறிவு ரொம்ப குறை-வாக ஆகியிருக்கும் சிந்-திக்–கின்ற மனப்பான்மையே வந்திருக்காது.

இங்கு நல்ல அறிவி-யல் மய்யம் வர வேண்-டும். பொது நலத் தொண்டு அளவுக்குப் பரவ வேண்-டும். தந்தை பெரியார் சொன்னார். ஒரு ரூபாய் சம்பாதித்தால் பத்து காசாவது மிச்சப்படுத்து. எனவே எங்களுடைய தோழர்கள் பெரி-யாரு-டைய கொள்கையை வாழ்க்கைமுறையாக ஏற்றுக்கொண்டிருக்கக் கூடியவர்கள் யாராக இருந்–தாலும் அவர்கள் சிக்கனக்காரர்கள். பெரியார் சிக்கனக்-காரர். சில பேர் பெரி-யாரை கஞ்சன் என்று நாக்கில் நரம்பில்லாமல் சொல்லு வார்கள். இதை-விட தவ றான புரிதல் வேறொன்-றும் கிடை-யாது.

பணத்தை விரும்பியதுண்டு

அய்யா அவர்கள் பணத்தை விரும்பினார். அதை அவரே சொன்-னதுண்டு. எனக்கு பணத்-தாசை ரொம்ப அதிகம் என்று ஆனால் அந்தப் பணம் எதற்காக என்பது-தான் முக்கியம். ஒரு காலணா கொடுத்தாலும் அய்யா வாங்கிக்-கொள்-வார்.

கையெழுத்துப் போட வேண்டும் என்று அய்யா அவர்களிடம் கேட்டால் நான்கணா தர வேண்-டும். பெரியார் திரைப்-படம் பார்த்திருப்பீர்கள். பெயர் வைக்க வேண்டும் என்று யாராவது கேட்-டால் நல்ல பெயர் வைக்க வேண்டுமா? சாதாரண பெயர் வைக்க வேண்-டுமா? என்று கேட்பார்.

சாதாரண பெயர் வைப்பதற்கு ஒரு ரூபாய். நல்ல பெயர் வைப்பதற்கு இரண்டு ரூபாய். நல்ல பெயர் காமராஜ் என்று பெயர் சூட்டுவார்.

எல்லா சொத்துக்களும் மக்களுக்கே

எனவே அய்யா அவர்-கள் சேர்த்து வைத்த சொத்-துகள் எல்லாம் அறக்கட்டளை-யாக்கப்-பட்டு மீண்டும் -பொது மக்களுக்கே பயன்-படும்-படி ஆக்கப்பட்டிருக்-கிறது.

அவரென்ன சொந்த பந்தங்களுக்கு கொடுத்-தாரா? அல்லது ஜாதிக்-காரர்களுக்கு ஏதாவது அமைப்பை உருவாக்கிக்-கொள்ள கொடுத்தாரா?

எல்லா சொத்து-களை-யும் மக்களுக்கே திருப்பி-க்கொடுத்த ஒரு மாபெ-ரும் தலைவர் உலக வர-லாற்-றிலேயே வேறு எங்-கும் காண முடியாது. (கைதட்-டல்). அவருடைய அறக்-கட்டளையில் அவ-ரு-டைய ஜாதிக்காரர்கள் கிடையாது. அவருடைய சொந்தக்காரர்கள் கிடை-யாது.. பெரியாருடைய சொந்-தம் என்பதிருக்-கிறதே, அது இரத்த பாசத்தைப் பொறுத்-ததல்ல; கொள்-கைப் பாசத்தைப் பொறுத்-தது.

கருப்புச்சட்டைக்-காரர்-க-ளாகிய நாங்கள் எல்-லாம் ஒரே குடும்பம். அய்யா போஸ் அவர்கள் இருக்கிறார்கள், காஞ்-சனா அம்மாள் அவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம்தான் நம் உறவுக்-காரர்கள்.

சாராய, கஞ்சா சாமியார்

மதுரை மாவட்டத்-தில் இருந்து திருவண்-ணாமலைக்கு ஓடிப் போ-னவர் ஒருவர். திரு-வண்-ணாமலை கிரிவலப் பாதையில் பார்த்தால் அவனவன் சாமியார், சாமியார் என்று சொல்-லு-கின்றான்.

நமது மாவட்ட தலை-வர் மணிக்கு வேண்டிய மாவட்டம் திருவண்-ணா-மலை மாவட்டம். அங்கு யார் சாமியாராக இப்-பொழுது இருக்கி-றார்கள் என்றால் சாரா-யம் குடிக்-கிறவர்கள் இருக்–கின்-றார்கள். சாராயம் கஞ்சா உள்ளே போனால்தான் சாமியே குறி சொல்கிறது. இதற்கு ஞாயிற்றுக் கிழ-மைகளில் அளவு கடந்த கூட்டம். கொழுத்த வரு-மானம். தொலைக்-காட்-சியில் இதைக்காட்டி-னார்கள். ஆயிரக்கணக்-கான பேர் வருகிறார்கள். இதைப் பார்த்து என்ன இவ்வளவு அசிங்-கமாக இருக்கிறது என்று கருதினோம். ஒரு வாரத்-திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நேரடிப் போராட்டம் நடத்துவோம். இதை அரசுக்குத் தெரியப்-படுத்-துகிறோம் என்று பத்தி-ரிகையில் எழுதி-னோம். பொதுக்கூட்டத்-தில் பேசினோம். திரு-வண்-ணா–மலை-யில் நடத்-திய கூட்-டத்திற்கு எல்லா கட்சிக்-காரர்களும் வந்-தார்கள்.

உடனே கலைஞர் நடவடிக்கை எடுத்தார்

அடுத்த நாள் காலை-யிலேயே முதலமைச்சர் கலைஞர் உத்தரவு போட்-டார். யார் அந்தச் சாமி-யார்? நேரே பிடித்து எங்கே வைக்க வேண்-டுமோ அங்கே வைத்தார் (கைதட்டல்)

அதன்பிறகு பார்த்தீர்-களேயானால் அருள் வாக்கெல்லாம் வர-வில்லை. அந்த திருவண்-ணா-மலையில் ஒரு ரமண ரிஷி எதற்கெடுத்தாலும் மகரிஷி, மகரிஷி, என்று சொல்லுவார்கள். படித்த-வன் மாதிரி ஒரு போலியை உலகத்தில் வேறு எங்குமே காண-முடி-யாது. இந்த வெறும் படிப்பு கோழையாக்-குவது மட்டுமல்ல ஒரு-வரை துணிச்சலாக சிந்-திக்க வைப்பதில்லை.

மதுரை மாவட்டம் திருச்சுழியை சேர்ந்தவர். சுழி எப்படியிருக்கிறது என்று பார்க்க வேண்டும். அருப்புக்கோட்டைக்கு பக்கத்திலே இருக்கின்ற ஊர். திருச்சுழியிலிருந்து அரைக்கால் டிரவு-சருடன் 50 வருடத்திற்கு முன்-னால் திருட்டு ரயில் ஏறி திரு-வண்ணா-ம-லைக்கு வந்த-வர் –தான் இந்த ரம-ணரிஷி.

இவர் கண்ட இடத்-தில் சுற்றித் திரிகின்றார். பசி வரும்பொழுது மயக்-கம் வருகின்றது. கீழே விழுந்-துவிடுகிறார். யாரோ பையன் கீழே விழுந்து விட்டானே என்று தூக்கி உட்கார வைத்தார்கள்.

கொஞ்சநேரம் ஆனது. மரத்தில் சாய்ந்து உட்-கார்ந்து பசியால் கண்ணை மூடிக்கொண்-டி-ருந்தார். அடுத்து துணி-யில்லை. கோவணம் கட்ட ஆரம்-பித்தார். சாதாரண வெங்-கட்ட ரமணன், வெங்கட் என்-பது போய் ரமணர் ஆனார். ரமணர் பிறகு ரிஷி ஆனார். ரமண ரிஷி ஆனபிறகு ஆசிரமம் ஏரா-ளமான சொத்துகள் எக்கச்சக்கமாக சேர்ந்து விட்டது.

நம்ம ஊரிலே மட்டும் முட்டாள் இருப்பான் என்பதல்ல. வெளிநாட்-டிலும் இருப்பான். ரம-ணரிஷிக்கு முதல் சீடர் பெருமாள்சாமி என்பவர். இவர் பாப்பனர் அல்லாத ஒருவர். ரமண ரிஷியை பெரிய ஆளாக ஆக்குவ-தற்கு உதவிகரமாக இருந்-தவர் இவர்.

நான் சொல்வது ஆதார பூர்வமான செய்தி. இது கற்பனை அல்ல. ரமணரி-ஷி-யினுடைய சீடர் ஒரு புத்-தகம் எழுதி-யிருக்-கின்-றார்.

ரமண ரிஷி சொத்து உறவினருக்கு

ரமண ரிஷி செல்-வாக்கு வந்தவுடனே, பணம் வந்தவுடனே தன்-னுடைய தாயாரை வர-வ-ழைத்தார். அடுத்தது தனது தம்பியை வரவ-ழைத்தார். சொத்து-களை தனது சகோதரர் மீது எழுதி வைத்தார், ரமண ரிஷி. உடனே பெருமாள் சாமியும், மற்ற சீடர்களும் சென்று சொத்துகளை உங்கள் உறவினருக்கு எழுதி வைக்கலாமா? நீங்-களோ சந்நியாசி ஆயிற்றே என்று கேட்டார்கள்.

நீங்கள் பகவான் ரம-ண-ரிஷி. நீங்களே பக-வான் ஆயிட்டீங்களே சொத்து-களை எப்படி உங்களு-டைய குடும்பத்தி-டம் கொடுக்க முடியும் என்று கேட்டார்கள். யாரிடம்? ரமணரிஷி-யிடம்.

ஆனால் ரமண ரிஷியோ அதைப் பற்றி கவலைப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. ரமணரிஷியை நீதிமன்றத்திற்கு அழைத்-தார்கள். அவர் வர மறுத்து விட்டார்.

ரமண ரிஷியின் மர்-மங்கள் என்ற தலைப்-பில் பெருமாள்சாமி என்ற சீடர் நீதிமன்றத்-தில் வழக்கு தொடர்ந்-தார். 1934, 1935ஆம் ஆண்டு-க-ளில் இந்த வழக்கு வந்தது.

இந்த செய்திகள் ஆங்கிலத்திலும், தமிழி-லும் நூலாகவே வந்திருக்-கிறது. ஆதார பூர்வமாக சொல்லுவது தான் எங்-களுக்கு வழக்கமே தவிர வேறு அல்ல. ரமணரிஷி-யின் வழக்கு இன்னமும் முடியவில்லை.

நம்முடைய நாட்டில் எந்தவொரு வழக்கும் அவ்வளவு எளிதாக முடிந்து விடாது. வெள்ளி விழா, பொன்விழாவைத் தாண்டித்தான் ஒவ்-வொரு வழக்கும் நடைபெற்று வருகிறது.

வழக்கு போட்ட ஆளும் செத்துப் போனார். வக்கீலும் செத்துப்-போ-னார். நீதிபதியும் செத்துப்-போனார். வழக்கு மட்-டும் உயிரோடு இருக்கி-றது. வழக்கு பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கும். ஒன்றுமில்லை.

காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம் போடு-வதா? அல்லது தென்-கலை நாமம் போடுவதா? என்று பிரச்சினை. யானைக்கு எந்த நாமம் போடுவது என்பதில் தகராறு. வெள்ளைக்-காரர்கள் காலத்தில் லண்டன் பிரிவி கவுன்-சில் வரை இந்த வழக்கு வந்தது.

வெள்ளைக்கார நீதிப-திகளிடம் வழக்கு வந்த பொழுது வடகலை என்றால் என்ன? தென்-கலை என்றால் என்ன? என்று கேட்டனர். இவர்-களுக்கு வாதாடியவனும் வெள்ளைக்காரன். வெள்-ளைக்கார- வழக்கறிஞர் நீதிபதிகளிடம் கஷ்டப்-பட்டு விளக்கினார். மைலார்டு அவர்களே! இது ஒன்றுமில்லை; ஒய்_-யுக்கும், யு_வுக்கும் இருக்-கின்ற சண்டை என்று சொன்னார்.

ஒய் (சீ) என்றால் பாதம் வைத்திருக்கும் யு (ஹி) என்றால் பாதமில்-லாத நாமம். எனவே இந்த இரண்டு நாமத்தில் எந்த நாமத்தை யானைக்கு வைப்பதில் என்பது பிரச்-சினை என்று சொன்-னார். காஞ்சிபுரம் கோவில் யானைக்கு ஒரு வாரம் இந்த நாமம் போடு; இன்னொரு வாரத்திற்கு இன்னொரு நாமம் போடு என்று சொன்-னார். யானையும் செத்து போய் விட்டது-. இன்-னமும் அந்த வழக்கு முடி-யவில்லை. அது போல ரமண ரிஷி வழக்கு இன்-னமும் நடந்து கொண்-டிருக்கிறது.

ரமணரிஷி தன்னு-டைய தம்பிக்கு எல்லா சொத்தையும் எழுதி விட்-டார். ரமண ரிஷியின் குடும்பம் ஆசிரமத்தில் வந்து அமர்ந்து விட்டது.

இப்பொழுது நினைத்-துப் பாருங்கள் கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் நீங்கள் கொடுத்த நான்கணா-வைக்கூட பத்திரமாக வைத்து_முடிச்சு போட்டு வைத்து அதை மீண்டும் பொது மக்களுக்கு பயன்-படும்படி அறக்கட்டளை-யாக்கி பல்கலைக் கழக-மாக, கல்லூரிகளாக மருத்துவமனைகளாக, பிரச்சார கேந்திரங்களாக ஆக்கியிருக்கின்றார்.

கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் மனிதநேயப் பணிகளை செய்தார். அதே நேரத்திலே கடவுள் அவ-தாரம் என்று சொன்ன ரமண ரிஷி, மக்கள் கொடுத்த அவ்வளவு தொகையையும் தனதாக்-கிக்-கொண்டார்.

இதில் யார் உயர்ந்த-வர்கள்? இன்றைக்கும் கடவுள் பெயரால் தானே மக்களிடையே சண்டை; இன்றைக்கும் மதத்தின் பெயரால் தானே மக்களி-டையே சண்டை.. எனவே கடவுள் மனி-தர்களைப் பிரித்திருக்-கிறது. மதம் மனிதர்-களைப் பிரித்திருக்-கிறது. ஜாதி மனிதர்க-ளைப் பிரித்-திருகிக்றது.

இவைகளை எல்லாம் எதிர்த்த பெரியார் மனி-தர்-களை நேசித்தார். மனிதர்-களை ஒற்றுமைப்-படுத்-தினார். சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்று தந்திருக்-கின்றார். அப்-படிப்-பட்ட தந்தை பெரி-யாரின் பிள்-ளைகள் ஆயி-ரம் காலத்-துப் பயிர்கள்.

அந்தப் பணிகள் சிறப்-பாக நடைபெற அய்யா போஸ் அவர்கள் வழங்-கிய நிலமிருக்கிறதே அது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்து சிவகாசியிலே ஒரு புதிய அத்தியாயம், திராவிடர் இயக்க வர-லாற்றிலே மட்டுமல்ல; மனிதநேய வரலாற்றில் பொறிக்கப்படும் என்று சொல்லி, வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

பெரிதா, சிறிதா என்பது முக்கியமல்ல. ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும். அதற்கு நீங்-கள் உதவ வேண்டும். பெரியார் எப்படி எல்-லோருக்கும் சொந்தமோ அது போல பெரியார் மய்யமும் மக்களுக்குச் சொந்தம் என்று கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்-றி-னார்.

“செக்யூலரிஸ” நாட்டிலே தீவிரவாதிகள், சாமியார்கள், போலிஸ்காரகள்!

திசெம்பர் 30, 2009

“செக்யூலரிஸ” நாட்டிலே தீவிரவாதிகள், சாமியார்கள், போலிஸ்காரகள்!

சாமியார்களை தனிப்படை அமைத்துத் துரத்தும் வேகமும், விவேகமும், சுருசுருப்பும் தீவிரவாதிகளைப் பிடிப்பதில் காணோம்!

பாலியல் புகாரில் சிக்கிய சாமியாரை கைது செய்ய தனிப்படை

நியூஇந்தியாநியூஸ் – ‎28 டிச., 2009‎
செக்ஸ் புகாரில் சிக்கிய சாமியாருக்கு போலீசார் விதித்த கெடு நெருங்குவதால், அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் பெங்களூர் செல்ல முடிவு செய்துள்ளனர். சென்னை தேனாம்பேட்டை

கற்பழிப்பு புகாரில் சிக்கிய ஈஸ்வர சாமியாருக்கு போலீசார் சம்மன்

௯டல் – ‎28 டிச., 2009‎
கற்பழிப்பு புகாரில் சிக்கிய சென்னை சாமியாரை இன்று பகல் 12 மணிக்கு மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் காம்தார்

சாமியாரை பெங்களூரில் கைது செய்ய நடவடிக்கை

தினகரன் – ‎28 டிச., 2009‎
சென்னை : தேனாம்பேட்டை எஸ்எம் நகரை சேர்ந்தவர் ஹேமலதா. இவரை, நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் வசிக்கும் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார், பாலியல் பலாத்காரம் செய்ததாக மாம்பலம்

டில்லி தப்பிச் சென்றார் செக்ஸ் சாமியார்!

Inneram.com – ‎13 மணிநேரம் முன்பு‎

கற்பழிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் பெங்களூரிலிருந்து விமானம் மூலம் டில்லிக்குத் தப்பிடிச் சென்றுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

உண்மையிலேயேப் புல்லரிக்க வைக்கிறது. ஜேம்ஸ்பாண்டு கூட இவ்வளவு வேகமாக செயல்படமாட்டார்!

http://www.rapishare.comல் வில்ஹியூம் ஆபாச-அசிங்க-பாலியல் படங்களைப் போடுகிறன்.

இந்திய / தமிழகப் போலீஸிற்கேத் தெரியவில்லையாம், எங்கோ ஜெர்மனியிலிருந்து சொன்னார்களாம்.

சூளைமேட்டில் பிடித்துவிட்டார்களாம்!

ஆனால் மே 2002ல் கைது செய்யப்பட்டு, பைலில் வெளிவந்த அவனை 2009 வரைக் காணோமாம்!

அதெப்படி?
……
சரி, அதே http://www.rapishare.comல் ஆபாச அய்யர் படங்களை, அந்த அய்யர்-அல்லதா யாரோ, ஏற்றூகின்றனர்!
……..
ஆனால் போலிஸுக்குத் தெரியவில்லை!
…………….
அதெப்படி?
………………..
டேவிட் கோல்மென் ஹெட்லி என்ற பெயரில் தாவூத் ஜிலானி என்ற ஜிஹாதி தீவிரவாதி இந்தியா முழுவதும் சுற்றி வருகிறான், மும்பையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறான், அங்குமொரு காதலி, மணலியில் ஒரு காதலி…………இப்படி சென்றவிடமெல்லாம் காதலி……………..
……………….
பாகிஸ்தானிலிருந்து மும்பை, லக்னோ, மணலி………………என்று சுற்றிவருகிறான்!
………………….
அவன் நண்பன் தஹவ்வூர் ராணாவும் சுற்றி வருகிறான்!
……………..
யாருக்கும் தெரியவில்லை!
…………………
ஆனால் 2020ல் சூப்பர் பவர் என்றெல்லம் ரீல் விட்டுக் கொண்டிருக்கின்றனர்!
………………….

“சாமிகளைப் பிடிப்பதில் கூட செக்யூலரிஸம் பார்ப்பது” வேடிக்கையிலும் வேடிக்கையான விஷயமே!

…………………….

அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – II

திசெம்பர் 27, 2009

அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – II

குறிப்பு: மாநாட்டில் இவர்கள் பேசியதற்கும், “விடுதலை” கீழ்கண்டவாறு பிரசுரித்துள்ளதற்கும் வேறுபாடுகள் உள்ளன.

“நாத்திகம்” (atheism) என்பதற்கு பதிலாக “Rationalism” என்ற போர்வையில் விவாதங்கள் வைக்கப் படுகின்றன. அதனை “பகுத்தறிவு” என்று தமிழில் பேசப்படுகிறது.  agnosticism, skepticism, non-belief in religious system முதலிய கோணங்களில் விவாதிப்பதும், விஞ்ஞான ரீதியில் தர்க்கம் செய்வதும் ஒன்றாகாது. ஆனால் நாத்திகத்தை மறைத்து விஞ்ஞான போர்வையில் பலரக சித்தாந்திகள் ஒன்றுகூடி, இவ்வாறாக பேசுவது நன்றாகவே தெரிகிறது.

“பகுத்தறிவு” என்றே  முதலில் “விதலையில்” வெளிவந்தது அப்ப்டியே கொடுக்கப்படுகிறது:

வகுப்பு வெறியை முறியடிக்க பெரியாரின் சிந்தனைகளே தேவை: இந்திய பகுத்தறிவாளர் மாநாட்டில் கு.வெ.கி.ஆசான், அ.அருள்மொழி, ஆர்.ஜி.ராவ், வித்யாபூஷன்

http://viduthalai.periyar.org.in/20091227/news11.html

சென்னை, டிச.27_ வகுப்பு வெறியை முறி-யடிக்க பெரியாரின் சிந்-தனைகள்தான் பயன்-படும் என்று வித்யா பூஷன்-ராவத் நேற்று சென்னை பெரியார் திடலில் நடை-பெற்ற மாநாட்டில் கூறி விளக்கமளித்தார். 7ஆவது தேசிய மாநாடு டிசம்பர் 26 பிற்பகல் மற்-றும் மாலை நிகழ்ச்-சிகள் நேற்று நடைபெற்றன. அதன் தொடர்ச்சி வருமாறு: வகுப்புவாதத்தை ஒழிப்பதில் பகுத்தறிவு இயக்கங்களின் பங்கு எனும் தலைப்பில் முதல் கருத்தரங்கு நேற்று (26.12.2009) மாலை இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திட-லில் நடைபெற்றது.

கு.வெ.கிஆசான்: பெரியார் பேருரை-யாளர் கு.வெ.கி.ஆசான் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குத் தலைமை-யேற்றார். ஆங்கிலத்தில் உள்ள கம்யூனல் எனும் சொல்லை வகுப்புவாதம் எனும் விரும்பத்தகாத பொருளில் இந்தியா-வில்-தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். சமுதாயமாக மக்கள் வாழ்-வது, ஒன்றைப் பொது-வாக அவர்கள் பயன்-படுத்துவது ஆகியவை-தான் அச்சொல்லின் இயல்பான பொருள் என்-பதைத் தெளிவுபடுத்-தினார். 1964இல் வெளி-யான கன்சைஸ் ஆக்ஸ்ஃ-போர்டு அகராதியின்படி, சமுதாயங்களுக்கு இடையே பகையுணர்வு எனும் பொருளில், கம்யூ-னல் எனும் சொல் இந்-தி-யாவில் பயன்படத் தொடங்-கியதை எடுத்துக்காட்-டினார்.

இந்து முஸ்லிம் பகை: பெரும்பான்மை இந்து மதத்தினர் சிறு-பான்மை மத்தினரை ஒதுக்கி, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முற்-பட்ட பொழுது, சிறு-பான்-மையர் சட்டப் பாதுகாப்பை வகுப்பு-ரிமையின் அடிப்படையில் கேட்டனர். அது மறுக்-கப்பட்ட பொழுது இந்து, முஸ்லீம் பகை ஏற்பட்டு, பாகிஸ்தான் பிரிவினை-யில் முடிந்தது.

வி.பி.சிங் ஆட்சியில்: மேல்ஜாதியார் ஆதிக்-கத்தில் இருந்து, ஒடுக்கப்-பட்ட, ஒதுக்கப்பட்ட, அழுத்தப்பட்ட ஜாதியார் பாதுகாப்புப் பெற, இட-ஒதுக்கீட்டைக் கோரினர். அதை விழிப்புணர்வுடன் தென்நாடு முன்-னெடுத்-தது. ஆனால் வடபுலத்-தில் வகுப்புரிமை இயக்கம் வலுப்பெறவில்லை. மண்-டல் ஆணையத்தின் பரிந்-துரைப்படி, வி.பி.சிங் பிர-தமராக இருந்த பொழுது, மத்திய அரசில் பணி-யிடங்களுக்குப் பிற்படுத்-தப்பட்டோருக்கு இட-ஒதுக்கீடு அளித்தது. அதைத் தென் மாநிலங்கள் மகிழ்-வுடன் வரவேற்றன. ஆனால் வட இந்தியாவில் மேல்-ஜாதியாரின் தூண்டுத-லால் கலவரம் உண்டா-யிற்று.

உச்சகட்ட கலவரங்கள்: உண்மையான பிரச்-சினையிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்ப, மதவெறியை இந்துத்-துவா சக்திகள் கிளப்பு-கின்றன. உண்மையான பிரச்சினைகளை மறைத்து, உணர்ச்சிகளை எழுப்பி, கற்பனைப் பிரச்-சினை-களைக் கொண்டு, சிறு-பான்மை மதத்தினர் மீது வெறுப்பை வளர்த்து கல-வரங்களைத் தொடர்ந்து நடத்துகின்றன. 1992இல் பாபர் மசூதி இடிப்பும், 2002இல் குஜராத் கல-வரங்களும் அவற்றில் உச்சகட்டமானவை.

பொதுமக்களின் கவ-னம் தவறான பாதையில் செல்லும் வரை, அவர் மீது தங்கள் ஆதிக்கம் நிலை-பெறும் என்பது படித்த, மற்றும் பணக்-காரக் கூட்டத்தினரின் கணிப்பாகும். ஆகையால் உண்மைப் பிரச்சினைகளில் இருந்து எளிய மக்களின் கவனத்-தைத் திருப்புதல், கலவரத்-தைத் தூண்டுதல், பக்தி-போதையை ஏற்றுதல், மதவெறியை ஊக்கு-வித்தல் முதலியவற்றில் மதவாதிகள் ஈடுபட்டு உள்ளனர். இவர்களின் முயற்சியை முறியடிக்கும் வகையில் பகுத்தறி-வா-ளர்கள் மக்களுக்கு உண்-மைகளைச் சொல்ல வேண்டும், மூடநம்பிக்-கைகளை முறியடிக்க வேண்டும், அறிவியல் பார்வையை உண்டாக்க வேண்டும். இவை போன்ற நடவடிக்கைகளால் விழிப்-படைந்த மக்கள் தேவையான காரியங்-களுக்கும் உரிமைகளுக்-கும் முயற்சி எடுத்துக்கொள்-வார்-கள். வீண் உணர்ச்-சிக்கு ஆட்பட்டு வகுப்-புக் கலவரங்களில் ஈடு-பட-மாட்டார்கள், வகுப்பு-வாதத்தை முறியடிப்-பார்-கள். இவ்வாறு கு.வெ.கி. ஆசான் உரையாற்றினார்.

வழக்கறிஞர் அ.அருள்மொழி: உயர்நீதிமன்ற வழக்கு-ரை-ஞர் அ.அருள்மொழி பேசுகையில், புத்தரின் போதனைகள் மறக்-கடிக்-கப்பட்டு, வேதியத்தின் அடிப்படையில் கதைகள் பரப்பப்படுவதைக் கண்-டித்தார். சென்னை மாகா-ணத்தில் நீதிக்கட்சி அரசு எல்லாப் பிரிவு மக்களுக்-கும் நீதி கிடைக்கும் வகை-யில் வகுப்புரிமை ஆணை பிறப்பித்து மக்களாட்-சியை உறுதிப்படுத்தியது. இவ்வாறு அனைவருக்-கும் தெரிய வேண்டும். இன்னும் தீண்டாமை-யைக் குற்றம் அற்றது எனக் கூறுவோர் இருக்-கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

கோவா அறிவியல் பேரவைத் தலைவர், ஆர்.ஜி.ராவ்: இக்காலகட்டத்தில் தேவைப்படுவது மனித-நேயம் என்றார். மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும், அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

வித்யாபூஷன் ராவத்: டெல்லி, சமூக வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர், வித்யா பூஷன் ராவத் கருத்து அறிவிக்கையில் பெரியாரின் எண்ணங்-கள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு எல்லோரிடமும் பரவ வேண்டும் என்றார். வகுப்பு நெறியை முறி-யடிக்க பெரியார் சிந்த-னை-கள் பயன்படும். காந்தி-யார் கூறிய மதச் சார்பின்மை பார்ப்-பனியம் சார்ந்த மதச் சார்பின்மை. பெரியாரின் மதச் சார்பின்மை, மனித நேயம் சார்ந்தது. மதச் சார்பின்மை வர்ணாஸ்-சிரம தர்மத்தை மறுப்ப-தாக இருக்க வேண்டும் என்றார்.

பி.எஸ்.பர்னாலா: பர்னாலா மத குருக்-கள் மூடநம்பிக்கை-களைப் பரப்புவது வருத்தத்திற்கு உரியது எனக்கூறி, பகுத்-தறிவாளர்கள் மக்களை இன்னும் அதிக அளவில் நாடு முழுவதும் சந்தித்-துப் பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.

விமர்சனம்:

ஹிந்தியில் பேசியதை அப்படியே மொழி பெயர்க்கப் படவில்லை.

முன்பே குறிப்பிட்டபடி –
* காரணங்களை அறியாமல் ஏற்றுக் கொள்ளமுடியாது என்ற தன்மை (rationalism),
* ஏற்றுக்கொண்டுள்ள ஞானத்தை மறுத்தல் / எதையும் அறிய முடியாது என்று வாதித்தல் (agnosticism),
* சந்தேகித்தல்/நம்பிக்கையின்மை (skepticism),
* மதத்தில் நம்பிக்கையின்மை (non-belief in religious system),
* கடவுளை மறுத்தல் (atheism),
* விஞ்ஞான நம்பிக்கை (Scientific temper)
முதலியவற்றை குழப்பிப்பேசும் பல கோஷ்டிகள் இந்த கூட்டமைப்பில் உள்ளனர்.
ஆனால் திகவினரோ இந்து எதிர்ப்பாளர்கள் என்று அவர்களில் பலருக்குத் தெரியவில்லை.
பொது சிவில் சட்டத்தை அமூலாக்க வேண்டும் என்று தீர்மானத்தை (எண்.3) நிறைவேற்றியபோது, கருப்புச்சட்டைகள் திகைத்துக் கொண்டிருந்ததைப் பார்க்கமுடிந்தது.

அசட்டு அஹமதுவும், கருவும் கருணாநிதியும்!

திசெம்பர் 24, 2009
அசட்டு அஹமதுவும், கருவும் கருணாநிதியும்!

செக்யூலரிஸம் பேசியோ, இஸ்லாம் பேசியோ விளக்கேற்ற மறுத்தது செக்யூலரிஸ நாட்டின் அமைச்சர் அஹமது!

அவர் மறந்தது தான் எல்லா இந்தியர்களுக்கும் இந்திய நிர்ணயச் சட்டத்தின் படி அமைச்சர் என்பதை!

அங்குதான் அவரது அசட்டுத்தனம் வெளிப்பட்டது!

செக்யூலரிஸத்தை மதிக்கும் / மித்திக்கும் போக்கையும் இந்தியர்கள் அடையாளம் கண்டு கொண்டனர்.

இந்த கருவைப் பற்றிப் பேசவே வேண்டாம்.

வயசானாலும், செக்யூலரிஸ விசயத்தில் பத்து அஹமதுக்களையும் மேலேயுள்ள நிலையில் உள்ளவர்.

அதில் ISO 9001, 10009 என்றெல்லாம் கொடுத்தாலும் தகும்!

அவர் சொல்கிறார், “ரயில் இன்ஜின் மத்திய அரசு என்று வைத்துக் கொண்டால், அதில் இணைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் மாநில அரசுகள் மாதிரி. சில பெட்டிகளில் கோளாறு ஏற்பட்டுள்ளது“, என்றெல்லாம்!

இங்கு வரிசையாக நின்றுகொண்டு பச்சைக் கொடிகள் ஏந்தியுள்ளனர்?

ஏன் சிவப்புக் கொடிகள் கூடாது?

கொடிகளைக் கவிழ்த்து ஆட்டுகிறார்களே?

ஏன் தூக்கி ஆட்டக்கூடாது?

இன்று இப்படியெல்லாம் பேசும் தேசியம், இன்றும் அப்படி-இப்படி மாநில சுய ஆட்சி என்ற பிரிவினையும் பேசுகிறதே, ஏன்?

இத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தாலும், இந்தியாவைப் பற்றி தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றனறே, அம்மாதிரி நடிக்க்கின்றனறே, அதுவும் இந்த பழுத்த, முதிர்ந்த, பக்குவப்பட்ட நிலையில் அவ்வ்வாறு பேசுகின்றனறே, அதை என்னவென்பது?

மாநில அரசுகள் போன்றது ரயில் பெட்டிகள் : முதல்வர் கருணாநிதி பேச்சு
டிசம்பர் 23,2009,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6030&ncat=&archive=1&showfrom=12/23/2009

Front page news and headlines todayசென்னை : “மாநில அரசுகள் போன்றது ரயில் பெட்டிகள். தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் பல புதிய ரயில்களும் இயக்க வேண்டும் ,’ என்று முதல்வர் கருணாநிதி மத்திய அரசை கேட்டுக் கொண்டார்.

சென்னை சென்ட்ரல் – மங்களூர் இடையே, வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ், வாரத்தில் ஆறு நாட்களுக்கும், ஜம்முதாவி – மதுரை இடையே வாரம் இருமுறை இயக்கப்பட்டு வந்த ஜம்முதாவி – மதுரை எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட்டும், திருநெல்வேலி – பிலாஸ்பூர் இடையே வாராந்திர ரயிலும், கன்னியாகுமரி – ராமேஸ்வரம் இடையே, வாரத்தில் மூன்று நாட்கள் அதிவேக விரைவு ரயில்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு, இந்த ரயில்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: இன்னும் பல ஊர்களுக்கு ரயில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு, புதிய ரயில்களை, பாதைகளை அமைத்து தரவேண்டும். ரயில் இன்ஜின் மத்திய அரசு என்று வைத்துக் கொண்டால், அதில் இணைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் மாநில அரசுகள் மாதிரி. சில பெட்டிகளில் கோளாறு ஏற்பட்டுள்ளது. பெட்டிகள் கழண்டு போய்விடாமலும், பிரிந்து போய்விடாமலும் ஒற்றுமைப்படுத்தி இலகுவாக இழுத்துச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் தேசிய நிலை இல்லாமல் போய்விடும். எனது சொந்த ஊரான திருக்குவளைக்கு, புதிய ரயில் பாதை அமைக்க திட்டம் உள்ளது. இதை, மத்திய ரயில்வே இணை அமைச்சர் அகமது விரைவாக செயல்படுத்த வேண்டும், என்றார்.

மதுரை: ஜம்முதாவி – நெல்லை வரை நீட்டிக்கப்பட்ட ரயிலை , மதுரையிலிருந்து தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் அனில்சிங்கால் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இன்ஜினியர் தங்கராஜ், முதுநிலை தொழில்நுட்ப அலுவலர் அப்துல்கபர் பங்கேற்றனர். ஜம்முதாவி-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் (6788) ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் மதுரைக்கு பகல் 2.50 மணிக்கு வந்து சேரும். பகல் 3 மணிக்கு புறப்பட்டு மாலை 6.20 க்கு திருநெல்வேலி சென்று அடையும். திருநெல்வேலி- ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரயில் (6787) திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து பகல் 3.45 க்கு புறப்பட்டு, மதுரைக்கு இரவு 7க்கு வந்து சேரும். இரவு 7.15 க்கு புறப்படும். இவை விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சியில் நின்று செல்லும். ஜம்மு தாவியில் நாளை, திருநெல்வேலியில் டிச.,25 லிருந்து முறைப்படி இயக்கப்படும்.

நெல்லை: திருநெல் வேலி – பிலாஸ்பூர் ரயில் துவக்க விழா நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது. நெல்லை எம்.பி.,ராமசுப்பு, மதுரை மண்டல மூத்த வணிக அதிகாரி ஹோசியார்சந்த், மண்டல இன்ஜினியர் ராம்கிஷோர், நெல்லை நிலைய அதிகாரி கல்யாணி ஆகியோர் பங்கேற்றனர்.

பெரியாருடைய நிர்வாணம்: படங்கள், விளக்கங்கள், விவாதங்கள்!

திசெம்பர் 9, 2009

பெரியாருடைய நிர்வாணம்: படங்கள், விளக்கங்கள், விவாதங்கள்!

மின்-தளங்களில் பெரியாரின் நிர்வானத்தை பற்றிய விவாதம்: சமீபத்தில் சில அறிஞர்களிடையே, மின்-தளக் குழுக்களில் பெரியாருடய நிர்வாணத்தைப் பற்றி மிகவும் ஆன்மிக, தத்துவ, சித்தாந்த ரீதிகளில் விவாதங்கள் நடக்கின்றன.

பெரியார் ஜெர்மனியில் நிர்வாணமாக நின்றது ஒரு மிகப்பெரும் துறவுநிலை: “பெரியார் நிர்வாணமாக ஜெர்மனியில் நின்றது என்பது ஒரு மிகப்பெரும் துறவுநிலை. அது பாலிச்சை விழைவு அல்ல. மகாவீரருக்குப் பிறகு இந்தியத் துணைக்கண்டத்தில் தனது பிறப்புறப்பை மறைக்காமல் நின்ற சமூக ஆளுமை பெரியார் மட்டுமே. அந்த புகைப்படத்தை வெளியிடும் துணிவு பெரியாரியவாதிகளுக்கு இருந்தது. ஏனெனில் பெரியாரை முழுமையாக உள்வாங்கியவர்கள் எல்லாவித சமூக மதிப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள். தோழர் ஆனைமுத்துவைப் போல.”

எல்லொரும், மேற்கண்ட பத்தியைத் திரும்பத் திரும்ப எடுத்துக்காட்டுகின்றனர்!

http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/c3b8c66db6835dfb#

http://dravidatamils.blogspot.com/2006/09/blog-post_21.html

http://www.keetru.com/literature/essays/ramesh_prem.php

http://holyox.blogspot.com/2006/09/165.html

நான் இணைத்தளங்களில் தேடிவிட்டேன். பெரியாரின் அத்தகைய புகைப்படம் காணப்படவில்லை. பெரியார்

சாருநிவேதா, சொல்லியதாக, “வெளிநாடு சென்றிருந்த போது-நிர்வாணிகளாக இருந்த குழுவினரைச் சந்தித்திருக்கிறார். அப்போது பெரியாரும் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்“.

http://www.charuonline.com/Nov2009/WebulagamInt2.html

என்றுதான் உள்ளதேத் தவிர, அப்படம் எங்குயிருக்கிறது குறிப்பெதுவும் காணோம்!

நிர்வாண உறுப்பினர்களுடன் ஈவேரா

நிர்வாண உறுப்பினர்களுடன் ஈவேரா

இப்பொழுது (மே.2015) ஒருவர் இப்படத்தை பேஸ்புக்கில் போட்டிருக்கிறார். அதனை இங்கே சேர்த்துள்ளேன்.

ஆனால், அதே நேரத்தில் ஜைன திகம்பர சமிகளைத் தாக்குவது, அவைகளைக் கொச்சைப் படுத்தி பேசுவது, எழுதுவது, வீடியோ எடுத்துப் பரப்புவது எந்த நோக்கில் என்று தெரியவில்லை?

http://files.periyar.org.in/unmaionline/2008/20080702/page07.html

கிடைத்த பெரியாரின் நிர்வாணப் படங்கள்!: தேடிப்பார்த்ததில், பெரியாரின் நிர்வாணப்படங்கள் சம்பந்தப்பட்டவை, கீழ்கண்டவாறுதான் உள்ளன.

E. V. Ramaswamy Naicker with the members of Nude Society, Germany as claimed in their books

Periyar with the members of Nude Club, Germany

E. V. Ramaswamy Naicker, Erode in the Nude society, Germany

Periyar with the members of Nude Club, Germany

Periyar with Germany - Nude Society members

உள்ள படங்கள் எல்லாம், இவ்வாறுதான் உள்ளது. அதாவது, பெரியார் நன்றாக உடைகளை அணிந்து கொண்டுதான் இருக்கிறார்.

திக மற்றும் அத்தைகையவர் வெளியிட்டுள்ள மேற்காணும் படங்கள் புத்தகங்களிலேயே தெளிவாக இல்லை. அதனால் அதன் பிரதி-புகைப்படங்கள் இவ்வாறு காணப்படுகின்றன.

உண்மையில் அத்தகைய பெரியாரின் நிர்வாண புகைப்படங்கள் இருந்தால் வெளியிடுங்கள், நாமும் அத்தகைய தத்துவங்களை, சித்தாந்தங்களை, புலனடக்கு முறைகளை, இந்திரியங்களை அடக்கி “இந்திரன்” ஆகும் வித்தைகளை அறியலாம்!

நிர்வாண சாமியாருக்கு ‘ஜட்டி’http://files.periyar.org.in/unmaionline/2008/20080702/page07.html


ஈரோட்டில் கிரி அய்யர் பெண்ணிடம் அடிவாங்கியது நிர்வாணம் தந்த நிவாரணம் என்று கொண்டால், சென்னையில் மக்களின் இன்னல்களுக்கு நிவாரணம் தனது நிர்வாணம் தான் என்று ஊருக்கு தங்களது நிர்வாணம் மூலமே காட்டிக் (?) கொண்டு இருக்கும் திகம்பர சமண சாமியார்கள்.

சமீபத்தில் அருவருப்பில் அதிர்ந்து போன இன்னொரு நிகழ்வு. திண்டிவனத்தில் நிர்வாண சாமியாரின் மீது பெண்கள் பாலை ஊற்றி அது அவரது ஆண்குறியில் வழிந்த-போது அதைப் பிடித்து குடித்தார்கள் என்ற செய்திதான். மேலே சொன்ன சாமியார்கள் சென்னையில் உள்ள கொண்டித்தோப்பு பகுதியில் பொன்னிவளவன் தெருவில் உள்ள ஜெயின் மடத்தில் தங்கி நாள்தோறும் ஆண், பெண் என்ற பேதமில்லாமல் நிர்வாண தரி-சனமும், ஆசியும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்கள் தலையிலிருந்து பாதம் வரையில் வெண்மை நிறத்தில் கவுன் ஒன்றை மாட்டிக் கொண்டு நிர்வாண சாமியாருக்கு எடுபிடியாக இருக்-கிறார்கள். நல்ல வாய்ப்பாக, ஆணாதிக்கமோ, எதுவோ, திகம்பர சமண சாமியார்களில் பெண்கள் நிர்வாணமாக இல்லை. என்ன சாதிக்க நினைக்கிறாகள் இந்த நிர்வாணக் கோலத்தில்? இதனை கண்டித்து தி.க. இளைஞரணியினர் திரண்டு சென்று அந்த மடத்தின் முன் நிர்வாண சாமியார்-களுக்கு ஜட்டி (உள்ளாடை) கொடுக்க முயன்ற ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கைதானார்கள்.

பெரியார்
பெரியார்
பெரியார்

விவாதம்: பெரியாரின் நிர்வாணப் படங்கள் இருந்தால், ஏன் தைரியமாக வெளியிடக்கூடாது?

பெரியார் நிர்வாணமாக ஜெர்மானியில் நின்றது என்பது ஒரு மிகப்பெரும் துறவுநிலை: இங்கு துறவு, துறவுநிலை, நிர்வாணம், நிர்வாணமாக நின்றது என்பதெல்லாம், நாத்திகவாதிகள் / பகுத்தறிவுவாதிகள் / பெரியாரியவாதிகள் தாம் விளக்க வேண்டும். ஏனெனில், அவர் எதைத் துறந்தார் என்று ஒன்றும் தெரியவில்லை. ஏனெனில் அவர்களது அகராதியில் அந்த வார்த்தைகளுக்கு வேறு அர்த்தங்கள் இருக்கும்.
அது பாலிச்சை விழைவு அல்ல: “அது பாலிச்சை விழைவு அல்ல”, எனும்போது, எங்கு வேறுபடுத்தி கோடு கிழிப்பார்கள் என்று தெரியவில்லை. ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் சேர்ந்து வாழலாம், இல்லையென்றால் பிரிந்துவிடலாம் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதுமட்டுமா, ஆண்-ஆண், பெண்-பெண் கூட சேர்ந்து வாழலாம் என்று ஓரின-சமதர்மமும் வந்துவிட்டது! பிறகு, பெரியார், அவரது தொண்டர்கள் முதலியோர் மணம் புரிந்து கொண்டனர்,………………..என்பதெல்லாம் தெரியவில்லை!
மகாவீரருக்குப் பிறகு இந்தியத் துணைக்கண்டத்தில் தனது பிறப்புறப்பை மறைக்காமல் நின்ற ஆளுமை பெரியார் மட்டுமே: “மகாவீரருக்குப் பிறகு இந்தியத் துணைக்கண்டத்தில் தனது பிறப்புறப்பை மறைக்காமல் நின்ற சமூக ஆளுமை பெரியார் மட்டுமே”, என்று சொல்லிவிட்டுதான், மஹாவீரரைப் பின்பற்றும் சீடர்களைக் கேவலப்படுத்துகிறார்கள், தாக்குகிறார்கள்…………………இதுதான் “சமூக ஆளுமை”யா? அவர்களுக்கு இன்றளவும் பிறப்புறுப்பை மறைக்காமல் இந்தியா முழுவதும் சுற்றிவர தைரியம் இருந்தது. ஆனால், பெரியாருக்கு அவ்வாறு இல்லை, அவரது தொண்டர்களுக்கும் இல்லை!
அந்த புகைப்படத்தை வெளியிடும் துணிவு பெரியாரியவாதிகளுக்கு இருந்தது: ஏஏகெனவேக் குறிப்பிட்டது மாதிரி, இருப்பதெல்லாம், உடையோடு இருக்கும் படங்கள்தாம். அவையே தெளிவில்லாமல் இருக்கின்றன. அந்த புகைப்படத்தை வெளியிடும் துணிவு பெரியாரியவாதிகளுக்கு இருந்தால், இன்றும் தாராளமாக வெளியிடலாம்.

ஏனெனில் பெரியாரை முழுமையாக உள்வாங்கியவர்கள் எல்லாவித சமூக மதிப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள். தோழர் ஆனைமுத்துவைப் போல: பெரியாரின் கொள்கைகளை உள்வாங்கியவர்கள் எல்லாவித சமூக மதிப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்றால், ஏன் அவர்கள் தயங்கவேன்தும்?