திராவிட இயக்கம், கூடா ஒழுக்கம், அரசியல் நாகரிகம், புலம்பும் பகுத்தறிவு, ஆரியத்தை விரும்பும் திராவிடத்தின் தந்திரம் என்னவோ? (1)
வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரிய கூடா ஒழுக்கம்: திராவிட இயக்கம் தோன்றிய பிறகு தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லாமல் போய்விட்டது என்ற கசப்பான உண்மையை வேதனையோடு ஒப்புக்கொள்ள வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்[1]. “திருமண வீடு – சாவு வீட்டில் கூட – சந்திக்க மறுக்கும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் வடநாட்டைப் பார்க்கட்டும்![2] பிரதமர் மோடியும் – லாலுவும் – முலாயமும் கூடிக் குலவும் காட்சியைப் பார்த்த பிறகாவது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் புதிய நாகரிகத்தை வளர்க்கட்டும்” என்று தலைப்பிட்டு, விடுதலை நாளிதழின் முதல் பக்கத்தில் வீரமணி இவ்வாறு அறிக்கை விடுத்திருந்தது வேடிக்கையாக இருந்தது[3]. இது தொடர்பாக 23-02-2015 திங்கள்கிழமை அன்று அவர் வெளியிட்ட அறிக்கை[4]: “தமிழ்நாடும் தென் மாநிலங்களும் மிகவும் பண்பட்டவை நனி நாகரிகம் படைத்தவை. வடநாட்டவர்களைவிட பல துறைகளில் முன்னேறியவர்கள் என்று பெருமைபேசி மகிழுபவர்கள் என்ற நிலை அரசியல் கட்சிகளின் தவறான அணுகுமுறையால் ஒரு கட்சித் தலைவரோ, அல்லது வேறு பொறுப்பாளர்களோ, திருமணம், வரவேற்பு மற்றும் துக்க, இரங்கல் நிகழ்ச்சிகளில்கூட ஒருவரை மற்றொருவர் சந்திப்பது, குறைந்தபட்ச மரியாதையை, விசாரிப்புகளை ஒருவருக்கொருவர் இன்முகத்தோடு பரிமாறிக் கொள்ளுதல் போன்றவைகூட, – காணாமற் போனவையாக ஆகி விட்டன! இது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரிய கூடா ஒழுக்கம் ஆகும்!”
தலைவர்களே, வடநாட்டைப் பாருங்கள்!: “வடநாட்டைப் பார்த்து தமிழ்நாட்டவர் கற்றுக் கொள்ளும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் எவ்வளவு கடுமையாக கட்சித் தலைவர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ பேசித் தாக்கிக் கொண்டாலும் மத்திய அரங்கம் (Central Hall Parliament) என்ற நாடாளுமன்ற அரங்கில் நுழையும்போது, தோள் மேல் கைபோட்டு, நட்புறவும் நயத்தக்க நனி நாகரிகமும் பொங்கி வழிவது போல் பேசிக் கொள்ளும் நடைமுறை வெகு சர்வ சாதாரணம் ஆனால் – தமிழ்நாட்டில்….? இந்நிலையை மாற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும். வட மாநிலங்களில் அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது அரசியலை மறந்து அன்பு பாராட்டி மகிழும் நாகரிகத்தைப் பார்க்க முடிகிறது. லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்டாலும் தேர்தல் முடிந்ததும் பிரதமர் மோடியை ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் சந்தித்துப் பேசினார். இருமல், ஆஸ்துமாவில் இருந்து விடுபட கேஜரிவாலுக்கு தான் சிகிச்சை பெற்று வரும் மருத்துவரை மோடி பரிந்துரை செய்து தமது பண்பை வெளிப்படுத்தியுள்ளார்”. தொடர்கிறார் வீரமணி!
தமிழ்நாட்டில் நடப்பது என்ன?: “ஆனால், தமிழகத்தில் திருமண வீடு, துக்க வீடுகளில் கூட அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கத் தயங்கும், மறுக்கும் சூழ்நிலை உள்ளது. சட்டப்பேரவையில் நேருக்கு நேர் பார்த்து மற்றொரு கட்சியினர் வணக்கம் சொல்வதும், பதிலுக்கு புன்னகையுடன் வணக்கம் சொல்வதும் இன்று அருகிவிட்டது. விமான, ரயில் பயணங்களின்போது ஒரே பெட்டியில் பயணம் செய்யும்போது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விடக் கூடாது என்பதற்காக ஓடோடிச் சென்று அறைக் கதவைச் சாத்திக் கொள்வது, சந்திப்பைத் தவிர்ப்பதற்காக ரயில் நிற்பதற்கு முன்பே குதித்து ஓடி காரில் ஏறி கதவை அடைத்துக் கொள்வது போன்ற கசப்பான நிகழ்வுகள் நடக்கின்றன. திராவிட இயக்கத்தின் பிறப்புக்குப் பின்னரே இந்த நிலை என்பது கசப்பான உண்மையாகும். இதை நாம் வெட்கத்தோடும், வேதனையோடும் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இந்த நிலை மாற வேண்டும்”, என கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்[5]. இது அப்படியே மற்றா இணைத்தள செய்திகளிலும் காணப்படுகிறது: ஒன்.இந்தியா.தமிழ்[6], நக்கீரன்[7] முதலியவை வெளியிட்டுள்ளன. ஆனால் விடுதலையில், வீரமணி தொடர்கிறார்!
பிறந்த நாளிலாவது வாழ்த்து கூறக் கூடாதா?: “திராவிடர் இயக்கத்தின் பிறப்புக்குப் பின் இந்நிலை என்பது கசப்பான உண்மையாகும். இதனை நாம் வெட்கத்தோடும், வேதனையோடும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். எவ்வளவு கருத்து வேறுபாடு, கொள்கை மாறுபாடு இருந்தாலும், பிறந்த நாள்களுக்கு வாழ்த்து அனுப்பியோ; நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறுவதோ, மனித நேயத்தையும், மக்கள் பண்பையும் வளர்த்து, தொண்டர்கள் மத்தியில் வெறுப்புக் குறைய, அல்லது மறைய வாய்ப்பை ஏற்படுத்தும். அந்தக் காலத்துத் தலைவர்களின் அன்பும், பண்பும் அகிலம் அறிந்தவை. (ஒரு பெரிய புத்தகமே எழுதலாம்). வடநாட்டுத் தலைவர்கள் பலரிடமும் நான் பழகியுள் ளேன் – எந்தவித பந்தாவும் இல்லாமல் பழகுபவர்கள் அவர்கள். தமிழ்நாட்டில் தான் இப்படி ஒரு வெறுக்கத்தக்க நோய் எப்படியோ கடந்த 30 ஆண்டுகளாகப் பரவி விட்டது. யார்மீதும் குற்றம் சுமத்தி புண்ணைக்குடைய விரும்பவில்லை நாம்”, என்று நொந்து போய் கூறியுள்ளார் போலும்!
தமிழர்களை உலக அரங்கில் உயர்த்தும்[8]: “நம் நாட்டில் கட்சி, கொள்கை வேறுபாடுகளைத் தள்ளி வைத்து (தற்காலிகமாக) பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளில் தயங்காமல் சந்தித்து அன்புடனும், பண்புடனும் தலைவர்கள், பொறுப்பாளர்கள் நடத்து கொள்ளுவது தமிழர்களை உலக அரங்கில் உயர்த்திட, திராவிடத்திற்கு ஏற்றம் தேடிடச் செய்ய அணுகுமுறை மாற்றம் அவசரம் அவசியம் என்று கனிவுடன் வேண்டுகோளாக வைக்கிறோம்”, என்று வீரமணியின் அறிக்கை முடிகிறது.
அ.தி.மு.க., தலைமை கழக பேச்சாளர் ஆவடிகுமார்: மனதுக்குள் ஒன்றை வைத்து, மற்றவர்களுக்காக நாடகம் போடுவது போலியான கலாசாரம். எதிரி வீட்டு சுக, துக்கங்களில் பங்கேற்று விட்டு, அவரது காலைவாரி விடுவதும் சரியல்ல. அதனால், மனதுக்குள் என்ன உள்ளதோ, அதை நேர்மையாக வெளிப்படுத்துகின்றனர்; இதில் தவறில்லை. பாசாங்கு செய்யத் தேவையில்லை. எதிரி என்றால், அரசியலில் மட்டுமல்ல; அனைத்திலும் என முடிவெடுத்து தான், எதிரி வீட்டு சுக, துக்கங்களையும் தவிர்க்கின்றனர். முலாயம் வீட்டு திருமணத்துக்கு மோடி சென்றார் என்றால், ராஜ்யசபாவில், பா.ஜ.,வுக்கு மெஜாரிட்டி இல்லை. அதற்கு, தாஜா செய்ய வேண்டிய நிர்பந்தம் மோடிக்கு இருக்கிறது. அதற்காக, அவர் சென்றிருக்கக் கூடும்; மேலோட்டமாக பார்த்து, எதையும் தீர்மானிக்க முடியாது.
தி.மு.க., – எம்.பி., கே.பி. ராமலிங்கம்: ‘தமிழகத்தில், அரசியல் நாகரிகம் இல்லை; இதற்கு, திராவிட இயக்கங்கள் காரணம்’ என, பொதுவாக சொல்லக் கூடாது. யார் காரணம் என்பதை, திராவிடர் கழகம் தெளிவாகச் சொல்ல வேண்டும். தி.மு.க., தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க., முன்னாள் பொதுச் செயலர் எம்.ஜி.ஆர்., ஆகியோர், அரசியல் எதிரிகளாக இருந்தாலும், அரசியல் நாகரிகத்தை கடைபிடித்தனர். மாற்றுக் கட்சியினரை சந்தித்ததற்கோ, பேசியதற்கோ, கட்சியிலிருந்து யாரும் ஓரம் கட்டப்படவில்லை. அவர்கள் இருவரும், கட்சித் தொண்டர்களுக்கு அது போன்ற கட்டளையையும் பிறப்பிக்கவில்லை.
கொள்கை பிடிப்பு: கட்சி மற்றும் அரசியலில், ஜெயலலிதா அதிகாரத்துக்கு வந்த பின் தான், இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாற்றுக் கட்சியினரை சந்திக்கக் கூடாது என நிர்வாகிகளுக்கோ, தொண்டர்களுக்கோ, ஜெயலலிதா உத்தரவிடுகிறாரா எனத் தெரியவில்லை. கொள்கையில் பிடிப்பும், லட்சியமும் உள்ளவர்கள் எங்கு சென்றாலும், அவர்கள் கொள்கையில் தெளிவாக இருப்பர். கொள்கைப் பிடிப்பு இல்லாதவர்கள் தான், நட்பு, உறவு என, கொள்கையை இழந்து விடுவர்.
மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பால கிருஷ்ணன்: திராவிட இயக்கம்பிறப்புக்குப் பின், அரசியல் நாகரிகம் கெட்டுவிட்டது என, திராவிடர் கழகம் வருத்தப்படுவது நியாயமே. குறிப்பாக, தி.மு.க.,விலிருந்து பிரிந்து அ.தி.மு.க., உதயமான பின்பே, இப்போக்கு தீவிரமானது. தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் அவர்களுக்குள், பரஸ்பரம் நாகரிகத்தை கடைபிடிக்காமல் இருப்பது அவர்களுக்கு மட்டுமல்ல; தமிழகத்தின் நலனையே பாதித்துள்ளது. இவர்களின் தனிப்பட்ட விரோதம், தமிழகத்தின் பொது பிரச்னைகளான, காவிரி, முல்லைப் பெரியாறு போன்றவற்றிலும் பிரதிபலிக்கிறது. பிற மாநிலங்களில், எதிர் எதிர் கட்சிகள் இருந்தாலும், மாநில நலனைக் காப்பதில் ஒருமித்து இருப்பர். ஆனால், தமிழகத்தில் அது போன்ற நிலை இல்லை. இதனால், மாநில அரசியலைத் தாண்டி, தமிழகத்தின் உரிமைகளைப் பெறுவதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினார்.
இதுகுறித்து, தமிழக அரசியல் கட்சியினர் கருத்து[9]: தினமலர், அதிமுக, திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் சார்பாக அவரவர் கருத்துகளை வெளியிட்டுள்ளது கவனிக்கத்தக்கது[10]. அ.தி.மு.க., தலைமை கழக பேச்சாளர் ஆவடிகுமார், தி.மு.க., – எம்.பி., கே.பி. ராமலிங்கம், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பால கிருஷ்ணன் முதலியோரின் கருத்துகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன[11]. ஜெயலலிதா பிறந்த நாள் அன்று இவர் இதை வெளியிட்டிருப்பது அரசியல் நோக்கம் கொண்டது என்பது தெரிந்த விசயமே. முன்பு ஜெயலலிதா பதவிக்கு வந்த போது, “ஆரிய-திராவிட யுத்தம் தொடர்கிறது!” என்று புத்தகத்தை வெளியிட்டார். ஜெயலலிதா பாப்பாத்தி என்ற வசைகளை, தூஷணங்களை தாராளமாக வெளியிட்டார். போதாகுறைக்கு சட்டசபையிலேயே ஜெயலலிதாவின் ஜாக்கெட்டைக் கிழித்து[12], புடவையை உருவ முயன்ற நாகரிகமான திராவிடர்கள் இவர்கள்[13]. கருணாநிதியோ, வழக்கம் போல துளிக்கூட நாகரிகம் இல்லாமல், சோபன் பாபுவுடன் இருந்த போட்டோக்களை “முரசொலி”யில் போட்டு மகிழ்ந்தார். 1960களில் அனந்தநாயகியைப் பற்றி பேசியதெல்லாம் இவர்கள் மறந்து விட்டார்கள் போலும்.
© வேதபிரகாஷ்
25-02-2015
[1] http://www.viduthalai.in/page1/96691-23-02-2015-1.html
[2] நக்கீரன் மட்டும் இதையே தலைப்பாகக் கொண்டு அறிக்கையை, நிறைய புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளது. “திருமண வீடு – சாவு வீட்டில்கூட – சந்திக்க மறுக்கும் தமிழக தலைவர்களே வடநாட்டைப் பாருங்கள்; கி.வீரமணி”, http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=138391
[3] http://www.viduthalai.in/2011-08-04-12-53-29/96688-2015-02-23-08-56-27.html
[4] தினமணி, தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லாமல் போனதற்கு திராவிட இயக்கமே காரணம்: கி. வீரமணி, By Venkatesan Sr, சென்னை; First Published : 24 February 2015 03:42 AM IST.
[5]http://www.dinamani.com/tamilnadu/2015/02/24/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/article2684159.ece
[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/only-after-the-rise-dravidian-party-we-lost-political-decency-says-veeramani-221569.html
[7] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=138391
[8] http://www.viduthalai.in/page1/96708.html
[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1192158
[10] தினமலர், தமிழகத்தில் அரசியல் நாகரிகம் சீரழிய யார் காரணம்?, 25-02-2015: பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2015,23:40 IST.
[11] தினமலர் (நமது சிறப்பு நிருபர்),
[12] The famous Jayalalitha saree episode took place in the Tamil Nadu Assembly on March 25, 1989. She was then the leader of the Opposition. Jayalalithaa got furious when a minister allegedly pulled her sari on the floor of the House. I have written an essay about this incident in my Tamil Magazine “Engal Baratham” March 2003 issue. We want to bring it to the remembrance of all the readers that how Jayalalitha was targeted for nothing during 1989. During the budget session of the assembly in 1989 as an opposition leader, Jayalalitha said Karunanidhi had no moral right to be CM. All hell broke loose and she was manhandled, with some DMK members allegedly trying to pull at her Sari. Jayalalithaa told former Minister Durai Murugan and his colleague Veerapandi Arumugam jumped on the table and did this vile act. There are photographs of her with disheveled hair and tears in her eyes. That day, she must have sworn revenge, like Draupadi, resolving that she would re-enter the assembly only as chief minister. This incident is the root cause of her hatred for Karunanidhi. After she had faced humiliation in the assembly, during the next election in 1991, she told people that Karunanidhi was a Duryodhana and there was a Dutchaathanaa among the legislators who had tried to disrobe her. The electorate responded by giving her thumping majority to Jayalalithaa. The same Victory repeated to Jayalalithaa even in 2011 elections by explaining to the people the corruption regime of Karunanithi and his family and ministers like famous Raja. So at least in future Karunanidhis to remember the proverb “evil begets evil.”
http://yessveeramani.livejournal.com/84131.html
[13] JAYALALITHA loyalists have a pet theory about her hatred towards Karunanidhi and the DMK. They point to an incident which occurred in the Tamil Nadu assembly on March 25, 1989, when a DMKMLA tugged at Jayalalitha’s cape. She was quick to reap political mileage and the AIADMK drew a parallel with the disrobing of Draupadi. Karunanidhi was compared to Duryodhan. In fact, Jayalalitha kept harping on the incident in her 1991 election campaign.
http://www.outlookindia.com/article/The-Revenge-Of-Draupadi/205451