Archive for the ‘திரி’ Category

பகவத் கீதை, கிருஷ்ண தூஷணம், திரிபு விளக்கம், இந்துவிரோதக் கூட்டங்களின் தொடரும் சட்டமீறல்கள், வன்முறைத் தூண்டும் பிரச்சாரம், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்! [3]

ஜூலை 29, 2020

பகவத் கீதை, கிருஷ்ண தூஷணம், திரிபு விளக்கம், இந்துவிரோதக் கூட்டங்களின் தொடரும் சட்டமீறல்கள், வன்முறைத் தூண்டும் பிரச்சாரம், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்! [3]

DK arheist discourse on Bhagawat Gita.his book

உண்மையில் விற்கப்பட்டதா, இலவசமாகக் கொடுக்க பட்டதா?: இக்காலத்தில் புத்தகத்தின் விற்பனையை எப்படி கணக்கில் காட்டுகிறார்கள் என்று நன்றாகவே தெரியும். தமிழக வரலாற்றுப் பேரவையில் திக-புத்தகங்கள் இலவசமாக 300 பேராளர்களுக்குக் கொடுக்கப்பட்டன என்று முன்னர் எடுத்துக் காட்டப்பட்டது. அப்படியென்றால், அந்த 10 புத்தக்கங்கள், 300 வீதம் விற்றதாகக் கணக்குக் காட்டிக் கொள்ளலாம். ஆக டஜன் கணக்கில் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் நடத்தும் வீரமணிக்கு ஒரு லட்சம் பிரதிகள் விற்பது என்பது என்ன முடியாத காரியமா? அதற்கு ஒரு வரி மறுப்பு கிடையாது என்பதில்லை, அதாவது லட்சம் பிரதிகள் விற்று யாரிடம் போய் சேர்ந்தன என்று தெரியவில்லை. மேலும், அரைகுறையாக, அரைவேக்காட்டுத்தனமான, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும், இத்தகைய சித்தாந்திகளை மற்றவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு, தங்களது நேரத்தை விரயமாக்க மாட்டார்கள் என்பதனையும் நோக்க வேண்டும்.

DK arheist discourse on Bhagawat Gita.his book.english
பகவத் கீதையை புனித நூலாக சைவர்கள் ஏற்கமாட்டார்கள்: கி.வீரமணி பேட்டி: தஞ்சையில் திராவிட கழகம் சார்பில் இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதற்குக் கண்டனம் தெரிவித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சை வந்த திராவிட கழகதலைவர் கி.வீரமணி நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது[1]: “பகவத் கீதை முழுமையான இந்து நூலாக கருதப்படுவதில்லை. இந்து மதம் என்பது பல பிரிவுகளை கொண்டது. அந்த வகையில் வைணவர்கள் தான் பகவத் கீதையை இந்து மதத்தை சார்ந்தது எனக் கூறுகின்றனர். சைவர்கள் பகவத் கீதையை ஏற்கமாட்டார்கள். அதேபோல மற்ற பிரிவுகளை சார்ந்தவர்களும் இதை ஏற்று கொள்வதில்லை. எனவே இந்து மதத்தை இந்நூல் முழுமையாக உரிமை கொண்டாட முடியாது. ஆனால் மத்திய அரசு தேசிய புனித நூலாக பகவத் கீதையை திணிக்க முயற்சிக்கிறது. இந்தியை எப்படி அதிகாரம் படைத்த மொழியாக திணிக்கின்றனரோ அதேபோல சமஸ்கிருதத்தையும் திணிக்க ஆசைப்படுகின்றனர். அது போல இதையும் நிறைவேற்ற முயற்சி செய்கின்றனர். நம் நாட்டில் பல கலாசாரங்கள், பல்வேறு மதங்கள் பல மொழிகள் இருக்கின்றன. இந்த நாட்டின் என் மதம் மட்டும்தான் ஆள வேண்டும் எனச் சொல்லக் கூடிய பாசிச முறையிலான இந்த செயல்பாட்டை இந்தியாவே எதிர்க்கிறது”, இவ்வாறு அவர் கூறினார்[2]. பேட்டியின்போது தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் எல்.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ரா. திருஞானம், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர். ஆகா, சைவர்கள் மீதுதான், வீரமணிக்கு எத்தனை பற்றுதல்! சிண்டு முடித்து விடுகிறார்கள். சோழன் குடுமி சும்மா ஆடாது என்றெல்லாம் இவர்கள் கிண்டல் செய்வார்களே, இப்பொழுது வீரமணி அதே வேலையைத்தான் செய்துள்ளார்.

DK arheist discourse on Bhagawat Gita.1

பகவத் கீதை ஒரு இந்து பயங்கரவாத நூல், கிருஷ்ணன் ஒரு இந்து பயங்கரவாதி: வினவு போன்ற தீவிர-கம்யூனிஸ்ட் ஊடகங்களும், “அதன்படி பகவத் கீதை ஒரு இந்து பயங்கரவாத நூல், கிருஷ்ணன் ஒரு இந்து பயங்கரவாதி என்பதற்கும் எண்ணிறந்த சான்றுகளை அடுக்க முடியும்,” என்று ஊளையிடுகின்றன[3]. சம்புகன் என்ற பெயரில் உதிர்த்துள்ள துவேசங்கள்[4]:

  1. மற்ற மதங்களின் கடவுளுக்குரிய தன்மை கிஞ்சித்தும் இல்லாத பாத்திரம் தான் கிருஷ்ணன்.
  2. தன்னை ஒருவன் ஆராதிக்க முன்வந்தால் அவனை ஏற்றுக்கொள்வேன் என்று சொல்லும் கிருஷ்ணன், நேர்மையான வாழ்க்கையை ஒழுகுவதை அதற்கு நிபந்தனையாக சொல்லவில்லை.
  3. அதனால்தான் ஊழல் பேர்வழிகளும், கொலைகாரர்களும் கொண்ட பாஜக கிருஷ்ணனை தூக்கிபிடிக்கிறது. திருப்பதி உண்டியிலில் விழும் எண்ணிறந்த கருப்புப் பணமும் அதையே காட்டுகிறது.
  4. எந்த வகையிலும் தகுதியற்ற கீதையை தேசியப் புனித நூலாக்குவோம் என்பது கயமை நிறைந்தது.
  5. அதன்படி பகவத் கீதை ஒரு இந்து பயங்கரவாத நூல், கிருஷ்ணன் ஒரு இந்து பயங்கரவாதி என்பதற்கும் எண்ணிறந்த சான்றுகளை அடுக்க முடியும்.

ஆக, இவர்களிடமிருந்து தான், உண்மையினை எல்லோரும் அறிய முடியும், என்ற ரீதியில், பொய்களை அள்ளிவிட்டிருக்கிறார்கள். இந்துவிரோத கூட்டங்கள் இதைப் படித்து சந்தோசம் அடையலாம்!

DK Veeramani, Gita a book of terrorism, Krishna - a terrorist

முடிவுரை: மேலே உள்ள அனைத்தையும் கவனமாகப் படித்து, விவாதித்தப் பிறகு, குறிப்பாக, கீழ்கண்ட அம்சங்கள் கவனத்திற்குக் கொடுக்கப் படுகின்றன:

  1. வீரமணி போன்ற இந்துவிரோத கும்பல்கள், உருப்படியாக, படித்து உண்மைகளை அறிந்து கொள்ளவில்லை. இந்துவிரோத குப்பைகளைத் திரட்டி, பேசி-எழுதி வருவடுதான் புலப்படுகிறது. இதிலிருந்தே, அவர்களது தகுதியும் வெளிப்படுகிறது. அதனால் தான் கண்டுகொள்ளாமல் இருக்கிறாற்கள். ஆனால், செய்யும் குற்றத்தைத் திரும்பத்திரும்ப செய்தால், ஒரு நிலையில் கட்டுப்படுத்த வேண்டிய, நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உண்டாகிறது. நிச்சயமாக 2020களில், இவர்கள் 1960கள் போன்று வன்முறாஇ செயல்களில் ஈடுபட்டு, இந்துக்களை மிரட்ட முடியாது.
  1. ஆங்கிலேயர் காலம் முதல் 2020 வரை நடந்துள்ள நிகழ்வுகளை கவனித்தால், இக்கூட்டங்கள் திட்டமிட்டு தூஷணம் செய்து கொண்டிருக்கின்றன என்பதனை அறிந்து கொள்ளலாம். ஈவேரா சொன்னதைத் தான், நான் சொன்னேன் – எழுதினேம் என்று தப்பித்துக் கொள்ள முடியாது. “அவன் தான் கொலை செய் என்றான், நான் செய்தேன்,” என்று தப்பித்துக் கொள்ள முடியாது.
  1. பகவத் கீதை உறவினர்கள், அன்பர்கள் எல்லோரையும் கொல் என்பது உருவகமாகச் சொல்லப் பட்டிருக்கிறது. வாழ்க்கை நிலையாம்மைவிளக்கப் பட்டிருக்கிறது. அதனால், கீதை படிப்பவன் எல்லோரும் கொலை செய்வான் என்று விளக்கம் கொடுப்பது மடத்தனமானது. அதனால் தான், மக்கள் இத்தகைய விளக்கங்களை கண்டுகொள்வதில்லை.
  1. வாழ்க்கை நிலையின்மையை, மக்கள் அன்றாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். கடந்த ஆண்டுகளில் பூகம்பங்கள், புயல்கள், வெள்ளங்கள், சுனாமி, இப்பொழுது கொரோனா போன்ற தொற்று வியாதிகள் என்று மக்கள் அனுபவித்து, உண்மையினை அறிந்து கொண்டுள்ளனர்.
  1. சுருக்கமாக சொல்வதானல், கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு குருக்ஷேத்திரத்தில் சொன்னது. இப்பொழுது, யாரும் குருக்ஷேத்திரத்தில் இல்லை. சண்டைப் போட்டுக் கொள்ளவும் தயாராக இல்லை.
  1. வர்ண சங்கிரமம், miscegenation, என்று இக்காலத்தில் விஞ்ஞான ரீதியில் சொல்லப் படுகிறது. அதனால், வீரியம் குறைகிறதா, பிறக்கும் குழந்தைகள் புதிய நோய்களுக்கு, அங்கஹீனங்களுக்கு உட்படுகிறார்களா இல்லையா என்பது, அனுபவிப்பவர்களுக்குத் தெரியும். அரசியல் செய்பவர்களுக்குப் புரியாது.
  1. மக்கள் எவ்வாறு பிறக்கின்றனர் என்று, இப்பொழுதைய விஞ்ஞான காலத்தில் அனைவரும் அறிந்து கொண்டுள்ளனர். 60-100 ஆண்டுகளுக்கு முன்னர் வேண்டுமானால், அடுத்தவர் சொல்லித் தெரிந்து கொள்ளவேண்டிய நிலை இருந்திருக்கலாம்.
  1. இப்பொழுது பெண்கள் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள், ஆண்களுக்கு நிகராக, ஏன், மேலும் சிறந்துள்ளார்கள் என்பது தெரிந்த விசயமாகிஅ உள்ளது. ஆகவே, இன்னும், பழமையைச் சொல்லி மிரட்டினால், யாருன் கண்டுகொள்ளப் போவதில்லை.
  1. எல்லாவற்றையும் விட குறிப்பாக, ஜாதிகளை ஒழிப்போம் என்று சொன்ன, சொல்கின்ற எவனும் ஜாதியை ஒழிப்பதாக இல்லை, மாறாக, ஜாதிகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்கிறான், பிழைத்துக் கொண்டிருக்கிறான்.
  1. எல்லோரும், எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைத் தடுப்பதே இவர்கள் தாம். குண்டுசட்டியில் குதிரையை ஓட்டிக் கொண்டிருப்பதால், அதையும் மீறி தெரிந்து கொள்ள விடுவதில்லை.

© வேதபிரகாஷ்

29-07-2020

Propaganda that Gita as a book of violene-English

[1] மாலைமலர், பகவத் கீதையை புனித நூலாக சைவர்கள் ஏற்கமாட்டார்கள்: கி.வீரமணி பேட்டி, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 21, 5:01 PM IST.

[2] http://www.maalaimalar.com/2014/12/21170111/Vegetarians-will-accept-the-Bh.html

[3] வினவு, பகவத் கீதையை தடை செய் !, By – சம்புகன்-வினவு, December 9, 2014.

[4] https://www.vinavu.com/2014/12/09/sushma-swaraj-wants-bhagavad-gita-to-be-national-scripture/

Krishna killing a Demon and trying to attack Bhisma

தமிழகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம் (1)

ஒக்ரோபர் 29, 2011

தமிழகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம் (1)

தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி வருவது: 1984 சென்னை / 1998 கோவை வெடிகுண்டு வெடிப்புகளுக்குப் பிறகு, தமிழகத்தில் அவ்வப்போது வெடிகுண்டு வெடிப்பது உண்மையாகி விட்டது[1].  அல்-உம்மா, சிமி[2] முதலிய இயக்கங்கள் தடை செய்யப்பட்டாலும் பல உருவங்களில் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அயல்நாட்டில் தீவிரவாதத்தில் ஈடுபடும் வழக்குகளும் வெளிவருகின்றன[3]. பணப்புழக்கம், கள்ளநோட்டுப் புழக்கம் அவற்றுடன் தீவிரவாதிகளின் இணைப்பு முதலியன தெரியவருகின்றன[4]. வழக்குகள் தாமதம், அரசியல் தலையீடு என்றெல்லாம் இருந்தாலும் குண்டுகள் வெடித்ததை மறைக்க முடியாது, ரத்தம் சிந்தியது, உடல்கள் சிதறியது, அடையாளமே தெரியாமல் போனது, கை-கால்கள் துண்டானது, அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது பொய்யாகாது, காயமடைந்தது முதலியன மறக்க முடியாது. குண்டு வெடிப்புகள் தமிழ் குழுமங்களிலிருந்து முஸ்லீம் அமைப்புகளுக்கு மாறியுள்ளது என்பதில்லை, ஆனால் அத்தகைய தொழிற்நுட்பம், குண்டுகள் தயாரிப்பு, அதற்குண்டான ஆதரவு, பணபலம், எல்லாவற்றிற்கும் மேலாக அவ்வாறு செய்யவேண்டும் என்ற மனப்பாங்கு முதலியன உள்ளன / நடந்து கொண்டு வந்துள்ளன என்பது நிதர்சனமாகத்தான் உள்ளது.

   

குறிப்பாக நவீன யுக்திகளை கையாலுவது, குறிப்பிட்ட தொழிழ்நுட்பத்தை உபயோகப்படுத்துவது, அதை சிறிதே மாற்றியமைப்பது, ஆனால், அதனால் பெருத்த யிர்சேதம், நாசம் குறிப்பாக பீதியை உண்டாக்குவது என குறிப்பிட்ட இயக்கங்கள் செயல்பட்டுவருகின்றன. இருப்பினும் வெடிகுண்டு புரளி செய்தி வருவது, அதைப் பற்றி கவலையில்லாமல் கிண்டலாக, நக்கலாக, பேசுவது, எழுதுவது, சினிமாக்களில் அதிகமாக “ஜோக்குகளாக” தயாரித்து வெளியிடுவது, செனல்கள் அவற்றை பலதடவை ஒலி-ஒளிபரப்பி கேலிக்கூத்தாக்கிவிட்டது முதலியன அதனை மறக்க-மரக்கச் செய்துவிட்டன போலும். இப்பொழுது மறுபடியும் ஞாபகப்படுத்துகிறது. மதுரை ஜிஹாதி ஒருவன் பிரான்ஸில் கைது செய்யப்பட்டான்[5]. தமிழகத்தில் நடந்து வந்துள்ள குண்டுவெடிப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன[6].

தேதி

இடம்

இறந்தவர்

காயமடைந்தவர்

சம்பந்தப்பட்ட / பொறுப்பேற்ற இயக்கம்

02-08-1984 சென்னை விமான நிலையம்

30

37

தமீழீழப் போராளிகள்
15-03-1987 மலைக்கோட்டை விரைவு ரெயில், மருதையாறு பாலம், அரியலூர்

26

140

தமிழ்நாடு விடுதலைப் படை[7]
11-05-1988 TNLA carries out a bomb explosion on the carpet bed map of India in the Government Botanical Garden in Ooty. தமிழ்நாடு விடுதலைப் படை
21-05-1991 திருப்பெரும்புதூர்

18

விடுதலை புலிகள்
20-04-1992 சுருளிப்பட்டி, தேனி மாவட்டம்

1

தமிழக மக்கள் விடுதலைப்படை
08-08-1993 ஆர்.எஸ்.எஸ். அலுவலகம், சென்னை

11

முஸ்லீம் அமைப்பு
18-11-1993 குள்ளஞ்சாவடி, கடலூர் மாவட்டம்

1

தமிழ்நாடு விடுதலைப் படை
29-03-1994 TNLA leader Lenin is killed during a bomb blast while he was on his way to plant a bomb at the Muhtandikuppam police station near Cuddalore. தமிழ்நாடு விடுதலைப் படை
25-05-1994 அம்மாப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்

1

7

விடுதலைப்புலி
14-04-1995 இந்து முன்னணி அலுவலகம், சென்னை

2

4

முஸ்லீம் அமைப்பு
22-09-1993 சங்கரராமன் மீது குண்டு வீச்சு
18-05-1996 மீனாட்சி கோவில், மதுரை முஸ்லீம் அமைப்பு
10-07-1997 மணிரத்னம் வீட்டின் மீது குண்டு வீசப்பட்டது முஸ்லீம் அமைப்பு
1997 பூபாலன் மீது குண்டு வீசப்பட்டது, கோயம்புத்தூர் ஜெயில் முஸ்லீம் அமைப்பு
13-08-1997 கொடுங்கையூர், சென்னை

80 குண்டுகள், 30,000 ஜிலேடின் குச்சிகள் பறிமுதல், சிலர் கைது

முஸ்லீம் அமைப்பு
01-12-1997 உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம்

3

முஸ்லீம் அமைப்பு
03-07-1995 இந்து முன்னணி, நாகப்பட்டணம்

1

முஸ்லீம் அமைப்பு
06-02-1998 சாலியமங்கலம், தஞ்சாவூர் மாவட்டம்

3

முஸ்லீம் அமைப்பு
14-02-1998 கோயம்புத்தூர்

16

44

முஸ்லீம் அமைப்பு
04-1999 The TNLA blasts television towers at Tuticorin. தமிழ்நாடு விடுதலைப் படை
03-2000 The TNLA blast a railway track at Thiruppapuliyur in the Cuddalore district[8] தமிழ்நாடு விடுதலைப் படை
14-04-2001 Country-made bombs, guns seized in Tamilnadu, four arrested – On April 14, police claimed to have arrested four persons and seized two country-made guns and nine country-made bombs from them at Palayamkottai.
16-05-2001 Nine Al-Umma men sentenced to life in Coimbatore, Tamilnadu. Nine of the 12 activists of the Islamic fundamentalist organization Al-Umma accused in the Udumalpet bomb blast case were sentenced to life imprisonment by a special court in Coimbatore, on May 15. Three persons were killed and four others injured in the blast triggered in Udumalpet, earlier on December 12, 1997[9].

 

குண்டு தயாரிப்பு விவரம்[10]: உள்ளுக்குள்ளே வெடித்து நாசத்தை உண்டாக்கும் குண்டுகளை (IED = Internally explosive Devices) உருவாக்குதல், தயாரித்தல் (Ammonium Nitrate / RDX),”டைமர்” முதலிய மின்னணு கருவிகளை உபயோகித்தல் முதலிய முறைகளைப் பயன்படுத்தலில், குறிப்பிட்ட இஸ்லாமிய தீவிரவாதிக் குழுக்கள் வல்லுனர்களக இருக்கிறார்கள்[11]. கடந்த குண்டவெடிப்புகளில், இத்தகைய முறை கையாளப்பட்டுள்ளது.  மும்பையிலும் அதே முறை கையாளப்பட்டுள்ளது. மொத்தம் டிபன்-பாக்ஸுகளில் வைக்கப்பட்ட ஏழு குண்டுகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[12]. வழக்கம் போல அவை துணிபைகளில் வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்புகள் பீதியை உண்டாக்கவில்லை, மாறாக அழிவை உண்டாக்கவே செய்துள்ளன[13]. லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி (இந்திய இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு) முதலியோர்களின் கைவேலை தெரிகிறது என்று வெடிகுண்டு வெடிக்கப்பட்ட இடங்களினின்று பெற்ற ஆதாரங்களை வைத்து எடித்துக்காட்டியுள்ளனர்[14]. அவர்களை கண்காணித்து வருவதாக புலன் விசாரணை செய்யும் குழுக்கள் கூறுகின்றன[15]. மும்பையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளது ஒன்றும் புதியதல்ல. புனாய்வுத்துறை மும்பை மறுபடியும் தாக்குதலுக்குள்ளாகும் என்று தெளிவாக எச்சரித்தது[16]. ஆனல் உள்துறை அமைச்சகம் இதை மறுத்தது. ஆனால், குண்டுகள் வெடிக்கத்தான் செய்தான், மக்கள் இறக்கத்தான் செய்தனர், கொன்ற குரூரக் கொலையாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.

பா.ஜ., தலைவர் அத்வானி செல்லும் பாதையில் பயங்கர சதி[17]: அத்வானியைக் கொல்லவேண்டும் என்பதில்  தீவிரவாதிகள் குறியாகத்தான் உள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் வரும்போது கொல்ல வேண்டும் என்ற எண்ணம் வலுவாகவே இருக்கின்றது. இந்த தடவையும் அத்தகைய முயற்சி நடந்துள்ளதா என்று ஆராய வேண்டியுள்ளது. ஏற்கெனெவே ஐ.பி அவர்மீதான தீவிரவாத தாக்குதல் உள்ளது என்று எச்சரித்துள்ளது[18]. “லால் கிருஷ்ண அத்வானி இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர். பல தீவிரவாத தாக்குதல் பட்டியிலில் அவர் பெயர் முதலில் உள்ளதால், அவருக்கு இஜெஇ-பிளஸ் என்ற பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளாது. அவர் 20 மாநிலங்களில் 38 நாட்கள் பிரயணம் மேற்கொண்டிருப்பதமால் அந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது”. அதாவது இந்த நாட்டில் வெளிப்படையாகவே தீவிரவாதிகள் அத்வானியைக் கொல்வோம் என்று கொக்க்ரித்துக் கொண்டலையும் கூட்டம் உள்ளது என்று இந்திய ரகசிய அமைப்பே ஒப்புக் கொள்கிறது. பிறக் அத்தகைய இயக்கத்தை அல்லது அவ்வாறு அறிந்த  மனிதர்களை எப்படி சுதந்திரமாக விட்டு வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ரத யாத்திரை செல்லவிருந்த பாதையில், ஓடைப் பாலத்தின் அடியில் சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, மாற்றுப் பாதையில் அத்வானியின் வண்டி சென்றது. செல்லும் பாதையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அத்வானியின் உயிருக்கு குறி வைத்து, இந்த குண்டுகளை வைத்தது யார்? என, போலீசார் விசாரித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், கோவையில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த அத்வானியை குறிவைத்து வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டன. இப்போது மதுரையிலும் அத்வானிக்கு குறி வைத்து குண்டு வைத்துள்ள சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[19].


பிரச்சினை வேறு என்றாலும் குறிக்கோள் ஒன்றாகத்தான் உள்ளது: அரசியல் ரீதியில் கட்சிகள் தங்களது பிரச்சினைகளை மாற்றிக் கொண்டு பிரச்சாரம் செய்யலாம். ஆனால், சித்தாந்த ரீதியிலான போராட்டங்கள், ஈடுபட்ட குழுமங்களுக்கு ஒன்தாகத்தான் உள்ளது. எதிரிகளும் மாறுவதில்லை. ஊழலை எதிர்த்து அத்வானி மேற்கொண்டுள்ள மக்கள் விழிப்புணர்வு யாத்திரை, நேற்று காலை 10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டது. திருமங்கலம் வழியாகச் சென்று ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பொதுக்கூட்டத்தில், அத்வானி பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.திருமங்கலத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள ஆலம்பட்டியில் ஓடைப் பாலத்தின் அருகே, அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், 40, என்பவர் நேற்று காலை 7.30 மணிக்கு விறகு வெட்டச் சென்றார். அப்போது, பச்சை நிற ஒயர்கள் அவரது காலில் பட்டது. அந்த ஒயர்களை பின்தொடர்ந்து சென்று பார்த்தபோது, பாலத்தின் அடியில், மடை உள்ளே செடி, கொடிகளை மறைத்து ஏதோ பொருள் இருந்தது தெரிய வந்தது. அதை அகற்றிப் பார்த்தபோது, உள்ளே 5 அடி நீளமுள்ள 2.5 அங்குலம் விட்டம் கொண்ட இரு பி.வி.சி., பைப்புகள் இருந்தன[20]. இருபக்கங்களும் மூடியிருந்து, இணைக்கப் பட்ட வயர் 50 மீட்டர் தொலைவு வரை நீண்டிருந்தது. அங்கு போட்டார் சைக்கிள்களில் உயோகப்படுத்தப் படும் 12-வோல்ட் பேட்டரியும் காணப்பட்டது. ஜெல் எனப்படுகின்ற ரசாயன வகை வெடிப்பொருள் எளிதாக வெடிக்கக் கூடியவை. பாறைகளை பிளக்க குவாரிகளில் உபயோகப்படுத்தி வருகின்றனர்[21].


பேட்டரியுடன் குண்டு இணைப்பு: போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் குவிந்தனர். அந்த பைப்புகளை சோதனை செய்தபோது, அது பைப் வெடிகுண்டுகள் என தெரிய வந்தது. மதுரை வெடிகுண்டு தடுப்பு போலீசார், கயிற்றின் உதவியோடு வெடிகுண்டுகளை வெளியில் இழுத்தனர். அப்போது, வெற்று பைப் மட்டும் வெளியே வந்தது. பின், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 4 அடி நீள பைப் வெடிகுண்டை வெளியே எடுத்தனர். அந்த குண்டு, ஒயர் மூலம் 100 மீட்டர் தொலைவில் 12 வோல்ட் மின்சக்தி கொண்ட பேட்டரியுடன் இணைக்கப்பட்டிருந்தது[22].

வேதபிரகாஷ்

28-10-2011


[1] வேதபிரகாஷ், ஜோசப் பாஸ்கரன், அம்மோனியம்நைட்ரேட், குண்டுவெடிப்பு, http://atrocitiesonindians.wordpress.com/2010/11/06/ammonium-nitrate-bomb-manufacture-joseph-tamilnadu/

[3] Union Home Minister P. Chidambaram said that Mohammad Niaz Abdul Rashid, the Indian engineer who was arrested by French Police for alleged links with al Qaida, had been involved with the affiliates of the outlawed SIMI in Tamil Nadu.

[4] FICNs sourced from Pakistan via Bangladesh, with a total face value of .2 million INR was seized and five persons arrestedin Chennai in Tamil Nadu.

[5] வேதபிரகாஷ், தமிழகத்துஜிஹாதிதீவிரவாதிபிரான்ஸில்பிடிபட்டான்: உள்ளூரில்வளரும்தீவிரவாதத்தின்அபாயம்அதிகரித்துவருகிறது!, http://islamindia.wordpress.com/2011/05/25/1443-indian-home-grown-jihadi-tamil-grown/

[6] மேலும் விவரங்கள் கிடைக்கும் போது மாற்றப்படும், சேர்ந்துக் கொள்ளப்படும்.

[11]  இவர்கள் எல்லாமே முஸ்லீம்களாக இருப்பதனால், புலன் விசாரணைக் குழுக்கள், போலீஸ் முதலியோர் அரசியல் நிர்பந்தங்களினால், முரணான செய்திகளை ஊடகங்களுக்கு கொடுத்து, அதன் மூலம் வழக்கில் தீவிரவாதிகளுக்கு சந்தேகத்தின் அடைப்படையில் அல்லது போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை அடைகிறார்கள். பிறகு மற்ற வழக்குகளில் அவர்களை சிறையில் வைத்துள்ளார்கள். அல்லது பைலில் வெளியில் வந்ததும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் (துபாய், கடார்..) சென்று மறைந்து வாழ்கிறார்கள் மற்றும் தொடர்ந்து இத்தகைய தீவிரவாத செயல்களை செய்து வருகிறார்கள்.

[17] தினமலர், பா.., தலைவர்அத்வானிசெல்லும்பாதையில்பயங்கரசதி, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=339525; இப்பத்திரிக்கை இப்படி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. இது உண்மையா அல்லது சாத்தியக்குறுகள் என்ன, பின்னணி என்ன என்பதை இக்கட்டுரையில் அலசப்படுகிறது.

[18] Lal Krishna Advani is one of the senior most political leaders in the country. He has a Z+ security cover and is on the target lists of several terror groups. And as Advani continues his 38-day Rath Yatra across 20 states, the Intelligence Bureau (IB) has sounded a warning over his security cover.

http://www.timesnow.tv/IB-warns-of-threat-to-Advanis-yatra/videoshow/4387027.cms

[21] Two pipe bombs, one of which was packed with “Gell-19” explosives usually used in granite quarrying, were found in one of the culvert tunnels at Alampatti.

[22] The PVC pipe, with 12 cm diameter, was in two sections, and closed with lids on both ends. A wire was connected to a detonator for a distance of about 50 metres. The 12-volt battery, used in two-wheelers, was found under a Palmyra tree at a distance. The explosive was defused at a place away from the causeway and removed to an undisclosed place for analysis. The wire was found concealed under heaps of grass and a sari. ‘Power gel’ is referred to as a “power-sensitive, high explosive” used for blasting rocks.