Archive for the ‘தியாகிகள்’ Category

அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்!

மார்ச் 19, 2012

அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்

தில்லை நடராஜனையும், ஶ்ரீரங்கநாதனையும் பீரங்கி வைத்து பிளப்பது எந்நாளோ, அந்நாளே பொன்னாள்” என்று அண்ணா பேசி தமிழர்களை ஏமாறியது போல, இன்று கருணநிதி இப்படி பேசி ஏமாற்றப் பார்க்கிறார்.

திராவிடம் என்பது செல்லாக் காசாகி விட்டது எனலாம். 1960களில் காணப்பட்ட வெறி அடங்கி விட்டது, ஏனெனில் மக்கள் உண்மையை அறிந்து கொண்டு விட்டார்கள். ஆரியர்-திராவிடர் என்று பேசுவதை யாரும் இனி நம்பமாட்டார்கள், ஏனெனில் கருணாநிதியே தனது குடும்பத்தில் பல ஆரிய / பிராமணப் பெண்களை மறுமகள்காக வைத்திருக்கிறார்.

இப்பொழுது இத்தகைய பேச்சுகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், அத்தகைய பித்து அல்லது வெட்டிப் பேச்சு எப்படி ஒரு வயதான, பொறுப்பான, முதல்வர் பதவி வகித்த மனிதரிடத்திலிருந்து வருகிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயமாகிறது. அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்”, என்று பேசியது அந்த தோரணையில் தான் உள்ளது.

தேர்தல் கூட்டத்தில் தீக்குளிப்பு ஒப்பாரி: திருமணத்தில் அரசியல், அரசியலில் சினிமா, சினிமாவில் சித்தாந்தம், சித்தாந்தத்தில் பிரிவினைவாதம் என்று மாறி-மாறி பேசிவருவது இவர்களுக்கு கைவந்த கலை. ஆகவே, சென்னை அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றியே தீருவேன் என்று சொல்லும் நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும் என்றார் திமுக தலைவர் கருணாநிதி. சங்கரன்கோவிலில் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

அண்ணா பெயரில் கட்சி வைத்துக் கொள்ள அருகதை இருக்கிறதா? “சென்னையில், நான் முதல்வராக இருந்தபோது, அண்ணா பெயரால் அமைத்த நூற்றாண்டு

இப்பொழுதெல்லாம் சில பெயர்கள் வியாபார சின்னம், வணிக முத்திரை, விற்பனை அடையாளம் போன்று ஆகி விட்டன. அம்பேத்கர் என்ற பெயரும், அவரது படமும் அப்படியாகி விட்டது. யார்-யாரோ உபயோகப் படுத்திகிறார்கள். அவர்களை கேட்கமுடிவதில்லை.

 நூலகத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் என்று பிரிட்டிஷ், ரஷிய நாட்டினர்களும் கூறுகிறார்கள். அண்ணா வாழ்ந்ததை எதிர்காலத்தினர் மத்தியில் பதிவு செய்வதற்காகதான் இந்த நூலகத்தை அமைத்தேன். ஆனால், அதை மருத்துவமனையாக மாற்றுவேன் என்று கூறுபவர்கள், அண்ணா பெயரில் கட்சி வைத்துக் கொள்ள அருகதை இருக்கிறதா?

அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்: மருத்துவமனை கூடாது என்று கூறுபவன் அல்ல நான். ஆனால், வேண்டும் என்றே அதை மருத்துவமனையாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இது தொடர்பான வழக்கு தற்போது நடைபெறுகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரைக்கும் போகலாம். நீதிமன்ற தீர்ப்புகள் வந்தாலும், அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்.

எனது சூளுரைக்கு பலம் சேர்க்க திமுகவை ஆதரியுங்கள்: எங்களை ஆளாக்கியவர் அண்ணா. இளைஞர்களை அறிவாளியாக்கியவர் அவர். உலகம் என்றும் அவரை நினைத்துக்கொண்டிருக்கிறது. அவர் பெயரால் அமைத்த நூலகத்தை எடுத்தே

அண்ணா தமிழகத்தில் புகழ் பெற்றது மாறுபட்ட கால கட்டம் ஆகும். அதே போல எம்.ஜி.ஆர் இருந்தார். ஆனால், கருணாநிதிக்கு அத்தகைய தனிப்பட்ட சிறப்பான அடையாளம் கிடைக்கவில்லை. அதனால் தான், பெரியார், அண்ணா என்று பெயர்களை இக்காலத்திலும் சொல்லிக் கொண்டு மிரட்டி வருகிறார்.

 தீருவேன் என்று ஒரு பெண்மணி ஆக்ரோஷமாக கூறிவருகிறார். தேர்தல் மட்டும் எங்களுக்கு முக்கியம் அல்ல. அண்ணாவும் முக்கியம். அவரை உருவாக்கிய பெரியாரும் முக்கியம். அவர்களால் உருவாக்கப்பட்ட நாங்கள் தந்தைக்கும், தனயனுக்கும் செலுத்த வேண்டிய கடமைகள் உள்ளன. என்னை யாரும் தடுத்துவிட முடியாது. எங்கள் குறிக்கோளை நிறைவேற்றியே தீருவோம். அந்த குறிக்கோள் வலுப்பெற திமுகவுக்கு ஆதரவு தாருங்கள். எனது சூளுரைக்கு பலம் சேர்க்க திமுகவை ஆதரியுங்கள் என்றார் கருணாநிதி.

தமிழகத்தில் தீக்குளிப்பு கலாச்சாரம் திராவிட கட்சிகளின் பாரம்பரியமாக வளர்ந்து தொடர்ந்து வருகிறது: அதில் அரசியலும் உள்ளது. ஏனெனில், எந்த மனிதனும் தற்கொலை செய்து கொள்ள விரும்ப மாட்டான். அத்தகைய முடிவை எடுக்கும்

திராவிட பாரம்பரியத்தில் தீக்குளிப்பு என்பது வியாபாரமாகி விட்டது. 1960களில் இருந்த மனப்பாங்கு இப்பொழுது எந்த திராவிட தியாகியிடத்திலும் இல்லை. அதாவது, முன்பு போல உயிர் தியாகம் செய்ய யாரும் முன்வருவதில்லை. அவ்வாறு தயார் செய்யவும் முடிவதில்லை.

 மனிதன், விரைந்து தனது யுரிரை மாய்த்துக் கொள்ள விரும்புவான். தீக்குளித்து இறத்தல் என்பது ஒரு கொடுமையான இறப்பாகும். அதில் சிலர் இறக்காமல் தீக்காயங்களுடன் பிழைத்தும் உள்ளாரள். அவர்கள் நரக வேதனை அனுபவித்துள்ளார்கள். ஆகவே அதை உயர்வாக நினைப்பது, மதிப்பது மனிதத்தன்மைக்கு விரோதமானது. தீக்குளிப்பு என்ற தற்கொலை மிரட்டல் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் செயற்பாடு அல்ல, மிரட்டுவதிலும் குரூரத்தைக் காட்டும் தன்மையாகும். திமுக ஆட்சியில் சிலர் இந்தி திணிப்பை எதிர்த்து தீக்குளிக்க ஆரம்பித்தனர். அதை திமுக பிரமலமாக்கி தியாகமாகச் சித்தரித்தது. அதனால், சிலர் மனசலனம் உள்ளவர்கள், வாழ்க்கையை வேறு காரணங்களுக்காக வெறுத்தவர்கள், தீக்குளிக்க யத்தனித்தது மற்றும் உண்மையாகவே தீக்குளித்தது நிதர்சனமாக இருந்தது.

கருணாநிதியின் `தீக்குளிப்பு’ பேச்சு பற்றி டாக்டர் ராமதாஸ் கருத்து[1]: சமீப காலத்தில் திராவிட இயக்கத்தைப் பற்றி அதிக அளவில் விமர்சித்து வருகிறார் ராமதாஸ். கருணநிதியின் தீக்குளிப்புப் பற்றியும் கரடுமையாக சாடியுள்ளார். உண்மையிலே போராளியாக இருந்தால் தீக்குளிப்பேன் என்று கருணாநிதி சொல்லமாட்டார் என்று டாக்டர் ராமதாஸ் பேசினார். “திராவிட மாயை” கருத்தரங்கம் பா.ம.க. சார்பில் `திராவிட மாயை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை அண்ணாசாலை தேவநேய பாவாணர் நூலக கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். கருத்தரங்கை தொடங்கி வைத்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

“திராவிட மாயை” கருத்தரங்கம்: “திராவிட மாயை” என்று கம்யூனிஸ்ட் தலைவர் ராமமூர்த்தி ஒரு புத்தகத்தை எழுதியுள்ளாற். அதற்குப் பிறகு, “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற புத்தகத்தை வெளியிடப்பட்டது. இப்பொழுது அதே ராகத்தை இவர் பாடுகிறார்ள்: “திராவிட இயக்கங்கள் அதன் வழிதோன்றல்கள், ஈரோட்டில் படித்தவர்கள், பெரியாரின் சீடர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், `நூற்றாண்டு

திராவிடம் என்பது மாயை என்றால், அதைச் சுற்றியிருக்கும் கருத்துகள், சித்தாந்தம், முதலியவையும் மாயைதான். கட்டுக்கதைதான். இருப்பினும் அதை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தலாம் என்று இனறும் சிலர் இருந்தால், அது அவர்களது பலவீனத்தைக் காட்டுகிறது.

 விழா’ எடுக்க கிளம்பிவிட்டார்கள். குறிப்பாக கலைஞருக்கு சில கேள்விகளை நான் கேட்டுத்தான் ஆகவேண்டும். பெரியார், சாதி ஒழிப்புக்கு பாடுபடுவதை ஒருகொள்கையாக கொண்டார். நீங்கள் அதிலே செய்த சாதனை என்ன? சாதியை ஒழிப்பதற்கு பதிலாக, சாதியை வளர்த்தீர்கள். பெரியாரின் சீடர் என்று சொல்லிக்கொள்ளும் கலைஞர் அவர்களே மதத்தை பற்றி இப்போது பேசத் தயாரா? இன்றைக்கு மதத்தை பற்றி உங்கள் கருத்துக்களை வெளியிடத் தயாரா? கடவுளை பற்றி நீங்கள் இப்போது பேசத் தயாரா? தமிழ்நாட்டை சீரழித்து ஆட்சியில் இல்லாதபோது, ஆரியர், திராவிடர் என்ற பேச்சு உங்கள் நாவிலே, எழுத்திலே வருகிறது. தென்னிந்திய நல உரிமை சங்கம், சுயமரியாதை இயக்கம், நீதிக் கட்சி என்று பல இயக்கங்களை பெரியார் ஏற்படுத்தினார். 45 ஆண்டு காலம் தமிழ்நாட்டை சீரழித்து சின்னாபின்னமாக்கிய ஆட்சியாளர்கள் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள்தான். இவற்றை எல்லாம் திசை திருப்ப, திராவிட இயக்கம் என்று சொல்லிக்கொண்டு, அதற்கு நூற்றாண்டு விழா என்று சொல்லிக்கொண்டு, ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் மக்களுக்கு தொடர்ந்து புரியவைத்துக்கொண்டு இருப்போம்.

“திராவிட” என்ற பெயரை எப்படி திராவிட கட்சிகள் புறக்கணிக்க முடியும்: “திராவிட” என்பதனை ஒரு வியாபார முத்திரை, வணிக சின்னம் போல உபயோகித்து மக்களை ஏமாற்றி வரும் கட்சிகள் எப்படி அதை எடுக்கும்? ஆனால் ராமதாஸ் தொடர்கிறார், “பெயரை மாற்றுங்கள் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஈழத்தமிழர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவோம். இலங்கையில் தனி ஈழம் அமைவதுதான்

திராவிட என்ற சொல்லை எந்த திராவிடக் கட்சியும் எடுக்க முடியாது. ஏனெனில், அவை அவ்வாறே பதிவு செய்துள்ளன. பெயர் மாற்றினால் இருக்கின்ற அடையாளமும் தெரியாமல் போய்விடும்.

 பிரச்சினைக்கு தீர்வு ஆகும். இதை நோக்கி நமது செயல்பாடுகள் இருக்கவேண்டும். முதலில் உங்கள் கட்சியின் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள். திராவிட என்று இருப்பதை, `தமிழர் முன்னேற்றக் கழகம்’ என்று மாற்றிக்கொள்ளுங்கள். கட்சி என்றால் கொள்கை வேண்டும். பெரியார் சில கொள்கைகளை முன்வைத்து, அதற்காக கடைசிவரை போராடினார். இப்போதாவது கொள்கையை சொல்லி தமிழ் மக்களிடம் வாருங்கள். தமிழ் மக்கள் இன்றைக்கு ஏமாற தயாராக இல்லை. செம்மொழியை பெற்றுவிட்டோம் என்று எல்லாம் சொல்லுகிறீர்கள், இன்றைக்கு தமிழ் வளர்வதற்கு என்ன முயற்சிகளை எடுத்திருக்கின்றீர்கள்?. முத்தமிழ் என்றால் இயல், இசை, நாடகம் என்று சொல்லுகிறார்கள். இவற்றில் எதை நீங்கள் வளர்த்தீர்கள்?.
தீக்குளிப்பேன் என்பது வெட்டிப் பேச்சு: 45 ஆண்டுகளாக உங்களின் திராவிட கட்சி ஆட்சியில் வளர்த்து எல்லாம் சாராயத்தை கொடுத்து, திரைப்பட மோகத்தை தந்து, மக்களை இலவசங்களுக்கு கைஏந்தவைத்தீர்கள். தமிழுக்கு நீங்கள் செய்த சாதனை என்ன? என்று பட்டியல் இடுங்கள். முடிந்தால் அதுபற்றி உங்களோடு விவாதிக்க தயாராக இருக்கிறேன். இப்போது கலைஞர் தீக்குளிக்கப்போவதாக சொல்லுகிறார்.

தமிழ் என்று சொல்லியும் பிழைத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் ஒரு புண்ணியவான் திருக்குறளை வைத்தே ஏமாற்றி கோடிகளை அள்ளியுள்ளான்; இன்னொருவனோ திருவள்ளுவன் கையாலாகாத ஆள், தாமஸ் என்ற ஓடுகாலியிடம் பைபிளைக் கற்ருக் கொண்டுதான் திருக்குறலள் எழுதப் பட்டது என்கிறான்; இன்னொருவனோ, திருக்குறளை எங்கள் குருவினிடத்திலிருந்து திருடிக் கொண்டு சென்று விட்டார், அதை தனது என்று சொல்லி புழக்கத்தில் விட்டார் என்கிறான். இவர்கள் எல்லோருமே தங்களை “தமிழர்கள்” என்ரு தான் சொல்லிக் கொள்கிறார்கள்.

 ஒரு போராளி உண்மையிலே போராளியாக இருந்தால், தீக்குளிப்பேன் என்று சொல்லமாட்டார். இன்றைக்கு இந்த நிலையில் தமிழன் இருப்பதற்கு காரணம் கலைஞரும், திராவிட இயக்கமும்தான் என்று பல்வேறு பொதுக்கூட்டங்களில், கருத்தரங்கங்களில் சொல்ல முடியும். தமிழ் மெல்ல, மெல்ல சாகும் என்றுதான் சொன்னார்கள். இந்த நிலையில் தமிழ் இப்போது வேகமாக செத்துக்கொண்டு இருக்கிறது. இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார். முன்னதாக முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு, மக்கள் மாநாட்டுக் கட்சி தலைவர் சக்திவேல், திரைப்பட இயக்குநர் வி.சேகர் தமிழாலயம் இயக்குநர் கு.பச்சைமால் ஆகியோர் பேசினார்கள். முடிவில் சென்னை மாவட்ட பா.ம.க. அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன் நன்றி கூறினார்.


 


எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும் – கருணாநிதியின் திராவிட முழக்கம்!

பிப்ரவரி 24, 2012

எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும் – கருணாநிதியின் திராவிட முழக்கம்!

பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்!’: கருணாநிதி உருக்கமான வேண்டுகோள்[1]: “உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவுறுத்தி உள்ளார். இருப்பினும் அவரது குடும்பத்தில் உள்ள பாப்பாத்திகளையும், அந்த பாப்பாத்திகளுக்குப் பிறந்தவர்களையும் விரட்டியடிப்பாரா என்று தெரியவில்லை.
கருணநிதியின் அறிக்கை (கடிதமாக உள்ளது): திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா, 27ம் தேதி தி.மு.க., தலைமை நிலையத்தில், எனது தலைமையில், அன்பழகன் முன்னிலையில் நடக்கிறது. அதில், தி.க., வீரமணி, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மோகன், நன்னன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். திராவிட இயக்கத்தின் தோற்றம், அதன் மேன்மை பற்றியும் பேசுகிறார்கள்.

திராவிட நாடு கோரிக்கையை குப்பையில் போட்ட மாவீரர்கள்: ”ஒருவன் உள்ள வரையில்,  குருதி ஒரு சொட்டு  உள்ளவரையில் திராவிட நாட்டின் உரிமைக்குப் போரிடச் சிறிதும் பின்னிடல் இல்லை” என்றார் பாரதிதாசன். (பாராளுமன்றத்தில் அரசியல் நிர்ணய சட்டத்தில் தனிநாடு கேட்கும் கட்சிகளின் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்றதும், திராவிட வீரர்கள் தங்களின் வால்களை சுருட்டிக் கொண்டனர். அண்ணாதுரை பாராளுமன்றத்தில் பேசியதும் வேடிக்கைதான். ஏனெனில் கோரிக்கையை விட்டு ஆட்சியைப் பிடிததது திமுக!)

கால்டுவெல்லின் பொய்களை நம்பும் ஆட்கள் இங்குதான் இருப்பார்கள் போலும்[2]: கடந்த, 1856ல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல் தான், திராவிட மொழி பேசும் மக்கள் ஒரே இனத்தவர் எனக் குறிப்பிட்டார். திராவிடர் என்ற பெயரை அவர் தான் முதன் முதலாக உபயோகித்தார்என்ற குறிப்புகளும் உள்ளன (மாக்ஸ் முல்லரைத் தொடர்ந்து, கால்டுவெல்லும் தனது கருத்தை மாற்றிக் கொண்டார். ஆனால், அத்தகைய திருத்தம் செய்யப்பட்ட பதிப்பு இந்தியாவில் வெளியிடப் படவில்லை. இன்று ஆரியர்-திராவிடர் என்ற இனங்கள் எல்லாம் கட்டுக்கதை என்று மெய்பிக்கப் பட்டு விட்டது. சரித்திர ஆசிரியர்கள் யாரும் ஒப்புக் கொள்வதில்லை. அதுமட்டுமல்லாது திருட்டுத் தனமாக அகழ்வாய்வு செய்து பல ஆதாரங்களை மறைத்து விட்ட பாதகன் இந்த கால்டுவெல்[3]).

அரைத்த மாவை அரைக்கும் கருணாநிதி: மனோன்மணியம் எழுதிய சுந்தரம் பிள்ளை, “திராவிட நல் திருநாடும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்[4]. 1912ம் ஆண்டு தோன்றிய, “மெட்ராஸ் யுனைடெட் லீக்’ சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா, 1913, டாக்டர் நடேசன் மருத்துவமனைத் தோட்டத்தில் நடந்தது. “சங்கத்தின் பெயர், அதன் நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை’ என சிலர் பேசினர். அப்போது டாக்டர் நடேசன் தான், “திராவிடச் சங்கம் என்று பெயர் மாற்றலாம். ஏனென்றால், நாமெல்லாம் திராவிடர்களாயிற்றே’ என, முடிவைத் தெரிவித்தார். அதை, அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.

சரித்திரத்தைத் திரித்து கூறும் கருணாநிதி[5]: பிட்டி தியாகராயர் திராவிட இனத்தின் மீது மாறாத அன்பு கொண்டவர்.தொடக்கத்தில் தியாகராயர் பெரும் வைதீகராக இருந்தார். தன் இல்லத்திலேயே சிலை வைத்து புரோகிதரைக் கொண்டு பூஜை புனருத்தாரணம் எல்லாம் செய்து வந்தார்.   அப்படிப்பட்டவர் டாக்டர் நடேசன் தொடர்பு ஏற்பட்ட பிறகு, வைதீகத்திலிருந்து விலகி வந்து, பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பில் அதிகத் தீவிரம் காட்டத் தொடங்கினார்[6]. அப்படிப்பட்ட தியாகராயர் 1917ல் நடைபெற்ற சென்னை மாகாண முதலாவது நீதிக் கட்சி மாநாட்டில் உரையாற்றும்போது, பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிப்பது திராவிட மரபன்று. திருவள்ளுவர் முதலிய திராவிடத் தலைவர்கள் பிரம்மனின் முகத் துதித்தோர் யாம் என்று பெருமை பேசினாரில்லை.  பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கற்பித்தோரும் நால்வகைச் சாதி இந்நாட்டில் நாட்டினோரும் ஆரியரே. அவ்வருணாச்சிரமக் கோட்டையை இடித் தெறிய 2400 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய புத்தர் முயன்றார், முடியவில்லை. பின்னர் வந்த பல சீர்திருத்தவாதிகள் முயன்றனர், தோற்றனர். ராமானுசரும் புரோகிதக் கொடுமைகளைக் களைந்தெறிய ஒல்லும் வழியெல்லாம் முயன்றார், தோல்வியே கண்டார்.

திராவிடத் தலைவர்கள் ஆங்கிலேயர்களின் அடிவருடிகளான உண்மையை மறைக்கும் கருணாநிதி[7]: பார்ப்பனர் பிடி மேன்மேலும் அழுத்தமுற்றே வந்தது. தீண்டாமை, அண்டாமை, பாராமை முதலிய சமுதாயச் சீர்கேடுகளும்  படிப்படியே பரவிப் பெருகலாயின. அத்தகைய பலம் பொருந்திய சாதிக் கோட்டையை தகர்த்தெறிய, இதுவே தக்க காலம்.  இதுவே தக்க வாய்ப்பு என்று முழங்கினார். பி அண்ட் சி மில்லில் அப்போது ஒரு வேலை நிறுத்தப் போராட்டம். அதுகுறித்து தியாகராயருக்கும், ஆளுநராக இருந்த வெல்லிங்டன் பிரபுவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று, அதில் ஆத்திரமடைந்த தியாகராயர் வெளியே வந்து விட்டார்.  அப்போது முதலமைச்சர் பதவியில் இருந்த பனகல் அரசர் தியாகராயர் வெளியே வந்ததைக் கேள்விப்பட்டு, உடனடியாக ஆளுநரைச் சந்தித்து, எம் தலைவரிடம் மன்னிப்புக் கேட்காவிட்டால், எங்கள் மந்திரிசபை ராஜினாமா செய்யும் என்று தெரிவித்தாராம். ஆளுநரும் அவ்வாறே உடனடியாக மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தாராம். டாக்டர் நடேசனுக்கு துணை நின்ற மற்றொருவர் டாக்டர் டி.எம். நாயர். ஆரியர் வருகையிலிருந்து அவர் பேச்சைத் தொடங்கினால், இடையிலே புராண, இதிகாசக் கதைகளையெல்லாம் கூறி மக்களை உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தக் கூடிய பேச்சாளர். தென்னகத்தில் ஒன்றிரண்டு தவிர, மற்ற எல்லாப் பதவிகளிலும் பார்ப்பனர்கள் உட்கார்ந்து விட்டார்கள். உயர்நீதிமன்ற நீதிபதிகளாகநியமிக்கப்பட்ட ஒன்பது இந்தியரில், எட்டு பேர் பார்ப்பனர்கள், ஒருவர் நாயர். உதவி கலெக்டர்கள் 146 பேரில் 77 பேர் பார்ப்பனர்கள். 125 மாவட்ட நீதிபதிகளில் 93 பேர் பார்ப்பனர்கள். மக்கள் தொகையில் நூற்றுக்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர்கள், இத்தனை வேலைகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று இந்தப் புள்ளி விவரங்களை அடுக்கிச் சொல்லி, இந்த அநீதியை இப்படியே தொடர விடலாமா? என்று கர்ச்சிப்பார்.

“பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்கம்’ என்ற அறிக்கை: டி.எம்.நாயர், 1917ல், சென்னை ஸ்பர்டாங் சாலை அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையும், சர்.பிட்டி.தியாகராயர், 1918ல் நீதிக் கட்சியின் சார்பில் வெளியிட்ட, “பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்கம்’ என்ற அறிக்கையும், திராவிடருக்கான ஆதி ஆவணங்கள் எனப் போற்றப்படுகின்றன. டாக்டர் நாயரின் புகழ் பெற்ற அந்த உரையில், வீரத் திராவிடர்களே என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். லண்டனிலும், சென்னையிலும் என்னைப் பெரிய டாக்டர் என்று சொல்கிறார்கள். நான் எம்.டி. பட்டதாரி. எனக்கு ஏராளமான வருமானம் வருகிறது.  என் செலவு போக, என் வருமானத்தில் மீதப்படும் பணத்தையெல்லாம், என்னருமைத் தலைவர் பிட்டி தியாகராயரைப் போன்று, உங்களைப் போன்ற திராவிட மக்களைத் தட்டி எழுப்பும் நீதிக் கட்சியின் வளர்ச்சிக்காகச் செலவிடுவதில் பெருமைப்படுகிறேன். நாயரின் உரையில், “திராவிடத் தோழர்களே… நீங்கள் எல்லாம் உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, நீதிக் கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் மக்களுக்கு பலம் வரும். நம் எதிர்க்கட்சியான, பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்’ என முழங்கியதைத் தான், நான் இப்போதும் திரும்பக் கூற விரும்புகிறேன்.

முரசொலி மாறனின் புரட்டு வரலாறு[8]: “திராவிட இயக்க வரலாறு’ என, முரசொலி மாறன் எழுதிய நூலில், உயர் பதவியில் ஒரு பிராமணர் நியமிக்கப்பட்டால், உடனே தன் நியமன அதிகார வரம்புக்குட்பட்ட பிற பதவிகளிலும் தங்களது இனத்தாரைக் கொண்டு வந்து நிரப்புவதும், தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்’ என எழுதியதோடு, அதற்கு உதாரணங்கள் சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளார். வருவாய்த் துறை வாரியம் ஒருமுறை ஆய்வு நடத்திய போது ஜி. வெங்கட்ரமணையா என்கிற உயர் பதவி வகித்த பிராமணருக்கு உறவினர்களும், தொடர்புடையவர்களும் மாத்திரம் அந்தத் துறையில் 49 பேர் இருந்தது தெரியவந்ததாம். 1890 களில் செங்கற்பட்டிலும், சென்னை நகரிலும் தோன்றிய வெம்பாக்கம் அய்யங்கார் குடும்பம் (புகழ் பெற்ற சர். பாஷ்யம் அய்யங்கார் வகையறா) ஆங்கிலேயர் ஆட்சியில் கிடைக்கும் உத்தியோகங்களையெல்லாம் நன்கு நுகர்ந்தது.

ஐயர்கள் நாயர்கள் ஆனார்களா இல்லை நாயர்கள் ஐயர்கள் ஆனார்களா?: 1861லிருந்து 1921 வரை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஐவர் சட்டசபை உறுப்பினர்களாகவும், இருவர் அட்டர்னி ஜெனரல்களாகவும், மூவர் உயர்நீதி மன்ற நீதிபதிகளாகவும், மூவர் ஸ்மால்காஸ் கோர்ட் நீதிபதிகளாகவும், மாண்டேகு,செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தத்தில் உதயமான ஆட்சியில் ஒருவர் உள்துறை அமைச்சராகவும், மூவர் மாநில அரசின் துணை செகரட்டரிகளாகவும் இருந்திருக்கின்றனர். மேலும் பலர் தாசில்தாரர்களாகவும், பப்ளிக் பிராசிகியூட்டர்களாகவும், டெபுடி கலெக்டர்களாகவும் இருந்தனர் என்று மாறன் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்த உண்மை வரலாறுகளையெல்லாம் திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு நினைவு படுத்தும் வகையில்தான் திராவிட இயக்க 100ம் ஆண்டு தொடக்க விழா நடைபெறவுள்ளது. அந்த நிகழ்ச்சியில் நம்மைப்பற்றி புரிந்துகொள்ள தெரிந்து கொள்ளத்தக்க பல விவரங்களை சான்றோர் பலர் விளக்கிட உள்ளார்கள்.

உண்மை வரலாறு எது என்று தெரிந்தால் தமிழர்கள் உருப்பட்டு விடுவார்கள்[9]: இந்த உண்மை வரலாறுகளை எல்லாம் திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் தான், திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா நடக்கவுள்ளது. ஆண்டு முழுவதும் கொண்டாடப் போகிறோமே, துவக்க விழாவில் கலந்து கொள்ளாமல் விட்டால் என்ன என நினைத்துவிடக் கூடாது. இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார் (உண்மை வரலாறு என்னெவென்று தெரிந்து கொண்டால் தமிழர்கள் உருப்பட்டு விடுவார்கள். அவ்வாறு தெரியவிடாமல், தமிழர்களை இத்தகைய பொய்யான இனவாத சித்தாந்தங்களை வைத்துக் கொண்டு முட்டாள்கKஆல்லி விட்டதால், கடந்த 60-100 வருடங்களில் தமிழர்கள் முன்னேறாமல், பின் தங்கியே உள்ளர்கள்).

வேதபிரகாஷ்

24-02-2012


[1] தினமலர், பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்!’: கருணாநிதி உருக்கமான வேண்டுகோள், பிப்ரவரி 23,2012, http://www.dinamalar.com/News_detail.asp?Id=412586

[2] சி. பி. பிரௌன் என்ற பாதிரி தான் கால்டுவெல்லிற்கு சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்தார். அவர் கால்டுவெல்லின் அயோக்கியத்தனத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அவற்றைப் படித்தறிந்தால், தமிழர்கள் நிச்சயமாகத் திருந்துவார்கள். அதுமட்டுமல்லாது, கால்டுவெல் சாணார்களை பற்றி மிகவும் கேவலமாக தனது புத்தகத்தில் எழுதியுள்ளான். அதனால் அப்புத்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

http://dravidianatheism.wordpress.com/2011/02/18/denigrating-tamils-with-robert-caldwell/

http://dravidianatheism.wordpress.com/2010/01/30/caldwell-purana-continues/

http://dravidianatheism.wordpress.com/2010/01/30/house-of-caldwell-converted-to-memorial/

http://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-government/

[3] நாணயங்கள், முக்கியமான சரித்திர அதாரங்கள் மறைப்பு!:அங்கிருந்து ஆயிரக்கணக்கில், ஓலைச்சுவடி புத்தகங்களை எடுத்து இங்கிலாந்திற்கு அனுப்பினார். தமிழ் தொன்மையினை ஆராய்ந்து அதனை மாக்ஸ்முல்லரின் ஆராச்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தபோது, இந்தியாவின் ஒட்டுமொத்த ஒருமைப்பாடு அதிர்ச்சியளித்தது. ஓலைச்சுவடி புத்தகங்களைப் படித்து தாமரைப்பரணி ஆற்றங்கரையில் உள்ள பழைய காயல் என்ற ஊர்தான் மிகவும் பழமையானது என்று தெரிந்து கொண்டார். அதுமட்டுமல்லது அது பாண்டியர்களின் துறைமுகமாக இருந்தது, போன்ற விஷயங்களையும் தெரிந்து கொண்டார். பல இடங்களில் பழமையான நாணயங்கள் முதலியவற்றைக் கண்டதும் திகைத்தார். ஏனெனில், அவையெல்லாம், இந்திய ராஜ வம்சாவளியினரின் கடற்பயணங்களைக் குறிக்கும் ஆதாரங்களைக் கொண்டிருந்தன. சர் வால்டர் எல்லியட் எடுத்துக் காட்டியபடி, கப்பல் பொறிக்கப்பட்டுள்ள நாணயங்களையெல்லாம், சாமர்த்தியமாக மறைத்துவிட்டார். பிறகு அரசு பூர்வமாக அறிவிக்கவேண்டுமேயன்று, அனுமதியுடன் அகழ்வாய்வு மேற்கொண்டதுபோல், பிறகு பழங்கால கட்டிடங்கள், கோவில்கள் முதலியவற்றின் அஸ்திவாரங்களுக்கு அருகில் நோண்ட ஆரம்பித்தார்.  அதன்மூலமாகத்தான், தாழிகள், பளபலப்பான மற்றும் கலைநயம் பொருந்திய மண்பாண்டங்கள் , மீன் இலச்சினையுடைய பாண்டியர்களது நாணயங்கள் முதலியவற்றைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார். இப்படி திருட்டுத் தனமாக, அகழ்வாய்வு மேற்கொண்டு பல ஆதாரங்களை மறைத்தவர் தான் கால்டுவெல்.

http://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-government/

[4] அப்பாட்டிலேயே சில வரிகள் நீக்கப்பட்டன, மாற்றியமைக்கப் பட்டுள்ளன என்பதெல்லாம் தெரிந்தால், குட்டு வெளிப்பட்டு விடும்.

[6] தினகரன், திராவிட இயக்கத்தின் 100ம் ஆண்டு விழா திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு, http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=3671

[7] பி. ராமமூர்த்தி, ஆரிய மாயையா? திராவிட மாயையா? விடுதலைப் போரும், திராவிட இயக்கமும், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1987.

[8] முரசொலி மாறன், ஏன் வேண்டும் இந்த இன்பத் திராவிடம், முத்துவேல் பதிப்பகம், திருச்சிராப்பள்ளி, 1957.

[9] குணா, திராவிடத்தால் வீழ்ந்தோம், தமிழக ஆய்வரண், பெங்களூர், 1995.

கருணாநிதிஜியின் ஆசை: இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ்!

ஜனவரி 26, 2010

கருணாநிதிஜியின் ஆசை: இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ்!

© வேதபிரகாஷ்

குறிப்பு: பத்திகளின் தலைப்புகள் மட்டும் என்னால் கொடுக்கப்பட்டுள்ளன. கருணாநிதி சொன்னது சாய்வெழுத்துகளில் கொடுக்கப்பட்டுள்ளன.

நடக்கமுடியாததைச் சொல்லுவோம், நடக்கக்கூடாதையும் சொல்லுவோம்[1]! இப்படி புதிய பிரசாரகர்கள் கிளம்பிவிட்டனர் போலும்! விளம்பரங்களில் மனிதனுக்கு அளவிலாத காமம், இச்சை, மோகம் வந்துவிட்டது. எப்படியாவது பிரபலம் ஆகவேண்டும், அதற்காக என்னவேண்டுமானாலும் செய்யத்தயார், பேசத் தயார் என்ற நிலை உருவாக்குவது மனப்பாங்காகிறது. இதில் அரசியல்வாதிகளின் வழி அலாதியானது. நடக்கமுடியாததை நடத்துவோம் (எல்லொருக்கும் வேலை கொடுப்போம்……போன்றது), செய்யமுடியாததைச் செய்வோம் (வறுமையைப் போக்குவோம்……..பொன்ற வகையறாக்கள்) என்றெல்லாம் பேசுவதுதான் அராசியல்வாதிகள் தந்திரம், என்பதுதான் அரசியலின் மந்திரம், அப்படியே ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வது யந்திரம்! பல நேரங்களில் பலவிதமாக, பலதரப்பட்ட கூட்டங்களுக்குத் திருப்தி செய்ய பேசுவர். அதனால்தான் அவர்களின் பேச்சுகளில் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. பொதுவாக அவர்கள் சொல்லிவிடுவர், “ஊடகக்காரர்கள் நான் பேசியதை மாற்றிச் சொல்லிவிட்டார்கள்”, என்று!

கருணாநிதிஜியின் “தமிழ் ஆட்சி மொழி” பற்றிய பேச்சு: தினமணி[2] கூறுவது, “தமிழுக்கு மத்திய ஆட்சி மொழி அந்தஸ்து கேட்பதில் என்ன தவறு …”, என்று கருணாநிதி கேள்வி கேட்டதாகத் தலைப்பு. தினமலர் சொல்வதோ[3], “இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ் : முதல்வர் கருணாநிதி விருப்பம்”, என்பதாகும். தினகரன் அன்பழகனைக் குறிப்பிட்டுக் கூறுவது[4], தமிழில் பேசும் நிலை விரைவில் உருவாகும்”, என்பதாகும்! எது எப்படியாகிலும் அரசியல்வாதிகள் எல்லாவிதமாகவும் பேசுவார்கள், எல்லோருடனும் அனுசரித்திச் செல்வது போலக் காட்டிக் கொள்வார்கள், ஆனால், உண்மையில் அவர்கள் ஆசைப்படுவது, சாகும் வரை சிம்மாசனத்தில் இருக்கவேண்டும் என்பதுதான்!. இனி வெளியிடப்பட்டுள்ள செய்தி தொகுக்கப்பட்டு அலசப்படுகிறது.

1965-2010: ஜனவரி 26 – 55வது துக்கநாள்: கொண்டாடும் கருணாநிதிஜி? 1965ல் குடியரசு தினத்தை “துக்க நாள்” என்று அறிவித்து திமுக கொண்டாடியது. அப்பொழுது காங்கிரஸ்காரர்கள் எதிர்தார்கள்! ஆனால், இன்று காங்கிரஸ்காரர்களுக்கு சரித்திரம் மறந்து போயிருக்கும். 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் வைத்துக் கொண்டுதான் திமுக வளர்ந்தது. எனவே 2011க்கு முன்பு அத்தகைய உணர்ச்சிகளை திட்டமிட்டு எழுப்புகிறாரா என்று பார்க்கவேண்டும்.

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள்!: நேருஜியின் 1959ம் ஆண்டு சமரசத்தில் மறந்துவிட்ட தியாகங்கள், திடீரென்று தமிழ் செம்மொழியானப் பிறகு, மாநாடு நடத்தப்படும் வேளையில் பேசப்படுவது விந்தையே! நேருவின் உறுதிமொழியே மோசடி என்று சொல்லும் திராவிடவாதிகளும்[5] உண்டு! அனால் 1959ல் திமுக வரவேற்று தீர்மானம் நிறைவேற்றியது. தாரைப்பூசும் போராளிகளுக்கு தாரை வர்க்கப்படுகிறது – பத்மஸ்ரீக்கள், பத்மவிபூஷண்கள்…………………! தன்மானம் மிக்க, தமிழினப் போராளிகள் ஜி/ஜீபோட்டு வாங்கிக் கொட்டு வருகின்றன! குடியரசு நாளில் கருணாநிதிஜி தனது பிரிவினையை மறைமுகமாக ஊட்டுகிறார் என்பதுதான் உண்மை. தில்லியில் ஹிந்தியில் “நமஸ்தேஜி” என்று விளித்து, “கைஸே ஹைஜி?” நலம் கேட்கும் கருணாநிதிஜி, கனிமொழிஜி, மாறன்ஜிகள்……………..இன்று ஹிந்தியை எதிர்ப்பு பாட்டு பாட மறைமுகமாக ஆரம்பித்துவிட்டார்களா என்ன!

கருணாநிதிஜியின் முரண்பாடா? இந்தி எதிர்ப்புக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு!: 1976ல், இந்தி எதிர்ப்பு கிளர்ச்சிகளில் இறந்தவர்களுக்கு அரசு தரப்பில் பென்ஸன் கொடுத்தபோது, அந்த ஆணையை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. சென்னை உயர்நீதி மன்றம் அப்பொழுது அதற்கு ஆதரவாகத் தீர்ப்பு கொடுத்தது! உடனே, அப்பீலுக்கு உச்சநீதி மன்றத்திற்குச் சென்றபோது, சாமர்த்தியமாக, அந்த தீர்ப்பை விலக்கும்போது குறிப்பிட்டது, “இந்தியை ஊக்குவிப்பதற்கு பதிலாக, இந்திக்கு எதிரான உணர்ச்சியை தூண்டுவதாக உள்ளது”. என்று சரிசெய்தது[6]. அதே மாதிரி முரசொலி தொடுத்த மற்றொரு வழக்கில்[7], பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகும் ஆங்கிலத்தை இந்திகூட உபயோகித்தாலும், இந்தி படித்தவர்களுக்கு சலுகை அளித்தாலும்[8] அவை பிரிவுகள் 343 (3) மற்றும் 344 (6) சொல்லியுள்ளபடி, பிரிவு 351ஐ மீறுவதாகது என்று தீர்ப்பளித்தது! ஆகவே, இவற்றையெல்லாம் மறைத்து பேசுவது என்பது, திராவிடவாதிகளுக்குக் கைவந்த கலைதான் போலும்[9].

ஆங்கிலம் தெரியாத நோபல் பரிசு பெற்றவர்களும், ஹிந்தி தெரியாத பத்மஸ்ரீக்களும்: தமிழ் பேச்சாளிகள்-எழுத்தாளிகள் தங்களுக்கு சாதகமாக இருந்தால் எதைவேண்டுமானாலும் பேசுவார்கள்-எழுதுவார்கள். அங்கு தமிழ்-தமிழல்லாதது என்றெல்லாம் நிலைகள் மறக்கப்படும்!

  • இந்தி தெரிந்தால் வேலை கிடைக்கும் என்றல், இந்தி படித்தவர்களுக்கெல்லாம் ஏன் வேலை கிடைப்பதில்லை?
  • தமிழ் படித்தால் வேலைக் கிடைக்காதா?
  • நோபல் பரிசு பெற்றவர்களுக்குக் கூட ஆங்கிலம் தெரியாதே?
  • செத்தபாடை பேசுமா?

இப்படி அருமையாக தமிழில் மணிக்ககணக்கில் பேசி, பேச்சாளி என்ற முறையில் பணத்தை வாங்கிக் கொண்டு[10] கிளம்பிவிடுவார்! கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியுடன், ஏதோ டிவியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தது போன்ற உணர்ச்சியுடன் சென்றுவிடுவர்! ஆனால், சாகித்ய அகடமி பரிசுக்காக அலையும் கோஷ்டிகள் ஏராளம்!

ஹிந்தி எதிர்ப்பு பட்டியலிடும் கருணாநிதிஜி: வடசென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக் கூட்டம், சென்னை பெரவல்லூரில் நேற்று நடந்தது[11]. இந்நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது: “கடந்த 1938 ம் ஆண்டு முதல், இந்தியை கட்டாயமாக திணிக்கப்படுவதை எதிர்த்து 30 க்கும் மேற்பட்டோர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அந்த மொழிப்போரில் ஈடுபட்டவர்களின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இக்கூட்டம் நடக்கிறது. இதை, கொண்டாட்டம் என கூறக்கூடாது. மொழிப்போர் தியாகிகளை நினைவூட்டும் நாள். எதிர்காலத்தில் தமிழுக்கு எந்தவித எதிர்ப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்கான அடையாளம்”.

இந்தி மொழிக்கு நாம் விரோதி அல்ல!: கருணாநிதி தொடர்கிறார், “இந்தி உள்பட எந்த மொழியையும் நாம் எதிர்க்கவில்லை. இந்தி மொழிக்கு நாம் விரோதி அல்ல. அதை, நம்மீது திணிக்கும்போது, மறுக்கிறோம்; எதிர்க்கிறோம். தமிழ் மொழிக்கான இடம் பறிக்கப்படுவதை எதிர்க்கிறோம்.

  • கடந்த 1938 ல், இந்தியை கட்டாயப் பாடமாக்குவதில் அப்போதைய முதல்வர் ராஜாஜி தீவிரமாக இருந்தார், இந்தியை கட்டாயம் என அறிவித்தார். எனினும் காலம் மாறியது.
  • 1965-ல் அதே ராஜாஜி இந்தியை எதிர்த்து என்னுடன் ஒரே மேடையில் நின்று எதிர்ப்புக் குரல் எழுப்பினார். இந்தி வந்தால், நாம் இரண்டாவது குடிமகனாக ஆகிவிடுவோம் என்றும் கூறினார்.
  • 1967ல் தி.மு.., உதயமானபோது, முதல்வர் அண்ணாதுரை மொழிப்போர் தியாகிகளின் ஆத்மா சாந்தியடைய தீர்மானம் கொண்டு வந்தார். மொழிப்போரில் உயிர் நீத்தவர்களுக்கு வழங்கப்படும் ஆறுதல் தொடர வேண்டும்”.

இந்தியை ஆதரித்த திராவிட மறவர்கள்: 1925ல் திரு. வி.க தலைமையில் நடந்த காஞ்சிபுரம் மாநாட்டில், “தமிழ் இளைஞர்கள் மிக விரைவில் இந்தி கற்றுக் கொள்ளவேண்டும்”, என தீர்மானத்தை நிறைவேறியது! இன்று குறிப்பிடப்பட்டபடி, இந்தி எதிர்ப்பெல்லாம் கருணாநிஜிக்கு, அவர் பெரிய குடும்பம், குடும்ங்களுக்கு இல்லை. அங்கெல்லாம், “சல்தா ஹைஜி” தான்!

மோடியின் குஜராத் நீதிமன்றம் சொல்கிறது இந்தி மொழி தேசிய மொழி அல்ல என்று! கருணாநிதி தொடர்கிறார், “மொழிப் போர் தியாகிகள் தினம் அனுசரிக்கும் இந்த நாளில் குஜராத் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை தந்துள்ளது. இந்தி மொழி தேசிய மொழி அல்ல என்றும், அதை தேசிய மொழி என யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும், மற்ற மாநில மொழிகளைப் போல இந்தியும் சில மாநிலங்களில் பேசக் கூடிய ஒரு மொழி மட்டுமே என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்தியாவில், ஆட்சிமொழியாக இந்தி, அதையடுத்து ஆங்கிலம் உள்ளது. தமிழையும் ஆட்சிமொழியாக ஆக்க வேண்டும் என்பதையே மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளில் கோரிக்கையாக வைக்கிறோம். அதற்காக, தமிழை மட்டும் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை”. மேலும், அத்தீர்ப்பு, விற்கப்படும் பொருள் பொட்டலம், அட்டைப்பெட்டி முதலியவற்ரின் மீது விலை, உற்பத்திசெய்யப்பட்ட தேதி, உற்பத்தியாளர் பெயர், முகவரி முதலிவற்றை இந்தியில் இருக்கவேண்டும் என்று கூறி ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்ததில் தான், இவ்வாறான தீர்ப்பு வழங்கப்பட்டது! இதன்மேலே அவர் அப்பீல் போவாரா இல்லையா என்றெல்லாம் தெரியாது.

குழப்பும் கருணாநிதிஜி: இந்தி தேசிய மொழி என்பது வேறு, ஆட்சிமொழி என்பது வேறு: “அம்பேத்காருடைய” இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் 343 சரத்தின்படி, “தேவநகரியிலுள்ள இந்தி ஆட்சி மொழியாகும்” என்பதுதான். அதுமட்டுமல்லாது 351ன்படி இந்தி மொழி வளர்ச்சிக்காக ஆவண செய்ய வரைமுறைக் கொடுத்துள்ளது. ஆகவே, “….……. “1ன்படி இந்தி மொழி வளர்ச்சிக்காக ஆவண செய்ய வரைமுறைக் கொடுத்துள்ளது. ஆகவே த்திசெய்யப்பட்ட தேதி, உற்பத்தியாளர் பெயர், முகவரி முடதமிழை மட்டும் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்க மொழி, இந்தி ஆகிய மொழிகள் உள்பட தமிழையும் சேர்த்து அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக அங்கீரிக்க வேண்டும் என்றுதான் கோருகிறோம்”, என்று பேசுவது, நடக்கமுடியாததை பேசுவதேயாகும்! சட்டரீதியாக முடியாததை சொல்கிறார் என்பதில்லை, அவ்வாறு சொல்லி மூட்டிவிடுகிறார் எனலாம்.

எல்லாமொழிகளும் ஆட்சிமொழிகளாக்க வேண்டும்! கருணாநிதி தொடர்கிறார், “தமிழையும் ஆட்சிமொழியாக ஆக்க வேண்டும் என்பதையே மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளில் கோரிக்கையாக வைக்கிறோம். அதற்காக, தமிழை மட்டும் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்க மொழி, இந்தி ஆகிய மொழிகள் உள்பட தமிழையும் சேர்த்து அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக அங்கீரிக்க வேண்டும் என்றுதான் கோருகிறோம்[12].

  • 1963ல் காங்கிரஸ் ஆட்சியின்போது, இந்தித் திணிப்பை எதிர்த்து அண்ணா அரசியல் சட்ட நகலை எரிக்க முயன்று, கைதானார். ஆனால் அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை யாரும் பறிக்கவில்லை.

  • 1986-ல் எனினும் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்திய எம்.ஜி.ஆர். ஆட்சியில், இந்தித் திணிப்பை எதிர்த்து அரசியல் சட்ட நகலை எரிக்க முயன்றதற்காக . அன்பழகன் உள்ளிட்ட 10 தி.மு.. எம்.எல்..க்களின் பதவி பறிக்கப்பட்டது. இது மிகவும் வேதனையானது”.

சிங்கங்கள் நாங்கள், புலிகள் அல்ல, சிங்காசனங்கள் எங்களுக்குத் துச்சம்! கருணாநிதி தொடர்கிறார், “தமிழகத்தைப் பொருத்த வரை எங்களுக்கு ஆட்சி பெரிதல்ல. நாங்கள் சிங்கத்தமிழர் கூட்டம். நாங்கள் ஆட்சியில் இருப்பது பெரிதல்ல; தமிழ்த் தாயின் சிம்மாசனத்தை[13] பறித்தால், விடமாட்டோம்[14]. இந்தியாவில் ஆட்சிமொழியாக, தமிழும் வரவேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை”. இவ்வாறு முதல்வர் பேசினார். கூட்டத்துக்கு வடசென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் வி.எஸ். பாபு எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். கூட்டத்தில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன், தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ. அன்பழகன் உள்ளிட்டோர் பேசினர்.

© வேதபிரகாஷ்

24-01-2010


[1] முன்பு சொன்னது, “சொன்னத்தை செய்வோம், செய்ததை சொல்வோம்!”

[2] தினமணி, தமிழுக்கு மத்திய ஆட்சி மொழி அந்தஸ்து கேட்பதில் என்ன தவறு? கருணாநிதி, 26 Jan 2010

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Chennai&artid=187523&SectionID=97&MainSectionID=97&… %BF

[3] தினமலர், இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ் : முதல்வர் கருணாநிதி விருப்பம், ஜனவரி 26,2010

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6402

[4] தினகரன், http://www.dinakaran.com/arasialdetail.aspx?id=4549 தெலுங்குக்காரரான அன்பழகனுக்கு ஹிந்தி தெரியுமா என்று தெரியவில்லை!

[5] தியாகு, முடியவில்லை மொழிப்போர், தமிழக மாணவர் இயக்கம்,  சென்னை, 1993, ப. 5-6.

[6] Dalavai vs State of Tamilnadu – AIR. 1976. S.C. 1559 (paras, 4, 6).

[7] Union of India vs Murasoli – AIR. 1977. S.C. 225 .

[8] Union of India vs Murasoli – AIR. 1977. S.C. 225 (230).

[9] வீரமணி, ராஜேந்திரன், கொளத்தூர் மணி, பெ. மணியரசன் மற்றும் கம்யூனிஸ-நக்ஸலைட் உதிரிகள் சிறு-சிறு புத்தகங்கள் போட்டு குழப்பிவருவது சாதாரண விஷயமே.

[10] இப்பொழுதெல்லாம் பேசுவதற்கே ஆயிரம் கணக்கில் பணம் கேட்கிறார்களாம், வாங்குகிறார்களாம், வாழ்க தமிழ், வளர்க தமிழ் பேச்சாளிகள்! அடுத்த வருமான வரி “ரெய்டு” இவர்கள் மீது இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

[11] 25-01-2010 அன்று நடந்த கட்சி கூட்டத்தில் கருணநிதி பேசியது.

[12] இதுவே நடக்காத காரியம். அரசியல் நிர்ணய சட்டத்தை மாற்றாமல் நடக்காது. இன்றைய நிலையில், பல முக்கியமான பிரச்சினைகளை விட்டுவிட்டு, சோனியா மெய்னோ, இதற்கா கவலைப் படுவார்? ஏற்கெனவே மொழிவாரி மாநிலங்கள் பிரச்சினை போய், தெலிங்கானா போன்ற ப்ய்திய பிரச்சினைகள் வந்துள்ல நிலையில், இவரது பிரிவினைத் தூண்டும் பேச்சுகளை கவனிக்கவேண்டும்.

[13] “சிம்மாசனம்” தமிழா, இந்தியா, செத்த பாடையா, அந்நாளில், இவ்வர்த்தையை உபயோகிக்கலாமா?

[14] என்ன, உருட்டல், மிரட்டல்கள்! காங்கிரஸ்காரர்கள்தாம் கவனிக்க வேண்டும்! இன்று உண்மையான காங்கிரஸ்காரர்கள் இருப்பது கடினமே. எற்கெனவே, குமரி அனந்தனை தமிழ் பற்றி பேசவைத்து விட்டார்கள் சன்-டிவியில். சனிக்கிழமை, வீரப்பாண்டியன் நிகழ்ச்சி. ஆகவே, அவரும் அமைதியாகத்தான் இருப்பார்.