Archive for the ‘தமிழ்’ Category
ஏப்ரல் 20, 2018
தமிழ், தமிழகம், தமிழ்நாடு: நீட் தேர்வு, காவிரிப் பிரச்சினை, ஐபிஎல் என்று மோடி–எதிர்ப்பு வேலை செய்யும் விதம் [3]

நீட் தேர்வு, காவிரிப் பிரச்சினை, ஐபிஎல் என்று மோடி–எதிர்ப்பு வேலை செய்யும் விதம்: இன்றைய வேலை தேடும் விசயத்தில் “சந்தை-வேலைமுறை” [Job-market] என்றது, சந்தை பொருளாதாரத்தில் பிரபலமாகி சரத்தாகி விட்டது. அகில-உலக பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்றப்படி, படிப்பு-தொழிற்முறை பயிற்சிகள் மாற்றியமைக்கப் பட வேண்டியுள்ளது. அயல்நாட்டு கம்பெனிகளுக்காக வேலைசெய்வது, அவர்களது தேவைகளுக்கு ஏற்றப்படி, சேவை-உற்பத்திகள் மாற்றியமைக்கப் பட வேண்டியதாயிற்று. அந்நிலையில், மருத்துவப் படிப்பு தேசிய அளவில் முறைப்படுத்தும் நிலையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால், அதன் தராதரத்தை அறிந்து கொள்ளாமல், குறுகிய “தமிழ், தமிழகம், தமிழ்நாடு” சித்தாந்தத்தில் எதிர்ப்பு அரம்பித்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் அதிரடியாக நடந்து வருகின்றன. அவற்றிற்கான லட்சக் கணக்கில் கொடுக்கப் படும் விளம்பரங்களை, எதிர்க்கும் டிவி-மற்ற மின்னணு-அச்சு ஊடகங்களில் வெளி வந்து கொண்டிருக்கின்றன. அந்நிலையில் தான் காவிரிப் பிரச்சினையாளர்கள், ஐபிஎல் மீது திரும்பினர்.

சேப்பாக்கம் மைதானம் தாக்கப் பட்டது: 10-04-2018 அன்று இதே கூட்டங்கள் கேவலமாக நடந்து கொண்டதை உலகமே பார்த்து வெறுத்தது. கிரிக்கெட்டை விரும்பும் சேப்பாக்கமா இவ்வளவு அநாகரிகமாக நடந்து கொண்டனர் என்று, கிரிக்கெட் ரசிகர்கள் வெட்கப்பட்டனர். 10ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது, நடந்த போராட்டத்தில், போலீசாரை தாக்கியதாக சீமான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது[1]. கொலை முயற்சி வழக்கில் சீமான் கைது செய்யப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. சென்னையில். இந்த நிலையில், சீமான் தங்க வைக்கப்பட்டுள்ள பல்லாவரம் ஸ்ரீகிருஷ்ணா கல்யாண மண்டபத்தை சுற்றி அதிரடிப்படை குவிக்கப்பட்டது. சீமான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது என்று தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன[2]. ஆனால், அதற்குள் 12-04-2018 அன்று கலாட்டா செய்ய தயாராகி விட்டனர். அண்ணா அறிவாலயத்தில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிகளின் (9 கட்சிகள்) கூட்டத்தில் காவிரி நதி நீர் உரிமை குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ஸ்டாலின், செயல் தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்.
- கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்.
- சு.திருநாவுக்கரசர், தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.
- கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- ஆர்.முத்தரசன், தமிழ்நாடு மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- கே.எம். காதர்மொகைதீன், தலைவர், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்
- தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி
- எச். எம். ஜவாஹிருல்லா தலைவர், மனித நேய மக்கள் கட்சி.
- நாம் தமிழர் கட்சி
ஆம் ஆத்மி, மற்ற உதிரி கட்சிகளும் கலந்து கொண்டது, ஊடக செய்திகள் மூலம் தெரிகின்றது. அதாவது, அவ்வப்போது, அந்தந்த பிரச்சினைகளை வைத்துக் கொண்டு கலாட்டா செய்வது, பிற்கு மறந்து விடுவது என்ற நிலையில் போராட்டங்கள் நடப்பதும் தெரிகிறது.

மோடிக்கு கருப்புக் கொடி ஆர்பாட்டம்: காவிரி நீர் உரிமையில் தமிழ் நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்று அக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர் மானங்களுள் ஒன்றாகும்[3]. அந்த வகையில் 12.4.2018 அன்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்குக் கருப்புக் கொடி காட்டுவதற்கு தயாராயின[4]. திருவிடந்தையில் நடக்கும் மத்திய பாதுகாப்புத்துறையின் ராணுவக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக 12-04-2018 அன்று பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி, சென்னை விமானநிலையம் வந்திறங்கினார்[5]. உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்[6]. அப்பொழுது, அவர்கள் பேசிய பேச்சு, அமிர் வெறி பிடித்தது போன்று நடந்து கொண்ட விதம் முதலியன விசித்திரமாக இருந்தது. மேலும் சுற்றியிருந்தவர்களில் பெரும்பாலோர் முகமதியர் என்பதும் நன்றாகவே தெரிந்தது. ஆகம் இவர்கள் எல்லோரும் இவ்வாறு ஒன்று பட்டுள்ளது காவிரிப் பிரச்சினைக்கா அல்லது மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பிற்கா என்ற கேள்வியும் எழுகின்றது. காவிரிப் பிரச்சினை போர்வையில் மோடி-எதிர்ப்பு பிரதானமாக அரங்கேறியுள்ளது. அதுதான் அரசியல் நோக்கக் காட்டுகிறது. அதன்படியே, கைதானவர்கள், வழக்கம் போல விடுதலை செய்யப்பட்டனர்[7]. பிறகு, வழக்குப் பதிவுகள், முந்தைய கைதுகள் என்னவாயிற்று என்று தெரியவில்லை[8].

சீமான் பேச்சு, நடவடிக்கை, புராணம் முதலியவற்றை தினம்–தினம் அதிகமாக வெளியிட்டது “தமிழ்.ஒன்.இந்தியா”தான்: “அதிமுக நடத்திய உண்ணாவிரதத்தால் என்ன பயன் கிடைத்துவிட்டது. ஐபிஎல் விளையாட்டை நடத்தக் கூடாது, தமிழகம் கொந்தளிக்கும் இந்த நேரத்தில் ஐபிஎல் எங்களுக்கு வேண்டாம். மீறி ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் எங்களின் எதிர்ப்பை எந்த விதத்தில் வெளிக்காட்ட வேண்டுமோ அப்படி வெளிக்காட்டுவோம்” என்று சீமான் சொன்னது,[9]தீர்மானத்துடன் அவ்வேலையில் இறங்கப் போவது தெரிந்தது. “காங்கிரஸ் கூட்டணியில் 10 ஆண்டுகள் இருந்த போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தற்போது திமுக போராடுவது வேடிக்கையாக உள்ளது”என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்[10]. பாஜக ஆட்சியிலும் வரவில்லை. அதிமுக பெயருக்கு உண்ணாவிரதம் நடத்தி உள்ளது[11]. மெரினாவில் மட்டும் போராடுவதற்கு அனுமதி கொடுத்தால் உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் போராட்டம் நடத்தி காவிரி மேலாண்மை வாரியத்தை பெறுவோம்[12]. அதாவது கலாட்டா செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கி இருந்தது என்ற ஒப்புதல் வெளிப்படுகிறது.
© வேதபிரகாஷ்
19-04-2018

[1] தமிழ்.ஒன்.இந்தியா, கொலை முயற்சி வழக்கில் சீமான் கைது? சீமான் தங்க வைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் அதிரடி படை குவிப்பு, Posted By: Veera Kumar Updated: Thursday, April 12, 2018, 16:35 [IST]
[2] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-may-be-get-arrested-317054.html
[3] விடுதலை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வை பிரதமர் புரிந்து கொள்வாரா?, வெள்ளி, 13 ஏப்ரல் 2018 16:51
[4] http://www.viduthalai.in/component/content/article/71-headline/160044-2018-04-13-11-39-44.html
[5] தினத்தந்தி, பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு ;சீமான் வேல்முருகன், மணியரசன், தமிமுன் அன்சாரி, பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர் கைது, ஏப்ரல் 12, 2018, 10:58 AM
[6] https://www.dailythanthi.com/News/State/2018/04/12105816/Opposition-to-PMs-visit-Seeman-Velmurugan-Maniyarasan.vpf
[7] தமிழ்.ஒன்.இந்தியா, கைது பரபரப்புகளுக்கு முற்றுப்புள்ளி.. சீமான், தமிமுன் அன்சாரியை இரவில் விடுதலை செய்தது காவல்துறை!, Posted By: Veera Kumar Updated: Thursday, April 12, 2018, 21:04 [IST]
[8] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-may-be-get-arrested-317054.html
[9] தமிழ்.ஒன்.இந்தியா, காவிரிக்காக திமுக போராட்டம் நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது – சீமான்!, Posted By: Gajalakshmi Published: Saturday, April 7, 2018, 18:22 [IST]
[10] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-condemns-dmk-protests-cauvery-rights-316570.html
[11] தமிழ்.ஒன்.இந்தியா, மெரினாவில் போராட அனுமதி கொடுத்தால் தமிழர்கள் உலகையே திரும்பிப்பார்க்க வைப்பார்கள் : சீமான், Posted By: Mohan Prabhaharan Published: Sunday, April 8, 2018, 15:15 [IST].
[12] https://tamil.oneindia.com/news/tamilnadu/tamils-have-the-capability-hold-strong-says-seeman-316627.html
குறிச்சொற்கள்:அமீர், ஐபிஎல், கருப்பு, கருப்புக் கொடி, காவிரி, கிரிக்கெட், சீமான், செருப்பு, செருப்பு வீச்சு, சேப்பாக்கம், திருவிடந்தை, தோணி, தோனி, நதிநீர், நீட், நீர், நீர் பிரச்சினை, மோடி, மோடி எதிர்ப்பு, மோதி, ரசிகர், ஷூ, ஷூ வீச்சு
அமீர், ஐபிஎல், கருணாநிதி, காவிரி, செருப்பு, செருப்பு வீச்சு, சேப்பாக்கம், டோனி, தமிழ், தி.மு.க, திக, தோணி, தோனி, நதி நீர், நாம் தமிழர், நீட், நீர், பாஜக, மோதி, விடுதலை சிறுத்தைகள், ஷூ, ஷூ வீச்சு, ஸ்டாலின் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 20, 2018
தமிழ், தமிழகம், தமிழ்நாடு: தனித்தமிழ் இயக்கம்–திராவிட இனவெறி மற்றவர்களிடமிருந்து பிரித்தது, மொழிவாரி மாநிலங்கள் உருவானதில் தனிமைப்படுத்தப் பட்ட நிலை [2]

தமிழ், தமிழர், தமிழ்நாடு [திராவிடக் கட்டுகதை] என்று மூளைசலவை செய்து, தமிழ்நாட்டை கெடுத்து, சீரழித்ததே, இந்த கோஷ்டிகள் தாம்: 1930-40களில் தனித்தமிழ் இயக்கம், திராவிட இனக் கட்டுக்கதைகளை வளர்த்தன. சைவம் என்ற போர்வையில், வைணவத்தை எதிர்த்து, தெலுங்கு பேசும் மக்களை அவமதித்த போக்கு, நீதிகட்சியைக் குலைத்து, திராவிட கழக போர்வையில், தமிழக பிரிவினை உருவெடுத்தது. ஆனால், அத்தகைய தேசவிரோத கொள்கையிலிருந்து மற்ற மொழி மக்கள் வேறுபட்டனர். 1940-50 திராவிட இனவெறி கட்டுக் கதைகளினால் தான், முதலில் ஆந்திரா தனியாகப் பிரிந்தது, முதல் மொழிவாரி மாநிலமானது[1]. தொடர்ந்து “தமிழ்” தான் உயர்ந்தது, அதிலுருந்து தான் மற்ற மொழிகள் தோன்றின என்பதனை சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, தெலுங்கு மக்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பட்டிபோர்லு [Bhattiporlu] வரிவடிவங்களை [script] மற்றும் கல்வெட்டுகளை [inscriptions] வைத்துக் கொண்டு, தெலுங்கு வரிவடிவம் BCE மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று வாதிட்டனர். “தமிழ்நாடு” உருவானபோது கூட, எல்லை தகராறுகளில் கேரளா, ஆந்திரா மற்றும் ஆந்திராவுடன் எதிராகவே இருந்தது. தமிழநாட்டைத் தவிர மற்ற மாநில மக்கள் தாங்கள் “திராவிடர்கள்” என்றெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், திராவிடத்துவ சித்தாந்தம் தமிழ்நாடு மாநிலத்துடன் சுருங்கி விட்டது. காவிரி பிரச்சினையில், முன்னர் பாமகவினால், அதிகமாகவே வெறியூட்டப் பட்டு, பிறகு திராவிட பிரிவினைவாதிகளால் தீயூட்டப் பட்டது. அப்பொழுது, இங்கு “உடுப்பி” ஹோட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஶ்ரீ ராகவேந்திர மடங்களும் தாக்கப்பட்டன.

தமிழகத்தில் நடந்த எல்.டி.டி.ஈ.யின் வாரிசு / அதிகாரச் சண்டை திசைமாறியுள்ள நிலை: எல்.டி.டி.ஈ.யின் வாரிசு சண்டை தமிழக அரசியல் கட்சிகள், பெரிய புள்ளிகள் மற்றும் சித்தாந்தவாதிகளிடம் அதிகமாகவே வெளிப்படுகிறது. முன்பு, ஒரு நபரால் கட்டுக்கோப்பாக வைத்திருந்தது, சிதறிவிட்டது. எல்.டி.டி.ஈ.யின் பங்கு போதை மருந்து கடத்தல், விநியோகம் மற்றும் வியாபாரம், வெடிகுண்டுகள், ஆயுதங்கள் வாங்கல்-விற்றல், தமிழ்த் திரைப்பட விநியோகம், திருட்டு சிடி-விசிடி, குறிப்பிட்ட மின்னணு உதிரிகள் என பல விஷயங்களில் இருந்தது, இன்றும் இருக்கிறது[2]. போதை மருந்து கடத்தல் விவகாரங்கள் அப்பட்டமாக இருந்தாலும், தமிழக ஊடகங்கள் மறைத்தே வந்ததன-வருகின்றன[3]. இதனால் தான் “மத்திய அரசு எதிர்ப்பு” அடிக்கடி ஏற்படுகிறது. தெற்கு மாவட்டங்களில் மீனவர்களின் உதவிகளுடன் அத்தகைய சட்டமீறல்கள் நடந்து வருவதால், எல்லா கட்சிகளில் சம்பந்தங்களும் காக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதிகாரப் பிரயோகம், அதிகாரப் பகிர்வு முதலியன யாரிடம் இருப்பது என்பது பற்றிதான் சண்டை-சச்சரவு நடந்து கொண்டிருக்கிறது. இதில் தமிழகத்தைச் சார்ந்தவர்கள், ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்கள் மற்றும் இரண்டிலும் அல்லது கனடா-பாரிஸ்-அமெரிக்காவில் இருப்பவர்கள் என்று மூன்று குழுக்களாக செயல்படுகின்றனர்[4]. திரைத்துறை, அரசியல் முதலிய பகிர்வு போராட்டங்கள் வைகோ, நெடுமாறன், செபாஸ்டியன் சீமான்[5], ஜெகத் காஸ்பர்…………என்று பலநேரங்களில் வெளிப்படும். கடந்த குறுகிய காலத்தில், நிறைய அளவு பணம் திரைப்படம், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள் முதலியவற்றில் முதலீடு செய்யப்படுகிறது. அந்நிலையில், குறிப்பிட்ட தனிநபர்கள், குழுமங்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் குவியும் போது, நிச்சயமாக சண்டை வரத்தான் செய்கிறது. அதுமட்டுமல்லாது மத்தியில் மற்றும் மாநிலத்தில் தனித்தனி கூட்டணிக் கட்சியினருக்கு, பெரும்பாலான பணம் செல்லும்போதும் மற்றவர்களுக்கு கடுப்பாகிறது.

தீவிர தமிழ்வாத பிரிவினை கொலைகளில் முடிந்தது: 1984-89களில் எல்.டி.டி.இ வைத்துக் கொண்டு கருணாநிதியும் பிரிவினைவாத கோஷ்டிகளுடன் செயல்பட்டார். அவர்கள் நடத்திய உயநிர்ணய, பிரிவினைவாத மாநாடுகள் பெயரளவில் தடை செய்யப் பட்டன. இதனால், விடுதலை புலிகள் முதல், விடுதலை குயில்கள் வரை எல்லாம் ஊக்குவிக்கப் பட்டன. வி.பி.சிங் ஆட்சிகாலத்தில், பாமக போன்ற கட்சிகளும் “சுயநிர்ணயம்” போர்வையில் பிரிவினைவாதம் பேசியுள்ளது. பாமகவினால் தமிழக-கர்நாடக விசரிசல்கள் பெரிதாகின, அமைச்சர் பதவி கிடைத்ததும் பாமக அடங்கி விட்டது. மற்றவை “மண்டல்” போர்வையில் கலாட்டா செய்து வந்தன. இவர் 21 மே 1991 ராஜிவ் காந்தி படுகொலை திராவிட அரசியல்வாதிகளின் முகத்திரைகளைக் கிழித்து, அவர்களது தேசவிரோத கள்ளக்கடத்தல், வரியேய்த்தல், போதை மருந்து விரயாபாரம் என்று பற்பல சட்டமீறல்கள், குற்றங்கள் முதலியவற்றை எடுத்துக் காட்டின. 1996-2004ல், பதவி போதையில், திமுக சுருண்டு கிடந்தது. 2004-2014களில் ஊழலில் மிதந்து, கோடிகளை அள்ளி, ஊடக சாம்ராஜ்ஜியத்தை நிலைப் படுத்திக் கொண்டது. டிவி அதிரடி தாக்கம், பிரச்சார யுக்திகளினால் திராவிட குற்றங்களுக்கு வெள்ளையெடித்து, அதே நேரத்தில், காங்கிரசுக்கு சாதகமாக, இந்து-விரோத பிரச்சாரத்தை “பிஜேபி-எதிர்ப்பு” போர்வையில் நடத்தியது[6], நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், சத்தியராஜ் போன்ற நடிகர்களால் எதிர்மறை விளைவுகள் அதிகமாக ஏற்பட்டன. ரஜினியின் நிலையற்ற தன்மை மற்றும் இப்பொழுதைய கமல் ஹஸனின் பாரபட்சம் மிக்க பேச்சுகள்-நடவடிக்கைகள் போலித் தனமாக இருக்கின்றன. இப்பொழுது கூட, கமல்-ரஜினி பிளவுகள் போலித்தனத்தையே எடுத்துக் காட்டுகின்றன.

கார்புரேட்டுகளின் தொடர்புகள், அயல்நாட்டு வியாபாரங்கள், வரியேப்பு, மோடி–எதிர்ப்பு: கார்புரேட்டுகளின் விளம்பரப் பணம் கொட்டி, வியாபாரம் சினிமாக்களில் பெருகி, பணத் தோட்டத்தில்[7], அதிகார போதையுடன், சுகபோகங்களை அனுபவித்தன. இதில் கம்யூனிஸம் பேசும் வகையறாக்களும் அடக்கம். இவற்றில் கடல்கடந்த வியாபார தொடர்புகள், இணைப்புகள், பண பரிவர்த்தனைகள் எல்லாமும் அடக்கம். எந்த திராவிடக் கட்சியும், பிரிவினைவாத கோஷ்டியும், சினிமாக்காரனும் இதில் சோடை போனதில்லை. அரசியல்வாதிகள் மற்றும் சினிமாக்காரர்களின் அடிக்கடி அமெரிக்க-ஐரோப்பிய பயணங்கள் அவற்றை வெளிப்படுத்தின. மோடியின் “கருப்புப் பண வேட்டை” முதலியவை இவர்களை பாதித்ததால் தான், மோடியை எதிர்க்க ஆரம்பித்தார்கள். ஆக, கள்ளப்பணம், வரியேய்ப்புகளில் ஈடுபட்ட கூட்டங்கள் தாம் இன்று தெருக்களில் கருப்பு சட்டம் அணிந்து கலாட்டா செய்து, பொது மக்களை இம்சித்து வருகின்றனர். திர்ப்புகள் சேவை வரி முதல் ஜிஎஸ்டி வரை இதில் உள்ளதை கவனிக்கலாம். இருப்பினும் வியாபாரம் செய்பவன், லாபங்களில் கொழுப்பதினால், அமைதியாகவே இருக்கிறான்.
© வேதபிரகாஷ்
19-04-2018

[1] Andhra Pradesh was carved out of Madras Presidency on October 1, 1953. This gave a death blow to the concept of “Dravidastan” and the separate nation for “Dravidian speaking people.” In other words, the “Dravidian” demand was restricted to “Tamilnadu.” The linguistic formation of States took place in 1956 with Kerala and Karnataka. Thus, “Dravidastan” was reduced to “Tamilnadu”.
[2] Citing Royal Canadian Mounted Police sources the Jane’s Intelligence Review said the Liberation Tigers of Tamil Eelam (LTTE) controls portion of US Dollar one billion drug market in the Canadian city of Montreal. The Jane’s Intelligence Review said that one of the main ways of earning money out of its USD 200-300 million annual income of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) is narcotics smuggling using its merchant ships, which also transports illicit arms and explosives which they procure all over the world for a separatist insurgency in the Indian Ocean island of Sri Lanka.
Steven W. Casteel, Narco-Terrorism: International Drug Traffickingand Terrorism – a Dangerous Mix, Statement ofSteven W. Casteel Assistant Administrator for Intelligence Before theSenate Committee on the Judiciary May 20, 2003; http://www.justice.gov/dea/pubs/cngrtest/ct052003.html
[3] Kartikeya, LTTE fall will alter drug trade in India, TOI, May 30, 2009, Read more: ‘LTTE fall will alter drug trade in India’ – Mumbai – City – The Times of Indiahttp://timesofindia.indiatimes.com/city/mumbai/LTTE-fall-will-alter-drug-trade-in-India/articleshow/4595554.cms#ixzz0xzdLhzpw
http://timesofindia.indiatimes.com/city/mumbai/LTTE-fall-will-alter-drug-trade-in-India/articleshow/4595554.cms
[4] http://www.eurasiareview.com/201006143193/sri-lanka-ltte-diaspora-wars-south-asia-intelligence-review.html
[5] செபாஸ்டியன் சீமான், ஜகத் காஸ்பரை இந்தியாவின் ஒற்றன் என்றெல்லாம் சொல்வதும், ஏதோ பெரிய விடுதலைப் போராளி போல நடந்து கொள்வதும், அதேபோல ஜகத் காஸ்பர் வெளிப்படையாக எல்.டி.டி.ஈ.யினரை ஆதரித்து பேசுவது-எழுதுவது சென்று செய்தாலும், கண்டு கொள்ளாமல் இருப்பது, முதலியவை தமிழகத்தில் வேடிக்கையான விஷயங்களே.
[6] சன் குழும நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், சீரியல்கள் முதலியவற்றை அலசிப் பார்க்கும் போது, இது வெளிக்காட்டுகிறது.
[7] அண்ணாவின் “பணத்தோட்டம்” திராவிட அரசியல் மற்றும் கம்பெனிகளின் கூட்டுக் கொள்ளை, வரியேய்ப்பு முதலியவற்றை காட்டுவது மட்டுமல்லாது, சினிமா-கிரிக்கெட் தொடர்புகளையும் வெளிப்படுத்தி விட்டன.
குறிச்சொற்கள்:அரசியல், சுய நிர்ணயம், சுயநிர்ணயம், தனி நாடு, தமிழ், தமிழ் தமிழன், தமிழ் பிரினைவாதம், தமிழ்நாடு, திராவிட இயக்கம், திராவிட நாடு, திராவிடஸ்தான், நரேந்திர மோடி, பிரிவினை, பிரிவினைவாதம், பிரிவ்னைவாதம், மோடி, மோடி எதிர்ப்பு
அண்ணா, கருணாநிதி, கூத்தாடி, சித்தாந்தம், சுய நிர்ணயம், ஜெயலலிதா, தனி நாடு, தமிழ், தி.மு.க, திக, திரவிடம், திராவிட இனம், திராவிட சித்தாந்தம், திராவிட நாத்திகம், திராவிட பாகுபாடு, திராவிடத் தமிழன், திராவிடன், திராவிடம், திராவிடர், திராவிடஸ்தான், மாயை, மோடி, வீரமணி, ஸ்டாலின் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜனவரி 16, 2018
ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், மாட்டுக்கறிக்கு ஆதரித்ததும், குங்குமத்தை அழித்ததும் தமிழ்நாட்டவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் – இப்பொழுது சனியைப் பற்றி பேசும் ஸ்டாலின் (2)

போகி திருநாளும், பிடித்துள்ள சனியும்: ஸ்டாலின் பேசியது, “இன்று போகி திருநாள். போகி என்றால் பழையன கழிதலும், புதிய புகுதலும் என்ற நிலையில், நம்மை பிடித்துள்ள சனி இன்றோடு ஒழிந்திட வேண்டும். வீட்டிலிருக்கும் பழையனவற்றை மட்டுமல்ல, இந்த நாட்டிலிருக்கும் பழையனவற்றையும் அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு உருவாகியிருக்கிறது[1]. அந்தளவுக்கு, ஏறக்குறைய 20 ஆண்டுகள் பின்தங்கி, மோசமான நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு, நாளைய தினம் தை பிறக்கின்ற நேரத்தில் ஒரு நல்ல விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கை நமக்கெல்லாம் உருவாகி இருக்கிறது. எனவே, நம்முடைய தமிழகத்தை காப்பாற்ற, தமிழகத்துக்கு ஒரு விடிவுகாலத்தை உருவாக்கிட, தமிழக மக்களுக்குத் தேவையான திட்டங்களை உருவாக்கிட வேண்டுமென்று, இந்த தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவில் உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கையோடு உங்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டும் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறினார்[2]. இனி தளபதியை மாடு முட்ட வந்த விவகாரத்தை கவனிப்போம்.

மாடு முட்ட வந்த சமாசாரம்: வேடிக்கை என்னவென்றால், தளபதியை மாடு முட்ட வந்த விவகாரத்தை “தினமலர்” மட்டுமே வெளியிட்டதாகத் தெரிகிறது. ஒரு வீடியூ 15-01-2018 காலையில் தேடியபோது காணப்பட்டது. மதியம் காணப்படவில்லை. கொளத்துாரில், ஸ்டாலினை மாடு முட்ட வந்ததால், மாட்டிற்காக செய்யவிருந்த பூஜையை, ஸ்டாலின் ரத்து செய்தார்.தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க., செயல் தலைவருமான ஸ்டாலினின் சொந்த தொகுதி கொளத்துார். இந்த தொகுதிக்கு உட்பட்ட, பெரவள்ளூர், பெரியார் நகர் பகுதிக்கு வந்தார். கொளத்துார் வீதிநகர் பகுதியில், நடந்த பொங்கல் விழாவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஸ்டாலின், 9:00 மணிக்கே வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.ஆனால், 12:௦௦ மணிக்கு வந்த ஸ்டாலின், பொங்கல் விழா நடைபெறும் இடத்தில் இருந்த பசுமாட்டிற்கு மாலை போட சென்றார்.ஆனால், அந்த மாடு முட்ட வரவே, கோபமடைந்த ஸ்டாலின், மாலையை கட்சி தொண்டர் ஒருவரிடம் கொடுத்து மாட்டிற்கு போடச் சொன்னார்[3]. மேலும், பசு மாட்டிற்கு செய்யவிருந்த பூஜையையும் வேண்டாம் என்று கூறி மறுத்து விட்டார்[4]. சென்ற ஜூன் 2017ல் மாட்டுக்கறியை ஆதரித்துப் பேசியதை நினைவு கொள்ளலாம்[5]. இப்படி இரட்டை வேடும் போடும் இவர், பொங்கல் வாழ்த்து என்று இணைதளத்தில் படம் போடும் போது, மாட்டை சேர்த்துக் கொள்கிறார்.

மிருகம் போலி நாத்திகனின் முகமூடியைக் கிழித்து விட்டது: ஸ்டாலினை மாடு முட்ட வந்தது, மாலை போட மறுத்தது, போலி நாத்திகத்தை தோலுரித்திக் காட்டுகிறது. குங்குமத்தை அழித்த ஸ்டாலினை மாடு முட்ட வந்தது, திராவிட நாத்திகத்திற்கு சரியான அடி! பகுத்தறிவால் எந்த விளக்கமும் கொடுக்க முடியாது! முன்னர் கருணாநிதி, திமுக தொண்டர் குங்குமத்துடன் வந்தபோது, நக்கலாக, “என்ன நெற்றியில் ரத்தமா?”, என்ற கேட்ட வயதான தந்தை கருணாநிதியின் வக்கிரம் தான், தனயன், நெற்றியில் இட்ட குங்குமத்தை அழித்தபோது புலப்பட்டது. பிறகு தனது தாயார், துணைவியார், சகோதரி என்று எல்லோரும் ஏன் குங்குமம் வைக்கின்றனர், அவற்றை அழிக்காமல் இருக்கும் இவரது யோக்கியதை என்ன என்பதனை கவனிக்க வேண்டும். ஸ்டாலின் – மாடு முட்ட வந்தால் வீரத்தமிழா, கோபம் வரக்கூடாது, கொம்புகளைப் பிடித்து அடலேறு போல அடக்கி வீரத்தைக் காட்ட வேண்டும்! ஜல்லைக் கட்டுக்கு வீரம் பேசிய இந்த தளபதி கோழை போல ஓடி போனது, கேவலமானது. வயதாகி விட்டது என்று சொல்லலாம், அப்பொழுது, வயதிற்கு வேண்டிய நாகரிகம் அப்பனுக்கும், மகனுக்கும் இல்லாத்தும் கேவலம் தான். நம்பிக்கையில்லாத ஸ்டாலின் சனி பற்றி பேசுவது, அவரது பொலித்தனத்தின் உச்சம்! பிறகு ராகு-கேது எல்லாம் வரும் போல!

போகி பண்டிகையில், பழையது கலைந்து, புதியதை உருவாக்குவோம். தமிழகத்தை சனிபிடித்து ஆட்சி செய்கிறது.தை பிறந்தால் வழிபிறக்கும், பெரியாரா இப்படி சொல்லிக் கொடுத்தார்? பண்டிகைகளைக் கேவலப்படுத்திய ஈவேரா மற்றும் திக முதலியவற்றை தமிழக மக்கள் அறிந்து, புரிந்து கொண்டு விட்டனர். ஹேமமாலினியையும், ஸ்டாலினையும் மாடு முட்ட வந்ததில் உள்ள ஒற்றுமை, வேற்றுமை என்ன என்று பார்த்தால், முன்னவர் பிராமண்ராக இருந்தாலும், தான் கடமையை செய்யும் போது முட்ட வந்தது. ஆனால், இங்கோ, பொங்கல் வைத்து, பசுக்கு மாலை போட வந்த போது முட்டப் பார்த்தது. ஆக, அந்த ஜீவனுக்கு, இந்த மனிதனின் போலித் தனம் தெரிந்திருக்கிறது.

இந்து மதம் மட்டுமல்ல எந்த மதத்தை இழிவுபடுத்தினாலும் தி.மு.க. அதை ஏற்காது: வைரமுத்து-ராஜா விவகாரத்தில், ஸ்டாலின் கூறிய இரு வரியை பெரியதாக எடுத்துக் கொள்ள முடியாது[6]. இந்து மதம் மட்டுமல்ல எந்த மதத்தை இழிவுபடுத்தினாலும் தி.மு.க. அதை ஏற்காது ஊக்கப்படுத்தாது, உடன்படாது. என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்[7]. ஆனால், அவர் அவ்வாறு செய்துள்ளாரா என்று பார்த்தால் ஒன்றும் கிடையாது. ஊடகங்களும் பதிலுக்கு எந்த கேள்வியையும் கேட்கவில்லை[8]. திமுக உடன்படாது என்றால், தான் உடன் படுவேன், ஊக்குவிப்பேன், ஏற்பேன் என்றாகிறது[9]. இது பேட்டியில் ஏதோ குறிப்பிட்டிருக்கிறார், அவ்வளவுதான், ஏனெனில், இதுவரை, இந்து மதம் தாக்கப் பட்டபோது, இவர் வாயை மூடிக் கொண்டுதான் இருந்தார். இப்பொழுது கூட கனிமொழி பேசியதற்கு ஒன்றையும் சொல்லக் காணோம். அதென்ன அப்பேச்சு இழிவு படுத்தியதாக ஆகாதா? அவ்வளவு ஏன், இவரது தந்தை பேசியது எல்லாம் ஞாபகப் படுத்திக் கொண்டால், இவரது மனதுக்கு, மனசாட்சிக்குத் தெரியாமலா போய் விட்டது? வைத்த குங்குனத்தை அழித்தபோது, இவர் என்ன செய்ததாக அர்த்தம்? ஆகவே, இந்த ஒரு வரியை வைத்து, இவரது குணத்தை ஒன்றும் எடை போட முடியாது. மேலும், ஊடகங்கள், பசு முட்ட வந்ததை மறைத்ததிலிருந்தே, அவகளது வழக்கமான, செக்யூலரிஸத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பொங்கல் அன்று கனிமொழி வீட்டிற்கு சென்ற கருணாநிதி: ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்து கனிமொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்[10]. இதேபோல் திமுக தொண்டர்களும் ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக மக்களுக்கு கனி மொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்து உள்ளார்[11]. இந்த ஆண்டாவது தமிழக மக்களுக்கு விடிவுகாலம் பிறக்க வேண்டும் என கூறி உள்ளார். வழக்கமாக பொங்கல் அன்று கருணாநிதி வீடு களை கட்டும். இந்த ஆண்டும், சி.ஐ.டி காலணி வீட்டில் தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பொங்கல் அன்று கோபாலபுரம் வீட்டில் தொண்டர்களைப் பார்த்து கையசைத்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

கோபாலபுரம் வீட்டில் இருக்கும் கருணாநிதி, பொங்கல் அன்று தொண்டர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தனித்தனியாக தொண்டர்களை பார்க்க மருத்துவர்கள் அனுமதி தரவில்லை. நோய் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்று தடை போட்டுவிட்டனர். இந்நிலையில், 15 மாதங்களுக்கு பிறகு சென்னை சி.ஐ.டி காலணி வீட்டிற்கு ஜனவரி 15-ம் தேதி இரவு 9 மணிக்கு சென்றார் கருணாநிதி[12]. வீட்டுக்கு வந்த கருணாநிதியை அவரது மகள் கனிமொழி வரவேற்றார். ராஜாத்தி அம்மாள், அரவிந்தன் ஆகியோர் கருணாநிதியை வீட்டுக்குள் அழைத்து சென்றனர். ”வீட்டுக்கு அப்பா வந்தது மகிழ்சி அளிக்கிறது’ என்றார் கனிமொழி[13]. ஆக அப்பனை, அண்னனை மகள் சந்தித்தாள், என்று சொல்லாமல், ஏதோ ஒரு தலைவர், இன்னொருவரஇப் பார்த்தார் என்று செய்தி போட்டிருப்பது, நிருபர்கள், செய்தியாளர்களின் அடிமைத் தனத்தைக் காட்டுகிறது. “பொங்கல் இனாம்” கனமாக இருந்தது போலும். இதை ஏன் குறிப்பிட்டுகின்றேன் என்றால், மாடு முட்டிய விசயத்தை மறைத்ததால், அதனைப் பற்றி, பகுத்தறிவோடு செய்தி வெளியிட்டு விவாதிக்காமல் இருந்ததால் தான்.
© வேதபிரகாஷ்
16-01-2018

[1] பாலிமர்.நியூஸ், கொளத்தூர் தொகுதி பொங்கல் விழாக்களில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு, 13-ஜன-2018 12:43
[2]https://www.polimernews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/
[3] தினமலர், முட்ட வந்தது பசு மாடு பூஜையை நிராகரித்த ஸ்டாலின், Added : ஜன 14, 2018 04:39.
[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1938542
[5] http://www.timesnownews.com/india/video/beef-ban-dmk-protest-mk-stalin-iit-madras-assault/62078
[6] பாலிமர்.நியூஸ், எந்த மதத்தை இழிவுபடுத்தினாலும் தி.மு.க. அதை ஏற்காது – மு.க.ஸ்டாலின், 13-ஜன-2018 15:04
[7]https://www.polimernews.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5/
[8] தி.இந்து, அதிமுக ஆட்சி அகலவேண்ண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு: ஸ்டா;இன் பேட்டி, Published : 13 Jan 2018 15:50 IST; Updated : 13 Jan 2018 15:50 IST
[9] http://tamil.thehindu.com/tamilnadu/article22436018.ece
[10] தினத்தந்தி, தமிழக மக்களுக்கு கனிமொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார், ஜனவரி 14, 2018, 10:23 AM
[11] http://www.dailythanthi.com/News/TopNews/2018/01/14102338/Kanimozhi-for-Tamil-people-Pongal-greeted.vpf
[12] விகடன், கனிமொழி வீட்டில் கருணாநிதி….!, எஸ். முத்துகிருஷ்ணன், Posted Date : 01:15 (16/01/2018); Last updated : 01:15 (16/01/2018)
[13] https://www.vikatan.com/news/tamilnadu/113646-karunanidhi-went-to-kanimozhis-cit-colony-house-after-15-months.html – vuukle_div
குறிச்சொற்கள்:அரசியல், அழித்தல், இந்து-விரோத நாத்திகம், கனிமொழி, கருணாநிதி, குங்குமம், தன்னம்பிக்கை, தமிழ், திமுக, திராவிட சித்தாந்திகள், திராவிட பேச்சாளர்கள், திராவிடம், திராவிடர், திராவிடர் கழகம், நாத்திக மாநாடு, நாத்திகத் தமிழன், நாத்திகம், நெற்றியில் குங்குமம், போலி நாத்திகம், வைத்தல், ஸ்டாலின், ஸ்பெக்ட்ரம்
ஆரிய இனம், ஆரியம், ஆரியர், ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து தமிழன், இந்து-தூஷணம், இந்து-வெறுப்பு, இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இனம், இனவெறி, கடவுள், கனிமொழி, கருணாநிதி, கருத்து, கருப்பு சட்டை, குங்குமம் அழித்தல், குங்குமம் வைத்தல், சுபவீரப்பாண்டியன், சுயமரியாதை, தமிழ், தமிழ் தந்தை, தாலி, தி.மு.க, திக, திரவிடம், திராவிட இனம், திராவிட இயக்கம், திராவிட சித்தாந்தம், திராவிட நாத்திகம், திராவிடத் தமிழன், திராவிடன், திராவிடம், திராவிடர், நெற்றியில் குங்குமம், பகுத்தறிவு, பசு, பாஜக, பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பனர், பார்ப்பனீயம், பிஜேபி, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், மணியம்மை, மதசார்பற்றத் தீவிரவாதம், மதசார்பின்மை, மாடு, மாடு முட்ட, மாடு முட்ட வந்தது, மாட்டுக்கறி, மாட்டுக்கறி தின்பது, மாட்டுப் பொங்கல், மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஓகஸ்ட் 10, 2016
இந்து ஆன்மிகக் கண்காட்சி என்ற பெயரில் பள்ளி மாணவர்களைப் பாத பூஜை செய்ய வைப்பது சரியா?
புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த பாதபூஜை எல்லாம் (05-08-2016): இந்து ஆன்மிகக் கண்காட்சி என்ற பெயரில் பள்ளி மாணவர்களைப் பாத பூஜை செய்ய வைப்பது சரியா என்ற வினாவை மாநிலங்களவையில் எழுப்பினார் கவிஞர் கனிமொழி[1]. சென்னையில் இந்து மதக் கண்காட்சியில் 1800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். மேலும் பள்ளிக் குழந்தைகள் பூஜை செய்யுமாறு வற்புறுத்தப் பட்டனர். இது புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியே என்று மாநிலங்களவையில் கழகக் குழுத் தலைவர் கனிமொழி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 05-08-2016 அன்று கனிமொழி புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்து ஆன்மீக மாநாட்டில் மாணவர்களை கட்டாயப்படுத்தி கலந்து கொள்ள வைப்பது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்தார்[2]. இதுகுறித்து அவர் பேசியதாவது: “ஆசிரியர்கள் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். அவர்கள் மாணவர்களின் எதிர் காலத்தை மேம்படுத்த உழைக்கின்றனர். ஆனால் சென்னையில், இந்து மதவாத அமைப்புகள் ஒரு கண்காட்சியை நடத்துகின்றன. அதில் 1800க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். அந்நிகழ்ச் சியின் தொகுப்பினை, பள்ளிக் குழந்தைகள் பார்க்குமாறு கட்டாயப் படுத்தப்படுகின்றனர். பூஜைகள் செய்யுமாறு வற்புறுத்தப்படுகின்றனர். இது புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியே’’, இவ்வாறு அவர் பேசினார்[3]. கனிமொழியின் உரைக்கு இந்திய கம்யூனிஸ்ட்கட்சி உறுப்பினர் டி.ராஜா, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள்ஆதரவு தெரிவித்தனர்[4].
கனிமொழி ஒரு திரிபு விளக்கம் கொடுக்கும், குழப்பவாதியாகி விட்டார்: ராஜ்ய சபா எம்.பி என்ற நிலையில் ஏதாவது பேசுவது, விசயங்களைத் திசைத் திருப்புவது போன்ற நிலைகளில் தான் கனிமொழி வெளிப்படுகிறார். தமிழகத்தில் கட்ந்த 60 ஆண்டுகள் திராவிட, நாத்திக மற்றும் சமூகவிரோத ஆட்சியில் நடந்து வரும் சீரழிவுகள், பெண்களின் மீதான குற்றங்கள், கல்வி சீரழிவு முதலியவை எல்லோருக்லும் தெரிந்தவை தாம். கருணாநிதி-ஜெயலலிதா என்று ஒருவர் மற்றொருவ்ரைக் குற்றஞ்சாட்டிக் கொண்டே காலங்கழித்துக் கொண்டு வருகின்றனர். கனிமொழி ஏதோ எல்லா விசயங்களையும் தொட்டுவிட வேண்டும் என்று பேசி வருவது நகைப்புரிய செய்தியாகி விட்டது. ஏனெனில், தமிழகத்தில் அவ்வரால் ஒன்றும் செய்து விடமுடியவில்லை. பெற்றோர் வணக்கம், மரியாதை செல்லுத்துவது என்பது நாட்டின் பாரம்பரியம் மட்டுமல்லாது., தனிமனித உரிமையும் ஆகும். கனொமொழிக்கு பிடிக்கிறது-பிடிக்கவில்லை என்பதால், இதைப்பற்றியெல்லாம் பேசுவது அதிகப்பிரசிங்கித்தனம் என்றே சொல்லலாம். இது கமலஹாசன் தமிழ்-சமுதாயத்திற்கு அறிவுரை கூறுவது போல உள்ளது. அறிவுரை சொல்வதற்கு, தனிமனித ஒழுக்கம், கட்டுப்பாடு, கொள்கை பிடிப்பு, குடும்ப-உறவுகள் பேணல், முதலிய விவகாரங்கள் இருக்கின்றன. ஆனால், இவற்றில் இவர்களது நிலை என்ன என்பதனை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதுவும், தனிமனிதனைப் பற்றிய விமர்சனம் இல்லை, ஆனால், இங்கு, இப்பிரச்சினையில் தலையிடுவதால், எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
புதிய கல்வி கொள்கை போர்வையில் இந்து-எதிர்ப்பு: சென்னையில் ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியில் தமிழ் ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்த நிகழ்வைக் கண்டித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் குழுத் தலைவர் கனிமொழி பிரச்னை எழுப்பினார்[5]. இது தொடர்பாக மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை 05-08-2016 காலையில் கேள்வி நேரம் தொடங்கியதும் மத்திய மனித வளத் துறை அமைச்சகம் தொடர்புடைய கேள்விகளுக்கு அத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பதிலளிப்பதாக இருந்தது. இந்நிலையில், கேள்வி நேரம் தொடங்கிய போது இடைமறித்த கனிமொழி, “தினமணி’ நாளிதழில் “தமிழ் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை’ என்ற தலைப்பில் வெளியான புகைப்படத்துடன் கூடிய செய்தியின் பக்கத்தை அவையில் காண்பித்து குரல் எழுப்பினார்[6]. இதையடுத்து, அவரிடம் “என்ன பிரச்னை?’ என்று அவையை வழிநடத்திய மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் கேட்டார். இந்நிலையில், உரிய நோட்டீஸ் கொடுத்தால் மட்டுமே இந்த விவகாரத்தை பரிசீலிக்க முடியும் என்று குரியன் கூறினார். இதையடுத்து, சில நிமிடங்கள் சலசலப்புக்கு பிறகு அவையில் இயல்பு நிலை திரும்பியது.
புதிய கல்விக் கொள்கை, காவிமயம் என்கின்ற வாதம் முதலியன: அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு 21-Aன் கீழ் ஆறு முதல் 13 வரையில் உள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி கொடுக்கப்படவேண்டும் என்றுள்ளது[7]. 1986ல் புதிய கல்விக் கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டு, 1992ல் மாற்றியமைக்கப் பட்டது[8]. விஞ்ஞானம், தொழிற்நுட்பம், தொழிற்சாலை முதலியவை அதிவேகமாக மாறிவருவதால் அவற்றிற்கேற்றபடி, மறுபடியும் கல்விக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் தான் 2016 திட்ட வடிவு சுற்றுக்கு விடப்பட்டது[9]. அதற்கான ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டது[10]. ஆகவே, இதில் காவிமயம் என்பதெல்லாம் ஒன்றுமே இல்லை, ஏனெனில், 1986-1992 ஆண்டுகளில் இத்திட்டம் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டது. பிஜேபி-என்டிஏ அவற்றை மாற்றாமல் விஞ்ஞானம், தொழிற்நுட்பம், தொழிற்சாலை முதலியவற்றைப் பற்றிய விவரங்களை சேர்த்துள்ளது. இதனால், இவர்கள் அந்த ஆவணத்தைப் படித்து / ஒழுங்காகப் பார்க்கவில்லை என்றே தெரிகிறது. இவ்வாற்று முற்போக்கு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, மக்களை பிற்போக்காக மாற்றி, அவர்களது அறிவை மழுங்க செய்வதில் தான் இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். கல்வித் திறன், தொழிற் முன்னேற்றம், அனைத்துலக ரீதியில் விஞ்ஞானத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் போது, தேவையற்ற விசயங்களில் முக்கை நுழைத்துத் திசைத் திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
கனிமொழிக்கு இந்துவிரோத கோஷ்டிகள் ஆதரவு[11]: திக வீரமணியின் விடுதலை, தங்களது திட்டத்தை இவ்வாறு வெளிப்படுத்திக் கொண்டனர், “துணைத் தலைவர் குரியன் பலமுறை குறுக்கிட்டும்கூட, தான் எடுத்துக்கொண்ட கருத்தினை அழகாகப் பதிவு செய்த கவிஞர் கனிமொழி பாராட்டப்பட வேண்டியவர் ஆவார், என்று “விடுதலை” பாராட்டுகிறது[12]. மதச்சார்பற்ற அரசாட்சியில் இயங்கும் பள்ளிகளும், மதச்சார்பற்ற தன்மைக் கொண்டவைதான். அப்படி இருக்கும் பொழுது, ஓர் இந்து மதக் கண்காட்சியில் அந்த ஆசிரியர்களும், மாணவர்களும் பயன்படுத்தப்பட்டது எப்படி? கட்டாயமாக அழைத்து வரப்பட்டது சரியா? அந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்வது என்பது எல்லாம் அசல் காட்டுவிலங்காண்டித்தனம் அல்லவா? ஆசிரியர்களை மதிப்பது என்பது வேறு; அதற்காக பாத பூஜை போன்ற, காலத்துக்கு ஒவ்வாத ஒரு பூர்ஷ்வா தனத்தைப் புதுப்பிக்கவேண்டுமா?”
© வேதபிரகாஷ்
10-08-2016
[1] விடுதலை, சென்னையில் இந்து மத கண்காட்சி பள்ளி மாணவர்களை பாத பூஜை செய்ய வைப்பதா?, மாநிலங்களவையில் கனிமொழி எதிர்ப்பு, சனி, 06 ஆகஸ்ட் 2016 16:24
[2] http://viduthalai.in/component/content/article/75-politics/127366-2016-08-06-10-55-04.html
[3] சென்னை.டுடே.நியூஸ், ஆன்மீக கண்காட்சிக்கு எதிர்ப்பு: ராஜ்யசபாவில் புகார் கூறிய கனிமொழி, டி.ராஜா, சனிக்கிழமை, ஆகஸ்ட்.6, 2016, 11.36.காலை.
[4] http://www.chennaitodaynews.com/kanimozhi-mp-speaks-about-hindu-spiritual-and-service-fair/
[5] தினமணி, ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்வதா? மாநிலங்களவையில் கனிமொழி எதிர்ப்பு, By புது தில்லி, First Published : 06 August 2016 12:48 AM IST
[6]http://www.dinamani.com/india/2016/08/06/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-/article3565098.ece
[7] The Constitution (Eighty-sixth Amendment) Act, 2002 inserted Article 21-A in the Constitution of India to provide free and compulsory education of all children in the age group of six to fourteen years as a Fundamental Right in such a manner as the State may, by law, determine.
[8] Ministry of Human Resources Development, The National Education Policy, 1986 (Revised 1992), http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/upload_document/NPE86-mod92.pdf
[9] As the National Policy on Education was framed in 1986[9] and modified in 1992 (with the Constitution 73rd, 74th and 86th amendments), revision is expected to meet the requirements of humanresources and face the challenges of science, technology, academics and industry. Thus, the New Education Policy (NEP), 2016 has been formed and it is in circulation for comments and criticism to be offered before July 31stm, 2016.
[10] Ministry of Human Resources Development, Some imputs for Draft National Educationa Policy, 2016 – http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/nep/Inputs_Draft_NEP_2016.pdf
[11] http://viduthalai.in/component/content/article/71-headline/127299-2016-08-06-08-48-32.html
[12] விடுதலை, பாத பூஜையா?, சனி, 06 ஆகஸ்ட் 2016 14:18
குறிச்சொற்கள்:ஆரியர், இந்து தமிழன், கனிமொழி, கருணாநிதி, செச்யூலரிஸம், திராவிட சித்தாந்திகள், திராவிட தமிழச்சிகள், திராவிட பேராளர்கள், திராவிடம், திராவிடர், நாத்திகம், பாத பூஜை, பாதபூஜை, பெரியார், போலி நாத்திகம்
அரசியல் நாகரிகம், ஆரியம், ஆரியர், ஆர்.எஸ்.எஸ், இந்து-தூஷணம், இந்து-வெறுப்பு, இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், கனிமொழி, கருணாநிதி, குரு குலம், குருகுலம், குலக்கல்வி, தமிழ், தாலி, தி.மு.க, திக, திராவிட இனம், திராவிட நாத்திகம், திராவிடக் கலாச்சாரம், திராவிடத் திருமணம், திராவிடன், திராவிடம், திராவிடர், பாத பூஜை, பாதபூஜை, வீரமணி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
பிப்ரவரி 9, 2015
செபாஸ்டியன் சீமான் திடீரென்று “முருக பக்தன்” ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு போராட்டம் நடத்துவது (2)

சீமான் – நெற்றியில் விபூதி
பெஞ்சமின், அலாவுதீன், செந்தில்நாதன் சேகுவேரா, சுபாஷ் சந்திரபோஸ்: “பொதுக்கூட்டத்தில் சீமான், தனது கட்சியை சேர்ந்த சிலர் தமிழில் பெயரை மாற்றிக் கொண்ட விபரத்தை வாசித்தார்”, என்று தினமலர் கூறுகிறது[1]. கூட்டத்தில் தொடர்ந்து வீரதமிழர் முன்னணி அமைப்புக்கான மாநில ஒருங்கிணைப்பாளர்களாக பெஞ்சமின், அலாவுதீன், செந்தில்நாதன் சேகுவேரா, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்[2] என்று அவர்களது இணைதளம் வெளியிட்டுள்ளது. இதென்ன செக்யூலரிஸ அணியா, குழப்பக்கூட்டமா, “இந்தியன்” இல்லை என்கின்ற இந்திய-விரோதி அமைப்பா, “திராவிடன்” அல்ல என்று சொல்லி ஏமாற்றும் சித்தாந்த கும்பலா, “தமிழனாக” இருப்போன் என்று தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றை தூஷித்த கும்பலின் மறு அவதாரமா அல்லது மறுபடியும் “தமிழர்களின்” பெயரைச் சொல்லிக் கொண்டு, ஏமாற்ற தோண்டியுள்ள இன்னொர்ய் மோசடி கும்பலா என்று தமிழகள் விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

shanawas speech in MJK meeting Jan 28-2011- சீமான்
செபாஸ்டியன் சீமானின் இந்துவிரோத பேச்சுகள் அதிகமாகவே உள்ளன[3]. நாத்திக போர்வையில், பெரியார் சொன்னதை, இன்னும் அதிகமாகக் கொச்சைப்படுத்தி, இந்து மதத்தைச் சாடிவருவது, இவரது வேலையாகி விட்டது. நடுவே தன்னை “செக்யூலராக”க் காட்டிக்கொள்ள, சிறிது கிருத்துவத்தைக் கிண்டலடிப்பார். ஆனால், இஸ்லாமைப் பற்றி ஒன்றும் சொல்லாதது, விமர்சனிக்காதது, இவரது போலித்தனத்தை எடுத்துக் காட்டுகிறது. இத்தகைய கொள்கையற்ற மனிதர், “தமிழர்”, “பிராபகரன்”, “அம்மா”, “அப்பா”…………….என்ற வார்த்தை ஜாலங்களுடன்[4], மயிரு, மசுரு,………………………., போன்ற செம்மொழி வார்த்தைகளுடன் பவனி வந்து கொண்டிருக்கிறார். இவரது பேச்சுகள் அடங்கிய வீடியோக்கள் இணைதளங்களிலேயே உள்ளன, அவற்றை கெட்டாலே-பார்த்தாலே, உண்மையினை அறிந்து கொள்ளலாம். ஆகவே, “இந்துக்கள்” என்பவர்களும் இவரிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய அவசியம் உள்ளது.

Palanibaba_book_release_by_Seeman_in_MJK_meeting_Jan_28.2011
சீமானின் கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவு போராட்டமும், பழனி கோவில் கருவறை நுழைவு முயற்சிகளும்: 14-04-2010 அன்று கிருத்துவர்கள் சென்னை நினைவரங்கம் என்ற இடத்தில் ஆர்பாட்டம் செய்ய போலீஸாரிடம் அனுமதி கேட்டது போலவும், அதற்கு அனுமதி மறுக்கப் பட்டது போலவும், தெய்வநாயகம் என்ற புரட்டு ஆராய்ச்சியாளர், முந்தைய மோசடி-ஆராய்ச்சி கும்பல் அருளப்பா-ஆச்சார்யா கும்பல் கும்பலைச் சேர்ந்த ஆள், “தமிழர் சமயம்” என்ற இதழில் வெளியிட்டு இருக்கிறார் [மலர்.1; மே 2010, இதழ்.5, பக்கம்.10]. பிறகு வேறு இடத்தில் நடந்த கூட்டம், கபாலீஸ்வரர் கோவிலில் நடந்தது என்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்” வெளியிட்டது[5]. அக்கூட்டத்தில் செபாஸ்டியன் சீமான் பேசியது நினைவில் கொள்ளவேண்டும். இப்பொழுது, பழனிக்கு வந்துள்ளனர். பழனியாண்டவர் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக மலைக்கோவில் நோக்கி செல்வோம் என்று, திடீரென பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் இருந்து மலைக்கோயில் நோக்கி சென்றனர்[6]. அப்போது, “முருகனை காண மலைக்கோயிலுக்கு செல்கிறோம்’ என சீமான் மற்றும் தொண்டர்கள் மலை ஏறத்துவங்கினர். கோவிலில் சீமான் தொண்டர்களுடன் கருவறை நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தபோவதாக போலீசாருக்கும் மற்றும் இந்து முன்னணி அமைப்பினருக்கும் தகவல் தெரிந்ததால், அவர்கல் தடுத்துத்ன் திருப்பி அனுப்பப்பட்டனர்.[7]. இதுகுறித்து டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் கூறுகையில், “”ஊர்வலம், பொதுகூட்டம் நடத்த அனுமதி வாங்கியிருந்தனர். திடீரென ஊர்வலத்தின் போது மலைக்கோயிலுக்கு செல்வதாக கூறினர். இதனால் தடுத்தோம்,” என்றார். இதனையடுத்து சீமான் வெளிபிரகாரத்தில் வணங்கி விட்டு பொதுக்கூட்டத்திற்கு சென்றார் என்பதும் நாடகமே என்று அறிந்து கொள்ளலாம்.

சீமானின் குழப்ப சித்தாந்தம்
இந்தியாவை, தமிழ் பேசும் மக்களை ஏமாற்றிய சீமான்: ஒருபக்கம் இந்திய விரோத சக்திகளுடன் சேர்ந்து கொண்டு கூட்டங்களை நடத்துவது[8], இன்னொரு பக்கம் அடிப்படைவாத ஜிஹாதிகளை ஆதரிப்பது, பெரியாரிஸம் பேசுவது, ……இப்படி குழப்;பக் கலவையாகத்தான் செபாஸ்டியன் சீமான் இருந்துள்ளார். தமிழருக்கு யாசின் மாலிக்கைப் பற்றி என்ன தெரியும், முஸ்லீம் என்று சொல்லிக் கொண்டு கூத்தடிப்பது தெரியுமா? அப்சல்குருவின் பெயரை வைத்துக் கொண்டு, ஆபிஸ் சையதுடன் சேர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டது தெரியுமா? என்று முன்பு கேள்விகளை எழுப்பியிருந்தேன்[9]. “ஆரியர்-திராவிடர்”ரென்ற செல்லாத சித்தாந்தத்தைப் பேசி சில மக்களைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சரித்திரத் தன்மையற்ற புளுகுகளை வைத்து புத்தகம் வேறு எழுதியிருக்கிறார்! கால்டுவெல் துரோகத்தை இவர் புதுப்பிக்கிறார் போலும். இதில் இவர் “நாடார்” என்று வேறு சொல்கிறார்கள். பிறகு நாடார்களை இழிவு படுத்திய கால்டுவெல் சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு தமிழர்களை ஏமாற்ற யார் கற்றுக் கொடுத்தது? கனடாவில் இந்து கோவில்கள் கிருத்துவர்களால் தவறாகப் பயன்படுத்தப் பட்டதால், தண்டம் செல்லுத்த வேண்டியதாகியது[10]. இலங்கையில் முஸ்லீம்கள், முஸ்லீம்களாகத்தான் இருந்து செயல்பட்டனர், சாதித்துக் கொண்டனர். முன்பே பலமுறைக் குறிப்பிட்டப் படி, தமிழக ஊடகங்களே “இலங்கை முஸ்லீம்கள்”, “இலங்கை தமிழர்கள்” என்று பிரித்துக் காட்டி, தமிழர்களை ஒதுக்கினர்[11]. ஆனால், இவரோ பழனிபாபா விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்திய தமிழர்களுக்கோ, இலங்கைத் தமிழர்களுக்கோ இவரால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் எடுத்துக் காட்டப்பட்டது[12].

ஜான் சாமுவேல் பாதையில் செபாஸ்டியன் சீமானா?: ஜான் சாமுவேல் என்ற கிருத்துவர் 2004 வரை அனைந்துலக ஸ்கந்தா-முருகா மாநாடு என்ற பெயரில் ஒரு பிரைவேட் கம்பெனியை வைத்துக் கொண்டு, அதற்கு சேர்கள் / பங்குகள் எல்லாம் வாங்கச் சொல்லி நண்பர்களை, மாநாட்டுக்கு வந்தவர்களை வற்புறுத்தி வந்தார்[13]. முருக பக்தர் போல விபூதி வேட்டியெல்லாம் கட்டிக் கொண்டு, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியை எல்லாம் போய் பார்த்திருக்கிறார், இந்த சாமுவேல். முதல் மாநாடு சென்னையில், ஆசியவியல் வளாகத்தில் 1997ல் நடந்தது. அப்பொழுதே, இவர் ஒரு கிருத்துவ கூட்டத்தைக் கூட்டி வந்து, முருகன் தான் ஏசு என்பது போல ஆய்வுக்கட்டுரைகளை படிக்க வைத்ததுடன், விழா மலரிலும் வெளியிய வைத்தார். அது மட்டுமல்ல, தமிழ்-சமஸ்கிருத பேதத்தையும் கிளப்பிவிட்டார். முருகன் – கந்தன் – கார்த்திகேயன் – சுப்ரமணியன் என ஆராய்ச்சி செய்வதாக இருந்தால், சமஸ்கிருதம் தெரியாமல் எந்த ஆரய்ய்ச்சியும் செய்யமுடியாது.
இருந்தாலும் சக்திவேல் முருகனார் போல ஆட்களைத் தூண்டி விட்டு பிரச்சினையைக் கிளப்பினார். முருகனைப் பிடித்துக் கொண்டிருந்த ஜான் சாமுவேல், திடீரென்று முருகனை, எம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்டு, தாமஸைப் பிடித்துக் கொண்டது என்ன ரகசியம் என்பதை ஆராய ஆரம்பித்தபோது தான், முந்தைய அருளாப்பா-ஆச்சார்ய பால் கோஷ்டிகளின் மோசடிகளை விட, ஒரு பெரிய மோசடியை ஆரம்பித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது[14]. இதே பாணியில் தான் செபாஸ்டியன் சீமானும் இறங்கியுள்ளார். பிஷப்புகளை சந்தித்து, தெய்வநாயகத்துடன் சேர்ந்து கபாலீஸ்வரர் கோவில் கருவறைப் போராட்டம் என்று ஆரம்பித்து, பழனிபாபா நினைவுவிழவில் கலந்து கொண்டு, இப்பொழுது பழனிக்கு வந்துள்ளார்.
© வேதபிரகாஷ்
09-02-2015
[1] தினமலர், பழநி கோயிலில் சீமான்: போலீசார் அனுமதி மறுப்பு, பிப்ரவரி.08-02-2015, 01:17.
[2] http://www.dailythanthi.com/News/Districts/dindugal/2015/02/07211902/Sri-Lankan-Tamils-issue-the-decision-of-the-State.vpf
[3] http://www.keetru.com/periyarmuzhakkam/jul08/seemaan_1.php
[4] நான் சீமான் ஆனது எப்படி?” – ஆனந்த விகடன், http://www.naamtamilar.org/beta/textnews_detail.php?id=807
[5] இந்தியன் எக்ஸ்பிரஸ், ஏதோ அந்த கூட்டம், கபாலீஸ்வரர் கோவிலில் உள்ளேயே நடந்தது மாதிரி, ஒரு புகைப்படத்துடன், செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அதற்கு கடிதம் எழுதியதற்கு, இன்று வரை மறுப்பு அல்லது அது தவறு என்று வருத்தம் தெரிவித்தோ என்ற செய்தியும் வரவில்லை / வெளியிடவில்லை.
[6] தினமலர், பழநி கோயிலில் சீமான்: போலீசார் அனுமதி மறுப்பு, பிப்ரவரி.08-02-2015, 01:17.
[7] மாலைமலர், பழனி மலைக்கோவிலுக்குள் ஊர்வலமாக செல்ல சீமானுக்கு அனுமதி மறுப்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 08, 1:11 PM IST.
[8] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/19/why-anti-national-yasn-malik-and-sebastian-seeman-come-together/
[9] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/19/yasin-malik-and-sebastian-seeman-and-their-affairs/
[10] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/20/526-sebastian-seeman-and-yasin-malik-their-activities/
[11] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/21/what-yasin-malik-and-sebastian-seeman-can-do-to-indians-or-tamils/
[12] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/29/anti-indian-propaganda-continues-by-sebastian-seeman-party/
[13] https://christianityindia.wordpress.com/category/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/
[14] https://thomasmyth.wordpress.com/2011/01/21/why-asian-institute-of-studies-involves-in-the-spread-of-thomas-myth/
குறிச்சொற்கள்:ஆரியக் கலாச்சாரம், ஆரியம், ஆரியர், கிருத்துவம், சீமான், செபாஸ்டியன் சீமான், திராவிட அமைப்புகள், திராவிட நாடு, திராவிடத் தமிழன், நாம் தமிழர், பழனி, பழனி பாபா, முருகன், விபூதி
அறிவு, ஆரிய இனம், ஆரியக் கலாச்சாரம், ஆரியம், ஆரியர், இந்து, இந்து தமிழன், இந்து-தூஷணம், இந்து-வெறுப்பு, இஸ்லாம், கர்த்தர், காஃபிர், சீமான், ஜிஹாத், தமிழ், தமிழ் இந்து, தமிழ் தந்தை, தாலி, திக, திரவிடத் தாலி, திரவிடம், திராவிட அமைப்புகள், திராவிட இனம், திராவிட சித்தாந்தம், திராவிட நாத்திகம், திராவிடத் தமிழன், திராவிடன், திராவிடம், திராவிடர், திருக்குறள், நாத்திகத் தமிழன், நாத்திகம், நாம் தமிழர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
பிப்ரவரி 9, 2015
செபாஸ்டியன் சீமான் திடீரென்று “முருக பக்தன்” ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு போராட்டம் நடத்துவது (1)

சீமான் வேலுடன் பழனியில்.எச்சரிக்கை
நாம் தமிழர் கட்சியின் கிளை அமைப்பான வீரத்தமிழர் முன்னணியின் தொடக்க விழா திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்தது [1]. “சீமானின் நாம் தமிழர் கட்சியில்” பண்பாட்டு மீட்புக்காக “வீரத் தமிழர் முன்னணி” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது அவரது முரண்பாடு[2] மற்றும் ரகசிய திட்டத்தைக் காட்டுகிறது. கிருத்துவராக இருந்து கொண்டு, கிருத்துவர்களோடு சேர்ந்து கொண்டு இந்துக்களுக்கு விரோதமாக இவர் செயல்பட்ட விவகாரங்கள் ஏராளமாக உள்ளன. செபாஸ்டியன் சீமானின் கிருத்துவப் பின்னணி முதலிய விவரங்களை இங்கே பார்க்கவும்[3]. பிறகு, இலங்கைப் பிரச்சினையை வைத்துக் கொண்டு அரசியல் வியாபாரம் நடத்தினார். பிரபாகரன் இறப்பிற்குப் பிறகு, ராஜபக்ஷேவின் தோல்விக்குப் பிறகு, இவரது சித்தாந்தம் புழுத்துப் போய், ஏற்பார் இல்லாமல் போய் விட்டது. மேலும், “தமிழ் தேசியம்” பேசிவந்த, பிரிவினைவாதிகளின் பலமும் குறைந்து விட்டது. இவர் சினிமாகாரர் என்பதனால், பணத்தை வைத்துக் கொண்டு சமாளித்துக் கொண்டிருந்தார். ஆனால், உட்பூசல்கள் அதிகமாகிக் கொண்டிருந்தன. இவ்வேளையில், தமிழர்களை ஏமாற்ற “கலாச்சாரம்” என்ற உணர்ச்சிப்பூர்வமான விசயத்தை எடுத்துக் கொண்டுள்ளார் என்று தெரிகிறது.

சீமானின் புதிய கட்சி 2015
பண்பாட்டு புரட்சி, இறையோன் முருகன், கிருபானந்த வாரியார், என்ற பட்டியலில் பெரியாரைக் காணோம்: “வீரத் தமிழர் முன்னணி”யின் தொடக்க விழா பழனியில் நடைபெற உள்ளது என்று அவர்களது இணைதளம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை[4] என்று இவ்வாறுள்ளது: “பண்பாட்டு புரட்சி இல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது என்பதை நடுகல் மரபினராகிய நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். இயற்கை வழிபாட்டை கொண்ட தமிழர் நாம் உலகப் பொதுமறையாம் திருக்குறளே எமது மறை; எங்கள் வழி வள்ளுவம்; எங்கள் வழிபாடு இயற்கை; எங்கள் தெய்வங்கள் முன்னோர்கள் என்ற நெறியின் படி.. பெரும்புகழ் இறையோன் முருகன், வாழ்வியல் நெறிகட்டி வள்ளுவப் பெருந்தகை, தமிழ்மொழி இலக்கணம் கண்ட தொல்காப்பியர், மகத்துவம் பொருந்திய மாமுனி அகத்தியர், அறம் முழங்கிய ஔவை பாட்டி, நீதியின் வடிவம் கண்ணகி, வழிபாட்டு வழிகாட்டி அய்யா வள்ளலார், ஆன்மிகமும் அறிவியலும் கற்பித்த ஆசான் திருமூலச் சித்தர், அய்யா வழி வைகுந்தர், பெருமைமிகு கிருபானந்த வாரியார், மதிப்புமிகு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோரைக் குறியீடுகளாகக் கொண்டும், எங்கள் இனம் காக்க போராடிய கரிகாற்சோழன், அருண்மொழிச்சோழன், அரசேந்திர சோழன், பூலித்தேவன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார், பண்டார வன்னியன், மருதுபாண்டியர், அழகுமுத்துக்கோன், பெரும்பிடுகு, சுந்தரலிங்கம், ஒண்டிவீரன் ஆகியோரை தெய்வங்களாக நெஞ்சில் நிறுத்தியும் வரும் தைப்பூச நாட்களில் புதிய எழுச்சிக்கு நாம் தயாராகிவிட்டோம். நாளை பிப்ரவரி 7 ஆம் தேதி பழனியில் தமிழ்ப் பண்பாட்டை மீட்கவும் காக்கவும் வீரத்தமிழர் முன்னணியைத் தொடங்க இருக்கிறோம். மாலை 3 மணிக்கு பழனியாண்டவர் கலை கல்லூரியிலிருந்து பேரணி தொடங்கி தேரடி வீதியில் நிறைவடைந்து தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது”, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது[5].

Seeman withn VEL- exploiting culture
பொதுமறையாம் திருக்குறளே எமது மறை; எங்கள் வழி வள்ளுவம்: தெய்வநாயகம் பாணியில் இப்படி ஆரம்பித்திருப்பது கிருத்துவ திட்டத்தை வெலிப்படுத்துகிறது. “பெரும்புகழ் இறையோன் முருகன்,” என்றபோது ஜான் சாமுவேலை நினைவு படுத்துகிறது. “தமிழ்மொழி இலக்கணம் கண்ட தொல்காப்பியர், மகத்துவம் பொருந்திய மாமுனி அகத்தியர், அறம் முழங்கிய ஔவை பாட்டி, நீதியின் வடிவம் கண்ணகி, வழிபாட்டு வழிகாட்டி அய்யா வள்ளலார், ஆன்மிகமும் அறிவியலும் கற்பித்த ஆசான் திருமூலச் சித்தர், அய்யா வழி வைகுந்தர், பெருமைமிகு கிருபானந்த வாரியார், மதிப்புமிகு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோரைக் குறியீடுகளாகக் கொண்டு,” எனும்போது, அடையாளங்களை குழப்பப் பார்க்கும் போக்கு, “எங்கள் இனம் காக்க போராடிய கரிகாற்சோழன், அருண்மொழிச்சோழன், அரசேந்திர சோழன், பூலித்தேவன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார், பண்டார வன்னியன், மருதுபாண்டியர், அழகுமுத்துக்கோன், பெரும்பிடுகு, சுந்தரலிங்கம், ஒண்டிவீரன் ஆகியோரை தெய்வங்களாக நெஞ்சில் நிறுத்தி”, எனும்போது, ஜாதித்துவமும், “தமிழ்ப் பண்பாட்டை மீட்கவும் காக்க”, எனும்போது, இவரது போலித்தனமும் வெலிப்படுகின்றன. இத்தனை நாட்களாக இவர் எப்படி “தமிழ்ப் பண்பாட்டை மீட்”டிருக்கிறார், “காக்க”, என்ன செய்திருக்கிறார், என்பது இவரது வசைமொழிகள், தூஷ்ணங்கள் மூலமாகவே அறிந்து கொள்ளலாம்.

அய்யாநாதன் – நாம் தமிழர் கட்சி பிளவு- ஜனவரி 2015
சீமானுக்கு எதிராக கட்சி முக்கிய நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி உயர்த்திய விளைவா?: நாம் தமிழர் கட்சியை 2010-ல் இயக்குநர் சீமான் தொடங்கினார். இந்த கட்சியை, தமிழ்த் தேசிய, ஈழப்போராட்ட ஆதரவு அரசியல் இயக்கமாக நடத்தினார். சமீபத்தில், இந்த கட்சியில் சீமானுக்கு எதிராக கட்சி முக்கிய நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி உயர்த்தி தனித்து செயல்படப் போவதாகவும், கட்சியில் இருந்து சீமானை நீக்கப்போவதாகவும்[6] அறிவித்தனர்[7]. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக செயல்படப் போவதாக அக்கட்சியின் சர்வதேச ஊடகவியல் பொறுப்பாளர் அய்யநாதன் உள்பட ஈரோடு ஜெயராஜ் மற்றும் 13 மாவட்ட பொறுப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்[8]. நாம் தமிழர் கட்சியின் சர்வதேச ஊடகவியல் பொறுப்பாளராக இருக்கும் அய்யநாதன், சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காரைக்குடியில் பத்திரிகையாளர்களை இன்று சந்தி்த்தனர்[9]. அப்பொழுது பேசிய அய்யநாதன், “தமிழ் நாட்டை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதையும் மீறி காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீத்தேன் ஆய்விற்காக தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடி, அந்த குழாய்களை பிடுங்கி எரிந்த சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன் உட்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டு அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்காக சீமான் ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை. அதேபோல் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கபட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்த்தில் சிறை சென்ற ராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கவி.இளங்கோ கைது செய்யப்பட்டதற்கும் ஒரு கண்டன அறிக்கை கூட சீமான் வெளியிடவில்லை.

அய்யாநாதன் – நாம் தமிழர் கட்சி பிளவு- ஜனவரி 2015..கூட்டம்
புதிய நபர்களை வைத்து பொதுக்குழுவை நடத்தியுள்ளார்[10]: மாறாக தமிழர் நலனுக்காக போராடிய இவர்களை தொடர்ந்து கண்டித்து இவர்கள் இல்லாமல் புதிய நபர்களை வைத்து பொதுக்குழுவை நடத்தியுள்ளார். தமிழ் உணர்வு அற்றவர்களுக்கு பொறுப்பு வழங்கியுள்ளார். இவர்களின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டை போடுகிறார். அதற்காக தான் தமிழர் பிரச்சினையில் நாங்கள் வீரியத்துடன் செயல்பட நாம் தமிழர் கட்சியில் தனித்து செயல்படுவது என்ற முடிவினை நாங்கள் எடுத்துள்ளோம். எங்களுடன் எட்டு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கைகோர்த்துள்ளனர். நாங்கள் நாம் தமிழர் கட்சியில் தான் இருப்போம். ஆனால் தனித்து செயல்பட உள்ளோம். இந்த கட்சியை தேர்தல் கமிஷனில் பதிவு செய்து ஒரு ஆண்டு ஆகியும் எந்த பொறுப்பாளர்களும் நியமிக்கப்படவில்லை. அதேபோல் கட்சியில் எந்த உறுப்பினருக்கும் உறுப்பினர் அட்டை கிடையாது. சீமானுக்கே நாம் தமிழர் கட்சியில் உறுப்பினர் அட்டை கிடையாது. இந்த நிலை தொடர்வதை நாங்கள் பொறுத்து கொள்ள முடியாது. பொதுக்குழுவை கூட்டி அதன் மூலம் தான் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பதவிகளை அறிவிக்க முடியும். சீமானால் தன்னிச்சையாக அறிவிக்க முடியாது. தற்பொழுது வரை சீமான் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியில் தான் உள்ளார். ஆனால் வேலுப்பிள்ளை பிராபகரனை தலைவராக ஏற்றுகொண்ட ஒரு இயக்கம் இப்படி செயல்படுவதை நாங்கள் பார்த்துகொண்டு இருக்க முடியாமல் தான் இந்த முடிவை எடுத்துள்ளோம்”, என்றார் அவர்.

marumalarchy naam tamilar-2
திடீரென்று பழனி முருகன் மீது பிறந்த பக்தியா, பித்தா, வெறியா?: பழனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரதமிழர் முன்னணி என்ற அமைப்பு தொடக்க விழா நடந்தது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். முன்னதாக கட்சியினர் பழனியாண்டவர் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக மலைக்கோவில் நோக்கி சென்றனர். திடீரென பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் இருந்து மலைக்கோயில் நோக்கி வாகனங்கள் சென்றன[11]. அப்போது, “முருகனை காண மலைக்கோயிலுக்கு செல்கிறோம்’ என சீமான் மற்றும் தொண்டர்கள் மலை ஏறினர். கோவிலில் சீமான் தொண்டர்களுடன் கருவறை நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தபோவதாக போலீசாருக்கும் மற்றும் இந்து முன்னணி அமைப்பினருக்கும் தகவல் தெரிந்தது. இதனையடுத்து போலீசார் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் மலைக்கோவிலில் குவிந்தனர். டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், தாசில்தார் மாரியப்பன் ஆகியோர் மலைக்கோயிலில் சீமானை தடுத்து நிறுத்த காத்திருந்தனர்[12]. அப்போது போலீசார் மலைக்கோவில் வாசலில் சீமான் மற்றும் தொண்டர்களை தடுத்து கோவிலுக்குள் ஊர்வலமாக செல்ல அனுமதி வாங்கவில்லை என்று தெரிவித்தனர்[13]. .இதுகுறித்து டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் கூறுகையில், “”ஊர்வலம், பொதுகூட்டம் நடத்த அனுமதி வாங்கியிருந்தனர். திடீரென ஊர்வலத்தின் போது மலைக்கோயிலுக்கு செல்வதாக கூறினர். இதனால் தடுத்தோம்,” என்றார். இதனையடுத்து சீமான் வெளிபிரகாரத்தில் வணங்கி விட்டு பொதுக்கூட்டத்திற்கு சென்றார். பொதுக்கூட்டத்தில் சீமான், தனது கட்சியை சேர்ந்த சிலர் தமிழில் பெயரை மாற்றிக் கொண்ட விபரத்தை வாசித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Seeman withn VEL- exploiting culture, sentiments
வருங்கால இளைஞர்களுக்கு எடுத்துறைக்கும் வகையில் எந்த ஒரு அமைப்பும் இல்லை: முன்னதாக சீமான் நிருபர்களிடம் கூறியதாவது[14]:– தமிழகத்தில் இளைஞர் பாசறை, மகளிர் பாசறை, இலக்கிய பண்பாட்டு பாசறை போன்றவைகளும் இந்து அமைப்புகளும் ஏராளமாக உள்ளன. ஆனால் பண்டைய தமிழர்களின் மரபு, வீரம் உள்ளிட்டவைகளை வருங்கால இளைஞர்களுக்கு எடுத்துறைக்கும் வகையில் எந்த ஒரு அமைப்பும் இல்லை. இதனால் நாம் நம் முன்னோர்களான ஆதி தமிழர்களின் வாழ்வு முறையை மறந்து போகும் நிலை உள்ளது. எனவே தமிழர்களின் மரபை அழிவில் இருந்து மீட்கும் ஒரு அமைப்பாகவே வீரதமிழர் முன்னணி உருவாக்கப்பட்டுள்ளது. குறிஞ்சி தமிழர் தந்த முப்பாட்டன் முருகப்பெருமான் கோவில் கொண்டுள்ள பழனியில் இந்த அமைப்பை தொடங்கி வைப்பதில் நான் பெருமையடைகிறேன்[15]. பழனியில் தற்போது வீரதமிழர் முன்னணி என்ற புது இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது அரசியல் கட்சியல்ல. நாம் தமிழர் கட்சியின் ஒரு இயக்கமாக செயல்படும்.

சீமான் வேலுடன் பழனியில்
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் …..?: கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் திருவள்ளுவருடைய நெறிமுறைகளை பின்பற்றுபவர்கள், அதன்படி வாழ விருப்ப படுபவர்களுக்காக வீரதமிழர் முன்னணி இயக்கத்தை ஆரம்பத்துள்ளோம். வீரதமிழர் முன்னணி இயக்கம் திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக இருக்கும். 2016–ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் தனித்து போட்டியிடுவோம். இலங்கை தமிழர்கள் அந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் மத்திய அரசு முடிவு கண்டனத்திற்குரியது. இலங்கைக்கு திருப்பி அனுப்பமாட்டோம் என தமிழகஅரசு முடிவெடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். நாம் தமிழர் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாகவே சீமான், அந்த கட்சிக்கு மாற்றாக புதிய கட்சி தொடங்கு வதற்காக இந்த புதிய இயக்கத்தை தொடங்கியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது[16].இதையடுத்து வீரதமிழர் முன்னணி அமைப்பு சார்பில் கொள்கை விளக்க பேரணி நடந்தது. பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் தொடங்கிய இப்பேரணி பழனி தேரடிவீதியில் நிறைவடைந்தது. தொடர்ந்து வீரதமிழர் முன்னணி அமைப்புக்கான மாநில ஒருங்கிணைப்பாளர்களாக பெஞ்சமின், அலாவுதீன், செந்தில்நாதன் சேகுவேரா, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்[17].
© வேதபிரகாஷ்
09-02-2015
[1] http://naamtamilar.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81
[2] http://www.daytamil.com/2014/01/tamil_3808.html
[3]https://christianityindia.wordpress.com/2010/05/23/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86/
[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-launch-veerath-thamizhar-munnani-220469.html
[5] தமிழ்.ஒன்.இந்தியா, சீமானின் நாம் தமிழர்கட்சியில் பண்பாட்டு மீட்புக்காக “வீரத்தமிழர் முன்னணி” – நாளை உதயம்!!, Posted by: Mathi, Published: Friday, February 6, 2015, 14:17 [IST]
[6] https://www.facebook.com/pathivumedia/posts/563479750454837
[7] தி இந்து, இயக்குநர் சீமான் புதிய இயக்கம் தொடக்கம்: நாம் தமிழர் கட்சிக்கு மாற்றாக புதிய கட்சியா?, Published: February 8, 2015 10:55 ISTUpdated: February 8, 2015 10:55 IST
[8] ஒன்.இந்தியா.தமிழ், நாம் தமிழர் கட்சியில் பிளவு?…. சீமானுக்கு எதிராக செயல்படப் போவதாக ஒரு பிரிவு அறிவிப்பு, Posted by: Sutha
Updated: Wednesday, January 7, 2015, 19:38 [IST]
[9] http://www.yarl.com/forum3/index.php?/topic/151729-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%813/
[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/naam-tamil-splits-218540.html
[11] தினமலர், பழநி கோயிலில் சீமான்: போலீசார் அனுமதி மறுப்பு, பிப்ரவரி.08-02-2015, 01:17.
[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1178637
[13] மாலைமலர், பழனி மலைக்கோவிலுக்குள் ஊர்வலமாக செல்ல சீமானுக்கு அனுமதி மறுப்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 08, 1:11 PM IST.
[14] http://www.maalaimalar.com/2015/02/08131115/police-refuse-permission-to-se.html
[15] தினத்தந்தி, இலங்கை தமிழர்கள் பிரச்சினை: தமிழக அரசின் முடிவு பாராட்டுக்குரியது சீமான் பேட்டி, ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 08, 2015
[16]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article6870989.ece?homepage=true
[17] http://www.dailythanthi.com/News/Districts/dindugal/2015/02/07211902/Sri-Lankan-Tamils-issue-the-decision-of-the-State.vpf
குறிச்சொற்கள்:அய்யாநாதன், ஆரியர், இந்து தமிழன், இந்து விரோதத் தமிழன், இஸ்லாம், கருணாநிதி, குஷ்பு, சீமான், செச்யூலரிஸம், செபாஸ்டியன் சீமான், தமிழ், தாலி, திராவிட அமைப்புகள், திராவிட சித்தாந்திகள், திராவிடத் தமிழன், நாம் தமிழர், பழனி, போலி நாத்திகம், முருகன், விபூதி
அனுமதி, ஆரிய இனம், ஆரியக் கலாச்சாரம், ஆரியம், ஆரியர், இந்தி, இந்தி எதிர்ப்பு, இராஜராஜ சோழன், இறைவன், கர்த்தர், கிருஸ்து, சீமான், சுயமரியாதை, செபாஸ்டியன் சீமான், ஜிஹாத், தமிழ், தமிழ் இந்து, தமிழ் தந்தை, தமிழ் தாத்தா, திரவிடம், திராவிட அமைப்புகள், திராவிட இனம், திராவிடன், திராவிடம், திராவிடர், பகுத்தறிவு, பழனி, பழனி முருகன், பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பனர், பார்ப்பனீயம், பெயர் மாற்றம், பெரியாரிஸம், மதசார்பின்மை, மதசார்பு, மதமாற்றம், முருகன், விபூதி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மார்ச் 19, 2012
அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்
“தில்லை நடராஜனையும், ஶ்ரீரங்கநாதனையும் பீரங்கி வைத்து பிளப்பது எந்நாளோ, அந்நாளே பொன்னாள்” என்று அண்ணா பேசி தமிழர்களை ஏமாறியது போல, இன்று கருணநிதி இப்படி பேசி ஏமாற்றப் பார்க்கிறார்.
திராவிடம் என்பது செல்லாக் காசாகி விட்டது எனலாம். 1960களில் காணப்பட்ட வெறி அடங்கி விட்டது, ஏனெனில் மக்கள் உண்மையை அறிந்து கொண்டு விட்டார்கள். ஆரியர்-திராவிடர் என்று பேசுவதை யாரும் இனி நம்பமாட்டார்கள், ஏனெனில் கருணாநிதியே தனது குடும்பத்தில் பல ஆரிய / பிராமணப் பெண்களை மறுமகள்காக வைத்திருக்கிறார். |
இப்பொழுது இத்தகைய பேச்சுகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், அத்தகைய பித்து அல்லது வெட்டிப் பேச்சு எப்படி ஒரு வயதான, பொறுப்பான, முதல்வர் பதவி வகித்த மனிதரிடத்திலிருந்து வருகிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயமாகிறது. “அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்”, என்று பேசியது அந்த தோரணையில் தான் உள்ளது.
தேர்தல் கூட்டத்தில் தீக்குளிப்பு ஒப்பாரி: திருமணத்தில் அரசியல், அரசியலில் சினிமா, சினிமாவில் சித்தாந்தம், சித்தாந்தத்தில் பிரிவினைவாதம் என்று மாறி-மாறி பேசிவருவது இவர்களுக்கு கைவந்த கலை. ஆகவே, சென்னை அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றியே தீருவேன் என்று சொல்லும் நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும் என்றார் திமுக தலைவர் கருணாநிதி. சங்கரன்கோவிலில் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
அண்ணா பெயரில் கட்சி வைத்துக் கொள்ள அருகதை இருக்கிறதா? “சென்னையில், நான் முதல்வராக இருந்தபோது, அண்ணா பெயரால் அமைத்த நூற்றாண்டு
இப்பொழுதெல்லாம் சில பெயர்கள் வியாபார சின்னம், வணிக முத்திரை, விற்பனை அடையாளம் போன்று ஆகி விட்டன. அம்பேத்கர் என்ற பெயரும், அவரது படமும் அப்படியாகி விட்டது. யார்-யாரோ உபயோகப் படுத்திகிறார்கள். அவர்களை கேட்கமுடிவதில்லை. |
நூலகத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் என்று பிரிட்டிஷ், ரஷிய நாட்டினர்களும் கூறுகிறார்கள். அண்ணா வாழ்ந்ததை எதிர்காலத்தினர் மத்தியில் பதிவு செய்வதற்காகதான் இந்த நூலகத்தை அமைத்தேன். ஆனால், அதை மருத்துவமனையாக மாற்றுவேன் என்று கூறுபவர்கள், அண்ணா பெயரில் கட்சி வைத்துக் கொள்ள அருகதை இருக்கிறதா?
அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்: மருத்துவமனை கூடாது என்று கூறுபவன் அல்ல நான். ஆனால், வேண்டும் என்றே அதை மருத்துவமனையாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இது தொடர்பான வழக்கு தற்போது நடைபெறுகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரைக்கும் போகலாம். நீதிமன்ற தீர்ப்புகள் வந்தாலும், அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்.
எனது சூளுரைக்கு பலம் சேர்க்க திமுகவை ஆதரியுங்கள்: எங்களை ஆளாக்கியவர் அண்ணா. இளைஞர்களை அறிவாளியாக்கியவர் அவர். உலகம் என்றும் அவரை நினைத்துக்கொண்டிருக்கிறது. அவர் பெயரால் அமைத்த நூலகத்தை எடுத்தே
அண்ணா தமிழகத்தில் புகழ் பெற்றது மாறுபட்ட கால கட்டம் ஆகும். அதே போல எம்.ஜி.ஆர் இருந்தார். ஆனால், கருணாநிதிக்கு அத்தகைய தனிப்பட்ட சிறப்பான அடையாளம் கிடைக்கவில்லை. அதனால் தான், பெரியார், அண்ணா என்று பெயர்களை இக்காலத்திலும் சொல்லிக் கொண்டு மிரட்டி வருகிறார். |
தீருவேன் என்று ஒரு பெண்மணி ஆக்ரோஷமாக கூறிவருகிறார். தேர்தல் மட்டும் எங்களுக்கு முக்கியம் அல்ல. அண்ணாவும் முக்கியம். அவரை உருவாக்கிய பெரியாரும் முக்கியம். அவர்களால் உருவாக்கப்பட்ட நாங்கள் தந்தைக்கும், தனயனுக்கும் செலுத்த வேண்டிய கடமைகள் உள்ளன. என்னை யாரும் தடுத்துவிட முடியாது. எங்கள் குறிக்கோளை நிறைவேற்றியே தீருவோம். அந்த குறிக்கோள் வலுப்பெற திமுகவுக்கு ஆதரவு தாருங்கள். எனது சூளுரைக்கு பலம் சேர்க்க திமுகவை ஆதரியுங்கள் என்றார் கருணாநிதி.
தமிழகத்தில் தீக்குளிப்பு கலாச்சாரம் திராவிட கட்சிகளின் பாரம்பரியமாக வளர்ந்து தொடர்ந்து வருகிறது: அதில் அரசியலும் உள்ளது. ஏனெனில், எந்த மனிதனும் தற்கொலை செய்து கொள்ள விரும்ப மாட்டான். அத்தகைய முடிவை எடுக்கும்
திராவிட பாரம்பரியத்தில் தீக்குளிப்பு என்பது வியாபாரமாகி விட்டது. 1960களில் இருந்த மனப்பாங்கு இப்பொழுது எந்த திராவிட தியாகியிடத்திலும் இல்லை. அதாவது, முன்பு போல உயிர் தியாகம் செய்ய யாரும் முன்வருவதில்லை. அவ்வாறு தயார் செய்யவும் முடிவதில்லை. |
மனிதன், விரைந்து தனது யுரிரை மாய்த்துக் கொள்ள விரும்புவான். தீக்குளித்து இறத்தல் என்பது ஒரு கொடுமையான இறப்பாகும். அதில் சிலர் இறக்காமல் தீக்காயங்களுடன் பிழைத்தும் உள்ளாரள். அவர்கள் நரக வேதனை அனுபவித்துள்ளார்கள். ஆகவே அதை உயர்வாக நினைப்பது, மதிப்பது மனிதத்தன்மைக்கு விரோதமானது. தீக்குளிப்பு என்ற தற்கொலை மிரட்டல் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் செயற்பாடு அல்ல, மிரட்டுவதிலும் குரூரத்தைக் காட்டும் தன்மையாகும். திமுக ஆட்சியில் சிலர் இந்தி திணிப்பை எதிர்த்து தீக்குளிக்க ஆரம்பித்தனர். அதை திமுக பிரமலமாக்கி தியாகமாகச் சித்தரித்தது. அதனால், சிலர் மனசலனம் உள்ளவர்கள், வாழ்க்கையை வேறு காரணங்களுக்காக வெறுத்தவர்கள், தீக்குளிக்க யத்தனித்தது மற்றும் உண்மையாகவே தீக்குளித்தது நிதர்சனமாக இருந்தது.
கருணாநிதியின் `தீக்குளிப்பு’ பேச்சு பற்றி டாக்டர் ராமதாஸ் கருத்து[1]: சமீப காலத்தில் திராவிட இயக்கத்தைப் பற்றி அதிக அளவில் விமர்சித்து வருகிறார் ராமதாஸ். கருணநிதியின் தீக்குளிப்புப் பற்றியும் கரடுமையாக சாடியுள்ளார். உண்மையிலே போராளியாக இருந்தால் தீக்குளிப்பேன் என்று கருணாநிதி சொல்லமாட்டார் என்று டாக்டர் ராமதாஸ் பேசினார். “திராவிட மாயை” கருத்தரங்கம் பா.ம.க. சார்பில் `திராவிட மாயை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை அண்ணாசாலை தேவநேய பாவாணர் நூலக கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். கருத்தரங்கை தொடங்கி வைத்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
“திராவிட மாயை” கருத்தரங்கம்: “திராவிட மாயை” என்று கம்யூனிஸ்ட் தலைவர் ராமமூர்த்தி ஒரு புத்தகத்தை எழுதியுள்ளாற். அதற்குப் பிறகு, “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற புத்தகத்தை வெளியிடப்பட்டது. இப்பொழுது அதே ராகத்தை இவர் பாடுகிறார்ள்: “திராவிட இயக்கங்கள் அதன் வழிதோன்றல்கள், ஈரோட்டில் படித்தவர்கள், பெரியாரின் சீடர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், `நூற்றாண்டு
திராவிடம் என்பது மாயை என்றால், அதைச் சுற்றியிருக்கும் கருத்துகள், சித்தாந்தம், முதலியவையும் மாயைதான். கட்டுக்கதைதான். இருப்பினும் அதை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தலாம் என்று இனறும் சிலர் இருந்தால், அது அவர்களது பலவீனத்தைக் காட்டுகிறது. |
விழா’ எடுக்க கிளம்பிவிட்டார்கள். குறிப்பாக கலைஞருக்கு சில கேள்விகளை நான் கேட்டுத்தான் ஆகவேண்டும். பெரியார், சாதி ஒழிப்புக்கு பாடுபடுவதை ஒருகொள்கையாக கொண்டார். நீங்கள் அதிலே செய்த சாதனை என்ன? சாதியை ஒழிப்பதற்கு பதிலாக, சாதியை வளர்த்தீர்கள். பெரியாரின் சீடர் என்று சொல்லிக்கொள்ளும் கலைஞர் அவர்களே மதத்தை பற்றி இப்போது பேசத் தயாரா? இன்றைக்கு மதத்தை பற்றி உங்கள் கருத்துக்களை வெளியிடத் தயாரா? கடவுளை பற்றி நீங்கள் இப்போது பேசத் தயாரா? தமிழ்நாட்டை சீரழித்து ஆட்சியில் இல்லாதபோது, ஆரியர், திராவிடர் என்ற பேச்சு உங்கள் நாவிலே, எழுத்திலே வருகிறது. தென்னிந்திய நல உரிமை சங்கம், சுயமரியாதை இயக்கம், நீதிக் கட்சி என்று பல இயக்கங்களை பெரியார் ஏற்படுத்தினார். 45 ஆண்டு காலம் தமிழ்நாட்டை சீரழித்து சின்னாபின்னமாக்கிய ஆட்சியாளர்கள் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள்தான். இவற்றை எல்லாம் திசை திருப்ப, திராவிட இயக்கம் என்று சொல்லிக்கொண்டு, அதற்கு நூற்றாண்டு விழா என்று சொல்லிக்கொண்டு, ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் மக்களுக்கு தொடர்ந்து புரியவைத்துக்கொண்டு இருப்போம்.
“திராவிட” என்ற பெயரை எப்படி திராவிட கட்சிகள் புறக்கணிக்க முடியும்: “திராவிட” என்பதனை ஒரு வியாபார முத்திரை, வணிக சின்னம் போல உபயோகித்து மக்களை ஏமாற்றி வரும் கட்சிகள் எப்படி அதை எடுக்கும்? ஆனால் ராமதாஸ் தொடர்கிறார், “பெயரை மாற்றுங்கள் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஈழத்தமிழர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவோம். இலங்கையில் தனி ஈழம் அமைவதுதான்
திராவிட என்ற சொல்லை எந்த திராவிடக் கட்சியும் எடுக்க முடியாது. ஏனெனில், அவை அவ்வாறே பதிவு செய்துள்ளன. பெயர் மாற்றினால் இருக்கின்ற அடையாளமும் தெரியாமல் போய்விடும். |
பிரச்சினைக்கு தீர்வு ஆகும். இதை நோக்கி நமது செயல்பாடுகள் இருக்கவேண்டும். முதலில் உங்கள் கட்சியின் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள். திராவிட என்று இருப்பதை, `தமிழர் முன்னேற்றக் கழகம்’ என்று மாற்றிக்கொள்ளுங்கள். கட்சி என்றால் கொள்கை வேண்டும். பெரியார் சில கொள்கைகளை முன்வைத்து, அதற்காக கடைசிவரை போராடினார். இப்போதாவது கொள்கையை சொல்லி தமிழ் மக்களிடம் வாருங்கள். தமிழ் மக்கள் இன்றைக்கு ஏமாற தயாராக இல்லை. செம்மொழியை பெற்றுவிட்டோம் என்று எல்லாம் சொல்லுகிறீர்கள், இன்றைக்கு தமிழ் வளர்வதற்கு என்ன முயற்சிகளை எடுத்திருக்கின்றீர்கள்?. முத்தமிழ் என்றால் இயல், இசை, நாடகம் என்று சொல்லுகிறார்கள். இவற்றில் எதை நீங்கள் வளர்த்தீர்கள்?.
தீக்குளிப்பேன் என்பது வெட்டிப் பேச்சு: 45 ஆண்டுகளாக உங்களின் திராவிட கட்சி ஆட்சியில் வளர்த்து எல்லாம் சாராயத்தை கொடுத்து, திரைப்பட மோகத்தை தந்து, மக்களை இலவசங்களுக்கு கைஏந்தவைத்தீர்கள். தமிழுக்கு நீங்கள் செய்த சாதனை என்ன? என்று பட்டியல் இடுங்கள். முடிந்தால் அதுபற்றி உங்களோடு விவாதிக்க தயாராக இருக்கிறேன். இப்போது கலைஞர் தீக்குளிக்கப்போவதாக சொல்லுகிறார்.
தமிழ் என்று சொல்லியும் பிழைத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் ஒரு புண்ணியவான் திருக்குறளை வைத்தே ஏமாற்றி கோடிகளை அள்ளியுள்ளான்; இன்னொருவனோ திருவள்ளுவன் கையாலாகாத ஆள், தாமஸ் என்ற ஓடுகாலியிடம் பைபிளைக் கற்ருக் கொண்டுதான் திருக்குறலள் எழுதப் பட்டது என்கிறான்; இன்னொருவனோ, திருக்குறளை எங்கள் குருவினிடத்திலிருந்து திருடிக் கொண்டு சென்று விட்டார், அதை தனது என்று சொல்லி புழக்கத்தில் விட்டார் என்கிறான். இவர்கள் எல்லோருமே தங்களை “தமிழர்கள்” என்ரு தான் சொல்லிக் கொள்கிறார்கள். |
ஒரு போராளி உண்மையிலே போராளியாக இருந்தால், தீக்குளிப்பேன் என்று சொல்லமாட்டார். இன்றைக்கு இந்த நிலையில் தமிழன் இருப்பதற்கு காரணம் கலைஞரும், திராவிட இயக்கமும்தான் என்று பல்வேறு பொதுக்கூட்டங்களில், கருத்தரங்கங்களில் சொல்ல முடியும். தமிழ் மெல்ல, மெல்ல சாகும் என்றுதான் சொன்னார்கள். இந்த நிலையில் தமிழ் இப்போது வேகமாக செத்துக்கொண்டு இருக்கிறது. இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார். முன்னதாக முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு, மக்கள் மாநாட்டுக் கட்சி தலைவர் சக்திவேல், திரைப்பட இயக்குநர் வி.சேகர் தமிழாலயம் இயக்குநர் கு.பச்சைமால் ஆகியோர் பேசினார்கள். முடிவில் சென்னை மாவட்ட பா.ம.க. அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன் நன்றி கூறினார்.
குறிச்சொற்கள்:ஆரியம், ஆரியர், கருணாநிதி, குரூர எண்ணம், சவால், சூளுரை, சூள், செச்யூலரிஸம், தமிழ், தமிழ் தமிழன், தற்கொலை, தியாகம், தியாகி, தியாகிகள், திராவிட அமைப்புகள், திராவிட இயக்குனர்கள், திராவிட எழுத்தாளர்கள், திராவிட சித்தாந்திகள், திராவிடத் தமிழன், திராவிடம், தீக்குளிப்பு, நாத்திகம், பேச்சு, போராளிகள், போர், போலி நாத்திகம், வக்கிர புத்தி, வக்கிரம்
ஆசாரம், ஆரிய இனம், ஆரியக் கலாச்சாரம், ஆரியம், ஆரியர், இந்தி, இந்தி எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு போராட்டம், இனவெறி, இழிவு படுத்துவது, கருப்பு, கருப்பு சட்டை, கருப்பு வேஷ்டி, காவேரி, சாமானியர், செம்மொழி, தமிழ், தமிழ் சாமியார், தமிழ் தமிழன், தமிழ் தாத்தா, தமிழ் பாட்டி, தி.மு.க, திக, தியாகிகள், திரவிடத் தாலி, திராவிட அமைப்புகள், திராவிட இனம், திராவிட சாமியார், திராவிட சித்தாந்தம், திராவிட நாத்திகம், திராவிட பாகுபாடு, திராவிட மணவிழா, திராவிடக் கலாச்சாரம், திராவிடத் தமிழன், திராவிடத் தலைவர்கள், திராவிடத் திருமணம், திராவிடப் புரோகிதம், திராவிடம், திராவிடர், திருக்குறள், தீவிரவாதம், துர்கா, பகுத்தறிவு, பெரியார், பெரியார் சொத்து, போலி தங்கக்காசு, முதல்வர், ஶ்ரீநிதி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
பிப்ரவரி 24, 2012
எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும் – கருணாநிதியின் திராவிட முழக்கம்!
“பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்!’: கருணாநிதி உருக்கமான வேண்டுகோள்[1]: “உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவுறுத்தி உள்ளார். இருப்பினும் அவரது குடும்பத்தில் உள்ள பாப்பாத்திகளையும், அந்த பாப்பாத்திகளுக்குப் பிறந்தவர்களையும் விரட்டியடிப்பாரா என்று தெரியவில்லை.
கருணநிதியின் அறிக்கை (கடிதமாக உள்ளது): திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா, 27ம் தேதி தி.மு.க., தலைமை நிலையத்தில், எனது தலைமையில், அன்பழகன் முன்னிலையில் நடக்கிறது. அதில், தி.க., வீரமணி, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மோகன், நன்னன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். திராவிட இயக்கத்தின் தோற்றம், அதன் மேன்மை பற்றியும் பேசுகிறார்கள்.
திராவிட நாடு கோரிக்கையை குப்பையில் போட்ட மாவீரர்கள்: ”ஒருவன் உள்ள வரையில், குருதி ஒரு சொட்டு உள்ளவரையில் திராவிட நாட்டின் உரிமைக்குப் போரிடச் சிறிதும் பின்னிடல் இல்லை” என்றார் பாரதிதாசன். (பாராளுமன்றத்தில் அரசியல் நிர்ணய சட்டத்தில் தனிநாடு கேட்கும் கட்சிகளின் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்றதும், திராவிட வீரர்கள் தங்களின் வால்களை சுருட்டிக் கொண்டனர். அண்ணாதுரை பாராளுமன்றத்தில் பேசியதும் வேடிக்கைதான். ஏனெனில் கோரிக்கையை விட்டு ஆட்சியைப் பிடிததது திமுக!)
கால்டுவெல்லின் பொய்களை நம்பும் ஆட்கள் இங்குதான் இருப்பார்கள் போலும்[2]: கடந்த, 1856ல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல் தான், திராவிட மொழி பேசும் மக்கள் ஒரே இனத்தவர் எனக் குறிப்பிட்டார். திராவிடர் என்ற பெயரை அவர் தான் முதன் முதலாக உபயோகித்தார்என்ற குறிப்புகளும் உள்ளன (மாக்ஸ் முல்லரைத் தொடர்ந்து, கால்டுவெல்லும் தனது கருத்தை மாற்றிக் கொண்டார். ஆனால், அத்தகைய திருத்தம் செய்யப்பட்ட பதிப்பு இந்தியாவில் வெளியிடப் படவில்லை. இன்று ஆரியர்-திராவிடர் என்ற இனங்கள் எல்லாம் கட்டுக்கதை என்று மெய்பிக்கப் பட்டு விட்டது. சரித்திர ஆசிரியர்கள் யாரும் ஒப்புக் கொள்வதில்லை. அதுமட்டுமல்லாது திருட்டுத் தனமாக அகழ்வாய்வு செய்து பல ஆதாரங்களை மறைத்து விட்ட பாதகன் இந்த கால்டுவெல்[3]).
அரைத்த மாவை அரைக்கும் கருணாநிதி: மனோன்மணியம் எழுதிய சுந்தரம் பிள்ளை, “திராவிட நல் திருநாடும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்[4]. 1912ம் ஆண்டு தோன்றிய, “மெட்ராஸ் யுனைடெட் லீக்’ சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா, 1913, டாக்டர் நடேசன் மருத்துவமனைத் தோட்டத்தில் நடந்தது. “சங்கத்தின் பெயர், அதன் நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை’ என சிலர் பேசினர். அப்போது டாக்டர் நடேசன் தான், “திராவிடச் சங்கம் என்று பெயர் மாற்றலாம். ஏனென்றால், நாமெல்லாம் திராவிடர்களாயிற்றே’ என, முடிவைத் தெரிவித்தார். அதை, அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.
சரித்திரத்தைத் திரித்து கூறும் கருணாநிதி[5]: பிட்டி தியாகராயர் திராவிட இனத்தின் மீது மாறாத அன்பு கொண்டவர்.தொடக்கத்தில் தியாகராயர் பெரும் வைதீகராக இருந்தார். தன் இல்லத்திலேயே சிலை வைத்து புரோகிதரைக் கொண்டு பூஜை புனருத்தாரணம் எல்லாம் செய்து வந்தார். அப்படிப்பட்டவர் டாக்டர் நடேசன் தொடர்பு ஏற்பட்ட பிறகு, வைதீகத்திலிருந்து விலகி வந்து, பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பில் அதிகத் தீவிரம் காட்டத் தொடங்கினார்[6]. அப்படிப்பட்ட தியாகராயர் 1917ல் நடைபெற்ற சென்னை மாகாண முதலாவது நீதிக் கட்சி மாநாட்டில் உரையாற்றும்போது, பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிப்பது திராவிட மரபன்று. திருவள்ளுவர் முதலிய திராவிடத் தலைவர்கள் பிரம்மனின் முகத் துதித்தோர் யாம் என்று பெருமை பேசினாரில்லை. பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கற்பித்தோரும் நால்வகைச் சாதி இந்நாட்டில் நாட்டினோரும் ஆரியரே. அவ்வருணாச்சிரமக் கோட்டையை இடித் தெறிய 2400 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய புத்தர் முயன்றார், முடியவில்லை. பின்னர் வந்த பல சீர்திருத்தவாதிகள் முயன்றனர், தோற்றனர். ராமானுசரும் புரோகிதக் கொடுமைகளைக் களைந்தெறிய ஒல்லும் வழியெல்லாம் முயன்றார், தோல்வியே கண்டார்.
திராவிடத் தலைவர்கள் ஆங்கிலேயர்களின் அடிவருடிகளான உண்மையை மறைக்கும் கருணாநிதி[7]: பார்ப்பனர் பிடி மேன்மேலும் அழுத்தமுற்றே வந்தது. தீண்டாமை, அண்டாமை, பாராமை முதலிய சமுதாயச் சீர்கேடுகளும் படிப்படியே பரவிப் பெருகலாயின. அத்தகைய பலம் பொருந்திய சாதிக் கோட்டையை தகர்த்தெறிய, இதுவே தக்க காலம். இதுவே தக்க வாய்ப்பு என்று முழங்கினார். பி அண்ட் சி மில்லில் அப்போது ஒரு வேலை நிறுத்தப் போராட்டம். அதுகுறித்து தியாகராயருக்கும், ஆளுநராக இருந்த வெல்லிங்டன் பிரபுவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று, அதில் ஆத்திரமடைந்த தியாகராயர் வெளியே வந்து விட்டார். அப்போது முதலமைச்சர் பதவியில் இருந்த பனகல் அரசர் தியாகராயர் வெளியே வந்ததைக் கேள்விப்பட்டு, உடனடியாக ஆளுநரைச் சந்தித்து, எம் தலைவரிடம் மன்னிப்புக் கேட்காவிட்டால், எங்கள் மந்திரிசபை ராஜினாமா செய்யும் என்று தெரிவித்தாராம். ஆளுநரும் அவ்வாறே உடனடியாக மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தாராம். டாக்டர் நடேசனுக்கு துணை நின்ற மற்றொருவர் டாக்டர் டி.எம். நாயர். ஆரியர் வருகையிலிருந்து அவர் பேச்சைத் தொடங்கினால், இடையிலே புராண, இதிகாசக் கதைகளையெல்லாம் கூறி மக்களை உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தக் கூடிய பேச்சாளர். தென்னகத்தில் ஒன்றிரண்டு தவிர, மற்ற எல்லாப் பதவிகளிலும் பார்ப்பனர்கள் உட்கார்ந்து விட்டார்கள். உயர்நீதிமன்ற நீதிபதிகளாகநியமிக்கப்பட்ட ஒன்பது இந்தியரில், எட்டு பேர் பார்ப்பனர்கள், ஒருவர் நாயர். உதவி கலெக்டர்கள் 146 பேரில் 77 பேர் பார்ப்பனர்கள். 125 மாவட்ட நீதிபதிகளில் 93 பேர் பார்ப்பனர்கள். மக்கள் தொகையில் நூற்றுக்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர்கள், இத்தனை வேலைகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று இந்தப் புள்ளி விவரங்களை அடுக்கிச் சொல்லி, இந்த அநீதியை இப்படியே தொடர விடலாமா? என்று கர்ச்சிப்பார்.
“பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்கம்’ என்ற அறிக்கை: டி.எம்.நாயர், 1917ல், சென்னை ஸ்பர்டாங் சாலை அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையும், சர்.பிட்டி.தியாகராயர், 1918ல் நீதிக் கட்சியின் சார்பில் வெளியிட்ட, “பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்கம்’ என்ற அறிக்கையும், திராவிடருக்கான ஆதி ஆவணங்கள் எனப் போற்றப்படுகின்றன. டாக்டர் நாயரின் புகழ் பெற்ற அந்த உரையில், வீரத் திராவிடர்களே என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். லண்டனிலும், சென்னையிலும் என்னைப் பெரிய டாக்டர் என்று சொல்கிறார்கள். நான் எம்.டி. பட்டதாரி. எனக்கு ஏராளமான வருமானம் வருகிறது. என் செலவு போக, என் வருமானத்தில் மீதப்படும் பணத்தையெல்லாம், என்னருமைத் தலைவர் பிட்டி தியாகராயரைப் போன்று, உங்களைப் போன்ற திராவிட மக்களைத் தட்டி எழுப்பும் நீதிக் கட்சியின் வளர்ச்சிக்காகச் செலவிடுவதில் பெருமைப்படுகிறேன். நாயரின் உரையில், “திராவிடத் தோழர்களே… நீங்கள் எல்லாம் உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, நீதிக் கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் மக்களுக்கு பலம் வரும். நம் எதிர்க்கட்சியான, பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்’ என முழங்கியதைத் தான், நான் இப்போதும் திரும்பக் கூற விரும்புகிறேன்.
முரசொலி மாறனின் புரட்டு வரலாறு[8]: “திராவிட இயக்க வரலாறு’ என, முரசொலி மாறன் எழுதிய நூலில், உயர் பதவியில் ஒரு பிராமணர் நியமிக்கப்பட்டால், உடனே தன் நியமன அதிகார வரம்புக்குட்பட்ட பிற பதவிகளிலும் தங்களது இனத்தாரைக் கொண்டு வந்து நிரப்புவதும், தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்’ என எழுதியதோடு, அதற்கு உதாரணங்கள் சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளார். வருவாய்த் துறை வாரியம் ஒருமுறை ஆய்வு நடத்திய போது ஜி. வெங்கட்ரமணையா என்கிற உயர் பதவி வகித்த பிராமணருக்கு உறவினர்களும், தொடர்புடையவர்களும் மாத்திரம் அந்தத் துறையில் 49 பேர் இருந்தது தெரியவந்ததாம். 1890 களில் செங்கற்பட்டிலும், சென்னை நகரிலும் தோன்றிய வெம்பாக்கம் அய்யங்கார் குடும்பம் (புகழ் பெற்ற சர். பாஷ்யம் அய்யங்கார் வகையறா) ஆங்கிலேயர் ஆட்சியில் கிடைக்கும் உத்தியோகங்களையெல்லாம் நன்கு நுகர்ந்தது.
ஐயர்கள் நாயர்கள் ஆனார்களா இல்லை நாயர்கள் ஐயர்கள் ஆனார்களா?: 1861லிருந்து 1921 வரை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஐவர் சட்டசபை உறுப்பினர்களாகவும், இருவர் அட்டர்னி ஜெனரல்களாகவும், மூவர் உயர்நீதி மன்ற நீதிபதிகளாகவும், மூவர் ஸ்மால்காஸ் கோர்ட் நீதிபதிகளாகவும், மாண்டேகு,செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தத்தில் உதயமான ஆட்சியில் ஒருவர் உள்துறை அமைச்சராகவும், மூவர் மாநில அரசின் துணை செகரட்டரிகளாகவும் இருந்திருக்கின்றனர். மேலும் பலர் தாசில்தாரர்களாகவும், பப்ளிக் பிராசிகியூட்டர்களாகவும், டெபுடி கலெக்டர்களாகவும் இருந்தனர் என்று மாறன் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்த உண்மை வரலாறுகளையெல்லாம் திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு நினைவு படுத்தும் வகையில்தான் திராவிட இயக்க 100ம் ஆண்டு தொடக்க விழா நடைபெறவுள்ளது. அந்த நிகழ்ச்சியில் நம்மைப்பற்றி புரிந்துகொள்ள தெரிந்து கொள்ளத்தக்க பல விவரங்களை சான்றோர் பலர் விளக்கிட உள்ளார்கள்.
உண்மை வரலாறு எது என்று தெரிந்தால் தமிழர்கள் உருப்பட்டு விடுவார்கள்[9]: இந்த உண்மை வரலாறுகளை எல்லாம் திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் தான், திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா நடக்கவுள்ளது. ஆண்டு முழுவதும் கொண்டாடப் போகிறோமே, துவக்க விழாவில் கலந்து கொள்ளாமல் விட்டால் என்ன என நினைத்துவிடக் கூடாது. இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார் (உண்மை வரலாறு என்னெவென்று தெரிந்து கொண்டால் தமிழர்கள் உருப்பட்டு விடுவார்கள். அவ்வாறு தெரியவிடாமல், தமிழர்களை இத்தகைய பொய்யான இனவாத சித்தாந்தங்களை வைத்துக் கொண்டு முட்டாள்கKஆல்லி விட்டதால், கடந்த 60-100 வருடங்களில் தமிழர்கள் முன்னேறாமல், பின் தங்கியே உள்ளர்கள்).
வேதபிரகாஷ்
24-02-2012
[3] நாணயங்கள், முக்கியமான சரித்திர அதாரங்கள் மறைப்பு!:அங்கிருந்து ஆயிரக்கணக்கில், ஓலைச்சுவடி புத்தகங்களை எடுத்து இங்கிலாந்திற்கு அனுப்பினார். தமிழ் தொன்மையினை ஆராய்ந்து அதனை மாக்ஸ்முல்லரின் ஆராச்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தபோது, இந்தியாவின் ஒட்டுமொத்த ஒருமைப்பாடு அதிர்ச்சியளித்தது. ஓலைச்சுவடி புத்தகங்களைப் படித்து தாமரைப்பரணி ஆற்றங்கரையில் உள்ள பழைய காயல் என்ற ஊர்தான் மிகவும் பழமையானது என்று தெரிந்து கொண்டார். அதுமட்டுமல்லது அது பாண்டியர்களின் துறைமுகமாக இருந்தது, போன்ற விஷயங்களையும் தெரிந்து கொண்டார். பல இடங்களில் பழமையான நாணயங்கள் முதலியவற்றைக் கண்டதும் திகைத்தார். ஏனெனில், அவையெல்லாம், இந்திய ராஜ வம்சாவளியினரின் கடற்பயணங்களைக் குறிக்கும் ஆதாரங்களைக் கொண்டிருந்தன. சர் வால்டர் எல்லியட் எடுத்துக் காட்டியபடி, கப்பல் பொறிக்கப்பட்டுள்ள நாணயங்களையெல்லாம், சாமர்த்தியமாக மறைத்துவிட்டார். பிறகு அரசு பூர்வமாக அறிவிக்கவேண்டுமேயன்று, அனுமதியுடன் அகழ்வாய்வு மேற்கொண்டதுபோல், பிறகு பழங்கால கட்டிடங்கள், கோவில்கள் முதலியவற்றின் அஸ்திவாரங்களுக்கு அருகில் நோண்ட ஆரம்பித்தார். அதன்மூலமாகத்தான், தாழிகள், பளபலப்பான மற்றும் கலைநயம் பொருந்திய மண்பாண்டங்கள் , மீன் இலச்சினையுடைய பாண்டியர்களது நாணயங்கள் முதலியவற்றைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார். இப்படி திருட்டுத் தனமாக, அகழ்வாய்வு மேற்கொண்டு பல ஆதாரங்களை மறைத்தவர் தான் கால்டுவெல்.
http://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-government/
[4] அப்பாட்டிலேயே சில வரிகள் நீக்கப்பட்டன, மாற்றியமைக்கப் பட்டுள்ளன என்பதெல்லாம் தெரிந்தால், குட்டு வெளிப்பட்டு விடும்.
[7] பி. ராமமூர்த்தி, ஆரிய மாயையா? திராவிட மாயையா? விடுதலைப் போரும், திராவிட இயக்கமும், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1987.
[8] முரசொலி மாறன், ஏன் வேண்டும் இந்த இன்பத் திராவிடம், முத்துவேல் பதிப்பகம், திருச்சிராப்பள்ளி, 1957.
[9] குணா, திராவிடத்தால் வீழ்ந்தோம், தமிழக ஆய்வரண், பெங்களூர், 1995.
குறிச்சொற்கள்:அண்ணா, அண்ணாதுரை, அன்பழகன், அறவோர், உறவினர், உற்றார், கலைஞர், காவேரி, குணா, சுந்தரம் பிள்ளை, செட்டியார், தனிநாடு, திராவிட நாடு, தோழர், தோழியர், நாயர், நித்யா, பந்து மித்திரர், பாப்பாத்தி, பார்ப்பன், பார்ப்பான், பிட்டி, பிராமணன், பிராமின், பூசுரர், மனோன்மணி, மாறன், ராமமூர்த்தி, ராமய்யா, ஶ்ரீநிதி
ஆத்மா, ஆரிய இனம், ஆரியக் கலாச்சாரம், ஆரியர், இந்தி, இந்தி எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு போராட்டம், இந்து தமிழன், இந்து விரோதத் தமிழன், இந்து-தூஷணம், இந்து-வெறுப்பு, இந்துவிரோதம், கனிமொழி, கருணாநிதி, கருப்பு, கருப்பு சட்டை, சன் டிவி, சாமானியர், ஜெயலலிதா, தமிழின் மகன், தமிழின் மனைவி, தமிழ், தமிழ் தந்தை, தமிழ் மகன், தமிழ் மகள், தி.மு.க, திக, திகவின் முகமூடி கிழிகிறது, தியாகிகள், திரவிடத் தாலி, திராவிட அமைப்புகள், திராவிட இனம், திராவிட சித்தாந்தம், திராவிட நாத்திகம், திராவிடத் தமிழன், திராவிடத் தலைவர்கள், திராவிடம், திராவிடர், திருக்குறள், நாத்திகத் தமிழன், நாத்திகம், பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பன துவேஷம், பார்ப்பனர், பார்ப்பனீயம், பெரியார் இல் பதிவிடப்பட்டது | 5 Comments »
ஜனவரி 30, 2010
இந்தி படிச்ச கமிஷனரு தமிழரானாரு! : தமிழ் படிச்ச மேயரோ இங்கிலீசுக்காரர் ஆனாரு!
ஜனவரி 30,2010,00:00 IST
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6447
கோவஒ மாநட்டு முரண்பாடுகள்: கோவை : உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, வரும் ஜூனில் கோவை மாநகரில் நடக்கிறது. மாநாடுக்கான ஆரம்ப வேலைகளும், மாநகரின் வளர்ச்சிப் பணிகளும் நடக்கின்றன. மாநாட்டில் பங்கேற்க வரும் வெளிநாட்டினரை வியக்க வைக்க, “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்ற முழங்கத்தை முன்னிறுத்தி, வர்த்தக நிறுவனங்கள், தொழில் கூடங்களின் பெயர் பலகைகளில் தமிழ் இடம்பெற, தமிழ் வளர்ச்சித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மாநகர சாலைகளின் பெயர் பலகைகளிலும் தமிழ் இடம் பெற தீவிர முனைப்புடன் பணிகள் நடக்கின்றன. அரசு துறைகளின் அதிகாரிகள் மற்றும் கோவை மாநகராட்சி மேயர், ஆளுங்கட்சி பிரமுகர்களின் மேடை பேச்சும், சொல் வீச்சும் பெரும்பாலும் செம்மொழி மாநாடு பற்றியதாகவே உள்ளது.
தமிழும், ஆங்லிலமும், இந்தியும்! இவற்றை காணும் மக்கள், “தமிழ் மீது இவ்வளவு பற்றா’ என வியக்கின்றனர். மறுபுறமோ, நிலைமை வேறுமாதிரியாகவே உள்ளது. மேடை தோறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு குறித்து பேசும், கோவை மாநகராட்சி மேயர் வெங்கடாசலத்தின் காரில், அழகு தமிழுக்கு இடமில்லை. வாகனத்தின் முன்புற பலகையில் “மேயர், கோயம்புத்தூர் கார்ப்பரேஷன்’ என இங்கிலீசில் எழுதிப்போட்டு, தமிழை காணா மல் போக செய்துள்ளார்; இவர் தமிழர்(!). அதே வேளையில், உத்தரபிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவரும், கோவை மாநகராட்சி கமிஷனருமான அன்சுல் மிஸ்ரா தனது அரசு காரில், “ஆணையாளர், கோயம்புத்தூர் மாநகராட்சி’ என அழகு தமிழ் மிளிர பலகை வைத்துள்ளார். தமிழரல்லாத இவர், தமிழுக்கு உரிய அந்தஸ்தை வழங்கியுள்ளார். தமிழரான மேயர் வெங்கடாசலம், “இங்கிலீசு தான் சூப்பர்’ என்பதை போல, பெயர் பலகை வைத்துள்ளார். இவரும், உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு மேடையில் நிச்சயம் இடம் பிடித்து அமர்ந்து, தமிழின் அருமை, பெருமை பற்றி பேசுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை(!).
தினமலரின் செய்தி பிரமாதம்!
மக்கள்தாம் புரிந்துகொள்ளவேண்டும்!
அருமையான தலைப்பு!
குறிச்சொற்கள்:இந்தி, செம்மொழி, செம்மொழி மாநாடு, தமிழ், தாய்மொழி, மாநாடு
செம்மொழி, செம்மொழி மாநாடு, தமிழ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜனவரி 11, 2010

மத்தியில் நாட்டுப்புறம்: சென்னை : “”தமிழ் உள்ள அளவும், தமிழன் உள்ள அளவும், தமிழ் நெறி உள்ள அளவும் தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை,” என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார். சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா, நேற்று சென்னை தீவுத்திடலில் நடந்தது. இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து தமிழக முதல்வர் கருணாநிதி பேசியதாவது: சென்னை தீவுத்திடல் நிரம்பி வழியும் அளவிற்கு சென்னை சங்கமம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சி நான்கு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் துவங்கப்பட்டு, மாநகரத்தின் வீதிகளில் எல்லாம் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் நாட்டுப்புறம் என்று ஒன்று இருக்கிறது. அதற்கென்று நாட்டுப்புறக் கலைகள் மற்றும் இசைத் துறையில் பாடல்கள் என்றெல்லாம் இருக்கின்றனவே; அவற்றை மக்களோடு பரிமாறிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வோடு இந்த சங்கமம், தமிழ் மையத்தின் சார்பில் துவங்கப்பட்டு பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று வருகிறது.
சங்கமத்தில் சந்தேகம் ஏற்பட்டது: இதைத் தொடங்கியவர்களும், தொடங்கி வைத்த நானும் எதிர்பாராத அளவிற்கு இந்த சங்கம் நிகழ்ச்சி வெற்றி முரசு கொட்டி வருகிறது. இம்மேடையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள், எல்லாரும் வியந்து போற்றுகின்ற அளவிற்கு அவ்வளவு அருமையாக அரிய பல கருத்துக்களை எடுத்துக் கூறுகின்ற நிலையில் இங்கே நடத்திக் காட்டப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியல் இடம் பெற்ற சில காட்சிகளில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. சந்தேகம் ஏற்பட்ட அடுத்த வினாடியில், அந்த சந்தேகத்தை நீக்குகின்ற காட்சிகள் இந்த அரங்கத்திலே வந்தன. சொல்லப்போனால் சங்கமம் என்பதனுடைய நோக்கம், “பிறப்பொக்கும்’ என்பதை நாட்டிலே பரவச் செய்திடல் வேண்டும். சமுதாயத்தில் வேரூன்றச் செய்ய வேண்டும் என்பது தான்.
பிறப்பு ஒக்கும், பிறப்பொக்கும், “யாதும் ஊரே யாவரும் கேளிர்’: இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு சென்னையில் நடந்த போது, “யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. கோவையில் நடக்கவுள்ள செம்மொழித் தமிழ் மாநாட்டில், “பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்’ என்னும் கருத்தாக்கத்தை ஒட்டியே சென்னை சங்கமம் நிகழ்ச்சி, “பிறப்பொக்கும்’ என்ற வார்த்தை, பிறப்பு ஒக்கும் என்ற இரண்டு சொற்களைக் கொண்ட இந்த வார்த்தை, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாசகக் கோவையில் இருந்து எடுக்கப்பட்டது. நாம் பிரிந்து கிடக்கக்கூடாது; நாம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்; ஒற்றுமையாக வாழ வேண்டும். நாம் நம் தமிழ் மொழியால் ஒன்று சேர வேண்டும். நாம் நம்முடைய தமிழைக் காப்பாற்ற வேண்டும். நம்முடைய மொழி உணர்வை தொடர்ந்து இங்கே நிலைநாட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற இத்தனை வாசகங்களும் பொருந்தியாக சங்கமம் கலை விழாவிலே, “பிறப்பொக்கும்’ என்ற சுருக்கமான சொற்றொடரை அமைத்துள்ளனர்.
2,500 கலைஞர்கள்! தமிழ் உள்ள அளவும், தமிழன் உள்ள அளவும், தமிழ் நெறி உள்ள அளவும் தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை. சென்னை சங்கமம் நிகழ்ச்சி, சென்னை மாநகரில் மட்டுமல்ல; தமிழகம் முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்று சென்னை சங்கமம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அவர்களின் செயலை பாராட்டுகிறேன். இவ்வாறு கருணாநிதி பேசினார். விழா நடன நிகழ்ச்சிகளை பிரசன்னா ராமசாமி சைலஜா குழுவினர் வடிவமைத்திருந்தனர். விழாவில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன், கனிமொழி எம்.பி., தமிழக சுற்றுலாத் துறை செயலர் இறையன்பு, தமிழ் மையத்தைச் சேர்ந்த ஜெகத் கஸ்பர் உட்பட பலர் கலந்து கொண்டனர். சென்னையில் வரும் 16ம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சியில் 2,500 கலைஞர்கள் மூலம் 4,700 நிகழ்ச்சிகள் நடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 16ம் தேதி நிறைவு விழா, சென்னை எலியட்ஸ் கடற்கரையில் நடக்கிறது.
இதென்ன புதிய “கன்டிஷன்” போடுகிறார்?
தமிழ் உள்ள அளவும், தமிழன் உள்ள அளவும், தமிழ் நெறி உள்ள அளவும் தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை
தமிழன் இருக்கிறானோ இல்லையோ தமிழ் இருக்கிறது!
இவர்களுடைய அடிவருடிகள் எல்லாம் சேர்ந்து கொண்டு இவரையே தமிழ், முத்தமிழ், தமிழின் உயிரே, உயிரின் நிலையே, …………………………என்றெல்லாம் பேசியதை ஞாபகம் காட்டுகிறாரா?
தமிழ் நெறி என்று இவர் சொல்வது என்ன என்று தெரியவில்லை!
எது தமிழ்நெறி?
கருணாநிதி காட்டுவதா?
கனிமொழி காட்டுவதா?
ஜகத் காஸ்பர் காட்டுவதா?
கலைஞர் காட்டுவதா?
தமிழர்களுக்கு வீழ்ச்சி என்று ஏன் இவர் கவலைப் படவேண்டும்?
தமிழ் வாழும்
தமிழர்கள் வாழ்வார்கள்
அதற்கு இந்த போலிகள் தேவையில்லை.
இன்றைய தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பிரச்சினைகளே இவரால் தான் உருவாக்கப் பட்டுள்ளது!
13.060416
80.249634
தமிழின் மகன், தமிழின் மகள், தமிழின் மனைவி, தமிழ், தமிழ் தந்தை, தமிழ் தமிழன், தமிழ் தாத்தா, தமிழ் பாட்டி, தமிழ் மகன், தமிழ் மகள், திராவிட அமைப்புகள், திராவிட இனம், திராவிட சித்தாந்தம், திராவிட நாத்திகம், திராவிட பாகுபாடு, திராவிடத் தமிழன், திராவிடம், திராவிடர், நம்பிக்கையின்மை, நாத்திகம், பகுத்தறிவு, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 3 Comments »