Archive for the ‘தமிழ் மகன்’ Category

திக-திமுக பேச்சாளர்கள், தலைவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்து பேசி வரும் கெட்ட, ஆபாச மற்றும் மோசமான வார்த்தைகள், வசவுகள் மற்றும் திட்டுகள் (1)

ஜனவரி 14, 2023

திகதிமுக பேச்சாளர்கள், தலைவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்து பேசி வரும் கெட்ட, ஆபாச மற்றும் மோசமான வார்த்தைகள், வசவுகள் மற்றும்  திட்டுகள் (1)

திகதிமுக பேச்சாளர்கள், தலைவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்து பேசி வருவது: திக-திமுக பேச்சாளர்கள், தலைவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்து பேசி வந்ததை, இன்றைய 70-80-90 வயதானவர்களுக்கு, அதிலும் நேரிடையாக கூட்டங்களுக்குச் சென்று அவர்கள் பேசியதைக் கேட்டவர்களுக்கு, அவர்கள் எவ்வாறு, எப்படியெல்லாம் அநாகரிகமாக, கெட்ட வார்த்தைகள், மோசமான வசைபாடுகள், முதலியவற்றையெல்லாம் சரமாரியாக, வழக்கமாக பேசுவார்கள் என்று அறிவார்கள். அத்தகைய தரமற்ற, மோசமான, ஆபாசமான, மிகக் கேவலமான பேச்சுகள், இப்பொழுது, 2021-2023 ஆண்டுகளிலும் பேசப் படுகிறது என்பதைக் கேட்கும் பொழுது, கவனிக்கும் பொழுது, மிக வருத்தமாக, திகைப்பாக மற்றும் அதிர்ச்சியாக இருக்கிறது.  சைதை சாதிக், துரை முருகன், கே.என். நேரு, ஆர்.எஸ். பாரதி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்று பலர் பேச ஆரம்பித்து விட்டார்கள். இப்பொழுது, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியது, பழைய அந்த 1950களில் பேசிய திக-திமுகவினரை ஒத்துப் போகிறது. இதை விட கேவலமாக எல்லா கூட பேசியிருக்கிறார்கள். திகவினர் பேசும் பொழுது, பெண்களே வேகமாக நடந்து, ஏன் ஓடவும் செய்வார்கள், அந்த அளவுக்கு மோசமாக, ஆபாசமாக, அருவருப்பாகப் பேசுவது உண்டு.

9-01-2023 ஆளுநர் ஆர்.என்.ரவி உரை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் நீண்டநாட்களாக இருந்து வரும் பஞ்சாயத்துக்கு மத்தியில் பெருத்த எதிர்பார்ப்புடன் இக்கூட்டத்தொடர் தொடங்கியது. இதற்கிடையே, தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்வதுதான் சரியானதாக இருக்கும் என்று ஆர்.என். ரவி கருத்து பதிவிட்டிருந்தார். அந்த கருத்து தமிழ்நாட்டில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் ரவி ஆளுநராக செயல்படாமல் தொடர்ந்து பாஜக கட்சிக்காரராகா கருத்து கூறி வருகிறார் என்றும் அவர் உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். உண்மையில் இவையெல்லாம் கடந்த 50-70 ஆண்டுகளில் ஏற்கெனவே பேசி முடித்தது தான். அச்சிலும் உள்ளது தான்.

திராவிட சித்தாந்த வார்த்தைகளை ஆளுனர் தவிர்த்தது: இதற்கு மத்தியில் சட்டசபை உரையை வாசித்த ஆளுநர் ரவி, உரையில் இருந்த சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல் என்ற வார்த்தைகளை வாசிக்காமல் தவிர்த்தார். மேலும், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாள்கிறது, அமைதி பூங்காவாக திகழ்கிறது என்பதையும் வாசிக்காமல் கடந்தார். குறிப்பாக, பெரியார், அம்பேத்கர், காமராசர், அண்ணா, கலைஞர் ஆகிய தலைவர்களின் பெயர்களையும் வாசிக்காமல் கடந்துவிட்டார். இதை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு முன்பாகவே எதிர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். ஆளுனர் உட்கார்ந்திருக்கும் பொழுதே, ஏற்கெனவே தயாரித்த, அச்சிடத்த காகிதப் பேச்சை வைத்து ஸ்டாலின் படிக்க ஆரம்பித்தார். ஆளுனருக்கு தமிழ் தெரியாது என்பதால், ஸ்டாலின், ஆங்கில மொழிபெயட்ப்பைக் கொடுத்திருக்க வேண்டும். அந்நிலையில், ஆளுனர் போலீஸ் அதிகாரியைக் கூப்பிட்டு கேட்கிறார். அவர், ஸ்டாலின் பேசியதைப் பற்றி சொல்லியிருக்கலாம். அதனால், அதிகாரிகளைக் கூப்பிட்டு, வெளியே சென்று விட்டார். “அப்போது ஆளுநர் வெளிநடப்பு செய்தார் என்பது அனைவரும் அறிந்ததே,” என்று தமிழ் ஊடகங்கள் சுருக்கமாக கூறியுள்ளன. அதற்கு பிறகு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் ஆளுநரை விமர்சிக்க கூடாது என்றும் அவரை குறித்து கருத்து தெரிவிக்கக்கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநரை பாகிஸ்தானுக்கு அனுப்பி கொல்ல வேண்டும் என்று பேசியது: இந்நிலையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநரை பாகிஸ்தானுக்கு அனுப்பி கொல்ல வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கெட்ட கெட்ட வார்த்தைகளில் வசைபாடியும் இருப்பது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[1]. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது[2]; “அரசு கொடுத்த உரையை ஒழுங்காக படித்திருந்தால் ஆளுநரை கையெடுத்து கும்பிட்டு அனுப்பி இருப்பேன்[3]. ஆனால், அவர் டாக்டர் அம்பேத்கர் பெயரையே சொல்லமாட்டேன் என்று தவிர்த்தால் செருப்பால் அடிப்பேன் என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கா இல்லையா? அம்பேத்கர் பெயரை சொல்லமாட்டேன் என்று சொன்னால் ஆளுநர் காஷ்மீருக்கு செல்லட்டும்; நாங்களே தீவிரவாதிகளை அனுப்பி சுட்டு கொல்வோம்,” என்றார். இப்படி சுருக்கமாக செய்தி போட்டிருந்தாலும், மிகவும் கெட்ட வார்த்தைகளை உபயோகப் படுத்தியிருப்பதை கேட்கலாம்.

திமுக பேச்சாளரின் கொலைவெறி பேச்சு: இந்தியா டுடே[4], “ஆளுநரை திட்ட வேண்டாம் என முதல்வர் கேட்டுக்கொள்கிறார். அவர் பேச்சை சரியாகப் படித்திருந்தால், அவரது காலில் பூ வைத்து கைகூப்பி நன்றி தெரிவித்திருப்பேன்[5]. ஆனால், அம்பேத்கரின் பெயரைச் சொல்ல மறுத்தால் அவரை செருப்பால் அறைய எனக்கு உரிமை இல்லையா?[6] அவருடைய பெயரைச் சொல்ல மறுத்ததால், நீங்கள் காஷ்மீருக்குச் செல்லுங்கள்[7]. உங்களைச் சுட்டுக் கொல்ல ஒரு தீவிரவாதியை அனுப்புவோம்,” என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது[8]. இப்பேச்சு ஆங்கில ஊடகங்களில் 13-01-2023 அன்றே பரவலாக, இணைதளங்களில் வெளியிட்டுள்ளன. ஏனெனில், 2023ல் இவ்வாறு பேசுவது தான் அதிர்ச்சியளிப்பாக உள்ளது. இதனால், இழிவுபடுத்துதல், துஷ்பிரயோகம் செய்தல், அசிங்கமாக-ஆபாசமாக எப்படி பேசுவார்கள் என்று திகைத்து விட்டனர் எனலாம்.

கொஞ்சம் விவரமாக; திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழக அரசு எழுதி கொடுத்ததை முழுமையாக படிக்காத ஆளுநரை தகாத வார்த்தையில் பேசியும், அவரை செருப்பால அடிப்பேன் என ஆவேசமாக பேசினார்[9]. தொடர்ந்து, அம்பேத்கர் பெயரை சொல்லாத அவரை, ஜம்மு காஷ்மீருக்கு சென்று விடலாம் என்றும், அங்கு தீவிரவாதிகளை அனுப்பி கொல்வோம் என்று எச்சரிக்கை விடுத்தார்[10]….மேலும், தனது பதவியை பாதியிலேயே ராஜினிமா செய்து வந்த அண்ணாமலை எனக் கூறி அசிங்கமான வார்த்தையில் விமர்சித்த திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பிரான்ஸ்ல தயாரித்த கடிகாரத்தை கட்டிக்கொள்வதுதான் தேசபக்தியாடா..? என்று கேள்வி எழுப்பினார்.…….தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த அவர், வாரிசு அரசியல் குறித்து பேசினார். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதிக்கு ஆண்மை இருப்பதால் வாரிசு அரசியல் நடத்துவதாகவும், ஆண்மை இல்லாதவர்கள் மருத்துவமனைக்கு செல்லுமாறு கிண்டலாக குறிப்பிட்டார்……..அதோடு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அதிமுக குற்றம்சாட்டி வருவது குறித்து பேசிய அவர், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கேளியாக குறிப்பிட்டு, ஜெயலலிதா மரணம் எப்போது நடந்தது என்று சொல்லும் யோகிதை இருக்கிறதா..? என அதிமுகவுக்கு கேள்வி எழுப்பினார்.

© வேதபிரகாஷ்

13-01-2022


[1] சமயம், கவர்னரை நாங்களே கொல்லுவோம்‘… அண்ணாமலையை… – திமுக பேச்சாளர் பகீர்..!, Divakar M | Samayam Tamil | Updated: 13 Jan 2023, 4:05 pm.

[2] https://tamil.samayam.com/latest-news/state-news/dmk-spokesperson-sivaji-krishnamurthy-has-criticized-governor-ravi-and-annamalai-using-filthy-words/articleshow/96965349.cms

[3] India Today, Will send terrorist to kill Tamil Nadu Guv, says DMK leader; BJP demands arrest under Goondas Act, Pramod Madhav and Apoorva Jayachandran , Chennai,UPDATED: Jan 13, 2023 23:07 IST

[4] https://www.indiatoday.in/india/story/tamil-nadu-cm-governor-stand-off-dmk-leader-remark-row-bjp-reacts-2321350-2023-01-13

[5] Times.Now, ‘If you don’t read government’s speech, go to Kashmir and we will…’, DMK leader’s abusive remarks against TN Guv, Updated Jan 13, 2023 | 10:17 PM IST.

[6] https://www.timesnownews.com/india/dmk-leader-shivaji-krishnamurthy-abusive-remarks-against-tamil-nadu-governor-rn-ravi-article-96973932

[7] ANI, “If you don’t read govt’s speech, then go to Kashmir”: DMK leader’s remark against Tamil Nadu Governor, ANI | Updated: Jan 14, 2023 00:51 IST

[8] https://www.aninews.in/news/national/politics/if-you-dont-read-govts-speech-then-go-to-kashmir-dmk-leaders-remark-against-tamil-nadu-governor20230114005143/

[9] அப்டேட்.நியூஸ், எச்சை சோறு.. பாதியிலே ஓடி வந்த பொ*** அண்ணாமலை ; ஆளுநரை செருப்பால அடிப்பேன் ; திமுக பிரமுகர் சர்ச்சை பேச்சு, Author: Babu Lakshmanan, 13 January 2023, 5:44 pm.

[10] https://www.updatenews360.com/trending/dmk-executive-controversial-speech-about-governor-rn-ravi-and-annamalai-130123/

எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும் – கருணாநிதியின் திராவிட முழக்கம்!

பிப்ரவரி 24, 2012

எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும் – கருணாநிதியின் திராவிட முழக்கம்!

பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்!’: கருணாநிதி உருக்கமான வேண்டுகோள்[1]: “உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவுறுத்தி உள்ளார். இருப்பினும் அவரது குடும்பத்தில் உள்ள பாப்பாத்திகளையும், அந்த பாப்பாத்திகளுக்குப் பிறந்தவர்களையும் விரட்டியடிப்பாரா என்று தெரியவில்லை.
கருணநிதியின் அறிக்கை (கடிதமாக உள்ளது): திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா, 27ம் தேதி தி.மு.க., தலைமை நிலையத்தில், எனது தலைமையில், அன்பழகன் முன்னிலையில் நடக்கிறது. அதில், தி.க., வீரமணி, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மோகன், நன்னன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். திராவிட இயக்கத்தின் தோற்றம், அதன் மேன்மை பற்றியும் பேசுகிறார்கள்.

திராவிட நாடு கோரிக்கையை குப்பையில் போட்ட மாவீரர்கள்: ”ஒருவன் உள்ள வரையில்,  குருதி ஒரு சொட்டு  உள்ளவரையில் திராவிட நாட்டின் உரிமைக்குப் போரிடச் சிறிதும் பின்னிடல் இல்லை” என்றார் பாரதிதாசன். (பாராளுமன்றத்தில் அரசியல் நிர்ணய சட்டத்தில் தனிநாடு கேட்கும் கட்சிகளின் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்றதும், திராவிட வீரர்கள் தங்களின் வால்களை சுருட்டிக் கொண்டனர். அண்ணாதுரை பாராளுமன்றத்தில் பேசியதும் வேடிக்கைதான். ஏனெனில் கோரிக்கையை விட்டு ஆட்சியைப் பிடிததது திமுக!)

கால்டுவெல்லின் பொய்களை நம்பும் ஆட்கள் இங்குதான் இருப்பார்கள் போலும்[2]: கடந்த, 1856ல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல் தான், திராவிட மொழி பேசும் மக்கள் ஒரே இனத்தவர் எனக் குறிப்பிட்டார். திராவிடர் என்ற பெயரை அவர் தான் முதன் முதலாக உபயோகித்தார்என்ற குறிப்புகளும் உள்ளன (மாக்ஸ் முல்லரைத் தொடர்ந்து, கால்டுவெல்லும் தனது கருத்தை மாற்றிக் கொண்டார். ஆனால், அத்தகைய திருத்தம் செய்யப்பட்ட பதிப்பு இந்தியாவில் வெளியிடப் படவில்லை. இன்று ஆரியர்-திராவிடர் என்ற இனங்கள் எல்லாம் கட்டுக்கதை என்று மெய்பிக்கப் பட்டு விட்டது. சரித்திர ஆசிரியர்கள் யாரும் ஒப்புக் கொள்வதில்லை. அதுமட்டுமல்லாது திருட்டுத் தனமாக அகழ்வாய்வு செய்து பல ஆதாரங்களை மறைத்து விட்ட பாதகன் இந்த கால்டுவெல்[3]).

அரைத்த மாவை அரைக்கும் கருணாநிதி: மனோன்மணியம் எழுதிய சுந்தரம் பிள்ளை, “திராவிட நல் திருநாடும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்[4]. 1912ம் ஆண்டு தோன்றிய, “மெட்ராஸ் யுனைடெட் லீக்’ சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா, 1913, டாக்டர் நடேசன் மருத்துவமனைத் தோட்டத்தில் நடந்தது. “சங்கத்தின் பெயர், அதன் நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை’ என சிலர் பேசினர். அப்போது டாக்டர் நடேசன் தான், “திராவிடச் சங்கம் என்று பெயர் மாற்றலாம். ஏனென்றால், நாமெல்லாம் திராவிடர்களாயிற்றே’ என, முடிவைத் தெரிவித்தார். அதை, அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.

சரித்திரத்தைத் திரித்து கூறும் கருணாநிதி[5]: பிட்டி தியாகராயர் திராவிட இனத்தின் மீது மாறாத அன்பு கொண்டவர்.தொடக்கத்தில் தியாகராயர் பெரும் வைதீகராக இருந்தார். தன் இல்லத்திலேயே சிலை வைத்து புரோகிதரைக் கொண்டு பூஜை புனருத்தாரணம் எல்லாம் செய்து வந்தார்.   அப்படிப்பட்டவர் டாக்டர் நடேசன் தொடர்பு ஏற்பட்ட பிறகு, வைதீகத்திலிருந்து விலகி வந்து, பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பில் அதிகத் தீவிரம் காட்டத் தொடங்கினார்[6]. அப்படிப்பட்ட தியாகராயர் 1917ல் நடைபெற்ற சென்னை மாகாண முதலாவது நீதிக் கட்சி மாநாட்டில் உரையாற்றும்போது, பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிப்பது திராவிட மரபன்று. திருவள்ளுவர் முதலிய திராவிடத் தலைவர்கள் பிரம்மனின் முகத் துதித்தோர் யாம் என்று பெருமை பேசினாரில்லை.  பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கற்பித்தோரும் நால்வகைச் சாதி இந்நாட்டில் நாட்டினோரும் ஆரியரே. அவ்வருணாச்சிரமக் கோட்டையை இடித் தெறிய 2400 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய புத்தர் முயன்றார், முடியவில்லை. பின்னர் வந்த பல சீர்திருத்தவாதிகள் முயன்றனர், தோற்றனர். ராமானுசரும் புரோகிதக் கொடுமைகளைக் களைந்தெறிய ஒல்லும் வழியெல்லாம் முயன்றார், தோல்வியே கண்டார்.

திராவிடத் தலைவர்கள் ஆங்கிலேயர்களின் அடிவருடிகளான உண்மையை மறைக்கும் கருணாநிதி[7]: பார்ப்பனர் பிடி மேன்மேலும் அழுத்தமுற்றே வந்தது. தீண்டாமை, அண்டாமை, பாராமை முதலிய சமுதாயச் சீர்கேடுகளும்  படிப்படியே பரவிப் பெருகலாயின. அத்தகைய பலம் பொருந்திய சாதிக் கோட்டையை தகர்த்தெறிய, இதுவே தக்க காலம்.  இதுவே தக்க வாய்ப்பு என்று முழங்கினார். பி அண்ட் சி மில்லில் அப்போது ஒரு வேலை நிறுத்தப் போராட்டம். அதுகுறித்து தியாகராயருக்கும், ஆளுநராக இருந்த வெல்லிங்டன் பிரபுவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று, அதில் ஆத்திரமடைந்த தியாகராயர் வெளியே வந்து விட்டார்.  அப்போது முதலமைச்சர் பதவியில் இருந்த பனகல் அரசர் தியாகராயர் வெளியே வந்ததைக் கேள்விப்பட்டு, உடனடியாக ஆளுநரைச் சந்தித்து, எம் தலைவரிடம் மன்னிப்புக் கேட்காவிட்டால், எங்கள் மந்திரிசபை ராஜினாமா செய்யும் என்று தெரிவித்தாராம். ஆளுநரும் அவ்வாறே உடனடியாக மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தாராம். டாக்டர் நடேசனுக்கு துணை நின்ற மற்றொருவர் டாக்டர் டி.எம். நாயர். ஆரியர் வருகையிலிருந்து அவர் பேச்சைத் தொடங்கினால், இடையிலே புராண, இதிகாசக் கதைகளையெல்லாம் கூறி மக்களை உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தக் கூடிய பேச்சாளர். தென்னகத்தில் ஒன்றிரண்டு தவிர, மற்ற எல்லாப் பதவிகளிலும் பார்ப்பனர்கள் உட்கார்ந்து விட்டார்கள். உயர்நீதிமன்ற நீதிபதிகளாகநியமிக்கப்பட்ட ஒன்பது இந்தியரில், எட்டு பேர் பார்ப்பனர்கள், ஒருவர் நாயர். உதவி கலெக்டர்கள் 146 பேரில் 77 பேர் பார்ப்பனர்கள். 125 மாவட்ட நீதிபதிகளில் 93 பேர் பார்ப்பனர்கள். மக்கள் தொகையில் நூற்றுக்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர்கள், இத்தனை வேலைகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று இந்தப் புள்ளி விவரங்களை அடுக்கிச் சொல்லி, இந்த அநீதியை இப்படியே தொடர விடலாமா? என்று கர்ச்சிப்பார்.

“பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்கம்’ என்ற அறிக்கை: டி.எம்.நாயர், 1917ல், சென்னை ஸ்பர்டாங் சாலை அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையும், சர்.பிட்டி.தியாகராயர், 1918ல் நீதிக் கட்சியின் சார்பில் வெளியிட்ட, “பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்கம்’ என்ற அறிக்கையும், திராவிடருக்கான ஆதி ஆவணங்கள் எனப் போற்றப்படுகின்றன. டாக்டர் நாயரின் புகழ் பெற்ற அந்த உரையில், வீரத் திராவிடர்களே என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். லண்டனிலும், சென்னையிலும் என்னைப் பெரிய டாக்டர் என்று சொல்கிறார்கள். நான் எம்.டி. பட்டதாரி. எனக்கு ஏராளமான வருமானம் வருகிறது.  என் செலவு போக, என் வருமானத்தில் மீதப்படும் பணத்தையெல்லாம், என்னருமைத் தலைவர் பிட்டி தியாகராயரைப் போன்று, உங்களைப் போன்ற திராவிட மக்களைத் தட்டி எழுப்பும் நீதிக் கட்சியின் வளர்ச்சிக்காகச் செலவிடுவதில் பெருமைப்படுகிறேன். நாயரின் உரையில், “திராவிடத் தோழர்களே… நீங்கள் எல்லாம் உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, நீதிக் கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் மக்களுக்கு பலம் வரும். நம் எதிர்க்கட்சியான, பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்’ என முழங்கியதைத் தான், நான் இப்போதும் திரும்பக் கூற விரும்புகிறேன்.

முரசொலி மாறனின் புரட்டு வரலாறு[8]: “திராவிட இயக்க வரலாறு’ என, முரசொலி மாறன் எழுதிய நூலில், உயர் பதவியில் ஒரு பிராமணர் நியமிக்கப்பட்டால், உடனே தன் நியமன அதிகார வரம்புக்குட்பட்ட பிற பதவிகளிலும் தங்களது இனத்தாரைக் கொண்டு வந்து நிரப்புவதும், தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்’ என எழுதியதோடு, அதற்கு உதாரணங்கள் சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளார். வருவாய்த் துறை வாரியம் ஒருமுறை ஆய்வு நடத்திய போது ஜி. வெங்கட்ரமணையா என்கிற உயர் பதவி வகித்த பிராமணருக்கு உறவினர்களும், தொடர்புடையவர்களும் மாத்திரம் அந்தத் துறையில் 49 பேர் இருந்தது தெரியவந்ததாம். 1890 களில் செங்கற்பட்டிலும், சென்னை நகரிலும் தோன்றிய வெம்பாக்கம் அய்யங்கார் குடும்பம் (புகழ் பெற்ற சர். பாஷ்யம் அய்யங்கார் வகையறா) ஆங்கிலேயர் ஆட்சியில் கிடைக்கும் உத்தியோகங்களையெல்லாம் நன்கு நுகர்ந்தது.

ஐயர்கள் நாயர்கள் ஆனார்களா இல்லை நாயர்கள் ஐயர்கள் ஆனார்களா?: 1861லிருந்து 1921 வரை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஐவர் சட்டசபை உறுப்பினர்களாகவும், இருவர் அட்டர்னி ஜெனரல்களாகவும், மூவர் உயர்நீதி மன்ற நீதிபதிகளாகவும், மூவர் ஸ்மால்காஸ் கோர்ட் நீதிபதிகளாகவும், மாண்டேகு,செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தத்தில் உதயமான ஆட்சியில் ஒருவர் உள்துறை அமைச்சராகவும், மூவர் மாநில அரசின் துணை செகரட்டரிகளாகவும் இருந்திருக்கின்றனர். மேலும் பலர் தாசில்தாரர்களாகவும், பப்ளிக் பிராசிகியூட்டர்களாகவும், டெபுடி கலெக்டர்களாகவும் இருந்தனர் என்று மாறன் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்த உண்மை வரலாறுகளையெல்லாம் திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு நினைவு படுத்தும் வகையில்தான் திராவிட இயக்க 100ம் ஆண்டு தொடக்க விழா நடைபெறவுள்ளது. அந்த நிகழ்ச்சியில் நம்மைப்பற்றி புரிந்துகொள்ள தெரிந்து கொள்ளத்தக்க பல விவரங்களை சான்றோர் பலர் விளக்கிட உள்ளார்கள்.

உண்மை வரலாறு எது என்று தெரிந்தால் தமிழர்கள் உருப்பட்டு விடுவார்கள்[9]: இந்த உண்மை வரலாறுகளை எல்லாம் திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் தான், திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா நடக்கவுள்ளது. ஆண்டு முழுவதும் கொண்டாடப் போகிறோமே, துவக்க விழாவில் கலந்து கொள்ளாமல் விட்டால் என்ன என நினைத்துவிடக் கூடாது. இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார் (உண்மை வரலாறு என்னெவென்று தெரிந்து கொண்டால் தமிழர்கள் உருப்பட்டு விடுவார்கள். அவ்வாறு தெரியவிடாமல், தமிழர்களை இத்தகைய பொய்யான இனவாத சித்தாந்தங்களை வைத்துக் கொண்டு முட்டாள்கKஆல்லி விட்டதால், கடந்த 60-100 வருடங்களில் தமிழர்கள் முன்னேறாமல், பின் தங்கியே உள்ளர்கள்).

வேதபிரகாஷ்

24-02-2012


[1] தினமலர், பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்!’: கருணாநிதி உருக்கமான வேண்டுகோள், பிப்ரவரி 23,2012, http://www.dinamalar.com/News_detail.asp?Id=412586

[2] சி. பி. பிரௌன் என்ற பாதிரி தான் கால்டுவெல்லிற்கு சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்தார். அவர் கால்டுவெல்லின் அயோக்கியத்தனத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அவற்றைப் படித்தறிந்தால், தமிழர்கள் நிச்சயமாகத் திருந்துவார்கள். அதுமட்டுமல்லாது, கால்டுவெல் சாணார்களை பற்றி மிகவும் கேவலமாக தனது புத்தகத்தில் எழுதியுள்ளான். அதனால் அப்புத்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

http://dravidianatheism.wordpress.com/2011/02/18/denigrating-tamils-with-robert-caldwell/

http://dravidianatheism.wordpress.com/2010/01/30/caldwell-purana-continues/

http://dravidianatheism.wordpress.com/2010/01/30/house-of-caldwell-converted-to-memorial/

http://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-government/

[3] நாணயங்கள், முக்கியமான சரித்திர அதாரங்கள் மறைப்பு!:அங்கிருந்து ஆயிரக்கணக்கில், ஓலைச்சுவடி புத்தகங்களை எடுத்து இங்கிலாந்திற்கு அனுப்பினார். தமிழ் தொன்மையினை ஆராய்ந்து அதனை மாக்ஸ்முல்லரின் ஆராச்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தபோது, இந்தியாவின் ஒட்டுமொத்த ஒருமைப்பாடு அதிர்ச்சியளித்தது. ஓலைச்சுவடி புத்தகங்களைப் படித்து தாமரைப்பரணி ஆற்றங்கரையில் உள்ள பழைய காயல் என்ற ஊர்தான் மிகவும் பழமையானது என்று தெரிந்து கொண்டார். அதுமட்டுமல்லது அது பாண்டியர்களின் துறைமுகமாக இருந்தது, போன்ற விஷயங்களையும் தெரிந்து கொண்டார். பல இடங்களில் பழமையான நாணயங்கள் முதலியவற்றைக் கண்டதும் திகைத்தார். ஏனெனில், அவையெல்லாம், இந்திய ராஜ வம்சாவளியினரின் கடற்பயணங்களைக் குறிக்கும் ஆதாரங்களைக் கொண்டிருந்தன. சர் வால்டர் எல்லியட் எடுத்துக் காட்டியபடி, கப்பல் பொறிக்கப்பட்டுள்ள நாணயங்களையெல்லாம், சாமர்த்தியமாக மறைத்துவிட்டார். பிறகு அரசு பூர்வமாக அறிவிக்கவேண்டுமேயன்று, அனுமதியுடன் அகழ்வாய்வு மேற்கொண்டதுபோல், பிறகு பழங்கால கட்டிடங்கள், கோவில்கள் முதலியவற்றின் அஸ்திவாரங்களுக்கு அருகில் நோண்ட ஆரம்பித்தார்.  அதன்மூலமாகத்தான், தாழிகள், பளபலப்பான மற்றும் கலைநயம் பொருந்திய மண்பாண்டங்கள் , மீன் இலச்சினையுடைய பாண்டியர்களது நாணயங்கள் முதலியவற்றைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார். இப்படி திருட்டுத் தனமாக, அகழ்வாய்வு மேற்கொண்டு பல ஆதாரங்களை மறைத்தவர் தான் கால்டுவெல்.

http://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-government/

[4] அப்பாட்டிலேயே சில வரிகள் நீக்கப்பட்டன, மாற்றியமைக்கப் பட்டுள்ளன என்பதெல்லாம் தெரிந்தால், குட்டு வெளிப்பட்டு விடும்.

[6] தினகரன், திராவிட இயக்கத்தின் 100ம் ஆண்டு விழா திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு, http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=3671

[7] பி. ராமமூர்த்தி, ஆரிய மாயையா? திராவிட மாயையா? விடுதலைப் போரும், திராவிட இயக்கமும், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1987.

[8] முரசொலி மாறன், ஏன் வேண்டும் இந்த இன்பத் திராவிடம், முத்துவேல் பதிப்பகம், திருச்சிராப்பள்ளி, 1957.

[9] குணா, திராவிடத்தால் வீழ்ந்தோம், தமிழக ஆய்வரண், பெங்களூர், 1995.

நான் ஆணே இல்லை, நாம் எப்படி செக்ஸில் ஈடுபட்டிருக்க முடியும்?

ஏப்ரல் 30, 2010

நான் ஆணே இல்லை, நாம் எப்படி செக்ஸில் ஈடுபட்டிருக்க முடியும்?

“நான் ஆணே இல்லை. ஆகவே எந்தவிதத்திலும் நான் பெண்களுடன் செக்ஸில் ஈடுபட்டிருக்க முடியாது. வேண்டுமானால், ஆண்மை பரிசோதனையை என்மீது பிரயோகம் செய்து பாருங்கள்” [“I’m not a man. There’s no way I could have indulged in sexual activities with women. Do a potency test on me”]. இப்படி சொன்னது நித்யானந்தா!

Nityananda-male-or-female

Nityananda-male-or-female

இருப்பினும் துப்பறியும் வீரர்கள் அதை நம்புவதாக இல்லையாம், ஏனெனில் பாஸ்போர்ட்டில் “ஆண்” என்றுதான் போட்டிருக்கிறது, “அலி” என்று போடவில்லை, என்று விசாரணையைத் தொடர்ந்துள்ளார்கள்!

கனிமொழியும், ஜெயலலிதாவும் (எடா, ஆஸ்கன், ஸ்டார்,ஸ்பெக்ட்ரம் தொடர்புகள்)

ஏப்ரல் 25, 2010

கனிமொழியும், ஜெயலலிதாவும்!

ஜெயலலிதாவுக்கு கனிமொழி நோட்டீஸ்
எடா ஸ்டார் ப்ராபர்டி டெவலப்பர்ஸ் ஒப்பந்தம் செய்து கொண்டது, துபாயைச் சேர்ந்த எடா ஆஸ்கன் குழுமம் நிலத்தை வாங்கிக் கொண்டது, ரஸ் அல் கைமா நிறுவனத்துடன் ஒப்பந்தம், .டி.. அஸ்கான் ஸ்டார் குழுமநிர்வாகஇயக்குனர் சையது லாகுதீன், துபாயில் நிகழ்ச்சிகள் நடத்ததவது, இந்த கமெனிகள் ஸ்பான்ஸர் செய்வது முதலியவற்றை இங்கு காணலாம்.

First Published : 25 Apr 2010 01:13:16 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?Title=…………artid=232228&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu

சென்னை, ஏப். 24: இந்தோனேசியாவில் தமக்கு நிலக்கரி சுரங்கம் இருப்பதாக கூறியதற்காக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு முதல்வர் கருணாநிதியின் மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.கனிமொழியின் வழக்கறிஞர் பி.ஆர். ராமன் இதுதொடர்பாக ஜெயலலிதாவுக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள நோட்டீஸ் விவரம்:நெய்வேலியில் போராட்டத்தில் பங்கேற்ற நீங்கள் (ஜெயலலிதா) எமது கட்சிக்காரர் (கனிமொழி) மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியதாக கடந்த 19-ம் தேதி பத்திரிகை செய்தி வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவில் கனிமொழியும், அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயமும் பங்குதாரர்களாக உள்ள நிலக்கரி சுரங்கம் இருப்பதாகவும், அங்கிருந்து தமிழ்நாடு மின்வாரியத்துக்கு நிலக்கரி வழங்கப்படுவதில் முதல்வரின் குடும்பத்துக்கு ஒரு டன்னுக்கு 21 அமெரிக்க டாலர் லஞ்சமாகச் செல்வதாகவும் கூறியுள்ளீர்கள்.எமது கட்சிக்காரரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்தக் கருத்துகள் உள்ளதாக அவர் கருதுகிறார். எமது கட்சிக்காரருக்கு இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கம் இருப்பதாகக் கூறுவது பொய்யானதாகும். நிலக்கரி வெட்டி எடுப்பது அல்லது நிலக்கரி வணிகம் போன்ற எந்த தொழிலிலும் இந்தோனேசியாவிலோ அல்லது உலகின் வேறு பகுதிகளிலோ எமது கட்சிக்காரர் ஈடுபடவில்லை என்று தெரிந்திருந்தும், களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான தகவல்களை வெளியிட்டிருக்கிறீர்கள்.மேலும் திமுக அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயத்துடன் வணிக ரீதியில் கூட்டு இருப்பதாகக் கூறியிருப்பதும் பொய்யானதாகும். முதல்வரின் மகள் என்ற முறையில், தன் நெருங்கிய உறவினர்களுடன் சேர்ந்து சட்டவிரோதமாக ரூ.2000 கோடி சம்பாதித்துள்ளதாக, முற்றிலும் பொய்யான, மிக மோசமான குற்றச்சாட்டை எமது கட்சிக்காரர் மீது கூறியிருக்கிறீர்கள்.தமிழ் கலை மற்றும் கலாசாரத்தை மிக உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும் பொது சேவைக்கு தனது நேரத்தை செலவிட்டு வரக் கூடிய நேரத்தில் உமது இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.எமது கட்சிக்காரருக்கு தமிழகத்தில் மட்டுமின்றி உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் நற்பெயர் இருக்கிறது. அந்த நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாக உங்கள் கருத்துகள் அமைந்திருப்பதாக எமது கட்சிக்காரர் கருதுகிறார்.அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகள் தொடர்பான எந்தவொரு விமர்சனத்துக்கும் ஊடகங்கள் மூலமாகவே பதில் தர முடியும். இருந்தாலும் அவருடைய நற்பெயருக்கும், மதிப்புக்கும் களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதால் அதை நீதியின் பாதுகாப்பு மூலமாக சந்திக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். இந்தச் சூழ்நிலையில் இந்த நோட்டீஸ் கிடைத்த மூன்று நாள்களுக்குள் உமது அவதூறான கருத்துகளை நீங்கள் திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்காவிட்டால், சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை என்று வழக்கறிஞர் கூறியுள்ளார்.

ETA STAR Property developers signs MoU with Tamil Nadu government

Published on Friday, May 25th, 2007 at 9:54 pm under News, Technology.

http://chennai365.com/news/eta-star-property-developers-signs-mou-with-tamil-nadu-government/

ETA_STAR_Property-Karunanidhi

ETA_STAR_Property-Karunanidhi

An Information Technology Special Economic Zone and integrated township, spread over a total extent of about 350 acres, will come up in Kancheepuram district, near Chennai. The project will employ about 50,000 people. A memorandum of understanding to develop them was signed on Friday by representatives of ETA Star Property Developers and the Tamil Nadu Industrial Development Corporation in the presence of Chief Minister M. Karunanidhi.

TIDCO will be a partner in the Rs.3,750-crore joint venture project, ETA Startech City. The entire land has been purchased by the Dubai-based ETA Ascon group and no acquisition had to be done by the government, according to a press release. The project will be implemented over a period of three years. As much as 175.3 lakh sq ft of space will be created in row houses, bungalows, a shopping mall, car parks, hospitals, schools, hotels and serviced and other apartments. Companies dealing with Information Technology and Information Technology Enabled Services will occupy about 50 acres.

ETA Ascon is involved globally in civil construction, buildings and roads, real estate development, power projects, trading, shipping, port management, manufacturing, retail, automobiles, vertical transportation and building maintenance. TIDCO will facilitate the project and get the requisite approvals from service agencies in the State, said its Chairman and Managing Director S. Ramasundaram. The work is expected to start in August. The IT SEZ part will be completed in about two years. The township part will proceed based on requirements and is expected to be completed in about five years.

Ras Al Khaimah Investment Authority signs MoU to set up mega township projects in Tamil Nadu, India

Published on Monday, April 30th, 2007 at 10:12 pm under News, Real Estate.

http://chennai365.com/news/ras-al-khaimah-investment-authority-signs-mou-to-set-up-mega-township-projects-in-tamil-nadu-india/

Khater massaad Karunanidhi MOU

Khater massaad Karunanidhi MOU

Dr. Khater Massaad, Advisor to the RAK Crown Prince and CEO of RAK Investment AuthorityÂÂ

The Ras Al Khaimah Investment Authority (RAKIA) has signed a Memorandum of Understanding (MoU) with the Government of the Indian State of Tamil Nadu to set up two mega township projects in the State with an investment outlay of AED 2 billion. The MoU for the landmark urban infrastructure development projects was signed by Dr. Khater Massaad, Advisor to the RAK Crown Prince and CEO of RAKIA, and S. Ramasundaram, Chairman and Managing Director of Tamil Nadu Industrial Development Corporation Ltd, in the presence of Tamil Nadu Chief Minister, M. Karunanidhi in Chennai on Saturday.

The project in the industrial city of Coimbatore will come up on 1000 acres and will have an Information Technology Special Economic Zone supported by an integrated feeder township. The township will also have world class leisure and residential facilities including golf course, shopping malls, resort hotel, health spa and residential villas and apartments. The township, expected to be completed in five years, will have about 5 million sq.ft of IT space.

The second project would witness the creation of a world class marina and township at Kadalur in Kancheepuram district. The 500- acre marina project would have water sports, leisure, entertainment, premium residences and a world class golf course. Speaking on the ambitious overseas venture of RAKIA, Dr. Khater Massaad said that RAKIA, under the guidance of H.H. Sheikh Saud bin Saqr Al Qasimi, Crown Prince and Deputy Ruler of RAK, was privileged to be able to partner the State of Tamil Nadu in the world class project that will catapult the State to the forefront of development. ‘We believe that the landmark venture would enable RAKIA to share its considerable expertise in infrastructure development and property sector for the development of Tamil Nadu,’ he said.

Dr. Massaad said that creation of top- notch urban infrastructure in cities like Coimbatore would give the much needed fillip to the industry and business environment in the State and facilitate further investment in IT and other sectors. “The venture marks the further strengthening of the close relations between Ras Al Khaimah and India, which has seen the creation of many successful partnerships like the RAK Ceramics factory located at Kakinada in Andhra Pradesh (AP), the proposed one million tonne capacity Alumina plant in AP and many mega Indian industrial ventures based in RAK,” he added. Dr. Massaad said that the townships will be designed and constructed by internationally renowned architects and contractors. Ras Al Khaimah has emerged as a favourite destination for life-style and tourism development projects in the region. According to a research study published recently, investors have lined up nearly AED 60 billion worth of real- estate projects for completion in Ras Al Khaimah before 2010.

துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தமிழரங்கம் – 2010

புதன்கிழமை, பிப்ரவரி 17, 2010, 12:26[IST]

துபாய்: அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா, அமீர‌க‌த் தமிழ‌ர்க‌ள் அமைப்பின் 8வ‌து ஆண்டு விழா, செம்மொழி மாநாட்டிற்கு பாராட்டு விழா ஆகியவை இணைத்து த‌மிழ‌ர‌ங்க‌ம் 2010 என்ற நிகழ்ச்சி துபாயில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பிப்ர‌வ‌ரி 12, வெள்ளிக்கிழ‌மை அன்று சேக் ராஷீத் ஆடிட்டோரியத்தில் விழா நடைபெற்றது. இதில், க‌விஞ‌ர் க‌னிமொழி எம்.பி., தமிழக ப‌ள்ளிக்க‌ல்வித் துறை அமைச்ச‌ர் த‌ங்க‌ம் தென்ன‌ர‌சு, திராவிட‌ர் க‌ழ‌க‌த் த‌லைவ‌ர் வீர‌ம‌ணி, இ.டி.எ. அஸ்கான் ஸ்டார் குழும‌ நிர்வாக‌ இய‌க்குன‌ர் சைய‌து ச‌லாகுதீன், ந‌டிக‌ர் ப‌சுப‌தி, சாக்கோட்டை அன்ப‌ழ‌கன், அமீர‌க‌த் தமிழ‌ர்க‌ள் அமைப்பின் கெள‌ர‌வ‌த் த‌லைவ‌ர் அஜ்மன் மூர்த்தி மற்றும் அமீர‌க‌த் தமிழ‌ர்க‌ள் அமைப்பின் த‌லைவ‌ர் அமுத‌ர‌ச‌ன் ஆகியோர் க‌ல‌ந்து கொண்ட‌னர்.

திராவிட புரோகிதர்கள் நடத்திவரும் திருமணங்கள்!

பிப்ரவரி 2, 2010

திராவிட புரோகிதர்கள் நடத்திவரும் திருமணங்கள்!

சுயமரியாதை உள்ளவர்கள் நடத்தும் திருமணமே சுயமரியாதைத் திருமணம்
ந.ம.மதன்-த.ஆர்த்திகா சுயமரியாதைத் திருமண விழாவில் தமிழர் தலைவர் உரை

http://www.viduthalai.com/20100607/news12.html

சென்னை, ஜூன் 7_ சுயமரியாதைத் திருமணம் என்பது சுயமரியாதை உள்ளவர்கள் நடத்தும் விழா என்று குறிப்பிட்டார் திரா-விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக அமைப்-பாளர் மு.ந.. மதியழகன் _ தமிழ்மதி ஆகியோரின் மகன் ந..ம. மதன் பி.இ.,எம்.பி.ஏ., சோலையார்பேட்டை சி.தங்கவேல் _ தேவி ஆகியோரின் மகள் த. ஆர்த்திகா பி.டெக்., ஆகியோரின் சுயமரியாதைத் திருமணம் 6.6.2010 ஞாயிறு காலை 11 மணிக்கு சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மணமகன் தந்தையார் மு.ந.மதியழகன் விழாத் தலைவரை முன்மொழிந்து உரையாற்றினார்.

திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.சி. எழிலரசன் அனைவரையும் வரவேற்று உரை-யாற்றினார்.

கழகத் தோழர் மதியழகன் தந்தையார் சுய-மரியா-தைச் சுடரொளி ஆசிரியர் நடராசன் அவர்களுக்கும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கும் இருந்த தொடர்பையும், நட்பையும் எடுத்துக் காட்டிப் பேசினார்.

பாராட்டுரை

மணமக்களைப் பாராட்டி, வாழ்த்தி நீதியரசர் அரிகிருஷ்ணன் உரையாற்றுகையில் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று இருந்த நிலை-யிலும் கூட தந்தை பெரியார் கொள்கையை ஏற்று நாட்டில் ஏராளமான எண்ணிக்கையில் சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றதைப் பெருமையாகச் சுட்டிக் காட்டி மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

டாக்டர் ருத்திரன்

பிரபல உளவியல் மருத்துவர் டாக்டர் ருத்திரன் அவர்கள் தனது திருமணமும் சரி, தம் மகனின் திருமணமும் சரி சுயமரியாதைத் திருமணமாக நடந்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.

சுயமரியாதைத் திருமணத்தில் பொய் இல்லை: போலித்தனம் இல்லை. வாழ்க்கை ஆரம்பமே இந்தச் சிறப்புடன் துவங்குவது சுயமரியாதைத் திருமணத்-தில்தான் என்று ரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிட்டார்.

கலி.பூங்குன்றன்

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்-குன்றன் அவர்கள் தன்னுரையில் குறிப்பிட்டதாவது:

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு _ மத எதிர்ப்பு, சாஸ்திர புராணங்கள் எரிப்பு என்பதே தமிழர்களின் இன இழிவு ஒழிப்பிலிருந்து தொடங்குகிறது என்று குறிப்பிட்டார்.

தொடக்கத்தில் பார்ப்பனப் புரோகிதர்கள் பார்ப்பனர்களுக்கும், சத்திரியர்களுக்கு மட்டுமே திருமணங்களை நடத்தினார்கள். திருமலை நாயக்கன் காலத்தில் வட மாநிலங்களிலிருந்து ஏராளமான பார்ப்பனர்கள் தமிழ் நாட்டுக்கு வந்து சேர்ந்தனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத ஒரு நிலை ஏற்பட்டது.

அப்பொழுதுதான் திருமலை நாயக்க மன்னனின் முன்னிலையில் கூடி, வைசியர்களுக்கும், சூத்திரர்-களுக்கும் கூட பார்ப்பனர்கள் திருமணங்களை நடத்தி வைக்கலாம் என்ற முறை மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பார்ப்பனப் புரோகிதர்கள் சூத்திரர்களுக்கு மந்திரங்களைச் சொல்லி கல்யாணத்தை நடத்தி வைக்கும்போது மறக்காமல் ஒரு முகூர்த்த நாழிகைக்கு மணமகனுக்கு பூணூல் அணிவித்து, சடங்குகள் முடிந்த பின் மறக்காமல் அந்தப் பூணூலைக் கழற்றி தண்ணீரில் எறிந்துவிடுவார்கள் என்ற வரலாற்று உண்மையையும் எடுத்துக் கூறினார்.

பொருளாளர் கோ.சாமிதுரை

திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்கள் தன்னுரையில், சுயமரி-யா-தைக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வி கிடையாது என்று அழுத்த-மாகக் குறிப்பிட்டார்.

சுயமரியாதைக்காரர்கள் நீண்ட நாள் வாழ்வதற்குக் காரணம் அவர்கள் சரியான -_ பகுத்தறிவு ரீதியான வாழ்க்கை முறையே என்றும் கூறினார்.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் அருள்தந்தை மரியா மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி

சுயமரியாதைத் திருமணத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

தோழர் மதியழகன் குடும்பம் பாரம்பரியமான கழகக் குடும்பமாகும். தோழர் கொள்கையில் மிகவும் பிடிவாதக்காரர் _ பெரியார் திடலோடு நெருக்கமாக உறவு கொண்டவர்.

கழகத் தொடர்பான செய்திகளையும், ஆதாரங்களையும் ஆவணமாகத் தொகுத்து வைக்கக் கூடிய ஆற்றல் மிக்கவர்.

மணமகன் பி.இ. படிப்போடு எம்.பி.ஏ. பட்டமும் பெற்றிருக்கிறார். மணமகள் பி.டெக். படித்திருக்கிறார்.

இந்த மாற்றங்கள் எல்லாம் வருவதற்கு உழைத்தவர் தந்தை பெரியார் _ இந்த இயக்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இங்கு பேசிய நீதிபதி அரிகிருஷ்ணன் அவர்கள் சுயமரியாதை முறையில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு மட்டும்தான் சுயமரியாதை இருக்கிறதா _ மற்றவர்களுக்குக் கிடையாதா என்று சிலர் கேட்டதாகக் குறிப்பிட்டார்.

உண்மைதான். சுயமரியாதை முறையில் திருமணம் செய்து கொள்பவர்களுக்குத்தான் சுயமரியாதை உண்டு _ இந்த முறையில் திருமணம் செய்துகொள்ளாதவர் களுக்கு சுயமரியாதை கிடையாது என்ற அழுத்தமாகச் சொல்லுவதில் எங்களுக்கு ஒன்றும் தயக்கம் இல்லை (பலத்த கைதட்டல்).

இப்படிக் கூறுவது யாரையும் புண்படுத்த அல்ல: மாறாகப் பண்படுத்தத்தான்.

சுயமரியாதைத் திருமுண முறையில் ஒருவர் எஜமானர் அல்ல -_ இன்னொருவர் அடிமையும் அல்ல _ சமமானவர்கள் என்பதே இதன் தத்துவம்.

வைதீக முறையில் இதற்கு என்ன பெயர்–? தாரா முகூர்த்தம். அப்படியென்றால் பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுப்பதாகும். இன்னொரு பெயர் கன்னிகாதானம் என்பதாகும். பெண்ணைத் தானமாக _ பண்டமாக நினைத்து இன்னொருவருக்குக் கொடுப்பதாகும்.

வரதட்சணை என்ற சொல்லேகூட தமிழ் கிடையாது. தமிழர்களிடத்தில் இந்த ஏற்றத் தாழ்வு இல்லாதிருந்தது. ஆரியம் புகுந்ததால் பெண்ணை சந்தைப் பொருளாக்கி விட்டனர்.

சந்தையில் மாட்டை விற்கும்போதுகூட பணத்தை வாங்கிக் கொண்டு மாட்டைக் கொடுப்பார்கள். இந்த வரதட்சணை சந்தையில் பணத்தையும் கொடுத்து பொருளையும் கொடுத்து, பெண்ணையும் கொடுக்கிறார்கள்.

நெருப்புக்கும் நமக்கும் சம்பந்தம் உண்டா?

பார்ப்பனர்களை வைத்துக் கல்யாணம் நடத்தினால் தீக்குண்டம் வைப்பார்கள். அதனைச் சுற்றி ஏழு அடி எடுத்து வைக்க வேண்டும். அப்படி வைக்காவிட்டால் அந்தக் கல்யாணம் செல்லாது என்கிறார்கள். யார் எண்ணிப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்?

நெருப்பு என்பது பார்ப்பனர்கள் குளிர் நாடுகளில் இருந்து வந்ததால் குளிர் காய்வதற்கு அவர்களுக்குத் தேவைப்பட்டது. அவர்கள் நடத்தும் சடங்குகளில் நெருப்பை முக்கியப்படுத்துவார்கள். நமக்கும் இந்தச் சடங்களுக்கும் சம்பந்தமே கிடையாது.

இதுகுறித்து தமிழறிஞர் டாக்டர் இராசமாணிக்கனார் போன்றவர்கள் பல வரலாற்றுத் தகவல்களை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எழுதி இருக்கிறார்கள்.

தமிழர் திருமணத்தில் தாலி என்பதே கிடையாது என்று நிறுவியுள்ளார்.

தமிழர் தொன்மை வாய்ந்தவர் என்பதும், அவர்தம் தமிழ் மொழி வடமொழியிலிருந்து வேறுபட்டது என்பதும் ஆரியர்க்கு முற்பட்ட இந்தியருள் தமிழர் சிறந்தவர் என்பதும், பிறவும் மொழி ஆராய்ச்சியாலும், புதை பொருள்களாலும் இந்திய வரலாற்றிலும், பிறவற்றாலும் உறுதிப்பட்டுள்ள செய்திகள் ஆகும். எனவே தமிழர் மொழி வேறு, கலை வேறு, வாழ்க்கை முறை வேறு _ சுருங்கக் கூறின், தமிழர் ஆரியரின் (வடமொழியாளரின்) முற்றும் வேறுபட்டவர் என்பது ஆராய்ச்சியாற் போந்த உண்மை! பண்டைச் சங்க இலக்கியங்களைக் கொண்டு ஆராயினும், இவ்வுண்மை உணர்தல் கூடும். உண்மை இங்ஙனம் இருப்ப, இடைக் காலத்தே தமிழ் மரபுக்கு மாறான வாழ்க்கை முறை தமிழரிடை புகுந்துவிட்டது; தமிழர் பழக்க வழக்கங்கள் மாறின; மணமுறை மாறிவிட்டது; பிற சடங்குகள் பெருகின; இவற்றின் பயனாக இன்றுள்ள தமிழர்கள் பெயரளவில் தமிழர்களாக இருக்கின்றனரே அல்லாமல் மெய்த் தமிழராக -_ சங்ககாலத் தமிழர்தம் வழித் தோன்றல்களாக இல்லை என்பதை அறிய _ தமிழர் தலைகுனிய வேண்டுபவராக உளர்.

நம்மிடையே நடைபெறும் இக்காலத் திருமண முறை நமது பண்டைத் தமிழர் மரபுக்கு முற்றும் மாறானதாகக் கருதப்படும் என்று டாக்டர் இராசமாணிக்கனார் கூறியுள்ளார்.

பார்ப்பனரை அழைத்துத் திருமணத்தை நடத்தும் நிலை பிற்காலத்தில் வந்தது. தமிழர் வீட்டுத் திருமணத்தில் தமிழுக்கு இடமில்லை; சமஸ்கிருதம் குடிபுகுந்தது.

பொருள் புரியாமல் புரோகிதர்களும் மந்திரங்களை ஓதினார்கள்.

ஸோம : ப்ரதமோ விவிதே

கந்தர்வோ விவத உத்தர:

த்ருதியோ அக்னிஷ்ட பதி:

துரியிஸ்தே மநுஷ்யஜா

கீழாத்தூர் சீனிவாச ஆச்சார்யார் என்ற பார்ப்பனர் விவாஹ மந்திரார்த்த போதினி என்ற நூல் ஒன்றினை எழுதியுள்ளார். தி லிட்டில் ஃப்ளவர் கம்பெனி அதனை வெளியிட்டுள்ளது.

இந்த மந்திரத்துக்கு பொருள் என்ன? இந்த மணப் பெண்ணின் முதல் கணவன் ஸோமன்; இரண்டாவது கணவன் கந்தர்வன்; மூன்றாவது கணவன் அக்னி. நான்காவது கணவன்தான் மனித ஜாதியில் பிறந்தவன் என்று இந்த மந்திரத்தில் கூறப்படுகிறது. திருமணம் ஆவதற்கு முன் நான்கு பேருக்கு மனைவி என்பது தமிழர் வாழ்வு முறைக்கு உகந்ததுதானா?

நாவலர் சோமசுந்தர பாரதியார் கலந்துகொண்ட ஒரு திருமணத்தில் ஒரு பார்ப்பனப் புரோகிதர் கருமாதி மந்திரத்தைக் கல்யாண வீட்டில் ஓதிக்கொண்டு இருந்ததைக் கண்டுபிடித்து எதிர்த்துக் குரல் கொடுத்த நிலையும் உண்டு.

இந்த மணமக்களைப் பொறுத்தவரை சுயமரியாதைக் கொள்கையில் பூத்த பகுத்தறிவு மலர்கள். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் வாழக் கூடியவர்கள்.

முதலில் தங்கள் பெற்றோர்களுக்கு நன்றியும் பாசமும் காட்ட வேண்டும். முதல் வட்டம் என்பது உங்கள் பெற்றோர்களைப் பாதுகாப்பது பாசம் காட்டுவது _ அவர்களுக்கு நன்றியுடன் நடந்து கொள்வது; இரண்டாவது வட்டம் என்பது உங்களுக்கு யார் யாரெல்லாம் உதவி செய்தார்களோ, அவர்களுக் கெல்லாம் நன்றி காட்டுவது; மூன்றாவது வட்டம் _ தான் உண்டு, தன் குடும்பம் உண்டு, தன் பெண்டு, தன் சுற்றம் என்கிற கடுகு உள்ளத்தோடு நடந்து கொள்ளாமல் தொண்டறம் என்ற வட்டம் _ மற்றவர்களுக்குத் தொண்டு செய்வது, உதவி செய்வதாகும்.

சமுதாயம் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் சமுதாயத்துக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். மணமக்களை உறுதிமொழி கூறச்செய்து சுயமரியாதைத் திருமணத்தை தமிழர் தலைவர் நிறைவேற்றி வைத்தார். தாலி தவிர்க்கப்பட்டது.

இறுதியில் திருப்பத்துர் மு.ந.அன்பழகன் நன்றி கூறிட சிறப்பான மதிய விருந்துடன் விழா வெகு நேர்த்தியாக நடந்தேறியது. உற்றார், உறவினர்கள், கழகக் குடும்பத்தினர் பல்துறைகளைச் சேர்ந்த பெருமக்கள் ஏராளமானவர்கள் வருகை தந்திருந்தனர்.

http://www.viduthalai.com/20100607/news11.html

கொரட்டூர் வை. செயபாலன் _ செ. தேன்மொழி ஆகியோரின் மகன் செ. சந்திரகுமாருக்கும், இ. மகேசுவரன் _ நந்தினி ஆகியோரின் மகள் எம். சொப்னாவிற்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் கி. வீரமணி நடத்தி வைத்தார். உடன் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, லெப்டினன்ட் கர்னல் துரைராமன் (ஓய்வு) திருமதி மோகனா வீரமணி, கோ. செல்வமணி, தேசிங்குராஜன் உள்ளனர் (7.6.2010).

தமிழர் தலைவர் நடத்தி வைத்த மணவிழாக்கள்

திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார். வி. சந்திரசேகரன்_ சி. உமாமகேசுவரி ஆகியோரது வாழ்க்கை இணைநல ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார் (திருவாரூர், பூந்தோட்டம், 30.1.2010).

ஆ. பெரியார் அரசு _ ஈ. ஜோதி ஆகியோரது வாழ்க்கை இணைநல ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார். உடன் மதுரை மாநகர மேயர் தேன்மொழி கோபிநாதன், நன்மாறன் எம்.எல்.ஏ., மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர் (மதுரை, 31.1.2010).

மு. ரமேசு _ இ. சிவசங்கரி ஆகியோரது வாழ்க்கை இணைநல ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் உடன் உள்ளனர் (மதுரை, 31.1.2010).

ரா. சுதேஷ்பாபு _ ஸ்வீட்டி ஏஞ்சலின் பிளாரன்ஸ் ஆகியோரின் மண விழாவினை துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தி வைத்தார். தமிழர் தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர் (சென்னை, 1.02.2010).

பெரியாரும், பகவான் ரமண ரிஷியும்!

ஜனவரி 26, 2010

கடவுள், மதம், ஜாதி இல்லை என்ற பெரியார் மனிதநேயத்திற்காக பாடுபட்டார்
பகவான் ரமண ரிஷியோ தன் குடும்பத்திற்காக பாடுபட்டார்
சிவகாசி பொதுக்கூட்டத்தில் தமிழர்தலைவர் விளக்கம்

http://viduthalai.periyar.org.in/20100126/news12.html

சிவகாசி, ஜன.26_ கட-வுள், மதம், ஜாதி இல்லை என்று சொன்ன பெரி-யார் மனிதநேயத்-திற்காக பாடுபட்டார். மக்களை ஒன்றுபடுத்-தினார். கட-வுள் ரமண-ரிஷி மக்க-ளுக்கு எந்த பயனும் செய்யவில்லை. குடும்பத்-திற்கே பயன்-பட்டார் என்று திராவி-டர் கழக தலைவர், தமிழர் தலை-வர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவு-ரையாற்-றி-னார்.

தமிழர் தலைவர் கி.வீர-மணி அவர்கள் ஆற்றிய உரை-யின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு: தவறு செய்தால் தண்டனை உண்டு

தவறு செய்தால் தண்-டனை அனுபவிக்க வேண்-டும். இதுதான் வள்ளு-வரு-டைய வாழ்க்கை முறை. இதுதான் தமிழ-னுடைய வாழ்க்கை முறை தவறு செய்யாமல் வாழுங்-கள் என்று திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கிறது.

மீறி தவறு செய்து-விட்டால் அதற்குரிய தண்டனையை அனுப-விக்கத் தயாராகுங்கள். இதுதான் தமிழர்க-ளு-டைய வாழ்க்கை முறை. தவறு செய்யக்கூடாது என்பது தமிழர்களுடைய பண்பாட்டு முறை. தவறு செய்வது என்பது ஆரிய பண்பாட்டு படை யெடுப்-பினாலே வந்த ஒன்று. இவற்றை எல்லாம் நீங்-கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரியாரியக்கம் வெறுக்க வேண்டியது அல்ல. மாறாக ஒவ்வொரு-வரும் பங்கேற்க வேண்-டிய இயக்கம். பெரியார்-காமராஜர்

தமிழ்நாட்டிலே இந்த அளவுக்கு கல்வி வளர்ந்-திருக்கிறது என்றால் அதற்கு அடித்தள-மிட்-டவர் காமராஜர் அல்-லவா? தந்தை பெரியார் இல்லாவிட்டால் காம-ராஜர் ஆட்சிக்கு அவ்-வ-ளவு பெரிய பலம் வந்தி-ருக்குமா? எனவே எல்லா துறைகளிலும் அறிவியல் வாழ்வியல் இப்படி எல்-லாவற்றை-யும் சொல்லிக்-கொடுக்-கின்ற இயக்கம் இந்த இயக்கம்.

பெரியாருடைய இயக்-கத்தில் உள்ளவர்கள், பெரியாருடைய தொண்-டர்கள் அனாவசிய செலவு செய்ய மாட்-டார்களே.

இங்கே கூட அய்யா அவர்கள் ரூ.50 ஆயி-ரத்தை தாராளமாக நன்கொடை கொடுத்-தார். ஏன் கொடுத்தார்? அனாவசிய செலவு என்-பது கருப்பு சட்டைக்-கார-னுக்கு கிடையவே கிடை-யாது.

பெரியார் இயக்கத்தில் இல்லாமல் இருந்தி-ருந்-தால் கோவிலுக்கு செலவு செய்ய வேண்-டும். திரு-விழாவுக்கு செலவு செய்ய வேண்-டும். அதைவிட அறிவு ரொம்ப குறை-வாக ஆகியிருக்கும் சிந்-திக்–கின்ற மனப்பான்மையே வந்திருக்காது.

இங்கு நல்ல அறிவி-யல் மய்யம் வர வேண்-டும். பொது நலத் தொண்டு அளவுக்குப் பரவ வேண்-டும். தந்தை பெரியார் சொன்னார். ஒரு ரூபாய் சம்பாதித்தால் பத்து காசாவது மிச்சப்படுத்து. எனவே எங்களுடைய தோழர்கள் பெரி-யாரு-டைய கொள்கையை வாழ்க்கைமுறையாக ஏற்றுக்கொண்டிருக்கக் கூடியவர்கள் யாராக இருந்–தாலும் அவர்கள் சிக்கனக்காரர்கள். பெரியார் சிக்கனக்-காரர். சில பேர் பெரி-யாரை கஞ்சன் என்று நாக்கில் நரம்பில்லாமல் சொல்லு வார்கள். இதை-விட தவ றான புரிதல் வேறொன்-றும் கிடை-யாது.

பணத்தை விரும்பியதுண்டு

அய்யா அவர்கள் பணத்தை விரும்பினார். அதை அவரே சொன்-னதுண்டு. எனக்கு பணத்-தாசை ரொம்ப அதிகம் என்று ஆனால் அந்தப் பணம் எதற்காக என்பது-தான் முக்கியம். ஒரு காலணா கொடுத்தாலும் அய்யா வாங்கிக்-கொள்-வார்.

கையெழுத்துப் போட வேண்டும் என்று அய்யா அவர்களிடம் கேட்டால் நான்கணா தர வேண்-டும். பெரியார் திரைப்-படம் பார்த்திருப்பீர்கள். பெயர் வைக்க வேண்டும் என்று யாராவது கேட்-டால் நல்ல பெயர் வைக்க வேண்டுமா? சாதாரண பெயர் வைக்க வேண்-டுமா? என்று கேட்பார்.

சாதாரண பெயர் வைப்பதற்கு ஒரு ரூபாய். நல்ல பெயர் வைப்பதற்கு இரண்டு ரூபாய். நல்ல பெயர் காமராஜ் என்று பெயர் சூட்டுவார்.

எல்லா சொத்துக்களும் மக்களுக்கே

எனவே அய்யா அவர்-கள் சேர்த்து வைத்த சொத்-துகள் எல்லாம் அறக்கட்டளை-யாக்கப்-பட்டு மீண்டும் -பொது மக்களுக்கே பயன்-படும்-படி ஆக்கப்பட்டிருக்-கிறது.

அவரென்ன சொந்த பந்தங்களுக்கு கொடுத்-தாரா? அல்லது ஜாதிக்-காரர்களுக்கு ஏதாவது அமைப்பை உருவாக்கிக்-கொள்ள கொடுத்தாரா?

எல்லா சொத்து-களை-யும் மக்களுக்கே திருப்பி-க்கொடுத்த ஒரு மாபெ-ரும் தலைவர் உலக வர-லாற்-றிலேயே வேறு எங்-கும் காண முடியாது. (கைதட்-டல்). அவருடைய அறக்-கட்டளையில் அவ-ரு-டைய ஜாதிக்காரர்கள் கிடையாது. அவருடைய சொந்தக்காரர்கள் கிடை-யாது.. பெரியாருடைய சொந்-தம் என்பதிருக்-கிறதே, அது இரத்த பாசத்தைப் பொறுத்-ததல்ல; கொள்-கைப் பாசத்தைப் பொறுத்-தது.

கருப்புச்சட்டைக்-காரர்-க-ளாகிய நாங்கள் எல்-லாம் ஒரே குடும்பம். அய்யா போஸ் அவர்கள் இருக்கிறார்கள், காஞ்-சனா அம்மாள் அவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம்தான் நம் உறவுக்-காரர்கள்.

சாராய, கஞ்சா சாமியார்

மதுரை மாவட்டத்-தில் இருந்து திருவண்-ணாமலைக்கு ஓடிப் போ-னவர் ஒருவர். திரு-வண்-ணாமலை கிரிவலப் பாதையில் பார்த்தால் அவனவன் சாமியார், சாமியார் என்று சொல்-லு-கின்றான்.

நமது மாவட்ட தலை-வர் மணிக்கு வேண்டிய மாவட்டம் திருவண்-ணா-மலை மாவட்டம். அங்கு யார் சாமியாராக இப்-பொழுது இருக்கி-றார்கள் என்றால் சாரா-யம் குடிக்-கிறவர்கள் இருக்–கின்-றார்கள். சாராயம் கஞ்சா உள்ளே போனால்தான் சாமியே குறி சொல்கிறது. இதற்கு ஞாயிற்றுக் கிழ-மைகளில் அளவு கடந்த கூட்டம். கொழுத்த வரு-மானம். தொலைக்-காட்-சியில் இதைக்காட்டி-னார்கள். ஆயிரக்கணக்-கான பேர் வருகிறார்கள். இதைப் பார்த்து என்ன இவ்வளவு அசிங்-கமாக இருக்கிறது என்று கருதினோம். ஒரு வாரத்-திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நேரடிப் போராட்டம் நடத்துவோம். இதை அரசுக்குத் தெரியப்-படுத்-துகிறோம் என்று பத்தி-ரிகையில் எழுதி-னோம். பொதுக்கூட்டத்-தில் பேசினோம். திரு-வண்-ணா–மலை-யில் நடத்-திய கூட்-டத்திற்கு எல்லா கட்சிக்-காரர்களும் வந்-தார்கள்.

உடனே கலைஞர் நடவடிக்கை எடுத்தார்

அடுத்த நாள் காலை-யிலேயே முதலமைச்சர் கலைஞர் உத்தரவு போட்-டார். யார் அந்தச் சாமி-யார்? நேரே பிடித்து எங்கே வைக்க வேண்-டுமோ அங்கே வைத்தார் (கைதட்டல்)

அதன்பிறகு பார்த்தீர்-களேயானால் அருள் வாக்கெல்லாம் வர-வில்லை. அந்த திருவண்-ணா-மலையில் ஒரு ரமண ரிஷி எதற்கெடுத்தாலும் மகரிஷி, மகரிஷி, என்று சொல்லுவார்கள். படித்த-வன் மாதிரி ஒரு போலியை உலகத்தில் வேறு எங்குமே காண-முடி-யாது. இந்த வெறும் படிப்பு கோழையாக்-குவது மட்டுமல்ல ஒரு-வரை துணிச்சலாக சிந்-திக்க வைப்பதில்லை.

மதுரை மாவட்டம் திருச்சுழியை சேர்ந்தவர். சுழி எப்படியிருக்கிறது என்று பார்க்க வேண்டும். அருப்புக்கோட்டைக்கு பக்கத்திலே இருக்கின்ற ஊர். திருச்சுழியிலிருந்து அரைக்கால் டிரவு-சருடன் 50 வருடத்திற்கு முன்-னால் திருட்டு ரயில் ஏறி திரு-வண்ணா-ம-லைக்கு வந்த-வர் –தான் இந்த ரம-ணரிஷி.

இவர் கண்ட இடத்-தில் சுற்றித் திரிகின்றார். பசி வரும்பொழுது மயக்-கம் வருகின்றது. கீழே விழுந்-துவிடுகிறார். யாரோ பையன் கீழே விழுந்து விட்டானே என்று தூக்கி உட்கார வைத்தார்கள்.

கொஞ்சநேரம் ஆனது. மரத்தில் சாய்ந்து உட்-கார்ந்து பசியால் கண்ணை மூடிக்கொண்-டி-ருந்தார். அடுத்து துணி-யில்லை. கோவணம் கட்ட ஆரம்-பித்தார். சாதாரண வெங்-கட்ட ரமணன், வெங்கட் என்-பது போய் ரமணர் ஆனார். ரமணர் பிறகு ரிஷி ஆனார். ரமண ரிஷி ஆனபிறகு ஆசிரமம் ஏரா-ளமான சொத்துகள் எக்கச்சக்கமாக சேர்ந்து விட்டது.

நம்ம ஊரிலே மட்டும் முட்டாள் இருப்பான் என்பதல்ல. வெளிநாட்-டிலும் இருப்பான். ரம-ணரிஷிக்கு முதல் சீடர் பெருமாள்சாமி என்பவர். இவர் பாப்பனர் அல்லாத ஒருவர். ரமண ரிஷியை பெரிய ஆளாக ஆக்குவ-தற்கு உதவிகரமாக இருந்-தவர் இவர்.

நான் சொல்வது ஆதார பூர்வமான செய்தி. இது கற்பனை அல்ல. ரமணரி-ஷி-யினுடைய சீடர் ஒரு புத்-தகம் எழுதி-யிருக்-கின்-றார்.

ரமண ரிஷி சொத்து உறவினருக்கு

ரமண ரிஷி செல்-வாக்கு வந்தவுடனே, பணம் வந்தவுடனே தன்-னுடைய தாயாரை வர-வ-ழைத்தார். அடுத்தது தனது தம்பியை வரவ-ழைத்தார். சொத்து-களை தனது சகோதரர் மீது எழுதி வைத்தார், ரமண ரிஷி. உடனே பெருமாள் சாமியும், மற்ற சீடர்களும் சென்று சொத்துகளை உங்கள் உறவினருக்கு எழுதி வைக்கலாமா? நீங்-களோ சந்நியாசி ஆயிற்றே என்று கேட்டார்கள்.

நீங்கள் பகவான் ரம-ண-ரிஷி. நீங்களே பக-வான் ஆயிட்டீங்களே சொத்து-களை எப்படி உங்களு-டைய குடும்பத்தி-டம் கொடுக்க முடியும் என்று கேட்டார்கள். யாரிடம்? ரமணரிஷி-யிடம்.

ஆனால் ரமண ரிஷியோ அதைப் பற்றி கவலைப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. ரமணரிஷியை நீதிமன்றத்திற்கு அழைத்-தார்கள். அவர் வர மறுத்து விட்டார்.

ரமண ரிஷியின் மர்-மங்கள் என்ற தலைப்-பில் பெருமாள்சாமி என்ற சீடர் நீதிமன்றத்-தில் வழக்கு தொடர்ந்-தார். 1934, 1935ஆம் ஆண்டு-க-ளில் இந்த வழக்கு வந்தது.

இந்த செய்திகள் ஆங்கிலத்திலும், தமிழி-லும் நூலாகவே வந்திருக்-கிறது. ஆதார பூர்வமாக சொல்லுவது தான் எங்-களுக்கு வழக்கமே தவிர வேறு அல்ல. ரமணரிஷி-யின் வழக்கு இன்னமும் முடியவில்லை.

நம்முடைய நாட்டில் எந்தவொரு வழக்கும் அவ்வளவு எளிதாக முடிந்து விடாது. வெள்ளி விழா, பொன்விழாவைத் தாண்டித்தான் ஒவ்-வொரு வழக்கும் நடைபெற்று வருகிறது.

வழக்கு போட்ட ஆளும் செத்துப் போனார். வக்கீலும் செத்துப்-போ-னார். நீதிபதியும் செத்துப்-போனார். வழக்கு மட்-டும் உயிரோடு இருக்கி-றது. வழக்கு பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கும். ஒன்றுமில்லை.

காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம் போடு-வதா? அல்லது தென்-கலை நாமம் போடுவதா? என்று பிரச்சினை. யானைக்கு எந்த நாமம் போடுவது என்பதில் தகராறு. வெள்ளைக்-காரர்கள் காலத்தில் லண்டன் பிரிவி கவுன்-சில் வரை இந்த வழக்கு வந்தது.

வெள்ளைக்கார நீதிப-திகளிடம் வழக்கு வந்த பொழுது வடகலை என்றால் என்ன? தென்-கலை என்றால் என்ன? என்று கேட்டனர். இவர்-களுக்கு வாதாடியவனும் வெள்ளைக்காரன். வெள்-ளைக்கார- வழக்கறிஞர் நீதிபதிகளிடம் கஷ்டப்-பட்டு விளக்கினார். மைலார்டு அவர்களே! இது ஒன்றுமில்லை; ஒய்_-யுக்கும், யு_வுக்கும் இருக்-கின்ற சண்டை என்று சொன்னார்.

ஒய் (சீ) என்றால் பாதம் வைத்திருக்கும் யு (ஹி) என்றால் பாதமில்-லாத நாமம். எனவே இந்த இரண்டு நாமத்தில் எந்த நாமத்தை யானைக்கு வைப்பதில் என்பது பிரச்-சினை என்று சொன்-னார். காஞ்சிபுரம் கோவில் யானைக்கு ஒரு வாரம் இந்த நாமம் போடு; இன்னொரு வாரத்திற்கு இன்னொரு நாமம் போடு என்று சொன்-னார். யானையும் செத்து போய் விட்டது-. இன்-னமும் அந்த வழக்கு முடி-யவில்லை. அது போல ரமண ரிஷி வழக்கு இன்-னமும் நடந்து கொண்-டிருக்கிறது.

ரமணரிஷி தன்னு-டைய தம்பிக்கு எல்லா சொத்தையும் எழுதி விட்-டார். ரமண ரிஷியின் குடும்பம் ஆசிரமத்தில் வந்து அமர்ந்து விட்டது.

இப்பொழுது நினைத்-துப் பாருங்கள் கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் நீங்கள் கொடுத்த நான்கணா-வைக்கூட பத்திரமாக வைத்து_முடிச்சு போட்டு வைத்து அதை மீண்டும் பொது மக்களுக்கு பயன்-படும்படி அறக்கட்டளை-யாக்கி பல்கலைக் கழக-மாக, கல்லூரிகளாக மருத்துவமனைகளாக, பிரச்சார கேந்திரங்களாக ஆக்கியிருக்கின்றார்.

கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் மனிதநேயப் பணிகளை செய்தார். அதே நேரத்திலே கடவுள் அவ-தாரம் என்று சொன்ன ரமண ரிஷி, மக்கள் கொடுத்த அவ்வளவு தொகையையும் தனதாக்-கிக்-கொண்டார்.

இதில் யார் உயர்ந்த-வர்கள்? இன்றைக்கும் கடவுள் பெயரால் தானே மக்களிடையே சண்டை; இன்றைக்கும் மதத்தின் பெயரால் தானே மக்களி-டையே சண்டை.. எனவே கடவுள் மனி-தர்களைப் பிரித்திருக்-கிறது. மதம் மனிதர்-களைப் பிரித்திருக்-கிறது. ஜாதி மனிதர்க-ளைப் பிரித்-திருகிக்றது.

இவைகளை எல்லாம் எதிர்த்த பெரியார் மனி-தர்-களை நேசித்தார். மனிதர்-களை ஒற்றுமைப்-படுத்-தினார். சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்று தந்திருக்-கின்றார். அப்-படிப்-பட்ட தந்தை பெரி-யாரின் பிள்-ளைகள் ஆயி-ரம் காலத்-துப் பயிர்கள்.

அந்தப் பணிகள் சிறப்-பாக நடைபெற அய்யா போஸ் அவர்கள் வழங்-கிய நிலமிருக்கிறதே அது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்து சிவகாசியிலே ஒரு புதிய அத்தியாயம், திராவிடர் இயக்க வர-லாற்றிலே மட்டுமல்ல; மனிதநேய வரலாற்றில் பொறிக்கப்படும் என்று சொல்லி, வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

பெரிதா, சிறிதா என்பது முக்கியமல்ல. ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும். அதற்கு நீங்-கள் உதவ வேண்டும். பெரியார் எப்படி எல்-லோருக்கும் சொந்தமோ அது போல பெரியார் மய்யமும் மக்களுக்குச் சொந்தம் என்று கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்-றி-னார்.

தமிழ் உள்ள அளவும், தமிழன் உள்ள அளவும், தமிழ் நெறி உள்ள அளவும் தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை!

ஜனவரி 11, 2010
தமிழர்களுக்கு என்றுமே வீழ்ச்சி இல்லை : சங்கமம் துவக்க விழாவில் கருணாநிதி பேச்சு
ஜனவரி 11,2010,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=16075

Latest indian and world political news information

மத்தியில் நாட்டுப்புறம்: சென்னை : “”தமிழ் உள்ள அளவும், தமிழன் உள்ள அளவும், தமிழ் நெறி உள்ள அளவும் தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை,” என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார். சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா, நேற்று சென்னை தீவுத்திடலில் நடந்தது. இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து தமிழக முதல்வர் கருணாநிதி  பேசியதாவது: சென்னை தீவுத்திடல் நிரம்பி வழியும் அளவிற்கு சென்னை சங்கமம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சி நான்கு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் துவங்கப்பட்டு, மாநகரத்தின் வீதிகளில் எல்லாம் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் நாட்டுப்புறம் என்று ஒன்று  இருக்கிறது. அதற்கென்று நாட்டுப்புறக் கலைகள் மற்றும் இசைத் துறையில் பாடல்கள் என்றெல்லாம் இருக்கின்றனவே; அவற்றை மக்களோடு பரிமாறிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வோடு இந்த சங்கமம், தமிழ் மையத்தின் சார்பில் துவங்கப்பட்டு பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று வருகிறது.

சங்கமத்தில் சந்தேகம் ஏற்பட்டது: இதைத் தொடங்கியவர்களும், தொடங்கி வைத்த நானும் எதிர்பாராத அளவிற்கு இந்த சங்கம் நிகழ்ச்சி வெற்றி முரசு கொட்டி வருகிறது.  இம்மேடையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள், எல்லாரும் வியந்து போற்றுகின்ற அளவிற்கு அவ்வளவு அருமையாக அரிய பல கருத்துக்களை எடுத்துக் கூறுகின்ற நிலையில் இங்கே நடத்திக் காட்டப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியல் இடம் பெற்ற சில காட்சிகளில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. சந்தேகம் ஏற்பட்ட அடுத்த வினாடியில், அந்த சந்தேகத்தை நீக்குகின்ற காட்சிகள் இந்த அரங்கத்திலே வந்தன. சொல்லப்போனால் சங்கமம் என்பதனுடைய நோக்கம், “பிறப்பொக்கும்’ என்பதை நாட்டிலே பரவச் செய்திடல் வேண்டும். சமுதாயத்தில் வேரூன்றச் செய்ய வேண்டும் என்பது தான்.
பிறப்பு ஒக்கும், பிறப்பொக்கும், “யாதும் ஊரே யாவரும் கேளிர்’:  இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு சென்னையில் நடந்த போது, “யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. கோவையில் நடக்கவுள்ள செம்மொழித் தமிழ் மாநாட்டில், “பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்’ என்னும் கருத்தாக்கத்தை ஒட்டியே சென்னை சங்கமம் நிகழ்ச்சி, “பிறப்பொக்கும்’ என்ற வார்த்தை, பிறப்பு ஒக்கும் என்ற இரண்டு சொற்களைக் கொண்ட இந்த வார்த்தை, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாசகக் கோவையில் இருந்து எடுக்கப்பட்டது. நாம் பிரிந்து கிடக்கக்கூடாது; நாம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்; ஒற்றுமையாக வாழ வேண்டும். நாம் நம் தமிழ் மொழியால் ஒன்று சேர வேண்டும். நாம் நம்முடைய தமிழைக் காப்பாற்ற வேண்டும். நம்முடைய மொழி உணர்வை தொடர்ந்து இங்கே நிலைநாட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற இத்தனை வாசகங்களும் பொருந்தியாக சங்கமம் கலை விழாவிலே, “பிறப்பொக்கும்’ என்ற சுருக்கமான சொற்றொடரை அமைத்துள்ளனர்.

2,500 கலைஞர்கள்! தமிழ் உள்ள அளவும், தமிழன் உள்ள அளவும், தமிழ் நெறி உள்ள அளவும் தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை. சென்னை சங்கமம் நிகழ்ச்சி, சென்னை மாநகரில் மட்டுமல்ல; தமிழகம் முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்று சென்னை சங்கமம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அவர்களின் செயலை பாராட்டுகிறேன். இவ்வாறு கருணாநிதி பேசினார். விழா நடன நிகழ்ச்சிகளை பிரசன்னா ராமசாமி சைலஜா குழுவினர் வடிவமைத்திருந்தனர். விழாவில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன், கனிமொழி எம்.பி., தமிழக சுற்றுலாத் துறை செயலர் இறையன்பு,  தமிழ் மையத்தைச் சேர்ந்த ஜெகத் கஸ்பர் உட்பட பலர் கலந்து கொண்டனர். சென்னையில் வரும் 16ம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சியில் 2,500 கலைஞர்கள் மூலம் 4,700 நிகழ்ச்சிகள் நடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 16ம் தேதி நிறைவு விழா, சென்னை எலியட்ஸ் கடற்கரையில் நடக்கிறது.

இதென்ன புதிய “கன்டிஷன்” போடுகிறார்?
தமிழ் உள்ள அளவும், தமிழன் உள்ள அளவும், தமிழ் நெறி உள்ள அளவும் தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை
தமிழன் இருக்கிறானோ இல்லையோ தமிழ் இருக்கிறது!
இவர்களுடைய அடிவருடிகள் எல்லாம் சேர்ந்து கொண்டு இவரையே தமிழ், முத்தமிழ், தமிழின் உயிரே, உயிரின் நிலையே, …………………………என்றெல்லாம் பேசியதை ஞாபகம் காட்டுகிறாரா?

தமிழ் நெறி என்று இவர் சொல்வது என்ன என்று தெரியவில்லை!
எது தமிழ்நெறி?
கருணாநிதி காட்டுவதா?
கனிமொழி காட்டுவதா?
ஜகத் காஸ்பர் காட்டுவதா?
கலைஞர் காட்டுவதா?
தமிழர்களுக்கு வீழ்ச்சி என்று ஏன் இவர் கவலைப் படவேண்டும்?
தமிழ் வாழும்
தமிழர்கள் வாழ்வார்கள்
அதற்கு இந்த போலிகள் தேவையில்லை.

இன்றைய தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பிரச்சினைகளே இவரால் தான் உருவாக்கப் பட்டுள்ளது!

திராவிட பொய்களும், திரிபுகளும், பிரச்சாரங்களும் -III

திசெம்பர் 31, 2009

சோனியா என்றால் செப்பேடு, பிஜேபி என்றால் கூப்பாடு: திராவிட பொய்களும், திரிபுகளும், பிரச்சாரங்களும் -III

கருணாநிதி சொன்னதாக இன்றைய பத்திரிக்கைகள் ஒரே செய்தியை மூன்றுவிதமாகக் காண்கிறேன்: “இது தொடர்பாக, காங் கிரஸ் தலைவர் சோனியா, எனக்கு எழுதிய கடிதத் தில், ” தமிழ் செம்மொழியாக அறிவித்த சாதனைக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் காரணம் என்றாலும், தி.மு.க.,தான் இதற்கு முக்கிய காரணம்’ என தெரிவித்திருந்தார். இதற்கு பிறகு, திருச்சி தி.மு.க.,மாநாட்டில், சோனியா முன்னிலையில் நான் பேசும்போது, “தமிழ் செம்மொழியானது ஒரு வரலாறு என்றால், அந்த வரலாற்றுப் பெருமையை எனக்கும் அளிக்கும் வகையில், நீங்கள் எனக்கு எழுதிய கடிதம் பொன்னெழுத் துக்களால் பொறிக்கப் பட்டு, என் நினைவகத்தில் இருக்கவேண்டிய ஒன்று’ என்று குறிப்பிட்டேன். தமிழைச் செம்மொழியாக அறிவித்திட வேண்டுமென்ற, லட்சியத்தை நிறைவேற்றிட, தொய்வில் லாத நடவடிக்கைகளை தி.மு.க., மேற்கொண் டுள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.


ÙN•ÙUÖ³ ‘WLP]•: ÚNÖÂVÖ LÖ‹‡ Y³LÖy|R¦¨•, PÖePŸ UÁÚUÖLÁpj RÛXÛU›¨• CVjf Y£• U†‡›¨·[ IefV ˜¼ÚTÖehe iyP‚ AWr, 12.10.2004 AÁ¿, R–ÛZo ÙN•ÙUÖ³ ÙV] ‘WLP]• ÙNš‰ A½«eÛL JÁÛ\ ÙY¸›yP‰. C‹R A½«eÛL ÙY¸VÖ]‰•, SÖÁ GªY[° hŠLX• ÙLցz£ÚTÁ – G]‰ E·[• G‹R A[°eh Uf²opVÖ¥ ‰·¸›£eh• – G]‰ U]‡¥ GªY[° ÙT£–R• ˜Û[†‡£eh•; GÁTÛRÙV¥XÖ• EPÁ‘\ÚT, GÁÛ] ˜µ‰• A½‹R  ŒoNV• EQŸYÖš.

‘Á]Ÿ, 5.3.2006 AÁ¿ ‡£op›ÚX SÛPÙT¼\ ‡.˜.L. UÖSÖyz¥ ÚNÖÂVÖLÖ‹‡ ˜ÁÂÛX›¥ SÖÁ EÛWVÖ¼½V ÚTÖ‰RÖÁ GÁÄ· ÙT£e ÙL|†R EQŸ°L· h¼\ÖX†‰ A£« ÙV]e ÙLÖyz]. A‹R EQŸ°LÛ[ CRÛ] Gµ‰•ÚTÖ‰ —|• SÖÁ ÙT¼¿, Tzeh•ÚTÖ‰ • ÙT\ÚY|• GÁTR¼LÖL, EÛW›Á J£ Th‡ÛV ‘ÁY£UÖ¿ YZjf›£efÚ\Á:-

GÁÄÛPV L¥XÛ\›¥…

‘Á]Ÿ, 5.3.2006 AÁ¿ ‡£op›ÚX SÛPÙT¼\ ‡.˜.L. UÖSÖyz¥ ÚNÖÂVÖLÖ‹‡ ˜ÁÂÛX›¥ SÖÁ EÛWVÖ¼½V ÚTÖ‰RÖÁ GÁÄ· ÙT£e ÙL|†R EQŸ°L· h¼\ÖX†‰ A£« ÙV]e ÙLÖyz]. A‹R EQŸ°LÛ[ CRÛ] Gµ‰•ÚTÖ‰ —|• SÖÁ ÙT¼¿, Tzeh•ÚTÖ‰ • ÙT\ÚY|• GÁTR¼LÖL, EÛW›Á J£ Th‡ÛV ‘ÁY£UÖ¿ YZjf›£efÚ\Á:-SÖÁ EjLºeho ÙNÖ¥fÚ\Á. C‰ J£ LzRUÖL A¥X. LÖXÖ LÖX†‡¼h•, CÁÄ• \ց|LÖX•, C£\ց| LÖX†‡¼h• ‘\h GÁ ÙLÖ·º ÚTWÁ G|†‰ Tz†‰ S•˜ÛPV RÖ†RÖ LyzeLÖ†R ÙNÚT| C‰ GÁ¿ TÖWÖy|fÁ\ A[«¼h BL ÚY|• GÁ\ BŸY• E·[YÁ SÖÁ.

……………………………A‹R YWXÖ¼Û\ – ÙT£ÛUÛV G]eh A¸eh• YÛL›¥ jL· G]eh Gµ‡V A‹Re LzR• ÙTÖÁÙ]µ†‰eL[Ö¥ ÙTÖ½eLTy|, ÛYWjL· T‡eL Ty|, GÁÄÛPV L¥XÛ\›ÚX G‡ŸLÖX† ‡¥ UÖyPTP ÚYzV JÁ¿. GÁÄÛPV ŒÛ]YL†‡ÚX C£eL ÚYzV JÁ¿ GÁfÁ\ A‹R ”¡ÚTÖ| jL· Gµ‡V A‹Re LzR†‡¼LÖL GÁÄÛPV SÁ½ ÛV•, YQeL†ÛR•, TÖWÖy|eLÛ[•, YÖ²†‰eLÛ[• EjLºeh† ÙR¡«†‰e ÙLÖ·fÁÚ\Á”.

கருணாநிதி மதிப்பை, மரியாதையை இழக்கிறார்: தமிழ் மீது எனக்கும் அபிமானம்-காதல் தான், கருணாநிதிமீது மதிப்பு-மரியாதைதான். முன்பு தாத்தா என்றால் எங்கள் “வாத்தியார்” என்ற எம்ஜியார்தான். பிறகு அந்த தாத்தா-இடத்தை கலைஞர் கருணாநிதி பிடித்தார், வயதினால், மரியாதையால். ஆனால் தொடர்ச்சியாக அவர் பேசும் பேச்சுகள், நடவைக்கைகள் அவர் மீது வெறுப்புக் கொள்ளச் செய்கின்றன. ஏன் அப்படி இந்த வயதிலும் இவ்வாறு பேசுகிறார், நடந்து கொள்கிறார், மரியாதை இழக்கிறார் என்று பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. 1960களிலிருந்து அவரையும், அவரது பேச்சுகள், எழுத்துகளைக் கூர்ந்து கவனிக்கும் அவரது போக்கு மோசமாகி வருகின்றது. வயதானால் பக்குவம், விவேகம், பாரபட்சற்றத்தன்மை முதலியன வளரும் என்பார்கள். ஆனால் கருணாநிதிற்கு வயதாலும் பொய் சொல்லும் புத்தி போகவில்லை. திராவிட போலித்தனம் நிர்வாணமாக அலையத் திரிய ஆரம்பித்துவிட்டது!

தமிழுக்காகப் பொய் சொல்லி வாழவேண்டிய நிலை தமிழுக்கு தமிழனுக்குத் தேவையில்லை: தமிழுக்கு கருணாநிதி செய்த தொண்டினை தமிழர்கள் நிச்சயம் ஞாபகம் வைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த மதிப்பையும்-மரியாதையையும் இப்படிக் கெடுத்துக் கொள்ளவேண்டாம். சரித்திர ரீதியில் பல உண்மைகள் உள்ளன. அவற்றை மறந்து-மறைத்து-மறுத்து திராவிட போர்வையில், இன்றைய “பகுத்தறிவு”வாதிகள், ஒரு புதிய மூட நம்பிக்கையை வளர்த்து, அதிலேயே மூழ்கித் திளைக்கின்றனர். பட்டமும், பதவியும் அதற்கும் மேலாக லட்சங்கள்-கோடிகள் கிடைக்கின்றன என்று புதிதாக ஒரு கூட்டம் “கருணாநிதி” என்ற “தமிழ் வல்லுனரை” கெடுத்து, சீரழிக்கின்றதோ, என்னவோ? அதற்கு அறிந்தே கருணாநிதி துணைபோனால் சரித்திரம் அவரை மன்னிக்காது. ஏற்கெனவே தமிழ்-தமிழ் என்று தம்பட்டம் அடித்தே, தமிழுக்கு நிறைய கெடுதல் செய்துவிட்டார் என்று முதியவர்-படித்தவர்களின் மனங்களில் வருத்தம் உள்ளது.

தமிழுக்கு அரசியல் கருணாநிதி வேண்டாம்: அரசியல் கருணாநிதியை என்னைப் போன்ற முந்தைய திமுக அபிமானிகளாக்கு அதிகமாகவேத் தெரியும். அதையெல்லாம் சொன்னால் இருக்கும் மரியாதையும் இருக்காது. பெரியார், அண்ணா, போன்ற எல்லோருக்கும் அத்தகைய மரியாதையற்ற மறுமக்கம் உள்ளது. ஆனால், எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு என்னைப் போன்ற பழசுகள், பெரிசுகள், கிழடுகள் அமைதிக் காக்கின்றன. ஏனெனில் ராஜா / அரசன் கடவுளாவதால், அவனைப் பற்றி குறை சொல்வதில்லை. ஆனால் அக்கால ராஜாக்கள் / அரசர்கள் நீதி-தர்மம் படி ஆட்சி செய்வார்கள். தவறு செய்தால் தனது மகனையே தேர்க்காலில் வைத்து கொல்வார்கள், தனது கையை வெட்டிக் கொள்வார்கள். ஆனால் இன்று நிலையோ வேறு மாதிரியாக உள்ளது. இனிமேல் தமிழுக்கு உழைப்பேன் என்று சொல்லிக் கொண்டு இப்படி பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடவேண்டாம். ஆகவே இந்த வயதில் எங்களுக்கு சாணக்கிய கருணாநிதி வேண்டாம்; தமிழுக்கு அரசியல் கருணாநிதி வேண்டாம்.

பழைய ஏடுகள் பேசுவது என்ன? இந்திரா காந்தியைக் கொலை செய்ய முயன்று[1], ஒரே வாரத்தில் பல்டி அடித்து “நேருவின் மகளே வருக, நல்லாட்சித் தருக” என்று பேசியவரிடம் என்னத்தை எதிர்பார்க்க முடியும்? இந்திரா காந்திக்கு எதிராகக் கறுப்புக் கொடி பிடித்தது, கற்களை எறிந்து இந்திரா காந்தியை கொல்ல நினைத்தது, …………………………..முதலியவை இப்பொழுது ஞாபகம் இல்லை. அப்பொழுது இந்திரா காந்தியைக் காப்பாற்றப்போய் காயமடைந்த பழ.நெடுமாறனை, எட்டப்பன், ஆஞ்சநேயன், துரோகி என்று அர்ச்சித்த தமிழையும் மறந்தது போலும்! பாரதிய ஜனதா கட்சியினரைப் பண்டாரங்கள், பரதேசிகள் எனத் திட்டிவிட்டு “அரசியலில் தீண்டாமை இல்லை” என்று சொல்லிக்கொண்டு அவர்களோடு கை கோர்த்து மாறனுக்கு பதவி வாங்கிக் கொடுத்தபோது தப்பேடாக இருந்தது!

தாத்தா கட்டிக்காத்த செப்பேடு[2]: இன்று எழுதுகிறார், “அஞ்சாதீர்கள்” என்று சொல்லும் இன்றைய மத்திய ஆட்சி தமிழை செம்மொழி என்று அறிவித்திருக்கிறது. சோனியா காந்தி நவம்பர் 8ம்தேதி 2009 எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘தமிழை செம்மொழியாக ஆக்குவதற்கு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து அது நிறைவேறி விட்டது. இந்தச் சாதனைக்கு குறிப்பாகவும் சிறப்பாகவும் நீங்கள்தான் காரணம்’ என்று குறிப்பிட்டார். இது ஒரு கடிதமாக அல்ல. காலா காலத்திற்கும், இன்னும் நூறாண்டுகாலம், இருநூறாண்டு காலத்திற்கும் பிறகு என் கொள்ளுப் பேரன் எடுத்துப் படித்து நம்முடைய தாத்தா கட்டிக்காத்த செப்பேடு இது என்று பாராட்டும் அளவிற்கு ஆக வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன் நான். “தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது பற்றி சோனியாகாந்தி எனக்கு எழுதிய கடிதம் காலத்தால் அழிக்க முடியாத செப்பேடு” என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்[3]. இது தொடர்பாக, காங் கிரஸ் தலைவர் சோனியா, எனக்கு எழுதிய கடிதத் தில், ” தமிழ் செம்மொழியாக அறிவித்த சாதனைக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் காரணம் என்றாலும், தி.மு.க.,தான் இதற்கு முக்கிய காரணம்’ என தெரிவித்திருந்தார். இதற்கு பிறகு, திருச்சி தி.மு.க.,மாநாட்டில், சோனியா முன்னிலையில் நான் பேசும்போது, “தமிழ் செம்மொழியானது ஒரு வரலாறு என்றால், அந்த வரலாற்றுப் பெருமையை எனக்கும் அளிக்கும் வகையில், நீங்கள் எனக்கு எழுதிய கடிதம் பொன்னெழுத் துக்களால் பொறிக்கப் பட்டு, என் நினைவகத்தில் இருக்கவேண்டிய ஒன்று’ என்று குறிப்பிட்டேன். தமிழைச் செம்மொழியாக அறிவித்திட வேண்டுமென்ற, லட்சியத்தை நிறைவேற்றிட, தொய்வில் லாத நடவடிக்கைகளை தி.மு.க., மேற்கொண் டுள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்[4].


[1] Karunanidhi & seven Ors vs Indira Priyadarshini Nehru Gandhi – AIR 1967 SC could be seen for details for the attempted murderous act committed on Indira Gandhi at Madurai by the DMK leaders.

[2] http://www.dinakaran.com/arasialdetail.aspx?id=3130

[3] http://www.dailythanthi.com/article.asp?NewsID=537323&disdate=12/31/2009

[4] http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=15895

கருணாநிதிக்கு ‘தமிழ்த் தலைமகன்’ விருது!

திசெம்பர் 19, 2009
கருணாநிதிக்கு ‘தமிழ்த் தலைமகன்’ விருது நாளை வழ‌ங்க‌ப்படு‌கிறது
செ‌ன்னை, சனி, 19 டிசம்பர் 2009( 16:28 IST )

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0912/19/1091219062_1.htm

கருணாநிதிக்கு ‘தமிழ்த் தலைமகன்’ விருது! கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் சார்பில் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதிக்கு ‘தமிழ்த் தலைமகன்’ விருது நாளை வழங்கப்படு‌‌கிறது. தமிழ்நாட்டுக்கு வெளியே முதன் முதலில் அமைக்கப்பட்ட மூத்த தமிழ்ச் சங்கமாகிய கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் 70 ஆண்டுகளாக கொல்கத்தாவில் இயங்கி வருகிறது. இந்த சங்கம், இந்த ஆண்டு முதலமைச்சர் கருணாநிதிக்கு ‘தமிழ்த் தலைமகன்” என்ற சிறப்பு விருதளிக்க தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் அளிக்கிறது: இது குறித்து அ‌‌ச்ச‌ங்க‌ம் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், தமிழுக்கு செம்மொழி சீர்பெற்றுத்தந்த பெருந்தகையும், உலகத்தமிழ் செம்மொழி மாநாடு காணும் வரலாற்று பெருமை வாய்ந்தவரும், தமிழ் இன மொழி மேம்பாட்டுக்காக தம் வயதில் எழுபது ஆண்டுகளை அள்ளித் தந்தவரும், தமிழகத்தின் முதலமைச்சராய் ஐந்து முறை அரசாள்பவரும், தமிழில் தலைசிறந்த உலக படைப்பாளியுமான முத்தமிழறிஞர் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌க்கு மூத்த தமிழ் சங்கமாகிய கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் தமிழ்த் தலைமகன் என்ற சிறப்பு விருதளித்து மகிழ்கிறது” என்று தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளது.

நாளைக்கு விழா: இ‌ந்த விருது வழங்கும் விழா, நாளை மாலை 6 மணிக்கு சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுகிறது. விழாவுக்கு தொழில் அதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் தலைமை வகிக்கிறார். தமிழ் சங்கத்தின் அமைப்பாளர்களும், செயற்குழு உறுப்பினர்களும் ஒன்று கூடி முதலமைச்சருக்கு விருது வழங்குகிறார்கள். ஆலோசகர் ஞானசேகரன் வாழ்த்து மடல் வாசித்து அளிக்கிறார். இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், முனைவர் அவ்வை நடராசன், நடிகர் சிவகுமார், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். கொல்கத்தா தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகர் மகாலிங்கம் வரவேற்புரை ஆற்றுகிறார். செயலர் ஸ்ரீதரன் நன்றியுரை ஆற்றுகிறார். பேராசிரியை பர்வீன் சுல்தானா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். நிறைவாக முதலமைச்சர் கருணாநிதி ஏற்புரை வழங்குகிறார்.

தமிழுக்கு உறவுமுறை கொண்டாடும் வழிகள்: ஏற்கெனவே கருணாநிதியை  தமிழுக்கு-தமிழுடன் ஒப்புமைப் படுத்தி விட்டாகி றது! தமிழே, தமிழின் உயிரே, உயிரின் நிலையே…….., வாழும் தமிழே……….என்றெல்லாம் குகாகிவிட்டது!

பிறகெப்படி கருணாநிதி  ‘தமிழ்த் தலைமகன்’ ஆகிறார் என்று பார்க்கவேண்டும்!

இவரே தமிழாகி, தமிழின் தலைமகனாவது எவ்வாறு?

இதென்ன புதிய புராணம் படைக்கின்றனரா?

முன்பு ஆதித்தனார் “தமிழர் தந்தை” என்று புகழ்ந்தபோது, சில கேள்விகள் எழுந்தன!

இப்பொழுது கருணாநிதி  ‘தமிழ்த் தலைமகன்’ ஆகிறார் என்றால், மற்ற மகன்கள் யார், தமிழ் ஆணா, பெண்ணா, ஆணென்றாலும்-பெண்ணென்றாலும், யார் தாய்-அவ்வாறே யார் தந்தை?

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில், கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழக முதலமைச்சர் கலைஞருக்கு “தமிழ்த் தலைமகன்’’ விருது மடலை கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகர் த. ஞானசேகரன் வாசித்து வழங்கினார். உடன் அமைச்சர் பரிதி இளம்வழுதி, அய்ம்பெருங் குழு, எண்பேராயம் துணைத் தலைவர் முனைவர் வா.செ. குழந்தைசாமி, டாக்டர் அவ்வை நடராசன், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் சிவகுமார், கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் இரா. சிறீதரன், ஆலோசகர் எஸ். மகாலிங்கம் ஆகியோர் உள்ளனர் (20.12.2009)..

ஆத்திகத்தைத் திருடும் நாத்திகம்!

திசெம்பர் 16, 2009

ஆத்திகத்தைத் திருடும் நாத்திகம்!

“பகுத்தறிவு” என்ற வார்த்தையினை உபயோகித்துவிட்டால், எல்லாமே தமக்குத் தான் சொந்தம் என்ற அஹங்கார-ஆணவத்திமிர் சிததாந்தத்தில் செயல்படுகின்றனர் திராவிட நாத்திகர், இந்து-விரோதவாதிகள்!

உண்மையில் அத்தகைய மனப்பாங்குதான் “பாஸிஸம்” என்பது, ஆனால் அவர்கள் வசதியாக மற்றவர்களைக் குறிப்பாக தமது சித்தாந்தத்தை விமர்சிக்கும் அல்லது அவர்களது போலித்தனத்தை எடுத்துக் காட்டுபவர்களின் மீது அந்த வார்த்தையை உபயோகிப்பர்!

தன்னம்பிக்கைக்குத்-தூண்டா விளக்கு!

http://viduthalai.periyar.org.in/20091215/news13.html

‘‘மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்’’ போன்ற நூல்களை மதவாதிகளே எழுதுவதிலிருந்து கடவுள் நம்பிக்கை யோடு, தனி மனித மனப் பயிற்சியும் அவசியம் என்று அவர்களே நம்புவதாகத் தெரிகிறது. அப்படியெனில் பகுத்தறிவுவாதிகளும் தங்கள் கண்ணோட்டத் திலிருந்து இத்தகைய நூல்களை எழுதுவது நல்லது. தி.க.தலைவர் வீரமணி அவர்கள் இந்த வகையில் ஒரு நல்ல தொடக்கத்தைத் தந்திருக்கிறார். வாழ்வியல் சிந்தனைகள் என்கிற அவரின் நூல், வாழ்வை எதிர்கொள்ளும் மனத் தெம்பையும் உளவியல் நுணுக்கங்களையும் கூறுகிறது.’’  (‘செம்மலர்’, ஏப்ரல் 2004)

நாத்திகர்கள் மனித சமூகத்திற்கு எத்தகைய நல் வழிகளைக் காட்டுகின்றனர், – உலகில் ஒவ்வொரு நாளும் பூக்கும் பல்வேறு மலர்களின் மணங்களைக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம். கடவுளை மற_மனிதனை நினை என்றார் தந்தை பெரியார். மனிதனை நினைக்கும்போது, அவன் மகத்தான-வனாக உருவாவதற்குத் தேவையான தன்னம்பிக்கை, பகுத்தறிவு இவற்றுடன் நாட்டில் நிறைந்து நிற்கும் தகவல்கள், பொருள்களும் அவன் கவனத்திற்குக் கொண்டு வரப்படுவது அவசியமாகும். பல்லாயிரக்கணக்கான மக்கள் தெரிந்து கொள்ள, ஏன் கடைப்பிடிக்க, ஒரு மனிதன் பல நூல்களைப் படிக்க வேண்டி-யிருக்கிறது; படித்தவற்றை அசை போட்டு சாறு பிழிந்து கொடுக்க வேண்டியுள்ளது. அந்த மகத்தான தொண்டற அறிவுப் பணியைத்தான் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் செய்திருக்கிறார்.

‘செம்மலர்’ சொல்லுவது போல பகுத்தறிவுவாதிகளின் பணிகளில் இதுவும் முக்கியமான கூறே! வாழ்வியல் சிந்தனைகள் வரிசையில் இதுவரை அய்ந்து தொகுதிகள் வெளிவந்துள்ளன. மிகப் பெரிய அளவில் இவ்வரிசைக்கு வரவேற்பு கிடைத்தது. எல்லைகளைத் தாண்டி தமிழ் படிக்கத் தெரிந்த பன்னாட்டு மக்கள் மத்தியில் பரிமளம் வீசுகிறது. இப்பொழுது ஆறாவது தொகுப்பு தந்தை பெரியார் நினைவு நாளில் வெளிவர இருக்கிறது. அதையும் சேர்த்தால் இவ்வரிசையில் 500 கட்டுரைகள் அணிசெய்கின்றன.

இந்த ஆறாவது தொகுதியைப் பொறுத்தவரை இதன் உள்ளடக்கம் இவ்வாறு அமையும்.

மனிதம்_2;  உழைப்பு-_4; திறமை_1; தொண்டறம்_5; தன்னம்பிக்கை_9; தலைமைத் தத்துவம்_-1; சமூக சீர்திருத்தம்_1; சிந்தனைக்கு_10; மூடநம்பிக்கை_-1; வாசிப்பு_5; சுற்றுச்சூழல்_1; தொலைக்காட்சி_1; பண்பாடு_-6; சுயநலம்_1; குழந்தைகள்_4; பெற்றோர்_3; முதுமை_1; ஆசிரியர்_2; உடல்நலம்_13; உணவு முறை_-3; அண்ணா (மனிதநேயம்)_-1

திராவிட இயக்க எழுத்தாளர்களில் இத்-திசையில் தன் எழுதுகோலை ஓடவிட்டவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களே! பெரியார் என்றாலே கடவுள் மறுப்பாளர் என்ற ஓர் எண்ணத்தில் மருண்டோடுபவர்கள் இந்த வாழ்வியல் சிந்தனைகள் மூலம் நெருங்கி வருகிறார்கள் என்பதுதான் உண்மை.

‘ஆனந்தவிகடன்’ மதிப்புரையில் கூறியிருந்தது போல மூடநம்பிக்கைகளை எதிர்த்து எழுதியவர் இப்பொழுது தன்னம்பிக்கை பற்றியும் எழுதுகிறார் என்பது கவனிக்கத் தக்கதாகும். நமது கருத்துக்குத் தொடர்பேயில்லாத வாசகர் ஒருவர் எழுதியுள்ளார். ‘‘நான் பெரியாரைப் பார்த்ததில்லை. இந்தக் கொள்கை-யைப் பற்றி நிறைய விடுதலை மூலமாகப் படிக்கிறேன். இப்பொழுது தமிழர் தலைவர் அய்யா எழுதிவரும் வாழ்வியல் சிந்தனை என்ற பகுதி நமக்காகவே எழுதப்-பட்டதாகும். பாதிப்பு இல்லாதவர் யாருமே இருக்க முடியாது. நமக்காகவே எழுதப்பட்டது போல் இருக்கும். விடுதலை நாளிதழைப் படித்தால் நிறைய கருத்துகள் தெரிந்து கொள்ள முடிகிறது’’- _ விஜயா.

விடுதலைக்குள் நுழைய தந்தை பெரியார் கொள்-கைக்குள் கால் பதிக்க தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனை நுழைவு வாயிலாக இருந்து வருகிறது. குழந்தை வளர்ப்புக்குத் தாய்ப்பாலையும், முதுமைக்கு ஊன்றுகோலையும் தரும் கட்டுரைகள் உண்டு.  குழந்தைகள் நலம், குடும்ப நலம், பெண்ணுரிமை, பொது சமையற்கூடம், ஆண்களுக்கு நிகராக பெண்-களுக்கும் அனைத்து உரிமைகள், பெண்கள் உடையில் மாற்றம், பெண்கள் கிராப் வெட்டிக் கொள்ளுதல் என்ற தந்தை பெரியார் தெரிவித்த கருத்துகள் வாழ்வியல் சிந்தனையின் தடத்தில் பதிக்கப்பட்ட மைல் கற்கள். அந்த அடிப்படையின் விரிவாக்கச் சிந்தனைகளே இவை! கால ஓட்டம், அறிவியல் வளர்ச்சி, ஊடகப் புரட்சி இவற்றையெல்லாம் வயப்படுத்தி, உள்வாங்கி, நாத்திகச் சிந்தனையின் செழுமையை முப்போகமாக விளைவித்துத் தந்துள்ளார் கருத்துக் கனலாம் விடுதலை ஆசிரியர்.

பகவானை சரணடைக!- பரம மண்டலம் போகலாம்;- சடங்குகளைச் செய்க! சொர்க்க சாம்ராஜ்ஜியம் கிடைக்கும்; நேர்த்திக் கடனாற்று, நினைத்தவை நடக்கும் என்ற மூடயிருள் சூழ்ந்த சமூக அமைப்பில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிந்தனைகளின் அடிப்படையில் புத்துலகுக்கு அழைத்துச் செல்லும் மகிழ்ச்சிக்கான திறவு கோல்தான் இந்த வாழ்வியல் சிந்தனை. தந்தை பெரியார் நினைவு நாளில் (டிசம்பர் 24) தலைநகரில் வெளியிடப்படுகிறது.

மனித வாழ்வு மாயையல்ல; -மகத்தானது_ – மகிழ்ச்-சிக்குரியது! அடுத்த ஜென்மம் என்பது முடிச்சுமாறிகளின் பேச்சு! – பிறந்த இந்த வாழ்வைச் சுவைத்துப்பார்! உலகில் எத்தனை எத்தனைச் செல்வங்கள், இன்பங்கள் – உனக்காகக் காத்துக் கிடக்கின்றன! உழைப்பாய் _- உண்பாய்_- உனக்கும் அதில் உரிமையுண்டு என்று கூறிக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் தன்னம்பிக்கையின் தூண்டா விளக்கு இது! திருமணத்திற்குப் பரிசளியுங்கள்; உங்கள் உறவினர்களுக்குத் தாருங்கள். நண்பர்களுக்குக் கொடுத்துப் படிக்கச் செய்யுங்கள். மிரண்டு ஓடியவர்கள் நெருங்கி வருவார்கள்.  தந்தை பெரியார் படைக்க விரும்பிய அந்தத் திரண்ட_ மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும் அறிவியல் உலகைத் தெரிந்து கொள்வார்கள்.