Archive for the ‘தமிழின் மகள்’ Category

சோனியாவும், ஸ்டாலினும்: அயல்நாடுகளுக்குச் சென்றுவரும் மர்மங்கள்!

செப்ரெம்பர் 17, 2011

சோனியாவும், ஸ்டாலினும்: அயல்நாடுகளுக்குச் சென்றுவரும் மர்மங்கள்!

 

அதிகாரம், பலமுள்ள அரசியல்வாதிகளை நம்பி பிழைப்பு நடத்துக் கட்சிகள்: சோனியாவும், ஸ்டாலினும் இந்தியாவையும், தமிழகத்தையும் ஆளத்துடிக்கும் பலமும், அதிகாரமுள்ள அரசியல்வாதிகள். கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையை பலவிதங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருபவர்கள். இன்றளவில், விஷயங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும், அவற்றைத் தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமைகள் உள்ளன என்றெல்லாம் சொல்லப்படுள்ளது. அதற்கேற்றார்போல சட்டங்கள் கூட இருக்கின்றன. ஆனால், அத்தகையவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வரும்போது, தனிப்பட்ட முறையில், மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள, ஓய்வு எடுக்க, வார இறுதி நாட்களைக் கழிக்கச் சென்று வருகிறார்கள் என்று செய்திகள் வருகின்றன. ஆனால், இதனால் மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப் படுகின்றனர் என்பதை மக்களே அறியமுடியாத அளவிற்கு நிலைமை ஏற்ப்பட்டுள்ளது. சோனியா இந்தியாவில் இல்லாத போது, காங்கிரஸ்காரர்கள் உருப்படியான வேலை எதுவும் செய்யவில்லை[1], ஏனெனில் ஆணைகள் கிடைக்காததால், ஏனோதானோ என்று அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்தார்கள். இதற்கும், எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் இருந்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டதிற்கும் எந்த வேறுமையும் இல்லை. திமுகவைப் பொறுத்த வரையிலும், ஆட்சியில் இல்லாததால் அத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டிய எந்த பிரச்சினையும் இல்லை.

 

ஸ்டாலினின் லண்டன் பயணங்கள் (2008-2011): இங்கிலாந்திற்கு தமிழகத்திலிருந்து, குறிப்பாக திமுகவினர் அல்லது திமுகவை ஆதரிக்கும் நபர்கள், வியாபாரிகள்[2], நடிகர்கள், நடிகைகள்[3] சென்றுவருவதால், அவர்கள் தனிப்பட்ட முறையில் சென்று வருவதைத் தவிர, இந்தியாவை பாதிக்கும் வகையில் மற்ற விஷயங்களில் ஈடுபடுகிறார்களா என்று பார்க்க வேண்டிய நிலையில் இந்திய மக்கள் உள்ளார்கள்.

 

பிப்ரவரி 2011: கடந்த பிப்ரவரியில் 2011 சென்றபோது, திமுக-காங்கிரஸ் தேர்தல் பேச்சு வார்த்தைகள் பாதித்தன அப்பொழுது அவரது நண்பர் ராஜாசங்கர் செறிருந்தார்[4].

 

ஆகஸ்ட்-செப்டம்பர் 2009: முன்பு ஆகஸ்ட் 31, 2009 அன்று லண்டன் சென்றபோது, அமெரிக்கக் குழுவிடன் “கூவம் சம்பந்தமாக” நடத்த வேண்டிய பேச்சுவார்த்தைகளையும் நிறுத்துவிட்டு சென்றுள்ளார்[5]. அப்பொழுதும், சிகிச்சைக்குச் சென்றார் என்று குறிப்புகள் கொடுக்கப் பட்டனவேயன்றி, வேறெந்த விவரங்களும் அறிவிக்கப் படவில்லை. உதயநிதியும் சென்றிருந்தார். நாங்கள் தனிப்பட்ட முறையில் சென்றிருந்தோம், அரசு தரப்பில் செல்லவில்லை”, என்றார்[6].

 

ஜூன் 2008 – “வியாபார நிமித்தமாகச் சென்றாரா?”: அதற்கும் முன்பாக ஜூன் 2008ல் சென்றபோதும், இதே மாதிரி சொல்லப்பட்டது[7]. ஆனால் வியாபார நிமித்தமாக சென்றார் என்று ஆங்கில ஊடகங்கள் / பத்திரிக்கைகள் வெளியிட்டன. ஸ்டாலினுடைய இணைத்தளத்தில், ஒரு திமுக பக்தர், ஸ்டாலின் மருத்துவ சிகிச்சைக்காக லண்டனுக்குச் சென்றதைக் கேள்விபட்டு, அவரது ஆரோக்கியத்திற்காக ஆண்டவனை பிரார்த்திப்பதாக பதிவு செய்துள்ளார்[8]. நல்லவேளை, நாத்திகத் தந்தையார்[9] ஒன்றும் இடக்கு-மடக்காக எந்த கமண்டும் அடிக்கவில்லை போலும்!

 

இப்பொழுதைய பயணம் (செப்டம்பர் 2011): மு.க.ஸ்டாலின் கடந்த  4ஆம் தேதி  சென்னையில் இருந்து லண்டனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக புறப்பட்டு சென்றார்[10]. பிறகு 10 நாட்கள் ஓய்விற்குப் பிறகு, சென்றிருந்த, 14-09-2011 அன்று அதிகாலை சென்னை திரும்பினார். திமுக பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா, மகள், மறுமகன், பேரன்கள் மற்றும் குடும்பத்தினருடன் சென்றிருந்தார்[11]. 10 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை 3.15 மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் ஸ்டாலின் சென்னை திரும்பினார்[12].

 

இந்தியர்கள் ஏன் கவலைப் படவேண்டும்?தனிப்பட்ட நபர்களாக, இந்திய குடிமகன்களாக, யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். ஆனால், அரசியல், வியாபாரம், அரசு என்றெல்லாம் வரும் போது, அவர்கள் அவ்வாறு பிரித்துப் பார்ப்பதில்லை, முறைகளைக் கடைப்பிடிப்பதில்லை என்பதிலிருந்துதான், பொது மக்கள் கவலைப் படவேண்டியுள்ளது. சோனியா அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தபோது, யார்-யாரெல்லாம் சென்று பார்த்தார்கள், நலம் விசாரித்தார்கள், நலம் பெற வாழ்த்தினார்கள் என்று இந்தியர்களுக்குத் தெரியாது. ஆனனல், அவர்களில் வியாபார நிமித்தமாக அல்லது அப்படி யாராவது சென்று பார்த்து வைத்தால், நாளைக்கு உபயோகமாக இருக்குமே என்று பார்த்து வந்தவர்கள் யார் என்றும் இந்தியர்களுக்குத் தெரியாது. இங்குதான் பிரச்சினை வருகிறது. இத்தகைய அரசு-அரசியல் சாரா தனிப்பட்ட சந்திப்புகள், பிரயாணங்களில் மற்றவர்கள் இருப்பது பிரச்சினையை, வேறு கோணங்களிலும் திருப்புகிறது.


[1] இருக்கும்போதும் செய்யமாட்டார்கள் என்பது வேறு விஷயம்! காங்கிரஸ் அல்லாத ஆளுக் கட்சிகள் மற்றும் அவர்களது அரசுகளைக் கவிழ்க்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதை அரசு இந்திரங்களை உபயோகித்துச் செய்து வருவர். அந்த வேலையே, பெரியவேலை அவர்களுக்கு!

[2] இதில் ஒரு பெரிய பட்டியலே உள்ளது. அவர்கள் அமெரிக்கா, மொரிசியஸ், மாலத்திவு முதலிய நாடுகளுக்கும் சென்றுவருகின்றனர். சில ஒப்பந்தங்கள், பரிமாற்றங்கள் அங்குதான் செய்யவேண்டியுள்ளன.

[3] குஷ்புவும் அடிக்கடிச் சென்று வருவது குறிப்பிடத் தக்கது. ஒருமுறை நிருபர்கள் கேட்டபோது, ஹனிமூன்/தேன்நிலவிற்காக செல்வதாக கூறியுள்ளார்.

[6] ……..son, Udayanidhi) said his trip was personal: “There is nothing official and I did not go on behalf of the state government.”

http://www.outlookindia.com/article.aspx?261919

[7] The sudden visit set tongues wagging. According to sources in the rulign DMK party, Stalin and family had gone on a holiday. But some party sources said it was for a medical check-up and rest and others made it out to be a business visit.

http://www.thaindian.com/newsportal/politics/tamil-nadu-minister-stalin-family-in-london_10056695.html

[8] Dear Respected Sir first of all i wish and pray for the god to give good health for you. Recently i saw the news paper that you had been to London for Medical check up that makes me worried lot. Because i love your the way of doing under your control( rural minister)……………………………… If you have any direct email please let me know i wish to send e mail as a party man suggest my openion and etc..

Posted by Duraimurugan 

http://www.mkstalin.net/viewcomments.php?month=6&year=2008

[9] முன்பு ஒரு தொண்டர் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு வந்தபோது, “என்ன……நெற்றியில் ரத்தம் வருகிறது……….” என்று நக்கலாக கருணாநிதி கமண்ட் அடித்ததை நினைவு கூறவேண்டும்.

திராவிடத் திருமணங்களும், தமிழர்களின் பிணக்குகளும், அரசியல்வாதிகளின் சுணக்கங்களும்

மே 28, 2010

திராவிடத் திருமணங்களும், தமிழர்களின் பிணக்குகளும்,அரசியல்வாதிகளின் சுணக்கங்களும்

சுயமரியாதை திருமணம்

எம்.ஜி.ஆரும், நானும் பிரியக்கூடாது என பாடுபட்டவர் : ஆர்.எம்.வீரப்பனுக்கு கருணாநிதி புகழாரம்

நன்றி-தினமலர்: செய்தி, படம்                           http://www.dinamalar.com/News_Detail.asp?Id=7673
சென்னை : “”எம்.ஜி.ஆருக்கும், எனக்கும் இடையே பிணக்கு விளைந்த போதெல்லாம், அதை சரி செய்ய பாடுபட்டவர் ஆர்.எம்.வீரப்பன்,” என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார். முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் – ராஜம்மாள் தம்பதியின் இளைய மகன் தங்கராஜுக்கும், கோவை தொழிலதிபர் மோகன் – மோகனா தம்பதியின் மகள் தாரிணிக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது.

விழாவுக்கு தலைமை வகித்து, திருமணத்தை நடத்தி வைத்து தமிழக முதல்வர் கருணாநிதி பேசியதாவது: எனக்கும், ஆர்.எம்.வீரப்பனுக்கும் உள்ள தொடர்பு நீண்ட காலத் தொடர்பு, மறைந்தும் மறையாத என் ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆருடைய அணுக்கத் தொண்டர்களிலே ஒருவராக, அன்பு நண்பர்களில் ஒருவராக, அவசியப்பட்ட ஆலோசகர்களிலே ஒருவராக விளங்கியவர் வீரப்பன். “குடியரசு’ அலுவலகத்தில் 1945ம் ஆண்டு துணை ஆசிரியராக நான் இருந்த காலம் தொட்டு எனக்கும், இவருக்கும் நெருக்கமான நட்பு, அரும்பி மலர்ந்து இன்றைக்கும் மணம் வீசுகிற வகையில், அவரது இல்ல மண விழாவை நான் நடத்தி வைக்கவும், அவர் வரவேற்கவுமான சூழல் உருவாகியிருக்கிறது.

இந்த மேடையில் எனக்கு முன் பேசியவர்கள், எங்களுக்குள் என்றும் பிணக்கு ஏற்பட்டதில்லை என்று இங்கே சொன்னார்கள். இவர் என்னை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்ட அந்தக் காலத்தில் கூட என்னிடம், “கள்ளக் காதல்’ கொண்டவர். தி.மு.க.,வுக்கும், எம்.ஜி.ஆர்., தலைமையில் இயங்கிய அ.தி.மு.க.,வுக்கும் இடையே சில பிரச்னைகள் தோன்றும் போதெல்லாம், இவரிடமிருந்து எனக்கு ஒரு ரகசிய கடிதம் வரும். எனக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே ஒரு பிரிவு ஏற்படக்கூடிய ஒரு சூழல் 1971ம் ஆண்டில் ஏற்பட்ட போது, வீரப்பன் என் இல்லத்திற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக, “அந்தச் சூழ்நிலை உருவாகக்கூடாது; நீங்கள் இருவரும் பிரிந்து விடக்கூடாது; ஒன்றாக இருந்து தான் இயங்க வேண்டும். பிரிக்கிற சில பேர் யார் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒன்றுபட்டு பணியாற்றுங்கள்’ என்று கண்ணீர் கலந்து தன் கவலையைத் தெரிவித்தவர்களில் மிக முக்கியமானவர். பல நேரங்களில் எம்.ஜி.ஆருக்கும், எனக்கும் அல்லது தி.மு.க.,விற்கும் இடையே பிணக்கு விளைந்த போதெல்லாம், அதை சரி செய்ய பாடுபட்டவர் ஆர்.எம்.வீரப்பன். வீரப்பன் என் நீண்ட கால நண்பர் என்பதால் அவருக்கு அந்தக் கவலை இருந்தது.

மேடையில் திருநாவுக்கரசு பேசும் போது, “ஆர்.எம்.வீரப்பனுக்கு எம்.எல்.சி., பதவி கொடுங்கள்’ என்று சொன்னார். பதவிகளை பல பேருக்கு கொடுக்கிற இடத்தில் இருந்தவர் வீரப்பன். அவர் பதவிகளை பகிர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டியவரே தவிர, கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டியவர் அல்ல. அந்தளவிற்கு இந்த இயக்கத்தின் ஆணிவேராக, அடிவேராக, இயக்கத்தை வளர்க்கின்ற வலுவான விழுதுகளிலே ஒருவராக அன்றைக்கும் இருந்தார்; இன்றைக்கும் இருக்கிறார். இவரை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்.

நாள் முழுவதும் அளப்பரிய பணிகள், அதற்கிடையே கோவைக்கு மாநாட்டு பணிகளைப் பற்றி ஆய்வு செய்யச் செல்கிறோம். அங்கிருந்து ஊட்டிக்குச் சென்று ஓரிரு நாட்கள் ஓய்வு பெறலாமே என்று எண்ணினேன். ஆனால், அங்கு சென்ற எனக்கு இந்த நினைவு வந்தது. நினைவு சாட்டையாக விழுந்தது. “வீரப்பன் இல்லத் திருமணத்திற்கு செல்லாமல் ஓய்வு ஒரு கேடா உனக்கு’ என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டு இங்கே வந்துள்ளேன் என்றால், அது நட்பின் ஆழத்தை, நட்பின் உயர்வை உணர்த்தக்கூடிய ஒன்று என்பதை உங்களுக்கு எடுத்துச் சொல்லி, அத்தகைய ஒரு உத்தம நண்பர் என்றைக்கும் இந்த இயக்கத்தின் தூணாக விளங்கிக் கொண்டிருப்பவர். அவரது இல்லத் திருமணத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

விழாவில், நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்.எம்.வீரப்பன் அனைவரையும் வரவேற்றார். மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் நன்றி கூறினார்.

கருணாநிதியின் தொகுதியில் கிளப்புகளில் கன்றாவியான குத்தாட்டம்!

மே 3, 2010

கருணாநிதியின் தொகுதியில் கிளப்புகளில் கன்றாவியான குத்தாட்டம்!

விதிகளை மீறி மது கிண்ணத்துடன் ஆட்டம் போட்டதாகவும் புகார்

சென்னையில் `டிஸ்கோத்தே’ நடன கிளப்புகளில் அதிரடி சோதனை
அழகிகள் மீது ரூபாய் நோட்டுகளை வீசி ரசிகர்கள் கொண்டாட்டம் அம்பலம்
சென்னை,மே.3-சென்னையில் கலாசார நடன கிளப்புகளில் அழகிகளுடன் ரசிகர்கள் மது கிண்ணத்துடன் ஆட்டம் போடுவதாகவும், ரூபாய் நோட்டுகளை வீசி ரசிகர்கள் அழகிகளுடன் கிளு,கிளுப்பு நடனம் ஆடுவதாகவும், வந்த புகாரின் பேரில் போலீசார் 2 நடன கிளப்புகளில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.
திடுக்கிடும் புகார்கள்: சென்னை திருவல்லிக்கேணி, அண்ணாசாலை போலீஸ் சரகங்களில் 2 இடங்களில் கலாசார நடன கிளப்புகள் உள்ளன. கடுமையான விதிமுறைகள் விதித்து போலீசார் இந்த நடன கிளப்புகளுக்கு போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர். ஆனால் விதிமுறைகளை மீறி இந்த நடன கிளப்புகளில் நடன நிகழ்ச்சிகள் நடப்பதாக போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன. போலீசார் வகுத்து கொடுத்த விதிமுறைகளில், இரவு 11 மணிக்கு மேல் நடன நிகழ்ச்சிகள் நடத்த கூடாது, ஆபாச நடனம் இடம்பெறக் கூடாது, மது விருந்து நடத்த கூடாது, அழகிகள் அருகில் ரசிகர்கள் செல்ல அனுமதிக்க கூடாது போன்றவை இடம்பெற்றிருந்தன.
ஆனால் போலீஸ் வகுத்து கொடுத்த விதிகளை மீறி, மது கிண்ணத்துடன் ரசிகர்கள் அழகிகளுடன் ஆட்டம் போடுவதாகவும், அழகிகள் மீது ரூபாய் நோட்டுகளை அள்ளிவீசி ரசிகர்கள் களியாட்டம் நடத்துவதாகவும், புகார்கள் வந்தன. இதனால் அந்த கிளப்புகளில் சோதனை போட்டு நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
அதிரடி சோதனை: இதன்பேரில் திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் தமிழ்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரகுமார், ராஜேந்திரன் ஆகியோர் போலீஸ் படையுடன் நேற்று முன்தினம் இரவு குறிப்பிட்ட நடன கிளப்புகளில் அதிரடியாக புகுந்து சோதனை போட்டனர். சோதனையில் விதிமுறைகள் மீறப்பட்டது கண்டறியப்பட்டது. இதன்பேரில் போலீசார் குறிப்பிட்ட 2 நடன கிளப்புகளையும் மூடிவிட்டனர். நடன கிளப்புகளின் நிர்வாகிகள், ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு போட்டு கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அழகிகள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி
ஒருவர் கூறியதாவது:- உல்லாசத்துக்கு அழைப்பு: கலாசார நடனம் என்ற பெயரில் போலீஸ் அனுமதி வாங்கி விட்டு, விதிமுறைகளை மீறி `டிஸ்கோத்தே’ நடனம் ஆட அனுமதிப்பதாகவும், மது விருந்து நடப்பதாகவும், ரசிகர்களை அழகிகளோடு ஆட்டம் போட வைப்பதாகவும், புகார்கள் வந்தன. இதன்பேரில் சோதனை போடப்பட்டு, பால்ஸ் மற்றும் சுருதி பேலஸ் என்ற நடன கிளப்புகள் மூடப்பட்டுள்ளன. போலீஸ் சோதனை போட்ட போது 25 ரசிகர்கள் அழகிகளோடு ஆட்டம் போட்டுள்ளனர். ரசிகர்களிடம் தலா ரூ.150, ரூ.200 வீதம் டிக்கெட் பணம் வாங்கி உள்ளனர். தினமும் 2 காட்சிகள் நடத்தியுள்ளனர். இது பரவாயில்லை. ஆனால் ஆட்டம் முடிந்தவுடன் அழகிகளின் செல்போன் நம்பரை வாங்கிக்கொண்டு, அவர்களை ரசிகர்கள் உல்லாசத்துக்கு அழைப்பதாகவும் புகார்கள் வந்தன. இதனால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கலாசார நடன கிளப்புகள் என்ற பெயரில் `டிஸ்கோத்தே’ நடனம் ஆட அனுமதிக்கும் கிளப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்

விதிகளை மீறி மது கிண்ணத்துடன் ஆட்டம் போட்டதாகவும் புகார்: சென்னையில் `டிஸ்கோத்தே’ நடன கிளப்புகளில் அதிரடி சோதனைஅழகிகள் மீது ரூபாய் நோட்டுகளை வீசி ரசிகர்கள் கொண்டாட்டம் அம்பலம்சென்னை,மே.3-சென்னையில் கலாசார நடன கிளப்புகளில் அழகிகளுடன் ரசிகர்கள் மது கிண்ணத்துடன் ஆட்டம் போடுவதாகவும், ரூபாய் நோட்டுகளை வீசி ரசிகர்கள் அழகிகளுடன் கிளு,கிளுப்பு நடனம் ஆடுவதாகவும், வந்த புகாரின் பேரில் போலீசார் 2 நடன கிளப்புகளில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.திடுக்கிடும் புகார்கள்சென்னை திருவல்லிக்கேணி, அண்ணாசாலை போலீஸ் சரகங்களில் 2 இடங்களில் கலாசார நடன கிளப்புகள் உள்ளன. கடுமையான விதிமுறைகள் விதித்து போலீசார் இந்த நடன கிளப்புகளுக்கு போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர். ஆனால் விதிமுறைகளை மீறி இந்த நடன கிளப்புகளில் நடன நிகழ்ச்சிகள் நடப்பதாக போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன. போலீசார் வகுத்து கொடுத்த விதிமுறைகளில், இரவு 11 மணிக்கு மேல் நடன நிகழ்ச்சிகள் நடத்த கூடாது, ஆபாச நடனம் இடம்பெறக் கூடாது, மது விருந்து நடத்த கூடாது, அழகிகள் அருகில் ரசிகர்கள் செல்ல அனுமதிக்க கூடாது போன்றவை இடம்பெற்றிருந்தன.ஆனால் போலீஸ் வகுத்து கொடுத்த விதிகளை மீறி, மது கிண்ணத்துடன் ரசிகர்கள் அழகிகளுடன் ஆட்டம் போடுவதாகவும், அழகிகள் மீது ரூபாய் நோட்டுகளை அள்ளிவீசி ரசிகர்கள் களியாட்டம் நடத்துவதாகவும், புகார்கள் வந்தன. இதனால் அந்த கிளப்புகளில் சோதனை போட்டு நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.அதிரடி சோதனைஇதன்பேரில் திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் தமிழ்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரகுமார், ராஜேந்திரன் ஆகியோர் போலீஸ் படையுடன் நேற்று முன்தினம் இரவு குறிப்பிட்ட நடன கிளப்புகளில் அதிரடியாக புகுந்து சோதனை போட்டனர். சோதனையில் விதிமுறைகள் மீறப்பட்டது கண்டறியப்பட்டது.இதன்பேரில் போலீசார் குறிப்பிட்ட 2 நடன கிளப்புகளையும் மூடிவிட்டனர். நடன கிளப்புகளின் நிர்வாகிகள், ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு போட்டு கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.அழகிகள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-உல்லாசத்துக்கு அழைப்புகலாசார நடனம் என்ற பெயரில் போலீஸ் அனுமதி வாங்கி விட்டு, விதிமுறைகளை மீறி `டிஸ்கோத்தே’ நடனம் ஆட அனுமதிப்பதாகவும், மது விருந்து நடப்பதாகவும், ரசிகர்களை அழகிகளோடு ஆட்டம் போட வைப்பதாகவும், புகார்கள் வந்தன. இதன்பேரில் சோதனை போடப்பட்டு, பால்ஸ் மற்றும் சுருதி பேலஸ் என்ற நடன கிளப்புகள் மூடப்பட்டுள்ளன. போலீஸ் சோதனை போட்ட போது 25 ரசிகர்கள் அழகிகளோடு ஆட்டம் போட்டுள்ளனர்.ரசிகர்களிடம் தலா ரூ.150, ரூ.200 வீதம் டிக்கெட் பணம் வாங்கி உள்ளனர். தினமும் 2 காட்சிகள் நடத்தியுள்ளனர். இது பரவாயில்லை. ஆனால் ஆட்டம் முடிந்தவுடன் அழகிகளின் செல்போன் நம்பரை வாங்கிக்கொண்டு, அவர்களை ரசிகர்கள் உல்லாசத்துக்கு அழைப்பதாகவும் புகார்கள் வந்தன. இதனால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கலாசார நடன கிளப்புகள் என்ற பெயரில் `டிஸ்கோத்தே’ நடனம் ஆட அனுமதிக்கும் கிளப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்

தமிழ் உள்ள அளவும், தமிழன் உள்ள அளவும், தமிழ் நெறி உள்ள அளவும் தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை!

ஜனவரி 11, 2010
தமிழர்களுக்கு என்றுமே வீழ்ச்சி இல்லை : சங்கமம் துவக்க விழாவில் கருணாநிதி பேச்சு
ஜனவரி 11,2010,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=16075

Latest indian and world political news information

மத்தியில் நாட்டுப்புறம்: சென்னை : “”தமிழ் உள்ள அளவும், தமிழன் உள்ள அளவும், தமிழ் நெறி உள்ள அளவும் தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை,” என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார். சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா, நேற்று சென்னை தீவுத்திடலில் நடந்தது. இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து தமிழக முதல்வர் கருணாநிதி  பேசியதாவது: சென்னை தீவுத்திடல் நிரம்பி வழியும் அளவிற்கு சென்னை சங்கமம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சி நான்கு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் துவங்கப்பட்டு, மாநகரத்தின் வீதிகளில் எல்லாம் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் நாட்டுப்புறம் என்று ஒன்று  இருக்கிறது. அதற்கென்று நாட்டுப்புறக் கலைகள் மற்றும் இசைத் துறையில் பாடல்கள் என்றெல்லாம் இருக்கின்றனவே; அவற்றை மக்களோடு பரிமாறிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வோடு இந்த சங்கமம், தமிழ் மையத்தின் சார்பில் துவங்கப்பட்டு பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று வருகிறது.

சங்கமத்தில் சந்தேகம் ஏற்பட்டது: இதைத் தொடங்கியவர்களும், தொடங்கி வைத்த நானும் எதிர்பாராத அளவிற்கு இந்த சங்கம் நிகழ்ச்சி வெற்றி முரசு கொட்டி வருகிறது.  இம்மேடையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள், எல்லாரும் வியந்து போற்றுகின்ற அளவிற்கு அவ்வளவு அருமையாக அரிய பல கருத்துக்களை எடுத்துக் கூறுகின்ற நிலையில் இங்கே நடத்திக் காட்டப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியல் இடம் பெற்ற சில காட்சிகளில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. சந்தேகம் ஏற்பட்ட அடுத்த வினாடியில், அந்த சந்தேகத்தை நீக்குகின்ற காட்சிகள் இந்த அரங்கத்திலே வந்தன. சொல்லப்போனால் சங்கமம் என்பதனுடைய நோக்கம், “பிறப்பொக்கும்’ என்பதை நாட்டிலே பரவச் செய்திடல் வேண்டும். சமுதாயத்தில் வேரூன்றச் செய்ய வேண்டும் என்பது தான்.
பிறப்பு ஒக்கும், பிறப்பொக்கும், “யாதும் ஊரே யாவரும் கேளிர்’:  இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு சென்னையில் நடந்த போது, “யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. கோவையில் நடக்கவுள்ள செம்மொழித் தமிழ் மாநாட்டில், “பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்’ என்னும் கருத்தாக்கத்தை ஒட்டியே சென்னை சங்கமம் நிகழ்ச்சி, “பிறப்பொக்கும்’ என்ற வார்த்தை, பிறப்பு ஒக்கும் என்ற இரண்டு சொற்களைக் கொண்ட இந்த வார்த்தை, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாசகக் கோவையில் இருந்து எடுக்கப்பட்டது. நாம் பிரிந்து கிடக்கக்கூடாது; நாம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்; ஒற்றுமையாக வாழ வேண்டும். நாம் நம் தமிழ் மொழியால் ஒன்று சேர வேண்டும். நாம் நம்முடைய தமிழைக் காப்பாற்ற வேண்டும். நம்முடைய மொழி உணர்வை தொடர்ந்து இங்கே நிலைநாட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற இத்தனை வாசகங்களும் பொருந்தியாக சங்கமம் கலை விழாவிலே, “பிறப்பொக்கும்’ என்ற சுருக்கமான சொற்றொடரை அமைத்துள்ளனர்.

2,500 கலைஞர்கள்! தமிழ் உள்ள அளவும், தமிழன் உள்ள அளவும், தமிழ் நெறி உள்ள அளவும் தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை. சென்னை சங்கமம் நிகழ்ச்சி, சென்னை மாநகரில் மட்டுமல்ல; தமிழகம் முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்று சென்னை சங்கமம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அவர்களின் செயலை பாராட்டுகிறேன். இவ்வாறு கருணாநிதி பேசினார். விழா நடன நிகழ்ச்சிகளை பிரசன்னா ராமசாமி சைலஜா குழுவினர் வடிவமைத்திருந்தனர். விழாவில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன், கனிமொழி எம்.பி., தமிழக சுற்றுலாத் துறை செயலர் இறையன்பு,  தமிழ் மையத்தைச் சேர்ந்த ஜெகத் கஸ்பர் உட்பட பலர் கலந்து கொண்டனர். சென்னையில் வரும் 16ம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சியில் 2,500 கலைஞர்கள் மூலம் 4,700 நிகழ்ச்சிகள் நடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 16ம் தேதி நிறைவு விழா, சென்னை எலியட்ஸ் கடற்கரையில் நடக்கிறது.

இதென்ன புதிய “கன்டிஷன்” போடுகிறார்?
தமிழ் உள்ள அளவும், தமிழன் உள்ள அளவும், தமிழ் நெறி உள்ள அளவும் தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை
தமிழன் இருக்கிறானோ இல்லையோ தமிழ் இருக்கிறது!
இவர்களுடைய அடிவருடிகள் எல்லாம் சேர்ந்து கொண்டு இவரையே தமிழ், முத்தமிழ், தமிழின் உயிரே, உயிரின் நிலையே, …………………………என்றெல்லாம் பேசியதை ஞாபகம் காட்டுகிறாரா?

தமிழ் நெறி என்று இவர் சொல்வது என்ன என்று தெரியவில்லை!
எது தமிழ்நெறி?
கருணாநிதி காட்டுவதா?
கனிமொழி காட்டுவதா?
ஜகத் காஸ்பர் காட்டுவதா?
கலைஞர் காட்டுவதா?
தமிழர்களுக்கு வீழ்ச்சி என்று ஏன் இவர் கவலைப் படவேண்டும்?
தமிழ் வாழும்
தமிழர்கள் வாழ்வார்கள்
அதற்கு இந்த போலிகள் தேவையில்லை.

இன்றைய தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பிரச்சினைகளே இவரால் தான் உருவாக்கப் பட்டுள்ளது!

கருணாநிதிக்கு ‘தமிழ்த் தலைமகன்’ விருது!

திசெம்பர் 19, 2009
கருணாநிதிக்கு ‘தமிழ்த் தலைமகன்’ விருது நாளை வழ‌ங்க‌ப்படு‌கிறது
செ‌ன்னை, சனி, 19 டிசம்பர் 2009( 16:28 IST )

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0912/19/1091219062_1.htm

கருணாநிதிக்கு ‘தமிழ்த் தலைமகன்’ விருது! கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் சார்பில் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதிக்கு ‘தமிழ்த் தலைமகன்’ விருது நாளை வழங்கப்படு‌‌கிறது. தமிழ்நாட்டுக்கு வெளியே முதன் முதலில் அமைக்கப்பட்ட மூத்த தமிழ்ச் சங்கமாகிய கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் 70 ஆண்டுகளாக கொல்கத்தாவில் இயங்கி வருகிறது. இந்த சங்கம், இந்த ஆண்டு முதலமைச்சர் கருணாநிதிக்கு ‘தமிழ்த் தலைமகன்” என்ற சிறப்பு விருதளிக்க தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் அளிக்கிறது: இது குறித்து அ‌‌ச்ச‌ங்க‌ம் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், தமிழுக்கு செம்மொழி சீர்பெற்றுத்தந்த பெருந்தகையும், உலகத்தமிழ் செம்மொழி மாநாடு காணும் வரலாற்று பெருமை வாய்ந்தவரும், தமிழ் இன மொழி மேம்பாட்டுக்காக தம் வயதில் எழுபது ஆண்டுகளை அள்ளித் தந்தவரும், தமிழகத்தின் முதலமைச்சராய் ஐந்து முறை அரசாள்பவரும், தமிழில் தலைசிறந்த உலக படைப்பாளியுமான முத்தமிழறிஞர் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌க்கு மூத்த தமிழ் சங்கமாகிய கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் தமிழ்த் தலைமகன் என்ற சிறப்பு விருதளித்து மகிழ்கிறது” என்று தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளது.

நாளைக்கு விழா: இ‌ந்த விருது வழங்கும் விழா, நாளை மாலை 6 மணிக்கு சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுகிறது. விழாவுக்கு தொழில் அதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் தலைமை வகிக்கிறார். தமிழ் சங்கத்தின் அமைப்பாளர்களும், செயற்குழு உறுப்பினர்களும் ஒன்று கூடி முதலமைச்சருக்கு விருது வழங்குகிறார்கள். ஆலோசகர் ஞானசேகரன் வாழ்த்து மடல் வாசித்து அளிக்கிறார். இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், முனைவர் அவ்வை நடராசன், நடிகர் சிவகுமார், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். கொல்கத்தா தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகர் மகாலிங்கம் வரவேற்புரை ஆற்றுகிறார். செயலர் ஸ்ரீதரன் நன்றியுரை ஆற்றுகிறார். பேராசிரியை பர்வீன் சுல்தானா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். நிறைவாக முதலமைச்சர் கருணாநிதி ஏற்புரை வழங்குகிறார்.

தமிழுக்கு உறவுமுறை கொண்டாடும் வழிகள்: ஏற்கெனவே கருணாநிதியை  தமிழுக்கு-தமிழுடன் ஒப்புமைப் படுத்தி விட்டாகி றது! தமிழே, தமிழின் உயிரே, உயிரின் நிலையே…….., வாழும் தமிழே……….என்றெல்லாம் குகாகிவிட்டது!

பிறகெப்படி கருணாநிதி  ‘தமிழ்த் தலைமகன்’ ஆகிறார் என்று பார்க்கவேண்டும்!

இவரே தமிழாகி, தமிழின் தலைமகனாவது எவ்வாறு?

இதென்ன புதிய புராணம் படைக்கின்றனரா?

முன்பு ஆதித்தனார் “தமிழர் தந்தை” என்று புகழ்ந்தபோது, சில கேள்விகள் எழுந்தன!

இப்பொழுது கருணாநிதி  ‘தமிழ்த் தலைமகன்’ ஆகிறார் என்றால், மற்ற மகன்கள் யார், தமிழ் ஆணா, பெண்ணா, ஆணென்றாலும்-பெண்ணென்றாலும், யார் தாய்-அவ்வாறே யார் தந்தை?

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில், கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழக முதலமைச்சர் கலைஞருக்கு “தமிழ்த் தலைமகன்’’ விருது மடலை கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகர் த. ஞானசேகரன் வாசித்து வழங்கினார். உடன் அமைச்சர் பரிதி இளம்வழுதி, அய்ம்பெருங் குழு, எண்பேராயம் துணைத் தலைவர் முனைவர் வா.செ. குழந்தைசாமி, டாக்டர் அவ்வை நடராசன், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் சிவகுமார், கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் இரா. சிறீதரன், ஆலோசகர் எஸ். மகாலிங்கம் ஆகியோர் உள்ளனர் (20.12.2009)..