Archive for the ‘சூனியம்’ Category

அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – II

திசெம்பர் 27, 2009

அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – II

குறிப்பு: மாநாட்டில் இவர்கள் பேசியதற்கும், “விடுதலை” கீழ்கண்டவாறு பிரசுரித்துள்ளதற்கும் வேறுபாடுகள் உள்ளன.

“நாத்திகம்” (atheism) என்பதற்கு பதிலாக “Rationalism” என்ற போர்வையில் விவாதங்கள் வைக்கப் படுகின்றன. அதனை “பகுத்தறிவு” என்று தமிழில் பேசப்படுகிறது.  agnosticism, skepticism, non-belief in religious system முதலிய கோணங்களில் விவாதிப்பதும், விஞ்ஞான ரீதியில் தர்க்கம் செய்வதும் ஒன்றாகாது. ஆனால் நாத்திகத்தை மறைத்து விஞ்ஞான போர்வையில் பலரக சித்தாந்திகள் ஒன்றுகூடி, இவ்வாறாக பேசுவது நன்றாகவே தெரிகிறது.

“பகுத்தறிவு” என்றே  முதலில் “விதலையில்” வெளிவந்தது அப்ப்டியே கொடுக்கப்படுகிறது:

வகுப்பு வெறியை முறியடிக்க பெரியாரின் சிந்தனைகளே தேவை: இந்திய பகுத்தறிவாளர் மாநாட்டில் கு.வெ.கி.ஆசான், அ.அருள்மொழி, ஆர்.ஜி.ராவ், வித்யாபூஷன்

http://viduthalai.periyar.org.in/20091227/news11.html

சென்னை, டிச.27_ வகுப்பு வெறியை முறி-யடிக்க பெரியாரின் சிந்-தனைகள்தான் பயன்-படும் என்று வித்யா பூஷன்-ராவத் நேற்று சென்னை பெரியார் திடலில் நடை-பெற்ற மாநாட்டில் கூறி விளக்கமளித்தார். 7ஆவது தேசிய மாநாடு டிசம்பர் 26 பிற்பகல் மற்-றும் மாலை நிகழ்ச்-சிகள் நேற்று நடைபெற்றன. அதன் தொடர்ச்சி வருமாறு: வகுப்புவாதத்தை ஒழிப்பதில் பகுத்தறிவு இயக்கங்களின் பங்கு எனும் தலைப்பில் முதல் கருத்தரங்கு நேற்று (26.12.2009) மாலை இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திட-லில் நடைபெற்றது.

கு.வெ.கிஆசான்: பெரியார் பேருரை-யாளர் கு.வெ.கி.ஆசான் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குத் தலைமை-யேற்றார். ஆங்கிலத்தில் உள்ள கம்யூனல் எனும் சொல்லை வகுப்புவாதம் எனும் விரும்பத்தகாத பொருளில் இந்தியா-வில்-தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். சமுதாயமாக மக்கள் வாழ்-வது, ஒன்றைப் பொது-வாக அவர்கள் பயன்-படுத்துவது ஆகியவை-தான் அச்சொல்லின் இயல்பான பொருள் என்-பதைத் தெளிவுபடுத்-தினார். 1964இல் வெளி-யான கன்சைஸ் ஆக்ஸ்ஃ-போர்டு அகராதியின்படி, சமுதாயங்களுக்கு இடையே பகையுணர்வு எனும் பொருளில், கம்யூ-னல் எனும் சொல் இந்-தி-யாவில் பயன்படத் தொடங்-கியதை எடுத்துக்காட்-டினார்.

இந்து முஸ்லிம் பகை: பெரும்பான்மை இந்து மதத்தினர் சிறு-பான்மை மத்தினரை ஒதுக்கி, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முற்-பட்ட பொழுது, சிறு-பான்-மையர் சட்டப் பாதுகாப்பை வகுப்பு-ரிமையின் அடிப்படையில் கேட்டனர். அது மறுக்-கப்பட்ட பொழுது இந்து, முஸ்லீம் பகை ஏற்பட்டு, பாகிஸ்தான் பிரிவினை-யில் முடிந்தது.

வி.பி.சிங் ஆட்சியில்: மேல்ஜாதியார் ஆதிக்-கத்தில் இருந்து, ஒடுக்கப்-பட்ட, ஒதுக்கப்பட்ட, அழுத்தப்பட்ட ஜாதியார் பாதுகாப்புப் பெற, இட-ஒதுக்கீட்டைக் கோரினர். அதை விழிப்புணர்வுடன் தென்நாடு முன்-னெடுத்-தது. ஆனால் வடபுலத்-தில் வகுப்புரிமை இயக்கம் வலுப்பெறவில்லை. மண்-டல் ஆணையத்தின் பரிந்-துரைப்படி, வி.பி.சிங் பிர-தமராக இருந்த பொழுது, மத்திய அரசில் பணி-யிடங்களுக்குப் பிற்படுத்-தப்பட்டோருக்கு இட-ஒதுக்கீடு அளித்தது. அதைத் தென் மாநிலங்கள் மகிழ்-வுடன் வரவேற்றன. ஆனால் வட இந்தியாவில் மேல்-ஜாதியாரின் தூண்டுத-லால் கலவரம் உண்டா-யிற்று.

உச்சகட்ட கலவரங்கள்: உண்மையான பிரச்-சினையிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்ப, மதவெறியை இந்துத்-துவா சக்திகள் கிளப்பு-கின்றன. உண்மையான பிரச்சினைகளை மறைத்து, உணர்ச்சிகளை எழுப்பி, கற்பனைப் பிரச்-சினை-களைக் கொண்டு, சிறு-பான்மை மதத்தினர் மீது வெறுப்பை வளர்த்து கல-வரங்களைத் தொடர்ந்து நடத்துகின்றன. 1992இல் பாபர் மசூதி இடிப்பும், 2002இல் குஜராத் கல-வரங்களும் அவற்றில் உச்சகட்டமானவை.

பொதுமக்களின் கவ-னம் தவறான பாதையில் செல்லும் வரை, அவர் மீது தங்கள் ஆதிக்கம் நிலை-பெறும் என்பது படித்த, மற்றும் பணக்-காரக் கூட்டத்தினரின் கணிப்பாகும். ஆகையால் உண்மைப் பிரச்சினைகளில் இருந்து எளிய மக்களின் கவனத்-தைத் திருப்புதல், கலவரத்-தைத் தூண்டுதல், பக்தி-போதையை ஏற்றுதல், மதவெறியை ஊக்கு-வித்தல் முதலியவற்றில் மதவாதிகள் ஈடுபட்டு உள்ளனர். இவர்களின் முயற்சியை முறியடிக்கும் வகையில் பகுத்தறி-வா-ளர்கள் மக்களுக்கு உண்-மைகளைச் சொல்ல வேண்டும், மூடநம்பிக்-கைகளை முறியடிக்க வேண்டும், அறிவியல் பார்வையை உண்டாக்க வேண்டும். இவை போன்ற நடவடிக்கைகளால் விழிப்-படைந்த மக்கள் தேவையான காரியங்-களுக்கும் உரிமைகளுக்-கும் முயற்சி எடுத்துக்கொள்-வார்-கள். வீண் உணர்ச்-சிக்கு ஆட்பட்டு வகுப்-புக் கலவரங்களில் ஈடு-பட-மாட்டார்கள், வகுப்பு-வாதத்தை முறியடிப்-பார்-கள். இவ்வாறு கு.வெ.கி. ஆசான் உரையாற்றினார்.

வழக்கறிஞர் அ.அருள்மொழி: உயர்நீதிமன்ற வழக்கு-ரை-ஞர் அ.அருள்மொழி பேசுகையில், புத்தரின் போதனைகள் மறக்-கடிக்-கப்பட்டு, வேதியத்தின் அடிப்படையில் கதைகள் பரப்பப்படுவதைக் கண்-டித்தார். சென்னை மாகா-ணத்தில் நீதிக்கட்சி அரசு எல்லாப் பிரிவு மக்களுக்-கும் நீதி கிடைக்கும் வகை-யில் வகுப்புரிமை ஆணை பிறப்பித்து மக்களாட்-சியை உறுதிப்படுத்தியது. இவ்வாறு அனைவருக்-கும் தெரிய வேண்டும். இன்னும் தீண்டாமை-யைக் குற்றம் அற்றது எனக் கூறுவோர் இருக்-கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

கோவா அறிவியல் பேரவைத் தலைவர், ஆர்.ஜி.ராவ்: இக்காலகட்டத்தில் தேவைப்படுவது மனித-நேயம் என்றார். மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும், அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

வித்யாபூஷன் ராவத்: டெல்லி, சமூக வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர், வித்யா பூஷன் ராவத் கருத்து அறிவிக்கையில் பெரியாரின் எண்ணங்-கள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு எல்லோரிடமும் பரவ வேண்டும் என்றார். வகுப்பு நெறியை முறி-யடிக்க பெரியார் சிந்த-னை-கள் பயன்படும். காந்தி-யார் கூறிய மதச் சார்பின்மை பார்ப்-பனியம் சார்ந்த மதச் சார்பின்மை. பெரியாரின் மதச் சார்பின்மை, மனித நேயம் சார்ந்தது. மதச் சார்பின்மை வர்ணாஸ்-சிரம தர்மத்தை மறுப்ப-தாக இருக்க வேண்டும் என்றார்.

பி.எஸ்.பர்னாலா: பர்னாலா மத குருக்-கள் மூடநம்பிக்கை-களைப் பரப்புவது வருத்தத்திற்கு உரியது எனக்கூறி, பகுத்-தறிவாளர்கள் மக்களை இன்னும் அதிக அளவில் நாடு முழுவதும் சந்தித்-துப் பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.

விமர்சனம்:

ஹிந்தியில் பேசியதை அப்படியே மொழி பெயர்க்கப் படவில்லை.

முன்பே குறிப்பிட்டபடி –
* காரணங்களை அறியாமல் ஏற்றுக் கொள்ளமுடியாது என்ற தன்மை (rationalism),
* ஏற்றுக்கொண்டுள்ள ஞானத்தை மறுத்தல் / எதையும் அறிய முடியாது என்று வாதித்தல் (agnosticism),
* சந்தேகித்தல்/நம்பிக்கையின்மை (skepticism),
* மதத்தில் நம்பிக்கையின்மை (non-belief in religious system),
* கடவுளை மறுத்தல் (atheism),
* விஞ்ஞான நம்பிக்கை (Scientific temper)
முதலியவற்றை குழப்பிப்பேசும் பல கோஷ்டிகள் இந்த கூட்டமைப்பில் உள்ளனர்.
ஆனால் திகவினரோ இந்து எதிர்ப்பாளர்கள் என்று அவர்களில் பலருக்குத் தெரியவில்லை.
பொது சிவில் சட்டத்தை அமூலாக்க வேண்டும் என்று தீர்மானத்தை (எண்.3) நிறைவேற்றியபோது, கருப்புச்சட்டைகள் திகைத்துக் கொண்டிருந்ததைப் பார்க்கமுடிந்தது.

அருள்வாக்கு சாமியிடம் பெண்களின் கலாட்டா!

திசெம்பர் 19, 2009

அருள்வாக்கு சாமியிடம் பெண்களின் கலாட்டா!

அர்ச்சகருக்குப் பிறகு, சாராய-சரக்கு சாமியார்களுக்குப் பிறகு, இப்பொழுது அருள்வாக்கு சாமியிடம் பெண்கள் கலாட்டா செய்ய ஆரம்பித்துவிட்டனர்!

கலைஞர், சன் டிவிகளுக்குக் கொண்டாட்டம்தான்!

மாறி-மாறி காட்டிகொண்டே இருக்கிறார்கள்! இதோ ஒரு பெண் வந்து சாமியை மிரட்டுகிறார்!

சாமியின் மனைவி வந்த பெண்ணை மிரட்டுகிறார்! மிரட்டும் பெண்ணை, சாமியின் மனைவி தட்டிக் கேட்கிறார்! அது அப்படியே முன்பு கலாதிநிதி மாறனுடைய மனைவி காவேரி மிரட்டிய  மாதிரி இருந்தது.

அதெப்படி சரியாக அந்த இடத்தில் இந்த தொலைக்காட்சி கேமராமேன்கள், நிருபர்கள் சரியாக அங்கு சென்று கச்சிதமாக படம் எடுக்கின்றனரோ தெரியவில்லை!

அதற்கேற்ற முறையில் அந்த பெண்களும் சரியாக வந்து சாமியிடம் சண்டைப் பிடிக்கின்றனர். இருபெண்களும் கைகலப்பில் ஈடுபடுகின்றனர்! பெண்கள் சண்டை போடுகின்றனர்.

நடு இரவு / அர்த்தஜாமப் பூஜை! கிடாவெட்டுவது காண்பிக்கப் படவில்லை!

சாந்தகுமாரி, பக்கத்துவிட்டுக்காரர் புகர்ர் கூறுகிறார்!

நயினாமலை விளக்குகிறார்!

பிறகு மற்றவர்கள் அருள்வாக்கு சாமியின் மீது புகார் சொல்கின்றனர்.

“வரும் போது சாதாரணமாகத் தான் வந்தார்கள். பிறகு பூஜை, அருள்வாக்கு என்று ஆரம்பித்துவிட்டார்கள்”

“ராத்திரி எல்லாம் கிடாவெட்டி பூஜை என்று பேஜார் பண்ணுகிறார்கள்”

“நிலத் தகராறு காரணமாகத் தான் அருள்வாக்கு சாமியார் மேல் புகார் சொல்லப்படுகிறது”

நாத்திக போர்வையில், எல்லா இந்து சாமிகளையும் யாதாவது ஒரு காரணம் காட்டி இப்படி படம் காட்டுகிறார்களா?

வேடிக்கை என்னவென்றால் அடுத்த செனலில் ஒரு குறும்படம் போட்டி நடந்து கொண்டிருந்தது!

இதையேக் கூடக் காட்டலாம் போல் இருக்கிறது!

கச்சிதமாக, கேமரா வைத்துக் கொண்டு, கைத்தேர்ந்த டைரக்டர் இருந்தால்கூட அப்படி படம் எடுக்கமுடியாது போல இருக்கிறது!

ஆனால், கலைஞர் டிவியால் முடிகின்றது!

மேலேயுள்ளது நேற்றையப் பதிவு 19-12-2009. கீழேயுள்ளது தினமலர் செய்தி:

சூனிய தகடு வைப்பதாக சாமியாரை தாக்கிய பெண்
டிசம்பர் 20,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14805

Important incidents and happenings in and around the world

// <![CDATA[//
// <![CDATA[//

சேலம்: சேலத்தில், சூனிய தகடுகள் வைப்பதாகக் கூறி, சாமியாரை பெண் ஒருவர் தாக்கினார். திருச்சியைச் சேர்ந்த வேலு; ஓட்டல் தொழிலாளி. சேலத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள், சின்ன திருப்பதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். அருகிலேயே ஓட்டல் வைத்துள்ளனர்.

வெள்ளி, சனி மற்றும் அமாவாசை நாட்களில் குறி சொல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார் வேலு. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து, பொதுமக்கள் அவரிடம் குறி கேட்க வருகின்றனர். நேற்று காலை வேலு வழக்கம் போல வீட்டில் குறி சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் வசிக்கும் முனியம்மாள், அலமேலு மங்கை ஆகியோர், அங்கு சென்று வேலு குறி சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் முனியம்மாள், வேலுவை தாக்கினார். அலமேலு மங்கையும், வேலுவின் மனைவி தனலட்சுமியும் கைகலப்பில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

முனியம்மாள், அலமேலு மங்கை ஆகியோர் கூறியதாவது: வேலுவுடன் செந்தில், மணி, வெள்ளையன் ஆகியோர் இங்கு தங்கியுள்ளனர். எங்கிருந்தோ சாமி சிலைகளை திருடி வந்து, “நாங்கள் கூறினால் சாமி கூறியது போல உடனே நடக்கும்’ என்று கூறி ஏமாற்றுகின்றனர். இங்கு வருபவர்களிடம் மிரட்டி பணம் பறிக்கின்றனர். கன்னி கழியாத சிறுமிகளுக்கு, கன்னி கழிய வைப்பதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறியும் பணம் பறிக்கின்றனர். இரவு நேரத்தில் இப்பகுதியில் சூனிய தகடுகளை வைக்கின்றனர். நேற்று முன்தினம் கூட, இப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ஒரு சூனிய தகட்டை எடுத்தோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.

குறி சொல்லும் சாமியார் வேலு கூறியதாவது: நான் பல ஆண்டாக குறி சொல்லி வருகிறேன். பொதுமக்களிடம் வெற்றிலை, பாக்கு, இரண்டு ரூபாய் தட்சிணை மட்டும் தான் கேட்பேன். குறி கூறினால் 30 ரூபாய் வாங்குவேன். மேற்கொண்டு அவர்களிடம் பணம், பொருட்கள் எதையும் வாங்க மாட்டேன். நான் குடியிருக்கும் வீட்டுக்கு முன் நிறைய புற்கள் உள்ளது. அதை மேய்வதற்காக அருகில் இருக்கும் முனியம்மாள் தனது மாடுகளை இங்கு அவிழ்த்து விடுவார். மாடுகள் குறி கேட்க வருபவர்களை முட்ட வருகிறது என்பதால், “மாடுகளை இங்கு கட்ட வேண்டாம்’ என்று கூறினேன். அதனால், அவர்கள் என் மீது பொய் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு வேலு கூறினார். போலீசார், இரு தரப்பினரிடமும் தீவிரமாக விசாரிக்கின்றனர்.