Archive for the ‘சன் டிவி’ Category

ஜெயலலிதாவுக்கு முன்பு மற்றும் ஜெயலலிதாவுக்கு பின்பு: ஜெயலலிதாவுக்கு நிகராக இன்னொரு திராவிட தலைவர் உருவாகுவது கடினமே!

திசெம்பர் 11, 2016

ஜெயலலிதாவுக்கு முன்பு மற்றும் ஜெயலலிதாவுக்கு பின்பு: ஜெயலலிதாவுக்கு நிகராக இன்னொரு திராவிட தலைவர் உருவாகுவது கடினமே!

jaya-modi-gst-politicsஜெயலலிதாவும், ஜி.எஸ்.டி அரசியலும்: ஜி.எஸ்.டியை பற்றி அமித் மித்ரா எந்த அளவுக்கு தெரிந்து கொண்டிருக்கிறாரோ, அதைவிட ஜெயலலிதா தெரிந்து கொண்டிருந்தார் என்பதை, மோடி, அருண் ஜைட்லி, பியூஸ் கோயல் என்று படையெடுத்து வந்து ஜெயலலிதாவைப் பார்த்தது, சந்திக்க முயன்றது, மா ஃபோ பாண்டியன் பேசிய விதம் முதலியவை எடுத்துக் காட்டுகின்றன. இந்திய நிலையில், அதுதான் ஜெயலலிதாவை தேசியத்தலைவர் போன்ற தோற்றத்தை உருவாக்கியது. ஏனெனில், அவர்கள் கேரள அல்லது வங்காள முதலமைச்சர்களைச் சென்று பார்க்கவில்லை, பேசவில்லை. கடந்த தேர்தல்களில், தமிழகத்தில் பிஜேபியை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை. மோடி வந்து சென்றாலும், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தன்னுடைய பலத்தை நிரூபித்தார். ஜி.எஸ்.டியைப் பொறுத்த வரையில், சேவை வரி திரட்டும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என்று உறுதியாகக் கேட்டு வந்தது தமிழகம் தான். இந்நிலையில், காங்கிரஸ் கலாட்டா செய்து வருகின்ற நிலையில், பிஜேபி ஜெயலலிதாவின் ஆதரவை எதிர்பார்த்தது, ஆனால், ஜெயலலிதா காலமானது, எல்லாவற்றையும் முடக்கி விட்டது. ஜெயலிலதாவுக்குப் பிறகு, மோடியின் அதிமுக பக்கம் சாய்தலை இவ்வித்த்தில் தான் காணவேண்டும்.

jaya-death-gautami-letter-to-modiநடிகை கௌதமி மோடிக்கு எழுதிய கடிதம் (08-12-2016): ஜெயலலிதா இறந்த பிறகு, பலர் அவரை வாழ்த்தி வருவதே வினோதமான போக்காக இருக்கும் நிலையில், கௌதமி, ஜெயலலிதா மரணம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது, அதைவிட வினோதமாக உள்ளது. ‘அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மறைந்த நாள் வரை ஏன் யாரையும் பார்க்க விடவில்லை? ஏன் அவருடைய உடல்நலம் குறித்த தகவல்கள் ரகசியமாக உள்ளன? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாதா?’ என கேட்டுள்ளார்[1].  கடிதத்தில் இருந்து சில வரிகள்[2]: “I ask these questions now because it is a primary concern and right of every citizen of India to be aware of and informed about their democratically elected leaders. To be aware of their state of health and ability to perform their duties for the larger good of the people. To be concerned for the wellness and comfort of a beloved leader of the masses. And the fact that a tragedy of such tremendous scale should not go unquestioned and definitely, not unanswered, under any circumstances. If this be the case with a public figure of this magnitude, then what chance does the common citizen of India have when he fights for his personal rights? Gautami Tadimalla, 08.12.2016”. இப்படி அவரது பிளாக்கில் அக்கடிதம் வெளிவந்ததும், ஊடகங்கள், அதனை செய்தியாக்கி விட்டது[3].

jaya-death-suspicion-gautami-letter-to-modi-cr-saraswati-rebuttalஇப்பொழுது நடக்கும் ஊடகதர்மமும், செய்தி வெளியீடுகளும்: இன்றைக்கு பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் முதலியவற்றில் உள்ளவற்றையெல்லாம் செய்திகளாக்கி வருவது தரமற்ற செயலாக தெரிகிறது. பொதுவாக நிருபர்கள் விசாரித்து, செய்தித்தரம் உள்ளதா என்று பார்த்துதான், செய்திகளை அனுப்புவார்கள். அதனை, ஆசிரியர் பார்த்துப் படித்து, அதனை செய்தியாக வெளியிடலாமா வேண்டாமா என்று தீர்மானித்தப் பிறகு, வெளியாகும், இல்லை குப்பைத் தொட்டிக்கு போகும். பத்திரிக்கை / நாளிதழ் ஆசிரியர் ஊடகதர்மத்தைப் பின்பற்றி வந்தனர். ஆனால், இன்றைக்கு, குப்பைத்தொட்டிக்கு போகவேண்டிய விவகாரங்கள் செய்தியாகின்றன. இது நிருபர்கள் ஆதிக்கம் செல்லுத்துகின்றனரா அல்லது பத்திரிக்கை / நாளிதழ் ஆசிரியர் கைப்பாவைகளாக, பொம்மைகளாக வேலை செய்து வருகின்றனரா என்றா சந்தேகமும் எழுகின்றது. இன்றைக்கு, ஊடகங்கள் பெரும்பாலும், அரசியல் கட்சிகள், தொழிலதிபர்கள், அந்நியநாட்டு ஏஜென்டுகள்-சித்தாந்தவாதிகள் முதலியோரின் கைகளில் உள்ளது என்பது தெரிந்த விசயமாகி விட்டது. தெரிந்து விட்டநிலையிலும், அவை கவலைப்படுவதாக இல்லை. கூட்டணி கொள்ளையில், அவற்றிற்கு விளம்பரங்கள் கிடைக்கின்றன, வாழ்ந்து வளர்கின்றனர். மற்றவை வீழ்ந்து மறைகின்றன.

jaya-death-gautami-letter-to-modi-cr-saraswati-rebuttalகௌதமி கடிதத்தின் விவரங்கள்: “ஒரு சாதாரண இந்திய குடிமகளாக நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்[4]. சமீபத்தில் காலமான தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் கோடிக்கணக்கான நபர்களில் நானும் ஒருவர். ஜெயலலிதா சிறந்த அரசியல் தலைவர் மட்டுமல்லாமல் பெண்கள் தங்கள் வாழ்வில் எப்படி தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டும் என்பதற்கும் நல்ல உதாரணம். பல்வேறு நல்வாழ்வுத் திட்டங்களை அவர் நிறைவேற்றியுள்ளார். சமீபத்தில் காலமான அவரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன[5]. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, சிகிச்சை அளிக்கப்பட்டது, அவர் குணமாகி வருவதாக கூறப்பட்டது, திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது போன்ற பல சந்தேகங்கள் உள்ளன[6]. பல மர்மங்கள் நிறைந்திருக்கும் அவரது மரணத்தில் இருக்கும் சந்தேகங்களை பிரதமர் மோடி தீர்க்க வேண்டும். முதல்வரின் மரணம் குறித்து அறிந்து கொள்ள, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உள்ளது[7]. தனிப்பட்ட நபரின் மரணமாக இருந்தால் அறிந்துகொள்ள எங்களுக்கு உரிமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் மக்களால் விரும்பப்பட்ட, தமிழக முதல்வராக பதவி வகித்த ஒருவரின் மரணம் குறித்து அறிந்து கொள்ள முயற்சி செய்வது எந்த விதத்திலும் தவறும் இல்லை. இந்த கடிதம் குறித்து நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என நான் முழுமனதுடன் நம்புகிறேன். இந்த விஷயத்திலும் நீங்கள் உண்மையை வெளிக்கொண்டு வருவீர்கள் என நான் நம்புகிறேன்,” என தனது கடிதத்தில் கௌதமி கூறியுள்ளார்[8].

jaya-death-modi-cameசி.ஆர்.சரஸ்வதியின் பதில்: இதுதொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில்[9], “ஜெயலலிதா வேகமாக குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்தோம். அவர் நன்றாக தான் இருந்தார். திடீரென்று அவருக்கு மாரடைப்பு வரும் என்றோ, அவர் நம்மை விட்டு பிரிந்து செல்வார் என்றோ யாரும் நினைக்கவில்லையே?.அதிமுக அல்லாது தமிழகம் மற்றும் இந்தியா அளவில் கட்சியை சேர்ந்தவர்கள் அப்பல்லோ வந்து ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தனர். அவர் உடல்நலம் தேறி வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றே அனைவரும் கூறினர்[10]. இதை கௌதமி அவர்கள் பார்க்கவில்லையா? படித்து தெரிந்து கொள்ளவில்லையா?[11] அரசு மருத்துவர்களாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தானே சிகிச்சை அளித்தனர், ரிச்சர்டு என்ன அதிமுகவை சேர்ந்த மருத்துவரா? அத்தனை பேரும் ஜெயலலிதா நன்றாக இருப்பதாகவும், விரைவில் வீட்டுக்கு வந்து விடுவார் என்றும் பேட்டி கொடுத்தனர்[12]. அப்படியானால் அத்தனை பேரும் பொய் சொன்னார்கள் என்று கவுதமி சொல்கிறாரா?. வீணாக யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம்[13]. நன்றாக உடல் நலம் பெற்று வந்த அவருக்கு எதிர்பாராமல் உடல் நிலை மோசம் அடைந்ததாக லண்டன் டாக்டர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறாரே? ஏன் நேற்று கூட அப்பல்லோ நர்ஸ்களும், மருத்துவர்கள் எவ்வளவு அருமையாக சொல்லி இருக்காங்க? ஏன் காட்டவில்லை என்று கௌதமி கேட்குறாங்க? ஐசியூவில் இருக்கும் போது யாராக இருந்தாலும் முதல்வரை சென்று பார்க்க முடியாது,” என கூறியுள்ளார்[14].

 

© வேதபிரகாஷ்

12-12-2016

j-jayalalitha-1948-2016

[1] விகடன், ஜெ., மரணத்தில் ஏன் ரகசியம்? – கௌதமியின் கடிதம், Posted Date : 07:44 (09/12/2016); Last updated : 10:06 (09/12/2016).

[2] http://www.vikatan.com/news/india/74516-gautami-writes-to-pm-modi-on-the-mystery-surrounding-jayalalithaas-death.art

[3] Gautami Tadimalla, 4/472, Kapaleeswarar Nagar, Neelankarai, Chennai 600041, +917338713979.

https://gautamitadimalla.wordpress.com/2016/12/08/tragedy-and-unanswered-questions/

[4] தமிழ்.வெப்துனியா, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது: நடிகை கௌதமி பிரதமருக்கு கடிதம்!, Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2016 (10:46 IST)

[5] http://www.tamil.webdunia.com/article/regional-tamil-news/gautami-raises-questions-on-jayalalithaa-s-mystery-death-writes-to-pm-modi-116120900006_1.html

[6] மாலைமலர், ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை: பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி கடிதம், பதிவு: டிசம்பர் 09, 2016 11:09

[7] http://www.maalaimalar.com/News/District/2016/12/09110950/1055149/Jayalalithaa-death-controversy-actress-gowthami-letter.vpf

[8]

[9] லங்காஶ்ரீ, நடிகை கௌதமிக்கு காட்டமாக பதிலடி கொடுத்த சி.ஆர்.சரஸ்வதி, டிசம்பர்.09, 2016.

[10] தினசரி, அதிமுக குறித்து வதந்தி பரப்புவதை கௌதமி நிறுத்த வேண்டும்: ஸி.ஆர்.சரஸ்வதி ஆவேசம், 09-12-2016.09.15.PM IST.

[11] http://www.dhinasari.com/politics/10813-cr-saraswathi-condemn-gauthamis-remark-over-jayalalithas-death-row.html

[12] தினதந்தி, யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம்: ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகத்தை கிளப்புவதா? நடிகை கவுதமிக்கு, சி.ஆர்.சரஸ்வதி கண்டனம், பதிவு செய்த நாள்: சனி, டிசம்பர் 10,2016, 6:48 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, டிசம்பர் 10,2016, 11:15 PM IST;

[13] http://www.dailythanthi.com/News/State/2016/12/10184858/I-do-not-want-anyone-to-spread-rumors-Actress-Gautami.vpf

[14] http://news.lankasri.com/india/03/115131

குருவின் சாவிக்காக சிஷ்யைகள் சண்டை – பீட்டரிடம் சாவியிருந்தால் இந்த தொல்லை வந்திருக்காதே?

மே 7, 2012

குருவின் சாவிக்காக சிஷ்யைகள் சண்டை – பீட்டரிடம் சாவியிருந்தால் இந்த தொல்லை வந்திருக்காதே?

லெனின், நக்கீரன், தினகரன்: “இம்மூவரும்” முன்பு ஆபாச விடியோ எடுத்ததற்கு, டிவி-செனலில் விடாமல் ஒலி-ஒளிபரப்பியதற்கு, ஊடகங்களில் தாராளமாக தூண்டிவிடும் வகையில் செய்திகளை வெளியிட்டுப் பரப்பியதற்கு காரணமாக இருந்தார்கள். லெனின் குருப் தான் சரியான ஆள். அந்த ஆளிருக்கும் போது, பெட்ரூமிலேலேயே வீடியோ கேமரா வைத்து படம் எடுத்துள்ளதாக, ஊடகங்கள் வெளியிட்டு, பெரிய பிரச்சினையாகி இருந்தது. அப்பொழுது நித்யானந்தா அறையின் சாவியை யார் வைத்திருந்தது என்று தெரியவில்லை. அப்பொழுது, லெனின் குரூப் எப்படி உள்ளே சென்று வீடியோ கேமரா வைத்தான், ஆபாசப் படம் எடுத்தான் போன்ற விவகாரங்கள் தெரியவில்லை. ஒருவேளை “நக்கீரனுக்கு” பிரத்யேகமாகத் தெரிந்திருக்கக் கூடும். இப்பொழுது, லெனின் இருந்திருந்தால், சாவிக்காக இப்படி சிஷ்யைகள் சண்டை போட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

  சொர்க்க வாசலின் சாவியையே, பீட்டர் என்ற ஏசுவின் சீடர் வைத்திருந்தாராம். அதற்கு பலத்த எதிர்ப்பு, சண்டைகள் இருந்து வந்தனவாம். இது போப்புடைய அதிகாரத்தை இன்று எடுத்துக் காட்டுகிறது, ஏனெனில் முதல் போப், பீட்டர் என்று கிருத்துவப் புராணங்கள் கூறிகின்றன.அதாவது, சாவியுள்ளவரிடம் தான் அதிகாரம் இருக்கும். அது[போல, இளையப்பட்டம், முதியப்பட்டத்தின் சாவியை வாங்கிக் கொள்ள அவசரப்படுகிறது போலும்.

நிச்சயமாக, இவ்வளவு அவசரம் கூடாது சாமி. அதற்கு, சிஷ்யைகள் இப்படி சண்டைப் போட்டுக் கொண்டால், மடம் என்னாவது?

மதுரை ஆதீனத்தின் பெண் உதவியாளர் வைஷ்ணவி மீது தாக்குதல்: நித்யானந்தா பெண் சீடர் மீது புகார்[1]: மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் பெண் உதவியாளர் வைஷ்ணவி (வயது-28). இவர் தஞ்சை அருகே உள்ள கச்சனம் பகுதியை சேர்ந்தவர். பல மாதங்களாக அருணகிரி நாதரின் “நெருக்கமான”[2] உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்ட பின்னர் வைஷ்ணவியை அங்கிருந்து வெளியேற்ற நித்யானந்தா சீடர்கள் அவரிடம் தகராறு செய்து வருவதாக ஏற்கனவே புகார் எழுந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுரை ஆதீன மடத்தில் வருமானவரி துறை சோதனை நடத்தியது. அப்போது வைஷ்ணவியிடம் அதிகாரிகள் அதிக நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.

தினகரன் கூறுவது[3]: மதுரை ஆதீனத்தின் செயலாளாரான வைஷ்ணவி மீது நித்தியானந்தாவின் ஆட்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதாகவும்,சுடிதாரை கிழித்து விட்டதாகவும் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து சென்றனர். பத்திரிக்கையாளர்களை நித்தியானந்தாவின் ஆட்கள் ஆதினத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதற்கு மதுரை ஆதீனத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நித்தியானந்தாவின் ஆட்களுக்கும், மதுரை ஆதீனத்தின் ஆதரவாளர்களுக்குள் மோதல் மூண்டதாக கூறப்படுகிறது. தினமலர் கூறுவது[4]: மதுரை ஆதீன மடத்தில் ஆதீனம் தரப்பினருக்கும், நித்தியானந்தா தரப்பினருக்கும் இடையே மோதல் ‌ஏற்பட்டது. மதுரை ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டதை பெரும் சர்ச்சை நிலவிவருகிறது. இந்நிலையில் மதுரை ஆதீன மடத்திற்குள் பத்திரிகையாளர்களை அனுமதிப்பதாக வேண்டாமா என ஆதீன தரப்பினரு்க்கும், நித்தியானந்தா தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மடத்திற்க்குள்ளேயே மோதிக்கொண்டனர்[5].
தினமலரின் மற்றொரு செய்தி[6]: முன்னதாக மதுரை ஆதீன மடத்தில் பணிவி‌டை செய்து கொண்டிருந்த வைஷ்ணவி என்ற ‌பெண் சீடர் ஆதீன மடத்தினை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நித்தியானந்தா சீடர்கள் அப்பெண்ணை மிரட்டி தாக்கினார். இனி இங்கு உனக்கு வேலை இல்லை வெளியேறுமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மதுரை ஆதீன மடத்தில் பரபரப்பு ‌ஏற்பட்டுள்ளது. நக்கீரன் கூறுவது[7]: அருணகிரிநாதருடைய நெருக்கமான உதவியாளராக வைஷ்ணவி இருந்தார். அவரது தனி அறையின் சாவியை (பணம் மற்றும் தங்க நகைகள் உள்ள அறை) வைஷ்ணவியிடம் ஒப்படைத்துவிட்டு திருவண்ணாமலைக்கு சென்றார். இந்த நிலையில் வைஷ்ணவியிடம், நித்தியானந்தாவின் சீடர் ரிஷி மற்றும் அவரது மனைவி, ஆட்கள் அந்த சாவியை கேட்டதற்கு வைஷ்ணவி மறுத்துள்ளார். இதனால் வைஷ்ணவியை அவர்கள் தாக்கியதில் அவரின் சுடிதார் கிழிந்துவிட்டது.

ஆதினத்தின் அறை சாவிக்காக தகராறு: இந்த நிலையில் நேற்று மதுரை ஆதீனம் அருணகிரி நாதரும், இளைய ஆதீனம் நித்யானந்தாவும் திருவண்ணாமலையில் இருந்து மதுரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அவர்களது அறையை வைஷ்ணவி தயார் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது நித்யானந்தாவின் பெண் சீடர் மத்தியா (30) சமையல் செய்வதற்காக பாத்திரங்கள் வேண்டும் மதுரை ஆதீன அறை சாவியை தா என்று வைஷ்ணவியிடம் கேட்டுள்ளார். இதற்கு வைஷ்ணவி மதுரை ஆதீனம் சொன்னால் மட்டுமே சாவியை தருவேன் என்று கூறியதாக தெரிகிறது. அப்போது நித்யானந்தா சீடர்கள் வைஷ்ணவியை அடிக்க பாய்ந்தனர். அப்போது பெண் சீடர் மத்தியா, வைஷ்ணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்ததில் கிழிந்து விட்டது. அப்போது கதறி அழுத வைஷ்ணவி வெளியே வந்து நடந்த சம்பவங்களை விளக்கினார். இதனால் மதுரை ஆதீன மடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   இதற்கிடையில் நேற்று இரவு 8 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து மதுரை ஆதீனமும், நித்யானந்தாவும் மதுரை வந்தனர். அவர்களிடம் மடத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து கூறினார்.

சீஷ்யைகளிடம் சமாதான பேச்சு: மதுரை ஆதீனம் அருணகிரி நாதரும், இளைய ஆதீனம் நித்யானந்தாவும் வைஷ்ணவி, மத்தியா இருவரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அதன் பின்னர் அங்கு அமைதி ஏற்பட்டதாக மடத்தில் உள்ள சீடர்கள் தெரிவித்துள்ளனர். வைஷ்ணவி தாக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், நேற்று முன்தினம் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டபோது முக்கிய ஆவணங்களை வைஷ்ணவி சொல்லித்தான் ஆதீனத்திடம் அதிகாரிகள் கேட்டு பெற்றதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில்தான் வைஷ்ணவியை நித்யானந்தா சீடர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த மோதல் சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து மதுரை ஆதீனம் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

பத்திரிக்கைக்காரர்களுக்கு சொன்னது: நேற்று ஆதீன மடத்தில் பெண் சீடர் வைஷ்ணவி தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து இரவு அனைவரையும் அழைத்து விசாரித்தோம். பின்னர் அவர்களை சமரசம் செய்து வைத்தேன். மற்றப்படி எந்த பிரச்சினையும் இல்லை. இது ஒரு சாதாரண சம்பவம் சிலரால் பெரிதாக்கப்பட்டுள்ளது. இப்போது மதுரை ஆதீன மடத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. நேற்று முன்தினம் நடந்த வருமான வரித்துறை சோதனையின்போது அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கமாக பதில் கொடுத்துள்ளோம். அவர்கள் மடத்தின் கணக்கு புத்தகங்களை எடுத்து சென்றுள்ளனர். மற்றபடி ஒன்றுமில்லை. இவ்வாறு மதுரை ஆதீனம் கூறினார்.

வேதபிரகாஷ்

07-05-2012


 


[2] இப்படி விவரித்துள்ளது “நக்கீரன்” தான்!

எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும் – கருணாநிதியின் திராவிட முழக்கம்!

பிப்ரவரி 24, 2012

எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும் – கருணாநிதியின் திராவிட முழக்கம்!

பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்!’: கருணாநிதி உருக்கமான வேண்டுகோள்[1]: “உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவுறுத்தி உள்ளார். இருப்பினும் அவரது குடும்பத்தில் உள்ள பாப்பாத்திகளையும், அந்த பாப்பாத்திகளுக்குப் பிறந்தவர்களையும் விரட்டியடிப்பாரா என்று தெரியவில்லை.
கருணநிதியின் அறிக்கை (கடிதமாக உள்ளது): திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா, 27ம் தேதி தி.மு.க., தலைமை நிலையத்தில், எனது தலைமையில், அன்பழகன் முன்னிலையில் நடக்கிறது. அதில், தி.க., வீரமணி, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மோகன், நன்னன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். திராவிட இயக்கத்தின் தோற்றம், அதன் மேன்மை பற்றியும் பேசுகிறார்கள்.

திராவிட நாடு கோரிக்கையை குப்பையில் போட்ட மாவீரர்கள்: ”ஒருவன் உள்ள வரையில்,  குருதி ஒரு சொட்டு  உள்ளவரையில் திராவிட நாட்டின் உரிமைக்குப் போரிடச் சிறிதும் பின்னிடல் இல்லை” என்றார் பாரதிதாசன். (பாராளுமன்றத்தில் அரசியல் நிர்ணய சட்டத்தில் தனிநாடு கேட்கும் கட்சிகளின் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்றதும், திராவிட வீரர்கள் தங்களின் வால்களை சுருட்டிக் கொண்டனர். அண்ணாதுரை பாராளுமன்றத்தில் பேசியதும் வேடிக்கைதான். ஏனெனில் கோரிக்கையை விட்டு ஆட்சியைப் பிடிததது திமுக!)

கால்டுவெல்லின் பொய்களை நம்பும் ஆட்கள் இங்குதான் இருப்பார்கள் போலும்[2]: கடந்த, 1856ல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல் தான், திராவிட மொழி பேசும் மக்கள் ஒரே இனத்தவர் எனக் குறிப்பிட்டார். திராவிடர் என்ற பெயரை அவர் தான் முதன் முதலாக உபயோகித்தார்என்ற குறிப்புகளும் உள்ளன (மாக்ஸ் முல்லரைத் தொடர்ந்து, கால்டுவெல்லும் தனது கருத்தை மாற்றிக் கொண்டார். ஆனால், அத்தகைய திருத்தம் செய்யப்பட்ட பதிப்பு இந்தியாவில் வெளியிடப் படவில்லை. இன்று ஆரியர்-திராவிடர் என்ற இனங்கள் எல்லாம் கட்டுக்கதை என்று மெய்பிக்கப் பட்டு விட்டது. சரித்திர ஆசிரியர்கள் யாரும் ஒப்புக் கொள்வதில்லை. அதுமட்டுமல்லாது திருட்டுத் தனமாக அகழ்வாய்வு செய்து பல ஆதாரங்களை மறைத்து விட்ட பாதகன் இந்த கால்டுவெல்[3]).

அரைத்த மாவை அரைக்கும் கருணாநிதி: மனோன்மணியம் எழுதிய சுந்தரம் பிள்ளை, “திராவிட நல் திருநாடும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்[4]. 1912ம் ஆண்டு தோன்றிய, “மெட்ராஸ் யுனைடெட் லீக்’ சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா, 1913, டாக்டர் நடேசன் மருத்துவமனைத் தோட்டத்தில் நடந்தது. “சங்கத்தின் பெயர், அதன் நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை’ என சிலர் பேசினர். அப்போது டாக்டர் நடேசன் தான், “திராவிடச் சங்கம் என்று பெயர் மாற்றலாம். ஏனென்றால், நாமெல்லாம் திராவிடர்களாயிற்றே’ என, முடிவைத் தெரிவித்தார். அதை, அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.

சரித்திரத்தைத் திரித்து கூறும் கருணாநிதி[5]: பிட்டி தியாகராயர் திராவிட இனத்தின் மீது மாறாத அன்பு கொண்டவர்.தொடக்கத்தில் தியாகராயர் பெரும் வைதீகராக இருந்தார். தன் இல்லத்திலேயே சிலை வைத்து புரோகிதரைக் கொண்டு பூஜை புனருத்தாரணம் எல்லாம் செய்து வந்தார்.   அப்படிப்பட்டவர் டாக்டர் நடேசன் தொடர்பு ஏற்பட்ட பிறகு, வைதீகத்திலிருந்து விலகி வந்து, பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பில் அதிகத் தீவிரம் காட்டத் தொடங்கினார்[6]. அப்படிப்பட்ட தியாகராயர் 1917ல் நடைபெற்ற சென்னை மாகாண முதலாவது நீதிக் கட்சி மாநாட்டில் உரையாற்றும்போது, பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிப்பது திராவிட மரபன்று. திருவள்ளுவர் முதலிய திராவிடத் தலைவர்கள் பிரம்மனின் முகத் துதித்தோர் யாம் என்று பெருமை பேசினாரில்லை.  பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கற்பித்தோரும் நால்வகைச் சாதி இந்நாட்டில் நாட்டினோரும் ஆரியரே. அவ்வருணாச்சிரமக் கோட்டையை இடித் தெறிய 2400 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய புத்தர் முயன்றார், முடியவில்லை. பின்னர் வந்த பல சீர்திருத்தவாதிகள் முயன்றனர், தோற்றனர். ராமானுசரும் புரோகிதக் கொடுமைகளைக் களைந்தெறிய ஒல்லும் வழியெல்லாம் முயன்றார், தோல்வியே கண்டார்.

திராவிடத் தலைவர்கள் ஆங்கிலேயர்களின் அடிவருடிகளான உண்மையை மறைக்கும் கருணாநிதி[7]: பார்ப்பனர் பிடி மேன்மேலும் அழுத்தமுற்றே வந்தது. தீண்டாமை, அண்டாமை, பாராமை முதலிய சமுதாயச் சீர்கேடுகளும்  படிப்படியே பரவிப் பெருகலாயின. அத்தகைய பலம் பொருந்திய சாதிக் கோட்டையை தகர்த்தெறிய, இதுவே தக்க காலம்.  இதுவே தக்க வாய்ப்பு என்று முழங்கினார். பி அண்ட் சி மில்லில் அப்போது ஒரு வேலை நிறுத்தப் போராட்டம். அதுகுறித்து தியாகராயருக்கும், ஆளுநராக இருந்த வெல்லிங்டன் பிரபுவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று, அதில் ஆத்திரமடைந்த தியாகராயர் வெளியே வந்து விட்டார்.  அப்போது முதலமைச்சர் பதவியில் இருந்த பனகல் அரசர் தியாகராயர் வெளியே வந்ததைக் கேள்விப்பட்டு, உடனடியாக ஆளுநரைச் சந்தித்து, எம் தலைவரிடம் மன்னிப்புக் கேட்காவிட்டால், எங்கள் மந்திரிசபை ராஜினாமா செய்யும் என்று தெரிவித்தாராம். ஆளுநரும் அவ்வாறே உடனடியாக மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தாராம். டாக்டர் நடேசனுக்கு துணை நின்ற மற்றொருவர் டாக்டர் டி.எம். நாயர். ஆரியர் வருகையிலிருந்து அவர் பேச்சைத் தொடங்கினால், இடையிலே புராண, இதிகாசக் கதைகளையெல்லாம் கூறி மக்களை உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தக் கூடிய பேச்சாளர். தென்னகத்தில் ஒன்றிரண்டு தவிர, மற்ற எல்லாப் பதவிகளிலும் பார்ப்பனர்கள் உட்கார்ந்து விட்டார்கள். உயர்நீதிமன்ற நீதிபதிகளாகநியமிக்கப்பட்ட ஒன்பது இந்தியரில், எட்டு பேர் பார்ப்பனர்கள், ஒருவர் நாயர். உதவி கலெக்டர்கள் 146 பேரில் 77 பேர் பார்ப்பனர்கள். 125 மாவட்ட நீதிபதிகளில் 93 பேர் பார்ப்பனர்கள். மக்கள் தொகையில் நூற்றுக்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர்கள், இத்தனை வேலைகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று இந்தப் புள்ளி விவரங்களை அடுக்கிச் சொல்லி, இந்த அநீதியை இப்படியே தொடர விடலாமா? என்று கர்ச்சிப்பார்.

“பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்கம்’ என்ற அறிக்கை: டி.எம்.நாயர், 1917ல், சென்னை ஸ்பர்டாங் சாலை அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையும், சர்.பிட்டி.தியாகராயர், 1918ல் நீதிக் கட்சியின் சார்பில் வெளியிட்ட, “பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்கம்’ என்ற அறிக்கையும், திராவிடருக்கான ஆதி ஆவணங்கள் எனப் போற்றப்படுகின்றன. டாக்டர் நாயரின் புகழ் பெற்ற அந்த உரையில், வீரத் திராவிடர்களே என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். லண்டனிலும், சென்னையிலும் என்னைப் பெரிய டாக்டர் என்று சொல்கிறார்கள். நான் எம்.டி. பட்டதாரி. எனக்கு ஏராளமான வருமானம் வருகிறது.  என் செலவு போக, என் வருமானத்தில் மீதப்படும் பணத்தையெல்லாம், என்னருமைத் தலைவர் பிட்டி தியாகராயரைப் போன்று, உங்களைப் போன்ற திராவிட மக்களைத் தட்டி எழுப்பும் நீதிக் கட்சியின் வளர்ச்சிக்காகச் செலவிடுவதில் பெருமைப்படுகிறேன். நாயரின் உரையில், “திராவிடத் தோழர்களே… நீங்கள் எல்லாம் உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, நீதிக் கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் மக்களுக்கு பலம் வரும். நம் எதிர்க்கட்சியான, பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்’ என முழங்கியதைத் தான், நான் இப்போதும் திரும்பக் கூற விரும்புகிறேன்.

முரசொலி மாறனின் புரட்டு வரலாறு[8]: “திராவிட இயக்க வரலாறு’ என, முரசொலி மாறன் எழுதிய நூலில், உயர் பதவியில் ஒரு பிராமணர் நியமிக்கப்பட்டால், உடனே தன் நியமன அதிகார வரம்புக்குட்பட்ட பிற பதவிகளிலும் தங்களது இனத்தாரைக் கொண்டு வந்து நிரப்புவதும், தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்’ என எழுதியதோடு, அதற்கு உதாரணங்கள் சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளார். வருவாய்த் துறை வாரியம் ஒருமுறை ஆய்வு நடத்திய போது ஜி. வெங்கட்ரமணையா என்கிற உயர் பதவி வகித்த பிராமணருக்கு உறவினர்களும், தொடர்புடையவர்களும் மாத்திரம் அந்தத் துறையில் 49 பேர் இருந்தது தெரியவந்ததாம். 1890 களில் செங்கற்பட்டிலும், சென்னை நகரிலும் தோன்றிய வெம்பாக்கம் அய்யங்கார் குடும்பம் (புகழ் பெற்ற சர். பாஷ்யம் அய்யங்கார் வகையறா) ஆங்கிலேயர் ஆட்சியில் கிடைக்கும் உத்தியோகங்களையெல்லாம் நன்கு நுகர்ந்தது.

ஐயர்கள் நாயர்கள் ஆனார்களா இல்லை நாயர்கள் ஐயர்கள் ஆனார்களா?: 1861லிருந்து 1921 வரை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஐவர் சட்டசபை உறுப்பினர்களாகவும், இருவர் அட்டர்னி ஜெனரல்களாகவும், மூவர் உயர்நீதி மன்ற நீதிபதிகளாகவும், மூவர் ஸ்மால்காஸ் கோர்ட் நீதிபதிகளாகவும், மாண்டேகு,செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தத்தில் உதயமான ஆட்சியில் ஒருவர் உள்துறை அமைச்சராகவும், மூவர் மாநில அரசின் துணை செகரட்டரிகளாகவும் இருந்திருக்கின்றனர். மேலும் பலர் தாசில்தாரர்களாகவும், பப்ளிக் பிராசிகியூட்டர்களாகவும், டெபுடி கலெக்டர்களாகவும் இருந்தனர் என்று மாறன் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்த உண்மை வரலாறுகளையெல்லாம் திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு நினைவு படுத்தும் வகையில்தான் திராவிட இயக்க 100ம் ஆண்டு தொடக்க விழா நடைபெறவுள்ளது. அந்த நிகழ்ச்சியில் நம்மைப்பற்றி புரிந்துகொள்ள தெரிந்து கொள்ளத்தக்க பல விவரங்களை சான்றோர் பலர் விளக்கிட உள்ளார்கள்.

உண்மை வரலாறு எது என்று தெரிந்தால் தமிழர்கள் உருப்பட்டு விடுவார்கள்[9]: இந்த உண்மை வரலாறுகளை எல்லாம் திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் தான், திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா நடக்கவுள்ளது. ஆண்டு முழுவதும் கொண்டாடப் போகிறோமே, துவக்க விழாவில் கலந்து கொள்ளாமல் விட்டால் என்ன என நினைத்துவிடக் கூடாது. இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார் (உண்மை வரலாறு என்னெவென்று தெரிந்து கொண்டால் தமிழர்கள் உருப்பட்டு விடுவார்கள். அவ்வாறு தெரியவிடாமல், தமிழர்களை இத்தகைய பொய்யான இனவாத சித்தாந்தங்களை வைத்துக் கொண்டு முட்டாள்கKஆல்லி விட்டதால், கடந்த 60-100 வருடங்களில் தமிழர்கள் முன்னேறாமல், பின் தங்கியே உள்ளர்கள்).

வேதபிரகாஷ்

24-02-2012


[1] தினமலர், பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்!’: கருணாநிதி உருக்கமான வேண்டுகோள், பிப்ரவரி 23,2012, http://www.dinamalar.com/News_detail.asp?Id=412586

[2] சி. பி. பிரௌன் என்ற பாதிரி தான் கால்டுவெல்லிற்கு சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்தார். அவர் கால்டுவெல்லின் அயோக்கியத்தனத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அவற்றைப் படித்தறிந்தால், தமிழர்கள் நிச்சயமாகத் திருந்துவார்கள். அதுமட்டுமல்லாது, கால்டுவெல் சாணார்களை பற்றி மிகவும் கேவலமாக தனது புத்தகத்தில் எழுதியுள்ளான். அதனால் அப்புத்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

http://dravidianatheism.wordpress.com/2011/02/18/denigrating-tamils-with-robert-caldwell/

http://dravidianatheism.wordpress.com/2010/01/30/caldwell-purana-continues/

http://dravidianatheism.wordpress.com/2010/01/30/house-of-caldwell-converted-to-memorial/

http://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-government/

[3] நாணயங்கள், முக்கியமான சரித்திர அதாரங்கள் மறைப்பு!:அங்கிருந்து ஆயிரக்கணக்கில், ஓலைச்சுவடி புத்தகங்களை எடுத்து இங்கிலாந்திற்கு அனுப்பினார். தமிழ் தொன்மையினை ஆராய்ந்து அதனை மாக்ஸ்முல்லரின் ஆராச்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தபோது, இந்தியாவின் ஒட்டுமொத்த ஒருமைப்பாடு அதிர்ச்சியளித்தது. ஓலைச்சுவடி புத்தகங்களைப் படித்து தாமரைப்பரணி ஆற்றங்கரையில் உள்ள பழைய காயல் என்ற ஊர்தான் மிகவும் பழமையானது என்று தெரிந்து கொண்டார். அதுமட்டுமல்லது அது பாண்டியர்களின் துறைமுகமாக இருந்தது, போன்ற விஷயங்களையும் தெரிந்து கொண்டார். பல இடங்களில் பழமையான நாணயங்கள் முதலியவற்றைக் கண்டதும் திகைத்தார். ஏனெனில், அவையெல்லாம், இந்திய ராஜ வம்சாவளியினரின் கடற்பயணங்களைக் குறிக்கும் ஆதாரங்களைக் கொண்டிருந்தன. சர் வால்டர் எல்லியட் எடுத்துக் காட்டியபடி, கப்பல் பொறிக்கப்பட்டுள்ள நாணயங்களையெல்லாம், சாமர்த்தியமாக மறைத்துவிட்டார். பிறகு அரசு பூர்வமாக அறிவிக்கவேண்டுமேயன்று, அனுமதியுடன் அகழ்வாய்வு மேற்கொண்டதுபோல், பிறகு பழங்கால கட்டிடங்கள், கோவில்கள் முதலியவற்றின் அஸ்திவாரங்களுக்கு அருகில் நோண்ட ஆரம்பித்தார்.  அதன்மூலமாகத்தான், தாழிகள், பளபலப்பான மற்றும் கலைநயம் பொருந்திய மண்பாண்டங்கள் , மீன் இலச்சினையுடைய பாண்டியர்களது நாணயங்கள் முதலியவற்றைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார். இப்படி திருட்டுத் தனமாக, அகழ்வாய்வு மேற்கொண்டு பல ஆதாரங்களை மறைத்தவர் தான் கால்டுவெல்.

http://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-government/

[4] அப்பாட்டிலேயே சில வரிகள் நீக்கப்பட்டன, மாற்றியமைக்கப் பட்டுள்ளன என்பதெல்லாம் தெரிந்தால், குட்டு வெளிப்பட்டு விடும்.

[6] தினகரன், திராவிட இயக்கத்தின் 100ம் ஆண்டு விழா திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு, http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=3671

[7] பி. ராமமூர்த்தி, ஆரிய மாயையா? திராவிட மாயையா? விடுதலைப் போரும், திராவிட இயக்கமும், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1987.

[8] முரசொலி மாறன், ஏன் வேண்டும் இந்த இன்பத் திராவிடம், முத்துவேல் பதிப்பகம், திருச்சிராப்பள்ளி, 1957.

[9] குணா, திராவிடத்தால் வீழ்ந்தோம், தமிழக ஆய்வரண், பெங்களூர், 1995.

சோனியாவும், ஸ்டாலினும்: அயல்நாடுகளுக்குச் சென்றுவரும் மர்மங்கள்!

செப்ரெம்பர் 17, 2011

சோனியாவும், ஸ்டாலினும்: அயல்நாடுகளுக்குச் சென்றுவரும் மர்மங்கள்!

 

அதிகாரம், பலமுள்ள அரசியல்வாதிகளை நம்பி பிழைப்பு நடத்துக் கட்சிகள்: சோனியாவும், ஸ்டாலினும் இந்தியாவையும், தமிழகத்தையும் ஆளத்துடிக்கும் பலமும், அதிகாரமுள்ள அரசியல்வாதிகள். கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையை பலவிதங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருபவர்கள். இன்றளவில், விஷயங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும், அவற்றைத் தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமைகள் உள்ளன என்றெல்லாம் சொல்லப்படுள்ளது. அதற்கேற்றார்போல சட்டங்கள் கூட இருக்கின்றன. ஆனால், அத்தகையவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வரும்போது, தனிப்பட்ட முறையில், மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள, ஓய்வு எடுக்க, வார இறுதி நாட்களைக் கழிக்கச் சென்று வருகிறார்கள் என்று செய்திகள் வருகின்றன. ஆனால், இதனால் மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப் படுகின்றனர் என்பதை மக்களே அறியமுடியாத அளவிற்கு நிலைமை ஏற்ப்பட்டுள்ளது. சோனியா இந்தியாவில் இல்லாத போது, காங்கிரஸ்காரர்கள் உருப்படியான வேலை எதுவும் செய்யவில்லை[1], ஏனெனில் ஆணைகள் கிடைக்காததால், ஏனோதானோ என்று அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்தார்கள். இதற்கும், எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் இருந்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டதிற்கும் எந்த வேறுமையும் இல்லை. திமுகவைப் பொறுத்த வரையிலும், ஆட்சியில் இல்லாததால் அத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டிய எந்த பிரச்சினையும் இல்லை.

 

ஸ்டாலினின் லண்டன் பயணங்கள் (2008-2011): இங்கிலாந்திற்கு தமிழகத்திலிருந்து, குறிப்பாக திமுகவினர் அல்லது திமுகவை ஆதரிக்கும் நபர்கள், வியாபாரிகள்[2], நடிகர்கள், நடிகைகள்[3] சென்றுவருவதால், அவர்கள் தனிப்பட்ட முறையில் சென்று வருவதைத் தவிர, இந்தியாவை பாதிக்கும் வகையில் மற்ற விஷயங்களில் ஈடுபடுகிறார்களா என்று பார்க்க வேண்டிய நிலையில் இந்திய மக்கள் உள்ளார்கள்.

 

பிப்ரவரி 2011: கடந்த பிப்ரவரியில் 2011 சென்றபோது, திமுக-காங்கிரஸ் தேர்தல் பேச்சு வார்த்தைகள் பாதித்தன அப்பொழுது அவரது நண்பர் ராஜாசங்கர் செறிருந்தார்[4].

 

ஆகஸ்ட்-செப்டம்பர் 2009: முன்பு ஆகஸ்ட் 31, 2009 அன்று லண்டன் சென்றபோது, அமெரிக்கக் குழுவிடன் “கூவம் சம்பந்தமாக” நடத்த வேண்டிய பேச்சுவார்த்தைகளையும் நிறுத்துவிட்டு சென்றுள்ளார்[5]. அப்பொழுதும், சிகிச்சைக்குச் சென்றார் என்று குறிப்புகள் கொடுக்கப் பட்டனவேயன்றி, வேறெந்த விவரங்களும் அறிவிக்கப் படவில்லை. உதயநிதியும் சென்றிருந்தார். நாங்கள் தனிப்பட்ட முறையில் சென்றிருந்தோம், அரசு தரப்பில் செல்லவில்லை”, என்றார்[6].

 

ஜூன் 2008 – “வியாபார நிமித்தமாகச் சென்றாரா?”: அதற்கும் முன்பாக ஜூன் 2008ல் சென்றபோதும், இதே மாதிரி சொல்லப்பட்டது[7]. ஆனால் வியாபார நிமித்தமாக சென்றார் என்று ஆங்கில ஊடகங்கள் / பத்திரிக்கைகள் வெளியிட்டன. ஸ்டாலினுடைய இணைத்தளத்தில், ஒரு திமுக பக்தர், ஸ்டாலின் மருத்துவ சிகிச்சைக்காக லண்டனுக்குச் சென்றதைக் கேள்விபட்டு, அவரது ஆரோக்கியத்திற்காக ஆண்டவனை பிரார்த்திப்பதாக பதிவு செய்துள்ளார்[8]. நல்லவேளை, நாத்திகத் தந்தையார்[9] ஒன்றும் இடக்கு-மடக்காக எந்த கமண்டும் அடிக்கவில்லை போலும்!

 

இப்பொழுதைய பயணம் (செப்டம்பர் 2011): மு.க.ஸ்டாலின் கடந்த  4ஆம் தேதி  சென்னையில் இருந்து லண்டனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக புறப்பட்டு சென்றார்[10]. பிறகு 10 நாட்கள் ஓய்விற்குப் பிறகு, சென்றிருந்த, 14-09-2011 அன்று அதிகாலை சென்னை திரும்பினார். திமுக பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா, மகள், மறுமகன், பேரன்கள் மற்றும் குடும்பத்தினருடன் சென்றிருந்தார்[11]. 10 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை 3.15 மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் ஸ்டாலின் சென்னை திரும்பினார்[12].

 

இந்தியர்கள் ஏன் கவலைப் படவேண்டும்?தனிப்பட்ட நபர்களாக, இந்திய குடிமகன்களாக, யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். ஆனால், அரசியல், வியாபாரம், அரசு என்றெல்லாம் வரும் போது, அவர்கள் அவ்வாறு பிரித்துப் பார்ப்பதில்லை, முறைகளைக் கடைப்பிடிப்பதில்லை என்பதிலிருந்துதான், பொது மக்கள் கவலைப் படவேண்டியுள்ளது. சோனியா அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தபோது, யார்-யாரெல்லாம் சென்று பார்த்தார்கள், நலம் விசாரித்தார்கள், நலம் பெற வாழ்த்தினார்கள் என்று இந்தியர்களுக்குத் தெரியாது. ஆனனல், அவர்களில் வியாபார நிமித்தமாக அல்லது அப்படி யாராவது சென்று பார்த்து வைத்தால், நாளைக்கு உபயோகமாக இருக்குமே என்று பார்த்து வந்தவர்கள் யார் என்றும் இந்தியர்களுக்குத் தெரியாது. இங்குதான் பிரச்சினை வருகிறது. இத்தகைய அரசு-அரசியல் சாரா தனிப்பட்ட சந்திப்புகள், பிரயாணங்களில் மற்றவர்கள் இருப்பது பிரச்சினையை, வேறு கோணங்களிலும் திருப்புகிறது.


[1] இருக்கும்போதும் செய்யமாட்டார்கள் என்பது வேறு விஷயம்! காங்கிரஸ் அல்லாத ஆளுக் கட்சிகள் மற்றும் அவர்களது அரசுகளைக் கவிழ்க்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதை அரசு இந்திரங்களை உபயோகித்துச் செய்து வருவர். அந்த வேலையே, பெரியவேலை அவர்களுக்கு!

[2] இதில் ஒரு பெரிய பட்டியலே உள்ளது. அவர்கள் அமெரிக்கா, மொரிசியஸ், மாலத்திவு முதலிய நாடுகளுக்கும் சென்றுவருகின்றனர். சில ஒப்பந்தங்கள், பரிமாற்றங்கள் அங்குதான் செய்யவேண்டியுள்ளன.

[3] குஷ்புவும் அடிக்கடிச் சென்று வருவது குறிப்பிடத் தக்கது. ஒருமுறை நிருபர்கள் கேட்டபோது, ஹனிமூன்/தேன்நிலவிற்காக செல்வதாக கூறியுள்ளார்.

[6] ……..son, Udayanidhi) said his trip was personal: “There is nothing official and I did not go on behalf of the state government.”

http://www.outlookindia.com/article.aspx?261919

[7] The sudden visit set tongues wagging. According to sources in the rulign DMK party, Stalin and family had gone on a holiday. But some party sources said it was for a medical check-up and rest and others made it out to be a business visit.

http://www.thaindian.com/newsportal/politics/tamil-nadu-minister-stalin-family-in-london_10056695.html

[8] Dear Respected Sir first of all i wish and pray for the god to give good health for you. Recently i saw the news paper that you had been to London for Medical check up that makes me worried lot. Because i love your the way of doing under your control( rural minister)……………………………… If you have any direct email please let me know i wish to send e mail as a party man suggest my openion and etc..

Posted by Duraimurugan 

http://www.mkstalin.net/viewcomments.php?month=6&year=2008

[9] முன்பு ஒரு தொண்டர் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு வந்தபோது, “என்ன……நெற்றியில் ரத்தம் வருகிறது……….” என்று நக்கலாக கருணாநிதி கமண்ட் அடித்ததை நினைவு கூறவேண்டும்.

சட்டத்திற்கு புறம்பாக ஏதும் செய்யவில்லை: சாமியார் நித்தியானந்தா!

மார்ச் 7, 2010

பிரச்சினையில் உள்ளது தினகரன் பத்திரிக்கையும் ஒன்று.
வியப்பாக, அதுவே இப்படியொரு செய்தியை வெளியிட்டுள்ளது!

சட்டத்திற்கு புறம்பாக ஏதும் செய்யவில்லை: சாமியார் நித்தியானந்தா[ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 12:51.49 PM GMT +05:30 ]

http://www.newindianews.com/view.php

.?2bdRfmAc3dc036QAY3e4a4qe0AKcd0eavXO4A2cd22Amlvxa2ecKU46A4ce0eYmM0604b43cYDRLd0

சென்னையிலுள்ள வழக்குரைஞர் ஸ்ரீதருக்கு சாமியார் நித்தியானந்தா தனது பேச்சுகள் அடங்கிய சி.டி.யை அனுப்பி வைத்துள்ளார். அதில் தான் சட்டத்திற்கு புறம்பாக ஏதும் செய்யவில்லை என்றும் இவை எதிரிகளின் சதித்திட்டம் என்றும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்யானந்தா ஒன்றாக இருப்பது போன்று படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சாமியார் மீது சென்னை போலீசார் 2-வழக்குகளை பதிவு செய்தனர். அவர் எங்கு இருக்கிறார் என்பது மர்மமாக இருந்து வந்தது.

இந்நிலையில் வீடியோ மூலமாக நித்யானந்தா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் உள்ள அவரது வக்கீல் ஸ்ரீதருக்கு தனது பேச்சுகள் அடங்கிய சி.டி.யை அனுப்பி வைத்துள்ளார். அதில் நித்யானந்தா கூறியிருப்பதாவது:-

எனக்கு எதிராக விஷமிகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர். இதுவே என்னை பற்றி தவறான தகவல்கள் வெளிவர காரணமாகும். என் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக நான் சந்திக்க தயாராக உள்ளேன்.

இவ்வாறு நித்யானந்தா கூறியுள்ளதாக அவரது வக்கீல் ஸ்ரீதர் தெரிவிதார்.

இதற்கிடையே நடிகை ரஞ்சிதாவும், நித்யானந்தா சாமியாரும் ஒன்றாக இருப்பது போன்ற படங்களை நான்தான் எடுத்தேன் என்று சாமியாரின் சீடர் லெனின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இவர் கொடுத்த புகாரின் பேரில் நித்யானந்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமியாரின் அந்தரங்க விஷயங்களை லெனின் படம் எடுத்து வெளியிட்டதும் சட்டப்படி குற்றமாகும். இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்யலாம் என்று சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நித்யானந்தாவை லெனின் ஆபாசமாக படம் எடுத்து வெளியிட்டது எந்த மாதிரியான குற்றம் என்பது குறித்து வக்கீல் வானதி சீனிவாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தகவல் தொழில் நுட்ப சட்டப்படி, ஒருவரின் அந்தரங்க விஷயங்களை ஆபாசமாக படம் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் ஆபாசபடம் எடுத்த லெனின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யலாம்.

இந்த குற்றம் நிருபிக்கப்பட்டால் லெனினுக்கு 2-ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

இதேபோல் கேபிள் டிவி. ஒளிபரப்பு சட்டத்தின் கீழ், உள்ளங்களை மாசுபடுத்தும் விதத்தில், ஆபாசமான காட்சிகளை காட்டுவதும் தவறானது. இதுவும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்

காந்த படுக்கை விவகாரத்தில் சன் டிவி நிருபர் (பழைய செய்தி)!

மார்ச் 7, 2010

காந்த படுக்கை விவகாரத்தில் சன் டிவி நிருபர்!

[லெனின் கருப்பன் உள்ளாரா என்று தேடப்படுகிறது]

“காந்த படுக்கை மோசடி” தொடர்பாக நீதிமன்ற நடவரிக்கைகளைப் படம் பிடிக்க வந்த சில நிருபர்களில் சுரேஸ் என்பரும் இருந்தார். அப்பொழுது குற்றம் சாட்டப் பட்ட தரப்பில் ஆஜரான ராமசாமி என்ற வக்கீல் அதிகாரம் இல்லாமல் நீதிமன்றத்திற்குள் படமெடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். (Asian Age 6.2.03)

கே. கே. சுரேஸ்குமார் “காந்த படுக்கை மோசடி” தொடர்பாக ஒரு வழக்கறிஞர் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார்.  இவர் சன் டிவியில் நிருபராக வேலை செய்து வந்தார்.  இவர் தமது நன்பர்களுடன் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் வக்கில்களுடன் வாதிட்டதாகவும், அதில் மிரட்டியதாகவும் சொல்லப்பட்டது. அதனால் பார் அசோசியேசனின் தலைவர்  ஜெயபாலன் (IV metropolitan magistrate) அவர்களிடம் புகார் கொடுத்தார். சுரேஸ்குமாரும் கோட்டூர்புரம் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். பிப்ரவரி 4, 2003 அன்று வழக்கை விசாரித்து, அவருக்கு பிணை-விடுதலை அளிக்கப்பட்டது. (The Hindu dated 05.02.2003)

MEDIA/FREEDOM OF PRESS – 2003, Compiled By K. Samu,Human Rights Documentation,Indian Social Institute, Lodi Road, New Delhi

Click to access Media-2003.pdf

காந்த படுக்கை மோசடி பற்றிய நீதிமன்ற தீர்ப்புகளை இங்கே பார்க்கலாம்:

http://www.indiankanoon.org/doc/378163/

http://www.indiankanoon.org/doc/267753/

சாமியாருடன் நடிகை ரஞ்சிதா படுக்கை அறை காட்சிகள்; நாடு முழுவதும் பரபரப்பு!

மார்ச் 3, 2010
சாமியாருடன் நடிகை ரஞ்சிதா படுக்கை அறை காட்சிகள்; நாடு முழுவதும் பரபரப்பு
மார்ச் 03,2010,11:00  IST

http://www.dinamalar.com/topnewsdetail.asp?news_id=1795

Top world news stories and headlines detail

மேலும் படங்கள் >> சென்னை: தமிழ் நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழ் திரையுலகம் என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தாவின் இயற்பெயர் ராஜசேகரன். இவருக்கு தமிழகத்திலும், கர்நாடகாவிலும் ஆசிரமங்கள் உள்ளன. பெங்களூருவில் மைசூர் சாலையில் உள்ள பிடுதி பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நித்தியானந்த தியான பீடம் என்ற ஆசிரமம் உள்ளது. இதுதான் நித்தியானந்தாவின் ‌தலைமையகம்.

32 வயதே நிரம்பிய நித்தியானந்தா, கதவை திற காற்று வரும் என்ற தலைப்பில் போதனைகளை கூறி வந்தார். லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டிருக்கும் அவர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் நித்தியானந்தா, அந்த நடிகையிடம்  சில்மிஷங்களில் ஈடுபடுவது போலவும், உல்லாசமாக படுக்கையை பகிர்ந்து கொள்வது போலவும், தண்ணீர் கொடுப்பது போன்றும், மாத்திரை கொடுப்பது போன்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆனால் அந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. நித்தியானந்தாவின் முகத்திரையை கிழித்திருக்கும் இந்த வீடியோவில் அவருடன் உல்லாசமாக இருக்கும் நடிகை ரஞ்சிதா, பாரதிராஜாவின் படத்தில் அறிமுகமான‌வனர்; பாரதிராஜாவின்  சின்னத்திரை  தொடரிலும் நடித்தவர்.

என்ன செய்யப்போகிறது தமிழ் திரையுலகம்? : நடிகை புவனேஸ்வரி விபசார வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பத்திரிகைகளில் வெளியான செய்தியை கண்டித்து நடந்த ‌தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் பேசிய நடிகர், நடிகைகள் பலரும் ஆபாசமாக பேசி பத்திரிகையாளர்களை விமர்சித்தனர். இந்தக் கூட்டத்தில், சரத்குமார், ராதா ரவி, விஜயகுமார், சத்யராஜ், அருண் விஜய், மனோபாலா மற்றும் சில நடிகைககள், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தாக்கிப் பேசிய தகாத வார்த்தைகளை அச்சில் கூட ஏற்ற முடியாது. “இதுபோன்ற செய்திகளால் பாதிக்கப்பட்ட நடிகைகளின் வழக்கு செலவுக்காக, ஒரு தனி சட்ட அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதற்கான முழு செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்’ என்று நடிகர் சூர்யா கூறினார்.  “பத்திரிகையாளர்களை வெட்டியிருப்பேன்’ என்று விஜயகுமார் கொந்தளித்தார். “நாற்காலிக்கு கீழே கேமராவை வைத்து, நாகரிகமற்ற முறையில் படம் பிடிப்பவர்கள் பத்திரிகையாளர்கள், ஈனப்பிறவிகள் என்றும், சூர்யா குமுறினார்.  நடிகர் – நடிகைகளின் இந்த பேச்சு பத்திரிகையாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தி்ல பேசிய நடிகர் சூர்யா, நடிகைகளை பாதுகாக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும் நான் கொடுக்கிறேன், என்று கூறினார்.

நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? “சுவாமி நித்யானந்தாருடன்’ கொஞ்சும் நடிகை ரஞ்சிதா, மெய் மறந்து இருக்கும் வீடியோ காட்சிகள், தற்போது உலகம் முழுவதும் உலா வந்து கொண்டிருக்கின்றன. சினிமா நடிகை ரஞ்சிதாவுடன் சல்லாபிக்கும் காட்சிகள், ஆபாசத்தின் உச்ச கட்டம். இந்த சல்லாபம், ஒரு நாள் மட்டும் நடந்தவை அல்ல; பல நாள் நடந்தவை; இப்போது சந்திக்கு வந்துவிட்டது. நடிகர் சூர்யா, சாமியாருடன் உல்லாசமாக இருக்கும் நடிகைகளுக்கும் சட்டப்பூர்வ பாதுகாப்பு கொடுப்பாரா? எதற்கெடுத்தாலும் கண்டனக் குரல் எழுப்பி, கூட்டம் நடத்தி, கண்டன தீர்மானம் போடும் நடிகர் சங்கம், இந்த சர்ச்சைக்குரிய நடிகை மீதும் கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமா?

சினிமாக்காரர்கள் சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும்: இதுபோன்று செய்திகள், சந்திக்கு வந்து விட்ட பிறகாவது, தமிழ்த் திரையுலம் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும். குற்றத்தை சுட்டிக் காட்டுபவர்கள் மீது பொய் வழக்கு போடுவதற்கு முன், தங்கள் மீது விபசார வழக்குகள் பாயாமல் தடுத்துக் கொண்டால், புண்ணியம். சினிமாக்காரர்கள் சொன்னதுபோல, “அடுத்து வரும் தலைமுறையும் அவர்களது குடும்பத்தினரும் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்’ என்பதை ரஞ்சிதா போன்ற நடிகைகளும் அவர்களுக்காக வக்காலத்து வாங்கிய தென்னிந்திய நடிகர் சங்கமும், இவர்களுக்காக சென்னையில் 90 ஏக்கர் வழங்கிய தமிழக அரசும் சிந்திக்கட்டும்.

ஆசிரமம் சூறை!: சுவாமி நித்தியானந்தா நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது ஆசிரமங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்தை இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர். நித்தியானந்தாவின் படங்களை தீ வைத்து கொளுத்தினர். புதுவையிலும் ஏராளமான பொதுமக்கள் நித்தியானந்தாவின் ஆசிரமத்தை சூறையாடினார்கள். மேலும் கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் ஆசிரமங்களை சூறையாடி வரும் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள், சுவாமி நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவரது சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நித்யானந்த மடம் சார்பில் திடீர் விளக்கம்: மிகுந்த பரபரப்புக்கு இடையில் ஆஸ்ரமத்தில் இருந்த நித்ய சத்யானந்த சுவாமிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தியான பீடத்தின் முகவரியோ, யாருடைய கையெழுத்தும் இல்லாமலே இந்த அறிக்கை இடம் பெற்றிருந்தது. மார்ச் 2ம் தேதி இரவில் வெளியான தொலைக்காட்சி ஒளிபரப்பில் இடம் பெற்ற தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. இந்த காட்சிகள் அனைத்திலும் கிராபிக்ஸ் செய்யப்பட்டு, திட்டமிட்டு சதி செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளோம். விரைவில் இது குறித்து முடிவு செய்யப்படும். இந்த நேரத்தில் நாங்கள் பக்தர்களுக்கும், அபிமானிகளுக்கும் எங்களின் நிலைமையை தெளிவாக கூறுகிறோம். இதனால், மிகவும் மனமுடைந்த நிலையில் உள்ளோம். எங்களுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து பக்தர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். பொது வாழ்க்கையில் ஏழு ஆண்டுகளாக நித்யானந்த சுவாமிகள், பல சேவைகளை செய்துள்ளார். பல்வேறு நாடுகளிலிருந்து 20 லட்சம் பக்தர்கள், நித்யானந்த சுவாமிகளின் ஆதரவாளர்களாக உள்ளனர். வாழ்க்கையின் தத்துவம் குறித்து பல்வேறு நாடுகளில் சுவாமிகள் விளக்கியுள்ளார். இந்த நேரத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமிகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இதற்கு மேலும் இதை விளக்குவதற்கு வார்த்தைகளில்லை என்று தியான பீடத்தின் பணிகள் குறித்து நீண்ட விளக்கமளித்துள்ளனர்.