Archive for the ‘சகோதரித்துவம்’ Category

அசட்டு அஹமதுவும், கருவும் கருணாநிதியும்!

திசெம்பர் 24, 2009
அசட்டு அஹமதுவும், கருவும் கருணாநிதியும்!

செக்யூலரிஸம் பேசியோ, இஸ்லாம் பேசியோ விளக்கேற்ற மறுத்தது செக்யூலரிஸ நாட்டின் அமைச்சர் அஹமது!

அவர் மறந்தது தான் எல்லா இந்தியர்களுக்கும் இந்திய நிர்ணயச் சட்டத்தின் படி அமைச்சர் என்பதை!

அங்குதான் அவரது அசட்டுத்தனம் வெளிப்பட்டது!

செக்யூலரிஸத்தை மதிக்கும் / மித்திக்கும் போக்கையும் இந்தியர்கள் அடையாளம் கண்டு கொண்டனர்.

இந்த கருவைப் பற்றிப் பேசவே வேண்டாம்.

வயசானாலும், செக்யூலரிஸ விசயத்தில் பத்து அஹமதுக்களையும் மேலேயுள்ள நிலையில் உள்ளவர்.

அதில் ISO 9001, 10009 என்றெல்லாம் கொடுத்தாலும் தகும்!

அவர் சொல்கிறார், “ரயில் இன்ஜின் மத்திய அரசு என்று வைத்துக் கொண்டால், அதில் இணைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் மாநில அரசுகள் மாதிரி. சில பெட்டிகளில் கோளாறு ஏற்பட்டுள்ளது“, என்றெல்லாம்!

இங்கு வரிசையாக நின்றுகொண்டு பச்சைக் கொடிகள் ஏந்தியுள்ளனர்?

ஏன் சிவப்புக் கொடிகள் கூடாது?

கொடிகளைக் கவிழ்த்து ஆட்டுகிறார்களே?

ஏன் தூக்கி ஆட்டக்கூடாது?

இன்று இப்படியெல்லாம் பேசும் தேசியம், இன்றும் அப்படி-இப்படி மாநில சுய ஆட்சி என்ற பிரிவினையும் பேசுகிறதே, ஏன்?

இத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தாலும், இந்தியாவைப் பற்றி தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றனறே, அம்மாதிரி நடிக்க்கின்றனறே, அதுவும் இந்த பழுத்த, முதிர்ந்த, பக்குவப்பட்ட நிலையில் அவ்வ்வாறு பேசுகின்றனறே, அதை என்னவென்பது?

மாநில அரசுகள் போன்றது ரயில் பெட்டிகள் : முதல்வர் கருணாநிதி பேச்சு
டிசம்பர் 23,2009,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6030&ncat=&archive=1&showfrom=12/23/2009

Front page news and headlines todayசென்னை : “மாநில அரசுகள் போன்றது ரயில் பெட்டிகள். தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் பல புதிய ரயில்களும் இயக்க வேண்டும் ,’ என்று முதல்வர் கருணாநிதி மத்திய அரசை கேட்டுக் கொண்டார்.

சென்னை சென்ட்ரல் – மங்களூர் இடையே, வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ், வாரத்தில் ஆறு நாட்களுக்கும், ஜம்முதாவி – மதுரை இடையே வாரம் இருமுறை இயக்கப்பட்டு வந்த ஜம்முதாவி – மதுரை எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட்டும், திருநெல்வேலி – பிலாஸ்பூர் இடையே வாராந்திர ரயிலும், கன்னியாகுமரி – ராமேஸ்வரம் இடையே, வாரத்தில் மூன்று நாட்கள் அதிவேக விரைவு ரயில்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு, இந்த ரயில்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: இன்னும் பல ஊர்களுக்கு ரயில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு, புதிய ரயில்களை, பாதைகளை அமைத்து தரவேண்டும். ரயில் இன்ஜின் மத்திய அரசு என்று வைத்துக் கொண்டால், அதில் இணைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் மாநில அரசுகள் மாதிரி. சில பெட்டிகளில் கோளாறு ஏற்பட்டுள்ளது. பெட்டிகள் கழண்டு போய்விடாமலும், பிரிந்து போய்விடாமலும் ஒற்றுமைப்படுத்தி இலகுவாக இழுத்துச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் தேசிய நிலை இல்லாமல் போய்விடும். எனது சொந்த ஊரான திருக்குவளைக்கு, புதிய ரயில் பாதை அமைக்க திட்டம் உள்ளது. இதை, மத்திய ரயில்வே இணை அமைச்சர் அகமது விரைவாக செயல்படுத்த வேண்டும், என்றார்.

மதுரை: ஜம்முதாவி – நெல்லை வரை நீட்டிக்கப்பட்ட ரயிலை , மதுரையிலிருந்து தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் அனில்சிங்கால் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இன்ஜினியர் தங்கராஜ், முதுநிலை தொழில்நுட்ப அலுவலர் அப்துல்கபர் பங்கேற்றனர். ஜம்முதாவி-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் (6788) ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் மதுரைக்கு பகல் 2.50 மணிக்கு வந்து சேரும். பகல் 3 மணிக்கு புறப்பட்டு மாலை 6.20 க்கு திருநெல்வேலி சென்று அடையும். திருநெல்வேலி- ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரயில் (6787) திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து பகல் 3.45 க்கு புறப்பட்டு, மதுரைக்கு இரவு 7க்கு வந்து சேரும். இரவு 7.15 க்கு புறப்படும். இவை விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சியில் நின்று செல்லும். ஜம்மு தாவியில் நாளை, திருநெல்வேலியில் டிச.,25 லிருந்து முறைப்படி இயக்கப்படும்.

நெல்லை: திருநெல் வேலி – பிலாஸ்பூர் ரயில் துவக்க விழா நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது. நெல்லை எம்.பி.,ராமசுப்பு, மதுரை மண்டல மூத்த வணிக அதிகாரி ஹோசியார்சந்த், மண்டல இன்ஜினியர் ராம்கிஷோர், நெல்லை நிலைய அதிகாரி கல்யாணி ஆகியோர் பங்கேற்றனர்.

திராவிடப் பெண்மையின் மதசார்பின்மை!

திசெம்பர் 12, 2009

திராவிடப் பெண்மையின்  மதசார்பின்மை!

திராவிட பாரம்பரயம், சம்பிராதயம், கலாச்சாரம் மற்றும் நாகரிகம் பேசும் புரட்சிப் பெண், கலைஞரின் வழித்தோன்றல், சித்தர்களுக்கும் புதுவிளக்கம் கொடுக்கும் “வார்த்தை பெண்-சித்தர்”, திருமதி கனிமொழியின் சமத்துவம், சகோதரித்துவம், மதசார்பின்மைப் பற்றி யாரும் பேசுவதாகத் தெரியவில்லை!

ஊடகங்கள் ஒரு தனிப்பட்ட பெண்ணிற்கு, அரசியல் ரீதியாக, மற்ற சமூக நிகழ்வுகள், மற்ற பிரச்சினகளில் இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, அதுவும் தமிழகத்லிருந்து தேந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற அங்கத்தினராக இருக்கும் அவரது பேச்சு, எழுத்து மற்றும் சமூக உரையாடல்கள் முதலியவற்றை ஒதுக்கிவிடமுடியாது.

தமிழகப் பெண்களின் “பெண்களை”ப் பற்றிய மனப்பாங்கு அலாதியானது. “பெண்ணென்றால் பேயும் இரங்கும்” என்பது தமிழ் பழமொழி!

“பேய்” உள்ளதா இல்லையா என்பது திராவிட நாத்திகத்தில் சர்ச்சையில் இருக்கலாம். ஆனால் பெரியார், அண்ணா முதலியோர்களின் ஆத்மாக்களை நம்புகிறார்கள்!  அவர்களது ஊடகங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம், ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்து வருகின்றன!

இந்நிலையில், கனிமொழி இந்த இடைத்தேர்தல் நேரத்தில் உலா வருகிறார். அதைப் பற்றி யாரும் கவலைப் படபோவதில்லை, ஆனால்  ரம்ஜான் கஞ்சி குடித்து உளறும் பணியில் அம்மையார் இப்பொழுது தந்தையைப் பின்பற்றுவதால், அவரது முக்கியத்துவம் வருகிறது.

kanimozhi-kaayalpatnam-muslims

கனிமொழி முஸ்லிம் பெண்களுடன் கலந்துரையாடுதல்!

இதே மாதிரி, சமத்துவம், சகோதரித்துவம், மதசார்பின்மை ரீதியாக இவர் மற்ற மத / சமயப் பெண்களுடன் “கலந்துரையாடல்களை” மேற்கொண்டுவருகிறாரா என்று தெரியவில்லை!

முஸ்லிம் பெண்களுடன் பிரச்சினைகள் பற்றி உரையாடல்

முஸ்லிம் பெண்களுடன் பிரச்சினைகள் பற்றி உரையாடல்

இது தேர்தல் “தேர்ந்தெடுப்பு”ப் பாரபட்சமா, அரசியல்-வேறுபாடா, மத-வித்தியாசமா, திராவிட-பாகுபாடா…..எந்த கொள்கை என்று தெரியவில்லை!

இச்சகோதரியின் “சகோதரித்துவம்’ புரியவில்லை!