Archive for the ‘கைவந்த கலை’ Category

திராவிடத் திருமணங்களும், தமிழர்களின் பிணக்குகளும், அரசியல்வாதிகளின் சுணக்கங்களும்

மே 28, 2010

திராவிடத் திருமணங்களும், தமிழர்களின் பிணக்குகளும்,அரசியல்வாதிகளின் சுணக்கங்களும்

சுயமரியாதை திருமணம்

எம்.ஜி.ஆரும், நானும் பிரியக்கூடாது என பாடுபட்டவர் : ஆர்.எம்.வீரப்பனுக்கு கருணாநிதி புகழாரம்

நன்றி-தினமலர்: செய்தி, படம்                           http://www.dinamalar.com/News_Detail.asp?Id=7673
சென்னை : “”எம்.ஜி.ஆருக்கும், எனக்கும் இடையே பிணக்கு விளைந்த போதெல்லாம், அதை சரி செய்ய பாடுபட்டவர் ஆர்.எம்.வீரப்பன்,” என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார். முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் – ராஜம்மாள் தம்பதியின் இளைய மகன் தங்கராஜுக்கும், கோவை தொழிலதிபர் மோகன் – மோகனா தம்பதியின் மகள் தாரிணிக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது.

விழாவுக்கு தலைமை வகித்து, திருமணத்தை நடத்தி வைத்து தமிழக முதல்வர் கருணாநிதி பேசியதாவது: எனக்கும், ஆர்.எம்.வீரப்பனுக்கும் உள்ள தொடர்பு நீண்ட காலத் தொடர்பு, மறைந்தும் மறையாத என் ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆருடைய அணுக்கத் தொண்டர்களிலே ஒருவராக, அன்பு நண்பர்களில் ஒருவராக, அவசியப்பட்ட ஆலோசகர்களிலே ஒருவராக விளங்கியவர் வீரப்பன். “குடியரசு’ அலுவலகத்தில் 1945ம் ஆண்டு துணை ஆசிரியராக நான் இருந்த காலம் தொட்டு எனக்கும், இவருக்கும் நெருக்கமான நட்பு, அரும்பி மலர்ந்து இன்றைக்கும் மணம் வீசுகிற வகையில், அவரது இல்ல மண விழாவை நான் நடத்தி வைக்கவும், அவர் வரவேற்கவுமான சூழல் உருவாகியிருக்கிறது.

இந்த மேடையில் எனக்கு முன் பேசியவர்கள், எங்களுக்குள் என்றும் பிணக்கு ஏற்பட்டதில்லை என்று இங்கே சொன்னார்கள். இவர் என்னை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்ட அந்தக் காலத்தில் கூட என்னிடம், “கள்ளக் காதல்’ கொண்டவர். தி.மு.க.,வுக்கும், எம்.ஜி.ஆர்., தலைமையில் இயங்கிய அ.தி.மு.க.,வுக்கும் இடையே சில பிரச்னைகள் தோன்றும் போதெல்லாம், இவரிடமிருந்து எனக்கு ஒரு ரகசிய கடிதம் வரும். எனக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே ஒரு பிரிவு ஏற்படக்கூடிய ஒரு சூழல் 1971ம் ஆண்டில் ஏற்பட்ட போது, வீரப்பன் என் இல்லத்திற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக, “அந்தச் சூழ்நிலை உருவாகக்கூடாது; நீங்கள் இருவரும் பிரிந்து விடக்கூடாது; ஒன்றாக இருந்து தான் இயங்க வேண்டும். பிரிக்கிற சில பேர் யார் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒன்றுபட்டு பணியாற்றுங்கள்’ என்று கண்ணீர் கலந்து தன் கவலையைத் தெரிவித்தவர்களில் மிக முக்கியமானவர். பல நேரங்களில் எம்.ஜி.ஆருக்கும், எனக்கும் அல்லது தி.மு.க.,விற்கும் இடையே பிணக்கு விளைந்த போதெல்லாம், அதை சரி செய்ய பாடுபட்டவர் ஆர்.எம்.வீரப்பன். வீரப்பன் என் நீண்ட கால நண்பர் என்பதால் அவருக்கு அந்தக் கவலை இருந்தது.

மேடையில் திருநாவுக்கரசு பேசும் போது, “ஆர்.எம்.வீரப்பனுக்கு எம்.எல்.சி., பதவி கொடுங்கள்’ என்று சொன்னார். பதவிகளை பல பேருக்கு கொடுக்கிற இடத்தில் இருந்தவர் வீரப்பன். அவர் பதவிகளை பகிர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டியவரே தவிர, கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டியவர் அல்ல. அந்தளவிற்கு இந்த இயக்கத்தின் ஆணிவேராக, அடிவேராக, இயக்கத்தை வளர்க்கின்ற வலுவான விழுதுகளிலே ஒருவராக அன்றைக்கும் இருந்தார்; இன்றைக்கும் இருக்கிறார். இவரை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்.

நாள் முழுவதும் அளப்பரிய பணிகள், அதற்கிடையே கோவைக்கு மாநாட்டு பணிகளைப் பற்றி ஆய்வு செய்யச் செல்கிறோம். அங்கிருந்து ஊட்டிக்குச் சென்று ஓரிரு நாட்கள் ஓய்வு பெறலாமே என்று எண்ணினேன். ஆனால், அங்கு சென்ற எனக்கு இந்த நினைவு வந்தது. நினைவு சாட்டையாக விழுந்தது. “வீரப்பன் இல்லத் திருமணத்திற்கு செல்லாமல் ஓய்வு ஒரு கேடா உனக்கு’ என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டு இங்கே வந்துள்ளேன் என்றால், அது நட்பின் ஆழத்தை, நட்பின் உயர்வை உணர்த்தக்கூடிய ஒன்று என்பதை உங்களுக்கு எடுத்துச் சொல்லி, அத்தகைய ஒரு உத்தம நண்பர் என்றைக்கும் இந்த இயக்கத்தின் தூணாக விளங்கிக் கொண்டிருப்பவர். அவரது இல்லத் திருமணத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

விழாவில், நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்.எம்.வீரப்பன் அனைவரையும் வரவேற்றார். மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் நன்றி கூறினார்.

தமிழகத்தில் மின்சாரத் திருட்டு ஏன்?

மே 6, 2010

தமிழகத்தில் மின்சாரத் திருட்டு ஏன்?

To deter pilferage, TNEB will ask police for help

TIMES NEWS NETWORK

http://epaper.timesofindia.com/Default/Client.asp?Daily=TOICH&showST=true&login=default&pub=TOI&Enter=true&Skin=TOINEW&GZ=T

பொது நிகழ்ச்சிகள் நடத்துவதில் திருட்டு: Chennai: The Tamil Nadu Electricity Board’s (TNEB) vigilance department will be talking to police officers soon to ensure that law enforcers give permission for holding meetings and public functions only after getting a no-objection certificate from the TNEB.

அருகிலுள்ள டிரான்ஸ்ஃபார்மரில் இருந்து திருடுவது: This is to ensure that the organisers take temporary power connection from the TNEB and pay for the electricity and not steal it from the neighbourhood transformers. According to V Balachandran, additional director general of police (TNEB vigilance), the state government had directed the police to follow this procedure way back in June 2005 but the practice was discontinued after a while.

கம்பி போட்டுத் திருடுவதால் இழப்பு, இனிமேல் போலீஸ் நடவடிக்கை இருக்கும் என்றால், பிறகு முன்பு ஏன் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை? “A person holding a public function is supposed to get a temporary connection from the local TNEB office or use diesel generators. Since cases of people using a hook to pilfer electricity from the transformers is coming to our notice, we have decided to ask the police to restart the practice,” Balachandran said.

கட்டடங்கள் கட்டுபவர்கள் அருகிலுள்ள வயலிலிருந்து மின்சாரம் திருடுகிறார்கள்: He said a similar procedure was being followed by the construction industry. “They should take temporary supply for running their equipment. But there are many who take power from a nearby house or a farm. This is also power theft. In 2008-2009, we detected 512 such cases and in 2009-2010, 1,532 cases,” he said.

இலவச மின்சாரத்தை ஆழ்கிணறு நீரெடுக்கப் பயன்படுத்துவது, நீரை விற்பது – விவசாயிகளின் திருட்டு வேலை: Another type of unauthorised use of power is predominant in the agriculture sector. “Farmers are given free power supply, but some of them allow water dealers to use their connection to run pumps and draw water from the wells. This is common in the western region of Tamil Nadu, including Coimbatore. During 2009-2010, 329 such cases were detected and in the year before, 317 cases,” Balachandran said.

கம்பி போட்டுத் திருடுவது தமிழகர்களுக்கு / திராவிட கட்சிகளுக்கு கைவந்த கலை: He, however, said that conventional methods of power theft had come down in the state. “The cases of direct hook theft stood at 2,765 in 2008-2009, but it dropped to 2,416 in 2009-2010. The cases of meters being bypassed have also come down from 676 to 346. But new methods of pilferage, including unauthorised use of power, has increased drastically. In 2008 -2009, we got 563 such cases, but in 2009-2010, their number shot up to 3,266,” said Balachandran. In 2009-2010, the enforcement wing of the TNEB vigilance achieved an all-time high record by detecting 6,230 cases of pilferage and levying a fine amount and assessment levy of Rs 48.12 crore. During the previous financial year, 4,425 such cases were detected and Rs 17.49 crore collected. “During inspections, we found power theft is more rampant in low-tension commercial connections. We are planning to ask the TNEB chairman to give separate inspection squads for Vellore, Tuticorin and Erode, so that more cases can be detected,” Balachandran said.

கருணாநிதி-ஜெயலலிதா சண்டை ஆரம்பித்துவிட்டது! இப்பொழுது பாட்டு!!

திசெம்பர் 16, 2009
ஜெயலலிதா பாட்டு – கருணாநிதி விளக்கம்
Created On 12-Jan-10 10:40:09 AM

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6247

ஆளுநர் உரை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பேரவைக்கு எதிர்க்கட்சித்தலைவர் ஜெயலலிதா வந்திருந்தார். உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய அவர், கடைசியாக எம்ஜிஆரின் பாடல் ஒன்றைச் சொல்லி பேசி முடித்தார். அதற்கு முதலமைச்சர் கருணாநிதி அதே பாடலை வைத்தே ஒரு விளக்கத்தை அளித்தார்.

கருணாநிதி பேசுகையில், ” எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தன்னுடைய உரையின் இறுதியிலே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடைய பாடலை இங்கே சொன்னார்கள். அந்தப் பாட்டு அவர்களுக்காகப் பாடியதல்ல. எனக்குத் தெரியும் – எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை மனதிலே கொண்டு பாடிய பாடல் அது. ஏனென்றால் என்னுடைய நாற்பதாண்டு கால நண்பர் அல்லவா? இன்னும் சொல்லப் போனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சித் தேர்தல் நடைபெற்ற போது – தலைவராக நான் தான் வர வேண்டுமென்று எண்ணி அதற்காகப் பாடுபட்டவர், அதற்காக ஆட்களைச் சேர்த்தவர். அந்த நன்றி எனக்குண்டு, சாகின்ற வரையிலே உண்டு. அதைப் போல இந்தப் பொறுப்புக்கு நான் வர வேண்டுமென்று விரும்பியவர்களில் அவரும் ஒருவர். ஆகவே நான் அவருக்கும் எனக்கும் உள்ள நாற்பதாண்டு கால நட்பின் காரணமாக சொல்லுகிறேன். இங்கே அவர் இறுதியில் ஒரு பாடலைச் சொன்னாலுங்கூட – அதனை நான் இப்படித் தான் கருதிக் கொள்கிறேன்.

என்ன தான் நடக்கும், நடக்கட்டுமே!

இருட்டினில் நீதி மறையட்டுமே!

தன்னாலே வெளி வரும் தயங்காதே!

ஒரு “தலைவன்” இருக்கின்றான் மயங்காதே!

அதாவது ஒரு தலைவன் இருக்கின்றான் மயங்காதே என்று தான் – என்னைக் குறிப்பிட்டுத் தான் சொல்கிறார் – ஒரு தலைவி இருக்கிறார் மயங்காதே என்று சொல்லவில்லை (மேஜையைத் தட்டும் ஒலி) . இதை இந்த அவையிலே உள்ள உறுப்பினர்கள் எம்.ஜி.ஆருடைய அந்த நம்பிக்கையான வார்த்தையை ஏற்றுக் கொண்டு, இந்த அவையை சிறப்பாக நடத்த வேண்டும்” என்று பேசினார்.

“ஜெயலலிதாவின் பேச்சு கருணாநிதிக்கு பிடிக்கும்

சென்னை: “எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சு முதல்வருக்கு மிகவும் பிடிக்கும் என்று அமைச்சர் அன்பழகன் கூறினார். சட்டசபையில் ஜெயலலிதா பேசும்போது;”திருட்டு விசீடி”  தொழிலை ஒழிக்க முதல்வர் நடவடிக்கை எடுத்ததற்காக அடுத்த மாதம் திரைப்படத் துறையினர் பாராட்டு விழா நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. “திருட்டு விசீடி”  தொழிலில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு நான் தான் நடவடிக்கை எடுத்தேன்.

ஆளும் கட்சி உறுப்பினர்களின் பாராட்டு முதல்வருக்கும் பெரிய வியப்பை அளிக்காது. அதனால்தான் திரைப்படத் தயாரிப்பாளர்கள்,இயக்குநர்கள், நடிகர்கள் புகழ்ந்துபேசினால் முதல்வருக்கு மிகவும் பிடிக்கும் போலும்” என்றார்.

உடனே அமைச்சர் அன்பழகன் குறுக்கிட்டு, “எதிர்க்கட்சித் தலைவர் இப்படிப் பேசுவது எதிர்க்கட்சித் தலைவருக்குரிய கண்ணியத்தைப் பாதிக்கும். திரைப்படத் துறையினர் மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது கூட முதல்வருக்கு பிடிக்கத்தான் செய்யும்” என்றார். அப்போது ,முதல்வர் கருணாநிதி சபைக்குள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி-ஜெயலலிதா சண்டை ஆரம்பித்துவிட்டது!

எதற்கு நேரம் இருக்கிறதோ இல்லையோ, இவ்விருவருக்கும் இந்த வயதிலும் பகைமை பாராட்டுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்!

கருப்பு நிறத்தில் இருப்பது “விடுதலையில்” வெளிவந்தது! சிவப்பு நிறத்தில் இருப்பது என்னுடைய விமர்சனம்!

சிறுபான்மையினருக்கு தி.மு.க. ஆட்சி உதவி செய்யவில்லையா? முதலமைச்சர் கலைஞர் பதில்

http://viduthalai.periyar.org.in/20091216/news01.html

சென்னை,டிச.16_ முதல்-வர் கலைஞர் நேற்று வெளி-யிட்டுள்ள-அறிக்கை வருமாறு:

வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல். எதிர்க்-கட்சி-யின் சார்பில் இது-தான் தருணம் என்று ஏதேதோ குற்றச்சாட்-டுகளை நம்மீது சாற்று-கின்றனர். மீனவர்களுக்கு நாம் எதுவும் செய்ய-வில்-லையாம். சிறுபான்-மை-யோருக்கு அவர்கள்-தான் பிரதிநிதிகளாம். அருந்த-தியர்களுக்காக நாம் கொடுத்த வாக்கு-றுதி-களை அமலாக்கவில்-லை-யாம்,பேசியிருக்கி-றார்-கள் திருச்செந்தூரிலே சென்று.

சிறுபான்மையினரைத் தாக்கியவர் ஜெயலலிதா: 1992ஆம் ஆண்டு கர-சேவையின்போது பெரும்-பான்மையினருக்கு ஆதர-வாக ஜெயலலிதா பேசும்-போது சிறுபான்மையி-னரைத் தாக்கிப்பேச-வில்லையா? அப்போது என்ன பேசினார்? அரசி-யல் சட்டத்தின்படி பெரும்-பான்மையின-ருக்குக் கிடைக்கும் சாதா-ரண உரிமைகளையும், சிறப்பு-ரிமைகளையும் பாதிக்கும் வகையில், தங்கள் நலன்-களை முன் வைத்து செயல்படுவது சிறுபான்-மையினருக்கு ஏற்றது அல்ல. இந்த நாட்-டில் பெரும்பான்மை-யோர் இந்துக்கள். பெரும்-பான்-மை-யினரும், அவர்க-ளுடைய உரிமைகளை சிறு-பான்மையினரைப்-போல அனுபவிக்க அனு-மதிக்க வேண்டும். அயோத்-தியில் கோயில் கட்டப்-பட வேண்டும் என்பது இந்த நாட்டின் பெரும்-பான்மையான மக்களின் விருப்பத்தைப் பிரதிநிதித்-துவப்-படுத்-துவதாக உள்-ளது. பெரும்-பான்-மை-யான மக்களின் கருத்தை நாம் புறக்கணிக்-கக்-கூடாது இவ்வாறு பேசி-யவர், இப்போது திருச்-செந்தூருக்குச் சென்று சிறுபான்மை-யி-னருக்கு வேண்டியவர் என்பதைப் போல பேசு-கிறார். இஸ்-லாமியர்க-ளுக்கும், திமுக-வுக்கும் குறிப்பாக எனக்-கும் உள்ள நெருக்கத்-தைப் பற்றி அந்த மக்கள் அறிய மாட்டார்களா? இதோ ஒன்றிரண்டு சான்-றுகள் கூறவா?

இவரும்தான் ஆதரித்து பேசினார் என்று அம்மையர் ஏற்கெனவே எடுத்துக் காட்டிவிட்டார்! எதற்கு பிறகு இத்தகைய சொதப்பலான பதில்!

சிறுபான்மையினருக்கு சலுகைகள்: 1969இல் மீலாது நபிக்கு முதன்முதல் அரசு விடுமுறை; முந்தைய அ.தி.மு.க. அரசு 2001இல் ரத்து செய்த மீலாது நபி அரசு விடுமுறையை 15.11.2006 ஆணை மூலம் மீண்டும் விடுமுறை நாளாக அறிவித்தது;

ஆமாம், துலுக்க நாடுகளிலேயே விடுமுறை இல்லையாம். இவருக்கு என்ன அப்படி பொத்துக் கொண்டு வ்அருகிறது என்றுத் தெரியவில்லை?

1973இல் உருதுபேசும் லப்-பைகள், தெக்கனி முஸ்-லிம்கள் ஆகியோரைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது;

அடடா! இஸ்லாத்திற்கு எதிராக இப்படி செய்வதைக் கண்டு, அறிந்து எப்படி உண்மையான முஸ்லிம்கள் அமைதியாக இருக்கின்றனர்? அவர்களுக்குத் தான் ஜாதியில்லை என்று சொல்லுகின்றனெறே. பிறகு எப்படி கருணாநிதி அல்லாவிற்கு எதிராக முஸ்லிம்களை ஜாதிகள் மூலம் கட்ட முடியும்?

1989 இல் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை-யினர் சமுதாய மக்கள் பெரும்பயன் எய்திடும் வகையில், சிறுபான்மையி-னர் நல ஆணையம் உரு-வாக்கியது;

எதற்கு பெரும்பானமை ஆணையம் உருவாக்கவில்லை? ஜெயலலிதாவும் செய்யவில்லை. இப்பொழுது புரிகிறதா, இந்த கழககங்களின் போலித்தனத்தை?
1999ல் வக்பு வாரியச் சொத்துக்களைப் பராமரிப்பதற்கென முதன்-முறையாக ரூ.40 லட்சம் வழங்கியது;

அப்பணத்தில் காஃபிர் பங்கும் இருக்குமே? பிறகு எப்படி அல்லா ஒப்புக் கொண்டார்? இன்று 2009 வரை யாரும் கேட்காமல் இருப்பது ஆச்சரியம் தான்!1999 இல் தமிழ்நாடு சிறுபான்-மையினர் மேம்பாட்டுக் கழகம் உருவாக்கியது;

1989 ல் ஏற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் நலவாரியத்திற்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? பிறகு ஜெஸியா, ஜகாத் முதலியன என்னாவது?
2000-_ ஆண்டில் உலமா ஓய்வூதியத் திட்டத்தை தர்க்காக்களில் பணிபுரி-யும் முஜாவர்களுக்கும் நீட்டிப்பு செய்தது;

அல்லா இதனை ஏற்ப்பாரா?

2000_ ஆண்டில் உருது அகடமி-யைத் தொடங்கியது;

அரபி அகடமியை ஏண் உருவாக்கவில்லை?

2001இல் காயிதே மில்லத் மணிமண்டபம் ரூ.58 இலட்சத்து 69 ஆயிரம் செலவில் சென்னையில் திறக்க ஆவன செய்தது;

யாராவது கேட்டார்களா? இந்த “மணி மண்டபம்” கட்டும் வியாபாரம் பற்றி ஒன்றும் புரியவில்லை!சிறு-பான்மையினரின் நலனுக்கென தனி இயக்கு-நரகம் அமைத்தது;

ஐயோ நரகமா? முஸ்லிம்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

உலமா மற்றும் பணியா-ளர்கள் நல வாரியம் ஏற்படுத்தியது; என்று இஸ்-லாமிய சமுதாயத்திற்கு கழக அரசு வழங்கியுள்ள சலுகைகளும், நன்மை-க-ளும் கணக்கிலடங்கா-தவை.

எதற்கு பிறகு இவ்வளவு கஷ்டப்பட்டு பதில் கொடுக்கவேண்டும்?

2001 முதல் 2006 வரை அ.தி.மு.க. அமைச்-சரவையில் முதலில் ஆறு மாதம் முஸ்லிம் சமுதா-யத்தின் பிரதிநிதியாக அன்-வர் ராஜா இடம் பெற்-றிருந்தார்; அதற்குப்-பிறகு முஸ்லிம் பிரதி-நிதியே இல்லாமல்தான் அ.தி.மு.க. அமைச்சரவை நடைபெற்றது.

எதற்கு முஸ்லிம்கள் இருக்கவேண்டும்? இதென்ன சட்டமா?

தற்பொ-ழுது திமுக ஆட்சியில் உபயதுல்லா, மைதீன்-கான் ஆகியோர் அமைச்-சர்களாக உள்ளனர். முஸ்-லிம் சமுதாயத்தினருக்குப் பிரதிநிதித்துவம் இல்-லாத தி.மு.க. அமைச்சர-வையே இதுவரை இருந்-ததில்லை.

எதற்கு இந்த போலித்தனம்? ஜின்னாவையே வென்று, கருணாநிதி பாகிஸ்தானின் பிரத மந்திரியாகவா போகிறார்?

முஸ்லிம்க-ளுக்கு 3.5 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்கியது திமுக அரசு.

குரானின்படி, இதுவும் ஹராம்தான்! எதற்கு இந்த ஜாதித்துவம்?

இது போலவே மீனவர்களுக்கு திமுக அரசு செய்த சாத-னை-களில் ஒரு சிலவற்றையும்ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

சிங்கார வேலல் பெயர் சூட்டினேன்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு சிங்காரவேலர் பெயரைச் சூட்டியதே நான்தானே. மீனவர்களுக்கான டீசல் மானியத்தை உயர்த்திக் கொடுத்தது திமுக அரசு. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர் காணாமல் போனால், அவர் திரும்பி வரும் வரையில் அவரது குடும்பத்-துக்கு நாள் ஒன்றுக்கு 50 ரூபாயும் இலங்கை படை-யினரால் சுடப்பட்டு உயிரிழக்கும் மீனவர் குடும்பத்திற்கு ரூ. ஒரு லட்சமும் வழங்கப்படுகிறது. மீன் பிடித்தொழில் மேற்கொள்ளப்படாத காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசின் 50 சதவிகித பங்குத் தொகை ரூ. 300 சேர்த்து வழங்கப்படும் நிவாரணத் தொகை 2006_2007இல் ஒரு லட்சத்து 79,853 உறுப்பினர்களுக்கு ரூ.21 கோடியே 20 லட்சமும், 2007_2008இல் ஒரு லட்-சத்து 76 ஆயிரத்து 17 உறுப்பினர்களுக்கு ரூ.20 கோடியே 83 லட்சத்து 29 ஆயிரத்தையும் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மீன் இனப் பெருக்கக் காலமாக கருதப்படும் காலங்களில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட முடியாத 2 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.10 கோடி நிவாரண உதவியாக வழங்கும் புதிய திட்டம் 2008_2009இல் தான் நடைமுறைப்படுத்தப்பட்டது.

மீனவர் நல வாரியம் அமைக்கப்பட்டு ரூ. 5 கோடி நிதியும் திமுக அரசின் சார்பில் வழங்கப்பட்டு உள்ளது; மீனவர்கள் பயன் பெற உலகத் தரம் வாய்ந்த மீனவர் பயிற்சி நிலையம். சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி சாதனங்-களை கூடுதல் நிவாரணமாக வழங்கும் பொருட்டு ரூ.110 கோடியே 36 இலட்சம் செலவில் பொருட்கள் வழங்கப்பட்டன. 147 முதன்மை மீனவ கூட்டுறவு சங்கங்களின் மூலம் 5635 மீனவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 19 கோடியே 56 இலட்சம் கடன் மற்றும் வட்டி முழுவதையும் திமுக அரசு தள்ளுபடி செய்துள்ளது. கழக அரசைப் பொறுத்த வரையில் மீனவர்கள், சிறுபான்மையோர் என்றல்ல; அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எல்லாவித நன்மைகளையும் செய்ய வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடுதான் பாடுபட்டு வருகின்றது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எல்லாம் சரிதான்!

அரிசிவிலையை யார் குறைப்பது? [அரிசி மட்டுமல்ல, பருப்பு, எண்ணை, சர்க்கரை எல்லாமே]

வெங்காயம் விலையை யார் குறைப்பது? [வெங்காயம் மட்டுமல்ல, மற்ற எல்லா காய்கறிகளும்]

இதற்கு இவ்விருவரும் என்ன செய்யப் போகிறார்கள்?
முன்னம் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது போல, காய்கறி கடைகள் வைத்து காய்கறி விற்றாலாவது மக்களுக்குப் புண்ணியம்!