Archive for the ‘குறள்’ Category

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம் (2)!

செப்ரெம்பர் 19, 2015

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம்பெரியார் திடலில் விவாதம் (2)

Date of Thiruvalluvar 400-500 CE

Date of Thiruvalluvar 400-500 CE

திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் காலம் என்ன?: திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் காலத்தை பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளது[1]. திருக்குறள் தேதியை இக்கால ஆராய்ச்சியாளர்கள் 9ம் நூற்றாண்டு வரை இழுத்துள்ளனர். நவீனகால அறிஞர்கள் 200 BCE முதல் 800 CE வரை இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். திராவிடத்துவவாதிகள் போற்றும் காமில் வேய்த் ஸ்வெலெபில் என்பவரே திருவள்ளுவரது காலம் 400-500 CE என்று 1974ல் குறுப்பிட்டார்[2]. தமிழக அரசு 31 B.C. E என்று தீர்மானித்தாலும், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தனித்தமிழ் இயக்கம் 1922ல் மறைமலை அடிகள் தலமையில் 500க்கும் மேல் அறிஞர்கள் கூடி, தமிழர்களுக்கு ஒரு தனியான நாட்காட்டி (calendar) இருக்கவேண்டும் என்று தீர்மானித்து, அதற்கேற்றபடி திருவள்ளுவர் ஆண்டு என்பதனை உருவாக்கினர். அதன்படியே திருவள்ளுவர் பிறந்த வருடம் 31 BCE (Before Current Era) என்று நிர்ணயித்தனர்! 1971ல் கருணாநிதியின் தலமையில் அதனை ஏற்றுக் கொண்டது. ஆனால், எவ்வாறு அவர்கள் அவ்வாறு தேதியைக் கண்டுபிடித்தனர் என்பது யாருக்கும் தெரியாது! [அப்பொழுது அவர்கள் கிமு, கிபி என்றுதான் குறிப்பிட்டார்கள்][3].

Political ideas of M S Golwalkar- book

Political ideas of M S Golwalkar- book

ஜோதிடம்-வானியல் ரீதியில் தேதி கண்டுபிடிக்கப்பட்டதா?: இரா. இளங்குமரனார் என்ப்வர் கொடுக்கும் விவரங்கள்[4], “மறைமலை அடிகளார், திருவள்ளுவரைப் பற்றிக் கூறிய தலைமைப் பொழிவில், “திருவள்ளுவ நாயனார், கிறித்து சமய முதல்வரான ஏசு முனிவர் பிறப்பதற்கு முப்பதாண்டுகள் முன்னரே பிறந்தருளினார் என்பதை, மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும் என்னும் எமது பெருநூலிலே பலநூற் சான்றுகள் கொண்டு விளக்கிக் காட்டியிருக்கின்றாம். அதன் விரிவை அங்கே கண்டு கொள்க” (செந்தமிழ்ச் செல்வி. 13:550) என்றார். “இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் திருவள்ளுவர்தம் திருநாளாய வைகாசி அனுடத்தன்று வள்ளுவர் விழாக் கொண்டாடுவதற்கான முறைகளைத் தேர்ந்து அமைப்பதற்காகவே இக்கழகம் கூட்டப்பட்டது” என்கிறது திருநாட்கழக அறிக்கை-1 (செந்தமிழ்ச் செல்வி. 13:335). திருவள்ளுவர் திருநாள் கி.மு. 31 வைகாச அனுடம் என்றே தீர்மானித்தார் அடிகள். அதிலிருந்து தி.மு.; தி.பி. என்னும் வழக்கம் தமிழ்ப்பற்றாளரிடம் உண்டாயது. நாட்காட்டி நாட்குறிப்பு என்பனவும் ஆக்கப்பட்டன! பாவாணர் பாவலரேறு வழிஞர் திருவள்ளுவர் ஆண்டைப் பற்றினர்”.  இப்படியொரு கருத்தும் காணப்படுகிறது[5], “முதலிரு கழக இலக்கியமும் அழிக்கப்பட்டபின், தமிழ் நாகரிகத்தையும் பண்பாட்டையும் தாங்கிக்கொண்டிருக்கும் இருபெரு நூல்களுள் ஒன்றான திருக்குறளின் காலம், அதை இயற்றிய திருவள்ளுவரின் காலம், இன்ன நூற்றாண்டில் இன்ன வாண்டிலிருந்து இன்ன வாண்டுவரை என்று திட்டவட்டமாய்க் கூறுதற்கியலாவிடினும், தொல்காப்பியர் காலமாகிய கி.மு. ஏழாம் நூற்றாண்டிற்கும் கடைக்கழக முடிவாகிய கி. பி. 3ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதாய்க் கிறித்துவிற்கு முந்தியதென்று கொள்வது, பெரும்பாலும் குற்றத்திற்கிடமில்லாததும் ஏறத்தாழ உண்மையை ஒட்டியதுமாகும்”.

மறைமலை அடிகள், நெடுஞ்செழியன், கோவால்கர்

மறைமலை அடிகள், நெடுஞ்செழியன், கோவால்கர்

உலகப்பொதுமறையா, திராவிடர்களின் தனித்துவம் பாராட்டும் நூலா?: தனித்தமிழ்இயக்கம் ஆரம்பித்தபோது, திருக்குறள் தமிழருக்குத்தான் சொந்தம் என்பது போன்ற ஒரு குழப்பம் இருந்தது. பிறகு, திருவள்ளுவர் ஜைனர் என்று விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்கள். இல்லை அவர் வைணவர் தான், சைவார் தான் என்றெல்லாம் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்கள். ஆனால், கோல்வால்கர் என்ன சொன்னார் என்பதனை நோக்கவேண்டும். “எந்த ஒரு வழிபாட்டையும், கடவுள் பெயரையும் குறிப்பிடாமல் மோட்சத்தைப் பற்றிய விவரத்தை கூறுகிறது. அதனால், அது எந்த பிரிவினரையும் சேர்ந்த நூலாகாது. மகாபாரதத்தில் காணப்படும் சமூக வாழ்க்கை அப்படியே திருக்குறளில் காணப்படுகிறது. இந்துவிடம் தவிர, இத்தகைய சிறப்பான சமூக வாழ்க்கை தத்துவம் வேறேங்கும் காணமுடியாது. இந்து சிந்தனைகளை விளக்கும், பவித்ரமான இந்து மொழியில் உள்ள ஒரு தூய்மையான நூல் ஆகும்”. இப்படி சொன்னது தான், இன்றைக்கு வீரமணிக்கு உரைக்கிறது. அதனால், மறுபடியும் திராவிடத்திற்குள் சுருக்கப் பார்க்கின்றனர் போலும்!

தொல்காப்பியம்

தொல்காப்பியம்

தொல்காப்பியத்தின் காலம்: தொல்காப்பியத்தின் காலமும், தமிழ் ஆராய்ச்சியாளர்களிடம் படாத பாடு பட்டது. இலக்கியம் முன்னதா, இலக்கணம் முன்னதா என்ற “கோழி-முட்டை” விவாதங்களை வைத்துக் கொண்டு காலந்தள்ளினர். பண்டைக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று தமிழ்ச் சங்கங்களில் இடைச் சங்க காலத்தின் இறுதியில் இந் நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரை என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும், தொல்காப்பியம் கி.மு 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனினும் தற்காலத்தில் பெரும்பாலான ஆய்வாளர்களால் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தெ. பொ. மீனாட்சிசுந்தரம், இலக்குவனார் போன்றவர்கள் இந்நூல் கி.மு 700 ஆம் ஆண்டளவில் ஆக்கப்பட்டதாகக் கருதினார்கள். வேறு சிலர் இதன் காலத்தை கி.மு 500-க்குச் சிறிது முன்பின்னாகக் கணிப்பிட்டார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய எஸ். வையாபுரிப் பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் தொல்காப்பியத்தின் காலத்தை மேலும் பின் தள்ளி கி.பி 3 ஆம் நூற்றாண்டு என்றனர். தொல்காப்பியம் பல ஆசிரியர்கள் கொண்டது என்போரின் கருத்தோ, கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பெற்று கி.பி. 5-ஆம் நூற்றாண்டு வரை இந்நூல் எழுதப்பெற்றது என்பதாகும்.

குமரிக்கண்டம் கருதுகோள்

குமரிக்கண்டம் கருதுகோள்

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி”: கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி – தமிழ் குடி என்று தமிழின் தொன்மை அனாதியானது என்று விளக்கம் கொடுத்தனர். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்று மாற்றி விளக்கம் கொடுத்தனர். ஆனால், சரித்திர ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் வாய்பந்தல் போட்டே காலந்தள்ளினர். திராவிடத்துவவாதிகளான நெடுஞ்செழியன் போன்றோர் தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 14 அல்லது 15-ஆம் நூற்றாண்டு என்றும், ரிக் வேதத்துக்கு முற்பட்டது, என்றெல்லாம் பேசினர். இவர்கள் ஆதாரங்கள் பற்றி கவலைப்படுவதேயில்லை. இறையனார் களவியல் உரையின் முன்னுரையில் தான் முச்சங்களின் விவரங்கள் காணப்படுகின்றன. 12ம் நூற்றாண்டில் நக்கீரர் எழுதியதாக இந்நூல், ஒரு பார்ப்பனரின் நூலாகும். பிறகு திராவிடத்துவவாதிகள், இதனை எப்படி ஏற்றுக் கொள்கின்றனர்? “ஆரிய-திராவிட” இனவாதங்களை இன்றளவும் பிடித்துக் கொண்டு, கட்டுக்கதைகளை நம்பிக் கொண்டு, சித்தாந்தங்களை உண்மை என்று உறுதியாகப் பிடித்துக் கொண்டு காலந்தள்ளி வருகின்றனர். பிறகு, ஆராய்ச்சியாளர்கள் இவர்களது நிலையை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? பெரியார் திடலில் உள்ள இரண்டு அரங்களில் தங்களுக்கு என்று வேண்டப்பட்டவர்களை வைத்துக் கொண்டு, இவ்வாறு பேசிக்க்கொண்டும், குறும் புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டும் காலம் தள்ளலாம். ஆனால், சரித்திர ரீதியில் ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

© வேதபிரகாஷ்

19-09-2015

[1] His date of birth may have been as early as 200 BCE or as late as 800 CE.

the Tirukkural was written between 100 and 200 BC,

Considering all the facts given above we may infer that these two epics would have been written in a period from 130 to 150 A.D. If the date of Manimekalai is within 130 to 150 A.D., then Tirukkural must be having adate before this.

But these facts by themselves do not warrant the inference that theTirukkural must have been composed soon after the Tolkappiyam, and that therefore, the date of the Tirukkural is sometime between 300 B.C and 1 B.C.

The widely accepted date of Valuvar is 31 B.C. E

[2] Kamil Veith Zvelebil, A History of Indian Literature, Tamil literature, Otto Harrassowitz, Wiesbaden, Germany, 1974, p.119.

date of the work sometime between A.D. 400-500 may be the best .

[3]https://indianhistoriography.wordpress.com/2010/01/17/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/

[4]முதுமுனைவர் இரா. இளங்குமரனார்,   திருவள்ளுவர் காலம், Oct 1, 2012, http://siragu.com/?p=4628

[5] http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=197&pno=148

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம் (1)!

செப்ரெம்பர் 19, 2015

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம்பெரியார் திடலில் விவாதம் (1)

Periyar thidal - 17-09-2015 DK conference

Periyar thidal – 17-09-2015 DK conference

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? அவர் திருக்குறளைப் பற்றி என்ன கூற முடியும்?: விடுதலை, “ஆர்.எஸ்.எஸின் குருநாதர் என்று சொல்லப்படும் கோல்வால்கர் தமது ஞானகங்கை என்ற நூலில் திருக்குறள் பற்றிக் கருத்துக்கள் கூறியுள்ளார் என்று வீரமணி சொன்னபோது அரங்கத்தில் உள்ளோர் அனைவரின் கண்களும் தமிழர் தலைவரையே குத்திட்டு நின்றன. கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? அவர் திருக்குறளைப் பற்றி என்ன கூற முடியும்? என்ற அய்ய வினா அவர்களைத் தொற்றி நின்றது. திருக்குறள் இந்து மதத்தின் வருண தர்மத்தைப் பாதுகாக்கும் நூல் என்று கோல்வால்கர் குறிப்பிட்டதை கழகத் தலைவர் அவர்கள் எடுத்துச் சொன்ன போது மக்கள் மத்தியில் ஓர் ஏளனமான குறிப்புத் தென்பட்டது”, என்று இன்றைய நாளிதழில் வெளியிட்டுள்ளது[1].  ஒரு புத்தகத்தில் உள்ளவற்றை முழுமையாக அல்லது எந்த இடத்தில், எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதனை சொல்லாமல், அங்கங்கு வாக்கியங்களைப் பிய்த்து போட்டு, திரிபுவாதம் செய்வது திராவிடத்துவவாதிகளுக்கு கைவந்த கலையாக இருந்து வருகிறது. இனி தொடர்ந்து வீரமணி என்ன சொன்னார் என்று பார்ப்போம்.

பெரியார், அம்பேத்கர், கோவால்கர்

பெரியார், அம்பேத்கர், கோவால்கர்

பாணினி இலக்கியம் என்பதெல்லாம் திருக்குறளுக்குப் பிறகு பிற்காலத்தில் வந்தது தான்: வீரமணியின் பேச்சு இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது, “கோல்வால்கர் குறளைப் பற்றிச் சொன்னதைச் சொன்ன அடுத்த வரியிலே நூல்கள் எல்லாம் நூல்களை பற்றி எழுதுகின்றன என்று சொன்னபோது அரங்கமே கை தட்டலால் குலுங்கியது என்றே சொல்ல வேண்டும். திருக்குறளை நாம் பரப்புவதைவிட அதனைத் திரிபுவாதத்திற்கு இடம் கொடுக்கச் செய்யாமல் அதனைப் பாது காக்க வேண்டிய இடத்தில் நாமிருக்கிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் சொன்னது மிகவும் முக்கியமானதாகும். இனமானப் பேராசிரியர் தமிழ் இலக்கியங்களில் திருக்குறளை விட மூலமான நூல் வேறு எதுவும் இல்லை பாணினி இலக்கியம் என்பதெல்லாம் திருக்குறளுக்குப் பிறகு பிற்காலத்தில் வந்தது தான்[2]. இலக்கண நூல் என்கிற போது தொல்காப்பியத்துக்கு ஈடாகாது. சமஸ்கிருத இலக்கணங்களுக்கு முந்திய தமிழ் இலக்கணம் காலத்தால் முந்தியது என்று திமுக பொதுச் செயலாளர் குறிப்பிட்டார். கீதையின் மொழி பெயர்ப்பா? திருக்குறள் என்று சொல்லும்போதுஅதனை எதிர்த்துக் குரல் கொடுக்க முடியாத நிலையில் திருக்குறள் கீதையின் மறுபதிப்பு என்பதுபோல பார்ப்பனர் பேச எழுத ஆரம்பித்தனர்”.

Three Kamchi Acharyas

Three Kamchi Acharyas

சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி, தீய திருக்குறளை படிக்கமாட்டோம் என்று பொருள் கூறியுள்ளார்[3]: திருக்குறளைப் பற்றி விளக்குகிறார் வீரமணி, “பகவன் என்ற பார்ப்பனருக்கும் ஆதி என்ற புலைச்சிக்கும் பிறந்தவர் என்றெல்லாம் பார்ப்பனர்கள் உளறினர்[4]. சிறந்த நூல்களை படைப்புகளைச் செய்யக் கூடியவர்கள் பார்ப்பனர்களாகத்தான் இருக்க முடியும் என்ற இறுமாப்பு எப்பொழுதுமே பார்ப்பனர்களுக்குண்டு. மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி குறள் பற்றி என்ன கூறினார்? ஆண்டாள் பாடியதாகக் கூறப்படும் திருப்பாவையில் இடம் பெற்றுள்ள இரண்டாம் பாடல் நாட்காலை நீராடி மையிட்டு எழுதோம். மலரிட்டு நாம் முடியோம்; செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் அய்யமும் பிச்சையும் ஆம்தனையும் காட்டி உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்! என்பது ஆண்டாளின் திருப்பாவைப் பாட்டு; இதில் வரும் தீக்குறளை சென்றோதோம் என்ற வரிக்கு சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன பொருள் கூறினார் தெரியுமா? தீய திருக்குறளை படிக்கமாட்டோம் என்று பொருள் கூறியுள்ளார். ஆனால் அவ்வரிக்கு உண்மையான பொருளோ வேறுவிதமானது; குறளை என்றால் கோள் சொல், குற்றம் என்ற பொருள் ஆகும். (மதுரைத் தமிழ்ப் பேரகராதி) தீக்குறளைச் சென்றோதோம் என்றால் தீமை விளைவிக்கும் கோட் சொற்களைச் சென்று சொல்ல மாட்டோம் என்பதுதான் இதன் பொருள்”.

திருக்குறள்- பகவத் கீதை

திருக்குறள்- பகவத் கீதை

திருக்குறளில் உள்ள அறத்துப் பால் கிட்டத்தட்ட பகவத் கீதையின் தமிழாக்கமேயாகும்: வீரமணி, சங்கராச்சாரியாரை சாடுகிறார்[5], “சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் இவ்வாறு பொருள் கூறியதற்குத் தமிழ் மீதும் அதன் உயரிய நூலான திருக்குறள் மீதும் அவர் கொண்டிருந்த (இவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்) ‘துவேஷத்தைதான் வெளிப்படுத்தும். அவ்வாறு அபாண்டமாக எழுதக் கூடாது என்பது அவாளின் எண்ணமென் றால் அவருக்குத் தமிழ் ஞானம் போதாது என்பதையாவது ஒப்புக் கொள்ள வேண்டும். அந்த சூப்பர் சீனியர் தான் அவ்வாறு குறள்மீது தமக்கே உரித்தான நஞ்சை உமிழ்ந்தார் என்றால் இப்பொழுது காஞ்சி சீனியர் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன சொன்னார் தெரியுமா? “திருக்குறளில் உள்ள அறத்துப் பால் கிட்டத்தட்ட பகவத் கீதையின் தமிழாக்கமேயாகும். வாழ்வின் வழிமுறைகளும், குறிக்கோளும் அதில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.” (தினத்தந்தி 15.4.2004) என்று மதுரையில் பேசினாரே! பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள் எங்கே? சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் (நான்கு வருணத்தையும் நானே படைத்தேன்) என்று கூறும் மனித குல விரோத கிருஷ்ணனின் கீதை எங்கே?

What Golwalkar said about Thirukural

What Golwalkar said about Thirukural

கோல்வால்கர் திருக்குறளைப் பற்றி சொன்னது என்ன?: கோல்வால்கர் சொன்னதை ஆங்கிலத்தில் உள்ளபடி கீழே கொடுக்கப்பட்டுள்ளது[6].

These days we are hearing much about Tamil. Some protagonists of Tamil claim that it is a distinct language altogether with a separate culture of its own. They disclaim faith in the Vedas, saying that Tirukkural is their distinct scripture. Tirukkural is undoubtedly a great scriptural text more than two thousands year old. Saint Tiruvalluvar is its great author. We remember him in our Pratah-smaranm. There is an authentic translation of that book by V.V.S.Iyer, the well-known revolutionary. What is the theme propounded therein, afterall? The same old Hindu concept of chaturvidha-purushartha is put forth as the ideal. Only the chapter on Moksha comes in the beginning. It does not advocate any particular mode of worship or name of God but enuntiates the pure idea of Moksha. Thus it is not even a sectarian book. Mahabharata also eulogises the same picture of social life as Tirukkural presents. Except with the Hindu, this unique vision of social life is not found anywhere else. It is thus purely a Hindu text propounding great Hindu thoughts in a chaste Hindu language.

இதன் தமிழ் மொழிபெயர்ப்பு இவ்வாறு கொடுக்கப்படுகிறது, “இந்த நாட்களில் நாம் தமிழைப் பற்றி அதிகமாக கேள்விப்படுகிறோம். தமிழைத் தூக்கிப் பிடிப்பவர்கள், தமிழ் ஒட்ரு தனி மொழி என்றும், அதற்கென தனியாக நாகரிகம் உள்ளது என்றும் கூறிக்கொள்கிறார்கள். வேதத்தை மறுத்து, திருக்குறள் தான் தங்களது புனித நூல் என்றும் பறைச்சாற்றிக் கொள்கிறார்கள். சந்தேகமில்லாமல் திருக்குறள் ஒரு மகத்தான நூல் தான், அதன் காலம் 2,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக உள்ளது. அதனை எழுதிய திருவள்ளுவர் ஒரு பெரிய கவியாவர். அவரை நாம் நமது “பிராத-ஸ்மரணத்தில்” (விடியற்காலை ஸ்தோத்திரம்) தினமும் நினைவு கொள்கிறோம். வி.வி.எஸ். ஐயர் என்ற புரட்சிப் போராளி மொழிபெயர்த்துள்ள ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நூல் உள்ளது. அதில் எந்த தத்துவம் தான் சொல்லப்பட்டிருக்கிறது? இந்துமத தத்துவமான “சதுர்வித-புருஸார்த்தம்” தான் அதில் உள்ளது. “மோட்சம்” முதலில் வருகிறது. எந்த ஒரு வழிபாட்டையும், கடவுள் பெயரையும் குறிப்பிடாமல் மோட்சத்தைப் பற்றிய விவரத்தை கூறுகிறது. அதனால், அது எந்த பிரிவினரையும் சேர்ந்த நூலாகாது. மகாபாரதத்தில் காணப்படும் சமூக வாழ்க்கை அப்படியே திருக்குறளில் காணப்படுகிறது. இந்துவிடம் தவிர, இத்தகைய சிறப்பான சமூக வாழ்க்கை தத்துவம் வேறேங்கும் காணமுடியாது. இந்து சிந்தனைகளை விளக்கும், பவித்ரமான இந்து மொழியில் உள்ள ஒரு தூய்மையான நூல் ஆகும்”. இத்தகைய விவரங்களை பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி[7], வி.ஆர். ராமச்சந்திர தீட்சிதர் போன்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர். அதனால், கோல்வால்கர் சொல்லிவிட்டார் என்று திராவிடத்துவவாதிகள் இப்பொழுது புலம்ப வேண்டாம்.

© வேதபிரகாஷ்

19-09-2015

[1] விடுதலை, வரலாறு பேசும் வான் புகழ் விழா!, மின்சாரம், வெள்ளி, 18 செப்டம்பர் 2015 16:24

2 இத்தகைய அபத்தமான வாதங்களை வைத்துக் கொண்டு, இன்னும் எத்தனை காலம் தான் தள்ளுவார்கள் என்று தெரியவில்லை.

[3] இதற்கான ஆதாரங்களைக் கொடுக்கவில்லை. அக்னிஹோத்ரம் போன்றவர் அரைகுறையாக எழுதி வைத்ததை வைத்துக் கொண்டு வாதம் புரிந்தால் என்ன பிரயோஜனமும் இல்லை.

[4] அப்படியென்றால், திருவள்ளுவமாலை போன்ற நூற்களை பார்பொபனர்களா எழுதி வைத்தனர்?

[5] http://www.viduthalai.in/e-paper/108862.html

[6] M. S. Golwalkar, Bunch of Thought, Third edition, pp.100-101

http://www.rss.org/Encyc/2015/4/7/334_03_46_30_Bunch_of_Thoughts.pdf

[7] P. S. Subramanya Sastri, A History of Tamil Literature, Annamalai University, Chidambaram.

P. S. Subramanya Sastri, Tolkappiyam, Annamalai University, Chidambaram.