அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால்!
பெரியார் திடலில் அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு தொடங்கியது. பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அறிவியல் மனப்பான்மை, மனித நேயம் கொண்ட புதிய சமுதாயத்தை நவீன சாதனங்கள்மூலம் உருவாக்குவோம்!
அகில இந்தியப் பகுத்தறிவாளர் கூட்டமைப்பின் 7 ஆவது இந்திய மாநாட்டு மலரை விஜயவாடா நாத்திக மய்யத்தின் இயக்குநர் டாக்டர் விஜயம் வெளியிட்டார் (சென்னை, பெரியார் திடல், 26.12.2009).
சென்னை, டிச. 26-_ அறிவியல் மனப்பான்மை, மனித நேயம் கொண்ட புதிய சமுதாயத்தை உரு-வாக்குவோம் என்று இன்று சென்னை பெரி-யார் திடலில் தொடங்-கிய பகுத்தறிவு சங்கங்-களின் கூட்டமைப்பின் 7 ஆவது தேசிய மாநாட்-டில் திராவிடர் கழக தலை-வர் தமிழர் தலைவர் கி.வீரமணி அறிவித்தார்.
வீரமணியின் உரை: மாநாட்டை தொடங்கி வைத்து கி.வீரமணி அவர்கள் இன்று ஆற்றிய உரை வருமாறு:-
பெரியாருடைய நிலமாகிய தமிழகம் ஒரு பகுத்தறிவு மாநிலம். இது மனிதநேய மாநிலம்; சமூகநீதி மாநிலம்; இவற்றையெல்லாம் குறிப்பது சுயமரியாதை இயக்கம் என்பதாகும். இப்பொழுது மின்னி-யல் ஊடகங்கள்மூலம் செய்திகள் பரவுகின்றன. இப்பொழுதுள்ள தொலைத்தொடர்பு ஊட-கங்கள் வரப்-போவ-தைப் பற்றி 50, 60 ஆண்டு-களுக்கு முன்பே பெரியார் தொலைநோக்-காகக் கூறினார். உயர்-படிப்புப் படிக்காத பெரி-யார் இவற்றையெல்லாம் கூற முடிந்ததற்குக்காரணம், அவர் எதையும் பகுத்தறிவு அடிப்படையில் கண்டார் என்பதுதான். மூட நம்பிக்கையை வெளிப்படுத்துவதில் மறைந்த நண்பர் பிரேமானந்த் முன்னோடியாகத் திகழ்ந்தார். விஞ்ஞானிகள் சாய்பாபாவிற்குப் பணியும் காலத்தில் பிரேமானந்த், அந்தச் சாமியாரின் உண்மையான போலித்தனத்தை வெளிப்படுத்தினார். அண்மையில் காஞ்சிபுரத்தில் அர்ச்சகர் ஒருவர் கருவறையில் பல பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினார். அவர் கடவுளின் தண்டனையைப்-பற்றிக் கவலைப்படவில்லை; கருவறையில் இருப்பது கல் என்று அவருக்குத் தெரியும் [பாதிரியார்கள் அமெரிக்காவில் இல்லை சென்னையிலேயே பல பெண்களை அவ்வாறே நடத்தியுள்ளர்கள். வி ஹியூம்ஸ் என்ற காமக்கொடூரனும் இதே சென்னையில் நூற்றுக் கணக்கான சிறுமியர்-சிறுமிகளை பாலியல் வன்கலவி செய்ததுடன், வரும் அந்நிய நாட்டினருக்கும் பகிர்ந்தளித்துள்ளான். கொசுரு – பாலியில் படம் எடுப்பது, இணைதளத்தில் போடுவது. எல்லாமே சென்னையில் தான் நடந்தன. இந்த நாத்திகம் இதைப் பற்றி மூச்சு விடாது].
‘FIRA’ ஏழாவது மாநாட்டினை தொடங்கி வைத்து கி. வீரமணி உரையாற்றுகிறார் (சென்னை, பெரியார் திடல், 26.12.2009)
அமெரிக்காவின் மூட நம்பிக்கை எதனால்? நிஷீஷீபீ ஷ்வீtலீஷீut நிஷீபீ எனும் நூலில் ஒருவர் நல்லவராக இருப்பதற்கு மத நம்பிக்கை தேவை-யில்லை என்பது விளக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா செல்வச் செழிப்புமிக்க நாடாக இருக்கலாம். ஆனால், மூட நம்பிக்கையில், மத நம்பிக்-கை-யில் இருந்து அவர்கள் இன்னும் விடுபட இல்லை; இப்பொழுது மெல்ல மெல்லச் சுதந்திரமாகச் சிந்திக்-கிறார்கள். குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்-பட்ட பின்பு, ஒபாமா ஆற்றிய வுரையில், அமெரிக்கா, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் உரியது எனக் கூறினார்.
இந்து-விரோத நாத்திகம்: இந்து மதத்தில் இருந்து ஜாதியைக் கழித்து-விட்டால் கிடைப்பது பூஜ்யம். இந்து மதத்தின்-படி-யான சமுதாயம் படிநிலை ஏற்றத் தாழ்வைக் கொண்-டது என பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் கூறி-யுள்ளார். இந்தச் சமுதாயத்தை மாற்றியமைக்க வேண்டும். ஜாதிக்கு மூல காரணமான கடவுளை ஒழிக்கவேண்டும் என்றார் தந்தை பெரியார். பெரியார் கூறியுள்ளபடி, கடவுளை மறந்து மனித நலத்தை எண்ணி உழைக்கவேண்டும். அரசியல் வேற்றுமை கடந்து வலிமையான பகுத்தறிவு இயக்கத்தை நாம் வளர்க்கவேண்டும். தொலைக்காட்சி போன்ற நவீன சாதனங்கள்மூலம் நம் மனிதநேயப் பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பவேண்டும் என்று கூறினார்.
பகுத்தறிவினால் கல்வி கொடுக்கமுடியவில்லை: இந்தியாவில் பல கோடிப் பேர் போதுமான கல்வியறிவு பெற்றவர்களாக இல்லை.உலகத்தின் உணமைகளை அறியாதவர்களாக அவர்கள் உள்ளனர்.இதனால் அவர்கள் அர்ச்சகர்கள், மந்திர-வாதிகள், சாமியார்கள், பூசாரிகள், ஜோதிடர்-கள், குறி சொல்லிகள் போன்ற மதவாத சக்திகளால் நம் மக்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள். இதனால் மூட நம்பிக்கையில் பெரும்பாலான மக்கள் மூழ்கிக் கிடக்கின்றனர். சாதாரண மக்களை தந்திரமாக ஏமாற்றி அவர்களைச் சுரண்டி பிழைப்பதையே மதவாதிகள் தொழிலாக கொண்டுள்ளனர். இதுபோன்ற சமூகக் கிருமிகளிடமிருந்து அப்பாவி மக்களை காப்பாற்றுவதற்காக பொதுகூட்-டங்கள், கருத்தரங்குகள், கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவைகளை நடத்தி பொது-மக்களை விழிப்புணர்ச்சி பெற வைப்பது பகுத்தறி-வாளர்களின் கடமை ஆகும். 1976 இல் கொண்டு வரப்பட்ட 42 ஆவது இந்திய அரசமைப்புச் சட்டம் இதனை ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகவே வரையறுத்துள்ளது. ஆனால் அரசு அதிகார வர்க்கத்தில் உள்ள மூத்த அதிகாரி முதல் கடைநிலை ஊழியர் வரை இக்கடமையிலிருந்து விலகி நடப்பது வருத்தமளிக்கிறது. ஏவுகணைகள், ராக்கெட்டுகள் போன்ற விஞ்ஞானத்தின் உச்சபட்ச ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் கூட அதனை விண்ணில் செலுத்துவதற்கு முன் பூஜைகள் நடத்துகின்றனர் என்பது கேவலமான நடவடிக்கை ஆகும்.
அகில இந்திய பகுத்தறிவாளர் கழக (7FIRA) கூட்டமைப்பு மாநாட்டிற்கு திரண்டிருந்த பேராளர்கள் (சென்னை, பெரியார் திடல், 26.12.2009)
காவல் நிலையத்தில் ஆடு வெட்டுவதா? அதேபோல் மக்களைக் காப்பாற்றுவதற்காக உள்ள காவல் துறையினர் அவர்கள் பணி புரியும் காவல் நிலையங்களை ‘ஆவிகளிடமிருந்து’ காப்பாற்று-வதற்காக ஆடுகள் வெட்டிப் பலி கொடுக்கும் அநியாயங்களை என்ன சொல்வது! இவ்வாறு செய்வ-தன் மூலம் இதுவரை எந்தப் பிரச்சினைக்காவது தீர்வு கண்டார்களா? தீயவழிகளில் ஈடுபட்டு பணம் சம்பதிப்பவர்கள் அதற்கு பரிகாரம் தேடும் விதமாக அடுத்தவனின் பணத்தை வைத்து இவர்கள் கோயில்களுக்கு செலவு செய்து வரும் கொடுமை இங்கே தொடர்ந்து கொண்டிருக்கிறது.இது அவர்களால் நம்பப்படும் கடவுளுக்கு லஞ்சம் கொடுபதுதானே? சொல்லப்-போனால் மனிதனின் லஞ்ச நடவடிக்கை இது போன்ற கோயில் பூஜைகளிலிருந்துதான் தொடங்-கு-கிறது என்று கூறலாம். ஆனால் இதே காரியங்களை பகுத்தறிவாளர்கள் அணுகும் முறை முற்றிலும் வேறு-பட்டுள்ளது. பகுத்தறிவாளர்களால்தான் இது-போன்ற குருட்டு நம்பிக்கைகளை அழித்தொழித்து மக்களை விழிப்புணர்ச்சி அடையச் செய்ய முடியும். அதனால்-தான் தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட இந்த மகத்தான பணி மிகப் பெரிய மக்கள் இயக்கமாக மாறத் தொடங்கி உள்ளது என்று கூறினார். [முஸ்லிம்கள் மாடு, ஒட்டங்கள் வெட்டுவது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே ஏன்?]
அ.இ. பகுத்தறிவாளர் கூட்டமைப்பின் மாநாடு: அகில இந்தியப் பகுத்தறிவாளர் கூட்டமைப்பின் (திமிஸிகி) 7 ஆவது இந்திய மாநாடு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் இன்று (26.12.2009) காலை 11 மணிக்குத் தொடங்கியது. மாநாட்டுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெருமக்கள், பிரதிநிதிகள் வந்திருந்தனர். மாநாட்டுக்கு இவ்வமைப்பின் அகில இந்தியத் தலைவர் நரேந்திர நாயக் தலைமை வகித்தார். தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் வா. நேரு வரவேற்புரையாற்றினார். மாநாட்டுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு விழாக் குழுவினரால் சால்வை அணிவிக்கப்பட்டு சிறப்பு செய்விக்கப்பட்டது. தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகப் பொதுச்-செயலாளர் வீ. குமரேசன் நிகழ்ச்சிகளை ஒருங்-கிணைத்து இணைப்புரை வழங்கினார்.
நரேந்திர நாயக், தலைவர் உரை: கூட்டமைப்பின் தலைவரும், மாநாட்டின் தலைவருமான நரேந்திர நாயக் தமது தலைமை-யுரையில் குறிப்பிட்டதாவது: இக்கூட்டமைப்பின் நிறுவனர் பிரேமானந்த் அண்மையில் இறந்தார்; வழி-காட்டி-யாகத் திகழ்ந்தார், அவரை நினைவுகூர்வோம். இப்பொழுது இக்கூட்டமைப்பில் 70 அமைப்புகள் உள்ளன. அறிவியல் பார்வை, மனித நேயம், சமயச் சார்பின்மை ஆகியவை இக்கூட்டமைப்பின் நெறிகள். தெய்வீக அதிசயங்களை வெளிப்படுத்துவது எனத் தொடங்கியபொழுது பகுத்தறிவு இயக்கம் நன்கு தெரியப் படலாயிற்று. டாக்டர் ஆபிரகாம் கோவூர் இவ்வகையில் பல இடங்களில் செய்முறையின் மூலம் பகுத்தறிவுச் சிந்தனையைப் பரப்பினார். தமிழகத்தில் பகுத்தறிவு இயக்கம் மக்கள் இயக்கமாக வளர்ந்தது; பெரியாருக்கு வணக்கம் தெரிவிக்காதவர் தமிழக ஆட்சிக் கட்டிலில் எவரும் இலர். நம்மிடையே உள்ள வேற்றுமைகளை மறந்து, ஒன்றுபடுத்தும் கூறுகளைக் கொண்டு செயல்-படுவோம். இன்று, ஊடகங்கள் மூட நம்பிக்கையைப் பரப்பு-வோரிடம் உள்ளன. அறிவியலை அவர்கள் பயன்-படுத்துவது வருந்தத்தக்கது. நாம் பல இடங்களுக்குச் சென்று அறிவியலைப் பரப்பவேண்டும்; அற்புதங்களைப் பொய்யெனக் காட்டவேண்டும். கருநாடகத்தில், ரவிசங்கர் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளை அரசே பாராட்டி வளர்ப்பது வேதனைக்குரியது. மந்திரமா? தந்திரமா? போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி போலித்தனங்களை, பொய்களை வெளிப்படுத்துகிறோம். ஆனால், புதிய பொய்கள் வளர்க்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ‘யோகா’ என்பது எல்லா நோய்களையும் குணப்படுத்தும் எனக் கூறத் தொடங்கியுள்ளனர். மூட நம்பிக்கையைப் பரப்புகிறவர்கள், அண்மைக்-காலத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். நாம் பகுத்தறிவைப் பயன்படுத்துவதற்கு அதைப் பயன்படுத்தவேண்டும். புதிய இளைய தலைமுறையை வளர்க்கவேண்டும் என்று கூறினார்.
நாத்திக மாநாடு மலர் வெளியீடு: மாநாட்டு மலரை விஜயவாடா நாத்திக மய்ய இயக்குநர் டாக்டர் விஜயம் வெளியிட்டார். தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகப் புரவலர் கி. வீரமணி, பி. சந்தர் (நியூடெல்லி) ஆகியோர் மலரைப் பெற்றுக்கொண்டனர்.
இன்று (26.12.2009) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற அகில இந்திய பகுத்தறிவாளர் கழக (7tலீ திமிஸிகி) கூட்டமைப்பு மாநாட்டில் சிறப்பு மலரை விஜயவாடா நாத்திக மய்ய நிருவாக இயக்குநர் டாக்டர் ஜி.விஜயம் வெளியிட்டார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பி.சந்தர் (டெல்லி) ஆகியோர் மலரை பெற்றுக் கொண்டனர்.
….