Archive for the ‘கடன்’ Category

பகவத் கீதை, கிருஷ்ண தூஷணம், திரிபு விளக்கம், இந்துவிரோதக் கூட்டங்களின் தொடரும் சட்டமீறல்கள்! [1]

ஜூலை 29, 2020

பகவத் கீதை, கிருஷ்ண தூஷணம், திரிபு விளக்கம், இந்துவிரோதக் கூட்டங்களின் தொடரும் சட்டமீறல்கள்! [1]

EVR and RSS

இந்துவிரோதிகளும், இந்துத்துவவாதிகளும்: ஜூலை 11, 2020ல் வீரமணி மறுபடியும் அதே தூஷணத்தை செய்திருப்பதால், இதனை விளக்கமாக எழுத வேண்டிய அவசியம் உண்டாகி உள்ளது.  “இந்துத்துவம்” பேசிக் கொண்டு, தம்மை “இந்துவவாதிகள்,” என்று சொல்லிக் கொண்டு, இந்துமதத்தினையே தாங்கள் தான் காத்து வருகின்றது போலக் காட்டிக் கொண்டாலும், திடீரென்று, “பெரியார் கொள்கை தான் எங்கள் கொள்கை,” என்றெல்லாம் பேசியிருப்பது திகைப்படையச் செய்கிறது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதரவில்லாமல், அரசு-அதிகாரம் பெறமுடியாது என்றதால், இவ்வாறு சமரசம் செய்து கொள்கின்றனரோ என்ற சந்தேகமும் எழுகிறது. இந்து, இந்து நலன், இந்து பாதுபாப்பு முதலியவை, குறுகிய “அரசியல்,” அரசியல் கூட்டணி, அரசியல் ஆதாயம் போன்றவற்றில் சிக்க வைத்து, குறுக்கி விட முடியாது. அதனால் தான், மற்றுக் கருத்து கொண்டவர்கள், விவரங்களை எடுத்துக் கொண்டு, அரைகுறையாக புரிந்து கொண்டு, தூஷித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Bhagawat Gita, tilakk, Sedition
பகவத் கீதை எதிர்ப்புஆந்நியர் ஆட்சி முதல் திராவிட ஆட்சி வரை: பகவத் கீதையினை இந்துக்கள் ஆதரிப்பது அறிந்து, அதனை தூஷித்து புத்தகத்தை எழுதுவது, பேசுவது, தூஷிப்பது புதியதல்ல. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே, பகவத் கீதையை எதிர்த்து பிரச்சாரம் நடந்தது. சுமார் 150 ஆண்டு காலமாக இது நடந்து வருகிறது. தேசதுரோக அறிக்கை கமிட்டி, “பகவத் கீதை வன்முறையைத் தூண்டுகிறது,” அதனால், அதனை தடை செய்யவும் முற்பட்டது[1]. இந்திய புத்தகங்கள் ஸ்காட்லான்ட் யார்டுக்கு அனுப்பப் பட்டு புலன் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டது[2]. 1896ல் பிளேக்கினால் கோடிக் கணக்கான மக்கள் இறந்த போது, ஆங்கிலேயர் உகந்த நடவடிக்கை எடுக்காததால், திலகர் “கேசரி”யில் அவர்களைத் தாக்கி எழுதினார். 1659ல் சிவாஜி எப்படி ஒரு முகலாய தலபதியைக் கொன்றார் என்று குறிப்பிட்டார். பிறகு, ஆர்பாட்டக் காரர்கள், ஒரு ஆங்கிலேய அதிகாரியைக் கொன்றனர். அதனால், திலகருக்கு ஆறுவருடம் தீவாந்திர தண்டனை கொடுக்கப் பட்டது. இதனால், ஆங்கிலேயர் அவருக்கு திலகருக்கும், காந்திக்கும் இடையிலேயே கீதை ஆதரிப்பு-எதிர்ப்பு விவாதம் நடந்தது. காந்தி உண்மையில் கீதையை ஆதரிப்பது போல காட்டிக் கொண்டு, எதிர்க்கவே செய்தார்.  திலகர் வழக்கை வைத்துப் பார்த்தால், இப்பொழுது, வன்முறையினைத் தூண்டுபவர்கள், இந்துவிரோத திரவிடத்துவ, பெரியாரிஸ, கம்யூனிஸ, துலுக்கக் கூட்டங்கள் தான். அவ்வப்பொழுது, பெயரை மாற்றிக் கொள்கின்றன, ஆனால், வேலை செய்வது, ஊக்குவிப்பது அவர்கள் தான்.

Tilak argued his sedition case 1918

சமீபத்தைய எதிர்ப்புகள்: இந்திய வரலாற்றுப் பேரவை போன்ற கம்யூனிஸ-துலுக்க ஆதரவு அமைப்புகள் அத்தகைய ஆய்வுக் கட்டுரைகளை ஊக்குவித்தன[3]. அவ்வப்போது, ஆங்கிலத்தில், செய்திகள் வந்து கொண்டிருக்கும். சிலர், அரைகுறையாக திரித்து விளக்கம் கொடுப்பர்[4]. அவையெல்லாம் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கும், இன்றும் வந்து கொண்டிருக்கின்றன[5]. போதாகுறைக்கு, பகவத் கீதை, பௌத்தத்திலிருந்து காபியடித்து எழுதப் பட்டது என்றெல்லாம் சில ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். 2012ல் ரஷ்யாவில் தடை செய்யப் பட வேண்டும் என்று வழக்கு தொடரப் பட்டது, ஆனால், நீதிமன்றம் தள்ளுபடி செய்தது[6]. சென்ற வருடம் அண்ணா பல்கலைக் கழகத்தில், சேர்க்கப் பட்டது என்றபோதும், பிரச்சினையைக் கிளப்பினர்[7]. உண்மையில், பிளாடோ போன்றவர்களின் தத்துவத்துடன், இந்திய தத்துவத்தையும் படிக்க ஏற்பாடு செய்தபோது, எதிர்ப்புத் தெரிவித்தனர்[8]. எப்படி சைவ-வைணவ சர்ச்சை, சண்டை, எதிர்ப்புகள் இலக்கியங்களாக வெளிப்பட்டபோது, அவை மற்றவர்களால் சாதகமாக உபயோகித்துக் கொண்டார்களோ, அதேபோல இந்த விவரங்களை வைத்துக் கொண்டு, தன்னுடைய காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் முதலியவற்றைச் சேர்த்து இப்புத்தகத்தை வீரமணி எழுதித் தள்ளினார். இந்துஎதிர்ப்பு ஒன்றையே பிரதானமாக வைத்துக் கொண்டு, வீரமணி கூட்டம் திரும்பத் திரும்ப இந்த பிரச்சாரத்தை செய்து வருகின்றது. மேலே குறிப்பிட்ட இந்துவிரோத குப்பைகளை அள்ளிக் கொண்டு, இங்கு குப்பைக் கொட்ட முயல்கிறது இந்துவிரோதக் கூட்டம்.

Bhagawat Gita, tilakk, Sedition.s.24A1

ஜூலை 2020 – நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா காணொலியில் வீரமணி பேசியது[9]: “பகவத் கீதை ஏன், எதற்காக?” என்ற சிறிய நூலை வாங்கி நீங்கள் மேலும் விரிவாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி காணொலி மூலம் உரையாற்றியது[10], “இது உங்களையெல்லாம், நம்மையெல்லாம் குழப்புகிறது என்று மட்டும் நினைக்காதீர்கள். அர்ஜுனனையே குழப்புகிறது. கீதையிலேயே அதைச் சொல்லியிருக்கின்றான். கீதையினுடைய அத்தியாயம் மூன்றுசுலோகம் இரண்டிலே அர்ஜுனன் சொல்லுகிறான்:

ஜனார்த்தனா! (ஜனார்த்தனன் என்றால் கிருஷ்ணன்) என் னைக் குழப்பாதே!” கெஞ்சுகிறான் உனது பேச்சுக்கள் அனைத்தும் குழப்பமாய் இருக்கின்றன. குழப்பம் உண்டாவதால் எனது மதி மயங்குகிறதுமதிமயங்காமல் வேறு என்ன செய்யும்?…….”ஏதாவது ஒன்றைச் சொல்லி இதுதான் உயர்ந்தது என்று சொல். நான் அதைப் பின்பற்றுகிறேன். இல்லாவிட்டால் ஆளைவிடு. என்னைப் போட்டு குழப்பு குழப்பு என்று குழப்புகிறாயே!

உலகம் முழுவதும் எத்தனையோ தத்துவ ஞானிகள் படித்து பொருள் கொடுத்துள்ளாற்கள். ஆனால், இத ஆளுக்கு மட்டும் இப்படி தோன்றுகிறது: விசயம் தெரிந்தவர்கள் இதனைப் படித்தால், இந்த ஆளுக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதை நன்றாகவே தெரிந்து கொள்வார்கள். அது தான் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் டான், இந்த ஆளை யாரும் பொருட்படுத்துவது இல்லை. அதனாலேயே, தொடர்ந்து இப்படி குப்பைகளைக் கொட்டி வருவதும் விசித்திரமான விசயமே!

 …….ஒரு சுலோகத்தினைச் சொல்லி முடிக்க 5 நிமிடம் வேண்டும். 700 சுலோகங்களையும் சொல்லி முடிக்க 5 நாட்கள் வேண்டும்……..பயனை எதிர்பார்க்காமல் எவன் கடமையைச் செய்வான்? நாங்கள் வெட்டியாட்களாகவா வந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். பேசினால் அதனைக் கேட்பவர்களுக்குக் கொஞ்சமாவது புத்தி வருமே என்பதற்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர, நீ உழைத்துக் கொண்டே இரு, பலனை எதிர்பார்க்காதே, நான் கொடுப்பதை வாங்கிக் கொள். நீயாகக் கேட்காதே, கடமையைச் செய் என்கிற அறிவுரையை எல்லோரும் சொல்லுகிறார்கள். இதை எப்படிச் சொல்லுகிறார்கள் என்று புரியவில்லை?,” என்று பல உளறல்கள் உள்ளன. இங்கு முக்கியமானவை மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

K.Veeramanis anti-Hindu tirade, Viduthalai, 27-07-2020
2019ல் வெளியிட்டக் கருத்து: 2019ல் பேசிய / எழுதிய சமாசாரங்களும் ஒன்றும் புதியவை அல்ல. கடந்த 100-150 ஆண்டுகளாக, வெளிநாட்டவர் எழுதி வந்துள்ளதை தொகுத்தவை தான். “இதற்கான நியாயமான காரணங்கள் இதோ”, என்று வீரமணி சொல்வது[11]:

  1. கீதை ஒரு இந்து மத நூல் மட்டுமல்ல, ஜாதியை ஆதரித்து நியாயப்படுத்தும் நூல்.

“சதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம், குண – கர்ம விபாகச

தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்த்யா கர்த்தாரர மவ்யயம்”

(அத்தியாயம் 4, சுலோகம் 13)

அதாவது, ‘‘நாலு வருணங்களையும் நானே படைத்தேன். நானே அதனைப் படைத்தவனாக இருந்தாலும் அதனை மாற்றிட அல்லது திருத்தி அமைத்திட என்னால் முடியாது” என்று கூறும் நூல்.

  1. சூத்திரர்களும், பெண்களும்பாவயோனியில் பிறந்தவர்கள் என்று அவர்களைக் கேவலப்படுத்தும் நூல்.

“மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யேஸ்பி ஸ்யு, பா – யோன்ய

ஸத்ரியோ வைச்யாஸ் – ததா சூத்ராஸ் – தேஸ் பியாந்தி பராங்கதிம்”

(அத்தியாயம் 9, சுலோகம் 32)

அதாவது, ‘‘பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள். அதனால் அவர்கள் கீழானவர்கள். “பிராமணன், சத்திரியன், வைசியன் ஆகிய மூன்று வர்ணத்தாருக்கும் தொண்டூழியம் செய்வது ஒன்றே சூத்திரர்களின் இயல்பான கடமையாகும்” என்றும் கூறும் நூல் பகவத் கீதை. மகளிரும் படிக்கும் ஒரு பல்கலைக் கழகத்தில் இப்படி இழிவுபடுத்தும் நூல் இடம்பெறலாமா?

© வேதபிரகாஷ்

29-07-2020

Tilak, Gandhi and Gita

[1] Sedition Committee Report, 1918 found that Bhagawat Gita was inspiring extreme nationalist freedom fighters were resorting to violence by the teachings of Bhagawat Gita and therefore, it had to be proscribed.

[2] ஆங்கிலேய அரசு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பகவஹ் கீதைப் படித்து, ஊக்கம் கொண்டு தான், ஆங்கிலேய அதிகாரிகளைக் கொன்று வருகின்றனர் என்று நினைத்துக் கொண்டனர். உண்மையில் அவர்கள் தங்களது வாழ்க்கை நிலையில்லாதது, அதனால், உயிரை தேசத்திற்காக அர்ப்பணிக்கலாம் என்பதனைத் திரித்து விளக்கம் கொண்டது.

[3] Ganachari, Aravind. British official view of Bhagawat Gita as text book for the mental trainng of revolutionaryProceedings of the Indian History Congress. Vol. 56. Indian History Congress, 1995, pp.601-610.

[4] Bangalore Mirror, Gita propagates violence: Sreedhar, Prathibha Nandakumar, Updated: Feb 28, 2015, 22:21 IST.

[5] https://bangaloremirror.indiatimes.com/opinion/views/bhagavad-gita-violence/articleshow/46414314.cms

[6] Corley, Felix. “RUSSIA: Has «madness» of banning religious publications been stopped?».” Forum, 2012.

[7] Indian Express, Anna University includes Bhagavad Gita in curriculum, irks academics, Published: 26th September 2019 05:23 AM | Last Updated: 26th September 2019 10:00 AM

[8] https://www.newindianexpress.com/cities/chennai/2019/sep/26/anna-university-includes-bhagavad-gita-in-curriculum-irks-academics-2039110.html

[9] கே. வீரமணி, ‘‘பகவத் கீதை ஏன் எதற்காக,” July 28, 2020 • Viduthalai • கழகம்

[10]https://viduthalai.page/article/%E2%80%98%E2%80%98%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%22/JVUSo8.html

[11]  கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் 26.9.2019, முகாம்: பிலெடெல்ஃபியா (அமெரிக்கா). https://www.facebook.com/asiriyarkv/posts/2489306694438478

தமிழகத்தில் தொடரும் மின்சாரத் திருட்டு: வாரியத்திற்கு கோடிகளில் நஷ்டமாம், சம்பளம் கொடுக்கத் திணறுகிறதாம்!

ஓகஸ்ட் 28, 2011

தமிழகத்தில் தொடரும் மின்சாரத் திருட்டு: வாரியத்திற்கு கோடிகளில் நஷ்டமாம், சம்பளம் கொடுக்கத் திணறுகிறதாம்!

தமிழ்நாடு மின்சார வாரியம் 52,500 கோடிகள் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கியுள்ளது.  ஆனால் நஷ்டத்தில் இயங்கும் போதும், பற்பல சலுகைகளை அள்ளிவீசித்தான் வருகிறது. இலவச மின்சாரம் என்ற பெயரில் நடக்கும் கொள்ளையில் தான் கோடிக்கள் விரயமாகிறது. இந்நிலையில் மின்சார ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லை என்றாதால், தமிழக அரசே 2,300 கோடி நிதியுதவி அளித்து உதவுகிறதாம்[1]. கூடிய சீக்கிரத்தில், மின்சார கட்டணம் அதிகமகப் போகிறது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் மின்சாரம் திருடுவது என்பது திராவிட கட்சிகளின் பாரம்பரியமாகவே இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு தெருக்கூட்டத்திற்கும் அவ்வாறு திருடுவது (கம்பிப் போட்டுத் திருடுவது ஒரு கைவந்த கலை[2]) பிறகு அவர்கள் வளர்ந்தவுடன், பொருளாதார அதிகாரம் பெற்றவுடன், அவர்களுடைய வியாபார காரணங்களுக்கு மின்சாரம் திருடுவது வாடிக்கையாக இருந்து வந்தது. இதே கலை தான் இப்பொழுது வரை தொடர்ந்து வருகிறது. இதைப் பற்றி “தமிழகத்தில் மின்சாரத் திருட்டு ஏன்?” என்ற தலைப்பில் எழுதியுள்ளேன்[3]

பொது நிகழ்ச்சிகள் நடத்துவதில் திருட்டு: பொது கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு மின்சாரம் உபயோகப்படுத்துவதில், முதலில் மின்சாரவரியத்திலிருந்து “ஒப்புதல் சான்றிதழ்” பெற்றபிறகுதான் அனுமதிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி அவ்வாறு ஒப்புதல் இல்லாமல், மின்சாரத்தை உபயோகப்படுத்துவர்கள் மீது சட்டப்படி “மின்சாரத் திருட்டு” என்று போலீஸாரிடத்திலேயே புகார் கொடுத்து தக்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மின்சார வாரிய விஜிலென்ஸ் துறை முடிவு செய்தது.
அருகிலுள்ள டிரான்ஸ்ஃபார்மரில் இருந்து திருடுவது: இதன்படி, நிகழ்ச்சிகளை நடத்துபவகள் குறுகிய கால உபயோக இணைப்புப் பெற்று, அதற்கான மின்னுபயோகத்திற்கு பணம் செல்லுத்தவேண்டும். இதனால் அருகில் இருக்கும் டிரான்ஃபார்மர்களிலிருந்து மின்சாராம் திருடுவது தடுக்கப்படும்.  மின்சார வாரிய விஜிலென்ஸ் துறை  தலைவர் வி.பாலச்சந்திரன், “ஜூன் 2005லிருந்தே இம்முறை இருந்தாலும், போலீஸாருக்கு உரிய ஆணைப் பிறப்பித்திருந்தாலும் சிலகாலத்திற்குப் பிறகு போலீஸார் அதை கடைப்பிடிப்பதை நிறுத்தி விட்டார்கள்”, என்று எடுத்துக் காட்டியுள்ளார்.
கம்பிபோட்டுத்திருடுவதால்இழப்பு, இனிமேல்போலீஸ்நடவடிக்கைஇருக்கும்என்றால், பிறகுமுன்புஏன்போலீஸார்நடவடிக்கைஎடுக்கவில்லை? “பொது கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு குறுகிய கால உபயோக இணைப்புப் பெற்று மினசாரத்தை உபயோகிக்க வேண்டும் இல்லை டீசல் ஜெனரேட்டர்களை உபயோகிக்க வேண்டும். ஆனால், பழையபடி, கொக்கிப் போட்டு மின்சாரத்தை திருட்டுத்தனமாக உபயோக்கப்படுத்துவதை நாங்கள் கண்டறிந்துள்ளதால், பழையபடி நடவடிக்கை எடுக்க உள்ளோம்” என்று சென்ற வருடத்தில் சொல்லிருந்தார்.
கட்டடங்கள்கட்டுபவர்கள்அருகிலுள்ளவயலிலிருந்துமின்சாரம்திருடுகிறார்கள்: இதே மாதிரி இப்பொழுது வீடு-கட்டிடங்கள் கட்டுபவர்களும், அத்தகைய திருட்டு வழியைப் பின்பற்றுகிறார்கள். பொதுவாக அருகில் உள்ள வீடு அல்லது வயலில் உள்ள இணைப்பிலிருந்து இவர்கள் மின்சாரத்தைத் திருடுகிறார்கள். அத்தகைய திருட்டுகளை 2008-2009ல் 512 மற்றும் 2009-2010ல் 1,532 என்று கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக அறிவித்தார்.
இலவசமின்சாரத்தைஆழ்கிணறுநீரெடுக்கப்பயன்படுத்துவது, நீரைவிற்பதுவிவசாயிகளின்திருட்டுவேலை: விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கொடுப்பதினால், அம்மின்சாரம் இவ்வாறான காரியங்களுக்கு உபயோகப்படுத்துவதால் வாரியத்திற்கு பெரிய அளவில் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது. குறிப்பாக தண்ணீரை லாரிகளில் விற்ப்பவர்கள், இக்காரியத்தை செய்து வருகிறர்கள். மேற்கு தமிழ்நாட்டில் கோயம்புத்தூரையும் சேர்ந்து மற்ற இடங்களில் இத்தகைய மின்சாரத்திருட்டு அதிகமாக நடக்கிறது. 2009-10ல் 329, 2008-09ல் 317 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கம்பிபோட்டுத்திருடுவதுதமிழகர்களுக்கு / திராவிடகட்சிகளுக்குகைவந்தகலை: மீட்டரை விடுத்து நேரிடையாக இணைப்பு கொடுத்தல்,  கம்பி போட்டு மின்சாரம் திருடும் முறைகள், 2009-10 வருடத்தில் குறைந்தாலும், புதிய முறைகளில் மின்சாரத்தைத் திருடும் வழிகள் அதிகரித்துள்ளன. 2008-9ல் கம்பிபோட்டு திருடுவது 2,765 ஆக இருந்தது 2009-10ல் 2,416க குறைந்தாலும், புதிய வகை திருட்டுமுறைகளில் அதிகமாகியுள்ளது. அதாவது ஒரே வருடத்தில் 563லிருந்து 3,266க புதிய திருட்டுகள் நடந்துள்ளன. அதாவது ழைந்து மடங்கு உயர்ந்துள்ளது. தூத்துக்குடி, ஈரோடு பகுதிகளில் புதியமுறை திருட்டுகள் நடைபெறுகின்றன. இதற்காகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மின் திருட்டு, மின்வாரிய சொத்து திருடுவோர் மீது குண்டாஸ்! தயாராகிறது அரசின் அடுத்த திட்டம்[4]: மின் திருட்டால் நஷ்டமடைந்துள்ள தமிழக மின்வாரியம், மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள மின்சார பாதுகாப்புப் படை, விரைவில் அதிரடி,”ரெய்டு’களை துவங்க உள்ளது. தமிழகத்தில் மின்திருட்டால், மின்வாரியத்திற்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மின் மீட்டர்களை சேதப்படுத்துதல், காந்தம் வைத்து மீட்டர்களை ஓட விடாமல் வைத்தல், மீட்டருக்கான இணைப்பை ரத்து செய்தல், டிரான்ஸ்பார்மர்களில் கொக்கி போடுதல் என, பல வகைகளில் மின்சாரம் திருடப்படுகிறது. மின்திருட்டையும், பகிர்மானத்தின் போது ஏற்படும் மின் இழப்பையும் தடுத்தாலே, ஓரளவு நஷ்டத்தை மின்வாரியம் சரிக்கட்ட முடியும். முதற்கட்டமாக, மின் திருட்டை தடுக்கும் நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டுள்ளது.

எடுக்கப்படும்-படுகின்ற நடவடிக்கைகள்: இதற்காக, மின்வாரிய சேர்மனின் நேரடி கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள 18 பறக்கும் படைகள், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய நான்கு இடங்களில் செயல்படுகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் பறக்கும்படை ரெய்டில், 6,230 வழக்குகள் பதியப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில், 13.14 கோடி ரூபாய் மதிப்பிலான திருட்டு நடவடிக்கைகளை கண்டுபிடித்துள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், தமிழகம் முழுவதும், 1,642 மின் திருட்டு வழக்குகள் பதிந்து, இந்திய மின்சார சட்டம் 2003ன் படி, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மின்சார பாதுகாப்புப் படை அமைக்க, மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான முடிவுகள், மின்வாரிய 14வது கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு, ஓய்வு பெற்ற 400 ராணுவ வீரர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

மின்வாரிய கண்காணிப்பு (விஜிலென்ஸ்) போலீசாரின் நடவடிக்கை:  இது மட்டுமின்றி, தமிழக மின்வாரியத்தில் செயல்படும் கண்காணிப்பு (விஜிலென்ஸ்) போலீசாரும், மின் திருட்டை தடுக்கும் நடவடிக்கையை துவங்கியுள்ளனர். வரும் காலங்களில், தொடர்ந்து மின் திருட்டில் ஈடுபடும் நிறுவனங்களின் மின் இணைப்புகளை, நிரந்தரமாக ரத்து செய்யவும், நிறுவனங்களின் அனைத்து அங்கீகாரங்களையும் ரத்து செய்ய பரிந்துரைக்கவும், மின்வாரியம் முடிவு செய்துள்ளது.மின் திருட்டில் ஈடுபடுவோர் மற்றும் மின்வாரிய பொருட்களுக்கு சேதம் விளைவிப்போர் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, மின்வாரிய பறக்கும்படை பொறியாளர் ஒருவர் கூறியதாவது:மின் திருட்டை தடுப்பதின் மூலம், 15 சதவீத நஷ்டத்தை சரிக்கட்ட முடியும். இதை கருத்தில் கொண்டு, மின் திருட்டை தடுக்க, 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். திருட்டில் சிக்குவோர் மீது, இந்திய மின்சார சட்டம் 2003 பிரிவு 135(1) சி அடிப்படையில் நடவடிக்கை எடுக்கிறோம். இரண்டு வகையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தவறை ஒப்புக் கொண்டு, மின்வாரிய நடவடிக்கைக்கு சமரசமாக ஒத்துழைப்போரிடம், மின்வாரியம் நிர்ணயிக்கும் கட்டணத்தை அபராதமாக பெற்று, எச்சரித்து அனுப்புகிறோம். இரண்டாவது வகையில், ஒன்றுக்கு மேற்பட்ட முறை தவறு செய்வோர் மீது வழக்கு பதிந்து, கோர்ட் மூலம் நடவடிக்கை எடுப்பதாகும். இதில், பெரும்பாலானோர், தவறை ஒப்புக் கொண்டு அபராதம் செலுத்தி விடுவர். தற்போது, மின்சார பாதுகாப்பு படையும் செயல்பாட்டுக்கு வரும் நிலையில்,  பலமுறை பிடிபடுவோரை போலீசாரிடம் ஒப்படைத்து, மின்சார சட்டம் மட்டுமின்றி, இந்திய குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். எரிசக்தித் துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவைப் போல், மின்திருட்டில் தொடர்ந்து ஈடுபடுவோர் மீதும், மின் இணைப்பு பெட்டியின் கதவுகளை திருடுதல், மின்வாரிய கேபிள்களை திருடுதல்[5] போன்ற மின்வாரிய சொத்துக்களை திருடுவோர் மீது, குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறோம்’ என்றார்.

சட்டம் சொல்வதென்ன? இதுகுறித்து, சட்டத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது, தமிழகத்தில் 1982 சட்டம் 14 என்ற சட்டத்தின் அடிப்படையில் தான், குண்டர் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.  “சட்டத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவோர், கள்ளச் சாராயம் காய்ச்சுவோர், போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல், வனச்சட்டத்துக்கு எதிரான செயல்கள், ரவுடி அராஜகம், விபச்சாரம், நில அபகரிப்பு, போலி வீடியோ தயாரித்தல் ஆகிய குற்றங்களுக்கு எதிரான சட்டவிரோத தடுப்பு தமிழக சட்டம் 1982(14)’ என, இச்சட்டம் அழைக்கப்படுகிறது. இதில், போலி வீடியோ தயாரிப்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் சட்டம், கடந்த 2004ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா உத்தரவால் திருத்தம் செய்யப்பட்டதாகும்.

புதிய சட்டத்திற்கு தயாராகும் புதிய அரசு? தற்போது,  ஆட்சி மாற்றத்திற்கு பெரும் காரணியாக விளங்கிய மின் பிரச்னையை சரிசெய்ய, மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டத்தை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த சட்டத்தில், “மின்துறைக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள்’ என்பதை இணைத்து, சட்டசபை கூடுவதற்கு முன் அவசரமாக தேவைப்பட்டால், கவர்னர் ஒப்புதலுடன் திருத்த (ஆர்டினன்ஸ்) சட்டமாக கொண்டு வரலாமா என, மின்துறை ஆலோசனை நடத்துகிறது[6]. இவ்வாறு அவர் கூறினார்.


[1] தினமலர், சம்பளம் கொடுக்க திணறும் மின்வாரியம்: தமிழக அரசு ரூ 2300 கோடி நிதியுதவி, 27-08-2011, சென்னை பதிப்பு, ப,2.

[2] சில தொண்டர்களுக்கு, அந்தந்த வட்டங்களில் சிறப்பான பயிற்சி அளிக்கப்படும் அல்லது மின்சார வேலை செய்யும் திராவிடக் கட்சித் தொண்டரே அதனை அழகாக செய்வார்.

[4] தினமலர், மின் திருட்டு, மின்வாரிய சொத்து திருடுவோர் மீது குண்டாஸ்!தயாராகிறது அரசின் அடுத்த திட்டம், பதிவு செய்த நாள் : ஜூலை 17,2011,23:38 IST; மாற்றம் செய்த நாள் : ஜூலை 18,2011,00:56 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=277281

[5] இது மின்வாரியத் துறை அதிகாரிகள், ஊழியர்கள், தனியார் கம்பெனிகள் முதலியோர்களின் கூட்டுக்கொள்ளையில் நடந்து வருகிறது. இது சாலை போடுவது போன்ற மோசடி வேலையாகும். முதலில் கம்பிகள் காணவில்லை என்ரு செய்தி வரும், பிறகு அதற்கு சப்ளை செய்யப்பட்டது என்று கணக்கு எழுதப்படும். கோடிகளை அனைவரும் பங்கிட்டுக் கொள்வர்.

[6] புதிய சட்டம், திருத்தம் என்றாலே, அந்த தேதியிலிருந்து தான் அமூலுக்கு வரும். அப்படியென்றால், பழைய குற்றங்கள், அச்சட்டத்தில் வராது. அதாவது, பழைய குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள மறைமுகமாக உதவ அரசியல்வாதிகள் இவ்வாறு செய்வார்கள்.