நாகர்கோவிலில்கூட்டத்தில் ”ஹிந்துக்களைவஞ்சிக்கும்கட்சிகளைஆட்சிக்குவரவிடாமல்தடுக்கவேண்டும்” எனதீர்மானம்நிறைவேற்றப்பட்டது (03-01-2021): நாகர்கோவிலில் திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த சிவனடியார்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் ”ஹிந்துக்களை வஞ்சிக்கும் கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது[1]. இந்த கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் சொத்துகளை ஒரு சதுர அடி கூட விடாமல் மீட்டு கோயில்கள் வசம் ஒப்படைப்பது. அடியார்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு மருத்துவம், கல்வி உதவி வழங்க வேண்டும். சைவ மதத்துக்கு எதிராக தவறான கருத்து சொல்பவர்களை மாநிலம் முழுவதும் ஒரே குரலில் எதிர்க்க வேண்டும். ஹிந்துக்களை வஞ்சிக்கும் அரசியல் கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன[2]. இது விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் சிறப்பாகத் தெரிகிறது. இத்தகைய கூட்டங்கள் நிறைய நடத்தப் படவேண்டும். அத்தகைய செய்திகள் மக்களைச் சென்றட்டைய வேண்டும். குறிப்பாக, இன்றும் திக-திமுக திராவிடக் கட்சிகளை விசுவாசமாக ஆதரித்து வரும், சில சைவ சமூகத்தினர், இதுவரை நடந்துள்ள, நடந்து வரும் தீமைகளைக் கருத்திற்க் கொண்டு மாற வேண்டும்.
நெல்லையில்எதிர்ப்புதெரிவித்தஇந்துஅமைப்பினர்: கந்தபுராண பாடலை திமுக கட்சி பாடல் போல் மாற்றி இழிவு படுத்தியதைக் கண்டித்து நெல்லை டவுனில் இந்து முன்னணியினர், சிவனடியார்கள், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் இணைந்து திருமுறைகள் பாடி பெருந்திரல் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்[3]. வான்முகில் வழாது பெய்க என்ற கந்தபுராண வாழ்த்து பாடலை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் திமுக தேர்தல் பிரச்சார பாடல் போல மாற்றி பதிவேற்றம் செய்த நபர்களையும் இறை வழிபாட்டு பாடல் கட்சி பாடல் போல் உருவாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நெல்லை டவுன் வாகையடி முனையில் இந்து முன்னணி சார்பில் பெருந்திரல் பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பிரார்த்தனை கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் சிவனடியார்கள் திருக்கூட்டம் இணைந்து தேவார திருவாசக திருமுறை பாடல்கள் பாடி இறைவனை வழிபட்டு பெருந்திரள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து கட்சி பாடலாக மாற்றம் செய்து கந்தபுராண வாழ்த்துப் பாடலை இழிவுபடுத்திய நபர்கள் மீதும் சமூக வலைதளங்களில் அதை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது[4].
2020ல்காமாட்சிபுரிஆதீனம்சிவலிங்கேஸ்வரசுவாமிகள்கருப்பர்கூட்டத்தைக்கண்டித்தது: இந்து கடவுள்களை அவமதித்தால் நாக்கை துண்டிக்க பயப்பட தேவையில்லை என காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் 22-07-2020 அன்று தெரிவித்துள்ளார்[5]. கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கறுப்பர் கூட்ட யூ ட்யூப் சேனலுக்கு கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தில் இது போன்ற பேச்சுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்து மதத்தை இது போன்று இழிவுபடுத்தும் செயல்களில் யாராவது செயல்பட்டால் அவர்களின் நாக்கை துண்டிப்பதற்கும் கூட பயப்பட தேவையில்லை எனவும் ஆதீனம் பேசினார்[6]. உண்மையில், அவர் ஆதங்கத்துடன், பேசியுள்ளதை நினைவு கூறவேண்டும். தெய்வநம்பிக்கை ஆழமாக-உறுதியாக இருப்பது நல்லது தான், ஆனால், எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று சும்மா இருக்க முடியாது. தேர்தல், ஓட்டு, ஓட்டுவங்கி, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இத்தகைய இந்துமத-தூஷணங்களை செய்து வருவதால், நிச்சயமாக, இந்துக்கள் அதே முறையில், சரியான பதிலை சொல்லியாக வேண்டும். அவர்களுக்கு இந்து-ஆதரவு ஆட்சித் தேவையா அல்லது இந்து-விரோத ஆட்சி வேண்டுமா என்று இந்துக்கள் தான் தீர்மானிக்க வேண்டிய நிலையுள்ளது. “ஆவணன் ஆண்டால் என்ன, ராமன் ஆண்டால் என்ன” என்று இருந்தால், இதே இந்துவிரோத நிலைத் தான் தொடரும்.
2019ல்சிலமடாதிபதிகள்பேசியது: சென்னை சேப்பாக்கத்தில் 12-04-2019 அன்று ஆதீனங்கள், துறவிகள், மடாதிபதிகள் என 11 பேர், தங்களது தேர்தல் நிலைப்பாட்டை அறிவித்தனர். அப்போது பேசிய பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள், இந்து மதத்திற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில், மக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்[7]. யார் இந்து மத தொண்டர்கள் என தங்களை அறிவிக்கிறார்களோ, குங்குமம் வைக்கிறார்களோ, அவர்களுக்கே ஆதரவளிக்க வேண்டும் எனவும், அவர் குறிப்பிட்டார்[8]. பின்னர் பேசிய கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வரர், தெய்வபக்தி நிறைந்த தமிழகத்தில் ஆன்மிகத்திற்கு எதிராக தலைவர்கள் பேசுவதற்கு கண்டனம் தெரிவித்தார். இதே நிலை, இப்பொழுது 2021லும் தொடர வேண்டும். இந்து அமைப்புகள் மறுபடியும் இத்தகைய கூட்டங்களைக் கூட்ட வேண்டும், இணதள பிரச்சாரங்களும் நடந்து வருவதால், அத்தகைய முறைகளையும் கையாள வேண்டும். சைவ மடங்கள், உழவாரப் பணி குழுக்கள் முதலியவற்றையும், அதில் ஈடுபடுத்தப் படவேண்டும்.
இந்துக்கள்கவனிக்கவேண்டியது, செய்யவேண்டியதுமுதலியன: மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள், பின்னணி. அரசியல், அதிகாரம் போன்ற காரணிகளை உன்னிப்பாக அலசிய பின்னர் கீழ்காணும் அம்சங்கள் கொடுக்கப் படுக்கின்றன:
முன்பு ஆண்டாள், இப்பொழுது முருகன் என்று திட்டம் போட்டு, இந்துக்களின் மங்களைப் புண்படுத்தி வருவது தெரிகிறது.
உண்மையான நாத்திகம் என்றால், கடவுள் இல்லை என்பதும் உண்மையான கொள்கையாக இருக்க வேண்டும். ஆனால், நாத்திகர் என்று பிரகடனப் படுத்திக் கொண்டு, இந்து-அல்லாத கடவுளர்களை விமர்சிப்பது, தூஷிப்பது கிடையாது. எனவே, அவர்களது நாத்திகம், இந்துவிரோத நாத்திகம் ஆகிறது.
அதனால், தான் கிறிஸ்தவ-முஸ்லிம் கோஷ்டிகள் இவர்களது மேடைகளில் பிரசங்கம் செய்கிறார்கள் மற்றும் கிறிஸ்தவ-முஸ்லிம் மேடைகளில், இந்துவிரோத நாத்திகர்-திராவிடத்துவ துவேசிகள் பேசி வருகிறார்கள்.
புகார் கொடுத்தாலும், எப்.ஐ.ஆர் போட்டாலும், சட்டப் படி, இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவையெல்லாம் அப்படியே காலாவதியாகின்றன,
அதனால் தான், செய்த குற்றங்களையே, திரும்பச் செய்து வருகிறார்கள். சட்டப் படி, தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற ரீதியில் அதே தூஷணங்களை செய்து வருகிறார்கள்.
ஆகவே, சட்டப் படி நடவடிக்கை எடுக்க வைத்து, ஒருவனையாவது, தண்டனைக்கு உட்பத்த வைத்து, தண்டிக்கப் பட்டால், மற்றவர்களுக்கு பாடமாக்க இருக்கும், அச்சம் ஏற்படும்.
இல்லையென்றால், பயமில்லாமல் போகும், “காலையில் கைது, மாலையில் விடுதலை,” போன்ற விளையாட்டாகி ஆகிவிடும்.
தேர்தல் நேரத்தில் இவ்வாறு செய்யும் போது, அத்தகைய தேர்தல் சட்டங்கள் பிரிவுகளின் கீழ், உரிய சட்டமீறல்களை குறிப்பிட்டு, ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால், தேர்தலில் நிற்கமுடியாத நிலையையும் உண்டாக்கலாம்.
தமிழகத்தில் இருக்கும் சுமார் 300 இந்து மடங்கள், அமைப்புகள் முதலியவை, இதில் ஒன்று பட்டு செயல்படவேண்டும்.
இந்துவிரோதமும், இந்துவிரோதமறுப்பும் – யுக்திகள், வழிமுறைகள்: சமீப காலமாக மதம் சார்ந்த நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவது டிரெண்டாக மாறிவிட்டது, என்கிறது ஊடகம், ஆனால், இந்து என்று முதலில் குறிப்பிடவில்லை. மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இது 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது, ஆனால், இந்துத்துவவாதிகளால், அதைக் கட்டுப் படுத்த முறையாக எதுவும் செய்ய முடியவில்லை. எதிர்-பிரச்சாரமும் சொதப்பலாகத் தான் இருந்து வருகிறது. அதாவது, இந்து விரோத நாத்திகர்கள், திராவிட பகுத்தறிவுகள், பெரியார் பிஞ்சுகள், ஈவேரா குஞ்சுகள் எல்லாம், இந்து கடவுளர்களை தூஷித்துக் கொக்கரித்துக் கொண்டிருக்கும் போது, இந்த இந்துத்துவவாதிகள், ஈவேரா, மணியம்மை, வீரமணிகளைத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்துத்துவ வாதிகள் இவ்வாறு முறையற்ற ஒப்பீட்டு விமர்சனங்களினால், தோற்றுப் போகின்றனர். முறையாக, முழுமையாக திராவிட சித்தாந்தத்தை, அதனை ஆதரிக்கும் அரசியல் மற்றும் அரசியல் ஆதரவு 70-100 ஆண்டுகள் பயனாளிகள் ஆதரவு முதலியவற்றை அறியாமல் அல்லது மறந்து, இவ்வாறு செய்து வருகின்றனர். அதனால், அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.
சைவர்கள்இந்துக்கள்அல்லர்போன்றபேச்சுகள் – அவற்றைஆதரிக்கும்கூட்டங்கள்: இந்துவிரோத கும்பல்கள் வேண்டுமென்றே மடாதிபதிகள், சைவ குருமார்கள் என்று சிலரை வைத்துக் கொண்டும், தூஷணங்களை செய்து வருகின்றனர். 2020 டிசம்பரில் அதத்தைய கூத்து அரங்கேறியது. ஆனால், 2020 அக்டோபரில் உஷாரான சில மடாதிபதிகள், தங்கள் பெயர்கள் ஒரு மாநாட்டு அழைப்பிதழில் தோன்றியபோது, மறுத்து, ஒதுங்கினர்[1]. ஆனால், அவர்களது அனுமதி இல்லாமல் அவ்வாறு நடந்ததா என்று தெரியவில்லை[2]. சென்னை பல்கலைக்கழக “உலக சைவ மாநாட்டு கருத்தரங்கத்தில்” பேசிய இரு மடாதிபதிகள், “சைவர்கள் இந்துக்கள்” அல்ல போன்ற சித்தாந்தத்ததாதரித்துப் பேசியதை நினைவு கொள்ள வேண்டும். ஆகவே, இவையெல்லாம், ஏதோ ஒரு திட்டத்துடன், தொடர்ந்து நடப்பதாகத் தெரிகிறது. சைவ சித்தாந்தத் துறை சரவணன் வெளிப்படையாக பேசியது போல, கர்நாடக வீரசைவர்கள் இந்துக்கள் அல்லர் என்று சொல்லிக் கொள்வது போல, தாங்களும் அவ்வாறே, கூறிக் கொள்கிறோம் என்று பேசியதும் இங்குக் கவனிக்க வேண்டும். பிறகு, சைவ மடங்கள், இந்து அறநிலையத் துறையிலிருந்து வெளியேறி விடலாமே? ஒருவேளை அத்தகைய சதித்திட்டத்தைத் தான் தீட்டியுள்ளனர் போலும்.
கந்தபுராணம்பாடலைஇழிவுபடுத்தியதற்கு, காமாட்சிபுரிஆதீனம்ஸ்ரீசிவலிங்கேஸ்வரசுவாமிகள்கண்டனம்தெரிவித்தது: ஆன்மிக பெரியோர்கள், ஆதீனங்கள், மடாதிபதிகள் இதுபோன்ற இந்து விரோத பேச்சுகளுக்கு, செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தும், மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தி.மு.க.,வினர் கந்தபுராணத்தை கொச்சைப்படுத்தி, கட்சி விளம்பரம் தேட முயன்றுள்ளனர். இதற்கு காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் கண்டனம் தெரிவித்துள்ளார். கந்தபுராணத்தில், ‛வான்முகில் வழாதுபெய்க, மலிவளம் சுரக்க மன்னர் கோன்முறை அரசு செய்க, குறைவிலாது உயிர்கள் வாழ்க, நான்மறை அறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்,’ என்று மங்கல வாழ்த்து பாடல் இடம்பெற்றுள்ளது[3].
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம். கந்தபுராணம்
மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம் பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம் நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப் புல்குக உயிர்கட் கெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க. திருவிளையாடற்புராணம்
இதை மைந்தன் கோன்முறை அரசு என்று கருணாநிதி, ஸ்டாலின் படத்தை காண்பித்தும், மேன்மைகொள் சமூக நீதி ஐம்பெரும் அறங்கள் ஓங்க, நன்னெறி தொழில்கள் மல்க ‘ என்று பாடல்வரிகளை தஙகளது கட்சிவிளம்பரத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளனர்[4]. இது குறித்து காமாட்சிபுரி ஆதினம் கூறியதாவது[5]: “மேற்கூரியகந்தபுராணபாடல்தேசியகீதத்தைபோன்றுஉலகம்சிறப்புறஇறைவனிடம்வேண்டும்பாடல். பெரும்பான்மையானமக்கள்வழிபடும்பாடலைகொச்சைபடுத்தும்விதமாகஅரசியல்கட்சிவெளியிட்டுள்ளபாடல்வரிகள்அமைத்துள்ளன. அரசியல்கட்சிகள்தங்களதுகொள்கைகோட்பாடுகளில்மட்டும்கவனம்செலுத்தவேண்டும். மதநம்பிக்கைகளைஇழிவுபடுத்தும்செயல்களைகைவிடவேண்டும். மக்களிடம்குழப்பத்தைஏற்படுத்தும்இதுபோன்றசெயல்கள்தொடர்ந்துநடந்துவருமேயானால், கடுமையானவிளைவுகளைசந்திக்கநேரிடும்,” இவ்வாறு அவர் கூறினார்[6].
கந்தசஷ்டிகவசம்முதல்கந்தபுராணம்வரை: சமீபத்தில், கந்தசஷ்டியை இழிவுபடுத்தி யூ டியூப்பில் வெளியான கருத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. அது ஓய்வதற்குள் தி.மு.க.,வினர் கந்தபுராணத்தை டப்பிங் செய்து வீடியோ பாடல் வெளியிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது. “இந்து என்ற சொல்லைக் கேட்டாலே எரிகிறது,” என்று சிலரைப் பேச வைத்து சிரித்து ரசித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் தற்போது கோவில்களில் பிரச்சாரக் கூட்டம் நடத்துவது, இந்து சமய நூல்களை புகழ் மாலை புனையப் பயன்படுத்துவது என்று கிளம்பி இருக்கிறார்[7]. ஆன்மீகப் பெரியோர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த போதும் இந்துக்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் விதமாக நடந்து கொள்வது தொடர்ந்து வருகிறது. இந்து என்று ஒரு மதமே கிடையாது என்று தி.மு.க கிறிஸ்துமஸ் விழாவில் கலையரசி நடராஜன் என்பவர் பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் தற்போது கந்த புராணப் பாடலைக் கொச்சைப்படுத்தும் விதமாக தி.மு.க பிரச்சாரப் பாடலாக பயன்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது[8]. ஆக, “கந்தசஷ்டிகவசம்முதல்கந்தபுராணம்வரை,” போன்ற கேவலமான நாடகங்களை அரங்கேற்றி மக்களை ஏமாற்றும் வேலைகள் தேவையில்லை.
சைவசமயசின்னங்கள், இலக்கியவரிகள்முதலியவற்றைஉபயோகப்படுத்துவது: இந்த வீடியோவிலும், கருணாநிதி, ஸ்டாலினை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை, ராஜராஜன், ராஜேந்திரனுடன் ஒப்பிடும் வகையில், கங்கைகொண்ட சோழபுரம் சிற்பத்தைக் காட்டி, தாங்கள் இருக்கும் புகைப்படத்தை, “மைந்தன் கோன்முறை அரசு செய்க, என்று அற்பத் தனமாகக் காட்டுகின்றனர். அவ்வாறு ஒப்பிட்டுக் கொள்ள, கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் எந்த அருகதையும் இல்லை. ஏனெனில், பார்ப்பன அடிவருடிகள் என்று அந்த சோழர்களை இழித்துப் பேசியுள்ளதை கவனிக்க வேண்டும், பிறகு அத்தகைய, ஒப்பீடுப் பார்ப்பதில் என்ன வறட்டு சந்தோசம்? மேலும், இந்து விரோதத்துடன் நெற்றியில் குங்குமத்தை வைத்துக் கொண்டதை இகழ்ந்தவர் தந்தை கருணாநிதி. நெற்றியில் வைத்த குங்குமம், விபூதி, சந்தனம் முதலியவற்றை அழித்தவர் தனயன் ஸ்டாலின். இப்பொழுது வேண்டுமென்றே, கோவில்களுக்கு அருகில், கோவில் வளகங்களில், மைதானங்களில் கூட்டம் போட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இத்தகைய கேடுகெட்ட தூவேசிகளை உண்மையான இந்து யாரும் ஆதரிக்க மாட்டார்கள்.
இந்துத்துவ பாதையில் திமுக: பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி- திமுக வலையில் சிக்கிக் கொண்ட பிஜேபி, இந்துத்துவ வாதிகள் பார்ப்பனர்களைத் தூற்றியது (3)
பல புகைப் படங்கள் இருந்தாலும், சிலவற்றை வைத்து தூஷித்தது!
இந்துத்துவவாதிகள் எதிர்க்க வேண்டியது திமுகவையா, பார்ப்பனர்களையா?: 30-11-2020 அன்று, “இந்துத்துவபாதையில்திமுக: பகுத்தறிவுசூழ்ச்சி, நாத்திகதந்திரம், மற்றும்அரசியல்யுக்திஎந்தஅளவுக்குஉதவும்என்பது 2021 தேர்தல்நிரூபித்துவிடும் (1)” மற்றும் “இந்துத்துவபாதையில்திமுக: பகுத்தறிவுசூழ்ச்சி, நாத்திகதந்திரம், மற்றும்அரசியல்யுக்தி: உதயநிதிவிபூதிபூசுவது, துர்காகோவில்கட்டுவதுமுதலியன(2)” என்று, எவ்வாறு திமுக “மென்மையான இந்துத்துவத்தை” பின்பற்ற ஆரம்பித்து விட்டது என்று “பிளாக்” போட்டு முடித்த சிறிது நேரத்தில், டுவிட்டரில் உள்ள சில புகைப் படங்களை[1], பேஸ்புக்கில் போட்டு, அவற்றை வைத்து, பார்ப்பனரை விமர்சிக்க ஆரம்பித்தனர். எதிர்பார்த்தப் படி, அப்படியே ஷேர் செய்வது, லைக் போடுவது, திட்டுவது என்பது தொடர்ந்து அதிகமாகின. குறிப்பிட்ட பிஜேபிகாரர்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி (வகையறாக்கள் உட்பட), நபர்கள் அத்தகைய அதிரடி, தாக்குதல், போஸ்டிங்குகளை செய்ய ஆரம்பித்தனர். இது நிச்சயமாக “இதுத்துவத்திற்கு” ஒவ்வானதாகும். இருப்பினும் மிக மோசமாக அத்தாக்குதல் அரங்கேறியுள்ளது. அதனால், மூன்றாம் பகுதியில், இவற்றை பதிவு செய்ய வேண்டிய நிலை / கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பல புகைப் படங்கள் இருந்தாலும், சிலவற்றை வைத்து தூஷித்தது! இவர்கள் பார்ப்பனரா என்பது அவர்களுக்குத் தெரியாது போலும்!
அரசியல்போர்வையில்நடத்தியதாக்குதல்: திமுகவை எதிர்க்கிறேன் என்று நூற்றுக் கணக்கான, முகநூல் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இது முன்னணி வகையறாக்கள், பிராமணர்களைத் தாக்கி வசைப்பாடியுள்ளனர். Subbu FOTOGRAFI என்று டுவிட்டரில், உதயநிதிக்கு விபூதி வைப்பது, அக்ஷதை போடுவது, தலையில் பொன்னாடை கட்டுவது, மாலை போடுவது என்று பலவித பிராமணர் / பார்ப்பனர், பட்டர், சிவச்சாரி………. (துலுக்கர் உட்பட) என்று புகைப்படங்கள் உள்ளன. ஆனால், இந்துத்துவ வாதிகள், பிஜேபிகாரர்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி (வகையறாக்கள் உட்பட), பார்ப்பனரை / பிராமணரை மட்டும், மிகக் கேவலமாக, மோசமான, ஆபாசமான………வார்த்தைகளை உபயோகப் படுத்தி தூஷித்துள்ளனர். பார்ப்பனர் அல்லாத பற்பல இந்துத்துவவாதிகள், திக-திமுக-கம்யூனிஸ வகையறாக்கள் கூட வியாபாரம், நட்பு, பார்ட்டிகளில் கொண்டாட்டம் போடுவது……என்றெல்லாம் உள்ளனர். தைரியம் இருந்தால், இதே போன்று ஒரு சுப்புவை வைத்து, போட்டோ எடுத்துப் போட்டிருக்க வேண்டும். திமுக வலையில் நன்றாக மாட்டிக் கொண்டனர். லாஜிக்கே இல்லாமல், எதிரிகளை எதிர்க்காமல், பிரமாண துவேசத்தைக் கக்கியுள்ளனர்.
பல புகைப் படங்கள் இருந்தாலும், சிலவற்றை வைத்து தூஷித்தது! இவர்கள் பார்ப்பனரா என்பது அவர்களுக்குத் தெரியாது போலும்!
ஆபாசமாக, கேவலமாகபதிவுசெய்துள்ளதில்சில – உதாரணத்திற்கு[2]: இந்துத்துவ வாதிகள், பிஜேபிகாரர்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி (வகையறாக்கள் உட்பட), பார்ப்பனரை / பிராமணரை மட்டும், மிகக் கேவலமாக, மோசமான, ஆபாசமான………வார்த்தைகளை உபயோகப் படுத்தி தூஷித்துள்ள வசனங்களில் சில[3]:
இது திமுகவின் பிராமண அணி,
எவ்வளவு செருப்படி பட்டாலும் புத்தி வராது பிராமணனக்கு,
கருணாநிதி முன்னோர்கள் மாநில ஆந்திர இறக்குமதி பார்ப்பனர்கள்.
தொடர்ந்து இந்து மதத்தை இழிவு செய்யும் திருட்டு திராவிட “ஈனப்பயலுடன்” செல்பி படம் எடுக்கும் இந்த கேடுகெட்டவனை.. படம் [செருப்பால் அடிக்க வேண்டும்]
நக்குனா இப்படி தான் நக்கனும் இதை விட அசிங்கமா எழுதுவேன் என் ஆத்மார்த்த நண்பர் deva priyaji, piriya ramkumar, போன்றவர்களின் மனம் புண்பட கூடாது என்பதற்காக அடக்கி வாசிக்கிறேன்.
அட குரங்கு குப்பங்களா யாருக்கு என்ன மரியாதை செய்யணும்னு தெரியாதா?
இவர்கள் உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ்,சில் பயிற்சி எடுத்திருந்தால், அவ்வாறான கமென்டுகளை செய்திருக்க மாட்டார்கள். ஆனால், செய்துள்ளார்கள் என்பதால், பல சதேகங்கள் எழுகின்றன.
இது மட்டும் தான் அவர்களுக்குத் தெரிந்தது போலும்!
திமுகவுடன்சேர்ந்துபோட்டோஎடுத்துக்கொண்டவர்கள்அனைவரையும் ஒரேமாதிரியாகவிமர்சிப்பு, தாக்குதல்முதலியனஏன் செய்யவில்லை?: முன்பு “இந்து முட்டாள்கள்” என்று பதிவு செய்த போது, கோபித்துக் கொண்டார்கள், ஆனால், இப்பொழுது, அதை விட மோசமாக கமென்ட் செய்துள்ளார்களே? என்ன செய்வது? இந்த “இந்துத்துவ முட்டாள்கள்” திமுகவை எதிர்க்கிறார்களா, இந்துக்களை எதிர்க்கிறார்கள், இந்து மதத்தை குறை கூறுகிறார்களா? பார்ப்பனர்கள் / பிராமணர்கள் என்றெல்லாம் முட்டாள் இந்துக்கள் விமர்சிப்பதால், எல்லா வந்தேறி – பார்ப்பனர்கள் பிஜேபியிலிருந்து , இந்து அமைப்புகளிலிருந்து விலகி விடலாம்! சில நாட்களுக்கு முன்னர், அந்த ஆதின மடாதிபதி, இரவு 10 மணிக்கு மேலே, ஆசிர்வாதம் எல்லாம் நடத்திய போது, அவரை, ஜாதி பெயர் சொல்லி விமர்சிக்கவில்லை, இவ்வகையில் போட்டி போட்டுக் கொண்டு, தூஷிக்க வில்லை. இதிலிருந்து, அரசியல் ரீதியில், சூழ்ச்சியாகத்தான் பார்ப்பனரை / பிராம்மணரை எல்லோரும் சேர்ந்து தாக்குகின்றனர் என்று தெரிகிறது.
1999ல் அதிமுக ஒதுக்கியதால், திமுகவுடன் பிஜேபி கூட்டு வைத்துக் கொண்டது. கருணாநிதி, வைகோ என்று திராவிடத் தலைவர்கள் வாஜ்பேயுக்கு போன்னாடைப் போற்றி வாழ்த்தினர். அரசியல் வியபாரமும் நடந்தது, அதாவது, கூட்டணி உடன்படிக்கை ஏற்கப் பட்டது. ஒரு பார்ப்பனனைச் சுற்றியிருக்கும் அவர்கள் பார்ப்பனர்களா? என்றெல்லாம் யாரும் கேட்கவில்லை. 182 எம்.பிக்களைக் கொண்ட பிஜேபி, திமுக ஆதரவுடன் ஆட்சி அமைத்தது[4]. பிஜேபி-ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திமுகவினருக்கும் தேர்தல் பிரச்சார செய்தனர்………. அதை இங்கு விளக்க விருப்பம் இல்லை. காவிகள் அறிவார்கள். முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, ஏ.ராஜா, முதலியோர் மத்திய அமைச்சர்கள் ஆகினர். “ஒரு கெட்ட கட்சியில் உள்ள அல்ல மனிதர்,” என்றெல்லாம் அந்த பார்ப்பன பிரதம மந்திரி விமர்சிக்கப் பட்டார். இன்னும் சொல்ல நிறைய உள்ளன…………..ஆகவே, 2020ல் இத்தகைய வெளிப்பாடு திகைப்பாக இருக்கிறது.
ஸ்டாலினைபாராட்டியசி.பி.ராதாகிருஷ்ணன்செப்டம்பர் 2019[5]: முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் குடும்ப திருமணவிழா திருப்பூரில் 05-09-2019 அன்று நடந்தது. திருமண விழாவில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், பாஜக தலைவர்களில் ஒருவரான முன்னாள் எம்.பி சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர். திருமண நிகழ்ச்சியில் பேசிய, சி.பி ராதாகிருஷ்ணன்[6], “கலைஞருக்குபிறகுகட்சியின்தலைமையைஏற்றதளபதிஅவர்கள், எங்களையெல்லாம்தோற்கடித்துஇன்றுவெற்றிதளபதியாகஉள்ளார். நாங்கள்இன்னும்உழைக்கவேண்டியதும், அதனைதளபதிஅவர்களிடம்கற்றுக்கொள்ளவேண்டியதுஅதிகமுள்ளது,” என்று அவர் கூறினார்[7]. தமிழக பாஜகவின் தலைவருக்கான போட்டியில் சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மாநில தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், இரண்டு முறை எம்.பியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது மத்திய கயிறு வாரியத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார், என்றெல்லாம் ஊடகங்கள் குறிப்பிட்டன. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் நாங்கள் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டுள்ளோம் என்று பாஜக தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். ஆக, பிஜேபி.காரர்கள் இவ்வாறு கற்றுக் கொண்டு, பார்ப்பனர்களை தூஷித்தார்கள் போலும். ஒரு ஆண்டில், நல்ல முன்னேற்றம் தான். இனி, குத்தூசி குருசாமி, அணுகுண்டு ஆறுமுகம்………….. போன்றவர்களும் தயாராகலாம்!
பல புகைப் படங்கள் இருந்தாலும், சிலவற்றை வைத்து தூஷித்தது! இவர்கள் பார்ப்பனரா என்பது அவர்களுக்குத் தெரியாது போலும்!
இந்துக்களின் இன்றை நிலை: இந்துக்களை, இந்துக்கள் என்று பாராமல், ஜாதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் நிலை அபாயக்கரமானது.
சமூகம், ஜாதி, மதம், தேசம், மொழி முதலியவை அரசியலாக்கும் முயற்சிகளில், அவற்றை சின்னங்களாக, அடையாளங்களாக, குறீயீடுகளாக மதிக்க முடியாது.
அரசியல், செக்யூலரிஸம் போர்வையில் கடந்த 60 ஆண்டுகளாக இந்துக்களை ஒடுக்கி வைத்தது, அடக்கி வந்தது.
பிஜேபி, “இந்து கட்சி” என்று பிரகனடப் படுத்திக் கொண்டதால், இந்துக்கள் கொஞ்சம்-கொஞ்சமாக பிஜேபிக்கு ஓட்டுப் போட ஆரம்பித்தனர்.
பதிலுக்கு தங்கள் உரிமைகள் காக்கப் பட விரும்பினர். குடும்பம், குடும்பம் சார்ந்த விசயங்களில் சதோசம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.
ராம ஜன்ம பூமி விசயம் பல ஆண்டுகளாக பாதித்து வந்து, இப்பொழுது முடிந்துள்ளது. எல்லா அரசியல் கட்சிகளும் அதை வைத்து இந்துக்களை சதாய்த்தாலும், பிஜேபி வென்றது.
ஆனால், தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்புகள் இந்துக்களை பாதிப்பதாகவே இருந்து வருகின்றன. அவை இந்து குடும்பங்கள், உறவுகள், வழி-வழி வரும் பழக்க-வழக்கங்கள் முதலியவற்றை தடுப்பதாக, மாற்றுவதாக உள்ளன.
பொருளாதார ரீதியில் சாதாரண மக்களுக்கு எந்தவித மாற்றமும் ஏற்படதாகத் தெரியவில்லை, அதாவது உணவு உடை மற்றும் உறையுள் (ரோடி-பப்டா ஔர் மகான்) என்றவற்றின் விலை அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.
தங்கம்-பெட்ரோல்-டாலர்-ஷேர் மார்க்கெட், சந்தை பொருளாதாரம் எல்லாம் சாதாரண மக்களுக்குத் தேவையில்லை. தனது கூலிக்கு-சம்பளத்திற்கு சாப்பாடு கிடைக்கிறதா என்று தான் பார்ப்பார்கள்.
அந்நிலையில், ஒரு பக்கத்தில் உரிமைகளும் பறிபோய், இன்னொரு பக்கத்தில் சமூக-பொருளாதார நிலைகளில் இந்துக்கள் பாதிக்கப் படுவது தெரிகிறது.
இதனால், இந்துக்கள் இன்னொருவிதமான பிணைப்பில் அடைக்கப் படுகிறார்களா என்ற எண்ணம் தோன்றுகிறது.
ஆகவே, மேற்குறிப்பிட்ட இந்து கோஷ்டிகள் நிலைமை உணர்ந்து செயல்பட வேண்டும். சித்தாந்தத்தால் அடக்குவோம் என்ற போக்கு ஆபத்தானது.
[1] அவற்றை நானும் பார்த்தேன், ஆனால், எனக்கு வித்தியாசமாகத் தெரியவில்லை. கருணாநிதி மற்றும் கருணாநிதி குடும்பம், ஶ்ரீசத்ய சாயபாபா, ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர் ………போன்றோருடன் போட்டோக்கள் எடுத்தக் கொண்ட விவரங்களை எனது பிளாக்குகளில் விவரித்துள்ளேன். இவர்கள் எல்லோரும் போலித் தனமானவர்கள், வீட்டில் ஒரு மாதிரி, வெளியில் மேடைகளில் வேறு மாதிரி, என்று இரட்டை வேடம் போட்டவர்கள் தான்.
[2] பேஸ்புக்கில் இவற்றை இன்றும் பார்க்கலாம் என்று நம்புகிறேன். சிலர் சுதாரித்துக் கொண்டு, வார்த்தைகளை மாற்றியுள்ளனர்.
[3] இதை விட மோசமான, ஆபாசமான பதிவுகள் உள்ளன, அவற்றை தவிர்த்துள்ளேன். எல்லாமே காவி-இந்துத்துவ-சங்கம் என்கிறவர்களிடமிருந்துதான் வெளிப்பட்டுள்ளது.
[4] The 1999 Indian general election polls in Tamil Nadu were held for 39 seats in the state. The result was a victory for the National Democratic Alliance (NDA) which won 26 seats. After leaving the NDA, All India Anna Dravida Munnetra Kazhagam, hoped to create some damage, but ended up losing 8 seats, compared to the 1998 Lok Sabha elections.
[5] இதையும் ஒரு உதாரணத்திற்குத் தான் கொடுத்துள்ளேன், நிறைய உள்ளன. ஆனால், அரசியலை வைத்துக் கொண்டு,இவர்களும் இரட்டைவேடம், முரண்பாடு கொண்ட வாத-விவாதங்கள் செய்வது தான் வேடிக்கை.
[6] நியூஸ்.18.தமிழ், திமுகதலைவர்மு.கஸ்டாலினைபுகழ்ந்துதள்ளியபாஜகவின்சி.பிராதாகிருஷ்ணன்!, NEWS18, LAST UPDATED: SEPTEMBER 5, 2019, 10:30 AM IST.
செக்யூலரிஸவாழ்த்துகளிலிருந்து, கம்யூனலிஸவாழ்த்துகள்: ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்றபண்டிகைகளுக்கு தவறாமல் வாழ்த்து கூறும் திமுக, தீபாவளிபண்டிகைக்கு வாழ்த்து கூறுவதுஇல்லை. ஆனால், திமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சியில் இந்த ஆண்டு முதல்முறையாக ‘தீப ஒளித் திருநாள்’ கொண்டாட்டங்கள் என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. தவிர, திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் ஒன்றியச் செயலாளர் போன்ற முக்கிய நிர்வாகிகளும் சமூக ஊடகங்களில் முதல்முறையாக இந்த ஆண்டு தீபாவளி வாழ்த்துச் செய்திகளை பதிவிட்டனர். அதாவது, பெண்டாட்டியை வைத்து சாமி கும்பிடுவது போல, திமுக அரசியல்வாதியை வைத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு, ஓட்டுக்குத் தான் வாழ்த்துத் தெர்விக்கின்றனர் என்பது இந்துக்கள் தெரிந்து கொள்வார்கள்.
சிறுபான்மையினரின்வாக்குகளைதக்கவைக்கும்அதேநேரம், பெரும்பான்மையினரின்வாக்குகளைஇழந்துவிடக்கூடாது: முன்பெல்லாம் எங்காவது கோயில் இடிக்கப்பட்டால் பாஜக, இந்து அமைப்பினர் மட்டுமே போராடுவார்கள். சமீபகாலமாக கோயில்களுக்காக திமுகவினரும் குரல் கொடுக்கின்றனர். தூத்துக்குடியில் விநாயகர் கோயில் அகற்றப்பட்டதை கண்டித்து திமுக எம்எல்ஏ கீதா ஜீவன் போராடியதும், திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆர்.எஸ்.பாரதி வழிபட்டதும் முக்கிய நிகழ்வுகளாகப் பார்க்கப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக, வரும் 2021 பேரவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று தீவிரமாக போராடி வருகிறது. அமித் ஷாவின் சென்னை வருகைக்குப் பிறகு திமுக எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. சிறுபான்மையினரின் வாக்குகளை தக்கவைக்கும் அதேநேரம், பெரும்பான்மையினரின் வாக்குகளை இழந்துவிடக் கூடாது என்று கவனத்துடன் திமுக காய் நகர்த்தி வருகிறது. இந்த பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி எந்த அளவுக்கு உதவும் என்பது 2021 தேர்தல் நிரூபித்து விடும்.
மயிலாடுதுறைஆன்மீகப்பேரவைதலைவர்ராம. சேயோன், திமுகவின்இந்துமுகமா?: ராம.சேயோன் என்பவர் –
மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்
திமுக மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் ராம.சேயோன்
நாகை வடக்கு மாவட்ட தி.மு.க வழக்கறிஞர்கள் அணியின் மாவட்ட அமைப்பாளரும்,
நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. சட்ட பாதுகாப்பு குழு தலைவர்
மயிலாடுதுறை ஆன்மீகபேரவையின் நிறுவனர்
மயிலாடுதுறை ஆன்மீகபேரவை ஒருங்கிணைப்பாளர்
பல பொறுப்புகளில் இருக்கிறார் என்று தெரிகிறது. 20-11-2020 அன்று ஆதீனத்தை உதயநிதியை சந்திக்கச் செய்தது, பரிசு பொருட்களை பறிமாறிக் கொண்டது, பிரசாதம் பெற்றது, ஆசிர்வாதம் பெற்று விபூதி பூசிக் கொண்டது, புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டு, முதல் பிரதியைப் பெற்றது, என்று அனைத்தையும் ஏற்பாடு செய்தது, இந்த ராம.சேயோன் தான். திமுகவின் இந்து முகம் போன்று, இவர் காட்டப் படுகிறார் மற்றும் செயல்படுகிறார் என்று தெரிகிறது. ஆகவே, எல்லாவற்றையும் கவனிக்கும் போது, மென்மையான இந்துத்துவம் கடைபிடிக்க அரம்பித்துள்ளது திண்ணம், உறுதி.
இந்துவிரோதிஸ்டாலின்திடீரென்றுகோவில்களுக்குவக்காலத்துவாங்குவது (மார்ச்.2020): ‘இந்துக்களுக்கு நாங்கள் விரோதி அல்ல. என் மனைவி கோவில்களுக்கு செல்கிறார். அதை நான் தடுத்ததே இல்லை’ என, பிரசார மேடைகளில், ஸ்டாலின் 2019 ல் விளக்கம் கொடுத்ததை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள புரதான கோயில்களை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.. அதாவது, பிரஹலாத் சிங், கலாச்சாரத் துறைஅமைச்சர், “……..மேலும்தொன்மையானகோவில்கள்தொல்லியல்துறைகட்டுப்பாட்டில்வரவேண்டும்,” என்று பாராளுமன்றத்தில் பேசினார். இதற்கு, தமிழக தொல்லியல் துறை ஆய்வறிஞர்கள், தொல்லியல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழர்களின் நாகரிகத்தை – கலாசாரத்தை சிதைக்க மத்திய பா.ஜ.க அரசு முயற்சி செய்தால் தி.மு.க சார்பில் தமிழ் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்று அவை விளக்கின. இதுகுறித்து ஸ்டாலின் அறிக்கையும் வெளியிட்டுள்ளது தமாஷாக இருந்தது.
1991க்குப்பிறகு 2006, அதற்குப்பிறகு 2021 என்றுபொருந்திவருவதுஎப்படி? (செப்டம்பர் 2020): மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என தனது குலதெய்வம் கோயிலை புனரமைத்து வருகிறார் துர்கா ஸ்டாலின், இப்படி சில செய்திகள் வந்துள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், தன் குல தெய்வமான அங்காளம்மன் கோயிலை புதுப்பித்து கட்டி வருகிறார்.
கருணாநிதி குடும்பம் கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடித்து வரும் நிலையில் கோயில், குளம் என பக்திமயமாக கடவுள் பற்றுதலோடு வலம் வருகிறார் ஸ்டாலின் மனைவி துர்கா. இவர் இவ்வாறெல்லாம் செய்வது புதியதல்ல.
காசிக்கு எல்லாம் கூட சென்று வந்தார். ஆனால், புடவை வாங்கினேன் என்ற ரீதியில் பேசியது, தமாஷாக இருந்தது. ஆனால், நிச்சயமாக மாமனாரான நாத்திகரின் ஆன்மா சாந்தியடைவே சென்றது வெளிப்படையான உண்மை. பாவம் இல்லாத ஆன்மா எப்படி சாந்தி அடைந்தது என்பதை இல்லாத கடவுளைத் தான் கேட்க வேண்டும்.
1991ல் திருக்குவளைக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
அதற்குப் பிறகு 15 ஆண்டுகள் கழித்து, மறுபடியும் 15 ஆண்டுகள் கழித்து, 2006ல் ஒரு வாரம் விமர்சியையாக மகா கணபதி ஹோமம், 04-07-2006 அன்று நடந்தது. கணபதி ஹோமத்தை யார் செய்தார்கள் என்று ஈவேரா, அண்ணா அல்லது கருணாநிதி சமாதியில் தான் சென்ற் கேட்க வேண்டும்.
பிறகு 08-07-2006 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. பூசாரி கலிய பெருமாள் மற்றும் ஊரார் எல்லா ஏற்பாடுகளும் செய்தனர். ஸ்டாலின் தவிர எல்லா குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதேப் போல, செய்திகளும் வெளி வந்தன.
ஆக, மறுபடியும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2021 ஆண்டு வருகிறது. அது அடுத்த ஆண்டுதான், ஆனால், தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்கப் போகின்ற வருடம். ஆனால், கோவில் மாறிவிட்டது போலும்!
அதிமுக, பிஜேபிஎன்னசெய்யப்போகின்றன?: ஜெயலலிதா இல்லாத நிலையில், அதிமுகவிற்கு அவரைப் போன்ற ஓட்டுக்களைக் குவிக்கும் தலைவர் இல்லை. அதனால் தான், இன்று வரை “அம்மாவின் ஆட்சி” என்றே பேசி வருகின்றனர். பிஜேபியைப் பொறுத்த வரையில், இது அவர்களுக்குப் பெருத்த இடி என்றே சொல்லலாம். ஏனெனில், அத்தகைய, “திராவிடத்துவ ஆன்மீகம்,” அல்லது “போலி ஆன்மீகம்” என்று, திமுக எப்படி பயன்படுத்தினாலும், அது அவர்களுக்கு சாதகமாகவே போகும். தேர்தல் பிரச்சாரத்தினால், மேடைப் பேச்சுகளால் பிஜேபிக்கு ஓட்டு கிடைக்காது. ஆக, திமுக
திராவிடத்துவ மென்மையான இந்துத்துவம்
இந்துத்துவ மென்மையான திராவிடத்துவம்
திராவிடத்துவ நாத்திகம்
திராவித்துவ இந்துவிரோத நாத்திகம்.
திராவிடத்துவ இந்துத்துவம்.
என்று எதைப் பின்பற்றினாலும், ஒவ்வொரு வகையிலும் ஓட்டு கிடைக்கும். ஆனால், மற்ற கட்சிகளுக்கு என்ன கிடைக்கும்? திமுகவிற்கு 70 ஆண்டு விசுவாசத் தொண்டர்கள் உள்ளனர். அதனால் பதவிக்கு வந்த நீதிபதிகள், அதிகாரிகள் (எல்லாத் துறைகளையும் சேர்த்து) முதலியோர் உள்ளனர். அவர்களது மகள்-மகன் என்று அடுத்த தலைமுறை வாரிசுகள் உள்ளனர். அவர்கள் ஜாதி வாரியாக, விசுவாசமாக வேலை செய்து, பலன் பெற்று வருகின்றனர், நன்றாக சம்பாதித்து வருகின்றனர். இவற்றையெல்லாம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை.பிஜேபியினர் இந்த கட்டமைப்பை உடைக்க முடியுமா? திமுக போன்ற அஸ்திவாரம் இல்லாமல், 3% ஓட்டு வங்கியை வைத்துக் கொண்டு, ஆட்சியைப் பிடிப்பேன் என்று கனவு காண்பது அபத்தமானது.
வேல்யாத்திரையில்பிஜேபிக்குஎதிராகதிமுகபோட்டி: “நமது நிருபர்” என்று தினமலரில் இச்செய்தி வந்துள்ளது[1]. தமிழக பா.ஜ., வேல்யாத்திரை நடத்தி வரும் நிலையில், சென்னையில் இருந்து, வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு, தி.மு.க., – எம்.எல்.ஏ., மோகன் 27-11-2020 அன்று வேல் யாத்திரை மேற்கொண்டார்[2]. நியூஸ்.டி.எம்.தமிழ்[3], “வல்லக்கோட்டைஅருள்மிகுமுருகன்திருக்கோவிலுக்கு, தி.மு.க. எம்.எல்.ஏ., மோகன்வேல்யாத்திரைமேற்கொண்டநிகழ்வுபெரும்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது,” என்று ஆரம்பித்து, “இந்ததகவல்அறிந்ததிமுகதரப்புகடும்அதிர்ச்சியில்உள்ளதாகதகவல்,” என்று முடித்துள்ளது[4] தமாஷாக இருக்கிறது. கருணாநிதி முதல் இப்பொழுது, உதயநிதி வரை, பெண்டாட்டி, அம்மா, மகள், அக்காள்,தங்கை என்று பெண்களை சாமி கும்பிட வைத்து, பலன் பெற்று, வெளியில், மேடைகளில் திராவிட நாத்திகம் பேசும், இந்து விரோதிகளாகத் தான், அவர்கள் இருந்திருக்கிறார்கள்,இருக்கிறார்கள். திக-திமுகவினருக்கு, இந்த நாடகம், இரட்டை வேடம் முதலியவைத் தெரிந்த விசயங்கள் தான்.
திமுக எம்.எல்.ஏ வேல் யாத்திரை செல்வது, பக்தியா, அரசியலா?: தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தி, கருப்பர் கூட்டத்தினர் சமூக வலை தளங்களில், ‘வீடியோ’ வெளியிட்டனர். இதற்கு, தமிழக பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை நடத்தியது. கருப்பர் கூட்டத்தை சேர்ந்தவர்கள், ‘குண்டர்’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், கடவுள் முருகனை இழிவுபடுத்துவோருக்கு எதிராக, தமிழக பா.ஜ., தலைவர் முருகன், வேல் யாத்திரை நடத்தி வருகிறார். அந்நிலையில், திமுக அவற்றை ஒடுக்க, தடுக்க மாற்றாக சில வழிமுறைகளைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளது. இதை, பிரஷாந்த் குமார் சொல்லிக் கொடுத்த யுக்தியா அல்லது திமுகவினரே திட்டமிட்டு, இந்துக்களை ஏமாற்ற முயல்கிறார்களா என்று கவனிக்க வேண்டும். எப்படியாகிலும் மே 2021ற்குள்தெரிந்து விடும்.
வல்லக்கோட்டைக்குவேல்யாத்திரைசெய்ததிமுகஎம்.எல்.ஏ – வல்லான்என்றஅரக்கன்: திருத்தணி முருகன் கோவிலில் துவங்கிய இந்த யாத்திரை, அறுபடை வீடுகளில் வழிபாடு நடத்திய பின், திருச்செந்துாரில் முடிகிறது. இந்நிலையில், அண்ணாநகர் தொகுதி, தி.மு.க., – எம்.எல்.ஏ., மோகன் தலைமையில், பகுதி செயலர் ராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் முருகன் உட்பட, 50 தி.மு.க., நிர்வாகிகள், நேற்று சென்னை அமைந்தகரையில் உள்ள கன்னியம்மன் கோவிலுக்கு சென்றனர். கோவிலில் வேலுக்கு மாலை அணிவித்து பூஜை செய்தனர். பின், அங்கிருந்து அனைவரும், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, 9 கி.மீ., தொலைவில் உள்ள, வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு, வேலுடன் யாத்திரை புறப்பட்டு சென்றனர். வல்லான் என்ற அரக்கன், தேவர்களை சித்ரவதை செய்த தாகவும், முருகப்பெருமான் அவனை வீழ்த்தி அமைதியை நிலைநாட்டியதாகவும், அவரை பெருமைப்படுத்தும் வகையில், வல்லக்கோட்டை முருகன் கோவில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு புராணம் பாடி, அண்ணாநகர் தொகுதி, தி.மு.க., – எம்.எல்.ஏ., மோகன் தலைமையில், 50 பேர் அனுமதியுடன் வேல் யாத்திரை சென்றது விவரிக்கப் பட்டது.
57 ஆண்டுகளாகசபரிமலைக்குசெல்வது, ஆண்டுதோறும்வல்லக்கோட்டைமுருகன்கோவிலுக்குசெல்வது: வேல் யாத்திரை குறித்து, மோகன் எம்.எல்.ஏ., கூறியதாவது:வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு, 33வது ஆண்டாக யாத்திரை செல்கிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு. கடந்த, 57 ஆண்டுகளாக சபரிமலைக்கும் மாலை அணிந்து, விரதம் இருந்து, அய்யப்பனை தரிசித்து வருகிறேன். ஆண்டு தோறும் வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு, 2,௦௦௦ பக்தர்களுடன் செல்வேன். கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டு, 50 பேருக்கு தான் அனுமதி கிடைத்துள்ளது. வரும், 202௧ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும்; கொரோனா தாக்கத்திலிருந்து, உலக மக்கள் விடுபட வேண்டும். புயல் மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்கள் மீள வேண்டும். இவை உட்பட, சில வேண்டுதல்களுடன், நானும், மற்றவர்களும் யாத்திரை மேற்கொள்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார். பிறகு, இந்த எம்.எல்.ஏ.வை, கருணாநிதி கிண்டல் அடிக்காதது, கண்டிக்காதது, முன்னர் செய்திகள் வராதது வியப்பே. குங்குமம் பூசிய, ஒருவரைப் பார்த்தே, “என்ன நெற்றியில் ரத்தமா?,” என்ற கேட்ட தலைவர், இவரை எப்படி விட்டு வைத்தார் என்று தெரியவில்லை.
பாஜகவின்எழுச்சியால்தமிழகஅரசியல்களம்மாறத்தொடங்கியுள்ளது[5]: ‘இந்து விரோதக் கட்சி’ என்ற முத்திரையை போக்கும் முயற்சியில் திமுகவினர் களமிறங்கி உள்ளனர்[6]. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் தொடர்ந்து 2-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக, நாடு முழுவதும் கட்சியை வலுப்படுத்தி வருகிறது. 1 முதல் 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுவந்த ஹரியாணா, வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள், காங்கிரஸை வீழ்த்தி அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்குகடும் போட்டியை ஏற்படுத்தியது, தெலங்கானாவில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதியை வீழ்த்தியது என்று பாஜகவின் எழுச்சி மற்றகட்சிகளை உற்றுநோக்க வைத்துள்ளது.
திமுகவைஎதிர்த்துபிஜேபிசெய்யும்பிரச்சாரம்: தமிழகத்தில் பாஜக இதுவரை 3 சதவீத வாக்குகளை தாண்டவில்லை. 1996 சட்டப்பேரவை தேர்தலில் தனித்து ஒரு தொகுதியில் வென்ற பாஜக, 2001-ல் திமுக கூட்டணியில் 4 தொகுதிகளை வென்றது. அதன் பிறகு எவ்வளவு முயன்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவால் ஓரிடத்தில்கூட வெல்ல முடியவில்லை. ஆனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கணிசமான இடங்களில் வெல்ல பாஜக வியூகம் வகுத்துவருகிறது. அதிமுக அரசின் தடையையும் மீறி தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மேற்கொண்டு வரும் வேல் யாத்திரைக்கு கிடைத்த வரவேற்பால் அக்கட்சியினர் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் என்றுபாஜகவுக்கு செல்வாக்கே இல்லாத இடங்களிலும் வேல் யாத்திரைக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டது தமிழகத்திலும் பாஜக எழுச்சி பெறுகிறதோ என்ற எச்சரிக்கையை திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. முகநூல், ட்விட்டர், யூ-டியூப், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுகவுக்கு சவால்விடும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களிலும், வேல் யாத்திரையின்போதும் திமுகவை இந்து விரோதக் கட்சி என்று பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை இழந்துவிடுவோமோ என்று திமுகவினர் நினைக்கத் தொடங்கியுள்ளனர்.
திமுகதனதுவியூகத்தைமாற்றத்தொடங்கியுள்ளது: இதனால், திமுக தனது வியூகத்தை மாற்றத் தொடங்கியுள்ளது. கடந்த 20-ம் தேதி நாகை மாவட்டம் திருக்குவளையில் தனது சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சார பயணத்தை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார். அப்போது, வேளாங்கண்ணி தேவாலயத்தின் தலைவருடன் காணொலியில் பேசுவதை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார். நாத்திக வாதம் பேசும் திமுக, இந்து அல்லாத மற்றமதத்தவர்களுடன் நெருக்கம் காட்டுவது ஏன் என்று சமூக ஊடகங்களில் பாஜகவினர் கிண்டலடித்தனர். அதைத் தொடர்ந்து மறுநாளே, திருவாவடுதுறை ஆதீனத்தை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்துஆசி பெற்றார். இந்த படத்தை சமூகஊடகங்களில் பெரிய அளவில் திமுகவினர் விளம்பரம் செய்தனர். இந்து விரோதக் கட்சி என்ற குற்றச்சாட்டை மாற்றும் திமுகவின் உத்தியாகவே இதை அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.
கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி: இவர்கள்விபூதிவைத்தால்என்ன, துடைத்தால்என்ன? அவர்களுக்கு அதெல்லாம் சகஜம் ஆனால், திராவிடத்துவவாதிகளின் வழிகளை இந்துத்துவவாதிகள் பின்பற்றுவது ஏன்? (2)
தந்தைவிபூதிஅழித்தான், தனயன்வைத்துக்கொண்டான்: மயிலாடுதுறை உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கல்லூரி மாணவிகளிடம் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார்[1]. அதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவிகள் உதயநிதி ஸ்டாலினுடன் ஆர்வமுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். 22-11-2020 அன்று மூன்றாவது நாளாக கும்பகோணத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் உதயநிதி ஸ்டாலின் கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் பலியான குழந்தைகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகினார். பின்னர் திருபுவனத்தில் நெசவாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் கும்பகோணத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டார். தேவர் குருபூஜைக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அங்கு அவருக்கு வழங்கப்பட்ட திருநீற்றை நெற்றியில் இருந்து அழித்த விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை[2]. ஆனால் ஸ்டாலின் மகனான உதயநிதி தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்று திருநீறு பூசியிருக்கிறார்.இது கட்சித் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது[3], என்று ஊடகங்கள் குறிப்பிட்டாலும், தந்தையும்-தனயனும் திட்டத்துடன் தான் செயல்படுகின்றனர் என்பது நன்றாகவே தெரிகின்றது.
21-11-2020 அன்றே, தருமபுரிஆதீனம்புகைப்படங்களைப்போட்டு, சந்திப்பைபதிவுசெய்தது: முதலில், இச்சந்திப்பு, பல கேள்விகளை எழுப்பின.
இரவு பத்து மணிக்கு மேலே மடத்தில், இப்படி நாத்திகவாதியை வரவழைத்து, ஆசிர்வதித்து, பிரசாதம் கொடுக்கும் படலம் நடக்குமா?
“பெண்டாட்டியை வைத்து சாமி கும்பிடற ஆட்கள்,” அரசியலில் வெற்றி என்றால், தானே வந்து கும்பிடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை!
‘தமிழ் கடவுள் சேயோன்’ என்ற ஆன்மிக நூலை சந்நிதானம் வெளியிட, முதல் பிரதியை உதயநிதி பெறுவதில் என்ன வியப்பு, ஞான பழத்தையா கொடுத்தார்?
“இரவு எத்தனை மணி ஆனாலும் தருமபுரம் குருமகா சந்நிதானத்தைச் சந்தித்து ஆசி பெறுவேன்,” என்று உதயநிதி கூறினார் என்றால், என்ன நாடகம் இது?
வேலை வைத்து இந்துதுவவாதிகள் வேலை செய்யும் போது, நாத்திகரும், “தமிழ் கடவுள் சேயோன்’ என்று வினை செய்தால், அம்மை-அப்பனே வரவேண்டும்!
போன்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், “திமுக இளைஞர்அணிசெயலர் உதயநிதிஸ்டாலின் தருமையாதீன குருமணிகளிடம் ஆசிபெற்றார்,” என்றும், “தாத்தாவும் பேரனும் தருமையாதீனத்தில்,” தலைப்பிட்டு, 21-11-2020 அன்றே, தருமபுரி ஆதீனம் புகைப்படங்களைப் போட்டு, சந்திப்பை பதிவு செய்தது. அதனால், திமுக மற்றும் மடம் இதனை, ரகசியமாக வைத்துக் கொள்ளவில்லை அல்லது சதிப்பு அத்தகையதல்ல, வெளிப்படையானது அல்லது வெளிப்படுத்த வேண்டிடியது என்று தீர்மானத்துடன் இருந்தது தெரிகிறது. ஊடகங்களிலும் அப்புகைப்படங்கள் வெளிவந்துவிட்டன. கருணாநிதி மற்றும் முந்தைய மடாதிபதி இருக்கும் புகைபடத்தை, பிரேம்-அலங்காரத்துடன் நினைவுப் பரிசாக கொடுத்தது, இது ஒரு தீர்மானிக்கப் பட்ட சந்திப்பு என்பதனை உறுதி செய்கிறது. சைவர்களோ, பக்தர்களோ, இவ்வாறு முறைகள் மீறப் படுகின்றன என்று கண்டிக்கவில்லை.
தாத்தாவும் பேரனும் தருமையாதீனத்தில், என்று நினைவு பரிசு அளித்தது !தாத்தா முதல் பேரன் வரை தருமபுர ஆதீன தொடர்புகள்!
இந்தநான்குகேள்விகேளுங்கள்எங்கேஉதயநிதிவந்தாலும். (ஆமஇந்தபெரியாரியவாதிகளைஉதயநிதிதன்வீட்டுநாய்என்றுநினைக்கிறாரா? சுயமரியாதைசுயமரியாதைஎன்றுஉதயநிதிக்குசொம்புதூக்கும்அளவுக்குவந்துவிட்டார்சுபவீ. இதெல்லாம்ஒருவாழ்க்கை!),” என்று பெரிய வீராப்பாக மாரிதாஸ் பதிவு செய்வது தமாஷாக இருக்கிறது. இதில் ஒன்றும் விசயமே இல்லை. 1960களிலிருந்து, நேரிடையாக தமிழக அரசியலை கவனித்து வருபவர்களுக்கு இது ஒரு ஜோக்! “இந்துக்களுக்குமீண்டும்சொல்கிறேன்முருகனுக்குக்காவடிதூக்கினாலும்ஒருபொழுதும்திமுகவைநம்பிவிடவேண்டாம்,” என்று சொல்வது தமாஷ். ஏதோ ஒட்டு மொத்த இந்துக்களுக்கு அறிவுரை சொல்கிறேன் என்ற ஆணவம் தான் உள்ளது. கமலாலயத்தில் 12-11-2020 அன்று கிருத்துவ பாஸ்டர்கள் ஜெபம் செய்த போது, இவரைக் காணோம், இப்பொழுது இதற்கெல்லாம் குதிக்கிறார்[4]. ஆக, இதெல்லாம் தேர்தல் வரை உச்சக்கட்டத்தில் இருக்கும்.
இந்த நடத்தை ஆதரித்து போற்றும் இந்துத்துவவாதிகள்!
“பெண்டாட்டியைவைத்துசாமிகும்பிடறஆட்கள்,” அரசியலில்வெற்றிஎன்றால், தானேவந்துகும்பிடுவதில்எந்தஆச்சரியமும்இல்லை: தினமலர், “தேர்தல்வருகிறது., புறப்படுவோம்கோவிலுக்கும், மடத்திற்கும்,“ என்று செய்தி வெளியிட்டுள்ளது[5]. ஆகவே, “பெண்டாட்டியைவைத்துசாமிகும்பிடறஆட்கள்,” அரசியலில்வெற்றிஎன்றால், தானேவந்துகும்பிடுவதில்எந்தஆச்சரியமும்இல்லை,” என்பது தான் நிதர்சனம். ஶ்ரீ ராமகோபாலன் முன்னரே, “பெண்டாட்டியை வைத்து சாமி கும்பிடற ஆட்கள்,” என்று திராவிட நாத்திக- இந்துவிரோதிகளைக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, 2020ல் அதைப் பற்றி கண்டுபிடித்து, பெரிய ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை! இந்துக்கள், குறிப்பாக இந்துத்துவ வாதிகள் மாறுவதை கவனிக்க வேண்டும். அரசியல், அதிகாரம், பணம், பதவி……….என்றால் மாறும், மாறி விடும் போக்கைக் கவனிக்க வேண்டும். கருத்து-பதில் கருத்து என்ற உரையாடலைக் கூட சகித்துக் கொள்ளாமல் இருக்கும், இந்துத்துவ பண்டிதர்கள் இருப்பது திகைப்பாக இருக்கிறது! ஓட்டுவங்கி என்ற ரீதியில், மக்களை ஜாதி, மதம் என்று பார்க்கும் போது, எல்லா கட்சிகளும் ஒன்றாகத்தான் ஆகின்றனர். இந்துக்களுக்கு என்று, உண்மையான இந்துத்துவம் பேசும் சித்தாநந்தவாதிகளே, மாறும் போது, திராவிடத்துவவாதிகளை குறைச் சொல்வது எந்த பிரயோஜனும் இல்லை. “திருவாரூர் தேரை நாங்கள் தான் ஓட வைத்தோம்,” என்றெல்லாம் கூறிக்கொண்டதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வேல் யாத்திரையில், பெண்கள் தெருவில் ஆட்டம் போட்டது. இந்த நடத்தை ஆதரித்து போற்றும் இந்துத்துவவாதிகள்!இந்துத்துவப் பண்டிதர் ஆதரித்து பெரிய விளக்கம் கொடுத்தது!
வேல் யாத்திரையில் பெண்களை வைத்து நடனம்: வேல் யாத்திரையின் போது, நடுத்தெருவில், பெண்கள் சினிமா பாணியில் ஆடுவதாக ஒரு வீடியோ சுற்றில் உள்ளது. திராவிடத்துவவாதிகள் பாணியில், இதுக்கள் செல்ல வேண்டிய அவசியல் இல்லை. தெரிந்தும், அதனை ஆதரிக்க வேண்டும், நியாயப் படுத்த வேண்டும் என்று வலுக்கட்டாயமாக இந்துத்துவவாதிகள் ஆதரித்து வருகின்றனர். இந்துத்துவம் ஏன் இப்படி நீர்க்கப் படுகிறது, என்ற கோணத்தில் கவலைப் படவில்லை. மாறாக, ஸ்டான்லி ராஜன் (Stanely Rajan) என்ற இந்துத்தவ வாதி, வலதுசாரி பண்டிதர் ஒரு பெரிய விளக்கம் கொடுத்துள்ளது திகைப்பாக இருக்கிறது. அவர் “தேவதாசி” என்றெல்லாம் விளக்கம் கொடுத்துள்ளார். முன்பு, சொர்ணமால்யா “தேவதாசி” சிஸ்டத்தை ஏதோ ஒரு கூட்டத்தில் (பரத நாட்டியம் வாழவேண்டும், வார வேண்டும் என்ற ரீதியில்) ஆதரித்த போது, என்ன நடந்தது என்பதை ஞாபகத்தில் கொள்ளவில்லை. அரசியல் என்ற போதை-மயக்கத்தில் இருப்பதால், மற்றவையெல்லாம் இவர்கள் கண்களுக்கு, மனங்களுக்கு தெரியாமல் போகிறது என்று தெரிகிறது. மனசாட்சி இல்லாமல் வாத-விவாதங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்துவிரோதிகளை வெல்ல, அவர்களது வழிகளையே நாங்கள் பின்பற்றுவோம் என்பது போல இந்துத்துவாதிகள் நடந்து கொள்வது சரியில்லை.
[2] தமிழ்.ஏசியன்.நெட்.நியூஸ், அப்பாநாத்தீகவாதியாம்.! மகன்ஆன்மீகவாதியாம். திமுககொள்கையைகிழித்துதொங்கவிடும்நெட்டிசன்கள்..!, By T Balamurukan,Mayiladuthurai, First Published 23, Nov 2020, 7:43 AM
[4] பதில் சொல்ல முடியாமல் தடுத்துள்ளார். கருத்து-பதில் கருத்து என்ற உரையாடலைக் கூட சகித்துக் கொள்ளாமல் இருக்கும், இந்துத்துவ பண்டிதர்கள் இருப்பது திகைப்பாக இருக்கிறது!
10 ஆண்டுகளுக்குமுன்பு (2008) பெரியாரைசெருப்பால்அடிப்பேன்என்றுக்கூறியதைபொறுத்துரௌத்திரம்பழகாததன்விளைவைதான்தற்போதுஅனுபவிப்பது (2018): ஆரூர் புதியவனின் “சொற்களால் ஒரு சுதந்திரப் போர்” நூல் வெளியீட்டு விழா சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற கனிமொழி எம்.பி நூலை வெளியிட்டதுடன், சிறப்புரை நிகழ்த்தினார். ஜி.எஸ்.டி., முத்தலாக் என எல்லா திசைகளிலும் மக்களை ஒடுக்கும், அச்சுறுத்தும் நிகழ்வுகள் நடைபெறுவதாக குறிப்பிட்ட கனிமொழி, இவைகள் குறித்து பேசாததன் விளைவாக நமது மௌனமே நம்மை அழித்துவிடும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழன் ரௌத்திரம் பழகுவதை நிறுத்திக் கொண்டதால் தான் இந்த நிலையில் தமிழன் உள்ளதாகக் கூறிய கனிமொழி, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்றுக் கூறியதை நாம் பொறுத்துக் கொண்டு ரௌத்திரம் பழகாததன் விளைவை தான் தற்போது அனுபவித்து வருவதாக அதே நூல் வெளியீட்டு விழாவில் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டதை நினைவுக்கூர்ந்து அது சரியான கருத்து என்றார். சுயமரியாதையை இழந்துவிட்டு ஏதுமில்லை என்றுக் கூறிய கனிமொழி, நம் வாழ்க்கையில் வெள்ளை என்ற ஒளி உருவாக வேண்டும் எனில் நாம் கருப்பில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்றும், பெரியார் என்ற கருப்புச்சட்டை இல்லாமல் விடியல் இல்லை என்று குறிப்பிட்டார்.
ஆண்டாள்எந்தசாதியில்பிறந்திருந்தால்என்ன?: ஜாதி என்ற சொல்லையே அழிக்க வேண்டும், ஜாதியே இல்லாத நிலையை உருவாக்குவதே திராவிட அரசியலின் அடிநாதம் என்றுக் கூறிய கனிமொழி, ஜாதியைக் கொண்டு ஒருவன் ஒருவரை ஒடுக்கினால் அதையே ஆயுதமாக தூக்க வேண்டியது அவசியமாகிறது என்றும் குறிப்பிட்டார். நாம் தூக்க வேண்டிய ஆயுதம் எதுவென தீர்மானிப்பது எதிரியே என்றும் கனிமொழி தெரிவித்தார். ஜாதி இல்லை என்று எல்லோரும் சொல்கிறோம், எந்த ஜாதியில் பிறந்தவரும் என்னை வந்து சேரலாம் என்று கண்ணபிரான் கூறுவதாக கீதை சொல்கிறது எனில், ஆண்டாள் எந்த சாதியில் பிறந்திருந்தால் என்ன? ஆண்டாள் பிறப்பால் தலித்தாக இருந்திருக்கலாம், எந்த சாதியாகவும் இருந்திருக்கலாம் எதுவாய் இருந்தால் என்ன? அதில் என்ன பிரச்சனை எனவும் கனிமொழி குறிப்பிட்டார். இப்படிப்பட்ட விவாதங்களை நிகழ்த்தவில்லை எனில், பயந்திருப்போம் எனில், நிச்சயமாக தமிழினம் சுயமரியாதை அற்ற இனமாக, அடையாளம் அற்ற இனமாக, எதையெல்லாம் போராடி சாதித்தோமோ அதையெல்லாம் இழந்துவிடும் இனமாக மாறிவிடும் சூழல் நிலவுவதாக கனிமொழி தெரிவித்தார்.
கடவுளைஎதிர்த்துபேசிப்பேசிதான்கருணாநிதிக்குபேசமுடியாமல்போய்விட்டதாகசிலர்பேசுவதாகவேதனைதெரிவித்தகனிமொழி: கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி, உடல்நலம் சரியில்லாதபோது உதவியாளர் வைத்துவிடும் விபூதியைக் கூட அழித்துவிடுபவர் கருணாநிதி என்று தெரிவித்தார். தனது தாயார் கோவிலுக்குச் செல்வது குறித்து சிலர் கேட்பதாகவும், தனது தாயார் கோவிலுக்கு செல்வதற்கான உரிமைக்காகவும் தான் போராடுவதாக தெரிவித்தார்[1]. நிகழ்வின் போது தனது வீட்டில் நடைபெற்ற சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டு கனிமொழி பேசினார். “இப்போதும் இருவரும் (கருணாநிதி, கனிமொழி) கடவுளை மறுப்பது ஏன்?” என தனது தாயார் கேட்டதாகவும், “தலைவர் (கருணாநிதி) தற்போது (கடவுள் விடயத்தில்) தனது கருத்தை சிறிது மாற்றியிருப்பார்” என்று தாயார் குறிப்பிட்டதாகவும், இது தொடர்பாக கருணாநிதியிடம் “கடவுள் இருக்கிறாரா?” என கேட்டபோது, வாய் பேசமுடியாத நிலையில், “இல்லை” என கருணாநிதி தலையசைத்ததாகவும் கனிமொழி குறிப்பிட்டார்[2]. தனது வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த கனிமொழி, கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்று குறிப்பிட்டார்[3]. மேலும், எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்[4].
15-01-2018 கனிமொழிபேச்சு: ஆரூர் புதியவனின்[5] புத்தக வெளியீட்டின் போது, இவ்வாறு கனிமொழி பேசியது பல உண்மைகளை எடுத்துக் காட்டுகிறது. ராம கோபாலன், “இவர்கள் எல்லோருமே, தங்களது பெண்டாட்டிகளை வைத்து சாமி கும்பிடுகின்ற கூட்டம்”, என்று பேசியதுண்டு. அதை கனிமொழி இப்பொழுது ஒப்புக் கொண்டுள்ளார் என்றாகிறது. அம்மாவின் “சாமி கும்பிடுகின்ற உரிமைக்கு”. இவர் என்ன போராடுவது? அப்பொழுது அவ்வுரிமையை யார் பறித்தது என்ற கேள்வி எழுகின்றது. நாத்திக துணைவன் அவ்வாறு தடுத்துக் கொண்டிருந்தால், அது அவனது ஆணாதிக்கத்தைத் தான் எடுத்துக் காட்டுகிறது. 93 வயதாகியும் துணைவியை ஆட்டிப் படைக்கிறார் என்றால், அதை மகள் எடுத்துக் கஆட்டவேண்டும். மாறாக அவரது உரிமைக்குப் போராடுகிறேன் என்றால், தந்தையை எதிர்த்தாப் போராடப் போகிறார்?
“கடவுளைஎதிர்த்துபேசிப்பேசிதான்கருணாநிதிக்குபேசமுடியாமல்போய்விட்டது”: “கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி, உடல்நலம் சரியில்லாதபோது உதவியாளர் வைத்துவிடும் விபூதியைக் கூட அழித்துவிடுபவர் கருணாநிதி”, என்ற போதும் அவரது மனம், மனசாட்சி உறுத்துவதை அறியலாம். உதவியாளர் விபூதியை வைப்பதற்கு கருணாநிதி ஏன் அனுமதிக்க வேண்டும், பிறகு ஏன் அழிக்க வேண்டும்? அப்படியென்றால், வைத்தால் ஏதோ பலன் கிடைக்கும் அன்ற ஆசை, நப்பாசை உள்ளுக்குள் இருக்கிறது என்றாகிறது. முதல் நாத்திகப் பழமான, கனிக்கு அத்தகைய நம்பிக்கையே இருக்கக் கூடாது ஆயிற்றே? யாரோ சொன்னார்கள் என்றால் பலித்து விடுமா என்ன? அதென்ன சாபமா, செய்வினையா, திருஷ்டியா, ….அதையெல்லாம் நம்ப வேண்டிய அவசியமே இல்லையே? பிறகு, அப்படி நம்பி வருத்தப் படுவது எடைக் காட்டுகிறது? வைத்த விபூதியையேத் துடைத்துப் போடும் அளவிற்கு நாத்திகம்-பகுத்தறிவு ஊறியிருக்கும் போது, இதெல்லாம் ஒரு விசயமா என்ன?
கருணாநிதியின்மவுனம்கூடநாத்திகம்பேசும்: “கடவுள் விடயத்தில் தனது கருத்தை சிறிது மாற்றியிருப்பார்” என்று தாயார் குறிப்பிட்டதாகவும், இது தொடர்பாக கருணாநிதியிடம் “கடவுள் இருக்கிறாரா?” என கேட்டபோது, வாய் பேசமுடியாத நிலையில், “இல்லை” என கருணாநிதி தலையசைத்ததாகவும் கனிமொழி குறிப்பிட்டார்[6]. தனது வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த கனிமொழி, கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்று கனிமொழி குறிப்பிட்டார்[7]. அதாவது ராஜாத்தி அம்மாள் கோவில்-கோவிலாக சென்று, கும்பிட்டு, அர்ச்சனை செய்து, பிரசாதம் வாங்கி வருவார், புருடன் சாப்பிடுவான் என்று, ஆனால் சாப்பிட்டப் பட்டதா-இல்லையா என்பது ரகசியம். பிறகு, சாய் பாபா வந்தபோது ஏன் காலில் விழுந்து கும்பிட வேண்டும்? எப்படியோ கனிமொழியின் மனம், மனசாட்சி உறுத்த ஆரம்பித்து விட்டது. அதனால், இந்த அளவுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியதாக உள்ளது போலும்.
[5] பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி, சென்னை மேடவாக்கம் காயிதேமில்லத் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர், தமுமுக வின் மாநிலச் செயலாளர், மக்கள் உரிமை வார இதழின் இணை ஆசிரியர்.
போகிதிருநாளும், பிடித்துள்ளசனியும்: ஸ்டாலின் பேசியது, “இன்றுபோகிதிருநாள். போகிஎன்றால்பழையனகழிதலும், புதியபுகுதலும்என்றநிலையில், நம்மைபிடித்துள்ளசனிஇன்றோடுஒழிந்திடவேண்டும். வீட்டிலிருக்கும்பழையனவற்றைமட்டுமல்ல, இந்தநாட்டிலிருக்கும்பழையனவற்றையும்அப்புறப்படுத்தவேண்டியகட்டாயம்நமக்குஉருவாகியிருக்கிறது[1]. அந்தளவுக்கு, ஏறக்குறைய 20 ஆண்டுகள்பின்தங்கி, மோசமானநிலையில்சிக்கித்தவித்துக்கொண்டிருக்கும்தமிழகத்திற்கு, நாளையதினம்தைபிறக்கின்றநேரத்தில்ஒருநல்லவிடிவுகாலம்பிறக்கும்என்றநம்பிக்கைநமக்கெல்லாம்உருவாகிஇருக்கிறது.எனவே, நம்முடையதமிழகத்தைகாப்பாற்ற, தமிழகத்துக்குஒருவிடிவுகாலத்தைஉருவாக்கிட, தமிழகமக்களுக்குத்தேவையானதிட்டங்களைஉருவாக்கிடவேண்டுமென்று, இந்ததமிழ்ப்புத்தாண்டுமற்றும்பொங்கல்விழாவில்உறுதியெடுத்துக்கொள்ளவேண்டும். அந்தநம்பிக்கையோடுஉங்கள்அனைவருக்கும்தமிழ்ப்புத்தாண்டும்மற்றும்பொங்கல்நல்வாழ்த்துகளைதெரிவித்துக்கொள்கிறேன்,” என்று கூறினார்[2]. இனி தளபதியை மாடு முட்ட வந்த விவகாரத்தை கவனிப்போம்.
மாடுமுட்டவந்தசமாசாரம்: வேடிக்கை என்னவென்றால், தளபதியை மாடு முட்ட வந்த விவகாரத்தை “தினமலர்” மட்டுமே வெளியிட்டதாகத் தெரிகிறது. ஒரு வீடியூ 15-01-2018 காலையில் தேடியபோது காணப்பட்டது. மதியம் காணப்படவில்லை. கொளத்துாரில், ஸ்டாலினை மாடு முட்ட வந்ததால், மாட்டிற்காக செய்யவிருந்த பூஜையை, ஸ்டாலின் ரத்து செய்தார்.தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க., செயல் தலைவருமான ஸ்டாலினின் சொந்த தொகுதி கொளத்துார். இந்த தொகுதிக்கு உட்பட்ட, பெரவள்ளூர், பெரியார் நகர் பகுதிக்கு வந்தார். கொளத்துார் வீதிநகர் பகுதியில், நடந்த பொங்கல் விழாவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஸ்டாலின், 9:00 மணிக்கே வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.ஆனால், 12:௦௦ மணிக்கு வந்த ஸ்டாலின், பொங்கல் விழா நடைபெறும் இடத்தில் இருந்த பசுமாட்டிற்கு மாலை போட சென்றார்.ஆனால், அந்த மாடு முட்ட வரவே, கோபமடைந்த ஸ்டாலின், மாலையை கட்சி தொண்டர் ஒருவரிடம் கொடுத்து மாட்டிற்கு போடச் சொன்னார்[3]. மேலும், பசு மாட்டிற்கு செய்யவிருந்த பூஜையையும் வேண்டாம் என்று கூறி மறுத்து விட்டார்[4]. சென்ற ஜூன் 2017ல் மாட்டுக்கறியை ஆதரித்துப் பேசியதை நினைவு கொள்ளலாம்[5]. இப்படி இரட்டை வேடும் போடும் இவர், பொங்கல் வாழ்த்து என்று இணைதளத்தில் படம் போடும் போது, மாட்டை சேர்த்துக் கொள்கிறார்.
மிருகம்போலிநாத்திகனின்முகமூடியைக்கிழித்துவிட்டது: ஸ்டாலினை மாடு முட்ட வந்தது, மாலை போட மறுத்தது, போலி நாத்திகத்தை தோலுரித்திக் காட்டுகிறது. குங்குமத்தை அழித்த ஸ்டாலினை மாடு முட்ட வந்தது, திராவிட நாத்திகத்திற்கு சரியான அடி! பகுத்தறிவால் எந்த விளக்கமும் கொடுக்க முடியாது! முன்னர் கருணாநிதி, திமுக தொண்டர் குங்குமத்துடன் வந்தபோது, நக்கலாக, “என்ன நெற்றியில் ரத்தமா?”, என்ற கேட்ட வயதான தந்தை கருணாநிதியின் வக்கிரம் தான், தனயன், நெற்றியில் இட்ட குங்குமத்தை அழித்தபோது புலப்பட்டது. பிறகு தனது தாயார், துணைவியார், சகோதரி என்று எல்லோரும் ஏன் குங்குமம் வைக்கின்றனர், அவற்றை அழிக்காமல் இருக்கும் இவரது யோக்கியதை என்ன என்பதனை கவனிக்க வேண்டும். ஸ்டாலின் – மாடு முட்ட வந்தால் வீரத்தமிழா, கோபம் வரக்கூடாது, கொம்புகளைப் பிடித்து அடலேறு போல அடக்கி வீரத்தைக் காட்ட வேண்டும்! ஜல்லைக் கட்டுக்கு வீரம் பேசிய இந்த தளபதி கோழை போல ஓடி போனது, கேவலமானது. வயதாகி விட்டது என்று சொல்லலாம், அப்பொழுது, வயதிற்கு வேண்டிய நாகரிகம் அப்பனுக்கும், மகனுக்கும் இல்லாத்தும் கேவலம் தான். நம்பிக்கையில்லாத ஸ்டாலின் சனி பற்றி பேசுவது, அவரது பொலித்தனத்தின் உச்சம்! பிறகு ராகு-கேது எல்லாம் வரும் போல!
போகி பண்டிகையில், பழையது கலைந்து, புதியதை உருவாக்குவோம். தமிழகத்தை சனிபிடித்து ஆட்சி செய்கிறது.தை பிறந்தால் வழிபிறக்கும், பெரியாரா இப்படி சொல்லிக் கொடுத்தார்? பண்டிகைகளைக் கேவலப்படுத்திய ஈவேரா மற்றும் திக முதலியவற்றை தமிழக மக்கள் அறிந்து, புரிந்து கொண்டு விட்டனர். ஹேமமாலினியையும், ஸ்டாலினையும் மாடு முட்ட வந்ததில் உள்ள ஒற்றுமை, வேற்றுமை என்ன என்று பார்த்தால், முன்னவர் பிராமண்ராக இருந்தாலும், தான் கடமையை செய்யும் போது முட்ட வந்தது. ஆனால், இங்கோ, பொங்கல் வைத்து, பசுக்கு மாலை போட வந்த போது முட்டப் பார்த்தது. ஆக, அந்த ஜீவனுக்கு, இந்த மனிதனின் போலித் தனம் தெரிந்திருக்கிறது.
இந்துமதம்மட்டுமல்லஎந்தமதத்தைஇழிவுபடுத்தினாலும்தி.மு.க. அதைஏற்காது: வைரமுத்து-ராஜா விவகாரத்தில், ஸ்டாலின் கூறிய இரு வரியை பெரியதாக எடுத்துக் கொள்ள முடியாது[6]. இந்து மதம் மட்டுமல்ல எந்த மதத்தை இழிவுபடுத்தினாலும் தி.மு.க. அதை ஏற்காது ஊக்கப்படுத்தாது, உடன்படாது. என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்[7]. ஆனால், அவர் அவ்வாறு செய்துள்ளாரா என்று பார்த்தால் ஒன்றும் கிடையாது. ஊடகங்களும் பதிலுக்கு எந்த கேள்வியையும் கேட்கவில்லை[8]. திமுக உடன்படாது என்றால், தான் உடன் படுவேன், ஊக்குவிப்பேன், ஏற்பேன் என்றாகிறது[9]. இது பேட்டியில் ஏதோ குறிப்பிட்டிருக்கிறார், அவ்வளவுதான், ஏனெனில், இதுவரை, இந்து மதம் தாக்கப் பட்டபோது, இவர் வாயை மூடிக் கொண்டுதான் இருந்தார். இப்பொழுது கூட கனிமொழி பேசியதற்கு ஒன்றையும் சொல்லக் காணோம். அதென்ன அப்பேச்சு இழிவு படுத்தியதாக ஆகாதா? அவ்வளவு ஏன், இவரது தந்தை பேசியது எல்லாம் ஞாபகப் படுத்திக் கொண்டால், இவரது மனதுக்கு, மனசாட்சிக்குத் தெரியாமலா போய் விட்டது? வைத்த குங்குனத்தை அழித்தபோது, இவர் என்ன செய்ததாக அர்த்தம்? ஆகவே, இந்த ஒரு வரியை வைத்து, இவரது குணத்தை ஒன்றும் எடை போட முடியாது. மேலும், ஊடகங்கள், பசு முட்ட வந்ததை மறைத்ததிலிருந்தே, அவகளது வழக்கமான, செக்யூலரிஸத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
பொங்கல்அன்றுகனிமொழிவீட்டிற்குசென்றகருணாநிதி: ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்து கனிமொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்[10]. இதேபோல் திமுக தொண்டர்களும் ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக மக்களுக்கு கனி மொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்து உள்ளார்[11]. இந்த ஆண்டாவது தமிழக மக்களுக்கு விடிவுகாலம் பிறக்க வேண்டும் என கூறி உள்ளார். வழக்கமாக பொங்கல் அன்று கருணாநிதி வீடு களை கட்டும். இந்த ஆண்டும், சி.ஐ.டி காலணி வீட்டில் தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பொங்கல் அன்று கோபாலபுரம் வீட்டில் தொண்டர்களைப் பார்த்து கையசைத்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
கோபாலபுரம் வீட்டில் இருக்கும் கருணாநிதி, பொங்கல் அன்று தொண்டர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தனித்தனியாக தொண்டர்களை பார்க்க மருத்துவர்கள் அனுமதி தரவில்லை. நோய் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்று தடை போட்டுவிட்டனர். இந்நிலையில், 15 மாதங்களுக்கு பிறகு சென்னை சி.ஐ.டி காலணி வீட்டிற்கு ஜனவரி 15-ம் தேதி இரவு 9 மணிக்கு சென்றார் கருணாநிதி[12]. வீட்டுக்கு வந்த கருணாநிதியை அவரது மகள் கனிமொழி வரவேற்றார். ராஜாத்தி அம்மாள், அரவிந்தன் ஆகியோர் கருணாநிதியை வீட்டுக்குள் அழைத்து சென்றனர். ”வீட்டுக்கு அப்பா வந்தது மகிழ்சி அளிக்கிறது’ என்றார் கனிமொழி[13]. ஆக அப்பனை, அண்னனை மகள் சந்தித்தாள், என்று சொல்லாமல், ஏதோ ஒரு தலைவர், இன்னொருவரஇப் பார்த்தார் என்று செய்தி போட்டிருப்பது, நிருபர்கள், செய்தியாளர்களின் அடிமைத் தனத்தைக் காட்டுகிறது. “பொங்கல் இனாம்” கனமாக இருந்தது போலும். இதை ஏன் குறிப்பிட்டுகின்றேன் என்றால், மாடு முட்டிய விசயத்தை மறைத்ததால், அதனைப் பற்றி, பகுத்தறிவோடு செய்தி வெளியிட்டு விவாதிக்காமல் இருந்ததால் தான்.
பொங்கல்பற்றிதிராவிடநாத்திகர்களின்குழப்பமானநிலைப்பாடு: 1940களிலிருந்து ஈவேராவின் “ஆரிய-திராவிட” திரிபுவாதங்களால், பொங்கல் பண்டிகைக்கும் மாற்று விளக்கம் கொடுக்கப் பட்டு, திராவிடத்துவவாதிகள் பொங்கல் கொண்டாட்டங்களை எதிர்த்து வந்தது தெரிந்த விசயம். பிராமணர் அல்லாத உயர்ஜாதி இந்துக்கள் ஆதிக்கம் பெறுவதற்காக, சைவமும் திரிபுவாதங்களுக்கு உட்படுத்தப் பட்டு, “இந்து-விரோத” ரீதியில் எடுத்துச் செல்லப்பட்டது[1]. அந்நிலையில், திமுக ஆட்சியைப் பிடித்ததும், அரசு ஆதிக்கத்துடன், தமிழ கலாச்சாரம், நாகரிகம், பண்பாட்டு முதலிய காரணிகளை சிதைக்க “இந்து அறநிலையத் துறை” உபயோகப் படுத்தப் பட்டது. அண்ணாதுரை பொங்கல் பண்டிகையை எதிர்க்கவில்லை, அதனை “புனித பொங்கல்” என்றார்[2]. கருணாநிதி ஆரம்பத்தில் எதிர்த்தாலும், பிறகு வியாபார ரீதியில் “சமத்துவ பொங்கல்” ஆக்கினார்[3]. “சங்க இலக்கிய சரித்திர ஆதாரங்களுக்கு” முரண்பட்ட, விரோத கருத்துகளைப் புகுத்தி கெடுக்கப்பட்டது தான் “தமிழர் (பொங்கல்) விழா”. இருப்பினும் பெரும்பான்மையான மக்கள் பாரம்பரிய முறையில் கொண்டாடி வருவதால், பேச்சுடன் வைத்துக் கொண்டு, மற்ற சின்னங்களை அப்படியே திராவிடத்துவத்தில் அடக்கிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஏனெனில், அதில் முக்கியமாக இருப்பது கோடிக் கணக்கான வியாபாரம், லாபங்கள்!
சென்னைசங்கமும், ஊழல்பொங்கல்கொண்டாட்டங்களும்: “சென்னை சங்கமம்,” கிறிஸ்தவ பாதிரி ஜகத் காஸ்பரின் “தமிழ் மையம்” மற்றும் தமிழக அரசு பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை சேர்ந்து, கனிமொழி நடத்த ஆரம்பித்தார். இலக்கிய ரீதியிலும் தேசவிரோத கருத்துகளை பரப்பினர். ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸிடமிருந்து தமிழ் மையத்திற்கு பெரிய நிதி வழங்கப்பட்டது குறித்தும், சி.பி.ஐ. விசாரணை நடந்தது. தமிழக அரசின் ஆதரவுடன் 2007ல் தொடங்கி, இதன் நான்காவது நிகழ்வு ஜனவரி 10 முதல் 16. 2010 வரை நடைபெற்று, பிறகு கோடிக்ககணக்கானா ஊழல் புகாரினால் முடங்கியது[4]. இவ்வாறு சித்தாந்தம் மற்றும் பணம் சம்பாதிக்கும் பின்னணியில் தான், திராவிட நாத்திக அரசியல்வாதிகளின் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் இருந்தது. ரேசன் கார்ட் உள்ளவர்களுக்கு “இனாம்” கொடுக்கும் முறையும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆக, 2018ல் கனிமொழி இந்துமதத்தை நாத்திக மாநாட்டில் கேவலப் படுத்திய நிலையில், சகோதரர் ஸ்டாலின், இவ்வாறு பொங்கல் கொண்டாடுவதை கவனிக்கலாம்.
பொங்கல்விழாவில்கலந்துகொண்டஸ்டாலின்: திமுக சார்பில் சென்னை அயனாவரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. வீதிகள் தோறும் தோரணம் கட்டியும், மேடைகள் அமைத்தும் நாட்டுப்புற கலைகள் நிகழ்த்தப்பட்டதை, அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து துறையூரில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய ஸ்டாலின், தமிழகம் 20 ஆண்டுகளுக்கு பின்னால் போய்க்கொண்டிருப்பதாக கூறினார்[5]. திமுக ஆட்சிக்கு வந்தால் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை கொளத்தூரில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை தொடக்கி வைத்த ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளையும் பொங்கல் பொருட்களையும் வழங்கினார். தை முதல் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது. திமுக ஆட்சி காலத்தில் தை முதல்நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்றும் கூறினார். தை பிறக்கும் காலத்தில் நல்ல விடிவுகாலம் பிறக்கப்போகிறது என குறிப்பிட்ட ஸ்டாலின், அரசியல் ரீதியாக நாட்டைப்பிடித்துக் கொண்டிருக்கும் சனி இன்றோடு ஒழிய வேண்டும் என்றும் கூறினார்[6]. ஆண்டாள் பற்றிய கருத்துக்கு வைரமுத்து மன்னிப்பு கேட்ட பின்னரும் அதனை பூதாகரமாக்கி வளரவிடுவது நியாயமல்ல என்றும் கூறினார்[7]. கருணாநிதி, அறிஞர் அண்ணா பற்றி எச். ராஜா எழுதி பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறார். அவரது கருத்துக்கு நான் பதில் கூற விரும்பவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்[8].
ஸ்டாலின்முழுபேச்சு: நான் முதல்வராக வருகிறேனோ, இல்லையோ.. உங்களைப் பொறுத்தவரையில், உங்களுடைய காவலனாக, சிறந்த சேவகனாக என்றைக்கும் இருப்பேன் என உறுதியுடன் சொல்ல விரும்புகிறேன் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாக்களில் பங்கேற்றார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், ஒவ்வொரு ஆண்டும் நமது கொளத்தூர் தொகுதியில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாக்களை நாம் தொடர்ந்து கொண்டாடி, அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும், பொங்கல் திருநாள் வாழ்த்துகளையும் தெரிவிக்கும் வாய்ப்பு உங்களில் ஒருவனாக இருக்கின்ற எனக்கு கிடைத்து வருகிறது. கொளத்தூர் தொகுதியை சேர்ந்த உங்களோடு நான் எப்போதும் இருப்பதால், இந்த நேரத்தில் உங்களிடம் நான் அதிக நேரம் பேச வேண்டியதில்லை.
காரணம், இது எனது தொகுதி என்று சொல்வதை விட, என்னுடைய இல்லம், வீடு என்று சொல்லக்கூடிய அளவுக்கு, என்னை நீங்கள் தேர்ந்தெடுத்து இருக்கின்றீர்கள் என்று சொல்வதை விட, என்னை உங்களோடு இணைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று சொல்லும் நிலை இருக்கின்றது. எனவே, இந்த நிகழ்ச்சியில் ஒரு குடும்ப உணர்வோடு, பாசத்துடன் பங்கேற்று இருக்கிறீர்கள். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், உங்களுக்கு வாழ்த்து சொல்ல நான் வந்திருக்கிறேன் என்பதைவிட, உங்களிடம் நான் வாழ்த்துபெற வந்திருக்கிறேன் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. காரணம், இந்தத் தொகுதியில் என்னை கடந்த முறை பெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்குகள் அளித்து, இரண்டாவது முறையாக வெற்றி பெற வைத்து இருக்கின்றீர்கள். இங்கு ஜவகர் அவர்கள் பேசியபோது, முதலமைச்சராக வரப்போகிறார் என்று எண்ணி எனக்கு வாக்களித்தீர்கள் என்றார்[9]. நான் அவருக்கும், உங்களுக்கும் சொல்ல விரும்புவது, நான் முதலமைச்சராக வருகிறேனோ, இல்லையோ ஆனால் இந்தத் தொகுதியைப் பொறுத்தவரையில், நான் என்றைக்கும் உங்களுடைய முதல் குடிமகனாக, உங்களுடைய முதல் காவலனாக, இந்தத் தொகுதிக்குப் பணியாற்றும் சிறந்த சேவகனாக நான் என்றைக்கும் இருப்பேன் என உறுதியுடன் சொல்ல விரும்புகிறேன்[10].
[3] திகவின் வீரமணி “விடுதலை,” கருணாநிதியின் “முரசொலி,” நாத்திக-திராவிட சித்தாந்திகள் அத்தகைய கருத்துகளை பிரச்சாரம் செய்து, இளைஞர்களை ஏமாற்றி வந்தனர்.
[4] The searches were conducted at Tamil Maiyam, an NGO founded by Jegath Gasper Raj, in Mylapore. Tamil Nadu Chief Minister M. Karunanidhi’s daughter Kanimozhi, a DMK Member of Parliament, is a trustee of Tamil Maiyam, the key organisation behind Chennai Sangamam, a high-profile cultural event held since 2007.
The CBI recorded the statement of an employee of Green House Promoters Pvt Ltd whose Managing Director Batcha had fired over 40 employees on the recommendation of Balwa. Batcha, who was interrogated by the CBI, was found dead under mysterious circumstances in Chennai in March 2016. ….one company of DB Group, Eterna Developers Pvt Ltd had some business transactions with Green House Promoters Pvt Ltd. It (Eterna Developers) transferred around Rs 1.25 crore to Green House Promoters and after some time, this amount was paid back by Green House Promoters to Eterna Developers…..
”சிண்டுமுடிந்திடுவோய்போற்றி” என்ற ‘துவஜாரோகணம்‘ செய்யத்தொடங்கிவிட்டனர்[1]: திராவிட இயக்கங்களுக்கு தாங்கள்தான் மாற்று என்ற பாஜகவினரின் ‘கரிசனம்’ அதிமுகவின் மீது கரைபுரண்டு ஓடத் தொடங்கிவிட்டது. எனவே அதிமுகவினருக்கு எச்சரிக்கை தேவை. இது நாடகமே என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார். அறிஞர் அண்ணா கூறிய, ”சிண்டு முடிந்திடுவோய் போற்றி” என்ற அனுபவ மொழிப்படி, அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பொறுப்பாளர்களிடையே பிளவை வலிந்து உண்டாக்கி, இடையே புகுந்து, நூல் பிளந்து பார்க்கும் முயற்சியில் ஈடுபடத் துவங்கிவிட்டனர். பல்வேறு கலகங்களை உருவாக்கிட, கட்டுக் கோப்பான அக்கட்சியினை ஜாதி அடிப்படையில் பிரித்தாள தங்களது பேனாக்கள்மூலம் ‘துவஜா ரோகணம்’ செய்யத் தொடங்கிவிட்டனர். எனவே, அதிமுகவின் சகோதரர்களே, சிண்டு முடிந்திடுவோரை, உங்கள்மீது திடீர் அனுதாபம், அளவற்ற ஆதரவு தருவது போல் நாடகம் போடுவோரை விழிப்போடு புரிந்துகொள்ளுங்கள். கட்சியின் கட்டுக்கோப்பை – கட்டுப்பாட்டை மறவாதீர். சிறுசிறு ஓட்டைகளைத் தேடி அலைந்து அவற்றைப் பெரிதாக்குகின்றனர். எனவே எச்சரிக்கை தேவை. இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்[2].
கண்ணீர்துளிகளும், கடல்நீர்துளிகளும்: “கடல்நீர் துளிகள் கடலாகாது, கடலை விட்டுச் சென்ற அவை கடல் என்று தம்மை அறிவித்துக் கொள்ள முடியாது”, என்று நெடுஞ்செழியன் அதிமுகவை விட்டுச் சென்றவர்களை குறிப்பிட்டார். ஆகஸ்ட்.21, 2000 அன்று வி.ஆர்.நெடுஞ்செழியனின் புத்தகங்களை வெளியிடும் போது, ஜெயலலிதா அதனைச் சுட்டிக் காட்டி பேசினார். அண்ணா உயிருடன் இருக்கும் போது, அவரை சாடியவர்கள், மறைமுகமாக எதிர்த்தவர்கள் இன்று அண்ணாவைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள், என்று மறைமுகமாக விமர்சித்தார்[3]. கே. வீரமணி பிரதிகளைப் பெற்றுக் கொண்டார். 1948ல் பெரியார், திமுகவை “கண்ணீர் துளிகள்” என்று குறிப்பிட்டது தெரிந்ததே. 50 ஆண்டுகள் கழித்து, ஜெயலலிதா, அதிமுகவை விட்டு விலகியவர்களை “கடற்நீர் துளிகள்” என்று குறிப்பிட்டார்[4].
சமூக நீதி வீராங்கனை: 1998ல் அதிமுக பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொண்டபோது, வீரமணி விமர்சித்தார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து செப்டம்பர் 2001ல் தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் தனதுதனித்தன்மையை ஜெயலலிதா நிலைநாட்டியுள்ளார் என்று திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி கூறினார்[5]. இதுதொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுப்ரீம்கோர்ட்தீர்ப்பைஏற்றுதனதுபதவியைஜெயலலிதாராஜினாமாசெய்துள்ளார். இதைபாராட்டுகிறேன். தனக்குபதவிஆசைஇல்லைஎன்பதைஅவர்நிரூபித்துள்ளார். மேலும், தென்மாவட்டத்தைச்சேர்ந்தஒருவரை, பிற்பட்டவகுப்பைச்சேர்ந்தஒருவரைமுதல்வராக்கியுள்ளதன்மூலம்சமூகநீதியைகாப்பதில்தான்எவ்வளவுஉறுதியாகஇருக்கிறேன்என்பதைஅவர்நிரூபித்துள்ளார். இதைநான்வரவேற்கிறேன். புதியமுதல்வர்பன்னீர்செல்வம்பீடுநடைபோட்டுசெயல்படவாழ்த்துகிறேன்”, என்றுகூறியுள்ளார் அவர்[6].
பெண்களைஅடக்கும், திட்டும், தூசிக்கும்திராவிடத்தலைவர்கள்: பெரியார் முதல் கருணாநிதி வரை என்னத்தான் “பகுத்தறிவு” என்றெல்லாம் பேசினால் கூட, அவர்களின் பலதார திருமணங்கள், தொடர்புகள், மக்களை அவர்கள் பெண்களை அடக்கியாள்பவர்களாகத் தான் சித்தரித்தது. பெரியார் தன்னைவிட இளைவரான மணியம்மையை திருமணம் செய்து கொண்டதை அண்ணா போன்ற தலைவர்களே வெளிப்படையாக எதிர்த்தனர், மற்றும் “கண்ணீர் துளிகளாக” திமுக உதயமாக காரணமாகியது. “நான் முற்றும் துறந்த முனிவனும் இல்லை, அவள் படி தாண்டா பத்தினியும் இல்லை”, என்றெல்லாம் பேசினாலும் கூட, அண்ணாவுக்கு குழந்தையில்லை என்பதனால் மக்களுக்கு இரக்கம் ஏற்பட்டது. இதே நிலைதான் எம்ஜியாருக்கும். பலதாரம் புரிந்த எம்ஜியார், இதனால் கண்டுகொள்ளவில்லை எனலாம். ஆனால், வீரமணியை, மணியம்மையை சொத்துக்காக அடக்கி வைக்கும் நபராகத்தான் கருதினர். கருணாநிதியின் முத்தார-மூன்று மனைவி-துணைவி பற்றி விவரிக்க வேண்டிய அவசியல் இல்லை. இந்நிலையில் எல்லோருக்கும் தெரிந்த, அறிந்த, புரிந்த ஜெயலலிதா உயர்ந்தது, ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.
ஜெயலலிதாவும், கரண்தாபரும்: ஆங்கிலம் மற்றும் இந்து மொழிகள் தெரிந்ததால், ஜெயலலிதாவுக்கு தேசியத் தலைவர்களுடன் நேரில் சந்தித்துப் பேசும் வசதியும் இருந்தது. கரண் டாபருடன் நடந்த பேட்டி திகைக்க வைத்தது, ஜெயலலிதாவின் பேச்சுத் திறமை, கேள்விகளை எதிர்கொள்ளும் திறமை, தாபரையே அதிர வைத்த ஆளுமை முதலியன படித்தவர்களையே சிந்திக்க வைத்தது. எதிரிகள் கூட பாராட்ட ஆரம்பித்தனர். பலமொழிகளில் நடித்த அனுபவத்தை ஜெயலலிதா அரசியலில் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார். அந்நிலையில், ஜெயலலிதா உட்கார்ந்த இடத்தில் சசிகலா உட்காருவது என்பது எப்ப்டி பட்டது என்பது சொல்ல வேண்டிய் அவசியம் இல்லை. இருவரும் பெண்கள் தான், இருப்பினும் வித்தியாசங்கள் பலப்பல உள்ளன.
ஜெயலலிதாவைசதாய்த்ததிராவிடத்தலைவர்கள்: திராவிடத் தலைவர்களின் ஆபாச வசைகளினால் தூற்றப்பட்ட போது, மக்கள் உள்ளுக்குள்ளே கொதித்தனர். ஊழல் என்பது, திராவிடத்துவ அரசியலோடுப் பின்னிப்பிணைந்ததாலும், எல்லோருக்கும் அதைப்பற்றி நன்றாகவே தெரிந்திருந்ததாலும், ஊழல் வழக்குகள் அவர் மீது போடப்பட்டபோது, அதிகமாக பாதிப்பு ஏற்படவில்லை. மாறாக, கருணாநிதி மற்றும் சுப்ரமணியன்ஸ்வாமி, அவரை சதாய்த்து, கஷ்டப்படுத்துவதாகவே மக்கள் நினைத்தனர். சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்டபோது, “திரௌபதி துகிலுரித்த நிகழ்ச்சி” போன்றநிலை, மக்களை அதிகமாகவே பாதித்தது. நிச்சயமாக திமுகவினர் “கௌரவர்களாகி”, கருணாநிதி, “துச்சாதனன்” ஆகி, தோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று. “எனக்கும் மூன்று துணைவியர் இருக்கிறார்கள், பெண்களைப் பற்றி எனக்கும் தெரியும்”, என்றெல்லாம் கருணாநிதி வசனம் பேசினாலும், மக்களிடம் அது எடுபடவில்லை. “முரசொலியில்” கருணாநிதியின் தூஷணம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருந்தது. சமீபத்தில் கூட “பாப்பாத்தி” என்றெல்லாம் ஏகவசனத்தில் தேர்தல் பிரச்சாரங்களில் பேசியது, நிச்சயமாக தமிழகப் பெண்களுக்குப் பிடிக்கவில்லை.
சுப்ரமணியன்சுவாமி, ஜெயலலிதாவை “திராவிடத்தலைவியாக” மாற்றியது: “உள்ள சூத்திர ஆட்சியைக் காப்போம்மென்று சுவரொட்டிகளை ஒட்டியதை நினைவு கொள்ள வேண்டும். கருணாநிதி, “மறுபடியும் ஆரிய அம்மையார் பதவிக்கு வந்துவிடுவார்” என்றெல்லாம் எச்சரிக்கை ஓலமிட்டது ஞாபகத்தில் கொள்ள வேண்டும். “தமிழகத்தை தமிழன் தான் ஆளவேண்டும்” போன்ற கூக்குரல்களை எல்லாம் மீறித்தான், தமிழகத்தை தமிழர்-அல்லாதவர்கள் ஆட்டிப் படைத்தார்கள், ஆண்டார்கள் என்று, தனித்தமிழ்த்துவ, தமிழ்வெறித்துவப் பிரிவினைவாதிகள் பேசியும், எழுதியும் வந்த நிலை. ஆனால், “எல்லோரும் திராவிடர்கள்” என்பதை, ஆந்திரா தனி மாநிலம் ஆகியபோதும், கேரளா ஒப்புக் கொள்ளாத போதும், கர்நாடகா காவிரி விசயத்திலும் தோலுரித்துக் காட்டியது. அந்நிலையில், பிராமணரான, தமிழரல்லாத ஜெயலலிதா, முற்றிலும் திராவிடத்துவப் படுத்தப் பட்ட காரியத்திற்கு, இன்னொரு பிராமணரான, சுப்ரமணியன்சுவாமி காரணமானார். அவர் போட்ட வழக்குகள், ஜெயலிதாவைத் தனிமைப் படுத்தி, “திராவிடத் தலைவி”யாக்கியது!
ஊழல்–காரணிஜெயலலிதாவைபாதிக்காதது: ஊழலில் திளைத்த திமுக 1970களிலேயே வழக்குகளில் சிக்கிக் கொண்டது. கருணாநிதி, “ஊழலின் மறு உருவம்” போன்று சித்தரிக்கப் பட்டார். “இந்திரா-கருணாநிதி” கூட்டு அவ்வாறே முரண்பாடாகக் கருதப் பட்டது. “சோனியா-கருணாநிதி” கூட்டோ பாதாளத்தில் தள்ளி விட்டது. இரண்டு தீமைகள் இருக்கும் போது, பெரியது எடு, சிறியது எது அல்லது, எதனால் அதிக அளவு பாதிப்பில்லை என்று பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலையிலும், ஜெயலலிதா தனித்து நின்றார். “தமிழகத்தை இனி ஆண்டவன் கூட காப்பாற்ற முடியாது”, என்று ரஜினிகாந்த சொன்னது, நாத்திகரான கருணாநிதிக்கு, ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
பெண்களைஅடக்கும், திட்டும், தூசிக்கும்திராவிடத்தலைவர்கள்: பெரியார் முதல் கருணாநிதி வரை என்னத்தான் “பகுத்தறிவு” என்றெல்லாம் பேசினால் கூட, அவர்களின் பலதார திருமணங்கள், தொடர்புகள், மக்களை அவர்கள் பெண்களை அடக்கியாள்பவர்களாகத் தான் சித்தரித்தது. பெரியார் தன்னைவிட இளைவரான மணியம்மையை திருமணம் செய்து கொண்டதை அண்ணா போன்ற தலைவர்களே வெளிப்படையாக எதிர்த்தனர், மற்றும் “கண்ணீர் துளிகளாக” திமுக உதயமாக காரணமாகியது. “நான் முற்றும் துறந்த முனிவனும் இல்லை, அவள் படி தாண்டா பத்தினியும் இல்லை”, என்றெல்லாம் பேசினாலும் கூட, அண்ணாவுக்கு குழந்தையில்லை என்பதனால் மக்களுக்கு இரக்கம் ஏற்பட்டது. இதே நிலைதான் எம்ஜியாருக்கும். பலதாரம் புரிந்த எம்ஜியார், இதனால் கண்டுகொள்ளவில்லை எனலாம். ஆனால், வீரமணியை, மணியம்மையை சொத்துக்காக அடக்கி வைக்கும் நபராகத்தான் கருதினர். கருணாநிதியின் முத்தார-மூன்று மனைவி-துணைவி பற்றி விவரிக்க வேண்டிய அவசியல் இல்லை. இந்நிலையில் எல்லோருக்கும் தெரிந்த, அறிந்த, புரிந்த ஜெயலலிதா உயர்ந்தது, ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.
[3] The Hindu, Jayalalitha move to appease partymen, Tuesday, August 22, 2000.
[4] Addressing partymen after releasing two books authored by former chairman, V.R. Nedunchezhiyan, Ms. Jayalalitha said, “none of those who hold the organisation as greater than themselves would be let down”. Quoting Nedunchezhiyan, she said those who had left the party were like droplets outside the ocean. “Once outside the ocean, the droplets cannot claim to be the ocean,” she said. While the AIADMK had faith in the people, its opponents believed in conspiracy. “The day is not far off when we will usher in MGR rule again.” Ms. Jayalalitha made a veiled attack on the ruling party saying those who had hurt Anna while he was alive were now claiming to be his followers.