Archive for the ‘இந்தி எதிர்ப்பு போராட்டம்’ Category

திக-திமுக பேச்சாளர்கள், தலைவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்து பேசி வரும் கெட்ட, ஆபாச மற்றும் மோசமான வார்த்தைகள், வசவுகள் மற்றும் திட்டுகள் (2)

ஜனவரி 14, 2023

திகதிமுக பேச்சாளர்கள், தலைவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்து பேசி வரும் கெட்ட, ஆபாச மற்றும் மோசமான வார்த்தைகள், வசவுகள் மற்றும்  திட்டுகள் (2)

அண்ணாமலையைக் கடுமையாக வசைப் பாடியது: மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மிக மோசமாக பேசியுள்ளார். போலீஸ் வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு ஓடி வந்த அண்ணாமலை திமுகவை பற்றி பேசுகிறார். பிரான்சில் வாங்கிய வாட்சை இந்தியாவில் கட்டிக்கொண்டு தேச பக்தியை பற்றி பேசுகிறார். அவர் தாய் அவரை எப்படி பெற்றெடுத்தார் என்று மிக மோசமாக விமர்சித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை உருவ கேலி செய்து பேசியது அதிமுகவினரை கொந்தளிக்க செய்துள்ளது. கவர்னரை அவதூறாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் கடந்த சில நாட்களாக பேசி வரும் தி.மு.க,வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கோரிக்கை விடுத்துள்ளார்[1]. இது குறித்து அவர் கூறியதாவது[2]: கவர்னர் குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய அந்த தரம் கெட்ட வார்த்தைகள் தி மு கவின் ஒப்புதலோடே பேசப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்யும்.

புகார் கொடுத்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது: “தொடர்ந்து பா.., தலைவர்களை தரக்குறைவாக பேசியது குறித்து புகார் அளித்தும் தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கூட பா.., தலைவர் அண்ணாமலை குறித்து சிவாஜி கிருஷணமூர்த்தி கூறிய கருத்துக்களை கண்டித்து நாம் புகாரளித்திருந்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காது, கண்டும் காணாமல் இருப்பது தி மு கவின் முழு ஒப்புதலோடு பேச வைக்கப்படுகிறார் என்பதையே உறுதி செய்கிறது. காஷ்மீருக்கு கவர்னரை போகச்சொல்லி, தீவிரவாதிகளை இங்கிருந்து காஷ்மீருக்கு அனுப்பி வைத்து கவர்னரை கொலை செய்வோம் என்றும், சட்டசபையில் கொலை செய்தாலும் வழக்கு இல்லை என்று கூறியதும், அடித்தால் வீடு திரும்ப முடியாது என்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டதையும் பார்க்கும் போது, திட்டமிட்ட ரீதியில் தமிழக ஆளுநர் ரவி மீது வன்முறையை கட்டவிழ்த்து விட தி.மு.., சதி செய்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது”.

ஸ்டாலின் சொல்வதும், திமுகவினர் செய்வதும்; “திமுக அரசின் தோல்விகளை மறைப்பதற்கு, சட்ட ஒழுங்கு சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மூடி மறைப்பதற்கு, பொருளாதார ரீதியாக தமிழகத்தை மேம்படுத்த முடியவில்லை என்பதை மறைப்பதற்கு, மத்திய அரசின் பல்வறு நலத்திட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தங்களால் அத்திட்டங்களில் ஊழல்கள் செய்ய முடிவதில்லை என்ற ஆத்திரத்தில்,மாநில அரசு நிர்வாகத்தை திறம்பட செலுத்த முடியாத காரணத்தினால், மொழி ரீதியாக, சாதி ரீதியாக, மத ரீதியாக மக்களை தூண்டிவிட்டு திசை மாற்ற முயற்சிக்கிறது தி.மு.. கவர்னரை காஷ்மீருக்கு செல் என்றும், அங்குநாங்கள்தீவிரவாதிகளை அனுப்பி உன்னை கொன்று விடுவோம் என்று கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதோடு, தி மு கவிற்கு தீவிரவாதிகளின் தொடர்பு குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது. தமிழக காவல் துறை உடனடியாக, இந்த இரு நபர்களையும் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும். இரு நாட்களுக்கு முன்னர் முதல்வர் ஸ்டாலின் , கவர்னர் குறித்து திமுகவினர் விமர்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், இரு நாட்களாக தான் அதிகளவில் ஆளுநரை விமர்சிக்கின்றனர்”.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் தி மு தலைமையின் ஒப்புதலோடு, ஆசியோடு தான் ஆளுநரை தரக்குறைவாக, கொலை மிரட்டல் தொனியில் பேசியுள்ளனர்: “சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் தி மு தலைமையின் ஒப்புதலோடு, ஆசியோடு தான் ஆளுநரை தரக்குறைவாக, கொலை மிரட்டல் தொனியில் பேசியுள்ளனர் என்பது தெளிவாகிறது. தமிழக காவல் துறை தலைவர் ,சென்னை மாநகர ஆணையர் உடனடியாக இந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட. உண்மையில், முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த பேச்சுகளில் உடன்பாடு இல்லையெனில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆர் எஸ் பாரதி இருவரையும் கைது செய்ய உத்தரவிடுவதோடு, தி மு பொது கூட்டங்களில் அமைச்சர்களின் முன்னிலையில் இந்த கருத்துக்களை கூறியிருப்பதற்கு பொறுப்பேற்று தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த இருவரையும் தி மு கவை விட்டு நீக்க வேண்டும். இல்லையேல், ஆளுநர் குறித்த அவதூறுகள் மற்றும் கொலை மிரட்டல்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்,”. இவ்வாறு அவர் கூறினார்.

திகதிமுகவினரின் கெட்ட வார்த்தை பாரம்பரியம்:

  1. தி.மு.க..வின் துணை பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, தேர்தல் பரப்புரையின் போது, கள்ள உறவில் பிறந்த குறைப் பிரசவம் தான் எடப்பாடி பழனிசாமி என தமிழக முதல்வரின் பிறப்பைப் பற்றி அருவருப்பான வகையில் பேசியுள்ளார்.
  2. தி.மு.க.வின் தலைவர் அண்ணாதுரையே இம்மாதிரியான பேச்சுகளுக்கு அடித்தளம் அமைத்தவர். காந்தியார் மீரா பாயுடனும், சுசிலாக்களுடனும், சத்காரியாதிகளிலே ஈடுபட்டுச் சரோஜினிகளின் பராமரிப்பில் பிர்லா மாளிகையில் இருந்தார் என எழுதியவர்.
  3. 1962 அக்டோபர் மாதம் 23ந் தேதி பாரத பிரதமர் நேரு இலங்கை விஜயத்தின் போது, சிறிமாவோ பண்டாரநாயக்காவை சந்தித்து, ஒரு மணி நேரம் விவாதித்த செய்தியை, அண்ணாதுரை, தம்பி, நேருவோ மனைவியை இழந்தவர், சிறிமாவோ கணவனை இழந்தவர், இருவரும் ஒரு மணி நேரம் தனிமையில் சந்தித்தார்கள் என்றால் என்ன நடந்திருக்கும் என சிந்தித்து பார் தம்பி என கட்டுரை எழுதியவர்.
  4. 1962-ல் சேலத்தில் நடந்த தி.க. மாநாட்டில் மாற்றான் மனைவி மற்றொருவனை விரும்பினால் அதை குற்றமாக கருத கூடாது என தீர்மானம் இயற்றிய ஈவெ. ராமசாமி நாயக்கர்.
  5. சேலத்தில் நடந்த தி.முக. பொதுக் கூட்டத்தில், அண்ணாதுரை, சினிமா நடிகையின் கற்பு பற்றி கீழ்தரமாக விமர்சனம் செய்தவர். அவள் ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல. நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல என கூறியது மட்டுமில்லாமல், அவள் தபால்நிலையத்தில் உள்ள மைக்கூடு, அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், நானும் பயன்படுத்தினேன் என்றார்.
  6. சட்டசபையில் திராவிட நாடு எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர் திருமதி அனந்தநாயகிக்கு பெண் உறுப்பினரிடம் பாவாடை நாடா பற்றி விரசமாகச் சொன்னவர் கருணாநிதி.
  7. மதுரையில் இந்திரா காந்தி வருகை தந்த போது, கருப்பு கொடி ஆர்பாட்டம் என்ற பெயரில் தாக்குதல்களை நடத்தியவர்கள் தி.முக.வினர்.
  8. தாக்குதலின் போது இந்திரா காந்தியின் நெற்றியில் கல் பட்டு ரத்தம் வழிந்தது. இது பற்றி கருணாநிதி முன் வைத்த விமர்சனம், அம்மையாருக்கு மாதவிடாய் ஏற்பட்டு இருக்கும் என்ற ஈனத்தனமாக விமர்சித்தவர்.
  9. 1972ல் எம்ஜிஆர் திமுக விலிருந்து பிரிந்து கணக்கு கேட்ட போது, கருணாநிதியின் பதில்களில் முக்கியமான பதில், ‘யாரிடம் கேட்கிறார் கணக்கு, போய் லதாவிடம், சரோஜா தேவியிடம், மஞ்சுளாவிடம் கணக்குக் கேள்’ என்பதுதான்.
  10. அன்பழகனை ஜெயலலிதா உதவிப் பேராசிரியர் என்று குறிப்பிட்டு பேசியதற்கு (திமுகவினர் அன்பழகனை ‘பேராசிரியர்’ என்றே பல காலம் கூறி வந்தனர். சமீபத்தில் தான் ஜெயலலிதா போட்டு உடைத்தார். அவர் கடைசியாக வகித்த பதவி ‘உதவிப் பேராசிரியர்’ என்று கூறியதற்கு, அன்பழகன் சட்டசபையிலேயே “எனக்கு நான் முன்பு செய்த தொழில் தெரியும் உங்களுக்கு உங்கள் பழைய தொழில் தெரியுமா” என்று விரசமாகப் பேசினார்.
  11. கல்லக்குடியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து கடும் விமர்ச்சனம் செய்தார். அதில், அவர் எடப்பாடி இல்ல. டெட்பாடி.
  12. உதயநிதி ஸ்டாலின் – முதல்வர் பதவிக்காக, சசிகலா கால்ல அப்படி தானே விழுந்து கெடந்தாரு. டேபிள், சேர்குள்ளலாம் புகுந்து வந்தாரு. விட்டா அந்த அம்மா காலுக்குள்ளயே புகுந்துருப்பாரு என்று நக்கல் நையாண்டி செய்தார்.

அழுக்கு வார்த்தைகள்: தூற்றுதல் மற்றும் துஷ்பிரயோகத்தின் கலாச்சார வரலாறு” – வெங்கடாசலபதி: 07-01-2017 அன்று மாலை, சென்னை, சென்னை மேம்பாட்டு ஆய்வுக் கழகத்தின் பேராசிரியர் வெங்கடாசலபதி அவர்களால் “அழுக்கு வார்த்தைகள்: தூற்றுதல் மற்றும் துஷ்பிரயோகத்தின் கலாச்சார வரலாறு” வழங்கப்பட்டது. அவர் விசித்திரமான, கோபமான மற்றும் வினோதமான சூழ்நிலைகளில் மக்களால் துஷ்பிரயோகம், சாபம், பெயர்-அழைப்பு, கெட்ட மொழி பயன்படுத்துதல் போன்றவற்றைக் கையாண்டார். 19 ஆம் நூற்றாண்டில், ஷேக்ஸ்பியரில் தோன்றிய அழுக்கு வார்த்தைகள் தாமஸ் பவுட்லரால் அகற்றப்பட்டு “பவுட்லெரிசடோயன்” என்று அழைக்கப்பட்டது. அதே வழியில், பிரிட்டிஷ் அரசாங்கம் சில பகுதிகளை வெளியேற்றிய பிறகு சில தமிழ் இலக்கியங்களை அனுமதித்தது. கமல்ஹாசனின் “அபூர்வ ராகங்கள்” என்ற வார்த்தையில் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதைக் குறிப்பிடும் இலக்கியங்களை விட சினிமாக்களில், அரிதாகவே மோசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. அவர் தேர்ந்தெடுத்த எடுத்துக்காட்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டவை, இது போன்ற மோசமான மொழியைப் பயன்படுத்துபவர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள், மற்றவர்கள் பயன்படுத்தவில்லை. திராவிடத் தலைவர்கள் மேடைகளில் எப்படி அநாகரிகமான, ஒழுக்கக்கேடான வார்த்தைகளால் அவதூறாகப் பயன்படுத்தினார்கள் என்பதை வசதியாக அடக்கி வைத்திருந்தார். பெண்கள் ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்வது போல், இயற்கையில் “ஆணாதிக்கம்” போன்ற துஷ்பிரயோகங்களை அவர் பின்பற்ற முயன்றார். அவர் லாவகமாகவும், முரட்டுத்தனமாகவும், வாய்மொழியாகவும் இருந்தபோதிலும், “அடப்பாவி” என்பதைத் தவிர, எந்த ஒரு மோசமான வார்த்தையையும் அவர் ஒருபோதும் உச்சரிக்கவில்லை. அவர் நான்கு வார்த்தைகளை குறிப்பிட்டார், சில உதாரணங்களை மேற்கோள் காட்டி “F….K” என்ற வார்த்தை. முட்டாள், தட்டான், போர்ச்சுகீசியர் பறவர்களை, முகமதியர் திட்டுவதால் தான் மதம் மாறினர். அதாவது, சேவியர், பாதுகாப்பேன் என்ற சரத்துடன் தான் அவர்களை மதம் மாற்றினார்[3].

© வேதபிரகாஷ்

13-01-2022

இந்திரா காந்தியை, இவ்வாறெல்லாம் வசைபாடினார்………………….பிறகு கூட்டணியும் வைத்டுக் கொண்டார்………..


[1] தினமலர், ஆர்.எஸ். பாரதியை கைது செய்ய பா.ஜ., கோரிக்கை, மாற்றம் செய்த நாள்: ஜன 13,2023 22:19.

[2] https://m.dinamalar.com/detail-amp.php?id=3217369

[3] வெங்கடாசலபதி பேச்சை, இங்கே கேட்கலாம்: https://podtail.com/en/podcast/centre-of-south-asian-studies-seminars/professor-a-r-venkatachalapathy-dirty-words-a-hist/

காமராஜரை வசவு பாடிய, மாமேதை-கலைஞர்-கருணாநிதி……

எம்ஜிஆரையும் இவ்வாறு வசைபாடியுள்ளதை கவனிக்க வேண்டும்……

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக மற்றும் பத்திரிக்கையாளர்களின் வழக்குகளும், அவற்றின் பின்னணியும் – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (3)

மே 15, 2022

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக மற்றும் பத்திரிக்கையாளர்களின் வழக்குகளும், அவற்றின் பின்னணியும் தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (3)

நீதிமன்றமும் அரசையும், சட்டமன்றத்தையும் மதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தின் இவ்வுத்தரவு பற்றி மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜுஜூ கூறியதாவது[1]: “நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகக் கூறியுள்ளோம். மேலும் இவ்விவகாரத்தில் பிரதமரின் நோக்கம் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளோம். நீதிமன்றத்தையும் அதன் சுதந்திரத்தையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால் லட்சுமண ரேகை என ஒன்று உள்ளது. அதனை அரசின் அனைத்து அமைப்புகளும் மதிக்க வேண்டும். நீதிமன்றமும் அரசையும், சட்டமன்றத்தையும் மதிக்க வேண்டும். எங்களிடம் தெளிவான எல்லை நிர்ணயம் உள்ளது. அந்த லட்சுமண ரேகயை யாரும் கடக்கக்கூடாது,” இவ்வாறு கூறினார்[2]. அப்பிரிவு தேவயில்லை என்ற படசத்தில், இன்னொரு சட்டம் உருவாக்கப் படும். ஏனெனில், தேசத்துரோக கருத்துகள், வேலைகள், தீவிரவாதங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பிறகு அவற்றைக் க்ட்டுப் படுத்த, தடுக்க, தீர்க்க்க, தண்டிக்க நீதிமன்றம், அரசு, சட்டமன்றம், நாடாளுமன்றம் என்ன செய்ய முடியும் என்று கவனிக்க வேண்டும்

பிரிட்டிஷ் கால சட்டங்களில் ஒன்று தேச துரோக சட்டம்[3]. இந்த சட்டம் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கவே அதிகம் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது[4]. இதில் மத்திய, மாநில அரசுகள் எதுவும் விதிவிலக்கல்ல என்றும் கூறப்படுகிறது. இச்சட்டத்தை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் உள்ளன. கடந்த திங்களன்று (மே 09) இம்மனுக்கள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு, இச்சட்டம் குறித்து பரிசீலிப்பதாகவும், அதன் முடிவுகள் வரும் வரை இச்சட்டத்திற்கு எதிரான மனுக்களை விசாரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டது. இந்நிலையில் இன்று மீண்டும் அம்மனுவை விசாரித்த கோர்ட், அச்சட்டத்தை நிறுத்தி வைப்பதாக அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ”அரசின் பரிசீலனை முடியும் வரை தேச துரோக சட்டத்தை பயன்படுத்தக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் பிரிவு 124ஏ-வை பயன்படுத்தி வழக்கு பதியாது என நம்புகிறோம். தேச துரோக வழக்கின் கீழ் உள்ள விசாரணைகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஏற்கனவே தேச துரோக வழக்கில் சிறையில் உள்ளவர்கள் ஜாமின் கோரி நீதிமன்றத்தை அணுகலாம்” என நீதிபதிகள் கூறினர்.

இந்தியாவில் தேசத்துரோக சட்டம், முந்தைய வழக்குகள்: பிரிடிஷ்-இந்திய அரசுக்கு எதிராக இருந்தவர்களைத் `தேசத்துரோகிகள்’ என்று அழைக்கப் பட்டனர், அதில், விடுதலை போராளிகளும் அடங்குவர். பகத்சிங் போன்றவர்கள் தேசத்துரோகிகள் எனராங்கிலேயர் அரசு முத்திரைக் குத்தியது. தேசத் துரோக வழக்கில் திலகர் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1922-ம் ஆண்டு மகாத்மா காந்தி, யங் இந்தியா இதழில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக் கட்டுரை எழுதியபோது, காந்தி மீதும் `யங் இந்தியா’ வெளியீட்டாளர் சங்கர்லால் பாங்கர் மீதும் இந்தச் சட்டம் பாய்ந்தது. “இந்தியர்கள் மீது அடக்குமுறையைப் பாய்ச்சுவதற்காகவே இந்தச் சட்டம் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று காந்தி, 124ஏ பிரிவு குறித்து கூறியுள்ளார். ஜவகர்லால் நேரு இச்சட்டப் பிரிவு 124ஏ ஏற்றுக்கொள்ள முடியாத மிகவும் ஆட்சேபனைக்குரிய சட்டம் எனத் தெரிவித்தார். இந்தியர்களை அடக்கி வைக்கவே தேசத்துரோகச் சட்டத்தை பிரிடிஷ்-இந்திய ஆட்சியாளர்கள் திட்டமிட்டு இயற்றினர் என மகாத்மா காந்தி கருத்து தெரிவித்தார். தேசத் துரோக வழக்கில் வ. உ. சிதம்பரம்பிள்ளை 1908 முதல் 1912 முடிய வரை சிறையில் அடைக்கப்பட்டார். 2003-ஆம் ஆண்டில் விசுவ இந்து பரிசத் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். 2010-இல் எழுத்தாளர் அருந்ததி ராய் காஷ்மீர் பிரிவினைவாதம் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் எழுதியதற்கு தேசத் துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்.

பிரிவு 124 க்கு ஆதரவான கருத்துக்கள்: இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 124 ஏ தேசப் பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. வன்முறை மற்றும் சட்டவிரோதமாக அரசை அகற்றுவதற்கான முயற்சிகள் நடந்தால், அவற்றிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இந்தச் சட்டம் பாதுகாக்கிறது. அரசின் நிலையான தன்மை, தேசத்தின் ஒற்றுமைக்கும் பொருளாதாரத்துக்கும் முக்கியமானதாகும். நீதிமன்ற அவமதிப்பு செய்தால், தண்டனை வழங்கப்படுவது போல அரசை அவமதித்தால் தண்டனை கிடைக்கும் என்பதை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது’ என இதன் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். பல மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இவர்கள் அரசைக் கவிழ்க்க முயன்று, பல்வேறு கிளர்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில், காஷ்மீரத்தில் தேசவிரோத குழுக்கள் வெளிப்ப்டையாகவே, ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றன. இவற்றைத் தடுத்து, அரசை நிலைநாட்ட இந்தச் சட்டம் பயன் படுத்தப்படுவதாக இதன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். 03-07-2019  அன்று நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், “எந்தக் காரணத்தைக் கொண்டும் தேசத்துரோக சட்டம் ரத்து செய்யப்படாது, தேச விரோத, பிரிவினைவாத மற்றும் பயங்கரவாதிகளைத் திறம்பட எதிர்த்துப் போராடுவதற்காகவே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.

பிரிவு 124 க்கு எதிர் கருத்துகள்: தேசத்துரோகச் சட்டம், காலனிய ஆதிக்கத்தின் நினைவாக இன்னும் இந்தியாவில் இருந்து கொண்டிருக்கிறது. ஜனநாயக நாட்டுக்கு இதுபோன்ற சட்டங்கள் பொருந்தாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தன் குடிமக்களுக்குத் தந்த பேச்சு சுதந்திரத்தை இந்தச் சட்டம் பறிக்கிறது’ என்று இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். அரசின் கருத்துக்கு எதிராக நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது, விவாதம் நடத்துவது ஜனநாயகத்திற்குத் தேவையான அத்தியாவசியமான விஷயங்கள். ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கும் உரிமை, விமர்சிக்கும் உரிமை மக்களின் அடிப்படைத் தேவை. “தேசத்துரோக வழக்கை வைத்து இந்தியர்கள் மீது அடக்குமுறையை ஏவிய, பிரிட்டன் தன் நாட்டில் தேசத்துரோக சட்டத்தையே ரத்து செய்து விட்டது. இந்தியாவில் இந்தச் சட்டம் இன்னும் பயன்பாட்டில் இருப்பது ஏன்?,” என்கிற கேள்வியும் இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களிடம் எழுகிறது.

கேதார் நாத் சிங் வழக்கும், தீர்ப்பும்: தேசத் துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124(அ) குறித்து தேசிய அளவில் தீவிர விவாதம் எழுந்துள்ளது. மூன்றாண்டுகள் முதல் ஆயுட்காலம் வரையிலும் நீட்டிக்கக்கூடிய சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்க இப்பிரிவு வகைசெய்கிறது. மத்திய அரசின் பார்வையோ நடைமுறையில் இருந்துவரும் இந்தச் சட்டப்பிரிவு மேலும் தொடர வேண்டும் என்பதாகவே இருக்கிறது. இச்சட்டப்பிரிவு செல்லும் என்று 1962-ல் அளிக்கப்பட்ட கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பையே உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பின்பற்ற வேண்டும் என்ற அரசு வழக்கறிஞர்களின் வாதங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பில் தேசத் துரோகச் சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டபோதிலும்கூட, அப்பிரிவு தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான கட்டுப்பாடுகளையும் விதித்தது. வன்முறையைத் தூண்டிவிடவோ அல்லது அதற்கு அழைப்புவிடுக்கவோ செய்யாதபட்சத்தில், அரசின் மீது கூறப்படும் விமர்சனங்கள் தேசத் துரோகம் ஆகாது என்று அத்தீர்ப்பு வரையறுத்தது.

வினோத் துவாவின் விமர்சனம், அரசியல் ரீதியிலான முறையீடு: தற்போது தொடரப்பட்டிருக்கும் வழக்கு இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் வினோத் துவா, பெருந்தொற்றின்போது புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை மத்திய அரசு எதிர்கொண்ட விதத்தை விமர்சனம் செய்து தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட தேச விரோதக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து எழுந்ததாகும்[5]. வினோத் துவா மீதான இக்குற்றச்சாட்டை, இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்கெனவே தள்ளுபடி செய்துவிட்டது. தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்துசெய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்த வினோத் துவா, குறைந்தபட்சம் பத்தாண்டு காலம் ஊடகங்களில் பணிபுரிந்த பத்திரிகையாளர்கள் மீது இக்குற்றச்சாட்டைப் பதிவுசெய்யும் முன்னர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர், எதிர்க்கட்சித் தலைவர், மாநில உள்துறை அமைச்சர் ஆகியோரைக் கொண்ட குழுவிடம் முன்கூட்டி ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று உத்தரவிடுமாறும் கோரியிருந்தார். உள்நோக்கம் கொண்ட இக்கோரிக்கையில், அரசியல் இருப்பது வெளிப்பட்டது. சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்ற நோக்கில் அவர் கோரிய இந்த வேண்டுதலை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை[6].

© வேதபிரகாஷ்

15-05-2022


[1] தினமலர், லட்சுமண ரேகையை கடக்க வேண்டாம்:சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து மத்திய அமைச்சர்,மாற்றம் செய்த நாள்: மே 11,2022 19:06

[2] https://m.dinamalar.com/detail.php?id=3027322

[3] தினகரன், தேச துரோக சட்டம் மறு பரிசீலினை: ஒன்றிய அரசு, 2022-05-09@ 16:05:06.

[4] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=763940

[5] தமிழ்.இந்து, தேசத் துரோகம் என்னும் காலனிய எச்சம்!,, செல்வ புவியரசன், Published : 09 May 2022 06:46 AM; Last Updated : 09 May 2022 06:46 AM

[6] https://www.hindutamil.in/news/opinion/columns/797680-treason-1.html

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும் –  திராவிடஸ்தான் முதல் திராவிடியன் ஸ்டாக் வரை – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (2)

மே 15, 2022

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும்  திராவிடஸ்தான் முதல் திராவிடியன் ஸ்டாக் வரைதேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (2)

திராவிடஸ்தான் முதல் மாநில சுயயாட்சி வரை: 1930-40களில் தனித்தமிழ் இயக்கம், திராவிட இனக் கட்டுக்கதைகளை வளர்த்தன. சைவம் என்ற போர்வையில், வைணவத்தை எதிர்த்து, தெலுங்கு பேசும் மக்களை அவமதித்த போக்கு, நீதிகட்சியைக் குலைத்து, திராவிட கழக போர்வையில், தமிழக பிரிவினை உருவெடுத்தது[1]. திராவிடஸ்தான் என்று ஆரம்பித்து, “அடைந்தால் திராவிட நாடு, இல்லையென்றால் சுடுகாடு” என்று சென்று, பிறகு, எல்லாமே குப்பையில் என்றாகியது. ஆனால், அத்தகைய தேசவிரோத கொள்கையிலிருந்து மற்ற மொழி மக்கள் வேறுபட்டனர். 1940-50 திராவிட இனவெறி கட்டுக் கதைகளினால் தான், முதலில் ஆந்திரா தனியாகப் பிரிந்தது, முதல் மொழிவாரி மாநிலமானது. தொடர்ந்து “தமிழ்” தான் உயர்ந்தது, அதிலுருந்து தான் மற்ற மொழிகள் தோன்றின என்பதனை சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, தெலுங்கு மக்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பட்டிபோர்லு [Bhattiporlu] வரிவடிவங்களை [script] மற்றும் கல்வெட்டுகளை [inscriptions] வைத்துக் கொண்டு, தெலுங்கு வரிவடிவம் BCE மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று வாதிட்டனர்.

1950-70களில் பெரியார்-அண்ணா திராவிட நாட்டை குப்பைத் தொட்டியில் போட்டனர்: பெரியார் ஆதித்தனாருடன் சேர்ந்து “திராவிட நாடு” தேவையில்லை என்றே பேசினார். அண்ணாவைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை, முதலமைச்சர் ஆக வேண்டும், தேதலில் நிற்க்கவேண்டும் என்றால், பிரிவினை பேச முடியாது. அதனால், திராவிடஸ்தானும் போய் விட்டது, திராவிட நாடும் மறந்து விட்டது, “தமிழ் நாடு” என்பதில் திருப்தி பட்டு, சுருங்கி விட்டனர். அப்படியிருந்த நிலையில், இப்பொழுது, ஸ்டாலின் “திராவிடியன் ஸ்டாக்” என்று பேசியதை / பேசுவதை கவனிக்கலாம். யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கின்றனர் போலும். “திராவிடியன் மாடல்” வசனங்கள் வேறு தொடர்கின்றன. அவை, “ஒன்றிய” அரசுக்கு எதிராக இருக்கிறன. கூட கவர்னர் எதிர்ப்பு வேறு. இவையெல்லாம் தேசவிரோதம் ஆகுமா, தேசாபிமானம் ஆகுமா என்று தெரியவில்லை. “மாநில சுயயாட்சி” வாதம், டிவி விவாதங்களில் எதிரொலிக்கின்றன. திமுக-திக-கம்யூனிஸ்ட் வகையறாக்கள் இதில் சளைத்தவர்கள் அல்லர்.

எம்,ஜி.ஆருக்குப் பிறகு பிரிவினைவாடம் குறைந்தது: “தமிழ்நாடு” உருவானபோது கூட, எல்லை தகராறுகளில் கேரளா, ஆந்திரா மற்றும் ஆந்திராவுடன் எதிராகவே இருந்தது. தமிழநாட்டைத் தவிர மற்ற மாநில மக்கள் தாங்கள் “திராவிடர்கள்” என்றெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், திராவிடத்துவ சித்தாந்தம் தமிழ்நாடு மாநிலத்துடன் சுருங்கி விட்டது. 1950-60களில், “இந்தி-எதிர்ப்பை” கையில் எடுத்து உசுப்பி விட்டனர். 1960-70களில் மேடை பேச்சு, சினிமா வைத்டுக் கொண்டு ஆட்சியைப் பிடித்தனர். 1980-70களில் காவிரி பிரச்சினையில், முன்னர் பாமகவினால், அதிகமாகவே வெறியூட்டப் பட்டு, பிறகு திராவிட பிரிவினைவாதிகளால் தீயூட்டப் பட்டது. அப்பொழுது, இங்கு “உடுப்பி” ஹோட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஶ்ரீ ராகவேந்திர மடங்களும் தாக்கப்பட்டன.  1970-80களில் எம்ஜிஆரால் பிரிவினைவாதம் கொஞ்சம் குறைந்தது. “மாநில சுயயாட்சி” போர்வையில், அவ்வப்போது, திராவிடத்துவ சித்தாந்திகள் பேசுவது வழக்கமாக இருக்கிறது.

ஆரியன்திராவிடன்இனவாதம் முதல் திராவிடியன் ஸ்டாக் இனவெறிவாதம் வரை: திராவிட சித்தாந்திகள் தமிழரை, தமிழகத்தை பிரித்து வைத்து, துவேசத்தை வளர்த்து வருவது: தமிழகத்தில் கடந்த நூறாண்டு காலத்தில், –

  • தமிழ்-தமிழரல்லாதவர்,
  • திராவிடன் – ஆரியன்,
  • தென்னகத்தவன் – வடக்கத்தியன்,
  • வடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது
  • ஹிந்தி-ஹிந்தி-திணிப்பு
  • ஹிந்தி-எதிர்ப்பு இந்தி-திணிப்பு

போன்ற பிரச்சாரங்களால், மற்ற மொழி பேசும், மற்ற மாநிலத்தவர் மீது, மனங்களில் துவேசத்தை வளர்த்து கொண்டிருக்கிறார்கள். “வந்தேறி” தத்துவம் எப்பொழுதுமே உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துக் கொண்டு, மற்றவர்களைத் தாக்கப் பயம் படுத்தப் பட்டு வருகிறது. பிராமணர், மார்வாடி, குஜராத்தி, வடவிந்தியன் போன்ற பிரிவினை துவேசம் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.யைப்பொழுது அது “குஜராத்திற்கு” எதிராக இருக்கிறது. எந்த பிரச்சினை என்றாலும், “தமிழன்” என்று தான் அடைமொழி போட்டு செய்தி போடுவது, ஊடகங்களுக்கும் வாடிக்கையாக இருக்கிறது. ஶ்ரீலங்கா மதப்பிரச்சினை என்றாலும், “தமிழர்-முஸ்லிம்” என்று தான் செய்திகள் வெளியிட்டு, மதப்பிரச்சினையை மறைக்கப் பார்த்தனர்.

2021ல் ஸ்டாலின், திராவிடியன் ஸ்டாக் என்று கிளம்பியுள்ளார்: முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற நான் என்று பதவியேற்று, தான் திராவிடியன் ஸ்டாக் என்று குறிப்பிட்டுக் கொண்டாலும், விளம்பர அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான், திராவிட மொழி பேசும், தனிநாடு கேட்கும், திராவிட இனத்தவரான பலூச்சிஸ்தான் மக்கள் ஜின்னாவில் சிலையை தகர்த்துள்ளனர். இங்கு, கருணாநிதிக்கும், பெரியாருக்கும் சிலைகள் வைப்போம் என்று கிளம்பியுள்ளனர். பிரஹூயி, பிரோஹி, பிரஹூய், என்றெல்லாம் குறிப்பிடப் படுகின்ற மொழி திராவிடக் குடும்ப மொழி என்று திராவிடத்துவ வாதிகள் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள், இன்றும் மேடைகளில் டமாரம் அடிக்கிறார்கள்! பிறகு, அம்மொழி பேசும் மக்களைக் கொடுமைப் படுத்தும் பாகிஸ்தானை ஏன் திராவிடத்துவ வாதிகள் கண்டு கொள்வதில்லை?

பொருளாதாரம்நிதி என்று வந்தால் சித்தாந்தம் முடங்கி விடும்: “காவிரி பிரச்சினை” என்றாலும், திராவிட அரசியல்வாதிகளின்  கையாலாகாத விசயத்தை மறைத்து, கர்நாடகாவை, கன்னட மொழி பேசுபவர்கள் மீது வெறுப்பை-காழ்ப்பை வளர்த்து வருகின்றனர். அதற்கு சத்தியராஜ், விவேக் போன்ற நடிகர்களும் உடந்தையாக இருந்தனர். ஒரு திரைப்படத்தில், “இது பெங்களூரு கத்தரிக்காய், காவிரி நீரால் வளர்ந்து பெரிதாக இருக்கிறது, அது தமிழக கத்திரிக்காய், சிறிதாக இருக்கிறது, காவிரி நீர் கிடைத்தால், அதுவும் பெரிதாக வளரும்,” என்று சொல்வது, பிரிவினையின் வக்கிரகத்தைத் தான் வெளிக்காட்டியது. ஐடியால் கர்நாடகா வளர்ந்த நிலையிலும், வியாபார சம்பந்தங்களினாலும், இப்பொழுது அடக்கி வாசிக்கப் படுகிறது. சன்–குழுமங்களின் தொடர்புகள் அறிந்த விசயமே. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அவை வேறு வகையிலும் செயல்படுகின்றன. பொருளாதாரம், நிதியுதவி, திட்டங்கள் என்றெல்லாம் வரும் பொழுது, “ஒன்றியம்”என்று வேலை செய்யாது. தொடர்ந்து கவர்னரை எதிர்த்து வந்தாலும், வினையில் தான் சென்று முடியும்.

தேசத் துரோகம் எல்லாவற்றிலும் தான் செயல்படுகிறது: தினம்-தினம் கொலைகள், தற்கொலைகள், செக்ஸ்-வக்கிர வன்மங்கள் (அப்பா மகளை கற்பழிப்பது, மாமனார் மறுமகளிடம் எல்லை மீறுவது), வன்முறைகள், குடும்பசீரழிவுகள், கணவன்–மனைவி உறவுகள் சீரழிதல், தாம்பத்தியத்தை மீறிய உறவுகள், குடும்பக் கொலைகள் (அப்பா மனனைக் கொல்லுதல், மகன் அப்பாவைக் கொல்லுதல் முதலியன), குறைந்து வரும் மாணவ-மாணவியர் ஒழுக்கம், நடத்தை, லஞ்சத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம், தினம்-தினம் கைது, சஸ்பெண்ட் என்ற செய்திகள்…இந்நிலையில் திராவிடக் கட்சிகள் பரஸ்பர குற்றச் சாட்டுகள் சொல்லிக் கொண்டு தப்பிக்க / காலந்தள்ள முடியாது. விலைவாசிகள் ஏறுகின்றன என்றால், வியாபர ஒழுக்கம், வணிக தராதரம், முதலியவைப் பற்றி கண்டுகொள்வதில்லை. சங்கங்கள் மூலம் அரசியல் செய்யும் போது, கூட்டுக் கொள்ளைதான் அடிக்கிறார்கள். தக்காளியை ரோடிலும் கொட்டுவார்கள், ரூ.100/-க்கும் விற்பார்கள். கேட்டால் பெரிய பொருளாதார நிபுணன் போல, சப்ளை-டிமான்ட் என்றெல்லாம் கூடப் பேசுவான் திராவிட வியாபாரி.

© வேதபிரகாஷ்

15-05-2022


[1]  இப்பொழுதும் சரவணன், சென்னைப் பல்கலை, சைவசித்தாந்த துறை, போன்ற கும்பல்கள், சைவர் இந்துக்கள் அல்லர் என்று சொல்லி வருகின்றனர். பேஸ்புக்கிலும், இந்த வாத-விவாதங்கள் தொடர்கின்றன.

திராவிட மொழி பேசும் திராவிட இனத்தவர் பலூச்சிஸ்தான் மக்கள் ஜின்னா சிலையைத் தகர்த்துள்ளனர் – தமிழகத்தில் இருக்கும் இனமானத் தலைவர்கள், திராவிடியன் ஸ்டாக் வகையறாக்கள் என்ன செய்வார்கள்?

செப்ரெம்பர் 28, 2021

திராவிட மொழி பேசும் திராவிட இனத்தவர் பலூச்சிஸ்தான் மக்கள் ஜின்னா சிலையைத் தகர்த்துள்ளனர் – தமிழகத்தில் இருக்கும் இனமானத் தலைவர்கள், திராவிடியன் ஸ்டாக் வகையறாக்கள் என்ன செய்வார்கள்?

ஜின்னா சிலை தகர்க்கப் பட்டது
இந்த தாக்குதலுக்கு பலுாச் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்

பாகிஸ்தானின் அடக்குமுறைகளை பலூச்சிஸ்தான் எதிர்த்து வருகின்றது: நம் அண்டை நாடான பாகிஸ்தான் நிறுவனரான முகமது அலி ஜின்னா, அந்த நாட்டின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி ஏற்றார். காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், 1948ல் காலமானார். இவர் தன் கடைசி நாட்களில் வசித்து வந்த குடியிருப்பு கட்டடம், தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 121 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடம், பலுாசிஸ்தான் மாகாணத்தின் ஜியாரத் பகுதியில் இருந்தது. எனினும் 2013ல் பலுாச் பயங்கரவாதிகளால் அந்த கட்டடம் தகர்க்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது. இதில், அந்த கட்டடம் முழுதும் சேதமடைந்தது. பாகிஸ்தானின் நான்கு மாநிலங்களில் பலூச்சிஸ்தானும் ஒன்று. இம்மாநிலத்தவர் தனிநாடு கேட்டுப் போராடி வருகிறனர்[1]. இதனால், அவ்வப்பொழுது, தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப் பட்டு வருகின்றன[2]. பலுசிஸ்தானின் துறைமுக நகரான குவாதரில் பாதுகாப்பு மிகுந்த மெரைன் டிரைவ் பகுதியில் கடந்த ஜூன் மாதம் முகமது அலி ஜின்னாவின் சிலை நிறுவப்பட்டது[3]. கடற்கரை பகுதியான இங்கு, சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். விடுமுறை நாட்களில் உள்ளூர் மக்களின் கூட்டமும் இருக்கும். இந்நிலையில் 26-09-2021 காலையில் சிலைக்கு அடியில் குண்டு வெடித்ததில் சிலை வெடித்து சிதறியது[4].

சிலை அடியில் குண்டு வைத்துத் தகர்த்தார்கள்
ஜூன் 2021ல் தான் அச்சிலை நிறுவப்பட்டது

ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினத்தில் குண்டு வைத்து தகர்க்கப் பட்டது: பலூச்சிஸ்தான் மாகாணத்தின் குவாடர் பகுதியில் முகமது அலி ஜின்னாவின் சிலை வைத்தது அங்குள்ள மக்களுக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில், பாகிஸ்தான் வலுக்கட்டாயமாக, தங்களது பகுதியை பகிஸ்தானுடான் இணைத்து விட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். இதனால், 26-09-2021 அன்று குண்டு வைத்து தகர்க்கப் பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது[5]. இந்த தாக்குதலுக்கு பலுாச் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்[6]. சுற்றுலா பயணியர் அதிகம் கூடும் கடற்கரை நகரமான இங்கு, சமீபத்தில் தான் இந்த சிலை நிறுவப்பட்டது[7]. இதுகுறித்து குவாதர் துணை ஆணையரான ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் அப்துல் கபீர் கான் கூறும்போது, “சுற்றுலாப் பயணிகளை போல அப்பகுதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள், ஜின்னாவின் சிலையை குண்டு வைத்து தகர்த்துள்ளனர். இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை[8]. இந்த சம்பவத்தை அனைத்து கோணங்களிலும் விசாரிக்க விரும்புகிறோம்[9]. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படு வார்கள்,” என்றார்[10]. இந்த சிலை தகர்ப்பு சம்பவம் குறித்து, உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, பாக்., ராணுவம் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது[11]. வழக்கம் போல, உண்மையினை வெளியிடாமல், “தீவிரவாதிகள் கைவரிசை: பாகிஸ்தானில் ஜின்னா சிலை தகர்ப்பு,” என்றெல்லாம் செய்திகள் வெளியிடப் பட்டுள்ளது[12].

உலக சுற்றுலா தினம் கொண்டாடும் நேரத்தில் உடைக்கப் பட்டது.
பலூச்சிஸ்தான் என்பது, பாகிஸ்தானை விட பெரிய பிரதேசம் ஆகும். அது கிழக்கில் பாகிஸ்தான், வடக்கில் ஆப்கானிஸ்தான், மேற்கில் ஈரான், தெற்கில் அரபிக் கடல் என்று பெரிய பிரதேசமாக இருக்கிறது.
பராஹவி மொழி (Brahui language, بروہی) அல்லது பிராவி மொழி (براوِ) பராஹவி இனத்தவரால் பேசப்படுகிறது. இது சிறிய அளவில் ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது ஆயினும், பாகிஸ்தானின், பலூச்சிஸ்தான் மாகாணத்திலேயே பெருமளவில் புழங்கி வருகிறது. 2005 ஆம் ஆண்டில் எத்னோலாக் பதிப்பில் 22 லட்சம் எனக் கணிக்கப்பட்டுள்ள இதன் பேசுவோர் தொகையில் 90 வீதமானோர் பாகிஸ்தானிலேயே உள்ளனர்.

26—09-2021 ஞாயிற்றுக் கிழமை, 27-09-2021 உலக சுற்றுநாள் தினம்: பாகிஸ்தானியர் உலக சுற்றுலா தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடி இருக்கின்றனர் போலிருக்கிறது. சுற்றுலா பயணிகள் என்று, குவாதர் என்ற கடற்கரை நகரத்தில், மரைன் டிரைவ் இடத்திற்கு வந்துள்ளனர். அங்கிருக்கும் மொஹம்மது அலி ஜின்னாவின் சிலைக்குக் கீழ் குண்டை வைத்துத் தகர்த்துள்ளனர்! ஜின்னா சிலை ஜூன் 2021ல் தான் மரைன் டிரைவ் கடற்கரையில் நிறுவப் பட்டது. இதனை, பலோக் / பலூச்சி மக்கள் விரும்பவில்லை. இதனால் பலூச்சிஸ்தான் லிபரேஷன் பார்ட்டி / பலூச்சிஸ்தான் விடுதலை வேண்டி போராடும் கட்சி குண்டு வைத்துத் தகர்த்துள்ளது. தாங்கள் தான் அவ்வாறு செய்தோம் என்றும் ஒப்புக் கொண்டுள்ளது! பலூச்சிஸ்தான் என்பது, பாகிஸ்தானை விட பெரிய பிரதேசம் ஆகும். அது கிழக்கில் பாகிஸ்தான், வடக்கில் ஆப்கானிஸ்தான், மேற்கில் ஈரான், தெற்கில் அரபிக் கடல் என்று பெரிய பிரதேசமாக இருக்கிறது. சர்ப்ராஸ் பகுடி என்ற பலூச்சிஸ்தான் செனேடர், இது பாகிஸ்தானின் சித்தாந்தத்திற்கு எதிரான தாக்குதல்! ஜின்னாவின் வீட்டைத் தாக்கியவர்கள் எவ்வாறு தண்டிக்கப் பட்டனரோ, அதே போல, இவர்களும் (ஜின்னா சிலையைத் தகர்தவர்களும்) தண்டிக்கப் பட வேண்டும் என்று கொதித்து, டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்!

ஈவேரா நாயக்கரை ஜின்னா நன்றாக ஏமாற்றினார், அண்ணா ஒத்து ஊதினார் ஆனால், திராவிடஸ்தானம் செய்த்து விட்டது: 1940ல் ஜின்னா வீட்டில், ஜின்னா, ஈவேரா, அம்பேத்கார் கூடி பேசி, இந்தியாவைத் துண்டாட திட்டம் போட்டனர். அப்பொழுது அண்ணாதுரை முதலியோரும் கூட இருந்தனர். அம்பேத்கர், இது நமக்கு உதவாது என்று ஒதுங்கி விட்டார். ஆங்கிலேயர் அமைச்சர் பதவி கொடுத்தது. ஜின்னா, ஈவேராவுக்கு நோஸ்-கட் கொடுத்தார், அதாவது, தான் முஸ்லிம் என்பதால், முஸ்லிம்களுக்குத் தான் பாடுபடுவேன் என்று எழுத்து மூலமே தெரிவித்து சாடினார். அண்ணாவே இனம் இனத்தோடு சேரும் என்றெல்லாம் வாய்-சவடால் மூலம் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார். கடைசியில் ஜின்னாவுக்கு பகிஸ்தான் கிடைத்தது. அன்ணா பிரிந்து போன போது, ஈவேராவோ, அண்ணாவோ திராவிட உணர்வுடன், திராவிட மொழி பேசும் பலூச்சிஸ்தான் மக்களுக்குக் குரல் கொடுக்கவில்லை. “அடைந்தால் திராவிட நாடு, இல்லையென்றால் சுடுகாடு,” என்றெல்லாம் வசனம் பேசிக் கொண்டிருந்தார். பெரியாரான, ஈவேராவும் அவ்வப்பொழுது கலாட்டா செய்து கொண்டிருந்தார். யாரும் கண்டுகொள்ளவில்லை. நேரு மிரட்டியதில், பயந்து போன அண்ணா, திராவிட நாடு கொள்கையில் குப்பைத் தொட்டியில் போட்டு, தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சர் ஆனார்.

திராவிடத்துவத்தில் ஊறிய கருணாநிதியும் கண்டுகொள்ளவில்லை: கருணாநிதி எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற திட்டத்தில் இருந்ததால், முகமது இஸ்மாயிலுடன் தாஜா செய்து, முஸ்லிம் ஓட்டைத் தாக்க வைத்துக் கொண்டார். நெடுஞ்செழியன் முதலியாரை ஓரங்கட்டினார். மாநில சுயயாட்சி என்று அவ்வப்பொழுது ஊதிக் கொண்டிருந்தார். ஆனால், திராவிட மொழி பேசும் பலூச்சிஸ்தான் மக்களுக்குக் குரல் கொடுக்கவில்லை. அப்படி செய்தால் முஸ்லிம் லீக் கழட்டி விடும் என்று நன்றாகத் தெரியும். ஆக, திராவிடப் பாட்டைப் பாடிக் கொண்டு, துலுக்கருடன் ஆட்டம் போட்டு வந்தார். அது கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகளிலும், கைதிகளை விடுதலை செய்ததிலிருந்தும் நன்றாகவே வெளிப்பட்டது. தமிழே, தமிழின் உயிரே, உயிரின் மூச்சே, மூச்சின் வாசமே, வாசத்தின் இருப்பிடமே என்றெல்லாம் அடுக்கிக் கொண்டு போவார்கள். திராவிட நாடு அம்போ தான்.

2021ல் ஸ்டாலின், திராவிடியன் ஸ்டாக் என்று கிளம்பியுள்ளார்: முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற நான் என்று பதவியேற்று, தான் திராவிடியன் ஸ்டாக் என்று குறிப்பிட்டுக் கொண்டாலும், விளம்பர அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான், திராவிட மொழி பேசும், தனிநாடு கேட்கும், திராவிட இனத்தவரான பலூச்சிஸ்தான் மக்கள் ஜின்னாவில் சிலையை தகர்த்துள்ளனர். இங்கு, கருணாநிதிக்கும், பெரியாருக்கும் சிலைகள் வைப்போம் என்று கிளம்பியுள்ளனர். பிரஹூயி, பிரோஹி, பிரஹூய், என்றெல்லாம் குறிப்பிடப் படுகின்ற மொழி திராவிடக் குடும்ப மொழி என்று திராவிடத்துவ வாதிகள் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள், இன்றும் மேடைகளில் டமாரம் அடிக்கிறார்கள்! பிறகு, அம்மொழி பேசும் மக்களைக் கொடுமைப் படுத்தும் பாகிஸ்தானை ஏன் திராவிடத்துவ வாதிகள் கண்டு கொள்வதில்லை?

ஸ்டாலின் திராவிட மொழிபேசும் திராவிட இனமக்களை ஆதரிப்பாரா, எதிர்ப்பாரா?: பராஹவி மொழி (Brahui language, بروہی) அல்லது பிராவி மொழி (براوِ) பராஹவி இனத்தவரால் பேசப்படுகிறது. இது சிறிய அளவில் ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது ஆயினும், பாகிஸ்தானின், பலூச்சிஸ்தான் மாகாணத்திலேயே பெருமளவில் புழங்கி வருகிறது. 2005 ஆம் ஆண்டில் எத்னோலாக் பதிப்பில் 22 லட்சம் எனக் கணிக்கப்பட்டுள்ள இதன் பேசுவோர் தொகையில் 90 வீதமானோர் பாகிஸ்தானிலேயே உள்ளனர். சிந்து, பலூச்சிஸ்தான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முப்பதுக்கு மேற்பட்ட இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். பிரஹூ / பிராகுவி மொழி பேசும் மக்களைக் கொடுமைப் படுத்தும் பாகிஸ்தானை ஏன் திராவிடத்துவ வாதிகள் கண்டு கொள்வதில்லை? நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று பெருமை பேசிய, ஸ்டாலின், ஜின்னா சிலை தகர்த்த திராவிட மொழி பேசுபவர்களை எதிர்ப்பாரா, ஆதரிப்பாரா? இனமான திராவிடத் தலைவர் வீரமணி இதையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை. நாகநாதன், ஜகதீசன், கருணானந்தன், சுப.வீரப்பாண்டியன், கலி.பூங்குன்றன், விடுதலை ராஜேந்திரன் முதலியோர் என்ன செய்வார்கள் என்று பார்ப்போம்!

© வேதபிரகாஷ்

28-09-2021


[1] தினத்தந்தி, பாகிஸ்தானை தோற்றுவித்த முகமது அலி ஜின்னாவின் சிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்பு, பதிவு: செப்டம்பர் 27,  2021 15:08 PM

[2] https://www.dailythanthi.com/News/World/2021/09/27150825/Bomb-blast-at-the-statue-of-Muhammad-Ali-Jinnah-the.vpf

[3] தமிழ்.இந்து, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜின்னா சிலை தகர்ப்பு: தீவிரவாதிகள் அட்டூழியம், செய்திப்பிரிவு, Published : 28 Sep 2021 03:17 AM; Last Updated : 28 Sep 2021 05:50 AM.

[4] https://www.hindutamil.in/news/world/720754-jinnah-statue-in-gwadar-blown-up-using-explosives.html

[5] தினமலர், ஜின்னா சிலை பாக்.,கில் தகர்ப்பு, Added : செப் 28, 2021  02:04

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2855012

[7] நியூஸ்7தமிழ், முகமது அலி ஜின்னா சிலை தகர்ப்பு: தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு, by EzhilarasanSeptember 28, 2021

[8] https://news7tamil.live/jinnahs-statue-destroyed-in-blast-in-pakistans-balochistan-bla-claims-responsibility.html

[9] மாலைமுரசு,முகமது அலி ஜின்னா சிலை குண்டு வைத்து தகர்ப்பு…  தாக்குதலுக்கு பலுாச் பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு.., webteamSep 28, 2021 – 07:23Updated: Sep 28, 2021 – 07:24.

[10] https://www.malaimurasu.com/posts/worldnews/Mohammed-Ali-Jinnah-statue-bombed

[11] தினகரன், தீவிரவாதிகள் கைவரிசை: பாகிஸ்தானில் ஜின்னா சிலை தகர்ப்பு, 2021-09-28@ 00:02:47

[12] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=708283

கருணாநிதி சிலை திறப்பு – சிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! [1]

திசெம்பர் 17, 2018

கருணாநிதி சிலை திறப்புசிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! [1]

EVR idol breaking case

பிள்ளையார் சிலையை உடைத்தவன், அப்பனுக்கு சிலை வைக்கத் துடித்த கதை சொல்லும் பிள்ளை: தமிழகத்தில் சிலை-அரசியல் என்பது திக-திமுக கட்சிகளோடு பின்னிப் பிணைந்து, பிறகு அதிமுகவையும் ஆட்டிப் படைக்கிறது. அம்பேத்கர் சிலை அரசியல் என்பது பிறகு வந்தது. அது தேவர் சிலை அரசியலோடு சேர்ந்து கொண்டு, கலவரங்களில் முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.மோஹன் கமிட்டியின் படி, சிலைகள் அவமதிக்கப் படுவதால் தான், தமிழகத்தில் கலவரங்கள் நடக்கின்றன என்று 1998லேயே எடுத்துக் காட்டினார்[1]. தேவர் ஜாதியினர் சிலைகள் 227, மஹாத்மா காந்தி 81 மற்றும் அம்பேத்கர் 66 இருப்பதாக இன்னொரு அறிக்கைக் குறிப்பிடுகிறது[2]. இதனால், புதிய சிலைகள் வைக்கக் கூடாது என்ற கருத்தும் உருவாகி வருகிறது. இங்கும் சிலையுடைப்பு அரசியலை ஆரம்பித்து வைத்தது ஈவேரா தான். உச்சநீதி மன்றம் அவரைக் கண்டித்துள்ளது, ஆனால், அவர் தான் கருணாநிதிக்கு சிலை வைப்பேன் என்று பிடிவாதம் பிடித்ததை இப்பொழுது அறிகிறோம்!

Avvai, Valluvar, Kambar, Ilango

1968ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த்த்தும், சிலைகள் வைத்ததும்: 1968ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த போதே, யாருக்கெல்லாம் சிலை வைப்பது, எடுப்பது என்பது பற்றியெல்லாம், ஏகப்பட்ட குழப்பம்,, பிரச்சினை, எதிர்ப்பு, ஆதரவு எல்லாமே நடந்தேறியது. முதலில் பெஸ்கி, போப் சிலைகள் வைக்க திட்டம் இல்லை. அப்பொழுது, யாரோ ஒருவர் லெஸ்லி நியூபிகின் என்ற சி.எஸ்.ஐ பிஷப்பிற்கு போன் செய்து, அவர்கள் சிலைகள் சேர்க்கப் பட வேண்டும் என்று அறிவித்தானாம். உடனே, புரொடெஸ்டென்ட் நியூபிகின், கத்தோலிக்க ஆர். அருளப்பாவுடன் ஆலோசனை செய்து, சிலைகள் வைக்க திட்டம் போட்டனர். லெஸ்லி அண்ணாவின் மிக நெருங்கிய நண்பர், சிறுவயதில் காஞ்சிபுரத்திலிருந்தே பழக்கம் உண்டு. அவர் சொல்லை அண்ணா தட்டவே மாட்டார் என்ற அளவுக்கு நெருக்கம் என்று நியூபிகின் முன்வாந்தார். இதற்குள் செய்தி அரசுக்குச் சென்றவுடன், செல்யூலரிஸ முறைப்படி, உமறுப் புலவருக்கு சிலை வைக்கலாம், என்று மனவை முஸ்தபா[3] [1935-2017] சொன்னார்.  ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், கைவிடப் பட்டது. மபொசி இளங்கோ அடிகள் சிலை வைக்க வேண்டும் என்றதை, கருணாநிதி விரும்பவில்லை. ஆக, தீர்மானிக்கப் பட்ட சிலைகள் இவ்வாறு வைக்கப் பட்டன.

Bharati, dasan, Pope, Caldwell

எண் திறந்து வைக்கப் பட்ட தேதி சிலை விழாத் தலைவர் திறந்து வைத்தவர்
1 02-01-1968 திருவள்ளுவர் இஆ. நெடுஞ்செழியன் கி.ஆ.பெ. விசுவநாதன்
2 02-01-1968 அவ்வையார் சத்தியவாணி முத்து எஸ்.எஸ். வாசன்
3 02-01-1968 கம்பர் ஏ. கோவிந்தசாமி மீ. பக்தவட்சலம்
4 02-01-1968 கண்ணகி    
5 02-01-1968 சுப்பிரமணிய பாரதி மாதவன் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
6 02-01-1968 வீர்மாமுனிவர் சாதிக் பாஷா அருளப்பா
7 02-01-1968 கி.யூ.போப் சி.பா. ஆதித்தனார் பிஷப் லெஸ்லி நியூபிகின்
8 02-01-1968 பாரதிதாசன் மா.முத்துசாமி மு. வரராசனார்
9 02-01-1968 வி.ஓ.சிதம்பரம்    
10 07-11-1971 இளங்கோ அடிகள் இரா. நெடுஞ்செழியன் ம.பொ.சிவஞானம்

Arulappa, CNA, Lesslieகண்ணகி சிலை உலகத் தமிழ் மாநாட்டின் போது வைக்கப் பட்டது. ஆனால் அது டிசம்பர் 10, 2001 அன்று, மெரினா கடற்கரையை நவீனப் படுத்தும் சாக்கில் இடிக்கப் பட்டது. போதாகுறைக்கு, அச்சிலையால் தான் சென்னை பஞ்சத்தால் நீரின்றி தவிக்கிறது என்றும் சொல்லப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தபோது, கருணாநிதி, ஜூன்.3, 2006ல் அதே இடத்தில் கண்ணகி சிலை வைத்தார். இப்படி சிலை சண்டை.

கருணாநிதிக்கு 1975ல் வைத்த சிலை 1987ல் இடிக்கப் பட்டது: 1975ல் கருணாநிதியின் சிலை மசூதிக்கு முன்பாக, அவர் ஆட்சியில் இருக்கும் போதே, ஜெனரல் பாட்டர்ஸன் – மவுண்ட் ரோடு சந்திப்பில் வைக்கப் பட்டது. அப்பொழுதே “உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைப்பதா, விக்கிரங்களை / சிலைகளை எதிர்ப்பவர், தனக்குத் தானே சிலை வைத்துக் கொள்வதா, இதனால், தீமை ஏற்படும்……….,” போன்ற பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப் பட்டன. ஆத்திகரான, கடவுளை நம்பிய குன்றக்குடி அடிகள், நாத்திகரான-இந்துவிரோதியான, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்! இருப்பினும், கருணாநிதிக்கு விருப்பம் இருந்ததால், நிறைவேற்றப்பட்டது. எந்த சாத்திரம் என்னவாகிற்றோ, எம்ஜிஆர் 1987ல் இறந்த போது, கருணாநிதி உயிரோடிருந்த நிலையில் சிலை உடைக்கப் பட்டது. ஒரு இளைஞன் கடப்பாரையினால், சிலையை உடைக்கும் காட்சியின் புகைப்படங்கள், நாளிதழ்களில் வெளிவந்தன. அது கண்டு போபப்பட்ட  கருணாநிதி, “அது மற்றவகளுக்கு இறுதி சிரிப்பாக இருக்கலாம், ஆனால், என் தம்பி என் நெஞ்சில் குத்தி விட்டான்”, என்று இளைஞன் உடைத்த படத்தின் கீழே எழுதினார்.

Karunanidhi statue demolished by a youth- 24-12-1987-main

உயிருடன் இருந்த போது வைக்கப் பட்ட சிலைகள்: தமிழக அரசியல் வரலாற்றில் உயிருடன் இருக்கும்போதே சிலை அமைக்கப்பட்ட தலைவர்கள் இரண்டுபேர் ஒன்று காமராஜர் மற்றொன்று கருணாநிதி. சிலை அமைக்கப்பட்டு மீண்டும் புதிய சிலை அமைக்கப்பட்ட தலைவர்கள் இரண்டுபேர். ஒன்று கருணாநிதி மற்றொன்று ஜெயலலிதா. இது சம்மீபத்தில் ஏற்பட்ட கோளாறுகள். கருணாநிதிக்கு முதன் முதலில் சிலை வைக்கவேண்டும் என்று அறிக்கை விட்டவர் பெரியார். அண்ணா உயிருடன் இருக்கும்போதே 1968-ம் ஆண்டே பெரியார் இந்த வேண்டுகோளை வைத்தார். 1968 இலும்,1971 ஆகஸ்டு 14 இலும் இருமுறை அறிவித்தார் பெரியார்! அதற்கு முன் உயிருடன் இருந்தவர்களில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் காமராஜருக்கு மட்டுமே ஜிம்கானா கிளப் அருகே சிலை திறக்கப்பட்டிருந்தது. அதை நேரு திறந்து வைத்தார்.

Karunanidhi statue demolished by a youth- 24-12-1987

ஈவேரா கருணாநிதிக்கு சிலை வைக்க விரும்பியது (1971): அண்ணா மறைவுக்குப் பின்னர் முதல்வர் பதவியேற்றார், பின்னர் 1971-ம் ஆண்டு சட்டமன்றத்தை கலைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தேர்தலை திமுக சந்தித்தது. மிகப்பெரிய வெற்றியை திமுக இந்த தேர்தலில் பெற்றது. ஆகஸ்டு 14, 1971 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், பெரியார் ஏற்கெனவே தான் வைத்த கோரிக்கையை மீண்டும் அப்போதைய முதல்வர் கருணாநிதியை அருகில் வைத்துக்கொண்டே வைத்தார். செயற்கரிய சாதனை செய்தவர் என்பதால் சென்னை தலைநகரில் கருணாநிதிக்குச் சிலை வைக்கவேண்டும் என்று தம் விருப்பத்தை பெரியார் தெரிவித்தார். அதை மேடையில் இருந்த குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் ஆமோதித்தனர். அதே மேடையில் கருணாநிதி சிலை அமைப்புக் குழுவையும் பெரியார் அறிவித்தார். அப்போது கூட்டத்தில் பேசிய கருணாநிதி திமுக சார்பில் பெரியாருக்கு ஒரு சிலை திறக்கிறோம், அதன் பின்னர் எனக்கு சிலை திறக்கலாம் என்று அதைத் தட்டிக்கழித்தார்.

வேதபிரகாஷ்

16-12-2018.

EVR statue opened by Karu - EVR, Karu and others can be seen

[1] In October 1998 the Times of India (ToI) reported that a high-level committee headed by retired Supreme Court judge S.Mohan to investigate caste conflict in southern Tamil Nadu had made special note of statues: “Justice Mohan observed that most of the clashes that took place in the region were because of desecration of statues and both the government and private bodies were advised to desist from installing new statues.”

Times of India, View: Statue politics & shifting sands of time, By Vikram Doctor, ET Bureau|Updated: Mar 10, 2018, 10.57 AM IST

[2] Another ToI report on the committee showed the scale of the problem: “statistics in the report reveal that there are over 708 statues of various leaders in nine southern districts of Tamil Nadu alone.” Of these 227 were of dominant Thevar community leaders, 81 were of Mahatma Gandhi and 66 were of Dr.Ambedkar. Riots often sprang from mere rumours about disrespect to statues and sometimes communities disfigured their own leaders’ statues “as an excuse for attacking the other.”

https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/view-statue-politics-shifting-sands-of-time/articleshow/63241372.cms

[3] தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாக இயக்குநராக 40 ஆண்டுகள், ‘புத்தக நண்பன்’ (புக் பிரண்ட் – மாத இதழ்) ஆசிரியராக 4 ஆண்டுகள், யுனெஸ்கோ கூரியர் – பன்னாட்டு மாத இதழ் – ஆசிரியராக 35 ஆண்டுகள், என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தலைமை பொறுப்பாசிரியர் – தமிழ் பதிப்பு, முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட ‘சுதந்திர பொன்விழா குழு” முன்னாள் உறுப்பினராகவும், முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு உயர்கல்வி – தமிழ் ஆக்கப்பணிக்குழு முன்னாள் உறுப்பினராகவும், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் இணைச் செயலாளராகவும், உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி வரும் சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் இந்தியக் குழுவின் முன்னாள் இணைச் செயலாளராகவும், ‘பாரதிய ஞானபீடப் பரிசு தேர்வுக்குழு’ உறுப்பினராகவும், 1968, 1982, 1987, 1995 ஆண்டுகளில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் 7 ஆய்வுக் கட்டுரைகள் படித்துள்ளார்.

ஆரிய-திராவிட போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது – வீரமணியின் புலம்பல் – அண்ணா-எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதா போன்ற தலைவர் வருவது கடினமே – ஜெயலலிதாவுக்கு முன்பும்-பின்னும் (5)

ஜனவரி 15, 2017

ஆரியதிராவிட போராட்டம் நடந்து கொண்டிருக்கிறதுவீரமணியின் புலம்பல்அண்ணாஎம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதா போன்ற தலைவர் வருவது கடினமேஜெயலலிதாவுக்கு முன்பும்பின்னும் (5)

aryan-myth-anna-tirade-against-brahmins

சிண்டு முடிந்திடுவோய் போற்றிஎன்ற  ‘துவஜா ரோகணம்செய்யத் தொடங்கிவிட்டனர்[1]: திராவிட இயக்கங்களுக்கு தாங்கள்தான் மாற்று என்ற பாஜகவினரின் ‘கரிசனம்’ அதிமுகவின் மீது கரைபுரண்டு ஓடத் தொடங்கிவிட்டது. எனவே அதிமுகவினருக்கு எச்சரிக்கை தேவை. இது நாடகமே என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார். அறிஞர் அண்ணா கூறிய, ”சிண்டு முடிந்திடுவோய் போற்றி” என்ற அனுபவ மொழிப்படி, அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பொறுப்பாளர்களிடையே பிளவை வலிந்து உண்டாக்கி, இடையே புகுந்து, நூல் பிளந்து பார்க்கும் முயற்சியில் ஈடுபடத் துவங்கிவிட்டனர். பல்வேறு கலகங்களை உருவாக்கிட, கட்டுக் கோப்பான அக்கட்சியினை ஜாதி அடிப்படையில் பிரித்தாள தங்களது பேனாக்கள்மூலம் ‘துவஜா ரோகணம்’ செய்யத் தொடங்கிவிட்டனர். எனவே, அதிமுகவின் சகோதரர்களே, சிண்டு முடிந்திடுவோரை, உங்கள்மீது திடீர் அனுதாபம், அளவற்ற ஆதரவு தருவது போல் நாடகம் போடுவோரை விழிப்போடு புரிந்துகொள்ளுங்கள். கட்சியின் கட்டுக்கோப்பை – கட்டுப்பாட்டை மறவாதீர். சிறுசிறு ஓட்டைகளைத் தேடி அலைந்து அவற்றைப் பெரிதாக்குகின்றனர். எனவே எச்சரிக்கை தேவை. இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்[2].

tears-and-ocean-droplets-jaya-comparison-21-08-2000கண்ணீர் துளிகளும், கடல்நீர் துளிகளும்: “கடல்நீர் துளிகள் கடலாகாது, கடலை விட்டுச் சென்ற அவை கடல் என்று தம்மை அறிவித்துக் கொள்ள முடியாது”, என்று நெடுஞ்செழியன் அதிமுகவை விட்டுச் சென்றவர்களை குறிப்பிட்டார். ஆகஸ்ட்.21, 2000 அன்று வி.ஆர்.நெடுஞ்செழியனின் புத்தகங்களை வெளியிடும் போது, ஜெயலலிதா அதனைச் சுட்டிக் காட்டி பேசினார். அண்ணா உயிருடன் இருக்கும் போது, அவரை சாடியவர்கள், மறைமுகமாக எதிர்த்தவர்கள் இன்று அண்ணாவைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள், என்று மறைமுகமாக விமர்சித்தார்[3]. கே. வீரமணி பிரதிகளைப் பெற்றுக் கொண்டார். 1948ல் பெரியார், திமுகவை “கண்ணீர் துளிகள்” என்று குறிப்பிட்டது தெரிந்ததே. 50 ஆண்டுகள் கழித்து, ஜெயலலிதா, அதிமுகவை விட்டு விலகியவர்களை “கடற்நீர் துளிகள்” என்று குறிப்பிட்டார்[4].

veeramani-with-jayalalitaசமூக நீதி வீராங்கனை: 1998ல் அதிமுக பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொண்டபோது, வீரமணி விமர்சித்தார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து செப்டம்பர் 2001ல் தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் தனதுதனித்தன்மையை ஜெயலலிதா நிலைநாட்டியுள்ளார் என்று திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி கூறினார்[5]. இதுதொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுப்ரீம் கோர்ட்தீர்ப்பை ஏற்று தனது பதவியை ஜெயலலிதா ராஜினாமா செய்துள்ளார். இதைபாராட்டுகிறேன். தனக்கு பதவி ஆசை இல்லை என்பதை அவர் நிரூபித்துள்ளார். மேலும், தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை, பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்கியுள்ளதன் மூலம் சமூக நீதியை காப்பதில் தான் எவ்வளவு உறுதியாக இருக்கிறேன் என்பதை அவர் நிரூபித்துள்ளார். இதை நான் வரவேற்கிறேன். புதிய முதல்வர் பன்னீர் செல்வம் பீடு நடை போட்டு செயல்பட வாழ்த்துகிறேன்”, என்றுகூறியுள்ளார் அவர்[6].

கரு-இந்திராவை வசை பாடியது- சர்வாதிகாரி, காந்தாரி.....பெண்களை அடக்கும், திட்டும், தூசிக்கும் திராவிடத் தலைவர்கள்: பெரியார் முதல் கருணாநிதி வரை என்னத்தான் “பகுத்தறிவு” என்றெல்லாம் பேசினால் கூட, அவர்களின் பலதார திருமணங்கள், தொடர்புகள், மக்களை அவர்கள் பெண்களை அடக்கியாள்பவர்களாகத் தான் சித்தரித்தது. பெரியார் தன்னைவிட இளைவரான மணியம்மையை திருமணம் செய்து கொண்டதை அண்ணா போன்ற தலைவர்களே வெளிப்படையாக எதிர்த்தனர், மற்றும் “கண்ணீர் துளிகளாக” திமுக உதயமாக காரணமாகியது. “நான் முற்றும் துறந்த முனிவனும் இல்லை, அவள் படி தாண்டா பத்தினியும் இல்லை”, என்றெல்லாம் பேசினாலும் கூட, அண்ணாவுக்கு குழந்தையில்லை என்பதனால் மக்களுக்கு இரக்கம் ஏற்பட்டது. இதே நிலைதான் எம்ஜியாருக்கும். பலதாரம் புரிந்த எம்ஜியார், இதனால் கண்டுகொள்ளவில்லை எனலாம். ஆனால், வீரமணியை, மணியம்மையை சொத்துக்காக அடக்கி வைக்கும் நபராகத்தான் கருதினர். கருணாநிதியின் முத்தார-மூன்று மனைவி-துணைவி பற்றி விவரிக்க வேண்டிய அவசியல் இல்லை. இந்நிலையில் எல்லோருக்கும் தெரிந்த, அறிந்த, புரிந்த ஜெயலலிதா உயர்ந்தது, ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.

கரு-இந்திராவை வசை பாடியது- மாத விடாய்ஜெயலலிதாவும், கரண் தாபரும்: ஆங்கிலம் மற்றும் இந்து மொழிகள் தெரிந்ததால், ஜெயலலிதாவுக்கு தேசியத் தலைவர்களுடன் நேரில் சந்தித்துப் பேசும் வசதியும் இருந்தது. கரண் டாபருடன் நடந்த பேட்டி திகைக்க வைத்தது, ஜெயலலிதாவின் பேச்சுத் திறமை, கேள்விகளை எதிர்கொள்ளும் திறமை, தாபரையே அதிர வைத்த ஆளுமை முதலியன படித்தவர்களையே சிந்திக்க வைத்தது. எதிரிகள் கூட பாராட்ட ஆரம்பித்தனர். பலமொழிகளில் நடித்த அனுபவத்தை ஜெயலலிதா அரசியலில் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார். அந்நிலையில், ஜெயலலிதா உட்கார்ந்த இடத்தில் சசிகலா உட்காருவது என்பது எப்ப்டி பட்டது என்பது சொல்ல வேண்டிய் அவசியம் இல்லை. இருவரும் பெண்கள் தான், இருப்பினும் வித்தியாசங்கள் பலப்பல உள்ளன.

dravidian-leaders-jaya-with-evr-and-karunanidhiஜெயலலிதாவை சதாய்த்த திராவிடத் தலைவர்கள்: திராவிடத் தலைவர்களின் ஆபாச வசைகளினால் தூற்றப்பட்ட போது, மக்கள் உள்ளுக்குள்ளே கொதித்தனர். ஊழல் என்பது, திராவிடத்துவ அரசியலோடுப் பின்னிப்பிணைந்ததாலும், எல்லோருக்கும் அதைப்பற்றி நன்றாகவே தெரிந்திருந்ததாலும், ஊழல் வழக்குகள் அவர் மீது போடப்பட்டபோது, அதிகமாக பாதிப்பு ஏற்படவில்லை. மாறாக, கருணாநிதி மற்றும் சுப்ரமணியன்ஸ்வாமி, அவரை சதாய்த்து, கஷ்டப்படுத்துவதாகவே மக்கள் நினைத்தனர். சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்டபோது, “திரௌபதி துகிலுரித்த நிகழ்ச்சி” போன்றநிலை, மக்களை அதிகமாகவே பாதித்தது. நிச்சயமாக திமுகவினர் “கௌரவர்களாகி”, கருணாநிதி, “துச்சாதனன்” ஆகி, தோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று. “எனக்கும் மூன்று துணைவியர் இருக்கிறார்கள், பெண்களைப் பற்றி எனக்கும் தெரியும்”, என்றெல்லாம் கருணாநிதி வசனம் பேசினாலும், மக்களிடம் அது எடுபடவில்லை. “முரசொலியில்” கருணாநிதியின் தூஷணம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருந்தது. சமீபத்தில் கூட “பாப்பாத்தி” என்றெல்லாம் ஏகவசனத்தில் தேர்தல் பிரச்சாரங்களில் பேசியது, நிச்சயமாக தமிழகப் பெண்களுக்குப் பிடிக்கவில்லை.

jaya-with-sonia-and-subramanian-swamyசுப்ரமணியன்சுவாமி, ஜெயலலிதாவைதிராவிடத் தலைவியாகமாற்றியது: “உள்ள சூத்திர ஆட்சியைக் காப்போம்மென்று சுவரொட்டிகளை ஒட்டியதை நினைவு கொள்ள வேண்டும். கருணாநிதி, “மறுபடியும் ஆரிய அம்மையார் பதவிக்கு வந்துவிடுவார்” என்றெல்லாம் எச்சரிக்கை ஓலமிட்டது ஞாபகத்தில் கொள்ள வேண்டும். “தமிழகத்தை தமிழன் தான் ஆளவேண்டும்” போன்ற கூக்குரல்களை எல்லாம் மீறித்தான், தமிழகத்தை தமிழர்-அல்லாதவர்கள் ஆட்டிப் படைத்தார்கள், ஆண்டார்கள் என்று, தனித்தமிழ்த்துவ, தமிழ்வெறித்துவப் பிரிவினைவாதிகள் பேசியும், எழுதியும் வந்த நிலை. ஆனால், “எல்லோரும் திராவிடர்கள்” என்பதை, ஆந்திரா தனி மாநிலம் ஆகியபோதும், கேரளா ஒப்புக் கொள்ளாத போதும், கர்நாடகா காவிரி விசயத்திலும் தோலுரித்துக் காட்டியது. அந்நிலையில், பிராமணரான, தமிழரல்லாத ஜெயலலிதா, முற்றிலும் திராவிடத்துவப் படுத்தப் பட்ட காரியத்திற்கு, இன்னொரு பிராமணரான, சுப்ரமணியன்சுவாமி காரணமானார். அவர் போட்ட வழக்குகள், ஜெயலிதாவைத் தனிமைப் படுத்தி, “திராவிடத் தலைவி”யாக்கியது!

anti-brahmin-jaya-criticismஊழல்காரணி ஜெயலலிதாவை பாதிக்காதது: ஊழலில் திளைத்த திமுக 1970களிலேயே வழக்குகளில் சிக்கிக் கொண்டது. கருணாநிதி, “ஊழலின் மறு உருவம்” போன்று சித்தரிக்கப் பட்டார். “இந்திரா-கருணாநிதி” கூட்டு அவ்வாறே முரண்பாடாகக் கருதப் பட்டது. “சோனியா-கருணாநிதி” கூட்டோ பாதாளத்தில் தள்ளி விட்டது. இரண்டு தீமைகள் இருக்கும் போது, பெரியது எடு, சிறியது எது அல்லது, எதனால் அதிக அளவு பாதிப்பில்லை என்று பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலையிலும், ஜெயலலிதா தனித்து நின்றார். “தமிழகத்தை இனி ஆண்டவன் கூட காப்பாற்ற முடியாது”, என்று ரஜினிகாந்த சொன்னது, நாத்திகரான கருணாநிதிக்கு, ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

jaya-cho-nexus-againat-sasikalaபெண்களை அடக்கும், திட்டும், தூசிக்கும் திராவிடத் தலைவர்கள்: பெரியார் முதல் கருணாநிதி வரை என்னத்தான் “பகுத்தறிவு” என்றெல்லாம் பேசினால் கூட, அவர்களின் பலதார திருமணங்கள், தொடர்புகள், மக்களை அவர்கள் பெண்களை அடக்கியாள்பவர்களாகத் தான் சித்தரித்தது. பெரியார் தன்னைவிட இளைவரான மணியம்மையை திருமணம் செய்து கொண்டதை அண்ணா போன்ற தலைவர்களே வெளிப்படையாக எதிர்த்தனர், மற்றும் “கண்ணீர் துளிகளாக” திமுக உதயமாக காரணமாகியது. “நான் முற்றும் துறந்த முனிவனும் இல்லை, அவள் படி தாண்டா பத்தினியும் இல்லை”, என்றெல்லாம் பேசினாலும் கூட, அண்ணாவுக்கு குழந்தையில்லை என்பதனால் மக்களுக்கு இரக்கம் ஏற்பட்டது. இதே நிலைதான் எம்ஜியாருக்கும். பலதாரம் புரிந்த எம்ஜியார், இதனால் கண்டுகொள்ளவில்லை எனலாம். ஆனால், வீரமணியை, மணியம்மையை சொத்துக்காக அடக்கி வைக்கும் நபராகத்தான் கருதினர். கருணாநிதியின் முத்தார-மூன்று மனைவி-துணைவி பற்றி விவரிக்க வேண்டிய அவசியல் இல்லை. இந்நிலையில் எல்லோருக்கும் தெரிந்த, அறிந்த, புரிந்த ஜெயலலிதா உயர்ந்தது, ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.

© வேதபிரகாஷ்

15-01-2017

admk-sucession-wars

[1] தமிழ்.ஒன்.இந்தியா, பிளவை உருவாக்கும் ஆரிய சக்திகளிடம் எச்சரிக்கையாக இருக்க அதிமுகவுக்கு வீரமணி அட்வைஸ் ! By: Karthikeyan, Updated: Thursday, December 8, 2016, 22:45 [IST]

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/k-veeramani-allegation-on-bjp-269339.html

[3] The Hindu, Jayalalitha move to appease partymen, Tuesday, August 22, 2000.

[4] Addressing partymen after releasing two books authored by former chairman, V.R. Nedunchezhiyan, Ms. Jayalalitha said, “none of those who hold the organisation as greater than themselves would be let down”. Quoting Nedunchezhiyan, she said those who had left the party were like droplets outside the ocean. “Once outside the ocean, the droplets cannot claim to be the ocean,” she said. While the AIADMK had faith in the people, its opponents believed in conspiracy. “The day is not far off when we will usher in MGR rule again.” Ms. Jayalalitha made a veiled attack on the ruling party saying those who had hurt Anna while he was alive were now claiming to be his followers.

http://www.thehindu.com/2000/08/22/stories/04222233.htm

[5] தமிழ்.ஒன்.இந்தியா, சமூக நீதி காத்த ஜெ.-வீரமணி புகழாரம், Published: Sunday, September 23, 2001, 5:30 [IST].

[6] http://tamil.oneindia.com/news/2001/09/23/veeramani.html

குருகுலம், குலக்கல்வி அறிமுகப்படுத்தப் படப்போகிறது – புதிய கல்வித் திட்டமும், கனிமொழியும், திராவிட கட்சிகளும்!

ஓகஸ்ட் 10, 2016

குருகுலம், குலக்கல்வி அறிமுகப்படுத்தப் படப்போகிறது – புதிய கல்வித் திட்டமும், கனிமொழியும், திராவிட கட்சிகளும்!

Jaya blessing prostratedகுருகுலம், குலக்கல்வி அறிமுகப்படுத்தப் படப்போகிறது[1]: விடுதலை தொடர்கிறது, “புதிய கல்வித் திட்டத்தில் பள்ளிகள், பக்கத்தில் உள்ள ஆசிரமங்களுடன் இணைக்கப்படும் என்று சொல்லப் பட்டுள்ளது. அதற்கு முன்னோடியாகத்தான் சென்னை இந்து ஆன்மிகக் கண்காட்சியில் ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்யும் ஏற்பாடாகும்[2]. ஒரு காலத்தில் குருகுல வாசம் என்ற முறை இருந்ததுமாணவர்கள் பகலில் எல்லாம் பிச்சை எடுத்துக்கொண்டு வந்த பொருள்களைக் கொண்டு, உண்டு உறைந்த காலகட்டம் அது. அத்தகைய காலம் அல்ல இது! அந்தக் கால கல்வி என்பதும் இன்றைக்குக் கவைக்குதவாதுகாலாவதியான ஒன்றாகும். மீண்டும் அந்தத் திசை நோக்கி மாணவர்களை, மத்தியில் உள்ள பி.ஜே.பி. ஆட்சி அழைத்துச் செல்லுகிறதோ என்ற அய்யமும், அச்சமும் ஏற்படுகின்றன. குருகுலம் என்றாலே நமக்கு சேரன்மாதேவி குருகுலம்தான் நினைவிற்கு வந்து தொலைக்கிறது. பார்ப்பனர்களுக்கு ஒரு வகையான தரமான உணவுபார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு மட்டமான உணவு பரிமாறப்படவில்லையா? குடிதண்ணீர்கூட தனித்தனியாக வைக்கப்பட்டு இருந்ததே! அந்தப் பேதா பேதத்தை ஒழித்துக் கட்டியவர்கள் தந்தை பெரியார் அவர்களும், டாக்டர் பி. வரதராஜூலு (நாயுடு) அவர்களுமேயாவார்கள். காங்கிரசை விட்டு தந்தை பெரியார் அவர்கள் வெளியேறு வதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்றே!”.

Khader_1 Vellore Amma 2006இந்துத்துவா சக்திகள் தறிகெட்டு நிர்வாண ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டன[3]: விடுதலை தொடர்கிறது, “மத்தியில் பி.ஜே.பி. , ஆட்சிக்கு வந்தநாள் முதற்கொண்டு இந்துத்துவா சக்திகள் தறிகெட்டு நிர்வாண ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டன. மீண்டும் நாட்டை மனுதர்மப் பிற்போக்கு உலகத்திற்கு இழுத்துச் செல்ல முயற்சிக்கின்றன. பிரதமர் உள்பட மத்திய அமைச்சர்கள் ஆர்.எஸ்.எஸ். கூட்டும் கூட்டங்களில் பங்கேற்பது கட்டாயம்; அந்தக் கூட்டத்தில், ஆட்சியின் செயல்பாடுகள், நடவடிக்கைகள், திட்டங்கள்பற்றி ஆய்வு செய்யப்படுகின்றன. ஆட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸின் சர் சங் சாலக் (தலைவர்) அறி வுறுத்துகிறார். அந்த அடிப்படையில்தான் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வருமுன் சென்னையில் ஒரு கல்லூரியில் இந்துஆன்மிகக் கண்காட்சி என்ற பெயரில் ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளதைக் கவனிக்கத் தவறக்கூடாது”.

Saibaba and Karunanidhiபாத பூஜை செய்வதுபிற்போக்குத்தனம் அல்லவா?[4]: விடுதலை தொடர்கிறது,”ஒரு பக்கத்தில் விஞ்ஞான மனப்பான்மை வளர்க்கப்பட வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51-எச்) வலியுறுத்துகிறது. அது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்றும் அரசமைப்புச் சட்டம் கட்டாயப்படுத்துகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குச் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டு அமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர்கள் அந்த அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டைக் காலில் போட்டு மிதிக்கலாமா? பாத பூஜை செய்வதுபிற்போக்குத்தனம் அல்லவா? அதுவும் காலைக் கழுவுவது அசுத்தமான ஆரோக்கியமற்ற அஞ்ஞான செயல்பாடு அல்லவா! மாணவர்களுக்கு நோய்ப் பரவும் ஆபத்தில்லை என்று அறுதியிட்டுதான் கூற முடியுமா? இதில் மகிழ்ச்சிக்குரியது, பாராட்டக் கூடியது என்னவென்றால், மாநிலங்களவையில் தி.மு.. உறுப்பினர் கனிமொழி ஆற்றிய உரையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் தோழர் து.ராஜா அவர்களும், மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அவர்களும், அய்க்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் அவர்களும் வரவேற்று ஆதரவு தெரிவித்ததுதான்”.

Vellore Amma - pada pujaசென்னையில் நடைபெற்ற இந்து ஆன்மிகக் கண்காட்சியில் அரங்கேற்றப்பட்ட அத்துமீறல்கள்[5]: விடுதலை தொடர்கிறது, “இதுபோன்ற பொதுக் கொள்கைகளில் கட்சிகளைக் கடந்து ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் மரபு தோற்றுவிக்கப்பட்டால், ஆளும் கட்சியும் சட்ட விரோத, மதச் சார்புக் காரியங்களைச் செய்யத் தயங்குமே! சென்னையில் நடைபெற்ற இந்து ஆன்மிகக் கண்காட்சியில் அரங்கேற்றப்பட்ட அத்துமீறல்கள், நடவடிக்கைகள் விசாரிக்கப் படவேண்டும். இவ்வளவுப் பிரம்மாண்டமாக ஏற்பாடுகளைச் செய்வதற்கு நிதி ஆதாயம் எங்கிருந்து வருகிறது என்பதும் கண்டுபிடிக்கப்பட வேண்டும். கறுப்புப் பணக்காரத்தன்மையின் வடிவமான கார்ப்பரேட் சாமியாரான ராம்தேவ்களை உரிய முறையில் விசாரித்தால், பல அதிர்ச்சியூட்டக்கூடிய தகவல்கள் வெளிவரக்கூடும். பக்திஇப்பொழுதெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்குள் சென்றுவிட்டதே!”.

kader3 Vellore Ammaதமிழிசை கனிமொழி பேச்சுக்கு கண்டனம்[6]: டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது[7]: “ பாராளுமன்றத்தில் சகோதரி கனிமொழி இந்து மதத்தில் குருவிற்கு பாத பூஜை செய்வது கூட இந்துத்துவா திணிப்பு என்கிறார்[8]. இவர்கள் போலி மதச்சார்பின்மை பற்றி பேசுகிறார்கள்[9]. நல்ல பழக்கங்கள் கூட தவறாக சித்தரிக்கப்படுகிறது[10]. இது கண்டனத்துக்குரியது. ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு பழக்க வழக்கம் உள்ளது. பெரியவர்கள், குருவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்[11]. இதற்கு மாணவர்கள் சமூகம் சரியாக வழி நடத்தப்படவில்லை. எல்லாமே தவறு என்பது தவறு. நான் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவ்டேகரிடம் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடப்பது பற்றி கூறினேன். அதற்கு அவர் புதிய கல்வி கொள்கை இன்னும் முழுவடிவம் பெறவில்லை. வரைவு திட்டம்தான் உள்ளது. ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 வரை கருத்து தெரிவிக்க கால அவகாசம் உள்ளது. நிறைவேற்றப்படாத திட்டத்துக்கு தமிழகத்தில் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள் என்று அவர் கேட்டார்”, இவ்வாறு அவர் கூறினார்.

students-perform-pada-pooja-to-parents-HSSFநாத்திகம், இந்து-எதிர்ப்பு முதலியன தமிழ் சமுதாயத்தை மேன்படுத்த முடியாது: கடந்த 60 ஆண்டு காலம் திராவிடம், தனித்தமிழ், இந்தி-எதிர்ப்பு, பார்ப்பன-எதிர்ப்பு, கோவில்-இடிப்பு, கோவில் சொத்து கொள்ளை, இந்துமத விசயங்களில் தலையிடுவது,….. முதலிய காரியங்கள் தமிழ்நாடு மக்களை விழிப்படைய செய்தது. 1960களிலேயே, இவையெல்லாம் எடுபடாமல் பக்திப்படங்கள் நூறு நாட்களுக்கு மேலாக ஓடி சாதனை படுத்தின. பிறகு, ஆதிபராசக்தி, அம்மா போன்ற பக்தி இயக்கங்கள் வளர்ந்தன. திகவினரே கலந்து கொள்கின்றனர், சபரி மலைக்கும் போய் வர்கின்றனர். படிப்பு, பாடதிட்டம் முதலியவற்றில் பிந்தங்கியதால், தமிழக மாணவர்கள் தாம் பின்தங்கினர். நன்றாகப் படிப்பவர்கள் பற்றி பிரச்சினை இல்லை. ஆனால், மற்றவர்களை ஏமாற்றி படுகுழியில் தள்ளியது இவர்களின் சித்தாந்தம் தான். இங்கும் தங்களது மகன் – மகள், பேரன் – பேத்திகளை ஆங்கில பள்ளி, கான்வென்ட், சிபிசிஇ போன்ற முறைகளில் படிக்க வைத்து அல்லது அயல்நாடுகளுக்கு அனுப்பி வைத்து உயர்ந்து விட்டனர். ஆனால், சாதாரண மக்களின் மகன் – மகள், பேரன் – பேத்திகளை தமிழ் அல்லது போசமான பாடதிட்டங்களில் படிக்க வைத்து தரத்தை குறைத்தனர், அவர்களது வாழ்க்கையினைக் கெடுத்தனர். இந்நிலையில், அவர்கள் பண்புடன், நல்ல குணங்களுடன் வளர, இருக்க பெற்றோரைப் போற்ற வேண்டும் என்று நிகழ்சிகள் இருந்தால், அவற்றை “புதிய கல்வி திட்டத்துடன்” இணைத்து கலாட்டா செய்கின்றனர். இது திராவிடக் கட்சிகளில் போலித்தனம், கையாலாகாதத் தனம், ஏனாற்றுவேலை, சமுதாய சீரழிப்பு போன்ற தீயசக்திகளைத் தான் வெளிப்படுத்துகிறது. இதனால் தான், அவர்கள், இவர்கள் மீதான நம்பிக்கையினையும் இழந்து வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

10-08-2016

[1] http://viduthalai.in/component/content/article/71-headline/127299-2016-08-06-08-48-32.html

[2] விடுதலை, பாத பூஜையா?, சனி, 06 ஆகஸ்ட் 2016 14:18;

[3] விடுதலை, பாத பூஜையா?, சனி, 06 ஆகஸ்ட் 2016 14:18

[4] http://viduthalai.in/component/content/article/71-headline/127299-2016-08-06-08-48-32.html

[5] விடுதலை, பாத பூஜையா?, சனி, 06 ஆகஸ்ட் 2016 14:18

[6] மாலைமலர், மாணவர்கள் பாத பூஜை செய்த விவகாரம்: கனிமொழி எம்.பி.க்கு டாக்டர் தமிழிசை கண்டனம், பதிவு: ஆகஸ்ட் 06, 2016 12:08; மாற்றம்: ஆகஸ்ட் 06, 2016, 15:29.

[7] http://www.maalaimalar.com/Election/ElectionNews/2016/08/06120836/1031074/Tamilisai-soundararajan-Condemn-Kanimozhi-MP.vpf

[8] நக்கீரன், குருவிற்கு பாத பூஜை செய்வது இந்துத்துவா திணிப்பாகனிமொழிக்கு தமிழிசை கண்டனம், பதிவு செய்த நாள் : 6, ஆகஸ்ட் 2016 (13:0 IST); மாற்றம் செய்த நாள் :6, ஆகஸ்ட் 2016 (13:0 IST)

[9] http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=170532

[10] Deccan Chronicle., Why so much dissent against draft policy, asks BJP, J V Siva Prasanna Kumar, Published: Aug 9, 2016, 6:04 am IST; Updated: Aug 9, 2016, 6:05 am IST

[11] Dr Tamilisai also took strong exception to the DMK Rajya Sabha MP Kanimozhi for her remarks on certain Hindu practices and said prostrating before teachers and seeking their blessings by touching their feet is an act to show students’ respect for teachers. “There is nothing wrong in this gesture,” she added.

http://www.deccanchronicle.com/nation/politics/090816/why-so-much-dissent-against-draft-policy-asks-bjp.html

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம் (4)!

செப்ரெம்பர் 20, 2015

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம்பெரியார் திடலில் விவாதம் (4)! 

பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம்

பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம்

திருவள்ளுவரை ஹிந்து மதத்தைச் சார்ந்தவர் என்று சாயம்பூசி, அதிகாரப் பூர்வமாக்கி அரசு இயந்திரத்தின் மூலம் பரவச் செய்தால் ஏற்படும் கேடு பன்மடங்காகி விடும்: வீரமணி தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கிறார், “இதில் திருவள்ளுவரின் திருக்குறளில் இல்லாத மோட்சம் – “வீடுஇருப்பதாக தவறாக விளக்கமும் கூறி திரிபுவாதம் செய்யப்பட்டுள்ளது. அத்தகைய கோணத்தில் மத்திய அரசு திருவள்ளுவரை ஹிந்து மதத்தைச் சார்ந்தவர் என்று சாயம்பூசி, தம் இச்சைபோல வளைத்து விடவோ, திருவள்ளுவர் பிறப்புப்பற்றிய தவறானஅருவறுக்கதக்க கதைகளை கூறி, அவற்றை அதிகாரப் பூர்வமாக்கி அரசு இயந்திரத்தின் மூலம் பரவச் செய்தால் ஏற்படும் கேடு பன்மடங்காகி விடும். எனவே, விழிப்புணர்வுடன் வரவேற்க வேண்டிய அறிவிப்பு இது என்று தமிழ் கூறும் நல்லுலகத்தினையும், ஏனையோரையும் எச்சரிக்க வேண்டியது நமது முக்கிய கடமையாகும்”, இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார். அரசு ஆவணங்களில் இந்து என்றுதான் போட்டுக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர், பிறகென்ன, இந்த வெத்துவேட்டு வெங்காயம் / எதிர்ப்பெல்லாம் என்று கருப்புச்சட்டைகள் புரிந்து கொள்ளவேண்டும்[1]. பகுத்தறிவு-சுயமரியாதை திருமணமே இந்து திருமண சட்டத்தில் ஐக்கியமானதும் நினைவு கூரத்தக்கது[2].

பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம்.3

பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம்.3

கிருஷ்ணன் என்ன உனக்கு மட்டும்தானா தெரியும்? உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்ட னையும் எங்களுக்குத் தெரியும்!: வீரமணியை கடந்த ஆண்டுகளில் அதிகம் பாதித்துள்ளது ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா தான்! 2013ல் இப்படி பிதற்றியுள்ளார்[3], ஒரு கூட்டத்தில் பேசியது இப்படியுள்ளது, “உங்களுக்கு என்ன தெரியும்? உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்! ஆக, எங்கள் கிருஷ்ணனைப்பற்றி பேசிவிட்டார்களா என்று நீங்கள் கேட்கிறீர்கள். கிருஷ்ணன் என்ன உனக்கு மட்டும்தானா தெரியும்? உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்! ஏனென்றால், நீ கிருஷ்ணன் என்று சொல்கின்ற கடவுளைப்பற்றி, உன் மூக்கை சொறிந்து, திசை திருப்பிவிட்டிருக்கிறார்கள் யாரோ!” பாவம், அந்த அளவுக்கு குற்றம் கண்டுபிடிக்க கீதை பற்றி ஆராய்ச்சியே செய்துள்ளார் போலும்.

பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம்.2

பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம்.2

கோர்ட்டில் கிருஷ்ணனையும் கூப்பிட முடியும்; கிருஷ்ணதாசர்களையும் கூப்பிட முடியும்: வீரமணி பொறிந்து தள்ளினார், “இன்னும் சில பேர் வழக்கு போடுவோம் என்று சொல் கிறார்கள். போடுங்கள்! உங்கள் வழக்கைத்தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்போதுதான், கோர்ட்டில் கிருஷ்ணனையும் கூப்பிட முடியும்; கிருஷ்ணதாசர்களையும் கூப்பிட முடியும். உன்னாலே வர முடியுமானால், வழக்கு போடுங்கள்!ஆதாரபூர்வமாக தாக்கல் செய்கிறோம்! கோர்ட்டில், நாங்கள் ஆதாரபூர்வமாக, கிருஷ்ணன் செய்த லீலைகளைப் படமாகப் போட்டு, குளத்தில் பெண்கள் எல்லாம் பாதி நிர்வாணமாக நிற்கிறார்கள்; சேலைகளைத் தூக்கிக்கொண்டு மரத்தின்மீது கிருஷ்ணன் இருக்கிறார் பாருங்கள் அந்தப் படத்தினை, நீதிபதி அவர்களே இதனை ஆதாரபூர்வமாக தாக்கல் செய்கிறோம் என்று சொன்னால், என்ன ஆவார் கிருஷ்ணன், அதனை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்”. எப்படி முகலாய போலித்தன சரித்திரவியல், கட்டுக்கதை உருவாக்கம், சித்திரங்கள் வரந்த விதம்[4], இவர்களைப் போன்ற நாத்திகர்களால் உபயோகப்படுத்தப் படுகிறது என்பதனையும் கவனிக்க வேண்டும்[5].

சைவ-வைணவ சிண்டு முடுக்கும் வீரமணி

சைவ-வைணவ சிண்டு முடுக்கும் வீரமணி

ஒரு லட்சம் பிரதிக்குமேல் விற்பனையாகிய கீதையின் மறுபக்கம்: தன்னுடைய புத்தகத்தைப் பற்றி பீழ்த்திக் கொள்கிறார், “கீதையின் மறுபக்கம்! இதோ என் கைகளில் இருப்பது கீதையின் மறுபக்கம் நூல்!கிருஷ்ணன் உபதேசம் செய்தாராம் – யாருக்கு, அர்ஜுனனுக்கு! அதுதான் கீதை!எதிர் எதிரே படைகள் இருக்கு. அந்தப் படையில் அர்ஜுனன் சண்டை போட போகிறாராம். அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக கிருஷ் ணன் போறாராம். அப்போது காதோடு காதாக கீதா உபதேசம் செய்றாராம். எங்கே? எதிரிப் படைகள் நிற்கின்ற இடத்தில் – 700 சுலோகம் முடியும் வரை எதிரிப் படைகள் அமைதியாக நிற்கின்றதாம். கீதையின் மறுபக்கம் நூல் இருக்கிறதே, ஒரு லட்சம் பிரதிக்குமேல் விற்பனையாகி இருக்கிறது. அதுமட்டுமல்ல, ஆங்கிலத்திலே, இந்தியிலே, எல்லா மொழிகளிலும் அச்சாகி இருக்கிறது. இதற்கு ஒரு வரி மறுப்பு கிடையாது”. இக்காலத்தில் புத்தகத்தின் விற்பனையை எப்படி கணக்கில் காட்டுகிறார்கள் என்று நன்றாகவே தெரியும். தமிழக வரலாற்றுப் பேரவையில் திக-புத்தகங்கள் இலவசமாக 300 பேராளர்களுக்குக் கொடுக்கப்பட்டன என்று முன்னர் எடுத்துக் காட்டப்பட்டது. ஆக டஜன் கணக்கில் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் நடத்தும் வீரமணிக்கு ஒரு லட்சம் பிரதிகள் விற்பது என்பது என்ன முடியாத காரியமா? அதற்கு ஒரு வரி மறுப்பு கிடையாது என்பதில்லை, அதாவது லட்சம் பிரதிகள் விற்று யாரிடம் போய் சேர்ந்தன என்று தெரியவில்லை. மேலும், அரைகுறையாக, அரைவேக்காட்டுத்தனமான, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும், இத்தகைய சித்தாந்திகளை மற்றவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு, தங்களது நேரத்தை விரயமாக்க மாட்டார்கள் என்பதனையும் நோக்க வேண்டும்.

சைவ-வைணவ சிண்டு முடிக்கும் வீரமணி. மாமா

சைவ-வைணவ சிண்டு முடிக்கும் வீரமணி. மாமா

பகவத் கீதையை புனித நூலாக சைவர்கள் ஏற்கமாட்டார்கள்: கி.வீரமணி பேட்டி: தஞ்சையில் திராவிட கழகம் சார்பில் இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதற்குக் கண்டனம் தெரிவித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சை வந்த திராவிட கழகதலைவர் கி.வீரமணி நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது[6]: “பகவத் கீதை முழுமையான இந்து நூலாக கருதப்படுவதில்லை. இந்து மதம் என்பது பல பிரிவுகளை கொண்டது. அந்த வகையில் வைணவர்கள் தான் பகவத் கீதையை இந்து மதத்தை சார்ந்தது எனக் கூறுகின்றனர். சைவர்கள் பகவத் கீதையை ஏற்கமாட்டார்கள். அதேபோல மற்ற பிரிவுகளை சார்ந்தவர்களும் இதை ஏற்று கொள்வதில்லை. எனவே இந்து மதத்தை இந்நூல் முழுமையாக உரிமை கொண்டாட முடியாது. ஆனால் மத்திய அரசு தேசிய புனித நூலாக பகவத் கீதையை திணிக்க முயற்சிக்கிறது. இந்தியை எப்படி அதிகாரம் படைத்த மொழியாக திணிக்கின்றனரோ அதேபோல சமஸ்கிருதத்தையும் திணிக்க ஆசைப்படுகின்றனர். அது போல இதையும் நிறைவேற்ற முயற்சி செய்கின்றனர். நம் நாட்டில் பல கலாசாரங்கள், பல்வேறு மதங்கள் பல மொழிகள் இருக்கின்றன. இந்த நாட்டின் என் மதம் மட்டும்தான் ஆள வேண்டும் எனச் சொல்லக் கூடிய பாசிச முறையிலான இந்த செயல்பாட்டை இந்தியாவே எதிர்க்கிறது”, இவ்வாறு அவர் கூறினார்[7]. பேட்டியின்போது தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் எல்.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ரா. திருஞானம், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர். ஆகா, சைவர்கள் மீதுதான், வீரமணிக்கு எத்தனை பற்றுதல்! சிண்டு முடித்து விடுகிறார்கள். சோழன் குடுமி சும்மா ஆடாது என்றெல்லாம் இவர்கள் கிண்டல் செய்வார்களே, இப்பொழுது வீரமணி அதே வேலையைத்தான் செய்துள்ளார்.

© வேதபிரகாஷ்

20-09-2015

[1] திராவிடத்துவவாதிகளின் இரட்டைவேடங்கள் இனிமேலும் எடுபடாது. குடும்ப வாழ்க்கை-மேடை வாழ்க்கை என்று போலித்தனமாக வாழும் இவர்கள் இனி மற்றவர்களால் ஒதுக்கப்படுவார்கள். இருக்கும் கூட்டம் இன்னும் 50-100 ஆண்டுகள் வரை கத்திக் கொண்டிருக்கும்.

[2] 1969ல் அண்ணாதுரை தலைமையில் ஆட்சிக்கு வந்ததும், முதலில் அத்திருமணபங்களை செல்லுபடியாக்கசுயமரியாதை திருமணம் சட்ட வடிவம் (28.11.1967) மசோதாவை அறிமுகப்படுத்தினர். “சுயமரியாதை திருமணம்” கிளப்பிய அவலத்தை இந்து திருமண சட்டத்தில் (The Hindu Marriage Act, 1956) பிரிவு 7A என்றதை நுழைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்[1]. அதாவது, அப்படி தடாலடியாக செய்து வைத்த திருமணங்கள் எல்லாம் செல்லாது, ……….என்றெல்லாம் நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வந்தபோது அதிர்ந்து விட்டனர் பகுத்தறிவி ஜீவிகள்! அதாவது இந்து திருமண சட்டத்தில் தான்[2] அந்த “சுய மரியாதை” அடங்கிவிடுகிறது! அனால், இன்றும், இப்படி பொய்களை பேசியே வாழ்க்கையை நடத்துகின்றனர். இந்துமதத்தை ஆபாசமாக வர்ணித்த பகுத்தறிவு பகலவன் பாதையில் திருமணம் செய்து கொண்டவர்கள், திராவிடர்கள் “இந்துக்களாகி” தமது மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்.

https://secularsim.wordpress.com/2015/01/17/freedom-of-thought-ones-rights-cannot-violate-the-rights-of-others/

[3]  வீரமணி, உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்!, விடுதலை, 03-10-2013.

[4] https://indianhistoriography.wordpress.com/2015/06/25/pornography-like-works-written-during-mughal-period-involving-even-radha-krishna/

[5] https://indianhistoriography.wordpress.com/2015/06/26/indian-divine-symbols-figures-attacked-by-mohammedan-poets-sufis/

[6] மாலைமலர், பகவத் கீதையை புனித நூலாக சைவர்கள் ஏற்கமாட்டார்கள்: கி.வீரமணி பேட்டி, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 21, 5:01 PM IST.

[7]  http://www.maalaimalar.com/2014/12/21170111/Vegetarians-will-accept-the-Bh.html

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம் (3)!

செப்ரெம்பர் 20, 2015

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம்பெரியார் திடலில் விவாதம் (3)! 

கீதையின் மறுபக்கம் - வீரமணி

கீதையின் மறுபக்கம் – வீரமணி

வீரமணிக்கு கீதை மீது பிறந்த காதல்: வீரமணி போன்ற இந்து-விரோதத்துவம் கொண்ட நாத்திகர்களே இன்று பகவத் கீதையைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்து விட்டனர். போதாகுறைக்கு, பெரியார் பிறந்த நாளைக் கொண்டாடும் நேரத்தில், கோல்வால்கர் பற்றி எல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். சரி, கோல்வால்கருக்கும், திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி கேட்டு விவரிக்க ஆரம்பித்தது தமாஷான விசயம் தான். ஆனால், இதை முன்னமே எடுத்துக் காட்டியுள்ளார். கோல்வால்கர் திருக்குறளை பொதுநூலாக பாவித்தார், ஆனால், திராவிடத்துவவாதிகள் அதனை தமிழர் நூல், திராவிடர்களின் நூல் என்று குறுகிய நோக்கில் சுருக்கினர். குறளைப் படித்து, மற்ற இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சமஸ்கிருத இலக்கியத்துடனான நெருக்கம் தெரிந்தது[1]. இதனால், அதிலுள்ள நீதி, நேர்மை, தார்மீகக் கருத்துகள் வேத-உபநிஷ்ட நூல்களிலிருந்து பெற்றிருக்கலாம் என்று பல அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டினர்[2]. மேலும், குறள், சூத்திரங்கள் போன்று ஈரடி, ஏழு சொற்கள், சுருங்கச் சொல்லுதல் முதலிய விதிகளையும் பின்பற்றியிருப்பதை எடுத்துக் காட்டினர். இதனால், தனித்தமிழ் இயக்க தமிழ் பண்டிதர்கள் அவ்வாறில்லை என்பதனை எடுத்துக் காட்டவே திரிபு விளக்கங்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

குந்த-குந்த ஆச்சாரியாரும், வள்ளுவ நாயனாரும்

குந்த-குந்த ஆச்சாரியாரும், வள்ளுவ நாயனாரும்

திருக்குறள் மறைமுக எதிர்ப்பு தேச-விரோதமானது: இது 1960களில் ஜைனர்கள், கிருத்துவர்கள் போன்றோரை ஊக்குவித்தது. அவர்கள் குறள் தங்களது நூல் தான், வள்ளுவரும் தங்களது மதத்தவர் தான் என்று கதைகளைக் கட்டிவிட ஆரம்பித்தனர்[3]. வள்ளுவர் குந்தர்-குந்தரின் மாணவர் என்றும் அவரிடத்திலிருந்து குறளைத் திருடிச் சென்று தனது என்று அரங்கேற்றி விட்டார், இல்லை அவரே குந்த்-குந்தர் தான்[4] என்று ஜைன ஆராய்ச்சியாளர்கள் கதை கட்டினர். கிறிஸ்தவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இதுதான் சாக்கு என்று, தாமஸ் சென்னைக்கு வந்தார், வள்ளுவரை சந்தித்தார், வள்ளுவர் அவரிடத்திலிருந்து பைபிள் கற்றுக் கொண்டு, அதன் தாக்கத்தில் தான் குறளை எழுதினார் என்று பெரிய கட்ட்டுக் கதையைக் கட்டி விட்டனர். போதாகுறைக்கு அத்தகைய போலித்தனமான கள்ள ஆராய்ச்சிகளுக்கு, அவர்களால் ஏற்படுத்தப் பட்ட பல்கலை பிரிவுகள்-சேர்களால் பட்டங்களும் கொடுக்கப்பட்டன. இதற்கெல்லாம் கருணாநிதி முதல் தமிழ்த்துறையில் உள்ள ஊழியர் வரை உதவி செய்துள்ளார்கள் என்பதனை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

Bhagavatgita, sedition, Tilak

Bhagavatgita, sedition, Tilak

பகவத் கீதை எதிர்ப்பு ஆந்நியர் ஆட்சி முதல் திராவிட ஆட்சி வரை: பகவத் கீதையினை இந்துக்கள் ஆதரிப்பது அறிந்து, அதனை தூஷித்து ஒரு புத்தகத்தை எழுதினார். இதுவொன்றும் புதியதல்ல. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே, பகவத் கீதையை எதிர்த்து பிரச்சாரம் நடந்தது. தேசதுரோக அறிக்கை கமிட்டி அதனை தடை செய்யவும் முற்பட்டது. திலகருக்கும், காந்திக்கும் இடையிலேயே கீதை ஆதரிப்பு-எதிர்ப்பு விவாதம் நடந்தது. காந்தி உண்மையில் கீதையை ஆதரிப்பது போல காட்டிக் கொண்டு, எதிர்க்கவே செய்தார். எப்படி சைவ-வைணவ சர்ச்சை, சண்டை, எதிர்ப்புகள் இலக்கியங்களாக வெளிப்பட்டபோது, அவை மற்றவர்களால் சாதகமாக உபயோகித்துக் கொண்டார்களோ, அதேபோல இந்த விவரங்களை வைத்துக் கொண்டு, தன்னுடைய காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் முதலியவற்றைச் சேர்த்து இப்புத்தகத்தை வீரமணி எழுதித் தள்ளினார். போதாகுறைக்கு இதே மதத்தில் (செப்டம்பர் 2015) தான் திருப்பதியில் 9 முதல் 11 வரை “ஶ்ரீமத் பகவத் கீதை”ப் பற்றி தேசிய மாநாடு நடந்துள்ளது[5].

Balagangadhara Tilak- Gandhi and Gita

Balagangadhara Tilak- Gandhi and Gita

ருண் விஜய்யின் தமிழ்த்தொல்லை, தினமணியின் கொசுத் தொல்லை, வீரமணியின் ஓடோமாஸ் கொள்ளை: ஆகஸ்ட் 2014ல் ஆர்.எஸ்.எஸ் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றது[6]. இந்து-விரோத தளங்கள் இப்படியெல்லாம் புலம்பித் தள்ளின[7], “ருண் விஜய்யின் தமிழ்த்தொல்லையும், தினமணியின் கொசுத் தொல்லையும் நாளுக்குநாள் தாங்க முடியவில்லை. வடமாநிலங்களில் திருக்குறள் பயிற்றுவிப்பு, திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாட்டம், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று வரிசையாக இந்த ஆர்.எஸ்.எஸ். நரி வைக்கும் ஊளையில் காது கிழிகிறது! திருக்குறளைத் தூக்கிக்கொண்டு காவி துடிக்க அலையும் இந்த நரி, மத்தியப் பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் என சமஸ்கிருதத்தை திணித்துக்கொண்டே வரும் ஸ்மிருதி ராணியுடன் சேர்ந்துதிருக்குறள், தமிழுக்கு ஆதரவுபோஸ் கொடுத்தது. அடுத்த சீன், மத்திய உள்துறை ராஜ்நாத்சிங்கை சந்தித்து திருக்குறள் அறிமுகம் செய்து திருவள்ளுவர் சிலையை கைமாத்தியது. உடனே உளவுத் துறையை கையில் வைத்திருக்கும் உள்துறை அமைச்சர் பார்வையாளர் கண்களில் தெரியும்படி தமது அறையில் சிலையை வைக்குமாறு உத்திரவிட்டார். போதாதா? “பா...வின் தமிழ்க்காதல்பாரீர் என! தினமணி மாமா மூணு காலத்துக்கு படுத்துப் புரண்டு, பாரடா! எங்கள் பார்ப்பன சமர்த்தை என்று தொடையைத் தட்டுகிறார். திருவள்ளுவர் படத்துக்கே பூணூல் போட்டு அவர்எங்களவா?’ என்று ஆள்கடத்தல் செய்த தமிழக பார்ப்பனக் கும்பலையும் தாண்டி, திருவள்ளுவர் திரும்ப வரவா போகிறார் என்ற தைரியத்தில் தருண் விஜய் சீன் போடுகிறார்”. தருண் விஜய்க்கு சாபம் கொடுத்தன, வசை பாடின[8]. அவர் தமிழ் மீது காட்டும் காதல் பொய்யானது என்றும் கூறின[9].

tarun-vijay-vairamuthu-11

tarun-vijay-vairamuthu-11

வீரமணியின் கீதை காதலும், தருண் விஜயின் குறள் காதலும்: தருண் விஜய்க்கு திடீரென்று திருக்குறள் பற்று வந்து, அதனை ஆதரித்து, “திருவள்ளுவர் நாள்” என்றெல்லாம் அறிவித்தவுடன், வீரமணி உஷராகி விட்டார். வீரமணியின் கீதை மீதான காதல் அலாதியானது. ஆக, இந்த இரு காதலர்களும் மறைமுகமாகத் தாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர். வீரமணி தருணுக்கு எப்படியாவது செக் வைக்க அரும்பாடு பட்டார். இந்தியா முழுவதும் திருவள்ளுவர் நாள் என்ற மத்திய அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதே என்றும், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். வேரூன்றுவதற்கான கண்ணி வெடியாக இதனைப் பயன்படுத்தக் கூடாது என்றும் கி.வீரமணி கூறியுள்ளார்[10].

tarun-vijay-vairamuthu-21

tarun-vijay-vairamuthu-21

திருவள்ளுவர் நாள் அறிவிப்பு: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். வேரூன்ற பயன்படுத்தக் கூடாது: கி.வீரமணி: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி 29.11.2014 சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் – ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இயக்கப்படி – நடைபெற்று வரும் பா.ஜ.க. அரசின் சார்பில் திருவள்ளுவர் நாள் இந்தியா முழுவதும் மத்திய அரசால் கொண்டாடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இதற்கு வழி வகுக்கும் வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க., எம்.பி.யும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஹிந்தி ஏடான ‘பாஞ்சன்யா’வின் முன்னாள் ஆசிரியருமான தருண்விஜய் மக்களவையில் இப்படிப் பேசி வலியுறுத்தியதனால் அமைச்சர் அறிவிப்பதாகக் கூறியுள்ளார். திடீரென்று அவரே முடிவு செய்து அறிவித்திருக்க இயலாது; ஏற்கெனவே இதுபற்றி ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டிகளின் திட்டமாகத்தான் இது யோசிக்கப்பட்டு பிறகுதான் அறிவித்திருக்க முடியும். இதை வரவேற்கிறோம்; என்றாலும் ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டிலும், தமிழர்கள் மத்தியில் வேரூன்றுவதற்கு இதை ஒரு தந்திர உபாயமாகவோ, “கண்ணி வெடியாகவோ” பயன்படுத்தலாம் என்றோ நினைத்துக் கொண்டு இதை தூண்டில் முயற்சியாக கருதி இறங்கக் கூடாது. நாம் இப்படி சொல்வது ஏனோ என்று சில ‘தமிழறிஞர்கள்’கூட எண்ணக் கூடும். அவர்கள் அறியாத ஒரு தகவலை நாம் இங்கே எழுதி தெரிவிக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.

வீரமணி, ஸ்மிருதி இரானி, தருண் விஜய்

வீரமணி, ஸ்மிருதி இரானி, தருண் விஜய்

கோல்வால்கர் திருக்குறளைப் பற்றி குறிப்பிட்டது: ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் தத்துவ போதகரான கோல்வால்கர் எழுதிய ‘Bunch of Thoughts என்ற ஆங்கில நூல் ‘ஞான கங்கை’ என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. (பக்கம் 168-169). அந்நூலில் – எம் மதத்தையும் சாராத திருவள்ளுவரை – ஒரு ஹிந்துத்வாவாதிபோல் சித்தரித்து எழுதியுள்ளார். அப்பகுதி இதோ: “தற்காலத்தில் தமிழைப்பற்றி நாம் அதிகம் கேள்விப்படுகிறோம். தமிழ் என்பது தனக்கென வேறான கலாசாரமுடைய தனிப்பட்ட மொழி என்று கூறுகின்றனர். அவர்கள் வேதத்தில் நம்பிக்கை கொள்ள மறுக்கின்றனர். திருக்குறளை அவர்களது மறையாகக் கருதுகின்றனர். திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகட்கும் மேற்பட்ட ஒரு பழைமையான அறநூல்தான். திருவள்ளுவ முனிவர் அதன் ஆசிரியர் ஆவார். அவரை நாம் நமது ப்ராதஸ்மரணத்தில் நினைவு கூர்கிறோம். மிகப் புகழ் பெற்ற புரட்சிவாதியான .வே.சு. அய்யர் திருக்குறளை (ஆங்கிலத்தில்) மொழி பெயர்த்துள்ளார்). திருக்குறளில் நாம் காண்பது என்ன? நாடெங்கும் அறிமுகமான நான்குவித வாழ்க்கை முறை (சதுர்வித புருஷார்த்தம்) அதில் விஷயமாகக் கூறப்பட்டுள்ளது. மோட்சத்தைப் பற்றிய அத்தியாயம் மட்டும் முன்னால் வைக்கப்பட்டுள்ளது. அது எந்தக் கடவுளையும் அல்லது எந்த வழிபாட்டு முறையையும் பின்பற்றுமாறு கூறவில்லை. மோட்சம் என்ற உயர்ந்த விஷயத்தைப் பற்றியே கூறுகின்றது. எனவே, அது எந்த ஒரு சாரரின் நூலும் அல்ல. மகாபாரதம்கூட திருக்குறள் கூறுவது போன்ற வாழ்க்கை முறைகளையே புகழ்ந்து கூறுகின்றது. ஹிந்துக்களிடம் அல்லாது மற்ற எந்த மதத்தவரிடமும் இவ்வாறான சிறந்த வாழ்க்கை முறை நோக்கு காணப்படவில்லை. எனவே, திருக்குறள் சிறந்த ஹிந்துக் கருத்துக்களைத் தூய ஹிந்து மொழியில் எடுத்துக் கூறும் ஒரு ஹிந்து நூல் ஆகும்”, என்று கோல்வால்கர் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

20-09-2015

[1] Divine Life Society,Bhagavad Gita & Tirukkural Compendium, Divine Life Society of South Africa, 1989.

[2] M. Muthuraman, Gita and Kural, the University of Michigan, Higginbothams, 1971.

[3] http://jainology.blogspot.in/2007/11/saint-tiruvalluvar-was-jain.html

[4] Jainism is oldest organized religion in world and also it is first organized religion of Dravid culture (refer Archaeology Director in Mahal , Madurai).  Thiruvalluvar( Acharya kund kund) was a Jain saint (Naked) who contributed to Tamil Civilization, Tamil Script and Tamil culture, later who was renamed as Thiruvalluvar- You don’t have to trust our claim( you can verify this fact with Dr. Skandalingam, Director of State Archaelogy, Mahal, Madurai Tamilnadu) your narrow brain will be refreshed with fresh information.

[5] https://kvramakrishnarao.wordpress.com/2015/09/12/the-importance-of-bhagavatgita-in-prasthanatraya-the-national-seminar-held-at-tirupati-from-september-9th-to-11th-2015/

[6] உச்சநீதிமன்ற நீதிபதி  தவே அண்மையில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில்  பள்ளிகளில் முதல் வகுப்பிலேயே பகவத் கீதை மற்றும் மகாபாரதத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என கூறியுள்ள கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். -சின் கலாச்சார அமைப்பின் இயக்குனர் பி. பரமேஸ்வரன், அதனை தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

http://www.vikatan.com/article.php?page=2&module=news&mid=9&sid=0&aid=31029

[7] http://www.vinavu.com/2014/12/05/thirukural-and-tarun-vijay-political-trickery/

[8] http://www.vinavu.com/2014/11/11/vairamuthu-selling-out-to-bjp-tarun-vijay/

[9] புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014;  http://www.vinavu.com/2014/10/29/tarun-vijay-love-of-tamil-is-fake/

[10] http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=133291

நக்கீரன், திருவள்ளுவர் நாள் அறிவிப்பு: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். வேரூன்ற பயன்படுத்தக் கூடாது: கி.வீரமணி, பதிவு செய்த நாள் : 29, நவம்பர் 2014 (17:43 IST) ;மாற்றம் செய்த நாள் :29, நவம்பர் 2014 (17:43 IST).

திராவிட இயக்கம், கூடா ஒழுக்கம், அரசியல் நாகரிகம், புலம்பும் பகுத்தறிவு, ஆரியத்தை விரும்பும் திராவிடத்தின் தந்திரம் என்னவோ? (1)

பிப்ரவரி 25, 2015

திராவிட இயக்கம், கூடா ஒழுக்கம், அரசியல் நாகரிகம், புலம்பும் பகுத்தறிவு, ஆரியத்தை விரும்பும் திராவிடத்தின் தந்திரம் என்னவோ? (1)

Jaya-Karu-1960s-assembly-The Hindu photo

Jaya-Karu-1960s-assembly-The Hindu photo

வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரிய கூடா ஒழுக்கம்: திராவிட இயக்கம் தோன்றிய பிறகு தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லாமல் போய்விட்டது என்ற கசப்பான உண்மையை வேதனையோடு ஒப்புக்கொள்ள வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்[1]. “திருமண வீடுசாவு வீட்டில் கூடசந்திக்க மறுக்கும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் வடநாட்டைப் பார்க்கட்டும்![2] பிரதமர் மோடியும் – லாலுவும் – முலாயமும் கூடிக் குலவும் காட்சியைப் பார்த்த பிறகாவது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் புதிய நாகரிகத்தை வளர்க்கட்டும்” என்று தலைப்பிட்டு, விடுதலை நாளிதழின் முதல் பக்கத்தில் வீரமணி இவ்வாறு அறிக்கை விடுத்திருந்தது வேடிக்கையாக இருந்தது[3]. இது தொடர்பாக 23-02-2015 திங்கள்கிழமை அன்று அவர் வெளியிட்ட அறிக்கை[4]: “தமிழ்நாடும் தென் மாநிலங்களும் மிகவும் பண்பட்டவை நனி நாகரிகம் படைத்தவை. வடநாட்டவர்களைவிட பல துறைகளில் முன்னேறியவர்கள் என்று பெருமைபேசி மகிழுபவர்கள் என்ற நிலை அரசியல் கட்சிகளின் தவறான அணுகுமுறையால் ஒரு கட்சித் தலைவரோ, அல்லது வேறு பொறுப்பாளர்களோ, திருமணம், வரவேற்பு மற்றும் துக்க, இரங்கல் நிகழ்ச்சிகளில்கூட ஒருவரை மற்றொருவர் சந்திப்பது, குறைந்தபட்ச மரியாதையை, விசாரிப்புகளை ஒருவருக்கொருவர் இன்முகத்தோடு பரிமாறிக் கொள்ளுதல் போன்றவைகூட, – காணாமற் போனவையாக ஆகி விட்டன! இது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரிய கூடா ஒழுக்கம் ஆகும்!

இதெல்லாம் கூட திராவிட கலாச்சாரமக்கத்தானே, இன்றளவும் இருந்து வந்துள்ளது

இதெல்லாம் கூட திராவிட கலாச்சாரமக்கத்தானே, இன்றளவும் இருந்து வந்துள்ளது

தலைவர்களே, வடநாட்டைப் பாருங்கள்!: “வடநாட்டைப் பார்த்து தமிழ்நாட்டவர் கற்றுக் கொள்ளும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் எவ்வளவு கடுமையாக கட்சித் தலைவர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ பேசித் தாக்கிக் கொண்டாலும் மத்திய அரங்கம் (Central Hall Parliament) என்ற நாடாளுமன்ற அரங்கில் நுழையும்போது, தோள் மேல் கைபோட்டு, நட்புறவும் நயத்தக்க நனி நாகரிகமும் பொங்கி வழிவது போல் பேசிக் கொள்ளும் நடைமுறை வெகு சர்வ சாதாரணம் ஆனால்தமிழ்நாட்டில்….? இந்நிலையை மாற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும். வட மாநிலங்களில் அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது அரசியலை மறந்து அன்பு பாராட்டி மகிழும் நாகரிகத்தைப் பார்க்க முடிகிறது. லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்டாலும் தேர்தல் முடிந்ததும் பிரதமர் மோடியை ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் சந்தித்துப் பேசினார். இருமல், ஆஸ்துமாவில் இருந்து விடுபட கேஜரிவாலுக்கு தான் சிகிச்சை பெற்று வரும் மருத்துவரை மோடி பரிந்துரை செய்து தமது பண்பை வெளிப்படுத்தியுள்ளார்”. தொடர்கிறார் வீரமணி!

லல்லு, மோடி, mullaayam -another - நக்கீரன் போட்டோ

லல்லு, மோடி, mullaayam -another – நக்கீரன் போட்டோ

தமிழ்நாட்டில் நடப்பது என்ன?: “ஆனால், தமிழகத்தில் திருமண வீடு, துக்க வீடுகளில் கூட அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கத் தயங்கும், மறுக்கும் சூழ்நிலை உள்ளது. சட்டப்பேரவையில் நேருக்கு நேர் பார்த்து மற்றொரு கட்சியினர் வணக்கம் சொல்வதும், பதிலுக்கு புன்னகையுடன் வணக்கம் சொல்வதும் இன்று அருகிவிட்டது. விமான, ரயில் பயணங்களின்போது ஒரே பெட்டியில் பயணம் செய்யும்போது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விடக் கூடாது என்பதற்காக ஓடோடிச் சென்று அறைக் கதவைச் சாத்திக் கொள்வது, சந்திப்பைத் தவிர்ப்பதற்காக ரயில் நிற்பதற்கு முன்பே குதித்து ஓடி காரில் ஏறி கதவை அடைத்துக் கொள்வது போன்ற கசப்பான நிகழ்வுகள் நடக்கின்றன. திராவிட இயக்கத்தின் பிறப்புக்குப் பின்னரே இந்த நிலை என்பது கசப்பான உண்மையாகும். இதை நாம் வெட்கத்தோடும், வேதனையோடும் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இந்த நிலை மாற வேண்டும்”, என கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்[5]. இது அப்படியே மற்றா இணைத்தள செய்திகளிலும் காணப்படுகிறது: ஒன்.இந்தியா.தமிழ்[6], நக்கீரன்[7] முதலியவை வெளியிட்டுள்ளன. ஆனால் விடுதலையில், வீரமணி தொடர்கிறார்!

லல்லு, மோடி,  mullaayam - நக்கீரன் போட்டோ

லல்லு, மோடி, mullaayam – நக்கீரன் போட்டோ

பிறந்த நாளிலாவது வாழ்த்து கூறக் கூடாதா?: “திராவிடர் இயக்கத்தின் பிறப்புக்குப் பின் இந்நிலை என்பது கசப்பான உண்மையாகும். இதனை நாம் வெட்கத்தோடும், வேதனையோடும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். எவ்வளவு கருத்து வேறுபாடு, கொள்கை மாறுபாடு இருந்தாலும், பிறந்த நாள்களுக்கு வாழ்த்து அனுப்பியோ; நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறுவதோ, மனித நேயத்தையும், மக்கள் பண்பையும் வளர்த்து, தொண்டர்கள் மத்தியில் வெறுப்புக் குறைய, அல்லது மறைய வாய்ப்பை ஏற்படுத்தும். அந்தக் காலத்துத் தலைவர்களின் அன்பும், பண்பும் அகிலம் அறிந்தவை. (ஒரு பெரிய புத்தகமே எழுதலாம்). வடநாட்டுத் தலைவர்கள் பலரிடமும் நான் பழகியுள் ளேன்எந்தவித பந்தாவும் இல்லாமல் பழகுபவர்கள் அவர்கள். தமிழ்நாட்டில் தான் இப்படி ஒரு வெறுக்கத்தக்க நோய் எப்படியோ கடந்த 30 ஆண்டுகளாகப் பரவி விட்டது. யார்மீதும் குற்றம் சுமத்தி புண்ணைக்குடைய விரும்பவில்லை நாம்”, என்று நொந்து போய் கூறியுள்ளார் போலும்!

வீரமணியின் ஆதங்கம்-திராவிட அநாகரிகம்

வீரமணியின் ஆதங்கம்-திராவிட அநாகரிகம்

தமிழர்களை உலக அரங்கில் உயர்த்தும்[8]: “நம் நாட்டில் கட்சி, கொள்கை வேறுபாடுகளைத் தள்ளி வைத்து (தற்காலிகமாக) பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளில் தயங்காமல் சந்தித்து அன்புடனும், பண்புடனும் தலைவர்கள், பொறுப்பாளர்கள் நடத்து கொள்ளுவது தமிழர்களை உலக அரங்கில் உயர்த்திட, திராவிடத்திற்கு ஏற்றம் தேடிடச் செய்ய அணுகுமுறை மாற்றம் அவசரம் அவசியம் என்று கனிவுடன் வேண்டுகோளாக வைக்கிறோம்”, என்று வீரமணியின் அறிக்கை முடிகிறது.

தமிழர் தலைவர் விடுத்துள்ள நனி நாகரிக அறிக்கை

தமிழர் தலைவர் விடுத்துள்ள நனி நாகரிக அறிக்கை

.தி.மு.., தலைமை கழக பேச்சாளர் ஆவடிகுமார்மனதுக்குள் ஒன்றை வைத்து, மற்றவர்களுக்காக நாடகம் போடுவது போலியான கலாசாரம். எதிரி வீட்டு சுக, துக்கங்களில் பங்கேற்று விட்டு, அவரது காலைவாரி விடுவதும் சரியல்ல. அதனால், மனதுக்குள் என்ன உள்ளதோ, அதை நேர்மையாக வெளிப்படுத்துகின்றனர்; இதில் தவறில்லை. பாசாங்கு செய்யத் தேவையில்லை. எதிரி என்றால், அரசியலில் மட்டுமல்ல; அனைத்திலும் என முடிவெடுத்து தான், எதிரி வீட்டு சுக, துக்கங்களையும் தவிர்க்கின்றனர். முலாயம் வீட்டு திருமணத்துக்கு மோடி சென்றார் என்றால், ராஜ்யசபாவில், பா.ஜ.,வுக்கு மெஜாரிட்டி இல்லை. அதற்கு, தாஜா செய்ய வேண்டிய நிர்பந்தம் மோடிக்கு இருக்கிறது. அதற்காக, அவர் சென்றிருக்கக் கூடும்; மேலோட்டமாக பார்த்து, எதையும் தீர்மானிக்க முடியாது.

jayalalita caricatured-brahmanism

jayalalita caricatured-brahmanism

தி.மு.., – எம்.பி., கே.பி. ராமலிங்கம்: ‘தமிழகத்தில், அரசியல் நாகரிகம் இல்லை; இதற்கு, திராவிட இயக்கங்கள் காரணம்’ என, பொதுவாக சொல்லக் கூடாது. யார் காரணம் என்பதை, திராவிடர் கழகம் தெளிவாகச் சொல்ல வேண்டும். தி.மு.க., தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க., முன்னாள் பொதுச் செயலர் எம்.ஜி.ஆர்., ஆகியோர், அரசியல் எதிரிகளாக இருந்தாலும், அரசியல் நாகரிகத்தை கடைபிடித்தனர். மாற்றுக் கட்சியினரை சந்தித்ததற்கோ, பேசியதற்கோ, கட்சியிலிருந்து யாரும் ஓரம் கட்டப்படவில்லை. அவர்கள் இருவரும், கட்சித் தொண்டர்களுக்கு அது போன்ற  கட்டளையையும் பிறப்பிக்கவில்லை.

கொள்கை பிடிப்பு: கட்சி மற்றும் அரசியலில், ஜெயலலிதா அதிகாரத்துக்கு வந்த பின் தான், இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாற்றுக் கட்சியினரை சந்திக்கக் கூடாது என நிர்வாகிகளுக்கோ, தொண்டர்களுக்கோ, ஜெயலலிதா உத்தரவிடுகிறாரா எனத் தெரியவில்லை. கொள்கையில் பிடிப்பும், லட்சியமும் உள்ளவர்கள் எங்கு சென்றாலும், அவர்கள் கொள்கையில் தெளிவாக இருப்பர். கொள்கைப் பிடிப்பு இல்லாதவர்கள் தான், நட்பு, உறவு என, கொள்கையை இழந்து விடுவர்.

மார்க்சிஸ்ட் எம்.எல்.., பால கிருஷ்ணன்: திராவிட இயக்கம்பிறப்புக்குப் பின், அரசியல் நாகரிகம் கெட்டுவிட்டது என, திராவிடர் கழகம் வருத்தப்படுவது நியாயமே. குறிப்பாக, தி.மு.க.,விலிருந்து பிரிந்து அ.தி.மு.க., உதயமான பின்பே, இப்போக்கு தீவிரமானது. தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் அவர்களுக்குள், பரஸ்பரம் நாகரிகத்தை கடைபிடிக்காமல் இருப்பது அவர்களுக்கு மட்டுமல்ல; தமிழகத்தின் நலனையே பாதித்துள்ளது. இவர்களின் தனிப்பட்ட விரோதம், தமிழகத்தின் பொது பிரச்னைகளான, காவிரி, முல்லைப் பெரியாறு போன்றவற்றிலும் பிரதிபலிக்கிறது. பிற மாநிலங்களில், எதிர் எதிர் கட்சிகள் இருந்தாலும், மாநில நலனைக் காப்பதில் ஒருமித்து இருப்பர். ஆனால், தமிழகத்தில் அது போன்ற நிலை இல்லை. இதனால், மாநில அரசியலைத் தாண்டி, தமிழகத்தின் உரிமைகளைப் பெறுவதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினார்.

 

an incident which occurred in the Tamil Nadu assembly on March 25, 1989

an incident which occurred in the Tamil Nadu assembly on March 25, 1989

இதுகுறித்து, தமிழக அரசியல் கட்சியினர் கருத்து[9]: தினமலர், அதிமுக, திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் சார்பாக அவரவர் கருத்துகளை வெளியிட்டுள்ளது கவனிக்கத்தக்கது[10]. அ.தி.மு.க., தலைமை கழக பேச்சாளர் ஆவடிகுமார், தி.மு.க., – எம்.பி., கே.பி. ராமலிங்கம், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பால கிருஷ்ணன் முதலியோரின் கருத்துகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன[11]. ஜெயலலிதா பிறந்த நாள் அன்று இவர் இதை வெளியிட்டிருப்பது அரசியல் நோக்கம் கொண்டது என்பது தெரிந்த விசயமே. முன்பு ஜெயலலிதா பதவிக்கு வந்த போது, “ஆரிய-திராவிட யுத்தம் தொடர்கிறது!” என்று புத்தகத்தை வெளியிட்டார். ஜெயலலிதா பாப்பாத்தி என்ற வசைகளை, தூஷணங்களை தாராளமாக வெளியிட்டார். போதாகுறைக்கு சட்டசபையிலேயே ஜெயலலிதாவின் ஜாக்கெட்டைக் கிழித்து[12], புடவையை உருவ முயன்ற நாகரிகமான திராவிடர்கள் இவர்கள்[13]. கருணாநிதியோ, வழக்கம் போல துளிக்கூட நாகரிகம் இல்லாமல், சோபன் பாபுவுடன் இருந்த போட்டோக்களை “முரசொலி”யில் போட்டு மகிழ்ந்தார். 1960களில் அனந்தநாயகியைப் பற்றி பேசியதெல்லாம் இவர்கள் மறந்து விட்டார்கள் போலும்.

 

© வேதபிரகாஷ்

25-02-2015


 

[1] http://www.viduthalai.in/page1/96691-23-02-2015-1.html

[2] நக்கீரன் மட்டும் இதையே தலைப்பாகக் கொண்டு அறிக்கையை, நிறைய புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளது. “திருமண வீடுசாவு வீட்டில்கூடசந்திக்க மறுக்கும் தமிழக தலைவர்களே வடநாட்டைப் பாருங்கள்; கி.வீரமணி”, http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=138391

[3] http://www.viduthalai.in/2011-08-04-12-53-29/96688-2015-02-23-08-56-27.html

[4] தினமணி, தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லாமல் போனதற்கு திராவிட இயக்கமே காரணம்: கி. வீரமணி, By Venkatesan Sr, சென்னை; First Published : 24 February 2015 03:42 AM IST.

[5]http://www.dinamani.com/tamilnadu/2015/02/24/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/article2684159.ece

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/only-after-the-rise-dravidian-party-we-lost-political-decency-says-veeramani-221569.html

[7] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=138391

[8] http://www.viduthalai.in/page1/96708.html

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1192158

[10] தினமலர், தமிழகத்தில் அரசியல் நாகரிகம் சீரழிய யார் காரணம்?, 25-02-2015: பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2015,23:40 IST.

[11] தினமலர் (நமது சிறப்பு நிருபர்),

[12]  The famous Jayalalitha saree episode took place in the Tamil Nadu Assembly on March 25, 1989. She was then the leader of the Opposition. Jayalalithaa got furious when a minister allegedly pulled her sari on the floor of the House. I have written an essay about this incident in my Tamil Magazine “Engal Baratham” March 2003 issue. We want to bring it to the remembrance of all the readers that how Jayalalitha was targeted for nothing during 1989. During the budget session of the assembly in 1989 as an opposition leader, Jayalalitha said Karunanidhi had no moral right to be CM. All hell broke loose and she was manhandled, with some DMK members allegedly trying to pull at her Sari. Jayalalithaa told former Minister Durai Murugan and his colleague Veerapandi Arumugam jumped on the table and did this vile act. There are photographs of her with disheveled hair and tears in her eyes. That day, she must have sworn revenge, like Draupadi, resolving that she would re-enter the assembly only as chief minister. This incident is the root cause of her hatred for Karunanidhi. After she had faced humiliation in the assembly, during the next election in 1991, she told people that Karunanidhi was a Duryodhana and there was a Dutchaathanaa among the legislators who had tried to disrobe her. The electorate responded by giving her thumping majority to Jayalalithaa. The same Victory repeated to Jayalalithaa even in 2011 elections by explaining to the people the corruption regime of Karunanithi and his family and ministers like famous Raja. So at least in future Karunanidhis to remember the proverb “evil begets evil.”

http://yessveeramani.livejournal.com/84131.html

[13] JAYALALITHA loyalists have a pet theory about her hatred towards Karunanidhi and the DMK. They point to an incident which occurred in the Tamil Nadu assembly on March 25, 1989, when a DMKMLA tugged at Jayalalitha’s cape. She was quick to reap political mileage and the AIADMK drew a parallel with the disrobing of Draupadi. Karunanidhi was compared to Duryodhan. In fact, Jayalalitha kept harping on the incident in her 1991 election campaign.

 http://www.outlookindia.com/article/The-Revenge-Of-Draupadi/205451