Archive for the ‘அறிவு’ Category

பத்ரிசேஷாத்ரி, அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டது, தமிழ் இணைய கல்விக்கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப் பட்டது! பூணூலை அறுப்பேன் என்று சுப.வீரபாண்டியன் பேசிதற்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது!(2)

ஒக்ரோபர் 25, 2022

பத்ரி சேஷாத்ரி, அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டது, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப் பட்டது! பூணூலை அறுப்பேன் என்று சுப.வீரபாண்டியன் பேசிதற்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது! (2)

பிராமணர்கள் திருப்பி தாக்கமாட்டார்கள்[1]: நாராயணன் திருப்பதி பேசியது, “பிராமணர்கள் திருப்பி தாக்கமாட்டார்கள் பத்ரி சேஷாத்ரி என்ற தனிநபரை விமர்சனம் செய்ய வேண்டுமென்றால் செய்து கொள்ளட்டும், ஆனால், இது போன்று தனிநபர் தொடர்புடைய விவகாரங்களில் வேறு எந்த சமூகத்தையாவது ஒட்டுமொத்தமாக இழித்தும், பழித்தும் பேசுவதற்கு சுப.வீரபாண்டியன் போன்றகோழைகளுக்குதைரியம் உள்ளதா? பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்கள் திருப்பி தாக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் இது போன்ற வன்மம் மிகுந்த தரக்குறைவான, மலிவான சாதிய விமர்சனங்களை இந்தகோழைகள்முன்வைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது”.

வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ள சுப.வீரபாண்டியனை கைது செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடுவாரா?: நாராயணன் திருப்பதி பேசியது, “ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? பத்ரி சேஷாதிரி தவறு செய்திருந்தால், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர் மீது நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால், ஒட்டுமொத்தமாக ஒரு சாதியை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ள, மிரட்டியுள்ள சுப. வீரபாண்டியன் மீது நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்? பூணூலை அறுப்பேன் என்று பேசிய சுப.வீரபாண்டியனை, இது அனைவருக்குமான ஆட்சி என்று பெருமிதம் கொள்கிற முதலமைச்சர், அதன்படி நடந்து கொள்வாரா? நேர்மையான ஆட்சி நடக்குமா? மத துவேஷங்களை செய்பவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என சட்டசபையில் உறுதி கொடுத்த முதலமைச்சர் ஒரு குறிப்பிட்ட சாதியினரை அவதூறு செய்து, மிரட்டல் விடுத்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ள சுப.வீரபாண்டியனை கைது செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடுவாரா? நேர்மையான ஆட்சி நடத்துவதாக சொல்லிக்கொள்வதை உறுதி செய்வாரா? நியாயமாக நடந்து கொள்வாரா?,” என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது: இது குறித்து, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது[2]: “ஒருவரை அரசின் குழுவில் சேர்க்கவோ, குழுவில் இருந்து விலக்குவதற்கோ அரசுக்கு உரிமை உண்டு. ஆனால், பத்ரி சேஷாத்திரியை அரசின் இணைய கல்வி ஆலோசனை குழுவில் இருந்து நீக்கிய விதம் தவறானது.எந்த தலைவரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர் தான். தலைவர்களை நியாயமாக, கண்ணியமாக விமர்சிக்க யாருக்கும் உரிமை உண்டு. அண்ணாதுரையை பத்ரி விமர்சித்த விதம் தவறு என்றால், அதை எதிர்க்கவோ, விமர்சிக்கவோ யாருக்கும் உரிமை உண்டு. அதை தவறு என சொல்ல முடியாது. அதற்காக நாகரிக குறைவாகவோ, மிரட்டும் வகையிலோ பேசுவதை ஏற்க முடியாது. விமர்சனத்துக்காக ஒருவரை அரசு குழுவில் இருந்து வெளியேற்றினால், இப்படிப்பட்ட குழுக்களில் இருக்கும் மற்றவர்கள், எந்த தலைவர் குறித்தும் இதுவரை விமர்சித்தது இல்லையா. பத்ரி சேஷாத்ரி, அண்ணாதுரையை விமர்சித்து விட்டார் என்றதும், தி.மு..,வின் ஆதரவு இயக்க தலைவர்கள் துள்ளி குதித்து வருகின்றனர். தி.மு.., எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் இப்படிப்பட்ட அநாகரிக சூழல் உருவாவது, வாடிக்கையாகி இருக்கிறது.தி.மு.., தலைவரோ, இரண்டாம் நிலை தலைவர்கள் கூட, இப்படிப்பட்ட அநாகரிக விமர்சனங்களை வைப்பதாக தெரியவில்லை. ஆனால், தி.மு.., ஆதரவு இயக்கங்கள் என்று கூறும் இயக்கங்களின் தலைவர்கள் தான் அராஜகமாக பேசுவதும், அநாகரிகமாக நடந்து கொள்வதும் நடக்கிறது. பிராமணர்களுக்கு எதிராக முதலில் பூணுால் அறுப்பு போராட்டம் நடத்திய தி.., இயக்கம் தி.மு..,வுக்கு ஆதரவு நிலை எடுத்து செயல்படுவதாலேயே, அவர்களுக்கு இத்தனை தைரியம்.”

ஒரு ஜாதியினரை மட்டும் அவமதிப்பதும், கேவலமாக நடத்துவதும் எப்படி சமூக நீதியாகும்?:வானதி சீனிவாசன் பேசியது, “தி.மு..,வினருக்கு இரு வண்ண பட்டை எப்படி அடையாளமாக இருக்கிறதோ, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடையாளம் உள்ளது. சிலர் திருநீறு பூசுகின்றனர்; சிலர் திருமண் பூசுகின்றனர். அதைப்போல பிராமணர்கள் தங்கள் அடையாளமாக பூணுால் அணிகின்றனர். பிராமணர்களுக்கு எதிரான பிரச்னை என்றால், உடனே அவர்களின் பூணுாலை அறுப்பேன் என்பது எந்த விதத்தில் நியாயம்? அனைத்து ஜாதியினரையும், மதத்தவரையும் சமமாக மதித்து நடப்பது தானே சமூக நீதி? அதை விடுத்து, ஒரு ஜாதியினரை மட்டும் அவமதிப்பதும், கேவலமாக நடத்துவதும் எப்படி சமூக நீதியாகும்? தி.மு.., ஆட்சிக்கு வந்து விட்டாலே கூடவே ரவுடித்தனமும் வந்து விடும் என்பதற்கு சுப.வீ., போன்றவர்கள் பேச்சும் உதாரணம். இப்படி முதல்வர் ஸ்டாலின் பேசுவதில்லை என்று சொன்னாலும், இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்க, அவர் அனுமதிப்பதே தவறு தானே. அவருக்கு இதில் உடன்பாடு இல்லை என்றால், இவர்களை கட்டுப்படுத்தாது ஏன்?”

திராவிட குடும்பத்தவர் பிராமணர் உதவி பெறுவது: வானதி சீனிவாசன் பேசியது, “பூணுால் போட்டிருக்கும் ஆட்கள் வேண்டாம் என்று சொன்னால், தி.மு.., தலைவரோ, அக்கட்சியின் மற்ற தலைவர்களோ தங்களுக்கு மருத்துவம் பார்த்து கொள்ளவோ, ‘ஆடிட்டிங்பணிக்கோ, சட்ட ரீதியிலான பணிக்காகவோ, பிராமணர்களிடம் செல்வதே இல்லையா? ஏன் தி.மு.., தலைவர் வீட்டுப் பெண்கள், கோவில் கோவிலாகச் செல்லும்போது, பூணுால் அணிந்த பிராமண அர்ச்சகர்களிடம் பிரசாதம் வாங்க மறுத்து விடுகின்றனரா? தங்கள் கட்சிக்கு அரசியல் ஆலோசனை வழங்க, ஒரு பிராமணரை நியமித்து கொண்டனரேஅவரிடம் அவர் அணிந்திருக்கும் பூணுாலை கழற்றி விட்டு வந்து, எங்களிடம் பணியாற்றுங்கள் என்று நிபந்தனை போட்டுத் தான் பணியாற்ற அனுமதித்தனரா?முதல்வர் இனியும் இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பது சரியல்ல. இப்படி பேசுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்[3].

சுப.வீரபாண்டியனுக்குதாம்ப்ராஸ்கண்டனம்: ”முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி விமர்சித்தார் என்பதற்காக பூணுால் குறித்து அநாகரிகமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் கருத்து தெரிவித்த திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொது செயலர் சுப.வீரபாண்டியனுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் ‘தாம்ப்ராஸ்’ கண்டனம் தெரிவித்து உள்ளது[4]. சங்க மாநில தலைவர் என். நாராயணன் கூறி உள்ளதாவது[5]: “ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் தனிப்பட்ட முறையில் கூறிய கருத்து, ஒட்டுமொத்த பிராமண சமூகத்தின் கருத்து என எண்ணுவது, பகுத்தறிவுக்கு உகந்ததா? ஓர் இனத்திற்கு எதிராக வன்முறையை துாண்டுவதாக அமைந்துள்ள சுப.வீரபாண்டியனின் செயல்பாடு நடுநிலையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த, 1967, தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ராஜாஜி, ‘பூணுாலை கையில் பிடித்து கொண்டு தி.மு..,விற்கு ஓட்டளியுங்கள்என்று பாடுபட்டு, தி.மு.., முதன் முதலில் ஆட்சியில் அமருவதற்கு பூணுால் வெளியே வந்தததை மறுக்க முடியுமா?

திமுகவும், பிராமணர்களும்: நாராயணன் கூறியது “கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பிரஷாந்த் கிஷோர் பாண்டே என்ற பூணுால் அணிந்துள்ள பிரமாணர், தி.மு..,விற்கு வியூகம் அமைத்து கொடுத்து அக்கட்சியை வெற்றி பெற செய்த போதும், பூணுால் வெளியே வந்தததை மறக்கத் தான் முடியுமா? இந்த உண்மைகள் எல்லாம் தி.மு..,வினருக்கு நன்றாகவே தெரியும். ஆனால், ஆட்சியில் உள்ள தி.மு..,வை காக்காய் பிடித்து இயக்கம் நடத்துவோருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. பூணுால் தொன்று தொட்டு வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. தேவைப்படும் தருணங்களில் எல்லாம் தொடர்ந்து வெளிவரும். பூணுால் அறுப்பு மற்றும் இனப்படுகொலை போன்ற பிரசாரங்களை புறம்தள்ளி, தமிழக மக்களுக்கு தன் கடமைகளையும், சேவைகளையும் தொடர்ந்து பெருந்தன்மையாக செய்து வரும் பிராமண சமூகம் குறித்து தமிழக மக்கள் நன்கு அறிவர். சுப.வீரபாண்டியனின் அநாகரிக மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்பாட்டை சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. அவர் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் அமைத்துள்ள குழுக்களில் இருந்து அவரை முதல்வர் கத்தரித்து விட வேண்டும்,” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

23-10-2022.


[1]  இந்த வாதமே தேவையற்றது, இதுவரை பிராமணர்கள் தொடர்ந்து எல்லாமுறைகளிலும் தாக்கப் பட்டு வந்துள்ளனர், ஆனால், அரசியல் ரீதியில் யாரும், ஒன்றும் செய்யவில்லை, செய்து விட முடியவில்லை. அதனால் தான் அவர்கள் ஒதுங்கி போய், தங்களது வேலைகளை செய்து கொன்டிருக்கிறார்கள்.

[2] தினமலர், தி.மு.., ஆதரவு இயக்கங்களின் அநாகரிக, அராஜக அரசியல்: வானதி கடும் கண்டனம், Updated : அக் 23, 2022  10:36 |  Added : அக் 23, 2022  10:31

[3] https://www.dinamalar.com/news_detail.asp?id=3152818

[4] தினமலர், சுப.வீரபாண்டியனுக்குதாம்ப்ராஸ்கண்டனம், Added : அக் 24, 2022  06:10

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=3153332

ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், குங்குமத்தை அழித்ததும், இப்பொழுது சனியைப் பற்றி பேசும் ஸ்டாலினும், வாய்ச்சொல் கேட்டு அஞ்சும் கனிமொழியும்! (3)

ஜனவரி 16, 2018

ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், குங்குமத்தை அழித்ததும், இப்பொழுது சனியைப் பற்றி பேசும் ஸ்டாலினும், வாய்ச்சொல் கேட்டு அஞ்சும் கனிமொழியும்! (3)

Kanimozhi confession -13-01-2018-2

10 ஆண்டுகளுக்கு முன்பு (2008) பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்றுக் கூறியதை பொறுத்து ரௌத்திரம் பழகாததன் விளைவை தான் தற்போது அனுபவிப்பது (2018): ஆரூர் புதியவனின் “சொற்களால் ஒரு சுதந்திரப் போர்” நூல் வெளியீட்டு விழா சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற கனிமொழி எம்.பி நூலை வெளியிட்டதுடன், சிறப்புரை நிகழ்த்தினார். ஜி.எஸ்.டி., முத்தலாக் என எல்லா திசைகளிலும் மக்களை ஒடுக்கும், அச்சுறுத்தும் நிகழ்வுகள் நடைபெறுவதாக குறிப்பிட்ட கனிமொழி, இவைகள் குறித்து பேசாததன் விளைவாக நமது மௌனமே நம்மை அழித்துவிடும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழன் ரௌத்திரம் பழகுவதை நிறுத்திக் கொண்டதால் தான் இந்த நிலையில் தமிழன் உள்ளதாகக் கூறிய கனிமொழி, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்றுக் கூறியதை நாம் பொறுத்துக் கொண்டு ரௌத்திரம் பழகாததன் விளைவை தான் தற்போது அனுபவித்து வருவதாக அதே நூல் வெளியீட்டு விழாவில் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டதை நினைவுக்கூர்ந்து அது சரியான கருத்து என்றார். சுயமரியாதையை இழந்துவிட்டு ஏதுமில்லை என்றுக் கூறிய கனிமொழி, நம் வாழ்க்கையில் வெள்ளை என்ற ஒளி உருவாக வேண்டும் எனில் நாம் கருப்பில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்றும், பெரியார் என்ற கருப்புச்சட்டை இல்லாமல் விடியல் இல்லை என்று குறிப்பிட்டார்.

Kanimozhi confession -13-01-2018-1

ஆண்டாள் எந்த சாதியில் பிறந்திருந்தால் என்ன?: ஜாதி என்ற சொல்லையே அழிக்க வேண்டும், ஜாதியே இல்லாத நிலையை உருவாக்குவதே திராவிட அரசியலின் அடிநாதம் என்றுக் கூறிய கனிமொழி, ஜாதியைக் கொண்டு ஒருவன் ஒருவரை ஒடுக்கினால் அதையே ஆயுதமாக தூக்க வேண்டியது அவசியமாகிறது என்றும் குறிப்பிட்டார். நாம் தூக்க வேண்டிய ஆயுதம் எதுவென தீர்மானிப்பது எதிரியே என்றும் கனிமொழி தெரிவித்தார். ஜாதி இல்லை என்று எல்லோரும் சொல்கிறோம், எந்த ஜாதியில் பிறந்தவரும் என்னை வந்து சேரலாம் என்று கண்ணபிரான் கூறுவதாக கீதை சொல்கிறது எனில், ஆண்டாள் எந்த சாதியில் பிறந்திருந்தால் என்ன? ஆண்டாள் பிறப்பால் தலித்தாக இருந்திருக்கலாம், எந்த சாதியாகவும் இருந்திருக்கலாம் எதுவாய் இருந்தால் என்ன? அதில் என்ன பிரச்சனை எனவும் கனிமொழி குறிப்பிட்டார். இப்படிப்பட்ட விவாதங்களை நிகழ்த்தவில்லை எனில், பயந்திருப்போம் எனில், நிச்சயமாக தமிழினம் சுயமரியாதை அற்ற இனமாக, அடையாளம் அற்ற இனமாக, எதையெல்லாம் போராடி சாதித்தோமோ அதையெல்லாம் இழந்துவிடும் இனமாக மாறிவிடும் சூழல் நிலவுவதாக கனிமொழி தெரிவித்தார்.

Kanimozhi confession -13-01-2018-3

கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி: கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி, உடல்நலம் சரியில்லாதபோது உதவியாளர் வைத்துவிடும் விபூதியைக் கூட அழித்துவிடுபவர் கருணாநிதி என்று தெரிவித்தார். தனது தாயார் கோவிலுக்குச் செல்வது குறித்து சிலர் கேட்பதாகவும், தனது தாயார் கோவிலுக்கு செல்வதற்கான உரிமைக்காகவும் தான் போராடுவதாக தெரிவித்தார்[1]. நிகழ்வின் போது தனது வீட்டில் நடைபெற்ற சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டு கனிமொழி பேசினார். “இப்போதும் இருவரும் (கருணாநிதி, கனிமொழி) கடவுளை மறுப்பது ஏன்?” என தனது தாயார் கேட்டதாகவும், “தலைவர் (கருணாநிதி) தற்போது (கடவுள் விடயத்தில்) தனது கருத்தை சிறிது மாற்றியிருப்பார்” என்று தாயார் குறிப்பிட்டதாகவும், இது தொடர்பாக கருணாநிதியிடம் “கடவுள் இருக்கிறாரா?” என கேட்டபோது, வாய் பேசமுடியாத நிலையில், “இல்லை” என கருணாநிதி தலையசைத்ததாகவும் கனிமொழி குறிப்பிட்டார்[2]. தனது வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த கனிமொழி, கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்று குறிப்பிட்டார்[3]. மேலும், எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்[4].

 

15-01-2018 -Arur Pudhiyavan, book release.215-01-2018 கனிமொழி பேச்சு: ஆரூர் புதியவனின்[5]  புத்தக வெளியீட்டின் போது, இவ்வாறு கனிமொழி பேசியது பல உண்மைகளை எடுத்துக் காட்டுகிறது. ராம கோபாலன், “இவர்கள் எல்லோருமே, தங்களது பெண்டாட்டிகளை வைத்து சாமி கும்பிடுகின்ற கூட்டம்”, என்று பேசியதுண்டு. அதை கனிமொழி இப்பொழுது ஒப்புக் கொண்டுள்ளார் என்றாகிறது. அம்மாவின் “சாமி கும்பிடுகின்ற உரிமைக்கு”. இவர் என்ன போராடுவது? அப்பொழுது அவ்வுரிமையை யார் பறித்தது என்ற கேள்வி எழுகின்றது. நாத்திக துணைவன் அவ்வாறு தடுத்துக் கொண்டிருந்தால், அது அவனது ஆணாதிக்கத்தைத் தான் எடுத்துக் காட்டுகிறது. 93 வயதாகியும் துணைவியை ஆட்டிப் படைக்கிறார் என்றால், அதை மகள் எடுத்துக் கஆட்டவேண்டும். மாறாக அவரது உரிமைக்குப் போராடுகிறேன் என்றால், தந்தையை எதிர்த்தாப் போராடப் போகிறார்?

15-01-2018 -Arur Pudhiyavan, book release

கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டது: “கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி, உடல்நலம் சரியில்லாதபோது உதவியாளர் வைத்துவிடும் விபூதியைக் கூட அழித்துவிடுபவர் கருணாநிதி”, என்ற போதும் அவரது மனம், மனசாட்சி உறுத்துவதை அறியலாம்.  உதவியாளர் விபூதியை வைப்பதற்கு கருணாநிதி ஏன் அனுமதிக்க வேண்டும், பிறகு ஏன் அழிக்க வேண்டும்? அப்படியென்றால், வைத்தால் ஏதோ பலன் கிடைக்கும் அன்ற ஆசை, நப்பாசை உள்ளுக்குள் இருக்கிறது என்றாகிறது. முதல் நாத்திகப் பழமான, கனிக்கு அத்தகைய நம்பிக்கையே இருக்கக் கூடாது ஆயிற்றே? யாரோ சொன்னார்கள் என்றால் பலித்து விடுமா என்ன? அதென்ன சாபமா, செய்வினையா, திருஷ்டியா, ….அதையெல்லாம் நம்ப வேண்டிய அவசியமே இல்லையே? பிறகு, அப்படி நம்பி வருத்தப் படுவது எடைக் காட்டுகிறது? வைத்த விபூதியையேத் துடைத்துப் போடும் அளவிற்கு நாத்திகம்-பகுத்தறிவு ஊறியிருக்கும் போது, இதெல்லாம் ஒரு விசயமா என்ன?

15-01-2018 - Kanimozhi on atheism-regrets about the comments on karu

கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும்: “கடவுள் விடயத்தில் தனது கருத்தை சிறிது மாற்றியிருப்பார்” என்று தாயார் குறிப்பிட்டதாகவும், இது தொடர்பாக கருணாநிதியிடம் “கடவுள் இருக்கிறாரா?” என கேட்டபோது, வாய் பேசமுடியாத நிலையில், “இல்லை” என கருணாநிதி தலையசைத்ததாகவும் கனிமொழி குறிப்பிட்டார்[6]. தனது வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த கனிமொழி, கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்று கனிமொழி குறிப்பிட்டார்[7]. அதாவது ராஜாத்தி அம்மாள்  கோவில்-கோவிலாக சென்று, கும்பிட்டு, அர்ச்சனை செய்து, பிரசாதம் வாங்கி வருவார், புருடன் சாப்பிடுவான் என்று, ஆனால் சாப்பிட்டப் பட்டதா-இல்லையா என்பது ரகசியம். பிறகு, சாய் பாபா வந்தபோது ஏன் காலில் விழுந்து கும்பிட வேண்டும்? எப்படியோ கனிமொழியின் மனம், மனசாட்சி உறுத்த ஆரம்பித்து விட்டது. அதனால், இந்த அளவுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியதாக உள்ளது போலும்.

© வேதபிரகாஷ்

16-01-2018

15-01-2018 - Kanimozhi on atheism

[1] நியூஸ்..7.செய்தி, எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது!” : கனிமொழி, January 15, 2018. Last Modified திங்கள், 15 ஜனவரி 2018 (23:00 IST).

[2] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/15/1/2018/kanimozhi-mp-karunanidhi-athist-philosaphy

[3] தமிழ்.வெப்.துனியா, என்ன ஆனாலும் திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது: கனிமொழி, January 15, 2018.

[4] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/we-don-t-stop-atheism-speech-says-kanimozhi-118011500020_1.html

[5] பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி, சென்னை மேடவாக்கம் காயிதேமில்லத் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர், தமுமுக வின் மாநிலச் செயலாளர், மக்கள் உரிமை வார இதழின் இணை ஆசிரியர்.

[6] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/15/1/2018/kanimozhi-mp-karunanidhi-athist-philosaphy

[7] தமிழ்.வெப்.துனியா, என்ன ஆனாலும் திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது: கனிமொழி, January 15, 2018.

 

ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், தளபதி கோபத்துடன் பின் வாங்கியதும், மாட்டுக்கறிக்கு ஆதரித்ததும், குங்குமத்தை அழித்ததும் தமிழ்நாட்டவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் (1)

ஜனவரி 16, 2018

ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், தளபதி கோபத்துடன் பின் வாங்கியதும், மாட்டுக்கறிக்கு ஆதரித்ததும், குங்குமத்தை அழித்ததும் தமிழ்நாட்டவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் (1)

Tamilar vizha- DK-2018 pongal

பொங்கல் பற்றி திராவிட நாத்திகர்களின் குழப்பமான நிலைப்பாடு: 1940களிலிருந்து ஈவேராவின் “ஆரிய-திராவிட” திரிபுவாதங்களால், பொங்கல் பண்டிகைக்கும் மாற்று விளக்கம் கொடுக்கப் பட்டு, திராவிடத்துவவாதிகள் பொங்கல் கொண்டாட்டங்களை எதிர்த்து வந்தது தெரிந்த விசயம். பிராமணர் அல்லாத உயர்ஜாதி இந்துக்கள் ஆதிக்கம் பெறுவதற்காக, சைவமும் திரிபுவாதங்களுக்கு உட்படுத்தப் பட்டு, “இந்து-விரோத” ரீதியில் எடுத்துச் செல்லப்பட்டது[1]. அந்நிலையில், திமுக ஆட்சியைப் பிடித்ததும், அரசு ஆதிக்கத்துடன், தமிழ கலாச்சாரம், நாகரிகம், பண்பாட்டு முதலிய காரணிகளை சிதைக்க “இந்து அறநிலையத் துறை” உபயோகப் படுத்தப் பட்டது. அண்ணாதுரை பொங்கல் பண்டிகையை எதிர்க்கவில்லை, அதனை “புனித பொங்கல்” என்றார்[2]. கருணாநிதி ஆரம்பத்தில் எதிர்த்தாலும், பிறகு வியாபார ரீதியில் “சமத்துவ பொங்கல்” ஆக்கினார்[3]. “சங்க இலக்கிய சரித்திர ஆதாரங்களுக்கு” முரண்பட்ட, விரோத கருத்துகளைப் புகுத்தி கெடுக்கப்பட்டது தான் “தமிழர் (பொங்கல்) விழா”. இருப்பினும் பெரும்பான்மையான மக்கள் பாரம்பரிய முறையில் கொண்டாடி வருவதால், பேச்சுடன் வைத்துக் கொண்டு, மற்ற சின்னங்களை அப்படியே திராவிடத்துவத்தில் அடக்கிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஏனெனில், அதில் முக்கியமாக இருப்பது கோடிக் கணக்கான வியாபாரம், லாபங்கள்!

Pongal - chennai sangamam, corruption-crores spent-3

சென்னை சங்கமும், ஊழல் பொங்கல் கொண்டாட்டங்களும்: “சென்னை சங்கமம்,” கிறிஸ்தவ பாதிரி ஜகத் காஸ்பரின் “தமிழ் மையம்” மற்றும் தமிழக அரசு பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை சேர்ந்து, கனிமொழி நடத்த ஆரம்பித்தார். இலக்கிய ரீதியிலும் தேசவிரோத கருத்துகளை பரப்பினர். ஸ்பெ‌க்‌ட்ர‌ம் ஊழ‌லி‌ல் தொட‌ர்புடைய ‌‌கி‌ரீ‌ன் ஹவு‌ஸ் ‌பிரமோ‌ட்ட‌ர்‌ஸிட‌மிரு‌ந்து த‌மி‌ழ் மைய‌த்‌தி‌ற்கு பெ‌ரிய‌ ‌நி‌தி வழ‌ங்க‌ப்ப‌ட்டது கு‌றி‌த்து‌ம், சி.‌பி.ஐ. ‌விசாரணை நடந்தது. தமிழக அரசின் ஆதரவுடன் 2007ல் தொடங்கி, இதன் நான்காவது நிகழ்வு ஜனவரி 10 முதல் 16. 2010 வரை நடைபெற்று, பிறகு கோடிக்ககணக்கானா ஊழல் புகாரினால் முடங்கியது[4]. இவ்வாறு சித்தாந்தம் மற்றும் பணம் சம்பாதிக்கும் பின்னணியில் தான், திராவிட நாத்திக அரசியல்வாதிகளின் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் இருந்தது. ரேசன் கார்ட் உள்ளவர்களுக்கு “இனாம்” கொடுக்கும் முறையும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆக, 2018ல் கனிமொழி இந்துமதத்தை நாத்திக மாநாட்டில் கேவலப் படுத்திய நிலையில், சகோதரர் ஸ்டாலின், இவ்வாறு பொங்கல் கொண்டாடுவதை கவனிக்கலாம்.

Pongal - chennai sangamam, corruption-crores spent-2

பொங்கல் விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலின்: திமுக சார்பில் சென்னை அயனாவரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. வீதிகள் தோறும் தோரணம் கட்டியும், மேடைகள் அமைத்தும் நாட்டுப்புற கலைகள் நிகழ்த்தப்பட்டதை, அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து துறையூரில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய ஸ்டாலின், தமிழகம் 20 ஆண்டுகளுக்கு பின்னால் போய்க்கொண்டிருப்பதாக கூறினார்[5]. திமுக ஆட்சிக்கு வந்தால் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை கொளத்தூரில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை தொடக்கி வைத்த ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளையும் பொங்கல் பொருட்களையும் வழங்கினார். தை முதல் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது. திமுக ஆட்சி காலத்தில் தை முதல்நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்றும் கூறினார். தை பிறக்கும் காலத்தில் நல்ல விடிவுகாலம் பிறக்கப்போகிறது என குறிப்பிட்ட ஸ்டாலின், அரசியல் ரீதியாக நாட்டைப்பிடித்துக் கொண்டிருக்கும் சனி இன்றோடு ஒழிய வேண்டும் என்றும் கூறினார்[6]. ஆண்டாள் பற்றிய கருத்துக்கு வைரமுத்து மன்னிப்பு கேட்ட பின்னரும் அதனை பூதாகரமாக்கி வளரவிடுவது நியாயமல்ல என்றும் கூறினார்[7]. கருணாநிதி, அறிஞர் அண்ணா பற்றி எச். ராஜா எழுதி பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறார். அவரது கருத்துக்கு நான் பதில் கூற விரும்பவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்[8].

Pongal - chennai sangamam, corruption-crores spent

ஸ்டாலின் முழு பேச்சு: நான் முதல்வராக வருகிறேனோ, இல்லையோ.. உங்களைப் பொறுத்தவரையில், உங்களுடைய காவலனாக, சிறந்த சேவகனாக என்றைக்கும் இருப்பேன் என உறுதியுடன் சொல்ல விரும்புகிறேன் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாக்களில் பங்கேற்றார்.  அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், ஒவ்வொரு ஆண்டும் நமது கொளத்தூர் தொகுதியில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாக்களை நாம் தொடர்ந்து கொண்டாடி, அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும், பொங்கல் திருநாள் வாழ்த்துகளையும் தெரிவிக்கும் வாய்ப்பு உங்களில் ஒருவனாக இருக்கின்ற எனக்கு கிடைத்து வருகிறது. கொளத்தூர் தொகுதியை சேர்ந்த உங்களோடு நான் எப்போதும் இருப்பதால், இந்த நேரத்தில் உங்களிடம் நான் அதிக நேரம் பேச வேண்டியதில்லை.

May 2017, beef support Stalin meeting-opposing centre

காரணம், இது எனது தொகுதி என்று சொல்வதை விட, என்னுடைய இல்லம், வீடு என்று சொல்லக்கூடிய அளவுக்கு, என்னை நீங்கள் தேர்ந்தெடுத்து இருக்கின்றீர்கள் என்று சொல்வதை விட, என்னை உங்களோடு இணைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று சொல்லும் நிலை இருக்கின்றது. எனவே, இந்த நிகழ்ச்சியில் ஒரு குடும்ப உணர்வோடு, பாசத்துடன் பங்கேற்று இருக்கிறீர்கள். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், உங்களுக்கு வாழ்த்து சொல்ல நான் வந்திருக்கிறேன் என்பதைவிட, உங்களிடம் நான் வாழ்த்துபெற வந்திருக்கிறேன் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. காரணம், இந்தத் தொகுதியில் என்னை கடந்த முறை பெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்குகள் அளித்து, இரண்டாவது முறையாக வெற்றி பெற வைத்து இருக்கின்றீர்கள். இங்கு ஜவகர் அவர்கள் பேசியபோது, முதலமைச்சராக வரப்போகிறார் என்று எண்ணி எனக்கு வாக்களித்தீர்கள் என்றார்[9]. நான் அவருக்கும், உங்களுக்கும் சொல்ல விரும்புவது, நான் முதலமைச்சராக வருகிறேனோ, இல்லையோ ஆனால் இந்தத் தொகுதியைப் பொறுத்தவரையில், நான் என்றைக்கும் உங்களுடைய முதல் குடிமகனாக, உங்களுடைய முதல் காவலனாக, இந்தத் தொகுதிக்குப் பணியாற்றும் சிறந்த சேவகனாக நான் என்றைக்கும் இருப்பேன் என உறுதியுடன் சொல்ல விரும்புகிறேன்[10].

© வேதபிரகாஷ்

16-01-2018

Pongal - chennai sangamam, corruption

[1] மறைமலைகள் போறோரே இதற்கு காரணமாக இருந்தார்கள், பிறகு புரிந்து கொண்ட நிலையில் எல்லை மீறி போய் விட்டது.

[2]புனிதமான பொங்கல் நாள்என்று பெருமையாக பேசினார்நாத்திகத்தில்புனிதம்எப்படி வந்தது என்றுஅறிஞர்விளக்கவில்லைhttp://www.annavinpadaippugal.info/sorpozhivugal/punithamana_pongal.htm

[3] திகவின் வீரமணி “விடுதலை,” கருணாநிதியின் “முரசொலி,” நாத்திக-திராவிட சித்தாந்திகள் அத்தகைய கருத்துகளை பிரச்சாரம் செய்து, இளைஞர்களை ஏமாற்றி வந்தனர்.

[4]  The searches were conducted at Tamil Maiyam, an NGO founded by Jegath Gasper Raj, in Mylapore. Tamil Nadu Chief Minister M. Karunanidhi’s daughter Kanimozhi, a DMK Member of Parliament, is a trustee of Tamil Maiyam, the key organisation behind Chennai Sangamam, a high-profile cultural event held since 2007.

http://www.thehindu.com/todays-paper/tp-national/CBI-searches-target-Rajas-associates/article15595207.ece

The CBI recorded the statement of an employee of Green House Promoters Pvt Ltd whose Managing Director Batcha had fired over 40 employees on the recommendation of Balwa. Batcha, who was interrogated by the CBI, was found dead under mysterious circumstances in Chennai in March 2016.  ….one company of DB Group, Eterna Developers Pvt Ltd had some business transactions with Green House Promoters Pvt Ltd. It (Eterna Developers) transferred around Rs 1.25 crore to Green House Promoters and after some time, this amount was paid back by Green House Promoters to Eterna Developers…..

http://www.thehindu.com/news/national/Green-House-Promoters-and-DB-Group-closely-linked-CBI/article13874013.ece

[5] நியூஸ்.7.செய்தி, “அரசியல் ரீதியில் நாட்டைப் பிடித்திருக்கும் சனி இன்றோடு ஒழிய வேண்டும்” : ஸ்டாலின், January 13, 2018.

http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/13/1/2018/mk-stalin-allegation-against-tamilnadu-government

[6] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/13/1/2018/mk-stalin-allegation-against-tamilnadu-government

[7] தமிழ்.ஒன்.இந்தியா, தை பிறந்தால் வழி பிறக்கும்தமிழகத்தை பிடித்த சனி ஒழியும்ஸ்டாலின், Posted By: Mayura Akilan, Published: Saturday, January 13, 2018, 14:23 [IST]

[8] https://tamil.oneindia.com/news/tamilnadu/new-government-on-thai-month-says-stalin-308363.html

[9] தினமணி, நான் முதல்வராக வருகிறேனோ, இல்லையோ..உங்கள் சேவகன் தான்: மு..ஸ்டாலின், Published on : 13th January 2018 04:23 PM .

[10]http://www.dinamani.com/tamilnadu/2018/jan/13/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2844287.html

ஆரிய-திராவிட போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது – வீரமணியின் புலம்பல் – ஜெயலலிதாவுக்கு முன்பும்-பின்னும் (3)

ஜனவரி 15, 2017

ஆரியதிராவிட போராட்டம் நடந்து கொண்டிருக்கிறதுவீரமணியின் புலம்பல்ஜெயலலிதாவுக்கு முன்பும்பின்னும் (3)

Jaya blessing prostratedதிராவிடத்துவவாதிகளின் முரண்பாடு: திராவிட அரசியல்வாதிகள், சித்தாந்திகள், பேச்சாளிகள், எழுத்தாளர்கள் என்றெல்லாம் உள்ளவர்களுக்கு, உறுதியான கொள்கையோ, சித்தாந்தத்தில் பிடிப்போ, பேச்சில் ஸ்திரமோ இல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். “சுயமரியாதை” என்றெல்லாம், பீழ்த்திக் கொண்டாலும், மரியாதை இல்லாமல், வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் நடந்து வந்துள்ளார்கள். ஒருவரையொருவர் வசைப்பாடிக் கொண்டு, கட்டித் தழுவி வேடமிட்டு நடித்துள்ளார்கள். சினிமாமாவும், அரசியலும் ஒன்றாக வைத்து வியாபாரம் செய்து பிழைத்த கூத்தாடிகளுக்கு அதெல்லாம் இல்லை என்பதால், முரண்பாட்டைப் பற்றியும் கவலைப் படவில்லை. பிரமாணரான ஜெயலலிதாவின் நிலை திராவிட அரசியலில் அப்படித்தான் இருந்தது. திராவிட அரசியல்வாதிகள் அவரை நன்றாகப் பயன்படுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதிலும், முதலமைச்சாரக் இருந்த காலத்தில், அவரை வசைப்பாடியவர்கள் எல்லோரும் அவரது கால்களில் வந்து விழுந்தார்கள். வீரமணியும் விலக்கல்ல.

jayalalita-aasaultedபாப்பாத்தி-ஜெயலலிதாவை வசைவு பாடிய திராவிடர்கள், புகழ்வது-போற்றுவது: ஜெயலலிதாவை நேரிலும், மறைமுகமாகவும், ஊடகங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், கொச்சையாக, கேவலமாக, பெண் என்று கூட பார்க்காமல் விமர்சித்துள்ளார்கள். வயது முதிர்ந்த நிலையில் இருந்த மூப்பனார் முதல், இருக்கும் கருணாநிதி வரை அவ்வாறுதான் பேசியுள்ளனர். அது, வெறும் “ஆணாதிக்கம்” என்ற முறையில் இல்லை, மிக அருவருப்பான திராவிட பாரம்பரியத்தில் ஊறிய நிலையில் வெளிப்பட்ட வார்த்தைகள், வசைவுகள் மற்றும் தரமற்ற விமர்சனங்கள். “பாப்பாத்தி” என்று தாராளமாக பேசி, எழுதி வந்துள்ளதை, அவர்களது அங்கீகாரத்தில், அவர்களே ஆசிரியர்கள் என்று வெளிவரும் “விடுதலை”, “முரசொலி” முதலியவற்றில் தாராளமாகப் பதிவாகியுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் தாராளமாக பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இவ்விசயத்தில் வீரமணியும் சளைத்தவர் அல்ல. இருப்பினும், திகவிற்கு ரூ. ஐந்து லட்சம் நிதி வாங்கியபோதும், இடவொதிக்கீடு விசயத்திலும், “சமூகநீதி காத்த வீராங்கனை” என்று பாராட்டி தப்பித்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

deepa-posing-as-jayaதீபாவை ஆதரிப்பது-எதிர்ப்பது “ஆரிய-திராவிட போராட்டமா?: இப்பொழுது, தீபா என்ற ஐய்யங்கார் பாப்பாத்தியை தூக்கிப் பிடித்து, அவரை தலைவராக்கி விட்டால், மறுபடியும், திராவிடர்கள் பாப்பாத்திக்கு அடிமையாக நேரிடும் என்ற நோக்கில், பழைபடி “நடப்பது ஆரியர் -திராவிடர் போராட்டமே!” என்று ஆரம்பித்துள்ளார். முன்பு ஜெயலைதா, அதிமுகவின் தலைமை ஏற்றபோதும், முதலமைச்சர் ஆனபோதும், “ஆரிய-திராவிட போராட்டம் ஆரம்பித்து விட்டது” என்று குறும்புத்தகம் எல்லாம் வெளியிட்டார், “விடுதலை”யில் எழுதினார். இன்றும், அதே பல்லவியைப் பாட ஆரம்பித்துள்ளார். போதாகுறைக்கு, இன்று பிஜேபி தமிழகத்தில் பேசப்பட்டு வருகிறது. மத்தியிலும் பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ளதால், திராவிட கட்சிகளின் தாக்கம் குறைந்து விடுமோ, திராவிடம் மறைந்து விடுமோ என்ற அச்சம் வந்து விட்டது. அதனால், மறுபடியும், பார்ப்பனீய எதிர்ப்பு, வசைவு என்று ஆரம்பித்து விட்டார் எனலாம்.

aryan-dravidian-war-started-about-deepa-veeramaniதி இந்துவுக்குதிக வீரமணியின் பேட்டி (13-01-2017)[1]: சென்னை, ஜன.13, 2017 அன்று, நாட்டில் நடப்பது ஆரியர் – திராவிடர் போராட்டமே என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. இந்து (தமிழ்) (13.1.2017) ஏட்டுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு, என்று “விடுதலை”யில் பெருமையாக வெளியிட்டுக் கொண்டார்.” சசிகலாவை வீழ்த்துவதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை பாஜக தூண்டி விடுகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி, பின்வருமாறு[2]. வழக்கம்போல, இடது பக்கத்தில் வீரமணியில் பதில் மற்றும் வலது பக்கத்தில் என்னுடைய விளக்கம், விமர்சனம் சேர்க்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.

aryan-dravidian-war-started-about-deepa-vs-sasikalaஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பது ஏன்?: என்ன காரணத்துக்காக சசிகலா எதிர்க்கப்படுகிறாரோ, அதற்காகவே அவரை திராவிடர் கழகம் ஆதரிக்கிறது. எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் கடவுள் நம்பிக்கை இருந்தது.

ஆனாலும், திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக அவர்கள் செயல்பட்டதில்லை. இந்த இருவரின் ஆட்சியில்தான் 31 சதவீத இட ஒதுக்கீடு 68 சதவீதமாக உயர்ந்தது. அவர்கள் வழியில் அதிமுகவை வழிநடத்த பார்ப்பனர் அல்லாத பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தைச் சேர்ந்த சசிகலாவால் முடியும் என நம்புகிறோம். “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கு ஆதரவு” என்பதை கேட்டவரும், பதில் சொன்னவரும் எப்படி புரிந்து கொண்டாரோ தெரியவில்லை. ஆனால், திக உயர்ஜாதி ஆதிக்கத்தை ஆதரிக்கிறது என்பது தெரிகிறது. அதுதான், பெரியாரின் கொள்கையாகவும் இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி கவலைப் படவில்லை.

i-am-the-sucessor-of-jayalalita-deepaபிராமணர் அல்லாதவர் என்பதுதான் உங்களது அளவுகோலா?[3]: பார்ப்பனர் அல்லாதவர் என்பதால் மட்டும் சசிகலாவை ஆதரிக்கவில்லை.

ஜெயலலிதாவின் நிழலாக அவரது வாழ்விலும், தாழ்விலும் 33 ஆண்டுகள் உற்ற துணையாக இருந்தவர். ‘இந்தியாவில் என்றுமே அரசியல் போராட்டங்கள் நடைபெற்றதே இல்லை. நடப்பவை அனைத்தும் ஆரிய – திராவிட இனப் போராட்டமே’ என்பார் பெரியார். இப்போதும் அதுதான் நடக்கிறது. ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட சூழலை பயன்படுத்தி குறுக்கு வழியில் தமிழகத்தில் காலூன்ற பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் திட்டமிடுகின்றன. இதை முறியடிக்கவே சசிகலாவை ஆதரிக்கிறோம்[4]. ஆக திராவிட உயர்ஜாதி ஆதிக்க அரசியலை மறைக்க, பார்ப்பன எதிர்ப்பு உபயோகப் படுகிறது. ‘நடப்பவை அனைத்தும் ஆரிய – திராவிட இனப் போராட்டமே’, என்ற செல்லாத, சரித்திர ஆதாரமில்லாத கொள்கையை வைத்துக் கொண்டு தான், திராவிட சித்தாந்திகள் காலந்தள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. உழைப்பில்லாம, மக்கள் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அல்லது யாரும் காலூன்ற முடியாது. அதேபோல, காலாவதியான, உபயோகமற்ற சித்தாந்தங்களையும் மக்கள் தூக்கி எரிந்து விடுவர் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

amma-imitating-game-posters-etcதமிழகத்தில் 2 சதவீத வாக்கு வங்கியைக் கொண்ட பாஜகவால் 40 சதவீத வாக்கு வங்கியைக் கொண்ட அதிமுகவை கபளீகரம் செய்துவிட முடியுமா?: மத்தியில் அதிகாரத்தில் உள்ளவர்கள் நினைத்தால் முடியும் என்பதே கடந்தகால வரலாறு.

அருணாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் போல தமிழகத்திலும் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக திட்டமிடுகிறது. தமிழகத்தில் காலூன்ற என்ன செய்யலாம் என்பது குறித்து பாஜக தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வருகின்றன. சசிகலாவை வீழ்த்துவதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாமூலம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அதிமுக எம்.எல்.ஏக்கள் பிஜேபியில் சேருவார்களா, பிஜேபிகாரர்கள் ஒப்புக் கொள்வார்களா? அமித்ஷா என்ன அந்த அளவுக்கு முட்டாளா? இதையெல்லாம் மறைத்து, வீரமணி “பூச்சி” காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது. மக்கள் பலம், ஆதரவு, ஓட்டுவிகிதம் முதலியவை மற்றும் திராவிடத்துவத்தின் காலாவதித்தனம், இவைதான் தமிழகத்தின் அரசியலை தீர்மானிக்கும்.

 

© வேதபிரகாஷ்

15-01-2017

i-am-the-sucessor-of-jayalalita-deepa-competitor-poster

[1] தி.இந்து, தமிழகஅரசியலில் வெற்றிடம் இல்லை; சசிகலாவை வீழ்த்த தீபாவை தூண்டிவிடும் பாஜக: கி.வீரமணி சிறப்பு பேட்டி, எம். சரவணன் Published: January 13, 2017 09:44 ISTUpdated: January 13, 2017 09:46 IST

[2]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article9477436.ece

[3] விடுதலை, நடப்பது ஆரியர் -திராவிடர் போராட்டமே! இந்து (தமிழ்) ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி, வெள்ளி, 13 ஜனவரி 2017 14:57

http://viduthalai.in/e-paper/136299.html

[4] http://viduthalai.in/e-paper/136299.html

குருகுலம், குலக்கல்வி அறிமுகப்படுத்தப் படப்போகிறது – புதிய கல்வித் திட்டமும், கனிமொழியும், திராவிட கட்சிகளும்!

ஓகஸ்ட் 10, 2016

குருகுலம், குலக்கல்வி அறிமுகப்படுத்தப் படப்போகிறது – புதிய கல்வித் திட்டமும், கனிமொழியும், திராவிட கட்சிகளும்!

Jaya blessing prostratedகுருகுலம், குலக்கல்வி அறிமுகப்படுத்தப் படப்போகிறது[1]: விடுதலை தொடர்கிறது, “புதிய கல்வித் திட்டத்தில் பள்ளிகள், பக்கத்தில் உள்ள ஆசிரமங்களுடன் இணைக்கப்படும் என்று சொல்லப் பட்டுள்ளது. அதற்கு முன்னோடியாகத்தான் சென்னை இந்து ஆன்மிகக் கண்காட்சியில் ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்யும் ஏற்பாடாகும்[2]. ஒரு காலத்தில் குருகுல வாசம் என்ற முறை இருந்ததுமாணவர்கள் பகலில் எல்லாம் பிச்சை எடுத்துக்கொண்டு வந்த பொருள்களைக் கொண்டு, உண்டு உறைந்த காலகட்டம் அது. அத்தகைய காலம் அல்ல இது! அந்தக் கால கல்வி என்பதும் இன்றைக்குக் கவைக்குதவாதுகாலாவதியான ஒன்றாகும். மீண்டும் அந்தத் திசை நோக்கி மாணவர்களை, மத்தியில் உள்ள பி.ஜே.பி. ஆட்சி அழைத்துச் செல்லுகிறதோ என்ற அய்யமும், அச்சமும் ஏற்படுகின்றன. குருகுலம் என்றாலே நமக்கு சேரன்மாதேவி குருகுலம்தான் நினைவிற்கு வந்து தொலைக்கிறது. பார்ப்பனர்களுக்கு ஒரு வகையான தரமான உணவுபார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு மட்டமான உணவு பரிமாறப்படவில்லையா? குடிதண்ணீர்கூட தனித்தனியாக வைக்கப்பட்டு இருந்ததே! அந்தப் பேதா பேதத்தை ஒழித்துக் கட்டியவர்கள் தந்தை பெரியார் அவர்களும், டாக்டர் பி. வரதராஜூலு (நாயுடு) அவர்களுமேயாவார்கள். காங்கிரசை விட்டு தந்தை பெரியார் அவர்கள் வெளியேறு வதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்றே!”.

Khader_1 Vellore Amma 2006இந்துத்துவா சக்திகள் தறிகெட்டு நிர்வாண ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டன[3]: விடுதலை தொடர்கிறது, “மத்தியில் பி.ஜே.பி. , ஆட்சிக்கு வந்தநாள் முதற்கொண்டு இந்துத்துவா சக்திகள் தறிகெட்டு நிர்வாண ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டன. மீண்டும் நாட்டை மனுதர்மப் பிற்போக்கு உலகத்திற்கு இழுத்துச் செல்ல முயற்சிக்கின்றன. பிரதமர் உள்பட மத்திய அமைச்சர்கள் ஆர்.எஸ்.எஸ். கூட்டும் கூட்டங்களில் பங்கேற்பது கட்டாயம்; அந்தக் கூட்டத்தில், ஆட்சியின் செயல்பாடுகள், நடவடிக்கைகள், திட்டங்கள்பற்றி ஆய்வு செய்யப்படுகின்றன. ஆட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸின் சர் சங் சாலக் (தலைவர்) அறி வுறுத்துகிறார். அந்த அடிப்படையில்தான் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வருமுன் சென்னையில் ஒரு கல்லூரியில் இந்துஆன்மிகக் கண்காட்சி என்ற பெயரில் ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளதைக் கவனிக்கத் தவறக்கூடாது”.

Saibaba and Karunanidhiபாத பூஜை செய்வதுபிற்போக்குத்தனம் அல்லவா?[4]: விடுதலை தொடர்கிறது,”ஒரு பக்கத்தில் விஞ்ஞான மனப்பான்மை வளர்க்கப்பட வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51-எச்) வலியுறுத்துகிறது. அது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்றும் அரசமைப்புச் சட்டம் கட்டாயப்படுத்துகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குச் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டு அமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர்கள் அந்த அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டைக் காலில் போட்டு மிதிக்கலாமா? பாத பூஜை செய்வதுபிற்போக்குத்தனம் அல்லவா? அதுவும் காலைக் கழுவுவது அசுத்தமான ஆரோக்கியமற்ற அஞ்ஞான செயல்பாடு அல்லவா! மாணவர்களுக்கு நோய்ப் பரவும் ஆபத்தில்லை என்று அறுதியிட்டுதான் கூற முடியுமா? இதில் மகிழ்ச்சிக்குரியது, பாராட்டக் கூடியது என்னவென்றால், மாநிலங்களவையில் தி.மு.. உறுப்பினர் கனிமொழி ஆற்றிய உரையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் தோழர் து.ராஜா அவர்களும், மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அவர்களும், அய்க்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் அவர்களும் வரவேற்று ஆதரவு தெரிவித்ததுதான்”.

Vellore Amma - pada pujaசென்னையில் நடைபெற்ற இந்து ஆன்மிகக் கண்காட்சியில் அரங்கேற்றப்பட்ட அத்துமீறல்கள்[5]: விடுதலை தொடர்கிறது, “இதுபோன்ற பொதுக் கொள்கைகளில் கட்சிகளைக் கடந்து ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் மரபு தோற்றுவிக்கப்பட்டால், ஆளும் கட்சியும் சட்ட விரோத, மதச் சார்புக் காரியங்களைச் செய்யத் தயங்குமே! சென்னையில் நடைபெற்ற இந்து ஆன்மிகக் கண்காட்சியில் அரங்கேற்றப்பட்ட அத்துமீறல்கள், நடவடிக்கைகள் விசாரிக்கப் படவேண்டும். இவ்வளவுப் பிரம்மாண்டமாக ஏற்பாடுகளைச் செய்வதற்கு நிதி ஆதாயம் எங்கிருந்து வருகிறது என்பதும் கண்டுபிடிக்கப்பட வேண்டும். கறுப்புப் பணக்காரத்தன்மையின் வடிவமான கார்ப்பரேட் சாமியாரான ராம்தேவ்களை உரிய முறையில் விசாரித்தால், பல அதிர்ச்சியூட்டக்கூடிய தகவல்கள் வெளிவரக்கூடும். பக்திஇப்பொழுதெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்குள் சென்றுவிட்டதே!”.

kader3 Vellore Ammaதமிழிசை கனிமொழி பேச்சுக்கு கண்டனம்[6]: டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது[7]: “ பாராளுமன்றத்தில் சகோதரி கனிமொழி இந்து மதத்தில் குருவிற்கு பாத பூஜை செய்வது கூட இந்துத்துவா திணிப்பு என்கிறார்[8]. இவர்கள் போலி மதச்சார்பின்மை பற்றி பேசுகிறார்கள்[9]. நல்ல பழக்கங்கள் கூட தவறாக சித்தரிக்கப்படுகிறது[10]. இது கண்டனத்துக்குரியது. ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு பழக்க வழக்கம் உள்ளது. பெரியவர்கள், குருவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்[11]. இதற்கு மாணவர்கள் சமூகம் சரியாக வழி நடத்தப்படவில்லை. எல்லாமே தவறு என்பது தவறு. நான் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவ்டேகரிடம் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடப்பது பற்றி கூறினேன். அதற்கு அவர் புதிய கல்வி கொள்கை இன்னும் முழுவடிவம் பெறவில்லை. வரைவு திட்டம்தான் உள்ளது. ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 வரை கருத்து தெரிவிக்க கால அவகாசம் உள்ளது. நிறைவேற்றப்படாத திட்டத்துக்கு தமிழகத்தில் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள் என்று அவர் கேட்டார்”, இவ்வாறு அவர் கூறினார்.

students-perform-pada-pooja-to-parents-HSSFநாத்திகம், இந்து-எதிர்ப்பு முதலியன தமிழ் சமுதாயத்தை மேன்படுத்த முடியாது: கடந்த 60 ஆண்டு காலம் திராவிடம், தனித்தமிழ், இந்தி-எதிர்ப்பு, பார்ப்பன-எதிர்ப்பு, கோவில்-இடிப்பு, கோவில் சொத்து கொள்ளை, இந்துமத விசயங்களில் தலையிடுவது,….. முதலிய காரியங்கள் தமிழ்நாடு மக்களை விழிப்படைய செய்தது. 1960களிலேயே, இவையெல்லாம் எடுபடாமல் பக்திப்படங்கள் நூறு நாட்களுக்கு மேலாக ஓடி சாதனை படுத்தின. பிறகு, ஆதிபராசக்தி, அம்மா போன்ற பக்தி இயக்கங்கள் வளர்ந்தன. திகவினரே கலந்து கொள்கின்றனர், சபரி மலைக்கும் போய் வர்கின்றனர். படிப்பு, பாடதிட்டம் முதலியவற்றில் பிந்தங்கியதால், தமிழக மாணவர்கள் தாம் பின்தங்கினர். நன்றாகப் படிப்பவர்கள் பற்றி பிரச்சினை இல்லை. ஆனால், மற்றவர்களை ஏமாற்றி படுகுழியில் தள்ளியது இவர்களின் சித்தாந்தம் தான். இங்கும் தங்களது மகன் – மகள், பேரன் – பேத்திகளை ஆங்கில பள்ளி, கான்வென்ட், சிபிசிஇ போன்ற முறைகளில் படிக்க வைத்து அல்லது அயல்நாடுகளுக்கு அனுப்பி வைத்து உயர்ந்து விட்டனர். ஆனால், சாதாரண மக்களின் மகன் – மகள், பேரன் – பேத்திகளை தமிழ் அல்லது போசமான பாடதிட்டங்களில் படிக்க வைத்து தரத்தை குறைத்தனர், அவர்களது வாழ்க்கையினைக் கெடுத்தனர். இந்நிலையில், அவர்கள் பண்புடன், நல்ல குணங்களுடன் வளர, இருக்க பெற்றோரைப் போற்ற வேண்டும் என்று நிகழ்சிகள் இருந்தால், அவற்றை “புதிய கல்வி திட்டத்துடன்” இணைத்து கலாட்டா செய்கின்றனர். இது திராவிடக் கட்சிகளில் போலித்தனம், கையாலாகாதத் தனம், ஏனாற்றுவேலை, சமுதாய சீரழிப்பு போன்ற தீயசக்திகளைத் தான் வெளிப்படுத்துகிறது. இதனால் தான், அவர்கள், இவர்கள் மீதான நம்பிக்கையினையும் இழந்து வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

10-08-2016

[1] http://viduthalai.in/component/content/article/71-headline/127299-2016-08-06-08-48-32.html

[2] விடுதலை, பாத பூஜையா?, சனி, 06 ஆகஸ்ட் 2016 14:18;

[3] விடுதலை, பாத பூஜையா?, சனி, 06 ஆகஸ்ட் 2016 14:18

[4] http://viduthalai.in/component/content/article/71-headline/127299-2016-08-06-08-48-32.html

[5] விடுதலை, பாத பூஜையா?, சனி, 06 ஆகஸ்ட் 2016 14:18

[6] மாலைமலர், மாணவர்கள் பாத பூஜை செய்த விவகாரம்: கனிமொழி எம்.பி.க்கு டாக்டர் தமிழிசை கண்டனம், பதிவு: ஆகஸ்ட் 06, 2016 12:08; மாற்றம்: ஆகஸ்ட் 06, 2016, 15:29.

[7] http://www.maalaimalar.com/Election/ElectionNews/2016/08/06120836/1031074/Tamilisai-soundararajan-Condemn-Kanimozhi-MP.vpf

[8] நக்கீரன், குருவிற்கு பாத பூஜை செய்வது இந்துத்துவா திணிப்பாகனிமொழிக்கு தமிழிசை கண்டனம், பதிவு செய்த நாள் : 6, ஆகஸ்ட் 2016 (13:0 IST); மாற்றம் செய்த நாள் :6, ஆகஸ்ட் 2016 (13:0 IST)

[9] http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=170532

[10] Deccan Chronicle., Why so much dissent against draft policy, asks BJP, J V Siva Prasanna Kumar, Published: Aug 9, 2016, 6:04 am IST; Updated: Aug 9, 2016, 6:05 am IST

[11] Dr Tamilisai also took strong exception to the DMK Rajya Sabha MP Kanimozhi for her remarks on certain Hindu practices and said prostrating before teachers and seeking their blessings by touching their feet is an act to show students’ respect for teachers. “There is nothing wrong in this gesture,” she added.

http://www.deccanchronicle.com/nation/politics/090816/why-so-much-dissent-against-draft-policy-asks-bjp.html

செபாஸ்டியன் சீமான் திடீரென்று “முருக பக்தன்” ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு போராட்டம் நடத்துவது (2)

பிப்ரவரி 9, 2015

செபாஸ்டியன் சீமான் திடீரென்றுமுருக பக்தன்ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு போராட்டம் நடத்துவது (2)

சீமான் - நெற்றியில் விபூதி

சீமான் – நெற்றியில் விபூதி

பெஞ்சமின், அலாவுதீன், செந்தில்நாதன் சேகுவேரா, சுபாஷ் சந்திரபோஸ்: “பொதுக்கூட்டத்தில் சீமான், தனது கட்சியை சேர்ந்த சிலர் தமிழில் பெயரை மாற்றிக் கொண்ட விபரத்தை வாசித்தார்”, என்று தினமலர் கூறுகிறது[1].  கூட்டத்தில் தொடர்ந்து வீரதமிழர் முன்னணி அமைப்புக்கான மாநில ஒருங்கிணைப்பாளர்களாக பெஞ்சமின், அலாவுதீன், செந்தில்நாதன் சேகுவேரா, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்[2] என்று அவர்களது இணைதளம் வெளியிட்டுள்ளது. இதென்ன செக்யூலரிஸ அணியா, குழப்பக்கூட்டமா, “இந்தியன்” இல்லை என்கின்ற இந்திய-விரோதி அமைப்பா, “திராவிடன்” அல்ல என்று சொல்லி ஏமாற்றும் சித்தாந்த கும்பலா, “தமிழனாக” இருப்போன் என்று தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றை தூஷித்த கும்பலின் மறு அவதாரமா அல்லது மறுபடியும் “தமிழர்களின்” பெயரைச் சொல்லிக் கொண்டு, ஏமாற்ற தோண்டியுள்ள இன்னொர்ய் மோசடி கும்பலா என்று தமிழகள் விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

shanawas speech in MJK meeting Jan 28-2011- சீமான்

shanawas speech in MJK meeting Jan 28-2011- சீமான்

செபாஸ்டியன் சீமானின் இந்துவிரோத பேச்சுகள் அதிகமாகவே உள்ளன[3]. நாத்திக போர்வையில், பெரியார் சொன்னதை, இன்னும் அதிகமாகக் கொச்சைப்படுத்தி, இந்து மதத்தைச் சாடிவருவது, இவரது வேலையாகி விட்டது. நடுவே தன்னை “செக்யூலராக”க் காட்டிக்கொள்ள, சிறிது கிருத்துவத்தைக் கிண்டலடிப்பார். ஆனால், இஸ்லாமைப் பற்றி ஒன்றும் சொல்லாதது, விமர்சனிக்காதது, இவரது போலித்தனத்தை எடுத்துக் காட்டுகிறது. இத்தகைய கொள்கையற்ற மனிதர், “தமிழர்”, “பிராபகரன்”, “அம்மா”, “அப்பா”…………….என்ற வார்த்தை ஜாலங்களுடன்[4], மயிரு, மசுரு,………………………., போன்ற செம்மொழி வார்த்தைகளுடன் பவனி வந்து கொண்டிருக்கிறார். இவரது பேச்சுகள் அடங்கிய வீடியோக்கள் இணைதளங்களிலேயே உள்ளன, அவற்றை கெட்டாலே-பார்த்தாலே, உண்மையினை அறிந்து கொள்ளலாம். ஆகவே, “இந்துக்கள்” என்பவர்களும் இவரிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய அவசியம் உள்ளது.

Palanibaba_book_release_by_Seeman_in_MJK_meeting_Jan_28.2011

Palanibaba_book_release_by_Seeman_in_MJK_meeting_Jan_28.2011

சீமானின் கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவு போராட்டமும், பழனி கோவில் கருவறை நுழைவு முயற்சிகளும்: 14-04-2010 அன்று கிருத்துவர்கள் சென்னை நினைவரங்கம் என்ற இடத்தில் ஆர்பாட்டம் செய்ய போலீஸாரிடம் அனுமதி கேட்டது போலவும், அதற்கு அனுமதி மறுக்கப் பட்டது போலவும், தெய்வநாயகம் என்ற புரட்டு ஆராய்ச்சியாளர், முந்தைய மோசடி-ஆராய்ச்சி கும்பல் அருளப்பா-ஆச்சார்யா கும்பல் கும்பலைச் சேர்ந்த ஆள், “தமிழர் சமயம்” என்ற இதழில் வெளியிட்டு இருக்கிறார் [மலர்.1; மே 2010, இதழ்.5, பக்கம்.10]. பிறகு வேறு இடத்தில் நடந்த கூட்டம், கபாலீஸ்வரர் கோவிலில் நடந்தது என்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்” வெளியிட்டது[5]. அக்கூட்டத்தில் செபாஸ்டியன் சீமான் பேசியது நினைவில் கொள்ளவேண்டும். இப்பொழுது, பழனிக்கு வந்துள்ளனர். பழனியாண்டவர் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக மலைக்கோவில் நோக்கி செல்வோம் என்று, திடீரென பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் இருந்து மலைக்கோயில் நோக்கி சென்றனர்[6]. அப்போது, “முருகனை காண மலைக்கோயிலுக்கு செல்கிறோம்’ என சீமான் மற்றும் தொண்டர்கள் மலை ஏறத்துவங்கினர். கோவிலில் சீமான் தொண்டர்களுடன் கருவறை நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தபோவதாக போலீசாருக்கும் மற்றும் இந்து முன்னணி அமைப்பினருக்கும் தகவல் தெரிந்ததால், அவர்கல் தடுத்துத்ன் திருப்பி அனுப்பப்பட்டனர்.[7]. இதுகுறித்து டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் கூறுகையில், “”ஊர்வலம், பொதுகூட்டம் நடத்த அனுமதி வாங்கியிருந்தனர். திடீரென ஊர்வலத்தின் போது மலைக்கோயிலுக்கு செல்வதாக கூறினர். இதனால் தடுத்தோம்,” என்றார். இதனையடுத்து சீமான் வெளிபிரகாரத்தில் வணங்கி விட்டு பொதுக்கூட்டத்திற்கு சென்றார் என்பதும் நாடகமே என்று அறிந்து கொள்ளலாம்.

சீமானின் குழப்ப சித்தாந்தம்

சீமானின் குழப்ப சித்தாந்தம்

இந்தியாவை, தமிழ் பேசும் மக்களை ஏமாற்றிய சீமான்: ஒருபக்கம் இந்திய விரோத சக்திகளுடன் சேர்ந்து கொண்டு கூட்டங்களை நடத்துவது[8], இன்னொரு பக்கம் அடிப்படைவாத ஜிஹாதிகளை ஆதரிப்பது, பெரியாரிஸம் பேசுவது, ……இப்படி குழப்;பக் கலவையாகத்தான் செபாஸ்டியன் சீமான் இருந்துள்ளார். தமிழருக்கு யாசின் மாலிக்கைப் பற்றி என்ன தெரியும், முஸ்லீம் என்று சொல்லிக் கொண்டு கூத்தடிப்பது தெரியுமா? அப்சல்குருவின் பெயரை வைத்துக் கொண்டு, ஆபிஸ் சையதுடன் சேர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டது தெரியுமா? என்று முன்பு கேள்விகளை எழுப்பியிருந்தேன்[9].  “ஆரியர்-திராவிடர்”ரென்ற செல்லாத சித்தாந்தத்தைப் பேசி சில மக்களைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சரித்திரத் தன்மையற்ற புளுகுகளை வைத்து புத்தகம் வேறு எழுதியிருக்கிறார்! கால்டுவெல் துரோகத்தை இவர் புதுப்பிக்கிறார் போலும். இதில் இவர் “நாடார்” என்று வேறு சொல்கிறார்கள். பிறகு நாடார்களை இழிவு படுத்திய கால்டுவெல் சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு தமிழர்களை ஏமாற்ற யார் கற்றுக் கொடுத்தது? கனடாவில் இந்து கோவில்கள் கிருத்துவர்களால் தவறாகப் பயன்படுத்தப் பட்டதால், தண்டம் செல்லுத்த வேண்டியதாகியது[10]. இலங்கையில் முஸ்லீம்கள், முஸ்லீம்களாகத்தான் இருந்து செயல்பட்டனர், சாதித்துக் கொண்டனர். முன்பே பலமுறைக் குறிப்பிட்டப் படி, தமிழக ஊடகங்களே “இலங்கை முஸ்லீம்கள்”, “இலங்கை தமிழர்கள்” என்று பிரித்துக் காட்டி, தமிழர்களை ஒதுக்கினர்[11]. ஆனால், இவரோ பழனிபாபா விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்திய தமிழர்களுக்கோ, இலங்கைத் தமிழர்களுக்கோ இவரால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் எடுத்துக் காட்டப்பட்டது[12].

 

ஜான் சாமுவேல் பாதையில் செபாஸ்டியன் சீமானா?: ஜான் சாமுவேல் என்ற கிருத்துவர் 2004 வரை அனைந்துலக ஸ்கந்தா-முருகா மாநாடு என்ற பெயரில் ஒரு பிரைவேட் கம்பெனியை வைத்துக் கொண்டு, அதற்கு சேர்கள் / பங்குகள் எல்லாம் வாங்கச் சொல்லி நண்பர்களை, மாநாட்டுக்கு வந்தவர்களை வற்புறுத்தி வந்தார்[13]. முருக பக்தர் போல விபூதி வேட்டியெல்லாம் கட்டிக் கொண்டு, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியை எல்லாம் போய் பார்த்திருக்கிறார், இந்த சாமுவேல். முதல் மாநாடு சென்னையில், ஆசியவியல் வளாகத்தில் 1997ல் நடந்தது. அப்பொழுதே, இவர் ஒரு கிருத்துவ கூட்டத்தைக் கூட்டி வந்து, முருகன் தான் ஏசு என்பது போல ஆய்வுக்கட்டுரைகளை படிக்க வைத்ததுடன், விழா மலரிலும் வெளியிய வைத்தார். அது மட்டுமல்ல, தமிழ்-சமஸ்கிருத பேதத்தையும் கிளப்பிவிட்டார். முருகன் – கந்தன் – கார்த்திகேயன் – சுப்ரமணியன் என ஆராய்ச்சி செய்வதாக இருந்தால், சமஸ்கிருதம் தெரியாமல் எந்த ஆரய்ய்ச்சியும் செய்யமுடியாது. இருந்தாலும் சக்திவேல் முருகனார் போல ஆட்களைத் தூண்டி விட்டு பிரச்சினையைக் கிளப்பினார். முருகனைப் பிடித்துக் கொண்டிருந்த ஜான் சாமுவேல், திடீரென்று முருகனை, எம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்டு, தாமஸைப் பிடித்துக் கொண்டது என்ன ரகசியம் என்பதை ஆராய ஆரம்பித்தபோது தான், முந்தைய அருளாப்பா-ஆச்சார்ய பால் கோஷ்டிகளின் மோசடிகளை விட, ஒரு பெரிய மோசடியை ஆரம்பித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது[14]. இதே பாணியில் தான் செபாஸ்டியன் சீமானும் இறங்கியுள்ளார்.  பிஷப்புகளை சந்தித்து, தெய்வநாயகத்துடன் சேர்ந்து கபாலீஸ்வரர் கோவில் கருவறைப் போராட்டம் என்று ஆரம்பித்து, பழனிபாபா நினைவுவிழவில் கலந்து கொண்டு, இப்பொழுது பழனிக்கு வந்துள்ளார்.

© வேதபிரகாஷ்

09-02-2015

[1] தினமலர், பழநி கோயிலில் சீமான்: போலீசார் அனுமதி மறுப்பு, பிப்ரவரி.08-02-2015, 01:17.

[2] http://www.dailythanthi.com/News/Districts/dindugal/2015/02/07211902/Sri-Lankan-Tamils-issue-the-decision-of-the-State.vpf

[3] http://www.keetru.com/periyarmuzhakkam/jul08/seemaan_1.php

[4] நான் சீமான் ஆனது எப்படி?” – ஆனந்த விகடன், http://www.naamtamilar.org/beta/textnews_detail.php?id=807

[5] இந்தியன் எக்ஸ்பிரஸ், ஏதோ அந்த கூட்டம், கபாலீஸ்வரர் கோவிலில் உள்ளேயே நடந்தது மாதிரி, ஒரு புகைப்படத்துடன், செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அதற்கு கடிதம் எழுதியதற்கு, இன்று வரை மறுப்பு அல்லது அது தவறு என்று வருத்தம் தெரிவித்தோ என்ற செய்தியும் வரவில்லை / வெளியிடவில்லை.

[6] தினமலர், பழநி கோயிலில் சீமான்: போலீசார் அனுமதி மறுப்பு, பிப்ரவரி.08-02-2015, 01:17.

[7] மாலைமலர், பழனி மலைக்கோவிலுக்குள் ஊர்வலமாக செல்ல சீமானுக்கு அனுமதி மறுப்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 08, 1:11 PM IST.

[8] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/19/why-anti-national-yasn-malik-and-sebastian-seeman-come-together/

[9] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/19/yasin-malik-and-sebastian-seeman-and-their-affairs/

[10] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/20/526-sebastian-seeman-and-yasin-malik-their-activities/

[11] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/21/what-yasin-malik-and-sebastian-seeman-can-do-to-indians-or-tamils/

[12] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/29/anti-indian-propaganda-continues-by-sebastian-seeman-party/

[13] https://christianityindia.wordpress.com/category/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/

[14] https://thomasmyth.wordpress.com/2011/01/21/why-asian-institute-of-studies-involves-in-the-spread-of-thomas-myth/

அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?

நவம்பர் 29, 2009

அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?

இது “விடுதலை” என்கின்ற திராவிட கழகத்தினரின் நாளிதழில் “ஓடும் நதி” என்ற பெயரில் மறைந்து கொண்டு யாரோ ஒரு இந்து-விரோதி எழுதி வெளிவந்த சிறு கட்டுரையாகும். இன்றும் (டிசம்பர் 2013) கீழ்கண்ட தளத்தில் இருக்கின்றது:

http://viduthalai.periyar.org.in/20091129/news22.html

அதனால் தான், கீழ் கண்ட குறிப்பையும் நவம்பர் 2009லேயே செர்த்திருந்தேன்.

இதோ, ஐயப்பன் பக்தர்களையும் விட்டுவைப்பதில்லை.வருடா வருடம் இதே மாதிரியான தூஷணங்கள்! ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்காததால், இப்படியே அச்சடித்து இப்பத்திரக்கை நடதத்தப் படுகிறது.இதன் ஆசிரியர் கே. வீரமணியோ ஒரு நிகர்-பல்கலைக் கழகம் வைத்து நடத்துகிறார்.அதில் வேலை செய்யும் பலர் மாலை அணிந்துள்ளனர். அவர்கள் என்ன செய்வார்கள்?

அவர்கள் என்ன நினைப்பார்கள்?

அங்கு படிக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?

ஏனெனில் மாணவர்களில் பலரும் மாலை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!!

குறிப்பு: ஐய்யப்பப் பக்தர்களைப் புண்படுத்த இப்பதிவு செய்யப்படவில்லை. உண்மையில் நாத்திகவாதிகளின் மனப்பாங்கை எடுத்துக் காட்டி, அவர்களைன் போலித்தனத்தை எடுத்துக் காட்டவே நான் இப்பதிவை செய்துள்ளேன்.     

                                                                                                                  சென்னை, நவ. 29_ கேரளம் _ கேர என்ற மலையாள சொல்-லுக்கு தென்னை என்று பெயர். கேரளம் என்றால் தேங்காய் விளைகிற இடம் என்று பெயர். சந்தேகமாக இருந்-தால், உங்களுக்குத் தெரிந்த மலையாள சேட்டான், சேச்சியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கேரளாவிலிருந்து வந்த தேங்காயை, தமிழ்நாட்-டுத் தமிழன் விலைக்கு வாங்கி, தலையில் இரு-முடிகட்டி திரும்பவும் எங்கிருந்து வந்ததோ, அங்கேயே பக்தியின் பெயரால் கொண்டு போய் சேர்கிறான். அந்த தேங்காய்களை சபரிமலை கோவில் நிர்-வா-கமும் ஏதாவது எண்-ணைய் எடுக்கிற நிறுவனத்-திற்கு மொத்த விலைக்கு விற்று விடுகிறது. அந்த நிறுவனங்கள் தமிழ்-நாட்-டில் சிறு சிறு பாக்கெட், பாட்டில்களில் தேங்காய் எண்ணையை அடைத்து வந்து விற்கிறது. தேங்-காயை விலைக்கு வாங்-கிய தமிழன்,அதே தேங்-காயை, எண்ணைய் என்ற வடிவத்தில் திரும்ப-வும் விலைக்கு வாங்கு-கிறான். அதாவது புரிகிற மாதிரி சொல்வது என்-றால், ஒரு பொருளை இரண்டு முறை விலைக்கு வாங்குகிறான். கேரளக்காரன் தமிழ-னின் தலையில் இப்படித்-தான் மிளகாய் அரைக்-கிறான்! அய்யப்பனுக்கு மாலையணிந்து கோவி-லுக்கு போய் திரும்பும் வரை மிகவும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்-டும் சரியாகச் சொன்-னால், கோயிலுக்குப் போய் திரும்பும் வரைக்கு-மாவது நல்லவர்களைப் போல நடியுங்கள் என்-கிறார்கள்! கேரள அய்யப்பனுக்கு மாலை போட்டுப் போகிற தமிழர்கள் தயவு செய்து அய்யப்பனின் பிறப்பு, வளர்ப்பு கதையை படித்த பிறகு,தைரியம் இருந்தால் அதற்கு பிறகு மாலை போடுங்கள்! எவ்வளவுக் எவ்வளவு அசிங்கங்-கமாக, கேவலமாக இருக்க வேண்டுமோ, அவ்வள-வுக்கு அவ்வளவு ஆபாச-மாக இருக்கிறது, அய்யப்-பனின் பிறப்பு வளர்ப்பு வரலாறு! அவைகளை படித்தால் ஒழுக்கக் கேடு-கள் தான் நாடெங்கும் தலை விரித்தாடும்..! கேரளா கிறித்தவர்கள் அதிகம் நிறைந்த மாநிலம்.

அதாவது அய்யப்பன் பிறந்து வளர்ந்து கிழித்த-தாக கூறப்படும் கேரளத்-தில், கேரள மக்கள் அய்யப்-பன விட இயேசு கிறிஸ்துவைத் தான் அதிகம் பின்பற்று-கிறார்-கள்! இது ஒன்று போதாதா? அய்யப்பன் வெறும் பொய்யப்பன் என்று புரிந்து கொள்ள… அதா-வது தன்னை சிலுவை-யில் உயிரோடு அறைந்த போது தன்னையே காப்-பாற்றிக் கொள்ளாத இயேசு தான் இவர்களை காப்பாற்றும், சக்தி வாய்ந்த கடவுளாம்! கொடுமைடா சாமி! நீங்கள் சொல்வதெல்-லாம் சரிதான்ங்க, ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்னு இருக்கு, அதுக்கு பெயர் தான் கடவுள் என்பர்களே! கடவுளின் பெயரால் இந்த கேணத் தனங்கள், எதற்கு? கடைசியாக உங்களிடம் வேண்டிக் கொள்வ-தெல்-லாம், ஒன்றே ஒன்று தான்! தமிழர்களே! தமிழர்-களாக இருங்கள்!!

நன்றி: ஓடும் நதி

பின்குறிப்பு: இந்த இடுகை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடப்பட்டது. நாத்திகம் என்ற போர்வையில், வீரமணி எப்படி தூஷணம் செய்கிறார் என்பதைத்தான் எடுத்துக் காட் ட அவ்வாறு செய்யப்பட்டது. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்ற எண்ணம் அந்த மெத்த “படித்த” மேதாவிக்கு, நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தருக்குத் தெரியாமல் இருப்பதையும் எடுத்துக் காட்டப்பட்டது. இப்பொழுதும் இதற்கு பதில்கள் வருவதால், இக்குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

 2009லிருந்து 2013 வரை படிப்பவர்கள் இதனை முழுவது படிக்காமலேயே, என்னை திட்டி பதில்களை பதிவு செய்து வருகிறார்கள்.

ஆகவே, தயவு செய்து முழுமையாக படித்து விட்டு பதிலை இடுங்கள் .

வேதபிரகாஷ்

04-12-2013