Archive for the ‘அரசியல் வேறுபாடு’ Category

ஆனைமுகத்தோனுக்கு ஆனைவெடி வைத்து உடைத்தேன் என்று ஆண்டிப்பட்டி ராஜா, ஆனைமுத்து இழவு விழாவில் பேசி ஒப்பாரி வைத்தது! ஈவேராவை பின்பற்றி மாலிகாபூராக மாறியது (2)

ஜனவரி 6, 2022

ஆனைமுகத்தோனுக்கு ஆனைவெடி வைத்து உடைத்தேன் என்று ஆண்டிப்பட்டி ராஜா, ஆனைமுத்து இழவு விழாவில் பேசி ஒப்பாரி வைத்தது! ஈவேராவை பின்பற்றி மாலிகாபூராக மாறியது (2)

அம்மா கொடுத்த விபூதிகளை முதலில் பூசிக் கொண்டேன், பிறகு தூக்கி எறிந்தேன்: “1973 இல் நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, பெரியார் குடில் நடத்தினார் ஆனைமுத்து, அதில் நான் படித்தேன், அப்போது நான் விடுதிக்கு கிளம்பும்போதே என் அம்மா, இது முருகன் கோயில் விபூதி… காலையில் எழுந்ததும் இந்த விபூதிகளை வச்சுக்கோ,  இருட்டில் போனால் இந்த விபூதி வச்சுக்கோ என்று தருவாங்க. நானும் வச்சிட்டு இருந்தேன். அப்போதுதான் பெரியாரின் கடைசி உரையை நான் கேட்டேன்.. …….அதற்கு பிறகு மதம் ஏன் ஒழிய வேண்டும் என்பது போன்ற சின்ன சின்ன புத்தகங்களைப் படித்தேன்.  அதன்பிறகுதான் அந்த விபூதிகளை எல்லாம் தூக்கிப் போட்டேன். தூக்கிப் போட்டதும் இல்லாமல் எங்க ஊரில் ஒரு பிள்ளையார் சிலை இருந்தது, அந்த சிலைக்கு கீழே ஒரு ஆனைவெடி வச்சுட்டேன்.. அது உடைந்து சிதறியது, பின் அது பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. அதெல்லாம் ஒரு காலம்.. …” சிறுவயதில் அத்தகைய எண்ண உருவானது, என்பது, மனோதத்துவ ரீதியில் அலசவேண்டியுள்ளது. ஆனைமுத்து வீட்டில் எல்லோரும் கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்கள் தான். ராசாவைப் போல யாரும் அம்மாவின் பேச்சைக் கேட்காமல், மனம் புண்படும் படி நடந்து கொள்ளவில்லை.

நானே நினைத்தாலும் இந்துவாக இருந்து என்னால் வெளியேற முடியாது: ஏ.ராசா பேசியது, “என் வாழ்வில் நான் மாற்றியதற்கு காரணம் பெரியார் பேசிய அந்த கடைசி பேச்சு தான். தொடர்ந்து பேசிய அவர் நானே நினைத்தாலும் இந்துவாக இருந்து என்னால் வெளியேற முடியாது[1]. ஏன் என்றால் இந்து அமைப்பு சட்டத்தில் யார் கிறிஸ்துவர்கள், யார் இஸ்லாமியன், யார் யூதன் இல்லையோ மற்ற அனைவரும் இந்து என்றுதான் சட்டம் உள்ளது. எனவே நானே நினைத்தாலும் வெளியேற முடியவில்லை அப்படி வெளியேறினால் அந்த நாள் வந்தால் அதுதான் ஆனைமுத்துவிற்கு மரியாதை செய்யும் நாளாக இருக்கும்,” என தெரிவித்த அவர் காவியை அழிக்க அனைத்து கருப்பு சிவப்பு நீலமும் ஒன்று சேர வேண்டும் என கூறினார்[2]. இங்கு, அம்பேத்கர் அரசியல் சாசனம் சரியில்லை என்கிறாரா அல்லது இந்துசார்புடையது என்கிறாரா என்பதை கவிக்க வேண்டும். அம்பேத்கர் இந்துவிரோதி, இந்துமதத்தை வெறுப்பவர், தோஷிப்பவர்….. அதனால் தான், அவரது பேச்சுகளும், புத்தகங்களும் அவ்வாறே இருந்தன. பிறகு, அவரது அரசியல் சாசனம், நிர்ணய சட்டத்தைக் குறை சொல்வது ஏன் என்று தெரியவில்லை.

ராசா கொடுக்கும் விளக்கம்[3]: ‘இந்து’ என்றழைக்கப்படும் மக்களில் 95% சதவீதமாகவுள்ள இந்த பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமைக்கோரி தி.மு.க போராடியபோதெல்லாம் அவற்றை எதிர்த்தவர்கள் கிறிஸ்தவர்களா? இஸ்லாமியர்களா? இல்லையே!  அதை செய்தவர்கள் பிராமணர்களும் அவர்களோடு சேர்ந்த முன்னேறிய சாதியை சார்ந்த இந்துக்களும்தான்.  வேறு மொழியில் சொன்னால், பாஜகவும் அதன் பரிவாரங்களுமே இன்றுவரை இடஒதுக்கீட்டை எதிர்த்து வருகின்றன. எனவே, தி.மு.க இந்து விரோத கட்சியல்ல.  யார் ‘இந்து’ என்பதில் பிரச்சனை இருக்கிறது.‘இந்து’ என்று தங்களை ஏற்கும் பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களுக்கும், தாழ்த்தப்பட்ட பஞ்சமர்களுக்கும், அந்த மதத்தில் சொல்லப்பட்டுள்ள வரையறைகளும், வரம்புகளும், கடமைகளும், கட்டுப்பாடுகளும் ஏற்புடையதா என்பதில் எங்களுக்கு கருத்து வேறுபாடு உண்டு.  அதனால்தான், பேரறிஞர் அண்ணா அவர்களே ‘இந்து’ எனும் அடையாளத்தை ஏற்க மறுத்தார்.  இந்த கருத்துப் போராட்டம் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக, குறிப்பாக 1916-ல் வெளிவந்த பிராமணர் அல்லாதோர் அறிக்கை (Non-Brahmin Manifesto) வந்ததில் இருந்தே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.  அந்த கருத்துப் போராட்டத்தில் நாங்கள் எப்போதும் தோற்றதில்லை.  தி.மு.க.வின் அரசியல்-சமூகப்பார்வை தமிழர்களை இனத்தால், மொழியால் இனணப்பதேயன்றி; மதத்தால், சாதியால் பிரிப்பதல்ல!.: என்றெல்லாம் விளக்கம் கொடுத்தது விசித்திரமாக இருந்தது[4].

இந்துவிரோதம் மற்றும் எங்க கட்சியில் இந்துக்கள் உள்ளார்கள் என்ற முரண்பாடு தொடரும்: ஆ. ராசா என்கின்ற ஆண்டிப்பட்டி ராஜா இந்து-துவேசம் பேசுவது புதியதல்ல. அவரது வீடியோ பேச்சுகள் ஏற்கெனவே அந்த இதுவிடரோதத் தன்மையினை வெளிக்கட்டியுள்ளது. ஸ்டாலின் விபூதியை அழித்தது போல, இவரும் தனது பராக்கிரமத்தைக் காட்டுகிறார் போலும். தாயின் மத உணர்வுகளைக் கூட மதிக்காதவர்களை மக்கள் புரிந்து கொள்வர்கள். அதே போலத்தான், துர்கா ஸ்டாலின், தனது கணவனுக்கு நேர்த்திக் கடன் செய்வது, விரதம் மேற்கொள்வது, பூஜைகள் செய்வது, சமஸ்கிருத சுலோகங்கள் சொல்லி பாராயணம் செய்வது போன்ற காரியங்கள். தனது மாமனாருக்கும் காசிக்குச் சென்று காரியங்களை செய்து வந்துள்ளார். ஆனைவெடி வைத்து ஆனைமுகத்தோனை உடைப்பேன். ஆனால், தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மாட்டேன், திமுகவினரும் சொல்ல மாட்டார்கள்! ஆக, திமுகவின் இரு வேடங்கள் தெரிந்த விசயமே. இதனை சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வரை, தொடர்ந்து கொண்டே இருக்கும். பிரச்சாரம், விளம்பரங்கள் அதிகமாகும்.

ஆ.ராசாவின் சித்தாந்தம் என்ன?: சிறுவயதிலிருந்து வெடி வைகத்தேன், உடைத்தேன் போன்ற மனப் பாங்கு, வன்முறையினைத் தான் காட்டுகிறது. அத்தகைய உணர்சுகள் அவர் முகத்திலும்வெளிப்படுவது, புகைப்படங்களில் காணலாம்.

  • ஈவேரா உடைத்தார், அதனால் நானும் உடைத்தேன் என்பது அந்த துலுக்க விக்கிரங்களை உடைக்கும் தீவிரவாதத்தை தான் காட்டுகிறது.
  • ஏனெனில், மொஹம்மதைப் போலத்தான், தானும் மொஹம்மது என்று சொல்லிக் கொண்டு, இந்தியாவில் கஜினி-கோரி மொஹம்மதுகள் தீவிரவாதத்துடன் கோவில்களை இடித்தார்கள், விக்கிரங்களை உடைத்தார்கள், செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்றாற்கள்.
  • தென்னகத்தில்மாலிக்காபூர் இடைக்காலத்தில் அவ்வாறு செய்தான். இப்பொழுது, நவீன காலத்தில் திராவிடத்துவ வாதிகள் செய்து வருகின்றனர்.
  • சிலை உடைப்பு சித்தாந்தம், நியாயப் படுத்துத்தல், பெருமைப் பேச்சிக் கொள்வது எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கின்றன.
  • அண்ணா சொல்லியபடி, “இனம் இனத்தோடு சேர்கிறது,” கோவில் இடிப்புகள். விக்கிர உடைப்புகளும் அவ்வாறே உள்ளன.
  • அம்மாவின் உணர்வுகளையும் மீறி, மதிக்காமல், அவர் கொடுத்த விபூதிகளை எறிந்தேன் என்பதெல்லாம், ஸ்டாலினை திருதிப் படுத்தவா, அல்லது அவரையும் விஞ்சிய திராவிடத்துவத் தலைவர் என்பதை எடுத்துக் காட்டாவா என்று தெரியவில்லை.
  • எஸ்.சி என்ற நிலையில் எல்லாவற்றையும் அனுபவித்து, “நானே நினைத்தாலும் இந்துவாக இருந்து என்னால் வெளியேற முடியாது,” என்று பேசியிருப்பதெல்லாம், எப்படி இந்து என்று சொல்லிக் கொண்டு, இந்திய அரசியல் நிர்ணயச்சட்டத்தின் படியே ஏமாற்றுகிறார் என்பதும் தெரிகிறது.

© வேதபிரகாஷ்

06-01-2022


[1] தினசரி, பிள்ளையார் சிலைக்கு வெடி வைத்தேன்: இந்து மதத்தை அவமதித்து ராசா சர்ச்சை பேச்சு, ஜனவரி.5, 2022 11.30 AM.

[2] https://dhinasari.com/latest-news/236281-i-bombed-the-pillaiyar-statue-a-rasa-controversy-speech-insulting-hinduism.html

[3] புதியதலைமுறை, திமுக இந்து விரோத கட்சியல்ல. யார்இந்து என்பதில்தான் பிரச்சனை.ராசா சிறப்பு பேட்டி, சிறப்புச் செய்திகள், puthiyathalaimurai.com   sharpana Published :21,Jul 2020 04:07 PM

[4] https://www.puthiyathalaimurai.com/newsview/74315/The-DMK-is-not-an-anti-Hindu-party–The-problem-is-who-is-a—-Hindu—–A-Rasa-Special-Interview

ஆனைமுகத்தோனுக்கு ஆனைவெடி வைத்து உடைத்தேன் என்று ஆண்டிப்பட்டி ராஜா, ஆனைமுத்து இழவு விழாவில் பேசி ஒப்பாரி வைத்தது! (1)

ஜனவரி 6, 2022

ஆனைமுகத்தோனுக்கு ஆனைவெடி வைத்து உடைத்தேன் என்று ஆண்டிப்பட்டி ராஜா, ஆனைமுத்து இழவு விழாவில் பேசி ஒப்பாரி வைத்தது! (1)

பிள்ளையார் சிலைக்கு அடியில் ஆனை வெடி வச்சவன் நான்“.. அது சுக்குநூறாகி ஊரே ரெண்டாச்சு.. அலறவிட்ட .ராசா:  சென்னை சேப்பாக்கத்தில் பெரியார் ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ ராசா பேசியதாவது :………., என்று ஏசியாநெட்.நியூஸ் கதையை ஆரம்பிக்கிறது[1]. “அதன்பிறகுதான் அந்த விபூதிகளை எல்லாம் தூக்கிப் போட்டேன். தூக்கிப் போட்டதும் இல்லாமல் எங்க ஊரில் ஒரு பிள்ளையார் சிலை இருந்தது, அந்த சிலைக்கு கீழே ஒரு  ஆனைவெடி வச்சுட்டேன்.. அது உடைந்து சிதறியது, பின் அது பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. அதெல்லாம் ஒரு காலம்……,” என்று ராசா பேசியதை வெளியிட்டுள்ளது[2]. “என் வாழ்வில் நான் மாறியதற்கு காரணம் பெரியார் பேசிய அந்த கடைசி பேச்சு தான். பெரியாரின் சிந்தனைகள் என்னுள் வந்த பின்பு ஊரில் இருந்த பிள்ளையார் சிலைக்கு அடியில் ஆனைவெடி வைத்து அதை தகர்த்தவன் தான்,” என திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா கூறியுள்ளார்[3]. பெரியாரின் கருத்துக்கள் உள்வாங்கிய நான் அம்மா கொடுத்த விபூதி பொட்டளங்களை தூக்கி எறிந்ததாகவும் அவர் பேசியுள்ளார்[4]. பொட்டலம், என்று தமிழில் ஒழுங்காக எழுதத் தெரியாத இந்த திராவிடத்துவ வாதிகள் தாம் தமிழைக் காக்கிறோம், உயிரை விடுகிறோம் என்று வீராப்பு-சால்ஜாப்பு பேசி வருகின்றனர்.

விளம்பரம்தினசரி அறிக்கைஅதிரடி டிவி செய்திகள் மூலம் ஆட்சி நடத்துவது: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலம்தொட்டு, மழை வெள்ளம் பாதிப்புவரை அரசு எடுத்த ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் எதிர்க்கட்சிகளான அதிமுகபாஜக பிரச்சாரத்தின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டது என்று திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அதேபோல் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோலுக்கான மாநில வரி குறைக்கப்பட்டுள்ளது, அதேபோல் தமிழக அரசும் அந்த வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன”. விளம்பரம்-தினசரி அறிக்கை-அதிரடி டிவி செய்திகள் மூலம் ஆட்சி நடத்துவது என்பது தொடர்ந்து வருகிறது. ஆக, ஆ. ராசவின் பேச்சு, அத்தகைய பிரச்சஆத்தின் யுக்தியாகவும் இருக்கலாம். ஏனெனில், இதெல்லாம் திராவிடத்துவவாதிகளுக்கு கைவைந்த கலை.

இந்துக்களை எதிர்த்து வரும் கழகங்கள்: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் உண்மையான எதிர்க்கட்சி பாஜகதான் என்பதை கட்டமைக்கும் வகையில் பாஜகவினர் தொடர்ந்த திமுக அரசை மூர்க்கமாக எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் திமுக ஆட்சி என்பது இந்துக்களுக்கும் இந்து மதத்திற்கும் எதிரானது, அதனால்தான் இந்து அறநிலைத்துறையின் பெயரில் இந்துக் கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்குவோம் எனக் கூறி வருகின்றனர். இன்னும் பல்வேறு இடங்களில் கோவில் சொத்துக்கள் மீட்கப்படாமல் உள்ளன[5]. அதை மீட்க முயற்சிகள் இல்லை, அதேபோல விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகளை வைக்க அனுமதி வழங்காததும் இந்து மத விரோத போக்கு இல்லாமல் வேறொன்றும் இல்லை என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்[6]. கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற முழக்கத்துடன் பாஜக செயல்பட்டு வந்தாலும் அதிமுக திமுக என்ற இரண்டு கழகங்களில் அதிமுகவுடன் கைகோர்த்து திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. திமுக எதிர்ப்பு என்பது அரசியல் எதிர்ப்பு மட்டும் அல்ல சித்தாந்த ரீதியான எதிர்பார்க்க பாஜக செய்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில்  அதிமுகதான் எதிர்க்கட்சி என்றாலும் பாஜக- திமுகவுக்கு இடையேதான் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது என்பதே நிதர்சனம்.

கருப்பு சிவப்பு நீலம் ஒன்றாக இருந்தால் மட்டுமே 2024 ல் பாஜக என்ற காவியை வீழ்த்த முடியும்: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “இந்நிலையில் அதை மெய்ப்பிக்கும் வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் .ராசா பெரியாரின் சுயமரியாதை மற்றும் கொள்கை பாதையைப் பின்பற்றிய ஆனைமுத்து படத்திறப்பு விழாவில் இந்து மதத்தை தான் ஏன் எதிர்க்கிறேன் என்றும், காவி எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்தும் விளக்கி பேசியுள்ளார். மேலும் கருப்பு சிவப்பு நீலம் ஒன்றாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே 2024 ல் பாஜக என்ற காவியை வீழ்த்த முடியும்,” என்று பேசியுள்ளார்[7]. தொடர்ந்து அவர் தனது பேச்சுக்கள் மூலம் பாஜக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.  இதை தமிழ்.ஒன்.இந்தியாவும் வெளியிட்டுள்ளது[8]. இங்கு பச்சையை ஏன் விட்டனர் என்று தெரியவில்லை. அதை வைத்து தான், கடந்த 100 ஆண்டுகளாக ஆட்சி நடத்துகின்றனர், பிரிவினையையும் வளர்த்து வருகின்றனர். தீவிரவாதத்தை வளர்க்கின்றனர் என்று தெரிந்தும், கூட்டு வைத்துக் கொண்டு அரசியல் நடத்தி வருகின்றனர். இதைப் பற்றி என்.ஐ.ஏ, மற்ற அனைத்துலக நிறுவனங்களே எடுத்துக் காட்டி வருகின்றன. இருப்பினும், இங்கு ஒன்றுமே தெரியாதது போலவும், உள்ளூர் ஊடகங்களில் செய்திகள், தகவல்கள் வராமலும் கட்டுப்பாடுகளை வைட்துள்ளனர்.

.ராசாவின் பேச்சுஅதன் விவரம் பின்வருமாறு: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது,   சென்னை சேப்பாக்கத்தில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் சார்பில் பெரியாரியல் பெரியார் ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் நினைவலைகள் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர் அதில் நாடாளுமன்ற உறுப்பினர் திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆ ராசா கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர், “96 வயது வரை வாழ்ந்து, 75 ஆண்டுகாலம் பெரியார் குறித்து மட்டுமே பேசி மறைந்த ஆனைமுத்து படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு நீண்ட நெடியது, டெல்லிக்கு வரும்போதெல்லாம் என் வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் பேசுவார். ஒரு தத்துவத்தை கூறி அந்த தத்துவம் நிறைவேறுவதை தன் கண்ணால் பார்த்த ஒரே தலைவர் பெரியார் அந்த பெரியாரே பேரறிஞர் என ஆனைமுத்துவை கூறினார். அதை விட அவருக்கு நாம் என்ன பெருமையை செய்ய முடியும். பூலோக ரீதியாக ஆனைமுத்துவும் நானும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள்”.

© வேதபிரகாஷ்

06-01-2022


[1] ஆசியாநெட்.நியூஸ், பிள்ளையார் சிலைக்கு அடியில் ஆனை வெடி வச்சவன் நான்“.. அது சுக்குநூறாகி ஊரே ரெண்டாச்சு.. அலறவிட்ட .ராசா, Ezhilarasan Babu, Chennai, First Published Jan 4, 2022, 10:57 AM IST.

[2]  https://tamil.asianetnews.com/politics/i-am-the-one-who-put-the-elephant-explosive-under-the-idol-of-pillaiyar-a-rasa-speech–r5675u

[3] விநாயகருக்கே வெடி வச்சவன் நான்! ஆ.ராசா பேச்சு | A Raja Speech | Periyar | DMK | Anaimuthu | Aa Rasa, Jan 3, 2022.

[4] https://www.youtube.com/watch?v=EQnK87JGQhQ

[5] ஒரேதேசம், பிள்ளையார் சிலைக்கு யானை வெடிவச்சு சிலையை சுக்குநூறாக்கியவன் நான்! .ராசாவின் ஆணவ பேச்சு!, Oredesam BY OREDESAM  January 4, 2022.

[6] https://oredesam.in/explosive-statue-to-the-pillaiyar-statue/

[7] தமிழ்.ஒன்.இந்தியா, கருப்பு + சிவப்பு + நீலம் ஒன்றாகட்டும்.. காவியை விட்டுவிடுவோம்.. சேப்பாக்கத்தை தெறிக்கவிட்ட .ராசா, By Hemavandhana Published: Monday, January 3, 2022, 12:09 [IST]

[8] https://tamil.oneindia.com/news/chennai/bjp-can-be-toppled-if-black-red-and-blue-combine-says-mp-a-rasa-444125.html

இந்துத்துவ பாதையில் திமுக: பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி- திமுக வலையில் சிக்கிக் கொண்ட பிஜேபி, இந்துத்துவ வாதிகள் பார்ப்பனர்களைத் தூற்றியது (3)

திசெம்பர் 1, 2020

இந்துத்துவ பாதையில் திமுக: பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி- திமுக வலையில் சிக்கிக் கொண்ட பிஜேபி, இந்துத்துவ வாதிகள் பார்ப்பனர்களைத் தூற்றியது (3)

பல புகைப் படங்கள் இருந்தாலும், சிலவற்றை வைத்து தூஷித்தது!

இந்துத்துவவாதிகள் எதிர்க்க வேண்டியது திமுகவையா, பார்ப்பனர்களையா?: 30-11-2020 அன்று, “இந்துத்துவ பாதையில் திமுக: பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி எந்த அளவுக்கு உதவும் என்பது 2021 தேர்தல் நிரூபித்து விடும் (1)” மற்றும் “இந்துத்துவ பாதையில் திமுக: பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி: உதயநிதி விபூதி பூசுவது, துர்கா கோவில் கட்டுவது முதலியன(2)” என்று, எவ்வாறு திமுக “மென்மையான இந்துத்துவத்தை” பின்பற்ற ஆரம்பித்து விட்டது என்று “பிளாக்” போட்டு முடித்த சிறிது நேரத்தில், டுவிட்டரில் உள்ள சில புகைப் படங்களை[1], பேஸ்புக்கில் போட்டு, அவற்றை வைத்து, பார்ப்பனரை விமர்சிக்க ஆரம்பித்தனர். எதிர்பார்த்தப் படி, அப்படியே ஷேர் செய்வது, லைக் போடுவது, திட்டுவது என்பது தொடர்ந்து அதிகமாகின. குறிப்பிட்ட பிஜேபிகாரர்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி (வகையறாக்கள் உட்பட), நபர்கள் அத்தகைய அதிரடி, தாக்குதல், போஸ்டிங்குகளை செய்ய ஆரம்பித்தனர். இது நிச்சயமாக “இதுத்துவத்திற்கு” ஒவ்வானதாகும். இருப்பினும் மிக மோசமாக அத்தாக்குதல் அரங்கேறியுள்ளது. அதனால், மூன்றாம் பகுதியில், இவற்றை பதிவு செய்ய வேண்டிய நிலை / கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பல புகைப் படங்கள் இருந்தாலும், சிலவற்றை வைத்து தூஷித்தது! இவர்கள் பார்ப்பனரா என்பது அவர்களுக்குத் தெரியாது போலும்!

அரசியல் போர்வையில் நடத்திய தாக்குதல்: திமுகவை எதிர்க்கிறேன் என்று நூற்றுக் கணக்கான, முகநூல் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இது முன்னணி  வகையறாக்கள், பிராமணர்களைத் தாக்கி வசைப்பாடியுள்ளனர். Subbu FOTOGRAFI என்று டுவிட்டரில், உதயநிதிக்கு விபூதி வைப்பது, அக்ஷதை போடுவது, தலையில் பொன்னாடை கட்டுவது, மாலை போடுவது என்று பலவித பிராமணர் / பார்ப்பனர், பட்டர், சிவச்சாரி………. (துலுக்கர் உட்பட) என்று புகைப்படங்கள் உள்ளன. ஆனால், இந்துத்துவ வாதிகள், பிஜேபிகாரர்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி (வகையறாக்கள் உட்பட), பார்ப்பனரை / பிராமணரை மட்டும், மிகக் கேவலமாக, மோசமான, ஆபாசமான………வார்த்தைகளை உபயோகப் படுத்தி தூஷித்துள்ளனர். பார்ப்பனர் அல்லாத பற்பல இந்துத்துவவாதிகள், திக-திமுக-கம்யூனிஸ வகையறாக்கள் கூட வியாபாரம், நட்பு, பார்ட்டிகளில் கொண்டாட்டம் போடுவது……என்றெல்லாம் உள்ளனர். தைரியம் இருந்தால், இதே போன்று  ஒரு சுப்புவை வைத்து,  போட்டோ எடுத்துப் போட்டிருக்க வேண்டும். திமுக வலையில் நன்றாக மாட்டிக் கொண்டனர். லாஜிக்கே இல்லாமல், எதிரிகளை எதிர்க்காமல், பிரமாண துவேசத்தைக் கக்கியுள்ளனர்.

பல புகைப் படங்கள் இருந்தாலும், சிலவற்றை வைத்து தூஷித்தது! இவர்கள் பார்ப்பனரா என்பது அவர்களுக்குத் தெரியாது போலும்!

ஆபாசமாக, கேவலமாக பதிவு செய்துள்ளதில் சிலஉதாரணத்திற்கு[2]: இந்துத்துவ வாதிகள், பிஜேபிகாரர்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி (வகையறாக்கள் உட்பட), பார்ப்பனரை / பிராமணரை மட்டும், மிகக் கேவலமாக, மோசமான, ஆபாசமான………வார்த்தைகளை உபயோகப் படுத்தி தூஷித்துள்ள வசனங்களில் சில[3]:

  • இது திமுகவின் பிராமண அணி,
  • எவ்வளவு செருப்படி பட்டாலும் புத்தி வராது பிராமணனக்கு,
  • நெல்லிக்காய் மூட்டை ன்னு சொல்வாங்க. இவங்கள லாம் நம்பறது படு டேஞ்சர்,
  • ஆந்திர இறக்குமதி,
  • தன் பெருமை உணராத அடிமைகள்.
  • கோடாரி …..இவனுங்கலுக்கு அங்க என்ன வேலை ?
  • பூணுல் அறுக்கும் கூட்டத்திடம் செல்பி.. மானம் கெட்டவர்கள்.
  • கருணாநிதி முன்னோர்கள்  மாநில ஆந்திர இறக்குமதி பார்ப்பனர்கள்.
  • தொடர்ந்து இந்து மதத்தை இழிவு செய்யும் திருட்டு திராவிட “ஈனப்பயலுடன்” செல்பி படம் எடுக்கும் இந்த கேடுகெட்டவனை.. படம் [செருப்பால் அடிக்க வேண்டும்]
  • நக்குனா இப்படி தான் நக்கனும் இதை விட அசிங்கமா எழுதுவேன் என் ஆத்மார்த்த நண்பர் deva priyaji, piriya ramkumar, போன்றவர்களின் மனம் புண்பட கூடாது என்பதற்காக அடக்கி வாசிக்கிறேன்.
  • அட குரங்கு குப்பங்களா யாருக்கு என்ன மரியாதை செய்யணும்னு தெரியாதா?

இவர்கள் உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ்,சில் பயிற்சி எடுத்திருந்தால், அவ்வாறான கமென்டுகளை செய்திருக்க மாட்டார்கள். ஆனால், செய்துள்ளார்கள் என்பதால், பல சதேகங்கள் எழுகின்றன.

இது மட்டும் தான் அவர்களுக்குத் தெரிந்தது போலும்!

திமுகவுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டவர்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக விமர்சிப்பு, தாக்குதல் முதலியன ஏன் செய்யவில்லை?: முன்பு “இந்து முட்டாள்கள்” என்று பதிவு செய்த போது, கோபித்துக் கொண்டார்கள், ஆனால், இப்பொழுது, அதை விட மோசமாக கமென்ட் செய்துள்ளார்களே? என்ன செய்வது? இந்த “இந்துத்துவ முட்டாள்கள்” திமுகவை எதிர்க்கிறார்களா, இந்துக்களை எதிர்க்கிறார்கள், இந்து மதத்தை குறை கூறுகிறார்களா? பார்ப்பனர்கள் / பிராமணர்கள் என்றெல்லாம் முட்டாள் இந்துக்கள் விமர்சிப்பதால், எல்லா வந்தேறி – பார்ப்பனர்கள்  பிஜேபியிலிருந்து ,  இந்து அமைப்புகளிலிருந்து விலகி விடலாம்! சில நாட்களுக்கு முன்னர், அந்த ஆதின மடாதிபதி, இரவு 10 மணிக்கு மேலே, ஆசிர்வாதம் எல்லாம் நடத்திய போது, அவரை, ஜாதி பெயர் சொல்லி விமர்சிக்கவில்லை, இவ்வகையில் போட்டி போட்டுக் கொண்டு, தூஷிக்க வில்லை. இதிலிருந்து, அரசியல் ரீதியில், சூழ்ச்சியாகத்தான் பார்ப்பனரை / பிராம்மணரை எல்லோரும் சேர்ந்து தாக்குகின்றனர் என்று தெரிகிறது.

இவர்கள் பார்ப்பனர்களா? பூணூல் போட்டவர்களா?

திமுகவுடன் கூட்டு வைத்து போது ……………அந்த கதையினை சொல்ல வேண்டுமா?:

1999ல் அதிமுக ஒதுக்கியதால், திமுகவுடன் பிஜேபி கூட்டு வைத்துக் கொண்டது. கருணாநிதி, வைகோ என்று திராவிடத் தலைவர்கள் வாஜ்பேயுக்கு போன்னாடைப் போற்றி வாழ்த்தினர். அரசியல் வியபாரமும் நடந்தது, அதாவது, கூட்டணி உடன்படிக்கை ஏற்கப் பட்டது. ஒரு பார்ப்பனனைச் சுற்றியிருக்கும் அவர்கள் பார்ப்பனர்களா? என்றெல்லாம் யாரும் கேட்கவில்லை. 182 எம்.பிக்களைக் கொண்ட பிஜேபி, திமுக ஆதரவுடன் ஆட்சி அமைத்தது[4]. பிஜேபி-ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திமுகவினருக்கும் தேர்தல் பிரச்சார செய்தனர்………. அதை இங்கு விளக்க விருப்பம் இல்லை. காவிகள் அறிவார்கள். முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, ஏ.ராஜா, முதலியோர் மத்திய அமைச்சர்கள் ஆகினர். “ஒரு கெட்ட கட்சியில் உள்ள அல்ல மனிதர்,” என்றெல்லாம் அந்த பார்ப்பன பிரதம மந்திரி விமர்சிக்கப் பட்டார். இன்னும் சொல்ல நிறைய உள்ளன…………..ஆகவே, 2020ல் இத்தகைய வெளிப்பாடு திகைப்பாக இருக்கிறது.

சிவாச்சாரியார் விபூதி வைத்தால், பார்ப்பனரை தூஷிப்பது ஏன்?

ஸ்டாலினை பாராட்டிய சி.பி.ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 2019[5]: முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் குடும்ப திருமணவிழா திருப்பூரில் 05-09-2019 அன்று நடந்தது. திருமண விழாவில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், பாஜக தலைவர்களில் ஒருவரான முன்னாள் எம்.பி சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர். திருமண நிகழ்ச்சியில் பேசிய, சி.பி ராதாகிருஷ்ணன்[6], “கலைஞருக்கு பிறகு கட்சியின் தலைமையை ஏற்ற தளபதி அவர்கள், எங்களையெல்லாம் தோற்கடித்து இன்று வெற்றி தளபதியாக உள்ளார். நாங்கள் இன்னும் உழைக்க வேண்டியதும், அதனை தளபதி அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகமுள்ளது,” என்று அவர் கூறினார்[7]. தமிழக பாஜகவின் தலைவருக்கான போட்டியில் சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மாநில தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், இரண்டு முறை எம்.பியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது மத்திய கயிறு வாரியத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார், என்றெல்லாம் ஊடகங்கள் குறிப்பிட்டன. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் நாங்கள் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டுள்ளோம் என்று பாஜக தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். ஆக, பிஜேபி.காரர்கள் இவ்வாறு கற்றுக் கொண்டு, பார்ப்பனர்களை தூஷித்தார்கள் போலும். ஒரு ஆண்டில், நல்ல முன்னேற்றம் தான். இனி, குத்தூசி குருசாமி, அணுகுண்டு ஆறுமுகம்………….. போன்றவர்களும் தயாராகலாம்!

பல புகைப் படங்கள் இருந்தாலும், சிலவற்றை வைத்து தூஷித்தது! இவர்கள் பார்ப்பனரா என்பது அவர்களுக்குத் தெரியாது போலும்!

இந்துக்களின் இன்றை நிலை: இந்துக்களை, இந்துக்கள் என்று பாராமல், ஜாதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் நிலை அபாயக்கரமானது.

  1. சமூகம், ஜாதி, மதம், தேசம், மொழி முதலியவை அரசியலாக்கும் முயற்சிகளில், அவற்றை சின்னங்களாக, அடையாளங்களாக, குறீயீடுகளாக மதிக்க முடியாது.
  2. அரசியல், செக்யூலரிஸம் போர்வையில் கடந்த 60 ஆண்டுகளாக இந்துக்களை ஒடுக்கி வைத்தது, அடக்கி வந்தது.
  3. பிஜேபி, “இந்து கட்சி” என்று பிரகனடப் படுத்திக் கொண்டதால், இந்துக்கள் கொஞ்சம்-கொஞ்சமாக பிஜேபிக்கு ஓட்டுப் போட ஆரம்பித்தனர்.
  4. பதிலுக்கு தங்கள் உரிமைகள் காக்கப் பட விரும்பினர். குடும்பம், குடும்பம் சார்ந்த விசயங்களில் சதோசம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.
  5. ராம ஜன்ம பூமி விசயம் பல ஆண்டுகளாக பாதித்து வந்து, இப்பொழுது முடிந்துள்ளது. எல்லா அரசியல் கட்சிகளும் அதை வைத்து இந்துக்களை சதாய்த்தாலும், பிஜேபி வென்றது.
  6. ஆனால், தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்புகள் இந்துக்களை பாதிப்பதாகவே இருந்து வருகின்றன.  அவை இந்து குடும்பங்கள், உறவுகள், வழி-வழி வரும் பழக்க-வழக்கங்கள் முதலியவற்றை தடுப்பதாக, மாற்றுவதாக உள்ளன.
  7. பொருளாதார ரீதியில் சாதாரண மக்களுக்கு எந்தவித மாற்றமும் ஏற்படதாகத் தெரியவில்லை, அதாவது உணவு உடை மற்றும் உறையுள் (ரோடி-பப்டா ஔர் மகான்) என்றவற்றின் விலை அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.  
  8. தங்கம்-பெட்ரோல்-டாலர்-ஷேர் மார்க்கெட், சந்தை பொருளாதாரம் எல்லாம் சாதாரண மக்களுக்குத் தேவையில்லை. தனது கூலிக்கு-சம்பளத்திற்கு சாப்பாடு கிடைக்கிறதா என்று தான் பார்ப்பார்கள்.
  9. அந்நிலையில், ஒரு பக்கத்தில் உரிமைகளும் பறிபோய், இன்னொரு பக்கத்தில் சமூக-பொருளாதார நிலைகளில் இந்துக்கள் பாதிக்கப் படுவது தெரிகிறது.
  10. இதனால், இந்துக்கள் இன்னொருவிதமான பிணைப்பில் அடைக்கப் படுகிறார்களா என்ற எண்ணம் தோன்றுகிறது.

ஆகவே, மேற்குறிப்பிட்ட இந்து கோஷ்டிகள் நிலைமை உணர்ந்து செயல்பட வேண்டும். சித்தாந்தத்தால் அடக்குவோம் என்ற போக்கு ஆபத்தானது.


© வேரபிரகாஷ்

01-12-2020

ஒரு பார்ப்பனனைச் சுற்றி????

[1]  அவற்றை நானும் பார்த்தேன், ஆனால், எனக்கு வித்தியாசமாகத் தெரியவில்லை. கருணாநிதி மற்றும் கருணாநிதி குடும்பம், ஶ்ரீசத்ய சாயபாபா, ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர் ………போன்றோருடன் போட்டோக்கள் எடுத்தக் கொண்ட விவரங்களை எனது பிளாக்குகளில் விவரித்துள்ளேன். இவர்கள் எல்லோரும் போலித் தனமானவர்கள், வீட்டில் ஒரு மாதிரி, வெளியில் மேடைகளில் வேறு மாதிரி, என்று இரட்டை வேடம் போட்டவர்கள் தான்.

[2]  பேஸ்புக்கில் இவற்றை இன்றும் பார்க்கலாம் என்று நம்புகிறேன். சிலர் சுதாரித்துக் கொண்டு, வார்த்தைகளை மாற்றியுள்ளனர்.

[3]  இதை விட மோசமான, ஆபாசமான பதிவுகள் உள்ளன, அவற்றை தவிர்த்துள்ளேன். எல்லாமே காவி-இந்துத்துவ-சங்கம் என்கிறவர்களிடமிருந்துதான் வெளிப்பட்டுள்ளது.

[4] The 1999 Indian general election polls in Tamil Nadu were held for 39 seats in the state. The result was a victory for the National Democratic Alliance (NDA) which won 26 seats. After leaving the NDA, All India Anna Dravida Munnetra Kazhagam, hoped to create some damage, but ended up losing 8 seats, compared to the 1998 Lok Sabha elections.

[5] இதையும் ஒரு உதாரணத்திற்குத் தான் கொடுத்துள்ளேன், நிறைய உள்ளன. ஆனால், அரசியலை வைத்துக் கொண்டு,இவர்களும் இரட்டைவேடம், முரண்பாடு கொண்ட வாத-விவாதங்கள் செய்வது தான் வேடிக்கை.

[6] நியூஸ்.18.தமிழ், திமுக தலைவர் மு. ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய பாஜகவின் சி.பி ராதாகிருஷ்ணன்!, NEWS18, LAST UPDATED: SEPTEMBER 5, 2019, 10:30 AM IST.

[7] https://tamil.news18.com/news/tamil-nadu/bjp-leader-cp-radhakrishnan-praises-mk-stalin-in-thiruppur-san-202439.html

தமிழர்-தமிழரல்லாதோர் பிரச்சினை உருவாக்கப் படக் கூடாது – சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது, கும்பல் கொலைக்கு நியாயம் கற்பிக்கக் கூடாது (2)

மே 17, 2018

தமிழர்தமிழரல்லாதோர் பிரச்சினை உருவாக்கப் படக் கூடாதுசட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது, கும்பல் கொலைக்கு நியாயம் கற்பிக்கக் கூடாது (2)

Lynching Tamilnadu style- Pazhaverkadu

கும்பல் கொலை நடதுள்ள விவரங்கள்: திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, பழவேற்காடு, பெரிய பாளையம், ஆரணி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குழந்தை கடத்தல் பீதி நிலவுகிறது[1]. இதனால் ஊருக்குள் வரும் அப்பாவி வெளியாட்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது[2].

  1. 09-05-2018 அன்று, புலிகேட்டில், வீடில்லாத பாலத்தின் மீதுபடுத்துத் தூக்கிக் கொடிருந்த 45 வயது ஆளை அடித்து உதைத்து அந்த பாலத்திலிருந்தே தொங்கவிட்டனர். இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
  2. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தம்புகொட்டான்பாறை என்ற இடத்தில், அத்திமூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு வழி கேட்டு காரில் வந்தவர்களை, குழந்தை கடத்தல் கும்பல் என்று சந்தேகித்துகிராமத்தினர் அடித்து உதைத்தனர்[3]. அதில் ருக்மணி, 55 / 65 வயது பெண்மணி கொல்லப்பட்டார்[4]. இதுதொடர்பாக, 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்[5]. போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து கிராம மக்கள் தலைமறைவாகியுள்ளனர்[6]. இப்பகுதிகளிலிருந்து, செம்மரம் கடத்தல் விவகாரத்தில், ஆந்திராவில் அதிகம் கைது செய்யப் படுவது கவனிக்கத்தக்கது.
  3. வேலூரை அடுத்த சிங்கிரிகோவில் என்ற இடத்தில் 09-05-2018 அன்று மாலையில் சாலையில் நடந்த சென்ற 30 வயது மதிக்கத்தக்க ஒரு வட-இந்திய வாலிபரை, குழந்தையை கடத்த வந்தவர் / திருடன் என நினைத்து, அடித்து உதைத்ததில், அவனும் மாண்டான்.
  4. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள காட்டுமயிலூர் கிராமத்தில் 09-05-2018 அன்று இரவு சுற்றித்திரிந்த வடமாநில பெண் ஒருவரை, குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என கருதி கிராம மக்கள் மடக்கி பிடித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேப்பூர் போலீசார், அந்த பெண்ணை அங்கிருந்து மீட்டு அழைத்துச்சென்று விசாரித்தபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. பின்னர் அந்த பெண் சிகிச்சைக்காக விருத்தாசலம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

போலீஸார், வடநாட்டவருக்கு எதிராக “வாட்ஸ்-அப்” தகவல்களை தவறாகப் பரப்புவதால் அவ்வாறான நிகழ்சிகள் ஏற்படுகின்றன என்கிறார்கள்[7].

Lynching Tamilnadu style- Tiruvannamalai.woman.2

செம்மரக்கடத்தல், அக்குற்றத்தில் ஈடுபடும் தமிழகள், அதை மறைக்க இந்த பிரச்சாரம் என்றால், குற்றங்கள் இன்னும் அதிகமாகும்: செம்மரக் கடத்தல் கைதுகளில் சம்பந்தப் பட்டிருப்பவர்கள், இப்பகுதிகளைச் சேர்ந்தவர் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். இதனால், தமிழகத்திற்கும், ஆந்திராவுக்கும் பிரச்சினை உண்டாக்க, திராவிட சித்தாந்திகள் திட்டமிட்டுள்ளார்களா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. ஏனெனில், தெலுங்கர்ளுக்கரெதிராகவும் பிரச்சாரம் நடந்து வருகிறது. குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகள் வட மாவட்டங்களை கலக்கி வருகின்றன. காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்தும் வடமாநில கும்பலின் நடமாட்டம் இருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது[8]. ‘வாட்ஸ்-அப்’, ‘முகநூல்’ போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் இதுபோன்ற வதந்திகளால், இதுவரை அப்பாவிகள் பலர் தாக்கப்பட்டு உள்ளனர்[9].குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்புவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Lynching Tamilnadu style- Tiruvannamalai

எனது தாயை இப்படி அநியாயமாகச் சந்தேகித்துக் கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்[10]: குழந்தைக் கடத்தல் வதந்தியாலும், தவறான புரிதலாலும் கடந்த வாரம் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட ருக்மிணியம்மாளின் மகன் 42 வயது கோபிநாத்தின் துயரம் எல்லையற்றது. கோபிநாத்தைப் பின் தொடர்ந்து வந்த அவரது 2 வயது மகன் தனது பாட்டியைக் காண வேண்டும் என்று அழுத காட்சி மேலும் உருக்கமாகவும், வேதனையாகவும் இருந்தது. கடந்த வாரம் செவ்வாய் மாலை வரை தனது பேரன், பேத்திகளுடன் சென்னையை அடுத்த பல்லாவரத்தில் இருந்த தனது மகன் வீட்டில் கதை பேசி மகிழ்ந்து சோறூட்டிக் கொண்டாடி இரவுகளில் அவர்களைத் தூங்க வைத்து தலை கோதிக் கொண்டிருந்த ஒரு வயதான பெண்மணியை அறிமுகமில்லாத கிராம மக்களில் சிலர் குழந்தைக் கடத்தல்காரி எனச் சந்தேகித்து சரமாரியாகத் தாக்கிக் கொன்ற விதம் காணொளியாகக் காணக் கிடைக்கிறது. அதைக் கண்டு துக்கத்திலும், ஆத்திரத்திலும் பொங்கியவராக அவரது மகன் கோபிநாத், ‘எனது தாயை இப்படி அநியாயமாகச் சந்தேகித்துக் கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும், எது அதிகபட்ச தண்டனையோ அது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்’ என்று அரற்றுவது ஒருவகையில் நியாயமானதாகக் கூடத் தோன்றுகிறது[11].

Lynching Tamilnadu style- Tiruvannamalai.woman.3

குழந்தைகள் கடத்தல், குழந்தைகள் காணாமல் போவது, கிடைப்பது-கிடைக்காதது மக்களுக்கு ஆரிவிக்கப் படவேண்டும்:  குழந்தைகள் கடத்தல் சமாசாரம் பேசப்படாமல் இருந்தாலும், மாநிலக் குற்ற ஆவணக் காப்பகம் தரும் அதிகாரபூர்வக் கணக்குகள்படியே தமிழ்நாட்டில் சுமார் 2000 குழந்தைகள் காணாமல் போகின்றனர். “புள்ளப் பிடிக்கிற காரன்கள்” சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அன்றாடம் ஐந்து குழந்தைகள் காணாமல் போகின்றனர் எனும்போது, அவ்விசயத்தை விவாதிக்காமல், நடிகைகளைப் பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒருவேளை, பெற்றோர், உற்றோர், மற்றோர் பதற்றமடைவர், பயப்படுவர், மாநிலம் பெயர் கெடும் என்று மறைக்கப் பார்க்க்கின்றனர் போலும்.  இவர்களில் எத்தனை பேர் மீட்கப்படுகின்றனர், மீட்க முடியாமல் போகிறார்கள், வழக்குகள் எப்படி முடிக்கப் படுகின்றன என்பதெல்லாம், பொது மக்களுக்குத் தெரியாது. பொது இடங்களில் பிச்சை எடுப்பது, கூலிவேலைகளுக்கு பயன்படுத்தப் படுவது, முதலியவைப்பற்றியும் விவரங்கள் தெரியப்படுத்துவதில்லை.

Arya-dravida myths acting still-derogatory usage

ஊடகங்கள் பழக்கும் பசிக்கே சமூக வலைதளங்கள் தீனி தயாரிக்கின்றன: தி.இந்து, “செய்தி வியாபாரத்துக்காக நாள் முழுவதும் மக்களிடம் பரபரப்பைப் பரப்பிவரும் ஊடகங்களுக்கும் இதில் முக்கியமான பங்கு இருக்கிறது[12]. ஊடகங்கள் பழக்கும் பசிக்கே சமூக வலைதளங்கள் தீனி தயாரிக்கின்றன[13]. தன்னுடைய பன்மைத்துவக் குணத்தால் உலகின் பல்வேறு திசைகளிலும் பரவியிருக்கும் தமிழ்ச் சமூகத்தை இன்று கொஞ்சம் கொஞ்சமாக இனவெறி நோய்க்கிருமிகள் பீடிக்கத் தொடங்குவது மிக அபாயகரமானது. உடனடியாக முடிவுகட்டப்பட வேண்டியது!,” என்பதில் உண்மை இருக்கிறது. தி.இந்துவிலா, இது வந்துள்ளது என்று ஆச்சரியமாக இருந்தாலும், உண்மை என்பதால், கருத்தைப் பாராட்ட வேண்டியிருக்கிறது. ஆனால், ஊடகங்கள் அந்த அளவுக்கு தாழ்ந்து விட்டனவா என்ற கேள்வியும் எழுகின்றது.

© வேதபிரகாஷ்

17-05-2018

Arya-dravida myths acting still-mental

[1] மாலைமலர், குழந்தை கடத்தல் பீதிமனநோயாளி கொலையில் மேலும் 2 பேர் கைது, பதிவு: மே 14, 2018 13:09

[2] https://www.maalaimalar.com/News/District/2018/05/14130903/1162890/Two-more-people-have-been-arrested-in-Mental-patient.vpf

[3] தி.இந்து, குழந்தை கடத்தல் கும்பல் என்று சந்தேகித்து தாக்குதல்; மூதாட்டி கொலை வழக்கில் 23 பேர் கைது, திருவண்ணாமலை, Published : 11 May 2018 08:01 IST; Updated : 11 May 2018 08:01 IST

[4] http://tamil.thehindu.com/tamilnadu/article23845548.ece

[5] மாலைமலர், குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி கொலைகைது நடவடிக்கைக்கு பயந்து 11 கிராம மக்கள் ஓட்டம், பதிவு: மே 11, 2018 14:12.

[6] https://www.maalaimalar.com/News/District/2018/05/11141250/1162299/child-kidnapping-rumor-11-village-people-escaped-police.vpf

[7] The police say the trigger for the lynchings could be a rash of xenophobic messages circulating on WhatsApp warning that “north Indians” are looking to kidnap children in Tamil Nadu.

http://www.thehindu.com/opinion/editorial/loss-of-innocents/article23857175.ece

[8] ஐ.இ.தமிழ், குழந்தை கடத்தல் வதந்தி : வட மாவட்டங்களை உலுக்கும் கொலைகள், போலீஸ் எச்சரிக்கை, WebDesk, May 11, 2018

[9] https://www.ietamil.com/tamilnadu/child-trafficking-rumours-murders-police-warning/

[10] தினமணி, என் தாயைக் கொன்றவர்களுக்கு உச்சபட்ச தண்டனை அளியுங்கள்! ருக்மிணியம்மாளின் மகன் உருக்கமான வேண்டுகோள்!, By RKV | Published on : 14th May 2018 01:09 PM

[11] http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/may/14/give-maximum-punishment-to-my-mothers-killers–gopinath-so-rukmini-2919581.html

[12] தி.இந்து, அப்பாவிகள் படுகொலைக்கு முடிவுகட்டப்பட வேண்டும்!, Published : 16 May 2018 08:51 IST; Updated : 16 May 2018 12:44 IST

[13] http://tamil.thehindu.com/opinion/editorial/article23899718.ece

 

மோடி-பிஜேபி வேறு, வாஜ்பேயி-பிஜேபி வேறு – ராஜா-கனிமொழியை சிறைவைத்த காங்கிரஸ் – இக்கட்சிளுடன் திமுக கூட்டு கிடையாது – கருணாநிதி திமுகவினரிடம் கெஞ்சலாக அறிவிப்பு (2)!

திசெம்பர் 16, 2013

மோடி-பிஜேபி வேறு, வாஜ்பேயி-பிஜேபி வேறு – ராஜா-கனிமொழியை சிறைவைத்த காங்கிரஸ் – இக்கட்சிளுடன் திமுக கூட்டு கிடையாது – கருணாநிதி திமுகவினரிடம் கெஞ்சலாக அறிவிப்பு (2)!

திமுகவினரின் கருத்தைத் தொகுத்து, அதே நேரத்தில் தீர்ப்பளிக்கும் முறையில் கருணாநிதி பேசியது கவனிக்க வேண்டிய விசயமாக இருக்கிறது. காங்கிரஸைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்[1], ஆனால், பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொண்டால் நல்லது என்றும் பேசியிருக்கிறர்கள். தினகரன் அவரது பேச்சை வெளியிட்டுள்ளது[2]. பொதுவாக நக்கீரன் அம்மாதிரி வெளியிடும், ஆனால், இப்பொழுது சுருக்கத்தை வெளியிட்டுள்ளது[3]. கருணாநிதி செய்தியாளர்களிடம் வழக்கம் போல பதில் சொல்லி சமாளித்திருக்கிறார்[4]. பிஜேபியும் இல்லை, காங்கிரஸும் இல்லை எனும் போது, வேறு யாடுடன் கூட்டு என்பது விந்தையாக இருக்கிறது[5]. ஆங்கில ஊடகங்கள் மட்டும் திட்டவட்டமாக பிஜேபி அல்லது காங்கிரஸ் கூட, கூட்டு இல்லை என்று தெரிவித்திருப்பது நோக்கத்தக்கது[6]. இதனை நேற்று இரவே (15-12-2013) ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டு விட்டன.

ஒரு  இயக்கத்தையே,   ஒரு  பெரிய  ஊழல்  சாம்ராஜ்யத்தில்  சிக்கவைக்கும்  முயற்சியில்  ஈடுபட்டவர்கள்  யார்யார்  என்று  எனக்கு  இன்னமும்   நன்றாகத்  தெரியும்: “நீங்கள் இந்தப் பொதுக்குழு தீர்மானங்கள் மூலமாக அனுமதித்திருக்கின்ற அந்தக் குழுவிலே இடம் பெறுகிறவர்கள், அந்தக் குழு யாரிடத்திலே தன்னுடைய முடிவினைத் தெரிவிக்க விரும்புகிறதோ, அந்த முடிவைப் பற்றி யோசித்து, இறுதி முடிவு எடுக்க வேண்டிய இடத்திலே இருக்கின்ற நானும், அன்பழகனும், ஸ்டாலினும் அத்தனை பேரும் இவைகளை எல்லாம் மறந்து விட மாட்டோம். மறந்து விட்டு ஏமாந்து விடாதீர்கள்

என்று நீங்கள் சொன்னால், நான் உங்களுக்குச் சொல்கிற பதில், ஒரு முறை பட்டது போதும், தனிப்பட்ட ஒரு காயத்திற்காக நாங்கள் அழவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட காயம் அல்லது ராஜாவிற்கு ஏற்பட்ட காயத்திற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. அவைகளை நாங்கள் சமாளிக்க முடியும்ஆனால் ஒரு இயக்கத்தையே, ஒரு பெரிய ஊழல் சாம்ராஜ்யத்தில் சிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்று எனக்கு இன்னமும் நன்றாகத் தெரியும். திமுகவை ஊழலில் சிக்க வைத்தவர்களில் காங்கிரசில் குறிப்பாக உள்ளார்கள் என்றால், அந்த கூட்டாளிகளை, திமுக வெளிப்படுத்தலாமே? அந்த பிஜேபி வேறு, இந்த பிஜேபி வேறு எனும் போது, அந்த காங்கிரஸ்காரர்கள் வேறு, இந்த காங்கிரஸ்காரர்கள் வேறு, என்று இனம் கான வைக்கலாமே? ஏன் அவர்களை மறைத்து சாட வேண்டும்? துரோகிகளின் முகமூடிகளை கிழித்து எறியலாமே? இதுதானே தகுந்த சந்தர்ப்பம்?

அதையெல்லாம் மறந்து விட்டு எப்படி அவர்களை நாங்கள் காப்பாற்றியிருக்கிறோம் என்பது காப்பாற்றப்பட்டவர்களுக்குத் தெரியும்.

இந்திய  மீனவர்களைக்  கூட  பாதுகாக்க  முடியாத  நிலையிலே  இருக்கிறோம்:  “இதையெல்லாம் விட முக்கியமாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இன்றைய மத்திய காங்கிரஸ் அரசால் நாங்கள் எந்த அளவிற்கு ஏமாற்றப்பட்டோம் என்பதும், தொடர்ந்து தாக்கப்படுகின்ற இந்திய மீனவர்களைக் கூட பாதுகாக்க முடியாத நிலையிலே இருக்கிறோம் என்பதும் மறந்து விடக் கூடிய ஒன்றா என்ன? ஆகவே, உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். இவைகளை எல்லாம் மறந்து விட்டு நாங்கள் மீண்டும் காங்கிரசுடன் சேருவோம் என்று தயவுசெய்து நீங்கள் எண்ண வேண்டாம்[7].

இரண்டு  கட்சிகள்  விடப்பட்டு  விட்டன –   தனித்து  நிற்போம்: “நம்மோடு அணி சேர எந்தக் கட்சியும் விரும்பாவிட்டாலும் கூட, நாம் அதற்காகக் கவலைப்படப் போவதில்லை. 75 இலட்சம் பேர் கட்சி உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அந்த 75 லட்சம் பேரும்அவருடைய வீட்டார், குடும்பத்தார், உற்றார் உறவினர்களை எல்லாம் சேர்த்துப் பார்த்தால் அந்த எண்ணிக்கை கோடிக்கணக்கில் வரும். அவைகளை எல்லாம் நாங்கள்

கணக்குப் பார்த்து, யாரும் அணி சேர வரா விட்டாலும் கூட, தனியாக நிற்போம். வந்தால், வந்தவரையிலே இலாபம் என்று வட்டிக் கணக்குப் பார்க்காமல், அவர்களுடைய தோழமை உணர்வுக்கு, எங்களோடு இருந்தால் நாட்டுக்கு நன்மை என்று கருதுகிறார்களே, அந்த நம்பிக்கைக்கு நாங்கள் தருகின்ற மதிப்பாக, அணி சேருவோம். ஆனால் யாரோடு அணி சேர்ந்தாலும், யாரோடு என்பதிலும் ­இரண்டு பேரும் இரண்டு கட்சிகள் ­நான் பேசும்போதே விடப்பட்டு விட்டன என்பதை நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். மிச்சம் இருக்கும் பெரியக் கட்சியான அதிமுகவுடன் கூட்டு என்பது பெரிய ஜோக்காகி விடும். அதேபோல, அதிமுககூட்டணியில் உள்ள கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொள்ள முடியாது. பிறகு தமிழகத்தில் யாருடன் திமுக கூட்டு வைத்துக் கொள்ள முடியும்? இனி உதிரிப்பூக்களை வைத்துக் கொண்டு மாலைக் கட்டினால், அதில் வாசம் வருமா அல்லது மாலைதான் முழுமையடையுமா?

அப்படிச் சேரும்போது, கட்சிகளோடு அணி சேருவது பற்றி அல்ல. தனித்து நிற்போம் என்று நான் சொன்னேன்”, இவ்வாறு கருணாநிதி பேசினார்[8].

கட்சியை  விலை   பேசி  விடாதீர்கள்’:  பொதுக்குழுவில்   கருணாநிதி  பேசியதாவது: “நாம் தனித்து நின்றாலும் கூட, ஓரிரு கட்சிகளின் துணையோடு மாத்திரம் தான் நிற்க முடியும் என்றாலும் கூட, நீங்கள் தான் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவீர்கள். அப்படி அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள், அந்த வேட்பாளருக்கு ஆதரவாக இருக்கின்ற தொண்டர்கள், தனி அணி அமைத்து விடக் கூடாது. அணி தேவை என்று நான் நம்புகிறேன், ஆனால் நீங்கள் அணி வேண்டும் என்றீர்களே, அதனால் நாங்கள் எங்கள் ஊரிலே, நீங்கள் யாரை நிறுத்துகிறீர்களோ, அவர் ஒரு அணி, அவரை எதிர்க்கின்ற நாங்கள் இன்னொரு

அணி என்று பல அணிகளாக ஆகி, எல்லா அணிகளும், பல உப நதிகள், ஒரு பெரு நதியிலே கலந்து அதை மகாநதியாக ஆக்குவதைப் போல, நீங்கள் ஆக்க வேண்டுமே தவிர, கிளைநதிகளாக ஆனால், அது வாய்க்கால்களாக மாறி விடும் என்பதை மறந்து விடாதீர்கள்அணி சேருகின்ற நேரத்தில், அந்த அணிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இனி வெற்றி பெற வாய்ப்பிலை என்று தெரிந்து விட்டால், திமுக எங்கு பிரிந்து விடுமோ என்று பயந்து விட்டார் போலும். பிஜேபியை ஆதரிக்கும் திமுக, எதிர்க்கும் திமுக என்று இரண்டாக பிரிந்து விட்டால் என்னாவது? எம்.பி ஆகலாம், மந்திரியாகலாம் என்ற ஆசை வந்தால், இதெல்லாம் சாத்தியம் தானே?

அந்த அணிகளில் ஒன்றாக திமுக இருந்தால், அந்த திமுக வேட்பாளருக்கு அவர் எந்தத் தொகுதியிலே நின்றாலும், எந்தத் தொகுதியிலே போட்டியிட்டாலும், யாரை எதிர்த்துப் போட்டியிட்டாலும் நம்முடைய முழு பலமும், முழு சக்தியும், நம்முடைய முழுமையான ஆர்வம் அனைத்தும் அவருடைய வெற்றிக்கே தான் என்கிற அந்த நிலையில் நீங்கள் பாடுபட வேண்டும். அந்த வெற்றியை நீங்கள் குவித்து, அடுத்த பொதுக் குழுவில் உங்களுக்கெல்லாம் நானும், அன்பழகனும், ஸ்டாலினும் நன்றியை குவிக்கின்ற வாய்ப்பை தாருங்கள்

நான்  தலைவன்  என்ற  அந்த  முறையிலே,   அந்த  தகுதியைக்  கூட  மறந்து  விட்டு  உங்களைக்  கெஞ்சிக்  கேட்கிறேன்: “இன்னும் சொல்லப் போனால், நான் தலைவன் என்ற அந்த முறையிலே, அந்த தகுதியைக் கூட மறந்து விட்டு உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். கழகத்தை, மாற்றாருக்கு விலை பேசி விடாதீர்கள்

உங்கள் ஒற்றுமையை வீணாக்கி விடாதீர்கள். வேற்றுமையினால் ஒருவருக்கு ஒருவர் உள்ள தனிப்பட்ட விரோதங்களை எல்லாம், இந்த தமிழகத்தைக் காக்க வந்த இந்த இயக்கத்தின் மீது காட்டி, இயக்கத்தைப் பழி தீர்த்து விடாதீர்கள். கட்சியை கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். வெற்றி வரும், தோல்வி வரும், ஆனால் கட்சி நிலைக்கும். கெஞ்சிக் கேட்டுக் கொள்ளும் அளவிற்கு முதிர்ந்த தலைவர் வந்து விட்டார் என்றால், தொண்டர்கள் வேறுவிதமாக நினைக்கிறார்கள் என்றாகிறது. ஸ்டாலின், அழகிரி என்று கோஷ்டிகள் வேறுவிதமாக முடிவெடுத்தாலும், திமுக பிரியத்தான் செய்யும். அதனால், பாவம், கெஞ்சியும் பார்க்கிறார்.

ஒரு கட்சியின் ஆற்றலை, அதனுடைய வாழ்வை, அதனுடைய வளத்தை நிர்ணயிப்பது தேர்தல் வெற்றி அல்ல. தேர்தல் என்பது வந்து போகின்ற ஒன்று.

 

அதே  நேரத்தில்  ஒரு  தேர்தல்,   நமக்குச்  சோதனை: ஆனால் அதே நேரத்தில் ஒரு தேர்தல், நமக்குச் சோதனை. என்ன சோதனை என்றால், நாம் எந்த அளவிற்கு ஒற்றுமையாக இருக்கிறோம், எந்த அளவிற்கு நாணயமாக இருக்கிறோம், எந்த அளவிற்கு ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்காமல் இருக்கிறோம், எந்த அளவிற்கு ஒருவரையொருவர் வீழ்த்தாமல் நல்ல எண்ணத்தோடு பழகிக் கொண்டிருக்கிறோம் என்பதை அளக்கும் கருவிநாளைய தினம் எந்த அணியோ, எந்தக் கட்சியோடு

அணியோ, அந்த அணி உங்களால் முன்மொழியப்பட்ட, உங்களால் தீர்மானிக்கப்பட்ட, நீங்கள் வகுத்த தீர்மானங்களில் ஒன்றான திமுக.வின் தலைவரும், பொதுச் செயலாளரும் ஒரு குழுவை அமைத்து, அவர்கள் மூலமாக தேர்தல் உடன் பாட்டிற்கான சக்திகளை ஒன்று திரட்ட வேண்டுமென்று சொல்லியிருக்கிறீர்களே, அந்தச் சக்தியை நாங்கள் வீணாக்காமல் பாடுபடுவோம், பணியாற்றுவோம். 2014 தேர்தல் திமுகவிற்கு சோதனை என்பது வேடிக்கையாக இருக்கிறது. 2014 தேர்தல், நிச்சயமாக மோடிக்கு சோதனை. ஏனெனில் வெற்றி பெறாவிட்டால், அவரது அவரது தேசிய அரசியல் முடங்கிவிடும். காங்கிரசுக்கு சோதனை, ஏனெனில், தோற்றுவிட்டால், இனி தலையெடுக்க முடியாது. ஆனால், திமுகவிற்கு ஏன் சோதனை காலம் வரவேண்டும் என்று தெரியவில்லை!

 அது எங்களுக்காக அல்ல, உங்களுக்காக, உங்களுடைய எதிர்கால சந்ததிகளின் வாழ்வுக்காக, தமிழுக்காக, தமிழர்களுக்காக, திராவிட இன உணர்வைக் கட்டிக் காப்பாற்றுவதற்காக என்பதை தெரிவித்து கொள்கிறேன்”, இவ்வாறு கருணாநிதி பேசினார்.

 

வேதபிரகாஷ்

© 16-12-2013


[2] தினகரன், பொதுக்குழுவில்கருணாநிதிதிட்டவட்டம் : காங்கிரஸ், பாரதியஜனதாவுடன்திமுககூட்டணிஇல்லை,மாற்றம் செய்த நேரம்:12/16/2013 1:53:01 AM.

திராவிடத் திருமணங்களும், தமிழர்களின் பிணக்குகளும், அரசியல்வாதிகளின் சுணக்கங்களும்

மே 28, 2010

திராவிடத் திருமணங்களும், தமிழர்களின் பிணக்குகளும்,அரசியல்வாதிகளின் சுணக்கங்களும்

சுயமரியாதை திருமணம்

எம்.ஜி.ஆரும், நானும் பிரியக்கூடாது என பாடுபட்டவர் : ஆர்.எம்.வீரப்பனுக்கு கருணாநிதி புகழாரம்

நன்றி-தினமலர்: செய்தி, படம்                           http://www.dinamalar.com/News_Detail.asp?Id=7673
சென்னை : “”எம்.ஜி.ஆருக்கும், எனக்கும் இடையே பிணக்கு விளைந்த போதெல்லாம், அதை சரி செய்ய பாடுபட்டவர் ஆர்.எம்.வீரப்பன்,” என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார். முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் – ராஜம்மாள் தம்பதியின் இளைய மகன் தங்கராஜுக்கும், கோவை தொழிலதிபர் மோகன் – மோகனா தம்பதியின் மகள் தாரிணிக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது.

விழாவுக்கு தலைமை வகித்து, திருமணத்தை நடத்தி வைத்து தமிழக முதல்வர் கருணாநிதி பேசியதாவது: எனக்கும், ஆர்.எம்.வீரப்பனுக்கும் உள்ள தொடர்பு நீண்ட காலத் தொடர்பு, மறைந்தும் மறையாத என் ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆருடைய அணுக்கத் தொண்டர்களிலே ஒருவராக, அன்பு நண்பர்களில் ஒருவராக, அவசியப்பட்ட ஆலோசகர்களிலே ஒருவராக விளங்கியவர் வீரப்பன். “குடியரசு’ அலுவலகத்தில் 1945ம் ஆண்டு துணை ஆசிரியராக நான் இருந்த காலம் தொட்டு எனக்கும், இவருக்கும் நெருக்கமான நட்பு, அரும்பி மலர்ந்து இன்றைக்கும் மணம் வீசுகிற வகையில், அவரது இல்ல மண விழாவை நான் நடத்தி வைக்கவும், அவர் வரவேற்கவுமான சூழல் உருவாகியிருக்கிறது.

இந்த மேடையில் எனக்கு முன் பேசியவர்கள், எங்களுக்குள் என்றும் பிணக்கு ஏற்பட்டதில்லை என்று இங்கே சொன்னார்கள். இவர் என்னை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்ட அந்தக் காலத்தில் கூட என்னிடம், “கள்ளக் காதல்’ கொண்டவர். தி.மு.க.,வுக்கும், எம்.ஜி.ஆர்., தலைமையில் இயங்கிய அ.தி.மு.க.,வுக்கும் இடையே சில பிரச்னைகள் தோன்றும் போதெல்லாம், இவரிடமிருந்து எனக்கு ஒரு ரகசிய கடிதம் வரும். எனக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே ஒரு பிரிவு ஏற்படக்கூடிய ஒரு சூழல் 1971ம் ஆண்டில் ஏற்பட்ட போது, வீரப்பன் என் இல்லத்திற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக, “அந்தச் சூழ்நிலை உருவாகக்கூடாது; நீங்கள் இருவரும் பிரிந்து விடக்கூடாது; ஒன்றாக இருந்து தான் இயங்க வேண்டும். பிரிக்கிற சில பேர் யார் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒன்றுபட்டு பணியாற்றுங்கள்’ என்று கண்ணீர் கலந்து தன் கவலையைத் தெரிவித்தவர்களில் மிக முக்கியமானவர். பல நேரங்களில் எம்.ஜி.ஆருக்கும், எனக்கும் அல்லது தி.மு.க.,விற்கும் இடையே பிணக்கு விளைந்த போதெல்லாம், அதை சரி செய்ய பாடுபட்டவர் ஆர்.எம்.வீரப்பன். வீரப்பன் என் நீண்ட கால நண்பர் என்பதால் அவருக்கு அந்தக் கவலை இருந்தது.

மேடையில் திருநாவுக்கரசு பேசும் போது, “ஆர்.எம்.வீரப்பனுக்கு எம்.எல்.சி., பதவி கொடுங்கள்’ என்று சொன்னார். பதவிகளை பல பேருக்கு கொடுக்கிற இடத்தில் இருந்தவர் வீரப்பன். அவர் பதவிகளை பகிர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டியவரே தவிர, கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டியவர் அல்ல. அந்தளவிற்கு இந்த இயக்கத்தின் ஆணிவேராக, அடிவேராக, இயக்கத்தை வளர்க்கின்ற வலுவான விழுதுகளிலே ஒருவராக அன்றைக்கும் இருந்தார்; இன்றைக்கும் இருக்கிறார். இவரை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்.

நாள் முழுவதும் அளப்பரிய பணிகள், அதற்கிடையே கோவைக்கு மாநாட்டு பணிகளைப் பற்றி ஆய்வு செய்யச் செல்கிறோம். அங்கிருந்து ஊட்டிக்குச் சென்று ஓரிரு நாட்கள் ஓய்வு பெறலாமே என்று எண்ணினேன். ஆனால், அங்கு சென்ற எனக்கு இந்த நினைவு வந்தது. நினைவு சாட்டையாக விழுந்தது. “வீரப்பன் இல்லத் திருமணத்திற்கு செல்லாமல் ஓய்வு ஒரு கேடா உனக்கு’ என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டு இங்கே வந்துள்ளேன் என்றால், அது நட்பின் ஆழத்தை, நட்பின் உயர்வை உணர்த்தக்கூடிய ஒன்று என்பதை உங்களுக்கு எடுத்துச் சொல்லி, அத்தகைய ஒரு உத்தம நண்பர் என்றைக்கும் இந்த இயக்கத்தின் தூணாக விளங்கிக் கொண்டிருப்பவர். அவரது இல்லத் திருமணத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

விழாவில், நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்.எம்.வீரப்பன் அனைவரையும் வரவேற்றார். மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் நன்றி கூறினார்.

நான் ஆணே இல்லை, நாம் எப்படி செக்ஸில் ஈடுபட்டிருக்க முடியும்?

ஏப்ரல் 30, 2010

நான் ஆணே இல்லை, நாம் எப்படி செக்ஸில் ஈடுபட்டிருக்க முடியும்?

“நான் ஆணே இல்லை. ஆகவே எந்தவிதத்திலும் நான் பெண்களுடன் செக்ஸில் ஈடுபட்டிருக்க முடியாது. வேண்டுமானால், ஆண்மை பரிசோதனையை என்மீது பிரயோகம் செய்து பாருங்கள்” [“I’m not a man. There’s no way I could have indulged in sexual activities with women. Do a potency test on me”]. இப்படி சொன்னது நித்யானந்தா!

Nityananda-male-or-female

Nityananda-male-or-female

இருப்பினும் துப்பறியும் வீரர்கள் அதை நம்புவதாக இல்லையாம், ஏனெனில் பாஸ்போர்ட்டில் “ஆண்” என்றுதான் போட்டிருக்கிறது, “அலி” என்று போடவில்லை, என்று விசாரணையைத் தொடர்ந்துள்ளார்கள்!

கனிமொழியும், ஜெயலலிதாவும் (எடா, ஆஸ்கன், ஸ்டார்,ஸ்பெக்ட்ரம் தொடர்புகள்)

ஏப்ரல் 25, 2010

கனிமொழியும், ஜெயலலிதாவும்!

ஜெயலலிதாவுக்கு கனிமொழி நோட்டீஸ்
எடா ஸ்டார் ப்ராபர்டி டெவலப்பர்ஸ் ஒப்பந்தம் செய்து கொண்டது, துபாயைச் சேர்ந்த எடா ஆஸ்கன் குழுமம் நிலத்தை வாங்கிக் கொண்டது, ரஸ் அல் கைமா நிறுவனத்துடன் ஒப்பந்தம், .டி.. அஸ்கான் ஸ்டார் குழுமநிர்வாகஇயக்குனர் சையது லாகுதீன், துபாயில் நிகழ்ச்சிகள் நடத்ததவது, இந்த கமெனிகள் ஸ்பான்ஸர் செய்வது முதலியவற்றை இங்கு காணலாம்.

First Published : 25 Apr 2010 01:13:16 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?Title=…………artid=232228&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu

சென்னை, ஏப். 24: இந்தோனேசியாவில் தமக்கு நிலக்கரி சுரங்கம் இருப்பதாக கூறியதற்காக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு முதல்வர் கருணாநிதியின் மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.கனிமொழியின் வழக்கறிஞர் பி.ஆர். ராமன் இதுதொடர்பாக ஜெயலலிதாவுக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள நோட்டீஸ் விவரம்:நெய்வேலியில் போராட்டத்தில் பங்கேற்ற நீங்கள் (ஜெயலலிதா) எமது கட்சிக்காரர் (கனிமொழி) மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியதாக கடந்த 19-ம் தேதி பத்திரிகை செய்தி வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவில் கனிமொழியும், அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயமும் பங்குதாரர்களாக உள்ள நிலக்கரி சுரங்கம் இருப்பதாகவும், அங்கிருந்து தமிழ்நாடு மின்வாரியத்துக்கு நிலக்கரி வழங்கப்படுவதில் முதல்வரின் குடும்பத்துக்கு ஒரு டன்னுக்கு 21 அமெரிக்க டாலர் லஞ்சமாகச் செல்வதாகவும் கூறியுள்ளீர்கள்.எமது கட்சிக்காரரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்தக் கருத்துகள் உள்ளதாக அவர் கருதுகிறார். எமது கட்சிக்காரருக்கு இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கம் இருப்பதாகக் கூறுவது பொய்யானதாகும். நிலக்கரி வெட்டி எடுப்பது அல்லது நிலக்கரி வணிகம் போன்ற எந்த தொழிலிலும் இந்தோனேசியாவிலோ அல்லது உலகின் வேறு பகுதிகளிலோ எமது கட்சிக்காரர் ஈடுபடவில்லை என்று தெரிந்திருந்தும், களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான தகவல்களை வெளியிட்டிருக்கிறீர்கள்.மேலும் திமுக அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயத்துடன் வணிக ரீதியில் கூட்டு இருப்பதாகக் கூறியிருப்பதும் பொய்யானதாகும். முதல்வரின் மகள் என்ற முறையில், தன் நெருங்கிய உறவினர்களுடன் சேர்ந்து சட்டவிரோதமாக ரூ.2000 கோடி சம்பாதித்துள்ளதாக, முற்றிலும் பொய்யான, மிக மோசமான குற்றச்சாட்டை எமது கட்சிக்காரர் மீது கூறியிருக்கிறீர்கள்.தமிழ் கலை மற்றும் கலாசாரத்தை மிக உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும் பொது சேவைக்கு தனது நேரத்தை செலவிட்டு வரக் கூடிய நேரத்தில் உமது இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.எமது கட்சிக்காரருக்கு தமிழகத்தில் மட்டுமின்றி உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் நற்பெயர் இருக்கிறது. அந்த நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாக உங்கள் கருத்துகள் அமைந்திருப்பதாக எமது கட்சிக்காரர் கருதுகிறார்.அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகள் தொடர்பான எந்தவொரு விமர்சனத்துக்கும் ஊடகங்கள் மூலமாகவே பதில் தர முடியும். இருந்தாலும் அவருடைய நற்பெயருக்கும், மதிப்புக்கும் களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதால் அதை நீதியின் பாதுகாப்பு மூலமாக சந்திக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். இந்தச் சூழ்நிலையில் இந்த நோட்டீஸ் கிடைத்த மூன்று நாள்களுக்குள் உமது அவதூறான கருத்துகளை நீங்கள் திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்காவிட்டால், சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை என்று வழக்கறிஞர் கூறியுள்ளார்.

ETA STAR Property developers signs MoU with Tamil Nadu government

Published on Friday, May 25th, 2007 at 9:54 pm under News, Technology.

http://chennai365.com/news/eta-star-property-developers-signs-mou-with-tamil-nadu-government/

ETA_STAR_Property-Karunanidhi

ETA_STAR_Property-Karunanidhi

An Information Technology Special Economic Zone and integrated township, spread over a total extent of about 350 acres, will come up in Kancheepuram district, near Chennai. The project will employ about 50,000 people. A memorandum of understanding to develop them was signed on Friday by representatives of ETA Star Property Developers and the Tamil Nadu Industrial Development Corporation in the presence of Chief Minister M. Karunanidhi.

TIDCO will be a partner in the Rs.3,750-crore joint venture project, ETA Startech City. The entire land has been purchased by the Dubai-based ETA Ascon group and no acquisition had to be done by the government, according to a press release. The project will be implemented over a period of three years. As much as 175.3 lakh sq ft of space will be created in row houses, bungalows, a shopping mall, car parks, hospitals, schools, hotels and serviced and other apartments. Companies dealing with Information Technology and Information Technology Enabled Services will occupy about 50 acres.

ETA Ascon is involved globally in civil construction, buildings and roads, real estate development, power projects, trading, shipping, port management, manufacturing, retail, automobiles, vertical transportation and building maintenance. TIDCO will facilitate the project and get the requisite approvals from service agencies in the State, said its Chairman and Managing Director S. Ramasundaram. The work is expected to start in August. The IT SEZ part will be completed in about two years. The township part will proceed based on requirements and is expected to be completed in about five years.

Ras Al Khaimah Investment Authority signs MoU to set up mega township projects in Tamil Nadu, India

Published on Monday, April 30th, 2007 at 10:12 pm under News, Real Estate.

http://chennai365.com/news/ras-al-khaimah-investment-authority-signs-mou-to-set-up-mega-township-projects-in-tamil-nadu-india/

Khater massaad Karunanidhi MOU

Khater massaad Karunanidhi MOU

Dr. Khater Massaad, Advisor to the RAK Crown Prince and CEO of RAK Investment AuthorityÂÂ

The Ras Al Khaimah Investment Authority (RAKIA) has signed a Memorandum of Understanding (MoU) with the Government of the Indian State of Tamil Nadu to set up two mega township projects in the State with an investment outlay of AED 2 billion. The MoU for the landmark urban infrastructure development projects was signed by Dr. Khater Massaad, Advisor to the RAK Crown Prince and CEO of RAKIA, and S. Ramasundaram, Chairman and Managing Director of Tamil Nadu Industrial Development Corporation Ltd, in the presence of Tamil Nadu Chief Minister, M. Karunanidhi in Chennai on Saturday.

The project in the industrial city of Coimbatore will come up on 1000 acres and will have an Information Technology Special Economic Zone supported by an integrated feeder township. The township will also have world class leisure and residential facilities including golf course, shopping malls, resort hotel, health spa and residential villas and apartments. The township, expected to be completed in five years, will have about 5 million sq.ft of IT space.

The second project would witness the creation of a world class marina and township at Kadalur in Kancheepuram district. The 500- acre marina project would have water sports, leisure, entertainment, premium residences and a world class golf course. Speaking on the ambitious overseas venture of RAKIA, Dr. Khater Massaad said that RAKIA, under the guidance of H.H. Sheikh Saud bin Saqr Al Qasimi, Crown Prince and Deputy Ruler of RAK, was privileged to be able to partner the State of Tamil Nadu in the world class project that will catapult the State to the forefront of development. ‘We believe that the landmark venture would enable RAKIA to share its considerable expertise in infrastructure development and property sector for the development of Tamil Nadu,’ he said.

Dr. Massaad said that creation of top- notch urban infrastructure in cities like Coimbatore would give the much needed fillip to the industry and business environment in the State and facilitate further investment in IT and other sectors. “The venture marks the further strengthening of the close relations between Ras Al Khaimah and India, which has seen the creation of many successful partnerships like the RAK Ceramics factory located at Kakinada in Andhra Pradesh (AP), the proposed one million tonne capacity Alumina plant in AP and many mega Indian industrial ventures based in RAK,” he added. Dr. Massaad said that the townships will be designed and constructed by internationally renowned architects and contractors. Ras Al Khaimah has emerged as a favourite destination for life-style and tourism development projects in the region. According to a research study published recently, investors have lined up nearly AED 60 billion worth of real- estate projects for completion in Ras Al Khaimah before 2010.

துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தமிழரங்கம் – 2010

புதன்கிழமை, பிப்ரவரி 17, 2010, 12:26[IST]

துபாய்: அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா, அமீர‌க‌த் தமிழ‌ர்க‌ள் அமைப்பின் 8வ‌து ஆண்டு விழா, செம்மொழி மாநாட்டிற்கு பாராட்டு விழா ஆகியவை இணைத்து த‌மிழ‌ர‌ங்க‌ம் 2010 என்ற நிகழ்ச்சி துபாயில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பிப்ர‌வ‌ரி 12, வெள்ளிக்கிழ‌மை அன்று சேக் ராஷீத் ஆடிட்டோரியத்தில் விழா நடைபெற்றது. இதில், க‌விஞ‌ர் க‌னிமொழி எம்.பி., தமிழக ப‌ள்ளிக்க‌ல்வித் துறை அமைச்ச‌ர் த‌ங்க‌ம் தென்ன‌ர‌சு, திராவிட‌ர் க‌ழ‌க‌த் த‌லைவ‌ர் வீர‌ம‌ணி, இ.டி.எ. அஸ்கான் ஸ்டார் குழும‌ நிர்வாக‌ இய‌க்குன‌ர் சைய‌து ச‌லாகுதீன், ந‌டிக‌ர் ப‌சுப‌தி, சாக்கோட்டை அன்ப‌ழ‌கன், அமீர‌க‌த் தமிழ‌ர்க‌ள் அமைப்பின் கெள‌ர‌வ‌த் த‌லைவ‌ர் அஜ்மன் மூர்த்தி மற்றும் அமீர‌க‌த் தமிழ‌ர்க‌ள் அமைப்பின் த‌லைவ‌ர் அமுத‌ர‌ச‌ன் ஆகியோர் க‌ல‌ந்து கொண்ட‌னர்.

பெரியாரும், பகவான் ரமண ரிஷியும்!

ஜனவரி 26, 2010

கடவுள், மதம், ஜாதி இல்லை என்ற பெரியார் மனிதநேயத்திற்காக பாடுபட்டார்
பகவான் ரமண ரிஷியோ தன் குடும்பத்திற்காக பாடுபட்டார்
சிவகாசி பொதுக்கூட்டத்தில் தமிழர்தலைவர் விளக்கம்

http://viduthalai.periyar.org.in/20100126/news12.html

சிவகாசி, ஜன.26_ கட-வுள், மதம், ஜாதி இல்லை என்று சொன்ன பெரி-யார் மனிதநேயத்-திற்காக பாடுபட்டார். மக்களை ஒன்றுபடுத்-தினார். கட-வுள் ரமண-ரிஷி மக்க-ளுக்கு எந்த பயனும் செய்யவில்லை. குடும்பத்-திற்கே பயன்-பட்டார் என்று திராவி-டர் கழக தலைவர், தமிழர் தலை-வர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவு-ரையாற்-றி-னார்.

தமிழர் தலைவர் கி.வீர-மணி அவர்கள் ஆற்றிய உரை-யின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு: தவறு செய்தால் தண்டனை உண்டு

தவறு செய்தால் தண்-டனை அனுபவிக்க வேண்-டும். இதுதான் வள்ளு-வரு-டைய வாழ்க்கை முறை. இதுதான் தமிழ-னுடைய வாழ்க்கை முறை தவறு செய்யாமல் வாழுங்-கள் என்று திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கிறது.

மீறி தவறு செய்து-விட்டால் அதற்குரிய தண்டனையை அனுப-விக்கத் தயாராகுங்கள். இதுதான் தமிழர்க-ளு-டைய வாழ்க்கை முறை. தவறு செய்யக்கூடாது என்பது தமிழர்களுடைய பண்பாட்டு முறை. தவறு செய்வது என்பது ஆரிய பண்பாட்டு படை யெடுப்-பினாலே வந்த ஒன்று. இவற்றை எல்லாம் நீங்-கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரியாரியக்கம் வெறுக்க வேண்டியது அல்ல. மாறாக ஒவ்வொரு-வரும் பங்கேற்க வேண்-டிய இயக்கம். பெரியார்-காமராஜர்

தமிழ்நாட்டிலே இந்த அளவுக்கு கல்வி வளர்ந்-திருக்கிறது என்றால் அதற்கு அடித்தள-மிட்-டவர் காமராஜர் அல்-லவா? தந்தை பெரியார் இல்லாவிட்டால் காம-ராஜர் ஆட்சிக்கு அவ்-வ-ளவு பெரிய பலம் வந்தி-ருக்குமா? எனவே எல்லா துறைகளிலும் அறிவியல் வாழ்வியல் இப்படி எல்-லாவற்றை-யும் சொல்லிக்-கொடுக்-கின்ற இயக்கம் இந்த இயக்கம்.

பெரியாருடைய இயக்-கத்தில் உள்ளவர்கள், பெரியாருடைய தொண்-டர்கள் அனாவசிய செலவு செய்ய மாட்-டார்களே.

இங்கே கூட அய்யா அவர்கள் ரூ.50 ஆயி-ரத்தை தாராளமாக நன்கொடை கொடுத்-தார். ஏன் கொடுத்தார்? அனாவசிய செலவு என்-பது கருப்பு சட்டைக்-கார-னுக்கு கிடையவே கிடை-யாது.

பெரியார் இயக்கத்தில் இல்லாமல் இருந்தி-ருந்-தால் கோவிலுக்கு செலவு செய்ய வேண்-டும். திரு-விழாவுக்கு செலவு செய்ய வேண்-டும். அதைவிட அறிவு ரொம்ப குறை-வாக ஆகியிருக்கும் சிந்-திக்–கின்ற மனப்பான்மையே வந்திருக்காது.

இங்கு நல்ல அறிவி-யல் மய்யம் வர வேண்-டும். பொது நலத் தொண்டு அளவுக்குப் பரவ வேண்-டும். தந்தை பெரியார் சொன்னார். ஒரு ரூபாய் சம்பாதித்தால் பத்து காசாவது மிச்சப்படுத்து. எனவே எங்களுடைய தோழர்கள் பெரி-யாரு-டைய கொள்கையை வாழ்க்கைமுறையாக ஏற்றுக்கொண்டிருக்கக் கூடியவர்கள் யாராக இருந்–தாலும் அவர்கள் சிக்கனக்காரர்கள். பெரியார் சிக்கனக்-காரர். சில பேர் பெரி-யாரை கஞ்சன் என்று நாக்கில் நரம்பில்லாமல் சொல்லு வார்கள். இதை-விட தவ றான புரிதல் வேறொன்-றும் கிடை-யாது.

பணத்தை விரும்பியதுண்டு

அய்யா அவர்கள் பணத்தை விரும்பினார். அதை அவரே சொன்-னதுண்டு. எனக்கு பணத்-தாசை ரொம்ப அதிகம் என்று ஆனால் அந்தப் பணம் எதற்காக என்பது-தான் முக்கியம். ஒரு காலணா கொடுத்தாலும் அய்யா வாங்கிக்-கொள்-வார்.

கையெழுத்துப் போட வேண்டும் என்று அய்யா அவர்களிடம் கேட்டால் நான்கணா தர வேண்-டும். பெரியார் திரைப்-படம் பார்த்திருப்பீர்கள். பெயர் வைக்க வேண்டும் என்று யாராவது கேட்-டால் நல்ல பெயர் வைக்க வேண்டுமா? சாதாரண பெயர் வைக்க வேண்-டுமா? என்று கேட்பார்.

சாதாரண பெயர் வைப்பதற்கு ஒரு ரூபாய். நல்ல பெயர் வைப்பதற்கு இரண்டு ரூபாய். நல்ல பெயர் காமராஜ் என்று பெயர் சூட்டுவார்.

எல்லா சொத்துக்களும் மக்களுக்கே

எனவே அய்யா அவர்-கள் சேர்த்து வைத்த சொத்-துகள் எல்லாம் அறக்கட்டளை-யாக்கப்-பட்டு மீண்டும் -பொது மக்களுக்கே பயன்-படும்-படி ஆக்கப்பட்டிருக்-கிறது.

அவரென்ன சொந்த பந்தங்களுக்கு கொடுத்-தாரா? அல்லது ஜாதிக்-காரர்களுக்கு ஏதாவது அமைப்பை உருவாக்கிக்-கொள்ள கொடுத்தாரா?

எல்லா சொத்து-களை-யும் மக்களுக்கே திருப்பி-க்கொடுத்த ஒரு மாபெ-ரும் தலைவர் உலக வர-லாற்-றிலேயே வேறு எங்-கும் காண முடியாது. (கைதட்-டல்). அவருடைய அறக்-கட்டளையில் அவ-ரு-டைய ஜாதிக்காரர்கள் கிடையாது. அவருடைய சொந்தக்காரர்கள் கிடை-யாது.. பெரியாருடைய சொந்-தம் என்பதிருக்-கிறதே, அது இரத்த பாசத்தைப் பொறுத்-ததல்ல; கொள்-கைப் பாசத்தைப் பொறுத்-தது.

கருப்புச்சட்டைக்-காரர்-க-ளாகிய நாங்கள் எல்-லாம் ஒரே குடும்பம். அய்யா போஸ் அவர்கள் இருக்கிறார்கள், காஞ்-சனா அம்மாள் அவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம்தான் நம் உறவுக்-காரர்கள்.

சாராய, கஞ்சா சாமியார்

மதுரை மாவட்டத்-தில் இருந்து திருவண்-ணாமலைக்கு ஓடிப் போ-னவர் ஒருவர். திரு-வண்-ணாமலை கிரிவலப் பாதையில் பார்த்தால் அவனவன் சாமியார், சாமியார் என்று சொல்-லு-கின்றான்.

நமது மாவட்ட தலை-வர் மணிக்கு வேண்டிய மாவட்டம் திருவண்-ணா-மலை மாவட்டம். அங்கு யார் சாமியாராக இப்-பொழுது இருக்கி-றார்கள் என்றால் சாரா-யம் குடிக்-கிறவர்கள் இருக்–கின்-றார்கள். சாராயம் கஞ்சா உள்ளே போனால்தான் சாமியே குறி சொல்கிறது. இதற்கு ஞாயிற்றுக் கிழ-மைகளில் அளவு கடந்த கூட்டம். கொழுத்த வரு-மானம். தொலைக்-காட்-சியில் இதைக்காட்டி-னார்கள். ஆயிரக்கணக்-கான பேர் வருகிறார்கள். இதைப் பார்த்து என்ன இவ்வளவு அசிங்-கமாக இருக்கிறது என்று கருதினோம். ஒரு வாரத்-திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நேரடிப் போராட்டம் நடத்துவோம். இதை அரசுக்குத் தெரியப்-படுத்-துகிறோம் என்று பத்தி-ரிகையில் எழுதி-னோம். பொதுக்கூட்டத்-தில் பேசினோம். திரு-வண்-ணா–மலை-யில் நடத்-திய கூட்-டத்திற்கு எல்லா கட்சிக்-காரர்களும் வந்-தார்கள்.

உடனே கலைஞர் நடவடிக்கை எடுத்தார்

அடுத்த நாள் காலை-யிலேயே முதலமைச்சர் கலைஞர் உத்தரவு போட்-டார். யார் அந்தச் சாமி-யார்? நேரே பிடித்து எங்கே வைக்க வேண்-டுமோ அங்கே வைத்தார் (கைதட்டல்)

அதன்பிறகு பார்த்தீர்-களேயானால் அருள் வாக்கெல்லாம் வர-வில்லை. அந்த திருவண்-ணா-மலையில் ஒரு ரமண ரிஷி எதற்கெடுத்தாலும் மகரிஷி, மகரிஷி, என்று சொல்லுவார்கள். படித்த-வன் மாதிரி ஒரு போலியை உலகத்தில் வேறு எங்குமே காண-முடி-யாது. இந்த வெறும் படிப்பு கோழையாக்-குவது மட்டுமல்ல ஒரு-வரை துணிச்சலாக சிந்-திக்க வைப்பதில்லை.

மதுரை மாவட்டம் திருச்சுழியை சேர்ந்தவர். சுழி எப்படியிருக்கிறது என்று பார்க்க வேண்டும். அருப்புக்கோட்டைக்கு பக்கத்திலே இருக்கின்ற ஊர். திருச்சுழியிலிருந்து அரைக்கால் டிரவு-சருடன் 50 வருடத்திற்கு முன்-னால் திருட்டு ரயில் ஏறி திரு-வண்ணா-ம-லைக்கு வந்த-வர் –தான் இந்த ரம-ணரிஷி.

இவர் கண்ட இடத்-தில் சுற்றித் திரிகின்றார். பசி வரும்பொழுது மயக்-கம் வருகின்றது. கீழே விழுந்-துவிடுகிறார். யாரோ பையன் கீழே விழுந்து விட்டானே என்று தூக்கி உட்கார வைத்தார்கள்.

கொஞ்சநேரம் ஆனது. மரத்தில் சாய்ந்து உட்-கார்ந்து பசியால் கண்ணை மூடிக்கொண்-டி-ருந்தார். அடுத்து துணி-யில்லை. கோவணம் கட்ட ஆரம்-பித்தார். சாதாரண வெங்-கட்ட ரமணன், வெங்கட் என்-பது போய் ரமணர் ஆனார். ரமணர் பிறகு ரிஷி ஆனார். ரமண ரிஷி ஆனபிறகு ஆசிரமம் ஏரா-ளமான சொத்துகள் எக்கச்சக்கமாக சேர்ந்து விட்டது.

நம்ம ஊரிலே மட்டும் முட்டாள் இருப்பான் என்பதல்ல. வெளிநாட்-டிலும் இருப்பான். ரம-ணரிஷிக்கு முதல் சீடர் பெருமாள்சாமி என்பவர். இவர் பாப்பனர் அல்லாத ஒருவர். ரமண ரிஷியை பெரிய ஆளாக ஆக்குவ-தற்கு உதவிகரமாக இருந்-தவர் இவர்.

நான் சொல்வது ஆதார பூர்வமான செய்தி. இது கற்பனை அல்ல. ரமணரி-ஷி-யினுடைய சீடர் ஒரு புத்-தகம் எழுதி-யிருக்-கின்-றார்.

ரமண ரிஷி சொத்து உறவினருக்கு

ரமண ரிஷி செல்-வாக்கு வந்தவுடனே, பணம் வந்தவுடனே தன்-னுடைய தாயாரை வர-வ-ழைத்தார். அடுத்தது தனது தம்பியை வரவ-ழைத்தார். சொத்து-களை தனது சகோதரர் மீது எழுதி வைத்தார், ரமண ரிஷி. உடனே பெருமாள் சாமியும், மற்ற சீடர்களும் சென்று சொத்துகளை உங்கள் உறவினருக்கு எழுதி வைக்கலாமா? நீங்-களோ சந்நியாசி ஆயிற்றே என்று கேட்டார்கள்.

நீங்கள் பகவான் ரம-ண-ரிஷி. நீங்களே பக-வான் ஆயிட்டீங்களே சொத்து-களை எப்படி உங்களு-டைய குடும்பத்தி-டம் கொடுக்க முடியும் என்று கேட்டார்கள். யாரிடம்? ரமணரிஷி-யிடம்.

ஆனால் ரமண ரிஷியோ அதைப் பற்றி கவலைப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. ரமணரிஷியை நீதிமன்றத்திற்கு அழைத்-தார்கள். அவர் வர மறுத்து விட்டார்.

ரமண ரிஷியின் மர்-மங்கள் என்ற தலைப்-பில் பெருமாள்சாமி என்ற சீடர் நீதிமன்றத்-தில் வழக்கு தொடர்ந்-தார். 1934, 1935ஆம் ஆண்டு-க-ளில் இந்த வழக்கு வந்தது.

இந்த செய்திகள் ஆங்கிலத்திலும், தமிழி-லும் நூலாகவே வந்திருக்-கிறது. ஆதார பூர்வமாக சொல்லுவது தான் எங்-களுக்கு வழக்கமே தவிர வேறு அல்ல. ரமணரிஷி-யின் வழக்கு இன்னமும் முடியவில்லை.

நம்முடைய நாட்டில் எந்தவொரு வழக்கும் அவ்வளவு எளிதாக முடிந்து விடாது. வெள்ளி விழா, பொன்விழாவைத் தாண்டித்தான் ஒவ்-வொரு வழக்கும் நடைபெற்று வருகிறது.

வழக்கு போட்ட ஆளும் செத்துப் போனார். வக்கீலும் செத்துப்-போ-னார். நீதிபதியும் செத்துப்-போனார். வழக்கு மட்-டும் உயிரோடு இருக்கி-றது. வழக்கு பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கும். ஒன்றுமில்லை.

காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம் போடு-வதா? அல்லது தென்-கலை நாமம் போடுவதா? என்று பிரச்சினை. யானைக்கு எந்த நாமம் போடுவது என்பதில் தகராறு. வெள்ளைக்-காரர்கள் காலத்தில் லண்டன் பிரிவி கவுன்-சில் வரை இந்த வழக்கு வந்தது.

வெள்ளைக்கார நீதிப-திகளிடம் வழக்கு வந்த பொழுது வடகலை என்றால் என்ன? தென்-கலை என்றால் என்ன? என்று கேட்டனர். இவர்-களுக்கு வாதாடியவனும் வெள்ளைக்காரன். வெள்-ளைக்கார- வழக்கறிஞர் நீதிபதிகளிடம் கஷ்டப்-பட்டு விளக்கினார். மைலார்டு அவர்களே! இது ஒன்றுமில்லை; ஒய்_-யுக்கும், யு_வுக்கும் இருக்-கின்ற சண்டை என்று சொன்னார்.

ஒய் (சீ) என்றால் பாதம் வைத்திருக்கும் யு (ஹி) என்றால் பாதமில்-லாத நாமம். எனவே இந்த இரண்டு நாமத்தில் எந்த நாமத்தை யானைக்கு வைப்பதில் என்பது பிரச்-சினை என்று சொன்-னார். காஞ்சிபுரம் கோவில் யானைக்கு ஒரு வாரம் இந்த நாமம் போடு; இன்னொரு வாரத்திற்கு இன்னொரு நாமம் போடு என்று சொன்-னார். யானையும் செத்து போய் விட்டது-. இன்-னமும் அந்த வழக்கு முடி-யவில்லை. அது போல ரமண ரிஷி வழக்கு இன்-னமும் நடந்து கொண்-டிருக்கிறது.

ரமணரிஷி தன்னு-டைய தம்பிக்கு எல்லா சொத்தையும் எழுதி விட்-டார். ரமண ரிஷியின் குடும்பம் ஆசிரமத்தில் வந்து அமர்ந்து விட்டது.

இப்பொழுது நினைத்-துப் பாருங்கள் கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் நீங்கள் கொடுத்த நான்கணா-வைக்கூட பத்திரமாக வைத்து_முடிச்சு போட்டு வைத்து அதை மீண்டும் பொது மக்களுக்கு பயன்-படும்படி அறக்கட்டளை-யாக்கி பல்கலைக் கழக-மாக, கல்லூரிகளாக மருத்துவமனைகளாக, பிரச்சார கேந்திரங்களாக ஆக்கியிருக்கின்றார்.

கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் மனிதநேயப் பணிகளை செய்தார். அதே நேரத்திலே கடவுள் அவ-தாரம் என்று சொன்ன ரமண ரிஷி, மக்கள் கொடுத்த அவ்வளவு தொகையையும் தனதாக்-கிக்-கொண்டார்.

இதில் யார் உயர்ந்த-வர்கள்? இன்றைக்கும் கடவுள் பெயரால் தானே மக்களிடையே சண்டை; இன்றைக்கும் மதத்தின் பெயரால் தானே மக்களி-டையே சண்டை.. எனவே கடவுள் மனி-தர்களைப் பிரித்திருக்-கிறது. மதம் மனிதர்-களைப் பிரித்திருக்-கிறது. ஜாதி மனிதர்க-ளைப் பிரித்-திருகிக்றது.

இவைகளை எல்லாம் எதிர்த்த பெரியார் மனி-தர்-களை நேசித்தார். மனிதர்-களை ஒற்றுமைப்-படுத்-தினார். சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்று தந்திருக்-கின்றார். அப்-படிப்-பட்ட தந்தை பெரி-யாரின் பிள்-ளைகள் ஆயி-ரம் காலத்-துப் பயிர்கள்.

அந்தப் பணிகள் சிறப்-பாக நடைபெற அய்யா போஸ் அவர்கள் வழங்-கிய நிலமிருக்கிறதே அது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்து சிவகாசியிலே ஒரு புதிய அத்தியாயம், திராவிடர் இயக்க வர-லாற்றிலே மட்டுமல்ல; மனிதநேய வரலாற்றில் பொறிக்கப்படும் என்று சொல்லி, வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

பெரிதா, சிறிதா என்பது முக்கியமல்ல. ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும். அதற்கு நீங்-கள் உதவ வேண்டும். பெரியார் எப்படி எல்-லோருக்கும் சொந்தமோ அது போல பெரியார் மய்யமும் மக்களுக்குச் சொந்தம் என்று கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்-றி-னார்.

கருணாநிதியின் பிராமண துவேஷம் ஏன்?

ஜனவரி 17, 2010

கருணாநிதியின் பிராமண துவேஷம் ஏன்?

© வேதபிரகாஷ்

குறிப்பு: இங்கு குறிப்பிடும் பல விஷயங்கள் எல்லோருக்கும் தெரிந்தவையே. ஆகையால் அடிக்குறிப்புகள் அதிகமாகத் தரப்படவில்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் ஆதாரங்கள் உள்ளன.

ஜனவரி 14, 15, 16 மற்றும் 17, 2010 தமிழர்களை ஆட்டும் விதம்: இந்த தடவை, இத்தேதிகள் தமிழர்களை ஆட்டியது, வாட்டியது எனலாம். பொங்கல் தமிழர்களுக்கு கசப்பாகவே இருந்தது, ஏனெனில் விலைவாசி! நேற்று “M” போட்டு, பஸ் கட்டணத்தை வேறு ஏற்றிவிட்டார்கள்! போதாகுறைக்கு எல்லாமே “சொகுசு” வண்டிகள்தாம்! மக்கள் நிறையவே சாபம் இட்டுள்ளார்கள்! சோவின் மீட்டிங் வேறு! அசிங்கங்கள் அதிகமாகவே உள்ளன.

ஜனவரி 14 (வியாழன்) – தை அமாவாசை – பொங்கல் – கருணாநிதியின் தமிழ் புத்தாண்டு! சோ மீட்டிங்!

ஜனவரி 15 (வெள்ளி) – திருவள்ளுவர் தினம், மாட்டுப் பொங்கல் – திருவள்ளுவர் ஆண்டு 2040 – சூரிய கிரகணம்!

ஜனவரி 16 (சனி) – உழவர் திருநாள்

ஜனவரி 17 (ஞாயிறு) – எம்ஜியார் பிறந்த நாள்

இப்படி நாளுக்கு நாள் பிறந்தநாள் தமிழ்நாட்டில்!

கருணாநிதியும் ஜெயலலிதாவும்: இரு தமிழக அரசியல் தலைவர்கள் சண்டையிட்டுக் கொள்வதில் தமிழக மக்களுக்கும், குடிமக்களுக்கும் எந்தவிதத்திலும் நன்மையோ, லாபமோ இல்லை. அரிசி, பருப்பு விலை குறையப்போவதில்லை. காய்கறி, பால் விலை குறையப்போவதில்லை. இருவருமே குழாயடி சண்டைப்போட்டுக் கொண்டாலும் ஒன்றும் பிரயோஜனமில்லை! ஆனால், ஜெயலலிதா சாக்கு வைத்துக் கொண்டு கருணாநிதி மற்றும் திமுகவினரைச் சேர்ந்தவர்கள் பிராமணர்களை இழிவுபடுத்தி பேசுவது, அவமதிப்பது, ஜாதி துவேஷத்தை வளர்ப்பது, தூண்டிவிடுவது முதலிய காரியங்கள் ஏன் செய்யப்படுகின்றன என்பதை அந்த பொறுப்புள்ள வயதான மனிதர்[1] விளக்கியே ஆகவேண்டும். மற்றவர்களும் சிந்திக்கவேண்டும்.

ஊழலில் இருவருமே தலைசிறந்தவர்கள்: ஊழலில் இருவருமே சளைத்தவர்கள் இல்லை, ஏனெனில் பாழாகிப் போவது தமிழ்நாட்டு மக்கள்தான். கோடிகளில் கொழுக்கும் இவர்களால் மக்களுக்கு என்ன பயனும் இல்லை. பல்லாயிரக்கணக்கான கோடிகள் (ஸ்பெக்ட்ரம்) சம்பாதித்தார்களே, அதனால் தமிழ்நாட்டிற்கு, இந்தியாவிற்கு என்ன லாபம்? இதில் கருணாநிதி அல்லது ஜெயலலிதாவின் ஜாதிகள் ஒன்றும் செய்வதில்லை. பிராமணன், சூத்திரன் பார்த்து விலைகள் குறைவதில்லை. எப்பொழுதுமே பிரச்சினைகளில் சாவது எல்லோரும்தான் – எல்லா தமிழ்நாட்டு மாநில மக்கள்தாம். ஆகவே, கேள்விகள்-பதில்கள்[2] என்று வரும்போது ஏன் அத்தகைய நாகரிகம் இல்லாத,  பிராமணர்களுக்கு எதிரான வார்த்தைகள், வசைவுகள், தூஷணங்கள் வரவேண்டும்?

தினமலர், தினமணி தாக்கப்படுவது: ஊடகங்கள், குறிப்பாக இணைத்தளங்கள் மூலமாக திமுக-திக, எல்.டி.டி.ஈ ஆதரவாளர்கள் தேவையில்லாமல் பிராமண துவேஷம் பாரட்டுகின்றனர். ஏதோ இந்த இரண்டு பத்திரிக்கைகள்தாம் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தி தமிழ்நாட்டு, இந்திய, ஏன் உலக அரசியல், பொருளாதாரம் எல்லாவற்றையும் மாற்றப்போகிறது, இவைகள்தாம் மிகவும் பலமுள்ள பத்திரிக்கைகள் என்ற பிரமிப்பை ஏற்படுத்துகின்றனர். ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை. சமீபத்தை நிகழ்ச்சிகள் இதைக் காட்டுகின்றன. வைத்தியநாத ஐயரும், கிருஷ்ணமூர்த்தி ஐயரும் பயந்து விட்டார்கள் என்றே தெரிறது. நன்றாக மிரட்டிவிட்டார்கள் போலும், இருவரும் (இரண்டு பத்திரிக்கைகளும்) வரிந்து கட்டிக்கொண்டு கருவைப் புகழ ஆரம்பித்துவிட்டார்கள்[3]. ஒருவேளை ஐராவதம் மஹாதேவன்[4] “வைத்து”க்கு சொல்லியிருக்கலாம். கிருஷ்ணமூர்த்திக்கு, முன்பு தனது மகன் மாட்டிக் கொண்டது நினைவு படுத்தி இருக்கலாம். போதாகுறைக்கு “புவனேஸ்வரி” பிரச்சினை வேறு! எது எப்படியாகிலும், மறுபடியும் கருணாநிதியால் பிராமண துவேஷம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் மறுபடியும் சில குடுமிகள், பூணூல்கள் அறுக்கப்படலாம். பிராமணர்கள் தாக்கப்படலாம் அல்லது அயோத்யா மண்டபத்தின் மீது பெட்ரோல் குண்டு எரியப்படலாம்.

“இந்துராம்” – “மவுண்ட்ரோட் மஹாவிஷ்ணு” இழிவுபடுத்தப்படுவது: பிராமணர்களுக்கே “ஹிந்து”வைப் பிடிக்காது என்பதுதான் உண்மை. ஆப்படியிருக்கும்போது, அடிக்கொரு தடவை, பார்ப்பன இந்துராம் என்று துவேஷிப்பது ஜாதி அடிப்படையில்தான் உள்ளதே தவிர, சித்தாந்த ரீதியில் கூட இல்லை. அதாவது, ராம் ஒரு மார்க்ஸீயவாதி, கம்யூனிஸ்டுக்களின் நண்பன்………………..என்பதெல்லாம் தெரிந்த விஷயமே. இப்பொழுதைய சந்துரு, நீதிபதி சந்துரு, எப்படி நீதிபதியானார் என்றால், ராம்-கருணாநிதி பந்தம் ஒருபுறம், ராம்-சந்துரு காம்ரேட்-இணைப்பு மறுபுறம்! ராமும்-கருணாநிதியும் திருமண உறவினால் சம்பந்திகள் முறை வேறு! ஆகவே, ராமைத் திட்டுகிறோம் என்று, பிராமணர்களைத் திட்டுவது எந்தவிதத்தில் நியாயம்? உதாரணத்திற்கு சிதம்பரத்தை விமர்சிக்கும்போது, “செட்டியார்” என்று சொல்லி விமர்சிப்பது இல்லையே? இதே மாதிரி மற்றவர்களை முதலியார், பிள்ளை, ரெட்டி என்றெல்லாம் சாதிப்பெயர் சொல்லிக் குறிப்பிடுவதில்லையே? பிறகென்ன “பார்ப்பன ராம்”, “இந்து-ராம்” என்ற கூச்சல்கள்? புலிகள் ஆதரவாளர்கள் வேறு இதில் சேர்ந்து கொள்கிறர்கள் [வால் போஸ்டர்கள் ஒட்டுவது, மீட்டிங் போடுவது……….].

ராமும், கருணாநிதியும் உறவினர்கள்தாம் (பிராமண-சூத்திர பந்தம்): திமுக ஆரம்பத்திலிருந்தே தொழிற்சங்கம் மூலம் “தி ஹிந்துவை” ஆட்டிப் படைத்துள்ளது. “மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு” என்று கருணாநிதி சொல்லி மிரட்டுவது, ராமஜெயத்திற்கு மட்டுமல்ல, 40-50 வருடங்களாக இந்து பத்திரிக்கையில் வேலை செய்த / செய்யும் கிழங்களுக்கும் நன்றாகவேத் தெரியும். பல நேரங்களில் ஜெயலலிதாவிற்கு எதிராக செய்திகள் வெளியிடுவது, முதலிய காரியங்களைச் செய்துள்ளது. ராமின் மச்சினி தயாநிதி மாறனின் மனைவி. பிரியா என்ற ஐய்யங்கார் ரங்கராஜனின் மகள்[5]. அதாவது பிராமணப் பெண் சூத்திரனின் மனைவி! இதே கதைதான், தம்பி கலாநிதி விஷயத்திலும்[6], ஏனெனில் அவரது மனைவி – காவேரியும் ஒரு பார்ப்பனச்சிதான்! முரசொலி மாறனின் பிராமண சம்பந்தம் அலாதியானது. அதை அவர்கள் பிள்ளைகளும் பின்பற்றுவது நன்றாகவே தெரிகின்றது. கனிமொழி விவாகரத்தாகி, சோகமாக, மனம் உடைந்திருந்த வேலையில், கொஞ்சம் மனம் “ரிலாக்ஸாக” இருக்க, இந்து பத்திரிக்கை அலவலகத்தில் தான் வேலை செய்து கொண்டிருந்தார். அத்தகைய பிராமண-சூத்திர பந்தம் பிணைந்திருக்கும் போது, ஏன் கரு துவேஷம் கொண்டு இந்த வயதில் அலைகிறார்?

“சோ”வை அவதூறு பேசுவது: சோ அரசியல் ரீதியில் திராவிடக் கழகங்களின் முரண்பாடுகளை, பிறழ்ச்சிகளை, பித்தலாட்டங்களை, மாய்மாலங்களை எடுத்துக் காட்டுகின்றார் என்ற ஒரே காரணத்திற்காக, அவரை வசை பாடுகின்றனர். அறிவுபூர்வமாக அவர் எழுதுவதை அறிவுபூர்வமாக ஆதாரங்களுடன் மறுப்பதைவிடுத்து “பார்ப்பன்”, ஐயர், அவாள், இவாள் என்று பாட்டை ஆரம்பித்து விடுகின்றனர். நேரிடையாக மோதாமல், திக-திமுக-மற்ற உதிரிகளைத் தூண்டிவிட்டு கலாட்டா செய்வது, மிரட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். விமர்சனங்களை பொறுத்துக் கொள்ளமுடியாதவர்கள், ஜீரணிக்க முடியாதவர்கள், சகிக்காதவர்கள், இவ்வாறு எம்ஜியார் சொன்னார் என்று பிராமணர்களை ஏன் திட்டவேண்டும்?

இன்று எம்ஜியாரைக் குறிப்பிட்டு ஜெயலலிதாவை தூஷிக்கும் கருணாநிதி எம்ஜியாரின் விரோதிதானே? குறிப்பாக, எம்ஜியார் பிறந்ததினம் (17-01-2010) என்பதை மனத்தில் வத்துக் கொண்டு, இவ்வளவு துவேஷத்தைத் தூண்டி விடுகிறாரே, இவரென்ன எம்ஜியாரின் நலவிரும்பியா, அரசியல் நண்பரா, கூட்டுப்பங்குதாரரா இல்லையே? கூத்தாடி, ………………………..மளையாளி என்றெல்லாம் தூஷித்தது ஞாபகத்தில் உள்ளதே………………………பிறகென்ன, எம்ஜியார் பெயர் சொல்லி ஜெயலலிதாவை திட்டுவது? எம்ஜியார் ஜெயலலிதாவைப் பற்றி அவ்வாறு குறிப்பிட்டுள்ளது உண்மையென்றால், அதே விமர்சனம் கருணாநிதிக்கும் பொருந்துமே? அதுமட்டுமா, கருணநிதியைப் பற்றியே அவரது அரசியல் நண்பர்கள், விமர்சகர்கள், விரோதிகள் பல நேரங்களில், பலவிதமாகச் சொல்லியிருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள். அதையெல்லாம் எல்லொருக்கும் தெரியுமே. அவர் சொன்னார்-இவர் சொன்னார் என்று யாரும் அவ்வாறு தூஷண வேலைகளில் ஈடுபடவில்லையே?

கருணாநிதியின் லீலைகள் தமிழக மக்களுக்குத் தெரியாதா? திருக்குவலை கருணாநிதியைப் பற்றி தெரியாதா? நிச்சயமாகத் தெரியும். மனிதர் வயதாகி விட்டார், சொன்னால் நன்றாகயிருக்காது, என்பதால் கண்ணியத்தோடு நிறைய கிழங்கள் அமைதி காக்கின்றன. அவர்கள் எல்லாம் உண்மை சொல்ல ஆரம்பித்தால் நாறிவிடுமே? முன்பு எப்படி போட்டிப்போட்டர்கள், “வால் போஸ்டர்கள்” ஒட்டினார்கள் என்ற உண்மைகளை வெளியிட்டால், தண்டவாளம், வண்டவாளம் ஆகிவிடுமே? நடுராத்திரி, தொடர்ந்து அடுத்தநாள் காலை இரண்டு மணிவரை பேசிய பேச்சுகளை நினைவு படித்தினால்…………….., தமிழகப் பெண்கள் கூசி, கூனி …………….குனிவார்களே? அவர்கள்தாம் இப்பொழுது சட்டசபையில் பேசுகிறார்கள், இல்லை, சொன்னதாகப் பத்திரிக்கைகளில் வெளிவருகின்றன. இவற்றையெல்லாம் பொன்னேடுகளில்[7] வைரத்தால் பொதித்து வைக்கலாமா?

எல்லோருக்கும், எல்லாமே தெரியும், ஆதலால் அவதூறு பேசவேண்டும் என்ற போக்குத் தேவையில்லை: இருமனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டால், கண்ணியமாக, நாகரிகமாக அவ்வாறு முடியும் என்றால், கருணாநிதியும், ஜெயலலிதாவும் செய்யட்டும். ஆனால், அவ்வாறு இல்லாமல், ஒருவர் மீது ஒருவர் சகதியை அள்ளிவீசுவோம் என்றாலும் தனியாக செய்து கொள்ளட்டும், ஆனால் ஊடகங்கள் வழியில் பாரபட்சமான முறையில் செய்யவேண்டாம். இன்றைய இளைஞர்கள் பார்த்து-படித்து-கேட்டுக் கொண்டிருக்கிறர்கள், நிச்சயமாக அவர்கள் உண்மை என்ன என்று அலச ஆரம்பித்து விடுவார்கள், உண்மை என்ன என்று ஆராய்ச்சி செய்து எடுத்து விடுவார்கள். அப்பொழுது, நிச்சயமாக நன்றாகயிருக்காது.

சாவியும், சேகரும்: முன்பு சாவி – எஸ். விஸ்வநாதன் (பத்திரிக்கையாளர், தயாரிப்பாளர்) என்னசெய்து கொண்டிருந்தாரோ, அந்த வேலையைத்தான் எஸ். வி. சேகர் செய்து கொண்டிருக்கிறார் போல இருக்கிறது. உண்மையென்னவென்றால் கருணாநிதியின் பிராமண துவேஷம் சொல்லமாளாது, அது எல்லாவறையும் விட மிகப்பெரிய வெறி. என்னத்தான் படித்தவர்களாக இருக்கட்டும், வெளியே சிரித்தாலும், இரு பொருள் தொணிக்க பேசினாலும், மனத்தில்  மட்டும் கருவிக் கொண்டே இருப்பார். இது தஞ்சாவூர்காரர்களுக்குத் தான் தெரியும். மூப்பனாருக்கு நன்றகவே தெரியும்! சமீபத்தில் ஒரு தஞ்சாவூர் பிராமணருக்கு பட்டம் கொடுக்கப் பரிந்துரை செய்தபோது கூட அத்தகைய பேச்சு வந்தது. “பாப்பான் பேரில இருக்கிறத பாப்பனுக்கேக் கொடுத்தால் போயிற்று”, என்று கடைசியாக முடிவு எடுத்தாற்போல இருக்கிறது[8]. சாவியிடம் கருணாநிதி, “ஒரு நல்ல பிராமண பெண்ணை பாருங்கள், பார்த்து முடித்துவிடுவோம்”, என்றபோது, சாவி அவ்வாறேப் பார்த்துக் கொடுத்தார்[9]. இப்படி செய்யும் கருணாநிதி, வேறு நேரத்தில் கேவலப்படுத்துவது ஏன்?

கருணாநிதி நல்ல பேச்சாளர் என்று நன்றாகவே தெரியும்: மத்திய அரசு தணிக்கை அறிக்கைகள், கருணாநிதி, நிதியை கருணையுடன், வேறு செலவினங்களுக்குத் திருப்பிவிட்டாரா அல்லது முதன்மந்திரியாக, பொறுப்பாக செலவிட்டாரா, கணக்கிட்டாரா என்பதெல்லாம் தாராளமாக செய்யலாம். எதிர்கட்சித் தலைவர் / தலைவி கெட்டால், தகுந்தமுறையில் பதில் சொல்லிவிட்டுபோகலாம். அதைவிடுத்து, கேலிபேசுவது, கிண்டலடிப்பது, அவதூறு பேசுவது……………………என்ற முறையில்தான் பதில் வரவேண்டிய தேவையில்லை. சட்டசபையில், நாகரிகமாக பேசமுடியவில்லை என்றல் அது, அங்குள்ளவர்களுக்கு மட்டும் அவமானம், அசிங்கம் இல்லை, அவர்களை அங்கு உட்காரவைத்த தமிழ்நாட்டு மக்களுக்கே கேவலம். இங்கு திமுக-அதிமுகவோ, பிராணன்-சூத்திரன் என்றோ யாரும் பார்க்கப் போவதில்லை. கருணாநிதியைப் பொறுத்தவரைக்கும், ஏற்கெனவே அவருக்கு நிறைய நிகழ்ச்சிகளை, ஏற்படுத்திக் கொடுக்கிறர்கள். அதில் அவர் தாராளமாகவே பேசிவருகிறார். அங்கும் பார்ப்பனர்கள் என்று சொல்லிக்கொள்ளும் / கொல்லும் வாலி, கமலஹாசன் முதலியோர்கள் உள்ளார்கள். அவர் அவ்வாறாகவே பேசி-மகிழ்ந்து-திளைக்கட்டும். ஆனால், இந்த ரீதியில் இறங்கவேண்டாம்!

நாங்கள் பார்ப்பனீயத்திற்கு எதிரி, ஆனால் பார்ப்பனர்களுக்கு எதிரியல்ல!: கருணாநிதி, இதுபோன்ற புருடாக்களை / பொய்களை அடிக்கடி அள்ளிவீசுவது உண்டு. “ஓய்வுக்கு ஓய்வு கொடுக்கும்” ரீதியில் இப்படி பேசும் பேச்சுகளுக்கு அர்ததமே இல்லை. சரித்திர ஆதாரம் இல்லாத “ஆரிய-திராவிட” இனவெறி சித்தாந்தம் பேசிக் கொண்டு, ஆட்சி செய்யும் கட்சியாளர்கள் உலகத்திலேயே இந்தியாவில்தான் உள்ளார்கள் என்பது உண்மை. உலகத்திலேயே இனவெறி கூடாது என்ற நிலையில் இருக்கும்போது, தினமும் அத்தகைய இனவெறி பிடித்து பேசியலையும் கூட்டம் இங்குதான் உள்ளது. பிராமணர்கள் “ஆரியர்கள்”,  நாங்கள் “திராவிடர்கள்” என்று பேசிக் கொண்டு துவேஷம் பேசும் கூட்டம் இங்குதான் உள்ளது. இத்தகைய வெறியாளர்களை யாரும் கண்டிக்காமல் இருப்பது ஆச்சரிம்தான்! அதனால்தான் “பேராசிரியர்” என்று சொல்லியலையும் அன்பழகன் பொன்றோரும், இன்றும் அத்தகைய சித்தாந்தங்களைப் பேசியலைகின்றனர்!

பிராமணர்களுக்கு எச்சரிக்கை: இப்படி பேசப்படும்போது, பிராமணர்கள் தாக்கப்படுவது நோக்கத்தக்கது. ஆகவே, முன்பே குறிப்பிட்டபடி, இதனால் மறுபடியும் சில குடுமிகள், பூணூல்கள் அறுக்கப்படலாம். பிராமணர்கள் தாக்கப்படலாம் அல்லது அயோத்யா மண்டபத்தின் மீது பெட்ரோல் குண்டு எரியப்படலாம். அவர்களும் பேச்சிற்கு திகவினருக்குப் பதிலாக பெரியார்-திக என்று யாரையாவது கைது செய்து விஷயத்தை அமுக்கிவிடலாம். ஆனால், உலகத்தில், இப்படி பிராமணர்கள், “பிராமணர்கள்” என்ற ஒரே காரணத்திற்காக திட்டப்படுவது, அவமானம் செய்யப்படுவது, தாக்கப் படுவது, பெண்கள் இழிவுப் படுத்தபடுவது, ஊடகங்கள் கேவலப்படுத்துவது, ஆட்சியளர்கள், அதுவும் முதல் மந்திரி, மற்றவர்கள் அவதூறு பேசுவது போன்றவை, வேறெங்கும் நடக்காது என்பது நிச்சயமே. ஆகவே, ஏன் பிராமணர்கள் இவ்வாறுத் தாக்கபடுகிறர்கள்? அவ்வாறு தாக்குபவர்களின் மனோநிலை என்ன? மனோதத்துவம் என்ன? இல்லையென்ற பிறகும், இருக்கிறது என்று இனவெறியை மனத்தில் ஏற்றிக் கொண்டு, “பார்ப்பனீயத்தை எதிர்ப்போம்” என்ற சித்தாந்தத்தின் முகமூடியில் ஜாதிவெறியை வைத்துக்  கொண்டு இவ்வாறு உலா வருவது ஏன்?

© வேதபிரகாஷ்

17-01-2010


[1] ‘சூது வாது வஞ்சகம் அம்மு-எம்ஜிஆர்’ Created On 16-Jan-10 04:54:12 PM

http://www.andhimazhai.com/news/viewmore.php?id=10992&action_type=viewnews

http://www.dinakaran.com/arasialdetail.aspx?id=3927

[2] In his so-called Question-answer Report (dated 18-04-2008), he has responded as follows: பூணூல் இல்லாததுதான் காரணம்! கலைஞர் விளக்கம்

கேள்வி: அந்நாள் அமெரிக்க அதிபர் நிக்சன், அண்டை மாநிலத்து முதல்வர் ஹெக்டே இருவர் மீதும் அவர்களே தொலைபேசியை ஒட்டுக் கேட்டதாகக் கிளம்பிய குற்றச்சாட்டு காரணமாகத்தானே பதவியை ராஜினாமா செய்தார்கள் – ஆனால் அந்த வரலாறு தெரியாத சில வரட்டு மதியினர்; இங்கே தமிழகத்தில் இரு அதிகாரிகளுக்கிடையே தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதற்காக முதல மைச்சர் ராஜினாமா செய்ய வேண்டுமென்கிறார்களே? இதற்குக் காரணம் என்ன?

கலைஞர்: என் செய்வது, இந்த முதலமைச்சருக்கு முப்பரி நூல் கிடையாதே! இவர் கடவுளின் முகத்தில் பிறந்த சாதியில் பிறந்தவர் அல்லவே – காலில் பிறந்த சாதியில் பிறந்தவரா யிற்றே! அதனால்தான் இந்த முதல்வர் தலைமையில் இந்த ஆட்சியில் அன்றாடம் நடைபெறுகிற அற்புத சாதனைகளை ஒரு சாரார் மூடி மறைத்துவிட்டு; வேண்டுமென்றே திட்ட மிட்டு சில விஷமச் செய்திகளைப் பரப்பி அந்த நெருப்பில் குளிர் காய முனைகிறார்கள். என்ன நடந்தது? எப்படி நடந்தது? யாரால் நடந்தது? என்று விசாரித்து அறிந்து வெளியிட உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித் தாலும்; விகடன் கேலி செய்கிறார்! – சில பல ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரத்து நடிகை, காஞ்சனமாலையின் பேச்சையே டேப் செய்து போட்டுக் காட்டி மிரட்டிய பணிய வைத்த பரம்பரையினர் அல்லவா?

[3] அரசு நிதியை தவறான வழியில் செலவழிக்கவில்லை : தணிக்கை குழு அறிக்கை குறித்து முதல்வர் தகவல், ஜனவரி 16,2010

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=16168

தினகரன் விளக்கமாகக் குறிப்பிட்டபோது, தினமலர் சொன்னது, “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பற்றி, என்ன சொன்னார் என்பதை, 1989ம் ஆண்டு, “மக்கள் குரல்’ இதழின் ஆசிரியர் டி.ஆர்.ராமசாமி எழுதியுள்ளதை படித்தால் தெரியும்.இவ்வாறு முதல்வர்  தெரிவித்துள்ளார்”. அவ்வளவே!

[4] இந்த ஐயருக்கு வந்ததுதான் “பவிஸு”. கருணாநிதி, பட்டம் மேல் பட்டம் கொடுத்து அமுக்கிவிடுகிறார். அவரும் இடத்திற்கேற்றபடி மாற்றி-மாற்றி பேசுகிறார். செந்தமிழ் மாநாடு முடிந்ததும் கழட்டிவிடபடுவார்போலும்!

[5] 1994ல் இவர்கள்  திருமணம் நடந்தது! இவர்கள் அதாவது ஐய்யங்கார்வாளும், சூத்திரவாளும் எப்படி சம்பந்தி ஆனார்கள், என்றதெல்லாம் மர்மமாகவே இருக்கின்றன!

[6] 1991ல் ஒரு நண்பரின் இல்லத்தில் இருவரையும் சந்திக்க வைத்து கல்யாணம் செய்து வைத்தனராம்!

[7] சோனியா விஷயத்தில் சொன்னதை ஞாபகப் படுத்திக் கொள்ளவும். அவரது மாமியார் இந்திரா காந்தி மற்றும் அவரைக் கொலை செய்த வழக்கு முதலியவற்றையும் ஞாபகப் படுத்திகொள்ளவும்!

[8] ஆனால் நாகநாதன், ஜகதீஸன் முதலியோர் கடுமையாக எதிர்த்தனர். இருப்பினும் கருணாநிதி ஒப்புக்க்கொண்டார்!

[9] குமுதத்தில் இதைப் பற்றிய விவரங்கள் வெளிவந்தன. இதைப் பற்றி நான் எழுதி இணைத் தளத்தில் – குறிப்பாக www.indiainteracts.com ல் பதித்தவை காணாமல் போகின்றன.

http://tamilbrahmins.wordpress.com/category/karunanidhi/

http://tamilbrahmins.wordpress.com/2008/04/23/karunanidhi-varnashrama-dharma-and-brahmanism/