பிரச்சினையில் உள்ளது தினகரன் பத்திரிக்கையும் ஒன்று.
வியப்பாக, அதுவே இப்படியொரு செய்தியை வெளியிட்டுள்ளது!
சட்டத்திற்கு புறம்பாக ஏதும் செய்யவில்லை: சாமியார் நித்தியானந்தா[ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 12:51.49 PM GMT +05:30 ]
http://www.newindianews.com/view.php
.?2bdRfmAc3dc036QAY3e4a4qe0AKcd0eavXO4A2cd22Amlvxa2ecKU46A4ce0eYmM0604b43cYDRLd0
சென்னையிலுள்ள வழக்குரைஞர் ஸ்ரீதருக்கு சாமியார் நித்தியானந்தா தனது பேச்சுகள் அடங்கிய சி.டி.யை அனுப்பி வைத்துள்ளார். அதில் தான் சட்டத்திற்கு புறம்பாக ஏதும் செய்யவில்லை என்றும் இவை எதிரிகளின் சதித்திட்டம் என்றும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்யானந்தா ஒன்றாக இருப்பது போன்று படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சாமியார் மீது சென்னை போலீசார் 2-வழக்குகளை பதிவு செய்தனர். அவர் எங்கு இருக்கிறார் என்பது மர்மமாக இருந்து வந்தது.
இந்நிலையில் வீடியோ மூலமாக நித்யானந்தா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் உள்ள அவரது வக்கீல் ஸ்ரீதருக்கு தனது பேச்சுகள் அடங்கிய சி.டி.யை அனுப்பி வைத்துள்ளார். அதில் நித்யானந்தா கூறியிருப்பதாவது:-
எனக்கு எதிராக விஷமிகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர். இதுவே என்னை பற்றி தவறான தகவல்கள் வெளிவர காரணமாகும். என் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக நான் சந்திக்க தயாராக உள்ளேன்.
இவ்வாறு நித்யானந்தா கூறியுள்ளதாக அவரது வக்கீல் ஸ்ரீதர் தெரிவிதார்.
இதற்கிடையே நடிகை ரஞ்சிதாவும், நித்யானந்தா சாமியாரும் ஒன்றாக இருப்பது போன்ற படங்களை நான்தான் எடுத்தேன் என்று சாமியாரின் சீடர் லெனின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இவர் கொடுத்த புகாரின் பேரில் நித்யானந்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமியாரின் அந்தரங்க விஷயங்களை லெனின் படம் எடுத்து வெளியிட்டதும் சட்டப்படி குற்றமாகும். இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்யலாம் என்று சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.
நித்யானந்தாவை லெனின் ஆபாசமாக படம் எடுத்து வெளியிட்டது எந்த மாதிரியான குற்றம் என்பது குறித்து வக்கீல் வானதி சீனிவாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தகவல் தொழில் நுட்ப சட்டப்படி, ஒருவரின் அந்தரங்க விஷயங்களை ஆபாசமாக படம் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் ஆபாசபடம் எடுத்த லெனின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யலாம்.
இந்த குற்றம் நிருபிக்கப்பட்டால் லெனினுக்கு 2-ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
இதேபோல் கேபிள் டிவி. ஒளிபரப்பு சட்டத்தின் கீழ், உள்ளங்களை மாசுபடுத்தும் விதத்தில், ஆபாசமான காட்சிகளை காட்டுவதும் தவறானது. இதுவும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்
குறிச்சொற்கள்: சன் டிவி செக்ஸ், செக்ஸ், செக்ஸ் செனல், செச்யூலரிஸம், தமிழ் செக்ஸ் செனல், தினகரன் செக்ஸ், திராவிட அமைப்புகள், திராவிட சித்தாந்திகள், துறந்தவர், நக்கீரன் செக்ஸ், நாத்திகம், நிர்வாணம்
மறுமொழியொன்றை இடுங்கள்