“பால் கமிஷன் அறிக்கை” மர்மங்கள்
“நாளென் செய்யும், கோளென் செய்யும்” என்று நாத்திகர்ளும், ஆத்திகர்களும் கேட்கலாம். ஆனால், சரித்திரரீதியில் கடந்தகாலத்தை அதாவது இப்பொழுதைய 50-60 ஆண்டுகால நடப்புகளை நினைவில் வைத்திருந்தாலே அத்தகைய சம்பந்தத்தைப் பார்க்கலாம். “நவம்பர் 26” “26/11” என்று குறிப்பிட்டு எழுதுகிறார்களே, இது என்ன மூடநம்பிக்கையா, பகுத்தறிவா என்று நவீன மனங்கள் கேட்கலாம். ஆனால், அந்த 26-11 26/11 தேதிகள் நிச்சயம் கருணாநிதியை பாதித்துள்ளன. எவ்வளவு ஒப்புமைகள் பாருங்கள்!
லிபரான் அறிக்கை | பால் அறிக்கை |
அமெரிக்கா சென்றுவிடுகிறார்
24-11-2009
26-11-2009
|
1. சி. ஜே. ஆர், பால் [அன்றைய கமிஷனின் அறிக்கையாளர்] தனது அறிக்கையை அரசிடம் கொடுத்து அமெரிக்கா சென்றுவிடுகிறார்.
2. 24-11-1981; அமைக்கப்பட்ட நீதிபதி பால் கமிஷன் அறிக்கையை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி அறிக்கையின் பிரதியைக் கைப்பற்றி நிருபர்களிடம் வெளியிட்டார். 3. 26-11-1989 அன்றுதான் திருச்செந்தூர் கோயில் விடுதியில் கோவில் அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை மர்மமான முறையில் இறந்து கிடந்தார் 4. கருணாநிதி குற்றஞ்சாட்டிய ஆர். எம். வீரப்பன் இன்று நண்பராகிறார்! 5. தண்டிக்கப்பட்ட அன்றைய அரசு அதிகாரி சண்முக நாதன் இப்போதும் கருணாநிதியின் செயலாளராக இருக்கிறார்! |
26-11-1980: “திருச்செந்தூர் கோயில் விடுதியில் கோவில் அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்”, என்ற செய்தி, கொலை என்றெல்லாம் தமிழிதழ்களில் வெளிவந்தன. ஆளும் அதிமுக மற்றும் எதிர் கட்சி திமுக ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டனர். உண்டியல் பணத்தை சுப்பிரமணியப்பிள்ளையே திருடி மாட்டிக் கொண்டதாகவும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஆர்.எம்.வீ முதல் அ.தி.முகவினர் எல்லாரும் பிரசாரம் செய்தார்கள்[1]. கருணாநிதியும் தி.முகவும் இதை மறுத்தார்கள். உண்டியலில் இருந்த வைர வேலைத் திருடிக் கொண்டது வீரப்பன்தான் என்றும் அதைத் தட்டிக் கேட்ட நேர்மையான அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை கொலை செய்யப்பட்டதாகவும் தி.மு.க குற்றம் சாட்டியது. பதிலுக்கு அதிமுக, திமுகவைக் குற்றஞ்சாட்டியது!
-12-1980: திருச்செந்தூர் கோயில் உதவி ஆணையர் சுப்பிரமணியப் பிள்ளை கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு, அதற்கு சி. ஜே. ஆர். பால், என்ற ஓய்வு பெற்ற நிதிபதி உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.
1981: அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப் பட்டது. நீதிபதி சி.ஜெ.ஆர்.பால் அறிக்கையைக் கொடுத்துவிட்டு அடுத்த விமானத்தில் ஒரேயடியாக அமெரிக்கா சென்று செட்டிலாகிவிட்டார்.
1981: அதற்குள் அறிக்கையின் நகல் கருணாநிதிக்குக் கிடைக்கிறது.
24-11-1981; அமைக்கப்பட்ட நீதிபதி பால் கமிஷன் அறிக்கையை 24-11-1981-ல் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி அறிக்கையின் பிரதியைக் கைப்பற்றி நிருபர்களிடம் வெளியிட்டார்.
01-02-1982: G. O. M. S. No. 161 பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு – ஆ) 01-02-1982 தேதியிட்ட, ஆணை வெளியிடப்பட்டது.
01-02-1982: இந்து அறநிலை மற்றும் காப்பாணையத்தின் சரிபார்க்கும் அதிகாரி இறந்ததற்கான காரணங்களை ஆய்ந்து வெளியிட்ட சி. ஜே. ஆர். பால், என்ற ஓய்வு பெற்ற நிதிபதியின் பரிந்துரைகள் சட்டசபையில் பார்வைக்கு வைக்கப்பட்டது.
11-02-1982: வீரப்பன், செய்தி மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் கீழ்கண்ட தீர்மானத்தை வைத்தார்[2]:
“26 நவம்பர் 1980 என்று சி. சுப்பிரமணியப் பிள்ளை, இந்து அறநிலை மற்றும் காப்பாணையத்தின் சரிபார்க்கும் அதிகாரி இறந்ததற்கான காரணங்களை ஆய்ந்து வெளியிட்ட சி. ஜே. ஆர். பால், என்ற ஓய்வு பெற்ற நிதிபதியின் பரிந்துரைகள் (02-02-1981 அன்று அவையில் வைக்கப்பட்டது) G. O. M. S. No. 161 பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு – ஆ) 01-02-1982 தேதியிட்டது, ஆணைக்கு பிற்சேர்க்கையாக இணக்க்ப்பட்ட அரசாங்கத்தால் எடுக்கப் பட்ட நடவடிக்கைப் பற்றி விவாதம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இந்த விவாதம் 11 முதல் 13 வரை நடந்தது, 14 உறுப்பினர்கள் பங்கு கொண்டார்கள்”.”
13-02-1982: பால் கமிஷன் அறிக்கைப் பற்றிய விவாதம் தொடங்கியது. விவாதத்தில் சட்டப் பேரவையில் பேசிய கரு, அறிக்கை எவ்வாறு வெளியானது என்பது குறித்து ஆராயாமல் அதில் கூறியுள்ளது பற்றி கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
அறிக்கை கசிந்த குற்றத்திற்காக, அரசு அதிகாரிகள் சதாசிவம் (மொழி பெயர்ப்புத் துறை) மற்றும் சண்முக நாதன் இருவர் மீதும் எம்.ஜி.ஆர் அரசு கடும் நடவடிக்கை எடுத்தது.
15-02-1982: கருணாநிதி மதுரையிலிருந்து, திருச்செந்தூர் வரை நெடும்பயணம் என்று ஆரம்பித்தார்.
22-02-1982: திருச்செந்தூர் அடைந்து பயணம் முடித்துக் கொள்ளப் பட்டது.
26-11-1982: எஸ். கேசவ ஆதித்தன், ஒரு கார் விபத்தில் மரணம் அடைந்தார். 26-10-1980 அன்று, சுப்பிரமணியப்பிள்ளை மர்மமான முறையில் இறந்து கிடந்தார் / கொல்லப்பட்டார் என்றால், அதே தேதியில் இரண்டு வருடங்கள் கழித்து, இறந்தது ஆச்சரியம் தான்!
ஆர்.எம்.வீரப்பனின் இருமுகங்கள்: ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர் உயிரோட இருக்கும்போது அவருக்கு நெருக்கமாக இருந்தார். அற நிலைய அமைச்சர் பொருப்பில் இருந்து நிறைய சம்பாதித்தார். அவர் இறந்த்கபிறகு, தானே முதலமைச்சர் ஆகவேண்டும் என்ற ஆசையும் வளர்ந்தது. இதனால்தான், ஜானகி ராமச்சந்திரனைத் தூண்டிவிட்டு அவரை முதல்வராக்கி, அதிமுகவைப் பிளக்கப் பார்த்தார். அப்பொழுது ஜெயலலிதா வெளியேற்றப்பட்டதால், கருணாநிதியும் ஆதரித்தார். இப்போழுதோ கருவை ஆதரிக்கிறார்!
கருணாநிதி, சிதம்பரம், மற்றவர்களின் இருமுகங்கள், இரு நாக்குகள்: கருணாநிதி பி.ஜே.பியுடன் கூட்டு சேர்ந்துதான், மாறன் அமைச்சராக இருக்கமுடிந்தது. சிதம்பரம், ஒரு நேரத்தில் பி.ஜே.பியில் ஐக்கியமாக வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், சில பி.ஜே.பி காரர்கள் சிதம்பரம் பி.ஜே.பியில் சேருவதைக் கடுமையாக எதிர்த்தனர்.
வேதபிரகாஷ்
28-11-2009
[1] ஞாநி , மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள் , திண்ணை.காம்,
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20411253&format=html
[2] The Tamilnadu Legislative Assembly, Seventh Legislative Assembly, Fourth Session – First meeting (From 2nd February, 1982 to 19th February 1982), ப. 19, இங்கே பார்க்கவும்:
http://www.assembly.tn.gov.in/archive/Resumes/07assly/07_04_1.pdf
குறிச்சொற்கள்: அறங்காவலர், அறங்காவலர் குழு, அறநிலையைத் துறை, உண்டியல், எம்.ஜி.ஆர், கரு, கருணாநிதி, கேசவ ஆதித்தன், கொலை, சீனிவாச பாண்டியன், சுப்ரமணியப் பிள்ளை, தற்கொலை, பாலகிருஷ்ணன், பால், பால் அறிக்கை, பால் கமிஷன் அறிக்கை, வேல்
5:16 பிப இல் நவம்பர் 28, 2009 |
இது இங்கு சம்பந்தப்பட்டிருப்பதால், நன்றியுடன் குறிப்பிடப் படுகின்றது:
இத்தளத்திலிருந்து:
http://thimuka.wordpress.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/
கேள்வி : நீங்கள் சொன்ன மறக்க முடியாத பதில்?
கலைஞர் : திருச்செந்தூர் கோவிலில் நடைபெற்ற கொலைக்காக அமைக்கப்பட்ட பால் கமிஷன் அறிக்கை மீது விசாரணை நடத்தாதது குறித்தும், திருச்செந்தூர் கோவிலில் வைரவேல் களவாடப்பட்டதைக் கண்டித்தும் நான் எதிர்கட்சித்தலைவராக இருந்த போது திருச்செந்தூர் நடைபயணம் சென்றேன். அதைப்பற்றி அவையிலே ஆளுங்கட்சி உறுப்பினர், “கருணாநிதி திருச்செந்தூர் போனார், முருகனே அவரைப் பார்க்கப்பிடிக்காமல் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு வந்து விட்டார்!” என்றார் கிண்டலாக. உடனே நான் எழுந்து, “திருச்செந்தூரில் முருகனின் வேல்தான் களவாடப்பட்டது என்று நினைத்தேன். சிலையும் காணாமல் போய்விட்ட விஷயம் இப்போது தான் தெரிகிறது!” என்று நான் கூறியதும் அவை சிரிப்பிலே ஆழ்ந்தது. நான் சொன்ன மறக்க முடியாத பதில்களில் இதுவும் ஒன்று.
8:25 முப இல் திசெம்பர் 2, 2009 |
அட என்னா நைனா,
திரும்ப திரும்ப பழசையே கிளரின்னு கீரியே?
இதெல்லாம் என்களுக்கு தெரியாதா என்ன?
நீ என்ன சொல்லி என்ன ஆப்ப்பொது?
2:22 பிப இல் திசெம்பர் 13, 2009 |
மோருக்கு பதில் பினாயில் குடித்த ஆற்காடு.. விஜயகாந்த்
புதன்கிழமை, நவம்பர் 25, 2009,
http://thatstamil.oneindia.in/news/2009/11/25/500-dmdk-cadres-arrested-kallakurichi.html
இதே தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் ஆட்சிக்காலத்தில் ஆர்.எம்.வீரப்பன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபொழுது திருச்செந்தூர் கோயிலில் வேல் காணாமல் போய்விட்டது என்றும், அன்றைய நிர்வாக அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை கொலை செய்யப்பட்டு குளியல் அறையில் தொங்க விடப்பட்டார் என்றும், அவற்றைக் கண்டித்து மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு நீதி கேட்டு நெடும் பயணம் போனார்.
இந்த நெடும் பயணம் ஆட்டம், பாட்டத்துடன் நடந்தது என்பதும், இன்றைய அமைச்சர் ஆற்காட்டார் மோருக்கு பதிலாக, பினாயில் குடித்து அவதிப்பட்டார் என்பதும் அன்றைய தினம் கேலியாக பேசப்பட்டது.